Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

11th History Guide பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ……………………… எனப்படுகிறது.
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
ஆ) வரலாற்றுக் காலம்
இ) பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
வரலாற்றின் பழமையான காலம் ……………….. ஆகும்.
அ) பழங்கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) செம்புக்காலம்
ஈ) இரும்புக்காலம்.
Answer:
அ) பழங்கற்காலம்
Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
பழங்கற்காலக் கருவிகள் முதன் முதலில் ………………. இல் அடையாளம் காணப்பட்டன.
அ) 1860
ஆ) 1863
இ) 1873
ஈ) 1883
Answer:
ஆ) 1863

Question 4.
மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் – 1, பாகோர் – 3, ஆகியவை …………………. நாகரிகம் நிலவிய இடங்கள்
அ) கீழ்ப்பழங்கற்காலம்
ஆ) இடைப்பழங்கற்காலம்
இ) மேல்பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
இ) மேல்பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மெஹர்கார் …………………… பண்பாட்டுடன் தொடர்புடையது.
அ) பழைய கற்காலப்
ஆ) புதிய கற்காலப்
இ) இடைக்கற்காலப்
ஈ) செம்புக்காலப்
Answer:
ஆ) புதிய கற்காலப்

Question 6.
…….. கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியா வுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
அ) க்யூனிபார்ம்
ஆ) ஹைரோக்ளைபிக்ஸ்
இ) தேவநாகரி
ஈ) கரோஷ்டி
Answer:
அ) க்யூனிபார்ம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
பர்சஹோம் …………………….. நிலவிய இடமாகும்
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
ஆ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப் பண்பாடு
இ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
ஈ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
Answer:
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

Question 8.
தொடக்கஹரப்பா காலகட்டம் என்பது …………………. ஆகும்.
அ) பொ .ஆ.மு.3000 – 2600
ஆ) பொ.ஆ.மு.2600-1900
இ) பொ .ஆ.மு.1900-1700
ஈ) பொ.ஆ.மு.1700-1500
Answer:
அ) பொ .ஆ.மு.3000 – 2600

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக …………………… இருந்தது.
அ) வேளாண்மை
ஆ மட்பாண்டம் செய்தல்
இ) கைவினைத்தொழில்கள்
ஈ) மீன்பிடித்தல்
Answer:
அ) வேளாண்மை

Question 10.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ………………… இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
அ) பொ .ஆ.மு. 1800
ஆ) பொ.ஆ.மு. 1900
இ) பொ .ஆ.மு.1950
ஈ) பொ .ஆ.மு. 1955
Answer:
ஆ) பொ.ஆ.மு. 1900

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் …………………….
அ) பழைய கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) இரும்புக்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) இரும்புக்காலம்

Question 2.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம் ……………………
அ) காலிபங்கன்
ஆ) லோத்தல்
இ) பனவாலி
ஈ) ரூபார்
Answer:
ஆ) லோத்தல்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர்………………………
அ) சார்லஸ் மேசன்
ஆ) அலெக்ஸாண்டர்ப்ரன்ஸ்
இ) சர்ஜான் மார்ஷல்
ஈ) அலெக்சாண்டர் கன்னிங்காம்
Answer:
இ) சர்ஜான் மார்ஷல்

Question 4.
………………… எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன் படுத்தினார்கள்.
அ) குவார்ட்சைட்
ஆ) கிரிஸ்டல்
இ) ரோரிசெர்ட்
ஈ) ஜாஸ்பர்
Answer:
இ) ரோரிசெர்ட்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மனித இனத்தின் மூதாதையர் முதலில் ………………….. தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
அ) அமெரிக்காவில்
ஆ) ஆஸ்திரேலியா
இ) இந்தியாவில்
ஈ) ஆப்பிரிக்காவில்
Answer:
ஈ) ஆப்பிரிக்காவில்

Question 6.
ஹரப்பா பண்பாட்டில் ……….. இல்லை .
அ) மாடு
ஆ) நாய்
இ) குதிரை
ஈ) செம்மறி ஆடு
Answer:
இ) குதிரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
ஹரப்பாமக்கள் ……………… அறிந்திருக்கவில்லை .
அ) செம்பை
ஆ இரும்பை
இ வெண்கலத்தை
ஈ) தங்கத்தை
Answer:
ஆ இரும்பை

Question 8.
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர் …………………. குறியீடுகளைக் கொண்டுள்ளது.
அ) 26
ஆ) 36
இ) 16
ஈ) 46
Answer:
அ) 26

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர்……….. என்று அழைக்கப் படுகிறார்கள்.
அ) நர்மதை மனிதன்
ஆ) ஹோமினின்
இ ஹோமோ சேப்பியன்ஸ்
Answer:
ஆ) ஹோமினின்

Question 10.
ஹரப்பா நாகரிகம்………………. நாகரிகமாகும்.
அ) இரும்புக்கால
ஆ) பழங்கற்கால
இ) வெண்கலக்கால
ஈ) புதிய கற்கால
Answer:
இ) வெண்கலக்கால

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 11.
உணவு உற்பத்திக்கு வழிவகுத்த காலம்
அ) பழங்கற்காலம்
ஆ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) புதிய கற்காலம்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை
  • தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.

Question 2.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answer:
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப்
பிரிக்கப்படுகிறது. அவையாவன

  1. கீழ்ப்பழங்கற்காலம்
  2. இடைப்பழங்கற்காலம்
  3. மேல் பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.
Answer:

  • தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் என்று அழைக்கப்படுகிறார்கள.
  • இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன.
  • அதிராம் பக்கத்தில் இராபர் ப்ரூஸ் ஃபூட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமினின் புதை படிவம் எங்கிருக்கிறது என்பதை அறியமுடியவில்லை .

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடு : குறிப்பு வரைக.
Answer:

  • இடைக்கால பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
  • விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
  • இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தனர்.
  • உணவுக்காக விலங்குகளையும் தாவரங் களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Answer:
ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • தொடக்ககாலஹரப்பாபொ.ஆ.மு. 3000-2600
  • முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600 – 1900
  • பிற்காலஹரப்பாபொ.ஆ.மு. 1900-1700 ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்றஹரப்பாவின் காலத்தில் இருந்தது.

Question 6.
பெருங்குளம் : சிறு குறிப்பு வரைக.
Answer:

  • மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
  • குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது .
  • இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
Answer:
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரிகம் வீழ்ச்சியுற்றது.
  • வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
  • ஆரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாயிருந்தது.
  • காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
  • இதன் காரணங்களைக் சிந்து நாகரிகமும் வீழ்ச்சியுற்றது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹோமா எரக்டஸ் : குறிப்பு வரைக.
Answer:

  • மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
  • இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
  • இவர்கள் ஹோமோ சேப்பியன்ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
  • சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
Answer:

  • இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
  • அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
  • இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.

Question 3.
இடை பழங்கற்காலம் நாகரிகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
Answer:
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் இடைபழங்கற்கால நாகரீகங்கள் பரவி இருந்தன.

Question 4.
ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுதுபோக்கு குறித்து குறிப்பு தருக.
Answer:
கலைத்திறன்:

  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  • ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மதகுரு, செம்பாலான நடனமாடும் பெண், ஹரப்பா மொகஞ்சாதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஹரப்பாவின் கலைப்படைப்புகள் ஆகும்.

பொழுதுபோக்கு :
பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்குச் சான்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

III. சுருக்கமான விடை தருக

Question 1.
அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக.
Answer:
பழங்கற்கால மக்களின் தொடக்ககால பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில்
1. அச்சூலியன் மரபு
2. சோகனியன் மரபு
என இரு மரபுகளாக பிரிக்கப்படுகின்றது.
அச்சூலியன்மரபு:

  • கை கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் மரபு.
  • தொடக்ககால, இடைக்கால, பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள் கோடரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.

சோகனியன் மரபு:

  • இன்றைய கூழாங்கல்லை செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளை கொண்ட சோகனியன் மரபு.
  • சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதைச்சார்ந்த வேலைகளுக்கான கருவி களையும் மட்டுமே கொண்டது.
  • இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடி நீர்ப் பகுதியில் நிலவிய மரபு என்பதால் இது சோகனிய மரபு எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியாவின் இடைப்பழங்கற்காலத்தின் முக்கியக்கூறுகளை எழுதுக.
Answer:

  • இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்த வெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
  • வேட்டையாடுபவர்களாகவும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.
  • சிறிய கருவிகளை பயன்படுத்தினர். கோடரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
  • கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி , குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினர்.
  • மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினர்.

Question 3.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி, ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம்பரவியிருந்தது.
  • பீகாரில் பயிஸ்ரா, குஜாரத்தில் லங்னஜ், உத்திரபிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ , சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
  • ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்,
  • தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத் தக்க பண்புகள் யாவை?
Answer:

  • இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
  • குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசித்தனர்.
  • இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தார்கள்.
  • அவர்களுக்குக் கலைதிறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்று களிலிருந்தும் அறியலாம்.
  • அவர்களின் நுண் கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
  • மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.

Question 5.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
Answer:
சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன்
ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:

  • மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
  • வடக்கில்ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
  • கிழக்கில் ஆலம்புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
  • தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்) என சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 6.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத்தயாரிப்பு குறித்து எழுதுக.
Answer:

  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் நுரைக்கல் ஆகியவற்றிலும்,
  • செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
  • சங்கு , பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
  • இவை மெசபட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Question 7.
ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்’ குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
Answer:

  • ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டார்கள், அரச மரத்தை வழிப்பட்டிருக்கிறார்கள்.
  • அங்கு கிடைத்த சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
  • காலிபங்கனில் வேள்வி பீடங்கள் காணப் பட்டுள்ளன.
  • ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
  • இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா புதை குழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக் கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
புதிய கற்கால புரட்சி – வரையறு:
Answer:
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்

  • ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
  • பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
  • பெரிய கிராமங்கள் தோன்றின.
  • மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
  • நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன. எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதிய கற்காலப் புரட்சி எனப்படுகின்றன.

Question 2.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
Answer:

  • ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
  • கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
  • வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
  • ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய் களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பா பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.
Answer:

  • மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள், ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
  • அதிகாரம் படைத்த ஆட்சி அமைப்பில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சாதாரோ நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
Answer:

வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதியகற்காலம்
4. உலோகக்காலம்
என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம் :
இது
1. கீழ்ப்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை)
2. இடைப்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 3,85,000 – 40,000)
3. மேல்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 40,000-10,000)

  • பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
  • பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும்
    அழைக்கபடுகின்றனர்.
  • பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை .

இடைக்கற்காலம் :

  • இது பொ.ஆ.மு 10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களி லிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
  • உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண் கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
  • வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர், ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளரத் தொடங்கியது.
  • பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.

புதிய கற்காலம் :

  • பொது ஆண்டுக்கு முன்பு 7000 – 5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
  • வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பாக்குதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
  • கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
  • இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
  • கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.

உலோக காலம் :

  • இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செம்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
  • தமிழ்நாட்டில் பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
  • தென்னிந்தியாவில் செம்பு காலமும் – இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக
Answer:

கீழ்ப் பழங்கற்காலம்இடைப்பழங்கற்காலம்
இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப் பட்டுள்ளது.3,85,000 – 40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ ஏரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர்இக்காலக்கட்டத்துக்கும் ஹோமோ ஏரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர்.
மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனநர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன.
வேட்டையாடியும், கிழங்கு கொட்டை, பழம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்தனர்.வேட்டை ஆடுபவர்களாகவும் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர்.
திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர்.திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர்.
கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினர்இக்கருவிகள் சிறியதாயின. கற்கருவிகள் உற்பத்தியில் முலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

Question 3.
‘கருவித் தொழில் நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது’ – தெளிவாக்குக.
Answer:

  • மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
  • கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சிபெற்றன.
  • கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
  • கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
  • மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
தொடக்க புதிய கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
Answer:
புதியகற்கால தொடக்கம் :
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.

பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு , சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000 – 5,000

வேளாண்மை :

  • தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
  • ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.

புதியகற்கால புரட்சி :

  • பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
  • எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5. ‘
காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது’ . கூற்றை நிறுவுக.
Answer:

  • காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சம காலத்தவையாகும்.
  • இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் சான்றாக உள்ளது.
  • முட்டை வடிவமுள்ள குழி வீடுகளில் வசித்தனர். புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
  • பர்ஷாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
  • கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழ்வாய்வு களின்போது கண்டெடுக்கப்பட்டன.
  • பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பை கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருத முடிகிறது.

Question 6.
தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
Answer:
தென்னிந்தியாவில் புதிய கற்காலம் :
பரவியுள்ள இடங்கள் :

  • ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாட்டின் வடமேற்குப்பகுதிகளில் புதிய கற்கால பண்பாடு நிலவியதாக கண்டறியப்படுகிறது…
  • கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவில் உள்ள சங்கனகல்லு , தெக்கலகோடா, பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.

முக்கிய கூறுகள் :

  • சில தொடக்கக்காலப் புதிய கற்கால ஆய்விடங்கள் சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில் உள்ள கொடெக்கல், குப்கல், படிகல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • மெல்லிய சாம்பலும், நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
  • சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும், புதைகுழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
Answer:

  • இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ. ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாக சிந்து நாகரிகம் எனப்படும்.
  • இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப்பிரிக்கப்படுகிது.
  • ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
  • சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்ததால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.

Question 8.
திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.
Answer:
ஹரப்பா :

  • அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களில் குறிப்பிடத்தகுந்த கூறுகள்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் வீடு கட்ட பயன்படுத்தினர்.
  • நகரங்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன. கழிவுநீர் வடிகால்கள் திட்ட வட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன.
  • வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் – கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப் பட்டன.
  • வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.

மொகஞ்சதாரோ :

  • மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். அது கோட்டைப் பகுதியாகவும், தாழ்வான நகரமாகவும் ஒரு வேறு பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன.
  • மேல்தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன.
  • வீடுகளில் பல அறைகள் இருந்தன. பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
Answer:
(அ) மட்பாண்டம் செய்தல்
(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
(இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
(ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
(அ) மட்பாண்டம் செயதல்

  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
  • மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
  • அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்து வைக்கும் கலர், துளைகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
  • நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
  • அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.

(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும் :

  • ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
  • ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
  • சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக்
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
  • ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
    ஹரப்பா நாகரிகப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.

(இ) எடைக்கற்களும் அளவீடுகளும் :

  • வணிக பரிவர்த்தனைக்காக ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அள வீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
  • எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8 16:32 எனபின்பற்றப்பட்டுள்ளது.
  • இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
  • சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவு கோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

(ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும் :

(அ) முத்திரைகள் :

  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண் , தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
  • பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.

(ஆ) எழுத்துமுறை :

  • ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • 5000த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 1.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக :
Answer:

  • இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
  • சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு, வேறு பகுதியில் இருந்தன.
  • சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை .
  • தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
  • தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன.
  • இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் – உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
  • இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து – காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
  • இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த போது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
  • இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
  • படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
  • தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடாக, ஆந்திரபிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
  • புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் – கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்த போது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
  • இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
அ) நூரெம்பெர்க்
ஆ) ஆன்ட்வெர்ப்
இ) ஜெனோவா
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
Answer:
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
அ) மறுமலர்ச்சி
ஆ) சமயச் சீர்திருத்தம்
இ) புவியியல் கண்டுபிடிப்பு
ஈ) வர்த்தகப் புரட்சி
Answer:
அ) மறுமலர்ச்சி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
அ) ஐந்தாம் நிக்கோலஸ்
ஆ) இரண்டாம் ஜூலியஸ்
இ) இரண்டாம் பயஸ்
ஈ) மூன்றாம் பால்
Answer:
ஈ) மூன்றாம் பால்

Question 4.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
அ) மார்க்கோ போலோ
ஆ) ரோஜர் பேக்கன்
இ) கொலம்பஸ்
ஈ) பார்தோலோமியோ டயஸ்
Answer:
இ) கொலம்பஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
கூற்று : காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம் : நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Question 6.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
அ) பகுத்தறிவுவாதம்
ஆ) ஐயுறவுவாதம்
இ) அரசில்லா நிலை
ஈ) தனித்துவம்
Answer:
இ) அரசில்லா நிலை

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பிளாட்டோ
இ) ரோஜர் பேக்கன்
ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Question 8.
மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?
அ) தாந்தே
ஆ) மாக்கியவல்லி
இ) ரோஜர் பேக்கன்
ஈ) பெட்ரார்க்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?
அ) ஜியோவனி அவுரிஸ்பா
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) கொலம்பஸ்
Answer:
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்

Question 10.
கூற்று : கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I : இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II : துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
அறிக்கை III : கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV : பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
அ) I, II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஆ) II மற்றும் III

Question 12.
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?
அ) வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
ஆ) இறுதி விருந்து
இ) மோனலிசா
ஈ) மடோனாவும் குழந்தையும்
Answer:
ஈ) மடோனாவும் குழந்தையும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 13.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
அ) டோனடெல்லா
ஆ) ரபேல்
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ
Answer:
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ

Question 14.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
அ) மார்லோவ் – டிடோ
ஆ)ஷேக்ஸ்பியர் – கிங் லியர்
இ) பிரான்சிஸ் பேக்கன் – நோவும் ஆர்கனும்
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 15.
கூற்று : துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம் : கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு கட்ட ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 16.
மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ) சாண்டா மரியா
ஆ) பிண்ட்டா
இ) நினா
ஈ) விட்டோரியா
Answer:
ஈ) விட்டோரியா

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 17.
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
அ) பெட்ரோ காப்ரல்
ஆ) கொலம்பஸ்
இ) ஹெர்னன் கார்ட்ஸ்
ஈ) ஜேம்ஸ் குக்
Answer:
இ) ஹெர்னன் கார்ட்ஸ்

Question 18.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1519
ஆ) 1532
இ) 1533
ஈ) 1534
Answer:
ஈ) 1534

Question 19.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 20.
ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
அ) ஏழாம் ஹென்றி
ஆ) எட்டாம் ஹென்றி
இ) இரண்டாம் ஹென்றி
ஈ) ஆறாம் ஹென்றி
Answer:
ஈ) ஆறாம் ஹென்றி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
Answer:
எராஸ்மஸ் :

  • எராஸ்மஸ், தேவாலாய வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
  • இவரது சிறந்த படைப்பு “மடமையின் புகழ்ச்சி” என்பதாகும்.
  • இது கிறித்துவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும் கேலி செய்தது.

Question 2.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
மெடிசி குடும்பம் :

  • இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸில் சக்தி வாய்ந்த வர்த்தக குடும்பம் மெடிசி குடும்பம்.
  • காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தினார்.
  • மைக்கேல் ஆஞ்சிலோ, லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
Answer:

  • ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சாண்டர் ஒரு ஆணையை வெளியிட்டார்.
  • அது போப்பின் ஆணை என்றழைக்கப்பட்டது.
  • அதன்படி உலகை கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்து, மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும், கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Question 4.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
Answer:

  • 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
  • எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள் படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின் நாட்டுப் படையை வீழ்த்தினார்கள்.
  • நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
Answer:

  • போப்பிற்கும், மார்டின் லூதருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
  • மார்டின் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
  • வோர்ம்ஸ் சபையால் லூதர் சட்டத்திற்கு புறம்பானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

Question 6.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
  • நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இந்தப் பெயர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
Answer:

  • இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பிரபுத்துவ ஆட்சியை அதன் நடைமுறையை வலுவிழக்கச் செய்தது.
  • பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள் வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர்.
  • சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
  • புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப் பங்காற்றியது.

Question 8.
ரொட்டியும் திராட்சை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.
Answer:

  • இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனித சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள்.
  • இயேசு கிறிஸ்து மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்தவர்கள் பங்கேற்றனர்.
  • ரொட்டியும், திராட்சை ரசமும் இயேசுவின் சதையும், இரத்தமும் என்று அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
ஸ்பெயினில் சமய விசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
Answer:

  • ஸ்பெயின் நாட்டின் நீதிவிசாரணை அமைப்பை அரசர் அமைத்தார்.
  • அதன் மூலம் மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
  • சமய நம்பிக்கை அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

Question 10.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் – என்று அழைக்கப்பட்டது? இந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
Answer:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
Answer:

  • டிரென்ட் சபை 18 ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துபைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
  • தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருவிருட்சாதனங்கள் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
  • போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன நிலைநிறுத்தப்பட்டன.
  • அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின் உருவ வழிபாட்டையும் சபை ஆதரித்தது.
  • இந்த டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Question 12.
வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
Answer:

  • பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • எனவே ஆர்லியன்ஸின் பணிப்பெண் என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு அவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
Answer:

  • லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது.
  • ஏதென்ஸ் நகர மக்களின் பெரிகிளிஸ் காலத்து படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த கால படைப்புகளையும் கண்டுபிடித்தனர்.
  • சட்டம் மற்றும் தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச் செய்ததில் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள் அதிக செல்வம் ஈட்டின.

Question 2.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
Answer:

  • இங்கிலாந்தின் இலக்கியவாதிகளில் முக்கியமானோர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ, பிரான்சிஸ் பேக்கன் ஆகியோராவர்.
  • ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும், மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ, மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் போன்ற நகைச்சுவை நாடகங்களும் ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங்லியர். ரோமியோவும் ஜூலியட்டும் போன்ற சோகமயமான் நாடகங்களும் சில உதாரணங்களாகும்.
  • ஆங்கில நாடக ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய முக்கிய படைப்புகளை அளித்துள்ளார்.
  • ‘அனுபவ வாதத்தின் தந்தை’ என்று அழைக்கக்கூடிய பிரான்சிஸ் பேக்கன் தூண்டல் பகுத்தறிவே விஞ்ஞானத்தின் அடிப்படை என்றார்.
  • இவரது படைப்பான “நோவும் ஆர்கனும்” என்ற நூல் முக்கியப் படைப்பாக விளங்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
Answer:

  • இத்தாலிய கடற்பயணி ஜான் கேபட் கனடாவை கண்டுபிடித்து ஆங்கில காலனியாக்கினார்.
  • ஜியோவனி டா வெர்ராசானோ என்பவர் பிரான்ஸ் நாட்டுக்காக கிழக்கு கனடா மாகாணங்களை இணைத்தார்.
  • ஆங்கிலேய கடற்பயணி ஹென்றி ஹட்சன் வடஅமெரிக்காவிலிருந்து பசிபிக்கடல் பகுதிக்கு பாதைகாண பாட முயன்றார்.

Question 4.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன?
Answer:

  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அமைந்தது அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றதே ஆகும்.
  • ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேயே காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்ட விவசாயம் வளர்ச்சி கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
  • டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான கதை நவீன உலகை உருவாக்குவதில் ஒரு அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் ஆற்றிய பங்கை ஆராய்க.
Answer:

  • பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஒருவர் ஜான் கால்வின் ஆவார்.
  • கிறித்தவ சமய நிறுவனங்கள் என்ற அவரது லத்தீன் மொழிப் புத்தகம் அவரது கருத்துக்களை உள்ளடக்கியது.
  • கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
  • கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.

Question 6.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும். –
Answer:

  • இக்னேஷியஸ் லயோலா என்பவரால் இயேசு சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • பாரிஸ் என்ற இடத்தில் புதிய தேவாலய முறைமையை 1534 ஆகஸ்டு 15இல் ஏற்படுத்தினார்.
  • பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடித்தனர்.
    இயேசு சங்கம் தேவாலயத்துக்கு உண்மையான சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. இச்சபையின் தொண்டர்கள் ஜெசூட்டுகள் உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
1441.2இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1492ல் கொலம்பஸ் ஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியுடன் கடற்பயணம் மேற்கொண்டார்.
  • இவர் 1492 ஆகஸ்ட் 3ல் பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களில் பயணித்தார்.
  • 2 மாதங்களுக்கு பின் இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை அடைந்தார்.
  • ஆனால் அது உண்மையில் அமெரிக்கா என்னும் புதிய கண்டமாகும்.

Question 8.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
Answer:

  • வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி இந்தியா வந்தடைந்தார். சாமரின் ஒரு கோட்டை கட்டி
    வர்த்தகம் செய்ய காப்ரலை அனுமதித்தார். அரபு வணிகர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்ப டதால் மோதல் நிகழ்ந்தது.
  • கொச்சினில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் துறைமுகத்தை நிறுவினார்.
  • இறுதியாக 1501 ஜூன் 23ல் போர்ச்சுக்கல் திரும்பினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
Answer:
“தாந்தே, பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது”.
தாந்தே:
தாந்தேயின் தெய்வீக இன்பியல், இறை அருள் மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும் என்பது அதன் கருப்பொருளாகும்.
பெட்ரார்க்:

  • ‘இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை’ என்று கருதப்படுகிறார்.
  • கிரேக்க மற்றும் ரோமானிய கையெழுத்துப் பிரதிகளைத்தேடி, சமயத்துறவிகள் நூலகங்களுக்குச் சென்றார்.
  • கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தார்.

பொக்காசியோ:
பிளாரன்ஸ் நகரை சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ, பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம்பெண்களும் மூன்று இளைஞர்களும் தங்கியிருந்தபோது கூறியதாக எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

நிக்கோலோ மாக்கியவல்லி:

  • இவரின் ‘தி பிரின்ஸ்’ என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தது.
  • இந்த நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
  • பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
Answer:
இங்கிலாந்து:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

பிரான்சு :

  • ஜோன் ஆப் ஆர்க் என்ற இளம் பெண் நூறாண்டு போரில் அரசர் சார்லசுக்காக போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • ஜோன் ஆப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூற்றாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு ஆங்கிலேயர்களை வெற்றி கண்டது.
  • ஏழாம் சார்லஸின் மகன் 11 ஆம் லூயி பர்கண்டி பகுதிக்கு திரும்பினார்.
  • 1483 ஆம் ஆண்டு இப்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • பிரான்சு ஒரு வலுவான மத்திய மன்ட்சி நடைபெறும் அரசாக உருவெடுத்தது.
  • பதினோறாம் லூயி பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார்.

ஸ்பெயின்:

  • அராபிய அரசர்களின் வழிதோன்றல்களாகிய முஸ்லீம் மன்னர்கள் மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
  • அராகன் மற்றும் காஸ்டைல் முக்கிய அரசுகள்.
  • அராகன் அரசர் பெர்டினாண்ட், காஸ்டைல் இளவரசியை மணம் முடித்து மூர்களை விரட்டவும், ஸ்பெயினை இணைக்கவும் கடினமாக உழைத்தனர்.
  • 1479ல் அரசரும் அரசியும் அதிகாரத்தைக் கைபற்றி, மன்னர் சபையில் இருந்த பிரபுகளை நீக்கியதன் மூலம் அரசர்களைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார்.
  • ஸ்பெயின் தனி நாடாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
Answer:
போர்ச்சுக்கல் :

  • கடலாய்வின் முதலாவது தொடர் பயணங்களை போர்ச்சுக்கல் மேற்கொண்டது.
  • போர்ச்சுக்கல் அரசர் ஹென்றியின் முயற்சியால் மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையைக் கண்டறிந்தனர்.
  • பார்தோலோமியோ டயஸ் என்பவர் ஆப்பிரிக்காவின் தென்முனை வரை சென்றார். இது கிழக்கு நோக்கி பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் “நன்னம்பிக்கை முனை” என்று அழைக்கப்பட்டது.
  • 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இதன் வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். வாஸ்கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல் வழி கண்டுபிடிப்பு ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
  • பெட்ரோ காப்ரல் பிரேசிலை கண்டுபிடித்து போர்ச்சுக்கல் காலனியாக்கினார். பின்னர் இந்தியாவில் கொச்சினில் வர்த்தகம் செய்து கண்ணனூரில் துறைமுகத்தையும் நிறுவினார்.

ஸ்பெயின்:

  • கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் ஆதரவுடன் பயணித்து இந்தியா என்று நம்பி அமெரிக்காவை கண்டு பிடித்தார்.
  • ஸ்பெயினின் ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயினுக்காக மெக்சிகோவை கைப்பற்றினார்.
  • இவரே தென் அமெரிக்காவில் இன்கா அரசை வீழ்த்தி பெரு நாட்டை கைப்பற்றினார்.

முக்கியத்துவம் :

  • கடல் வழித்தடங்களை கண்டுபிடித்து காலனிகள் தோற்றுவித்த போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன் முயற்சிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் தூண்டு கோளாயிற்று.
  • ஐரோப்பிய கடல் கடந்த வாணிபம் பெரிதும் தழைக்கத் தொடங்கியது. குடியேற்ற ஆதிக்கமும் பேரரசு ஆதிக்கமும் தோன்றின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
Answer:

  • தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
  • ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஓர் ஊடகமாக செயல்படுவதை ஏற்றார்கள்.
  • ஆனால் தேவாலயங்களின் அதிகாரங்கள் பன்மடங்கு பெருகியதை மன்னர்களும் மக்களும் எதிர்க்க ஆதரித்தனர்.
  • பாவமன்னிப்பு வழங்க பணம் பெற்றது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, தேவாலய
    பணிகளை பணத்துக்கு விற்பது போன்றவை பிராட்டஸ்டன்ட் வளர காரணமாயிற்று.

மார்டின் லூதரும் பிராட்டஸ்டன்ட் இயக்கமும் :

  • கிறிஸ்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு சென்ற போது தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
  • ரோமானிய தேவாலயத்துக்கு எதிராக 95 குறிப்புகள் என்ற தலைப்பில் 95 புகார்களை எழுதி ஜெர்மனி விட்டன்பர்க்கில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார்.
  • கடவுளின் மீது இருக்கும் ஒருவரது நம்பிக்கை மூலம்தான் இரட்சிப்பை அடைய முடியும் என்று கூறினார்.
  • மார்டின் லூதரின் முற்போக்கான கருத்துக்கள் பலரை ஈர்த்தன.
  • லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார்.
  • லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.
  • இதன் மூலம் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை மார்டின் லூதர் ஒருங்கிணைத்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பகுத்தறிவின் காலம் பற்றிய பொருள் மற்றும் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
2. உலக புறஎல்லை வரைபடத்தில் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகல்லன் ஆகியோர் சென்ற கடல்வழித்தடங்களைக் குறிக்கவும்.
3. மறுமலர்ச்சி தொடர்பான வீடியோ பதிவுகளை மாணவர்கள் இணையத்தில் காணலாம்.
4. வட மற்றும் தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் மீது ஐரோப்பியர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்/வீடியோ பதிவுகளை மாணவர்கள் காணலாம்.

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………. பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.
அ) பார்தோலோமியோ டயஸ்
ஆ) கொலம்பஸ்
இ) அமெரிக்கோ வெஸ்புகி
ஈ) மெகல்லன்
Answer:
ஆ) கொலம்பஸ்

Question 2.
“நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் ………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) பொக்காசியோ
ஈ) ரோஜர் பேக்கன்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சியுற்ற ஆண்டு …………….
அ) 1543
ஆ) 1453
இ) 1345
ஈ) 1534
Answer:
ஆ) 1453

Question 4.
“தெய்வீக இன்பயியல்” என்ற நூலை எழுதியவர் ……………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) மாக்கியவல்லி
Answer:
அ) தாந்தே

Question 5.
100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவர்.
அ) ஜியோவனி பொக்காசியோ
ஆ) நிக்கோலோ மாக்கியவல்லி
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) வில்லியம் ஹார்வி
Answer:
அ) ஜியோவனி பொக்காசியோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 6.
“மறுமலர்ச்சி கால மனிதர்” என்று அழைக்கப்பட அனைத்து தகுதிகளையும் கொண்டு திகழ்ந்தவர்.
அ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஆ) லியானர்டோ டாவின்சி
இ) வில்லியம் ஹார்வி
ஈ) ரபேல்
Answer:
ஆ) லியானர்டோ டாவின்சி

Question 7.
சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றும் சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த வானியல் நிபுணர் ……………………
அ) கலிலியோ கலிலி
ஆ) வில்லியம் ஹார்வி
இ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஈ) நியூட்டன்
Answer:
அ) கலிலியோ கலிலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 8.
“ஆங்கில இலக்கியத்தின் மூடிசூடா மன்னர்” ……
அ) பிரான்சிஸ் பேக்கன்
ஆ) வாஸ்கோடகாமா
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஈ) மாக்கியவல்லி
Answer:
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்

Question 9.
முதலாம் எலிசபெத் காலம் “ எலிசபெத் காலம்” என்று அழைக்கப்பட்ட ஆண்டுகள் …………………
அ) 1558-1603
ஆ) 1603-1658
இ) 1503-1558
ஈ) 1553-1608
Answer:
அ) 1558-1603

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 10.
கூற்று : இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்குப் பரவியது.
காரணம் : இத்தாலியர்கள் தாங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் சரி
Answer:
ஈ) கூற்றும் காரணமும் சரி

Question 11.
கூற்று : நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவவில்லை .
காரணம் : ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பகுதியில் செல்லக்கூடிய இலகு ரக காரவெல் கப்பல் கட்டமைப்பும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும்.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்று சரி. காரணம் விளக்கவில்லை .
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று தவறு. காரணம் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 12.
பொருத்துக

III
1 மோனலிசாஅ. ஜியோவனிடா வெர்ராசானோ
2 இரத்த ஒட்டம்ஆ. பிலிப்பைன்ஸ்
3 மெகல்லன்இ. இலியானர்டோ டாவின்சி
4 பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதிகளை ஆராய்ந்தவர்ஈ. வில்லியம் ஹார்வி


Answer:
இ) 3 4 2 1

Question 13.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
அ) போப்பின் ஆணை – 1493
ஆ) வாஸ்கோடகாமா – கோழிக்கோடு
இ) பெட்ரோ காப்ரல் – பிரேசில்
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்
Answer:
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 14.
இயேசு சங்கத்தை தோற்றுவித்தவர்
அ) போப் பத்தாம் லியோ
ஆ) ஜான் வைகிளிஃப்
இ) மார்டின் லூதர் .
ஈ) இக்னேஷியஸ் லயோலா
Answer:
ஈ) இக்னேஷியஸ் லயோலா

Question 15.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை (அல்லது) அறிக்கைகள்?
அறிக்கை 1 : தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அறிக்கை II : தேவாலயத்தின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி போட்டவர்கள் பிராட்ஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
அறிக்கை III : இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினை குழுக்களால் பாகம் உற்பத்தி முறை நன்றாக செயல்பட்டது.
அறிக்கை IV : உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.
அ) I, II மற்றும் IV)
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) அனைத்தும் சரி
Answer:
அ) I, II மற்றும் IV

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

II. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் மாக்கியவல்லி கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • ‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.
  • எப்போது தமது செயல்பாடு தமக்கு எதிராக மாறக்கூடும் என்பது தெரியாது என்பதால் தனது வாக்கை ஒருவர் காப்பாற்ற முடியாது; அதனால் சொல்லவும் கூடாது என்கிறார்.
  • எப்போதும் நேர்மையாக இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது.
  • ஆனால் பக்திமானாக, உண்மையாக, மனிதநேயத்துடன், பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்ககுணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Question 2.
மைக்கேல் ஆஞ்சிலோ பற்றிய குறிப்பு தருக.
Answer:

  • மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பி மைக்கேல் ஆஞ்சிலோ தாகம்
  • போப்புகளால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் இவரால் நவீனமயமானது.
  • புகழ் பெற்ற பியட்டா என்ற கன்னி மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார்.
  • கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள் அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை (கெர்ரோவிலிருந்து கொண்டுவரப்பட்ட) ஒரே பளிங்குக் கல்லிலானது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
எதிர் சீர்திருத்த இயக்கம் என்பது என்ன?
Answer:

  • விசுவாசமான ரோமானிய தேவாலய ஆதரவாளர்கள் தேவாலயத்துக்குள் நடந்த சீர்கேடுகளைக் களைய சீர்திருத்தங்களை உள்ளிருந்தபடியே நடத்தினார்கள்.
  • இந்த சீர்திருத்த இயக்கம் எதிர் சீர்திருத்த இயக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இது போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக களம் கண்டது.

Question 4.
குறிப்பு தருக – ஜான் வைகிளிஃப்
Answer:

  • பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளர் ஜான் வைகிரிஃப்.
  • சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டார். –
  • அவர் தனது வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின் கோபத்தில் இருந்து தப்பித்தார்.
  • ஆனால் இவர் மறைந்து (1415) 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை ஆணையிட்டது. வைகிளிஃபின் எலும்புகள் எரியூட்டப்பட்டாலும் அவரது கருத்துகளை ஒடுக்க முடியவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஏழு திருவருட் சாதனங்கள் யாவை?
Answer:

  • ஞானஸ்நானம்
  • உறுதி பூசுதல்
  • திருவிருந்து
  • பாவமன்னிப்பு
  • நோயில் பூசுதல்
  • குருத்துவ துறவறம்
  • திருமணம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • நவீன கால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்குகிறது.
  • கேட்டு அறியும் உணர்வு அதனால் விளைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின.
  • திசை காட்டும் கருவி மற்றும் வான இயல் குறித்த புதிய நம்பிக்கை புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவின.
  • மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும்.
  • பகுத்தறியும் உணர்வினால் சமயச் சீர்த்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கருத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
வாஸ்கோடகாமாவின் கடல்வழிப் பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
  • லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார்.
  • பின்னர் அவர் மேலும் தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள ‘கப்பட் (கப்பக்கடவு) என்ற கடற்கரையை அடைந்தார்.
  • இந்தியாவின் ஒரு பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்து விட்டார்.
  • இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உதவியது.
  • கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.

Question 3.
வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • மத்தியத் தரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.
  • இத்தாலிய நகரங்கள் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள வர்த்தக அமைப்பான ஹன்சீடிக்லீக் எனும் அமைப்பை சேர்ந்த வர்த்தகர்கள் இடையே வர்த்தகம் செழிப்படைந்து மேம்பட்டது.
  • வெனிஸின் டூகா நாணயமும் பிளாரன்ஸின் ப்ளோரின் நாணயமும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • வர்த்தகம், கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்தொழில் மூலமாக ஈட்டப்பட்ட பெரும் தொகை சேர்ந்தது.
  • போர் சாதனங்களுக்கான தேவையும் அதிகம் வரி வசூலிக்கக்கூடிய சொத்தை உருவாக்கும் வகையில் வணிகத்தை மேம்படுத்த புதிய அரசர்கள் கொடுத்த ஊக்கம் ஆகியவை வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்திற்கு காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தகப் புரட்சியின் நேர்மறை விளைவுகள் யாவை?
Answer:

  • நடுத்தர வர்த்தகத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது, வர்த்தகப் புரட்சியின் இதர முக்கியமான முடிவுகளாகும்.
  • வணிகர்கள், வங்கியாளர்கள், கப்பல் முதலாளிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை தொழில் முனைவோர் போன்ற பலரும் இந்த நடுத்தர வகுப்பு நிலையில் உள்ளடங்கினார்கள்.
  • அதிகரிக்கும் வளமையின் விளைவாகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அரசரை ஆதரிப்பதன் விளைவாகவும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றனர்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சிக்கான காரணங்களை விவரி?
Answer:

  • சிலுவைப் போர்களின் போது வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன், பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க் மற்றும் நூரெம்பர்க் ஆகிய சுதந்திரமான, வர்த்தக நகரங்கள் உருவானது.
  • பிரான்ஸின் பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும் இத்தாலியின் போலோக்னோவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான தொடக்க நிலைமைகளை உருவாக்கின.
  • ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஆங்கிலப் பேராசிரியரான ரோஜர் பேக்கன் “நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என்றழைக்கப்படுவார்.
  • மனிதகுலமானது சமயமரபு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.
  • அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர நகரங்களுக்கு கையெழுத்துப் பிரதிகளைத் தேடி பயணம் மேற்கொண்டனர்.
  • 1413க்கும் 1423க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ், யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின் படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப் பிரதி நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார்.
  • 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல் படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.
  • சீனாவில் காகிதம் தோன்றியிருந்தாலும், ஜெர்மனிக்கு காகிதம் பதினான்காம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது.
  •  அதன் பிறகு தான் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அச்சுப்பணிக்குப் பிறகே உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை மேலும் உத்வேகம் பெற்று அறிவ விரைவாகப் பரவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் யாவை?
Answer:

  • ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தாலியர்களுடன் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • அந்தப் பொருட்களை வாங்கிய இத்தாலியர்கள் அவற்றை ஐரோப்பாவில் வர்த்தகம் செய்தனர். குறிப்பாக போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
  • அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித் தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.
  • இந்த முடிவானப் பொருளாதாரக் காரணம்தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
  • கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக லாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
  • எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விரும்பினர்.
  • ‘முட்டாள்கள் தேர்தலில் போட்டியிடட்டும் சாதித்துக்காட்ட விரும்புபவர்கள் புது இடங்களுக்குச் சென்று ஆராயட்டும்’ என்ற அந்தக் காலகட்டத்தின் சிந்தனைக்கு ஏற்ப பணமும் புகழும் கிடைக்க வாய்ப்பாக இருந்த சாதனை முயற்சிக்கு பலர் தூண்டப்பட்டனர்.
  • சமயத்தை பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் புதிய நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தந்தது. –
  • ஆரம்ப நாட்களில் இது முதன்மைக் காரணமாக இருக்கவில்லை .
  • அந்தக் காலத்தில் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகளுடன் கடவுளைப் பற்றிய வார்த்தை பரவி முக்கியத்துவம் பெற்றது.
  • மறுமலர்ச்சியை அடுத்து தொழில்நுட்ப மேம்பாடு பல துறைகளில் ஏற்பட்டது.
  • அதில் ஒன்றாக வரைபடங்களை உருவாக்கும் “கார்ட்டோகிராபி” என்ற துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
  • நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவியது.
  • துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
  • ஐரோப்பாவில் மாலுமிகளுக்கான “திசைகாட்டி கருவி” (Mariner’s Compass) கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் ஆய்வுக்கு மேலும் உதவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
சமய சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் யாவை?
Answer:
ஐரோப்பிய நாடுகளில் பிரிவுகள்:

  • நாட்டின் சமயவழிபாடுகளில் பிரிவுகளை ஏற்படுத்தியது.
  • வடஜெர்மனி லூதரன் சபையாகவும் தென் ஜெர்மனி கத்தோலிக்கத்தை தொடர்வதையும் கொண்டன.
  • இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் ஆகவும் ஸ்காட்லாந்தும் அயர்லாந்து மக்களும் தீவிர கத்தோலிக்க ஆதரவாளர்களாக மாறினர்.
  • கல்வியறிவு:
  • சீர்திருத்த இயக்கத்தின் பல்வேறு சமய போதனைகளை அச்சிட அச்சகம் உதவியது. பைபிளை படித்து புரிந்து கொள்ள மக்களுக்கு ஊக்கம் தரப்பட்டது.
  • உள்ளூர் மொழியை போதனைகளுக்குப் பயன்படுத்தியதும் பைபிளை வேறு வட்டார மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததும் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கான புதிய வழிகளைக் காட்டின.
  • பெண்களின் நிலை :
  • தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
  • இதனால் வீட்டிலும் தேவாலயங்களிலும் பெண்களின் நிலை வலுப்பெற்றது.
  • பெண்கள் பிராட்டஸ்டன்ட் வழிமுறையில் குழந்தைகளை வளர்க்கவும் ஊக்கம் பெற்றனர்.
  • இதனால் பெண்களின் கல்வியறிவு மேம்பட்டது.

அரசர்களின் அதிகாரம்:
எட்டாம் ஹென்றி போன்ற சில அரசர்களுக்கு, தேவாலயம் மற்றும் அரசு இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இந்த சீர்திருத்த இயக்கம் அதிக அதிகாரங்களை வழங்கியது.

காலனிகளுக்கான போட்டி:
கத்தோலிக்கர்களும் பிராட்டஸ்டன்ட்களும் உலகின் இதர பகுதிகளில் வாழும் மக்களை தத்தமது பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய விரும்பினார்கள்.

கிறித்தவ சமயத்தின் பரவல்:
காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கடற்பயணிகளை உலகின் பல பகுதிகளுக்கு கிறித்தவ இயக்கத் தொண்டர்கள் என்ற போர்வையில் அனுப்பியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தக புரட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?
Answer:

  • வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப் புரட்சிக்கான முக்கிய காரணியாகும்.
  • சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில் ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
  • வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது.
  • இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக் குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தி முறை செயலிழந்தது.
  • பதினேழாம் நூற்றாண்டில் நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப் பங்கு நிறுவனங்களாக புதிய வகையில் உருமாற்றம் பெற்றது.
  • பிந்தைய கட்டங்களில், வர்த்தகப் புரட்சியின் ஒரு பகுதியாக வணிகவியற்கொள்கை என்றழைக்கப்பட்ட புதிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஏற்கப்பட்டன.
  • நடுத்தர வர்க்கத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது.
  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
  • பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்ததால் அவர்களை அடிமை ஆக்கும் முயற்சி தோல்வி கண்டது.
  • இறுதியாக, வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழி அமைத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.
அ) ii,i, iii
ஆ) i, iii, ii
இ) iii, ii,i
ஈ) ii, iii,i
Answer:
ஆ) i, iii,ii

Question 2.
இந்திய அரசாங்கம் …………… வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ) முதலாளித்துவ
ஆ) சமதர்ம
இ) தெய்வீக
ஈ) தொழிற்சாலை
Answer:
ஆ) சமதர்ம
Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1952
இ) 1976
ஈ) 1978
Answer:
அ) 1951

Question 4.
கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம்1. 1951-56
ஆ. இந்திய அறிவியல் நிறுவனம்2. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
இ. மகலனோபிஸ்3. 1909
ஈ முதலாவது ஐந்தாண்டு திட்டம்4. 1956

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 1
Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
அ) 1961
ஆ) 1972
இ) 1976
ஈ) 1978
Answer:
ஆ) 1972

Question 6.
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.
அ) ராம் மனோகர் லோகியா
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) வினோபா பாவே
ஈ) சுந்தர் லால் பகுகுணா
Answer:
இ) வினோபா பாவே

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 1951
ஆ) 1961
இ) 1971
ஈ) 1972
Answer:
அ) 1951

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
Answer:
அ) 2005

Question 10.
எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
அ) 1961
ஆ) 1991
இ) 2008
ஈ) 2005
Answer:
ஆ) 1991

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 11.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
அ) 200
ஆ) 150
இ) 100
ஈ) 75
Answer:
இ) 100

Question 12.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ) 1921
இ) 1945
ஈ) 1957
Answer:
இ) 1945

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 13.
1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
அ) 5
ஆ) 7
இ) 6
ஈ) 225
Answer:
அ) 5

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • 1947இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர் கொண்டது.
  • கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
  • வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
Answer:

  • பொருளாதாரத்தை வளர்த்தல்.
  • வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
  • உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்.
  • வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் கொண்டது.

Question 3.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?
Answer:

  • சமதர்ம சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும்.
  • சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?
Answer:

  • முதலாவதாக கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிக அளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.
  • இரண்டாவது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது.

Question 5.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Answer:

  • நிலம் இல்லாத ஏழைகளுக்கு உபரியாக நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தருவது பூமிதான இயக்கமாகும்.
  • வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
Answer:

  • குத்தகையை முறைப்படுத்துவது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  • நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

Question 2.
இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.
  • விவசாயிகளிடமிருந்து உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது.
  • மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
  • பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது.
  • வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது.
  • காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?
Answer:

  • 1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம்.
  • இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது.
  • இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • 1999 ஆம் ஆண்டு வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

Question 4.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. நிறுவன காரணி – நில உடைமை மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையே நிலவிய சமூக பொருளாதார சிக்கல்கள்.
  2. தொழில்நுட்ப காரணி – வீரிய விதைகள், இரசாயன உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
Answer:

  • நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்.
  • கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு.
  • தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
Answer:
1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு :

  • ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வரியாக செலுத்துவர்.
  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர்.
  • இவர்களின் உரிமைகளை ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவது அரசின் குறிக்கோளாகும்.
  • 1951மற்றும் 1955 இல் அரசு நிறைவேற்றிய அரசியல் அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம் 1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
  • இதன்மூலம் 30 லட்சம் குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர்.
  • இருந்த போதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

2. குத்தகை சீர்திருத்தம் :

  • இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு நிலங்கள் குத்தகை முறையின் கீழ் இருந்தன.
  • குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக பெறப்பட்டது.
  • நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை.
  • ஒரு முழுமையான நடைமுறைப்படுத்தக் கூடிய நில உச்ச வரம்பு இல்லாத சூழ்நிலையில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்று போயின.

Question 2.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
Answer:

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லாததால் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது.
  • இந்தச் சீர்திருத்தம் நில உச்ச வரம்புச் சட்டத்தில் சில வகையான நிலங்களுக்கு வழங்கப்பட்ட சில விதி விலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • உணரத்தக்க அளவில் செயல் திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • பொருளாதார ரீதியாக, நில உரிமையையும், பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடி மக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • ஒட்டு மொத்தமாக பார்க்கையில் நிலச்சீர்திருத்த சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
Answer:

  • கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக் குறிப்பான்களுமே ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன.
  • இந்தியாவில் 1951 இல் 18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர்.
  • தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
  • மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
  • நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர்.
  • குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடை நிற்றலில் அதிகமாக இருந்தனர்.
  • சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது.
  • இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:

  • முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
  • மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.
  • இதற்கு பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது.
  • பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது.
  • முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர்.
  • இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
Answer:
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் :

  • விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும்.
  • 1945 இல் முன்னவர் ஹோழி. J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பெற்றது.
  • புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.

ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள் :

  • அறிவியல் துறையின் வானியற்பியல், மண்ணியல், நிலவியல், சார் இயற்பியல், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் கணித அறிவியல் மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.

அணுசக்தி ஆணையம் :

  • அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • போர்திறம் சார்ந்த ஆய்வுக்கான பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

வேளாண்மை:
வேளாண்மை வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள் வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல் துணை நடவடிக்கைகளாக மீன் வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில் நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

வேளாண்மை பல்கலைக்கழகங்கள் :

  • வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.
  • இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் :

  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.
  • முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி பம்பாய் கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
  • இச்சமயம் நமது நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது.
  • 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய தகவல் தொழில் நுட்பகழக நிறுவனங்களும் செயல்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையில் பங்கு ………….
அ) 3 விழுக்காடுகள்
ஆ) 13 விழுக்காடுகள்
இ) 23 விழுக்காடுகள்
ஈ) 31 விழுக்காடுகள்
Answer:
ஆ) 13 விழுக்காடுகள்

Question 2.
இந்திய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு …………. சார்ந்திருந்தனர்.
அ) வணிகம்
ஆ) குடிசைத் தொழில்
இ) வேளாண்மை
ஈ) கால்நடை வளர்த்தல்
Answer:
இ) வேளாண்மை

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
ஜமீன்தார் என்பவர் ……….. வகுப்பை சேர்ந்தோராவார்.
அ) நிலவுடைமையாளர்
ஆ) விவசாயி
இ) தொழிலாளர்
ஈ) வணிகம்
Answer:
அ) நிலவுடைமையாளர்

Question 4.
ரயத் என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) வணிகர்
இ) நிலம்
ஈ) விவசாயி
Answer:
ஈ) விவசாயி

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
‘மகல்’ என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) மாநகரம்
ஈ) ஒன்றியம்
Answer:
அ) கிராமம்

Question 6.
நிலையான நிலவரித்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி
அ) சென்னை
ஆ) மும்பை
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
Answer:
இ) வங்காளம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
இந்திய அரசியல் அமைப்பில் 2வது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1955
இ) 1965
ஈ) 1972
Answer:
ஆ) 1955

Question 8.
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக?
i) ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
ii) இந்திய அரசியல் அமைப்பின் 2வது திருத்தம்.
iii) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் அறிமுகம்.
அ) ii,i, iii
ஆ) i, ii, iii
இ) iii, ii,i
ஈ) i, iii, ii
Answer:
அ) ii, i, iii

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
கொடுக்கப்பட்டுள்ள விடை குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. திட்டக்குழு1. ராஷ்டீரிய மத்யமிக் சிக்ஷா அபியான
ஆ. 2வது ஐந்தாண்டு திட்டம்2. சர்வ சிக்ஷா அபியான்
இ அனைவருக்கும் கல்வி திட்டம்3. 1950
ஈ அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்4. 1956-61

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 2
Answer:
ஆ) 3 4 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 10.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள்.
அ) 67
ஆ) 76
இ) 57
ஈ) 75
Answer:
அ) 67

Question 11.
விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்ட இடம்.
அ) புனே
ஆ) டெல்லி
இ) பெங்களூரு
ஈ) சென்னை
Answer:
இ) பெங்களூரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 12.
கூற்று : அரசாங்கம் வேளாண்மையை வளர்ப்பதற்காகத் தொழில்நுட்ப மாற்று பாதைக்கு மாறியது.
காரணம் : 1960 களில் கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் சரி, கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது

Question 13.
திட்டக்குழு கலைக்கப்பட்ட ஆண்டு …………………..
அ) 1950
ஆ) 1951
இ) 2005
ஈ) 2015
Answer:
ஈ) 2015

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 14.
திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கும் பதிலாக 2015-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு ………………….
அ) புதிய ஐந்தாண்டுத் திட்டம்
ஆ) தாராளமயமாக்கல்
இ) நிதி அயோக்
ஈ) பாரத மிகு மின் நிறுவனம்
Answer:
இ) நிதி அயோக்

Question 15.
2012-ல் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை …………
அ) 252
ஆ) 5
இ) 225
ஈ) 255
Answer:
இ) 225

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான இருகாரணிகளின் தொடர்புகளை பற்றி கூறுக.
Answer:
1. நிறுவனம் சார்ந்த காரணிகள் :
நில உடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் இடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும்.
2. தொழில்நுட்பக் காரணிகள் :
சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்.

Question 2.
ஜமீன்தார்கள் என்போர் யார்?
Answer:

  • ஜமீன்தார் என்பவர் நிலவுடமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர்.
  • ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிரந்தர நிலவரி திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம்செய்யும்விவசாயிகளிடமிருந்து குத்தகைவசூல்செய்து அரசுவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மறைமுக வேலையின்மை – குறிப்பு தருக.
Answer:

  • சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்.
  • தானிய உற்பத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை.
  • இந்நிலை தானாக தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
  • இத்தகைய சூழல் “மறைமுக வேலையின்மை ” என அழைக்கப்படுகிறது.

Question 4.
நில உச்சவரம்பு என்றால் என்ன?
Answer:

  • நில உச்ச வரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950க்கு பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961ல் நடைமுறைபடுத்தப்பட்டது.

Question 5.
குத்தகை சீர்திருத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட இரண்டு குறிக்கோள்கள் யாவை?
Answer:

  • நில உடைமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது.
  • நிலத்தின் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 6.
பசுமைபுரட்சி என்றால் என்ன?
Answer:

  • வேளாண்மையை மேம்படுத்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தப்பட்டன.
  • உயர்ரக வீரிய வித்துக்கள் பயன்படுத்தி தானிய உற்பத்தியை அதிகரிக்கப்பட்டது.
  • பூச்சிக்கொல்லி மருந்துக்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • நிலத்தை உழவு செய்ய டிராக்டர் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உணவு உற்பத்தி அதிகரிக்கச் செய்தது
  • இதற்கு பசுமை புரட்சி என்று பெயர்.

Question 7.
அணுசக்தி ஆணையம் – குறிப்பு தருக.
Answer:

  • அணுசக்தி ஆணையம் அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் திகழ்கிறது.
  • அணுசக்தி உற்பத்தி, அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • இது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
  • அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
‘ஜமீன்தார்கள்’ பற்றிய பொதுமக்களின் கருத்து யாது?
Answer:

  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்க உள்ளாயினர்.
  • பொது மக்களின் கருத்துப்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிப்பது வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர்.
  • ஜமீன்தார்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் முக்கிய குறிக்கோளாக கருதினர்.

Question 2.
ஆங்கிலேயர்களின் மூன்று வகையான வருவாய் வசூல் முறையைப் பற்றி கூறுக.
Answer:
ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. நிலையான நிலவரித்திட்டம்

வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித்திட்டத்தின் கீழ், நிலவரியைச் செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
ஆ. ரயத்துவாரிமுறை

  • ரயத் என்றால் விவசாயி என்று பொருள்.
  • ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக
  • அரசாங்கத்திடம் செலுத்தினர்.

இ. மகல் வாரிமுறை

  • நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மகல்வாரி முறை காணப்பட்டது.
  • இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டு பொறுப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1948 இல் அறிவிக்கப்பட்ட முதல் தொழில் கொள்கையின் தன்மை யாது? (அ) தொழிலகங்களை எவ்வாறு பிரித்தது?
Answer:
1948 இல் அறிவிக்கப்பட்டது முதல் தொழில் கொள்கை அறிக்கை தொழிலகங்களை நான்கு வகையாகப் பிரித்தது.

  1. போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும். (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்
  2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள். உரம், வீரியமிக்க ரசாயணங்கள், போர்க்கருவிகள் மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
  3. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம் பெறும் தொழிலகங்கள்.
  4. தனியார் தொழிலகங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.

Question 4.
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகள் :

  • பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
  • தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி.
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு
  • வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்தவுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது.
  • பொருளாதாரம் அதிக அளவில் பன்முகப்படுத்தப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
திட்டக் குழுவைப் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
திட்டக்குழு:

  • பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950ல் திட்டக்குழு (Planning Commission) நிறுவப்பட்டது.
  • இதன் தலைவராக பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இருந்தார்.
  • ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூல வளங்களையும் திட்டக்குழு மதிப்பீடு செய்தது.
  • வேளாண்மை , தொழிலகம், ஆற்றல், சமூகத் துறைகள் மற்றும் தொழில் நுட்பம், முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்தன.
  • தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

Question 6.
“இந்தியா சமதர்ம பாணியிலான சமூகம்” என்பதைப் பற்றி கூறுக.
Answer:
பொருளாதார வளர்ச்சியைப் பெற

  • சுதந்திர செயல்பாட்டு முறை
  • முதலாளித்துவ பாதை
  • சமதர்ம பாதை என இருவழிகள் இருந்தன.
    இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வு செய்தது. இந்திய அரசியலைமைப்பின் முகவுரையில் “ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நிலசீர்த்திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஆய்க :
Answer:

  • நிலச்சீர்திருத்தச்சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை .
  • பொருளாதார ரீதியாக நில உரிமையையும் பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச்சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்ட கால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.
  • ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது.
  • நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
நில உச்சவரம்பு என்றால் என்ன? நில உச்ச வரம்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் விவரி:
Answer:
நில உச்சவரம்பு :

  • நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950 களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன

நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல் :

  • தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961ல் நடைமுறை படுத்தப்பட்டது.
  • 1972 வரை ஒரு ‘நில உரிமையாளர்’ எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
  • 1972க்குப் பின்னும் அடிப்படை அலகானது குடும்பம்’ என மாற்றப்பட்டது.
  • இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

நடைமுறைச் சிக்கல்கள் :

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லை .
  • நீர்பாசனநிலங்கள், மானாவரிநிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் என வேறுபாடுகள் இருந்ததால் நில உச்ச வரம்பு சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

விதிவிலக்குள்ள நிலங்கள் :

  • பழத்தோட்டங்கள், காய்கறி, பூக்கள் விளையும் தோட்டங்கள், நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் , கரும்பு பயிரிடப்படும் பெரும் தோட்டங்கள் ஆகியவைகள் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து விலக்கு பெற்றன.
  • இந்த விதி விலக்குகளை சிலர் பயன்படுத்தியவிதம் குறித்தும், சில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் உபரியாக கையகப்படுத்தப்பட்டு 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு
    தலா ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சற்று கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் – தொழில் கொள்கை அறிக்கையின் தன்மை பற்றியும் அதன் விளைவுகளையும் விவாதி.
Answer:
1991 தொழில் கொள்கையின் தன்மை :

  • 1991 இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது.
  • இது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும் தனியார்துறையின் அதிகமானபங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது.
  • நாட்டில் பொருளாதாரம் குறித்து நுகர்வோரின் மனதில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  •  மத்திய தர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கை கிட்டியது.

நேர்மறை விளைவு :

  • தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
  • மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.
  • இவை அனைத்தும் ஒரு செல்வ செழிப்பான பொது சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்மறை விளைவுகளில் :

  • தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கு இடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது.
  • முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
  • முறை சாராத தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு அதிகம் உருவாயிற்று.
  • இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து விட்டன.

முடிவு :

  • தாராளமயமாக்களின் அளவானது சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரி பொருளாதார நிபுணர்கள் ஆகிய இருசாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை .
  • தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும், மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
அ) மார்ச் 23, 1940
ஆ) ஆகஸ்ட் 8, 1940
இ) அக்டோபர் 17, 1940
ஈ) ஆகஸ்ட் 9, 1942
Answer:
இ) அக்டோபர் 17, 1940

Question 2.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம்1. மோகன் சிங்
ஆ ஆகஸ்ட் கொடை2. கோவிந்த் பல்லப் பந்த்
இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்3. லின்லித்கோ பிரபு
ஈ இந்திய தேசிய இராணுவம்4. நவகாளி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 1

Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) இவர்களில் யாருமில்லை
Answer:
இ) மௌண்ட்பேட்டன் பிரபு

Question 4.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்1. டோஜா
ஆ. சீனக் குடியரசுத் தலைவர்2. வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ பிரிட்டிஷ் பிரதமர்3. ஷியாங் கே ஷேக்
ஈ. ஜப்பான் பிரதமர்4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 2

Answer:
இ) 4321

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?
அ) 1938
ஆ) 1939
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1939

Question 6.
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?
அ) சட்டமறுப்பு இயக்கம்
ஆ) ஒத்துழையாமை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

Question 7.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
அ) உஷா மேத்தா
ஆ) பிரீத்தி வதேதார்
இ) ஆசப் அலி
ஈ) கேப்டன் லட்சுமி
Answer:
அ) உஷா மேத்தா

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 8.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மோதிலால் நேரு
இ) இராஜாஜி
ஈ) சுபாஷ் சந்திர போஸ்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Question 9.
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
Answer:
ஆ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 10.
கூற்று : வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.
காரணம் : அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு –
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 11.
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) பிரான்ஸ்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Answer:
ஆ) ஜப்பான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 12.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.
அ) சுபாஷ் படைப்பிரிவு
ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Answer:
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு

Question 13.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
அ) இரங்கூன்
ஆ) மலேயா
இ) இம்பால்
ஈ) சிங்கப்பூர்
Answer:
ஈ) சிங்கப்பூர்

Question 14.
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
அ) செங்கோட்டை, புதுடெல்லி
ஆ) பினாங்
இ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) செங்கோட்டை, புதுடெல்லி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 15.
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) கிளமண்ட் அட்லி –
Answer:
அ) வேவல் பிரபு

Question 16.
1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இ) ராஜேந்திர பிரசாத்
ஈ) வல்லபாய் படேல்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 17.
சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
அ) ii, i, iii, iv
ஆ) i, iv, iii, ii
இ) iii, iv, i, ii
ஈ) iii, iv, ii, i
Answer:
அ) ii, i, iii, iv

Question 18.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
அ) i, ii, iii, iv
ஆ) iii, i, ii, iv
இ) iii, iv, i, ii
ஈ) i. iii, iv, ii
Answer:
இ) iii, iv, i, ii

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 19.
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
அ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஆ) மௌண்ட்பேட்டன் பிரபு
இ) கிளமண்ட் அட்லி
ஈ) F.D.ரூஸ்வெல்ட்
Answer:
இ) கிளமண்ட் அட்லி

Question 20.
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
அ) ஆகஸ்ட் 15, 1947
ஆ) ஜனவரி 26, 1950
இ) ஜூன், 1948
ஈ) டிசம்பர், 1949
Answer:
இ) ஜூன், 1948

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
Answer:
1929-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில்

  • முதன் முறையாக, முழு விடுதலை வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
  • பூர்ண சுதந்திரம் அடைவதே, காங்கிரசின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.
  • உப்பு வரியை எதிர்த்து சட்டமறுப்பு இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Question 2.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
Answer:
லின்லித்கோ பிரபுவால் ஆகஸ்ட் கொடை 8 ஆகஸ்ட் 1940 அன்று அறிவிக்கப்பட்டது.

  • வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு செயற்குழுவை விரிவாக்கம் செய்தல்.
  • இந்திய உறுப்பினர்களை கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்கல்
  • சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்
  • போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல் இதுவே ஆகஸ்ட் நன்கொடையின் சிறப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
Answer:
கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தல் :

  • டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
  • அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
  • இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். எனவே கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தது.

Question 4.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
Answer:
சிம்லா மாநாடு:

  • வைஸ்ராய் வேவல் பிரபு ஜூன் 1945இல் பிரதமர் சர்ச்சிலின் ஒப்புதல் பெற்று சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
  • வைஸ்ராய்வைத்த முன்மொழிவின்படிவைஸ்ராய், முப்படைகளின் தளபதி இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் சமஅளவில் முக்கியத்துவம் அளித்து பிரதிநிதித்துவமும், பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவங்கத் திட்டமிடப்பட்டது.
  • இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாய் இல்லை.
  • தீர்மானமெனத்தையும் எட்டாமலேயே 25 ஜூன் முதல் 14 ஜூலை வரை நடந்த சிம்லா மாநாடு முடிவுந்தது.
  • குறிப்பாக வைஸ்ராயின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரஸிற்கும், முஸ்லீம்
    லீகிற்கும் இருந்த உரிமைப் பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய இராணுவத்தை ஏற்படுத்தினார்?
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படை வீரர்களால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை.
  • பிரிட்டிஷ் இந்திய படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படை வீரர்களை போர்க் கைதிகளாக
    விடுவித்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
  • மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடினார்.
  • ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர்.
  • ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க் கைதிகள் உருவானதில் மோகன்ராஜ் சிங்கின்
    கட்டுப்பாட்டில் 45,000 போர்வீரர்கள் வந்தனர்.
  • இவர்களில் 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை கேப்டன் மோகன் சிங் ஏற்படுத்தினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
Answer:

  • முஸ்லீம் லீக்
  • ஷிரோமணி அகாலிதல்
  • இந்து மஹாசபா ஆகிய அமைப்புகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை.

Question 2.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
Answer:

  • இந்தியாவை பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .
  • அரசியல் சாசன வரைவுக்குழு – மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும், அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களாலும் ஏற்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
  • ஏதாவது ஒரு மாகாணத்திற்கு புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இதில் பழைய வரைவுகளிலிருந்து மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
  • இது பற்றி நேரு, “நான் முதன் முறையாக இவ்வரைவை வாசித்தபோது கடுமையான மனஅழுத்தத்திற்கு
    உட்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.
Answer:

  • இந்திய தேசிய காங்கிரஸில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  • காங்கிரஸிற்குள் சுபாஷ் சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் போஸ் இராஜினாமா செய்தார்.
  • பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியை துவக்கியதோடு அதைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தையும்
    உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தனித்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனவே ஆகஸ்ட் 1939ல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Question 4.
1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?
Answer:
முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், முகமது இஸ்மாயில்கான் மற்றும் குவாஜா சர் நிஜாமுதீன் ஆகியோர் 1946ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவர்.

Question 5.
எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?
Answer:

  • துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். > போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
  • இதற்கிடையே ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலணிய அரசு இழுத்தடித்தது.
  • மறுபுறம் சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச்
    செல்ல நெருக்கடி கொடுத்தார்.
  • 1942ல் ஜெர்மனியில் இருந்து போஸ் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களை தொடர்பு
    கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில்தான் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி சிந்திக்கலானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
Answer:
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியால் காந்தி ஏமாற்றமடைந்தார். இயக்கத் தலைமையைக் காந்தியடிகளிடத்துக் காங்கிரஸ் ஒப்படைத்தது.
  • ஆகஸ்டு 8, 1942ல் காங்கிரஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கூறியது. விடுதலைக்கான கடைசி போராட்டம் என்று காந்தி அறிவித்தார். அவர் நிகழ்த்திய உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதே முடிவு என அறிவித்தார்.
  • ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரும்படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.
  • எல்லா முதன்மை தலைவர்களும் கைதாயினர். அடக்கு முறையையும் கொடுங்கோண்மையையும் அப்பாவி மக்கள் மீது அரசு ஏவியது.
  • ஆகஸ்டு 9ல் மும்பை, அகமதாபாத் மற்றும் புனேயில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆகஸ்ட் 11ல் நிலைமை விரைந்து மோசமானது.

இயக்கத்தின் போக்கு:

  • தீவைப்பு, கொள்ளை, படுகொலை ஆகியவற்றில் மக்கள் இறங்கித் தண்டவாளங்களை பெயர்த்துக் காவல் நிலையம், புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்குத் தீ வைத்தனர். இந்தியாவை விட்டு வெளியேறுக இயக்கம் தென்னிந்தியாவிலும் பெரும் ஆதரவு பெற்றது.
  • எதிர்ப்பின் ஆரம்பக்கட்டம் நகர்புறங்களை மையமாகக் கொண்டும் இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களிலும் பரவியது.
  • காங்கிரஸிற்குள் இருந்த சோசலிஷவாதிகள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களைக் கொரில்லா முறையில் ஒருங்கிணைத்தனர்.
  • காந்தியடிகளின் 10 பிப்ரவரி 1943ல் துவங்கி 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இயக்கத்திற்கு வலுவேற்றியது.

இயக்கத்தின் தீவிரம் :

  • துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 1060 பேர். அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும், 332 இருப்பு பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.
  • 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்து புரட்சியாளர்களோடு கைகோர்த்தனர்.

வானொலி பயன்படுத்தப்படல் :

  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் வானொலி ஒலிபரப்பு முறையை நிறுவி இதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவராவார்.
  • இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.
  • இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்கு தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறை சாற்றியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 2.
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
Answer:

  • டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்த ஜவஹர்லால் நேரு நீண்ட இடைவேளைக்குப் பின் தனது தொங்கலாடையை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.
  • காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது.
  • இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 10 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.
  • அண்மையில் இந்திய அரசியல் சட்டம் 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில்
  • ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.
  • இப்பின்புலத்தில் காலனிய அதிகாரம் ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லோம் ஆகிய
    மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
  • கடையடைப்புகளும், ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் 1 கடைபிடிக்கப்பட்ட போது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

Question 3.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
Answer:

  • போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழு பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயது தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
  • ஒரு வேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அம்முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
  • எல்லையில் அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  • இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்ட பின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 4.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
Answer:

  • போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, விலைவாசி ஏற்றத்திலும், உணவு, தானிய பற்றாக்குறையிலும் போர்கால தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் வேலையில்லா திண்டாட்டத்தின் மூலமும் பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வாக கிளம்பி இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.
  • HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார்.
  • இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாக பணியாற்றிய 1100 மாலுமிகள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர்.
  • தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்து கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
  • அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இருந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பினர்.
  • விரைவில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர்.
  • போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரை சார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 18 பிப்ரவரிக்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
  • மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பால நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப் படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
  • பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.
  • இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. தமிழ் நாட்டிலுள்ள இந்திய தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த விவரங்களையும்
படங்களையும் குறிப்பேட்டில் வைக்கவும்.
2. உமது பகுதியிலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய நபர்களின் குடும்பப் பின்புலம் குறித்தப் பட்டியல் ஒன்றைத் தொகுக்கவும்.

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸில் ………………… தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அ) அன்னிபெசன்ட்
ஆ) G. சுப்ரமணிய அய்யர்
இ) சுபாஷ் சந்திரபோஸ்
ஈ) ரவீந்திரநாத் தாகூர்
Answer:
இ) சுபாஷ் சந்திரபோஸ்

Question 2.
அமெரிக்காவின் முத்து துறைமுகம் ஜப்பானால் தாக்கப்பட்ட நாள்
அ) 7 டிசம்பர் 1941
ஆ) 17 டிசம்பர் 1941
இ) 17 டிசம்பர் 1940
ஈ) 7 ஜூன் 1941
Answer:
அ) 7 டிசம்பர் 1941

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கூற்று : புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினார்கள்.
காரணம் : இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா, அதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்

Question 4.
ஆகஸ்ட் நன்கொடையை அறிவித்தவர் ………………………………..
அ) லின்லித்கோ பிரபு
ஆ) ஸ்ட்ராஃபோர்டு
இ) மோதிலால் நேரு
ஈ) லிட்டன் பிரபு
Answer:
அ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு ……………………………….
அ) 1939
ஆ) 1942
இ) 1945
ஈ) 1947
Answer:
ஆ) 1942

Question 6.
சரியான கூற்றினை எடுத்து எழுதுக.
அ) லண்டனில் நடந்த 3வது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளும் அம்பேத்காரும் சென்றனர்.
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.
இ) தீண்டத்தகாதோருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை காந்தியடிகள் எதிர்க்கவில்லை.
ஈ) சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் தனித்தொகுதி இடம்பெறவில்லை .
Answer:
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 7.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை .
அ) பஞ்சாப் துணை ஆளுநர் – ரெஜினால்டு டையர்
ஆ) திராவிட இயக்கம் – தென்னிந்தியா
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி
ஈ) A.O. ஹுயூம் – காங்கிரஸ்
Answer:
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி

Question 8.
பின்வருவனவற்றுள் எது எவை சரியானவை அல்ல.
அ) அம்பேத்கார் ‘மஹத் சத்தியாகிரகம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார்.
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்
இ) 1932 ஆகஸ்டில் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
ஈ) 1909 இந்திய அரசியல் சட்டத்தின் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
Answer:
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடை தருக

Question 1.
தனிமனித சத்தியாகிரகம் என்பது என்ன?
Answer:

  • காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்ய விரும்பாததால் தனிமனித சத்தியாகிரகம் என்ற உபாயத்தைக் கைகொண்டார்.
  • காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்திப் போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தூண்டினார்.

Question 2.
தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல் பற்றி விவரி,
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்களில் முக்கியமானதாக கருதப்படுவது முத்துத் துறைமுகம் என்ற அமெரிக்க துறைமுகம் 7 டிசம்பர் 1941ல் தாக்கப்பட்டதாகும்.
  • அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத் தலைவரான ஷியாங் கே ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப் போக்கை நிறுத்த முனைந்தார்கள்.
  • ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ-சீனா இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின.
  • தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரட்டிஷாரையும் இந்திய தேசியக் காங்கிரஸையும் கவலை கொள்ள செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்திய தேசியப் படை பற்றி எழுதுக.
Answer:
அ. இந்திய தேசியப் படை உருவாதல்:

  •  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாளர்களைத் திரட்டினார்.
  • 1942 இல் பர்மாவை அடைந்தார்.
  • அங்க ஜப்பானியர் சுமார் 20000 இந்தியர்களை போர்க் கைதிகளாக வைத்திருந்தனர். ஜப்பானின் துணையுடன் இக்கைதிகளை ஒன்றுபடுத்தி ‘இந்திய தேசியப் படை’ என்ற இராணுவ அமைப்பை உருவாக்கினார்.

ஆ. இந்திய மக்கள் புத்துணர்வு பெறுதல் :

  • இந்தியக் கைதிகளை ஒன்றுபடுத்தி இந்திய தேசியப்படை என்ற இராணுவ அமைப்பை உருவாக்கியதன் மூலம், நேதாஜி இந்திய மக்கள் புத்துணர்வு பெறக் காரணமாக விளங்கினார்.
  • இவரது தாரக மந்திரமான ‘ஜெய்ஹிந்த்’ இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
  • ‘டில்லியை நோக்கி செல்’ என்ற கோஷத்தையும் நேதாஜி எழுப்பினார்.
  •  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மணிப்பூர் வரை இந்திய தேசியப் படை வந்தது.

இ. இந்திய தேசியப் படையின் தோல்வி:

  • 1946ஆம் ஆண்டு ஜப்பான் சரண்டையந்ததால் இந்திய இந்திய தேசியப் படையைச் சார்ந்த வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • அதே ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

12th History Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு …………….
அ. கிழக்கு ஜெர்மனி
ஆ. செக்கோஸ்லோவாக்கியா
இ. கிரீஸ்
ஈ. துருக்கி
Answer:
ஆ. செக்கோஸ்லோவாக்கியா

Question 2.
கூற்று : ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
காரணம் : கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
பனிப்போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர்
அ. பெர்னாட் பரூச்
ஆ. ஜார்ஜ் ஆர்வெல்
இ. ஜார்ஜ் கென்னன்
ஈ. சர்ச்சில்
Answer:
ஆ. ஜார்ஜ் ஆர்வெல்

Question 4.
கூற்று : மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம் ” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம் : சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 5.
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் …………………….
அ. ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது
ஆ. முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது
இ. ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது
ஈ. சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
Answer:
அ. ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
ட்ரூமன் கோட்பாடு …………… பரிந்துரைத்தது
அ. கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
ஆ. காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது
இ. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது
ஈ. அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது
Answer:
அ. கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

Question 7.
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1) வார்சா உடன்படிக்கை
2) சென்டோ
3) சீட்டோ
4) நேட்டோ
அ) 4 2 3 1
ஆ) 1 3 2 4
இ) 4 3 21
ஈ) 1 2 3 4
Answer:
அ) 4 2 3 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
……………. பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.
அ. மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது
ஆ. அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச் சுரண்டுவது
இ. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
ஈ. ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது
Answer:
இ. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது

Question 9.
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை ………….. எதிர்த்தது
அ. துருக்கி
ஆ. ஈராக்
இ. இந்தியா
ஈ. பாகிஸ்தான்
Answer:
ஆ. ஈராக்

Question 10.
“மூன்றாம் உலகம் ” எனும் பதத்தை உருவாக்கியவர் …………… ஆவார்.
அ. ஆல்பிரட் சாவே
ஆ. மார்ஷல்
இ. மோலோடோவ்
ஈ. ஹாரி ட்ரூமன்
Answer:
அ. ஆல்பிரட் சாவே

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 11.
பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க

அ. இந்தோனேசியா1. ஜவகர்லால் நேரு
ஆ எகிப்து2. டிட்டோம்
இ. கானா3. குவாமி நுக்ருமா
ஈ.யுகோஸ்லோவியா-4. கமால் அப்துல் நாசர்
உ. இந்தியா5. சுகர்னோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 16

Answer:
இ) 5 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு ………….. ல் நடைபெற்றது
அ. பெல்கிரேடு
ஆ. பெய்ஜிங்
இ. பாண்டுங்
Answer:
அ. பெல்கிரேடு

Question 13.
கூற்று : பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம் : மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க இது வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 14.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் ……………. உருவானது.
அ. 100 உறுப்பினர்களுடன்
ஆ. 72 உறுப்பினர்களுடன்
இ. 51 உறுப்பினர்களுடன்
ஈ. 126 உறுப்பினர்களுடன்
Answer:
இ. 51 உறுப்பினர்களுடன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 15.
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
கூற்று I : ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
கூற்று II : பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது. ‘
அ. I,II
ஆ. II,III
இ. I, III
ஈ. மேற்கூறப்பட்ட அனைத்தும்
Answer:
ஈ. மேற்கூறப்பட்ட அனைத்தும

Question 16.
சூயஸ் கால்வாய் செங்கடலை இணைக்கிறது.
அ. ஏடன் வளைகுடாவுடன்
ஆ. காம்பே வளைகுடாவுடன்
இ. மத்தியதரைக் கடலுடன்
ஈ. அரபிக் கடலுடன்
Answer:
இ. மத்தியதரைக் கடலுடன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 17.
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே ………….. வை சேர்ந்தவராவார்.
அ. பர்மா
ஆ. ஜப்பான்
இ. சிங்கப்பூர்
ஈ. நார்வே
Answer:
ஈ. நார்வே

Question 18.
கூற்று : 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம் : பிரிட்டனின் வெளியேற்றம் பிரெக்ஸிட்’ (Brexit) என அழைக்கப்படுகிறது.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 19.
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது …………………..
அ. ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை
ஆ. சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப் படுத்தப்படுவதை
இ. சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை
ஈ. பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை
Answer:
ஆ. சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப் படுத்தப்படுவதை

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 20.
சோவியத் யூனியன் …………………. இல் சிதறுண்ட து.
அ. நவம்பர் 17, 1991
ஆ. டிசம்பர் 8, 1991
இ. மே 1. 1991
ஈ. அக்டோபர் 17, 1991
Answer:
ஆ. டிசம்பர் 8, 1991

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவங்களைக் குறிப்பிடவும்.
Answer:

  • அமெரிக்கா உளவு நிறுவனம் CIA – மத்திய புலனாய்வு முகமை) – 1247இல் நிறுவப்பட்டது.
  • சோவியத் யூனியன் உளவு நிறுவனம் KB – சோவியத் யூனியன் உளவு நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.

Question 2.
கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டை விளக்குக

Answer:

  • அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ். டரூமன் “எந்த நாட்டை கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதாரம் ராணுவ உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்தார்.
  • இது அமெரிக்காவின் “கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல்” எனரும் கோட்பாட்டை வரையறை செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்.
Answer:

  • அமெரிக்காவின் முயற்சியால் ஐக்கிய நாட்டு பொது அவை “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • பாதுகாப்பு அவையானது நெருக்கடிகளில் உடன்பாடு எட்டப்படாமல் போனால் பொது அவை ராணுவத்தைப் பயன்படுத்தும் என பரிந்துரை செய்தது.
  • சோவியத் யூனியன் இது சட்டத்திற்கு புறம்பானது என எண்ணியது.

Question 4.
‘கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
Answer:

  • சோவியத் யூனியனில் கோமிங்பார்ம் எனும் அமைப்பு
  • ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.
  • இந்த அமைப்பு கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுக்க முயன்றது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த மறைமுக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • பனிப்போர் காலகட்டத்தில் நடைபெற்ற மறைமுக போர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு- கொரியப் போர், வியட்நாம் போர் ஆகும்.
  • வட கொரியா மற்றும் வட வியட்நாம் கம்யூனிச அரசுகளுக்கு சோவியத் யூனியன் ஆதரவளித்தது.
  • தென் கொரியாவுக்கும், தென் வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரவு அளித்தது.
  • இந்நிகழ்வு இருபெரும் வல்லரசுகளுக்கிடையே இருந்த பனிப்போரை எடுத்துக்காட்டுகிறது.

Question 6.
ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?
Answer:

  • ஸ்டாலின் ஆட்சியின் போது ஹங்கேரி பிரதமராக நியமிக்கப்பட்ட ரகோசி 1953ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • இம்ரே நெகி என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அரசாங்க ஆதரவு இல்லை.
  • அறிவார்ந்த மக்களால் ரகோசிக்கு நடத்தப்பட்ட கிளர்ச்சி 1956ல் அவர் பதவி விலகிய பின்னும் நீடித்து தேசிய எழுச்சியானது.
  • இம்ரே நெகி ஒரு கூட்டணி ஆட்சியை நிறுவினார். கிளர்ச்சி தொடரவே ரஷ்யா ஹங்கேரிக்கு படைகளை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 7.
ஷூமன் திட்டம் என்றால் என்ன?
Answer:

  • பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் சமரசம் ஏற்பட்டால் அது இரு நாடுகளுக்கு நன்மை என்றார் ஷீமன்.
  • இரு நாடுகளின் நிலக்கரி எக்கு கூட்டு உற்பத்தியை உயர்மட்ட ஆணையம் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என முன்மொழிந்தார்.
  • பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திட்டம் பரஸ்பர ஆர்வத்தை உருவாக்கி இரு நாடுகளையும் இணைத்தது.
  • இதுவே ஷீமன் திட்டம் ஆகும்.

Question 8.
பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட்சுருக்கதைக் கூறுக.
Answer:

  • சோவியத் அதிபர் கோர்பசேவ் பிரெஸ்தட்ரோகியா பற்றி அறிவித்தார்.
  • இதில் அரசியல் பொருளாதார மறு கட்டமைப்பின் அவசியத்தை விளக்கினார்.
  • இதன் மூலம் கோர்பசேவ் சோவியத் யூனியனிலுள்ள பல நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.
Answer:

  • மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதால் சோவியத் ரஷ்யா எதிர்வினை ஆற்றியது. – சோவியத் யூனியனும் அதன் நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு பரஸ்பர உதவி எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • போலந்து தலைநகர் வார்சாவில் கையெழுத்தானதால் இது வார்சா உடன்படிக்கை எனப்பட்டது.

Question 2.
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக..
Answer:

  • டம்பர்கள் ஒக்ஸ் மாளிகையில் அமெரிக்கா, சோவியத், சீனா, இங்கிலாந்து நாடுகள் ஒன்றுக்கூடி உலக அமைப்புக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினர்.
  • மாஸ்கோ பிரகடனம் பன்னாட்டு சங்கத்துக்கு பதில் வேறு உலக அமைப்பு உருவாக்கப்பட அங்கீகாரம் அளித்தது.
  • சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் இது தொடர்பான விவாதங்கள் நிறைவுற்று ஐ.நா. சாசனம் இறுதி செய்யப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
Answer:

  • அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பின்மையை உணர்ந்தன.
  • செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி அவர்கள் அச்சத்தை அதிகமாக்கியது.
  • இதனால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப்பாதுகாப்புத் தீர்வு காண விருப்பம் கொண்டன.
  • இப்பின்னணியில்தான் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

Question 4.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக
Answer:

  • 1956ல் எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
  • இக்கால்வாய் முன்னர் ஆங்கிலோ பிரெஞ்சு கால்வாய் கழகம் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
  • இதனால் இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் படைகள் எகிப்து மீது படையெடுத்து சீனாய் தீபகற்பம் மற்றும் செய்த் மீது தாக்கின.
  • ஐ.நா. கண்டனத்தையடுத்து இந்நாடுகள் போரை நிறுத்தி படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்தன. நாசர் வெற்றியாளரானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?
Answer:

  • சீட்டோ ஆசிய பசிபிக் பகுதியில் நோட்டோவின் பிரதிநிதியாக அமைந்தது.
  • பிலிப்பைன்ஸ் தாய்லாந்து மட்டும் இதில் சேர மற்ற நாடுகள் பங்கேற்க மறுத்தன.
  • சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
  • இதனால் சீட்டோ புகழ்பெறவில்லை .

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
Answer:

  • அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்தவர்கள், 1955ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டில் கீழே குறிப்பிடப்பட்டவற்றை இயக்கத்தின் இலக்குகளாகவும், நோக்கங்களாகவும் நிர்ணயம் செய்தனர்.
  • அடிப்படை மனித உரிமைகளை மதித்தல். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மதித்தல்.
  • அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் எல்லைப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மதித்தல்.
  • சிறியவை, பெரியவை என்றில்லாமல் அனைத்து இனங்களும், அனைத்து நாடுகளும் சமம் என அங்கீகரித்தல்.
  • அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமலும் குறுக்கீடு செய்யாமலும் இருத்தல்.
  • ஐ.நா சபையின் சாசனத்திற்கு இணங்க ஒவ்வொரு நாடும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளதை மதித்தல்.
  • வல்லரசு நாடுகளில் ஏதாவது ஒன்றின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டுப்பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பயன்படுத்தாதிருத்தல்.
  • எந்த நாடாக இருந்தாலும் அதன் அரசியல் சுதந்திரம், எல்லைப்பரப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அச்சத்தை ஏற்படுத்தும், இராணுவ நடவடிக்கைகள், வலியச் சென்று தாக்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தல்.
  • அனைத்துப் பன்னாட்டுப் பிரச்சனைகளுக்கும் அமைதியான வழியில் தீர்வு காணப்படவேண்டும்.
  • பரஸ்பர அக்கறை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • நீதி மற்றும் பன்னாட்டு கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்தல்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.
Answer:

  • 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு, யூதர்கள் நாடு என இரண்டாகப் பிரிப்பதற்கு ஐ.நா. சபை வாக்களித்து முடிவு செய்த உடனேயே பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் பார்களுக்கும் இடையே போர் மூண்டது.
  • பாலஸ்தீனத்திலிருந்து ஆங்கிலப்படைகள் வெளியேறிய பின்னா இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.
  • இஸ்ரேல் ஐ.நா.. சபை அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு கொண்டது.
  • ஐ.நா. சபையின் அமைதிகாக்கும் படை எகிப்து-இஸ்ரேல் எல்லையில் முகாமிட்டிருந்தது.
  • 1966 வாககில அமெரிக்கா இஸ்ரேலுக்கு புதிய ரக போர் விமானங்களையும் ஏவுகலைகளையும் வழங்கத் தொடங்கியது.
  • அடுத்து வந்த சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குமிடையே பதட்டம் அதிகரித்தது.
  • ஐ.நா. வின் படைகள் ஒட்டுமொத்தமாக எகிப்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
  • இதனைத் தொடர்ந்து 1967 மே 23இல் எகிப்து டைரன் கடலிடுக்கு வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.
  •  ஜூன் மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ நகரின் விமானத் தளங்களிலிருந்த விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • 6ம் நாள் போரின் முடிவில் பாலஸ்தீனியர்கள் மீதமிருந்த பகுதிகளான மேற்குக்கரை, காஜா முனை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு, சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகளையும் எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
  • பாலஸ்தீனியர்கள் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானமோர் இன்றும் இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்.
Answer:

  • 1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை பனிப்போரே வரையறை செய்தது.
  • அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் கம்யூனிசத்தை கட்டுப்படுத்தவும் விரும்பியது.
  • மற்றொரு புறத்தில் சோவியத் யூனியன் கம்யூனிசத்தைப் பரப்பவும். நட்பு நாடுகளுடன் நட்புணர்வைப் மேம்படுத்தவும் விரும்பியது.
  • இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன. அவை பொருளாதார உதவி. இராணுவ ஒப்பந்தம், உளவறிதல், பரப்புரை செய்தல், நேரடியாக மோதாமை, போரின் விளிம்புவரை செல்லுதல் ஆகியன.
  • மேற்காணும் அனைத்தும் உலகின் இருபெரும் வல்லரசுகள் நிகழ்த்திய போதும் ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டிக்க இயலாமல் மௌன பார்வையாளராகவே இருந்ததை உலகம் கண்டது.

Question 4.
போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து விவரிக்கவும்.
Answer:

  • போரிஸ் யெல்ட்சின் (1931 – 2007) 1961இல் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியரானார்.
  • எழுபதுகளில் பரவலாக அறியப்பட்டவரான இவர் கட்சியில் முக்கியப் பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
  • கோர்பசேவ் பதவிக்கு வந்த பின்னர் அவர் மாஸ்கோ கட்சி அமைப்பிலுள்ள ஊழல்களைக் களைவதற்காக போரிஸ் யெல்ட்சினை தேர்ந்தெடுத்தார்.
  • 1986இல் யெல்ட்சின் பொலிட்பீரோவின் உறுப்பினராக உயர்த்தப்பட்டார்.
  • விரைவில் அவர் மாஸ்கோவின் மேயராக நியமிக்கப்பட்டார்.
  • கட்சி கூட்டங்கள் சீர்திருத்தப் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக இவர் விமர்சனம் செய்ததால் கோர்பச்சேவின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
  • நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும், பொருளாதாரம் சீர்திருத்தப்பட வேண்டும் எனும் கருத்துக்களை அவர் முன்வைத்ததால் சோவியத் வாக்காளர்களிடையே பிரபலமானார்.
  • 1989 மார்ச்சில் சோவியத் யூனியனின் புதிய பாராளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஒரு இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.
  • ஓராண்டுக்குப் பின்னர், 1990 மே 29இல் கோர்பச்சேவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் பாராளுமன்றம் யெல்ட்சினை ரஷ்ய குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
  • இவரே சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1991இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐக்கிய நாடுகள் சபை தினத்தன்று (அக்டோபர் 24) மாணவர்களை ஒரு மாதிரி பொது சபை அமர்வை நடத்தச் செய்து இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரச்சனை குறித்து விவாதம் நடத்தச் செய்யலாம்.
2. மாணவர்களை இரு அணிகளாகப் பிரித்து முதலாளித்துவத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தலாம்.
3. ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10இல் வெளியிட்ட மனித உரிமைப் பிரகடன சாசனத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் ஆய்வு செய்யலாம்.

12th History Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
அ. முதல் உலகப்போர்
ஆ. 2ம் உலகப்போர்
இ. பனிப்போர்
ஈ. கொரியப் போர்
Answer:
இ. பனிப்போர்

Question 2.
இரண்டாம் உலகப்போரில் திட்டமிடப்பட்ட இன அழிப்பில் நாஜிக்களால் கொல்லப்பட்ட ஐரோப்பிய யூதர்கள்
அ. 6 ஆயிரம் பேர் –
ஆ. 6 மில்லியன் பேர்
இ. 6 கோடி பேர்
ஈ. 6 லட்சம் பேர்
Answer:
ஆ. 6 மில்லியன் பேர்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
சர்ச்சிலை போர் விரும்பி என விமர்சித்தவர்
அ. லெனின்
ஆ. ஸ்டாலின்
இ. குருச்சேவ்
ஈ. 2 ஆம் நிக்கோலஸ்
Answer:
ஆ. ஸ்டாலின்

Question 4.
“விலங்கு பண்ணை ” எனும் நூலின் ஆசிரியர்
அ. பெர்னார்டு பரூச்
ஆ. டவுன்ஷென்ட்
இ. ஜார்ஜ் ஆர்வெல் –
ஈ. எஸ். ட்ரூமன்
Answer:
இ. ஜார்ஜ் ஆர்வெல்

Question 5.
கூற்று : மார்ஷல் திட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்பார்ம் எனும்
அமைப்பு 1947 செப்டம்பரில் உருவாக்கியது.
காரணம் : கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளைத் தடுக்க முயன்ற இவ்வமைப்பு உறுப்பு நாடுகளிடையே கருத்தியல் ரீதியிலான, பொருட்கள் சார்ந்த தொடர்புகளை உருவாக்க முயன்றது. அ. கூற்று சரி. காரணம் தவறு
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று தவறு. காரணம் சரி.
ஈ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
Answer:
ஈ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
(IA எனபது …………………..
அ. சோவியத் உளவு நிறுவனம்
ஆ. அமெரிக்க உளவு நிறுவனம்
இ. இங்கிலாந்து புலன் விசாரணை அமைப்பு
ஈ. பாகிஸ்தான் உளவு நிறுவனம்
Answer:
ஆ. அமெரிக்க உளவு நிறுவனம்

Question 7.
பாண்டுங் மாநாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் நடைபெற்ற முதல் மாநாடு நடைபெற்ற இடம்.
அ. டெல்லி
ஆ. பாண்டுங்
இ. பெல்கிரேடு
ஈ. டாக்கா
Answer:
இ. பெல்கிரேடு

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
கீழ் காண்பவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1. வியட்நாமியப் போர்
2. கொரியப் போர்
3. ஐக்கிய நாடுகள் சபை
4. இரண்டாம் உலகப்போர்
அ. 12 3 4
ஆ. 2 3 41
இ. 3 412
ஈ. 4 3 21
Answer:
ஈ. 4 3 2 1

Question 9.
மார்ஷல் திட்டத்திற்கு டாலர் ஏகாதிபத்தியம் என கேலிப் பெயர் சூட்டியவர்.
அ. ஜோசப் ஸ்டாலின்
ஆ. மோலோ டோவ்
இ. லெனின்
ஈ. குரூச்சேவ்
Answer:
ஆ. மோலோ டோவ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க

அ. அணிசேரா மாநாடு1. சோவியத் ரஷ்யா
ஆ. இரண்டாம் உலகப்போர்2. இரும்புத்திசை
இ. சர்ச்சில் கூறியது3. பாண்டுங் மாநாடு
ஈ. மோலோவ் திட்டம்4. ஐ.நா. சபை

அ. 4 3 21
ஆ. 3 4 21
இ. 3 412
ஈ. 213 4
Answer:
ஆ. 3 4 2 1

Question 11.
கிரீஸில் உள்நாட்டுப் போர் வெடித்த ஆண்டு …………..
அ. 1941
ஆ. 1942
இ. 1944
ஈ. 1945
Answer:
ஈ. 1945

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
“மைக்” என பெயரிடப்பட்ட முதல் ஹைட்ரஜன் அணு குண்டை சோதனை வெடித்து பரிசோதனை செய்த நாள் ……………………
அ. 1955 நவம்பர் 22
ஆ. 1952 நவம்பர் 1
இ. 1952 நவம்பர் 22
ஈ. 1955 நவம்பர் 1
Answer:
ஆ. 1952 நவம்பர் 1

Question 13.
சோவியத் யூனியன் தனது முதல் குண்டை வெடித்து பரிசோதனை செய்த நாள் ……………………
அ. 1955 நவம்பர் 22
ஆ. 1955 நவம்பர் 1
இ. 1955 டிசம்பர் 5
ஈ. 1955 டிசம்பர் 22
Answer:
அ. 1955 நவம்பர் 22

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நீண்ட தந்தி – குறிப்பு தருக.
Answer:

  • 1946 பிப்ரவரி 22இல் மாஸ்கோவில் இருந்தவரும் அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்தவருமான ஜார்ஜ் கென்னன் அமெரிக்க அரசாங்கத்திற்கு 8,000 வார்த்தைகள் கொண்ட தந்தி ஒன்றை அனுப்பினார்.
  • இது நீண்ட தந்தி என்று அழைக்கப்படுகிறது
  • இந்த தந்தியில் முதலாளித்துவ உலகத்துடன் நீண்டகால, அமைதியான சமாதான சகவாழ்வை மேற்கொள்ளும் வாய்ப்பை சோவியத் யூனியன் பார்க்கவில்லை என உறுதியாகக் கூறி, உலக நாடுகளில் கம்யூனிசம் “விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவது” சிறந்த உத்தியாக இருக்கமுடியும்

Question 2.
பனிப்போர் தொடக்கத்திற்கான குறீயிடு யாது?
Answer:

  • மேற்கத்திய சக்திகள் 1949 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனி கூட்டாட்சி குடியரசை உருவாக்கியது. இது மேற்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது.
  • 1949 அக்டோபரில் சோவியத் ரஷ்யா ஜெர்மன் ஜனநாயக குடியரசை உருவாக்கின. இது கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது.
  • இவ்வாறு ஜெர்மனி பிரிக்கப்பட்டதே பனிப்போர் தொடக்கத்தின் குறியீடு ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
ட்ரூமன் கோட்பாடு என்பது என்ன?
Answer:

  • அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் “எந்த நாடுகளில் கம்யூனிச கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கப்போவதாக உறுதியளித்தார்.
  • இது கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்தும் வரையறை செய்தது. இது ட்ரூமன் கோட்பாடு எனப்படுகிறது.

Question 4.
மோலோ டோவ் திட்டம் பற்றி கூறுக.
Answer:
1949இல் சோவியத் ரஷ்யா மோலோடோவ் எனும் பெயரில் தனது பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, சோவியத் யூனியன், அதனை சார்ந்த நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்காகக் கோமிகன் என்ற பரஸ்பர பொருளாதார உதவிக்குழு’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
வார்சா உடன்படிக்கை ஏன் ஏற்படுத்தப்பட்டது?
Answer:

  • மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதை ஒரு நேரடி பயமுறுத்தலாகப் பார்த்த சோவியத் ரஷ்யா எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
  • 1955 மே மாதத்தில் சோவியத் யூனியனும் அதன் ஏழு ஐரோப்பிய நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு,  ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • போலந்தின் தலைநகரான வார்சாவில் இது கையெழுத்திடப்பட்டதால் இது வார்சாஉடன்படிக்கை எனப் பெயரிடப்பட்டது.

Question 6.
போரின் விளிம்பு வரை செல்தல் – விளக்கம் தருக.
Answer:

  • போரின் விளிம்பு வரை செல்வதென்பது, ஒரு நிகழ்வு, தனக்குச் சாதகமாக முடிய வேண்டும் என்பதற்காக ஆபத்தான நிகழ்வுகளை உண்மையான போர் நடைபெறுவதற்கான விளிம்பு வரை நகர்த்திச் செல்வதாகும்.
  • பன்னாட்டு அரசியலில், வெளியுறவுக் கொள்கைகளில், இராணுவ உத்திகளில் இது இடம் பெற்றுள்ளது.
  • இது அணு ஆயுதப்போர் குறித்த அச்சத்தையும் உள்ளடக்கியதாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 7.
ஐ.நா. சபையின் அங்கங்கள் யாவை?
Answer:

  • பொது சபை
  • பாதுகாப்பு சபை
  • பொருளாதார மற்றும் சமூக அவை
  • தர்மகர்த்தா அவை
  • பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நாவின் தலைமைச் செயலகம் ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கங்கள் ஆகும்.

Question 8.
ஐ.நா. சபையின் முக்கிய சிறப்பு நிறுவனங்களை கூறுக.
Answer:
ஐ.நா. சபை 15 சிறப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. அவற்றில்

  • பன்னாட்டு தொழிலாளர் சங்கம் (ILO)
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
  • பன்னாட்டு நிதியம் (IMF)
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ – UNESCO)
  • உலக சுகாதார அமைப்பு (WHO)
  • உலக வங்கி ஆகியவை சில முக்கியமான நிறுவனங்களாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 9.
ஐ.நா. சபை சாசனத்தின் முகவுரை கூறுவது யாது?
Answer:
போர்கள் மனிதர்களின் மனங்களிலிருந்து தொடங்குவதால் அம்மனிதர்களின் மனங்களில்தான் அமைதிக்கான பாதுகாப்புகளும் கட்டப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை சாசனத்தின் முகவுரையில்
கூறப்பட்டுள்ளது.

Question 10.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றி கூறுக.
Answer:

  • 1964க்கு முன்பு இரகசிய எதிர்ப்பியக்கங்களாக செயல்பட்ட பல்வேறு பாலஸ்தீனக் குழுக்களை ஒருங்கிணைப்பதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) 1964இல் உருவாக்கப்பட்டது.
  • 1967 ஜூனில் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போருக்குப் பின்னர் இவ்வமைப்பு முக்கியத்துவம் பெற்றது.
  • 1990களில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்பு 1980கள் முடிய PLO இஸ்ரேலுடன் நீண்ட நெடிய தற்காப்பு கொரில்லாப் போர்களில் ஈடுபட்டிருந்தது.
  • யாசர் அராபத் இவ்வமைப்பின் மகத்தான தலைவர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 11.
ஐரோப்பிய மாமன்றத்தில் கோர்பசேவ் நிகழ்த்திய உரையைப் பற்றி கூறுக.
Answer:

  • 1989 ஜூலை மாதத்தில் ஐரோப்பிய மன்றத்தில் உரை நிகழ்த்துகையில் கோர்பச்சேவ் தனக்கு முன்னர் அதிபராக இருந்த பிரஷ்னேவின் கோட்பாடுகளை நிராகரித்தார்.
  • மேலும் “நட்பு நாடுகளோ, கூட்டு சேர்ந்திருக்கும் நாடுகளோ அல்லது எந்த நாடுகளாக இருந்தாலும் அந்நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது அல்லது அவற்றின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளிறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது – விளக்குக.
Answer:

  • அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரண்டுமே நிரந்தரமான போருக்குத் தயாராக இருந்தன.
  • அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் பொதுவுடைமைப் பரவலைக் கட்டுப்படுத்தவும் விரும்பியது.
  • சோவியத் ரஷ்யா பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்பவும், தன் கோட்பாடுகளுடன் இணைந்து சென்று நட்புணர்வைப் பேணவும் கற்றுக் கொண்டன.
  • தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இவ்விரு சக்திகளும் பொருளாதார உதவி, இராணுவ ஒப்பந்தங்கள், பரப்புரை செய்தல், உளவறிதல், நேரடியாக மோதாமல், மறைமுகப் போர் அல்லது போரின் விளிம்பு வரை செல்லல் ஆகிய உத்திகளை கையாண்டன.
  • இதன் மூலம் 1945 முதல் 1991 வரை வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
நேட்டோ (NATO) அமைப்பைப் பற்றி கூறுக. (அல்லது) வட அட்லாண்டிக் ஒப்பந்தம் பற்றி விளக்கு.
Answer:

  • அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய பிரஸ்ஸல்ஸ் ஒப்பந்த நாடுகளும் இணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கின.
  • இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களில் யாராவது ஒருவர் தாக்கப்பட்டால் அத்தாக்குதல் அனைவர் மேலும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதுவதற்கு ஒத்துக்கொண்டன.
  • மேலும் அந்நாடுகள் தங்கள் படைகளை நேட்டோவின் கூட்டுத் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தன.

Question 3.
வார்சா உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள் யாவை? உடன்படிக்கையின் நோக்கங்கள் பற்றி விவரி.
Answer:
வார்சா உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள்:
சோவியத் யூனியன் அல்பேனியா, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளே வார்சா உடன்படிக்கை உறுப்பு நாடுகளாகும்.
நோக்கம்:

  • உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வெளிநாட்டுப் படைகளால் தாக்கப்படுமேயானால் ஏனைய உறுப்பு நாடுகள் தாக்கப்பட்ட நாட்டைப் பாதுகாக்க உதவிக்கு வர வேண்டும் என இவ்வொப்பந்தம் கூறுகிறது.
  • சோவியத் யூனியனைச் சேர்ந்த மார்ஷல் இவான் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவம் உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை அமைப்பை பற்றி விவரி.
Answer:
சீட்டோ (SEATO):

  • 1954 செப்டம்பரில் அமெரிக்கா, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை என்னும் இவ்வமைப்பு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவின் பிரதியாக அமைந்ததாகும்.
  • இவ்வுடன்படிக்கையின் தலைமையிடம் பாங்காங்.
  • சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
  • உள்நாட்டு ஆபத்துக்களை அந்தந்த நாடுகளே எதிர் கொள்ளவேண்டும்.
  • ஆனால் சீட்டோ அமைப்பானது நேட்டோ அமைப்பை போல செல்வாக்குப் பெற்ற அமைப்பாக இல்லை.

Question 5.
நேருவின் பஞ்சசீல கொள்கையை விவரி.
Answer:
நேருவின் பஞ்சீலக் கொள்கை:

  • நாடுகளிடையே இறையாண்மை, எல்லைப்பரப்பு குறித்த பரஸ்பர மரியாதை
  • பரஸ்பரம் ஆக்கிரமிப்பு இல்லாத நிலை
  • பரஸ்பரம் ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலிருத்தல்
  • சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை
  • சமாதான சகவாழ்வு

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
பாலஸ்தீன பிரச்சனையும் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவானதைப் பற்றியும் விவரி.
Answer:

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூதர்கள் தங்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் வேண்டுமெனக் கோரினர்.
  • அராபியர்கள் இதை எதிர்த்தனர்.
  • அப்பிரச்சனை ஐ.நா. சபையின் முன் வைக்கப்பட்டது. 1947 மே மாதம் ஐ.நா. சபையின் பொது சபை தீர்மானமொன்றை நிறைவேற்றியது.
  • அதன் மூலம் பாலஸ்தீன பிரச்சனை குறித்து விசாரித்து பரிந்துரைகள் வழங்க ஐ.நா. சபையின் பாலஸ்தீனத்திற்கான சிறப்பு குழுவொன்றை அமைத்தது.
  • பாலஸ்தீனம் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும், பெரும்பான்மை அராபியர்கள், யூதர்கள் குடியேறுவதற்கான நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரை செய்தது.
  • அரபியர்களுக்கு 45 விழுக்காடு நிலங்களைக் கொண்ட நாடும் 55 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்ட யூத நாடும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்படி 1948 மே 14இல் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

Question 7.
கொரிய போரில் ஐ.நா.வின் செயல்பாட்டை விளக்குக.
Answer:

  • கொரியா 1945இல் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
  • தொழிற்சாலை நிறைந்த வடக்கு மண்டலத்தை சோவியத் ரஷ்யா கைப்பற்றியது.
  • வேளாண்மை நிலங்களைக் கொண்ட தென்பகுதி அமெரிக்க கட்டுப்பாட்டில் வந்தது.
  • ஐ.நா. மேற்பார்வை தேர்தலில் தென் கொரியாவில் சிங்மேன் ரீ என்பவர் குடியரசுத் தலைவரானார்.
  • வடகொரியாவில் கிம் இல் சுங் தலைமையில் சோவியத் அரசு கம்யூனிச அரசை உருவாக்கியது. அதன்பிறகு அமெரிக்க, ரஷ்யப் படைகள் விலகின. தென்கொரிய குடியரசுத் தலைவர் கொரியாவை ஒன்றிணைப்பதே தனது குறிக்கோள் என அறிவித்தார்.
  • ஆனால் 1950 ஜூன் 25இல் வடகொரியப் படைகள் தென்கொரியா மீது வெளிப்படையாக போர் தொடங்கியது.
  • உடனடியாக ஐ.நா. பொது சபை கூடி உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
  • 1953 ஜூலையில் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானதோடு கொரியப் போர் முடிவுக்கு வந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
ஒற்றை ஐரோப்பியச் சட்டம் (SEA) பற்றி நீ அறிவது யாது?
Answer:

  • 1987 ஜூலை 1இல் நடைமுறைக்கு வந்த ஒற்றை ஐரோப்பிய சட்டம் ஐரோப்பிய பொருளாதார சமுதாய
    நோக்கத்தின் எல்லைகளை விரிவடையச் செய்தது.
  • இச்சட்டத்தின்படி ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் அதன் மக்கட்தொகையின் அடிப்படையில் பல வாக்குகள் வழங்கப்பட்டன.
  • ஒரு சட்டம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்கு தேவை.
  • இப்புதிய செயல்முறை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தது.
  • இது 1952 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள் அமைச்சர் குழுவின் ஒட்டுமொத்த ஒப்புதலைப் பெற்றால் சட்டமாக்கப்படலாம்.

Question 9.
ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? இதன் சிறப்புகளை கூறுக.
Answer:

  • ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து 1991 டிசம்பரில்
  • மாஸ்ட்ரிட்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
  • இதன் விளைவாக 1993இல் ஒற்றைச்சந்தையுடன் கூடிய ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டது.
  • இவ்வுடன்படிக்கை ஒரே ஐரோப்பியப் பணமான யூரோ உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
  • 2017இல் பிரிட்டன் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியது.
  • தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
மிகையில் கோர்பச்சேவால் உருவாக்கப்பட்ட கிளாஸ்நாஸ்ட் கோட்பாட்டை கூறி அது எவ்வாறு சோவியத் யூனியன் சிதைவுக்கு காரணமாயிற்று என்பதை விளக்குக.
Answer:
கிளாஸ்நாஸ்ட் கோட்பாடு:
சோவியத் யூனியனின் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவற்காக கோர்பசேவால் உருவாக்கப்பட்ட கோட்பாடே கிளாஸ்நாஸ்ட் கோட்பாடு ஆகும்.
கோட்பாட்டின் தன்மை:

  • சோவியத் யூனியனின் அரசியல் கட்டமைப்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
  • சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது.
  • அரசு அலுவலர்கள் விமர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டனர்.
  • செய்திகளை சுதந்திரமாகப் பரப்புவதற்கு கிளாஸ்நாஸ்ட் மூலம் ஊடகங்களுக்கு அனுமதி.
  • பேச்சு சுதந்திரம், கருத்து கூறும் சுதந்திரம் பெற்றனர்.

விளைவு:
இக்கோட்பாடுகள் சோவியத் யூனியனில் புரட்சிகர தாராளவாத அலைகளை உருவாக்கிய அதே சமயத்தில், அவையே சோவியத் யூனியனின் சிதைவுக்கும் காரணமாயிற்று.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி உருவான விதத்தை விவரி.
Answer:
ஜெர்மனி மண்டங்களாகப் பிரிக்கப்படல்:
யால்டா மற்றும் போட்ஸ்டாம் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி பெர்லினைத் தலைநகராகக் கொண்ட ஜெர்மனி – அமெரிக்க மண்டலம், இங்கிலாந்து மண்டலம், பிரெஞ்சு மண்டலம் மற்றும் சோவியத் ரஷ்யா மண்டலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மண்டலங்கள் இணைப்பு:

  • 1948இன் தொடக்கத்தில் மூன்று மேற்கு மண்டலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • மார்ஷல் திட்டத்தின் காரணமாக அப்பகுதி வேகமாக முன்னேறியது.

சோவியத் ரஷ்ய நெருக்கடி:

  • மேற்கு பொலினுக்கும் மேற்கு ஜெர்மானியப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் சோவியத் ரஷ்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. 1948 ஜூனில் மேற்கு பெர்லினுக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான அனைத்து சாலை, ரயில் போக்குவரத்துகளை சோவியத் யூனியன் துண்டித்தது.
  • 1949 மே மாதத்தில் சோவியத் ரஷ்யா நிலவழித் தொடர்புகள் மீதான தடையை நீக்கியது. அதன்பின் பிரச்சனையும் தீர்ந்தது.

ஜெர்மனி கிழக்கு மேற்காக பிரிதல்:

  • மேற்கத்திய சக்திகள் 1949 ஆகஸ்டில் ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசை உருவாக்கியது.
  • இது மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டது.
  • 1949 அக்டோபரில் சோவியத் ரஷ்யா ஜெர்மன் ஜனநாயகக் குடியரசை உருவாக்கின. இது கிழக்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அரபு – இஸ்ரேல் போர் பற்றியும், இதில் ஐ.நா. வின் தலையீட்டைப் பற்றியும் கட்டுரை வரைக.
Answer:
அரபு – இஸ்ரேல் போர் ஏற்படக் காரணம்:

  • 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு, யூதர்கள் நாடு என இரண்டாகப் பிரிப்பதற்கு ஐ.நா. சபை வாக்களித்து முடிவு செய்தது. இதனால் பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே போர் மூண்டது.
  • பாலஸ்தீனத்திலிருந்து ஆங்கிலப்படைகள் வெளியேறிய பின்னர் 1948 மே 15ல் இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.

ஐ.நா. சபை அறிவிப்பும் பாலஸ்தீனிய அகதிகளும்:

  • ஐ.நா. சபையின் பொதுக்குழு 1947-48 போரில் அகதிகளான பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றியது.
  • இதனால் போரும் முடிவுக்கு வந்தது. ஐ.நா. சபை அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு கொண்டது.
  • ஐ.நா. சபையின் அமைதிகாக்கும் படை எகிப்து-இஸ்ரேல் எல்லையில் முகாமிட்டிருந்தது.

அமெரிக்காவும் இஸ்ரேலும்:

  • 1966 வாக்கில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு புதிய ரக போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் வழங்கத் தொடங்கியது.
  • அதன் விளைவாக அடுத்து வந்த சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குமிடையே பதட்டம் அதிகரித்தது.
  • சிரியா கடற்கரைக்குச் சற்றுதொலைவில் அமெரிக்காவின் 6வது கப்பற்படை நிலை கொண்டது.

எகிப்து:

  • எகிப்தியப் பகுதிக்குள் இருந்த ஐ.நா.வின் படைகளையும், பார்வையாளர்களையும் இஸ்ரேலிய எல்லைக்கு அனுப்பும்படி எகிப்திய அதிபர் நாசர் கூறினார்.
  • ஐ.நா. சபை படைநகர்வு குறித்து அவர் கேட்க இயலாது என நாசருக்கு பதில் தெரிவித்தது.
  • 1967 மே 23இல் எகிப்து டைரன் கடலிடுக்கு வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.

இஸ்ரேல்-எகிப்து போர்:

  • ஜூன் மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ நகரின் விமானத்தளங்களிலிருந்த விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • ஆறாம் நாள் போரில் மேற்குக்கரை, காஜா முனை மற்றும் கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் குன்றுப் பகுதி, எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனியர்கள் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான மோர் இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 2

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 3

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 4

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 6

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 7

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 8

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 9

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 17

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 11

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 12

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 13

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 14

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 15

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.5 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 1.
Integrate the following with respect to x.
xe-x
Solution:
= ∫xe-x dx = ∫udv
∫udv = uv – u1v1 + u11 v2 ………
∫xe-x dx = (x) (-e-x) – (1) e-x + c
= -xe-x – e-x + c
= -e-x (x + 1) + c
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 2.
x³e3x
Solution:
= ∫x³e3x dx = ∫udv
∫udv = uv – u1v1 + u11 v2 – u111 v3 ………
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 2

Question 3.
log x
Solution:
∫log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
∫log x dx = (log x) (x) – ∫(x) (\(\frac { dx }{x}\)) + c
= x log x – ∫dx + c
= x log x – x + c
= x(log x – 1) + c
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 4.
x log x
Solution:
∫x log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 4

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 5.
\(\sqrt { 1-sin 2x }\)
Solution:
xⁿ log x
∫xⁿ log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 6.
x5 e
Solution:
∫x5 e dx = ∫x x4 e dx
Let t = x²
\(\frac { dt }{dx}\) = 2x
dt = 2xdx
xdx = \(\frac { dt }{2}\)
∫x x4 e dx = ∫t² et (\(\frac { dt }{2}\))
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 6

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.4 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.4

Question 1.
Integrate the following with respect to x.
2 cos x – 3 sin x + 4 sec² x – 5 cosec² x
Solution:
∫2 cos x – 3 sin x + 4 sec2 x – 5 cosec2 x
= 2 ∫ cos x dx – 3 ∫ sin x dx + 4 ∫ sec2 x – 5 ∫ cosec2 x dx
= 2 sin x + 3 cos x + 4 tan x + 5 cot x + c

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Question 2.
sin³x
Solution:
sin³x = 3 sin x – 4sin³x
4sin³x = 3 sin x – sin3x
⇒ sin³x = \(\frac { 1 }{4}\) [3 sin x – sin 3x]
∫sin³x dx = \(\frac { 1 }{4}\) ∫(3 sin x – sin3x) dx
= \(\frac { 1 }{4}\) [3(-cos x) – (\(\frac { -cos3x }{2}\)) + c
= \(\frac { -3 }{4}\) [cos x] + \(\frac { 1 }{12}\) (cos 3x) + c

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Question 3.
\(\frac { cos 2x+2sin^2x }{cos^2x}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Question 4.
\(\frac { 1} {sin^2x cos^2x}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Question 5.
\(\sqrt { 1-sin 2x }\)
Solution:
\(\sqrt { 1-sin 2x }\) dx = ∫\(\sqrt { sin^2x+cos^2x-2sinx cos x dx }\)
∫\(\sqrt { (sin x-cos x)^2 }\) dx
∫(sin x – cos x) dx = ∫sin x dx – ∫cos x dx
= -cos x – sin x + c
= -[cos x + sin x] + c

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.4

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.3 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.3

Question 1.
Integrate the following with respect to x.
∫(ex log a + ea log a – en log x
Solution:
(ex log a + ea log a – ea log x) dx
= ∫(elog ax + elog aa – ea log xn) dx
= ∫(a1 + aa – xⁿ) dx
= [\(\frac { a^x }{log|a|}\) + aa (x) – \(\frac { x^{n+1} }{(n+1)}\)] + c

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Question 2.
\(\frac { a^x-e^{x log b} }{e^{x log a} b^x}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Question 3.
(ex + 1)² ex
Solution:
∫(ex + 1)² ex dx = ∫[(ex)² + 2ex + 1]ex dx
= ∫(e2x. ex + 2ex. ex + ex) dx
= ∫(e3x + 2e2x + ex) dx
= \(\frac { e^{3x} }{3}\) + \(\frac { 2e^{2x} }{2}\) + ex + c
= \(\frac { e^{3x} }{3}\) + e2x + ex + c

Question 4.
\(\frac { e^{3x}-e^{-3x} }{e^{x}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Question 5.
\(\frac { e^{3x}+e^{5x} }{e^{x}+e^{-x}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3 3

Question 6.
[1 – \(\frac { 1 }{x^2}\)] e[x + \(\frac { 1 }{x}\)]
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3 4

Question 7.
\(\frac { 1 }{x(log x)^2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Question 8.
Given f'(x) = ex and f(0) = 2 then find f(x)
Solution:
f'(x) = ex
Integrating both sides of the equation,
∫ f'(x) dx = ∫ ex dx
⇒ f(x) = ex + c
given f(0) = 2
2 = e0 + c
⇒ c = 1
Thus f(x) = ex + 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.2 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 1.
Integrate the following with respect to x.
[\(\sqrt { 2x}\) – \(\frac { 1 }{\sqrt { 2x}}\)]²
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 2.
\(\frac { x^4+x^2+2 }{(x-1)}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 2

Question 3.
\(\frac { x^3 }{x+2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 4.
\(\frac { x^3+3x^2-7x+11 }{x+5}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 4

Question 5.
\(\frac { 3x+2 }{(x-2)(x-3)}\)
Solution:
By partial fraction
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 6.
\(\frac { 4x^2+2x+6 }{(x+1)^2(x-3)}\)
Solution:
By partial fraction
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 6
⇒ 4x² + 2x + 6 = A (x + 1)² + B (x – 3) (x + 1) + c (x – 3)
Put x = 3
4(9) + 2(3) + 6 = A(4)²
36 + 6 + 6 = 16A ⇒ A = \(\frac { 48 }{16}\)
A = 3
Put x = -1
4(1) + 2(-1) + 6 = C(-4)
4 – 2 + 6 = -4C ⇒ -4c = 8
C = -2
Put x = 0
6 = A(1) + B(-3) + C(-3)
6 = 3(1) – 3B + (-2) (-3)
6 = 3 – 3B + 6 ⇒ 3B = 3
B = 1
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 7

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 7.
\(\frac { 3x^2-2x+5}{(x-1)(x^2+5)}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2 8

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Question 8.
Given f'(x) = \(\frac { 1 }{x}\) and f (1) = \(\frac { 1 }{π}\), then find f(x)
Solution:
f'(x) = \(\frac { 1 }{x}\)
f(x) = ∫f'(x) dx = ∫\(\frac { 1 }{x}\) dx
f(x) = log|x| + c
f(1) = π/4 ⇒ log|1| + c = π/4.
⇒ 0 + c = π/4
∴ c = π/4
∴ Required f (x) = log |x| + π/4

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.1 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 1.
Integrate the following with respect to x.
\(\sqrt { 3x+5 }\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 2.
(9x² – \(\frac { 4 }{x^2}\))²
Solution:
A = \( \left[\begin{array}{cccc}
-2 & 1 & 3 & 4 \\
0 & 1 & 1 & 2 \\
1 & 3 & 4 & 7
\end{array}\right]\)
The order of A is 3 × 4
∴ P(A) < 3
Let us transform the matrix A to an echelon form
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 2
The number of non-zero rows = 3
∴ P(A) = 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 3.
(3 + x) (2 – 5x)
Solution:
∫(3 + x) (2 – 5x) dx
= ∫(6 – 15x + 2x – 5x²) dx
= ∫(6 – 13x – 5x²) dx
= 6x – \(\frac { 13x^2 }{2}\) – \(\frac { 5x^3 }{3}\) + c

Question 4.
√x (x³ – 2x + 3)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 5.
\(\frac { 8x+13 }{\sqrt{4x+7}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 4

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 6.
\(\frac { 1 }{\sqrt{x+1}+\sqrt{x-1}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 7.
Given f'(x) = x + b, f(1) = 5 and f(2) = 13, then find f(x)
Solution:
f(x) = ∫f'(x) dx
f(x) = ∫(x + b) dx = \(\frac { x^2 }{2}\) + bx + c
f (1) = 5 ⇒ \(\frac { (1)^2 }{2}\) + b(1) + c = 5
\(\frac { 1 }{2}\) + b + c = 5 ⇒ b + c = 5 – 1/2
b + c = \(\frac { 9 }{2}\) ⇒ 2b + 2c = 9 …….. (1)
f(2) = 13 ⇒ \(\frac { (2)^2 }{2}\) + b(2) + c = 13
2 + 2b + c = 13
2b + c = 11 ……… (2)
Solving eqn (1) & (2)
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1 6
Substitute c = -2 in eqn (2)
2b – 2 = 11 ⇒ 2b = 11 + 2
b = 13/2
f(x) = \(\frac { x^2 }{2}\) + \(\frac { 13x }{2}\) – 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1

Question 8.
Given f'(x) = 8x³ – 2x and f (2) = 8, then find f(x)
Solution:
f(x) = ∫f'(x)dx
= ∫(8x³ – 2x)dx = 8(\(\frac { x^4 }{4}\)) -2(\(\frac { x^2 }{2}\)) + c
f(x) = 2x4 – x² + c
f (2) = 8 ⇒ 2(2)4 – (2)² + c = 8
32 – 4 + c = 8 ⇒ c = -20
∴ f (x) = 2x4 – x² – 20

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.1