Students can Download 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.2 பெருமாள் திருமொழி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 1.
தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
தமிழர் மருத்துவம்:

  • தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும்.
  • தாவரம், விலங்கு, உலோகம் அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.
  • தமிழர்கள் நோயைச் சரிப்படுத்த இயற்கை தரும் இலை, காய், கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர்.
  • வாதம், பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில் இருந்தால் நோய் நம்மை நாடாது.
  • தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை . குணமாவதற்குச் சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது.

நவீன மருத்துவம்:

  • அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர் ஹிப்போகிரேடஸ்.
  • நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் உண்டு.
  • நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன. நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும்.
  • உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Quesiton 1.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

குறுவினா

Question 1.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
“மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
Answer:
உடலில் ஏற்பட்ட புண் :

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம் :

வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்குத் துன்பத்தைத் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

அறுத்து – வினையெச்சம்
மிளாத்துயர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
ஆளா உனதருளே – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி - 1

பலவுள் தெரிக

Question 1.
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
Answer:
அ) 105

Question 2.
வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.
அ) கேரள, பாலக்காடு
ஆ) கர்நாடக, மாண்டியா
இ) ஆந்திரா, நெல்லூர்
ஈ) கேரள, திருவனந்தபுரம்
Answer:
அ) கேரள, பாலக்காடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.
அ) அன்னையாக
ஆ) காதலியாக
இ) தோழனாக
ஈ) தந்தையாக
Answer:
அ) அன்னையாக

Question 4.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.
அ) மோனை
ஆ) எதுகை
இ) உருவகம்
ஈ) அந்தாதி
Answer:
ஆ) எதுகை

Question 5.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 6.
பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..
அ) திருமங்கையாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
Answer:
ஆ) குலசேகராழ்வார்

Question 7.
குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பத்தாம்
Answer:
இ) எட்டாம்

Question 8.
‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?
அ) 681
ஆ) 691
இ) 541
ஈ) 641
Answer:
ஆ) 691

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 9.
‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்
அ) பொய்மை
ஆ) நிலையாமை
இ) விளையாட்டு
ஈ) அற்புதம்
Answer:
இ) விளையாட்டு

Question 10.
காதல் நோயாளன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 11.
மருத்துவன் போன்றவர் அ) குலசேகராழ்வார்…………………..
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 12.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்க ள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Question 13.
மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 14.
பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
ஆ) முதலாயிரம்
இ) ஐந்தாம் திருமொழி
ஈ) திருப்பாவை
Answer:
ஈ) திருப்பாவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 15.
வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஈ) மருத்துவர்

Question 16.
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.
ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.
இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.
ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.
Answer:
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

Question 17.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
அ) வாளால் – மாளாத

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 18.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
இ) மருத்துவன் – நோயாளன்)

குறுவினா

Question 1.
பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.
Answer:

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்.
  • இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இயற்றியவர் : குலசேகராழ்வார்

Question 2.
குலசேகர ஆழ்வார் குறித்து குறிப்பு வரைக.
Answer:
பெயர் – குலசேகர ஆழ்வார்
ஊர் – திருவஞ்சிக்களம் (கேரளம்)
நூல்கள் – பெருமாள் திருமொழி, முகுந்தமாலை.
புலமை – வடமொழி, தென்மொழி
காலம் – எட்டாம் நூற்றாண்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?
Answer:
குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.

Question 4.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” – மாயம் செய்தவர் யார்?
Answer:
மாயம் செய்தவர் : திருவித்துவக் கோட்டம்மா

Question 5.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் சுட்டப்படும் ‘மருத்துவன்’ மற்றும் ‘நோயாளன்’ போன்றவர் யாவர்?
Answer:

  • மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா
  • நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
குலசேகரர் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?
Answer:
மருத்துவரை நேசித்தல் :
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பார்த்தல் :
இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.