Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Students can Download 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

கற்பவை கற்றபின்

Question 1.
வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்குக.
Answer:
(மாணவர் செயல்பாடு)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்

Question 2.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்

Question 4.
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை

Question 6.
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 7.
பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி

Question 8.
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி

Question 10.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 11.
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Question 12.
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 14.
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன

Question 15.
உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 16.
மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)

Question 17.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 18.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்

Question 19.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை

Question 20.
பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 21.
ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு

Question 22.
சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 23.
படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 24.
திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 25.
ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்

Question 26.
ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972

குறுவினா

Question 1.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • குடியரசுத் தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.

Question 2.
ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
Answer:
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்களுள் ஏதேனும் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:

  • கைவிலங்கு
  • ரிஷி மூலம்
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்குப் போன சித்தாளு

Question 4.
ஜெயகாந்தனின் இன்னொரு முகம் கவிஞன் – என்பதற்குச் சான்று தருக.
Answer:
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி கவிதை எழுதியதே, ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என்பதற்குச் சான்றாகும்.

“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்.”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?
Answer:
சிறுகதைகளில் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் புதிய கருத்துகளையும் வெற்றிகரமாக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.

Question 6.
திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
Answer:

  • சில நேரங்களில் சில மனிதர்கள்.
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
  • உன்னைப்போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர்.
  • யாருக்காக அழுதான் – ஆகியவையாகும்.

Question 7.
‘பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்’ – இவ்வடிகளில் உள்ள ‘மும்மை’ எவை?
Answer:

  1. இறப்பு
  2. நிகழ்வு
  3. எதிர்வு

Question 8.
ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் சிலவற்றை எழுதுக.
Answer:

  • குருபீடம்
  • இனிப்பும் கரிப்பும்
  • யுகசந்தி
  • தேவன் வருவாரா
  • ஒருபிடி சோறு
  • புதிய வார்ப்புகள்
  • உண்மை சுடும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?
Answer:
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை.

Question 10.
‘பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – ஏழை
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’ – என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல்.

Question 11.
‘எண்ணும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்’ என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்.
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல் பாடினார்.

Question 12.
ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
Answer:

  • மகத்தான சாதனை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்,
  • அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தனின் புகழ்பெற்ற புதினங்கள் யாவை?
Answer:

  • பாரீசுக்குப் போ!
  • சுந்தரகாண்டம்
  • உன்னைப்போல் ஒருவன்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • கங்கை எங்கே போகிறாள்
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை

Question 2.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் விளக்கமளிக்கிறார்?
Answer:

  • நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
  • முழுக்க முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெறும் கல்வியின், முயற்சியின் பயனை வெளிப்படுத்த எழுதுகிறேன்.
  • சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவும் எழுதுகிறேன்.
  • கலாதேவியின் (கலை) காதல் கணவனாக இருப்பதாலும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாக இருப்பதாலும் எழுதுகிறேன். – என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுவது யாது?
Answer:
“நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந் தோற்றி மும்மை யினொன்றாய்
நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி”
என்று நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுகிறது.

Question 4.
நாற்பொருள் பயத்தல் – என்பது எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:

  • நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்.

Question 5.
முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
Answer:
எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை.

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.

“ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) என்று பாரீசுக்குப் போ என்னும் புதினத்தின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 6.
சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வாய் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாகி அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சனைகளே.

நெடுவினா

Question 1.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் எழுதுவதற்கான காரணத்தை விளக்கமளிக்கிறார்?
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • தனிமுயற்சியின் பயன்
  • நாற்பயன்
  • கணவன்-புதல்வன்
  • சமுதாயப் பார்வை
  • முடிவுரை

முன்னுரை:
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே! அவர் எழுத்துலகில் எழுதுவதற்கான காரணங்களைக் காண்போம்.

தனிமுயற்சியின் பயன்:
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பயனுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

நாற்பயன்:
வியாசன் முதல் பாரதி வரை தாங்கள் எதற்காக எழுதுகிறோம்? என்பதையும் கலையைத் தாங்கிப்பிடிக்கச் சொல்லவும் இல்லை. ஆனால் இவர்களைவிட கலையைத் தாங்கியவர்கள் யாரும் இல்லை. அறநெறியை உபதேசிக்க பாரதத்தை வியாசர் எழுதினார். தமிழ் இலக்கணம் நாற்பயனையே நூலின் பயனாகச் சுட்டுகிறது.

கணவன்-புதல்வன்:
கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்.

சமுதாயப் பார்வை:
அர்த்தமே வடிவத்தை வளமாக்கும். வெறும் வடிவம் மரப்பொம்மைதான். அதனால் அதைப்பிடித்து துன்பப்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணியில் சமூகப்பார்வை அடக்கம்.

முடிவுரை:
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்கு எதிராக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டு இருக்கிறேன் என்கிறார் ஜெயகாந்தன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 2.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
Answer:
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

குறுவினா

Question 1.
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
Answer:

  • நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
  • நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தன் தம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். – இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:
“தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:
கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்ப்பிக்கும் செயல்:
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைக்காரனுக்கு இரண்டணாவை அவர் போட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் கைகள் குவித்து, ‘சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்தப் பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யாமல் இருந்திருந்தாலோ அல்லது தர்மம் செய்த ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில்தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதைத் தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப்பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.

நெடுவினா

Question 1.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Students can Download 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கற்பவை கற்றபின்

Question 1.
பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக.
Answer:
1. குறள்வெண்பா : திருக்குறள்
2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,
3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல்
4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம், ஞானம், காலக்கணிதம், ஏர் புதிதா?
5. இணைக்குறள் ஆசிரியப்பா : காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு.
6. கலிப்பா : கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார்.
ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: இரகு, மது, சாந்தி.

இரகு : நண்பா! இரகு செய்யுள் நூல்கள் பல எழுதப்பட்டாலும் நாம் இப்போது வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும் எழுதப்பட்ட நூல்கள் பற்றி உரையாடுவோம்.
மது : நல்ல செய்தி தான், வெண்பாவில் ஒன்றும் ஆசிரியப்பாவில் ஒன்றும் எடுத்துக்கொள்ளலாமா?
சாந்தி : மது அண்ணா ! வெண்பாவில் திருக்குறளும், ஆசிரியப்பாவில் சிலப்பதிகாரமும் பற்றி பேசலாமா!.
இரகு : பேசலாமே! முதலில் வெண்பாவில் திருக்குறளைப் பற்றி பேசலாம்.

மது : உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றை தலைமையாகக் கொண்டு 133 அதிகாரத்தையும் 1330 பாக்கள் கொண்டு குறள் வெண்பாவால் பாடப்பட்ட நூல்.
சாந்தி : இந்த நூலுக்கு பத்து பேர் உரை எழுதி உள்ளார்களாம்.
இரகு : இன்று ஏராளமானவர் எழுதி உள்ளனர். பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை.
சாந்தி : நாம் திருக்குறளைப் படிப்பதோடு இல்லாமல் திருக்குறளோடு குறள் கூறியுள்ளது போல் வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மது : சரி, வெண்பாவினால் அமைந்த நூலைப் பார்த்தோம்.
சாந்தி : ஆசிரியப்பாவால் அமைந்த நூல், தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியம் எது என்றுசொல்லுங்கள்?
மது : சிலப்பதிகாரம் சாந்தி!.
இரகு : இந்நூல் கோவலன், கண்ணகி, மாதவி என மூன்று மூன்றாக பாடினாலும்
குடிமக்களைப்பற்றி பாடிய நூல்.
சாந்தி : 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது.
இரகு : ஒவ்வொரு நூலையும் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நேரம் போய்க்
கொண்டே இருக்கிறது. வீட்டில் தேடுவார்கள். புறப்படுவோமா!
மூவரும் : நல்லது. புறப்படுவோம்.

Question 3.
யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்?
Answer:
யாப்போசை தரும் பாவோசை

1. செப்பலோசை : இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
2. அகவலோசை : ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை : கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது
4. தூங்கலோசை : சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
தாழ்ந்தே வருவது – யாப்பதிகாரம், புலவர் குழந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு:
Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.
Answer:
தமிழாக்கம்:
முன்பொருநாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப் புகழ்ந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.

நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்துக் கொடுத்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித் துண்டு பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெட்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதிகளில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப் பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்துச்செல்ல கனமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்றுவிட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக்கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மனக்கோட்டை:
கண்ணும் கருத்தும்:
அள்ளி இறைத்தல்:
ஆறப்போடுதல்:
Answer:
மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.

அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.

ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

பேச்சுவழக்கு:
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
“சரிங்கண்ணே ”
Answer:
எழுத்து வழக்கு:

“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
“இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா !”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கடிதம் எழுதுக.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
எஸ். சங்கரன்,
23, வள்ளலார் சாலை,
பாரதிதாசன் நகர்,
திருச்சி.

பெறுநர்
உயர்திரு. மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகம்,
திருச்சி.

பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் – தொடர்பாக

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் பாரதிதாசன் நகர் வள்ளலார் சாலையைச் சார்ந்தவன். கடந்த வாரம் வீசிய தானே புயலால் எங்கள் தெருவில் உள்ள மினவிளக்கு கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் இரவில் வெளியே செல்வோர்க்கு மிகவும் துன்பமாக இருக்கிறது. தெருவிளக்கு இல்லாததைப் பயன்படுத்தி சமூக விரோதிகளின் செயல்களும் அதிகமாகி விட்டது. அதனால் தயவுசெய்து நேரில் பார்வையிட்டு பழுதடைந்த மின்விளக்குக் கம்பங்களைச் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தெருமக்கள் சார்பாக,
எஸ். சங்கரன்.

21.03.2020
பாரதிதாசன் நகர்.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 6

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே. – வள்ளலார்
Answer:
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகவும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன். மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா. இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மோனை நயம்:
குயவனுக்கு பானை
செய்யுளுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.
மேடையிலே
மென்காற்று…
டையிலே…
டுகின்ற… என்று மோனை நயமும் மிகுந்து வருகின்றது.

எதுகை நயம்:

மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோசீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். இப்பாடலில்,
கோடையிலே
டையிலே
மேடையிலே
டையிலே – என்று எதுகை நயம் அமைந்துள்ளது.

இயைபு நயம்:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.
தண்ணீரே
மலரே என இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில்,
“குளிர் தருவே…
நிழல் கனிந்த கனியே…”

இறைவனை உருவகப்படுத்தும் “உருவக அணியும்” இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் “உயர்வு நவிற்சி அணியும்” அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.

சந்த நயம்:
இப்பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.

இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய்ப் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக……
Answer:
எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள் பாக்கள்:

ஒன்று :
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

இரண்டு :
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

மூன்று :
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

நான்கு :
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

ஐந்து :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்.

ஆறு :
படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

ஏழு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

எட்டு :
கோயில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.

ஒன்பது :
ஒன்பது என்ற எண்ணை திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை

பத்து :
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.

1. கானடை
2. வருந்தாமரை
3. பிண்ணாக்கு
4. பலகையொலி

கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
Answer:
1. கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
2. வருந்தாமரை: வரும் தாமரை தாமரை மலர்
வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
வருந்தா மரை – துன்புறாத மான்
3. பிண்ணாக்கு : பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி : பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.

அகராதியில் காண்க.

ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
Answer:
ஆசுகவி – கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு.
அப்பாடலைப் பாடும் புலவன்.
மதுரகவி – இனிமை பெருகப் பாடும் கவி.
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு.
சித்திரகவி – சித்திரத்தில் அமைத்ததற்கு ஏற்ப பாடும் இறைக்கவி, 21 நயங்களில் கவிதை இயற்றுபவர்
வித்தாரகவி – விரித்துப் பாடப் பெறும் பாட்டு.
விரிவாகப் பாடும் நூல்.

கலைச்சொல் அறிவோம்

Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 2
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 7

நிற்க அதற்குத் தக

நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை, நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ, உடன்பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது….. இந்தச் சமயத்தில் சினம்கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படுகளும் நன்மைகளும்…..
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 1
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
அ) அகவற்பா

குறுவினா

Question 1.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
    எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

Question 2.
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
Answer:
வஞ்சிப்பா தூங்கல் ஓசையையும், கலிப்பா துள்ளல் ஓசையையும் பெற்று வரும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
  • வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவி வரும்.
  • மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடியும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யாப்பின் உறுப்புகள்…………………….
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Answer:
இ) 6

Question 2.
பொருத்திக் காட்டுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 3
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 1, 2, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 4, 1, 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 4.
வெண்பாக்களின் வகைகள் எத்தனை?
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …………..
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Answer:
ஆ) துள்ளல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
வெண்பாவில் அமைந்த நூல்கள் …………..
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Answer:
அ) குறள்; நாலடியார்

Question 7.
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா …………..
அ) ஆசிரியப்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) வெண்பா

Question 8.
“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை …………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) அகவற்பா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 9.
பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை …………..
அ) கலிவெண்பா
ஆ) வஞ்சிப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) இன்னிசை வெண்பா
Answer:
ஆ) வஞ்சிப்பா

Question 10.
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது – …………..
அ) தூங்கலோசை
ஆ) துள்ளலோசை
இ) செப்பலோசை
ஈ) அகவலோசை
Answer:
அ) தூங்கலோசை

Question 11.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை – …………..
அ) செப்பலோசை
ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) செப்பலோசை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 12.
ஆசிரியப்பாவின் வகைகள் …………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 13.
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 14.
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளளோசை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 15.
அகவற்பாவுடன் தொடர்பில்லாத ஒன்று …………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பெருங்கதை
ஈ) நாலடியார்
Answer:
ஈ) நாலடியார்

Question 16.
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 17.
பொருத்துக.
1. நேர் நேர் – அ) புளிமா
2. நிரை நேர் – ஆ) தேமா
3. நேர் நிரை – இ) கருவிளம்
4. நிரை நிரை – ஈ) கூவிளம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 18.
பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 19.
பொருத்துக.
1. நேர் நேர் நிரை – அ) புளிமாங்கனி
2. நிரை நேர் நிரை – ஆ) தேமாங்கனி
3. நேர் நிரை நிரை – இ) கருவிளங்கனி
4. நிரை நிரை நிரை – ஈ) கூவிளங்கனி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 20.
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Answer:
அ) யாப்பதிகாரம்

குறுவினா

Question 1.
யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer:
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.

Question 2.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பா நான்கு வகைப்படும். அவையாவன: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
வெண்பாவின் வகைகள் யாவை?
Answer:
வெண்பா ஐந்து வகைப்படும்: அவையாவன:
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவையாகும்.

Question 4.
ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு வகைப்படும். அவை:
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா

Question 5.
திருக்குறளும் நாலடியாரும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • திருக்குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை : செப்பலோசை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
சங்க இலக்கியங்கள் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • சங்க இலக்கியங்கள் அகவற்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை :அகவல் ஓசை

Question 7.
அகவலோசையில் அமைந்த நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை

Question 8.
பதின்மூன்று அடிக்கு மேல் வரும் வெண்பா எது?
Answer:
கலிவெண்பா.

Question 9.
கலித்தளையும் வெண்டளையும் விரவிவரும் பா எது?
Answer:
ஆசிரியப்பா (அகவற்பா).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 10.
ஓரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் – நாள் ; நிரை – மலர்
நேர்பு – காசு ; நிரைபு – பிறப்பு

Question 11.
ஈரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் நேர் – தேமா ; நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம் ; நேர் நிரை – கூவிளம்

Question 12.
மூவசைச் சீர்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 4

சிறுவினா

Question 1.
வெண்பாவின் பொது இலக்கணத்தை விளக்குக.
Answer:

  • வெண்பா செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
அகவற்பாவை விளக்கி, சான்று தருக.
Answer:

  • அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
  • இலக்கணக் கட்டுக் கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா .
    சான்று: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை – ஆகியவையாகும்.

Question 3.
அலகிட்டு வாய்பாடு எழுதுக.
Answer:
குறள்: உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Students can Download 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

கற்பவை கற்றபின்

Question 1.
கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மீனாட்சி, கயல்விழி, கண்ணன்.

மீனாட்சி : அனைவருக்கும் வணக்கம்! இன்றைய பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்லமுறையில் கழிக்க வேண்டும்.
கயல்விழி : நாம் இன்று கல்வி தொடர்பான செய்திகளைக் கலந்துரையாடலாமா?
மீனாட்சி : இராமானுசரைப்பற்றி கலந்துரையாடலாமா?
கயல்விழி : ஓ… கலந்துரையாடலாமே!
கண்ணன் : நாம் இன்று நாடகமாக இராமானுசரைப் பற்றிப் படித்தோம் அல்லவா…
மீனாட்சி : ஆம்! அதற்கென்ன…
கண்ணன் : உரைநடையைப் படிப்பதற்கும் நாடகத்தைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசுவோமா…
கயல்விழி : ஓ தாராளமாக… நானே தொடங்கி வைக்கிறேன். உரைநடை நீண்ட வாக்கிய அமைப்பு உடையதாக இருக்கும். எனவே படிப்பதற்குச் சலிப்பாக இருக்கும்.
மீனாட்சி : சரியாகச் சொன்னாய். நாடகமாகப் படிக்கும் போது கதைப்போக்கில் அமைந்து விடுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)
கண்ணன் : கதைப்போக்கில் அமைவதால் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கயல்விழி : உரையாடல் வடிவில் கருத்துகள் இருப்பதால் நேரில் பேசிக் கேட்பது போல் உள்ளது.
மீனாட்சி : கதைமாந்தர்கள் பெயர் நினைவுக்கு வரும்போதே அவர்கள் கூறும் கருத்தும் நினைவுக்கு வந்துவிடும்.
கயல்விழி : ஆம் மீனாட்சி. உரைநடையை நாம்தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.
கண்ணன் : ஆம் தோழிகளே! நம் கலந்துரையாடலில் இருந்து ஒரு கருத்தை உரைநடையில் படிப்பதை விட நாடக வடிவில் படிப்பதே எளிது என்பதை உணர்ந்து கொண்டோம் அல்லவா!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 2.
இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைத் தொகுத்து அவை குறித்த உங்களின் கருத்துகளை எடுத்துரைக்க.
Answer:

  • • இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
  • நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்’ கரம் பற்றி எழுவார்.
  • இது வர்ணாசிரம் தருமத்துக்கு எதிரானது என்றும், பிராமணன் கீழ்க் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா?
  • இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்.

இராமானுசர் பின்வருமாறு பதில் கூறினாராம்:

  • எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
  • எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
  • “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
Answer:
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

காட்சி – 1

இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்.

குகன் : செழியா! வந்துவிட்டாயா.
செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்குச் செல்வோமா?
குகன் : செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை …
செழியன் : இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.

காட்சி – 2

இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்.

மாணவர்கள் இருவரும் : வணக்கம் ஐயா!
ஆசிரியர் : வணக்கம்!
குகன் : ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன் : ஐயா, வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே… அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர் : நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணங்கள் கூறப்போகிறேன். முதலில் கொக்கைப் போல’ வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் வள்ளுவர், ‘கொக்கொக்க’ எனப் பாடியுள்ளார்.
குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர் : இரண்டாவதாக, கோழியைப் போல்!’

செழியன் : ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….
ஆசிரியர் : கோழி, குப்பையைக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான ‘உணவை மட்டுமே’ கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான
நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர் : மூன்றாவதாக, உப்பைப் போல….

குகன் : ஆம். ஐயா, ‘உப்பைப்போல’ என்பதன் விளக்கம் தாருங்கள்.
ஆசிரியர் : கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். மிக நெருங்கி இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பந்தான். உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் : மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
நன்றி! ஐயா!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ………………..
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Answer:
அ) பிரம்மகமலம்

Question 2.
தண்டு கொடிக்கு இணையானவர்கள் யாவர்?
அ) பூரணர்
ஆ) கூரேசர்
இ) முதலியாண்டான், கூரேசர்
ஈ) இராமானுசர்
Answer:
இ) முதலியாண்டான், கூரேசர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 3.
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………………..
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Answer:
அ) மூங்கில்

Question 4.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Answer:
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 5.
பூரணரின் மகன் பெயர் ………………………..
அ) நாராயணன்
ஆ) சௌம்ய நாராயணன்
இ) சௌம்ய ராஜன்
ஈ) முதலியாண்டான்
Answer:
ஆ) சௌம்ய நாராயணன்

Question 6.
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Answer:
அ) இராமானுசர்

Question 7.
சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டான்?
அ) முதலியாண்டானிடம்
ஆ) பூரணரிடம்
இ) இராமானுசரிடம்
ஈ) கூரேசரிடம்
Answer:
இ) இராமானுசரிடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 8.
பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ………………………..
அ) திருமந்திரம்
ஆ) திருநீறு
இ) மந்திரம்
ஈ) துறவு
Answer:
அ) திருமந்திரம்

Question 9.
நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்பவர்………………………..
அ) திருமகள்
ஆ) மலைமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) திருமகள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 10.
இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?
அ) கூரேசரை
ஆ) முதலியாண்டானை
இ) இராமானுசரை
ஈ) பெரியவரை
Answer:
இ) இராமானுசரை

Question 11.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்
அ) செண்பகம்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) பிரம்மகமலம்
Answer:
ஆ) குறிஞ்சி

Question 12.
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 13.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
அ) பழனி மலை
ஆ) பிரான் மலை
இ) பொதிகை மலை
ஈ) நல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

நெடுவினா

Question 1.
இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளைக் கூறுக.
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • பொறுமை உடையவர்
  • நட்புக்கு மரியாதை
  • தன்னலமற்ற பரந்த உள்ளம்
  • முடிவுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முன்னுரை:
பிறர்நலம் போற்றுவதே மனித வாழ்வின் சிறந்த நிலை ஆகும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவோர் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்ந்து காட்டிய இராமானுசரின் பண்புநலன்கள் பற்றிக் காண்போம்.

பொறுமை உடையவர்:

  • திருமந்திரத் திருவருளைக் கற்றுக் கொள்வதற்காக பதினெட்டு முறை பூரணரைச் சந்திக்கச் சென்றார்.
  • இன்றாவது நம் விருப்பம் நிறைவேறுமா! என்ற உடன்வந்தவர்களையும் பொறுமையுடன் வழி நடத்துகிறார்.
  • உங்களை மட்டும்தானே வரச்சொன்னேன் என்ற பூரணரிடமும் பொறுமையுடன் பதில் கூறுகிறார்.
  • இவ்வாறு இராமானுசர் பொறுமை என்னும் பண்பில் சிறந்திருத்தலை அறியலாம்.

நட்புக்கு மரியாதை:

  • எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் கூரேசரையும், முதலியாண்டானையும் உண்மையான நட்புடன் நேசிக்கிறார். திருமந்திர
  • திருவருளைக் கற்கப் போகும் பொழுதுகூட, பூரணர் தண்டு கொடியுடன் மட்டும் வாருங்கள் என்கிறார்.
  • அப்போதும் இவர்கள் இருவரும் என்னுடன் இருக்கும் தண்டும் கொடியும் போன்றவர்கள்தான் என்று கூறி நட்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்.

தன்னலமற்ற பரந்த உள்ளம்:

  • பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.
  • குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
  • திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.
  • அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.
  • பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் “எம் பெருமான்” என்று அழைக்கப் பெற்றார்.
  • அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.
  • இவையே இராமானுசர் நாடகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளும் தலைமைப் பாத்திரமான “இராமானுசரின் பண்புகள்” ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முடிவுரை:
தன்னலம் அகற்றி, பொதுநலம் போற்றுபவரே உண்மையான மகான்களாக முடியும் என்பதற்கு இராமானுசரே சான்றாக விளங்குகிறார் எனலாம்.

Question 2.
‘என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்’ என்ற இராமானுசரின் கூற்றுக்கு
ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
குறிப்புச் சட்டம் ப்பச் சட்டம் –

  • முன்னுரை
  • அன்னை தெரசா
  • விவேகானந்தர்
  • அப்துல்கலாம்
  • முடிவுரை

முன்னுரை:
நாளுக்கு ஒருமுறை மலர்வது செண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு உதித்தவர்தான் இராமானுசர். அவர் தனக்கு மட்டுமே வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் எல்லாருக்கும் நலம் கிட்ட வேண்டும் என்று எண்ணி, வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை போற்றுத்தற்குரியது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

அன்னை தெரசா:
அயல்நாட்டுப் பெண்மணியாக இருந்தாலும், இந்திய நாட்டுக் குடிமகளாகவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. அவர் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும், ஆதரவற்ற எளியோருக்கும் தனது களங்கமில்லாத சேவையால் பெருந்தொண்டாற்றினார்.

“காண்கின்ற மனிதர்களிடத்தில் அன்பு கூறாவிட்டால்
காணாத இறைவனிடத்தில் எப்படி அன்பு கூறுவாய்”

என்ற விவிலியத்தின் வார்த்தைகளைக் கொள்கையாகக் கொண்டு “உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேலானவை” என்று கூறி தன்னலமற்ற உதவிகளை அன்னை தெரசா செய்தமையால் ஒரு கவிஞர் தனது கவிதையில்,

“நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருப்பாய்…
கருணையுற்றதால் உலகத்திற்கே தாயாகிவிட்டாய்”
என்று எழுதினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

விவேகானந்தர்:
அயல்நாட்டிலும் ஆகச்சிறந்த ஆன்மீக உரையால் இந்தியப் பண்பாட்டை உலகறிய செய்த மகான் விவேகானந்தர்.

“எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத்
துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்’
என்று குறிப்பிடும் விவேகானந்தர்,

“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு
வேலை செய்யுங்கள்”
என்கிறார்.

அப்துல்கலாம்:
தன்னலமற்ற தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் அப்துல் கலாம்.

“நம்மை அனைவரும் நினைவு கூரும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால
சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது”

என்று குறிப்பிடும் கலாம், என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்வி முறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்களை உருவாக்கும்’ என தன்னலமற்றவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முடிவுரை:
தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் பிறரையும் வாழ வைப்பதற்கான நெறிமுறைகளை அளிப்பதாக பலரின் கூற்றுகளையும் சான்றாகக் கூறிட இயலும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் திருமூலரின் வாக்கினுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் உலகில் அன்பே நிலைத்து நிற்கும். பரிதி முன் பனி காணாமல் போவதைப் போல் பகை இவ்வுலகைவிட்டு நீங்கிவிடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Students can Download 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.3 காலக்கணிதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

கற்பவை கற்றபின்

Question 1.
கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம் - 2
Answer:
நதியின் பிழையன்று:

  • இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் சினம் கொண்டான்.
  • அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே, விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்து நிறுத்தி இராமன் கூறியது இது.
  • நதியின் பிழை எதுவும் அல்ல நல்ல தண்ணீர் இல்லாதது.
  • நறும்புனல் இன்மை என்பது, நதியில் நீர் இருக்கிறது. ஆனால் நல்லதாக இல்லை . அதுபோல நான் கானகம் செல்வது தசரதன் பிழையும் அன்று. அன்போடு நம்மை வளர்த்த கைகேயின் மதியின் பிழையும் அன்று.
  • பரதன் பிழையும் இதில் இல்லை . விதியின் பிழை. நீ ஏன் இதற்காகக் கோபப்படுகிறாய். “சினமும் வேகமும் தவிர்”
  • இதைப் போலவே கண்ணதாசனின் பாடலான “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்….” பாடல் உணர்த்துவதும் விதியைத் தான்.
  • தவறு செய்யாத நாயகன் மீது பழி சுமத்தப்படும் சூழலில் நதியின் நீர்மையைப் போல மானுடர் உள்ளங்களில் இருக்கும் நற்பண்புகள், மனசாட்சி உண்மை , பொய் அறிதல் வற்றிவிடுகிறது.
  • நதி வற்றிவிட்டால் அது நதியின் குற்றம் அல்ல. விதியின் குற்றமே.
  • அதைப்போலவே மானுடர் பண்புகள் மாற்றம் பெற்று நாயகன் மீது சுமத்தப்பட்ட பழி பாவங்களும் விதி செய்த பிழையேயன்றி வேறு யாருமில்லை என்பதை கண்ணதாசன் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலக் கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ……….
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது.
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என் மனம்.
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்.
Answer:
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது

குறுவினா

Question 1.
“கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.”
அ) அடி எதுகையை எழுதுக.
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக: கொள்க, குரைக்க.
Answer:
அடி எதுகை:
கொள்வோர்
ள்வாய்

இலக்கணக்குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

நெடுவினா

Question 1.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படுபொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக! – கண்ண தாசன்

“காலக்கணிதம்”

திரண்ட கருத்து:
கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கவிஞன்….
கருப்படு….
இவை சரி
இவை தவறாயின் … மோனை நயம் பெற்று வந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் – சீர் எதுகை நயம் அமைந்துள்ளது.

முரண்:
நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும். ஆக்கல் x அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
…புகழுடைத் தெய்வம்
….. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கணிதம் – உருவகம்
ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
கொள்வோர் – வினையாலணையும் பெயர்
அறிந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம் - 1

பலவுள் தெரிக

Question 1.
காலத்தை வெல்பவன் ………………………..
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
Answer:
இ) கவிஞன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 2.
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Answer:
ஆ) முத்தையா

Question 3.
கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ………………………..
அ) இராமநாதபுரம்
ஆ) நெல்லை
இ) புதுக்கோட்டை
ஈ) சிவகங்கை
Answer:
ஈ) சிவகங்கை

Question 4.
கண்ண தாசன் பிறந்த ஊர் – ………………………..
அ) சிறுகூடல்பட்டி
ஆ) கூடல் மாநகர்
இ) முக்கூடல்
ஈ) சிவகங்கை
Answer:
அ) சிறுகூடல்பட்டி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 5.
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………………………..
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Answer:
இ) 1949

Question 6.
கண்ண தாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்………………………..
அ) வாழ நினைத்தால் வாழலாம்
ஆ) கலங்காதிரு மனமே
இ) மலர்களைப் போல் தங்கை
ஈ) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
Answer:
ஆ) கலங்காதிரு மனமே

Question 7.
கண்ணதாசன் திரைப்படப் பாடல் வாயிலாக மக்களுக்கு………………………..உணர்த்தினார்.
அ) மெய்யியலை
ஆ) உலகியலை
இ) ஆன்மீகத்தை
ஈ) இலக்கணத்தை
Answer:
அ) மெய்யியலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 8.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ………………………..
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
இ) சேரமான் காதலி

Question 9.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மேத்தா
Answer:
ஆ) கண்ண தாசன

Question 10.
கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அ) தத்துவம்
ஆ) கொள்கை
இ) ஞானம்
ஈ) பண்பாடு
Answer:
அ) தத்துவம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 11.
கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?
அ) தன் நூல்களை
ஆ) உரைகளை
இ) இதழ்களை
ஈ) வளமார் கவிகளை
Answer:
ஈ) வளமார் கவிகளை

Question 12.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்றவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதி
இ) கண்ண தாசன்
ஈ) பெரியார்
Answer:
இ) கண்ண தாசன்

Question 13.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – இவ்வடிகளில் அமைந்த நயம்.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 14.
‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?
அ) என்னுடல் x என்மனம்
ஆ) புல்லரிக்காது x இறந்துவிடாது
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
ஈ) புகழ்ந்தால் x என்மனம்
Answer:
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்

Question 15.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Question 16.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 17.
‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

குறுவினா

Question 1.
கவிஞன் என்பவன் யார்?
Answer:
மனம் என்னும் வயலில் சொல்லோர் கொண்டு உழுது, சிந்தனை விதைகளைத் தூவி, மடமை என்னும் களை பறித்து, தத்துவ நீர்ப் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவனே கவிஞன் ஆவான்.

Question 2.
எவர் கூறாத ஒன்றைத் தான் கூற முனைவதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
கம்பன், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத சிலவற்றைச் சொல்லிட முனைவேன் (முயல்வேன்) என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 3.
எவையெல்லாம் மாறாதவை?
Answer:
காடு, மேடு, மரம், கல், வனவிலங்குகள் ஆகியவை மாறாதவையாகும்.

Question 4.
கண்ணதாசனின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:
பாடல்கள் புனைவதில், இலக்கிய உலகில் சிறந்த கவிஞர், பேச்சாளர், இதழாளர் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

Question 5.
கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
Answer:
கண்ணதாசனின் பெற்றோர் : சாத்தப்பன், விசாலாட்சி ஆவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 6.
‘ஆக்கல் அளித்தல், அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை’ – அவனும் யானும் யாவர்?
Answer:

  • அவன் என்பது இறைவன் (இறைவன்)
  • யான் என்பது கவிஞனாகிய கண்ணதாசன்.

Question 7.
‘கருப்படுப் பொருளை உருப்பட வைப்பேன்’ யார்?
Answer:
கருப்படுப் பொருளை உருப்பட வைப்பவர் கவிஞர் (கண்ணதாசன்).

Question 8.
‘உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ – இத்தொடர் பொருள் ஆழத்தை விளக்குக.
Answer:
ஒருவர் தன் வாயால் புகழ்வதும் இகழ்வதும் நம் உடம்பின் மீது வந்து சேராது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

சிறுவினா

Question 1.
கண்ணதாசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : முத்தையா
பிறப்பு : 24.6.1927
பெற்றோர் : சாத்தப்பன் – விசாலாட்சி
ஊர் : சிவகங்கை – சிறுகூடல்பட்டி
சிறப்பு : தமிழக அரசவைக் கவிஞர்
சாகித்திய அகாதெமி விருது – இயேசு காவியம்
புனைப்பெயர் : வணங்காமுடி, ஆரோக்கியநாதன், காரைமுத்துப்புலவர்.
இறப்பு : 17.10.1981

Question 2.
காலக்கணிதம் கவிதையில் இடம் பெறும் முரண் சொற்களை எழுதுக.
Answer:

  • சரி  x  தவறு
  • புகழ்ந்தால்  x  இகழ்ந்தால்
  • ஆக்கல் x அழித்தல்
  • தீமை  x  நன்மை
  • அவனும் x யானும்
  • தொடக்கம்  x  முடிவு
  • உண்டாயின்  x  இல்லாயின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 3.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல்:
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நான் காலமாகிய கணிதம் போன்றவன். கவிதைகளில் கருவான பொருளைக் கூட பயன்படும் பொருளாக ஆக்குவேன் என்கிறார் கவிஞர்.

Question 4.
‘நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல் :
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நானே அனைத்தின் தொடக்கம் ஆவேன். நானே முடிவும் ஆவேன். நான் சொல்வது தான் நாட்டினுடைய சட்டம் ஆகும்.

Question 5.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களைக் கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
Answer:
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’

– தன்னை ஒருவர் புகழ்வதினால் பெருமகிழ்ச்சியடைவதோ, இகழ்வதினால் மனம் வருந்துவதோ இல்லை என்பது பண்பட்ட மனத்திற்குச் சான்றாகிறது.

‘செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

– என்பதிலிருந்து பணமோ, பதவியோ தன்னை ஒருபோதும் அடிமைப்படுத்த இயலாது என்பதற்குச் சான்றாக அமைகிறது.

‘எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!’

– நல்லது எது கெட்டது எது என்பதறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவதற்குச் சான்றாகிறது.

நெடுவினா

Question 1.
கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’ கவிதைக் கருத்துகளில் உன்னைக் கவர்ந்ததைச் சுருக்கி எழுதுக.
Answer:

  • கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.
  • பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.
  • முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.
  • என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.
  • கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
  • என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.
  • மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.
  • தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.
  • வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Students can Download 10th Tamil Chapter 8.2 ஞானம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.2 ஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

கற்பவை கற்றபின்

Question 1.
“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
Answer:
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன.

நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.
அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.
Answer:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:

  1. அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை
  2. அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
  3. அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
  4. அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.
  5. அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்
  6. அன்புடைமை – அன்பின் மகத்துவம்
  7. இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
  8. இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
  9. இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
  10. ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
  11. ஊழ் – விதி வலிமை
  12. ஒப்புரவறிதல் – கொடுத்தல்
  13. ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்
  14. கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
  15. கள்ளாமை – மது அருந்துதல் கூடாது
  16. கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்
  17. கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.
  18. செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
  19. தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை
  20. தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
  21. துறவு – உலகப் பற்றை நீக்குதல்
  22. நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
  23. நிலையாமை – எதுவும் நிலையன்று
  24. நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
  25. பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்
  26. பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
  27. புகழ் – சிறப்பு
  28. புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
  29. புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை
  30. பொறையுடைமை – பொறுமை
  31. மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்
  32. மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
  33. வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
  34. வாய்மை – உண்மையின் மேன்மை
  35. வான்சிறப்பு – மழையின் சிறப்பு
  36. விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்
  37. வெகுளாமை – சினம் கொள்ளாமை
  38. வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
Answer:
இ) இடையறாது அறப்பணி செய்தலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

குறுவினா

Question 1.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
Answer:

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

Question 1.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
உரைக்குறிப்புகள்:

  • அறம் என்பதன் விளக்கம் தரல்.
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
Answer:
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கழுதை – உருவகம்
கந்தைத்துணி – இருபெயரொட்டுப்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம் - 1

பலவுள் தெரிக

Question 1.
‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..
அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

Question 3.
‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 4.
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

Question 5.
தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

Question 6.
வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 7.
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Question 8.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 9.
அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

Question 10.
“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 11.
பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 12.
‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 13.
பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவினா

Question 1.
வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:
கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

Question 2.
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
கரையான், கழுதை, கட்டெறும்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 3.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.
Answer:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

சிறுவினா

Question 1.
தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சொ.வேணுகோபாலன்
பிறப்பு : 7.11.1929)
ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.
பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.
1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
Answer:

  • ‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.
  • வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.
  • சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
  • சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.
  • அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
  • எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Question 3.
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !.

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
கோடைவயல்.

ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?
Answer:
ஞானம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

இ) எது ஓய்வதில்லை ?
Answer:
அறப்பணிகள் ஓய்வதில்லை .

ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஓய்வதில்லை       –      உலகமில்லை

Question 4.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பொருள்:
காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.

விளக்கம் :

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Students can Download 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கற்பவை கற்றபின்

Question 1.
‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.
Answer:
சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நிலையான செல்வம்
  • நேரிய ஆட்சி
  • வாய்மை
  • ஈகை

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…… – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசின் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ – புறநானூறு

வீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியது. ஈகையும் ஓர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ – நற்றிணை

பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதலே பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான
செல்வம் ஆகும்.

‘பிழையா நன்மொழி’ – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும் வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.

Question 2.
கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடுபவர்கள் : சோமு, கலா, மாலா,

சோமு : நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக் கருத்துக்கள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றிப் பேசுவோமா.
கலா : எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் பிடிக்கும்
மாலா : எனக்கும்தான்….
சோமு : அதைப்பற்றிப் பேசுவோம். இந்நூல் அகரநிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா : அதை எழுதினது ஒளவைதானே.
மாலா : சரியாகச் சொல்லி விட்டாயே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சோமு : அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது. அது என்ன தெரியுமா?
கலா : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்’
சோமு : சரியாகச் சொன்னாய்.
மாலா : ஆமாடா நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது, அதனை திருடரோ மற்றவரோ கொள்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கலா : எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்குக் கூட கூலி ஒழுங்காத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிடுவார். ஒரு நாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு : புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

குறுவினா

Question 1.
குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 1
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 2
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதில் அறம்:

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
  • ‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

நெடுவினா

Question 1.
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உறவினருக்கு மடல்

திருச்சி,
18.03.2020

அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

குறுவினா

Question 1.
அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?
Answer:
மன்னர்களுடைய செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 2.
அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

Question 3.
தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?
Answer:

  • உறையூரில் இருந்த அறஅவையம் தனிச் சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக் கோல் போல் நடுநிலைமையுடன் இருந்தன.

Question 4.
மகிழ்ச்சி என்பதை விளக்குக.
Answer:

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து, மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி .
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

Question 5.
வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக.
Answer:

  • ‘பொய்யாச் செந்நா’
  • ‘பொய்படு பறியா வயங்கு செந்நா’
  • ‘பிழையா நன்மொழி – நற்றிணை’
  • ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’

என்று பொய் கூறக்கூடாது, வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக.
Answer:

  • இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.
  • எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

Question 7.
அற இலக்கியங்களில் ஈதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதை விளக்குக.
Answer:

  • புற இலக்கியங்களில் மட்டுமல்ல, அற இலக்கியங்களிலும் ஈகை பற்றிய செய்திகள் உள்ளன.
  • ஈயாமை இழிவு என அற இலக்கியம் கூறுகிறது.
  • இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கலித்தொகை கூறுகிறது.

Question 8.
கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
Answer:

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  • மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துக் கொடுப்பவன் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் – திருமுடிக்காரி.
  • இவ்வாறு மன்னர்கள் கொடையால் சிறந்திருந்தனர்.

Question 9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் செம்மை சான்ற அமைச்சர் கடமையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகளின் உட்கருத்தைப் புலப்படுத்துக.
Answer:
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. அத்தகைய நோக்கம் இல்லாதவன் வள்ளல் ஆய்.

Question 11.
அறங்கூறவையம் இருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. உறையூர்
  2. மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
Answer:
இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் வள்ளல்கள் போற்றப்பட்டனர்.

Question 13.
உதவியாண்மை என்ற சொல்லின் பொருள் மற்றும் அதனைக் குறிப்பிட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும்?
Answer:
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
உண்மையான செல்வம் எது என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்?
Answer:
பிறர் துன்பம் தீர்ப்பது தான் உண்மையான செல்வம் என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்.

Question 15.
‘ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாக உள்ளன’ – இக்கூற்றில் சுட்டப்படும் ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவை?
Answer:

  • திருமுருகாற்றுப் படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநாராற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை

Question 16.
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பைப் புலப்படுத்துவன எவை?
Answer:
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பை சிறுபாணாற்றுப்படையும், பெருஞ்சித்திரனார் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 17.
குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என்று குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

Question 18.
“இல்லோர் ஒக்கல் தலைவன்’ யார் என்பதை விளக்குக.
Answer:
பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்திற்குத் தலைவன் வள்ளல்கள் ஆவர்.

Question 19.
கொடை என்பதும் ஓர் அறம் என்பதனை ஔவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கின்ற ஒளவையின் கூற்று கொடை என்பதும் ஓர் அறம் என்பதனைத் தெளிவாக்குகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சிறுவினா

Question 1.
உண்மையான செல்வம் எது?
Answer:
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

Question 2.
சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
Answer:

  • தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
  • பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 3.
நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
Answer:

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

Question 4.
கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
Answer:

  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 5.
மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • அதியன்
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • பேகன்
  • குமணன்
  • திருமுடிக்காரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Students can Download 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
இ) வலிமையை நிலைநாட்டல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 1

சிறுவினா

Question 1.
அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
Answer:

  • இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை’ ஆகும்.
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டுமன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

Question 2.
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

Question 3.
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 4.
ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

Question 5.
‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

Question 6.
‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 7.
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

Question 8.
பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

Question 10.
போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

Question 11.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

Question 13.
அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

Question 14.
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 17.
பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 19.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 20.
அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப் பூ
இ) வெட்சிப் பூ
ஈ) நொச்சிப் பூ
Answer:
அ) உழிஞைப் பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 22.
மருத நிலத்திற்குரியப்பூ …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப்பூ
இ) வெட்சிப்பூ
ஈ) நொச்சிப்பூ
Answer:
ஈ) நொச்சிப்பூ

Question 23.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்
ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்
Answer:
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்
ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்
இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி
Answer:
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியல்
  • கைக்கிளை
  • பெருந்திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 2.
நொச்சிப் பூக்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:
மணிநொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண் நொச்சி – போன்றவையாகும்.

Question 3.
தும்பைத் திணையை விளக்குக.
Answer:
பகை கொண்ட வேந்தர்கள் இருவரும் ‘தம் வலிமையே பெரிது’ என்பதை நிலை நாட்டும் பொருட்டு தம் வீரர்களுடன் தும்பைப் பூச்சூடி களம் குறித்துப் போரிடுதல் ஆகும்.

Question 4.
பாடாண் திணையை விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
  • பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
  • போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 5.
பொதுவியல் திணையை விளக்குக.
Answer:
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

Question 6.
புறத்திணை என்பது யாது?
Answer:
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணையாகும்.

Question 7.
ஆநிரை கவர்தல் நடைபெறக் காரணம் யாது?
Answer:

  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளை (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினர் மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாயிற்று.
  • போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

Question 8.
போரிடும் அரசர்கள் இருவரும் ஒரே வகைப் பூவைச் சூடுவர் – எப்போது? எவ்வகைப்பூ?
Answer:
பகை மன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் : எட்டு

  • வெட்சிப்பூ – வெட்சித்திணை
  • கரந்தைப் பூ – கரந்தைத் திணை
  • வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
  • காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
  • நொச்சிப்பூ – நொச்சித்திணை
  • உழிஞைப்பூ – உழிஞைத்திணை
  • தும்பைப்பூ – தும்பைத்திணை
  • வாகைப்பூ – வாகைத்திணை

Question 10.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் : நான்கு.
அவை: பாடாண் திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை

Question 11.
தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் யாவை?
Answer:
கைக்கிளை, பெருந்திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மதில் போர் பற்றிய திணைகள் யாவை?
Answer:
நொச்சித்திணை, உழிஞைத்திணை.

Question 13.
ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
Answer:
வெட்சித்திணை, கரந்தைத்திணை.

Question 14.
எதிர் எதிர் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சித்திணை (கவர்தல்)
  • காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
  • கரந்தைத்திணை (மீட்டல்)
  • நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
  • வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
  • உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
வெற்றிப்பூ எது?
Answer:
வெற்றிப்பூ : வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வர்.

Question 16.
கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடும் புறத்திணை எது?
Answer:
பாடாண் திணை.

Question 17.
புறப்பொருள் பற்றி உரையாடியவர்கள் யாவர்?
Answer:

  • கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
  • சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்

Question 18.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரும்போர் நடக்கின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் :
பகைமன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவர். இது தும்பைத் திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

விளக்கம் :
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தங்கள் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போரிடுவதால், இதனைத் தும்பைத் திணையாகக் கொள்ளலாம்.

Question 19.
மலைப்பகுதியில் அரியதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி. அது நீண்ட ஆயுள் தரும். அதியனே நீவிர் உண்ணாது. எம் சாதல் ஒழிய கொடுத்த பெருமகனே என்று வாழ்த்துகிறார் ஔவையார். இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணம் :
பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.

விளக்கம் :
அதியமானின் புகழை ஒளவையார் பாடுவதால், இஃது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை? விளக்குக.
Answer:
புறத்திணை 12 வகைப்படும். அவை:

  • வெட்சித்திணை – நிரை கவர்தல்
  • கரந்தைத்திணை – நிரை மீட்டல்
  • வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
  • காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
  • நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
  • உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
  • தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
  • வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
  • பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
  • பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  • கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
  • பெருந்திணை – பொருந்தாக்காமம்
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
Answer:

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையான பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையான சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விவசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருதநிலத்தில் உழவுத்தொழில் சிறந்திருந்தது.

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்
Answer:
வரப்போகிறேன்
என் நண்பன்  இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன் என்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

இல்லாமல் இருக்கிறது
எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

கொஞ்சம் அதிகம்
சங்ககாலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

முன்னுக்குப் பின்
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது நன்றன்று.

மறக்க நினைக்கிறேன்.
எனக்கு பிடிக்காத நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்.

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.
Answer:
தொகைச் சொற்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஆர். இராகவன்,
16, பெரியகடைவீதி,
மதுரை.

பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
‘கனல்’ நாளிதழ்,
மதுரை.

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் – தொடர்பாக.

மதிப்பிற்குரிய ஐயா,

தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : மதுரை
நாள் : 8.3.2020

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 3

கவிதையை உரையாடலாக மாற்றுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 11
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 4
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியோடு விளையாடு

ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 12
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 6

படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 7
Answer:
செய்தி :
பகை கொண்ட வேற்று நாட்டு மன்னனை எதிர்த்துப் போரிட வஞ்சிப்பூ சூடி வென்றே தீருவோம் என குதிரைப்படை, காலாட்படை, யானைப்படையோடு முன்னேறிச்செல்லும் 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

அகராதியில் காண்க.

மிரியல், வருத்தனை, அதசி, துரிஞ்சில்
Answer:
மிரியல் – மிளகு
வருத்தனை – பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்.
அதசி – சணல்
துரிஞ்சில் – வௌவால்வகை, சீக்கரிமரம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 8
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 9

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கலைச்சொற்கள் அறிவோம்.

  • Consulate – துணைத்தூதரகம்
  • Guild – வணிகக்குழு
  • Patent – காப்புரிமை
  • Irrigation – பாசனம்
  • Document – ஆவணம்
  • Territory – நிலப்பகுதி

நிற்க அதற்குத் தக

அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியவர் பெயர், நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.

அதுபோலவே கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம்பெற்றிருக்கும். அவை நம் பழம்பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று அறிவீர்கள்தானே? இவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்….
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

Students can Download 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 1.
உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
Asnwer:

கடின உழைப்பாளர்
(மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்)

எங்கள் ஊரில் விமலா என்றொரு பெண்மணி இருந்தார். மாலையில் பூ விற்பார், வீட்டு வேலை செய்வார். அவர் கல்வியாளரோ, எழுத்தாளரோ, போராட்டக்காரரோ அல்லர். கடின உழைப்பாளர்.

எவ்வாறெனில், திருமணமான நாள் முதல் கணவரால் பல இன்னல்களைத் துன்பங்களை அனுபவித்ததோடு, இளம் வயதிலேயே விதவையுமாகி சமூக அவலத்துக்கும், உள்ளானார்.

துன்பங்களைப் பெற்ற அவர் துன்பம் துடைத்தூன்றும் தூணாக மாறினார். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டார். உழைப்பையே உயிர் மூச்சாய் மாற்றினார். வீட்டு வேலை முதல் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து. தன் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஒரு குழந்தையை மருத்துவராகவும் மற்றொரு குழந்தையைப் பொறியாளராகவும் மாற்றிய விமலா உழைப்பின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

சிறப்புமிக்கவர்
(நர்த்தகி நடராஜ்)

மதுரை மாநகரில் பிறந்து, உலகின் பல்வேறு பகுதிக்குச் சென்று தன் கலையை நடத்தி சிறப்பு செய்தவர் நர்த்தகி நடராஜ்.
இவர் யார் என்றால் நமக்கும் நம் எண்ணங்கள் எல்லாம் சிதறும். இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, தன் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே குருகுலமுறையில் பரதக் கலையை கற்றவர்.

தன் ஆசிரியரால் நர்த்தகி என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆண்டுகளாக தன் பரதக் கலையை உலக அரங்கில் நடத்தி 2019-ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. மனித இனத்தில் மற்றவரால் தாம் வெறுக்கப்பட்டாலும் தன்னையும், தமிழரின் பரதக்கலையையும் உலகிற்குக் கொண்டு சென்ற சிறப்புமிக்கவர் நர்த்தகி நடராஜ்

போற்றத்தக்கவர்
(சாலை ஓரம் உணவகம் நடத்துபவர்)

கோவை பேரூர் பகுதியில் வசிக்கும், பாட்டி பெயர் சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இட்லியால் புகழ் பெற்றவர். இன்றும் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லி விற்பவர்.

நல்ல சுவையான சட்னியோடு 80 வயதிலும் இலாபத்தை நோக்காமல் பலரின் பசியாற்றியவர். அவர் தேவையை ஆட்சியர் கேட்டாலும் எதுவும் வேண்டாம் என்பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஆட்சியர் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடும், அரசு அவரை கௌரவித்தும் வருகிறது. ஒரு ரூபாய் இட்லியால் ஓராயிரம் கோடி மக்களால் போற்றப்படுபவர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 1
Answer:

மகளிர் நாள் விழா

எம்பள்ளிக் கலையரங்கில் 08.03.2020 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.

விழா நாள் : 08.03.2020
இடம் : பள்ளிக் கலையரங்கம்.

எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

தலைமையாசிரியரின் வரவேற்பு:
இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று, நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிச்சித்திரம் வாயிலாக சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத் திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:
‘காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும் இதழ்களே என்றால் மிகையில்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஒரு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். கல்வியில்லா பெண் களர் நிலம்’ என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை . ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். எனவே நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையுங்கள்; புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலகம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:
நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் ‘மோகனா’ நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) பாலசரஸ்வதி – மீரா
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி – மகசேசே
இ) ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்
ஈ) சின்னப்பிள்ளை களஞ்சியம்
Answer:
அ) பாலசரஸ்வதி – மீரா

Question 2.
1954-ல் தாமரையணி விருது பெற்றவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) பாலசரசுவதி
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி
ஈ) ராஜம் கிருஷ்ணன்
Answer:
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் ………………………..
அ) சரோஜினி நாயுடு
ஆ) கமலாநேரு
இ) ஹெலன் கெல்லர்
ஈ) மீரா
Answer:
இ) ஹெலன் கெல்லர்

Question 4.
வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………………..
அ) 1966
ஆ) 1963
இ) 1971
ஈ) 1976
Answer:
அ) 1966

Question 5.
இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது ………………………..
அ) நோபல் பரிசு
ஆ) தாமரை விருது
இ) மகசேசே விருது
ஈ) இந்தியமாமணி விருது
Answer:
இ) மகசேசே விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
பொருத்துக. பெண்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 2
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
கிருஷ்ணம்மாளுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு ………………………..
அ) சுவிட்சர்லாந்து
ஆ) சுவீடன்
இ) தாய்லாந்து
ஈ) மலேசியா
Answer:
ஆ) சுவீடன்

Question 8.
படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம் ………………………..
அ) கரிப்புமணிகள்
ஆ) வேருக்குநீர்
இ) சேற்று மனிதர்கள்
ஈ) குறிஞ்சித்தேன்
Answer:
ஈ) குறிஞ்சித்தேன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 9.
‘பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) ராஜம் கிருஷ்ண ன்
ஈ) பாலசரசுவதி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 10.
சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாக உலகுக்குக் காட்டியவர் ……………….
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சமி
Answer:
அ) ராஜம்கிருஷ்ணன்

Question 11.
‘களஞ்சியம்’ மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்……………….
அ) சின்னப்பாப்பா
ஆ) சின்னத்துரை
இ) சின்னப்பிள்ளை
ஈ) சரசுவதி
Answer:
இ) சின்னப்பிள்ளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 12.
‘உழுபவருக்கே நில உரிமை இயக்கம்’ தொடங்கியவர் …………………
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 13.
எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல் அ) சுப்ரபாதம்………………………
ஆ) காற்றினிலே வரும் கீதம்
இ) இரகுபதி ராகவராஜாராம்
ஈ) மீரா பற்றிய பாடல்
Answer:
ஆ) காற்றினிலே வரும் கீதம்

Question 14.
பாலசரசுவதியின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர் ……………………
அ) பண்டிட் நேரு
ஆ) காந்தி
இ) பண்டிட் இரவிசங்கர்
ஈ) இயக்குநர் இரவிக்குமார்
Answer:
இ) பண்டிட் இரவிசங்கர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 15.
‘காந்தி அமைதி விருதை’ கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு ………………….
அ) இந்தியா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) சிங்கப்பூர்
ஈ) சுவீடன்
Answer:
ஆ) சுவிட்சர்லாந்து

குறுவினா

Question 1.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?
Answer:

  • ஜவஹர்லால் நேரு
  • சரோஜினி நாயுடு
  • காந்தியடிகள்
  • ஹெலன் கெல்லர் – ஆவர்

Question 2.
ராஜம்கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்களைப் பட்டியலிடுக.
Answer:

  • கரிப்பு மணிகள்
  • குறிஞ்சித்தேன்
  • அலைவாய்க் கரையில்
  • சேற்றில் மனிதர்கள்
  • வேருக்கு நீர் – ஆகியவையாகும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?
Answer:
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

Question 4.
கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?
Answer:

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்டமறுப்பு இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • பூதான இயக்கம்
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

Question 5.
களஞ்சியம் மகளிர் குழு மூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
மகளிர் குழுமூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Students can Download 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.4 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 1.
சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்துவந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழ்கின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை மாதவியின் ஆடலில் மயங்குகிறான்.

மாதவியின் பசிய மாலையை யார் வாங்குகிறார்களோ அவர்கள் மாதவியை அடையலாம் என்று அவள் இல்லத்தில் ஒருத்தி கடைத்தெருவுக்கு வந்து கூறுகிறாள்.

கோவலன் மாலையை வாங்கி மாதவியை அடைகிறான். மாதவியோடு வாழ்கின்ற காலத்தில் அவன் செல்வம் எல்லாம் கரைகிறது.

மனம் வேறுபட்டு கண்ணகியை வந்தடைகிறான். இழந்தப் பொருளை மீட்டு மதுரைக்குச் சென்று ஆயர்குலப் பெண் மாதரியின் வீட்டில் தங்குகிறான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பொருள் ஈட்டுவதற்காக கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரை வீதிக்குச் செல்கிறான். பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன் அதை மறைக்க சமயம் கிடைத்ததை எண்ணி அரண்மனைச் சென்று மன்னனிடம் கோவலன் மீது பழி சுமத்துகிறான். மன்னனின் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இதைக்கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரசபைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். உண்மை அறிந்த அரசனும் அரசியும் உயிர் துறக்கிறார்கள். மதுரையும் தீக்கிரையாகிறது.

பின் சேரநாட்டை அடைந்து வேங்கை மர நிழலில் தங்குகிறாள். பிறகு வானுலகோர் சூழ கோவலன் கண்ணகியை அழைத்துச் சென்றதைக் குன்றக் குறவர்கள் கூறுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

செங்குட்டுவன் இமயம் வென்று, கல்லெடுத்து கங்கையில் நீராட்டி வஞ்சியில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான்.

இக்கதையின் மூலம் நாம் அறியும் மூன்று உண்மைகள்:

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

Question 2.
சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்ப்பாக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய கடைத் தெருவுடன் ஒப்பிட்டு உரையாடுக.
Answer:

உரையாடல்

மாணவர்களே! மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் பற்றிக் கற்றோம் அல்லவா! அதை மனதில் கொண்டு இன்றைய கடை வீதிகளோடு ஒப்பிட்டு உரையாடலாமா? சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒளிப்படங்களாகச் சேகரித்து. வரலாற்றுக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுங்கள்.

உரையாடுபவர்கள்: மதன், சுதன், உமா.

மதன் : சுதன், உமா எப்படி இருக்கிறீர்?
இருவரும் : நன்றாக இருக்கிறோம்!
மதன் : இருவரும் விடுமுறைக்கு எங்காவது சென்றீர்களா?
உமா : நான் சென்னை சென்றேன் மதன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனேன்.
மதன் : நானும் திருச்சிக்குச் சென்று இருந்தேன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனபோது அங்கு ‘மால்’ என்று சொல்லப்படும் வணிக வளாகத்துக்குச் சென்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

உமா : சென்னையிலும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளன.
மதன் : நானும் தான் சென்றேன். அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏனோ! என் மனதில் நாம் பாடத்தில் பயின்று தெரிந்து கொண்ட மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளின் காட்சி என் மனதில் வந்து போனது.
சுதன் : ஆமாடா…….. வணிக வீதிகளில் எல்லாப் பொருள்களும் கிடைத்தது போல் இங்கும் கிடைக்கிறது.
உமா : மருவூர்ப்பாக்க வீதியை விட இங்கு ஆரவாரமும், அலங்காரமும் அதிகமாக உள்ளது.

மதன் : அங்கு உற்பத்தியாளரே பொருளைக் கொண்டு வந்து விற்பார். இங்கு முதலீட்டாளர்கள் இடைத்தரகர் மூலம் வாங்கி வந்து விற்பனையாளரை வைத்து விற்கின்றனர்.
சுதன் : அந்தக் காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் நியாயமான விலை, பண்டமாற்று முறை இருந்தது.

உமா : தானியங்கள் குவித்து வைத்து அளந்து கொடுத்தனர். ஆனால். இந்த வளாகங்களிலும், அங்காடிகளிலும் வண்ணக் காகிதங்களில் ஏற்கனவே கட்டிவைத்து அடுக்கி வைத்துள்ளார்கள். நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதன் : மூன்று ஊர்களிலும் பொதுவான முறையில் ஒரு விற்பனை முறை இருந்ததை யாரும் உணர்ந்தீர்களா……
சுதன் : பொதுவான விற்பனை முறையா…… என்னடா அது?
உமா : எனக்குத் தெரிந்து விட்டது. நடைபாதை கடைகளைத்தானே சொல்கிறாய்.

மதன் : ஆமா உமா…. ஒவ்வொரு கடைத்தெருவிலும் கண்ணைக் கவரும் பலமாடிக் கட்டிடங்கள், அலங்கார விளக்குகள் அமைத்து பல் பொருள் அங்காடிகள் இருப்பினும் அதே பொருள்களை நடைபாதைகளில் வைத்து சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளை விற்றல் ஆகிய காட்சிகளையும் காண முடிந்தது தானே……

இருவரும் : ஆம் மதன்! நடைபாதைக் கடைகளிலும் தரமான பொருள் கிடைக்கும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
மூவரும் : ஒருவருக்கொருவர் …… நேரமாகிவிட்டது போய் வரலாமா….. என்று விடைபெற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
Answer:

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
  • பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

சிறுவினா

Question 1.
பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

அ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
Answer:
கர்வனர், ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
Answer:
ட்டினும் மயிரினும், கட்டு நுண்வினை

ஈ) காருகர் – பொருள் தருக.
Answer:
நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலடியில் காணப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
Answer:
சந்தனமும் அகிலும்.

நெடுவினா

Question 1.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
Answer:

  • • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி விற்பது போல் இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப்பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன. விற்கப்படுகின்றன.
  • • பொன், மணி, முத்து, பவளம் ஆகியவை மருவூர்ப்பாக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம்’ விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்தது தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடைபோட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மருவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள். இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தினவேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பலதிறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.

அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

இலக்கணக்குறிப்பு

வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
நுண்வினை, அரும்பௌல் – பண்புத்தொகை
பகருநர் – வினையாலணையும் பெயர்
செறிந்த – பெயரெச்சம்
நன்கலம், வெறுக்கை – பண்புத்தொகை
குழலினும் யாழினும் – எண்ணும்மை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பகுபத உறுப்பிலக்கணம்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம் - 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் …………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Answer:
அ) சிலப்பதிகாரம்

Question 2.
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Answer:
இ) மூன்று

Question 3.
சிலப்பதிகாரத்தின் காதைகள் ………………………..
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Answer:
அ) 30

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Answer:
ஈ) சீத்தலைச்சாத்தனார்

Question 5.
சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………….
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Answer:
அ) மணிமேகலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 6.
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 7.
மணிமேகலையின் ஆசிரியர் …………………..
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Answer:
ஆ) சீத்தலைச்சாத்தனார்

Question 8.
இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Answer:
அ) புகார்க்காண்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Answer:
இ) காண்டம்

Question 10.
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Answer:
இ) காதை

Question 11.
சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை……………..
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Answer:
அ) உரைப்பாட்டு மடை

Question 12.
பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………………….
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Answer:
ஈ) காட்சி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 13.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Answer:
ஈ) இரட்டைக்காப்பியம்

Question 14.
கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………………..
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஈ) கொடும்பாளூர்

Question 15.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
அ) சேர

Question 16.
அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Answer:
ஆ) திருமால்குன்றம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 17.
கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ………………….
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Answer:
அ) கவுந்தியடிகள்

Question 18.
கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Answer:
ஆ) வேங்கைக்கானல்

Question 19.
பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Answer:
அ) கண்ணகி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 20.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

Question 21.
மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) புகார்

Question 22.
மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் ……………………….
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Answer:
இ) சிற்பி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 23.
கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Answer:
அ) தானியம்

Question 24.
கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Answer:
ஈ) வலைச்சியர்

Question 25.
பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 26.
சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ண ம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Answer:
ஈ) துகிர் – முத்து

Question 27.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Answer:
இ) தூசு – பட்டு

Question 28.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Answer:
அ) வெறுக்கை – செல்வம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 29.
‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Answer:
அ) நெய்பவர்

Question 30.
‘அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Answer:
ஈ) செல்வம்

Question 31.
‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Answer:
அ) எண்ணெய் விற்போர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 32.
‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Answer:
ஆ) ஓவியர்

Question 33.
‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) எதுகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Question 2.
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள், காதைகள் குறிப்பிடுக.
Answer:
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது ஆகும். அவை:

  • புகார்க்காண்டம் – 10
  • மதுரைக்காண்டம் – 13
  • வஞ்சிக்காண்டம் –

Question 3.
சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:
முதல்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக்காப்பியம் – உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக.
Answer:

  • உரையிடையிட்ட பாட்டுடை என்பது ‘உரைப்பாட்டு மடை’ என்னும் தமிழ்நடை.
  • இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.

Question 5.
‘கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்
மரம் கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

இவ்வடி அமைந்த நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்.

இவ்வடி அமைந்த காதை எது?
Answer:
இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

கருங்கைக் கொல்லர் எனப்படுபவர் யார்?
Answer:
இரும்புக் கொல்லர்.

இவ்வடியில் அமைந்த தொடை எது?
Answer:
இயைபுத் தொடை – செய்குநரும் கொல்லரும்.

Question 6.
மருவூர்ப்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?
Answer:
செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர் ஆகியோர்.

Question 7.
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
Answer:

  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இரட்டைக்காப்பியம் ஆகும்.
  • காலத்தாலும், கதைத் தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்.

Question 8.
சிலப்பதிகாரத்தில் மருவூர்ப்பாக்கம் பற்றிய செய்தி இடம் பெறும் காண்டம் மற்றும் காதை யாவை?
Answer:
மதுரைக் காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
‘கூலம் குவித்த கூல வீதியும்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் எட்டு வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்கள் உள்ளன.

Question 10.
‘குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்வழுவின்றி இசைத்து’ இவ்வடிகளில் சுட்டும் குரல் முதலான ஏழிசைகள் யாவை?
Answer:
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்,

Question 11.
ஏழு சுரங்களைச் சுட்டுக.
Answer:
ஸ, ரி, க, ம, ப, த, நி.

Question 12.
நன்கலம் தருநர் – என்று எவரைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது?
Answer:
இரத்தினம் முதலான அணிகலன்கள் வேலை செய்பவர்.

Question 13.
‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் இளங்கோவடிகள் புலப்படுத்தும் கருத்தினை எழுதுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகளும் உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 14.
‘மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்’ – இவ்வடியில் சிலப்பதிகாரம் சுட்டும் செய்தி யாது?
Answer:

  • மீன்விலைப் பரதவர் – மீன் விற்கும் பரதவர்
  • வெள்உப்புப் பகருநர் – வெண்மையான உப்பு விற்கும் உமணர்

சுட்டும் செய்தி :
மீன்களை விற்பனை செய்யும் நெய்தல் நில பரதவர் மற்றும் வெண்மையான உப்பு விற்கும் உமணர்மருவூர்ப்பாக்கத் தெருக்களில் வணிகம் செய்கின்றனர்.

சிறுவினா

Answer:1.
‘பால்வகை தெரிந்த பகுதிப் பாண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் இந்திர விழா காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:
மருவூர்ப்பாக்க வணிக வீதியில் நடைபெற்ற வணிகம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

விளக்கம் :
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் பலப்பல பண்டங்களின் (பொருட்களின்) விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

Question 2.
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் எவ்வெவ் மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்?
Answer:
புகார் நகர மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில் :
வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பொருள்கள், அகில் – முதலான மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Students can Download 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்?
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
Answer:
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

குறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாதவகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

சிறுவினா

Question 1.
பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
Answer:
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி, பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்திக் காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:
பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை . இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

நெடுவினா

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 1
முன்னுரை:
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழநாட்டின் வளத்தையும். மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.

சோழ நாட்டின் வளம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 2

மன்னனின் சிறப்பும் பெருமையும் :
மன்னன் மக்களுக்குக் காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக, மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.

முடிவுரை :
சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப்பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

வருபுனல் – வினைத்தொகை
இளமான் – பண்புத்தொகை
மாமலர் – உரிச்சொல் தொடர்
எழு கழனி – வினைத்தொகை
நெடுவரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

கடிந்து கடி த்(ந்) த் உ

கடி – பகுதி
த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் எனப் ………………………பெயர் பெற்றது.
அ) மெய்க்கீர்த்தி
ஆ) மெய்யுரை
இ) நூல்
ஈ) செப்பம்
Answer:
அ) மெய்க்கீர்த்தி

Question 3.
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
அ) இளஞ்சேரலாதன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) இராஜேந்திர சோழன்
ஈ) முதலாம் இராசராசன்
Answer:
ஆ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது………………………
அ) இளமான்கள்
ஆ) யானைகள்
இ) மக்கள்
ஈ) கயற்குலம்
Answer:
ஈ) கயற்குலம்

Question 5.
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………………………
அ) காடுகள்
ஆ) மலைக்குகை
இ) கடல்
ஈ) யானைகள்
Answer:
அ) காடுகள்

Question 6.
‘இயற்புலவரே பொருள் வைப்பார்’ – எதில்?
அ) இல்லத்தில்
ஆ) மன்றத்தில்
இ) செய்யுளில்
ஈ) சான்றோர் அவையில்
Answer:
இ) செய்யுளில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்………………………
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Answer:
இ) நூல்

Question 8.
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………………………
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Answer:
அ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 9.
யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
அ) பல்ல வர்
ஆ) பாண்டியர்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இராஜேந்திர சோழன்
Answer:
இ) முதலாம் இராசராசன்

Question 10.
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்………………………
அ) 81
ஆ) 91
இ) 101
ஈ) 112)
Answer:
ஆ) 91

Question 11.
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது………………………
அ) செப்பேடு
ஆ) சிற்பங்கள்
இ) ஓவியம்
ஈ) மெய்க்கீர்த்தி
Answer:
ஈ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 12.
சோழநாட்டில் சிறைப்படுவன………………………
அ) மா
ஆ) வண்டுகள்
இ) வருபுனல்
ஈ) காவுகள்
Answer:
இ) வருபுனல்

Question 13.
திசாபாலர் ………………………ஆவார்
அ) அறுவர்
ஆ) எழுவர்
இ) எண்மர்
ஈ) பதின்மர்
Answer:
இ) எண்மர்

Question 14.
பொருத்துக.
1. பிணிப்பு – அ) நீர்
2. புனல் – ஆ) கட்டுதல்
3. கழனி – இ) இருள்
4. மை – ஈ) வயல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 15.
பொருத்துக.
1. முகம் – அ) மலை
2. வரை – ஆ) செவிலித்தாய்
3. கைத்தாய் – இ) நூல்
4. பனுவல் – ஈ) முன்னுரை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. யானை – அ) புலம்புகின்றன
2. சிலம்புகள் – ஆ) பிணிக்கப்படுவன
3. ஓடைகள் – இ) வடுப்படுகின்றன
4. மாங்காய்கள் – ஈ) கலக்கமடைகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 17.
பொருத்துக.
1. மலர்கள் – அ) பறிக்கப்படுகின்றன
2. காடுகள் – ஆ) தேன் உண்ணுகின்றன
3. வண்டுகள் – இ) கொடியன
4. மலை மூங்கில்- ஈ) உள்ளீடு இன்றி வெறுமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 18.
பொருத்துக.
1. நெற்கதிர்கள் – அ) இருள் சூழ்ந்திருக்கின்றன
2. மலைகள் – ஆ) மருள்கின்றன
3. மான்களின் கண்கள் – இ) பிறழ்ந்து செல்கின்றன
4. குளத்து மீன்கள் – ஈ) போராக எழுகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 19.
பொருத்துக.
1. செவிலித்தாய் – அ) பொருள் பொதிந்து கிடக்கின்றது.
2. புலவர் பாட்டு – ஆ) தெருவில் ஆடிப்பாடுபவர்.
3. இசைப்பாணர் – இ) பிறழ்ந்து செல்கின்றன.
4. குளத்து மீன்கள் – ஈ) சினங்காட்டுவார்.
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 20.
சொற்றொடரை முறைப்படுத்துக.
i) கல்தச்சர்களால்
ii) புலவர்களால் எழுதப்பட்டு
iii) மெய்க்கீர்த்திகள்
iv) கல்லில் பொறிக்கப்பட்டவை
அ) (ii)-(ii)-(i)-(iv)
ஆ) (ii)-(i)-(i)-(iv)
இ) (i)-(iii)-(iv)-(ii)
ஈ) (iv)-(iii)-(i)-(ii)
Answer:
அ) (iii)-(ii)-(i)-(iv)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 21.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) யானைகள் பிணிக்கப்படும் – மக்கள் பிணிக்கப்படுவதில்லை
ஆ) சிலம்புகள் புலம்பும் – மக்கள் புலம்புவதில்லை
இ) ஓடைகள் கலக்கமடையும் – மக்கள் கலக்கமடைவதில்லை
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்
Answer:
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்

Question 22.
செப்பமான வடிவம் பெற்றது, கல்லிலக்கியமாய் அமைந்தது………………………
அ) கல்வெட்டு
ஆ) மெய்க்கீர்த்தி
இ) செப்பேடு
ஈ) இலக்கியம்
Answer:
ஆ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 23.
தந்தையில்லாதவருக்குத் தந்தையாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 24.
தாயில்லாதவருக்குத் தாயாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 25.
மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 26.
உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 27.
விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூ லாகவும் திகழ்பவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 28.
புகழ் அனைத்திற்கும் தலைவனானவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

குறுவினா

Question 1.
இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?
Answer:
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி ஆகியவையாகும்.

Question 2.
திசாபாலர் எண்மர் யாவர்? (அல்லது) திசைபாலகர் எட்டு பேர் யாவர்?
Answer:
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயகுபேரன், ஈசானன் ஆவர்.

Question 3.
இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?
Answer:

  • சோழமன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை
  • நீர் மட்டுமே தேக்கி வைக்கும் பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைப்படுத்தி அடைக்கப்படுவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
காவல்நெறி பூண்டு ஆண்டவன் இராசராசன் என்பதை மெய்க்கீர்த்தி எவ்வாறு கூறுகின்றது?
Answer:

  • தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
  • தாயில்லாதோருக்குத் தாயாய்த் திகழ்ந்தான்.
  • மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
  • உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி. பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீர்த்தி போற்றுகிறது.

Question 5.
இராசராசசோழனின் புகழ் பற்றி எழுதுக.
Answer:

  • விழி பெற்ற பயனாகவும்,
  • மெய் பெற்ற அருளாகவும்,
  • மொழி பெற்ற பொருளாகவும்,
  • புகழ் பெற்ற நூல் போலும்
    புகழ் அனைத்திற்கும் தலைவனாய்ப் பெருமையுற்று நின்றான்.

Question 6.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
  • சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன. ஆனால் மக்கள் கலக்கமடைவதில்லை.
  • புனல் (நீர்) மட்டுமே அடைக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அடைக்கப்படுவதில்லை

Question 8.
‘மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை.
  • இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Question 9.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை.
  • செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 10.
“தந்தையில்லோர்க்கு தந்தையாகியுந் தாயாரில்லோர் தாயாராகி” இருப்பவர் யார்?
Answer:
தந்தையில்லாதவருக்குத் தந்தையாகவும், தாய் இல்லாதவருக்குத் தாயாகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

Question 11.
மைந்தரில்லோர்க்கு மைந்தராகவும் மன்னுயிர்க்குயிராகவும் இருப்பவர் யார்? மகன் இல்லாதவருக்கு மகனாகவும், உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

சிறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.
Answer:

  • அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்.
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம், ஆகியவற்றை ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் எவற்றுக்கெல்லாம் உவமைப்படுத்தப்பட்டுள்ளான்?
Answer:

  • தந்தையில்லாதவருக்குத் தந்தை
  • தாயில்லாதவருக்குத் தாய்
  • மகனில்லாதவருக்கு மகன்
  • உலக உயிர்களுக்கு உயிர்
  • விழி பெற்ற பயன்
  • மெய் பெற்ற அருள்
  • மொழி பெற்ற பொருள்
  • புகழ்பெற்ற நூல்

– ஆகியவற்றுக்கெல்லாம் இராசராச சோழன் உவமைப்படுத்தப்பட்டுள்ளதாக மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம்.

Question 3.
சோழ நாட்டில் மையுடையன, மருளுடையன யாவை?
Answer:

  • ‘மை’ என்றால் இருள் என்று பொருள்.
  • சோழநாட்டின் மலைப்பகுதியும் மலைக்குகைகளுமே இருள் சூழ்ந்து காணப்படுவன.
  • மக்கள் தம் வாழ்வில் வறுமை இருள் சூழ்வதில்லை.
  • மருள்’ என்பது ஒருவித பயஉணர்வு ஆகும்.
  • அத்தகு மருட்சி இளமான்களின் கண்களில் மட்டுமே காணப்படும். மக்கள் எதற்கும் மருட்சியடைவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை. சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை.

Question 5.
‘மையுடையன நெடுவரையே
மெருளுடையன இளமான்களே’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
AnsweR:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை. இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 6.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை. செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.