Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
எழுவாய் எப்போதும் ……………… லாகவே இருக்கும்.
அ) வினைச்சொல்
ஆ) இடைச்சொல்
இ) பெயர்ச்சொல்
ஈ) உரிச்சொல்
Answer:
இ) பெயர்ச்சொல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 2.
பாடல் பாடினாள் – இத்தொடரில் ……………… இல்லை .
அ) எழுவாய்
ஆ) பயனிலை
இ) செயப்படுபொருள்
ஈ) சொல்
Answer:
அ) எழுவாய்

Question 3.
அமுதன் ஓடினான் – இத்தொடரில் ……………… இல்லை .
அ) பயனிலை
ஆ) செயப்படுபொருள்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
Answer:
ஆ) செயப்படுபொருள்

ஆ. எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.
1. மாதவி சித்திரம் தீட்டினாள்.
2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்.
4. கிளி பழம் தின்றது.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 11
Asnwer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

இ. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.
1. …………………………………….
2. …………………………………….
3. …………………………………….
Answer:

  • அமுதா திருக்குறள் படித்தாள்.
  • முகிலன் கவிதை எழுதினான்.
  • அன்பழகன் பேச்சுப்போட்டியில் பேசினான்.

ஈ. பயனிலை, செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.
1. …………………………………….
2. …………………………………….
3. …………………………………….
Answer:

  • ஆட்டம் ஆடினான்.
  • வண்ண ம் தீட்டினாள்.
  • கவிதை பொழிந்தான்.

கற்பவை கற்றபின்

Question 1.
தொடரின் அமைப்பு முறையை அறிந்து கூறுக.
Answer:
தொடர் அமைப்பில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் கட்டாயம் இடம்பெற வேண்டும். பயனிலை இல்லாமல் தொடர் சில நேரத்தில் அமையலாம். எ.கா. தரணி பாடல் பாடினான்.

Question 2.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் சில இடங்களில் வருவதையும், அவை வராமல் தொடர் அமைவதையும் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
தென்றல் நடனம் ஆடினாள் என்ற தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் வரும்.
எழுவாய் இல்லாமல் தொடர் அமையும். எ.கா: நடனம் ஆடினாள்.

செயப்படுபொருள் இல்லாமல் தொடர் அமையும். எ.கா. தென்றல் ஆடினாள்.
பயனிலை இல்லாமல் தொடர் அமையாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
எழுவாய் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
Answer:
ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் ஆகும்.
எ.கா. தென்றல் நடனம் ஆடினாள். இதில் தென்றல் என்பது எழுவாய் ஆகும்.

Question 2.
செயப்படுபொருள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
Answer:
ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும். எ.கா. தென்றல் நடனம் ஆடினாள். இதில் நடனம் என்பது செயப்படுபொருள் ஆகும்.

Question 3.
பயனிலை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
Answer:
ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்று பயனிலை ஆகும். எ.கா. தென்றல் நடனம் ஆடினாள். இதில் ஆடினாள் என்பது பயனிலை ஆகும்.

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல்

Question 1.
இயற்கை சார்ந்த பாடல்களை வகுப்பறையில் பாடச் செய்து கேட்டு அதுபோலப் பாடி மகிழ்க.
Answer:
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
பச்சை வண்ண காட்டை
நீ பாரு நீ பாரு
அது சொல்லும் வார்த்தை ஆயிரம் அய்யா!
இவனப் போல அழகானவன் தான் யாரு.
ஆமா ! நீ கூறு…
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 2.
புதிர்களைத் தொகுத்து வந்து வகுப்பறையில் கூறுக. நண்பன் கூறிய புதிருக்குச் சரியான விடை கூறி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே புதிர்களை தொகுத்து எழுத வேண்டும்.

Question 3.
இயற்கையைக் காக்க வேண்டியதன் அவசியம் பற்றிய உரைகளைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்.

அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும்.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

ஆ. பேசுதல்

Question 1.
இயற்கை சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இயற்கை சார்ந்த பாடல்களை பாடி மகிழ்க.

Question 2.
பழமொழிக் கதைகளை உம் சொந்த நடையில் கூறுக.’
Answer:
பேராசைக்காரன்
ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான்.

காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது.

ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை . அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

கதை உணர்த்தும் பழமொழி: பேராசை பெருநஷ்டம்.

Question 3.
நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் பேசுக.
Answer:
நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் உள்ள கோயில் ஒன்றின் வெளிப்பிரகாரத்தில் உணவு உண்டோம்.

கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.

பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம். பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.

Question 4.
மழை எவ்வாறு பெய்கிறது? அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.
Answer:
கடல் நீர் ஆவியாகி, வானத்திற்குச் செல்கின்றது. அது வானத்தில் மேகமாக மாறித் தங்குகின்றது. குளிர்ந்த நீர் பட்டவுடன், வானத்தில் இருந்து மேகம் மழையாகப் பொழிகின்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 5.
தென்னை , வாழை, பனை, வேம்பு, முருங்கை ஆகிய மரங்கள் பேசுவது போல நடித்து ‘நானே அதிகம் பலன் தருவேன்’ என ஒவ்வொருவரும் வகுப்பில் பேசிக்காட்டுக.
Answer:
தென்னை : நான் கட்டும் சணலாகவும், வீட்டுக் கூரையாகவும், தாங்கு பலகையாகவும் பயன்படுகின்றேன். பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையை வைத்தால் இளநீர் என்று மனிதர்கள் என்னைப் பெருமையாகச்
சொல்வார்கள். எனவே, அதிக பலன் தருவது நான் தான்.

வாழை: எனக்குச் சாவு என்பதே கிடையாது. நான் வெட்டினாலும் முளைத்துக் 8 கொண்டுதான் இருப்பேன். பூவும், காயும், கனியும், நாரும், மட்டையும், 5 இலையும் என எனது உடல் முழுவதும் மக்களுக்காகவே தருகின்றேன். ‘வாழையடி வாழை’ என்ற சொல்லுக்கு ஏற்பதலைமுறை தலைமுறையாக பயன்படுவது நான் தான்.

பனை : நான் பனம் நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை எனப் பலவிதமாக மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளேன். வெயில் காலங்களில் தாகம் தீர்க்கும் பானமாக என்னை அருந்துகின்றனர். பனை ஓலை, மரம் ஆகியவற்றை எடுத்து வீடு கட்டி பலரும் பயனடைகின்றனர். எனவே, அதிக பலன் தருவது நான் தான்.

வேம்பு: வேப்பம்பூ, இலை, கிளை, பட்டை, காய், கனி என அனைத்து பாகங்களையும் எடுத்து மருந்துப் பொருட்கள் தயாரிக்க என்னைப் பயன்படுத்துகின்றனர். என் மரத்தடியில் அமர்ந்தால் நோயே வராது. ஆகவே மனிதர்களைப் பாதுகாக்கும் கவசமாக நான் இருக்கிறேன்.

முருங்கை : நான் சத்து மிக்க முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப் பூ. ஆகியவற்றை மனிதனுக்குத் தருகின்றேன். உணவாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறேன். ஆகவே, அதிகமாக பயன்தருவது நான்தான்.

இ. படித்தல்

Question 1.
பழமொழிகளைப் படித்துத் தொகுப்பு தயார் செய்க.
Answer:

  1. ஒற்றுமையே பலம்.
  2. சிறுதுளி பெருவெள்ளம்.
  3. பணம் பத்தும் செய்யும்.
  4. கூழானாலும் குளித்துக் குடி.
  5. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  6. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
  7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
  8. செய் அல்லது செத்து மடி.
  9. நூல் பல கல்.
  10. நாய் விற்ற காசு குரைக்குமா.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

2. சிறந்த புதிர்களைப் படித்துச் சேகரித்துத் தொகுப்பு தயார் செய்க.

1. சின்னத்தம்பி குனிய வச்சான். அது என்ன?
Answer:
முள்

2. திரி இல்லாத விளக்கு, உலகமெல்லாம் தெரியுது. அது என்ன?
Answer:
சூரியன்

3. மூடாத வாய்க்கு முழு வால். அது என்ன?
Answer:
அகப்பை

4. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைகிறான். அது என்ன?
Answer:
ஊசி

5. மண்டை உண்டு. கட்டை இல்லை. பூ உண்டு. மணமில்லை. அது என்ன?
Answer:
வாழை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Quesiton 3.
புத்தகப் பூங்கொத்துப் பகுதியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழமொழி, புதிர்களைத் தொகுத்து வருக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 2

ஈ. எழுதுதல் :

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:

  • மாங்காய் பறித்துத் தருகிறேன்.
  • ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.
  • பழமொழி ஒன்று சொல்.
  • கண்ணிமைக்கும் நேரம்.

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Answer:

  • அமைதியாக – ஆசிரியர் பாடம் நடத்தும் போது அமைதியாகக் கேட்க வேண்டும்.
  • தருகிறேன் – தினமும் ஏழைக்கு உணவு தருகிறேன்.
  • சிறுவர்கள் – சிறுவர்கள் பூங்காவில் விளையாடுகின்றனர்.
  • முழக்கம் – பாரதி தமிழ் முழக்கம் செய்தார்.
  • தங்கம் – தங்கம் மிகவும் விலை உயர்ந்தது.
  • விளைவு – தீமைக்குத் தீய விளைவே கிடைக்கும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 3.
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருந்தாலும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா.
Asnwer:
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருந்தாலும், எனது பெயரின் முன் பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?

Question 4.
பொருத்தமான சொற்களால் நிரப்புக.
(உறுதியாக, சொத்தையாக, பல்வலி, பல்துலக்க)
மருத்துவர் : விமலா உன் உடம்புக்கு என்ன?
விமலா : எனக்கு ……………………… ஐயா,
மருத்துவர் : எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் ……………………… இருக்கிறதே.
விமலா : அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?
மருத்துவர் : இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் ……………………… வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் ……………………… இருக்கும்.
விமலா : நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.
Answer:
மருத்துவர் : விமலா உன் உடம்புக்கு என்ன?
விமலா : எனக்கு பல்வலி ஐயா,
மருத்துவர் : எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.
விமலா : அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா? மருத்துவர் : இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாக இருக்கும்.
விமலா : நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.

5. கதையை நிறைவு செய்க.
ஒரு நாள் அந்த நாட்டின் அரசர் குதிரையின் மேல் வலம் வந்து கொண்டிருந்தார். வயதான மனிதர் ஒருவர், தம்முடைய தள்ளாத வயதிலும் சாலையின் ஓரங்களில் குழிகளைத் தோண்டி, விதைகளையும் செடிகளையும் நட்டுத் தண்ணீர் ஊற்றியதைப் பார்த்தார். அரசர் அந்த வயதானவர் செய்யும் செயல்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். ஒரு நாள்
…………………………
…………………………
Answer:
மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற நீர் கிடைக்காததால் தான் குடிக்கக் கொண்டு வந்த சிறிதளவு தண்ணீரையும் தான் குடிக்காமல் மரத்திற்கு ஊற்றி, மயங்கி கீழே விழுந்து விடுகின்றார். அரசர் உடனே குதிரையை விட்டு இறங்கி வேகமாக ஓடுகின்றார். அவரைத் தூக்கித் தண்ணீர் கொடுக்கிறார்.

ஆனால் முதியவர் எனக்குத் தண்ணீர் வேண்டாம். இந்த மரத்திற்கு ஊற்றுங்கள். நான் செத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த மரம் செத்தால், இந்த நாட்டுக்கே பாதிப்பு. ஆகவே அதனைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி தன் உயிரை விட்டார். அரசர் அந்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார். நாடே மரங்கள் பெருகி வளம் மிக்கக் காடானது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 6.
விளம்பரத்தைப் படித்துப் புரிந்து கொண்டு விடையளிக்க.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 3
Answer:
பேசும் கிளி! தீ வளையத்திற்குள் பாயும் புலி! பார் விளையாட்டில் பறக்கும் தேவதைகள்! கூண்டுக்குள் உருண்டோடும் குல்லா மனிதர்! வெள்ளைப் புறாக்களின் எல்லையில்லா ஆட்டம்! கோமாளிக் குள்ளர்களின் கும்மாள விளையாட்டு! குதிரையேறும் கொஞ்சும் , மழலைகள்!

வாருங்கள்! வண்ணவொளியில் காணுங்கள்!

விளம்பரம் படி ! விடையைக் கொடு.

1. சர்க்கஸ் நடைபெறும் இடம் எது?
Answer:
நேரு விளையாட்டரங்கம், விழுப்புரம்.

2. விளையாடுபவர்கள் யார்?
Answer:
கோமாளிக் குள்ளர்கள்.

3. குதிரையேறுபவர்கள் யார்?
Answer:
கொஞ்சும் மழலைகள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

4. சர்க்கஸ் நடைபெறும் அரங்கத்தின் பெயர் என்ன?
Answer:
நேரு விளையாட்டரங்கம்.

5. சர்க்கஸின் பெயர் என்ன?
Answer:
ஜம்போ சர்க்கஸ்.

Answer:7.
இணைத்துக் கூறுவோம்
தொடர்புடைய பல சொற்றொடர்களைத் தனித்தனி அட்டைகளில் எழுதிக் கொள்ளுங்கள்.
எ.கா. மழையில் நனைந்தேன்.
கட்டை ஈராமானது

  • அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
  • ஒவ்வொருவரும் ஓர் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒருவர் எழுந்து கையிலுள்ள அட்டையில் எழுதியுள்ளதைப் படியுங்கள்.
  • அதனோடு தொடர்புடைய சொற்றொடர் எழுதியுள்ள அட்டையை வைத்துள்ளவர் உடனே எழுந்து படிக்க வேண்டும்.
  • மற்றவர்கள் இரண்டு சொற்றொடர்களையும் இணைத்துக் கூற வேண்டும். மழையில் நனைந்ததால் சட்டை ஈரமானது.

8. தடித்த சொல் விடையாக வருமாறு வினா அமைக்க.

1. என் நண்பனின் பெயர் தேனமுதன்.
Answer:
உன் நண்பனின் பெயர் யாது?

2. பாட்டி எனக்குக் கதை கூறுவார்.
Answer:
உனக்குக் கதை கூறுபவர் யார்?

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

3. தினமும் மாலையில் விளையாடுவேன்.
Answer:
தினமும் எப்போது விளையாடுவாய்?

4. எனக்கு மட்டைப் பந்து விளையாட மிகவும் பிடிக்கும்.
Answer:
உனக்கு எந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும்?

5. உயிர்களிடத்தில் அன்பாக நடந்துகொள்வேன்.
Answer:
யாரிடத்தில் அன்பாக நடந்து கொள்வாய்?

9. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
ஒரு நாள் மாலை முத்துவின் வீட்டிற்கு அவனுடைய நண்பர்களான கென்னடியும் அன்வரும் விளையாட வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன நான்கு நாய்க் குட்டிகளைத் தோட்டத்தில் கண்டனர். நாய்க் குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர். இருவரும் ஆளுக்கொரு நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டனர். முத்து அவர்களிடம், “நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டா. நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினான்.

நண்பர்கள் அமைதியாக நாய்க்குட்டிகளைக் கீழே இறக்கிவிட்டனர். நாய்க் குட்டிகள் மகிழ்ச்சியாகத் தம் தாயோடு விளையாடுவதை நண்பர்கள் மூவரும் பார்த்து மகிழ்ந்தனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

விடை தருக.

Question 1.
முத்துவின் தோட்டத்தில் எத்தனை நாய்க்குட்டிகள் இருந்தன?
Answer:
நான்கு நாய்க்குட்டிகள்.

Question 2.
நண்பர்கள் இருவரும் முத்துவின் வீட்டிற்கு எதற்காக வந்தனர்?
Answer:
விளையாடுவதற்காக வந்தனர்.

Question 3.
கென்னடியும் அன்வரும் என்ன செய்ய விரும்பினர்?
Answer:
நாய்க்குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர்.

Question 4.
நண்பர்களுக்கு முத்துவின் அறிவுரை என்ன?
Answer:
நண்பர்களே, பால் குடிக்கும் இந்த நாய்க் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம். நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம். சிந்தித்துப் பாருங்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 5.
நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் சென்றனரா? ஏன்?
Answer:
நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்லவில்லை. முத்துவின் அறிவுரையால் நாய்க்குட்டியின் பெற்றோரிடமிருந்து பிரிக்க மனமில்லாமல் விட்டுச் சென்றனர்.

மொழியோடு விளையாடு

1. கண்டுபிடித்து எழுதுக.

1. மணம் மிக்க மலர்…………………
Answer:
மல்லிகை

சிலந்திக்கு எத்தனை கால்கள்?
Answer:
எட்டு

3. பந்தை அடிக்க உதவுவது…………………
Answer:
மட்டை

4. பசுவின் உணவு …………………
Answer:
புல்

5. மீன் பிடிக்க உதவும் …………………
Answer:
வலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

6. ஒரு தின்ப ண்ட ம் ……………..
Answer:
அப்பம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 4

Question 2.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
Asnwer
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 5

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 3.
கலங்கரை,விளக்கம் இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குஙக
Answer:
கலங்கரை விளக்கம் – கலம், கரை, கலக்கம், விளக்கம்.

Question 4.
ஒரு கதையின் முதல் தொடர் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொடர் கூறிக் கதையை நிறைவு செய்க.
Asnwer:
கதை தொடர் 1:
அன்று காட்டு அரசன் சிங்கத்திற்குப் பிறந்த நாள்.

கதை நிறைவு
அன்று காடே விழாக் கோலமாக இருந்தது. சிங்கம் அனைத்து விலங்குகளையும் துன்புறுத்தி இருந்ததால் அனைத்து விலங்குகளும் இது தான் நேரம் என்று சிங்கத்திடம் சென்று அரசே! பிறந்தநாள் அன்று எதைக் கேட்டாலும், நீங்கள் தருவீர்கள் எங்களைத் துன்புறுத்தக் கூடாது என்ற வாக்குறுதியைக் கேட்டது, சிங்கமும் அதனை ஏற்றது.

கதை தொடர் 2: இன்சுவை பள்ளி செல்லும் வழியில் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

கதை நிறைவு
அதனை என்ன செய்வது என்று நினைத்தாள். அவளின் தோழி நாம் வேண்டியதை வாங்கி செலவு செய்யலாம் என்றனர். ஆனால் இன்சுவை அது தவறு. பணத்தைத் தொலைத்தார்கள் எவ்வளவு துன்பப்படுவார் என்றாள். பணம் தொலைத்தவர் கதறிக் கொண்டு அழுது கொண்டே ஓடிவந்தார். இன்சுவை பணப்பைக்குக் கொடுத்ததும் மகிழ்ந்து, அவளை வாழ்த்திச் சென்றார்.

கதை தொடர் 3:
கவியரசன் நாய், பூனை போன்ற விலங்குகளைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சியடைவான்.

கதை நிறைவு உயிரிரக்கம் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. ஒரு நாள் நாய் ஒன்று அவனைத் துரத்தியது. அவனைக் கடிப்பது போல வந்தது. அவன் பயந்தான் நாயின் பார்வையைப் புரிந்துக் கொண்டான். இனி யாரையும் துன்புறுத்தக் கூடாது என்று முடிவு செய்தான்.

கதை தொடர் 4:
நரி ஒன்று கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த மான்களைக் கண்டது.

கதை நிறைவு மனதில் திட்டம் ஒன்றைப் போட்டது. எப்படியாவது ஒரு மானைத் தனியே அழைத்துவரத் திட்டம் போட்டது. தந்திரமாகப் புல் அடர்ந்த இடத்தில் மறைந்து கொண்டது. ஒரு மான் தனியே வந்தது. நரி மானைப் பிடிக்கும் நேரத்தில் மற்றொரு மான் நரியைத் தள்ளிவிட்டு மானைக் காப்பாற்றியது. நரி ஏமாற்றம் அடைந்தது.

Question 5.
கடல் வளங்களைக் கண்டுபிடிப்போம்.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 12
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 6
1. சிப்பி
2.பவளம்
3. மீன்
4. முத்து
5. சங்கு
6.ஆமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 6.
சரியான சொற்களை எடுத்துப் பொருத்துக
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 13
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 7

Question 7.
பின்வரும் சொற்களைக் கொண்டு சொற்றொடர் உருவாக்கலாமா?
எ.கா. மரம் – மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்
மலை – உயர்ந்து நிற்பது மலை
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 14
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 15
Answer:
1. கரி – விறகை எரித்தால் கரி.
கறி – சந்தையில் உள்ளது காய்கறி.

2. தவளை – நிலத்திலும் நீரிலும் வாழ்வது தவளை. தவலை
தவலையில் தண்ணீர் பிடித்தேன்.

3. வழி – ஊருக்கு வழி காட்டு.
வலி – எனக்குத் தலைவலி.

4. அரை – ஒன்றில் பாதி அரை.
அறை – இது சமையல் அறை.

5. மனம். – அவன் மனம் நல்ல மனம்.
மணம் – மல்லிகை மலர் மணமுடையது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

அறிந்து கொள்வோம்

Question 1.
கடலை குறிக்கும் பெயர்கள்.
Answer:
1. புணரி
2. ஆழி
3. சாகரம்
4. சமுத்திரம்
5. பௌவம்
6. வேலை
7. முந்நீர்
8. நீராழி
9. பெருநீர்

நிற்க அதற்குத் தக

1. என்னால் இயன்றவரை இயற்கையைக் காப்பேன்.
2. எனது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்ப்பேன்.
3. எனது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பேன்.

செயல் திட்டம்

Question 1.
கடல் படம் வரைந்து கடலின் பயன்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 8
(i) எண்ண ற்ற உயிர்கள் வாழ இடம் தரும்.
(ii) மீன்கள், முத்துக்கள், சிப்பிகள், சங்குகள், பவளங்கள் தரும்.
(iii) உப்பு தரும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 2.
உங்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதைச் செயல்திட்டமாக மேற்கொள்க. புகைப்படத்துடன் எழுதி வருக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 9
(i) தென்னங்கன்றுகளை நட்டோம்.
(ii) தினமும் இருமுறை நீர்பாய்ச்சினோம்.
(iii) இயற்கை உரங்களை இட்டோம்.
(iv) வேலி அமைத்து பாதுகாத்தோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Question 3.
பழமொழிகள், புதிர்கள், விடுகதைகள் தொகுப்பு தயார் செய்க.
Answer:
பழமொழிகள்

(1) நூல் பல கல்.
(2) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
(3) பணம் பத்தும் செய்யும்.
கூழானாலும் குளித்துக் குடி.
(5) ஒற்றுமையே உயர்வு.
(6) சிறுதுளி பெருவெள்ளம்.
(7) விளையும் பயிர் முளையிலே தெரியும். (8) நாய் விற்ற காசு குரைக்குமா?
(9) தனி மரம் தோப்பாகாது.
(10) தன் வினை தன்னைச் சுடும்.
(11) தோல்வியே வெற்றியின் முதல் படி.
(12) பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
(13) இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே!
(14) அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
(15) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
(16) பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
(17) பாம்பின் கால் காம்பறியும்.
(18) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
(19) ஆழமறியாமல் காலை விடாதே.
(20) ஆறிலும் சாவு நூறிலும் சாவு

புதிர்கள், விடுகதைகள்

(i) பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
Answer:
சீப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

(ii) ஒற்றைக் கால் குள்ளனுக்கு எட்டு கை. அது என்ன?
Answer:
குடை

(iii) அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
Answer:
தண்ணீர்

(iv) ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
Answer:
மரம்

(v) வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
Answer:
மழை

(vi) பூமியிலே பிறக்கும் புகையாய் போகும். அது என்ன?
Answer:
பெட்ரோல்

(vii) முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
Answer:
நாக்கு

(viii) மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அது என்ன?
Answer:
தேங்காய்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை

அகர முதலிSamacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.4 சொற்றொடர் அமைப்பு முறை - 10

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
நரி, காகத்திடம் இருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது?
Answer:
காகமும் மானும் இணைபிரியாத நண்பர்கள், அவர்களைப் பிரித்து மானைக் கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடம் இருந்து மானைப் பிரித்தது.

Question 2.
நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?
Answer:
நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம், “நண்பா, யாரையும் நம்பிவிடாதே! அது நமக்குத்தான் ஆபத்து” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

Question 3.
நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது?
Answer:
நரி, மானை விவசாயி ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.

Question 4.
வலையில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது?
Answer:
விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்தது போல அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையில் இருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து ‘கா கா’ என்று குரல் கொடுக்கிறேன். உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன்படி மான் நடந்து கொண்டு நடித்தது. வேடன் விடுவித்தவுடன் காகம் கரைய மான் ஓடியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

Question 5.
‘தப்பிப் பிழைத்த மான்’ கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நீதி யாது?
Answer:
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.

சிந்தனை வினா.

Question 1.
நமக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம் என்னென்ன நற்குணங்கள் இருக்க வேண்டும்? பட்டியலிடுக.
Answer:
அன்பு, உண்மை , நல்லொழுக்கம், இரக்கம், மனிதநேயம், சகிப்புத் தன்மை , சினம் கொள்ளாமை, ஈகை குணம் ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

Question 1.
ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
தமிழ்த் தாயே வணக்கம்!

ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். நட்பு என்பது சிரித்து பேசி மகிழ்வதற்கு மட்டுமே அல்ல. துன்பம் வருகின்ற போதும், ஆபத்து வருகின்ற போதும் உடன் இருப்பது தான் உண்மையான நட்பாகும். எதிர்பாராத விதமாக ஏதாவது சண்டையில் மாட்டிக் கொண்டால், நண்பனை இவன் யார் என்று எனக்குத் தெரியாது என்று ஓடிவிடுபவன் நண்பனா? இல்லவே இல்லை.

அருகில் இருந்து காப்பவன் தான் உண்மையான நண்பன். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையர் நட்பு, அதியமான் – ஔவையார் நட்பு. இவர்கள் நட்பு உலகம் போற்றும் நட்பு. ஆபத்தில் உதவிய நட்பு. ஆபத்தில் உதவுங்கள் அதுதான் உண்மையான நட்பு.

நன்றி!

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

Question 2.
தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையே தரும் என்பதற்கு வேறொரு கதையைக் கூறுக.
Answer:
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அங்கு ஒரு கொக்கும் இருந்தது. அது அந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது.

மீன்கள் தவித்தன. கொக்கு நல்லவனைப் போல நடித்தது. தொலைவில் உள்ள ஒரு குளத்தில் நீர் இருப்பதாகவும் ஒவ்வொருவராகக் கொண்டு போய் பத்திரமாக விடுவதாகவும் சொன்னது. அதனை நம்பி மீன்களும் கொக்கு ஒவ்வொருவரையும் தினமும் கொண்டு சென்றது.

ஒருநாள் இந்தக் குளத்தில் வசித்த நண்டு மீன்களிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொக்கிடம் நட்பு கொண்டன. கொக்கு “இந்த முறை என்னை அந்தக் குளத்தில் கொண்டுபோய் விட்டுவிடு” என்று கொக்கிடம் சொல்லி, அதன் மீது ஏறிக் கொண்டது. ஒரு மலையைத் தாண்டிச் செல்லும் போது கீழே மீன் முள்கள் நிறைய கிடந்தன. மீன்களைக் குளத்தில் விடாமல் கொக்கு தின்றதை அறிந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்

உடனே நண்டு கொக்கின் கழுத்தை அழுத்தி தப்பித்து ஓடி, குளத்திலுள்ள மீன்களிடம் நடந்ததைச் சொன்னது.
தீய நட்பை நினைத்து மீன்கள் வருந்தின.

தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையே தரும் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே? Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + பொந்து
ஆ) மர + பொந்து
இ) மரப் + பொந்து
ஈ) மரப்பு + பொந்து
Answer:
அ) மரம் + பொந்து

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 2.
அக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அக் + கரை
ஆ) அந்த + கரை
இ) அ + கரை
ஈ) அ + அரை
Answer:
இ) அ + கரை

Question 3.
சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சூறைகாற்று
ஆ) சூற்காற்று
இ) சூறக்காற்று
ஈ) சூறைக்காற்று
Answer:
ஈ) சூறைக்காற்று

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 4.
கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கண்ணிமைக்கும்
ஆ) கண் இமைக்கும்
இ) கண்மைக்கும்
ஈ) கண்ண மைக்கும்
Answer:
அ) கண்ணிமைக்கும்

Question 5.
நானூறு இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நான்கு + நூறு
ஆ) நா + நூறு
இ) நான்கு + னூறு
ஈ) நான் + நூறு
Answer:
அ) நான்கு + நூறு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

அ) மணியோசை – …………………… + …………………………..
ஆ) தேனிசை – …………………… + …………………………..
Answer:
அ) மணியோசை – மணி + ஓசை
ஆ) தேனிசை – தேன் + இசை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

இ. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:
புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது

1. யானைக்கும் ………………. சறுக்கும்.
Answer:
அடி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

2. விளையும் ……………….. முளையிலே தெரியும்.
Answer:
பயிர்

3. ஐந்தில் …………….. ஐம்பதில் வளையாது.
Answer:
வளையாதது

4. ஆத்திரக்காரனுக்குப் ………………. மட்டு.
Answer:
புத்தி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

5. ஆழம் தெரியாமல் ….. …………….. விடாதே.
Answer:
காலை

ஈ. சொல்லை இடம்மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.

Question 1.
உழுவதை அகல விட உழு ஆழ……………………………..
Answer:
அகல உழுவதை விட ஆழ உழு. வளையாதது

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 2.
வளையாது ஐம்பதில் ஐந்தில்……………………………..
Answer:
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

Question 3.
மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்……………………………..
Answer:
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.

Question 4.
குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை……………………………..
Answer:
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 5.
கற்பவர் கரையில் கல்வி நாள்சில……………………………..
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள்சில.

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பழமொழி என்பது யாது?
Answer:
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.

Question 2.
கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?
Answer:
செல்லம்மாவுக்கு மாம்பழம் தருவதாகக் கிளி கூறியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 3.
கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?
Answer:
மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக்காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால் அதைப் ‘பழமொழிக் கிளி’ என்று அழைக்கின்றனர்.

Question 4.
இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடுக.
Answer:

  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  • அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.

ஊ. சிந்தனை வினா

கிளியைப்போல், நீ பழமொழி கூறுவதாய் இருந்தால் என்ன பழமொழிக்கு எப்படிப் படம் வரைந்து விளக்குவாய்? வகுப்பறையில் செயல்படுத்து.
Answer:
பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே? - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

கற்பவை கற்றபின்

Question 1.
உன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பேசும்போது பயன்படுத்தும் பழமொழிகளைத் தொகுத்து வருக. அவைபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. .
Answer:

  • சிறுதுளி பெருவெள்ளம்
  • தனிமரம் தோப்பாகாது
  • ஒற்றுமையே உயர்வு
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  • இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
  • விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை

ஆகிய பழமொழிகள் என் தாத்தா, பாட்டி பேசும் போது பயன்படுத்தும் பழமொழிகள் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளையும், அவற்றின் பொருள்களையும் உம் சொந்த நடையில் கூறுக.

(i) யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
Answer:
முன்னெச்சரிக்கை அறிந்து செயல்படுதல்.

(ii) இக்கரைக்கு அக்கரை பச்சை.
Answer:
இதற்கு
அதுவே பரவாயில்லை.

(iii) ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
Answer:
ஆடி மாதக் காற்றில் அம்மி கூடப் பறந்துவிடும்.

(iv) ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
Answer:
திருக்குறளும், நாலடியாரும் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

(v) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
Answer:
வாய்ப்புகளைக் கிடைக்கும்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(vi) அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
Answer:
எந்தச் செயலையும் ஆழ்ந்து செய்ய வேண்டும்.

Question 3.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே? - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 4.
பள்ளி நூலகத்தில் உள்ள ‘பழமொழிக்கதைகள்’ புத்தகத்தைப் படித்து பழமொழிக்கான விளக்கத்தை வகுப்பறையில் கதையுடன் பகிர்ந்து கொள்க.
Answer:
பள்ளி குளத்தின் அருகே வசித்து வந்த எலியும் தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் அந்தக் குளத்தில் கோடை காலம் என்பதால் நீர் வறண்டுவிட்டது. எலி அலைந்து, திரிந்து எப்படியே ஒரு நீருள்ள பெரிய குளத்தைக் கண்டுபிடித்தது. தனது நண்பன் தவளையே அழைத்துக் கொண்டு சென்றது.

வழியில் காணாமல் போய்விடுவோம். அதனால் எலியும் தவளையும் கயிற்றால் இருவரின் காலையும் இணைத்துக் கட்டிக் கொண்டன. நீண்ட பயணத்திற்குப் பிறகு குளம் வந்தது. குளத்தைக் கண்டவுடன் தன்னுடன் கயிற்றில் கட்டியுள்ள எலியை நினைக்காமல், நன்றி மறந்து குளத்துக்குள் குதித்து விளையாடியது.

கயிற்றால் கட்டப்பட்டிருந்த எலி பரிதாபமாக செத்தது. பருந்து ஒன்று எலியைத் தின்பதற்காகத் தூக்கிய போது எலியுடன் கட்டப்பட்ட தவளையும் மாட்டிக் கொண்டு, மாண்டு போனது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

கதை உணர்த்தும் பழமொழிகள்:

  • முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்.
  • கூடா நட்பு கேடாய் முடியும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பழமை + மொழி இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பழமைமொழி
ஆ) பழையமொழி
இ) பழமையானமொழி
ஈ) பழமொழி
Answer:
ஈ) பழமொழி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 2.
மாங்காய்கள் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) மா + காய்கள்
ஆ) மாங் + காய்கள்
இ) மா + ங்காய்கள்
ஈ) மாங்கு + காய்கள்
Answer:
அ) மா + காய்கள்

Question 3.
சொல்லுக்குறுதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) சொல்லுக்கு + குருதி
ஆ) சொல் + உறுதி
இ) சொல்லு + உறுதி
ஈ) சொல்லுக்கு + உறுதி
Answer:
ஈ) சொல்லுக்கு + உறுதி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 4.
இக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) இ + கரை
ஆ) இந்த + கரை
இ) இக் + கரை
ஈ) இ + அரை
Answer:
அ) இ + கரை

விடையளி :

Question 1.
பழமொழி பற்றிய நீதி நூல் எது?
Answer:
பழமொழி பற்றிய நீதி நூல்: பழமொழி நானூறு.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 2.
தோப்பில் உள்ள மரத்தில் எவை காய்த்துத் தொங்கின?
Answer:
தோப்பில் உள்ள மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கின.

Question 3.
சிறுவர்கள் எதற்காகத் தோப்பிற்கு வருவார்கள்?
Answer:
சிறுவர்கள் மாங்காய் பறிப்பதற்காகத் தோப்பிற்கு வருவார்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Question 4.
கிளி எங்கு இருந்தது? அதன் பெயர் யாது?
Answer:
கிளி பழையனூர் மாந்தோப்பில் இருந்தது.
அதன் பெயர்: செல்லம்மா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.1 கடல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.1 கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது………………………
அ) பெருமைகடல்
ஆ) பெருங்கடல்
இ) பெரியகடல்
ஈ) பெருமைக்கடல்
Answer:
ஆ) பெருங்கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 2.
கருங்கடலே என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………………
அ) கருமை + கடலே
ஆ) கருங் + கடலே
இ) கரும் + கடலே
ஈ) கரு + கடலே
Answer:
அ) கருமை + கடலே

Question 3.
‘திரை’ என்ற சொல்லின் பொருள்………………………
அ) மலை
ஆ) அலை
இ) வலை
ஈ) சிலை
Answer:
ஆ) அலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 4.
மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது………………………
அ) வானம்
ஆ) பூமி
இ) கடல்
ஈ) நெருப்பு
Answer:
இ) கடல்

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
எ.கா. எல்லை – அல்லும்
…………………………
…………………………
…………………………
…………………………
Answer:
பொங்கு – எங்கும்
மலையை – விலைகொள்
கடலே – கடலே
திரைகளோ – நிரைதாமோ?

இ. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
எ.கா. அல்லும் – அலப்பும்
…………………………
…………………………
…………………………
…………………………
Answer:
மலையை – மகர
விலைகொள் – விளையாடற்
மழைக்கு – மதித்து
கடலே – கடலே

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?
Answer:
மீன்கள், முத்துகள், சிப்பிகள்.

Question 2.
பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.
Answer:

  • பெருங்கடலே! நீ இரவு பகல் உறங்காது அலைவீசி, ஓய்வில்லாமல் இருக்கின்றாய்.
  • அலைகள் குதிரைகள் அணிவகுத்து வருவது போல் உள்ளது.
  • அலையோசையா? இடியோசையா? என ஐயம் எழுகின்றது.
  • அலைகள், மீன்கள், சிப்பிகள், முத்துகள் ஆகியவற்றைக் கொண்டது கடல்.
  • பூமியில் மழை பெய்யவும், மழைநீரைத் தேக்கும் கலமாகவும் கடல் விளங்குகின்றது. ஆகவே, உன் பெருமைகளைச் சொல்ல வல்லவர்கள் யாரும் இல்லை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

உ . சிந்தனை வினா.

Question 1.
எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூறமுடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனவே எல்லையறியாய் பெருங்கடல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
ஆசிரியர் உதவியுடன் பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டவும்.

Question 2.
கடலைப் பற்றி இப்பாடல் மூலம் நீ அறிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
கடல் மிகவும் அழகாக இருக்கும். கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் கப்பல்கள் செல்லும். சங்கு, முத்து, மீன்கள் ஆகிய எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் அலை வீசிக் கொண்டே இருக்கும். மழையாக பெய்யும் நீரான இறுதியில் கடலையேச் சென்றடையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 3.
கடலைப் பற்றி நீ அறிந்த பாடல்களை வகுப்பறையில் பாடி மகிழ்க.
Answer:
கடல்
அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா
உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்
போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா
பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!
முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!
சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!
முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்
வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மழை நீரைச் சேமித்து வைக்கும் கலன் ……………..
அ) அலை
ஆ) குதிரைகள்
இ) கடல்
ஈ) சிப்பி
Answer:
இ) கடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 2.
தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ………
அ) கரூர்
ஆ) தேரூர்
இ) சிதம்பரம்
ஈ) மைலாப்பூர்
Answer:
ஆ) தேரூர்

Question 3.
மகரம் என்ற சொல்லின் பொருள் …………..
அ) அலைகள்
ஆ) களைப்பு
இ) குதிரை
ஈ) மீன்
Answer:
ஈ) மீன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 4.
தேசிக விநாயகனார் …………… என்று போற்றப்பெற்றார்.
அ) கவிஞர்
ஆ) புரவலர்
இ) கவிமணி
ஈ) புலவர்
Answer:
இ) கவிமணி

விடையளி :

Question 1.
பெருங்கடல் எப்படி இருக்கும்?
Answer:
பெருங்கடல் எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருக்கும்.

Question 2.
கடல் அலைகள் எவைகள் போல அணிவகுத்து வருகின்றன?
Answer:
கடல் அலைகள் குதிரைகள் போல அணிவகுத்து வருகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

Question 3.
ஐயம் எழக் காரணம் யாது?
Answer:
எங்கும் கேட்கும் ஒலி அலையோசையால் எழுந்ததா? அல்லது இடியோசையால் எழுந்ததா? என்று ஐயம் எழுகின்றது.

Question 4.
தேசிக விநாயகனார் கவிமணி எனப் போற்றப்பட காரணம் யாது?
Answer:
இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால் தேசிக விநாயகனார் ‘கவிமணி’ எனப் போற்றப்படுகின்றார்.

பாடல் பொருள்

எல்லையின்றிப் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை. பொங்கி வருகின்ற உன் அலைகள், பார்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப்போல் காட்சியளிக்கின்றன. எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

உன்னுள் உயர்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது. எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துகளையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய். இப்பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய். அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகிறாய். ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

நூல் குறிப்பு :

இப்பாடலைப் பாடியவர், கவிமணி தேசிக விநாயகனார். இவர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவர், இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப்பெற்றார். நம் பாடப்பகுதியிலுள்ள பாடல், குழந்தைப்பாடல்கள் என்னும் தலைப்பில் முதற்பாடலாக அமைந்துள்ளது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.1 கடல்

சொல்பொருள்

1. அலுப்பு – களைப்பு
2. புரவி – குதிரை
3. மகரம் – மீன்
4. திரைகள் – அலைகள்
5. மகிமை – பெருமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

Question 1.
கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.
(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ண ன், சம்சுதீன், ஜெனிபர், காட்டினார், ஓடியது, முயல்)
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 1
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 2

ஆ. பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. மயில் தோகையை விரித்து ஆடியது.
  2. வாணி கட்டுரை எழுதினாள்.
  3. இளம்பிறை உணவு சமைத்தாள்.
  4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்.
  5. கொத்தனார் வீடு கட்டினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 3

Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 4

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

இ. கதையில் வரும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுக.

காட்டில் புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது மான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது, வேடன் விரித்திருந்த வலையில் புலி சிக்கிக் கொண்டது. வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான். அப்பொழுது புலி வேடனைப் பார்த்து, என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப் போய்விடுகிறேன் என்று கெஞ்சியது. அதற்கு வேடன். அதெல்லாம் முடியாது’ என்று கூறினான்.

உனக்கு இரக்கமே இல்லையா? என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? எனக் கேட்டது புலி. அதற்கு வேடன் நீ ஏன் மானைத் துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு நீதியா? எனக் கேட்டான். புலி அமைதியாய் இருந்தது.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 5

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

கற்பவை கற்றபின்

Question 1.
ஒரு சொல்லைப் படித்தவுடன அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா எனப் பகுத்து அடையாளம் காண்க.
Answer:
ரு சொல்லைப் படித்தவுடன் அது பெயரா, செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறகு ஒரு பெயராக இருந்தால் பெயர்ச் சொல் என்றும், செயல் நிகழ்வாக இருந்தால் வினைச்சொல் என்றும் அடையளம் காணலாம்.

Question 2.
நாம் பேசும் தொடரில் எது பெயர்ச்சொல், வினைச்சொல் எனக் கூறுக.
Answer:
கண்ணா சாப்பிட்டாயா? எனக் கேட்கிறோம்.
அதில் கண்ணா என்பது பெயர்ச்சொல்.
அதில் உள்ள ‘சாப்பிட்டாயா’ என்பது வினைச்சொல்.

Question 3.
பத்தியைப் படித்து எது பெயர்ச்சொல், வினைச்சொற்களை அடிக்கோடிட்டு அடையாளம் கண்டு கூறுக.
பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்டேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 6

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
பெயர்ச்சொல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
Answer:
ஒன்றன் இயற்பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்

Question 2.
வினைச்சொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு செயலைச் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : ஓடினான், விழுந்தது, எழுதினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல் :

Question 1.
இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் இடம்பெறும் சிறப்புப் பேச்சுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் இடம்பெறும் சிறப்புப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Question 2.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஆசிரியர் உரையைக் கேட்டு வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

ஆ. பேசுதல்

Question 1.
நமது கல்வி உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றி அறிந்து வந்து பேசுக.
Answer:
வணக்கம். நமது கல்வி உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றிப் பேசுகின்றேன். கல்வி என்பது நமக்குக் கண் போன்றது ஆகும். ஏழ்மை, அறியாமை, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் காரணமாக நம் நாட்டின் கல்வி வளர்ச்சி தடைபெற்றது. அத்தடைகளைத் தகர்த்து கல்விக்குக் குரல் கொடுத்த தலைவர்கள் நம் நாட்டில் ஏராளம். காந்திஜி தாய்மொழிக் கல்விக்காகப் போராடி வெற்றி கண்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

அண்ணல் அம்பேத்கரும் தந்தைப் பெரியாரும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி கிடைக்கப் போராடினர். பழங்குடி மக்கள் கல்வி பெற அயோத்திதாசர் போராடினார். கல்விக் கண் தந்தவர் காமராசர். தெருதோறும் பள்ளிகளைத் திறந்து இலவச மதிய உணவு கொடுத்து ஏழைகள் கல்வி பெற உதவினார். அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் கொள்ளச் செய்தார். அவர்களின் கனவு நனவாக நன்றாக கல்வி கற்போம்.

Question 2.
‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உம் சொந்த நடையில் பேசுக.
Answer:
எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு. ஒளவையாரும் கம்பரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம். அப்போதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற முடியும்.

இ. படித்தல் :

Question 1.
செய்யுளைப் பொருள் விளங்கப் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்யுளைப் பொருள் விளங்கப் படித்து மகிழ்க.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Question 2.
புத்தகப் பூங்கொத்து நூலிலிருந்து நற்பண்பை விளக்கும் ஏதேனும் ஒரு கதையைப் படித்துக் காட்டுக.
Answer:
நீதிக் கதைகள் :
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான்.

வெற்றி பெற்ற மன்னர் “உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்கமால் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும், “இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது” என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றனர். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

ஈ. எழுதுதல் :

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:

  1. களர்நிலம்
  2. கற்றவர்
  3. மறுமை
  4. தமிழாசிரியர்
  5. நல்வழி
  6. உயிர்நாடி
  7. தொலைக்காட்சி
  8. அறிவுத்தெளிவு
  9. வளம்பெறும்
  10. வளர்ச்சி

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. முன்னேற்றம் ………………………..
2. புதுமை ………………………..
3. வாழ்க்கை ………………………..
4. தொலைக்காட்சி ………………………..
Answer:
1. முன்னேற்றம் – நாட்டின் முன்னேற்றம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் உள்ளது.
2. புதுமை – அறிவியலில் ஏற்படும் புதுமைகளை நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
3. வாழ்க்கை – மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.
4. தொலைக்காட்சி – செய்திகளை உடனுக்குடன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Question 3.
கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக. எ.கா. செழித்தால் நாடு காடு செழிக்கும்.
காடு செழித்தால் நாடு செழிக்கும்.

1. கண்கள் நாட்டின் பெண்கள்
Answer:
பெண்கள் நாட்டின் கண்கள்.

2. முதுகெலும்பு நாட்டின் விவசாயமே.
Answer:
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு

3. தரும் உழைப்பே உயர்வு
Answer:
உழைப்பே உயர்வு தரும்.

4. போன்றது பொன் காலம்
Answer:
காலம் பொன் போன்றது.

5. துளி வெள்ளம் பெரு சிறு
Answer:
சிறுதுளி பெரு வெள்ளம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

4. கவிதையை நிறைவு செய்க.

எல்லாம் தரும் கல்வி – வாழ்வில்
ஏற்றம் தரும் கல்வி
கற்றார் நிலை உயர்த்தும் – அறிவில்
ஏற்றம் தரும் கல்வி.
………………………  ………………………  ………………………
………………………  ………………………  ………………………
Answer:
எல்லாம் தரும் கல்வி – வாழ்வில்
ஏற்றம் தரும் கல்வி
கற்றார் நிலை உயர்த்தும் – அறிவில்
ஏற்றம் தரும் கல்வி.
வளம் தரும் கல்வி – என்றும்
நலம் தரும் கல்வி.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

5. குறிப்புகளைப் பயன்படுத்தி கதை எழுதுக. பொருத்தமான தலைப்பைத் தருக.
நான்கு வணிகர்கள் – பஞ்சு விற்றல் – எலித்தொல்லையால் பூனை வாங்குதல் – பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாத்தல் – தண்டை – கொலுசு அணிவித்தல் – பூனையின் காலில் புண் ஏற்படுதல் – அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட்ட காலில் எண்ணெய் தோய்ந்த துணியைச் சுற்றிவைத்தல் – பூனை அடுப்பின் அருகில் செல்லல் – எண்ணெய் தோய்ந்த துணியில் தீப்பற்றுதல் – பூனை பஞ்சு மூட்டைகளின் மீது ஓடுதல் – மூட்டையில் தீப்பற்றுதல் – மற்ற மூவரும் வழக்கு தொடுத்தல் – நீதிபதி தீர்ப்பு வழங்கல் – அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் எனக் கேட்டல் – மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது எனக் கூறல் – மற்ற மூவரும் நட்டஈடு கொடுக்கவேண்டும் என வலியுறுத்தல்.
Answer:
ஓர் ஊரில் நான்கு வணிகர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பஞ்சு விற்றனர். எலித் தொல்லையால் பூனை ஒன்றை வாங்கினர். பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாக்க வேண்டும் என்பது நிபந்தனை. பூனையின் காலில் தண்டை மற்றும் கொலுசை அணிவிக்கின்றனர். அதனால் பூனையின் காலில் புண் ஏற்படுகின்றது. அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட காலில் எண்ணெய் தோய்ந்த துணியில் கட்டுப் போடுகின்றான். பூனை பஞ்சு மூட்டை மீது ஏறி ஓடியது. பஞ்சு மூட்டையில் தீப்பற்றிக் கொள்கின்றது. பஞ்சு மூட்டை எரிந்ததால், மற்ற மூவரும் வழக்கு தொடுக்கின்றனர். நீதிபதி நால்வரையும் விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றார். அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் என்றும், மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது. எனவே, மற்ற மூவரும் தான் நட்டஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு கூறினார்.
தலைப்பு : நல்ல தீர்ப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

மொழியோடு விளையாடு

முதலில் இருந்து படித்தாலும் முடிவில் இருந்து படித்தாலும் பொருள் மாறாமல் உள்ள சொற்றொடர்களைப் படித்து மகிழ்க.

எ.கா. தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 7
Answer:

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 8

மாறுமா கைரேகை மாறுமா
மோரு தாரு மோ
வா கற்க வா
மாடு சாடு மா
சேர அரசே
தோடு ஆடுதே
மேக ராகமே
மேள தாளமே

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

மீன்பிடிப்போம் வாருங்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 9|
1. நெருப்பு -………………………  ………………………  ……………………… ………………………
2. கதிரவன் – ………………………  ………………………  ……………………… ………………………
3. சந்திரன் – ………………………  ………………………  ……………………… ………………………
Answer:
1. நெருப்பு – கனல், தீ, தணல், அணல்
2. கதிரவன் – பகலவன், ஆதவன், சூரியன், பரிதி
3. சந்திரன் – மதி, நிலா, திங்கள், அம்புலி

சொல் ஏணி அமைப்போம்

சொல்லின் இறுதியில் முடியும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அமையும் மற்றொரு சொல்லை எழுதிச் சொல்லேணி அமைக்க.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 10
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 11

வருணிப்போம்

படத்தைப் பார்த்து வருணனைச் சொல்லுடன் படத்தில் காணும் உயிரினங்களின் பெயரை பெயரை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 12
எ.கா. வண்ணம் வண்ண மலர்கள்
தாவி ஓடும் முயல்.
1. ……………………………………………………………………..
2. ……………………………………………………………………..
3. ……………………………………………………………………..
4. ……………………………………………………………………..
5. ……………………………………………………………………..
Answer:
எ.கா. வண்ணம் வண்ண மலர்கள்
தாவி ஓடும் முயல்.
1. உயர உயரப் பறக்கும் பறவை.
2. வண்ண வண்ண நிறமாய்ப் பட்டாம்பூச்சி
3. தந்திரம் செய்யவே காத்திருக்கும் நரி.
4. தத்தி ஓடும் புள்ளி மான்
5. பச்சைப் புல்மேயும் கலைமான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

பயணத்தில் ஒரு நாள்

படங்களுக்குரிய சொற்களை எழுதிப் பத்தியை முழுமையாக்குக.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 13
Answer:
அப்துல் பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டி வீட்டிற்குத் தன் அம்மாவுடன் பேருந்தில் சென்றான். நடத்துனரிடம் இருந்து பயணச்சீட்டுகளை அம்மா பெற்றுக் கொண்டார்.

அப்துல் சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். பேருந்து வேகமாகச் சென்றது. மரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பின்னோக்கி ஓடுவது போல் இருந்ததைக் கண்டு வியப்படைந்து தன் அம்மாவையும் பார்க்கச் சொன்னான். வெளியில் தூரத்தில் தெரிந்த இயற்கைக் காட்சிகண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்தது.

மலையிலிருந்து துள்ளலோடு விழுந்து பாய்கின்ற அருவியின் வேகம் அப்துலின் உள்ளத்தையும் துள்ளிக் குதிக்கச் செய்தது. பச்சைப்பசேலேன இருந்த செடிகளும் வயல்களும் பார்ப்பதற்குப் பட்டுக் கம்பளம் விரித்தாற் போன்று மிகவும் அழகாக இருந்தன.

சி வயலின் நடுவே சோளக் கொல்லை பொம்மை நிறுத்தப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. சற்றுத்தூரம் சென்றதும் அதிகமாகப் புகை வெளியேற்றும் தொழிற்சாலையைக் கண்டான். அதைப் பற்றித் தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அருகில் புல்வெளியில் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்துல் இதைப் பார்த்துக் கொண்டு வரும்போது யாரோ ஒருவர் தான் செல்லும் பேருந்தை வேகமாகத் தன் குதியுந்தில் முந்திச் செல்வதைக் கண்டு பதற்றமடைந்தான்.

தன் அம்மாவிடம் அது பற்றிக் கேட்ட போது அவ்வாறு வாகனத்தை முந்திச் செல்வது தவறு என்று கூறினார். தாங்கள் இறங்க வேண்டிய ஊர் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி மகிழ்ச்சியோடு பாட்டி வீட்டிற்குச் சென்றான்.

நிற்க அதற்குத் தக

1. நன்கு படித்து உயர் பதவி பெறுவேன். என்னால் முடியும்.
2. கற்ற கல்வியின் துணைகொண்டு என் திறமைக்கேற்ற வேலையைச் செய்து உழைத்து முன்னேறுவேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

செயல் திட்டம்

Question 1.
பள்ளியில் உள்ள புத்தகப் பூங்கொத்து நூல்களில் கல்வி தொடர்பான கருத்துகள்
நான்கைத் தொகுத்து எழுதுக.
Answer:
1. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
– வெற்றிவேற்கை

2. இளமையில் கல்.
– ஒளவையார்

3. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
– உலக நீதி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Question 2.
செய்தித்தாள்களில் வெளிவரும் கல்வி தொடர்பான செய்திகளைச் சேகரித்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்திகளைச் சேகரிக்க வேண்டும்.

Question 3.
பொறுமை என்ற குணத்தை விளக்கும் மூன்று கதைகளின் தொகுப்பு தயார் செய்க.
Answer:
கதை – 1 – பொறுமையால் வெற்றி :
முயலும் ஆமையும் போட்டி வைத்துக் கொண்டது. தொலைவில் தெரியும் மலையை யார் தொடுகிறார்களோ? அவர்களே வெற்றி பெற்றவர். ஆமையும் முயலும் நடக்கத் தொடங்கின. முயல் போகின்ற வழியில் எல்லாம், சந்திப்போரிடம் ஆமை சோம்பேறி, நான் தான் வெற்றி பெறுவேன் என்று பொறுமையில்லாமல் ஆணவத்துடன் பேசிச் சென்றது.

ஆமைதானே என்றெண்ணி, முயல் பொறுமையாக மரத்தடியில் தூங்கிவிட்டுச் சென்றது. வேகமாக உச்சியைத் தொட முயன்ற முயல், சரிந்து மீண்டும் மலை அடிவாரத்திலேயே விழுந்து விட்டது. பொறுமையைப் போற்றும் ஆமை, தற்பெருமையில்லாமல் மலையின் உச்சியைத் தொட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

கதை – 2 – பொறுமையின் பரிசு சிறுகதைகள் :
மதிவாணனும் தமிழரசுனும் நண்பர்கள். மதிவாணன் பொறுமை இல்லாதவன். தமிழரசன் மிகவும் பொறுமைசாலி. மதிவாணன் பொறுமை இல்லாமல் எங்குப் பார்த்தாலும் சண்டை போடுவான். தமிழரசன் எதையும் சகித்துக் கொள்வான். ஒருநாள் வகுப்பில் மதிவாணனுடைய பேனா காணாமல் போய்விட்டது.

அதே வேளையில் தமிழரசன் உட்பட சிலரின் பேனாவும் காணாமல் போய் இருந்தது. மதிவாணனும் சிலரும் பலரிடம் சண்டையிட்டு, அடித்துக் கொண்டனர். ஆனால் தமிழரசன் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்கும் என்று ஆசிரியரிடம் முறையிட்டான். அதுபோல் பொறுமையாக தேடிப் பார்த்த போது பேனாக்கள் கிடைத்தது.

அன்று மாலை, பள்ளி ஒலி பெருக்கியில் அறிப்பு ஒன்று செய்தாார்கள். பள்ளியில் நடத்திய போட்டியில் 1000 ரூபாயை 5ம் வகுப்பு மாணவன் தமிழரசனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொறுமை காத்தமைக்காக இது வழங்கப்படுகின்றது என்று தலைமை ஆசிரியர் கூறினார்.

கதை – 3 – பொறுமையே பெருமை :
ஒரு குரங்கு , சாதுவாக இருந்த காட்டெருமையை சீண்டிக் கொண்டே இருந்தது. அது, காட்டெருமையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும், அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும், வாலைப் பிடித்திழுப்பதும், கடிப்பதுமாக இம்சித்துக் கொண்டே இருந்தது. இவ்வளவு செய்த போதும், காட்டெருமையாகப் பிறந்திருந்த புத்த பகவான், மிகவும் பொறுமையோடு இருந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

அவர் பொறுமையைக் கண்டு, தேவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் புத்தரிடம் வந்து, ‘சாந்தத்தின் மொத்த உருவமே… உங்களைப் படாதபாடுபடுத்தும் அக்குரங்கை தண்டிக்காமல், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே… அந்தக் குரங்கிடம் பயமா?’ என்று, கேட்டனர்.

அதற்கு, பகவான் புத்தர், ‘அந்தக் குரங்கைக் கண்டு, நான் ஏன் பயப்படப் போகிறேன்…. நான் தலையைக் கொஞ்சம் ஆட்டினாலே போதும். அக்குரங்கின் வாழ்நாள் முடிந்து விடும். இருந்தும், அக்குரங்கின் குற்றத்தை பொறுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால், நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை… நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை.

அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றார். விநாடி நேரம் அவசரப்பட்டு பொறுமையை இழந்து, பின், வாழ்நாள் முழுவதும் அல்லல்படுகிறோம். பொறுமை, என்றுமே பெருமையைத் தான் தரும்; சிறுமையைத் தராது.

விண்ணப்பம் எழுதுதல்

குடிநீர் வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்
ஆ. இளம்பரிதி,
த/பெ. ஆறுமுகம்,
க.எண்: 24, கிழக்குத் தெரு,
மாமண்டூர்
சின்னசேலம் ஒன்றியம்

பெறுநர்
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
மாமண்டூர்,
சின்னசேலம் ஒன்றியம்.

ஐயா வணக்கம்,
எங்கள் தெருவில் உள்ள குடிநீர்க் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாள்களாகக் குடிநீர் தெருவில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால், தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர். எனவே, உடைந்துபோன குடிநீர்க் குழாயைச் சரிசெய்து தர வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
இடம்: சின்ன சேலம்
நாள்: 00.00.2019

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஆ. இளம்பரிதி.

உறைமேல் முகவரி
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் - 14

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.3 வறுமையிலும் நேர்மை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பசியால் வாடிய ஊர்மக்களுக்குப் பணக்காரர் எவ்வாறு உதவினார்?
Answer:
பஞ்சம் காரணமாக ஊரில் உள்ளவர்கள் நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம் பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உதவும்படி வேண்டினர். ஊரில் பசியால் குழந்தைகள் யாரும் வாடக்கூடாது என்பதற்காகப் பணக்காரர், ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைக்குமாறு தன் வீட்டிற்கு வெளியே தினமும் கூடையில் தேவையான அளவு கொழுக்கட்டைகள் வைத்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

Question 2.
சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது?
Answer:
கொழுக்கட்டைக் கூடையில் இருந்து இறுதியாக என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் தினமும் சிறுமி இளவேனில் எடுப்பாள். ஆறாம் நாள் வழக்கமான கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

அம்மா அவளிடம் கொழுக்கட்டை கொடுத்தவர்களிடம் கொண்டுபோய் பொற்காசைக் கொடுத்தாள். உனது பொறுமைக்கும் நற்பண்புக்கும் நான் கொடுக்கும் பரிசு இது, எடுத்துச் செல் என்றார்.

சிந்தனை வினா.

Question 1.
‘வறுமையிலும் நேர்மை’ என்னும் கதையில், சிறுமியின் இடத்தில் நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?
Answer:
‘வறுமையிலும் நேர்மை’ என்னும் இடத்தில் நான் இருந்தால், சிறுமி இளவேனில் போல தங்கக்காசைப் பணக்காரரிடமே கொடுத்திருப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

கற்பவை கற்றபின்

Question 1.
நாம் என்னென்ன நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்? பட்டியலிடுக.
Answer:
அன்பு, பண்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம், புறங்கூறாமை, உண்மை பேசுதல், இன்னாசெய்யாமை, களவாமை, சினம்கொள்ளாமை, தன்னம்பிக்கை, தன்முனைப்பு, விட்டுக் கொடுத்தல், உயிரிரக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Question 2.
நேர்மையானவர் என்று நீயாரை நினைக்கின்றாய்? அவரைப்பற்றி ஐந்து மணித்துளிகள். பேசுக.
Answer:
காமராஜரை நான் நேர்மையானவராக நினைக்கின்றேன். இந்நாளில் எல்லோரும் தலைவர்கள். ஆனால், நாட்டு மக்களின் துயர் துடைத்து உயர் வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் மிகக்குறைவு. 14 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.3 வறுமையிலும் நேர்மை

படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் தீட்டினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை என்று கூறி, எதிர்ப்புகள் வரவே இத்திட்டத்தை நிறைவேற்ற வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறிய தலைவனை இனிமேல் பார்க்க முடியுமா?

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம் தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியின் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையானவராகவே வாழ்ந்தார். அதனால் அவரை மட்டுமே நேர்மையானவராகக் கருதுகின்றேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள் …………………………
அ) இப்பிறப்பு
ஆ) மறுபிறப்பு
இ) பிறப்பு
ஈ) முற்பிறப்பு
Answer:
அ) இப்பிறப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 2.
காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது …………………………
அ) காரண + மாகின்றது
ஆ) காரண + ஆகின்றது
இ) காரணம் + மாகின்றது
ஈ) காரணம் + ஆகின்றது
Answer:
ஈ) காரணம் + ஆகின்றது

Question 3.
வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………………………….
அ) செழுமை
ஆ) இன்மை
இ) செம்மை
ஈ) ஏழைமை
Answer:
அ) செழுமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 4.
பொருள் + செல்வம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) பொருள்செல்வம்
ஆ) பொருள்ச்செல்வம்
இ) பொருட்செல்வம்
ஈ) பொருட்ச்செல்வம்
Answer:
இ) பொருட்செல்வம்

Question 5.
பொருள் + இல்லார்க்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) பொருளில்லார்க்கு
ஆ) பொருள்ளில்லார்க்கு
இ) பொருலில்லார்க்கு
ஈ) பொருள் இல்லார்க்கு
Answer:
அ) பொருளில்லார்க்கு

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

1. பழைமை + மொழி = …………………………….
2. நன்மை + வழி = …………………………….
Answers:
1. பழைமை + மொழி = பழமொழி
2. நன்மை + வழி = நல்வழி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

1. பணமென்றால் = ……………………………. + …………………………….
2. தொலைக்காட்சி = ……………………………. + …………………………….
Answers:
1. பணமென்றால் = பணம் + என்றால்
2. தொலைக்காட்சி = தொலை + காட்சி

ஈ . தொடரை முழுமை ஆக்குக. (பத்தும், வளம், கல்வி)

1. பசி வந்திடப் ………………….. போகும்.
2. கேடில் விழுச்செல்வம்…………………..
3. பொருளால் நம் வாழ்வு ………………….. பெறும்.

1. பசி வந்திடப் பத்தும் போகும்.
2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
3. பொருளால் நம் வாழ்வு வளம் பெறும்.

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
களர்நிலத்துக்கு ஒப்பானவர் – யார்?
Answer:
கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பாவர் ஆவர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 2.
கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?
Answer:
பொருட்செல்வம் கள்வரால்(திருடரால்) கவர்ந்து செல்லக்கூடியது ஆகும்.

Question 3.
‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்த நடையில் எழுதுக.
Answer:

  • கற்காதவன் பயன்படாத நிலம் போன்றவன்.
  • கல்வி கற்றவருக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும்.
  • பொருட்செல்வம் கொடுத்தால் குறையும், திருடரும் திருடுவர். ஆனால் கல்வி குறையாது. திருடவும் முடியாது.
  • இப்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் பயன் தருவது கல்வியே. ஆகியவை ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

Question 4.
பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • வள்ளுவரும் பொருள் இல்லாதவருக்கும் உலகம் இல்லை என்கிறார்.
  • கல்வி கற்பதற்கும் பணம் தேவை.
  • பணம் இல்லாதவன் பிணம் ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

ஊ. சிந்தனை வினாக்கள்

Question 1.
கல்விச் செல்வம் அல்லது பொருட்செல்வம் இரண்டில் ஒன்றுதான் உனக்கு வழங்கப்படும் எனில், நீ எதைத் தெரிவு செய்வாய்? ஏன்?
Answer:
நான் கல்விச் செல்வத்தைத் தான் வாங்குவேன். ஏன் என்றால், கல்வியால் பொருட்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

Question 2.
‘நன்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ – இதைப் பற்றி உன் சொந்த நடையில் பேசுக.
Answer:
வணக்கம்! ‘நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.

நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது. கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது. கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.

கல்வி ஒன்று மட்டுமே ஒருவனை நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் ஆக்கும். எனவே ‘நம்மை மேன்மைப்படுத்துவ கல்வி’ என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

கூடையில் உள்ள சொற்களுக்கு உரிய எதிர்ச்சொற்களைத் தொட்டியிலிருந்து கண்டறிந்து எழுதுக.
“>Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் - 1<
Answer:
1. இம்மை × மறுமை
2. நல்வழி × தீயவழி
3. வருத்தம் × மகிழ்ச்சி
4. நேற்று × இன்று
5. புதுமை × பழமை
6. வறுமை × செழுமை
7. நன்மை × தீமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

கற்பவை கற்றபின்

Question 1.
கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எது அவசியம் என்று நீ நினைக்கிறாய்? ஏன்?
Answer:
கல்விச் செல்வத்தையே அவசியம் என்று நினைக்கின்றேன். ஏனென்றால், பொருளால் புகழ் அடைந்தவர் மக்கள் மனதில் இருப்பதில்லை. கல்வியால் புகழ் அடைந்தவர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பர்.

Question 2.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – இது பற்றி உன் கருத்து என்ன?
Answer:
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். ஏனென்றால், இறைவன் மனிதனைப் படைக்கும்போது, எந்த ஒரு பணத்தையும் படைக்கவில்லை. அவன் ஒவ்வொன்றாகக் கற்று தான், பணத்தை உண்டக்கினான். பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற மாயை உருவாக்கியவன் மனிதன். எனவே இக்கூற்றை நான் ஏற்க மாட்டேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 3.
கல்வியால் சிறந்தவர்கள், பொருளால் சிறந்தவர்கள் – யாரால் நம் நாடு முன்னேற்றம் அடையும்? வகுப்பறையில் விவாதம் செய்க.
Answer:
கல்வியால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
கல்வி ஒரு மனிதனை நற்பண்புள்ளவனாகவும், நல்லறிவு உடையவனாகவும் ஆக்கும். பாரதியும்கூட கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று பாடியிருக்கின்றார். பொருளால் ஒன்றை வாங்க முடியுமே தவிர, அதனை உருவாக்க கல்விதான் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணித மேதையாலும் அறிவியல் மேதைகளாலும் தொழில்நுட்ப வல்லுநர்களாலும் என எத்தனையோ கற்றறிந்த சான்றோர்களால் இன்று நம்நாடு வளர்ச்சியின் முன்னணியில் உலகில் உள்ளது. கல்வியால் சிறந்தவர்களால் தான் நாடு வளர்ச்சி அடையும்.

பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பொருள் இல்லை என்றால் ஒரு சிறு துரும்புகூட அசையாது.

பல தலைவர்கள் வாழ்ந்து நம் நாட்டை உயர்த்தி இருந்தாலும் பல தலைவர்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொருள் படைத்தவர்கள். பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
கேடில் விழுச்செல்வம் கல்வி என்று கூறுபவர் ……………..
அ) திருவள்ளுவர்
ஆ) ஒளவையார்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) திருவள்ளுவர்

Question 2.
கல்வி கற்காதவன் ‘களர்நிலத்துக்கு ஒப்பானவன்’ என்று கூறுபவர் …….
அ) ஔவையார்
ஆ) பாரதியார்
இ) திருவள்ளுவர்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 3.
நல்வழி என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ……………..
அ) நல் + வழி
ஆ) நன்மை + வழி
இ) நல்ல + வழி
ஈ) நன் + வழி
Answer:
ஆ) நன்மை + வழி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

விடையளி :

Question 1.
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது எது?
Answer:
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது கல்வி ஆகும்.

Question 2.
பொருள் பற்றி வள்ளுவரின் கருத்து யாது?
Answer:
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

Question 3.
பணம் பற்றிய பழமொழிகள் யாவை?
Answer:

  • பணம் இல்லாதவன் பிணம்.
  • பணம் என்றால் பிணம்கூட வாயைத் திறக்கும்.

Question 4.
நிலையில்லாத செல்வம் எது?
Answer:
பொருட்செல்வமே நிலையில்லாத செல்வம் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 5.
கல்வி எதற்கு வழி செய்கின்றது?
Answer:
கல்வி நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுகின்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.1 மூதுரை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.1 மூதுரை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது ……………………
அ) என் + றெண்ணி
ஆ) என்று + எண்ணி
இ) என்றெ + எண்ணி
ஈ) என்று + றெண்ணி
Answer:
ஆ) என்று + எண்ணி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
மடை + தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) மடைதலை
ஆ) மடைத்தலை
இ) மடத்தலை
ஈ) மடதலை
Answer:
ஆ) மடைத்தலை

Question 3.
வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வருமளவும்
ஆ) வருஅளவும்
இ) வரும்மளவும்
ஈ) வரும் அளவும்
Answer:
அ) வருமளவும்

Question 4.
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் ………………….
அ) அறிவில்லாதவர்
ஆ) அறிவுடையார்
இ) அறியாதார்
ஈ) படிக்காதவர்
Answer:
ஆ) அறிவுடையார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 5.
எண்ணுதல் – இச்சொல்லுக்குரிய பொருள் ………..
அ) வாடுதல்
ஆ) வருந்துதல்
இ) நனைத்தல்
ஈ) நினைத்தல்
Answer:
ஈ) நினைத்தல்

ஆ. இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
…………………. , ……………………..
…………………. , ……………………..
…………………. , ……………………..
Answer:
அடக்கம்
உடையார்
வருமளவும்
கடக்கக்
மடைத்தலையில்
இருக்குமாம்
Answer:
க்கம்
டையார்
ருமளவும்
க்கக்
டைத்தலையில்
ருக்குமாம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

இ. மடைத்தலை’ இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
…………, ……………, ………………. , ………………….
Answer:
மடை, தலை, மலை, தடை, மதலை.

ஈ. பொருத்துக.
1. உறுமீன் – நீர் பாயும் வழி
2. கருதவும் – பணிவு
3. அறிவிலர் – நினைக்கவும்
4. மடைத்தலை – பெரிய மீன்
5. அடக்கம் – அறிவு இல்லாதவர்
Answer:
1. உறுமீன் – பெரிய மீன்
2. கருதவும் – நினைக்கவும்
3. அறிவிலர் – அறிவு இல்லாதவர்
4. மடைத்தலை – நீர் பாயும் வழி
5. அடக்கம் – பணிவு

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
Answer:
கொக்கு தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கின்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
யாரை அறிவில்லாதவர் என எண்ணிவிடக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?
Answer:
தமக்குரிய காலம் வரும் வரை சிலர் அடங்கி இருப்பர். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணிவிடக்கூடாது.

ஊ. சிந்தனை வினா.

அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக்கூடாது. ஏன்? கலந்துரையாடுக.

மாணவன் 1 : வணக்கம்! அடக்கம் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது.
மாணவன் 2 : ஆம். சரியாக கூறினாய். அடக்கமாக இருப்பவர்கள் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை பொறுமையாக இருப்பர்.
மாணவன் 3 : தனக்கு ஏற்ற நேரம் வந்தவுடன் விரைவாகச் செயலை முடித்து வெற்றி பெற்று விடுவார்கள். ஆதலால் அடக்கமானவரை அறிவில்லாதவராக எண்ணுதல் கூடாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்து மகிழ்க.
Answer:
இப்பாடலைச் சரியான உச்சரிப்புடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.
Answer:
நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
-கா.ப. செய்குதம்பிப் பாவலர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 3.
மூதுரைப் பாடலுடன் தொடர்புடைய திருக்குறள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்க.
Answer:
கொக்ககொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

குறளின் பொருள் :
ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறிதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று பெரிய மீன் வந்தவுடன் கொத்திக் கொள்வது போல செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மூதுரை நூலின் ஆசிரியர் ………….
அ) பாரதிதாசன்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) ஔவையார்
Answer:
ஈ) ஔவையார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

Question 2.
மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்றவை …………..
அ) கொக்கு
ஆ) பெரியமீன்கள்
இ) சிறுமீன்கள்
ஈ) அறிவில்லாதவர்
Answer:
இ) சிறுமீன்கள்)

Question 3.
‘வாக்குண்டாம்’ என்ற பெயரும் கொண்ட நூல் …………
அ) மூதுரை
ஆ) நல்வழி
இ) ஆத்திச்சூடி
ஈ) கொன்றைவேந்தன்
Answer:
அ) மூதுரை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

விடையளி :

Question 1.
ஔவையார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  • மூதுரை
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • நல்வழி

Question 2.
மூதுரை குறிப்பு வரைக.
Answer:
முதுமையான அறிவுரைகளைக் கொண்ட நூல். இந்நூலை இயற்றியவர் ஒளவையார். இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் உண்டு.

பாடல் பொருள்

மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க, கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலக் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டா.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.1 மூதுரை

நூல் குறிப்பு

முழுமையான அறிவுரைகளைக் கொண்டது மூதுரை. இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்குகிறது. இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றியவர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் – இயற்றியுள்ளார்.

சொல்பொருள்

1. அடக்கம் – பணிவு
2. அறிவிலர் – அறிவு இல்லாதவர்
3. கடக்க – வெல்ல
4. கருதவும் – நினைக்கவும்
5. மடைத்தலை – நீர் பாயும் வழி
6. உறுமீன் – பெரிய மீன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.4 மரபுச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.4 மரபுச்சொற்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
நம் முன்னோர்கள் ஒரு சொல்லைச் சொல்லியவாறே நாமும் சொல்வது …………
அ) பழைமை
ஆ) புதுமை
இ) மரபு
ஈ) சிறப்பு
Answer:
இ) மரபு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
யானை …………………….
அ) கத்தும்
ஆ) பிளிறும்
இ) கூவும்
ஈ) அலறும்
Answer:
ஆ) பிளிறும்

Question 3.
‘ஆந்தை அலறும்’ என்பது …………………………….
அ) ஒலி மரபு
ஆ) வினை மரபு
இ) இளமைப்பெயர் மரபு
ஈ) இருப்பிடப் பெயர் மரபு
Answer:
அ) ஒலி மரபு

Question 4.
புலியின் இளமைப் பெயர் ………………….
அ) புலிப்பறழ்
ஆ) புலிக்குட்டி
இ) புலிக்கன்று
ஈ) புலிப்பிள்ளை
Answer:
அ) புலிப்பறழ்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
‘பூப்பறித்தாள்’ என்பது ………………….
அ) வினை மரபு
ஆ) பெயர் மரபு
இ) ஒலி மரபு
ஈ) இளமைப்பெயர் மரபு
Answer:
அ) வினை மரபு

ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் – கூவும்
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
Answers:
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 1
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 2

ஈ. வினை மரபுகளைப் பொருத்துக.

1. நீர் – பறித்தாள்
2. முறுக்கு – எய்தான்
3. உணவு – குடித்தான்
4. அம்பு – தின்றான்
5. பூ – உண்டான்
Answers:
1. நீர் – குடித்தான்
2. முறுக்கு – தின்றான்
3. உணவு – உண்டான்
4. அம்பு – எய்தான்
5. பூ – பறித்தாள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உ. ஒலிமரபுச் சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 3
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 4

ஊ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மரபு என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.

Question 2.
பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச் சொற்களை இடம் பெற்றுள்ளன?
Answer:
பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 3.
ஒலிமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • குயில் – கூவும்
  • மயில் – – அகவும்
  • நாய் – குரைக்கும்
  • ஆடு – கத்தும்.

கற்பவை கற்றபின்

Question 1.
மரபுச் சொற்கள் பற்றி நீ அறிந்து கொண்டதை உனது சொந்த நடையில் கூறு.
Answer:
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினை மரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் உள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
நாம் ஏன் மரபினைப் பின்பற்ற வேண்டும்? பின்பற்றவில்லையெனில் மொழி என்னவாகும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! நம் முன்னோர்கள் நெடுங்காலமாக எப்பொருளை எச்சொல்லால் எப்படிச் சொன்னார்களோ, அச்சொல்லை அப்படியே சொல்வது மரபாகும். நாய் கத்தியது எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. நாய் குரைத்தது என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும்.

மாணவன் 2 : ஆம் சரியாக கூறினாய். இம்மரபுச் சொற்களைப்
பின்பற்றவில்லையெனில் மொழி சிதைந்து விடும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
சிங்கத்தின் இளமைப் பெயர் …………..
அ) பிள்ளை
ஆ) குருளை
இ) கன்று
ஈ) குட்டி
Answer:
ஆ) குருளை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
குயில் ………
அ) கூவும்
ஆ) பிளிறும்
இ) அலறும்
ஈ) அகவும்
Answer:
அ) கூவும்

விடையளி :

Question 1.
வினைமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • அம்பு எய்தார்.
  • சோறு உண்டான்.
  • கூடை முடைந்தார்.
  • பால் பருகினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
விலங்குகளின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:

  • கோழிக் குஞ்சு
  • குதிரைக் குட்டி
  • மான் கன்று
  • யானைக் கன்று.

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல் :

Question 1.
எளிய, இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ வேண்டும்.

Question 2.
தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

ஆ. பேசுதல் :

Question 1.
உமக்குப் பிடித்த தலைப்புகளில் வகுப்பறைப் பட்டிமன்றத்தில பங்கேற்றுப் பேசுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 5
Answer:
நடுவர் – சே. சாந்தி :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழும் காலத்தில் என்று எடுத்துக்கொண்டால் உறவினர்களும் தேவை, நண்பர்களும் தேவை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கையும் உறவினர்கள் இல்லாத உறவும் ஒரு போதும் எதற்கும் பயன்படாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உறவினர்களும் நண்பர்களும் இருந்தால்தான் வாழ்க்கையாகும். இப்போது உறவினர்கள் என்ற குழுவிலிருந்து வந்து பேசுமாறு அழைக்கிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உறவினர்கள் – வித்யா :
நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானவர்கள் உறவினர்கள்தாம். உறவினர்கள் இல்லாமல் வாழ முடியாது. அப்படி வாழ்பவர்கள் அநாதைகளாகத்தான் இருப்பார்கள். ஒரு மகனைத் தாயும் தந்தையும் சேர்ந்து வளர்த்து ஆளாக்கி, அவன் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என நினைத்து அவன் வளர்ச்சிக்கு மிகவும் பெரிதும் உதவுபவர்கள் . உறவினர்கள்.

நண்பர்கள் – சுந்தர் :
உறவினர்கள் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் இருந்தாலும் அவன் வாழ்க்கையில் தோல்வியுறும்போது, அவனுக்குத் தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. வறுமையால் புத்தகங்கள் கூட வாங்க முடியாத பிள்ளைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நண்பர்களின் புத்தகங்களையும் நோட்டுகளையும் பார்த்தும் படித்தும்தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள்தாம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உறவினர்கள் – காயத்ரி :
ஒருமனிதன்வாழ்க்கையில் தோல்வி பெறும்போது தோள்கொடுப்பது உறவினர்கள்தாம் என்பது மிகையாகாது. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்ற உறவினர்கள் இல்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் மதிக்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என நினைப்பவர்கள்தான் உறவினர்கள். எனவே ஒரு மனிதனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்கள்தாம்.

நண்பர்கள் – பெருமாள் :
உறவினர்கள் இருந்தும் இளைஞர்கள் பலர் இன்று தெருவில் அநாதைகளாக சுற்றுகிறார்கள். காரணம் உறவினர்களிடம் அன்பும் அரவணைப்பும் இல்லை. ஆனால் அன்பையும் அரவணைப்பையும் தரும் ஒரே இடம் நட்பு மட்டுமே. நண்பர்கள் இல்லை என்றால் இன்று 90 சதவீத மக்கள் அநாதைகளாகத்தான் சுற்றுவார்கள்.

நடுவர் – சே. சாந்தி :
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? என்ற விவாதத்தில் இரு தரப்பினரும் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தங்களுடைய வாதத்தை எடுத்து வைத்தார்கள். மிக அருமை. ஆனால் தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு உறவினர்களும் நண்பர்களும் உதவக் கூடியவர்கள்தான்.

ஆனால் தன்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள் என்பதே என்னுடைய கருத்து. அவர்கள் எடுத்துரைத்த கருத்துகள் ஏராளம். எனவே ஒரு தனி மனிதன் முன்னேற வேண்டுமென்றால் நண்பர்கள் இல்லாமல் முடியாது. எனவே நண்பர்கள்தாம் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள் என்பதே என்னுடைய இறுதி தீர்ப்பாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
உமக்குப் பிடித்த பறவைகளுள் ஏதேனும் ஒன்று பற்றி ஐந்து மணித்துளி பேசுக.
Answer:
வணக்கம். எனக்குப் பிடித்த பறவை காகம் பற்றிச் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். அதிகாலையில் எழுந்து கரைதல். உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல். உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல். மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாக்க கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்.

ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும். நன்றி!

இ. படித்தல் :

Question 1.
இனிய, எளிய தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.

Question 2.
சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஏதேனும் ஒன்றைப் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஒன்றைப் படித்துக் காட்டுக.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

ஈ. எழுதுதல் :

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. குளிரிள நீர்
2. யானை பிளிறும்
3. பனிமலர்
4. நற்பண்பு
5. திருவள்ளுவர்
6. பறைசாற்றுதல்
7. ஞாயிற்றுக்கிழமை
8. இறக்கைகள்
9. சீறியது
10. கொக்கரக்கோ

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. நல்லறிவு – …………………………………………..
2. தென்னைமரம் – …………………………………………..
3. கவியரங்கம் – …………………………………………..
4. நன்றி – …………………………………………..
Answer:
1. நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.
2. தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
3. கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.
4. நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 5

1. குழந்தை என்ன செய்தது?
Answer:
குழந்தை சிரித்தது

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

2. மேரி என்ன செய்தாள்?
Answer:
மேரி ஆடினாள்

3. பாட்டி என்ன செய்தார்?
Answer:
பாட்டி தும்மினார்

4. எது பறந்து?
Answer:
ஈ பறந்தது

5. தூங்கியது எது?
Answer:
பூனை தூங்கியது

6. புலி என்ன செய்தது?
Answer:
புலி உறுமியது

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.

Question 1.
தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
Answer:
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:
கேளிர்.

Question 3.
தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
Answer:
தமிழ்மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணப் பிரிவுகள் உள்ளன.

Question 4.
தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
Answer:
யாதும் ஊரே யாவரும் கேளிர்.

Question 5.
பிரித்து எழுதுக. தமிழலக்கணம் –
Answer:
தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
எடுத்துக்காட்டில் உள்ளதுபோல் மாற்றி எழுதுக .
எ.கா.

1. ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் பர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.
Answer:
கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

2. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது.
Answer:
முதல் பாடவேளை தமிழ் வகுப்பு நடந்தது.

3. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்.
Answer:
நான் ஓவிய ஏட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்.

Question 6.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(உண்மை , பயிற்சி, பொறாமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)
……………………………….. உடையவன் மாணவன்.
……………………………….. கற்பவன் மாணவன்.
………………………………..பெறுபவன் மாணவன்.
………………………………..பேசுபவன் மாணவன்.
……………………………….. அற்றவன் மாணவன்.
……………………………….. தவிர்ப்பவன் மாணவன்.
……………………………….. செய்பவன் மாணவன்.
……………………………….. கொள்பவன் மாணவன்.

Answer:
பொறுமை உடையவன் மாணவன்.
கல்வி கற்பவன் மாணவன்.
பயிற்சி பெறுபவன் மாணவன்.
உண்மை பேசுபவன் மாணவன்.

பொறாமை அற்றவன் மாணவன்.
கல்லாமை தவிர்ப்பவன் மாணவன்.
முயற்சி செய்பவன் மாணவன்.
ஊக்கம் கொள்பவன் மாணவன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மொழியோடு விளையாடு

Question 1.
பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 7

Question 2.
கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 8
Answer:
கீழிருந்து மேல் :

1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்………………………….
Answer:
தொல்காப்பியம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

2. பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்………………………….
Answer:
பாரதியார்

3. புதுவையில் தோன்றிய புதுமைப் பாவலர்………………………….
Answer:
பாரதிதாசன்

மேலிருந்து கீழ் :

1. பாரதிதாசனின் தந்தையின் பெயர்………………………….
Answer:
கனகசபை

2. பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று………………………….
Answer:
பாப்பா பாட்டு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. முத்தமிழ் என்பது இயல், இசை…………………………..
Answer:
நாடகம்

இடமிருந்து வலம்

1. உடலுக்குக் குளிர்ச்சி தருவது………………………….
Answer:
இளநீர்

2. உலகின் முதன்மொழி மூத்த மொழி………………………….
Answer:
தமிழ்

3. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்………………………….
Answer:
இனிமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி,
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 9
Answer:

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 10

Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்குக.
எ.கா. காஞ்சிபுரம் – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
1. புதுக்கவிதை
2. நெல்லிக்கனி
3. கற்குவியல்
Answer:
1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 11
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 12
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 13

நிற்க அதற்குத் தக

1. நான் பிறமொழிக் கலப்பின்றி பேசுவேன்.
2. தாய்மொழியைப் போற்றுவேன்.

அறிந்து கொள்வோம்

எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள் :

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 14

செயல் திட்டம்

Question 1.
மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.
Answer:
எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.

கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.
– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற படங்களைச் சேகரித்து ஒட்டி அதற்குரிய வரிகளையும் எழுதி வரவும்.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் வரிக்கு ஏற்ற படங்களைச் சேகரிக்க வேண்டும்.

Question 3.
உனக்குப் பிடித்த கதை ஒன்றினை எழுதி அதில் இடம்பெற்றுள்ள மரபுச் சொற்களை அடிக்கோடிடுக. வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஒரு நாள் காட்டில் வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து வைத்து விட்டு, பறவை சிலவற்றின் மீது அம்பு எய்து கொண்டிருந்தான். வலையில் புறா ஒன்று மாட்டிகொண்டதால், அந்தப் புறா குனுகியது.

வேடன் வருவதைப் பார்த்த, அங்கிருந்த மயிலும் அகவியது. வேடன் வலையில் விழந்த புறாவைப் பிடிக்க முயன்றான். மரத்தடியில் இருந்த புற்றில் எறும்பு ஒன்று இருந்தது. அது வேடனின் காலைக் கடிக்க, புறா வலையோடு பறந்தது. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மரத்தின் அருகே இருந்த எறும்பு வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்தப் புறா ஆபத்தில் மாட்டிய தன்னைக் காப்பாற்றிய எறும்பைக் காப்பாற்ற எண்ணியது. பெரிய இலைகளை ஆற்றினுள் போட்டது. எறும்பு அதன் மீது ஏறி உயிர் பிழைத்தது.

Question 4.
இலக்கிய மன்ற விழாவில் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 15

Question 5.
உலகம் என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:

  1. புவி
  2. அகிலம்
  3. செகம்
  4. புவனம்
  5. அண்டம்
  6. உலகு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 6.
உங்கள் ஊரிலுள்ள (அ), பள்ளியிலுள்ள நூலகத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசனின் புத்தங்களைத் தேடிப் படித்து உனக்குப் பிடித்த செய்திகளை எழுதி வருக.
Answer:
பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கைப் படித்தேன். அதில் பின்வரும் செய்திகளை அறிந்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. கல்வி அறிவில்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அங்கு புல் விளையும். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வி அறிவுள்ள பெண்கள் நன்செய் நிலத்தைப் போன்றவாகள். அவர்கள் மூலம் அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.

Question 7.
பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 16

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

விண்ண ப்பம் எழுதுதல்

அனுப்புநர்
அ.பூங்கொடி
ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஈரோடு.

பெறுநர்
வகுப்பு ஆசிரியர்,
ஐந்தாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஈரோடு.

அம்மா / ஜயா
வணக்கம். நாளை என் அத்தையின் திருமணத்திற்குச் செல்வதால் (00.00.0000) ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் கீழ்ப்படிதலுள்ள
அ.பூங்கொடி

நாள் : 00.00.0000
இடம் : ஈரோடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.3 என்ன சத்தம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.3 என்ன சத்தம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?
Answer:
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.

Question 2.
செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் எழுதுக.
Answer:
காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான். திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான்.

புதர் அருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது. செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

சிந்தனை வினா.

Question 1.
நம்மைப்போல் விலங்குகளுக்கும் பேசும் திறன் கிடைத்தால் எப்படி இருக்கும்? காட்டில்
வாழும் விலங்குகள் பேசுவதுபோல் ஓர் உரையாடல் எழுதிக்காட்டுக.
Answer:
மான் : சிங்கம் வருது. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.
முயல் : என்ன மான் அக்கா சொல்றீங்க?
மான் : அடடா! உண்மையைத்தான் சொல்றேன். ஒளிஞ்சுக்கோ!
முயல் : சரி மான் அக்கா.
சிங்கம் : எல்லாரும் எங்க ஓடுறீங்க? நில்லுங்க, ஏய்! நில்லுங்க.
மான் : நிக்க மாட்டோம்! நீ எங்களை தின்னுடுவ.
சிங்கம் : அட நில்லுமா, உங்கள் எதுவும் பண்ணமாட்டேன்.
மான் : அய்யோ! நீ இப்படி எத்தனை முறை சொல்லி எங்க இனத்தையே அழிச்சுட்டே (என்று சொல்லி ஓடியது).
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் ஏதேனும் ஆபத்து நேர்வதற்கு முன்பு ஒலியெழுப்புகிறது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
Answer:
சிந்தித்தது உண்டு. ஒருநாள் எங்கள் வீட்டு நாய் நடு இரவில் மிகவும் குரைத்தது. அப்போது தான் திருடன் வந்ததை அறிந்தோம்.

கற்பவை கற்றபின்

Question 1.
செழியனின் செயல்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன? குழுவில் பகிர்ந்து கொள்க.
Answer:
செழியனின் வீரமும், கருணை உள்ளமும் பாராட்டுக்குரியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தாத்தாவின் கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வயலில் நாற்று நட்டேன். களை பறித்தேன்.

Question 3.
உமக்குத் தெரிந்த கதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
Answer:

நேரம் தவறாமை

சந்திரன் ஒரு பள்ளி பருவ மாணவன் ஒருநாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது. அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சந்திரன் அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது.

அடுத்த நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சந்திரன் தன்னிடம் இருந்த நிலக்கடலையைக் காகத்தின் முன் வீசினான்.

காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சந்திரன் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சந்திரனும் காகமும் நண்பர்களானார்கள். சந்திரன் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சந்திரன் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை , பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சந்திரன் வியந்தான்.

தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சந்திரனை அனைவரும் பாராட்டினார்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 4.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க
Answer:
மாணவன் 1 : இப்பாடப் பகுதிக்கு ஓசை என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 2 : இப்பாடப் பகுதிக்கு விலங்கு உலகம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 3 : இப்பாடப் பகுதிக்குச் செழியனின் வீரம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.