Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Students can Download 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.3 பரிபாடல்

கற்பவை கற்றபின்

Question 1.
பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
(மாணவர் செயல்பாடு)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக.
Answer:
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. இப்பால் வீதிகள் தூசுகள் போன்று தோன்றும் இப்பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்புக் கொள்கையே காரணம். இந்த பெருவெடிப்புக் கொள்கைக்கு முன் எதுவுமே இல்லா பெருவெளி மட்டுமே இருந்தது.

இன்றைய அறிவியல் கொள்கைகளின்படி இந்த பிரபஞ்சமானது கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பும் என்ற ஒரு சம்பவத்துடனே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. இவ்வாறு பெருவெடிப்பு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தினை விளக்கும் முறையினைப் பெருவெடிப்புக் கொள்கை என்கிறோம். இதைப் பரிபாடல் எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது என்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 1

பெருவெடிப்பிற்குப் பின் உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் முதலிய பூதங்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆற்றலால் பருப்பொருள் சிதறின. இதனால் நெருப்புப் பந்து போல பூமி உருவாகியது. தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தால் பூமி மூழ்கியது. பின்னர் இப்புவி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்ததாலும், சூழல் மாற்றத்தாலும் உயிர்கள் தோன்றி நிலைபெற்றன எனப் பரிபாடல் குறிப்பிட்டுள்ளது. இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்பதனை 1929ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான எட்வின் ஹப்பிள் கண்டறிந்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
Answer:
ஈ) வானத்தையும் பேரொலியையும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
Answer:
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.

நெடுவினா

Question 1.
நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
Answer:

  •  எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
  • உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
  • பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
  • புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

இலக்கணக் குறிப்பு.

ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர் வானம் – வினைத்தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
கிளர்ந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 2

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு
அ) 1, 3, 2, 4
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
ஈ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 24
ஆ) 34
இ) 44
ஈ) 54
Answer:
அ) 241

Question 3.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) பரிபாடல்
ஆ) முல்லைப் பாட்டு
இ) நாலடியார்
ஈ) மூதுரை
Answer:
அ) பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 4.
‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.
அ) நக்கீரர்
ஆ) மருதனார்
இ) கீரந்தையார்
ஈ) ஓதலாந்தையார்
Answer:
இ) கீரந்தையார்

Question 5.
பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
அ) நற்பரிபாடல்
ஆ) புகழ் பரிபாடல்
இ) ஓங்கு பரிபாடல்
ஈ) உயர் பரிபாடல்
Answer:
இ) ஓங்கு பரிபாடல்

Question 6.
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்

Question 7.
பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………
அ) புலவர்கள்
ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்
இ) இலக்கிய ஆய்வாளர்கள்
ஈ) உரையாசிரியர்கள்
Answer:
ஈ) உரையாசிரியர்கள்

Question 8.
எட்வின் ஹப்பிள் என்பவர்………………….
அ) அமெரிக்க மருத்துவர்
ஆ) பிரெஞ்சு ஆளுநர்
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி
Answer:
இ) அமெரிக்க வானியல் அறிஞர்

Question 9.
எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
அ) 1921
ஆ) 1821
இ) 1924
ஈ) 1934
Answer:
இ) 19241

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 10.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) பெருமாள் திருமொழி
ஈ) திருவாசகம்
Answer:
ஈ) திருவாசகம்

Question 11.
பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
அ) 3, 2, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 3, 2, 4, 1

Question 13.
‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
அ) கிளர்ந்து + அ
ஆ) கிளர் + த் + த் + அ
இ) கிளர் + ந் + த் + அ
ஈ) கிளர் + த்(ந்) + த் + அ
Answer:
ஈ) கிளர்+த்(ந்)+த்+அ

Question 14.
முதல் பூதம் எனப்படுவது ………………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 15.
“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Question 16.
முதல் பூதம் …………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) நீர்
ஈ) காற்று
Answer:
அ) வானம்

Question 17.
பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..
அ) நெருப்புப் பந்து
ஆ) உருவம் இல்லாத காற்று
இ) வெள்ளம்
ஈ) ஊழி
Answer:
அ) நெருப்புப் பந்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 18.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) மோனை

Question 19.
நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………
அ) பூமி
ஆ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) பூமி

Question 20.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 21.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
இ) யுகம்

Question 22.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
ஈ) முறை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 23.
1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………
அ) மாணிக்கவாசகர்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
Answer:
அ) மாணிக்கவாசகர்

Question 24.
“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………
அ) தண்பெயல்
ஆ) தலை
இ) இய
ஈ) ஊழி
Answer:
அ) தண்பெயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
Answer:

  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
  • அறிவாற்றல்,
  • சமூக உறவு,
  • இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.

Question 2.
பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் – அகம் புறம் சார்ந்த நூல்.
  • இந்நூல் “ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
  • சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
  • உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
  • 24 பாடல்களே கிடைத்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 3.
அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:

  • அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

Question 4.
பால்வீதி குறித்து எட்வின் ஹப்பிள் நிரூபித்துக் கூறிய செய்தியை எழுது.
Answer:

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன.
  • வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூ சுகளாகத் தெரியும்.

Question 5.
பூமி வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
Answer:
தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

Question 6.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – தொடர் பொருள் விளக்குக.
Answer:
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 7.
“விசும்பில் ஊழி ஊழ்” என்பதில் விசும்பு, ஊழி, ஊழ் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:

  • விசும்பு – வானம்
  • ஊழி – யுகம்
  • ஊழ் – முறை

சிறுவினா

Question 1.
அண்டப் பெருவெளி குறித்து மாணிக்கவாசகர் மற்றும் எட்வின் ஹப்பிள் ஆகியோர் மூலம் அறியப்படும் செய்தி யாது?
Answer:
மாணிக்கவாசகர் கூற்று :

  • அண்டப் பகுதியின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்னும் திருவாசகப் பாடலில் மேற்கண்ட செய்தியை 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

எட்வின் ஹப்பிள் கூற்று :

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறு தூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
  • மேற்கண்ட செய்தியை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நிரூபித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இவ்வடிகள் பரிபாடலில் கீரந்தையார் பாடலில் இடம்பெறுகின்றது.

பொருள்:
உயிர்கள் தோன்றி நிலைபெறுதல்.

விளக்கம் :
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான
ஊழிக்காலம் வந்தது.

Question 3.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை நிரூபிக்க.
Answer:
எட்வின் ஹப்பிள்:
நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியில் நின்று பார்த்தால் , சிறு தூசி போல கோடிக்கணக்கில் பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். இதனை 1924 இல் அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்தார்.

மாணிக்கவாசகர்:
1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திரு அண்டப்பகுதியில்,

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
…………………. ………………….
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

– என்ற அடிகள் பால்வீதிகள் பற்றிய கருத்துகளைக் கூறுகின்றது. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல பால்வீதிகள் நுண்மையாக இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Students can Download 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு பேசுக.
Answer:
பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிதநேயச் செயலாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற புகழ்மொழிக்கேற்ப பசியால் வருந்தும் ஒருவருக்கு அந்நேரத்தில் உணவளிப்பது அவருக்குப் புத்துயிர் அளிப்பதாக இருக்கிறது.

விருந்தினருக்கு உணவிடுதல் என்பது நாச்சுவைக்காகவும் விருந்தோம்பல் காரணமாகவும் உணவிடப்படுகிறது. தமிழர் பண்பாடுகளில் சிறந்த ஒன்று விருந்தோம்பல். ஆகவே, விருந்தளிப்பதனைப் பெறும் பேறாகக் கருதி உணவளிப்பர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 2.
உங்கள் கற்பனையை இணைத்து நிகழ்வைக் கதையாக்குக.
Answer:
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும் போது, விருந்தினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியாக மாற்றிவிடும் அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும். விருந்தாளிகள் அடிக்கடி வரமாட்டார்களா என்று இருக்கும்.

விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?
காலையிலிருந்தே வீட்டிற்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். “என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போராங்களா என்ன?”

“ஏங்க…. காலையிலேருந்து வேப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப்போறாங்க பாருங்க.” “அடடே, ஆமாம் காக்கா கத்துது யாரு வரப்போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே…. உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிட்டு” – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னது சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெருமுனையில் அறந்தாங்கி மாமாதலையில் பலாப்பழத்துடன்வந்து கொண்டிருந்தார். அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும். – தஞ்சாவூர்க் கவிராயர்
Answer:

விருந்தினர் தினம்

அதிகாலையில் கதிரவன் பொன் நிறமான ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். விடியலை உணர்ந்த பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. குடும்பத் தலைவிகள் சாணநீர் கரைசலுள்ள வாளி, துடைப்பம், கோலப்பொடி கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறி வீட்டின் முன்றிலில் சாணநீர் தெளித்து துடைப்பத்தால் பெருக்கி கோலமிட்டனர். பின் வீட்டிற்குள் சென்று மற்ற வேலைகளில் ஈடுப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

ஒருவரது இல்லத்தில் மட்டும் வேப்ப மரத்திலிருந்து காக்கை ஒன்று கரைந்து கொண்டிருந்தது. காக்கை அதிகாலையில் கரைந்தால் விருந்தினர் வருகை இருக்கும் என்பது ஐதீகம். ஆகவே அப்பெண்மணி விருந்துக்கான உணவினைத் தயார் செய்ய ஆரம்பித்தாள். இடையில் தன் கணவனுடன் மனவருத்தம் ஏற்பட்டு சண்டை வேறு குழந்தைகளின் மனதில் விருந்தினர் வந்தால் பெற்றோர் சண்டையை விட்டு விட்டு மகிழ்வர் எனக் கருதிக் கொண்டிருந்த போது பலாப்பழம் ஒன்றைத் தன் தலையில் வைத்து சுமந்தபடி வந்தார். பெற்றோர் சண்டையை விட்டுவிட்டு விருந்தினரை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் மூழ்கினர். குழந்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் - 1
Answer:
முன்னுரை :
கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
சுப்பையாவுடன் புஞ்சையில் அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்தது சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்டே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும், தள்ளாட்டமும் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது.

நீச்சுத் தண்ணீ ர் :
அன்னமய்யாவைப் பார்த்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.

ஜீவ ஊற்று :
அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்ததும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா.வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

அன்னமய்யாவின் மனநிறைவு :
கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கும் மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.

பெயர் பொருத்தம் :
தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றான். எவ்வளவு பொருத்தம். ‘எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’ என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.

பரமேஸ்வரன் (மணி) :
அன்னமய்யா அந்த வாலிபனின் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.

முடிவுரை :
அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) கோபல்லபுரத்துக் கோகிலா
இ) கோபல்லபுரத்து மக்கள்
ஈ) கோபல்ல சுப்பையா
Answer:
இ) கோபல்லபுரத்து மக்கள்

Question 2.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………
அ) கி. ராஜநாராயணன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
அ) கி. ராஜநாராயணன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 3.
உறையூர் உள்ள மாவட்டம் ……………………
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) கரூர்
ஈ) பெரம்பலூர்
Answer:
அ) திருச்சி

Question 4.
கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) அகநானூறு

Question 5.
கி. ராஜநாராயணின் சொந்த ஊர் ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) இடைசெவல்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
Answer:
ஆ) இடைசெவல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 6.
இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல் கால்……………………
அ) கோபல்லபுரத்து மக்கள்
ஆ) பால்மரக்காட்டினிலே
இ) சட்டை
ஈ) சித்தன் போக்கு
Answer:
அ) கோபல்லபுரத்து மக்கள்

Question 7.
எப்போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல்?
அ) விடுதலைப்
ஆ) விவசாயிகளின்
இ) நெசவாளர்களின்
ஈ) தொழிலாளர்களின்
Answer:
அ) விடுதலைப்

Question 8.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………
அ) 1988
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996
Answer:
ஆ) 1991

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 9.
எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்……………………
அ) கி. ராஜமாணிக்கம்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) கி. ராசரத்தினம்
ஈ) கி. ராசதுரை
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Question 10.
கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்……………………
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) முத்துலிங்கம் ஈ) அகிலன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Question 11.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள் எவ்விலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன?
அ) நாஞ்சில்
ஆ) கொங்கு
இ) கரிசல்
ஈ) நெய்தல்
Answer:
இ) கரிசல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 12.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளைத் தொடங்கியவர் ……………………
அ) அகிலன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) நாஞ்சில்நாடன்
ஈ) கி.ராஜநாராயணன்
Answer:
ஈ) கி.ராஜநாராயணன்

Question 13.
கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்……………………
அ) கரிசல் இலக்கியம்
ஆ) நாஞ்சில் இலக்கியம்
இ) புதுக்கவிதை
Answer:
அ) கரிசல் இலக்கியம்

Question 14.
கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி ……………………
அ) கு. அழகிரிசாமி
ஆ) பூமணி
இ) பா. செயப்பிரகாசம்
ஈ) சோ. தர்மன்
Answer:
அ) கு. அழகிரிசாமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 15.
கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவரைக் கண்டறி.
அ) பூமணி
ஆ) வீரவேலுசாமி
இ) வேலராம மூர்த்தி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந. பிச்சமூர்த்தி

Question 16.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) பாச்சல் – 1. சோற்றுக்கஞ்சி
ii) பதனம் – 2. மேல்கஞ்சி
iii) நீத்துப்பாகம் – 3. கவனமாக
iv) மகுளி – 4. பாத்தி
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 17.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) வரத்துக்காரன் – 1. புதியவன்
ii) சடைத்து புளித்து – 2. சலிப்பு
iii) அலுக்கம் – 3. அழுத்தம்
iv) தொலவட்டையில் – 4. தொலைவில்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 1, 2, 3, 4

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Question 18.
காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் ……………………
அ) கரிசல் இலக்கியங்கள்
ஆ) நெய்தல் இலக்கியங்கள்
இ) கொங்கு இலக்கியங்கள்
ஈ) புதினங்கள்
Answer:
அ) கரிசல் இலக்கியங்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Students can Download 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.2 பெருமாள் திருமொழி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 1.
தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
தமிழர் மருத்துவம்:

  • தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும்.
  • தாவரம், விலங்கு, உலோகம் அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.
  • தமிழர்கள் நோயைச் சரிப்படுத்த இயற்கை தரும் இலை, காய், கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர்.
  • வாதம், பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில் இருந்தால் நோய் நம்மை நாடாது.
  • தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை . குணமாவதற்குச் சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது.

நவீன மருத்துவம்:

  • அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர் ஹிப்போகிரேடஸ்.
  • நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் உண்டு.
  • நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன. நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும்.
  • உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Quesiton 1.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

குறுவினா

Question 1.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
“மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
Answer:
உடலில் ஏற்பட்ட புண் :

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம் :

வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்குத் துன்பத்தைத் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

அறுத்து – வினையெச்சம்
மிளாத்துயர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
ஆளா உனதருளே – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி - 1

பலவுள் தெரிக

Question 1.
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
Answer:
அ) 105

Question 2.
வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.
அ) கேரள, பாலக்காடு
ஆ) கர்நாடக, மாண்டியா
இ) ஆந்திரா, நெல்லூர்
ஈ) கேரள, திருவனந்தபுரம்
Answer:
அ) கேரள, பாலக்காடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.
அ) அன்னையாக
ஆ) காதலியாக
இ) தோழனாக
ஈ) தந்தையாக
Answer:
அ) அன்னையாக

Question 4.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.
அ) மோனை
ஆ) எதுகை
இ) உருவகம்
ஈ) அந்தாதி
Answer:
ஆ) எதுகை

Question 5.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 6.
பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..
அ) திருமங்கையாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
Answer:
ஆ) குலசேகராழ்வார்

Question 7.
குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பத்தாம்
Answer:
இ) எட்டாம்

Question 8.
‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?
அ) 681
ஆ) 691
இ) 541
ஈ) 641
Answer:
ஆ) 691

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 9.
‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்
அ) பொய்மை
ஆ) நிலையாமை
இ) விளையாட்டு
ஈ) அற்புதம்
Answer:
இ) விளையாட்டு

Question 10.
காதல் நோயாளன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 11.
மருத்துவன் போன்றவர் அ) குலசேகராழ்வார்…………………..
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 12.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்க ள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Question 13.
மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 14.
பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
ஆ) முதலாயிரம்
இ) ஐந்தாம் திருமொழி
ஈ) திருப்பாவை
Answer:
ஈ) திருப்பாவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 15.
வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஈ) மருத்துவர்

Question 16.
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.
ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.
இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.
ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.
Answer:
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

Question 17.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
அ) வாளால் – மாளாத

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 18.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
இ) மருத்துவன் – நோயாளன்)

குறுவினா

Question 1.
பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.
Answer:

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்.
  • இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இயற்றியவர் : குலசேகராழ்வார்

Question 2.
குலசேகர ஆழ்வார் குறித்து குறிப்பு வரைக.
Answer:
பெயர் – குலசேகர ஆழ்வார்
ஊர் – திருவஞ்சிக்களம் (கேரளம்)
நூல்கள் – பெருமாள் திருமொழி, முகுந்தமாலை.
புலமை – வடமொழி, தென்மொழி
காலம் – எட்டாம் நூற்றாண்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?
Answer:
குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.

Question 4.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” – மாயம் செய்தவர் யார்?
Answer:
மாயம் செய்தவர் : திருவித்துவக் கோட்டம்மா

Question 5.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் சுட்டப்படும் ‘மருத்துவன்’ மற்றும் ‘நோயாளன்’ போன்றவர் யாவர்?
Answer:

  • மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா
  • நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
குலசேகரர் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?
Answer:
மருத்துவரை நேசித்தல் :
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பார்த்தல் :
இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 Patterns Additional Questions

Students can download 5th Maths Term 1 Chapter 3 Patterns Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 3 Patterns Additional Questions

Question 1.
Square of the number 9 is _______
(a) 81
(b) 49
(c) 21
(d) 81
Answer:
(d) 81

Question 2.
49 is the square number of _______
(a) 4
(b) 16
(c) 9
(d) 5
Answer:
(a) 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 Patterns Additional Questions

Question 3.
Is 36 square number?
Answer:
Yes, 42

Question 4.
2, 3, 5, _____ 12, ______, 23
Answer:
8, 17

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Students can Download 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.3 மலைபடுகடாம்

கற்பவை கற்றபின்

Question 1.
உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க.
Answer:
அ) எ.கா : ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’
கதை – எறும்பும் புறாவும் :
குளத்து நீரில் விழுந்து தத்தளித்த எறும்பைத் தக்க சமயத்தில் புறாவானது ஓர் இலையைப் பறித்துப் போட்டு எறும்பை அதன்மீது ஏறி கரைக்கு வரச் செய்தது. செய்நன்றி மறவாத எறும்பானது மறுமுறை புறாவைக் கொல்ல வந்த வேடனின் காலைக் கடித்ததால் அவன் எய்த அம்பு தவறியது புறா காப்பாற்றப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

ஆ) எ.கா : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
கதை :
பல நாட்கள் பட்டினியாகக் கிடந்த எலி ஒன்று தானியங்கள் நிரப்பப்பட்ட ஓர் உயரமான பானையைப் பார்த்தது. உயரத்தில் ஏற முடியாத காரணத்தால் எலியானது பானையின் அடியில் உள்ள ஓட்டையின் வழியே உள்ளே சென்றது. அளவுக்கு அதிகமான தானியங்களை உண்டதால் வயிறு புடைந்தது. ஓட்டையை விட்டு வெளியேற முடியாத எலி மீண்டும் மீண்டும் முயன்று அதன் வயிறு கிழிந்தது. ஓட்டையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலே வலியால் துடித்துச் செத்தது.

Question 2.
பத்தியைப் படித்து வார இதழ் ஒன்றிற்கு அனுப்பும் வகையில் சமையல் குறிப்பாக மாற்றுக.
Answer:
கம்மங்கூழ் தயாரித்தல் :
பொசுக்குகிறது வெயில், ஒரு துளி மழை பட்டால் வறுத்த உளுத்தின் வாசம் பரப்பும் வறண்ட மண். வெடித்த நிலம் செழித்து விளைகிறது கம்மம் பயிர். உரலில் குத்தி, சுளகில் புடைக்க அதன் உழி நீங்கும். நீர் தெளித்துத் தெளித்து, மீண்டும் உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். உப்புக் கலந்து உலையில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கரையவிட்டுக் கிண்ட, கட்டியாகி அது சோறாகும். கம்மஞ் சோற்றை உருட்டி வைத்து, பின் மோர் விட்டுக் கரைத்தால் அது கம்மங்கஞ்சி அல்லது கம்மங்கூழ், மோர் மிளகாய் வற்றல், உப்பில் தோய்த்த பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் கடித்துக் கஞ்சியைக் குடித்தால் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை தேகம் குளிர்ந்து போகும், அனல் அடங்கும். உயிர் வரும் கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

கம்மங்கூழ் : (தேவையான பொருட்கள்)

கம்மம் பயிர் – 2 கைப்பிடி
உப்பு – தேவைக்கு ஏற்ப
நீர் – தேவைக்கு ஏற்ப
மோர் – அரை லிட்டர்
மோர் மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
பச்சை மிளகாய் (அல்லது) சின்ன வெங்காயம் – தேவைக்கு ஏற்ப

செய்முறை :
கம்மம் பயிரை நீர் தெளித்துத் தெளித்து உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். அதனுள் தேவையான அளவு நீரும் உப்பும் சேர்த்து உலையிலிட்டால் அது இறுகி சோறாகும். அந்தச் சோற்றுடன் மோர் விட்டுக் கரைத்தால் கம்மங்கூழ் தயார். மோர் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு இக்கஞ்சியைக் குடிக்கலாம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்
Answer:
ஈ) சிற்றூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

குறுவினா

Question 1.
‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

சிறுவினா

Question 1.
முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 1

Question 2.
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:
வழிகாட்டல் :
பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்கள், மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

நன்னனின் கூத்தர்கள் :
பகைவரே இல்லாமல் ஆட்சிசெய்பவன், பகை வந்தாலும் எதிர்கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள் :
நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு : நெய்யில் வெந்த மாமிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நெடுவினா

Question 1.
ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 2

முன்னுரை:
அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றுப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

உணவு:
அன்றைய பாணர்கள் கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:
கல்வி கற்க முடியாதவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பலர் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:
இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு போக்கப்படுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

நன்னடை:
சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய்ய இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:
வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

இலக்கணக் குறிப்பு.

அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்
எய்தி – வினையெச்சம்
பொழிந்த – பெயரெச்சம்
சேர்ந்த – பெயரெச்சம்
கூறி – வினையெச்சம்
புக்கு – வினையெச்சம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 1, 2, 3, 4,
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 3, 4, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
ஆ) 3, 4, 1, 2

Question 3.
பொருந்தாத பொருளுக்கான இணை எது?
அ) வேவை – வெந்தது
ஆ) இறடி – தினை
இ) பொம்மல் – சோறு
ஈ) நரலும் – சுற்றம்
Answer:
ஈ) நரலும் – சுற்றம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 4.
மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 5.
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Answer:
இ) 583

Question 6.
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
ஈ) கூத்தராற்றுப்படை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 7.
மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
அ) யானை
ஆ) மேகம்
இ) மான்
ஈ) வானம்
Answer:
அ) யானை

Question 8.
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெருங்கௌசிகனார்
இ) மருதனார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) பெருங்கௌசிகனார்

Question 9.
‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) மலைந்து+உ
ஆ) மலைந்+த்+உ
இ) மலை +த்(ந்)+த்+உ
ஈ) மலை +த்+த்+உ
Answer:
இ) மலை +த்(ந்)+த்+உ

Question 10.
‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) பொழிந்து+அ)
ஆ) பொழி+த்+த்+உ
இ) பொழி+த்+ந்+த்+அ
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
Answer:
ஈ) பொழி+த்(ந்)+த்+அ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 11.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer:
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்

Question 12.
அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்
அ) அசைவாடிய
ஆ) இளைப்பாறி
இ) அமைதியாகி
ஈ) இன்பமாகி
Answer:
ஆ) இளைப்பாறி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 13.
கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) நெருப்பு
ஆ) கொம்பு
இ) வால்
ஈ) நீர்
Answer:
அ) நெருப்பு

Question 14.
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
அ) கரும்
ஆ) சிவந்த
இ) வெண்மையான
ஈ) நீலநிற
Answer:
ஆ) சிவந்த

Question 15.
அல்கி என்பதன் பொருள்
அ) அழிந்து
ஆ) தங்கி
இ) உள்ளே
ஈ) வெளியே
Answer:
ஆ) தங்கி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 16.
பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)

Question 17.
கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) மலைபடுகடாம்
இ) பொருநராற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
Answer:
ஆ) மலைபடுகடாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 18.
நன்னன் எந்நில மன்னன்?
அ) பெருநில
ஆ) குறுநில
இ) சிறுநில
ஈ) மா
Answer:
ஆ) குறுநில

Question 19.
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
அ) நன்னன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

குறுவினா

Question 1.
மலைபடுகடாம் – பெயர்க்காரணம் கூறு.
Answer:
மலைக்கு யானையை உருவகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது.

Question 2.
ஆற்றுப்படை என்றால் என்ன?
Answer:
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர் வரும் கூத்தனை அழைத்தல்.
யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகிறோம்.
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல்.

Question 3.
குறுநில மன்னன் நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவாக மலைபடுகடாம் கூறுவன யாவை?
Answer:

  • நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல்.
  • தினைச் சோறு.

Question 4.
பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?
Answer:
கூத்தர், பாணர், விறலியர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 5.
மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
Answer:
மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை எரியும் நெருப்பு ஆகும்.

Question 6.
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே ” என்று யார் யாரிடம் கூறினார்?
Answer:
நன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம் கூறினார்.

Question 7.
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே” தொடர் பொருள் விளக்குக.
Answer:
தொடர் இடம் பெறும் நூல் : மலைபடுகடாம்
தொடர் பொருள் விளக்கம் : பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

Question 8.
தினை, சோறு ஆகியவற்றிற்கு மலைபடுகடாம் தரும் சொற்கள் யாவை?
Answer:
தினை – இறடி ; சோறு – பொம்மல்.

Question 9.
“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்” இவ்வடியில் ‘கழை’ என்னும் பொருள் தரும் சொல் எது?
Answer:
கழை – மூங்கில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 10.
“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்” இவ்வடியில் “ஆரி”, “படுகர்” ஆகிய சொற்களின் பொருள்
யாது?
Answer:
ஆரி – அருமை ; படுகர் – பள்ளம்.

சிறுவினா

Question 1.
‘மலைபடுகடாம்’ நூல் குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
  • வேறு பெயர் : கூத்தராற்றுப்படை
  • அடிகள் : 583
  • உருவகம் : மலைக்கு யானையை உவமையாக்கி அதன் ஓசையைக் கடாஅம் எனச் சிறப்பித்தது.
  • பாட்டுடைத் தலைவன் : நன்னன் என்னும் குறுநில மன்னன்.
  • பாடியவர் : இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

Question 2.
“நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்:
இப்பாடல், பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பொருள்:
பரிசில் பெற்ற கூத்தன் பெறப் போகும் கூத்தனை ஆற்றுப்படுத்தல்.

விளக்கம் :
நன்னனின் ஊரில் பரிசு பெற்ற கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனிடம், “அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்” என்று ஆற்றுப்படுத்துகின்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 3.
பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்களையும் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 4

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Students can Download 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.3 முல்லைப்பாட்டு

கற்பவை கற்றபின்

Question 1.
முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க.
Answer:

  • மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கின்றனர்.
  • மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி அஃறிணை உயிரினங்களின்  துன்பங்களையும் நீக்க முற்பட்டிருக்கின்றனர்.
  • தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
  • விரிச்சி கேட்டலில் நம்பிக்கை உடையவர்கள்.
  • ஒருவரையொருவர் ஆற்றுப்படுத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 2.
குறிப்புகளைக் கொண்டு ஆர்வமூட்டும் வகையில் கதை / நிகழ்வை எழுது.
Answer:
அமைதி – வனம் – மனத்தைத் தொட்டது – கொஞ்சம் அச்சம் – ஆனால் பிடித்திருந்தது – இரவில் வீட்டின் அமைதியைவிட – வனத்தின் அமைதி – புதுமை – கால்கள் தரையில் – இலைகளின் சலசலப்பு – பறவைகள் மரங்களின் மேல் – சிறகடிப்பு – அருகில் திரும்பியவுடன் – திடீரென ஆரவார ஓசை – தண்ணீரின் ஓட்டம் – அழகான ஆறு – உருண்ட சிறு கூழாங்கற்கள் – இயற்கையின் கண்காட்சி.

இயற்கையின் கண்காட்சி

அமைதியான வனம் :
அடர்ந்த மரங்களைக் கொண்ட பசுமை மிகுந்த அமைதி நிறைந்த வனத்திற்குச் சென்றேன். வனத்தாவரங்கள் மற்றும் மலர்களின் நறுமணம் என் மனதைத் தொட்டது. அச்சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. இரவில் வீட்டில் இருக்கும் அமைதியைவிட வனத்தின் அமைதி என்னை மிகவும் கவர்ந்த து.

காட்டுயிரிகள் :
புதுமையான ஓர் அனுபவத்தைப் பெற்றேன். என் கால்கள் தரையில் ஊன்றியிருப்பதாய்த் தெரியவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டு ஓசை வந்த திசை நோக்கித் திரும்பினேன். மரங்களின் மேலிருந்த பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்து சோம்பலைப் போக்கிக் கொண்டிருந்தன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

ஆரவார ஓசை :
திடீரென ஏற்பட்ட ஆரவார ஓசையைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். குரங்குகள் தண்ணீரின் ஓட்டத்தில் தங்கள் முகங்களின் அழகைக் கண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தன.

அழகான ஆறு :
தெளிவான நீரோடையின் உள்ளே, உருண்டை வடிவில் சிறு கூழாங்கற்கள் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கற்களைப் போலவும், கண்ணாடியால் செய்யப்பட்ட உருண்டைகள் போலவும் தோற்றமளித்தன. இத்தகைய இயற்கையின் கண்காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல்
ஈ) கடல்நீர் கொந்தளித்தல்
Answer:
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

குறுவினா

Question 1.
பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
Answer:
தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்து விடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

Question 2.
மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

நெடுவினா

Question 1.
முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 2
மழை:
மேகம் அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

தெய்வ வழிபாடு:
முதுபெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்த முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

கன்றின் வருத்தம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 3

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

வருந்தாதே :
புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டி வந்து விடுவார் வருந்தாதே’ என்றாள் இடைமகள்.

முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :
இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டோம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே!

இலக்கணக் குறிப்பு.

மூதூர் – பண்புத்தொகை
உறுதுயர் – வினைத்தொகை
கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை
தடக்கை – உரிச்சொல் தொடர்
நன்மொழி – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 4

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

பெரும்பெயல் – பண்புத்தொகை
சிறுபுன் – பண்புத்தொகை
அருங்கடி – பண்புத்தொகை
பெருமுதுபெண்டிர் – பண்புத்தொகை
நல்லோர் – வினையாலணையும் பெயர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 5

பலவுள் தெரிக

Question 1.
முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?
அ) 101
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
இ) 103

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 2.
முல்லைப்பாட்டு எந்த நூல் வகையைச் சார்ந்தது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) கீழ்க்க ணக்கு
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 3.
முல்லைத் திணைக்குரிய பூ வகை
அ) காந்தள்
ஆ) பிடவம்
இ) தாழை
ஈ) பாதிரி
Answer:
ஆ) பிடவம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 4.
முல்லைப்பாட்டு எந்தக் கணக்கு நூல்களுள் ஒன்று?
அ) பதினெண்மேல் கணக்கு
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) பதினெண்மேல் கணக்கு

Question 5.
பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
அ) குறிஞ்சிப்பாட்டு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப்பாலை
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
ஆ) முல்லைப்பாட்டு

Question 6.
பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
இ) 1.ஈ 2.ஆ 3.இ 4.அ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 7.
வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலி மன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்

Question 8.
குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
இ) மாவலிமன்னன்

Question 9.
மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 10.
“கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”
– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்
அ) கோடு
ஆ) செலவு
இ) எழிலி
ஈ) கொடு
Answer:
இ) எழிலி

Question 11.
“கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?
அ) கோவலன்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) இடையர்
Answer:
ஈ) இடையர்

Question 12.
முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) மாங்குடிமதேனார்
இ) நப்பூதனார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) நப்பூதனார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 13.
மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) திருக்குறள்
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) சங்க இலக்கியம்

Question 14.
‘நனந்தலை உலகம்’ என்பதில் ‘நனந்தலை’ என்பதன் பொருள்
அ) கவர்ந்த
ஆ) அகன்ற
இ) சுருங்கிய
ஈ) இழந்த
Answer:
ஆ) அகன்ற

Question 15.
‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
அ) மலர்கள்
ஆ) மான்கள்
இ) விண்மீன்கள்
ஈ) கண்க ள்
Answer:
அ) மலர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 16.
பொருத்திக் காட்டுக:
i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்
ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை
iii) கைதொழுது – 3. வினைத்தொகை
iv) தடக்கை – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 3, 4, 2
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 17.
பொறித்த – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரிக்கும் முறை
அ) பொறி + த் + த் + அ
ஆ) பொறித்து + அ
இ) பொறி + த்(ந்) + த் + அ
ஈ) பொறி + த் + த
Answer:
அ) பொறி + த் + த் + அ

Question 18.
தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள்
அ) இளம் பெண்கள்
ஆ) முதிய பெண்டிர்
இ) தோழிகள்
ஈ) சான்றோர்
Answer:
ஆ) முதிய பெண்டிர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 19.
சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்தது?
அ) பசு
ஆ) இளங்கன்று
இ) எருமை
ஈ) ஆடு
Answer:
ஆ) இளங்கன்று

Question 20.
பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
அ) குறமகள்
ஆ) இடைமகள்
இ) தலைவி
ஈ) தோழி
Answer:
ஆ) இடைமகள்

Question 21.
‘கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இடைமகள் இளங்கன்றிடம்
ஆ) முதுபெண்டிர் பசுவிடம்
இ) தலைவன் காளையிடம்
ஈ) தலைவி மேகத்திடம்
Answer:
அ) இடைமகள் இளங்கன்றிடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 22.
‘நன்னர் நன்மொழி கேட்டனம்’ – யார் யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
ஆ) தலைவி முதுபெண்டிரிடம் கூறியது
இ) தோழி தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer:
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

Question 23.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டின் அடிகள்
அ) 1 – 17
ஆ) 17 – 25
இ) 4 – 16
ஈ) 5 – 20
Answer:
அ) 1 – 17

Question 24.
முல்லையின் நிலம்
அ) காடும் காடு சார்ந்த இடமும்
ஆ) மலையும் மலை சார்ந்த இடமும்
இ) வயலும் வயல் சார்ந்த இடமும்
ஈ) கடலும் கடல் சார்ந்த இடமும்
Answer:
அ) காடும் காடு சார்ந்த இடமும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 25.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்நிலத்துக்குரிய உரிப்பொருள்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) பாலை
Answer:
ஆ) முல்லை

Question 26.
கார்காலத்துக்குரிய மாதங்கள் அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஆவணி, புரட்டாசி
ஈ) கார்த்திகை, மார்கழி
Answer:
இ) ஆவணி, புரட்டாசி

Question 27.
நப்பூதனாரின் தந்தை அ) பொன்முடியார்
ஆ) பொன்வணிகனார்
இ) மாசாத்துவாணிகனார்
ஈ) மாணிக்கநாயனார்
Answer:
ஆ) பொன்வணிகனார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 28.
பொன்வணிகனாரின் ஊர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) குற்றாலம்
Answer:
இ) காவிரிப்பூம்பட்டினம்

குறுவினா

Question 1.
முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • 103 பாடல் அடிவரையறை கொண்டது.
  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
  • பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்.

Question 2.
நப்பூதனார் குறிப்பு வரைக.
Answer:

  • முல்லைப்பாட்டைப் பாடியவர்.
  • காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.

Question 3.
விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
Answer:

  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,
  • தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
  • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.
  • தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.

Question 4.
இளங்கன்று வருந்தக் காரணம் யாது?
Answer:
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 5.
இளங்கன்றின் வருத்தத்தைப் போக்க இடைமகள் கூறிய செய்தி யாது?
Answer:
புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் இப்போது ஓட்டி வந்துவிடுவர் – வருந்தாதே.

Question 6.
தலைவியை முதுபெண்டிர் எவ்வாறு ஆற்றுப்படுத்தினர்?
Answer:

  • நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவான்.
  • தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே.

Question 7.
முல்லைப்பாட்டில் திருமால் குறித்து கூறப்பட்ட செய்தி யாது?
Answer:

  • வலம்புரிச்சங்கு பொறித்த கைகளை உடையவன் திருமால்
  • குறுகிய வடிவம் எடுத்தவன்.
  • மாவலி மன்னன் நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்தவன்.

Question 8.
மழைப்பொழிவு குறித்து முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ள செய்தி யாது?
Answer:

  • ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகி பெருந் தோற்றம் கொண்டது மேகம்.
  • அம்மேகமானது வலமாய் எழுந்தது.
  • மலையைச் சூழ்ந்தது.
  • விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 9.
முதிய பெண்கள் (முதுபெண்டிர்) தெய்வத்தை எவ்வாறு தொழுது நின்றனர்?
Answer:

  • முல்லைப் பூக்களோடு நாழி அளவு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவினர்.
  • தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

Question 10.
பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பொழுது இரண்டு வகைப்படும். அவை: பெரும் பொழுது, சிறு பொழுது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 11.
முல்லை நிலத்திற்குரிய பொழுதுகள் எவை?
Answer:
பெரும் பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி) சிறு பொழுது – மாலை

Question 12.
முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ள கருப்பொருளைக் கூறுக.
Answer:
நீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
மரம் – கொன்றை, காயா, குருந்தம்
பூ – முல்லை , பிடவம், தோன்றிப்பூ

சிறுவினா

Question 1.
முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி யாது?
Answer:

  • துன்பத்தைத் தருகின்ற மாலைப் பொழுதில் முதிய பெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.
  • யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்.
  • மலர்ந்த முல்லைப் பூக்களோடு நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவுவர்.
  • தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 2.
முதுபெண்டிர் விரிச்சி கேட்டு தலைவிக்குக் கூறிய செய்தி யாது?
Answer:
இளங்கன்றின் பசி :

  • சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது.
  • அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.
  • புல்லை மேய்ந்த உன் தாயாரை வளைந்த கத்தியுடைய கம்பைக் கொண்ட எம் இடையர் இப்போதுஓட்டி வந்துவிடுவர் வருந்தாதே என்றாள் இடைமகள்.

நற்சொல்லைக் கேட்டோம் :

  • இடைமகளது நற்சொல்லை நாங்கள் கேட்டோம்.
  • தலைவன் திறைப்பொருளோடு வருவது உறுதி.

Question 3.
மழை மேகம் – மழைப் பொழிவு குறித்து முல்லைப்பாட்டு எவ்வாறு வருணித்துள்ளது?
Answer:
மழை மேகம் :

  • வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவன் திருமால்.
  • மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் எடுத்தவன் திருமால்.
  • அப்பேருருவத்தைப் போன்றுள்ளது மழை மேகம்.

மழைப் பொழிவு :

  • பேருருவம் கொண்ட மேகமானது வலமாய் எழுந்தது.
  • மலையைச் சூழ்ந்தது.
  • விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Question 4.
முல்லைப்பாட்டு பாடலில் இடம் பெற்றுள்ள முதல், கரு, உரிப்பொருள்களை எழுது.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 6
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு - 7

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம்

Students can Download 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.2 காசிக்காண்டம்

கற்பவை கற்றபின்

Question 1.
நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
உறவினரை வியந்து உரைத்து நல்லச் சொற்களை இனிமையாகப் பேசி முகமலர்ச்சியுடன் அவர்களை நோக்கினேன். வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன். அவர் எதிரில் நின்று முகமும் மனமும் மலரும்படி உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறி உணவு சமைத்து, தலைவாழை இலையில் உணவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டேன். அவர் விடை பெற்றுச் செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பினேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காசிக்காண்டம் என்பது…………………..
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

குறுவினா

Question 1.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Answer:

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்.
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு

இலக்கணக் குறிப்பு.

நன்மொழி – பண்புத்தொகை
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
வருக – வியங்கோள் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 1

இலக்கணக் குறிப்பு.

வந்து – வினையெச்சம்
நன்முகமன் – பண்புத்தொகை
பொருந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 2
வந்து – வா(வ) + த(ந்) + த் + உ
வா – பகுதி (வ) எனக் குறுகியது விகாரம்
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியர்

Question 2.
காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ) பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது

Question 3.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ) இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 4.
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்

Question 5.
அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ) சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி

Question 6.
பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) விவேக சிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) விவேக சிந்தாமணி

Question 8.
‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்

Question 9.
முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

Question 10.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது

Question 11.
வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 12.
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 13.
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை

Question 14.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) விவேகசிந்தாமணி
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
ஆ) விவேகசிந்தாமணி

குறுவினா

Question 1.
காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக.
Answer:

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

Question 2.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.

Question 3.
“முகமன்” என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

Question 4.
“பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்” – தொடர் பொருள் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : காசிக்காண்டம்
தொடர் விளக்கம் : விருந்தினர் அருகிலேயே விருந்து மேற்கொள்பவர் அமர்ந்து கொள்ளுதல்.

சிறுவினா

Question 1.
அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : அதிவீரராம பாண்டியன்
சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
பட்டப் பெயர் : சீவலமாறன்
இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

Question 2.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 3

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Students can Download 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.2 காற்றை வா!

கற்பவை கற்றபின்

Question 1.
இவ்வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளைச் சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே…… கவிதையின் உட்பொருளை வெளிப்படுத்தத் துணை நிற்பது குறித்துப் பேசுக.
Answer:
வாசனையுடன் வா :
மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற இனிய வாசனையுடன் வா என்பதன் பொருளாவது இயற்கையின் தூய மணமிக்க காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதேயாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

மடித்து விடாதே :
நெருப்பு எரிய சீரான காற்று அவசியம். அதிவேகக் காற்று நெருப்பைப் பரவச் செய்து மிகுந்த துன்பத்தை உருவாக்கும் மிகவும் குறைவான வேகத்தில் வீசும் காற்றானது நெருப்பு பற்றி எரிய முடியாமல் நெருப்பு அணைவதற்குக் காரணமாகிறது.

பாரதி தமது உயிரை நெருப்புக்கு ஒப்பிட்டுள்ளார். காற்றானது சக்தி குறைந்து போய் தன் உயிரை அவித்துவிடக் கூடாது எனவும் பேய் போல வீசி தமது உயிரை மடித்துவிடக் கூடாது எனவும் உட்பொருள் கொண்டு இவ்வேண்டுகோள் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 2.
திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது – பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று – தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – பாரதியார்
இது போன்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதைகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் படித்துக் காட்டு.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா! - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”
– பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ) உவமை, எதுகை
Answer:
ஆ) மோனை, எதுகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

குறுவினா

Question 1.
வசன கவிதை – குறிப்பு வரைக.
Answer:

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்.
  • கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்.
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.

சான்று :
இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமை
யுடையது காற்றும் இனிது – பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்

குறிப்பு. – வினையெச்சங்கள்
சுமந்து, வீசி – வினையெச்சங்கள்
மிகுந்த – பெயரெச்சம்
நல்லொளி, நெடுங்காலம் – பண்புத்தொகைகள்
நல்லலயத்துடன் – குறிப்புப்பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா! - 1

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.
அ) மயலுறுத்து – மயங்கச்செய்
ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி
இ) லயத்துடன் – சீராக
ஈ) வாசனை மனம்
Answer:
ஈ) வாசனை – மனம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 2.
பொருத்திக் காட்டுக.
i) பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii) சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii) புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv) சிந்துக்குத் தந்தை – 4. காவியம்
அ) 3, 4, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 1, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 3.
‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Question 4.
‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 5.
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Question 6.
பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Question 7.
‘காற்று’ என்னும் தலைப்பில் வசன கவிதை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 8.
“காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்

Question 9.
ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) சீராக
ஆ) அழகு
இ) உயிர்வளி
ஈ) உடல்உயிர்
Answer:
இ) உயிர்வளி

Question 10.
வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வல்லிக்கண்ணன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 11.
‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்

Question 12.
காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை
ஆ) மகரந்தத்தூளை
இ) விடுதலையை
ஈ) மழையை
Answer:
ஆ) மகரந்தத்தூளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 13.
பொருத்திக் காட்டுக:
i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி
iii) லயத்துடன் – 3. மணம்
iv) வாசனை – 4. சீராக
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 1, 2, 4, 3

Question 14.
ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
ஆ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 15.
புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்
அ) பாரதியின் வசன கவிதை
ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின் கவிநயம்
Answer:
அ) பாரதியின் வசன கவிதை

Question 16.
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
Answer:
அ) i, ii – சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 17.
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்

Question 18.
‘இனிய வாசனையுடன் வா’ என்று பாரதி அழைத்தது
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை
ஈ) அருவி
Answer:
அ) காற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 19.
பாரதியார் காற்றை ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா
ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
Answer:
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா

குறுவினா

Question 1.
பாரதியாரின் படைப்புகள் சிலவற்றைக் கூறு.
Answer:
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி.

Question 2.
பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப்பட்டார்?
Answer:
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன், மகாகவி, கலைமகள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 3.
பாரதியாரின் பன்முகங்கள் யாவை?
Answer:
கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை, ஆசிரியர், இதழாசிரியர், கேலிச்சித்திரங்கள், கருத்துப்படங்களை உருவாக்குபவர்.

Question 4.
பாரதியார் இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்களை எழுது.
Answer:
இந்தியா, சுதேசமித்திரன்.

Question 5.
‘காற்றே வா’ பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைக் கூறு.
Answer:
பாடுகிறோம், கூறுகிறோம், வழிபடுகின்றோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 6.
காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரதியார் வேண்டுகிறார்?
Answer:
மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள்மீது உராய்ந்து மிகுந்த உயிர்வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.

Question 7.
எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?
Answer:
காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்டகாலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.

Question 8.
“உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்” – என்று யார் யாரிடம் கூறுகின்றார்?
Answer:
பாரதியார், காற்றிடம் கூறுகின்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

சிறுவினா

Question 1.
‘காற்றே வா’ பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது?
Answer:

  • மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற வாசனையுடன் வா.
  • இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
  • உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
  • உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா’ என்ற பாடலில் பாடுகிறார்.
    Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா! - 2

Question 2.
மகாகவி பாரதியார் குறிப்பு வகை.
Answer:
பெயர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பெற்றோர் : சின்னசாமி – இலக்குமி அம்மையார்
பாராட்டுகள் : ‘சிந்துக்குத் தந்தை’, ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’
பணி : ஆசிரியர், இதழாசிரியர், சிறுகதை ஆசிரியர்.
படைப்புகள் : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி.
பணியாற்றிய இதழ்கள் : இந்தியா, சுதேசமித்திரன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Question 3.
புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் யாது?
Answer:

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பிலக்கணத்திற்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ‘வசன கவிதை’ ஆகும்.
  • ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனகவிதை வடிவத்தைக் கையாண்டார்.
  • இந்த வசன கவிதையே புதுக்கவிதை’ என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

 

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Students can Download 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.1 விருந்து போற்றுதும்!

கற்பவை கற்றபின்

Question 1.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவர்க்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.
Answer:
அமுதன் : வீட்டில் திண்ணை அமைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தாயா?
மதி : கேட்டேன். வழிப்போக்கர்கள் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் என்று அப்பா கூறினார்.
அமுதன் : விருந்தினர் பேணல் குறித்து உன் வீட்டார் உனக்கு கூறிய செய்தி யாது?
மதி : வணக்கம் கூறி வரவேற்றல், அமர வைத்தல், தண்ணீர் கொடுத்தல், உணவு உண்ணச்செய்தல் ஆகியவையே விருந்தினர் பேணும் முறையாகும் என்றனர்.
அமுதன் : ஈகை என்றால் என்ன என்பது பற்றி கேட்டாயா?
மதி : தமிழர் பண்பாட்டில் ஈகை குறித்தும் இலக்கியங்கள் கூறுகின்றன. பாரி என்ற குறுநில
மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்ததாகவும் பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதையும் நாம் பாடநூலில் படித்திருக்கிறோம் அல்லவா? அதுதான் ஈகை என்றனர்.
அமுதன் : ‘பசித்தவர்க்கு உணவிடல்’ குறித்து உன் பெற்றோர் கூறிய செய்திகளை எனக்கும் கூறு.
மதி : “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது இலக்கியம். பசித்துயரால் வாடுபவருக்கு உணவளிப்பது அவருக்கு புத்துயிர் வந்தது போன்றிருக்கும் என்று அம்மா கூறினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 2.
“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ………………” –

பாரதிதாசனார் இவ்வாறாகக் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்.
கிடைத்த இரையைப் பகிர்ந்துண்ணும் பொருட்டு புறாக்கள் வட்டமாய் அவ்விரையைச் சுற்றி கூடி நின்றன. இக்காட்சியானது இதழ் விரிந்திருக்கின்ற தாமரை மலரைப் போன்று காட்சியளிப்பதாக கவிஞர் உவமித்துள்ளார்.

மு.வரதராசனார் இயற்றிய குறட்டை ஒலி’ என்ற சிறுகதையில் ஓர் ஏழைத்தாய்தன்குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலால் பட்டினி கிடந்த நாய்க்குட்டிகளுக்கு ஊட்டுகிறாள். ஓர் ஏழைத்தாயின் வறுமையிலும் பகிர்ந்துண்ணும் தாய்மைப் பண்பு இக்கதையில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலத்தில் பகிர்ந்துண்ணும் வழக்கம் அதிகமாக மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அன்றாடம் நாம் காணும் ஐந்தறிவு உயிரினமாகிய காக்கை கூட தனக்குக் கிடைத்த சிறிதளவு இரையையும் தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும் பொருட்டு கரைந்து தன் இனத்தை அழைத்து உண்கிறது. இத்தகைய உயிரினங்களின் செயல்களைக் கண்டாவது மனிதர்கள் பகிர்ந்துண்ணும் பழைய பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பசிப்பிணி நீங்கும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
Answer:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

Question 2.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
Answer:
ஆ) இன்மையிலும் விருந்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

குறுவினா

Question 1.
‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறுவினா

Question 1.
புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
Answer:

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

நெடுவினா

Question 1.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 1
முன்னுரை :
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 2
என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

உணவு உபசரிப்பு :

  • • வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
  • வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு :

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
  • உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.

முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1

Question 2.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 3.
தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை

Question 4.
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ண

Question 5.
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 6.
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை

Question 7.
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 8.
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி

Question 9.
“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 10.
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

Question 11.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்

Question 12.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 13.
“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா

Question 14.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 15.
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

Question 16.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா

Question 17.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 18.
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 19.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்

Question 20.
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 21.
பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) மாமல்லபுரம்
ஈ) திருச்சி
Answer:
அ) சிதம்பரம்

Question 23.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) கபிலர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 24.
“காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 25.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

குறுவினா

Question 1.
விருந்தோம்பல் என்றால் என்ன?
Answer:
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும்
கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவையே விருந்தோம்பல் எனப்படும்.

Question 2.
உலகம் நிலைத்திருக்கிறதற்கான காரணங்கள் எவையென இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்?
Answer:

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
  • அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது, பிறருக்குக் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலைத்திருக்கிறது.

Question 3.
‘உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு’ என்பதைக் குறித்து நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?
Answer:

  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 4.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து புறநானூறு எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
Answer:

  • வீட்டிற்கு வந்தவர்க்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தாள் தலைவி.

Question 5.
வாளையும் யாழையும் பணையம் வைத்து விருந்தளிக்கப்பட்ட செய்தியைக் கூறு.
Answer:
பழைய வாள் :
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்

சீறியாழ் :
இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 6.
இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுது.
Answer:
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. தானியமில்லாததால் அன்று விதைத்துவிட்டு வந்த விதை நெல்லை அரித்துச் சமைத்து விருந்து படைத்தார்.

Question 7.
நெய்தல் நிலத்தவரின் விருந்தளிப்பு குறித்துச் சிறுபாணாற்றுப்படை வழியே செய்தியைக் கூறு.
Answer:
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.

Question 8.
பழந்தமிழர் விருந்தை எதிர்கொள்ளும் தன்மைப் பற்றி குறுந்தொகை கூறும் செய்தி யாது?
Answer:
இல்லத்தின் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்ததைக் குறுந்தொகை கூறுகிறது.

Question 9.
இல்ல விழாக்கள் யாவை?
Answer:

  • திருமணத்தை உறுதி செய்தல்
  • பிறந்தநாள்
  • திருமணம்
  • புதுமனை புகுவிழா
  • வளைகாப்பு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 10.
மினசோட்டா தமிழ்ச் சங்க ‘வாழையிலை விருந்து விழாவில்’ வைக்கப்படும் உணவுகள் யாவை?
Answer:

  • முருங்கைக்காய் சாம்பார்
  • வெண்டைக்காய் கூட்டு
  • மோர்க்குழம்பு
  • தினைப்பாயாசம்
  • வேப்பம்பூ ரசம்
  • அப்பளம்

Question 11.
யாருடைய ஆட்சி காலத்தில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?
Answer:
நாயக்கர், மராட்டியர்.

Question 12.
“காலின் ஏழடிப் பின் சென்று” – இப்பாடலடி உணர்த்தும் செய்தி யாது?
Answer:

  • பண்டையத் தமிழர் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது வழியனுப்பும் விதம்.
  • வழியனுப்பும் போது அவர்கள் செல்ல இருக்கின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 13.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை?
Answer:

  • தொல்காப்பியம்
  • புறநானூறு
  • திருக்குறள்
  • நற்றிணை
  • சிலப்பதிகாரம்
  • குறுந்தொகை
  • கம்பராமாயணம்
  • கொன்றை வேந்தன்
  • கலிங்கத்துப்பரணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 14.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் எவை?
Answer:
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.

Question 15.
விருந்து பேணுவதற்காக எவற்றையெல்லாம் தலைவன் பணையம் வைத்ததாகப் புறநானூறு கூறுகின்றது?
Answer:
இரும்பினால் செய்யப்பட்ட பழைய வாள், கருங்கோட்டுச் சீறி யாழ்.

Question 16.
விருந்தினர் என்பவர் யார்? (அல்லது) விருந்தே புதுமை – பொருள் விளக்கம் தருக.
Answer:
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். இதனையே தொல்காப்பியர் ‘விருந்தே புதுமை’ என்கிறார்.

Question 17.
விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிடும் புலவர்கள் யாவர்?
Answer:

  • தொல்காப்பியர்
  • கம்பர்
  • திருவள்ளுவர்
  • செயங்கொண்டார்
  • இளங்கோவடிகள்
  • ஔவையார்

Question 18.
மோப்பக் குழையும் அனிச்சம் உவமை கொண்டு வள்ளுவர் வலியுறுத்தும் கருத்து யாது?
Answer:
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 19.
“விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்தக் காரணம் யாது?
Answer:
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துகிறாள்.

Question 20.
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
Answer:
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆகும்.

Question 21.
உலகம் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது?
Answer:
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுத்து மகிழ்வர் நல்லோர். அத்தகையவர்களால் தான் உலகம் இன்றும் நிலைபெற்று இருக்கின்றது.

Question 22.
“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : நற்றிணை
தொடர் விளக்கம் : நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நற்பண்பு குடும்பத்தலைவிக்கு உண்டு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 23.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : குறுந்தொகை
தொடர் விளக்கம் : இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று கேட்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

சிறுவினா

Question 1.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கூறு.
Answer:

  • வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்தனர் பழந்தமிழர் என்று புறநானூறு கூறுகிறது.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தளித்தாள் தலைவி. இன்று வந்த விருந்தினருக்கு விருந்தளிக்க கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்தான் தலைவன்.
  • இளையான்குடி மாறநாயனார் தன் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து விருந்து படைத்ததைப் பெரிய புராணம் மூலம் அறியலாம்.

Question 2.
உற்றாரோடு நின்ற விருந்து குறித்து எழுதுக.
Answer:

  • • சங்க காலத்தில் அரசனாயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
  • கால மாற்றத்தினால் புதியவர்களை வீட்டிற்குள் அழைத்து உணவளிப்பது குறைந்தது.
  • விருந்து புரப்பது குறைந்ததால் நாயக்கர் மராத்தியர் காலத்தில் மிகுதியான சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டன.
  • புதியவர்களைவிருந்தினராய் ஏற்பது குறைந்து ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாய் ஏற்ற னர்.
  • படிப்படியாக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 3.
விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 3

Question 4.
மினசோட்டா ‘வாழையிலை விருந்து விழா’ பற்றி எழுதுக.
Answer:

  • அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
  • தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு விருந்து வைக்கின்றனர்.
  • முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
  • அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.  தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 5.
வாழை இலை விருந்து, ‘உணவு பரிமாறும் முறை’ குறித்து எழுது.
Answer:

  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழையிலையின் குறுகிய பகுதியும், வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும்.
  • இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவைகளையும், சிறிய உணவு வகைகளையும் வைத்தனர்.
  • இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான உணவு வகைகளை வைப்பர். நடுவில் சோறு வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவர்.

பரிவுடன் பரிமாற்றம் :
விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறும் வழக்கத்தை நம் முன்னோர்கள் செய்தனர்.

Question 6.
வாழை இலையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
Answer:

  • வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
  • வாழை இலை ஒரு கிருமிநாசினி. அது உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
  • வாழை இலையில் தொடர்ந்து உண்பவர்களுக்கு நோய் தாக்குவதில்லை.
    தோல் பளபளப்பாகும்; பித்தம் தணிக்கும்.
  • வயிற்றுப் புண் ஆற்றும்; பசியைத் தூண்டும்.

Question 7.
காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.
Answer:

  • புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலை இக்காலத்தில் இல்லை.
  • அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை
  • திருமணம், வளைகாப்பு போன்ற இல்லவிழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

நெடுவினா

Question 1.
விருந்தோம்பல் பண்பாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது) விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 4
முன்னுரை :
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

விருந்து போற்றும் திருக்குறள்:
திருவள்ளுவர் விருந்தோம்பல்’ என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கின்றார். முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ‘மோப்பக்குழையும் அனிச்சம் ….’ என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.

தமிழர் மரபு ‘விருந்தோம்பல்’:
கோவலன் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி கண்ணகி வருந்துகின்றாள் என்பது மூலம் விருந்து தமிழர் மரபு என்கிறார் இளங்கோவடிகள். கம்பரும் செயங்கொண்டாரும் விருந்தைத் தமிழர் மரபாகப் போற்றினர்.

விருந்தறம்:
அமிழ்தமே கிடைத்தாலும் தமிழர் தனித்து உண்ணமாட்டார் என்பதைப் புறநானூறு கூறுகின்றது. விருந்தினர் நடு இரவில் வந்தாலும் இன்முகத்துடன் தமிழர் வரவேற்பர் என்கிறது நற்றிணை. பழைய வாளும் யாழும் பணையம் வைத்து விருந்து போற்றப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்கிறார் ஔவையார். வாழை இலையில் விருந்து படைப்பதைத் தமிழர் அவசியமாகக் கொண்டிருந்தனர்.

முடிவுரை:
காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பாக விளங்கும் விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 2.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 5

முன்னுரை:
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

வீட்டில் திண்ணை :
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். ஆனால் இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை . இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.

விருந்தினரைப் பேணுதல்:
திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்ல விழா நாட்களில் அப்பகுதி வாழ் மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

காலப் போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே’ செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.

தமிழர் பண்பாட்டில் ஈகை:
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

‘பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே’
– கம்பராமாயணம், 1:2:36.

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. வள்ளல்கள் பலரும் மிகுந்த ஈகைக்குணத்துடன் விளங்கியதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

பசித்தவருக்கு உணவிடல்:
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

‘பலர்புகு நாவில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ!’

– என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன.

மணிமேகலை பசிப்பிணியைப் போக்க மேற்கொண்ட முயற்சியிலும்’, இராமலிங்க அடிகள் ‘வடலூரில் அணையா அடுப்பை ஏற்படுத்தி பெரும் உதவி புரிந்தமை’ இன்னும் தொடர்வதை பசிப்பிணியை நீக்குவதற்கான செயல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். இன்றைய நிலையில் பல்வேறு திருக்கோயில்களில் அன்னதானம் வழங்குவதைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

விருந்தினர் அன்றும் இன்றும்:
சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

நிறைவுரை:
பண்டைத்தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல்பண்பாடு செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் பல்வேறு முறைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பான விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Students can Download 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

கற்பவை கற்றபின்

Question 1.
காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக.
Answer:
நான்தான் நிலம் :
நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

என்னைக் காப்பாற்றுங்கள் :
மனிதர்களே! நெகிழிப்பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள். தொழிற்சாலைக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துங்கள். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். விவசாயத்திற்குத் தொழு உரங்களைப் பயன்படுத்துங்கள். இச்செயல்களைச் செய்தால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். நான் நலமாய் இருந்தால் மட்டுமே உங்களால் நலமாய் வாழ முடியும். மனிதர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

Question 2.
17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் கலந்துரையாடுக.
Answer:
மதன் : வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்று உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணம் என்ன ?
சுதன் : ஆக்ராவில் தாஜ்மகாலைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய தீங்கு விளைக்கும் நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து பரவுவதால் அவை வெள்ளைப் பளிங்குக் கற்களின் மீது பட்டு அவற்றின் நிறத்தையும் தன்மையையும் மாற்றுகிறது.
மதன் : இதற்கான தீர்வுதான் என்ன?
சுதன் : எல்.பி.ஜி. வாயு உருளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பொருட்களை எரிக்கக் கூடாது என்று 1995 ஆம் ஆண்டில் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி தாஜ்மகாலைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகள் இன்று வரை இச்சட்டத்தை மதித்து வருகின்றன. ஆகவேதான் அவை மேலும் சேதமடையாமல் காக்கப்பட்டு வருகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
i) கொண்டல் – 1. மேற்கு
ii) கோடை – 2. தெற்கு
iii) வாடை – 3. கிழக்கு
iv) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’
– இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
Answer:
உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!

தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

சிறுவினா

Question 1.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்……… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால் ……….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
Answer:

  • நானே! நீர்
  • உலகில் முக்கால் பாகம் நான்
  • நான் இல்லை என்றால் உலகம் இல்லை
  • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
    மேகமாய் வளர்ந்து
    மழையாய் பிறப்பேன் நான்
  • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
  • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
  • மலையில் விழுந்து
    நதியில் ஓடி
    கடலில் சங்கமிக்கும்
    சரித்திர நாயகன் நான்.

Question 2.
சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
Answer:
மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்? என்னைப் போல் நிலையாக ஓரிடத்திலிருந்து வீசக் கூடாதா.
சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையாக வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடைப் பட்டாலும் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது.
மின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று : ஆம், நான் மக்களுக்குக் குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலும் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுப்பிக்கக் கூடிய வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து ஒரு புது மொழியை உலகிற்குக் கூறப்போகிறேன்.
சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்”.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

நெடுவினா

Question 1.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
Answer:
காற்றைப் பாராட்டல் :
மலர்ந்த மலராத பாதி மலரையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

கவி நயம்:
கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவி நயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

சான்று:

மோனை : ளரும் ண்ணமே
எதுகை : நதியில் பொதிகை
முரண் : மலர்ந்தும் X மலராத
விடிந்தும் x விடியாத
இயைபு : வண்ணமே அன்னமே
அணி : பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமையணி வந்துள்ளது)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
அ) ஐம்பது
ஆ) அறுபது
இ) எழுபது
ஈ) எண்ப து
Answer:
இ) எழுபது

Question 2.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
அ) திருமந்திரம், திருவாசகம்
ஆ) திருக்குறள், திருமந்திரம்
இ) திருவருட்பா, திருப்பாவை
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
Answer:
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 3.
பொருத்துக.
1. மூச்சு – அ) நீர்
2. தாகம் – ஆ) நிலம்
3. உறைவது – இ) காற்று
4. ஒளி – ஈ) கதிரவன்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
இ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ

Question 4.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
அ) திருமூலர்
ஆ) அகத்தியர்
இ) வள்ளுவர்
ஈ) தொல்காப்பியர்
Answer:
ஈ) தொல்காப்பியர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 5.
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
அ) திருமூலர்
ஆ) ஔவையார்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) ஒளவையார்

Question 6.
பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
Answer:
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 7.
“முந்நீர்” என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) கப்பல்
இ) பயணம்
ஈ) நீர்
Answer:
அ) கடல்

Question 8.
பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) வளி
ஆ) தென்றல்
இ) புயல்
ஈ) கடல்
Answer:
ஈ) கடல்

Question 9.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 10.
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
அ) இளங்கோவடிகள்
ஆ) ஔவையார்
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) திருமூலர்
Answer:
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

Question 11.
‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
அ) கரிகாலன்
ஆ) இராசராசன்
இ) இராசேந்திரன்
ஈ) பாழி
Answer:
அ) கரிகாலன்

Question 12.
கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய சங்ககாலப் பெண்புலவர்
அ) ஔவையார்
ஆ) ஆதிமந்தியார்
இ) அள்ளூர் நன்முல்லையார்
ஈ) வெண்ணிக் குயத்தியார்
Answer:
ஈ) வெண்ணிக் குயத்தியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 13.
முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி
அ) ஹிப்பாலஸ்
ஆ) யுவான்சுவாங்க்
இ) பிளைனி
ஈ) தாலமி
Answer:
அ) ஹிப்பாலஸ்

Question 14.
ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று

Question 15.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
அ) வடகிழக்குப் பருவக் காற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 16.
உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ஜப்பான்
Answer:
அ) இந்தியா

Question 17.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரா
Answer:
இ) தமிழ்நாடு

Question 18.
உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ள நாடு
அ) சீனா
ஆ) அரேபியா
இ) இந்தியா
ஈ) ஜப்பான்
Answer:
இ) இந்தியா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 19.
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாமிடம் பெறுவது
அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு
Answer:
அ) காற்று மாசு

Question 20.
உலகக் காற்று நாள்
அ) ஜூன் 15
ஆ) ஜூலை 15
இ) ஜனவரி 15
ஈ) டிசம்பர் 10
Answer:
அ) ஜூன் 15

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 21.
‘யுனிசெப்’ என்பது
அ) பருவநிலை மாறுபாடு
ஆ) சிறுவர் நிதியம்
இ) உலக சுகாதார நிறுவனம்
ஈ) உலக வங்கி நிறுவனம்
Answer:
ஆ) சிறுவர் நிதியம்

Question 22.
“பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்
அ) தனிநாயக அடிகள்
ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
இ) இளங்குமரனார்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி

Question 23.
உயிரின வாழ்வின் அடிப்படை
அ) இயற்கை
ஆ) செயற்கை
இ) மனிதன்
ஈ) மரங்கள்
Answer:
அ) இயற்கை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 24.
தொல்காப்பியர், உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார்?
அ) கடவுளால்
ஆ) மனிதனால்
இ) ஐம்பெரும் பூதங்களால்
ஈ) இன்பதுன்பங்களால்
Answer:
இ) ஐம்பெரும் பூதங்களால்

Question 25.
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
அ) மாணிக்கவாசகர், திருவாசகம்
ஆ) திருமூலர், திருமந்திரம்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) ஔவையார், ஆத்திச்சூடி
Answer:
ஆ) திருமூலர், திருமந்திரம்

Question 26.
‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – என்று உரைத்தவர் யார்?
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer:
ஆ) இளங்கோவடிகள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 27.
தென்றல் காற்று என அழைக்கப்படக் காரணம்
அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது
ஆ) வேகமாக வீசுவது
இ) சுழன்று வீசுவது
ஈ) மணற்பகுதியிலிருந்து வீசுவது
Answer:
அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது

Question 28.
‘நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ – என்று பெண்ணொருத்தி, தூது செல்ல காற்றினை அழைத்ததாகப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer:
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

Question 29.
“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே” – என்ற பாடலை இயற்றியவர்
அ) வாலி
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மீரா
Answer:
ஆ) கண்ண தாசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 30.
நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) பரிபாடல்
ஈ) கலித்தொகை
Answer:
அ) புறநானூறு

Question 31.
ஹிப்பாலஸ் என்பவர்
அ) கிரேக்க மாலுமி
ஆ) போர்ச்சுக்கீசிய மாலுமி
இ) பிரெஞ்சு மருத்துவர்
ஈ) ஆங்கில ஆளுநர்
Answer:
அ) கிரேக்க மாலுமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 32.
பருவக் காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தவர்
அ) வாஸ்கோடகாமா
ஆ) ஹிப்பாலஸ்
இ) பார்த்தலோமியோ டயஸ்
ஈ) டெமாஸ்தனிஸ்
Answer:
ஆ) ஹிப்பாலஸ்

Question 33.
ஹிப்பாலஸ் பருவக்காற்று என்று பெயரிட்டவர்கள்
அ) யவனர்
ஆ) சீனர்
இ) ஆங்கிலேயர்
ஈ) அமெரிக்கர்
Answer:
அ) யவனர்

Question 34.
ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு
அ) கி.பி. முதல் நூற்றாண்டு
ஆ) கி.மு. முதல் நூற்றாண்டு
இ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ஈ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
Answer:
அ) கி.பி. முதல் நூற்றாண்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 35.
வெண்ணிக்குயத்தியார் என்பவர்
அ) சங்ககாலப் பெண் புலவர்
ஆ) காப்பிய நாயகி
இ) பாண்டிமாதேவி
ஈ) இடைக்காலப் பெண் புலவர்
Answer:
அ) சங்ககாலப் பெண் புலவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 36.
“களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்
அ) காக்கைப் பாடினியார்
ஆ) வெண்ணிக்குயத்தியார்
இ) வெள்ளிவீதியார்
ஈ) நப்பசலையார்
Answer:
ஆ) வெண்ணிக்குயத்தியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 37.
வெண்ணிக்குயத்தியார் கரிகால் வளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் ‘வளி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) வலிமை
ஆ) காற்று
இ) விரைவு
ஈ) வறுமை
Answer:
ஆ) காற்று

Question 38.
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) டெமாஸ்தனிஸ்
ஆ) ஹிப்பாலஸ்
இ) பெர்னாட்ஷா
ஈ) சாக்ரடீஸ்
Answer:
ஆ) ஹிப்பாலஸ்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 39.
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயனைக் கண்டறியும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி கடல் வணிகத்தில் வெற்றி கண்டவர்கள்
அ) வட இந்தியர்கள்
ஆ) ஆப்பிரிக்கர்கள்
இ) தமிழர்கள்
ஈ) ஐரோப்பியர்கள்
Answer:
இ) தமிழர்கள்

Question 40.
இந்தியாவின் முதுகெலும்பு
அ) நெசவு
ஆ) வேளாண்மை
இ) கட்டிடத்தொழில்
ஈ) பேரளவு ஊற்பத்தி
Answer:
ஆ) வேளாண்மை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 41.
காற்று தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறும் காலம்
அ) தென்மேற்குப் பருவக்காலம்
ஆ) தென்கிழக்குப் பருவக்காலம்
இ) வடமேற்குப் பருவக்காலம்
ஈ) வடகிழக்குப் பருவக்காலம்
Answer:
ஈ) வடகிழக்குப் பருவக்காலம்

Question 42.
‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, இளநாகனார்
Answer:
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்

Question 43.
கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறும் நூல் எது? கூறியவர் யார்?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஒளவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்
Answer:
ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 44.
புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
அ) ஓசோன் படலம்
ஆ) எரிகற்கள்
இ) விடிவெள்ளி
ஈ) காடு
Answer:
அ) ஓசோன் படலம்

Question 45.
குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று
அ) கார்பன்-டை-ஆக்சைடு
ஆ) குளோரோ புளோரோ கார்பன்
இ) ஆக்சிஜன்
ஈ) ஹைட்ரோ கார்பன்
Answer:
ஆ) குளோரோ புளோரோ கார்பன

Question 46.
குளோரோ புளோரோ கார்பன் வாயிலாக உருவாகும் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாகப் பயன்படுத்தப்படும் குளிர்பதனி
அ) ஹைட்ரோ கார்பன்
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer:
அ) ஹைட்ரோ கார்பன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 47.
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது
அ) அமில மழை
ஆ) கல் மழை
இ) கன மழை
ஈ) மிதமான மழை
Answer:
அ) அமில மழை

Question 48.
அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை
i) மண்
ii) நீர்
iii) கட்டடங்கள்
iv) காடுகள்
v) நீர்வாழ் உயிரினங்கள்
அ) i, ii – சரி
ஆ) ili, iv – சரி
இ) iv, v – சரி
ஈ) ஐந்தும் சரி
Answer:
ஈ) ஐந்தும் சரி

Question 49.
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்.
அ) ஓராயிரம்
ஆ) ஈராயிரம்
இ) ஒரு இலட்சம்
ஈ) ஒரு கோடி
Answer:
இ) ஒரு இலட்சம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 50.
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நாம் வெளியிடுவது
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ) கார்பன்-டை-ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer:
இ) கார்பன்-டை-ஆக்சைடு

Question 51.
மரங்கள் நம் நுரையீரலுக்குத் தேவையான எதைத் தருகிறது?
அ) உயிர் வளி (ஆக்சிஜன்)
ஆ) கார்பன்-டை-ஆக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer:
அ) உயிர் வளி (ஆக்சிஜன்)

Question 52.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளவர் அ) மறைமலையடிகள்
ஆ) தனிநாயக அடிகள்
இ) ஞானியாரடிகள்
ஈ) அமுதன் அடிகள்
Answer:
ஆ) தனிநாயக அடிகள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 53.
இயற்கையின் கூறுகளில் எதின் பங்கு கூடுதலானது?
அ) நிலத்தின்
ஆ) நீரின்
இ) நெருப்பின்
ஈ) காற்றின்
Answer:
ஈ) காற்றின்

Question 54.
கேட்கிறதா என் குரல் – என்னும் பாடப்பகுதி யாருடைய குரலாக எதிரொலிக்கிறது?
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) வானம்
Answer:
இ) காற்று

Question 55.
தாஜ்மகால் கட்டப்பட்ட நூற்றாண்டு அ) கி.பி. 16
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 15
ஈ) கி.பி. 18
Answer:
ஆ) கி.பி. 17

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

குறுவினா

Question 1.
மூச்சுப்பயிற்சி குறித்துத் திருமூலர் கூறிய செய்தி யாது?
Answer:
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

Question 2.
காற்றைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 3.
பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் கூறு.
Answer:
தென்றல் காற்று, பூங்காற்று, கடல் காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல் காற்று, கீழ்க்காற்று, மென் காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல் காற்று, பேய்க்காற்று, சுழல் காற்று, சூறாவளிக்காற்று.

Question 4.
கிழக்குக் காற்று குறிப்பு வரைக. (அல்லது) கொண்டல் காற்று குறிப்பு வரைக.
Answer:

  • கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் காற்று.
  • மழையைத் தருவதால் மழைக்காற்று என்றும் அழைக்கப்படுகிறது.

Question 5.
மேற்குக் காற்று குறிப்பு வரைக. (அல்லது) குடக்குக் காற்று குறிப்பு வரைக.
Answer:

  • மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசும்.
  • வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக்காற்று அல்லது கோடைக்காற்று என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 6.
வாடைக்காற்று குறிப்பு வரைக.
Answer:

  • வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று.
  • பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப் படுகிறது.

Question 7.
தென்றல் காற்று குறிப்பு வரைக.
Answer:

  • தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் காற்று.
  • மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான காற்றைத் தருகிறது.

Question 8.
நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது. திசைகள்
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 9.
காற்று குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது?
Answer:
தென்றல் காற்று பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது; கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது என இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

Question 10.
இருவகைப் பருவக்காற்றுகள் யாவை?
Answer:
தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று.

Question 11.
தென்மேற்குப் பருவக்காற்று குறிப்பு வரைக.
Answer:

  • ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்.
  • இவை மழைப்பொழிவினைத் தருகின்றன.
  • இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையினை இப்பருவக்காற்று மூலம் பெறுகிறோம்.

Question 12.
காற்று மாசடைவதினால் ஏற்படும் நோய்கள் யாவை?\
Answer:
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய், மூளை வளர்ச்சிக் குறைவு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 13.
ஓசோன் படலத்தின் பயன்களைக் கூறு.
Answer:

  • கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது.
  • புவியைப் போர்வை போலச் சுற்றி கதிரவனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கிறது.

Question 14.
ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?
Answer:

  • புறஊதாக் கதிர்கள் நேரடியாக உயிரினங்களைத் தாக்குவதால் மிகுந்த துன்பத்தை உயிரினங்கள் அடைகின்றன.
  • கண்களும் தோலும் பாதிப்படைகின்றன.

Question 15.
அமில மழை எவ்வாறு பெய்கிறது?
Answer:
காற்றில் கலந்துவிடும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து அமில மழையாகப் பெய்கிறது.

Question 16.
அமில மழையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?
Answer:
மண், நீர், கட்டடங்கள், காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 17.
குளோரோ புளோரோ கார்பன் குறிப்பு வரைக.
Answer:
* குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்று குளோரோ புளோரோ கார்பன் . • குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.

Question 18.
காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளைக் கூறுக.
Answer:

  • மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுதல்.
  • பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்தல்.
  • மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்.
  • புதை வடிவ எரிபொருட்களைத் (கச்சா எண்ணெய், நிலக்கரி) தவிர்த்தல்.
  • சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்தாமை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 19.
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயன்களைக் கூறு.
Answer:

  • புதிய கடல்வழி ஏற்படக் காரணமானது.
  • கிரேக்கம் – முசிறிக்கு விரைவான கடல் பயணம்.
  • யவனக் கடல் வணிகம் பெருகியது.

Question 20.
பருவக்காற்று எவ்வாறு உருவாகிறது?
Answer:
கதிரவனின் வெப்பத்தால் அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்றானது அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி பருவக்காற்றாகிறது.

Question 21.
காற்றாலையின் பயன்களைக் கூறு.
Answer:

  • மின்னாற்றலை உற்பத்தி செய்தல்.
  • நிலக்கரியின் தேவை குறைத்து கனிம வளம் பாதுகாக்கப்படல்.

Question 22.
காற்றின் ஆற்றல், வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
Answer:

  • • காற்றின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம் 51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.
  • காற்றின் வேகத்தை, கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று மதுரை இளநாகனார் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Question 23.
இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் தென்றலை எவ்வாறு நயம்பட உரைக்கிறார்?
Answer:

  • தென்றலானது பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது.
  • அவ்வாறு வரும்போது கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது.

சிறுவினா

Question 1.
ஹிப்பாலஸ் பருவக்காற்று குறிப்பு வரைக.
Answer:

  • கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்.
  • இவர் பருவக்காற்றின் உதவியால் முசிறித் துறைமுகத்திற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
  • விரைவான பயணத்திற்கு இப்புதிய வழி உதவியதால் யவனக் கப்பல்கள் சேரர்களின் முசிறித் துறைமுகத்திற்கு அதிகமாக வந்தன. (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்) ‘
  • யவனர் இப்பருவக்காற்றிற்கு அதைக் கண்டுபிடித்த ஹிப்பாலஸ் பெயரையே சூட்டினர்.

Question 2.
பருவக்காற்றின் வகைகளைக் கூறி விளக்குக.
Answer:
கதிரவனின் வெப்பத்தால் சூடாகி அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்று அங்குள்ள வெற்றிடத்தை நிரப்பி பருவக்காற்றாகிறது.
பருவக்காற்றின் வகைகள் : தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகைப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

தென்மேற்குப் பருவக்காற்று :

  • ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும்.
  • இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தருகிறது.

வடக்கிழக்குப் பருவக்காற்று :

  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும்.
  • இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை சிறக்கிறது.
  • நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற உதவுகிறது.

Question 3.
காற்றின் பயன்கள் யாவை?
Answer:

  • உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது.
  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவை உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது.
  • உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது.
  • நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.
  • காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெறுகிறோம்.

Question 4.
காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திகள் யாவை?
Answer:

தென்றலானது மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் போது வண்டுகளையும் அழைத்து வருகிறது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைத்துள்ளார்.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய பத்மகிரிநாதர் தென்றல் விடு தூதுவில் “தமிழும் குளிர்ச்சியான பொருநை நதியும் சேரும் செந்தமிழ் மலையின் பின் தோன்றிய தென்றலே” என்று பெண்ணொருத்தி தென்றலைத் தூது செல்வதற்காக அழைக்கிறாள்.

சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில் ‘வளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

நெடுவினா

Question 1.
காற்று பேசியதைப் போல நிலம், நீர், வானம் பேசுவதாகவும் அவை இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துவதாகவும் ஓர் உரையாடல் அமைக்க.
Answer:
நிலம் : என் உடலெல்லாம் காய்கிறது. என்னைக் குளிர்விக்கமாட்டாயா வானமே?
வானம் : இதற்கு நான் என்ன செய்ய முடியும்? உன்னில் வாழும் மனிதர்கள் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்களே! மரங்களை வெட்டுகிறார்களே தவிர, அவற்றை வளர்ப்பதற்குச் சிறிதும் சிந்திக்கிறார்களா என்பது ஐயமே.
நிலம் : ஆம் வானமே! வருடந்தோறும் மரம் நடுவிழாவைக்கூட நட்ட இடத்திலேயே நடத்துகிறார்கள். மரங்களை நட்டு அவற்றைப் பராமரிக்கும் பணியைச் செய்பவர்கள் குறைவே.
வானம் : அதுவும் சரிதான்!
நீர் : நண்பர்களே! என்னை நீங்களும் கண்டுகொள்ள மாட்டீர்களா? இந்த மனிதர்கள்
என்னை எப்படி அழுக்காக்கி உள்ளார்கள் பார்த்தீர்களா?
வானம் : ஐயகோ! உன்னை அடையாளம் காண்பதற்கே சிரமமாக இருக்கிறதே!
நீர் : ஆம் நண்பா !
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்ற உடற்றும் பசி
– என்னும் குறட்பா, வானமே நீ மழை பெய்யாமல் போனால் அடையும் இன்னல்களை அல்லவோ கூறுகிறது.
வானம் : ‘நீரின்றி அமையாது உலகு’ என்றும் திருக்குறள் கூறுகிறது
நிலம் : “மண்தினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித்தலை இய தீயுங்
தீமுரணிய நீரும், என்றாங்
கைம்பெரும் பூதத்தியற்கைப் போலப்” என்று நம்மைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில்.
வானம் : “உலகமாவது நிலம் தீ நீர் விசும்பொடு வளி ஐந்தும் கலந்த மயக்கம்” என்கிறார் தொல்காப்பியர்.
நீர் : “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்று நாட்டிற்குத் தேவையான உறுப்புகளில் என்னையும் சேர்த்தே கூறியுள்ளார் திருவள்ளுவர்.
நிலம் : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986-ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

நீர் : ஆம் நண்பா! இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நீ, நான், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும்.
வானம் : மிக்க மகிழ்ச்சி! மனிதர்கள் தங்கள் நடவடிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நம்புவோமா!
நிலம், நீர் : உறுதியாக நண்பா !