Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 13 நன்னெறி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 13 நன்னெறி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ வேண்டும்.

Question 2.
உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?
Answer:
என்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் நாம் பேசும் இன்சொற்களால் அனைவரும் மகிழ்வர். பிறர் நம்மிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று எண்ணுகிறோமா அதேபோல் நாமும் பிறரிடம் பேசவேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

சிந்திக்கலாமா?

இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?
Answer:
பிறர் மனதைப் புண்படுத்தாத சொற்களே இன்சொற்கள். நாம் எதிர்நோக்குபவர்களில் புதியவர், சிறியவர், பெரியவர், நண்பர், உறவினர் என எவராக இருந்தாலும் இனிமையாகப் பேசுதல் சிறப்பு. நலம் விசாரித்தல், உபசரித்தல் போன்றவையும் இன்சொல்லாகும்.
இன்சொல் பேசுவதனால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் கதைகளை, நிகழ்வுகளை நாம் பிறருக்குக் கூறலாம்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + சொல்
ஆ) இனிமை + சொல்
இ) இன்மை + சொல்
ஈ) இனிய + சொல்
Answer:
ஆ) இனிமை + சொல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

Question 2.
‘அதிர்கின்ற வளை’ – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்……………
அ) உடைகின்ற
ஆ) ஒலிக்கின்ற
இ) ஒளிர்கின்ற
ஈ) வளைகின்ற
Answer:
ஆ) ஒலிக்கின்ற

Question 3.
வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) வியன் + உலகம்
ஆ) வியல் + உலகம்
இ) விய + உலகம்
ஈ) வியன் + னுலகம்
Answer:
அ) வியன் + உலகம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல் மூலம் உணர்த்துக.
Answer:
உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும்.

Question 2.
கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்?
குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் பொங்கி எழும்.
1. இன்சொல் – கதிரவனின் ஒளி
2. வன்சொல் – நிலவின் ஒளி
3. அழல்கதிர் – கடுஞ்சொல்
4. தண்ணென் கதிர் – இனிய சொல்
Answer:
1. இன்சொல் – இனிய சொல்
2. வன்சொல் – கடுஞ்சொல்
3. அழல்கதிர் – கதிரவனின் ஒளி
4. தண்ணென் கதிர் – நிலவின் ஒளி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 4

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 5

செயல் திட்டம்

இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக.
Answer:
1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
8. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
நன்னெறி நூல் பற்றி எழுதுக.
Answer:

  • நீதி நூல்களுள் ஒன்று நன்னெறி.
  • இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
  • ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமை மூலம் ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது இந்நூலின் சிறப்பாகும்.

Question 2.
இன்சொல் – வன்சொல், நன்னெறிப் பாடல் மூலம் விளக்குக.
Answer:

  • கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.
  • அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்று நன்னெறி கூறுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

பாடல் பொருள்

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

Samacheer Kalvi 4th English Guide Book Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 4th English Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 4th Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std English Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

Samacheer Kalvi 4th English Book Solutions Guide Pdf Free Download

Tamilnadu State Board Samacheer Kalvi 4th English Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th English Book Back Answers

Samacheer Kalvi 4th English Book Solutions Term 1

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

Samacheer Kalvi 4th English Book Solutions Term 2

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

Samacheer Kalvi 4th English Book Solutions Term 3

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 4th English Book Solutions Answers Guide Pdf Free Download will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard English Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

வாங்க பேசலாம்

Question 1.
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.
Asnwer:
மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது.
உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு.

ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது.

அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார்.
உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார்.

மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார்.

வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார்.

மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

சிந்திக்கலாமா?

உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?
Answer:
நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன்.

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
Answer:
உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 2.
ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
Answer:
ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது.

Question 3.
மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்?
Answer:
மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Question 4.
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?
Answer:
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர்.
Answer:
அரபு

2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்………….
Answer:
மரியாதை ராமன்

3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது.
Answer:
யானை

4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின.
Answer:
பானைகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 1

சொல்லிப் பழகுவோம்

1. பட்டம் விட்ட பட்டாபி, பெட்டிக் கடையில் பொட்டலம் போட்டான்.
2. கன்று மென்று தின்றது.
3. வாழைப்பழத் தோலால் வழுக்கி விழுந்தான்.

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 3
1. மரியாதை இராமன் விசித்திரமான வழக்கை எதிர்கொண்டார்.
2. ஊர்வலத்தில் யானை தற்செயலாக இறந்துவிட்டது.
3. கதவின் பின்னால் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
4. பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக. பொருத்தமான தலைப்பிடுக.

நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.
Answer:
ஒற்றுமையே பலம்
ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது.

ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது.

மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 4
Answer:
இடமிருந்து வலம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

செயல் திட்டம்

வார இதழ்கள், செய்தித்தாள்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கிடைக்கும் யானை பற்றிய செய்திகளைத் தொகுத்து, செய்தித் தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?
Answer:
“ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 2.
உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?
Answer:

  • வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல்.
  • கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 3.
மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்?
Answer:

  • வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார்.
  • இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார்.
  • யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
“பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?
Answer:
நான் கூறும் விடை :
பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.

சிந்திக்கலாமா?

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?
Answer:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………
அ) பாய் + தோடும்
ஆ) பாய்ந்து + ஓடும்
இ) பயந்து + ஓடும்
ஈ) பாய் + ஓடும்
Answer:
ஆ) பாய்ந்து + ஓடும்

Question 2.
காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது……………….
அ) காலைப்பொழுது
ஆ) காலைபொழுது
இ) காலபொழுது
ஈ) காலப்பொழுது
Answer:
அ) காலைப்பொழுது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?……………………..
அ) மலை
ஆ) காடு
இ) நெகிழி
ஈ) நிலம்
Answer:
இ) நெகிழி

Question 4.
குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்……………………
அ) வியந்து
ஆ) விரைந்து
இ) துணிந்து
ஈ) வளைந்து
Answer:
ஈ) வளைந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………………………………..
அ) தன்னுடைய
ஆ) தன்உடைய
இ) தன்னுடைய
ஈ) தன்உடையை
Answer:
அ) தன்னுடைய

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
Answer:

  • நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன.
  • உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன.
  • மண் வளம் அழிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

Question 3.
‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?
Answer:
இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார்.

அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொந்த நடையில் கூறுக

உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த காய்கள், பழங்கள் : கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய், எல்லா வகையான கீரைகள், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், பப்பாளிப்பழம் ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை.

இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.

பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக

மாசு – ………………………..
வேளாண்மை – ……………………
Answer:
மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு
வேளாண்மை – உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

நிறுத்தக் குறியிடுக

Question 1.
நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

Question 2.
வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
Answer:
‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
ஆகா பயிர் அழகாக உள்ளதே
Answer:
ஆகா, பயிர் அழகாக உள்ளதே!

Question 4.
அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
Answer:
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

புதிய சொற்களை உருவாக்கலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகர வரிசைப்படுத்துக

தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை , தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்பம், தளிர்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொல்லக்கேட்டு எழுதுக

1. இயற்கை வேளாண்மை
2. உயிர்ச்சத்துகள்
3. செயற்கை உரங்கள்
4. நெல் மணிகள்
5. நண்டுகள்

கலையும் கைவண்ணமும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

உங்கள் வீட்டில் உருவாகும் காய்கறிக் கழிவுகளையும் மட்கும் குப்பைகளையும் பயன்படுத்தி, இயற்கை உரம் தயார் செய்க. அந்த உரத்தை வீட்டிலோ பள்ளியிலோ உள்ள தாவரங்களுக்குப் பயன்படுத்துக.

குழுவாக விளையாடலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 11

(i) படத்தில் உள்ளதுபோல் அட்டைகளைத் தயார் செய்து கொள்க.
(ii) முதல் அட்டையை அசையாமல் இருக்குமாறு வைத்துக்கொள்க.
(iii) இரண்டாவது அட்டை மட்டும் சுழலுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மேல் பக்கமாகக் கடிகார முள் போன்று செய்துவைத்துக் கொள்க.

(iv) மாணவர் ஒருவரை அழைத்து, முதல் அட்டையிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் பெயரைக் கூறச் சொல்லவேண்டும். அந்த மாணவரையே இரண்டாவது அட்டையையும் சுழற்றச் சொல்ல வேண்டும். கடிகார முள்ளிற்கு நேராக முதல் அட்டையில் கூறிய படத்திற்குப் பொருத்தமான படம் வந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் அடுத்தடுத்த சுற்றுக்கு வாய்ப்பு வழங்கியும் விளையாட்டைத் தொடரலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
– உழவு, குறள் 1033

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இளமாறன் மாடியிலிருந்து பார்த்தக் காட்சிகள் யாவை?
Answer:

  • மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
  • வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது.
  • தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு பசு, “ம்மா…” எனக் குரலெழுப்பியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்?
Answer:
இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வயலுக்குச் சென்றான்.

Question 3.
நெல்மணிகள் எவ்வாறு இருந்தன?
Answer:
நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன.

Question 4.
இளமாறன் எதைப் பார்த்து வியப்படைந்தான்?
Answer:
வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து, தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்தன. அதைப் பார்த்து இளமாறன் வியப்படைந்தான்.

Question 5.
நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?
Answer:
வயலில் வேலை செய்ததால்தான் தன் உடல் வலிமையாக உள்ளது என்றும், வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 6.
வயலைப் பற்றி இளமாறனின் தாத்தா கூறியது யாது?
Answer:
வயல்தான் தமக்குச் சொத்து. இங்கு விளைகின்ற பயிர்கள் மக்களை வாழவைக்கின்றன. உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் தம்மைப் போன்ற உழவர்களின் உழைப்பின் மூலமாகவே கிடைப்பதாக தாத்தா கூறினார்.

Question 7.
உழவர்கள் விளைவிப்பவை யாவை?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய்வித்துகள், காய்கள், பழங்கள்.

Question 8.
ஈடு இணை இல்லாதது என்று தாத்தா குறிப்பிட்டது என்ன?
Answer:
உழவர்களின் தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என தாத்தா குறிப்பிட்டார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிறுவினா:

Question 1.
தாத்தா இயற்கை உரம், செயற்கை உரம் பற்றிக் கூறியனவற்றை எழுதுக.
Answer:
இயற்கை உரம்:

  • ஆடு மாடுகளின் சாணத்தை ஒன்று சேர்த்து எருவாக்கி, நிலத்தில் போடுதல்.
  • தாவரங்களின் தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்தல்.
  • இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாம் நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிர்ப்புச் சக்தியோடும் வாழலாம்.

செயற்கை உரம்:

  • செயற்கை உரங்களைத் தெளிப்பதனால் தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழு போன்றவை அழிந்து விடுகிறது. அதனால் மண் மாசடைகிறது.
  • செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளிப்பதனால் தண்ணீர் மாசடைகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடிநீர் மாசடைகிறது.
  • இவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து புதிய புதிய நோய்கள் வருகின்றன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 10 காவல்காரர் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 10 காவல்காரர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வாங்க பேசலாம்

Question 1
கதைப்பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கதைப் பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
பாடலின் பொருளைப் புரிந்து கொண்டு பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருள் புரிந்து பாட வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது.

காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.

காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

சிந்திக்கலாமா?

சூழல் -1 மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.
சூழல் – 2 வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
சூழல் ஒன்றுதான் போற்றத்தக்கது. மீனாவின் அம்மாவைப் போல் நாமும் அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும்பழகவேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பைப் பெறுவர். வளரும் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சூழல் இரண்டு யாரும் பின்பற்றக் கூடாத குணம். உதவி செய்து வாழ்வதைப் பற்றி முதலில் வளவனின் அப்பா அறிய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பெயர் + இலாத
ஆ) பெயர் + இல்லாத
இ) பெயரில் + இல்லாத
ஈ) பெயரே + இல்லாத
Answer:
ஆ) பெயர் + இல்லாத

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்…………………
அ) கீழே
ஆ) அருகில்
இ) தொலைவில்
ஈ) வளைவில்
Answer:
அ) கீழே

Question 3.
‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது……………………
அ) உயிருள்ள பொருள்
ஆ) உயிரற்ற பொருள்
இ) இயற்கையானது
ஈ) மனிதன் செய்ய இயலாதது
Answer:
ஆ) உயிரற்ற பொருள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….
அ) அசைய இல்லை
ஆ) அசைவில்லை
இ) அசையவில்லை
ஈ) அசையில்லை
Answer:
இ) அசையவில்லை

Question 5.
நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்…………………….
அ) நாளும்
ஆ) இப்பொழுதும்
இ) நேற்றும்
ஈ) எப்பொழுதும்
Answer:
அ) நாளும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?
Answer:
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

Question 2.
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?
Answer:
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?
Answer:
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

Question 4.
காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
Answer:
காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 2

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 4

இணைத்த சொற்களைக் கீழே எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 5
Answer:
1. சரிகை வேட்டை
2. கறுப்புக் கோட்டு
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை
5. கனத்த மழை.

பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 6
Answer:
மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா
குழந்தைச் செல்வம் யாவுமே
கூடிஆடும் திருவிழா
குமரிப் பெண்கள் யாவரும்
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும்
கலைகட்டும் திருவிழா.

உரைப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள் :
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 7

Question 1.
வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
Answer:
பூ, காய், கனி, தண்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது.

Question 3.
வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.
Answer:
செவ்வாழை, பூவன் வாழை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
வாழை + இலை

Question 5.
பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.
Answer:
சிலவகை.

செயல் திட்டம்

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளைத் திரட்டுக.

Question 1.
தோட்டத்தின் பெயர்
Answer:
இயற்கைத் தோட்டம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
உரிமையாளர் பெயர்.
Answer:
சிவராமன்.

Question 3.
தோட்டம் அமைந்திருக்கும் ஊர்
Answer:
பருத்திப்பட்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம்.
Answer:
கிணறு.

Question 5.
தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.
Answer:
கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

Question 6.
தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை.
Answer:
நன்றாக உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

அறிந்து கொள்வோம்

  1. தோட்டத்தில் பூச்சி தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.
    2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.
    3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தோட்டத்தில் இருந்த பொம்மையைக் காகம் என்ன என்று நினைத்தது?
Answer:
தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையை காவல் காக்கும் உயிருள்ள மனிதர்’ என்று காகம் நினைத்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
காகம் பொம்மைக்கு ஏன் புதிய ஆடைகளைக் கொடுத்தது?
Answer:
பொம்மை அணிந்திருந்த ஆடைகள் கனத்த மழையால் கிழிந்திருந்தன. அதனால் காகம் பொம்மைக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்தது.

Question 3.
காகம், மற்ற பறவைகளை ஏன் கூவி அழைத்தது?
Answer:
தோட்டத்தில் இருந்த பொம்மை ‘உயிருள்ள மனிதர்’ என்று எண்ணி பறவைகள் அங்கு வராமலிருந்தன. அது உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்ததால் காகம், மற்ற பறவைகளையும் கூவி அழைத்தது.

Question 4.
அழ.வள்ளியப்பா, குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
Answer:
அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 5.
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் யார்?
Answer:
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா ஆவார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
கல்லணை பற்றி உனக்குத் தெரிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறு.
Answer:
(i) கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

(ii) கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு. 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் ஆகும். 1839-இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.

(iii) பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

(iv) இநத் அணையைக் கரிகாலன் என்ற சோழமன்னன் கட்டினான். தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் என்றும் கூறப்படுகிறது.

(v) இவ்வணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டது. கல்லணையைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
உமது ஊரில் உள்ள மிகப் பழைமையான இடம் எது? அதுபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலை :
பாண்டி! நமது ஊரில் உள்ள மிகப்பழமையான இடம் என்று எதை நினைக்கிறாய்?
விமல் : மதுரை மீனாட்சியம்மன் கோவில் தான் என்று நினைக்கின்றேன்.
கலை : சரி, கோவிலைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
விமல் : தெரியுமே. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

கலை : ஆமாம், இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலகோயிலாக உள்ளது.
விமல் : இக்கோயில் திராவிடக் கட்டக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாவும் விளங்குகிறது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

கலை : தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாக உள்ளது.
கலை : இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

விமல் : இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
கலை : அவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
விமல் : உண்மையிலேயே இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றி பாண்டி!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிந்திக்கலாமா?

கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?
Answer:
கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்காரணம், கோடைக் காலங்களில் மழை பொழிவது இல்லை. அதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி விடுகிறது வறண்டும் போய் விடுகிறது. இந்த நேரங்களில் தான் அதிகமாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மனிதனின் பேராசையாலும் நீர் சுரண்டப்படுவதாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும் காரணமாகும். இங்கு அதிகமான நீர்நிலைகள் இல்லாததும் இருப்பதை முறையாக பராமரிக்காமல் விட்டதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர்ப்பற்றாக்குறைறைப் போக்க என்ன செய்வாய்?
Answer:
நீர்ப்பற்றாக்குறையைப் போக்க பல அணைகள் கட்டலாம். ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டலாம். நீர்நிலைகளைக் கோடைக்காலங்களில் முறையாக தூர்வாரி பராமரித்து, மழைக்காலங்களில் அதிக நீரை சேகரித்து வைக்கலாம். புதிய புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்து நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். இருக்கின்ற நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 1
Answer:

1. துயரம் இச்சொல் குறிக்கும் பொருள் துன்பம்
2. வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள் ஆச்சரியம் தரும்.
3. முறியடித்து இச்சொல் குறிக்கும் பொருள் தகர்த்து
4. சூழ்ச்சி இச்சொல் குறிக்கும் பொருள் தந்திரம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) பெருமை + வெள்ளம்
ஆ) பெரு + வெள்ளம்
இ) பெரு + வுள்ளம்
ஈ) பெரிய + வெள்ளம்
Answer:
அ) பெருமை + வெள்ளம்

Question 2.
தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) தங்கி + இருந்த
ஆ) தங்கி + யிருந்த
இ) தங்கியி + ருந்த
ஈ) தங்கு + இருந்த
Answer:
அ) தங்கி + இருந்த

Question 3.
அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) அமைந் + துள்ளது
ஆ) அமைந்து + உள்ளது
இ) அமைந்து + ள்ளது
‘ஈ) அமைந் + உள்ளது
Answer:
ஆ) அமைந்து + உள்ளது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
அரசு + ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் …………………………
அ) அரசஆட்சி
ஆ) அரசாட்சி
இ) அரசுசாட்சி
ஈ) அரசு ஆட்சி
Answer:
ஆ) அரசாட்சி

Question 5.
நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) நீர்பாசனம்
ஆ) நீர்ப்பாசனம்
இ) நீரப்பசனம்
ஈ) நீர்பாசனம்
Answer:
ஆ) நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியானதை எடுத்து எழுதுக

1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ………………………… (திருச்சி/ தஞ்சாவூர்)
Answer:
தஞ்சாவூர்

2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு ………………………… (வைகை / கொள்ளிடம்)
Answer:
கொள்ளிடம்

3. கல்லணையைக் கட்டிய அரசன் ………………………… . (கரிகாலன்/இராசராசன்)
Answer:
கரிகாலன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

4. கல்லணை ………………………… தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. (பழந்தமிழர்/இன்றைய)
Answer:
பழந்தமிழர்

வினாக்களுக்கு ஏற்ற விடையளிக்க

Question 1.
கரிகாலனின் இயற்பெயர் என்ன?
Answer:
கரிகாலனின் இயற்பெயர் வளவன்.

Question 2.
கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
Answer:
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

Question 3.
கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?
Answer:
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும். ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மக்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.
Answer:
தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இன்று வரை இது வியத்தகு சாதனையாக உள்ளது.

மொழியோடு விளையாடு

ஒரே எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 4
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

Question 1.
நூலகத்திற்குச் சென்று வரலாற்று நூல்களைப் படித்து யாரேனும் ஐந்து அரசர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த நற்செயல்களையும் தெரிந்து கொண்டு அட்டவணையை நிரப்பி வருக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
கல்லணை திருச்சியிலிருந்து ………………………… கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) 15
ஆ) 20
இ) 10
ஈ) 25
Answer:
ஆ) 20

Question 2.
மணிமொழியும், கனிமொழியும் ………………….. க்குச் சென்றனர்.
அ) திருச்சி
ஆ) பெரியகோவில்
இ) கல்லணை
ஈ) வேலூர்
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
கரிகாலன் ………………………… யின் மகன் ஆவான்
அ) வீரய்ய ன்
ஆ) பொம்மு நாயக்கர்
இ) இராஜராஜன்
ஈ) இளஞ்சேட் சென்னி
Answer:
ஈ) இளஞ்சேட் சென்னி

Question 4.
உலகின் மிகப் பழமையான ஆணை …………………..ஆகும்.
அ) மேட்டூர் அணை
ஆ) பவானி சாகர் அணை
இ) கல்லணை
ஈ) வைகை அணை
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
காவிரி ஆறு ………………….. ஆகப் பிரிகிறது.
அ) 3
ஆ) 5
இ) 4
ஈ) 6
Answer:
இ) 4

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கல்லணை எங்கு உள்ளது?
Answer:
கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இது திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
கல்லணை கட்டப்பட்ட முறையை எழுதுக.
Answer:

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
  • அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கறையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடும் ஒன்று ஒட்டிக் கொள்ளும்படி செய்தனர்.

Question 3.
கல்லணை எப்போது கட்டப்பட்டது?
Answer:
கல்லணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

Question 4.
காவிரி ஆறு எந்தெந்த ஆறுகளாகப் பிரிகிறது?
Answer:

  • காவிரி
  • கொள்ளிடம்
  • வெண்ணாறு
  • புது ஆறு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
கல்லணை பயன்பெறும் மாவட்டங்கள் யாவை?
Answer:
திருச்சி, தஞ்சாவூர்.

அகர முதலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 9

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 8 விடியும் வேளை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 8 விடியும் வேளை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வாங்க பேசலாம்

Question 1.
மன்னவனூர் கிராம வருணனையை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
மன்னவனூர் ஓரு அழகான மலைக்கிராமம். எங்குப் பார்த்தாலும் பச்சை பட்டு உடுத்தியது போல் பச்சைப்சேலேன காட்சியளிக்கும். பஞ்சுப் பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் வளைந்து நெளிந்து சொல்லும் பாதைகள். பனைஓலை வேய்ந்த குடிசைகள், மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில் பசுங்கன்றென ஓடியாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இதுப் போன்ற காட்சிகள் மன்னவனூர் கிராமத்தில் நாம் காணலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
உமது ஊரின் மாலை நேரக் காட்சிகளை வருணித்துக் கூறுக.
Answer:
மாலை நேரத்தில் சூரியன் தன் சிவந்த கதிர்களை வீசிக்கொண்டிருந்தான். அந்தக் கதிர்கள் குளத்து நீரில் படவே, குளத்து நீர் தகதகவெனதங்கம் போல் மிளிர்ந்தன. சூரியனை மறைக்க கருமேகங்கள் படையெடுத்து வந்தன. சூரியனும் தன் கதிர்களை மறைத்துக் கொண்டிருந்தான். பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி பறந்த வண்ணமாய் இருந்தன. பறவைகளின் கூச்சல் பழைய இசைகளை எழுப்பின.

வண்டுகள் ரீங்காரமிட்டு பறந்தன. இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தன. மக்களும் மாக்களும் தம் இருப்பிடங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. நிலவும் கண்ணில் பட தொடங்கியது. ஊரே அமைதி காத்தது. மலைகள் கரு நிறத்தில் தோன்ற ஆரம்பித்தது. மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் தென்றலின் போக்கிற்கு ஏற்ப நடனமாடின. இப்படியாக இனிய இரவும் வந்து சேர்ந்தது.

Question 3.
பாடப் பகுதியை வாய்விட்டுச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்களே தாங்களாகவே பாடப் பகுதியை வாய்விட்டுச் சரியான உச்சரிப்புடன் படித்து காட்ட வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

சிந்திக்கலாமா?

படத்திலுள்ள எந்தக் கிராமத்தில் நீ வாழ விரும்புகிறாய் ஏன்? உனது ஊரைச் சுத்தமாக்க என்ன செய்யலாம்? திட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 2

இவற்றில் பசுமையான கிராமத்தில் வாழ விரும்புகிறேன்.
நம் முன்னோர்கள் பசுமையான கிராமத்தில் வாழ்ந்ததனால், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். பருவமாற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தனர். சுத்தமான காற்றையே சுவாசித்தனர். இயற்கையை மிகவும் நேசித்தனர். இயற்கையும் அவர்களை நேசித்தது. கூட்டு வாழ்வு வாழ்ந்தனர். இல்லங்களிலும், ஊர்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவின. சத்தான உணவுகளையே உண்டனர். இயற்கை உரங்களையே பயன்படுத்தினர். மரங்களையும் செடி கொடிகளையும் அதிகம் வளர்த்தனர். இத்தகைய கிராமத்தில் வாழவே நான் விரும்புகிறேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

எனது ஊரைச் சுத்தமாக்க மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை முதலில் கொடுக்க வேண்டும். சுத்தத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும். சுத்தம் உள்ள இடத்தில் தான் சுகம் இருக்கும் என்பதைக் கடைப்பிடிக்க வழி வகை செய்ய வேண்டும். தெருக்கள் தோறும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். அதிலேயே குப்பைகளைப் போட அறிவுறுத்த வேண்டும். மக்களை ஊரை நேசிக்கச்செய்தாலே ஊர் சுத்தமாகி விடும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 4

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
சாலையெங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) சாலை + யெங்கும்
ஆ) சாலை + எங்கும்
இ) சால + எங்கும்
ஈ) சால + யெங்கும்
Answer:
ஆ) சாலை + எங்கும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
சுண்டியிழுக்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………………..
அ) சுண்டி + யிழுக்கும்
ஆ) சுண் + டியிழுக்கும்
இ) சுண்டு + இழுக்கும்
ஈ) சுண்டி + இழுக்கும்
Answer:
ஈ) சுண்டி + இழுக்கும்

Question 3.
ஓடி + ஆடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) ஓடிஆடி
ஆ) ஓடியோடி
இ) ஓடியாடி
ஈ) ஓடியாடி
Answer:
இ) ஓடியாடி

Question 4.
காலை + பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) காலை பொழுது
ஆ) கால்பொழுது
இ) காலைப்பொழுது
ஈ) காலப்பொழுது
Answer:
இ) காலைப்பொழுது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 5.
வரகு + அரிசி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) வரகரிசி
ஆ) வரகு அரிசி
இ) வரக்கரிசி
ஈ) வரகுகரிசி
Answer:
அ) வரகரிசி

Question 6.
உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) உணவு அளிக்க
ஆ) உணவளிக்க
இ) உணவுவளிக்க
ஈ) உணவ்வளிக்க
Answer:
ஆ) உணவளிக்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
அழகிய மலைக் கிராமத்தின் பெயர் என்ன?
Answer:
அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர் ஆகும்.

Question 2.
கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.
Answer:
மழை பெய்து ஓய்ந்திருந்தது, சாலையெங்கும் தண்ணீர் நிறைந்திருந்தது. மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.

Question 3.
பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?
Answer:
பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டைத் துவையலும் சாப்பிட்டனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

எ.கா:
பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிக்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.

உரைப்பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க

சிறு தானிய உணவுகளே நம் உடல் நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத் தான் நம் முன்னோர் “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறு தானிய உணவுகளை உண்போம்!
வளமான வாழ்வைப் பெறுவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 1.
எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
Answer:
சிறுதானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது.

Question 2.
சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக.
Answer:
தினை, வரகரசி, கேழ்வரகு, கம்பு.

Question 3.
துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
Answer:
துரித உணவு வகைகள் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவதால் அவைகளை உண்ணக் கூடாது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
அறிவுமதி அரைத்த துவையல் …………….. துவையலாகும்.
அ) கடலை
ஆ) பிரண்டை
இ) தேங்காய்
ஈ) தக்காளி
Answer:
ஆ) பிரண்டை

Question 2.
கொடியடுப்பில் பருப்புடன் ……………….. வெந்து கொண்டிருந்தது.
அ) வெங்காயம்
ஆ) தக்காளி
இ) பூண்டு
ஈ) காயம்
Answer:
இ) பூண்டு

Question 3.
பிள்ளைகள் ……………………..செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர்.
அ) கோவிலுக்கு
ஆ) பள்ளிக்கு
இ) வீட்டிற்கு
ஈ) வயலுக்கு
Answer:
ஆ) பள்ளிக்கு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அம்மாவின் பொட்டு எதைப் போல் இருந்தது?
Answer:
அம்மாவின் நெற்றியில் சிவப்பாக குங்குமப் பொட்டு வட்ட நிலா போல இருந்தது.

Question 2.
பிள்ளைகள் எதில் அமர்ந்து உணவு உண்டனர்?
Answer:
பிள்ளைகள், பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப் பலகையில் அமர்ந்து உணவு உண்ட னர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 3.
அறிவுமதி எப்பாத்திரத்தில் சமைத்தாள்?
Answer:
அறிவுமதி விறகு அடுப்பில் கருத்த மண்சட்டியில் சமைத்தாள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 7 வெற்றி வேற்கை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 7 வெற்றி வேற்கை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

வாங்க பேசலாம்

Question 1.
பாடலின் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருளை தன் சொந்த நடையில் கூற வேண்டும்.

Question 2.
உனக்கு உனது நண்பன் செய்த சிறிய உதவி, அந்த நேரத்தில் பெரியதாக இருந்த அனுபவத்தைப் பற்றிப் பேசு.
Answer:
ஒருமுறை நான் பேருந்து நிறுத்தத்தில் ஒரு முதியவரைப் பார்த்தேன். அவர் வெகு நேரமாய் ஒவ்வொரு நபரிடமும் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்தப் பதிலும் யாரும் சரியாக தராததைப் பார்த்து, அவர் அருகில் சென்று காரணம் கேட்டேன். அவர் அருகில் உள்ள ஊருக்குச் செல்ல வேண்டுமாம். பையில் வைத்திருந்த காசு எங்கேயோ விழுந்து விட்டதாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

அதனால் ஊருக்குச் செல்லக் காசு கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். நான் எவ்வளவு தேவை என்று கேட்டபோது, ரூபாய் 15 என்று கூறினார் வருத்தத்துடன். நான் வேகமாக வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் செய்தியைச் சொல்லி 15 ரூபாய் வாங்கி வந்து அந்த முதியவரிடம் கொடுத்தேன்.

அவர் கண் கலங்கியபடியே வாங்கிக் கொண்டு, எனக்கு நன்றி கூறி வாழ்த்தியும் சென்றார். நான் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும், அது அவருக்குப் பெரியதாக தோன்றியது.

சிந்திக்கலாமா?

சிறு சிறு உதவிகளை பிறருக்குச் செய்வது பற்றி உனது கருத்து என்ன? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
கமலன் : ராமு! சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாறன் : கட்டாயம் நாம் அவற்றை நாம் செய்ய வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
மாறன் : சரி, அப்படி நீ செய்யும் போது உன் மனநிலை எப்படியிருக்கும்?
கமலன் : அப்படி உதவி செய்யும் போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல மனதில் தோன்றும். உனக்கு எப்படியிருக்கும்?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

மாறன் : ராமு எனக்கும் அதே மனநிலைதான் இருக்கும். நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறதே!
கமலன் : நமக்கு மட்டுமல்ல, நம்மைப்போல உதவி செய்கின்ற அனைவருக்குள்ளும் இதே ஒற்றுமையிருக்கும். இப்படி உதவி செய்கிறவர்களால்தான் இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மாறன் : ஆமாம், ராஜா! சரியாகச் சொன்னாய். மனிதர்கள் மனிதருக்கு உதவி செய்வதுதான் மானுடத்தின் மாண்பு. ஆனால் இதைப் புரிந்து எல்லோரும் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

கமலன் : ஆமாம்பா சரியாக சொல்கிறாய். நாம் செய்கிற சிறிய உதவிகூட பலருக்குப் பேருதவியாக அமைந்து விடுகிறது.
மாறன் : நாம் இருவரும் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : நல்லது செய்ய இணைவது தப்பேயில்லை நண்பா- இணைவோம் – செயல்படுவோம் – நன்றி நண்பா!

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
தெள்ளிய – இச்சொல்லின் பொருள்
அ) மெல்லி
ஆ) இளகிய
இ) முதிர்ந்த
ஈ) அழகிய
Answer:
இ) முதிர்ந்த

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 2.
ஆல் இச்சொல்லின் பொருள் ……
அ) வேல மரம்
ஆ) ஆல மரம்
இ) அரச மரம்
ஈ) வேப்ப மரம்
Answer:
ஆ) ஆல மரம்

Question 3.
கயம் இச்சொல்லின் பொருள் ….
அ) நீர் நிலை
ஆ) பயம்
இ) வானிலை
ஈ) பருவநிலை
Answer:
அ) நீர்நிலை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 4.
புரவி இச்சொல்லின் பொருள் ……………
அ) யானை
ஆ) பூனை
இ) ஆள்
ஈ) குதிரை
Answer:
ஈ) குதிரை

Question 5.
பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பெருமை + படை
ஆ) பெரும் + படை
இ) பெரு + படை
ஈ) பெரிய + படை
Answer:
அ) பெருமை + படை

Question 6.
நிழல் + ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நிழல் ஆகும்
ஆ) நிழலாகும்
இ) நிழல்லாகும்
ஈ) நிழலாஆகும்
Answer:
ஆ) நிழலாகும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்?
Answer:
ஆலமரத்தின் விதை தெரிந்த நீர் கொண்ட குளத்தின் சிறிய மீனின் முட்டையை விடவும் சிறியதாக இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்.

Question 2.
ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
Answer:
ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
Answer:
இப்பாடலின் பொருள் பிறருக்குச் செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

பொருத்தமான நிறுத்தக்குறி இடுக

Question 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
Answer:
ஆகா! என்ன சுகம் தெரியுமா!

Question 2.
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்
Answer:
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
ஆகா இது என்ன பிரமாதம்
Answer:
ஆகா! இது என்ன பிரமாதம்!

Question 4.
நான் என்ன வேலை செய்ய வேண்டும்
Answer:
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

Question 5.
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி கத்தாரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
Answer:
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

மொழியோடு விளையாடு

சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

கலையும், கைவண்ண மும்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 3

இணைந்து செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

இணைப்புச் சொற்களை அறிவோமா?

இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் இணைப்புச் சொற்கள் ஆகும். சில இணைப்புச் சொற்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிவோம்.

அதனால், ஆகவே, ஆனால், எனினும், ஆகையால், எனவே போன்றவை.

1. பருவ மழை பெய்தது …………………… ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ……………………  மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன ……………………  பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன்  ……………………  வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன்  …………………… நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
Answer:
1. பருவ மழை பெய்தது அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ஆகவே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன எனினும் பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ஆகையால் வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் எனவே நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

பயிற்சி

ஆகவே, எனவே, ஆகையால், ஆனால் ஆகிய இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 6
Answer:
1. அரசுத் தேர்வுகள் கடினமாக இருக்கும் ஆகவே விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.
2. தீண்டாமை தீயைப் போன்றது எனவே அதனை உலகைவிட்டே ஓட்டுவது நம் கடமை.
3. நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன், ஆகையால் தீயோரிடம் நட்பு பாராட்ட மாட்டேன்.
4. காந்தியடிகள் லண்டனில் படித்தார் ஆனால் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
சின்ன இச்சொல்லின் பொருள்
அ) தட்டை
ஆ) கட்டை
இ) முட்டை
ஈ) காய்
Answer:
இ) முட்டை

Question 2.
வெற்றி வேற்கையின் ஆசிரியர்
அ) கபிலர்
ஆ) அதிவீரராம பாண்டியன்
இ) ஔவையார்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
அண்ணல் இச்சொல்லின் பொருள்
அ) கருணையுடையவர்
ஆ) பாசமுடையவர்
இ) அன்புடையவர்
ஈ) கோபமுடையவர்
Answer:
அ) கருணையுடையவர்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் யார்? இந்நூலின் பெயர் என்ன?
Answer:
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர் இந்நூலின் வேறு பெயர் நறுந்தொகை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 6 முயல் அரசன் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 6 முயல் அரசன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 1.
இக்கதையை உனது சொந்த நடையில் கூறுக.
Answer:
ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டிற்கு ஒரு புலி அரசனாக இருந்தது. அந்தப்புலி எல்லா மிருகங்களையும் அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்தது. ஒரு நாள், ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்திருந்த கனிகளையும் காய்களையும் கிழங்குகளையும் வயிறாரத் தின்றது ஒரு முயல். ஆனாலும் அந்த முயலுக்கு மனதில் ஒரு கவலை இருந்தது.

புலிக்குக் கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும் புலியை விட தானே சிறந்தவன் என்றும் புலிக்கும் காட்டில் உள்ள விலங்குகளுக்கும் நிரூபிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே முயல் சிந்தித்து செயல்படத் தொடங்கியது.

அதற்காக ஒரு திட்டம் தீட்டியது. புலி வரும் பாதையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தது. அந்த வழியாக வந்த புலி முயலைப் பார்த்து, ”உனக்கு எவ்வளவு தைரியம்……. இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா உன்னை … என்று புலி கூறியது. அதனைக் கேட்ட முயல், “ஓடினேனா…. நானா…. உன்னைக் கண்டா…..? உனக்குச் செய்தியே தெரியாதா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

உனக்கு எங்கே தெரியப்போகிறது, இங்குக்கூட்டம் நடந்தபோது நீதான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே…. அந்தக் கூட்டத்தில், நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக்கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின்” என்றது.

முயல் சொன்னதைக் கேட்ட புலி, “நான் அரசனாக நீடிக்கக் கூடாதா? அப்படியானால் வேறு யார் அரசனாக இருக்கப் போகிறது என்று கேட்டது. அதற்கு முயல், “என்னைத்தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தன” என்று கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

புலி முயலிடம், “நீ அரசனா! இப்போதே உன்னைக் கொன்று சாப்பிடுகிறேன் பார்” என்று முயலின் அருகில் சென்றது. முயல், நீ நம்பவில்லையென்றால் என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு போ உனக்கு நிரூபிக்கிறேன்” என்றது. புலியும் அதற்கு
ஒப்புக் கொண்டு முயலைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குள் வலம் வந்தது.

இவைகளைக் கண்ட எல்லா மிருகங்களும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்தன. இதனைக் கண்ட புலி , ”ஒரு வேளை முயல் சொன்னது சரியாகத்தான் இருக்குமோ என்று எண்ணியது. பிறகு முயலிடம், “அரசே நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டது புலி. அதற்கு முயல், “இப்போது சொல் இந்தக் காட்டிற்கு அரசன் யார்? என்று புலியிடம் கேட்டது. புலியும் நீங்கள் தான் என்றது.

பிறகு முயல் புலியைப் பார்த்து, உன்னை மன்னித்து விடுகிறேன் நீ இந்தக் காட்டிலேயே இருக்கக் கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்று கட்டளையிட்டது. அதனைக் கேட்ட புலியும் அக்காட்டை விட்டு ஓடிச் சென்றது. பிறகு முயல் மகிழ்ச்சியாக அந்தக்காட்டைச் சுற்றி வந்தது. இப்போதெல்லாமல் முயல் வயிறாரத் தின்றுவிட்டு நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் துக்கம் போட்டுக் கொண்டிருந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
காட்டில் அரசனாக நீ எந்த விலங்கை அமர்த்துவாய்? காரணம் என்ன? \
Answer:
காட்டின் அரசனாக நான் யானையை அமர்த்துவேன். ஏனென்றால், காட்டிலுள்ள விலங்குகளில் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு யானை. ஆனால், யானை தன் வலிமையால் எந்த விலங்குகளையும் துன்புறுத்துவது இல்லை. மிகவும் பாசமான விலங்கு யானை. மிகவும் சாதுவான நிலையிலேயே இருக்கும். விலங்குகளில் அறிவுமிக்கதும் யானையேயாகும். கூட்டம் கூட்டமாக வாழும் பண்பினை உடையது. குறிப்பு உணர்ந்து செயல்படும். ஆகவே யானையையே அரசனாக அமர்த்துவேன்.

Question 3.
புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா? கலந்துரையாடுக.
Answer:
விமல் : புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா?
சவிதா : புலி, முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக்கொண்டது தவறுதான்.
விமல் : தவறு என்றால் ஏன் அப்படிச் செய்தது?
சவிதா : சந்தர்ப்பமும் சூழ்நிலையும் முயலுக்குச் சாதகமாக அமைந்ததே புலி
நம்பியதற்குக் காரணம்.
விமல் : எப்படி சூழ்நிலை சாதகமாக அமைந்தது என்று கூறுகிறாய்?
சவிதா : முயல், புலியைப் பார்த்து ஓடும் விலங்கு. அப்படியிருக்கும் போது, முயல் புலி
வரும் வழியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தது முதல் காரணம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

விமல் : அப்படியென்றால் முயல் செய்தது சரி என்கிறாயா?
சவிதா : சரியென்று சொல்லவில்லை. முயல் செய்த காரியத்தால் அனைத்து விலங்குகளும் புலியிடம் இருந்து காப்பாற்றப்பட்டனவே! அதனால் முயல் செய்தது நல்லதுதானே! என்றுதான் சொல்கிறேன். இருந்தாலும் புலி முயல்
சொன்னதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.
விமல் : சரி உன்னுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி! சவிதா : உனக்கும் நன்றி!

சிந்திக்கலாமா?

தவறு செய்தவர்களை என்ன செய்யலாம்? திருத்தலாமா? அப்படியே விட்டுவிடலாமா?
Answer:
தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனால் தவறு, சிறிய தவறு, பெரிய தவறு என்று இருவகைகளில் அமைகிறது. சிறிய தவறு செய்தால் அவர்களை திருத்த முயற்சி செய்யலாம். ஆனால், பெரிய தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை கொடுத்தாக வேண்டும். அப்படியே விட்டுவிடக்கூடாது. இல்லையென்றால் மனித சமுதாயத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். தண்டனை கூட திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) பல் + லாண்டு
ஆ) பல் + ஆண்டு
இ) பல + ஆண்டு
ஈ) பல + யாண்டு
Answer:
இ) பல + ஆண்டு

Question 2.
செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) செய + லாக்கம்
ஆ) செயல் + ஆக்கம்
இ) செயலா + க்கம்
ஈ) செயல் + லாக்கம்
Answer:
ஆ) செயல் + ஆக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 3.
இப்போது + எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்………………………
அ) இப்போதெல்லாம்
ஆ) இப்போது எல்லாம்
இ) இப்போல்லாம்
ஈ) இப்போ யெல்லாம்
Answer:
அ) இப்போதெல்லாம்

Question 4.
பேசி +இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) பேசியிருந்தால்
ஆ) பேசியிரு
இ) பேசி இருந்தால்
ஈ) பேசவிருந்தால்
Answer:
அ) பேசியிருந்தால்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 5.
வந்து + இருந்தது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்………………………
அ) வந்து இருந்தது
ஆ) வந்திஇருந்தது
இ) வந்திருந்தது
ஈ) வந்தியிருந்தது
Answer:
இ) வந்திருந்தது

வினாக்களுக்கு விடையளி

Question 1.
முயலின் கவலைக்குக் காரணம் என்ன?
Answer:
தன் மூதாதையரைத் தன் பசிக்கு இரையாக்கிய புலி என்றாவது ஒரு நாள் தன்னையும் தின்று விடுமோ என்பதுதான் முயலின் கவலைக்குக் காரணம் ஆகும்.

Question 2.
விலங்குகளின் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டதாக முயல் கூறியது?
Answer:
முயல் புலியிடம், “நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின” என்று கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 3.
முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியை என்ன செய்யக் கூறியது?
Answer:
முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியிடம், தன்னை முதுகில் ஏற்றிக் கொண்டு போகச் சொன்னது.

Question 4.
புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய கட்டுப்பாடு என்ன?
Answer:
புலியை மன்னித்து விட்டுவிட முயல், “உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்ற கட்டுபாட்டினை விதித்தது.

Question 5.
விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?
Answer:
விலங்குகள் உண்மையில் புலியைக் கண்டு அஞ்சின

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவு செய்க.

1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் ……………………. அடைவர்.
2. எப்பொழுதும் உண்மை பேச வேண்டும், …………………….  பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் …………………….
4. கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை. கரும்பலகை மூலம் கல்வி கற்றது …………………….  முறை.
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது ……………………. குணம்.
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் …………………….  பேச வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 1
Answer:
1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் கவலை அடைவர்.
2. எப்பொழுதும் உண்மை பேச வேண்டும், பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் தொடக்கம்.
4. கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை. கரும்பலகை மூலம் கல்வி கற்றது பழைய முறை.
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது தாழ்ந்த குணம்.
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் மெதுவாக பேச வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 4
1. உலகம் என்பதன் வேறு சொல் – …………………..
2. திருவிழா என்றாலே இது இருக்கும் – ………………….
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் – ………………….
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை – ………………….
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் – ………………….
6. மரம், செடி, கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது – ………………….
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த அண்டை நாடுகளோடு தொடுப்பது – ………………….
8. பூத்தொடுக்க உதவுவது -………………….
Answer:
1. உலகம் என்பதன் வேறு சொல் – பார்
2. திருவிழா என்றாலே இது இருக்கும் – தேர்
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் – ஊர்
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை – நீர்
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் – மோர்
6. மரம், செடி, கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது – வேர்
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த அண்டை நாடுகளோடு தொடுப்பது – போர்
8. பூத்தொடுக்க உதவுவது – நார்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

எது முன்னே ? எது பின்னே ? அகர வரிசைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

மொழியோடு விளையாடு

காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 8\

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

செயல் திட்டம்

நூலகத்திற்குச் சென்று சிறுவர் இதழ்களில் உள்ள படக்கதைகளைப் படித்து வருக, அவற்றுள் மூன்று கதைகளை உனது குறிப்பேட்டில் எழுதிவந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
கடைசி ஆசை :
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் “உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்கமால் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும், “இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது” என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றனர். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

ஏமாற்றம் அடைந்த சிங்கம் :
காட்டில் சிங்கம் ஒன்று உணவு தேடி அலைந்தது எந்த விலங்கும் அதன் கண்களில் படவில்லை . பசியால் வாடிய அதன் கண்களுக்குப் புதர் அருகே இந்த சிறு முயல் ஒன்று தெரிந்தது. அந்த முயலைப் பிடித்து அது இந்தக் குட்டி முயல் என் பசியைப் போக்குமா? என்று நினைத்தது , அப்பொழுது சிறிது தொலைவில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கண்களில் பட்டது. கொழுத்த மான் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் முயலை விட்டு விட்டு மானிடம் ஓடியது அது.

சிங்கத்தைப் பார்த்து விட்ட மான் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடத்தொடங்கியது. எவ்வளவோ முயன்றும் சிங்கத்தால் அதைப் பிடிக்க முடியவில்லை. சிங்கத்தின் பார்வையில் இருந்தே மான் மறைந்தது.
ஏமாற்றம் அடைந்த சிங்கம் அந்தக் குட்டி முயலையாவது உண்போம் என்று புதர் அருகே வந்தது. அங்கே முயலைக் காணவில்லை முயலும் தப்பித்து விட்டதை அறிந்து வருந்தியது அது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

பேராசைக்காரன் :
ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான்.

காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது. ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை .

அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
காலமாக இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கால + மாக
ஆ) காலம் + ஆக
இ) கலம் + ஆக
ஈ) கல + மாக
Answer:
ஆ) காலம் + ஆக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
கொண்டு + இருந்தாய் என்பதைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கொண்டு இருந்தாய்
ஆ) கொண்டஇருந்தாய்
இ) கொண்டிருந்தாய்
ஈ) குண்டுஇருந்தாய்
Answer:
இ) கொண்டிருந்தாய்

Question 3.
வயிறார இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) வயி + றார
ஆ) வயிறு + ஆர
இ) வயிறு + ஏர
ஈ) வயிறு + றார
Answer:
ஆ) வயிறு + ஆர

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
முயலின் நாவில் நீர் ஊரியதற்கான காரணம் என்ன?
Answer:
நல்ல செழிப்பான தோட்டத்தில் சுவையான காரட்டைப் பார்த்ததும் முயலின் நாவில் நீர் ஊறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
பாறைமேல் அமர்ந்திருந்த முயலிடம் புலி என்ன கேட்டது?
Answer:
“முயலே! உனக்கு எவ்வளவு தைரியம். இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா?” என்று புலி முயலிடம் கேட்டது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

வாங்க பேசலாம்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளைக் கூறி அவற்றின் பொருளை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
பாடப்பகுதியை உரிய உச்சரிப்புடன் படித்துப் பழகுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே உரிய உச்சரிப்புடன் படித்துப் பழக வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 3.
உனக்குத் தெரிந்த பழமொழிகளையும் அவை உணர்த்தும் பொருளையும் வகுப்பில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்க.
Answer:
(i) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை , முயற்சி, வெற்றி ஆகிய 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பொருள்.

(ii) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறக்கலாமா? மண்குதிரையில் ஆற்றைக் கடந்தால் உடமேன மண் கரைந்து, ஆற்றில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

(iii) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்குத் திருமணம் செய்ய சீர்
போன்றவற்றைச் செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகி விடுவான்.

(iv) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
விருந்துக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது.

(v) வீட்டுக்கு வீடு வாசப்படி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

சிந்திக்கலாமா?

பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
Answer:
பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம், பழமொழிகள் என்பது வாய்மொழி இலக்கியம். இது ஏட்டில் எழுதப்படாததே முதன்மையான காரணம் ஆகும். வாய்மொழி வழியாகவே கேட்டுக் கேட்டுச் சொல்வதால் ஓசையும் எழுத்தும் மாறுபட்டுப் போகிறது. சமுதாய மாற்றமும் ஒரு காரணமாகும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது புரிதல்களும் மாறுபடுகிறது. தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கின்றனர்.

மொழி வழக்கும் ஒரு காரணம். வட்டாரங்கள் தோறும் வட்டாரமொழி மாறுபடுவதால் பழமொழிகள் திரிந்து விடுகின்றன. அர்த்தமும் மாறுபாடு அடைகிறது. அர்த்தங்களை யாரும் அலசி ஆராய்ந்து பார்க்காததால் அப்படியே நிலைத்து விடுகின்றன. இன்று பழமொழிகள் அதிக பயன்பாட்டிற்குள் வராததும் ஒரு காரணம் ஆகும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் …………………………
அ) கடைத்தெரு
ஆ) பக்கத்து ஊர்
இ) வாரச்சந்தை
ஈ) திருவிழா
Answer:
இ) வாரச்சந்தை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) யானை + கொரு
ஆ) யானை + ஒரு
இ) யானைக்கு + ஒரு
ஈ) யானைக் + கொரு
Answer:
இ) யானைக்கு + ஒரு

Question 3.
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பழம் + சாறு
ஆ) பழச் + சாறு
இ) பழ + ச்சாறு
ஈ) பழ + சாறு
Answer:
அ) பழம் + சாறு

Question 4.
நாய் …………….
அ) குரைக்கும்
ஆ) குறைக்கும்
இ) குலைக்கும்
ஈ) கொலைக்கும்
Answer:
அ) குரைக்கும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 5.
ஆசி இச்சொல்லின் பொருள்
அ) புகழ்ந்து
ஆ) மகிழ்ந்து
இ) இகழ்ந்து
ஈ) வாழ்த்து
Answer:
ஈ) வாழ்த்து

Question 6.
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
அ) வாரம் + சந்தை = …………………….
ஆ) பழைமை + மொழி = …………………..
Answer:
அ) வாரம் + சந்தை = வாரச்சந்தை
ஆ) பழைமை + மொழி = பழமொழி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
Answer:
அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
‘ஆநெய் ‘பூநெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
Answer:
ஆநெய் என்பது பசுவின் நெய்யினையும், பூநெய் என்பது பூவில் ஊறும் தேனையும் குறிக்கின்றன.

Question 3.
“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பதுதான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கொண்டு கற்க வேண்டும்.

பழமொழியை நிறைவு செய்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

செயல் திட்டம்

ஐந்து பழமொழிகளை எழுதி, அவை இன்று உணர்த்தும் பொருளையும் அதன் – உண்மையான பொருளையும் எழுதி வருக.
Answer:
1. கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை?
பொருள் : கழுதைக்குக் கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள் : கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்துப் படுத்தால் கற்பூர வாசனை தெரியுமாம்
என்பதே சரியான விளக்கம்.

2. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். :
பொருள் : மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள் : ஊரான் வீட்டுப் பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியைப் பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாகத் தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள் : ஆயிரம் மக்களைக் கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள் : ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயைப் போக்க ஆயிரம் வேரைக் கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

4. களவும் கற்று மற.
பொருள் : தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்றுக் கொண்டு, மறந்து விட வேண்டும்.
உண்மையான பொருள் : ‘களவும், கத்தும் மற’ களவு – திருடுதல் ; கத்து – பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான பொருளாகும்.

5. பந்திக்கு முந்து- படைக்குப் பிந்து
பொருள் : பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாகக் கிடைக்காது. போருக்குச் செல்பவன் படைக்குப் பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள் : பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கிச் செல்கிறதோ, அது போல, போரில் எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய்ப் பாயும். இது போருக்குப் போகும் வில் வீரருக்காகச் சொல்லியது.

இணைத்து மகிழ்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 7Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
நாயகனாக இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………..
அ) நாயக+னாக
ஆ) நாயகன் + ஆக
இ) நாய் + கன்
ஈ) நாய + கனாக
Answer:
ஆ) நாயகன் + ஆக

Question 2.
கொண்டிருந்தது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) கொண்டு + இருந்தது
ஆ) கொண்டு + யிருந்தது
இ) கொண்டு + உருந்தது
ஈ) கொண்டி + ருந்தது
Answer:
அ) கொண்டு + இருந்தது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 3.
வயது + ஆன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) வயதென
ஆ) வயதுயென
இ) வயதான
ஈ) வயது ஆன
Answer:
இ) வயதான

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பண்படுத்தும் பழமொழிகள் – பாடத்தில் கூறப்பட்டுள்ள பழமொழிகள் யாவை?
Answer:
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
குரைக்கின்ற நாய் கடிக்காது.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
அமுதவாணன் எதற்காகக் கல்லைத் தேடினான்?
Answer:
அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்டக் கல்லைத் தேடினான்.

Question 3.
தமிழ்க்குடியின் சிறப்பினைக் கூறும் பழமொழி எது? அதன் பொருள் யாது?
Answer:
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்பதே தமிழ்க்குடியின் சிறப்பினைக் கூறும் பழமொழி ஆகும். “மண் என்றால் ஆட்சி” கல்வி அறிவும், மன்னர் ஆட்சியும் தோன்றாத காலத்திலேயே தமிழ்மொழி பேச்சு மொழியாக இருந்துள்ளது. இதுவே, இப்பழமொழியின் பொருளாகும்.