Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.2 முகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.2 முகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 1.
உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?
Answer:
எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை என்னால் சாதிக்க முடியும்’ என்ற மன உறுதியோடு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல்ல மனத்தின் வலிமையுந்தான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் – என்கிறார் வள்ளுவர்.
நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
அ) தமது வீட்டு முகவரியை
ஆ) தமது குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை
ஈ) தமது படைப்புகை
Answer:
இ) தமது அடையாளத்தை

குறுவினா

Question 1.
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘முகம்’ என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) புதையுண்ட வாழ்க்கை
ஆ) மீண்டெழுதலின் ரகசியம்
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்

Question 2.
சுகந்தி சுப்பிரமணியத்தின் ஊர்
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை
ஆ) ஈரோட்டு புறநகரின் சிவகிரி
இ) தஞ்சை புறநகரின் வல்லம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை

Question 3.
சுகந்தி சுப்பிரமணியனின் கல்வித்தகுதி
அ) தொடக்கக் கல்வியை முழுமை செய்யாதவர்
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்
இ) இளங்கலை பட்டம்
ஈ) முனைவர் பட்டம்
Answer:
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி, எழுத்தாளராக நம்பிக்கை தந்தவர்
அ) அவரது தாயார்
ஆ) அவரது தந்தையார்
இ) அவரது கணவர்
ஈ) அவரது மாமியார்
Answer:
இ) அவரது கணவர்

Question 5.
சுகந்தி சுப்பிரமணியத்தின் படைப்புகளில் பாடுபொருள்
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்
ஆ) கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சவால்கள்
இ) மணமாகாத பெண்களின் அவலம்
ஈ) அறிவியல் உலகில் பெண்கள்
Answer:
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்

Question 6.
நான் வெற்று வெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் முகத்தைத் தேடியபடி – என்று பாடியவர்

அ) சுகந்தி சுப்பிரமணியன்
ஆ) இரா. மீனாட்சி
இ) உமா மகேஷ்வரி
ஈ) சாந்தி சுப்பிரமணியன்
Answer:
அ) சுகந்தி சுப்பிரமணியன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 7.
சாந்தி சுப்பிரமணியன் என்பார் தமிழின் ………….. பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
அ) மரபு
ஆ) புதுக்கவிதை
இ) நவீன
ஈ) பின்நவீன
Answer:
இ) நவீன

குறுவினா

Question 1.
சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : சுகந்தி
ஊர் : கோவை – ஆலாந்துறை
படிப்பு : உயர்நிலைக் கல்வி
சிறப்பு : தமிழின் நவீன பெண் கவிஞர்
நூல்கள் : புதையுண்ட வாழ்க்கை , மீண்டெழுதலின் இரகசியம்.

Question 2.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும் போது உருவாவது எது?
Answer:
எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.

Question 3.
அடையாளம் இழந்த ஒருவர் எதைக் தொலைக்கிறார்?
Answer:
அடையாளம் இழந்த ஒருவர் தன் முகத்தை தொலைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி சுப்பிரமணியனின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் குறிப்பிடுக.
Answer:
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெடுதலின் ரகசியம்.

சிறுவினா

Question 1.
முகம் என்ற கவிதை வாயிலாக சுகந்தி சுப்பிரமணியன் கூறுவன யாவை?
Answer:

  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
  • அடையாளம் காணும்போது எழுச்சியும் ஊக்கமும் கிடைக்கிறது.
  • அடையாளம் இழந்த ஒரு பெண் தன் அடையாளத்தைத் தேடுகிறாள்.
  • அவள் முகமும் காணவில்லை. தேடும்போது தன்னையும் தொலைத்து விடுகிறாள்.
  • முகவரியும் தொலைந்ததால் உடலைக் கவனிக்கப் பிறரை நாடுகிறாள்.
  • மனதில் ஆசையை வளர்த்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு வெளியே சுற்றுகிறாள்.
  • இப்படியே மனம் இறுகி தன்னைத் தேடி ஆண்டுகள் பல ஆயின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 1.
உங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவரின் பணிகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குறிப்பு :
தமிழறிஞர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருபத்து ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த ஆய்வாளர், ‘தமிழறிஞர்’, நெறியாளர் என்ற வரிசையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் இவர் ஆய்வரங்கம், பதிப்புப் பணி போன்ற துறைகளிலும் பணியாற்றி வரும் இவர் கலைமாமணி, தமிழ் செம்மல் விருது தமிழறிஞர் விருதுகள் பல பெற்று ஆய்வு மாணவர்களோடு தாமும் ஆய்வாளராக வாழ்ந்து வருகிறார்.

கலந்துரையாடல்

சூர்யா : வள்ளி, நேற்று நம் ஆசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களைப் பற்றி வகுப்பில் பேசினார் அல்லவா! அதில் சிலம்பு என்று ஏன் பெயர் வந்தது.

வள்ளி : அதுவா! தமிழ்நாட்ல சில பேருக்குதான் பொருந்தும் அவர்களில் ஒருவர் நா.செல்வராசு.

சூர்யா : எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு. வள்ளி : நா. செல்வராசு ஐயாசிலப்பதிகாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தம்மை முழுமையாக சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர். சிலம்பு என்ற பெயரை அவரின் குருநாதர் வைத்த பெயராம்.

சூர்யா : மகிழ்ச்சி! ஐயா, எப்பொழுது இருந்து ஆய்வுப் பணி செய்கிறார்.

வள்ளி : 1984 முதல் இன்று வரை சங்க இலக்கியத்தில் நிறைய ஆய்வு செய்துள்ளார்.

சூர்யா : அவர் செய்த ஆய்வுகள் எனக்குச் சில சொல்ல முடியுமா.

வள்ளி : ஓ சொல்றேன். பண்டைய தமிழரின் திருமண வாழ்க்கை, கண்ணகி தொன்மம், வள்ளி முருகன் வழிபாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

சூர்யா : தொன்மம் என்றால் என்ன?

வள்ளி : பழங்காலத்துக் கதை, உண்மைச் சம்பவம் அல்லது வரலாற்று நிகழ்வு.

சூர்யா : இவரைப் பற்றி ஏதாவது சிறப்பு இருக்கா?

வள்ளி : நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவர் பதினெட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முப்பத்தெட்டு ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியவர்
ஆவார். இவர் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் தம் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் – 2. மயிலை. சீனி. வேங்கடசாமி
இ) தமிழ் தென்றல் – 3. திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு – 4. தேவநேயப்பாவாணர்
Answer:
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்

Question 2.
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறுத்தவமும் தமிழும்
Answer:
ஈ) கிறுத்தவமும் தமிழும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

குறுவினா

Question 1.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற நூல்.

Question 2.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்’ யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் எழுதிய புத்தகங்கள் தமிழரின் : புதையல்களாக விளங்குகின்றன.
  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
  • தமிழில் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

நெடுவினா

Question 1.
மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
(i) மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.

(ii) இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.

(iii) பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.

(iv)  இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்க முடியாத வகையில் : இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.

(v) தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்குத் தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் : பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.

(vi) ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த : மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

(vii) தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.

(viii) எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.

(ix) இவர் நூலகத்தைத் தன் தாயகமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.

(x) இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறைக் கொண்டவர்.

(xi) சமயம், கலை, இலக்கியம், கிறுத்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.

(xii) இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்ற போது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்
ஆ) 14.12.1905, சென்னை வடபழனி
இ) 13.10.1902, மதுரை மாட்டுத்தாவனி
ஈ) 10.12.1901
Answer:
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை ……………… ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) வெங்கடசுப்பு
Answer:
அ) சீனிவாசன்

Question 3.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் ………….. ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) ராசராசன்
Answer:
ஆ) கோவிந்தராசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தையார் பணி ……………. தமையனார் பணி ……………
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்
ஆ) தமிழாசிரியர், சித்த மருத்துவர்
இ) வழக்கறிஞர், கட்டிட வரைவாளர்
ஈ) கட்டிட வரைவாளர், வழக்கறிஞர்
Answer:
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்

Question 5.
மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்
அ) 20
ஆ) 25
இ) 28
ஈ) 30
Answer:
ஆ) 25

Question 6.
1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற பொருள் குறித்து உரையாற்றியவர்
அ) கா. சுப்பிரமணியர்
ஆ) விபுலானந்த அடிகள்
இ) ச.த. சற்குணர்
ஈ) திரு.வி.க
Answer:
இ) ச.த. சற்குணர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்
அ) கிறித்துவமும் தமிழும்
ஆ) பௌத்தமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிறித்துவமும் தமிழும்

Question 8.
மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துகள்
i) வட்டெழுத்து
ii) கோலெழுத்து
iii) தமிழ் பிராம்மி

அ) i, ii – சரி
ஆ) ii, iil – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Question 9.
மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?
i) மகேந்திரவர்மன்
ii) நரசிம்மவர்மன்
iii) மூன்றாம் நந்திவர்மன்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
1905களில், ……………… நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
அ) கி.பி.3 – கி.பி.9
ஆ) கி.பி.6 – கி.பி.12
இ) கி.பி.7 – கி.பி.12
ஈ) கி.பி.8 – கி.பி.13
Answer:
அ) கி.பி.3 – கி.பி.9

Question 11.
கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நுண்கலைகள், கா. சுப்பிரமணியர்
இ) இசைவாணர் கதைகள், விபுலானந்த அடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 12.
தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்
அ) நுண்கலைகள்
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
இ) இசைவாணர் கதைகள்
ஈ) பௌத்தமும் தமிழும்
Answer:
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

Question 13.
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்களின் படங்களை வரைந்து வெளியிட்டவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) திரு.வி.க
ஈ) ச.த.சற்குணர்
Answer:
அ) மயிலை சீனி. வேங்கடசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 14.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு
அ) 1960
ஆ) 1962
இ) 1956
ஈ) 1954
Answer:
ஆ) 1962

Question 15.
தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்சான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்
அ) பழங்காலத் தமிழர் வணிகம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) கொங்கு நாட்டு வரலாறு
ஈ) களப்பிரர் ஆட்சியில் தமிழாம்
Answer:
ஆ) தமிழ்நாட்டு வரலாறு

Question 16.
தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூலின் சிறப்பு
i) சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்நூல் : எழுதப்பட்டுள்ளது.
ii) அத்துடன் துளுமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
iii) குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 17.
ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்
அ) தமிழ்நாட்டு வரலாறு
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) பழங்காலத் தமிழர் வணிகம்
Answer:
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்

Question 18.
‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன …………….. நூல்கள் தொடர்பான குறிப்புகளைக் கூறியுள்ளவர்.
அ) 321
ஆ) 333
இ) 345
ஈ) 247
Answer:
ஆ) 333

Question 19.
தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்

அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) திரு.வி.க.
ஈ) ம.பொ.சி.
Answer:
அ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 20.
வேங்கடசாமி, ………… என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
அ) குடியரசு
ஆ) ஊழியன்
இ) செந்தமிழ்ச்செல்வி
ஈ) ஆரம்பாசிரியன்
Answer:
இ) செந்தமிழ்ச்செல்வி

Question 21.
மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் ………………. அதனை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர்.
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
இ) மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
ஈ) இராசராசசோழன், கவிமணி
Answer:
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 22.
மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக.
i) தமிழ்ப் பேரவைச் செம்மல் – தமிழ் எழுத்தாளர் சங்கம்
ii) ஆராய்ச்சிப் பேரறிஞர் – சென்னை கோகலே மண்டபம்
iii) கேடயம் (1962) வழங்கல் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்

அ) 3, 2, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 23.
சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.
அ) புலி
ஆ) யானை
இ) கழுதை
ஈ) சேவல்
Answer:
ஆ) யானை

குறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக.
Answer:
பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி
பிறப்பு : 16.12.1900
ஊர் : மயிலாப்பூர்
பெற்றோர் : சீனுவாசன் – கோவிந்தம்மாள்
பணி : பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்.

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு கிடைத்த சீதனங்கள் யாவை?
Answer:
மகாபாரதம், இராமாயணம்.

Question 3.
மயிலையார் எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?
Answer:
இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலையாரின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக.
Answer:
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி.

Question 5.
மயிலையார் கிறுத்துவமும் தமிழும் எனும் நூல் எங்கு யார் உரையைக் கேட்டு எழுதினார்?
Answer:

  • 1934 – தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளி.
  • தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
  • ச.த. சற்குணர் ஆற்றிய உரை.

Question 6.
மயிலையார் ஆய்வு செய்த துறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு.

Question 7.
மயிலையாரின் பன்முக அறிவினைக் குறிப்பிடுக.
Answer:

  • சமயம், மானுடவியல், தொல் பொருள் ஆய்வு, தமிழக வரலாறு கலை வரலாறு போன்ற துறையிலும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி கல்வெட்டுப் போன்ற துறைகளில் பன்முக அறிவினைப் பெற்று விளங்கினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலையாரின் எம்மொழிகளில் புலமையுடையவர்?
Answer:
மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

Question 9.
மயிலையாரின் மொழிபெயர்ப்பு பணியினைக் கூறுக.
Answer:
மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்தார்.

Question 10.
மயிலையாரின் சொல்லாய்வுப் பணியினை விளக்குக.
Answer:
மயிலையார் செய்த சொல்லாய்வினை செந்தமிழ்ச் செல்வி’ என்ற இதழில் எழுதி அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 11.
மயிலையாரைப் பற்றி விபுலானந்தவின் கருத்து யாது?
Answer:

  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர்.
  • நல்லொழுக்கம் வாய்ந்தவர்.
  • நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேப்போல் போற்றுபவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக
Answer:

  • ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்.
  • அகன்ற நெற்றி, வட்டமுகம், எடுப்பான மூக்கு, பேசத்துடிக்கும் உதடு, நான்கு முழ வேட்டி, காலர் இல்லா முழுக்கைச் சட்டை.
  • சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி பவுண்டன் பேனா, மேல் துண்டு, இடது கரத்தில் தொங்கும் புத்தகப்பை.
  • இத்தோற்றத்தோடு கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வருவார்.

Question 2.
மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதினார்?
Answer:

  • தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்தன.
  • தன்பெருமையை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • கலை என்று கூறப்படுவதெல்லாம் சினிமாக் கலை இசைக்கலை பற்றியே.
  • இலக்கியக் கலை கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை .
  • ஏனைய அழகுக்கலைகள் மறந்து விட்டன.
  • இதன் காரணமாக இந்நூலை எழுதினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 3.
மயிலையாரின் மீட்டுருவாக்க முயற்சியைச் சான்றுடன் விளக்குக.
Answer:

  • தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ் நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்று.
  • இந்நூல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற தரவுகளைக் கொண்டு எழுதினார்.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பீட்டு ஆராய்ந்துள்ளார்.

Question 4.
மயிலையாரின் ஆவணப் பணியினை விளக்குக.
Answer:
(i) தமிழியலுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து தம் பணியை மேற்கொண்டார்.

(ii) இதன் விளைவாக சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் விளக்கம் அளிப்பதாக அமைந்தது.

(iii) இலக்கண, இலக்கிய பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்து போன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Question 5.
மயிலையாரின் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்கள் திரட்டுக.
Answer:

  • திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தவர்.
  • தம் வாழ்வை முழுமையாகத் தமிழின் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.
  • நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
  • பெருமைகளை ஆய்வு நோக்கில் விரித்துரைத்தவர்.
  • சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 6.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தொடக்கக்கால ஆய்வுகள் பற்றி விளக்குக.
Answer:

  • 1934 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் நிகழ்த்திய உரையைக் கேட்டு கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டு “பௌத்தமும் தமிழும்’, சமணமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல் பொருள் ஆய்வு, கலை வரலாறு முதலியன பல துறைகளில் கவனம் செலுத்தினார்.
  • கல்வெட்டு ஆய்வில் ஆர்வமும் பயிற்சியும் அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி புலமை பெற்றதால் சாசனங்கள் அவரால் எளிதில் வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் போன்ற துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்கம் தருக.
Answer:

  • கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றி ஆய்வு செய்தார்.
  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்றோர் நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  • வரலாற்றை மட்டுமல்லாமல், அரசியல், பண்பாடு, கலை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
  • களப்பிரர் பற்றி ஆய்வு செய்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலை.சீனி. வேங்கடசாமியின் கலையியல் ஆய்வுகள் பற்றி விவரி.
Answer:
(i) கலையியல் சார்ந்த ஆய்வுகள், நூல்கள் வெளிவர வழிகாட்டியாக விளங்கியவர் மயிலையார்.

(ii) இதற்கு இளமைப் பருவத்தில் ஓவியக் கல்லூரியில் பயின்றது உதவியாக இருந்தன.

(iii) கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்திற்கு புதிய வரவாக இருந்தன.

(iv) தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் ஆகும்.

(v) தமிழக அரசின் முதல் பரிசுப் பெற்ற நூல் ஆகும். இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள் இசைவாணர் கதைகள் என்பன இவருடைய நூல்கள்.

(vi) தம் நூலில் தாமே படங்களை வரைவார். இது அவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Question 9.
மயிலையாரின் இலக்கிய பணியினை விளக்குக.
Answer:

  • 1962இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
  • இதன் மூலம் ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் நோக்கி நகர்ந்தது.
  • இதன் விளைவாக பழந்தமிழர் வணிகர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு போன்ற நூல்களை எழுதினார்.
  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • “தமிழ்நாட்டு வரலாறு” எனும் நூல் மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
  • சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல்கள் எழுதினார்.
  • “மறைந்துப் போன தமிழ் நூல்கள்” மயிலையாரின் ஆவணப்பணிகளில் ஒன்றாகும்.
  • 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
மயிலை சீனி. வேங்கடசாமி பன்மொழிப் புலமையை விளக்குக.
Answer:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை.
  • மயிலையாரும் சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் “அஞ்சிறைத்தும்பி” நூலாக வெளி வந்தது.
  • மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்த விலாசம் எனும் நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தார்.
  • மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் பாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமைக் கொண்டவர்.
  • நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன் என்று கூறியவர்.
  • வரலாற்று ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுகிறவன் என்று குறிப்பிட்டவர்.
  • மயிலை சீனி. வேங்கடசாமி இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சியில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்று சுவாமி விபுலானந்த அடிகளார் புகழ்கிறார்.
  • இக்காரணங்களைக் கொண்டு மயிலையார் பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்று கூறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.6 தொன்மம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.6 தொன்மம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 1.
தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.
Answer:
தாண்டிக் கெட்டாள் சீதை
தாண்டாமல் கெட்டாள் கண்ணகி.

இரண்டு அடியாவது வாங்கினால்தான்
திருந்துவாய்….
வள்ளுவர் வாக்கு

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
அ) கர்ணன் தோற்றான் போ.
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி

Question 2.
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்
ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
Answer:
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
‘சாபவிமோசனம்’ ‘அகலிகை’ கவிதைகளில் தொன்மங்களாய் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன்
ஈ) எஸ்.இராமகிருஷ்ண ன்
Answer:
ஆ) புதுமைப்பித்தன்

Question 4.
பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் – 1. கர்ண ன்
ஆ) வலிமை – 2. மனுநீதிச்சோழன்
இ) நீதி – 3. பீமன்
ஈ) வள்ள ல் – 4. தருமன்

அ) 3, 2, 1, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

குறுவினா

Question 5.
தொன்மம் விளக்குக.
Answer:

  • சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
  • உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
  • அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
  • சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
Answer:
(i) நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.

(ii)  “கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்’ – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.

(iii) ‘மனுநீதிச் சோழன்’ – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.

Question 7.
உள்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
i) பழங்கதை
ii) புராணம்
iii) புதுக்கதை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, ii – சரி
Answer:
ஈ) i, ii – சரி

Question 2.
கவிதையில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவது
அ) படிமம்
ஆ) தொன்மம்
இ) குறியீடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தொன்மம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
புதுமைப்பித்தன், சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
அ) இராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) இராமாயணம்

Question 4.
திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு ‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ என்னும் சிறுகதைகளைப் படைத்தவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) அழகிரிசாமி
இ) எஸ். ராமகிருஷ்ண ன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) அழகிரிசாமி

Question 5.
தொன்மங்களைக் கொண்டு படைக்கப்பட்டவைகளையும், படைப்பாளிகளையும் பொருத்திக் காட்டுக.
i) புதுமைப்பித்தன் – அரவாணன்
ii) அழகிரிசாமி – பத்மவியூகம்
iii) ஜெயமோகன் – விட்ட குறை
iv) எஸ். இராமகிருஷ்ண ன் – அகலிகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
தொன்மைக்குச் சான்றாக இளம்பூரணர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்

Question 7.
தொன்மைக்குச் சான்றாகப் பேராசிரியர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை

Question 8.
‘வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி’ என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள தொன்மம் உணர்த்துவது
அ) காதல் வெற்றி
ஆ) காதல் தோல்வி
இ) தலைவன் மரணம்
ஈ) தலைவி வருத்தம்
Answer:
அ) காதல் வெற்றி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 9.
“முருகு உறழ் முன்பொரு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை”
என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி

அ) காதல் வெற்றி
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்
இ) பெண்ணியம் போற்றுவது
ஈ) கொடையாற்றலின் சிறப்பு
Answer:
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்

Question 10.
மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி
எங்கள் வேலையல்ல – என்னும் கவிதையில் அமைந்துள்ள தொன்மம்
i) இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகி
ii) பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 11.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) இந்திரன் – சோல்
ii) வருணன் – மார்ஸ்
iii) பலராமன் – டயானிசிஸ்
iv) கார்த்திகேயன் – ஊரனாஸ்
v) சூரியன் – சீயஸ்பிடர்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 3, 5, 1, 2
இ) 5, 1, 2, 3, 4
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 12.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) சந்திரன் – இராஸ்
ii) விஸ்வகர்மன் – மினர்வா
iii) கணேசன் – ஜீனோ
iv) துர்க்கை – ஜோனஸ்
v) சரஸ்வதி – வன்கண்
vi) காமன் – லூனஸ்

அ) 6, 5, 4, 3, 2, 1
ஆ) 5, 6, 4, 3, 2, 1
இ) 4, 3, 2, 1, 5, 6
ஈ) 3, 2, 4, 5, 6
Answer:
அ) 6, 5, 4, 3, 2, 1

குறுவினா

Question 1.
தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?
Answer:

  • தொன்மத்தை வெளிபடுத்தும் முதன்மையான கருவி கவிதை.
  • உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.

Question 2.
திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.
Answer:

  • இராமாயணத்தின் அகலிகை’ கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்.
  • திருவிளையாடற் புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி, ‘விட்டகுறை’ வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதை.
  • ஜெயமோகனின் – பத்மவியூகம், எஸ். ராமகிருஷ்ணனின் – அரவாணன் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
தொன்மம் பற்றி தொல்காப்பியனார் கூறுவன யாவை?
Answer:

  • தொன்மை தானே சொல்லுங்காலை.
  • உரையோடு புணர்ந்த பழமை மேற்றே (தொல் செய்யுளியல் – 228).
  • உரையோடு சேர்ந்த பழமையே தொன்மம் என்கிறார் தொல்காப்பியர்.

Question 4.
தொன்மம் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?
Answer:
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் மேல்வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.

Question 5.
தொன்மம் பற்றி பேராசிரியர் கூறுவன யாது?
Answer:
தொன்மை என்பது உரை விராஅய்ப் பழமையனவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. அவை:
“பெருந்தேவனார் பாரதம்
தகடூர் யாத்திரை” போன்றன என்று உரையாசிரியர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் தொன்மத்திணை நற்றிணை வாயிலாக விளக்குக.
Answer:

  • சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகள் உள்ளன.
  • முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக ஆளப்பட்டுள்ளன.
  • முருகனை அழகுக்கும், ஆற்றலுக்கும், வீரத்துக்கும் உவமையாக்கி உள்ளனர்.
  • யானைசினங்கொண்டு போர் செய்த சிறப்பினை முருகன் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளனர்.

“முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” (நற்றிணை 225-1-2)

Question 2.
தொன்மங்கள் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
    “உன்மனம் ஒரு பாற்கடல்
    அதைக் கடைந்தால்
    அமுதம் மட்டுமல்ல
    ஆலகாலமும் வெளிப்படும்” – என்பதை நீ அறிவாய் அல்லவா!
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
பெண்ணியம் பற்றித் தொன்மம் கூறுவன யாவை?
Answer:
கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றது. “பெண்ணியத்திற்கான தொன்மம் – கண்ணகியும், பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மம் – மதுரையும்” பின்வரும் கவிதைகளில் பெண்கள் வாழ்க்கை முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”.

Question 4.
தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் வழக்கில் உள்ளது.
  • காலத்தைக் கடந்து நிற்பது.
  • இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
  • சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை.
  • விளக்க தொன்மம் பயன்படுகிறது.
  • கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’

என்று முடிவெடுத்து ஒரு மையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 1

கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை .

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு ழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா.இராமாணிக்கனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

ஆய்வு நெறி முறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ -தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே.

சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூ ல்களை இயற்றிய பெருமைக்கழியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூ ல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று:
“அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கம் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்.” (மா.இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)

வினாக்கள்
1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மை பற்றிக் கூறுக.
2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன?
3. பிரித்தறிக: பேருதவி
4. உறுப்பிலக்கணம் தருக : இழந்து
5. இலக்கணக் குறிப்பு வரைக: காய்தல்
Answer:
1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்றவை.
2. 2006 – 2007 ஆம் ஆண்டு .
3. பேருதவி – பெருமை + உதவி.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 2
5. காய்தல் – தொழிற்பெயர்

தமிழாக்கம் தருக.

A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess. “Madam, what is the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”. She turned to the black guy and said, ” Sir, a seat awaits you in the first class”. At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his light on everyone. Or the rain that falls on every single shore. No distinction of our race or the colour of our face. Nature’s gifts are there for all men rich or poor. (Courtesy: S.S.S. Bal Vikas)

தமிழாக்கம்:
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவழக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளைவழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 3

புத்தகக் கண்காட்சி
– நமது சிறப்பு நிருபர் –

42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000. வாசகர்கள். 30,00,000, பார்வையாளர்கள் பங்குபெறும் அறிவித்திழவிழா. நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விழா ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் | மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

ஆற அமர : ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்க வேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்படாமல் ஆர அமர’ யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆணி அடித்தாற் போல : எங்கள் தமிழாசிரியை நடத்திய குறியீட்டு இலக்கணம் என் மனதில் ‘ஆணி அடித்தாற் போல் பதிந்தது.

அகலக்கால் : பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் அகலக்கால்’ வைத்தால் துன்பம் நேரிடும்.

வழிவழியாக : சோழமன்னர்களின் ஆட்சி வழிவழியாக அவருடைய வாரிசுகளே ஆண்டு வந்துள்ளனர்.

கண் துடைப்பு : எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும்போதெல்லாம் தம்பியை அரவணைத்தும், என்னை அடித்தும் ஒரு கண்துடைப்பு நடத்துவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
இறைவனுக்கு வணங்காத தலையும், ஆசிரியரை வணங்காத கையும் இருந்ததென்ன பயன். அதுபோல உலக மக்கள் உய்ய வள்ளுவன் போல ஆசிரியராக விளங்கிட வேண்டும்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”,
என்று பாப்பா பாட்டின் மூலம் படிப்பினைப் பதிப்பித்த பாரதி போல் ஆசானாக வேண்டும்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’,
என்று சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய புரட்சிக் கவி போல ஆசானாக மிளிர வேண்டும்.

“பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும் கற்பு”
என்று அறிவுறுத்திய பெரியரைப் போல சமூக நீதி கற்பிக்கும் ஆசானாக வேண்டும்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்”
என்று முழங்கிய பேரறிஞர் போல் ஆசானாக வேண்டும்.

“மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வம் வேறு இடத்தினில் சேர்வதினால் வரும் தொல்லையடி”
என்று பாமர மக்களுக்குப் பாடம் புகட்டிய பட்டுக்கோட்டையார் போல் ஆசானாக வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

“உங்கள் வாழ்க்கையின் கடைசித் தருணம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டதற்கு நான் மாணவர் மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிக்கும் போது அத்தருணம் வாய்க்க வேண்டும்” என்றாராம் கலாம்.
அவர்க்கு மட்டுமே அத்தருணம் வாய்த்தது. அத்தகைய ஆசான் போல் ஆக வேண்டும். மானுடன் வாழ நல்ல போதனைகளைத் தந்திட்ட இச்சான்றோர்களே என் கன(வு)வின் ஆசிரிய பிரம்மாக்கள் ஆவர்.

இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை விறகெரிக்க வீசுவேன் – நா. காமராசன்

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : நா. காமராசன்.
பிறப்பு : 1942 – தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம்.
இறப்பு : மே 24. 2017, சென்னை .
பணி : கவிஞர், பாடலாசிரியர்.
சிறப்பு : புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத் துறை.

திரண்டக் கருத்து :
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவரோடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகெரிக்கப் பயன்படுத்துவேன்.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
சான்று:
பூமிச்சருகாம்
புயலை
புதிய
ரவில்
ரவலரோடு
ரவெரிக்கும்

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
வில்
வலரோடு
வெரிக்கும்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
சான்று:
கடல்களாக்குவேன்
தென்றலாக்குவேன்
பேசுவேன்
வீசுவேன்

கற்பனை நயம் :
கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனையை விற்பனை செய்யாமல் தம் : கவிதையிலேயே பயன்படுத்தியுள்ளார்.
புயலைக் கூறுபடுத்தியே – கோடி
புதிய தென்றலாக்கு வேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

அணி நயம் :
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.

தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

Question 1.
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
Answer:
வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

Question 2.
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
Answer:
முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

Question 3.
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
Answer:
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.

Question 4.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
Answer:
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 5.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
Answer:
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.

Question 6.
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
Answer:
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை இட்டு எழுதுக.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

“இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்” முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

குறிப்பு:
விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட படிகள் இணைக்கப்பெற வேண்டும்.
1. மதிப்பெண் பட்டியல் (10ஆம் வகுப்பு/10+2/10+3/11+1+3/இளநிலை வரிசையில்),
2. மாற்றுச் சான்றிதழ்
3. தற்காலிகச் சான்றிதழ் (Provisional certificate)அல்ல து பட்டச் சான்றிதழ் (Degree certificate)

மொழியோடு விளையாடு

படித்துப் பார்த்துப் படைக்க

மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குத் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே
நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞ்சினுள்ளே
பாசமெனும் நிழலுண்டோ ? – பூரணி

படித்துப் பார்த்துப் படைத்தது

உடலைக் கூடாக்கி
உள்ளத்தைக் கல்லாக்கி
உண்பதற்கு உணவின்றி
தன் சந்ததியை
தானே இறகில் சுமந்து
அமர இடமில்லாமல் அலைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

தான் நொந்து
தன் பிள்ளையைக் கண்டு
மனம் நொந்து
மரம்தரும் கனியைத்
தேடி அலைகிறது.

மரங்கண்டு மனமகிழ்ந்து
சென்றால் மரம்
கானல் நீர்போல்
காட்சியளிக்கிறது.
நெருஞ்சி முட்கள்
பச்சையற்ற மரத்தினருகே
இச்சையற்று இனிமேல்
உயிர்வாழ்வேன் என மாய்ந்தது.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 6
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகளல்ல நாங்கள்
பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
விண்ணில் பயணம் செய்திடுவோம்
விந்தைகள் பல புரிந்திடுவோம்
ஆடல் மட்டும் ஆடும் பெண்களல்ல
விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்கனைகள்
கணிதம் அறியா மக்குகளல்ல நாங்கள்
கணினியிலும் விற்பன்னர்கள் நாங்கள்
நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கும் வலம் வரும்
காவல் தெய்வங்கள் நாங்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம்
ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
மாதராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.

செய்து கற்போம்

உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்க.

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா

நிற்க அதற்குத் தக

பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவம் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

(நம்முடைய வீட்டின் மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப் போலவே பொதுச்சொத்துக்களின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 8
படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)

1. Debit Card – பற்று அட்டை
2. Demand Draft – கேட்பு வரைவோலை
3. Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
4. Teller – விரைவுக் காசாளர்
5. Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
6. Internet Banking – இணையவங்கி முறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : இன்று நான் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன்.

மாணவர்கள் : எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா?

ஆசிரியர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றி கூற இருக்கிறேன்.

மாணவர்கள் : அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா?

ஆசிரியர் : அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.

மாணவர்கள் : மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா?

ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர்க்குறிப்பு காணப்படுகிறது.

மாணவர்கள் : அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சோர்ந்தவை ஐயா?

ஆசிரியர் : காலம் 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே!

மாணவர்கள் : அக்கல்வெட்டின் பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறமுடியுமா ஐயா?

ஆசிரியர் : அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப் பாதையில் செல்கிறது.
மாணவர்கள் : நன்றி ஐயா!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.
Answer:
முன்னுரை :
இலக்கியங்கள் அவை உருவானகாலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள். இப்பகுதியில் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

எழுத்து வடிவம் :
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் சங்ககால எழுத்து வடிவமான ‘தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

புகளூர் கல்வெட்டு :
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான்குன்றின் மீதுள்ள குகைகளில் காணமுடிகிறது.

ஆறுநாட்டான் குன்று :
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்:
‘யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் செல்லிரும் பொறை
மகன் பெருங்கடுங்கோ மகன்
இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்’

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

என்று பொறிக்கப்பட்டுள்ளன. ‘கோ அதல் செல் இரும்பொறை’ என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி அதன்’ என்றும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதைக் காணமுடிகிறது. இவர் மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ ‘ பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன்

‘இளங்கடுங்கோ’ என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத்துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையில் உள்ளது. பிட்டன்’ ‘கொற்றன்’ என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய பெருங்கடுங்கோ’. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் ‘நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்’ (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறியமுடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே
பதிற்றுப்பத்தின் 6.7.8 வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு மூலம் அறியமுடிகிறது.

முடிவுரை :
புகளூர் கல்வெட்டு மூலம் சேரமன்னர்களின் வாழ்க்கை , பாலை, மருதம் பாடியவர்கள், பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
அ) எழுத்து
ஆ) கணையாழி
இ) கல்வெட்டு
ஈ) தென்றல்
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 2.
ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 25
Answer:
ஆ) 30

Question 3.
…………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அ) பிராகிருத
ஆ) சிந்துவெளி
இ) கல்வெட்டு
ஈ) பாரசீக
Answer:
ஆ) சிந்துவெளி

Question 4.
ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக.
அ) ஜவகர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது – 1) 2009
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 2) 1970
இ) தாமரைத்திரு விருது – 3) 1992

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3,1
ஈ) 1, 2, 3
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 5.
ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத்தக்கன
i) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ii) இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
iii) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 6.
மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையவை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
ஆ) பாண்டியன் அறிவுடைநம்பி, 2ஆம் நூற்றாண்டு
இ) சோழன் நலங்கிள்ளி, 2ஆம் நூற்றாண்டு
ஈ) சோழன் நெடுங்கிள்ளி, முதலாம் நூற்றாண்டு
Answer:
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு

Question 7.
1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
அ) நூற்றாண்டு மாணிக்கம்
ஆ) தமிழக கல்வெட்டியல்
இ) கல்வெட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நூற்றாண்டு மாணிக்கம்

Question 8.
சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி
அ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) வி. கிருஷ்ண மூர்த்தி
ஈ) தேனுகா
Answer:
ஆ) ஐராவதம் மகாதேவன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 9.
தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரி வடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
இ) வி. கருஷ்ண மூர்த்தி
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 10.
‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) ஜி.யு. போப்
இ) ஜார்ஜ் எல். ஹார்ட்
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 11.
ஆற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த செங்காய்பன் …………. ஆவார்.
அ) சமணத்துறவி
ஆ) பௌத்தத்துறவி
இ) அமைச்சர்
ஈ) புலவர்
Answer:
அ) சமணத்துறவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 12.
கரூரை அடுத்த புகளூர் ஆறு நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
i) கோ ஆதன் செல்லிரும்பொறை
ii) பெருங்கடுங்கோன்
iii) இளங்கடுங்கோ
iv) இளங்கோ

அ) i – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, i, ii – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 13.
பதிற்றுப்பத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
i) 6, 7, 8 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது
ii) 7, 8, 9 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
ஆ) ii – சரி

Question 14.
புகளூர் கல்வெட்டின் காலம் …………. நூற்றாண்டு.
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 15.
தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
அ) கே.வி. சுப்பிரமணியனார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஈ) இவர்களில் எவருமில்லை
Answer:
அ) கே.வி. சுப்பிரமணியனார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 1.
சிறந்த அரசு நிர்வாகத்திற்கு நீவிர் அளிக்கும் பரிந்துரைகளை நாளிதழ்த் தலையங்கமாக எழுதுக.
Answer:
நாட்டிற்கு வேண்டிய நல்லமைச்சு :

  • நாடோறும் நாடி முறை செய்யா மன்னன் நாள்தோறும் நாடு கெடும்.
  • நாள்தோறும் மக்களின் தேவையைப் புரிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.
  • காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் பேசாதவனாக மன்னன் இருக்க வேண்டும்.
  • அரசின் எல்லாத்துறைகளும் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும்.
  • தண்ணீ ர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
  • கல்வியில் காமராசராக விளங்க வேண்டும்.
  • நியாய விலைக் கடைகளில் முறையான வர்த்தகம் நடைபெற வேண்டும்.
  • எரிபொருட்கள் விலையைப் போல ஒரே விலை ஒரு நாளைக்கு என எல்லா பொருள்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • விலையெல்லாம் பொருட்கள் தவிர்த்து வரி விதிப்பில் குறைவாக வசூலிக்க வேண்டும்.
  • தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திறனை வெளிநாட்டினர் போல் மேம்படுத்த வேண்டும்.
  • விவசாயத்திற்குத் தட்டுப்பாடில்லாமல் பாசனத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  • சிறுபான்மையினருக்கும், மகளிருக்கும் உரிய நலன்களைப் பெற்றுத்தர வேண்டும்.
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்பதை மறத்தல் கூடாது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது
ஆ) தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது
இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப் பயன்படாது
ஈ) தனக்கும் பயன்படும் பிறருக்கும் பயன்படும்
Answer:
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது

குறுவினா

Question 1.
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:

  • அறிவுடை அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிக்கணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
  • அறிவில் குறைந்து முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
செவியறிவுறூஉ துறையை விளக்குக.
Answer:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.

சிறுவினா

Question 1.
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும்.

பொருள் :
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

உவமை :
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும்.

பொருள் :
அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரிதிரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

இலக்கணக் குறிப்பு

காய்நெல் – வினைத்தொகை
புக்க – பெயரெச்சம்
அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘காய்நெல் அறுத்து’ என வரும் புறநானூற்றுப் பாடலின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) அறுச்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
இ) நேரிசை ஆசிரியப்பா

Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) மா – 1. முறைமை
ஆ) கல் – 2. வரி
இ) பிண்ட ம் – 3. ஒலிக்குறிப்பு
ஈ) வரிசை – 4. ஒருநில அளவு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) காய்நெல் – 1. வினையெச்சம்
ஆ) புக்க – 2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) அறியா – 3. பெயரெச்சம்
ஈ) அறுத்து – 4. வினைத்தொகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 4.
‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.
அ) 154
ஆ) 184
இ) 204
ஈ) 214
Answer:
ஆ) 184

Question 5.
புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
அ) 1884
ஆ) 1894
இ) 1896
ஈ) 1910
Answer:
ஆ) 1894

Question 6.
ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கலிபோர்னியா
ஈ) கேம்பிரிட்ஜ்
Answer:
இ) கலிபோர்னியா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 7.
ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
அ) 1988
ஆ) 1990
இ) 1999
ஈ) 2000
Answer:
இ) 1999

Question 8.
‘காய்நெல் அறுத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலின்வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறத்தியவர் ……………. அறிவுறுத்தப்பட்டவர் …………….
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி
ஆ) கபிலர், பாரி
இ) கோவூர்கிழார், கிள்ளிவளவன்
ஈ) வெள்ளக்குடி நாகனார், நலங்கிள்ளி
Answer:
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி

Question 9.
பிசிர் என்பது
அ) எஞ்சிய வாழ்க்கை
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
இ) சோழநாட்டில் கிடைத்த பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்

Question 10.
ஆந்தையார் என்பது
அ) இயற்பெயர்
ஆ) காரணப்பெயர்
இ) பட்டப்பெயர்
ஈ) குலப்பெயர்
Answer:
அ) இயற்பெயர்

Question 11.
அறிவுடை நம்பி ஆண்ட நாடு
அ) சேரநாடு
ஆ) சோழநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
இ) பாண்டிய நாடு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 12.
பொருத்திக் காட்டுக.
அ) தமித்து – 1. கெட
ஆ) புக்கு – 2. சேர்த்து
இ) யாத்து – 3. புகுந்து
ஈ) தப – 4. தனித்து

அ) 4, 3, 2, 1
ஆ) 3. 4. 1. 2
இ) 1. 2. 3. 4
ஈ) 3.2.1.4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
‘பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்
அ) குலைந்தால்
ஆ) இழந்தால்
இ) விரும்பினால்
ஈ) அலைந்தால்
Answer:
இ) விரும்பினால்

குறுவினா

Question 1.
பிசிராந்தையார் குறிப்பு வரைக.
Answer:
ஆசிரியர் – பிசிராந்தையார்
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் ஓர் ஊர்

இயற்பெயர் – ஆந்தையார்
பாண்டிய மன்னர் அறிவுடை நம்பியின் அரசவைச் சான்றோர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
சங்க காலத்தில் மன்னன் எவ்வாறு திகழ்ந்தான்?
Answer:
நல்வழிப்படுத்தும் புலவர்கள் அரசவையில் இருந்தனர். புலவர்களின் அறிவுரைகளைத் தலைமேற் கொண்டு குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து ஆட்சி செய்தனர்.

Question 3.
பாடாண் திணை விளக்குக.
Answer:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
  • 400 பாடல்கள் கொண்டது.
  • பண்டையத் தமிழ்களின் அரசியல் சமூக வரலாற்றின் அரியக் கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • முடியுடை வேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள் போர்ச் செய்திகள், கையறு நிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
  • உ.வே.சா. 1894இல் பதிப்பித்தார்.
  • 1999இல் ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்.
  • The Four hundred songs of war and wisdom. An Anthology of poems from classical Tamil, the Purananuru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
புறநானூற்றுப் பாடல் வாயிலாக மன்னனின் நிருவாக சீர்மையை விளக்குக.
Answer:

  • குடிமக்களின் உளம் அறிந்து ஆட்சி செய்பவனே சிறந்த அரசன்.
  • மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்பட்டால் நாடும் மக்களும் வீழ்வர் என்பதைப் : புறநானூற்று பாடல் மூலம் பிசிராந்தையார் கூறினார்.
  • ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாக யானைக்குப் பல நாட்கள் கொடுக்கலாம்.
  • இதைவிட நூறு மடங்கு பெரிய வயலில் யானை தனித்துச் சென்று வயலில் உண்ணுமாயின் உண்ணும் அளவைவிட காலில் மிதிபட்டு அழிந்ததே அதிகம் ஆகும்.
  • அறிவுடைய அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்து முறை தவறி, ஆரவாரமாக மக்களின் அன்பு கெடுமாறு வரிதிரட்டினால் யானை புகுந்த நிலம் போல தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது ஆகும்.
  • அரசன் தானும் பயன்படமாட்டான். நாட்டு மக்களையும் துன்புறுத்துவான் என்பதை என்னும் நிர்வாக சீர்மையை விளங்குகிறது.

Question 3.
பாடாண் திணையை சான்றுடன் விளக்குக. திணை
Answer:
விளக்கம்:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.

பொருத்தம்:
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் : வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Question 4.
செவியறிவுறூஉ துறையைச் சான்றுடன் விளக்கு.
Answer:
துறைவிளக்கம்:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.

சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.

பொருத்தம் :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து, சிறப்பு மலர் உருவாக்குக.
Answer:
தாலாட்டு பாட்டு :
மாமன் அடிச்சானோ மல்லிகப்பூச் செண்டால
மன்னவனே அழலாமோ தேம்பித்தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ…..
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
ஆனந்த பொன்மணியே தேம்பித் தேம்பி அழலாமோ
பாட்டி அடிச்சாளோ பாலூட்டும் சங்கால
பாராளும் மன்னவனே தேம்பித் தேம்பி அழலாமோ
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டால
ஆடி வரும் மயிலழகே தேம்பித் தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ
நீ அழுத கண்ணீரு நெல்லுக்கும் இஞ்சிக்கும்
நீராய்ப்பாயுதடா
ஆராரோ ஆராரோ.

ஏற்றப்பாட்டு :
மழையை நம்பி ஏலேலோ மண்
இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ
மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ
கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ
இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ
பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ
பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ
பழம் இருக்க ஐலசா
பழ்தை நம்பி ஏலேலோ
மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ
நீ இருக்க ஐலசா
உன்னை நம்பி ஏலேலோ
நான் இருக்க ஐலசா
என்னை நம்பி ஏலேலோ
எமன் இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ
காடிருக்க ஐலசா
காட்டை நம்பி ஏலேலோ
புல்லிருக்க ஐலசா.

ஒப்பாரிப் பாட்டு :
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டியே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுத்து வந்த ராசா
பாதியில் போரிங்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
எனச் சொல்லிட்டு
இடம் பிடிக்கப் போயிதிங்களா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்குக் கேக்கலையா
கொண்டு வந்த ராசாவே
உங்களுக்குக் காதும் கேக்கலையா.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
முச்சந்தி இலக்கியம் என்பது
கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது
கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது

அ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1, 2 சரி
இ) கூற்று 1, 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Answer:
ஆ) கூற்று 1, 2 சரி

Question 2.
உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம்
அ) உண்டு
ஆ) பிறந்து
இ) வளர்ந்த
ஈ) இடந்தனில்
Answer:
இ) வளர்ந்த

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

குறுவினா

Question 1.
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
Answer:

  • நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா’ அறியாது.
  • ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா’ உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணஒர்ச்சி பெற்று நம்மனதை சிந்திக்கத் தூண்டுகிறது.
  • அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடுவினா

Question 1.
எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answer:
முன்னுரை:
நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் கதைப் பாடல்கள் வாயிலாக விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை எதார்த்தமாக வடிக்கின்றனர். அந்த வகையில் தேயிலைத் தோட்டப் பாட்டு’ என்ற பாடல்களின் பாயிலாக மக்களின் வலிகளை இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

துயரங்கள்:

  • விளிம்புநிலை மக்களின் வாழ்வு துயரம் தோய்ந்தது.
  • அவர்களின் விம்மி விம்மி அழுதக் குரலைக் காற்று கேட்டிருக்கலாம்.
  • அவை வெகுசனங்களிடையே நாட்டுப்புற இலக்கிய வடிவில் கும்மிப்பாடலாக அவர்களின் துயரம் போக்கின. அப்பாடல்களுள் தேயிலைத் தோட்டப்பாட்டு வாயிலாக அறியலாம்.
  • பழங்காலத்தில் நம் தேசத்தில் பலவிதக் கைத்தொழில்கள் சிறப்புப் பெற்று விளங்கியது.
  • நாகரீகத்திலும் ராஜரீகத்திலும் நாடெங்கும் எந்நாளும் கொண்டாடினர்.
  • இத்தகு சீரும் சிறப்பும் கொண்ட நம் தேசத்தில் அன்னியர்கள் புகுந்தனர்.
  • நம்பண்பாட்டையும், நாகரிகத்தையும் கைத்தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை அடித்து நம்மை அற்ப பிராணி போல் செய்தனர்.
  • உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் பலவேலை செய்த நாம் இன்று மனைவி குழந்தைகளோடு நாயினும் கீழாகினோம்.

கங்கானியின் செயல்:

  • விளம்பர சுவரொட்டி ஒட்டி வேலைக்கு அழைத்தனர்.
  • ஆலைக் கரும்பு போல நம் உழைப்பைப் பிழிந்தும் குரங்கைப் போல் நம்மை ஆட்டிப் படைத்தும் ஒன்றுக்குப் பத்தாகப் பொய் கணக்கெழுதினர்.
  • தயவு ஏதுமில்லாமல் கூலித் தொழிலாளிகளைக் கப்பலில் ஏற்றி இலங்கை, அந்தமான் தீவுக்குக் கொண்டு சென்றனர்.
  • உண்ண உணவுக்கும், கைப்பிடிச் செலவுக்கும் துன்பப்பட்டு மண்ணுளிப் பாம்புப் போல மனைவி மக்களோடு வாழ்ந்தனர்.
  • சகோதர, சகோதரிகளே கண்காணிப்பவர் கூறும் பொய்யுரைகளை கண்டு மயங்காதீர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

முடிவுரை:
வறுமை, பினி, ஏமாற்றம் போன்றவை எளிய மக்களின் வாழ்க்கை வழிகளை பிரதிபலிக்கின்றன. இப்படியே இவர்கள் கூலித்தொழிலாளியாய்த் தேயிலைத் தோட்டத்தில் (இந்தியர்) நாம் துன்பப்படுவதற்குக் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் இல்லாத குறையே. இன்றே உணருங்கள் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுத்து, குறையில்லாமல் ஒற்றுமையாய் ஊரில் கட்டுப்பாட்டோடு வாழ்வோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நம் பாடப்பகுதியின் கும்மிப்பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்
அ) ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப் பாட்டு
ஆ) பாரத மக்களின் விவசாய நிலைப் பாட்டு
இ) மலேசிய மண்ணில் தமிழ்க்கண்ணீர்
ஈ) பால்மரக்காட்டினிலே
Answer:
அ) ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 2.
ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் பல்வேறு தோட்டக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த நூற்றாண்டு
அ) கி.பி. 18
ஆ) கி.பி. 19
இ) கி.பி. 17
ஈ) கி.பி. 16
Answer:
அ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 3.
தோட்டக் கூலிகளாகத் தமிழர்களை வெள்ளையர் சேர்க்குமிடங்கள்
அ) இலங்கைத் தீவு, அந்தமான் தீவு
ஆ) மலேசியா, சிங்கப்பூர்
இ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
ஈ) அமெரிக்கா, கனடா
Answer:
அ) இலங்கைத் தீவு, அந்தமான் தீவு

Question 4.
யாருடைய பொய்யுரை கண்டு மயங்காதீர் என்று தேயிலைத் தோட்டப் பாட்டுக் கூறுகிறது?
அ) கங்காணி
ஆ) வெள்ளையர்
இ) நாட்டாமை
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) கங்காணி

Question 5.
தேயிலைத் தோட்டத்தில் இந்தியர் துன்பப்படுவதற்குக் காரணம்
அ) கல்வியொழுக்கம் நாகரீகம் இல்லாமை
ஆ) வெள்ளையரின் ஏகாதிபத்திய உணர்வு
இ) கங்காணிகளின் கருணையுணர்வு
ஈ) உழைத்து வாழ வேண்டும் என்ற வேட்கை
Answer:
அ) கல்வியொழுக்கம் நாகரீகம் இல்லாமை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 6.
தோட்டக்கூலிகளை ஆலைக் கரும்பு போலாட்டிக் குரங்காட்டுபவர்கள்
அ) கங்காணிகள்
ஆ) நாட்டாமைகள்
இ) அரசர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) கங்காணிகள்

குறுவினா

Question 1.
தேயிலைத் தோட்டத்தில் மக்கள் துன்பப்படுவதற்கு முகம்மது இராவுத்தர் கூறும் காரணங்கள் யாவை?
Answer:
கல்வி, ஒழுக்கம், நாகரீகம், ஒற்றுமை இவை நான்கும் குறைவதால் தேயிலைத் தோட்டத்தில் துன்பப்படுவதற்கான காரணங்களாக முகம்மது இராவுத்தர் குறிப்பிடுகிறார்.

Question 2.
தமிழர்கள் கூலித்தொழிலாளிகளாக எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்?
Answer:
இலங்கை மற்றும் அந்தமான் தீவு.

Question 3.
நாட்டுப்புற இலக்கியங்களின் பாடுபொருள்கள் யாவை?
Answer:
செவ்வியல் இலக்கிய மரபைப் பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களைப் பாடு பொருளாகக் கொண்டு பாடப்பட்டது நாட்டுப்புற இலக்கியங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 4.
நாட்டுப்புற இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
Answer:

  • வெகுசன இலக்கியம்
  • தெருப் பாடல்கள்
  • முச்சந்தி இலக்கியம்
  • காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள்
  • குஜிலி நூல்கள்
  • பெரிய பட்டுப்புத்தகங்கள்

Question 5.
தேயிலைத் தோட்டப்பாட்டில் காண்ப்படும் இலக்கிய வடிவங்கள் யாவை?
Answer:
மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுகின்றன.

Question 6.
நமது பாடப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பாட்டு எந்த நூலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
Answer:
முகம்மது இராவுத்தர் எழுதிய கும்மி பாடல்கள் பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப்பாட்டு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 7.
தேயிலைத் தோட்டப்பாட்டு அக்காலக்கட்டங்களில் எவ்வடிவில் வெளியாயின?
Answer:
19ஆம் நூற்றாண்டு இறுதிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு நூல்களாக மெல்லிய தாளில் பெரிய எழுத்தில் வெளியாயின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.2 அதிசயமலர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.2 அதிசயமலர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 1.
போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.
Answer:
போருக்கு எதிராக குரல்கள்…….
இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் சிலர் வெளியே நின்று வெறுத்துப் பார்த்தனர்.

குண்டுகள் வீழ்ந்தன
கிராமத்தின் மத்தியில் புகை மண்டலம்
சிலருக்குக் காயம்; சிலர் மாயம்
எத்தனை பேர் மாண்டனர்
பலருக்கு அந்தக் கணக்குதான் தேவை
பாழும் உலகம் பரிதாபப்படவில்லை .
எங்கள் மேல் விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!

மனிதம் விற்று மதி போற்றும்
மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்
மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி
பகுத்தறியாமல் பகை கொள்வதா
படைகொண்டு தாக்கினால் பாவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

நாங்கள் என்ன செய்வோம்
பாதி பேர் கைது பாதி பேர் காணோம்
பக்கத்து வீட்டில் அப்பா இல்லை
என் வீட்டில் என் அண்ணன் இல்லை
எதிர் வீட்டில் என் நண்பன் இல்லை
எங்கே போனார்கள் ஆண்டு
இரண்டாயிற்று சேதி இல்லை
இறைவனும் எங்கள் முன் வரவில்லை
ஏதேனும் கேட்கலாம் என்றால்
எதைக் கேட்பது எதை விடுவது
மீண்டு வருமா மாண்ட உயிர்கள்
மறு பிறவியிலாவது ஆண்டவா
என்னை படைப்பதை நீ மறந்து விடு.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது
அ) கடந்தகால துயரங்களை
ஆ) ஆட்களற்ற பொழுதை
இ) பச்சயம் இழந்த நிலத்தை
ஈ) அனைத்தையும்
Answer:
ஈ) அனைத்தையும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

சிறுவினா

Question 1.
அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?
Answer:
(i) புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்குப் பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.

(ii) ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், உலாவிய யானையின் எச்சத்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.

(iii) எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.

Question 2.
‘எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளன.

பொருள் :
மலரைத் தேடி வண்ணத்துப் பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.

விளக்கம்:
மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசய மலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிசய மலர்’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர்ரூமி
இ) தமிழ்நதி
ஈ) இரா. மீனாட்சி
Answer:
இ) தமிழ்நதி

Question 2.
‘அதிசய மலர்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) அதன் பிறகும் எஞ்சும்
ஆ) கானல்வரி
இ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி
ஈ) கைவிட்ட தேசம்
Answer:
அ) அதன் பிறகும் எஞ்சும்

Question 3.
கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்
அ) கலைச்செல்வி
ஆ) தமிழ்ச்செல்வி
இ) கலைவாணி
ஈ) வாணி
Answer:
இ) கலைவாணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 4.
கவிஞர் தமிழ்நதியின் பிறப்பிடம்
அ) ஈழத்தின் திருகோணமலை
ஆ) கேரளத்தின் திருவனந்தபுரம்
இ) கர்நாடகாவின் மாண்டியா
ஈ) தமிழகத்தின் திருச்செந்தூர்
Answer:
அ) ஈழத்தின் திருகோணமலை

Question 5.
கவிஞர் தமிழ்நதி கலைத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
அ) சென்னை
ஆ) கொலம்பியா
இ) யாழ்ப்பாணம்
ஈ) அண்ணாமலை
Answer:
இ) யாழ்ப்பாணம்

Question 6.
கவிஞர் தமிழ்நதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நாடு
அ) சிங்கப்பூர்
ஆ) மலேசியா
இ) கனடா
ஈ) ஆஸ்திரேலியா
Answer:
இ) கனடா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 7.
பொருத்துக.
அ) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – 1. நாவல்
ஆ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – 2. குறுநாவல்
இ) கானல்வரி – 3. கவிதைகள்
ஈ) பார்த்தீ னியம் – 4. சிறுகதைகள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 8.
தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது
அ) சிறுகதைகள்
ஆ) கவிதைகள்
இ) குறுநாவல்
ஈ) நாவல்
Answer:
ஈ) நாவல்

Question 9.
பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.
அ) யானை
ஆ) வண்ணத்துப்பூச்சி
இ) எறும்பு
ஈ) ஈ
Answer:
ஆ) வண்ணத்துப்பூச்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

குறுவினா

Question 1.
அதிசய மலர் என்ற கவிதை தமிழ்நதியின் எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன?
Answer:
‘அதன் பிறகு எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

Question 2.
தமிழ்நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

Question 3.
அதிசிய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?
Answer:
இதழ்களிலிருந்து தொடங்குகிறது.

Question 4.
அதிசய மலர் எப்போது சிரித்தது?
Answer:
போருக்குப் பிறகு முகையை அவிழ்த்துச் சிரித்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 5.
‘எவருடையவோ
சப்பாத்தின் பின்புறம்
விதையாக ஒட்டிக்கிடந்து
உயிர் தரித்திருக்கலாம்’ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் ‘அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் ‘அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

விளக்கம் :
யாருடைய செருப்பின் பின்புறமாக விதையாக ஒட்டிக் கொண்டு வந்து தன் வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

சிறுவினா

Question 1.
கவிஞர் தமிழ்நதி குறிப்பு வரைக.
Answer:
பெயர் : கலைவாணி
பிறப்பு : ஈழம், திருகோணமலை.
வசிப்பு : கனடா
படிப்பு : யாழ்ப்பாணத்தில் கலைத்துறையில் பட்டம்
நூல்கள் : சிறுகதை – நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
நாவல் – ஈழம், கைவிட்ட தேசம், பார்த்தீனியம்
குறுநாவல் – சாலை வரி
கவிதை – சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 1.
புறச்சூழல்களுக்கு ஏற்ப உங்கள் நேர மேலாண்மையைப் பயன்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
(நேசனும், வாசனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வாசன் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவான். நேசன் குறைவான மதிப்பெண்களே வாங்குவான். ஒருநாள் கல்வி பற்றி இருவரும் உரையாடுகின்றனர்)

நேசன் : வாசன் நீ எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறாய். என்னால் அது முடியவில்லையே என்ன காரணம் கூற முடியுமா.

வாசன் : வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்தும் போது நன்றாகப் படிப்பேன். வீட்டிற்கு வந்தபின் இரண்டு முறை படிப்பேன்.

நேசன் : வீட்டிற்கு வந்து இரண்டு முறை படிப்பாயா? எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது! வாசன் : ஏன் நேரம் கிடைக்காது! மாலை 5 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தேநீர் அருந்துவேன்.
அறை மணி ஓய்வெடுப்பேன். சரியாக 6 மணிக்கு படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

நேசன் : அப்படியாநான் 5-6 பள்ளியிலேயே கிரிக்கெட்விளையாடுவேன். 6-8தொலைக்காட்சி பார்ப்பேன். 9 மணிக்குச் சாப்பிடுவேன். 9 – 10 க்குள் தூங்க ஆரம்பித்து விடுவேன்.

வாசன் : தயவுசெய்து நான் சொல்வதைக்கேள். இனிமேல் என்னைப் பின்பற்று. என் அறிவுரைகளைக் கேள்.

நேசன் : சரி அப்படியே செய்கிறேன் சொல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

வாசன் : காலை 5 மணிக்குள் எழுந்திரு.
முகம் கழுவி, பல் துலக்கி, 5.15க்குள் புத்தகத்தைக் கையில் எடு.
1.30 மணி நேரம் தொடர்ந்து படி.
7.30 க்குள் குளி, பள்ளிக்குத் தயாராகு.
8 மணிக்குச் சாப்பாடு
8.30 மணிக்குப் பள்ளி
5 – 6 மணிக்கு வீடு திரும்பு
6 – 8 வரை தொலைக்காட்சி, விளையாட்டுகளைத் தவிர்த்துப் படி. நிச்சயம் முன்னேற்றம் கிட்டும்.

நேசன் : நன்றி நண்பா, நிச்சயம் உன் பேச்சைக் கேட்பேன், வெற்றி பெறுவேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
அ) சோழன் நெடுங்கிள்ளியை – பாணர்
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை – கபிலர்
ஈ) கரிகாலனை – உருத்திரங்கண்ணனார்
Answer:
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்

குறுவினா

Question 1.
பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
Answer:

  • சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
  • ‘பருவத்தே பயிர் செய்’ என்பது அனுபவச் சொல்.
  • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
  • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

சிறுவினா

Question 1.
வேளாண்மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:
(i) வேளாண்மைக்குள்ளும் மேலாண்மை கூறுகள் உண்டு. சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல் நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பின் பாதுகாத்தல் நல்ல விலைவரும் வரை இருப்பு வைத்தல்.

(ii) ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட்டால் வேளாண்மை செழிக்கும்.

(iii) மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 2.
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
Answer:
(i) நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா’ அறியாது.

(ii) ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா’ உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

(iii) அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடுவினா

Question 1.
நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை :

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை.
  • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

இதையே நாலடியார்,
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தாழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்று பக்குவமாகக் கூறுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும்.
  • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன். அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவான்

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை :

  • டைமன் என்பவன் ஏதேன்ஸ் நகரில் இருந்தன். அவன் வரவு குறைந்தாலும் செலவு அதிகம் செய்தான்.
  • அவன் உதவியாளர் நிதி நிலைமையைப் பேசும் பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • கடன் ஒரு நேரத்தில் கழுத்தை நெறித்தது. அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • அவன் தான் அளித்த விருந்தை உண்பவர் உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
  • சேவகர்கள் நான்கு திசைகளிலும் சென்று வெறும் கையோடும் வெளிரிய முகத்தோடும் திரும்பினார்கள்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.

ஔவையாரின் நிருவாக மேலாண்மை :
தாம் ஈட்டும் பொருளினைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள். எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஒர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் அட்டவணையைத் தருவதாக அமையும் அதிகாரம்
அ) மடியின்மை
ஆ) வெஃகாமை
இ) ஊழ்
ஈ) வெகுளாமை
Answer:
அ) மடியின்மை

Question 2.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே”
– என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன

அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி
ஆ) பதிற்றுப்பத்து, கபிலர், சேரன் செங்குட்டுவன்
இ) புறநானூறு, பரணர், பேகன்
ஈ) மனோன்மணியம், சுந்தரனார், ஜீவகன்
Answer:
அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி

Question 3.
சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.
அ) இவ்வுலக வாழ்வை
ஆ) நேர மேலாண்மையை
இ) கொல்லாமையை
ஈ) சொர்க்கத்தை
Answer:
ஆ) நேர மேலாண்மையை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 4.
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான் – என்று தன் நாட்டை மிகவும் செப்பமாகவும்
நுணுக்கமாகவும் ஆட்சி செய்த யாரைப் பற்றி யார் எந்நூலில் பாடியுள்ளார்?

அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்
ஆ) நெடுஞ்செழியனைப், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தில்
இ) நலங்கிள்ளியைப், கோவூர்கிழார் – புறநானூற்றில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்

Question 5.
‘இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக… என்று கூறுவது
அ) மூதுரை
ஆ) ஆத்திசூடி
இ) அறநெறிச்சாரம்
ஈ) நளவெண்பா
Answer:
இ) அறநெறிச்சாரம்

Question 6.
உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மதுரைக்காஞ்சி
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

Question 7.
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குதிரைகள் இறக்குமதி பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறநானூறு
Answer:
ஆ) பட்டினப்பாலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 8.
‘வான் முகந்த நீர் மலைப் பொழியவும்…’ எனக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம் போல, கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததனைக் குறிப்பிடும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பட்டினப்பாலை
ஈ) அகநானூறு
Answer:
இ) பட்டினப்பாலை

Question 9.
காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின் அவற்றின்மீது சுங்க அதிகாரிகள் பொறித்த சின்னம்
அ) வில்
ஆ) மீன்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

Question 10.
சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படுவது
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) வஞ்சி
Answer:
ஆ) முசிறி

Question 11.
அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றிக் கூறுபவர்
அ) ஸ்ட்ரேபோ
ஆ) யுவான்சுவாங்
இ) பாகியான்
ஈ) மெகஸ்தனிஸ்
Answer:
அ) ஸ்ட்ரேபோ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 12.
யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடல்
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்
ஆ) புறநானூற்றில் 86ஆம் பாடல்
இ) அகநானூற்றில் 56ஆம் பாடல்
ஈ) அகநானுற்றில் 86ஆம் பாடல்
Answer:
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்

Question 13.
யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தியவன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குறிக்கப்படுபவன்
அ) சேரன் செங்குட்டுவன்
ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்
ஈ) இவற்றில் எவருமிலர்
Answer:
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்

Question 14.
‘உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்’ என்ற குறட்பா உணர்த்தும் செய்தி

அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்
ஆ) எந்தச் செயலையும் முடிக்க இயலும் என்பதை நம்ப வேண்டும்
இ) முடியாதது என்ற ஒன்று எவருக்குமே இல்லை
ஈ) தான் என்ற சர்வம் வெற்றியுடையவனாக்கும்
Answer:
அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்

Question 15.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்’ – என்று கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நன்மணிக்கடிகை
ஈ) ஏலாதி
Answer:
ஆ) நாலடியார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 16.
‘டைமன்’ பற்றிய ……………. நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கமாக அமைகிறது.
அ) வேர்ட்ஸ்வொர்த்தின்
ஆ) பெர்னாட்ஷாவின்
இ) ஷேக்ஸ்பியரின்
ஈ) டெமாஸ்தனிஸின்
Answer:
இ) ஷேக்ஸ்பியரின்

Question 17.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்…”
– என நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் கவிஞர்

அ) கோவூர்கிழார்
ஆ) ஒளவையார்
இ) ஒக்கூர் மாசாத்தியார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஒளவையார்

Question 18.
ஹிராக்ளிடஸ் என்பவர் ……………. நாட்டவர் ஆவார்.
அ) கிரேக்க
ஆ) இத்தாலி
இ) அமெரிக்க
ஈ) ஆப்கானிய
Answer:
அ) கிரேக்க

Question 19.
ஹிராக்ளிடஸ் என்பார் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘துளிகள்’ என்னும் நூல் ……….. ஒற்றை வரிகளை உடையது.
அ) 124
ஆ) 126
இ) 154
ஈ) 224
Answer:
ஆ) 126

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 20.
‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று எழுதியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

Question 21.
‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று கூறியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

Question 22.
அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தவன்
அ) பேகன்
ஆ) அதியன்
இ) பாரி
ஈ) ஓரி
Answer:
ஆ) அதியன்

Question 23.
‘இலக்கியத்தில் மேலாண்மை ‘ என்னும் நூலை எழுதியவர்
அ) சகாயம்
ஆ) வெ. இறையன்பு
இ) இந்திரா பார்த்தசாரதி
ஈ) மேலாண்மை பொன்னுசாமி
Answer:
ஆ) வெ. இறையன்பு

Question 24.
இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்
அ) இராதாகிருஷ்ணன்
ஆ) வெ. இறையன்பு
இ) ரோகினி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) வெ. இறையன்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 25.
வெ. இறையன்புவின் எந்த நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது?
அ) வாய்க்கால் மீன்கள்
ஆ) ஏழாவது அறிவு
இ) உள்ளொளிப்பயணம்
ஈ) மூளைக்குள் சுற்றுலா
Answer:
அ) வாய்க்கால் மீன்கள்

குறுவினா

Question 1.
நேர மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
Answer:
செயல் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் ஏற்ற இடத்தையும் அறிந்து செயல்பட்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்பதை.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் ” என்ற குறள் தெளிவுபடுத்துகிறது.

Question 2.
மடியின்மை என்னும் அதிகாரத்தின் வாயிலாக ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிறார்?
Answer:
“மடிஇலா மன்னவன் அய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு”
என்ற குறளில் உலகம் அனைத்தையும் அளந்த இறைவன் சோம்பல் இன்றி பாதுகாப்பது போல அரசனும் சோம்பல் இல்லாமல் தன் பெரு முயற்சியால் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 3.
கடலைக் குறிக்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
அரலை, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, அரி, உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, ஆழி, ஈண்டு நீர், தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்.

Question 4.
சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் எது? யாருடைய கப்பல்கள் அங்கு இருந்தது?
Answer:
முசிறி, யவணர்களின் கப்பல்கள்.

Question 5.
பதிற்றுப்பத்து காட்டும் வணிக மேலாண்மை விளக்குக.
Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக வைத்திருந்தான். பகை நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் மூலம் அறிய முடிகிறது.

Question 6.
வணிக மேலாண்மை விதி யாது?
Answer:

  • யாருடனும் போட்டி போடக்கூடாது.
  • போட்டிக்கு வருபவரை அழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.
  • போட்டியாளர்கள் நமக்குள் உந்து சக்தியை உற்பத்திச் செய்கிறார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 7.
மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை விளக்குக.
Answer:
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர்…..
என்ற பாடலடிகளில் விளை நிலமாக இன்சொல்லும், விதையாக ஈதலும், வன்மையான சொல் களையாகவும் உண்மை என்ற எருவை விட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்ய வேண்டும் அறநெறிச்சாரம் விளக்குகிறது.

Question 8.
மேலாண்மையில் புலி – பூனை ஒப்பிடுக.
Answer:
பழமொழி :
புலியைப் பூனையைப் போல தொடர்ந்து நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும். புத்திசாலிகள் பூனைகளையும் புலியாக்குவார்கள் அவசரக்காரர்கள் புலிகளையும் எலியாக்குவார்கள் என்பதே புலி – பூனை மேலாண்மைக் கருத்தாகும்.

Question 9.
நாலடியார் கூறும் நிர்வாக மேலாண்மையை விளக்குக.
Answer:
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்…… என்கிறார் நாலடியார்.

Question 10.
வெ. இறையன்புவின் படைப்புக்களம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல்,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 11.
நம்பிக்கை நூல். வெ. இறையன்புவின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் ஆண்டு கூறுக.
Answer:
நூல் – வாய்க்கால் மீன்கள்
ஆண்டு – 1995

Question 12.
சங்க இலக்கியம் காட்டும் நிர்வாக மேலாண்மைக்குச் சான்றுகள் சில குறிப்பிடுக.
Answer:
அடுத்தவர் நலனுக்காக வாழ்பவரே தலைமைப்பண்பு உள்ளவர். இந்திரர்க்குரிய அமுதம் கிடைத்தாலும் தனித்து உண்ணார். அப்படித்தான் அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தான் என்பதை அறிய முடிகிறது.

சிறுவினா

Question 1.
சீனக்கதை வாயிலாக நேர மேலாண்மையை விளக்குக.
Answer:

  • சீனத்தில் யாங்சௌ என்ற பகுதி.
  • பல இளைஞர்கள் நீச்சல் வீரர்கள்.
  • நீச்சல் தன்னம்பிக்கை தருவதோடு எதிர்நீச்சல் போடவும் கற்றுத் தருகிறது.
  • ஒரு நாள் படகில் ஆழமான நதியில் பல இளைஞர்கள் பயணம் செய்கிறார்கள்.
  • வெள்ளம் ஏற்பட்டுப் படகு கவிழ்ந்தது.
  • அனைவரும் நதியில் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தனர்.
  • ஒருவன் மட்டும் சரியாக நீந்தாமல் தத்தளித்தான்.
  • அவன் மற்ற வீரர்களைவிட சிறந்த வீரனும் கூட.
  • எல்லோரும் ஏன் பின் தங்குகிறாய்? என்று கேட்கிறார்கள். நீ சிறந்த வீரனே என்கிறார்.
  • அவன் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொற்காசுகள் உள்ளது. அதனால் என்னால் நீந்த முடியவில்லை என்றான்.

அவன் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் தன் அரிய உயிரை நீத்தான்.
எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கி உள்ளது என்பது இக்கதை மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 2.
வணிக மேலாண்மையைப் பற்றி பட்டினப்பாலை கூறுவனவற்றை விளக்குக.
Answer:
(i) காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல், கடல் வழியே வேற்று நாட்டு மரக்கலங்கள் வந்தன.

(ii) மரக்கலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தும், வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்” – பட்டினப்பாலை 126 – 132
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

Question 3.
காவிரிப் பூம்பட்டினத்து துறைமுகம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • பல நாடுகளில் இருந்து மரக்கலங்கள் வந்தன.
  • ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள் முற்றத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • சுங்க வரி வசூலிக்கப்பட்டன.
  • வரி வசூலித்த பின் புலிச்சின்னம் பொறித்தனர்.
  • வரி ஏய்ப்பவர்களை கண்காணிக்க வலிமை மிக்கவர்கள் இருந்தனர்.

Question 4.
ஷேக்ஸ்பியரின் நாடகம் வழி ஔவையாரின் நல்வழியை ஒப்பிட்டு நிதி மேலாண்மையை விளக்குக.
Answer:

  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • வரவு குறைவு செலவு அதிகம் நீடித்தது.
  • உதவியாளர் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தான்.
  • கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்தார்கள்.
  • அதற்கும் அவன் வருந்தவில்லை .
  • தன்னிடம் விருந்து உண்டவர்கள் உதவுவார்கள் என்று எண்ணினான். அதுவும் பொய்யானது.
  • சேவகர்கள் நான்கு திசை சென்றும் வெறும் கையோடு திரும்பினர்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
  • மனித இனத்தையே வெறுக்கிறான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

இதையே ஔவையார் ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழி பிறப்புக்கும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. வரவுக்கு அதிகம் செலவு செய்து, மானம் அழிந்து மதிக்கெட்டு, எந்தத் திசை போனோம் என்று தெரியாமல் திருடனாய், தீயவனாய் வாழும் நிலை ஏற்படும் என்று ஷேக்ஸ்பியர் நாடகத்தோடு ஒப்பிடுகிறார்.

Question 5.
மேலான மேலாண்மை என்பது என்ன?
Answer:

  • மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிவதன்று.
  • நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக் கொண்டே இருப்பது.
  • ஏற்கனவே தயாரித்த அறிவுரைகளை வைத்து புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது.
  • முன் அனுபவம் என்பது எதிர்மறை ஆகிவிட்டது.
  • அனுபவசாலிகள் செக்குமாடாகத்தான் இருப்பார்கள்.
  • நமக்குத் தேவை ஜல்லிக்கட்டுக் காளைகள்.

Question 6.
வெ. இறையன்பு குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வெ.இறையண்பு
பதவி : இந்தி ஆட்சிப்பணி (தமிழ்நாடு)
சிறப்பு : ஐ.ஏ.எஸ். தேர்வு தமிழில் எழுதி வெற்றிப் பெற்றவர்
நூல்கள் : வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ். வெற்றிப்படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப்பயணம், மூளைக்குள் சுற்றுலா
சிறப்புகள் : வாய்க்கால் மீன்கள் : 1995 – தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற நூல் மற்றும் பட்டிமன்ற நடுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.7 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.7 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 1.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 1
அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம்
மற்றைய எல்லாம் பிற.
Answer:
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 2
Answer:
ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. சீரியர் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 3
Answer:
இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

Question 4.
அல்லல் படுப்பதூம் இல் – எவரோடு பழகினால்?
அ) வான்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர்
ஈ) தீயினத்தார்
Answer:
ஈ) தீயினத்தார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 5.
திண்ணியர் என்பதன் பொருள் தருக.
அ) அறிவுடையார்
ஆ) மன உறுதியுடையவர்
இ) தீக்காய்வார்
ஈ) அறிவினார்
Answer:
ஆ) மன உறுதியுடையவர்

Question 6.
ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்
Answer:
இ) தூதுவர்

Question 7.
பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று – (i) தீக்காய்வார்
ஆ) செத்தார் – (ii) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது – (iii) கள் உண்ப வர்
ஈ) இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – (iv) உடன்பாடு இல்லாதவர்

அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1

Question 8.
நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை?
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
Answer:
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்

Question 9.
எளியது, அரியது எது?
அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
Answer:
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

குறுவினா

Question 1.
மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
Answer:

  • “சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” ,,,,,,,,,,,
  • மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.
  • மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

Question 2.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:
உவமை : ஒருவரின் எளிய தோற்றத்தைக் கண்டு இகழக் கூடாது.
உவமேயம் : பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி இன்றியமையாதது.
பொருத்தம் : சிறிய அச்சாணிதான் என்று எளிமையாக எண்ணக் கூடாது. அதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது.

Question 3.
மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது ?
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” ,,,

  • நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்.
  • மற்றவை எல்லாம் பயன்படாது.

Question 4.
நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார் ?
Answer:
“நஞ்சு உண்பார் கள் உண்பவர்”
கள் உண்பவர் நஞ்சு உண்பவரே என வள்ளுவர் கள்ளுண்பவரை இடித்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 5.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:

  • “பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்” நான் அரசருடன் பழமையான நட்பு உடைவராய் உள்ளேன்.
  • இத்தகைய எண்ணத்துடன் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமையானது துன்பத்தைத் (289) தரும்.

Question 6.
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க”
அஞ்சத்தகாதன :
வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்சத் தேவையில்லை.

அஞ்சத்தகுந்தன :
அறிவுடையார் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Question 7.
வறுமையும் சிறுமையும் தருவது எது?
Answer:
ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதுதான் வறுமையும் சிறுமையும் ஆகும்.

Question 8.
நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.
Answer:
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

பிடித்தற்குக் காரணம் :
ஒருவனுக்கு மூன்று காலத்திலும் உதவக்கூடிய கல்வியினை செய்ந்நன்றி என்ற வினைத்தொகையால் குறிப்பிட்டு, மறந்தவனுக்கு தப்பிப்பிழைக்க வழியில்லை என்று வள்ளுவன் வார்த்த வடிவம் அதிசயத்தக்கது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 9.
உலகத்தில் சிறந்த துணையாகவும், பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.
  • தீய இனத்தைவிடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.

Question 10.
இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை
சொல்லுதல் – தொழிற்பெயர்

Question 11.
கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக.
Answer:
நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

Question 12.
பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக
Answer:
பெருந்தேர் – பெருமை + தேர்
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு பெரு + தேர் என்றானது.
இனமிகல் என்ற விதிப்படி, பெருந்தேர் எனப் புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

சிறுவினா

Question 1.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று :
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – குறட்பா.

உவமை : தீயில் குளிர் காய்பவர் போல.
உவமேயம் : அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.

அணிப்பொருத்தம்:
அரசனைச் சார்ந்து இருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை எனப்படும்.

Question 2.
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கருதுவன யாவை?
Answer:
“அறிவற்றம் காக்கும் கருவி செறுவாருக்கு
உள் அழிக்கல் ஆகா அரண்.”

  • அறிவு ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி.
  • மேலும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”

  • மனத்தினை, அது போகும் போக்கில் செல்ல விடாமல் தடுப்பது அறிவு.
  • மேலும் தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதும் அறிவு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும். இவையாவும் வள்ளுவன் வகுத்த அறிவின் மேன்மைகள் ஆகும்.

Question 3.
எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
Answer:
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

அணிவிளக்கம் :
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறு
உவமேயம் : நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
உருபு : மறைந்துள்ளது.

பொருத்தம்:
உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அதுபோல கள் உண்பவரும் நஞ்சு உண்பவருக்குச் சமமே என்பதை விளக்குவதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

Question 4.
மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”

மனவலிமை :
செயலினது வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

”சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
எளிது – அரிது : ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எளிது. ஆனால், சொல்லியபடிச் செய்து முடிப்பது அரிது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெரின்”

எண்ணத்தில் வலிமை :
ஒரு செயலை எண்ணியவர் எண்ணத்தில் வலிமை உடையவராக இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே செய்து முடிப்பர்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.”

உருவம் பொருட்டல்ல :
ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழ்ந்துரைக்கக் கூடாது. உருண்டு ஓடும் பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல இன்றியமையாதவராக அவர் இருக்கலாம்.

Question 5.
சிற்றினம் சேராமையும் நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
Answer:
“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல்”

இனத்தால்தான் தகுதி :
மக்களுக்கு உணர்ச்சி மனத்தின் வழி உண்டாகும். இவன் இப்படிப்பட்டவன் என்று அவன் சார்ந்திருக்கும் இனத்தை வைத்தே உலகம் சொல்லும்.
”நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லர் படுப்பதூஉம் இல்.”

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

நல்லவர் தீயவர் நட்பு :
நல்லவர் நட்பு போல சிறந்த துணை இல்லை; தீயவர் நட்புபோல் துன்பம் தருவதும் இல்லை.

Question 6.
வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைமைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”

வாள்போலும் பாம்பு போலும் பகை :
வாளினைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவரிடம் அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் உறவினர் போலப் பழகும் பகைவருக்குப் பயப்பட வேண்டும்.

Question 7.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”

சூதின் சிறுமை :
இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்”

சூதால் செல்வம் அழியும் :
தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண் பும் கெட்டழியும்.

கள்ளும் விஷமும் ஒன்றே :
உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண் 11 பவர் விஷம் உண்பவர் ஆவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

திருத்தமுடியாது :
கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.

நெடுவினா

Question 1.
“அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்” என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :
”அறிவுற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.”
அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”
மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”
பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.

Question 2.
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:
தொடக்கமாக,
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடைமை :

  • இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
  • மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும்.
  • ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

மன உறுதி வேண்டும் :
அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.

கள்உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண் ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.

இலக்கணக் குறிப்பு

யார் யார் – அடுக்குத்தொடர்
சொல்லுதல் – தொழிற்பெயர்
அஞ்சுக – வியங்கோள் வினைமுற்று
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
தீத்துரீஇ – சொல்லிசை அளபெடை
செல்வமும் பண்பும் – எண்ணும்மை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 4

புணர்ச்சி விதி

1. துணையில்லை – துணை + இல்லை

  • இஈஐ வழியவ்வும் என்ற விதிப்படி, துணை + ய் + இல்லை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + இ = யி) துணையில்லை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

2. உறைந்தற்று – உறைந்து + அற்று

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, உறைந்த் + அற்று என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (த் + அ = த) உறைந்தற்று என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி

Question 2.
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆனப் பெறின்’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி

Question 3.
‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) இல்பொருள் உவமையணி
ஆ) தொழில் உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) தொழில் உவமை அணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 4.
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
Answer:
அ) உவமை அணி

Question 5.
கள் உண்பவர் …………… உண்ப வர் என்கிறார் வள்ளுவர்.
அ) அமுது
ஆ) நஞ்சு
இ) பழங்கஞ்சி
ஈ) ஊன்
Answer:
ஆ) நஞ்சு

சிறுவினா

Question 1.
சொற்பொருள் பின்வரு நிலையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
செய்யுளில் முன்னர் வந்தச் சொல் அதேப் பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

சான்று :
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

விளக்கம் :
இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருள் பின்வரும் நிலையணி ஆகும். எந்த ஒரு பொருள் பற்றி எவர் கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அந்தப் பொருளில் உள்ள உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.

Question 2.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியாற்
திண்ணியர் ஆகப் பெறின். – இப்பாடலில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி பயின்று வந்துள்ளது.

அணி விளக்கம் :
செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.

விளக்கம் :
இப்பாடலில் ‘எண்ணிய’ என்றச் சொல் ‘நினைப்பது’ என்ற பொருளில் பலமுறையில் வந்துள்ளது. எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே அடைவர் என்று ஆகும்.

Question 3.
உவமையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உரும உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமையணி ஆகும்.
சான்று :
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

உவமை : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
உவமேயம் : குடங்களுள் பாம்போடு
உருபு : அற்று (வெளிப்படை)

பொருத்தம் :
உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.6 காப்பிய இலக்கணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.6 காப்பிய இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 1.
சிலப்பதிகாரப் பாடப்பகுதியில் அமைந்துள்ள காப்பிய இலக்கணக்கூறுகளைக் கட்டுரையாக எழுதுக.
Answer:
வியப்பு:
அரங்கேற்ற காதை நிகழ்வுகளின் போக்கு:
மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமைத் தவறாது, பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைபிடித்து நன்மை பெறுகவும் தீமை நீங்கவும் வேண்டி ‘ஓரொற்றுவாரம்’ ‘ஈரொற்று வாரம்’ என்னும் தெய்வப் பாடலை முறையாகப் பாட பாடலுக்கு ஏற்ப இசை அமைக்க மாதவி ஆடியதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

கொடை:
மன்னன் பட்டமும் பரிசும் மாதவிக்கு அளித்தது:

  • மாதவியின் ஆடல் கண்டு அகமகிழ்ந்தான் மன்னன்.
  • மாதவிக்கு தலைக்கோல் அரிவை’ என்னும் பட்டத்தை வழங்கினான்.
  • ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னன் பரிசாக வழங்கினான்.
  • பாடப்பகுதிக்கும் காப்பிய இலக்கணத்திற்கும் உள்ள பொருத்தம்

பெருமிதம்:
அரங்கேற்றுகாதையில் தலைமகளாக உள்ள மாதவியின் நாட்டியம், அரங்கேற்றம் போன்றவற்றைக் கண்டு பரிசு பெறுதல், இன்பம் காணுதல் ஆகியவைக் காப்பிய இலக்கணத்திற்கு
பொருத்தமாக உள்ளது.

மன்னனின் போர்:
சோழ மன்னன் பகைமன்னனுடன் நிகழ்த்திய போரில் பறித்த வெண்கொற்றக் கொடையின் : காம்பில் செய்யப்படுவது தலைக்கோல். இவ்விடத்தில் போர் வெற்றிச் செய்தி காணப்படுகிறது. இவ்வெற்றிச் செய்தி காப்பிய இலக்கணத்திற்குப் பொருத்தமானது.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
அ) சிவஞான முனிவர்
ஆ) மயிலை நாதர்
இ) ஆறுமுக நாவலர்
ஈ) இளம்பூரணர்
Answer:
ஆ) மயிலை நாதர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 2.
கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

Question 3.
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :
அ) காதை – 1. கந்தபுராணம்
ஆ) சருக்கம் – 2. சீவகசிந்தாமணி
இ) இலம்பகம் – 3. சூளாமணி
ஈ) படலம் – 4. சிலப்பதிகாரம்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 4.
தவறான இணையைத் தேர்க :
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 1
Answer:
அ) விருத்தப்பா – நாலடியார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

குறுவினா

Question 5.
காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?
Answer:
காப்பியம் இரு வகைப்படும். அவை, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம்.

ஐம்பெருங்காப்பியங்கள் :
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி.

ஐஞ்சிறுகாப்பியங்கள் :
நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்.

Question 6.
காப்பியத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
இதிகாசம், புராணம், இலக்கியம், சரிதம், காவியம் முதலான பெயர்கள் காப்பியத்தின் வேறு பெயர்கள்.

Question 7.
காப்பியத்தின் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுது.
Answer:
காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியத்தின் சிற்றுறுப்புகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 8.
பாவகம் – விளக்குக.
Answer:

  • காப்பியத்தின் பண்பாகப் பாவகம் என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
  • காப்பியக் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தைப் பாவகம் என்பர்.
    எ.கா: பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது கம்பராமாயணத்தின் பாவகம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) காதை – 1. சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) சருக்கம் – 2. கந்தபுராணம், கம்பராமாயணம்
இ) இலம்பகம் – 3. சீவக சிந்தாமணி
ஈ) படலம் – 4. சூளாமணி, பாரதம்
உ) காண்டம் – 5. சிலப்பதிகாரம், மணிமேகலை

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4, 5
இ) 4, 3, 2, 1, 5
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 2.
EPOS என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்
அ) சொல் அல்லது பாடல்
ஆ) எழுத்து அல்லது கவிதை
இ) வாக்கியம் அல்லது வரலாறு
ஈ) பக்தி அல்லது பண்பாடு
Answer:
அ) சொல் அல்லது பாடல்

Question 3.
நன்னூலுக்கு உரை எழுதியவர்
அ) மயிலைநாதர்
ஆ) சி.வை.தாமோதரனார்
இ) சேனாவரையர்
ஈ) இளம்பூரணர்
Answer:
அ) மயிலைநாதர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 4.
‘பஞ்சகாப்பியம்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல்
அ) நன்னூல்
ஆ) தமிழ்விடுதூது
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) தமிழ்விடுதூது

Question 5.
சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பன அறிய செய்வது
அ) மயிலைநாதரின் நன்னூல் உரை
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை

Question 6.
வடமொழியில் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
அ) தண்டியலங்காரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 7.
தண்டியலங்காரம் காப்பிய வகை ……………. பகுக்கின்றது.
அ) இரண்டாக
ஆ) மூன்றாக
இ) நான்காக
ஈ) ஐந்தாக
Answer:
அ) இரண்டாக

Question 8.
‘பாவிகம் என்பது காப்பிய பண்பே’ என்று கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) மாறனலங்காரம்
Answer:
இ) தண்டியலங்காரம்

Question 9.
பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
Answer:
இ) சீவகசிந்தாமணி

Question 10.
‘பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப்’ என்பது …………. பாவிகம்.
அ) கம்பராமயணத்தின்
ஆ) சிலப்பதிகாரத்தின்
இ) சீவகசிந்தாமணியின்
ஈ) குண்டலகேசியின்
Answer:
அ) கம்பராமயணத்தின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 11.
தண்டியலங்காரம் கூறும் ‘தொடர்நிலை’ என்னும் செய்யுள் வகை ………….. குறிப்பதாகும்.
அ) சிற்றிலக்கியத்தை
ஆ) அக இலக்கத்தை
இ) காப்பியத்தை
ஈ) புற இலக்கியத்தை
Answer:
இ) காப்பியத்தை

Question 12.
பொருள்தொடர்நிலைக்கான நூல்கள்
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) அந்தாதி இலக்கியங்கள்
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

Question 13.
விருத்தம் என்னும் ஒரேவகைச் அசெய்யுளில் அமைந்தவை
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை
இ) குண்டலகேசி, வளையாபதி
ஈ) இராவணகாவியம்
Answer:
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

Question 14.
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) குண்டலகேசி
ஈ) வளையாபதி
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 15.
‘அந்தாதி இலக்கியங்கள்’, செய்யுள் வகைகளில் ……….. சான்றாக அமைகின்றன.
அ) பொருள் தொடர்நிலைக்கு
ஆ) சொல்தொடர்நிலைக்கு
இ) தொகைநிலைக்கு
ஈ) முத்தகத்துக்கு
Answer:
ஆ) சொல்தொடர்நிலைக்கு

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) பாரதியார் – 1. பாஞ்சாலி சபதம்
ஆ) பாரதிதாசன் – 2. மருமக்கள் வழி மான்மியம்
இ) கவிமணி – 3. பாண்டியன் பரிசு
ஈ) கண்ண தாசன் – 4. மாங்கனி

அ) 1, 3, 2, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2,1, 3, 4
Answer:
அ) 1, 3, 2, 4

Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) கவியோகி சுத்தானந்த பாரதியார் – 1. ஏசுகாவியம்
ஆ) புலவர் குழந்தை – 2. பராசக்தி மகாகவியம்
இ) பாரதிதாசன் – 3. இராவண காவியம்
ஈ) கண்ண தாசன் – 4. இருண்டவீடு

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 3, 4, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 18.
‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியவர்
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கவிமணி
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஆ) கண்ண தாசன்

குறுவினா

Question 1.
காப்பியம் – பெயர்க்காரணம் கூறுக.
Answer:
ஆங்கிலத்தில் EPIC என்பர்.

  • EPOS என்ற கிரேக்கச் சொல். EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பர்.
  • வடமொழியில் காவியம் என்பர்.
  • காப்பு & இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது இயம்புவது.
  • மொழியைச் சிதையாது காப்பதும் என்பர்.

Question 2.
காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?
Answer:

  • பொருட்டொடர் நிலைச் செய்யுள்
  • விருத்தச் செய்யுள்
  • கதைச் செய்யுள்
  • அகலக் கவி
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
  • தொடர்நடைச் செய்யுள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 3.
காப்பிய அமைப்பு முறையை விளக்கிப் பட்டியல் இடுக.
Answer:
காப்பியத்தின் சிற்றுறுப்புகள் :
காதை, சருக்கம், இலம்பகம், படலம் பல சிற்றுறுப்புகள் தொகுதி காண்டம் என்பர்.

  • காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சருக்கம் – சூளாமணி, பாரதம்
  • இலம்பகம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
  • காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

Question 4.
தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்தை விளக்குக.
Answer:
வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணி இலக்கண நூல். இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனப் பிரிக்கப்பட்டு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
காப்பியங்கள் :
‘ஒரே வகைச் செய்யுளாலும்
பல வகைச் செய்யுளாலும்’ ஆகும்.

Question 5.
சிறுகாப்பியத்திற்குரிய இலக்கணம் தருக.
Answer:
அறம், பொருள், இன்பம், வீடு நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறு காப்பியம் ஆகும்.

Question 6.
பாவிகம் என்றால் என்ன?
Answer:
காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தே பாவிகம் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

Question 7.
கம்பராமாணத்தின் பாவிகம் யாது?
Answer:
‘பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடும் என்பதே ஆகும்.

Question 8.
சிலப்பதிகாரத்தின் பாவிகம் கூறுக.
Answer:
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் – என்பதேயாகும்.

Question 9.
காப்பியம் என்பது யாது?
Answer:

  • ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும்.
  • எளிய நடை, இனிய கதை, அழகியல், கற்பனை ஆகிய ஒரு சேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.

Question 10.
தொடர்நிலை என்பது யாது?
Answer:
ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகை தொடர்நிலை ஆகும்.

Question 11.
தொடர்நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? சான்றுடன் விளக்குக.
Answer:
இரண்டு வகைப்படும். அவை: பொருள் தொடர்நிலை, சொல் தொடர்நிலை.
பொருள் தொடர்நிலை : சிலப்பதிகாரம், கம்பராமாயணம்.
சொல் தொடர்நிலை : அந்தாதி, இலக்கியங்கள்.

Question 12.
தண்டியலங்காரம் – குறிப்பு வரைக.
Answer:

  • அணி இலக்கணத்தைக் கூறும் நூல். வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என நான்கு வகைப்படும்.
  • தொடர்நிலை என்னும் வகை காப்பியத்தைக் குறிக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

சிறுவினா

Question 1.
பெருங்காப்பியத்திற்குண்டான இலக்கணம் தருக.
Answer:

  • வாழ்த்துதல் தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல், மூன்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ வருதல் வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் திரண்ட பொருளாக இருத்தல் வேண்டும்.
  • தன்னிகர் இல்லாத தன்மைக் கொண்டவனாகத் தலைவன் இருத்தல் வேண்டும்.
  • 18 உறுப்புகளும், இயற்கை வருணனைகள் அமைதல் வேண்டும்.
  • திருமணம், மக்கட்பேறு, முடிசூடல் நிகழ்வு இருத்தல் வேண்டும்.
  • அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது, போர் வெற்றி நிகழ்வுகள் இருத்தல் வேண்டும்.
  • கதைப்போக்கு வரிசைப்படி அமைதல் வேண்டும்.
  • உட்பிரிவு சருக்கம், இலம்பகம், காதை, பரிச்சேதம் என்ற பெயரில் அமைதல் வேண்டும்.
  • எண் வகைச்சுவை மெய்ப்பாட்டுக் குறிப்புகள் அடைதல் வேண்டும்.
    இவையே பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணம் ஆகும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

வை.மு. கோதைநாயகி (1901-1960)

ஐந்தரைவயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர். தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கு புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, : நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்’) ஆவார்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 2
இவர் ‘ஜகன் மோகினி’ என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.

தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குடும்பமே உலகம்’ என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின் மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.

அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :
“என்ன வேடிக்கை ! அடிக்கடி பாட்டி உலகானுபவம்,,,, உலகம் பலவிதம் ,,,, லோகோ பின்னருசி’,,, என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே ,,, பாட்டி சொல்லிய வசனங்களை விடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள்,,,,,

நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே! ,,, என்ன உலக விசித்திரம்!,,, என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.”
(‘தபால் வினோதம்’ குறுநாவலில் இருந்து)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

வினாக்கள் :
1. வை. மு. கோதைநாயகியின் முதல் நூல் எது?
2. தொடர்ந்து உறுப்பிலக்கணம் தருக: தொடர்ந்து
3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக.
4. பிரித்தறிக: பங்கேற்று
5. புணர்ச்சி விதி கூறுக: தன்னுடைய
Answer:
1. இந்திர மோகனா
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 3
3. போலவே (போல)
4. பங்கேற்று – பங்கு + ஏற்று
5. தன்னுடைய – தன் + உடைய

  • தனிக்குறில் முன் ஒன்று உயிர்வரின் காட்டும் என்ற விதிப்படி, தன்ன் + உடைய என்றானது.
  • உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ன்+உ=னு) தன்னுடைய என்று புணர்ந்தது.

தமிழாக்கம் தருக.

Popular as the ‘Cultural Capital’ of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.

தமிழாக்கம்:
இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான / கோவில்களுக்கும் மற்றும் கட்டடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது. குறிப்பாக, தஞ்சாவூர் ஓவியங்கள் சோழவம்சத்தின் கலாச்சாரங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல : – வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் – உருவங்கள் கொண்டதாகப் புதிய பரிணாமம் பெற்றுள்ளன.

கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச் சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுது.

எ.கா: கபிலன் திறமையானவர் என்று ………….. (குமரன்) தெரியும்.
கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.

1. நேற்று முதல் …………… (அணை ) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
2. உங்களுக்கு …………… (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.
3. முருகன் …………. (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை .
4. நம்முடைய ……….. (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
Answer:
1. அணையின்
2. யாரால்
3. வேகமாகச்
4. தேவையின்

பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்க.

எ.கா: களம் – கலம் : போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்குக் கலத்தில் நீர் தரப்பட்டது.
வலம், வளம் : ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.

1. புல் – புள்
புல் தரையில் புட்கள் (புள்கள்) கூட்டம் அமர்ந்து விளையாடின.

2. உழை – உளை
தனது முதலாளிக்காக உழைக்கும் குதிரையின் உளை (பிடரி மயிர்) மிகவும் அழகாக இருக்கிறது.

3. கான் – காண்
கானகத்தில் வாழும் விலங்குகளைக் காண்பது மகிழ்ச்சி தரக்கூடியது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

4. ஊண் – ஊன்
ஊண் (மாமிசம்) உணவை உண்டு ஊனை (உடலை) வளர்ப்பது பாவம்.

5. தின்மை – திண்மை
திண்மை (வலிமை) கொண்ட ஒருவன் எளியவருக்கு தின்மை (தீமை) செய்தல் மறமாகாது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 4
உன்னை நீயே உற்றுப்பார்
நீ ஒரு நிலா,
கூர்மையான முட்கள்
மூடியிருக்கின்றது உன்னை
அவைகளை விலக்கி விட்டுப்பார்
உன்னை சுவாசம் செய்ய
நந்தவனமாய் நான்

இலக்கிய நயம் பாராட்டுதல்

அந்தியிருளாற் கருகும் உலகம் கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ ? – பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

தலைப்பு : வெண்ணிலவு.
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : பாராதிதாசன் (கனகசுப்புரத்தினம்)
பெற்றோர் : கனகசபை – இலக்குமி
பிறப்பு : 29-4-1891
சிறப்பு : புரட்சிக்கவி
நூல்கள் : குடும்பவிளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், அழகின் சிரிப்பு… இன்னும் பல.

திரண்டக் கருத்து:
மாலை இருளினால் கருமையாகும் உலகினைக் கண்டேன். அதுபோல வானமும் இருளாவதைக் கண்டேன். திசைகள் எட்டும் இருளில் மறைவதைக் கண்டேன். பின்னர் கருமையான இருள் சிரிப்பதில்லை. பெருஞ்சிரிப்பு ஒளியின் முத்துக்களாகிய முழு நிலவே நீதான் அழகெல்லாம் ஒன்று சேர்த்துக் காட்சி தருகிறாய். உலகிற்குக் குளிர் ஏற்றி, ஒளியும் ஊட்டுகிறாய். இயற்கையாகிய அன்னை தனது எழில் வாழ்வைச் சித்தரிக்கும் அழகோ நீ நிலவே – என்கிறார் பாரதிதாசன்.

மோனை நயம் :
நாட்டுக்கு அழகு சேனை
பாடலுக்கு அழகு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

சான்று :
ந்தியிருளால்
வ்வாறே
பிந்தியந்த
பெருஞ்சிரிப்பின்

எதுகை நயம் :
பெண்ணுக்கு அழகு புன்னகை
பாடலுக்கு அழகு எதுகை
பாடல் அடிகளின் சீர்களின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை .

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

சான்று :
ந்தியிருளால்
பிந்தியந்த
சிந்தாமல்
சிந்தாவென்று

அணி நயம் :
இயற்கை அன்னைத் தனது எழில் வாழ்வைக் காட்டவே நிலவாகச் சித்தரித்துக் காட்டுகிறாள் : என்னும் அடிகளில் இயற்கையை உயர்வாகப் பாடியிருப்பதால் உயர் வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது.

கற்பனை நயம் :
கவிஞர்க்குக் கற்பனை கைவந்தக் கலை. இருளால் மூழ்கும் இவ்வுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன் . வானில் தோன்றும் வெண்ணிலவை இயற்கையின் அழகு என்று வர்ணிக்கிறார் பாரதிதாசன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

நான்கரைச் சக்கர வடிவம்

மேனி திடமே விடுமே!
மேடு விளையாடுவமே!
மேவ டுவோட சாருமே!
மேரு சாதுதூ தினிமே!
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 5
விளக்கம் :
காடு மேடு என்று பாராமல் நன்றாக விளையாடுவோம். அதனால், நம் உடம்பு (மேனி) திடமாகும். மேவிவரும் நோய்களும் (வடு) ஓட, இமயமலை (மேரு) போன்ற சான்றோர் பாராட்டும்படியான செய்தியும் (தூது) இனி மேவிவரும்

உரிய இடத்தில் எழுதுக.

தேடு தேனீயோ லாவதே
தேவ லாமென நாடுதே !
தேடு நாநய மாடுதே!
தேடு மாநிலை தேடுதே !
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 6

விளக்கம் :
பூக்கள் தோறும் தேனைத் தேடி அலைகின்ற தேனீயைப் போல, சுறு சுறுப்பாகும் நிலைதான் சிறந்ததென்று நாட வேண்டும். எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். இவ்வாறிருந்தால் உயர்ந்தோர் நம்மைத் தேடிவருவர்.

கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன் மீது பூசினேன். ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை . இரவில் அதன் மெல்லிய விம்மல் ஓசை கேட்கும் ……

நாம் ஒரு நாள் விம்மலோசைக் கேட்டவுடன் நான் எழுந்து பார்த்தேன் மேரியை. என் படுக்கை அறையின் ஒரு மூலையில் கிடந்தாள் மேரி. மெதுவாக மேரியின் அருகில் சென்றேன். என் வருகையைச் சற்றும் எதிர்பாராத மேரி அழுகையை நிறுத்திக் கொண்டது. முதலில் நான்தான் மேரியிடம் பேச்சுக் கொடுத்தேன். உனக்கும் பேசத் தெரியுமா, அழக்கூடத் தெரியுமா என்றேன்.

எனக்கும் உணர்வுகள் உண்டு. நானும் பேசுவேன் என்றது மேரி. நீ மனிதராக இருப்பதால் உனக்கு எல்லாம் கிடைக்கிறது. மரமாக நான் இருப்பதால் கேட்பாரற்றுக் கிடக்கிறேன் என்றது மேரி. உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று மேரியிடம் கேட்டேன். முதலில் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்கள். நாங்கள் மனிதர் வாழ நல்ல காற்றினைத் தருகிறோம். எங்களிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் நல்ல நாட்டு மருந்து ஆகும். அப்படியிருக்க எங்களை வெட்ட மனிதருக்கு அரக்கக் குணம் எப்படி வந்தது என்று கேட்டது மேரி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

இனிமேல் எங்களை வெட்டமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அழுகையை நிறுத்துவேன் என்றது மேரி. மேலும் எனது பாராம்பரிய கசப்பு வாசனையைப் போக்க என் மீது ஏதேதோ தடவுகிறாய். என்னிடமிருந்து எனது மணத்தைப் பிரிக்கமாட்டேன் என்று உத்திரவாதம் கொடு என்றது மேரி. அத்தனைக்கும் ஒப்புக் கொண்ட நான் மேரியிடம் வாக்குறுதி அளித்தேன். இதற்கிடையே என்னை யாரோ அழைப்பது போல் இருந்தது. விழித்துப் பார்த்தேன். அம்மா அழைத்திருந்தாள். கனவாக இருந்தாலும் மேரிக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்.

வேம்பு தரும் நற்காற்று
வேம்புக்குத் தருவோம் பாதுகாப்பு.

அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரை விமர்சனத்தை அப்படத்தின் இயக்குநருக்கு கடிதமாக எழுதுக.

20-6-2019
திருநெல்வேலி.

உயர்திரு இயக்குநர் அவர்களுக்கு,

வணக்கம்.

சென்ற வாரம் தாங்கள் இயக்கிய படம் பார்த்தேன். படங்களுக்கு இப்போதெல்லாம் படங்களுக்கு வசனங்களை விட விமர்சனங்களே பக்க பலமாக இருக்கிறது. இதோ எனது விமர்சனம்.

மாணவர்களுக்கு ஊக்கம் தரும் படம். அம்மா கதாபாத்திரம் – உணவகத்தில் வேலை பார்க்கும் பெண். மகளுக்குத் தெரியாது என்ன வேலை என்று. மகள் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். அனைத்துப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண்கள். கணிதத்தில் மிகக் குறைவு. அம்மா கேட்டாள் காரணத்தை, நீ சொல்லிக் கொடு என்றாள் மகள். மகள் வகுப்பில் அம்மா சேர்ந்து படிக்கிறாள் சலனமின்றி.

நல்லா படிக்கும் மாணவன் அம்மாவிற்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கிறான். கணிதத்தில் நல்ல மதிப்பெண் அம்மாவுக்கு. மகளின் வேண்டுகோள் நீ பள்ளிக்கு வரவேண்டாம். இனிமேல் நான் நன்றாகப் படிக்கிறேன் என்றாள் மகள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

இறுதியில் மகள் (இ.ஆ.ப) மாவட்ட ஆட்சியர் ஆகிறாள். ஒரு பேட்டியில் கணிதத்தில் உச்சத்தில் இருக்கும் நீங்கள் ஆட்சியர் பணிக்கு வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டதற்கு, இது என் அம்மாவின் ஆசை. நான் வேலைக்காரி ஆகக்கூடாது. இதுவே மகளின் பதில்.

மாணவர் மத்தியில் ஒரு உற்சாகம் ஊட்டும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது. பாராட்டுக்கள். கீதை உபதேசம் இல்லை இது. அம்மா உபதேசம். அம்மா கணக்குத் தப்பாது. அது லாப கணக்குதான். 80/100 மதிப்பெண்.

கீழ்க்காணும் நான்கு சொற்களைச் சிறு பத்தியாக மாற்றுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 7

நிற்க அதற்குத் தக

குறிப்பேடுகள் உருவாக்குதல், சேகரித்தல், ஏதேனும் கலை பயிலல் :
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 8
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.6 காப்பிய இலக்கணம் 9

படிப்போம் பயன்படுத்துவோம் (திரைத்துறை)

1. Artist – கவின் கலைஞர்
2. Sound-Effect – ஒலி விளைவு
3. Cinematography – ஒளிப்பதிவு
4. Newsreel – செய்திப்படம்
5. Animation – இயங்குபடம்
6. Multiplex compled – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்