Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்…………………
(அ) டாக்டர் உதயமூர்த்தி
(ஆ) கல்கி
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) புலமைப்பித்தன்
Answer:
(இ) புதுமைப்பித்தன்

Question 2.
‘முருகு உறழ் முன்பொடு’ என்ற தொன்மம் விளக்கும் பாடல் …………… நூலில் இடம் பெற்றுள்ளது. (அ) நற்றிணை
(ஆ) நல்ல குறுந்தொகை
(இ) நன்னூல்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) நற்றிணை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிப்பது ………………….
(அ) காதை
(ஆ) சருக்கம்
(இ) காண்டம்
(ஈ) படலம்
Answer:
(இ) காண்டம்

Question 4.
வள்ளலார் சமரச சன்மார்க்க சபையை நிறுவிய இடம். ………….
(அ) வண்டலூர்
(ஆ) வடக்கூர்
(இ) வண்டியூர்
(ஈ) வடலூர்
Answer:
(ஈ) வடலூர்

Question 5.
…………… ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சென்னை நகரின் மக்கட்தொகை 1900
ஆகும்.
(அ) 1646
(ஆ) 1746
(இ) 1846
(ஈ) 1846
Answer:
(அ) 1646

Question 6.
ஓதற்பிரிவிற்கு உரிய காலம் ………… ஆண்டுகள்.
(அ) இரண்டு
(ஆ) மூன்று
(இ) நான்கு
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) மூன்று

Question 7.
கவிஞர் நகுலனின் இயற்பெயர் ……….
(அ) பாலசந்திரன்
(ஆ) இந்திரன்
(இ) சாமிக்கண்ணு
(ஈ) துரைச்சாமி
Answer:
(ஈ) துரைச்சாமி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 8.
………….. நூலுக்கு இளம்பூரணர்தான் முழுமையான உரை தந்துள்ளார்.
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) மாறனலங்காரம்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) தொல்காப்பியம்

Question 9.
தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து………………… வருபவர் ….
(அ) தாராபாரதி
(ஆ) பக்தவத்சல பாரதி
(இ) பாரதி சண்முகம்
(ஈ) சுத்தானந்த பாரதி
Answer:
(ஆ) பக்தவத்சல பாரதி

Question 10.
‘கூடி வாழ்தல்’ என்ற பொருளில் வருவது……………………
(அ) குடும்பு
ஆ) கடும்பு
(இ) குடம்பை
(ஈ) கடம்பை
Answer:
(அ) குடும்பு

Question 11.
தேடலை விரிவாக்குவது என்பர்…………………
(அ) புகழ்
(ஆ) செல்வம்
(இ) கல்வி
(ஈ) உறவு
Answer:
(இ) கல்வி

Question 12.
அகநானூற்றின் களிற்றியானை நிரையில் உள்ள பாடலின் எண்ணிக்கை ………….. ஆகும்.
(அ) 100
(ஆ) 120
(இ) 180
(ஈ) 110
Answer:
(ஆ) 120

Question 13.
புனவன் என்பது……………………….. ஐக் குறித்தது.
(அ) மீனவன்
(ஆ) பாடகன்
(இ) நூலகன்
(ஈ) கானவன்
Answer:
(ஈ) கானவன்

Question 14.
ஓட்டுநர் உரிமம் இன்றி ஊர்தியை இயக்கினால் சிறைத்தண்டனையோ அல்லது……… அபராதமோ
விதிக்கப்படும்.
(அ) ரூ. 2000
(ஆ) ரூ. 3000
(இ) ரூ. 40000
(ஈ) ரூ. 5000
Answer:
(ஈ) ரூ. 5000

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
வாகைத் திணை என்றால் என்ன?
Answer:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி
வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.

Question 16.
நும் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அகநானூற்று பாடலில் உள்ளுறைப் பொருளை எழுதுக.
Answer:

  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது.
  • தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.
  • எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.

Question 17.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னைத் தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்.

Question 18.
மொழியின் இயல்பு வழக்குகளை கலையின் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.

  • உவமம்
  • உருவகம்
  • எச்சம்
  • குறிப்பு
  • உள்ளுறை
  • இறைச்சி

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால்
  • கொம்பு
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 20.
“வெள்ளையர் நகரம்” “கருப்பர் நகரம்”- விளக்குக.
Answer:

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
  • கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள் வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.

Question 21.
முப்பரிமாணக் கலை என்றால் என்ன?
Answer:

  • திரைப்படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடித்துத் திரையில் காட்ட முடியும்.
  • திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.
  • ஒருவன் ஓடிவருவதைக் காட்டிவிட்டு அதைப் பார்ப்பவன் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று
    கேட்கவேண்டியதில்லை. என்னாச்சு? என்று கேட்டால் போதும்.
  • இது காட்சிமொழியின் தன்மை. உணர்ச்சிகளைக் காண்பிக்க முகத்தை மட்டுமே காண்பித்தால் போதும்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) களைந்து (ஆ) வந்தனர்
Answer:
(அ) களைந்து = களை + த் (ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி ; ந் – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

(ஆ) வந்தனர் = வா (வந்) + த் + அன் + அர்
வா – பகுதி ; (வந்) – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பல்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) கருந்தடம்
(ஆ) உன்ன லிர்
Answer:
(அ) பண்புத்தொகை
(ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகள் பாட குயில்கள் கத்த மயில்கள் கூவின.
Answer:
வண்டுகள் முரல் குயில்கள் கூவிட மயில்கள் அகவின.

Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
அ) நன்மொழி
(ஆ) பத்துப்பாட்டு
Answer:
(அ) நன்மொழி = நன்மை + மொழி
விதி : ஈறுபோதல்

(ஆ) பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
விவாகத்திற்கு பந்து மித்திரர்களுடன் வருக.
Answer:
திருமணத்திற்கு உறவினர்களுடனும், நண்பர்களுடனும் வருக.

Question 27.
மயங்கொலிப் பிழையின்றி பொருள் வேறுபட ஒரே தொடரில் விடையளி.
உன் — உண்
Answer:
உணவு இடைவேளையில் காலம் தாழ்த்தாமல் உன் சாப்பாட்டைத் தவறாமல் உண்.

Question 28.
கொச்சை நீக்கிச் சரியாக எழுது.
இன்னக்கி சாயுங்காலம் தங்கச்சி வரும்.
Answer:
இன்று மாலை தங்கை வருவாள்.

Question 29.
தனித்தமிழில் எழுதுக.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடு.
Answer:
காவல் நிலையம் சென்று புகார் கொடு.

Question 30.
விடைக்கேற்ற வினா எழுதுக.
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் உட்பகுதியிலிருந்துதான் வருகின்றன.
Answer:
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் எப்பகுதியிலிருந்து வருகின்றன?

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
  • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி நிற்கும்.

Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:

  • உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
  • முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
  • தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Question 33.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று”

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

“சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
தலைக்கோல் என்றால் என்ன? அவற்றின் சிறப்பு யாது?
Answer:

  • அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர்.
  • தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.
  • அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.
  • வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
  • அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
  • மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.
  • முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
  • அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில்
    வைப்பான்.
  • மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…. இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

Question 36.
பெருங்காப்பியத்தில் இடம் பெற வேண்டிய சிறப்புகள் யாவை?
Answer:

  • வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
  • தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
  • திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
  • சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
  • அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து
    கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் – செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் டையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  • படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  • மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். • திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை
    நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  • அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  • அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  • சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  • புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது நெய்தல்திணையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை :
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள் :
நீலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்:
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

நெய்தல் திணை:
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்.
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக்
கூறுவது வரைவு கடாதலாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 40.
உருவக அணி அல்லது பிறிது மொழிதல் அணியை சான்றுடன் விவரி.
Answer:
உருவக அணி:
அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா.) முகத்தாமரை

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் ‘உவமை’ எனப்படும்.

(அல்லது)

பிறிது மொழிதல் அணி:
Answer:
அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் ‘பிறிது மொழிதல் அணி’யாகும்.

(எ.கா.) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை.

எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது ‘பிறிது மொழிதல் அணி’ ஆகும். (பிறிது – வேறொன்று; மொழிதல் – கூறுதல்))

Question 41.
கீழ்க்காணும் பாடலைப் படித்தறிந்து ஏதேனும் 5 நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
தாயென அன்பு செய்து
தந்தைபோல் பரிந்து, சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறி
தூயநன் னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமுள் ளோனே
ஆசானென் றழைக்கத் தக்கோன். (- நாமக்கல் கவிஞர்)

ஆசிரியர் குறிப்பு:

இயற்பெயர் : வெ. இராமலிங்கம்
பிறப்பு : 29 அக்டோபர், 1888
ஊர் : மோகனூர் – நாமக்கல் மாவட்டம்
சிறப்பு பெயர் : காந்தியக் கவிஞர்
படைப்பு : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள்
இறப்பு : 24 ஆகஸ்டு 1972)

திரண்ட கருத்து:
ஒரு நல்ல ஆசிரியன் என்பவன் தாயைப் போல அன்பு செய்தும், தந்தையைப் போல பரிவுடனும், பெற்ற குழந்தையைப் போல அணைத்து பேசியும் நல்ல அறிவுரைகளை கூறுதல் வேண்டும். தூய நன்னடத்தைகளைக் கற்க துணையைப் போல நடந்துகாட்ட வேண்டும். இவ்வகையான தூய்மையான நல்ல குணங்கள் உள்ளவனே நல்ல ஆசான் ஆவார்.

மையக் கருத்து:
ஒரு நல்ல ஆசான் தாய், தந்தை, குழந்தை, துணையை போல இருக்க வேண்டும் என கூறுகிறார்.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
அன்பு – அறிவு
ஆயநற்குணம் – ஆசானெள்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை.
தாயென – சேசெயன
தூயறள் – ஆயநள்

அணி:
உவமையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Walls have ears.
2. Wealth is best known by want.
3. While in rome, be a roman.
4. Think every – body alike.
Answer:
1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.
2. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
3. ஊருடன் ஒத்துவாழ்.
4 தன்னைப்போலப் பிறரை நினை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 - 1

வான்மழை :

வரவேற்பேன் வரவேற்பேன்
வான்மழையே நீ வந்துவிடு
உன்னை அழைக்கத்தான்
உவந்துநான் மரம் வளர்த்தேன்
மாமயில்கள் அகவி ஆடுவதும்
மாமழை உன்னை வரவேற்கத்தான்
வாடிடும் பயிர்கள் காக்க
வாஞ்சையுடன் நீ வருவாயே!

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என மழைக்காலத்தை வருணிக்கிறார் நக்கீரர்.

(அல்லது)

(ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி:
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்:
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து ‘தலைக்கோலி’ என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் ‘பரிசு இவ்வளவு ‘ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை’ மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம்:
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள்
நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன்
கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே ‘ எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள்:

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு
    காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து. தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம்
    நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின்
பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
மருதன் கண்ட காட்சி:
“ஐப்பசி மாதம் அடைமழை காலம்” கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல்வெளிகள். வயல்வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர். நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்கி வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.

மருதனின் சிந்தனைகள்:
எந்த மழையின் உதவியில் நட்டார்களோ, அதே மழையின் ‘அபரிமித அன்பினால்’ இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒரு நாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு…. புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்…? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால் …. தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய? என்ன செய்யலாம் என்று மருதனுக்கும் ஆயிரம் யோசனைகள்.

மருதனுக்கு தோன்றிய யோசனை:
கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் கீழ்க்குமிழி மட்டுமல்ல. ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்துத் தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தத் கிராமமும் தப்பித்துக்கொள்ள வழி கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்த பேய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும்.

மருதனுக்கு ஏற்பட்ட சந்தேகம்:
சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா? இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.

மருதன் மாரியப்பனிடம் கூறினான்:
மருதனைக் கண்ட மாரியப்பன் ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும். இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. காதில் கேட்காதவாறு மாரி அவன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான் பொறுமையிழந்த மருதன் “ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது … ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற …. நானென்ன சொல்ல முடியும்?” “ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன் ….. முதமுத உங்கட்ட வந்து கேட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்..” கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.

மருதன் காளியப்பனின் உதவியை நாடினான்:
வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகனும். மேற்கொண்டு மழை பேயணும் கூட அவசியமில்லை…… ராத்திரிக்குள்ளே எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா…. அவ்வளவுதான் … இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான். ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணு கூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும். கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. ஏன்டா மருதா … உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணு கூடியிருக்கானுவளா? மூலைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க.

சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க …. அதிலும் உங்க சொல்லுக்க மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா …. ஒருநாள் தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…… மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது. இருந்தாலும் கண்மூடி யோசித்தார். நாளைக்குக் காலையிலேயே பலபலன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில் வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்குத் தலை சுத்துறாங்க திரும்ப வர மூணு நாளாகும். கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது.

மருதன் பட்டதாரி பிரேம்குமாரை சந்தித்தல் :
பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. “நாகூர்பிச்சை” என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ”பிரேம்குமார்” என்று மாற்றி வைத்துக்கொண்டு “மன்றம் ” அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும் செய்து கொண்டிருப்பவன். நாம நினைக்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன். முகம் மலர பிரேம்குமாரை வழி மறித்தான். “என்னண்ணே …” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி, பிரேமிடமிருந்து சட்டென்று எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.

மருதண்ணே… நீங்க சொல்ற வேலையைச் செய்றதுக்குன்னே பிடபின்யூ டின்னு கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க என்று கூறிவிட்டு மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்ன் போய்க்கொண்டே இருந்தான்.

மருதனின் புலம்பல்:
மருதனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை.

மருதன் தன் மனைவி அல்லியிடம் கூறுதல்.
தன் மனைவி அல்லியிடம் மருதன் நடந்ததைக் கூறினான். அதனைக் கேட்ட அல்லி இந்த ஊர்ல இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு “சக்கரைக்குழி” நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப்போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட இருக்கிறது நம்ம கையும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா … இன்னொரு ஊரு …. வேலையைப் பாப்பியா ….. ஆவேசமாய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள்.

மருதனின் முயற்சி:
தளும்புகின்ற வடி வாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடிகளை “சரக் சரக்” கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள். “நீ சொல்றது” நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாதான் நாமளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும் நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா? ஆற்றாமையுடன் கேட்டவளைத் திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்…”!

மருதன் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்:
மருதன் மற்றும் அல்லி செய்து கொண்டிருந்த வேலையைக் கண்டு மாரியும் வேலையில் ஈடுபட்டான். இவர்கள் மூவரையும் கண்ட காளியப்பன் வண்டியில் இருந்து இறங்கி அவரும் செய்தார். இதனை வண்டிக்காரர் மூலம் அறிந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரும் வந்து செய்ய ஆரம்பித்தனர். “ஊர் கூடித் தேர் இழுக்கும் போதும்“ வேர்வடத்தைப் பிடிக்கும் முதல் கரமாக இருந்தது மருதனின் கரம்.

முடிவுரை:
“ஆக்கமும் அழிவும் நம்மாலே” என்னும் பழமொழிக்கு இணங்க மருதனின் பொறுப்புணர்வால் அவனுக்கும் ஊருதிடும் நன்மை ஏற்பட்டது. மருதனின் பண்பு பாராட்டிற்கு உரியது.

(அல்லது)

(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு … குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலைபேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம் !

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) சுரதாவின் விண்வேறு என்று துவங்கும் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு;
காணும் கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. (சுரதா)

(ஆ) ‘சினம்’ என முடியும் குறள் வெண்பாவை எழுதுக.[1 x 2 = 2]
Answer:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.( – திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘காவியதர்சம்’ என்ற இலக்கண நூல்……………………மொழியில் எழுதப்பட்டது.
(அ) தமிழ்
(ஆ) வடமொழி
(இ) கிரந்தம்
(ஈ) ஷிப்ரூ
Answer:
(ஆ) வடமொழி

Question 2.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் சதுர மைல்கள் உருகிய பகுதி…………………….
(அ) ஆர்டிக்
(ஆ) அண்டார்டிக்
(இ) பசுபிக்
(ஈ) அட்லாண்டிக்
Answer:
(அ) ஆர்டிக்

Question 3.
‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ) பிரிந்து வாழ்தல்
(ஆ) சமுதாயம்
(இ) தம்மனை
(ஈ) கூடிவாழ்தல்
Answer:
(ஈ) கூடிவாழ்தல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 4.
வானரத் தலைவன்……………………
(அ) அனுமன்
(ஆ) சுக்ரீவன்
(இ) சவரி
(ஈ) சடாயு
Answer:
(ஆ) சுக்ரீவன்

Question 5.
தமிழக அரசு 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவிய இடம்……………………
(அ) நெல்லை
(ஆ) கன்னியாகுமரி
(இ) கோவை
(ஈ) தில்லை
Answer:
(ஆ) கன்னியாகுமரி

Question 6.
வாதம் புரிதலை கொடிகட்டியிருப்பரென்று கூறிய நூல்……………………
(அ) மதுரைக்காஞ்சி
(ஆ) நெடுநல்வாடை
(இ) முதுமொழிக்காஞ்சி
(ஈ) பட்டினப்பாலை
Answer:
(அ) மதுரைக்காஞ்சி

Question 7.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து உவமைக் கவிஞர் சுரதா பெற்ற விருது…………………………….
(அ) கலைமணி
(ஆ) கலைமாமணி
(இ) இராசராசன்
(ஈ) பாரதி
Answer:
(இ) இராசராசன்

Question 8.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான பாவகை…………………………… ஆகும்.
(அ) வெண்பா
(ஆ) அகவற்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) வெண்பா

Question 9.
வள்ளல் பச்சையப்பர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்………… ஆகும்.
(ஆ) மல்லியர்பா
(ஆ) மவுனியர்பா
(இ) கொற்கைப்பா
(ஈ) மாவலிபுரச்செலவு
Answer:
(ஈ) மாவலிபுரச்செலவு

Question 10.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
கூற்று : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி

Question 11.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாண அரசின் முதல் தலைவர்…………………… ஆவார்.
(அ) தலாமி
(ஆ) இராஜாஜி
(இ) எலியேல்
(ஈ) ஹிட்லர்
Answer:
(இ) எலியேல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 12.
குறிஞ்சித் திணை பாடிப்புகழ் பெற்றவர்………… ஆவார்.
(அ) கபிலர்
(ஆ) பரணர்
(இ) பேயனார்
(ஈ) அம்மூவனார்
Answer:
(அ) கபிலர்

Question 13.
மாதவி தனது நாட்டியத் திறமைக்காகப் பெற்ற பட்டம்………………………
(அ) ஆடலரிசி
(ஆ) தலைக்கோல்
(இ) நாட்டியப்பேரொளி
(ஈ) நாட்டியச் செங்கோல்
Answer:
(ஆ) தலைக்கோல்

Question 14.
உவகை என்பதன் பொருள் …………………………..
(அ) சினம்
(ஆ) பொறாமை
(இ) சூது
(ஈ) மகிழ்ச்சி
Answer:
(ஈ) மகிழ்ச்சி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர்ச் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Question 16.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
தான் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதி தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.

Question 17.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி’ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Question 18.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய பிற நூல்கள் யாவை?
Answer:

  • இரட்சணிய யாத்திரிகம்
  • போற்றித் திரு அகவல்
  • இரட்சணிய மனோகரம்

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

Question 20.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால் .
  • கொம்பு .
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Question 21.
நடை என்னும் சொல்லை தொல்காப்பியம் எவ்வாறு கையாண்டுள்ளது?
Answer:
‘நடைபெற்றியலும்’ என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும்,

ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி

என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஓடுமின்
(ஆ) அணிகின்றேன்
Answer:
(அ) ஓடுமின் = ஓடு + மின்
ஓடு – பகுதி
மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
(ஆ) அணிகின்றேன் = அணி + கின்று + ஏன்
அணி – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உழாஅது
(ஆ) உலகு
Answer:
(அ) உழாஅது – செய்யுளிசை அளபெடை
(ஆ) உலகு – இடவாகுபெயர்

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்
(ஆ) செந்தமிழே
Answer:
(அ) வானம் + எல்லாம் – வானமெல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) செம்மை + தமிழே – செந்தமிழே
செம் + தமிழே – செந்தமிழே
விதி : (1) ஈறுபோதல் (2) முன்னின்ற மெய் திரிதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 25.
ICON என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம் என்ன?
Answer:
உரு

Question 26.
கொச்சை சொற்களை தமிழில் எழுதுக.
Answer:
மெய்யாலுமே நான் கிரஹபிரவேச விழாவுக்குப் போய்கினு இருக்கேன். உண்மையாகவே நான் புதுமனை புகுவிழா நிகழ்விற்குச் சென்று கொண்டு இருக்கிறேன்.

Question 27.
மரபுத் தொடரைச் சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
Answer:
கூழைக்கும்பிடு
கூழைக்கும்பிடு – போலி மரியாதை
தொடர் : இந்த உலகில் பிடிக்காவிட்டாலும் கூட உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் சிலர் கூழைக்கும்பிடு போடுவர்.

Question 28.
மரபுப்பிழை திருத்துக.
சிங்கத்தின் பிளிறல் கேட்டு நரி குரைத்திட ஆந்தை ஓலமிட்டது.
Answer:
சிங்கத்தின் முழக்கம் கேட்டு நரி ஊளையிட ஆந்தை அலறியது.

Question 29.
விடைக்கேற்ற வினா எழுதுக.
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் காலத்தில் தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது.
Answer:
யார் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது?

Question 30.
பொருள் வேற்றுமை தோன்றும்படியாக ஒரே தொடரில் அமை.
வால் – வாள்
Answer:
குறும்பு செய்த குரங்கின் வாலை, வாள் கொண்டு வெட்டினான்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28)

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  • கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது
    பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

Question 32.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்தைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
  • பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத்
    தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடை பவளத்தில் 180, பாடல்களும் நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
  • நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
  • இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி ‘இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம்:
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.
Answer:

  • தான் எந்த உதவியும் செய்யாமலிருந்த போதிலும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகமும், விண்ணுலகமும் ஈடாகாத அளவிற்கு உயர்ந்தது.
  • உரியகாலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட பெரியதாகும்.
  • இதனால் நமக்கு பயன்கிடைக்குமா என்று ஆராயாமல் ஒருவர் நமக்கு செய்யும் உதவி, நன்மை கடலைவிட பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவை உதவி செய்திருந்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதை பனையளவாகக் கொண்டு போற்றுவர். இந்த செயல்களையெல்லாம் விட நன்றி உயர்ந்தது என்று ‘வள்ளுவர் கூறுகிறார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
Answer:

  • மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
  • வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
  • அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது.
  • விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
  • அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
  • இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகித்துக்கொள்ள வேண்டும்.
  • சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது.
  • பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  :
இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுப்படுத்துகிறார்.

Question 36.
சென்னை நீர் நிலைகளை குறிப்பிடுக.
Answer:
சென்னை நீர் நிலைகளாவன:

  • இலண்டன் நகர் என்றால் தேம்ஸ் நதி.
  • வாஷிங்டன் நகர் என்றால் போடமாக் நதி.
  • சென்னை, வட சென்னைக்குக் கொற்றலையாறு. மத்திய சென்னைக்குக் கூவம். தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்.
  • காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
  • மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்.
  • பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும் ஆறுகள் கடலில் சென்று சேரும்.

Question 37.
நம் தமிழ் பரம்பரையின் உறவுப்பெயர்களை எழுதுக.
Answer:
தமிழர் பரம்பரை:

பரன் – பறை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தந்தை – தாய்

நாம் :

மகன் – மகள்
பெயரன் – பெயர்த்தி
கொள்ளுப் பெயரன் – கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன் – எள்ளுப் பெயர்த்தி

Question 38.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
நெய்தல் திணை அல்லது இயன்மொழித்துறையை விளக்குக.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்லது)

இயன்மொழித் துறை
Answer:
துறை விளக்கம்:
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும். ஒருவனின் இயல்பைப் புகழ்ந்துக் கூறி வாழ்த்துவது இத்துறையின் உயிர்ப்பாகும்.

(சான்று) வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

துறை பொருத்தம்:
வரையறையின்றி மழை பல்வேறு இடங்களிலும் பொழிவது போல இரவலர்க்கு ஆராய்ந்து பாராமல் மழை போல் வாரி வழங்குவான் என்று பரணர் பேகனின் இயல்பைப் பாடலில் புகழ்வதால் இப்பாடல் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.

குறிப்பு:
பேகனின் வள்ளல் தன்மையின் இயல்பைப் பாடப்பட்டது குதிரைகளுக்கு மிகுந்த புல்லினை ஊட்டி பெருந்தேரினைச் விரைவாகச் செலுத்துவாயாக என்று கூறினான்.

Question 40.
நிரல்நிறையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
அணி விளக்கம்:
சில சொற்களை வரிசைப்படுத்தி, அச்சொற்களுடன் தொடர்புள்ளவற்றையும் முறையாக வரிசைப்படுத்தி அதன்படி பொருள் கொள்ள வைப்பதே ‘நிரல்நிறையணி’யாகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Answer:
விளக்கம்:
மேற்காணும் குறளில், அன்பும், அறனும், முதலடியில் அமைந்துள்ளன. அச்சொற்களுக்கு முறையாகப் பொருந்தும்படி, பண்பும், பயனும், இரண்டாவது அடியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அன்பே பண்பாகவும், அறனே பயனாகவும் இல்லறம் அமைய வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இங்ஙனம் அன்பிற்குப் பண்பும், அறத்திற்குப் பயனும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
(நிரல் – வரிசை ; நிறை – நிறுத்துதல், நிரல் நிறை வரிசையாக நிறுத்துதல்)

(அல்லது)

தற்குறிப்பேற்ற அணி:
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுதல் ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும். (தன்+ குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்)

(எ.கா.) மையறு மலரின் நீங்கியான் செய்மா தவத்தின் வந்து
செய்யவளிருந்தாள் என்று செருமணிக் கொடிகள்
என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா

விளக்கம்:
மிதிலை நகரம் தன்னிடம் திருமகள் வளர்ந்து வருவதைக் குறிப்பாகச் சொல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள இராமனை விரைந்து வருக’ என்று அழைப்பது போல தன் கொடிகளாகிய கைகளை நீட்டி அழைத்தது என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

இயல்பாகக் கொடி அசைவதை – இராமனை அழைக்கவே அவ்வாறு அசைந்தது என்று தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறியதால், இது ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும்.

Question 41.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஆழம் தெரியாமல் காலை விடாதே அல்லது மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழி விளக்கம்:
எந்தச்செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு :
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நாம் எந்த செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

(அல்லது)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Answer:
பழமொழி விளக்கம்:
வெளிப்புறத் தோற்றம் கண்டு எதையும் உண்மை என நினைத்தல் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்தார். அப்போது தாம்பரத்தில் ஒரு நபர் ஏறி என் நண்பரின் அருகில் அமர்ந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் நல்லவராய்த் தெரிந்தார். பேண்ட், சர்ட் என மிகவும் மிடுக்காகத் தோற்றமளித்தார். கையில் மிகப்பெரிய பெட்டியும் வைத்திருந்தார். அவர் என் நண்பரிடம் மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தார். என் நண்பரும் பேசினார், பின் இருவரும் இரவு உணவு உண்டனர்.

பின் சென்னையைத் தாண்டிய பிறகு, என் நண்பருக்கு அவர் பிஸ்கட் தந்தார். என் நண்பர் அது மயக்க பிஸ்கட்டாக இருக்கும் என மறுத்தார். பின் அந்த நபர் சிறிது நேரத்தில் ஒரு நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேசினார்.

பின் அடுத்த இரயில் நிலையம் வந்தது. அப்போது வேறு ஒரு நபர் காபி விற்றார். உடனே அந்த நபர் என் நண்பரிடம் காபி குடிக்கலாமே எனக் கூறினார். பின் இருவரும் காபி குடித்தனர். பின் நண்பர் மயங்கினார். காலையில் விழித்துப் பார்த்தபோது அவரின் பணப்பையைக் காணவில்லை. உடனே காவலரிடம் புகார் செய்தார். காவலர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர். அப்போதுதான் என் நண்பருக்கு அந்த காபி விற்றவரும் இவரின் கூட்டாளி எனத் தெரிந்தது. பின் காவலரிடம் தன் பணத்தைப் பெற்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A young calf knows not fear.
2. Forgive and forget.
3. Slow and steady win the race.
4. All his geese are swans.
Answer:

  1. இளங்கன்று பயமறியாது.
  2. மறப்போம், மன்னிப்போம்.
  3. நிதானம் பிரதானம்.
  4. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
மனித நேயம் (அல்லது) தமிழர் திருநாள்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என்று நெடுநல்வாடையில் நக்கீரர் வருணனை செய்கிறார்.

(அல்லது)

(ஆ) நகை, அழுகை, இளிவரல், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளைச் சான்றுடன்
விளக்குக.
Answer:
நகை :
(பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று இது)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார். தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!

பாடலின் பொருள் :
“புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.

அழுகை:)
(தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது)
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு
எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!

பாடலின் பொருள்:
போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.

இளிவரல் :
(சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது)

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே

பாடலின் பொருள்:
”நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”

பெருமிதம்:
(பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல்)

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் –
எறிசுடர்வேல்
தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே
நின்னோடு
பாங்கலா மன்னர் படை

பாடலின் பொருள்:
எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Amswer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற
    அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச்
    செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் “இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல் ” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாகக் கட்டமைக்கப்படுகிறது.

(அல்லது)

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு
    செய்பவன். அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன்
    வருந்தவில்லை .
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
  • ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஔவையார் நல்வழியில்

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(அ) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:

  • மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
  • தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப்
    படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.
  • நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு……?
  • பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்…… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
  • உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே…. வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
  • தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார். “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….” கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
  • ” மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” …. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
  • “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
  • நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி… நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.” ”ஐயா’………
  • “ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
  • இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்…? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
  • வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
  • இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
  • பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…… தவிப்…….. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
  • நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
  • அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
  • “உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்……..” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
  • “ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
  • எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயாங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
  • இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் ….. தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்……. மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் ……….. தன்னையும் சுவீகரித்து ………..
  • ”பாபு……. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா……..” கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.

(அல்லது)

(ஆ) பாதுகாப்பாய் ஒரு பயணம் விழிப்புணர்வு எழுத்தோவியத்தை நாடக வடிவில் தருக.

காட்சி – 1

களம் : அரசுப் பேருந்து
பங்கேற்போர் : ஓட்டுநர், நடத்துநர், பயணி 1, பயணி 2, மக்களில் ஒருவர்
(திங்கட்கிழமை காலை 8 மணி – மாணவர்களும், பணிக்கு செல்வோரும் 8 மணிப் பேருந்தை கண்டவுடன் முண்டியடித்தபடி பேருந்தில் ஏறுகின்றனர். பல மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்)

ஓட்டுநர்: யாருப்பா அது? ஸ்கூல் பசங்களா? படிக்கட்டிலேயே நிக்காம, பஸ்ஸீக்கு உள்ளே வாங்க தம்பி ஏறி உள்ளே வாங்க….. இல்லேன்னா பஸ்ஸை நிறுத்திடுவே.

நடத்துநர்: தம்பி …. உள்ளே வாங்கப்பா. படியில் பயணம் – நொடியில் மரணம் … என்று நீங்க படிச்சதில்லையா? படியை விட்டு மேலே ஏறுங்க தம்பி.

பயணி 1: தம்பி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றாங்க. உள்ளே வாங்க தம்பி. விபத்தை விலை குடுத்து வாங்காதீங்க படியைவிட்டு மேல ஏறி பஸ்ஸுக்குள்ள வாங்க. (படிக்கட்டில் பயணித்தவர்கள் உள்ளே வந்தனர்… 15 நிமிடப் பயணத்திற்குப்பின் வண்டி நின்றது. அந்த பிரதான சாலையில், போக்குவரத்து திடீரென முடங்கியது. எதிர்த்திசையிலிருந்து பலர் பதட்டமாக வந்து கொண்டிருந்தனர்)

பயணி 1: (எதிர்த்திசையிலிருந்து வந்தவரிடம்) என்னாச்சு? தீடீர்னு போக்குவரத்து முடக்கம்? உங்களுக்குத் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்க.

எதிரே வந்தவர்: பள்ளிக் கூடத்துப் பசங்க 3 பேரு ஒரே இருசக்கர வாகனத்துல வேகமா வந்து எதிரே வந்த லாரி மேல மோதிட்டாங்க. கடும் விபத்து – கடுமையான காயம் – இப்போதான் ஆம்புன்சுல அள்ளிட்டுப் போறாங்க.

நடத்துநர்: அடிக்கடி இப்படித்தாங்க நடக்குது.

பயணி 1 : சின்னப் பசங்க …. வண்டி ஓட்டுறதே தப்பு. அதிலயும் மூணு பேரா?
பயணி 2 : 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க முடியாது. உரிமம் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படிக் குற்றம்னு பசங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவங்க பெற்றோர்க்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். \
பயணி 3 : அப்படி போற பசங்க சாதாரணமாவா போறாங்க… அடுத்தவங்க பார்க்கணும்னே வேகமா வண்டி ஓட்டுறாங்க. (காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்கின்றனர். மீண்டும் வாகனங்கள் நகரத் தொடங்கின)

காட்சி – 2

(1 மணி நேர கால தாமதத்திற்குப் பின் 15 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். தாமதமாக வந்ததால் அனுமதி பெற்றிட தலைமையாசிரியை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்)

மாணவர்கள் : அம்மா, வணக்கம்…. நாங்கள் உள்ளே வரலாமா?
தலைமையாசிரியை : வாருங்கள் மாணவர்களே…. ஏன் காலதாமதம்? பள்ளிக்குத் தாமதமாக வருவது தவறு என்று உங்களுக்குத் தோணவில்லையா?
மாணவர்கள் : அம்மா… மன்னியுங்கள். வரும் வழியில் மெயின் ரோட்டில் சாலை விபத்து 3 மாணவர்கள் டூவீலரில் வந்து லாரி மீது மோதிவிட்டனர். படுகாயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சு வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிட்டது.

தலைமையாசிரியை : சரி சாமி … நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லலாம். நமது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியம். விரைந்து விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வேன் (என்று தனக்கு பேசிக் கொண்டார்)

காட்சி – 3
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

களம்: பள்ளி கலையரங்கம்.
(வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிக்கு வருகிறார். பள்ளித் தலைமையாசிரியர் வரவேற்கிறார் சாலைப்பாதுகாப்பு பணி…. அவர் திறந்து வைக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.)

தலைமையாசிரியர் வரவேற்றுப் பேசுக்கிறார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிறப்புரை ஆற்ற வருகிறார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் : அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மை அழைத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி அன்பு மாணவச் செல்வங்களே. தீதும் நன்றும் பிறர் வருவதில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 55 இலட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 21 கோடிக்கும் மேலான வாகனப் போக்குவரத்து உள்ளன. ஆண்டிற்கு 5 லட்சம் விபத்துகளில் 11/2 லட்சம் பேர் உயிரை இழக்கின்றனர். பல லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். தமிழ் நாட்டில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. 18 வயது நிரப்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும். பள்ளி மாணவர்கள் மோட்டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாகும். அவ்வாறு குழந்தைகள் தவறு செய்தால், அதனை அனுமதித்த பெற்றோர்க்கு தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் விளையாடுவது, திடீரென சாலையைக் கடப்பது, வாகனம் ஓட்டுவது ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்பதற்கு முன்பே கீழே குதிப்பது, படிக்கட்டில் பயணம் செல்வது போன்ற செயல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லா உயிருக்கு முதன்மை தந்து மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலை விதிகளை அறிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான உறுதி மொழிகளை மேற்கொண்டால். நன்றாக இருக்கும். விபத்து இல்லாத தமிழகம் உருவாக மாணவ மாணவி ஒத்துழைக்க வேண்டும். நன்றி.

மாணவர்கள் : சாலை விதிகளை மதிப்போம். சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம். உரிமம் பெறும் வரை வாகனங்களை ஓட்டமாட்டோம். பெரியவர்கள் சாலையைக் கடக்க உதவுவோம். விபத்தில்லா தமிழகம் உருவாக்கப் பாடுபாடுவோம். (என்று உறுதி கூறினர்)
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறை வேறியது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) ‘காய்நெல்’ என்று துவங்கும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை எழுதுக.
Answer:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; (- பிசிராந்தையார் )

(ஆ) ‘தலை’ என்று முடியும் குறளை எழுது.[1 x 2 = 2]
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ( – திருவள்ளுவர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Question 2.
காசிக்காண்டம் என்பது …………..
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 3.
‘படித்து வந்தேன், வேலை தேடினேன்’ எனும் தொடரின் வகை …………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) வினையெச்சத் தொடர்
(இ) எழுவாய்த் தொடர்
(ஈ) முற்றெச்சத் தொடர்
Answer:
ஆ) வினையெச்சத் தொடர்

Question 4.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 5.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவதன் காரணம் …………..
(அ) நாட்டைக் கைப்பற்றல்
(ஆ) ஆநிரைக் கவர்தல்
(இ) வலிமையை நிலைநாட்டல்
(ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
(இ) வலிமையை நிலைநாட்டல்

Question 6.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது …………..
(அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
(இ) அறிவியல் முன்னேற்றம்
(ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Question 7.
குறிஞ்சித் திணையின் சிறு பொழுது …………..
(அ) யாமம்
(ஆ) மாலை
(இ) எற்பாடு
(ஈ) நண்ப கல்
Answer:
(அ) யாமம்

Question 8.
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
Answer:
(ஆ) மோனை, எதுகை

Question 9.
பின்பனிக்காலத்தை பெரும் பொழுதாய்க் கொண்ட திணை ………………… ஆகும்.
(அ) முல்லை
(ஆ) மருதம்
(இ) நெய்தல்
(ஈ) பாலை
Answer:
(ஈ) பாலை

Question 10.
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையுள்ள காலம் …………..
(அ) வைகறை
(ஆ) மாலை
(இ) நண்பகல்
(ஈ) எற்பாடு
Answer:
(அ) வைகறை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 11.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை …………..
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந் திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் என்னே

Question 12.
பாடலடியில் குறிப்பிடப்படும் மன்னர் …………..
(அ) சோழன்
(ஆ) பாண்டியன்
(இ) நன்னன்
(ஈ) சேரன்
Answer:
(இ) நன்னன்

Question 13.
பாடலின் ஆசிரியர் …………..
(அ) நன்ன ன்
ஆ) கூத்தர்
(இ) பெருங்கௌசிகனார்
(ஈ) பெருங்குன்றூர் கிழார்
Answer:
(இ) பெருங்கௌசிகனார்

Question 14.
வயிரியம் – பொருள் தருக.
(அ) வைரம்
(ஆ) பாணர்
(இ) சோறு
(ஈ) கூத்தர்
Answer:
(ஈ) கூத்தர்

Question 15.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) சிலம்பு, நரலும்
(ஆ) அலங்கு , அடைந்திருந்த
(இ) மான, நோனா
(ஈ) வயிரியம், நோன்தாள்
Answer:
(ஆ) அலங்கு , அடைந்திருந்த

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என
வழங்குவர்.
Answer:
விடை:
அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல்கள் எவை? 150 5 Swaa20 தமிழ் – X RARE சாக்கமாக அSைents காக்கலை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 17.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

Question 18.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

Question 19.
“நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
Answer:
முன்னாள் தான் பார்த்த அருச்சுனன் தபசுக் கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் (அவனிடம்)
கூறினான்.

Question 20.
மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?
Answer:
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.

Question 21.
‘கண்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) Answer:
விடை:
தேன்மழை, மணிமேகலை, செய்தேன், வான்மழை, பொன்மணி, பொன்விளக்கு,
விளக்கு செய்; விண்மழை, செய்விலங்கு, பூமழை

Question 23.
அடிக்கோடிட்ட சொல்லிற்கு பதிலாகப் பொருள் மாறாமல் வேறு சொல்லை
பயன்படுத்தவும்.
Answer:
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
Answer:
விடை:
பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழம் இருக்கக் காய் உண்ணுதலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
விதி – வீதி
Answer:
விடை:
வீதி தோறும் நூலகம் அமைந்தால் நாட்டின் தலைவிதி மாறிவிடும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(அ) Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
(ஆ) Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

Question 26.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.
Answer:
பழங்காலத்திலே, பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.

Question 27.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி
Answer:
விடை:
தலைக்குச் சீகைக்காய் தேய்த்து முழுகினால் உடம்பிற்கு குளிர்ச்சி.

Question 28.
கிளர்ந்த, தோன்றி – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
விடை :
கிளர்ந்த – பெயரெச்சம்
தோன்றி – வினையெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
கரகாட்டம் விளக்குக.
Answer:

  • பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
  • • கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
  • இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர்.
  • கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.
  • நையாண்டி மேள இசையும் நாதசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

Question 30.
ம.பொ.சி.பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answer:
சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

(அ) இளம் வயதில் சமூக விடுதலைக்காக போராடியவர் யார்?
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி

(ஆ) 1956 நவம்பர் 1-ல் தமிழ்நாட்டுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
கன்னியாகுமரி

(இ) நேசமணியின் சிறப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு செய்தது யாது? Answer:
நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.[ 2 x 3 = 6]

Question 32.
மாற்றம் பற்றி காலக்கணிதத்தில் கண்ணதாசன் கூறுவன யாவை?
Answer:

  • மாற்றம் என்பது தான் மனிதகுலத் தத்துவம் ஆகும்.
  • மாறும் உலகின் மகத்துவத்தை அறிய வேண்டும்.
  • நன்மை தீமை அறிய வேண்டும்.
  • தலைவர் மாறுவர், சபைகளும் மாறும். ஆனால் தத்துவம் மாறாது.
  • கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும்.
  • குறை கூறுபவர்கள் குறை கூறட்டும்.
  • நானே தொடக்கம் நானே முடிவு நானுரைப்பது தான் சட்டம்.

Question 33.
தமிழின் பெருமையை எங்கும் முழங்குவதற்கான காரணங்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • செழிப்பு மிக்க தமிழே ! பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்ட தமிழே ! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்தன்மையும். வேற்று மொழியார் உன்னைப்பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • செந்தாமரையின் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடும் வண்டினைப் போன்று நாங்கள் ‘உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடலை எழுதுக.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும்
உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! (- கண்ணதாசன்)

(அல்லது)

(ஆ) “செம்பொனடிச் சிறு கிங்கிணியோடு ” எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்’ பாடலை எழுதுக.
Answer:
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை .
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை (- குமரகுருபரர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
குறிஞ்சித்திணை, கருப்பொருள் அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 1

Question 36.
‘இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 3

Question 37.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
Answer:

  • நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
  • என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க
    விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாள்.
  • நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், தாயின் பிரிவால் புலம்பிக் கூறினான்.
  • அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

(அல்லது)

ஆ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க. . பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம் இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியல் நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இயக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்.
Answer:
விடை: சங்க இலக்கியமான பரிபாடலில் எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக்
காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்கலாம் தொடர்ந்தது. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்கலாம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. இவ்வாறு நம் முன்னோர் அறிவியலின் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுகிறார்கள்.

Question 39.
அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் ‘மலரில், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
மதுரை,
2.4.2019.

அனுப்புநர்:
தெ. தண்டபாணி,
35, மேற்கு மாடவீதி,
மதுரை – 625 001.

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டி விண்ணப்பம்.

ஐயா,

வணக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா எங்கள் ஊரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற அந்நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன. அதன் தொடர்பாக நான் ” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரையைத் தங்களின் நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : மதுரை
தேதி : 2.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
தெ. தண்டபாணி.

குறிப்பு
இத்துடன் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

உறைமேல் முகவரி
பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

(அல்லது)

(ஆ) பழுதுப்பட்ட மின்கம்பிகளைச் சரிசெய்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்னழுத்த ஏற்ற இறக்கத்தை சரி செய்ய வேண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வரைக.
Answer:
அனுப்புநர்
கண்மணி,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

பெறுநர்
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

ஐயா,

பொருள்: அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைச்
சரி செய்தல் – தொடர்பாக.

வணக்கம், எங்கள் தெரு புளியங்குடி நகராட்சியில் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் அரசு அலுவலர்கள் வரை, இச்சாலை வழியே தான் நகரின் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்னழுத்த ஏற்ற இறக்கமும் ஏற்படுகிறது.

இவ்வீதியில் 28 மின்கம்பங்கள் உள்ளன. பாதிக்கு மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதுபட்டு இருக்கின்றன. மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வீதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருட்டைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளைகளும், திருட்டு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை. எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

நன்றி,

இடம்: மதுரை,
தேதி: 08.04.2019

இங்ஙனம்,
கண்ம ணி.

உறைமேல் முகவரி
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற எழுதுக.
Answer:
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் ஆட்டமே ஒயிலாட்டம் ஆகும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 41.
படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 5

Question 42.
(அ) அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள் …. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Answer:

  1. பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
  2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.
  3. பள்ளி, கல்லூரி விழாக்களில் இக்கலை நிகழ்ச்சிகளை நாங்களே நடத்துவோம்.
  4. எம் ஊரில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வேன்.
  5. எங்கள் ஊர் மக்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடுவோம்.
  6.  எங்கள் ஊரில் நாட்டுப்புறக் கலையை வளர்ப்போம்

(அல்லது)

(ஆ) கீழ்க்காணும் பத்தியை மொழிபெயர்த்து எழுதுக.
Decision making is a process that plays a vital role in our daily lives. Some decisions are not very important whereas other imperative decisions, when cautiously carried out, can change the path of our lives. When faced with a crisis, one of the major issues is deciding the right thing. Decision making can be quite complicated and challenging in some cases. It is hence essential to gather as much information from different sources and assess all possible alternatives to the problem or situation at hand before making a decision. Doing so will permit us to land at the best possible result for the problem. Such decisions can’t be an overnight one. It takes a couple of months to investigate and consult with friends, family and university professors to make a decision. It is imperative that one makes decisions in consultation with parents opinions and check on other surveys and researches to avoid challenges.
Answer:
விடை:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தீர்மானம் எடுப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சில தீர்மானங்கள் முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும், சில முக்கிய தீர்மானங்கள் கவனத்துடன் மேற்கொண்டால் நம் வாழ்க்கை பாதையை செம்மையாக மாற்றி அமைக்க முடியும். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அதற்கு உரிய தீர்வைக் காண்பது கடினமான ஒன்றாகும். தீர்வு எடுப்பது என்பது சில சமயங்களில் சிக்கலானதாகவும் அல்லது சவாலாகவும் இருக்கலாம். ஆதலால் போதிய தகவலைப் பல வட்டாரத்தில் இருந்து சேகரித்து அதற்கு மாறான கருத்துக்களை ஆராய்ந்து தீர்வுக்கு வரவேண்டும். இங்ஙனம் தீர்வெடுப்பது பிரச்சனைக்குரிய தீர்வை துல்லியமாக அடைய உதவும். இது ஒரு நாளில் மட்டும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய தீர்மானமாக இருக்காது. இது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என இவர்களுடன் கலந்தாலோசிப்பதால் தீர்வுக்கு வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். பெற்றோர்கள் அறிவுரைக் கேற்ப இருப்பினும் சவால்களைச் சமாளிப்பதற்கு ஏதுவாக பிற ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள கலந்தாலோசனை செய்வது நல்லது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உ.ரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
Answer:
நிகழ்கலை வடிவங்கள் நிலைக்குமா?! – கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன. ஆடல், பாடல், இசை, நடிப்பு ஒப்பனை உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவை தாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்வை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன.

நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன. உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன. மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்கலைகளை வளரச் செய்வோம். என்றும் அழியாமல் நிலைக்கச் செய்வோம்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தை கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது. இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை,
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான். • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்ல து)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. Answer:
கதைக்கரு :
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம். கதைமாந்தர்கள்:

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள்
  • அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி:
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க – உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவகை கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார் கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம். .

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) கர்மவீரர் காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
Answer:
கர்ம வீரர் காமராசர்
முன்னுரை:
தென்னாட்டு காந்தியாய் தமிழ் மண்ணில் அவதரித்து தமிழகத்தை மலர்ச்சியுறச் செய்த காமராசர், 1903-ஆம் ஆண்டு ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசுவாமி-சிவகாமியம்மாள் என்பவர்கள் ஆவர். தமிழ் மண்ணின் தவப்புதல்வராய் இருந்து ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனும் நோக்கில் இம்மண்ணிற்காக வாழ்ந்த திருமகன் இவர் என்றால் மிகையாகாது.

வளர்ச்சி:
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் அஞ்சாமல் கருத்தினை எடுத்து வைப்பவர் திருநாட்டிற்காக திருமணத்தைத் துறந்தவர்.

முயற்சி:
1954-ஆம் ஆண்டு காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தினைத் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறலாம். மக்களோடு மக்களாய்க் கலந்து மக்கள் படும் துன்பத்தினைத் தீர்த்து வைக்கும் இவர் ‘ஏழைகளின் நண்பன்’ எனப் போற்றப்பட்டார்.

நெகிழ்ச்சி:
கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறந்திடச் செய்தார். ஏழை மாணவர்களின் அல்லல் கண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தை’ வகுத்து செயல்படுத்தினார்.
சின்னஞ்சிறுவர்களிடையே வேறுபாடுகளைக் களைந்திட சீருடைத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தொழில் துறையில் தம் பார்வையைத் திருப்பி பல்வேறு தொழிலகங்களுக்கு வழிகளை ஏற்படுத்தினார்.

மகிழ்ச்சி :
1963 வரை ஒன்பது ஆண்டு காலம் அரும்பணிகள் ஆற்றிய இவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மூத்த தலைவர்களை பதவி விலகச் சொல்லி தாமும் தம்முடைய முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

முகமலர்ச்சி:
மக்கள் அவரை பல்வேறு பெயர்களாலும், படிக்காத மேதை, ஏழைகள் நண்பன், கரும வீரர், காலாகாந்தி என அழைத்தலால் அனைத்துப் பெயர்களும் காமராசருக்கே உரித்தாயிற்று.

அழற்சி:
காமராசரின் நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டமும், மும்மொழியாக்கத் திட்டமும் (இந்தியுடன்) பின்னடைவை ஏற்படுத்தின. திராவிடக் கட்சியானது தனது பேச்சு, எழுத்து மூலம் தடுமாற்றம் ஏற்பட வழிவகை செய்தது.

முடிவுரை:
‘காலா காந்தி’ என்ற பெயரினுக்கு ஏற்ப காந்தி பிறந்த தினத்தன்று, 1975 அக்டோபர் 2ல் காமராசர் மறைந்தார். காந்தி பிறந்த தினமானது காமராசரின் நினைவு தினமாக ஆயிற்று. காமராசரின் பிறந்த தினம், இனி ‘தியாகிகள் தின’ மாகக் கொண்டாடப்படுகிறது.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – முறையான ஒப்பந்தம் – நீர் தேவையை சமாளித்தல் – குறைபாடுகள் – திட்டம் – நன்மைகள் – முடிவுரை.
Answer:
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
முன்னுரை:
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது தண்ணீர் பிரச்சினையாகும். இதனைத் தீர்க்க தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது. பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதொன்றாகும். இதற்கு ஓராண்டில் 56 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்படுகிறது.

முறையான ஒப்பந்தம்:
ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குக் கால்வாய்கள் அமைத்து 30 நதிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றாக இணைக்கலாம். 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் எடுக்க முடியும். 11 ஆயிரம் 164 Super20 தமிழ் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்கு 400 புதிய நீர்நிலைகள் அமைக்கப்பட்டு நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த இடத்தின் வழியாகக் கால்வாய் அமைத்தால் பயனுள்ளதாக அமையும் எனத் திட்டமிட வேண்டும். மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் நீர் அதிகம் உள்ளது. ஆனால் வல்லுநர்களிடையே விவாதம் நடத்தி முறையான ஒப்பந்தம் ஏற்படவேண்டும்.

நீர் தேவையை சமாளித்தல்:
மழைக் காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், கால்வாய்கள் வெட்டி அந்நீரை ஒருநிலை படுத்தவேண்டும். இதற்காக வெட்டப்படும் கால்வாய்கள் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைக்கத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேவையை எளிதாகச் சமாளிக்க முடியும்.

குறைபாடுகள்:
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெறமுடியும். காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடி நீர்வளம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தண்ணீருக்காகக் கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வற்றாத ஜீவநதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென்னிந்திய நதிகளை தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குறையாமல் இருக்கும். இன்றைய நிலையில் பல கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சராசரி இரண்டு லிட்டர் குடிநீர் கூடக் கிடைப்பதில்லை.

மூன்று நீர்வழித்திட்டம்:
மூன்று நீர்வழிகளைக் கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றலாம்.
1. இமயமலை நீர்வழி: இது கங்கை பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.
2. மத்திய நீர்வழி: கங்கை, மகாநதி, தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.
3. தென்னக நீர்வழி: இது கோதாவரி, கிருஷ்ணா , காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும் இந்நீர்நிலைகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும். கொண்டதாக இருக்கும். இவை உரிய வழியில் ஒன்றுடன் ஒன்று இணைக்கும். நீர் சேமிப்பு போக்குவரத்து மற்றும் நீரைப் பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பல நன்மைகளைக் கொண்டதாக விளங்கும்.

நன்மைகள்:
மழைக்காலங்களில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை இத்திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவைக் குறைக்கலாம்.
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வெள்ள நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாகக் குறையும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

முடிவுரை:
தேவையான அளவு நீர்வள மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் கடலில் வீணாகக் கலந்து நாட்டில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு உழல்கிறோம். அதனால் தேசிய நதிகளை இணைத்து சிறந்த முறையில் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions.  [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
To produce a displacement _________ is required.
(a) Acceleration
(b) Force
(c) Velocity
(d) Momentum
Answer:
(b) Force

Question 2.
The refractive index of a transparent medium is always greater than_________.
(a) two
(b) three
(c) one
(d) four
Answer:
(c) one

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 3.
Velocity of sound in a gaseous medium is 330 ms-1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is _________.
(a) 330 ms-1
(b) 660 ms-1
(c) 156 ms-1
(d) 990 ms-1
Answer:
(a) 330 ms-1

Question 4.
Neon shows zero electron affinity due to _________.
(a) stable arrangement of neutrons
(b) stable configuration of electrons
(c) reduced size
(d) increased density
Answer:
(b) stable configuration of electrons

Question 5.
A solution is a _________ mixture.
(a) homogeneous
(b) homogeneous and heterogeneous
(c) heterogeneous
(d) Non homogeneous
Answer:
(a) homogeneous

Question 6.
Powdered CaCO3 reacts more rapidly than flaky CaCO3 because of _________.
(a) large surface area
(b) high pressure
(c) high concentration
(d) high temperature
Answer:
(a) large surface area

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 7.
A patient with blood group O was injured in an accident and has blood loss. Which blood group the doctor should effectively use for transfusion in this condition?
(a) A group
(b) B group
(c) O group
(d) AB group
Answer:
(c) O group

Question 8.
_________ is the ATP factory of the cell.
(a) Mitochondria
(b) Nucleus
(c) Ribosomes
(d) Chloroplast
Answer:
(a) Mitochondria

Question 9.
The Anemophilous flowers have _________.
(a) Sessile stigma
(b) Small smooth stigma
(c) Coloured flower
(d) Large feathery stigma
Answer:
(d) Large feathery stigma

Question 10.
A person who met with an accident lost control of body temperature, water balance and hunger. Which of the following part of brain is supposed to be damaged?
(a) Hypothalamus
(b) Pons
(c) Cerebrum
(d) Medulla oblongata
Answer:
(a) Hypothalamus

Question 11.
_________ is the raw material which plays an important role in evolution.
(a) Fossilization
(b) Variation
(c) Preservation
(d) Sedimentation
Answer:
(b) Variation

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 12.
The centromere is found at the centre of the _________ chromosome.
(a) Telocentric
(b) Metacentric
(c) Sub-metacentric
(d) Acrocentric
Answer:
(b) Metacentric

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 14.
What is meant by equilibrant?
Answer:
A system can be brought to equilibrium by applying another force, which is equal to the resultant force in magnitude, but opposite in direction. Such force is called as ‘Equilibrant’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 15.
Why does an empty vessel produce more sound than a filled one?
Answer:
The intensity of sound is directly proportional to the square of amplitude of vibration. I ∝ A2 since, the amplitude of vibration of air molecules (empty vessel) is greater than liquid molecules (filled vessel), therefore empty vessel produces louder sound than the filled vessel.

Question 16.
Differentiate ore and mineral.
Answer:

Ore Mineral
1. A mineral from which a metal can be economically extracted. 1. A mineral may be a single compound or complex mixture of various compounds of metals found in the earth.
2. All ores are minerals. 2. All minerals are not ores.
3. Eg. Bauxite is an ore of aluminium. 3. Clay is a mineral.

Question 17.
How do detergents cause water pollution?
Answer:
Some detergents having a branched hydrocarbon chain are not fully biodegradable by micro organisms present in water. So, they cause water pollution.

Question 18.
Define reflex arc.
Answer:
The pathway taken by the nerve impulse to accomplish reflex action is called Reflex arc.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 19.
The complete events of cardiac cycle last for 0.8 sec. What is the timing for each event?
Answer:
The events during a single cardiac cycle involves

  • Atrial Systole – Contraction of auricles – (0.1 sec)
  • Ventricular Systole – Contraction of ventricles – (0.3 sec)
  • Ventricular diastole – Relaxation of Ventricles – (0.4 sec)

Question 20.
What will you do to prevent leaf fall and fruit drop in plants?
Answer:
Treating plants with auxin will prevent leaf fall and fruit drop. Auxin prevent the formation of abscission layer in plants.

Question 21.
Draw and label the structure of the ovule.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 1

Question 22.
Calculate the momentum of a toy car of mass 200g moving with a speed of 5 m/s.
Answer:
Mass of the toy car (m) = 200 g = 0.2 kg
Speed (v) = 5 m/s
Momentum (p) = m × v
= 0.2 × 5 = 1 kg m/s

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
Explain the process of controlled and uncontrolled chain reactions.
Answer:
Controlled chain reaction:

  • In the controlled chain reaction the number of neutrons released is maintained to be one. This is achieved by absorbing the extra neutrons with a neutron absorber leaving only one neutron to produce further fission.
  • Thus, the reaction is sustained in a controlled manner. The energy released due to a controlled chain reaction can be utilized for constructive purposes.
  • Controlled chain reaction is used in a nuclear reactor to produce energy in a sustained and controlled manner.

Uncontrolled chain reaction:

  • In the uncontrolled chain reaction the number of neutrons multiplies indefinitely and causes fission in a large amount of the fissile material.
  • This results in the release of a huge amount of energy within a fraction of a second.
  • This kind of chain reaction is used in the atom bomb to produce an explosion.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 24.
What are the factors that affect the speed of sound in gases?
Answer:
Effect of density: The velocity of sound in a gas is inversely proportional to the square root of the density of the gas. Hence, the velocity decreases as the density of the gas increases.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

Effect of temperature:
(i) The velocity of sound in a gas is directly proportional to the square root of its temperature.
(ii) The velocity of sound in a gas increases with the increase in temperature, v ∝ \(\sqrt{\mathrm{T}}\) Velocity at temperature T is given by the following equation:
vT = (v0 + 0.61 T) ms-1

Here, v0 is the velocity of sound in the gas at 0° C. For air, v0 = 331 ms-1. Hence, the velocity of sound changes by 0.61 ms-1, when the temperature changes by one degree Celsius.

Effect of relative humidity: When humidity increases, the speed of sound increases. That is why we can hear sound from long distance clearly during rainy seasons.

Question 25.
(i) Classify the types of force based on their application.
Answer:
Based on the direction in which the forces act, they can be classified into two types as:

  1. Like parallel forces
  2. Unlike parallel forces.

1. Like parallel forces:
Two or more forces of equal or unequal magnitude acting along the same direction, parallel to each other are called like parallel forces.

2. Unlike parallel forces:
If two or more equal forces or unequal forces act along opposite directions parallel to each other, then they are called unlike parallel forces.

(ii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 26.
Write the characteristics of organic compounds.
Answer:

  • Organic compounds have a high molecular weight and a complex structure.
  • They are mostly insoluble in water, but soluble in organic solvents such as ether, carbon tetra chloride, toluene etc.
  • They are highly inflammable in nature.
  • Organic compounds are less reactive compared to inorganic compounds. Hence, the reactions involving organic compounds proceed at slower rates.
  • Mostly organic compounds form covalent bonds in nature.
  • They have lower melting point and boiling point, when compared to inorganic compounds
  • They exhibit the phenomenon of isomerism, in which a single molecular formula represents several organic compounds that differ in their physical and chemical properties.
  • They are volatile in nature.
  • Organic compounds can be prepared in the laboratory.

Question 27.
The electronic configuration of metal A is 2, 8, 18, 1.
The metal A when exposed to air and moisture forms B a green layered compound. A with con. H2SO4 forms C and D along with water. D is a gaseous compound. Find A,B,C and D.
Answer:
(i) The electronic configuration of metal (A) is 2, 8, 18, 1.  ∴A is copper (Z = 29)
(ii) (A) Copper exposed to air and moisture forms green layered compound (B) that is copper carbonate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 2
(iii) Copper (A) reacts with con.H2SO4 to give copper sulphate (C) and Sulphur dioxide (D).
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 3

A Copper Cu
B Copper carbonate CuCO3. Cu(OH)2
C Copper sulphate CuSO4
D Sulphur dioxide SO2

Question 28.
A pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt), what would be the F1 and F2 generations?
Answer:
In a monohybrid cross, if a pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt). All plants were tall (Tt) in F1 generation.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 4
F1 → Tt Tt Tt Tt (Tall heterozygous)
Ratio : 3 : 1
During the selling of F1 generation 3 different types of plants were produced.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 5
Tall Homozygous – TT (Pure) – 1
Tall Heterozygous – Tt – 2
Dwarf Homozygous – tt – 1
Ratio : 1 : 2 : 1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 29.
(i) What are the external and internal factors affecting photosynthesis
Answer:
(a) External Factors:

  • Light
  • Carbon dioxide
  • Temperature
  • Water
  • Mineral elements

(b) Internal Factors:

  • Pigments
  • Leaf age
  • Accumulation of carbohydrates
  • Hormones

(ii) Why is vegetative propagation practiced for growing some type of plants?
Answer:
Vegetative propagation is the only method of multiplication in plants like banana, seedless grapes and orange that have lost their capacity to produce seeds through sexual reproduction and vegetative propagation helps us to introduce plants in new areas where seed germination fails to produce plants.

Question 30.
(i) Solar energy is a renewable energy. How?
Answer:
Solar energy is renewable, free source of energy, that is sustainable and totally inexhaustible.

(ii) How is the circulatory system designed in leech to compensate the heart structure?
Answer:
The circulation in Leech is Haemocoelic system. There are no true blood vessels. The blood vessels are replaced by channels called Haemocoelic channels or canals filled with blood like fluid. The coelomic fluid contain Haemoglobin. There are four longitudinal channels. One channel lies above (dorsal) to the Alimentary canal, one below (ventral) to the Alimentary canal.

The other two channels lie on either (lateral) side of the Alimentary canal, which serves as a heart and have inner valves. All the four channels are connected together posteriorly in the 26th segment. Thus the circulatory system is designed in Leech to compensate the heart structure.

Question 31.
(a) What are the contributing factors for obesity?
Answer:
Obesity is due to genetic factors, physical inactivity, overeating and endocrine factors.

(b) State the importance of biofertiliser.
Answer:

  • Biofertilisers are easy to produce in abundance and are available at low X cost to the marginal farmer.
  • It increases the soil fertility without causing any damage to the soil. E.g: Rhizobium, Azospirillium, Azotobacter.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 32.
(i) Draw a ray diagram of formation of images by the convex lens.
Answer:
Ray diagram for object placed between F and 2F
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 6

(ii) The hydroxide ion concentration of a solution is 1 × 1011 m. What is the pH of the solution?
Answer:
[OH] = 1 × 10-11m
pOH = -log10[OH] = – log10[10-11]
= -[-11 × log10 10]
= -(-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH
pH = 14 – 11 = 3

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) Define One roentgen.
Answer:
One roentgen is defined as the quantity of radioactive substance which produces a charge of 2.58 x 10-4 coulomb in 1 kg of air under standard conditions of pressure, temperature and humidity.

(ii) What is a nuclear reactor? Explain its essential parts with their functions.
Answer:
A Nuclear reactor is a device in which the nuclear fission reaction takes place in a self-sustained and controlled manner to produce electricity.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 7

Components of a Nuclear reactor:
The essential components of a nuclear reactor are

  1. fuel
  2. moderator
  3. control rod
  4. coolant and
  5. protection wall.

(1) Fuel: A fissile material is used as the fuel. The commonly used fuel material is uranium.
(2) Moderator: A moderator is used to slow down the high energy neutrons to provide slow neutrons. Graphite and heavy water are the commonly used moderators.
(3) Control rod: Control rods are used to control the number of neutrons in order to have sustained chain reaction. Mostly boron or cadmium rods are used as control rods. They absorb the neutrons.
(4) Coolant: A coolant is used to remove the heat produced in the reactor core, to produce steam. This steam is used to run a turbine in order to produce electricity. Water, air and helium are some of the coolants.
(5) Protection wall: A thick concrete lead wall is built around the nuclear reactor in order to prevent the harmful radiations from escaping into the environment.

[OR]

(b) (i) An object is placed at a distance 20 cm from a convex lens of focal length 10 cm.
Find the image distance and nature of the image.
Answer:
u = -20 cm
f = 10 cm
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 8
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 9
Nature of the image real enlarged and inverted image.

(ii) A ball of mass 1 kg moving with a speed of 10 ms-1 rebounds after a perfect elastic collision with the floor. Calculate the change in linear momentum of the ball.
Answer:
Given mass = 1 kg, speed =10 ms-1
∴ Initial momentum = mu = 1 × 10 = 10 kg ms-1
Final momentum = mv = -10 kg ms-1
Change in momentum = final momentum – initial momentum
= mv – mu
= -10 -10
Change in momentum = -20 kg ms-1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of moles in 12.046 × 1023 atom of copper.
Answer:
12.046 × 1023 atoms of copper
6.023 × 1023 atoms of copper = 1 mole
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 10

(ii) How many grams are there in two moles of H2O
Answer:
No. of moles = \(\frac{\text { Mass }}{\text { Molar mass }}\)
Mass = No. of moles x molar mass
Molar mass of H2O = (2 × 1) + 16 = 18
Mass = 2 × 18 = 36 g

(iii) In magnesium sulphite, the ration by mass of Mg and S is 3 :4. What is the ratio of the number of Mg and S atoms?
Answer:
Formula of magnesium sulphide = MgS
Ratio by mass Mg and S = 3 : 4
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 11

(b) (i) Explain the mechanism of cleansing action of soap.
Answer:
A soap molecule contains two chemically distinct parts that interact differently with water. It has one polar end, which is a short head with a carboxylate group (- COONa) and one non polar end having the long tail made of the hydrocarbon chain.

The polar end is hydrophilic (Water loving) in nature and this end is attracted towards water. The non-polar end is hydrophobic (Water hating) in nature and it is attracted towards dirt or oil on the cloth, but not attracted towards water. Thus, the hydrophobic part of the soap molecule traps the dirt and the hydrophilic part makes the entire molecule soluble in water.

When a soap or detergent is dissolved in water, the molecules join together as clusters called ‘micelles’. Their long hydrocarbon chains attach themselves to the oil and dirt. The dirt is thus surrounded by the non-polar end of the soap molecules. The charged carboxylate end of the soap molecules makes the micelles soluble in water. Thus, the dirt is washed away with the soap.

(ii) Differentiate soaps and detergents.
Answer:
Soaps:

  • It is a sodium salt of long chain fatty acids.
  • Its effectiveness is reduced when used in hard water.
  • Soaps are biodegradable.

Detergents:

  • It is a sodium salt of sulphonic acids.
  • It is effective even in hard water.
  • Most of the detergents are non-biodegradable.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 35.
(a) (i) Explain the functions of the thyroid hormones?
(ii) How are stem cells useful in regenerative process?
(iii) What is palaeontology?
Answer:
(i) Functions of the thyroid hormone:

  • Increases oxygen consumption in tissues.
  • Production of energy by maintaining the Basal Metabolic Rate (BMR) of the body.
  • Helps to maintain normal body temperature.
  • Controls growth of the body, bone formation and development of gonads.
  • Essential for normal physical, mental and personality development. Hence also known as personality hormone.

(ii) Stem cells useful in regenerative process:
Sometimes cells, tissues and organs in the body may be permanently damaged or lost due to genetic condition or disease or injury.

In such situations, stem cells are used for the treatment of diseases, which is called stem cell therapy.
In treating neurodegenerative disorders like Parkinson’s disease and Alzheimer’s disease neuronal stem cells can be used to replace the damaged or lost neurons.

(iii) The study of fossils is known as Palaeontology.

[OR]

(b) Explain with an example the inheritance of dihybrid cross. How is it different from monohybrid cross?
Answer:
The dihybrid cross involves the inheritance of two pairs of contrast characteristics, round – yellow seeds and wrinkled – green seeds.

When pea plants having round- yellow seeds cross bred with pea plant having wrinkled – green seeds, in the first generation (F1), only round yellow seeds were produced.

No wrinkled – green seeds were obtained. Round yellow colour seeds were dominant and wrinkled-green seeds were recessive.

When round-yellow seeds were cross bred by self-pollination, four types of seeds having different combinations of shape and colour were obtained in F2 generation. They were
round yellow, round green
wrinkled yellow, wrinkled green
The phenotypic ratio in F2 generation is 9 : 3 : 3 : 1
i.e. 9 – Yellow, round
3 – Yellow, wrinkled
3 – Green, round
1 – Green, wrinkled
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 12
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 13

Monohybrid cross:

  • Monohybrid cross is a genetic cross that involves a singles pair of genes which is responsible for one trait
  • Monohybrid ratio in F2 generation is 3 : 1

Dihybrid cross:

  • Dihybrid cross is a genetic cross that involves two pairs of genes which is responsible for two trait
  • Dihybrid ratio in F2 generation is 9 : 3 : 3 : 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது…………..
(அ) திருக்குறள்
(ஆ) புறநானூறு
(இ) கம்பராமாயணம்
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

Question 2.
கரும்பின் அடி……………… என அழைக்கப்படுகிறது.
அ) தூறு
(ஆ) கழி
(இ) கழை
(ஈ) தட்டு
Answer:
(ஆ) கழி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ……………
(அ ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
Answer:
(ஈ) பாடல் ; கேட்டவர்

Question 4.
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்னும் அடிகள் இடம் பெறும் நூல்…………..
(அ) விவேகசிந்தாமணி
(ஆ) புறநானூறு –
(இ) காசிகாண்டம்
(ஈ) மலைபடுகடாம்
Answer:
(அ) விவேகசிந்தாமணி

Question 5.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………….. ,………………வேண்டினார்.
(அ) கருணையன் எலிசபெத்துக்காக
(ஆ) எலிசபெத் தமக்காக
(இ) கருணையன் பூக்களுக்காக
(ஈ) எலிசபெத் பூமிக்காக
Answer:
(அ) கருணையன் எலிசபெத்துக்காக

Question 6.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 7.
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது…………..  எனப்படும்.
(அ) வேற்றுமைத் தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Question 8.
இடை க்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………..
(அ) அமைச்சர். மன்னன்
(ஆ) அமைச்சர், இறைவன்
(இ) இறைவன். மன்னன்
(ஈ) மன்னன், இறைவன்
Answer:
(ஈ) மன்னன், இறைவன்

Question 9.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ………………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) விளித்தொடர்
(இ) உரிச்சொல் தொடர்
(ஈ) அடுக்குத்தொடர்
Answer:
(இ) உரிச்சொல் தொடர்

Question 10.
தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்வது…………
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்
(இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்

Question 11.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்,
(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

Question 12.
விசும்பில் என்பதன் பொருள் யாது?
(அ) வானத்தில்
(ஆ) புவியில்
(இ) காற்றில்
(ஈ) நீரில்
Answer:
(அ) வானத்தில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 13.
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?
(அ) காற்று தோன்றா உலகம்
(ஆ) பரிபாடல்
(இ) ஆற்றுப்படை
(ஈ) காற்று தோன்றிய உலகம்
Answer:
(ஈ) காற்று தோன்றிய உலகம்

Question 14.
இப்பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) ஊழி – ஊழ்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(அ) ஊழி – ஊழ்

Question 15.
இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) அறிவாரா, ஊழியும்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(ஆ) கரு, உரு

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8)

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) ‘எனது போராட்டம்’ என்னும் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்று நூலில்
இருந்து தொகுக்கப்பட்டது.
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் (1) கல்வி, (2) கேள்வி ஆகும்.
Answer:
விடை:
(அ) ம.பொ.சி. பற்றியக் கட்டுரை எந்நூலினின்று தொகுக்கப்பட்டது?
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் யாவை?

Question 17.
வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
ஏழைத் தொழிலாளியான ஒரு சித்தாளின் வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

Question 18.
பைங்கூழ் நாற்று குறிப்பு எழுதுக.
Answer:
பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை ஆகும். தகைவததககா மாமா மாமான கார்க்கம் மாதிரி வினாத்தாள்-10 – 167

Question 19.
மு.கு ஜகந்நாத ராஜா அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி கூறுவது என்ன?
Answer:
“ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி
பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் மு.கு. ஜகந்நாத ராஜா.

Question 20.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு காண்க.
Answer:

  • ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது.
  • கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.
  • எதிர்காலத்தில் தொழிற்புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவே நம்மை
    வளப்படுத்த உதவும்.

Question 21.
‘செயல்’ என முடியும் குறள்.
Answer:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10)

Question 22.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைக்கவும்.
அள்ளி இறைத்தல்
Answer:
விடை: நம்மிடம் பணம் இருக்கும் போது அள்ளி இறைத்தால் நம்மிடம் பணம் இல்லாத போது
கடினப்பட நேரிடும்.

Question 23.
பொருத்தமானவற்றை சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
(தோற்பவை, தோற்பாவை, விருது, விருந்து)
Answer:
விடை:
1. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
2. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
சிறு – சீரு
Answer:
விடை:
சிறுகச் சிறுகச் சேமித்தால் சீரும் சிறப்புமாக வாழ முடியும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
Myth – தொன்மம்
Terminology – கலைச்சொல்

Question 26.
பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
ஷேத்திரங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக.
Answer:
புனிதத்தலங்கள் தோறும் சென்று தெய்வச்சிலைகளை வழிபடுக.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
யாரப்பா நீ எங்கே வந்தே என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்
Answer:
விடை: யாரப்பா நீ? எங்கே வந்தே? என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்.

Question 28.
பொழிந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பொழிந்த = பொழி + த்(ந்) + த் + அ
பொழி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பகுதி – III  (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன. நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • ல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால்தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Question 30.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
சுற்றுச்சூழல் :

‘சுத்தம் சுகம் தரும்’, ‘சுத்தம் சோறு போடும்’, ‘சுத்தம் கடவுள் தன்மைக்கு ஒப்பானது’ என்னும் பழமொழிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்கிறார் திருவள்ளுவர். உடலின் தூய்மை நீரால் அமைவதுபோல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் அமைகிறது என்பது இக்குறளின் பொருள். அதுபோல வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எப்போதும் தூய்மை இல்லாமை, காற்றோட்டம் இன்மை, போதிய வெளிச்சம் இன்மை, கெட்டுப்போன பொருள்களை உண்ணல், நோயாளியுடன் இருத்தல், அழுக்கு ஆடைகளை உடுத்துதல், இயற்கைச் சூழல் இன்மை ஆகிய காரணங்களால் நமக்கு நோய்கள் வருகின்றன.

அரசியல் தலைவர்களோ, அறிஞர்களோ கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டாயமாக ஒரு மரக்கன்றை நட்ட பின்னரே விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் மரங்களை வளர்க்க வேண்டும்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குப்பைக் கூளங்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.

(அ) கரகாட்டத்தின் போது எவற்றை தலையில் வைப்பர்?
Answer:
பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவர்.

(ஆ) கரகாட்டத்தின் மறுபெயர் என்ன?
Answer:
கும்பாட்டம்

(இ) கரகத்தின் நடுவில் எதனை வைப்பர்?
Answer:
கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 x 3 = 6)

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

Question 33.
முகம்மதுரஃபி ஆசிரியர் குறிப்பு வரைக.
Answer:

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில்
    பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து
    இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.

(அ) “வெய்யோன் ஒளி” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணப் பாடலை எழுதுக.
Answer:
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான். (- கம்பர்)

(அல்லது)

(ஆ) “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று (- கா.ப. செய்குதம்பிப் பாவலர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
வேற்றுமைத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
(எ.கா.)
கதையைப் படித்தான் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
(எ.கா.)
வளையலுக்குப் பொன் – இத்தொடரில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

Question 36.
‘குற்றம் இலனாய்க் குடி செய்த வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 1

Question 37.
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’

பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம் :
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [ 5 x 5 = 25 ]

Question 38.
(அ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
Answer:

  • இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன்.
  • அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை).
  • புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை). • மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை.
  • மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை ). காடுகள் மட்டுமே கொடி உடையனவாக – அதாவது கொடி உடையனவாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை ).
  • வண்டுகள் மட்டுமே கள் – அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை).
  • மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை ).
  • நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை).
  • இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை).
  • செவிலித்தாயாரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து இருக்கின்றது. (யாரும் பொருளை மறைப்பதில்லை ).
  • இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.
    அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்கு தாயாய் இருக்கின்றான்.
  • மகனில்லாததோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான்.
  • விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

(அல்லது)

(ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். . நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை
    ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Question 39.
(அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

எண், 20/3 மாடவீதி,
மதுரை,
5.5.2019

அன்புள்ள நவீன்குமார்,

நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீயும் உன் குடும்பத்தாரும் எப்படி இருக்கிறீர்கள்? சென்ற மாதம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு “மரம் இயற்கையின் வரம்” என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை அனைவரிடமும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆகவே உன் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள * ஆர்வம் வருகிறது. பல போட்டிகளில் நீ பெற்ற பரிசுப்பொருள்கள் உன் வீட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன்.

உன்னை நண்பனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீ இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். நீ அடுத்தமுறை போட்டியில் கலந்து கொள்ளும்போது எனக்குத் தெரியப்படுத்து. நான் நீ எவ்வாறு போட்டிக்குத் தயாராகிறாய் என்பதை அறிந்து கொள்கிறேன். உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ப. அன்பரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
க. நவீன்குமார்,
5. காளையார் கோவில்
முத்தமிழ் நகர்,
ஈரோடு – 638 001.

(அல்லது)

(ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை, விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ 50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால் ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள, .
கபிலன்.

குறிப்பு

1. உணவு விடுதியின் பில்
2. அவர்கள் பேசிய ஆடியோ
3. புகைப்படம்

உறைமேல் முகவரி

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்;
மதுரை – 625 001.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 2
மழை என்று பெய்யும்
என் வாழ்வு என்று விடியும் என
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
எனக்கு மட்டும் விடிவேயில்லை !
மாதம் மும்மாரி பெய்த நாளெங்கே?
வானம் பார்த்த பூமி மட்டும் இங்கே!
உழவனின் இதயமும் பாளமாய்!
பாளம், பாளமாய் வெடித்த நிலம் கண்டு,
விடியல் எப்போது? காத்திருக்கிறேன்!

Question 41.
விண்ண ப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 4

Question 42.
(அ) பள்ளியிலும் வீட்டிலும் நீ செய்ய விரும்புவனவற்றை எழுதுக. Answer:
பள்ளியில் நான் :

  1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்.
  2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப்
  3. பாராட்டுவேன். பாடத்தைக் கவனமாகக் கவனிப்பேன்.
  4. யாரிடமும் சண்டை போடமாட்டேன்.

வீட்டில் நான் :

  1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.
  2. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  3. தன்வேலைகளைத் தானே செய்வேன்.
  4. என் தாய்க்கு உதவியாக இருப்பேன்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India. Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We
should feel proud about our culture. Thank you one and all.
Answer:
விடை :
இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். என் பெயர் இளங்கோவன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூற வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழன் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் மேம்பட்டு இருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழன் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் வகுத்துள்ளான். தமிழ்க் கலாச்சாரம் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகளாவிய இந்தியத் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களில் வேரூன்றி நிற்கிறது. நம் கலாச்சாரம் பழமை வாய்ந்ததாக இருப்பினும் அது தொடர்ச்சியாகப் புதுபித்த வண்ணமே இருக்கின்றன. நாம் நம் கலாச்சாரத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – V

(மதிப்பெண்கள்: 24) அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ்நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி-குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர் .
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம்.
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம்.
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Question 44.
(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
Answer:
கதைக்கரு:
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பகிர்ந்து கொடுக்கிற நேயம்.

கதைமாந்தர்கள் :

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள் . அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி :
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார். கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று, கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.

(அல்லது)

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
    அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது. முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச்
    சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது.. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை
    தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிற துறைகளில் கணினி – கல்வி நிலையங்களில் கணினி — முடிவுரை.
Answer:
இந்தியாவில் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்றமடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன் முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை இயக்கத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிறதுறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வைக்கவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களில் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம், பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலைதூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்காக நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணை கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி, பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருக்கிறார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுக்கின்றது.

கலை பண்பாட்டு அரங்குகள்:
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

குழந்தைகளுக்கான அரங்குகள்:
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய் கனி வகைகளும் இழுவைப் பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள்:
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கு உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART -1

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
Let A = {1, 2, 3, 4} and B = {4, 8, 9, 10}. A function f : A → B given by f = {(1,4),(2, 8),(3,9),(4,10)} is a ………………… .
(1) Many-one function
(2) Identity function
(3) One-to-one function
(4) Into function
Answer:
(3) One-to-one function

Question 2.
If g = {(1,1),(2, 3),(3,5),(4,7)} is a function given by g(x) = αx + β then the values of α and β are ………………… .
(1) (-1,2)
(2) (2,-1)
(3) (-1,-2)
(4) (1,2)
Answer:
(2) (2,-1)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 3.
The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is ………………… .
(1) 2025
(2) 5220
(3) 5025
(4) 2520
Answer:
(4) 2520

Question 4.
If the sequence t1, t2, t3, are in A.P. then the sequence t6 ,t12,t18,… is ………………… .
(1) a Geometric progression
(2) an Arithmetic progression
(3) neither an Arithmetic progression nor a Geometric progression
(4) a constant sequence
Answer:
(2) an Arithmetic progression

Question 5.
\(\frac{x}{x^{2}-25}-\frac{8}{x^{2}+6 x+5}\) gives ………………… .
(1) \(\frac{x^{2}-7 x+40}{(x-5)(x+5)}\)
(2) \(\frac{x^{2}+7 x+40}{(x-5)(x+5)(x+1)}\)
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)
(4) \(\frac{x^{2}+10}{\left(x^{2}-25\right)(x+1)}\)
Answer:
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)

Question 6.
The values of a and b if 4x4 – 24x3 + 76x2 + ax + b is a perfect square are ………………… .
(1) 100,120
(2) 10,12
(3) -120,100
(4) 12,10
Answer:
(3) -120,100

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 7.
If ∆ABC is an isosceles triangle with ∠C = 90° and AC = 5 cm, then AB is ………………… .
(1) 2.5 cm
(2) 5 cm
(3) 10 cm
(4) 5√2 cm
Answer:
(4) 5√2 cm

Question 8.
The area of triangle formed by the points (- 5, 0), (0, – 5) and (5, 0) is ………………… .
(1) 0 sq.units
(2) 25 sq.units
(3) 5 sq.units
(4) none of these
Answer:
(2) 25 sq.units

Question 9.
The value of sin2θ + \(\frac{1}{1+\tan ^{2} \theta}\) is equal to ………………… .
(1) tan2θ
(2) 1
(3) cot2θ
(4) θ
Answer:
(2) 1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 10.
If the radius of the base of a right circular cylinder is halved keeping the same height, then the ratio of the volume of the cylinder thus obtained to the volume of original cylinder is ………………… .
(1) 1 : 2
(2) 1 : 4
(3) 1 : 6
(4) 1 : 8
Answer:
(2) 1 : 4

Question 11.
If the mean and coefficient of variation of a data are 4 and 87.5% then the standard deviation is ………………… .
(1) 3.5
(2) 3
(3) 4.5
(4) 2.5
Answer:
(1) 3.5

Question 12.
If α and β are the roots of the equation x2 + 2x + 8 = 0 then the value of \(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\) is ………………… .
(1) \(\frac { 1 }{ 2 }\)
(2) 6
(3) \(\frac { 3 }{ 2 }\)
(4) \(\frac { -3 }{ 2 }\)
Answer:
(4) \(\frac{-3}{2}\)

Question 13.
If the points (k, 2k) (3k, 3k) and (3, 1) are collinear, then k is ………….. .
(1) \(\frac { 1 }{ 3 }\)
(2) \(\frac { -1 }{ 3 }\)
(3) \(\frac { 2 }{ 3 }\)
(4) \(\frac { -2 }{ 3 }\)
Answer:
(2) \(\frac{-1}{3}\)

Question 14.
If the variance of 14, 18, 22, 26, 30 is 32 then the variance is 28, 36, 44, 52, 60 is ………………… .
(a) 64
(b) 128
(c) 32√2
(d) 32
Answer:
(b) 128

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Represent the given relation {(x, y) |y = x + 3 are natural numbers < 10} by
(i) an arrow diagram (ii) a set in roster form, wherever possible
Answer:
(i)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 2

(ii) R = {(1, 4) (2, 5) (3, 6) (4, 7) (5, 8) (6, 9)}

Question 16.
If f: R → R and g : R → R are defined by f(x) = x5 and g(x) = x4 then check if f, g are one – one and fog is one – one?
Answer:
f(x) = x5 – It is one – one function
g(x) = x4 – It is one – one function
fag = f[g{x)] = f(x4) = (x4)5
fog = x20
It is also one-one function.

Question 17.
Find the first five terms of the following sequence.
a1 = 1, a2, an = \(\frac{a_{n-1}}{a_{n-2}+3}\) ; n ≥ 3 ; n ∈ N
Answer:
The first two terms of this sequence are given by a1 = 1, a2 = 1. The third term a3 depends on the first and second terms.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 3
Similarly the fourth term a4 depends upon a2 and a3.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 4
In the same way, the fifth term a5 can be calculated as
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 5
Therefore, the first fie terms of the sequence are 1,1, \(\frac{1}{4}, \frac{1}{16}, \frac{1}{52}\)

Question 18.
If 13 + 23 + 33 +. . . .+ k3 = 44100 then find 1+ 2 + 3 + …. + k
Answer:
13 + 23 + 33 + ………. + K3 = 44100
\(\left[\frac{k(k+1)}{2}\right]^{2}\) = 44100
\(\frac{k(k+1)}{2}\) = \(\sqrt{44100}\) = 210
1 + 2 + 3 + …….. + k = \(\frac{k(k+1)}{2}\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 19.
Find the LCM of the polynomials a2 + 4a – 12, a2 – 5a + 6 whose GCD is a – 2
Answer:
p(x) = a2 + 4a – 12
= a2 + 6a – 2a – 12
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 6
= a (a + 6) – 2(a + 6)
= (a + 6) (a – 2)
g(x) = a2 – 5a + 6
= a2 – 3a – 2a + 6
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 7
= a(a – 3) – 2 (a – 3)
= (a – 3) (a – 2)
L.C.M. = \(\frac{p(x) \times g(x)}{\text { G.C.D. }}\)
= \(\frac{(a+6)(a-2) \times(a-3)(a-2)}{(a-2)}\)
= (a + 6) (a – 3) (a – 2)

Question 20.
Find the value of ‘k’ whose roots of the equation kx2 + (6k + 2)x + 16 = 0 are real and equal.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 8
Here a = k, b = 6k+ 2 ; c = 16
Since the equation has real and equal roots .
A = 0
b2 – 4ac = 0
(6k + 2)2 – 4(k)(16) = 0
36k2 + 4 + 24k – 4(k) (16) = 0
36k2 – 40k + 4 = 0
(÷ by 4) ⇒ 9k2 – 10k + 1 = 0
9k2 – 9k – k + 1 = 0
9k(k – 1) – 1(k – 1) = 0
(k – 1) (9k – 1) = 0
k – 1 = 0 or 9k – 1 = 0 ⇒ k = 1 or k = \(\frac { 1 }{ 9 }\)
The value of k = 1 or \(\frac { 1 }{ 9 }\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 21.
Find the value of a, b, c, d, x, y from the following matrix equation.
\(\left( \begin{matrix} d & 8 \\ 3b & a \end{matrix} \right) +\left( \begin{matrix} 3 & a \\ -2 & -4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a \\ b & 4c \end{matrix} \right) +\left( \begin{matrix} 0 & 1 \\ -5 & 0 \end{matrix} \right) \)
Answer:
First, we add the two matrices on both left, right hand sides to get
\(\left( \begin{matrix} d+3 & 8+a \\ 3b-2 & a-4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a+1 \\ b-5 & 4c \end{matrix} \right) \)
Equating the corresponding elements of the two matrices, we have
d + 3 = 2 gives d = -1
8 + a = 2a + 1 gives a = 7
3b – 2 = b – 5 gives b = \(\frac { -3 }{ 2 }\)
Substituting a = 7 in a – 4 = 4c gives c = \(\frac { 3 }{ 4 }\)
Therefore, a = 7, b = \(\frac { -3 }{ 2 }\) ,c = \(\frac { 3 }{ 4 }\) , d = -1.

Question 22.
To get from point A to point B you must avoid walking through a pond. You must walk 34 m south and 41m east. To the nearest meter, how many meters would be saved if it were possible to make a way through the pond?
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 9
In the right ∆ABC,
By Pythagoras theorem
AC2 = AB2 + BC2 = 342 + 412
= 1156 + 1681 = 2837
AC = √2837
= 53.26 m
Through A one must walk (34m + 41m) 75 m to reach C.
The difference in Distance = 75 – 53.26
= 21.74 m

Question 23.
If the points A(-3, 9), B(a, b) and C(4, -5) are collinear and if a + b = 1, then find a and b.
Answer:
Since the three points are collinear
Area of a ∆ = 0
\(\frac { 1 }{ 2 }\)[(x1y2 + x2y3 + x3y1) – (x2y1 + x3y2 + x1y3)]
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 10
\(\frac { 1 }{ 2 }\)[(-36 – 5a 4- 36) – (9a + 46 + 15)] = 0
-36 – 5a + 36 – 9a -4b – 15 = 0
-7b – 14a + 21=0
(÷ by 7) – b – 2a + 3 = 0
2a + b – 3 = 0
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 11
Subtract (1) and (2) ⇒ a = 2
Substitute the value of a = 2 in (2) ⇒ 2 + 6 = 1
b = 1 – 2 = -1
The value of a = 2 and b = -1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 24.
Prove that \(\frac{\sin A}{1+\cos A}+\frac{\sin A}{1-\cos A}\) = 2 cosec A.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 12

Question 25.
The probability that atleast one of A and B occur is 0.6. If A and B occur simultaneously with probability 0.2, then find P(Ā) + P(B̄).
Answer:
Here p(A ∪ B) = 0.6, p(A ∩ B) = 0.2
p(A ∪ B) = p(A) + p(B) – p(A ∩ B)
0.6 = p(A) + P(B) – 0.2
∴ p(A) + p(B) = 0.8
P(Ā) + P(B̄) = 1 – p(A) + 1 – p(B)
= 2 – [p(A) + p(B)]
= 2 – 0.8 = 1.2

Question 26.
If n = 10, X̄ = 12 and Σx2 = 1530, then calculate the coefficient of variation.
Answer:
Given that n = 10, X̄ = \(\frac{\Sigma x}{n}\) = 12, Σx2 = 1530
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 13
(σ) = 3
coefficient of variation = \(\frac{\sigma}{\bar{x}} \times 100\) ⇒ \(\frac{3}{12} \times 100=25\)
∴ coefficient of variation = 25

Question 27.
Find the volume of the largest right circular cone that can be cut out of a cube whose edge is 14 cm.
Answer:
Given, Edge of the cube = 14 cm
The largest circular cone is cut out from the cube.
Radius of the cone (r) = \(\frac { 14 }{ 2 }\) = 7 cm
Height of the cone (h) = 14 cm
Volume of a cone = \(\frac { 1 }{ 3 }\) πr2h cu. units
= \(\frac{1}{3} \times \frac{22}{7}\) × 7 × 7 × 14 cm3
= \(\frac{22 \times 7 \times 14}{3}\) cm3
∴ Volume of a cone = 718.67 cm3

Question 28.
Find the sum of the first 40 terms of the series 12 – 22 + 32 – 42 + …..
Answer:
The given series is 12 – 22 + 32 – 42 + …. 40 terms
Grouping the terms we get,
(12 – 22) + (32 – 42) + (52 – 62) + ………… 20 terms
(1 – 4) + (9 – 16) + (25 – 36) + …………. 20 terms
(-3) + (-7) + (-11) + ………… 20 term
This is an A.P
Here a = – 3, d = – 7 – (- 3) = – 7 + 3 = -4, n = 20
Sn = \(\frac { n }{ 2 }\)[2a + (n – 1)d]
S20 = \(\frac { 20 }{ 2 }\)[2(-3) + 19(-4)]
= 10 (- 6 – 76) = 10 (- 82) = – 820
∴ Sum of 40 terms of the series is = 820.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
Find x if gff(x) = fgg(x), given f(x) = 3x + 1 and g(x) = x + 3.

Question 30.
In a G.P the product of three consecutive terms is 27 and the sum of the product of two terms taken at a time is \(\frac{57}{2}\).Find the three terms.

Question 31.
The 13th term of an A.P. is 3 and the sum of first 13 terms is 234. Find the common difference and the sum of first 21 terms.

Question 32.
If Sn = (x + y) + (x2 + xy + y2) + (x3 + x2y + xy2 + y3) + ………… n terms then prove that (x – y)Sn = \(\left[\frac{x^{2}\left(x^{n}-1\right)}{x-1}-\frac{y^{2}\left(y^{n}-1\right)}{y-1}\right]\)

Question 33.
Two women together took 100 eggs to a market, one had more than the other. Both sold them for the same sum of money. The first then said to the second: “If I had your eggs, I would have earned ₹15”, to which the second replied: “If I had your eggs, I would have earned ₹6 \(\frac { 2 }{ 3 }\) ”. How many eggs did each had in the beginning?

Question 34.
If the roots of (a – b)x2 + (b – c)x + (c – a) = 0 are real and equal, then prove that b, a, c are in arithmetic progression.

Question 35.
A circle is inscribed in AABC having sides 8 cm, 10 cm and 12 cm as shown in figure, Find AD, BE and CF.

Question 36.
The line joining the points A(0,5) and B(4,1) is a tangent to a circle whose centre C is at the point (4, 4) find
(i) the equation of the line AB.
(ii) the equation of the line through C which is perpendicular to the line AB.
(iii) the coordinates of the point of contact of tangent line AB with the circle.

Question 37.
If sin θ (1 + sin2θ) = cos2θ , then prove that cos6θ – 4 cos4θ + 8 cos2θ = 4

Question 38.
A toy is in the shape of a cylinder surmounted by a hemisphere. The height of the toy is 25 cm. Find the total surface area of the toy if its common diameter is 12 cm.

Question 39.
Find the coefficient of variation of 24, 26, 33, 37, 29, 31.

Question 40.
The probability that A, B and C can solve a problem are \(\frac { 4 }{ 5 }\), \(\frac { 2 }{ 3 }\) and \(\frac { 3 }{ 7 }\) respectively. The probability of the problem being solved by A and B is \(\frac { 8 }{ 15}\),B and C is \(\frac { 2 }{ 7 }\) , A and C is \(\frac { 12 }{ 13 }\) . The probability of the problem being solved by all the three is \(\frac { 8 }{ 35 }\). Find the probability that the problem can be solved by atleast one of them.

Question 41.
Verify that (AB)T = BTAT if A = \(\left( \begin{matrix} 2 & 3 & -1 \\ 4 & 1 & 5 \end{matrix} \right) \) and B = \(\left( \begin{matrix} 1 & -2 \\ 3 & -3 \\ 2 & 6 \end{matrix} \right) \)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 42.
A function f(-3, 7) → R is defined as follows
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 1
Find (i) 5f(1) -3f(-2) (ii) 3f(-3) + 4 f(4) (iii) \(\frac{7 f(3)-f(-1)}{2 f(6)-f(1)}\)

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Construct a ∆PQR such that QR = 6.5 cm, ∠P = 60° and the altitude from P to QR is of length 4.5 cm.

[OR]

(b) Draw a tangent to the circle from the point P having radius 3.6 cm, and centre at O. Point P is at a distance 7.2 cm from the centre.

Question 44.
(a) Draw the graph of y = x2 + x and hence solve x2 + 1 = 0

[OR]

(b) Solve graphically (x + 2) (x + 4) = 0

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
காசிக்காண்ட ம் என்பது …………………
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 2.
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி …………………
(அ) ஜால்ரா
(ஆ) உறுமி
(இ) பறை
(ஈ) நாகசுரம்
Answer:
(இ) பறை

Question 3.
அஃறிணையில்………….க் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
(அ) ஒன்றினை
(ஆ) இரண்டினை
(இ) மூன்றினை
(ஈ) நான்கினை
Answer:
(அ) ஒன்றினை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 4.
ஜெயகாந்தன் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல். …………………
(அ) யாருக்காக அழுதான்
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்
(இ) உன்னைப் போல் ஒருவன்
(ஈ) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Answer:
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Question 5.
மெய்க்கீ ர்த்திகள்………..
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
(ஆ) மக்களின் எண்ணங்களாகப் புகழ்ந்து பாடப்பட்டவை
(இ) இலக்கியங்களாக ஓலையில் எழுதப்பட்டவை
(ஈ) புகழைப் பரப்பும் வகையில் துணியில் எழுதப்பட்டவை
Answer:
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

Question 6.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 7.
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்………….. எனப்ப டும்.
(அ) வழு
(ஆ) வழாநிலை
(இ) தொடர்நிலை
(ஈ) அறிமுகநிலை
Answer:
(ஆ) வழாநிலை

Question 8.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான தலைப்பு எது?
குறிப்பு: (i) கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
(ii) திறன் பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.
(அ) இணையம்
(ஆ) மடிக்கணினி
(இ) கணினி
(ஈ) செயற்கை நுண்ணறிவு
Answer:
(ஈ) செயற்கை நுண்ணறிவு

Question 9.
“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் கேட்பது …. வினா. அதற்கு, நான் போக மாட்டேன் எனத் தம்பி கூறுவது …………………விடை
(அ) அறிவினா, இனமொழி விடை
(ஆ) ஏவல் வினா, நேர்விடை
(இ) ஏவல்வினா, மறை விடை
(ஈ) ஐயவினா, சுட்டுவிடை
Answer:
(இ) ஏவல்வினா, மறை விடை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 10.
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல்……………… ஆகும்.
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(இ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

Question 11.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் …………………
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
(ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
(இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
(ஈ) இறந்துவிடாது இகழ்ந்தால் என்மனம்
Answer:
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
“வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதிரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

Question 12.
பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்கள் …………………
(அ) பகர்வனர், பட்டினும்
(ஆ) காருகர், துகிரும்
(இ) பட்டினும், மயிரினும்
(ஈ) நூலினும், அகிலும்
Answer:
(அ) பகர்வனர், பட்டினும்

Question 13.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள் ……………….
(அ) துகிர், தூசு
(ஆ) ஆரம், அகில்
(இ) சுண்ண ம், அகில்
(ஈ) பட்டு, பருத்தி
Answer:
(ஆ) ஆரம், அகில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 14.
பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்கள் …………………
(அ) பட்டினும், கட்டு
(ஆ) தூசும், துகிரும்
(இ) ஆரமும், அகிலும்
(ஈ) மயிரினும், நூலினும்
Answer:
(அ) பட்டினும், கட்டு

Question 15.
பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
(அ) பட்டினும், கட்டு
(ஆ) பருத்தி, காருகர்
(இ) விரையும், வீதியும்
(ஈ) காருகர், மேவிய
Answer:
(இ) விரையும், வீதியும்

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர்
காலக்கணிதம் ஆகும்.
(ஆ) தொல்காப்பியர், ‘உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது’ என்கிறார்.
Answer:
விடை:
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் என்ன?
(ஆ) தொல்காப்பியர் உலகம் எவற்றால் ஆனது என்கிறார்?

Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  •  உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்.

Question 18.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது; செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.

Question 19.
நிகழ்கலை என்றால் என்ன?
Answer:

  • சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
  • மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன.
  • சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் . திகழ்கின்றன
  • பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன .

Question 20.
தலைப்பு: மொழிபெயர்ப்பு
Answer:
குறிப்பு: எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்து விட்டது கருத்துப்பரிமாற்றம் தகவல் பகிர்வு அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழி பெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 21.
‘எப்பொருள்’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் ]
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக. சிலை மேல் எழுத்து போல
Answer:
விடை: நான் கூறிய அனைத்தும் சிலை மேல் எழுத்துப் போல் நிதர்சனமான உண்மையே ஆகும்.

Question 23.
எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
(அ) விக்கு நன்றாக எறிந்தது.
Answer:
விடை:
விக்கு நன்றாக எரிந்தது.

(ஆ) பவை இறையாகப் பயிரு வகைகளைத் தின்னும்.
Answer:
விடை:
வை இரையாகப் பயிறு வகைகளைத் தின்னும்.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
கொள் – கோள்
Answer:
விடை:
கோள்களைப் பற்றிய ஆய்வினை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக. Irrigation – பாசனம்
Answer:
Territory – நிலப்பகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 26.
கொடுக்கப்பட்ட இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
வளி – வழி
Answer:
வளிமண்டலத்திற்குச் செல்லும் வழியில் புகைமண்டலம்.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கோயம்புத்தூர் திருநெல்வேலி
முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது
Answer:
விடை:
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.

Question 28.
எவையெவை, கட்டிய – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
எவையெவை – அடுக்குத்தொடர்
கட்டிய – பெயரெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
இலக்கியங்களில் காற்று எப்படி நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறது?
Answer:
தென்றலாகிய காற்று, பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் காற்றை,

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ”
என நயம்பட உரைக்கிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,

“நந்தமிழம் தண் பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

எனத் தூது செல்ல காற்றை அன்போடு அழைக்கிறாள். அதுமட்டுமல்ல

“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே”

எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் காற்று நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 30.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி :அடி

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
சீனநாட்டில் தமிழ்க் கல்வெட்டு!
Answer:
சீனநாட்டில் ‘கர்ண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

(அ) சீனநாட்டில் உள்ள துறைமுகத்தின் பெயர் என்ன?
Answer:
‘காண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ ‘ என்னும் துறைமுக நகர் உள்ளது.

(ஆ) சீன நாட்டில் உள்ள கோவில் எது?
Answer:
சிவன் கோவில் (இ) சீனநாட்டில் உள்ள கல்வெட்டில் எவ்வரசரின் சிறப்புள்ளது? சோழர்காலச் சிற்பங்கள்

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 33.
செய்குதம்பிப் பாவலன் குறிப்பு வரைக.
Answer:

  • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
  • 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப்பெற்றார்.
  • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் ‘ உள்ள ன.
  • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “நவமணி வடக்கயில் போல்” எனத் தொடங்கும் ‘தேம்பாவணி’ பாடல். Answer:
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர் அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே (- வீரமாமுனிவர்)

(அல்லது)

(ஆ) “தண்டலை” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணம்’ பாலகாண்டம் பாடல்.
Answer:
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கும்மாதோ. (- கம்பர்.)

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.  [2 × 3 = 6]

Question 35.
வஞ்சித்திணையும், காஞ்சித்திணையும் விளக்குக.
Answer:
வஞ்சித்திணை, மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை. வட்கார் மேல் செல்வது வஞ்சி தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை. உட்காது எதிருன்றால் காஞ்சி

Question 36.
‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேய்த்துச் சென்று ‘ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 1

Question 37.
பிறிதுமொழிதல் அணி – விளக்குக.
Answer:
அணிவிளக்கம்:
கவிஞர் ஒரு செய்யுளில் உவமையை மட்டும் கூறி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணியாகும்.

(எ.கா.) “பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .

உவமை:
மிக மென்மையான மயிலிறகை அளவுக்கு அதிகமாய் வண்டியில் ஏற்றினால் மிக வலிமையான அவ்வண்டியின் அச்சு முறிந்து விடும்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உவமேயம்:
ஒருவன் வலியனே ஆயினும் அவன் எளியர் என்று பகைவர் மேல் செல்வானாயின் அவர்கள் ஒன்று கூடினால் அவன் வலியறிந்து கெட்டுப்போக நேரிடும் என்னும் உவமேயப் பொருள் பெறப்படுகிறது. அதனால் இது பிறிது மொழிதலணியாகும்.

பகுதி – IV (மதிப்பெண்க ள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 × 5 = 25]

Question 38. (அ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம்
    இவ்விடத்தேச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ கூறாமல் யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

(அல்லது)

(ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை, அறிக! (- கண்ணதாசன் )

கருத்து:
நான் தான் காலக் கணிதன் கருப்படும் பொருளை உருப்படவைப்பேன்! புவியில் நல்லவர்கள் பலபேர் இருக்கின்றனர். பொன்னும் விலைமிகு பொருளும் இருக்கிறது. அது செல்வம், இதுசரி, இது தவறு என்று சொல்வது என் வேலை, செய்வது தவறாயின் எதிர்ப்பது என் வேலை சரி என்றால் புகழ்வது என் தொழில். ஆக்கல் காத்தல், அழித்தல் இம்மூன்றும் இறைவனும் நானும் மட்டுமே அறிந்த தொழில்களாகும்.

எதுகை: செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
கவிஞன், புவியில்

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
கவிஞன், காலம், கணிதம், கருப்படு

முரண்: சரி x தவறு, ஆக்கல் x அழித்தல்

சொல் நயம்: கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

என்ற சொற்றொடர்களை அமைத்துப் பாடலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.
(எ.கா) தெய்வம் எனத் தன்னைக் கூறும் கவிஞர் புகழுடைத் தெய்வம் என்ற சொற்றொடரைக் கையாளும் நயம் படித்து இன்புறத்தக்கது.

பொருள் நயம்: ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை

என்றும் ஆழ்ந்த பொருள் சுவை உடையது (எ.கா) தன் செல்வம் எது எனக் கூற வந்த கவிஞர், பொன் விலை உயர்ந்தது. அதைக் காட்டிலும் விலை உயர்ந்த கவிதைப்பொருளே என் செல்வம் எனக் கூறியிருக்கும். இக்கவிதையின்
பொருள்நயம் போற்றுதற்குரியது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 39.
(அ) அலுவலக உதவியாளர் பணிக்கு தன்விவரப் பட்டியல் ஒன்றைத் தயார் செய்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 2
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள்’ நிறுவனத்தில் உதவியாளர் பணி தந்தால் என் பணியைச் சிறப்பாகச் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

நன்றி,
இடம் : மதுரை
தேதி : 18.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கவிமணி.

(அல்லது)

(ஆ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.
Answer:
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
எம்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டமுகாம் தொடக்க விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் வணங்குகிறேன்.

மாணவர்களின் மனதில் நாட்டை பற்றிய அக்கறை வளர வேண்டும். “ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அவர்களின் கடமைகளை உணரச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொறுப்பான சமுதாயம் வளரும். மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். நாட்டின் மீது அக்கறைக் கொள்ள வேண்டும். சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டுநலப்பணித் திட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் அனைவரும் மிக சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து காட்டினர். ஒவ்வொரு மாணவனும் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதைப் பார்த்தால் நம் நாடு விரைவில் வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்புக்கு வழிகொடுத்த அனைவருக்கும் வணக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
விருப்புடன் செய்திடு ஈகை
வெறுப்புகள் வேண்டாம் தம்பி
ஒரு பிறவியில் செய்திடும் நன்மை
ஏழு பிறவிகள் தொடர்ந்திடுமாமே!
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்
வானமும் வையமும் என்றும்
உன் குணம் போற்றட்டுமே!
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 3

Question 41.
நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 4
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 5

Question 42.
(அ) ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையை எழுதுக.
Answer:
உதவி

  1. வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது
  2. உறவினருக்கு என் அம்மா பணம் அளித்து உதவியபோது
  3. முதியவருக்குக் காசுகொடுத்து உதவியது

மனநிலை :

  1. இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு ; அவருக்கு மனமகிழ்ச்சி!
  2. கல்லூரிப் படிப்பைத் தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு !
  3. ஒரு வேளை உணவு உண்ட மனநிறைவு

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Today women in India occupy challenging positions. There are women pilots and women serve the armed forces too. There are successful IAS and IPS officers. Kiran Bedi is an example for successful police officer. There are women chief ministers, M.P.s and M.L.A.S. Our constitution guarantees equal rights to women. In Tamil Nadu, the right of inheritance has been given to women. Education and employment has been made a basic necessity for women. Though there are many progresses in the lives of women, still the other side of the coin is noteworthy and terrific. Dowry death and Eve teasing still prevails. Female baby is still considered a burden and female infanticide is still in existence. Male chauvinism is hurting women. Sania Mirza, Kalpana Chawla, Sunitha Williams and many such women add glory to womanhood. Government must give 50% reservations to women in higher education and career choice.
Answer:
விடை :
இன்றைய பெண்கள் சவாலை எதிர் கொள்ளும் பணிகளைப் புரிகின்றனர். விமான
ஓட்டியாகவும் போர்ப்படையிலும் பணி புரிகின்றனர். IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வாகை சூடியுள்ளனர். உதாரணமாக கிரன் பேடி என்பவர் சாதனை படைத்த காவல் பெண் அதிகாரி ஆவார். முதலமைச்சராகவும், M.P மற்றும் M.L.A ஆகவும் உள்ளனர். நம் தேசத்தின் அரசியல் திட்ட சட்டம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கிறது. தமிழ் நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வியும், பணியும், பெண்களுக்கு இன்றியமையாததாக இன்று உள்ளது. பெண்களுக்குச் சம உரிமையும் முன்னேற்றமும் இருப்பினும் மறுபக்கம் இன்றளவும் கவனத்துக்குரியதாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது. வரதட்சணை தொல்லைகளும், பெண்களை ஏளனம் செய்வதும் நடந்த வண்ணமே உள்ளன. பெண் குழந்தையைப் பாரமாகக் கருதி அதைக் கொலைசெய்யும் நிலை இன்றளவும் உள்ளது. ஆண் ஆதிக்கம் பெண்களை காயப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. P.V. சிந்து, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண்களினால் பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளனர். பெண்களுக்கு அரசாங்கம் 50% சலுகையைக் கல்வியிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அளிக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24]

Question 43.
அ) சங்க இலக்கியங்கள், காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்குக் கூடாது எனக் கூறப்பட்டது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – புறம்

எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய்பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் அறம் :
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி.. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

போர் அறம்:
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

“எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான்” – புறம்

இத்தகைய அறநிலைகள் இன்றைக்கும் தேவையானவை ஆகும்.

(அல்லது)

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை.

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினை பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது. உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார்.
  •  தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை.
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்லது)

(ஆ) உரைநடையின் அணிநலன்களை சுருக்கி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 6
முன்னுரை:
சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு. இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம். இக்கால இலக்கியம் நம் பூங்கா. இவை அனைத்தின் நயங்களையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அணிநலன்களாகக் காண்போம்.

உரைநடையில் உருவகம் இணை ஒப்பு:
தற்பொழுது முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன என்று உருவகமாக எழுதுகிறார்கள். களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைதான் அதற்குச் சான்று இது அறிஞர் அண்ணாவின் உரைநடை.

எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை நட்பு என்கிறோம். ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? எனக் கேட்கிறார்கள் ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுத்தாளர் வ. ராமசாமி மழையும் புயலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உரைநடையில் இலக்கணை:
“சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், ‘என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா ?’ என்னும். அரசு கண்ணிற்படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்’ என்னும், வேம்பு, என்நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா’ என்னும், அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன், ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும் “. எங்கள் காலத் தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் இப்படி எழுதியிருக்கிறார்.

உரைநடையில் எதுகை மோனை:
“தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும் ” என்று சொல்லின் செல்வர் இரா. பி. சே. தமிழின்பம் என்னும் நூலில் எழுதியுள்ளார்.

உரைநடையில் எதிரிணை:
அமைத்து எழுதுவோம்…. இதனை எதிரிணை இசைவு என்கிறோம். குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம். புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள். ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!’ என்று தோழர் ப. ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு!’ முடிவுரை:
பேசினால் உரையாடல், எழுதினால் உரைநடை, இன்றைய உரைநடையின் வளர்ச்சியோ அளவற்றது. கட்டுரை, சிறுகதை, புதினம் இவையெல்லாம் இன்றைய உரைநடையின் இலக்கிய வடிவங்களாகத் திகழ்கின்றன. இவற்றைப் படித்து நம் அறிவை வளப்படுத்திக் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இளமைப் பருவம் – கல்வி – கனவு நனவானது – முதல் பயணம் – கல்பனாவின் ஆர்வம் – இரண்டாம் பயணம் – முடிவுரை.
Answer:
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை:
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

இளமைப் பருவம்:
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961 ம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேசி கர்னாஸ் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விமான ஓவியங்கள் தீட்டி அழகு பார்ப்பது விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை, புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

கல்வி :
கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு அந்த வயதிலேயே விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை 1982 ல் அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்காஸ் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார் கல்பனா. நான்கு ஆண்டுகள் கழித்துக் கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

கனவு நனவானது:
1993 ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த சுமார் 3000 பேரில் ஆறு பேர் மட்டும் தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமாகத் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பிடித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

முதல் பயணம்:

1995 ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் 87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா. சகவிண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகப் பூமிக்குத் திருப்பினார்.

கல்பனாவின் ஆர்வம்:
விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும் என்றார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளைத் தெரிவித்தபடி இருப்பார்.

இரண்டாம் பயணம்:
முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா. பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில் அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது 41 வயது கல்பனா தேவதையாக விண்ணில் கலந்தார்.

முடிவுரை:
இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் 2011 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வீரதீரச் சாதனைகள் புரிந்த பெண்களுக்குக் கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்குப் பிரியமான ரோல்மாடல்!

(அல்லது)

ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
பொதுமை – தகைமை – முறைமை – நிறையுடைமை – சுட்டுந்தன்மை – அறிவாண்மை – வளமை – மறுமை.
Answer:
உலகப் பொதுமறை பொதுமை :
இது தமிழிற்குக் கிடைத்த அரிய நீதி நூல். கரும்பென்றால் அடி இனிக்கும் எனக் கூறலாம். இதுவோ கற்கும் இடமெல்லாம் சுவையினைத் தருவதாகும்.

“எம்மதமும் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

எனும் சுத்தானந்தரின் கூற்றின்படி எக்காலத்திற்கும் பொருத்தமுற அமைக்கப்பட்ட அழியாக் காவியம்.

தகைமை:
சிறு அடிகளில் உலகளந்த தகைமை இதன் பெருமையாகும். திருக்குறள் பல்வேறு அடைமொழிகளால் உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனக் குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, தெய்வப்புலவர், செந்தாப்போதார், பெருநாவலர் எனப் பலவாகும்.

முறைமை :
திருக்குறளானது 10 குறளினுக்கு ஒரு அதிகாரமாக 133 அதிகாரங்களைக் கொண்டது. அதிகார வரிசைகள் எல்லாம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. மூன்று பிரிவுகளாக அறம், பொருள், இன்பம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் 38 அதிகாரமும், பொருட்பால் 70 அதிகாரமும், காமத்துப்பால் 25 அதிகாரமுமாக அமைக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் உரையாக மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர், பரிதியார், பரிப்பெருமாள் என்பவர்கள் உள்பட பதின்மர் உரை எழுதியுள்ளார். இதில் பரிமேலழகர் உரையே சிறப்பாகக் கருதப்படுகிறது.

நிறையுடைமை:
வாழ்க்கையின் நோக்கங்களைச் செய்யுளுக்கு இலக்காக்கி வைத்த பெருந்தகையார். உயர்ந்த தத்துவங்களை ஈரடியினில் அடக்கியவர். அதனால் பாரதியார்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் போற்றுகின்றார்.

உலக மொழிகளில் பைபிளுக்கு அடுத்தபடியாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார். தமிழின் முதல் எழுத்தாகிய அ ‘ என்பதில் அகர முதல ‘ எனும் குறளில் தொடங்கி தமிழின் இறுதி எழுத்தாகிய ‘ன்’ என்பதற்கு 1330-வது குறளின் இறுதிச் சொல்லாகப் பெறின்’ எனும் சொல் முடிவுச் சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டுந்தன்மை :
சங்க காலமானது பொற்காலமாகச் சொல்லப்படினும், கள் குடித்தல், பரத்தையர் தொடர்பு இவை தவறெனக் கூறப்படவில்லை . ஆனால் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூற்களில் நீதி நூற்கள் மிகுதியாயின. நீதி நூற்களில் திருக்குறள் சிறப்பானதாக அமைந்துள்ளது. பொதுவான கருத்துகளான ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது முதல் ‘ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்பது வரை மனிதனை வழிநடத்தும் நெறிகளாய் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

அறிவாண்மை :
குடியினால் மக்கள் சிறுமைப்படுபவர் என்பதை ‘கள்ளுண்ணாமை’ எனும் அதிகாரத்தில் தந்து ‘உண்ணற்க கள்ளை’ என அறிவுறுத்தியும், பிறன் பொருளை எடுத்தல் நல்லதல்ல என்பதற்கு ‘கள்ளாமை’ எனும் அதிகாரத்திலும் சுட்டிக் காட்டுகின்றனர். புலால் உண்ணுவதால் யாது பயன் என்பதை,

“தன்னூன் பெருக்கத்திற்குத்தான் பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்” – எனக் கூறி

உடலை வளர்க்க பிற ஊனும் தேவையா என வினா எழுப்புகிறார்.
சூதினால் இவ்வுலகம் தவறான வழியில் சென்று பொருளிழப்பதை ‘சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது’ என அறிவுறுத்துகிறார்.

நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உணவினை உண்டோமானால் மருந்தென ஒன்று வேண்டாம் என்பதை, ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ எனக்கூறி விழிப்புணர்வினைத் தருகிறார்.
நட்பு பற்றிக் கூறும்போது, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ எனும் குறளில், தம் உடையானது அவிழும்போது தன்னுடைய கை நம்மை அறியாமலே சரியாக்குவதைப்போல நட்புடையோர் துன்பப்படும்போது உதவுவது நண்பனின் கடமை என வலியுறுத்துகிறார்.
கல்வி பற்றி கூறும்போது “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்கிறார். ஒருவன் படிக்கப் படிக்க அறிவு பெருகும். எதைப்போல எனில் கிணற்றிலிருந்து நீர் எடுத்த பின்னும் சுரப்பது போல காதலாக என உதாரணம் காட்டுகின்றார். இப்பரந்த உலகம் உனதாக ஆக வேண்டுமானால் கிடைத்து விடும். எவ்வாறெனில்,

“ஞாலம் கருதினும் கைக்கூடம் காலம்
கருதி இடத்தாற் செயின்” (- எனச் சொல்லி )

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்புகிறார்.
மேலும் ஆளுகின்ற மன்னன் எப்போது மதிக்கப்படுவான் எனக் கூறும்போது ‘குடிதழீஇ கோலோச்சும் போது’. அதாவது குடிகளை எண்ணி அவர்களின் கருத்திற்கிணங்க ஆட்சி புரியும் போது மன்னவன் மதிக்கப்படுவான் என்றார்.

பெண்மையைக் கூறும்போது, ‘இல்லதென் இல்லவள் மாண்பு’ என இயம்புகின்றார்.
இவ்வாறு பல்வேறு நிலைகளினில் மக்களுக்கு அறிவாண்மை வெளிப்பட ஆதாரமாய் நிற்கின்றார்.

வளமை :
காலங்களைக் கடந்தாலும் அன்றாட வாழ்விலும், பல இடங்களிலம் பயன்படுத்தும் கருத்துகளாய் அமைந்துள்ளன. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் வரவு-செலவு திட்டத்தினைக் கூறும்போது,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” – என இக்குறளினை

கையாளும் அளவிற்குப் பிற்காலத்தோடு பொருத்தமுற எழுதப்பட்ட ஒப்பற்ற நூலாகும்.
நடைமுறை வாழ்விலும்கூட இவர் கருத்துகள் எண்ணற்குரியது. ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ எனும் குறள் மூலம் காந்தியடிகளின் இறப்பினை, நமது இழப்பினை நாம் அறியாமலில்லை.

பழமையில்கூட புதுமை காட்டி, குறளினைச் சொல்லும்போது உதடுகள் ஒட்டாத குறளும் உள்ளன. அவை, ‘யாதெனின்’, ‘வசையொழிய’ எனும் குறள்களைக் கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

மறுமை:
இம்மை மாறி மறுமையாயினும் குறளானது காலங்களைக் கடந்து நிற்கும். இக்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் திருக்குறளிலிருந்து எழுந்துள்ளன. இணையத்தில் (Internet) திருக்குறள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்பு சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ அமைத்து குறள்களை கற்களில் பொறித்து சிலைகளையும் செதுக்கி வைத்தது. தற்போது குமரிக் கடற்கரையில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்துள்ளது. திருவள்ளுவர் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றனர். நாணயத்தின் ஒருபுறம் திருவள்ளுவரின் உருவமானது பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது திருக்குறள்.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions. [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
If the Earth shrinks to 50% of its real radius its mass remaining the same, the weight of a body on the Earth will ______.
(a) decrease by 50%
(b) increase by 50%
(c) decrease by 25%
(d) increase by 300%
Answer:
(c) decrease by 25%

Question 2.
The refractive index of four substances A, B, C and D are 1.31, 1.43, 1.33, 2.4 respectively. The speed of light is maximum in ______.
(a) A
(b)B
(c) C
(d) D
Answer:
(a) A

Question 3.
When a sound wave travels through air, the air particles ______.
(a) vibrate along the direction of the wave motion
(b) vibrate but not in any fixed direction
(c) vibrate perpendicular to the direction of the wave motion (id) do not vibrate
Answer:
(a) vibrate along the direction of the wave motion

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 4.
Which of the following represents 1 amu?
(a) mass of a C-12 atom
(b) mass of hydrogen atom
(c) 1/12th of the mass of a C-12 atom
(d) mass of 0-16 atom
Answer:
(c) 1/12th of the mass of a C-12 atom

Question 5.
______ is a relative periodic property.
(a) atomic radii
(b) Ionic radii
(c) Electron affinity
(d) Electron negativity
Answer:
(b) Ionic radii

Question 6.
Which of the following is the universal solvent?
(a) Acetone
(b) Benzene
(c) Water
(d) Alcohol
Answer:
(c) Water

Question 7.
Root hairs are ______.
(a) cortial cell
(b) projection of epidermal cell
(c) unicellular
(d) both (b) and (c)
Answer:
(d) both (b) and (c)

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 8.
Polyphagia is a condition seen in ______.
(a) Obesity
(b) Diabetes mellitus
(c) AIDS
(d) Cancer
Answer:
(b) Diabetes mellitus

Question 9.
9 : 3: 3 : 1 ratio is due to ______.
(a) Segregation
(b) Independent Assortment
(c) Crossing over
(d) Recessive factors
Answer:
(b) Independent Assortment

Question 10.
rDNA is a ______.
(a) vector DNA
(b) circular DNA
(c) recombinant of vector DNA
(d) satellite DNA
Answer:
(c) recombinant of vector DNA

Question 11.
Biogenesis was speculated by ______.
(a) Louis pasteur
(b) Darwin
(c) Lamark
(d) Oparin
Answer:
(a) Louis pasteur

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 12.
Green house effect refers to ______.
(a) cooling of earth
(b) warming of earth
(c) cultivation of plants
(d) trapping of UV rays
Answer:
(b) warming of earth

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
State Newton’s laws of motion.
Answer:
Every body continues to be in its state of rest or the state of uniform motion along a straight line unless it is acted upon by some external force.

Question 14.
Why are traffic signals red in colour?
Answer:

  • Red light has the highest wavelength.
  • It is scattered by atmospheric particles.
  • So red Tight in able to travel the longest distance through fog, rain etc.

Question 15.
What is co-efficient of apparent expansion?
Answer:
Coefficient of apparent expansion is defined as the ratio of the apparent rise in the volume of the liquid per degree rise in temperature to its unit volume. The SI unit of coefficient of apparent expansion is K-1.

Question 16.
Difference between atoms and molecules.
Answer:
Atom:

  • An atom is the smallest particle of an element.
  • Atom does not exist in free state except in a noble gas.
  • Atoms does not have a chemical bond.

Molecules:

  • A molecule is the smallest particle of an element or compound.
  • Molecule exists in free state.
  • Atoms in a molecule are held by chemical bonds.

Question 17.
Define Hydrated salt.
Answer:
The number of water molecules found in the crystalline substance or salts is called water of crystallization. Such salts are called hydrated salts.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 18.
What are synthetic auxins?
Answer:
Artificially synthesized auxins, that have the properties like auxins are called as synthetic auxins. Eg. 2,4-D (2, 4-Dichlorophenoxy Acetic acid)

Question 19.
Mention the Medicinal value of Leech.
Answer:

  • They can be used to treat cardiovascular diseases.
  • Biochemical substances derived from leech saliva are used for preparation of pharmaceutical drugs that can treat hypertension.

Question 20.
Define triple fusion.
Answer:
During double fertilization, one sperm fuses with the egg and forms a diploid zygote. The other sperm fuse with the secondary nucleus to form the primary endosperm, which is triploid in nature. This called triple fusion.

Question 21.
What are Analogous organs?
Answer:
The analogous organs look similar and perform similar functions but they have different origin and developmental pattern. E.g: The function of the wings of a bat, the wings of a bird and wings of an insect are similar, but their basic structures are different.

Question 22.
A current of 2A flows through a 12 V bulb then find resistance.
Answer:
Given: V = 12V;    I = 2A
V = IR
R = \(\frac{V}{I}=\frac{12}{2}\)
R = 6 Ω

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
Deduce the equation of a force using Newton’s second law of motion.
Answer:
“The force acting on a body is directly proportional to the rate of change of linear momentum of the body and the change in momentum takes place in the direction of the force”.

Let, ‘m’ be the mass of a moving body, moving along a straight line with an initial speed ‘u’ After a time interval of ‘t’, the velocity of the body changes to ‘v’ due to the impact of an unbalanced external force F.
Initial momentum of the body Pi = mu
Final momentum of the body Pf = mv
Change in momentum Δp = Pf – Pi.
= mv – mu

By Newton’s second law of motion,
Force, F ∝ rate of change of momentum
F ∝ change in momentum / time
F ∝ \(\frac{m v-m u}{t}\)
F ∝ \(\frac{k m(v-u)}{t}\)
Here, k is the proportionality constant, k = 1 in all systems of units. Hence,
F = \(\frac{m(v-u)}{t}\)

Since, acceleration = change in velocity / time, a = (v – u)/t. Hence, we have
F = m x a
Force = mass x acceleration

  • No external force is required to maintain the motion of a body moving with uniform velocity.
  • When the net force acting on a body is not equal to zero, then definitely the velocity of the body will change.
  • Thus, change in momentum takes place in the direction of the force. The change may take place either in magnitude or in direction or in both.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 24.
Differentiate the eye defects: Myopia and Hypermetropia.
Answer:
Myopia:

  • Myopia, also known as short sightedness, occurs due to the lengthening of eye ball.
  • With this defect, nearby objects can be seen clearly but distant objects cannot be seen clearly.
  • The focal length of eye lens is reduced or the distance between eye lens and retina increases.
  • The far point will not be infinity for such eyes and the far point has come closer.
  • Due to this, the image of distant objects are formed before the retina.
  • This defect can be corrected using a concave lens.

Hypermeteropia:

  • Hypermeteropia, also known as long sightedness, occurs due to the shortening of eye ball.
  • With this defect, distant objects can be seen clearly but nearby objects cannot be seen clearly.
  • The focal length of eye lens is increased or the distance between eye lens and retina decreases.
  • Hence, the near point will not be at 25 cm for such eyes and the near point has moved farther.
  • Due to this, the image of nearby objects are formed behind the retina.
  • This defect can be corrected using a convex lens.

Question 25.
(i) Define electric potential and potential difference.
Answer:
Electric Potential: The electric potential at a point is defined as the amount of work done in moving a unit positive charge from infinity to that point against the electric force.

Electric Potential Difference: The electric potential difference between two points is defined as the amount of work done in moving a unit positive charge from one point to another point against the electric force.

(ii) How does a fuse wire protect electrical appliances?
Answer:

  1. The fuse wire is connected in series, in an electric circuit.
  2. When a large current passes through the circuit, the fuse wire melts due to Joule’s heating effect and hence the circuit gets disconnected.
  3. Therefore, the circuit and the electric appliances are saved from any damage.
  4. The fuse wire is made up of a material whose melting point is relatively low.

Question 26.
Give the salient features of “Modern atomic theory”.
Answer:
The salient features of “Modem atomic theory” are,

  • An atom is no longer indivisible.
  • Atoms of the same element may have different atomic mass.
  • Atoms of different elements may have same atomic masses.
  • Atoms of one element can be transmuted into atoms of other elements. In other words, atom is no longer indestructible.
  • Atoms may not always combine in a simple whole number ratio.
  • Atom is the smallest particle that takes part in a chemical reaction.
  • The mass of an atom can be converted into energy [E = mc2].

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 27.
(i) How will you classify Hydrocarbons?
Answer:
Hydrocarbons are classified into three classes such as Alkanes, Alkenes and Alkynes.
(a) Alkenes:
These are hydrocarbons, which contain only single bonds. They are represented by the general formula CnH2n + 2 (where n = 1,2, 3) Ex: Methane (CH4)

(b) Alkenes:
The hydrocarbons, which contain one or more C = C bonds are called alkenes. These are unsaturated compounds. They are represented by the general formula CnH2n.
Ex: Ethylene (C2H4)

(c) Alkynes:
The hydrocarbons containing carbon to carbon triple bond are called alkynes. They have the general formula CnH2n – 2 Ex: Acetylene (C2H2)

(ii) Write the characteristic of hydrocarbons.
Answer:

  • Lower hydrocarbons are gases at room temperature E.g. methane, ethane are gases.
  • Alkanes are least reactive when alkynes are most reactive due to presence triple bond.
  • Alkanes are saturated whereas alkenes and alkynes are unsaturated.
  • They are insoluble in water.

Question 28.
Which acts as a link between the nervous system and endocrine system?
Answer:
Hypothalamus, acts as a link between nervous system and endocrine system. It lies at the base of the thalamus. It controls involuntary functions like hunger, thirst, sleep, sweating, sexual desire, anger, fear, water balance, blood pressure etc. It acts as a thermo regulatory (temperature control) center of the body. It controls the secretion of hormones from anterior Pituitary gland.

Question 29.
(i) What are heart sounds? How are they produced?
(ii) What is Aneuploidy?
Answer:
(i) The rhythmic closure and opening of the valves causes heart sounds.
The first sound ‘LUBB’ is of longer duration and is produced by the closure of the tricuspid and bicuspid valves after the beginning of ventricular systole.
The second sound ‘DUPP’ is of a shorter duration and produced by the closure of semilunar valve at the end of ventricular systole.

(ii) Aneuploidy is the loss or gain of one or more chromosomes in a set. It is of three types. Monosomy (2n – 1), Trisomy (2n + 1)andNullisomy (2n – 2).

Question 30.
Discuss the importance of biotechnology in the field of medicine.
Answer:
Using genetic engineering techniques, medicinally important pharmaceutical products for the treatment of various diseases have been developed.

  1. Insulin used in the treatment of diabetes.
  2. Human growth hormone used for treating children with growth deficiencies.
  3. Blood clotting factors are developed to treat haemophilia.
  4. Development of vaccines against various diseases like Hepatitis B and rabies
  5. Tissue plasminogen activator is used to dissolve blood clots and to prevent heart attack.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 31.
What are the phases of menstrual cycle? Indicate, the changes in the ovary and uterus.
Answer:
The four phases of the menstrual cycle are:

  1. Menstrual or Destructive phase
  2. Follicular or Proliferative phase
  3. Ovulatory phase
  4. Luteal or secretory phase

Events of menstrual cycle and changes in ovary and changes in uterus.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 1

Question 32.
(i) Explain how the loss of heat (or transfer of heat) due to modes of transfer of heat is minimised in a thermos flask.
Answer:
Transfer of heat is thermos is minimised as under.
(1) By conduction:
As in conduction heat can transfer by contact of material medium. In thermos air is evacuated between the walls so heat transfer in stopped by conduction mode.

(2) By convection:
As convection mode also require material (fluid) medium and there is nothing between the walls of thermos so heat does not transfer by connection mode.

(3) By Radiation:
As Ag polish is coated opaque on inner and outer walls of thermos radiation obeys the laws of refraction and reflection so no refraction takes place through opaque wall. Reflection of outer radiation goes outside of innerwall goes inside. So the transfer of heat is minimised by polishing.

(ii) Briefly write any four characteristics of group in the periodic table.
Answer:

  • The element present in a group have the same valency.
  • The element present in a group have identical chemical properties.
  • The physical properties of the elements in the group vary gradually.
  • The atomic radii of the elements present in a group increases downwards

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) State Ohm’s law.
Answer:
According to Ohm’s law, at a constant temperature, the steady current ‘I’ flowing through a conductor is directly proportional to the potential difference ‘V’ between the two ends of the conductor.
I ∝ V.
∴V = IR

(ii) With the help of a circuit diagram derive the formula for the resultant resistance of three resistances connected in parallel.
Answer:
Resistors in Parallel:
A parallel circuit has two or more loops through which current can pass. If the circuit is disconnected in one of the loops, the current can still pass through the other loop(s). The wiring in a house consists of parallel circuits.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 2
(i) Consider that three resistors R1, R2 and R3 are connected across two common points A and B.
(ii) The potential difference across each resistance is the same and equal to the potential difference between A and B. This is measured using the voltmeter.
(iii) The current I arriving at A divides into three branches I1, I2 and I3 passing through R1, R2 and R3 respectively.
According to the Ohm’s law, we have,
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 3
The total current through the circuit is given by
I = I1 + I2 + I3
Using equations (1), (2) and (3), we get
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 4
Let the effective resistance of the parallel combination of resistors be Rp. Then,
I = \(\frac{V}{R_{p}}\) …….(5)
Combining equations (4) and (5), we have
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 5
Thus,
(iv) When a number of resistors are connected in parallel, the sum of the reciprocals of the individual resistances is equal to the reciprocal of the effective or equivalent resistance.
(v) When ‘n’ resistors of equal resistances Rare connected in parallel, the equivalent resistance is \(\frac{R}{n}\)
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 6
Hence, Rp = \(\frac{R}{n}\)
(vi) The equivalent resistance in a parallel combination is less than the lowest of the individual resistances.

(OR)

(b) (i) A man is standing between two vertical walls 680 m apart. He claps his hands and hears two distinct echoes after 0.9 seconds and 1.1 second respectively. What is the speed of sound in the air?
Answer:
Given Data
d = 680 m
t1 = 0.9 s
t2 = 1.1 s
v = ?
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 7

(ii) An electric heater of resistance 5 Ω is connected to an electric source. If a current of 6 A flows through the heater, then find the amount of heat produced in 5 minutes.
Answer:
Given resistance R = 5 Ω, Current I = 6 A,
Time t = 5 minutes = 5 × 60 s = 300 s
Amount of heat produced, H = I2Rt
H = 62 × 5 × 300. Hence, H = 54000 J

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 34.
(a) (i) Calculate the gram molecular mass of NH3.
Answer:
Atomic mass of N = 14
H = 1
Gram molecular mass of NH3 = (14 × 1) + (1 × 3)
= 14 + 3 = 17 g

(ii) Calculate the percent by mass of glucose in a solution made by dissolving 500 g of glucose in 50 g of water.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 8

(iii) Calculate the number of water molecule present in one drop of water which weights 0.18.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 9
Number of molecules = No. of moles x Avogadro number
= 0.01 × 6.023 × 1023
= 0.06023 × 1023
= 6.023 × 1021 molecules

(OR)

(b) (i) How does pH play an important role in everyday life?
Answer:

  • The pH of blood is almost 7.4. Any increase or decrease in this value leads to diseases.
  • Citrus fruits require slightly alkaline soil, while rice requires acidic soil and sugarcane requires neutral soil.
  • If pH of rain water becomes less than 7, it becomes acid rain which is harmful in day-to-day life.
  • pH changes cause tooth decay.
  • During indigestion the stomach produces too much acid and this causes pain and irritation.

(ii) Classify the following compounds based on the pattern of carbon chain and give their structural formula: (i) Propane (ii) Benzene (iii) Cyclobutane (iv) Furan
Answer:
(i) Propane is open chain or a cyclic compound because it contains an open chain.
CH3 – CH3 – CH3 [Propane]

(ii) Benzene is a carbocyclic compound because it contains carbon atoms cyclic ring of 6 atoms.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 10

(iii) Cyclobutane is a carbocyclic compound.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 11

(iv) Furan is a hetrocyclic compound because in the cyclic chain one atom is oxygen atom.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 12

Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium

Question 35.
(a) (i) What is Scratch?
(ii) Differentiate between type 1 and type 2 diabetes mellitus
(iii) Why fossil fuels are to be conserved?
Answer:
(i) ‘Scratch’ is a software used to create animations, cartoons and games easily. Scratch, on the other hand, is a visual programming language.

(ii)
Type-1 Diabetes mellitus:

  • People with type-1 diabetes do not produce Insulin in pancreas.
  • Immune system destroys insulin producing beta cells in the pancreas.
  • Cannot be controlled without taking insulin.
  • Diagnosed in childhood
  • Not associates with excess body weight

Type-2 Diabetes mellitus:

  • People with type-2 diabetes do not respond to insulin.
  • Type 2 diabetes are Insulin Resistant.
  • Possible to treat initially without medication or treating with tablets.
  • Diagonsed over 30 years old.
  • Associated with excess body weight.

(iii) Formation of fossil fuels is a very slow process and takes very long period of time for renewal. Hence to be conserved.

[OR]

(b) (i) Write the dental formula of rabbit.
Answer:
(i) Dental formula is (I\(\frac{2}{1}\), C\(\frac{0}{0}\), PM\(\frac{3}{2}\), M\(\frac{3}{2}\)) in Rabbit, which is written as \(\frac{2033}{1023}\)
I – Incisors
PM – Premolar
C – Canines
M – Molars

(ii) With a neat labelled diagram explain the techniques involved in gene cloning.
Answer:
Gene cloning:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 3 English Medium 13
The carbon copy or more appropriately, a clone means to make a genetically exact copy of an organism.
In gene cloning, a gene or a piece of DNA fragment is inserted into a bacterial cell, where DNA will be multiplied (copied) as the cell divides.

Techniques involved in gene cloning:

  • Isolation of desired DNA fragment by using restriction enzymes.
  • Insertion of the DNA fragment into a suitable vector (plasmid) to make rDNA.
  • Transfer of rDNA into bacterial host cell (Transformation).
  • Selection and multiplication of recombinant host cell to get a clone.
  • Expression of cloned gene in host cell.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Social Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III, and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code and the corresponding answer
  5. Question numbers 15 to 28 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 29 to 42 in Part III are of five marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 43 to 44 in Part IV are of Eight marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

Part – I

Answer all the questions. Choose the correct answer [14 × 1 = 14]

Question 1.
Which country after the World War I took to a policy of isolations?
(a) Britain
(b) France
(c) Germany
(d) USA
Answer:
(a) Britain

Question 2.
Name the president who made amendment to Monroe Doctrine to justify American intervention in the affairs of Latin America.
(a) Theodore Roosevelt
(b) Truman
(c) Eisenhower
(d) Woodrow Wilson
Answer:
(a) Theodore Roosevelt

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 3.
Who became the Chairman of the PLO’s Executive Committee in 1969?
(a) 1975
(b) 1976
(c) 1973
(d) 1974
Answer:
(b) 1976

Question 4.
When did the Partition of Bengal come into effect?
(a) 19 June 1905
(b) 18 July 1906
(c) 19 August 1907
(d) 16 October 1905
Answer:
(d) 16 October 1905

Question 5.
On 8th January 1933 which day was observed ………………….
(a) Temple Entry Day
(b) Day of Deliverance
(c) Direct Action Day
(d) Independence Day
Answer:
(a) Temple Entry Day

Question 6.
Deccan Plateau covers an area of about …………………. sq. km.
(a) 8 lakhs
(b) 6 lakhs
(c) 5 lakhs
(d) 7 lakhs
Answer:
(d) 7 lakhs

Question 7.
…………………. is a line joining the places of equal rainfall.
(a) Isohyets
(b) Isobar
(c) Isotherm
(d) Latitudes
Answer:
(a) Isohyets

Question 8.
The state which leads in the production of coffee is ………………….
(a) West Bengal
(b) Karnataka
(c) Odisha
(d) Punjab
Answer:
(b) Karnataka

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 9.
The district which has the largest forest cover in Tamil Nadu is ………………….
(a) Dharmapuri
(b) Vellore
(c) Dindugal
(d) Erode
Answer:
(a) Dharmapuri

Question 10.
…………………. Plains are formed by the older alluviums.
(a) Bhabar
(b) Tarai
(c) Bhangar
(d) Khadar
Answer:
(c) Bhangar

Question 11.
The Directive Principles can be classified into ………………….
(a) Liberal and Communist principles
(b) Socialist and Communist principles
(c) Liberal, Gandhian and Communist principles
(d) Socialist, Gandhian and Liberal principles
Answer:
(d) Socialist, Gandhian and Liberal principles

Question 12.
Non-Alliance means ………………….
(a) being neutral
(b) freedom to decide on issues independently
(e) demi I itari sat ion
(d) None of the above
Answer:
(b) freedom to decide on issues independently

Question 13.
Tamil Nadu Health System Projects has launched …………………. service at free of cost.
(a) 106 ambulance
(b) 108 ambulance
(c) 107 ambulance
(d) 105 ambulance
Answer:
(b) 108 ambulance

Question 14.
India economy is ………………….
(a) Developing Economy
(b) Emerging Economy
(c) Dual Economy
(d) All the above
Answer:
(d) All the above

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Part – II

Answer any 10 questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
What was the impact of Swami Vivekananda’s activist ideology?
Answer:

  • Vivekananda’s activist ideology related to the desire for political change among many ‘ western eductated young Bengalis.
  • Many of the youths, who were involved in the militant nationalist struggle during the Swadeshi Movement, following the Partition of Bengal, were inspired by Vivekananda.

Question 16.
What are the objectives of IMF?
Answer:
The objectives of the IMF are to:

  • Foster global monetary cooperation,
  • Secure financial stability,
  • Facilitate international trade,
  • Promote high employment and sustainable economic growth, and
  • Reduce poverty around the world.

Question 17.
What was the bone of contention between the Company and Kattabomman?
Answer:
The company appointed its collectors to collect taxes from all the palayams. The collectors humiliated the Palayakkarars and adopted force to collect the taxes. This was the bone of contention between the English and Kattabomman.

Question 18.
Describe the Jallianwala Bagh Massacre.
Answer:
1. On 13 April 1919, a public meeting was organised at Jallianwala Bagh in Amritsar in defiance of the Rowlatt Act. As it happened to be Baisaki Day, thousands of villagers had gathered there to enjoy the day together.

2. General Reginald Dyer, on hearing the assemblage, surrounded the place with his troops and an armoured vehicle. He blocked the only entrance to the park and ordered his troops to fire without any warning.

3. The firing continued for ten minutes in which about 370 were killed and more than thousand injured. However, an unofficial estimates put the death toll at more than thousand. The Jallianwala Bagh massacre is a big scar on the British Indian history.

Question 19.
What is meant by ‘normal lapse rate’?
Answer:
Temperature decreases at the rate of 6.5°C for every 1000 metres of ascent. It is called normal lapse rate.

Question 20.
Define soil.
Answer:
Soil is the uppermost layer of the land surface, usually composed of minerals, organic matter, living organisms, air and water. Its formation is mainly related to the parent rock material, surface relief, climate and natural vegetation.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 21.
Mention the major areas of Jute production in India.
Answer:
West Bengal, Andhra pradesh, Bihar, Uttar Pradesh, Assam, Chattisgarh, Odisha are the major jute producing area.

Question 22.
What are the classical languages in India?
Answer:
There are six classical languages namely – Tamil, Sanskrit, Telugu, Kannada, Malayalam and Odia.

Question 23.
Write a short note on Strategic partnership Agreement (SPA).
Answer:
Indo-Afghan relation was strengthened by the Strategic Partnership Agreement (SPA). SPA provides assistance to re-build Afghan’s infrastructure, institutions, agriculture, water, education, health and providing duty-free access to the Indian market.

Question 24.
What is Fair trade ?
Answer:

  • Fair trade is an industrial arrangement designed to help producers in developing countries achieve better trading conditions.
  • Fair trade is about better prices, decent working conditions and fair terms of trade for farmers and workers.

Question 25.
Name the sectors contribute to the GDP with example.
Answer:
Name of the sectors are :

  • Primary sector
  • Secondary sector and
  • Tertiary sector.

Question 26.
Write any five principles of Fair Trade Practices.
Answer:
Five principles of Fair trade practices:

  • Creating opportunities for economically disadvantaged producers.
  • Transforming and accountability.
  • Fair trading practices and payment of fair price.
  • Ensuring no child labour and forced labour.
  • Respect for the environment.

Question 27.
What is Entrepreneurship?
Answer:
Entrepreneurship is a process of an action of an entrepreneur who undertakes to establish his entreprise. It is the ability to create and build something.

Question 28.
During cyclone, how does the Meterological department warn the fishermen?
Answer:
1. During disturbed weather over the seas, the ports likely to be affected are warned by concerned ACWCs / CWCs by advising the port authorities through port warnings to hoist appropriate Storm Warning Signals. The Department also issue “Fleet forecast” for Indian Navy.

2. Coastal Bulletins for Indian coastal areas covering up to 75 km from the coast line and sea area bulletins for the sea areas beyond 75 km. The special warnings are issued for fishermen four times a day in normal weather and every three hourly in accordance with the four stage warning in case of disturbed weather.

3. The general public, the coastal residents and fishermen are warned through state government officials and broadcast of warnings through All India Radio and National Television telecast programmes in national and regional hook up. A sytem of warning dissemination for fishermen through World Space Digital Based radio receiver is being planned.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Part – III

Answer any 10 questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 26.
Fill in the blanks:
(i) Germany joined the NATO in ………………….
(ii) The plateau which his between the Nilgiris and Dharmapuri district is ………………….
(iii) At present our foreign policy acts as a means to generate ………………….for domestic growth
and development.
(iv) ………………….foundation from USA introduced HYV in India.
(v) Agriculture of Tamil Nadu constitutes ………………….economy.
Answers:
(i) 1955
(ii) Bharamahal
(iii) inward investment
(iv) FORD
(v) 21%

Question 30.
Match the following:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 1
Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 2

Question 31.
Match the following:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 3
Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 4
Question 32.
(a) Distinguish between
(i) Western Ghats and Eastern Ghats
(ii) Tropical Evergreen forest and Deciduous forest
Answer:
(a) (i) Western Ghats and Eastern Ghats:

Western Ghats :

  1. They run parallel to the western coast and form the western boundary of the Deccan Plateau
  2. They are continuous and can be crossed only through the passes like Pal Ghat, Thai Ghat, Bhor Ghat.
  3. The highest peak of this region is Anaimudi with a height of 2,659 m.
  4. These Ghats are higher and their average height is 900 – 1600 meters
  5. They face the rain bearing winds and cause orographic rainfall.

Eastern Ghats :

  1. They run parallel to the eastern coast and form the eastern boundary of the Deccan Plateau
  2. These are more discontinuous and irregular.
  3. The highest peak of this region is Mahendragiri with a height of 1,051 m.
  4. These Ghats are lower than the western ghats with an average height of about 600 meters
  5. It is almost parallel to monsoon winds originating from the Bay of Bengal and does not cause much rainfall.

(ii) Tropical Evergreen forest and Deciduous forest:

Tropical Evergreen forest :

  1. These forests are located in regions of heavy rainfall more their 200 cm of rainfall.
  2. The trees in these forests are evergreen.
  3. These forest are very dense and composed of tall trees reaching up to the height of above 60 metres.
  4. The important trees of these forests are Rosewood, Ebony, Mahogany,and . Chinchona, Bamboo and Lianas.

Deciduous forest :

  1. These forests are located in regions of rainfall between 70-200 cm.
  2. The trees in the deciduous forests shed their leaves due to dryness during the spring and early summer.
  3. The tropical deciduous forests are commercially important as they yeild valuable timber and other forest products.
  4. The main trees of these forests are Teak, Sal, Sisam, Sandalwood, Wattle and Neem.

(b) Give reason: The great Indian desert is called Marusthali.
Answer:
The Thar desert, also known as the Great Indian desert is a large arid region in the north western part of the Indian Subcontinent that covers an area of 2,00,000 Km2 and forms a natural boundary between India and Pakistan.

Marusthali means sand-dune. It covered eastern portion of the Great Indian Thar Desert in Western Rajasthan. It extends over about 24,000 square miles north of the Luni River.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 33.
Estimate the role of Mao Tse tung in making China a communist country.
Answer:
1. Mao was greatly influenced by the ideas of Max and Lenin. He wanted to make China a communist country. So, he became active in the political activities of Hunan from the year 1912.

2.  After the death of Sun Yat-Sen in 1925, The Kuomintang was organised under the leadership of Chang Kai-Shek. Being an avowed critic of communists, Chiang removed all the important position holders in the Communist Party including Mao Tse Tung to weaken the party. However, the communists continued to influence the workers and peasants the Kuomintang represented the interests of landlords and capitalists.

3. Mao had understood that the Kuomintang grip on the towns was too strong. So, he started organising the peasantry. When the relationships between Kuomintang and Communist Party broke, a few hundred Communist led by Mao retreated into the wild mountains on the border between the provinces of Kiangsi and Hunan. The Kuomintang could not penetrate the mountains.

4.  Meanwhile, the campaign against the communists got distracted as Chiang Kai-Shek had to deal with the constant threat from Japan.

5. By 1933 Mao had gained full control of the Chinese Communist Party. In 1934, he set out on a long march with the help of about 100,000 communist army. He also got support of other communist armies.

6. By 1937, Mao had become the leader of over 10 million people. He organised workers and peasants councils in villages of Shensi and Kansu and finally got success in making China a communist country.

Question 34.
Describe the background for the formation of the Justice party and point out its contribution to the cause of social justice.
Answer:
1. It was the period of World War I. The British government thought to introduce representative institutions for Indians after the war. Fearing that such political reforms would further strengthen the political power of Brahmins, educated non-Brahmins decided to organise themselves politically.

2. So, in 1916, some prominent non-Brahmin leaders came together from South Indian Liberation Federation (SILF). It later came to be known as the Justice Party. It was a political party in the Madras Presidency of British India.

Contribution of the Justice Party to the cause-social justice:

  • The Justice Party government widened education and employment opportunities for the majority of the population and created space for them in the political sphere.
  • The Justices removed the legal hindrances restricting inter-caste marriages and broke the barriers that prevented Adi Dravidars from the use of public wells and tanks.
  • In 1921, the Madras legislature under the Justice Party government was the first to approve participators of women in the electoral politics.

Question 35.
Explain the divisions of Northern Mountains and its importance to India.
Answer:

  • The Himalayas geologically young and structurally fold mountains stretch over the northern borders of India.
  • The Himalayas represent the loftiest and one of the most rugged mountain harries of the world.
  • The mountain ranges run in a west-east direction from the India to the Brahmaputra.
  • They form an arc, which covers a distance of about 2,400 km. Their width varies from 1,400 km in Kashmir to 150 km in Arunachal Pradesh.

Division of Himalayas:

1. Himadri or Inner Himalayas:

  • The Northern most range is known as the Great or Inner Himalayas or the “Himadri”.
  • It is the most continuous range consisting of the loftiest peaks with an average height of 6,000 metres.
  • It contains all the prominent Himalayan peaks.
  • The core of this past of Himalayas is composed of granite.
  • It is perennially snow bound, and a number of glaciers descend from this range.

2. Himachal or Lesser Himalayas:

  • Below Himadri is the most rugged mountain system and is know as Himachal or lesser Himalaya.
  • They range are mainly composed of highly compressed and altered rocks.
  • The altitude varies between 3,700 and 4,500 metres and the average width is of 50 km.
  • While the Pir Pangal range forms the longest and the most important range. The Dhaula Dhar and the Mahabharat ranges are also prominent ones.
  • This range consists of the famous valley of Kashmir, the Kangra and Kullu valley in Himachal Pradesh.
  • This region is well known for its hill stations.

3. Siwaliks:
The outermost range of the Himalayas is called the Siwaliks.

  • They extend over a width of 10 – 50 km and have an altitude varying between 900 and 1100 metres.
  • These range are composed of unconsolidated sediments brought down by rivers from the main Himalayan ranges located further north.
  • These valleys are covered with thick gravel and alluvium.
  • The longitudinal valley lying between lesser Himalayas and the Siwaliks are known as Duns. Dehra Dun, Kofli Dun and Pati Dun are some of the well-known Duns.

Importance of Himalayas:

  • Himalayas blocks southwest monsoon winds and cause heavy rainfall to north India.
  • It forms a natural barrier to the Sub-continent.
  • It is the source for many perennial rivers like Indus, Ganges, Brahmaputra etc.
  • The Northern Mountains are described as paradise of tourists due to its natural beauty.
  • Many hill stations and pilgrim centres like Amarnath, Kedarnath, Badrinath and Vaishnavidevi temples situated here.
  • It provides raw materials for many forest based industries.
  • It prevents the cold winds blowing from the central Asia and protects India from severe cold.
  • Himalayas renowned for the rich biodiversity.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 36.
Explain the factors responsible for the concentration of jute industries in the hooghly region.
Most of the Jute mills of India are centralised in “Hooghly Basin” of the West Bengal. The factors responsible for the concentration of Jute industry in Hooghly Basin region are:

  • Ganga, Brahmaputra delta regions grow about 90% of India’s Jute and provides raw materials in jute mills.
  • Coal for power is obtained from Raniganj coalfields.
  • Hooghly River provides cheap water transport and soft water for washing, processing, retting and dyeing jute.
  • Humid climate is favourable for spinning and weaving.
  • Cheap labour is available from West Bengal, Bihar and Uttar Pradesh.
  • Conductive port facility of Kolkata for export and import at Kolkata.
  • In addition to West Bengal, Jute mills are also located in Andhra pradesh, Uttar pradesh, Bihar, Madhya Pradesh and Odisha.
  • India exports jute products to Australia, U.K, Thailand, U.S.A, Canada, Argentina, East Africa, New Zealand and Indonesia.

Question 37.
Mention the differences between Fundamental Rights and Directive Principles of State Policy.
Answer:
Here are the differences between Fundamental Rights and Directive Principles of State Policy.
S.No. Fundamental Rights Directive Principles of State Policy

  1. It was derived from the Constitution of the USA.
  2. These Rights cannot be taken away even by the Government.
  3. These Rights are enforceable by a Court of Law.
  4. These have legal sanctions.
  5. These rights strengthen political democracy in the country.
  6. These are natural rights.

Directive Principles of State Policy :

  1. It was drawn on the model of the Constitution of Ireland
  2. These are mere instructions to the Government.
  3. These are not enforceable in any court.
  4. These have moral and political sanctions.
  5. The implementation of these principles ensures social and economic democracy.
  6. These lead to protect human rights.

Question 38.
Elucidate why the Green Revolution was born.
Answer:

  • The Green Revolution was bom in the country paving way for self-sufficiency in food grain production.
  • Increased food grain production was made possible by an increase area cultivated with HYV of rice and wheat as also an increase in the yield of these major cereal crops.
  • Area under food grains was a little more than 98 million hectares during early 1950s. The country was producing just 54 million tonnes of food grains then with an average yield of food grains of 547 kg per hectare.
  • The food situation has steadily improved over a period of 65 years. Area under food grain ‘ cultivation has grown to 122 million hectares, with an increase of five-fold increase in
    food grain production.
  • Yield of food grains has increased four-fold between the time of independence and at present.

Question 39.
Discuss the core determinants of India’s foreign policy?
Answer:
Basic Determinants of a Foreign Policy:

  • Geographical position and size of territory
  • Nation’s history, traditions and philosophical basis
  • Natural resources
  • The compulsion of economic development
  • Political stability and structure of government ‘
  • The necessity of peace, disarmament and non-proliferation of nuclear weapons
  • Military strength
  • International milieu

Question 40.
Describe the powers and functions of the High Court.
Answer:
The powers and functions of the High Court:

  • The High Court enjoys original jurisdiction in matters of admiralty, probate, matrimonial and contempt of court.
  • It hears appeals in both civil and criminal cases against the decisions of the subordinate courts and can review their judgments.
  • It can issue writs such as habeas corpus, mandamus, prohibition, quo warranto and certiorari not only for the enforcement of the Fundamental Rights but also for other purposes.
  • It has the power of supervision over all courts and tribunals functioning in its territorial jurisdiction (except military courts or tribunals).
  • It controls and supervises the working of the lower courts and maintains records of its proceedings and decisions.

Question 41.
Draw a time line for the following:
Write any five important events between 1828-1875
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 5

Question 42.
Mark the following places on the world map.
(i) San Fransico
(ii) Hawai Island
(iii) Hiroshima
(iv) Moscow
(v) Nagasaki
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 6

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Part – IV

Answer both questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Imperialism
(i) What do you know of monopoly capitalism?
(ii) How did Japan emerge as an imperial power?
(iii) Why did the industrial countries need colonies in the nineteenth century?
(iv) What were the contrasts capitalism produced?
Answer:
(a) Imperialism
(i) Monopoly capitalism is a capitalist system typified by tread monopolies in the hands of a few people. After 1870, the capitalism of free competition (based on the principle of free trade without any control or regulation by the state) became the capitalism of monopolies.

(ii) Japan took to Western education and machinery with a modem army and navy had emerged as an advanced industrialised power. It also followed the imperialistic aggression policy of the European powers faithfully. It surprised the world by giving a crushing defeat to China in the Sino-Japanese War during the period of 1894-95. Japan also defeated Russia in Russo- Japanese War in 1904 and got back Port Arthur from it. In this way it emerged as an imperial power.

(iii) An ever-growing demand for markets and raw materials made the industrial countries hungry for colonies in the nineteenth century.

(iv) Capitalism produced huge contrasts. Those contrasts were: extreme poverty and extreme wealth, slum and skyscraper, empire-state and dependent exploited colony.

(b) Non-Aligned Movement (NAM)
(i) When and where was the first conference on Non-Aligned Movement held?
(ii) Who were the prominent personalities present in the first conference?
(iii) What were the objectives of NAM?
(iv) List out any two basic principles of Non-Alignment Movement enunciated in the Belgrade Conference.
Answer:
(b) Non-Aligned Movement (NAM)
(i) The first conference on NAM was held at Belgrade in 1961.
(ii) The prominent personalities present in the first conference were Tito (Yugoslavia), Nasser (Egypt), Nehru (India), Nkrumah (Ghana) and Sukarno (Indonesia).
(iii) To fight all forms of colonialism and imperialism.
(iv) Two basic principles of NAM eximiated in the Belgrade conference were:

  • peaceful cooperation, commitment to peace and security
  • no military alliance with any super power.

[OR]

(c) Non-Brahmin Movement
(i) Why was the South Indian Liberal Federation formed?
(ii) What is the Non-Brahmin Manifesto?
(iii) Why did EVR join the Non-Brahmin Movement?
(iv) What do you know about anti-Hindi agitation?
Answer:
(c) Non-Brahmin Movement
(i) The South Indian Liberal Federation was formed to promote the interests of non-Brahmins.

(ii) The Non-Brahmin Manifesto had objectives such as reservation of jobs for non-Brahmins in government service and seats in representative bodies. It opposed the Home Rule Movement and criticised Congress as a party of Brahmins.

(iii) EVR joined the non-Brahmin movement because he felt the Congress was promoting the
interests of Brahmins alone.

(iv) A massive campaign was led by EVR against the introduction of Hindi as a compulsory subject in schools. The anti-Hindi agitation was popular because Hindi was considered a form of Aryan and North Indian imposition. EVR organised an anti-Hindi conference. More than 1200 protesters were arrested at a rally. The subject was later removed after protests.

(d) Maraimalai Adigal
(i) Name the Sangam texts for which Maraimalai Adigal wrote commentaries.
(ii) Name the Journal where he worked as a young man.
(iii) Why did he oppose imposition of Hindi?
(iv) Who were the key influences in Maraimalai Adigal’s life?
Answer:
(d) Maraimalai Adigal
(i) Pattinappalai and Mullaipattu
(ii) Siddhanta Deepika
(iii) Adigal promoted the use of pure Tamil words and removal of the Sanskrit influences from Tamil language. He painted out that Tamil language would suffer with the introduction of Hindi.
(iv) His teachers P. Sundaram Pillai and Somasundara Nayagar were the key influences in Maraimalai Adigal’s life.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 44.
Mark the following places on the given outline map of India.
(i) Eastern Ghats
(ii) Gulf of Mannar
(iii) Sundarban
(iv) Desert soil region
(v) Mumbai
(vi) Chennai to Kolkata Air route
(vii) Goa
(viii) River Ganga
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 7

[OR]

Mark the following places on the given outline map of Tamil Nadu:
(i) Tuticorin
(ii) Salt region
(iii) Raghi growing area
(iv) Gomukhi dam
(v) Vaigai river
(vi) Kanniyakumari
(vii) One international airport
(viii) One major sea port
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium – 8

Map for Q. 42
(i) San Francisco
(ii) Hawai Island
(iii) Hiroshima
(iv) Moscow
(v) Nagasaki
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 6

Map for Q. 44
(i) Eastern Ghats
(ii) GulfofMannar
(iii) Sundarban
(iv) Desert soil region
(v) Mumbai
(vi) Chennai to Kolkata Air route
(vii) Goa
(viii) River Ganga
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 7

Map for Q. 44
(I) Tuticorin
(ii) Salt region
(iii) Ragi growing area
(iv) Gomukhi dam
(y) Vaigai river
(vi) Kanniyakumari
(vii) One international airport
(viii) One major sea port
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium - 8

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium Pdf, Samacheer Kalvi 10th Social Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III, and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code and the corresponding answer
  5. Question numbers 15 to 28 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 29 to 42 in Part III are of five marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 43 to 44 in Part IV are of Eight marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

Part – I

Answer all the questions. Choose the correct answer [14 × 1 = 14]

Question 1.
What were the three major empires shattered by the end of First World War?
(a) Germany, Austria-Hungary, and the Ottomans
(b) Germany, Austria-Hungary, and Russia
(c) Spain, Portugal and Italy
(d) Germany, Austria-Hungary, Italy
Answer:
(a) Germany, Austria-Hungary, and the Ottomans

Question 2.
Which quickened the-process of liberation in South America?
(a) Support of US
(b) Napoleonic Invasion
(c) Simon Bolivar’s involvement
(d) French Revolution
Answer:
(d) French Revolution

Question 3.
When was people’s Political consultative conference held in China?
(a) September 1959
(b) September 1948
(c) September 1954
(d) September 1949
Answer:
(d) September 1949

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 4.
Who were driven out of their homeland during the process of creation of zamins under permanent Settlement?
(a) Santhals
(b) Titu Mir
(c) Munda
(d) Kol.
Answer:
(a) Santhals

Question 5.
Which among the following was declared as ‘Independence Day’?
(a) 26th January 1930
(b) 26th December 1929
(c) 16th June 1946
(d) 15th January 1947
Answer:
(d) 15th January 1947

Question 6.
The extent of Himalayas in the east-west is about …………………
(a) 2,500 km
(b) 2,400 km
(c) 800 km
(d) 2,200 km
Answer:
(a) 2,500 km

Question 7.
Western disturbances cause rainfall in …………………
(a) Tamil Nadu
(b) Kerala
(c) Punjab
(d) Madhya Predesh
Answer:
(c) Punjab

Question 8.
The soil formed by the river are …………………
(a) Red soils
(b) Black soils
(c) Desert soils
(d) Alluvial soils
Answer:
(d) Alluvial soils

Question 9.
Retreating monsoon wind pick up moisture from …………………
(a) Arabian sea
(b) Bay of Bengal
(c) Indian ocean
(d) Timor sea
Answer:
(b) Bay of Bengal

Question 10.
Second staple food of the people of Tamil Nadu is …………………
(a) Pulses
(b) Millets
(c) Oilseeds
(d) Rice
Answer:
(b) Millets

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 11.
Which one of the following rights was described by Dr. B. R. Ambedkar as the heart and soul of the constitution?
(a) Right to freedom of religion
(b) Right to equality
(c) Right to constitutional remedies
(d) Right to property
Answer:
(c) Right to constitutional remedies

Question 12.
Which of the following country is not the founder member of NAM?
(a) Yugoslavia
(b) Indonesia
(c) Egypt
(d) Pakistan
Answer:
(d) Pakistan

Question 13.
………………… is the process of providing or obtaining the food necessary for health and growth.
(a) Health
(b) Nutrition
(c) Sanitation
(d) Security
Answer:
(b) Nutrition

Question 14.
Gross value added at current prices for services sector is estimated at lakh crore
in 2018-19.
(a) 91.06
(b) 92.26
(c) 80.07
(d) 98.29
Answer:
(b) 92.26

Part – II

Answer any 10 questions. Question No. 28 is compulsory. [10 x 2 = 20]

Question 15.
Access the role of Ayyankali in fighting for the cause of “Untouchables”.
Answer:
(i) Ayyankali brought tremendous social changes especially in caste structure. The discrimination he faced as a child turned him into a leader of an anti-caste movement and who later fought for basic rights including access to public spaces and entry to schools.

(ii) Ayyankali challenged many caste conventions such as clothing style, he wore clothes associated with upper castes that were prohibited for lower castes.

Question 16.
How did Hitler get the support from the people of germany?
Answer:
(i) Hitler was well aware of the discontent among the Germans. He used his oratorical skills to sway the common people and promised them to return the glorious military past of Germany. He founded the National Socialist Party, generally known as “the Nazis”.

(ii) The fundamental platform on which Hitler built his support was the notion of the racial superiority of the Germans as a pure, ‘Aryan’ race and a deep-seated hatred of the Jews. Hitler came to power in 1933 and ruled Germany for twelve long years.

Question 17.
Why was Heron dismissed from service?
Answer:

  • Colonel Heron was urged to deal with Puli Thevar as he continued to defy the authority of the company. Puli Thevar wielded much influence over the western Palayakkarars.
  • Heron had to abandon the plan for want of cannon and of supplies and pay to soldiers. He retired to Madurai. He was then recalled and dismissed from service.

Question 18.
Why did Gandhi withdraw the Non- cooperation Movement?
Answer:

  • The Non-cooperation Movement started in 1920. It soon became a nation-wide movement because it got support of the people across the country. But in February 1922, a violent incident occurred at Chauri Chaura, a village near Gorakhpur in Uttar Pradesh.
  • In this incident a procession of nationalists provoked by the police turned violent. The police finding themselves outnumbered shut themselves inside the police station.
  • The mob burnt the police station in which 22 policemen lost their lives. The incident hurt Gandhiji too much and he immediately withdrew the movement.

Question 19.
What are “Jet Stream”?
Answer:
In the upper layers of the atmosphere, there are strong westerly winds concentrated in a relatively narrow and shallow streams known as “Jet streams” They cause heavy rainfall in North-west India.

Question 20.
State any two characteristics of block cotton soil.
Answer:

  • This soil is rich in calcium carbonate, magnesium, potash, lime and iron but deficient in phosphorous. It is clayey and impermeable which has great capacity to retain moisture for a long time.
  • It becomes sticky when wet but develops cracks during dry summer season. The soil is suited for dry farming due to its high moisture retentivity.

Question 21.
Name the tributaries of river Thamirabarani.
Answer:
Karaiyar, Servalar, Manimuthar, Gadananathi, Pachaiyar, Chittar and Ramanathi are its main tributaries.

Question 22.
List out the three leads of the relations between the centre and the states.
Answer:
There are –

  • Legislative relations
  • Administrative relations
  • Financial relations.

Question 23.
What do you know about kaladan Multi-Model Transit Transport?
Answer:
(i) India is building the Kaladan Multi-Model Transit Transport, a road-river-port cargo transport project to link Kolkata to Sittwe in Myanmar.

(ii) A project aiming to connect Kolkata with Ho Chi Minh City on the South Sea for the formation of an economic zone will have a road pass through Myanmar, Cambodia and Vietnam and work on the first phase connecting Guwahati with Mandalay is currently underway.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 24.
What is national emergency?
Answer:
National emergency is a situation beyond the ordinary. The President declares this emergency if he is satisfied that India’s security is threatened due to war, external aggression or armed rebellion or if there is an imminent danger or threat.

Question 25.
How the state of Jammu and Kashmir differ from the other states of India.
Answer:

  • The Constitution of India grants special status to Jammu and Kashmir among Indian States, and it is the only state in India to have a separate Constitution.
  • The Directive Principles of the State Policy and Fundamental Duties of the Constitution are not applicable to the State of Jammu and Kashmir.
  • Rights to property, which is denied as a Fundamental Right to rest of India is still guaranteed in Jammu and Kashmir.

Question 26.
what are the factors supporting to develop the Indian economy?
Answer:
Factors supporting to develop the Indian economy :

  • A fast growing population of working age.
  • India has a strong legal system and many English language speakers
  • Wage costs are low here.
  • India’s economy has successfully developed highly advanced and attractive clusters of business in the technology space.

Question 27.
What is the main objective of WTO?
Answer:
The main objective of WTO is to set and enforce rules for international trade and to provide a forum for negotiating and monitoring further trade liberalisations.

Question 28.
Name the important multipurpose projects of Tamil Nadu.
Answer:
Mettur Dam, Amaravathi Dam, Papanasam Dam, Bhavani Sagar Dam.

Part – III

Answer any 10 questions. Question No. 42 is compulsory. [10 x 5 = 50]

Question 29.
Fill in the blanks:
(i) ………………… treaty signed on February 7, 1922 created the EU.
(ii) The riverine island of Srirangam is located between …………………and ………………… branches of Cauvery.
(iii) …………………was India’s policy in the face of the bipolar order of the cold war.
(iv) In the year ………………… National Food Security Act was passed by the Indian Parliament.
(v) Tamil Nadu ranks …………………in India with a share of over 20% in total road projects under
operation in the Public Private Partnership (PPP).
Answers
(i) The Maastricht
(ii) Northern, Southern
(iii) Non-Alignment
(iv) 2013
(v) Second

Question 30.
Match the following:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 1
Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 2
Question 31.
Match the following:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 3
Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 4

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 32.
(a) Distinguish between
(i) North East Monsoon and South West Monsoon
(ii) Rabi and Kharif Crop Season
Answer:
(a) (i) North East Monsoon and South East Monsoon:
North East Monsoon :

  1. North east monsoon occurs between October and December.
  2. It is Winter Monsoon.
  3. The coromandal coast of Tamil Nadu gets, heavy rainfall from north east monsoon.

South West Monsoon :

  1. Southwest Monsoon occurs between June to September.
  2. It is Summer Monsoon.
  3. The districts of Nilgiris, Kanyakumari, Salem, Coimbatore and Erode get rainfall.

(ii) Rabi and Kharif crop season:
Rabi Crop Season :

  1. Rabi crops are sown in the beginning of the winter (i.e.) in November.
  2. The crops are harvested in the beginning of summer (i.e) in March. days of November.
  3. Major crops are wheat, tobacco, mustard, pulses, linseed and grains.

Kharif Crop Season :

  1. Kharif crops are sown in the beginning of monsoon (i.e.) in June.
  2. The crops are harvested in the early
  3. Major crops are paddy, maize, cotton, millets, jute and sugarcane.

(b) Give reason: Alluvial soil is fertile
Answer:
Alluvial soil are formed by the deposition of silt by the rivers. Alluvial soils are generally fertile as they are rich in minerals such as lime, potassium, magnesium, nitrogen and phosphoric acid. It is deficient in nitrogen and humus. It is porous and loamy.

Question 33.
Discuss the main causes of the First World War.
Answer:
The causes of the First World War are given below:

  • Formation of European alliances and counter alliances
  • Emergence of violent forms of nationalism in countries like England, France and Germany
  • Aggressive attitude of the German Emperor Kaiser Wilhelm II
  • Hostility of France towards Germany
  • Opportunity for imperial power politics in the Balkans
  • The Balkans wars
  • Immediate cause which included the assassination of Archduke Franz Ferdinand,nephew and heir to Franz Joseph, Emperor of Austria-Hungary, by Princip, a Bosnian Serb, on 28 June 1914.

Question 34.
Discuss the causes and consequences of the Revolt of 1857?
Answer:
The Great Rebellion of 1857 is a unique example of resistance to the British authorities, in India. There were several reasons that triggered the Revolt:

(i) The annexation policy of British India created dissatisfaction among the native rulers. The British claimed themselves as paramount, exercising supreme authority. New territories were annexed on the grounds that the native rulers were corrupt, and inept.

(ii) The British annexed several territories such as Satara, Sambalpur, parts of Punjab, Jhansi and Nagpur through the Doctrine of Lapse. This also angered many Indian rulers.

(iii) Indian sepoys were upset with discrimination in salary and promotion. They were paid much less than their European counterparts. They felt humiliated and racially abused by their seniors.

Consequences:

  • India was pronounced as one of the many crown colonies to be directly governed by the Parliament. This resulted in the transfer of power from the East India company to the British crown.
  • Queen Victoria proclaimed to the Indian people that the British government would not interfere in traditional institutions and religious matters. It was promised that Indians would be absorbed in government services.
  • There came significant changes in the Indian army. The number of Indians was reduced. Indians were restrained from holding important ranks and position.
  • It was also decided that instead of recruiting soldiers from Rajputs, Brahmins and North Indian Muslims, more soldiers would be recruited from the Gorkhas, Sikhs and Pathans.

Question 35.
Bring out the characteristics of Intensive and Plantation farming.
Answer:
Intensive farming:

  • It involves various types of agriculture with higher levels of input, such as capital and labour, per unit of agricultural land area.
  • It aims to maximize yields from available land through various means, such as heavy use of pesticides and chemical fertilizers. ,
  • Intensive farming is practiced in Punjab, parts of Rajasthan, Uttar Pradesh, and Madhya Pradesh in India.

Plantation farming:

  • It is a single crop farming, practised on a large area.
  • Crops are mainly grown for the market.
  • It is both labour intensive and capital intensive.
  • It has an interface of agriculture and industry.
  • Developed network of transport and communication connecting the plantation processing industries and markets play an important role in the development of plants. Example- tea, coffee, rubber, sugarcane, etc.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 36.
Write an account on river Cauvery.
Answer:

  • The main river of Tamil Nadu is Cauvery which originates at Talacauvery in the Brahmragiri hills of Kodagu (Coorg) district of Karnataka in the Western Ghats.
  • About 416 km of its course falls in Tamil Nadu. It serves as the boundary between Karnataka
    and Tamil Nadu for a distance of 64 km. A tributary called Bhavani joins Cauvery on the right bank about 45 km from the Mettur Reservoir.
  • Thereafter, it takes easterly course to enter into the plains of Tamil Nadu. Cauvery and its distributaries in its lower course drain the districts of Nagapattinam, Thanjavur, Thivarur and Thiruchirapalli.
  • The Cauvery, Kollidam and the vellar jointly drain central part of the Tamil Nadu. The head of the Cauvery delta is near the islands of Srirangam. Kollidam branches off from cauvery at Grand Anaicut, also called as Kallanai was built across the river Cauvery.
  • After Kallanai, the river breaks into a large number of distributaries and forms a network all over the delta. The network of tributaries within the delta of cauvery in the coast is called as the ‘Garden of Southern India’.
  • It merges into Bay of Bengal to the south of Cuddalore. Cauvery along with its tributaries Bhavani, Noyyal, Mayar and Amaravathi is the most important source of canal irrigation.

Question 37.
Write briefly on the Right to Constitutional Remedies.
Answer:
(i) Our Constitution guarantees six Fundamental Rights to its citizens. It safeguards all these rights by granting us the Right to Constitutional Remedies. It is possible that the Government or private bodies may violate one of our Fundamental Rights.

(ii) Right to Constitutional Remedies protects us from such violations. It allows us to file a case against the Government or private bodies in the High Courts of the States and the Supreme Court of the India.

(iii) Both the Supreme Court and High Courts are empowered to issue five kinds of writs of habeas corpus, mandamus, prohibition two warrants and certiorari to protect the Fundamental Rights of the citizens. That is why the Supreme Court is called the “Guardian of the Constitutions”.

Question 38.
Briefly discuss the Functions of the State Legislature.
Answer:
The powers and functions of the State Legislature are almost the same as that of the Parliament.

  • The State Legislature can pass laws on all subjects mentioned in the State List as per the constitutions. It can also pass laws on concurrent subjects.
  • The Legislature controls the finances of the State. The Lower House enjoys greater power than the Upper House in money matters. Money Bills can be introduced only in the Lower House of the Assembly.
  • The Legislature controls the Executive. The council of Ministers is responsible to the Assembly. The ministers have to answer questions asked by the members of the Legislature.
  • The Council cannot vote for grants.
  • No new tax can be levied without the sanction and permission of the Assembly.

Question 39.
Briefly explain the evolution of M[NC and its advantages and disadvantages.
Answer:
Multinational companies first started their activities in the extractive industries and controlled raw materials in the host countries during 1920s and then entered the manufacturing and service sectors after 1950s. Most of the MNCs at present belong to the four major exporting countries i.e., USA, UK, France and Germany. However, the largest is America. In 1971, the American Corporations held 52% of the total world stock of foreign direct inverstment.
Great Britain held 14.5% followed by France 5% and Federal Republic of Germany 4.4% and Japan 2.7%.

Advantages of MNCs:

  • MNCs produce the same quality of goods at lower cost and without transaction cost.
  • They reduce prices and increase the purchasing power of consumers world wide.
  • They are able to take advantage of tax variation.
  • They spur job growth in the local economy.

Disdvantages of MNCs:

(i) They have led to the downfall of smaller, local business.

(ii) With more companies transferring offices and centering operations in other countries, jobs for the people living in developed countries are threatened.

(iii) MNCs often invest in developing countries where they can take advantage of cheaper labour. Some MNCs prefer to put up branches in these parts of the world where there are no stringent policies in labour and where people need jobs because these MNCs can demand for cheaper labour and lesser healthcare benefits.

Question 40.
Write a note on history of industrialisation in Tamil Nadu.
Answer:

Industrialisation in the Colonial Period:

  • The introduction of cotton cultivation in western and southern Tamil Nadu by the colonial government led to the emergence of a large-scale textile sector in these parts, which involved ginning, pressing, spinning and weaving operations.
  • Introduction of railways also expanded the market for cotton yam and helped develop the sector.
  • There was increase in trade during this period which led to industrial development. The two active ports in the region were Chennai and Tuticorin.
  • In Western Tamil Nadu, the emergence of textiles industries also led to demand and starting of textile machinery industry in the region.

Post-Independence to early 1990s:

  • After independence, several large enterprises were set up by both the central and state governments.
  • The Integral Coach Factory in Chennai made railway coaches and the Bharat Heavy Electricals Limited (BHEL) in Tiruchirapalli manufactured boilers and turbines.
  • Ashok Motors and Standard Motors together helped form an automobile cluster in the Chennai region.
  • The 1970s and 1980s saw the setting up of emergence of powerloom weaving clusters in the Coimbatore region as well as expansion of cotton knitwear cluster in Tiruppur and home furnishings cluster in Karur.
  • The Hosur industrial cluster is a successful case of how such policy efforts to promote industrial estates helped develop industries in a backward region.

Industrialisation in Tamil Nadu – Liberalization Phase:

  • The final phase of industrialisation is the post-reforms period since the early 1990s.
  • Because of trade liberalisation measures, exports of textiles, home furnishings and leather products began to grow rapidly.
  • Efforts to attract investments led to entry of leading multinational firms (MNCs) into the state, especially in the automobile sector.
  • Chennai region also emerged as a hub for electronics industry with MNCs such as Nokia, Foxconn, Samsung and Flextronics opening plants on the city’s outskirts.
  • A significant share of these investments has come up in special economic zones in the districts bordering Chennai.
  • The major industries are automobiles, autocomponents, light and heavy engineering, machinery, cotton, etc.
  • This diffused process of industrialisation and corresponding urbanisation has paved the way for better rural-urban linkages in Tamil Nadu than in most other states.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 41.
Draw a time line for the following:
Write any five important events between 1905-1920
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 5

Question 42.
Mark the following places on the world map.
(i) Portugal
(ii) Spain
(iii) Morocco
(iv) France
(v) Great Britian
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 6

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Part – IV

Answer both questions. [2 x 8 = 16]

Question 43.
(a) Battle of Stalingrad
(i) When did Germany attack Stalingrad?
(ii) What were the main manufactures of Stalingrad?
(iii) What was the name of the plan formulated by Hitler to attack Stalingrad?
(iv) What is the significance of the Battle of Stalingrad?
Answer:
(a) Battle of Stalingrad:
(i) In August 1942, Germany attacked Stalingrad.
(ii) The main manufactures of Stalingrad were armaments and tractors.
(iii) Fall Blau or Operation Blue
(iv) The people of Russia were grateful for Stalin’s conduct of the war. They regarded him as ‘a prodigy of patience, tenacity and vigilance, almost omnipresent, almost omniscient.’

(b) Political developments in South America.
(i) By which year did the whole of South America become free from European domination?
(ii) How many republics came into being from the Central America?
(iii) In which year was Cuba occupied by the USA?
(iv) What made oligarchic regimes unpopular in South America?
Answer:
(b) Political developments in South America:
(i) By 1830 the whole of South America was free from European domination.
(ii) Five republics came into being from the Central America.
(iii) The USA occupied Cuba in the year 1898.
(iv) Economic growth, urbanisation and industrial growth in countries like Argentina, Chile, Brazil, and Mexico helped consolidate the hold of middle class and the emergence of militant working class oganisations. At the same time American power and wealth came to dominate Central and South America. These factors made olgarchic regimes unpopular in South America.

[OR]

(c) Gandhi and Mass nationalism.
(i) Which incident is considered a turning point in the life of Gandhi?
(ii) Name the works that influenced Gandhi?
(iii) How did Gandhi use satyagraha as a strategy in South Africa?
(iv) What do you know about the Champaran Satyagraha?
Answer:
(c) Gandhi and Mass nationalism:
(i) On his journey from Durban to Pretoria, at the Pietermaritzburg railway station, he was physically thrown out of the first class compartment in which he was travelling despite having a first class ticket. This incident is considered a turning point in the life of Gandhi.
(ii) Tolstoy’s The Kingdom of God is Within You, Ruskin’s Unto This Last and Thoreau’s Civil Disobedience.
(iii) Gandhi developed satyagraha (truth-force) as a strategy, in which campaigners went on peaceful marches and presented themselves for arrest in protest against unjust laws.
(iv) The Champaran Satyagraha of 1916 was the first satyagraha movement inspired by Gandhi. It was a farmer’s uprising that took place in Champaran district of Bihar, India during the British colonial period.

(d) Periyar E. V. R.
(i) When did Periyar found Dravidar Kazhagam?
(ii) What were the Newspapers and Journals run by Periyar?
(iii) Why was Periyar known as Vaikom hero?
(iv) Which was the most important work of Periyar?
Answer:
(d) Periyar E. V. R.
(i) Periyar found Dravidar Kazhagam in 1944.
(ii) The newspapers and journals started by Periyar were – Kudi Arasu, Revolt, Puratchi, Paguththarivu and Viduthalai.
(iii) In Vaikom, people protested against the practice of no access to the temples by the lower caste people. After the local leaders were arrested Periyar led the Temple Entry Movement and was imprisoned. So, people hailed him as Vaikom Virar or hero of Vaikom.
(iv) Right from 1929, when the Self-respect Conferences began to voice its concern over the plight of women, Periyar had been emphasising women’s right to divorce and property. Periyar’s most important work on this subject is Why the Woman is Enslaved.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium

Question 44.
Mark the following places on the given outline map of India.
(i) Himalayas
(ii) Nilgiris
(iii) Narmada
(iv) Lakshadweep
(v) Deccan Plateau
(vi) Southwest Monsoon
(vii) Paddy growing area
(viii) Chennai to Mumbai air route
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 7

[OR]

Mark the following places are given outline map of Tamil Nadu:
(i) Coromandel coast
(ii) Paddy growing area
(iii) Nilgiri Hills
(iv) Nagapattinam
(v) Meenambakkam
(vi) Thamirabarani
(vii) Magnesite region (any one place)
(viii) Vaigai Dam
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 8

Map for Q. 42
(i) Portugal
(ii) Spain
(iii) Morocco
(iv) France
(v) Great Britain
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 9

Map for Q. 44
(i) Himalayas
(ii) Nilgiris
(if) Narmada
(iv) Lakshadwccp
(v) Deccan Plateau
(vi) Southwest Monsoon
(vii) Paddy growing area
(viii) Chennai to Mumbai air route
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 10

Map for Q. 44
(i) Coromandel coast
(ii) Paddy growing area
(iii) Nilgiri Hills
(iv) Nagapattinam
(v) Meenambakkam
(vi) Thamirabarani
(vii) Magnesite region (any one place)
(viii) Vaigai Dam
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3 English Medium - 11