Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 1.
பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 2
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 3

Question 2.
காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
Answer:

தூத்துக்குடி,
18 ஜுலை 2019.

முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தகாரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.

உனது பொன் எழுத்துகளால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய்.

ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் 12 வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.

என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.

நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.

இப்படிக்கு,
பாரதிநேசன்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
Answer:
மொழிப்பற்று :
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

சமூகப்பற்று :
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

Question 2.
“சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 8
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 6

நன்றியுரை

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று”

என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.

எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.

சூர்யா – இளமைத்தமிழே இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி.

எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி, இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
அ) ஆலயம்
ஆ) தொழிற்சாலை
இ) பள்ளிக்கூடம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பள்ளிக்கூடம்

Question 2.
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
அ) இளசைமணி
ஆ) ரா.அ. பத்மநாபன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
ஆ) ரா.அ. பத்மநாபன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 3.
கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.
அ) இரண்டு கருத்தும் தவறு
ஆ) இரண்டு கருத்தும் சரி
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் தவறு

Question 4.
சரியானதைத் தேர்க.
அ) முரசுப்பாட்டு – குந்திகேசவர்
ஆ) நெல்லைத் தென்றல் – வ.உ.சிதம்பரனார்
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
ஈ) வம்சமணி தீபிகை – சு. நெல்லையப்பர்
Answer:
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்

Question 5.
சரியானதைத் தேர்க.
அ) கவிகேசரி சாமி தீட்சிதர் – பாரதி கடிதங்கள்
ஆ) இளசைமணி – சூரியோதயம்
இ) கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்
Answer:
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

Question 6.
பொருந்தாததைத் தேர்க.
அ) இளசை மணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
ஆ) வம்சமணி தீபிகை – கவிகேசரி சாமி தீட்சிதர்
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்
ஈ) பாரதி வாழ்த்து – பரலி சு. நெல்லையப்பர்
Answer:
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 7.
பொருத்துக.
அ) வம்சமணி தீபிகை – 1. சு. நெல்லையப்பர்
ஆ) பாரதி கடிதங்கள் – 2. ரா.சு. பத்மநாபன்
இ) நெல்லைத் தென்றல் – 3. கவிகேசரி சாமி தீட்சிதர்

அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
ஆ) 3, 2, 1

Question 8.
பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

Question 9.
பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
ஆ) நெல்லை , 14 ஜீலை 1914
இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914
ஈ) காரைக்கால், 19 ஜீலை 1915
Answer:
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

Question 10.
நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?
அ) சிவன்
ஆ) முருகன்
இ) பராசக்தி
ஈ) துர்க்கை
Answer:
இ) பராசக்தி

Question 11.
நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?
அ) பெற்றோரைக் காப்பதை
ஆ) விடுதலைக்குப் போராடுவதை
இ) தமிழ் வளர்ப்பதை
ஈ) சமூக இழிவை களைவதை
Answer:
இ) தமிழ் வளர்ப்பதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 12.
‘தம்பி-உள்ளமே உலகம்’ என்று யார் யாருக்குக் கூறியது?
அ) அறிஞர் அண்ணா , கலைஞருக்கு
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
இ) மு.வ., இளைஞர்களுக்கு
ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு
Answer:
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

Question 13.
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு’ என்பது யாரை எதைக் குறிக்கிறது?
அ) தமிழை
ஆ) நெல்லையப்பரை
இ) குயிலை
ஈ) இளைஞர்களை
Answer:
ஆ) நெல்லையப்பரை

Question 14.
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்
அ) நெல்லையப்பர்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) பாரதியார்

Question 15.
நெல்லையப்பரைப் பாரதி ………….. என்று கூவு என்கிறார்.
அ) வாழ்க வாழ்க
ஆ) தொழில்கள் தொழில்கள்
இ) மனிதர்கள் மனிதர்கள்
ஈ) வெல்க வெல்க
Answer:
ஆ) தொழில்கள் தொழில்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 16.
ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன
அ) ஆணும் பெண்ணும்
ஆ) அறிவும் அழகும்
இ) வாழ்வும் தாழ்வும்
ஈ) பிறப்பும் இறப்பும்
Answer:
அ) ஆணும் பெண்ணும்

Question 17.
தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ……………… லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.
அ) நவீன கலைகள்
ஆ) விளையாட்டு
இ) பாரம்பரிய கலைகள்
ஈ) அறிவியல் கல்வி
Answer:
அ) நவீன கலைகள்

Question 18.
வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர் ………… வெளியிட்ட ஆண்டு …………….
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி விசுவநாதன், 2004
Answer:
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

Question 19.
வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?
அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
ஈ) பாரதியின் வாழ்ககை வரலாற்றைக் கூறுவது
Answer:
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 20.
வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர் ………..
அ) பாரதியார்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசைமணி
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
அ) பாரதியார்

Question 21.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர் …………… ஆண்டு ……………
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) பாரதியார், 1919
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி. விசுவநாதன், 1921
Answer:
இ) இளசைமணி, 2008

Question 22.
பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி
அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி
Answer:
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

Question 23.
பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?
அ) எட்டயபுரம் அரசருக்கு
ஆ) நெல்லையப்பருக்கு
இ) குத்திகேசவருக்கு
ஈ) சீனி. விசுவநாதனுக்கு
Answer:
இ) குத்திகேசவருக்கு

Question 24.
சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சீனி. விசுவநாதன்
Answer:
அ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 25.
பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 26.
பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 27.
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) நெல்லையப்பர்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
ஆ) நெல்லையப்பர்

Question 28.
வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 29.
லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 1.
வேற்றுமை அணி பயின்று வரும் இரு பாடல்களை விளக்கத்துடன் எழுதி வருக.
Answer:
பாடல் : 1

அங்கண் விசும்பின் அகனிலாப் பாறிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமருத்து
தெய்வர் ஒரு மாசுறின். – நாலடியார்

இப்பாடலில், திங்களுக்கும் சான்றோருக்கும் முதலில் ஒப்புமைக்கூறி பின்னர் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும். விளக்கம்:
திங்கள் தேயும், சான்றோன் தேயார் (மனநிலை மாறார்) என்பதேயாகும்.

பாடல் : 2

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று :
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – குறட்பா

பொருத்தம்:
தீயினால் உண்டான புண் உள் ஆறிவிடும்.
நாவினால் உண்டான புண் உள்ளத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.

Question 2.
‘தன்னேர் இலாத தமிழ்’ என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை உருவாக்குக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பழமையும், பெருமையும் கொண்டது. இலக்கண, இலக்கியங்கள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம், தொகை, பாட்டு, ஆற்றுப்படை என எண்ணிலடங்கா நூல்கள் உருவாகி தமிழின் சிறப்பை உலகே தொழும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

முதல் இடை கடைச்சங்கம் கொண்டது. தன்னிகரில்லா தன்மொழியாக விளங்கியது. தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது, பிறமொழி உதவி இல்லாமல், இடர்ப்பாடுகள் இல்லாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது.

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் கொண்ட என் தமிழின் உதவியில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இயங்க முடியாது. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத மொழியாய் விளங்குகிறது.

நன்றி! வணக்கம்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை
Answer:
இ) அடி எதுகை, சீர் மோனை

சிறுவினா

Question 1.
‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

இலக்கணக் குறிப்பு
வெங்கதிர் – பண்புத்தொகை
உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இலாத – இடைக்குறை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 2

புணர்ச்சி விதி

1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.

2. தனியாழி = தனி + ஆழி

  • ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, தனி + ய் + ஆழி என்றானது,
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ய் + ஆ = யா) ‘தனியாழி’ என்று புணர்ந்தது.

3. வெங்கதிர் = வெம்மை + கதிர்

  • ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு வெம் + கதிர் என்றானது.
  • ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்ற விதிப்படி (‘ம்’ ‘ங்’ – ஆகத் திரிந்து) வெங்கதிர்’ என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) முத்துவீரியம்
ஆ) வீரசோழியம்
இ) மாறவைங்காரம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) மாறவைங்காரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?
அ) உயர்ந்தோர்
ஆ) வந்தான்
இ) நடப்பான்
ஈ) உயர்ந்து
Answer:
அ) உயர்ந்தோர்

Question 3.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்’ எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
அ) கருங்குயில்
ஆ) வெங்கதிர்
இ) நெடுந்தேர்
ஈ) ழுதுமாம்
Answer:
ஆ) வெங்கதிர்

Question 4.
‘விளங்கி’ – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
அ) விள + ங் + இ
ஆ) விளங்கு + க் + இ
இ) வி + ளங்கு + இ
ஈ) விளங்கு + இ
Answer:
ஈ) விளங்கு + இ

Question 5.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து 1 சரி 2 தவறு
இ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ) இரண்டு கருத்தும் தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் சரி

Question 6.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்’ அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : ‘குவலயானந்தம்’ என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்
Answer:
ஆ) இரண்டு கருத்தும் தவறு

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) வீரசோழியம் – நாவல்
ஆ) முத்து வீரியம் – சிறுகதை
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
ஈ) மாறனலங்காரம் – பொருளிலக்கணம்
Answer:
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) வந்து – பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இ) இலாத – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் – வினைத்தொகை
Answer:
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

Question 9.
பொருந்தாததைக் தேர்க.
அ) தமிழ்மொழி – பொதிகை மலை
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
இ) தண்டியலங்காரம் – தண்டி
ஈ) காவியதர்சம் – வடமொழி இலக்கணம்
Answer:
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்

Question 10.
பொருத்துக.
அ) வெங்கதிர் – 1. இடைக்குறை
ஆ) இலாத – 2. வினையெச்சம்
இ) வந்து – 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர் – 4. பண்புத்தொகை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 3, 1, 4
Answer:
இ) 4, 1, 2, 3

Question 11.
தமிழ் தோன்றிய மலை
அ) குடகு
ஆ) பொதிகை
இ) இமயமலை
ஈ) விந்தியமலை
Answer:
ஆ) பொதிகை

Question 12.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியல் இடம்பெற்றுள்ள பாடல்
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
ஆ) இறையனார்களவியல் உரை மேற்கோள் பாடல்
இ) நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
Answer:
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 13.
இருளைப் போக்கும் இரண்டு
அ) கதிரவன், நிலவு
ஆ) கதிரவன், தமிழ்
இ) அறிவு, தமிழ்
ஈ) அறிவு, ஞானம்
Answer:
ஆ) கதிரவன், தமிழ்

Question 14.
மின்னலைப் போன்று ஒளிர்வது
அ) கதிரவன்
ஆ) தமிழ்
இ) தமிழ்
ஈ) வானம்
Answer:
அ) கதிரவன்

Question 15.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
அ) வீரசோழியம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) முத்து வீரியம்
ஈ) குவலயானந்தம்
Answer:
ஈ) குவலயானந்தம்

Question 16.
தண்டியலங்காரம் ……………. இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
Answer:
ஈ) அணி

Question 17.
‘ஓங்கலிடை வந்து’ என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் ………….. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அ) பொருளணியியல்
ஆ) பொதுவியல்
இ) சொல்லணியியல்
ஈ) ஒழிபியல்
Answer:
அ) பொருளணியியல்

Question 18.
காவியதர்சம் என்பது
அ) வடமொழி இலக்கண நூல்
ஆ) புராண நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) மலையாள இலக்கிய நூல்
Answer:
அ) வடமொழி இலக்கண நூல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 19.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்துவீரியம்
Answer:
அ) தண்டியலங்காரம்

Question 20.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
அ) தண்டி
ஆ) ஐயரினாதர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி
Answer:
அ) தண்டி

Question 21.
தண்டி …………. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) கி.பி. 11
ஆ) கி.பி. 12
இ) கி.பி. 13
ஈ) கி.பி. 14
Answer:
ஆ) கி.பி. 12

Question 22.
தண்டியலங்காரம் …………… பெரும் பிரிவுகளை உடையது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

குறுவினா

Question 1.
தண்டியலங்காரம் – நூல், நூலாசிரியர் சிறுகுறிப்பு தருக.
Answer:
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று தண்டியலங்காரமாகும். எழுதியவர் தண்டி ஆவார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. தண்டியலங்காரம் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

ஆசிரியர் : தண்டி
காலம் : 12ஆம் நூற்றாண்டு
தழுவல் நூல் : காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலை தழுவி எழுதப்பட்டது.
மூன்று பிரிவுகள் : பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்.

Question 2.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:
தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

Question 3.
அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?
Answer:
அணி இலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.

Question 4.
தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?
Answer:
பொதுவியல், மாறனலங்காரம், சொல்லணியியல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 5.
ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே – விளக்குக.
Answer:
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே ஆகும்.

Question 6.
புற இருளைப் போக்குவது எது?
Answer:
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவனாகும்.

சிறுவினா

Question 1.
தன்னேர் இலாத தமிழின் சிறப்புக் குறித்துத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
(i) இந்நில உலகில் வாழும் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவன்.

(ii) குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி, சான்றோர்களால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதும் எதனோடும் ஒப்பிட்டுக் கூற முடியாததுமானது தமிழ்மொழி.

(iii) புற இருளைப் போக்கும் கதிரவனைப்போல அக இருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்று தண்டியலங்கார உணர மேற்கோள் பாடல் உணர்த்துகின்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
பொருள் வேற்றுமையணியைச் சான்று தந்து விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம் :
கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

கதிரவன் புற இருளை அகற்றும்;
தமிழ்மொழி அக இருளை அகற்றும்.

விளக்கம் :
கதிரவன்
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் : கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.

தமிழ்:
குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 1.
கவிஞர் பாரதிதாசனின் அழகின்சிரிப்பு – குன்றம் – ஒளியும் குன்றும் பாடலில் இடம்பெற்றுள்ள நடைச்சிறப்பினைத் தொகுத்து உரையாக வழங்குக.
Answer:
ஒளியும் குன்றும்
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடிப் பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
எருதின்மேல் பாயும் வேங்கை
நிலவுமேல் எழுந்த மின்னல்
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பாரடா நீ – பாரதிதாசன்

இயற்கை வருணனையைப் பாரதிதாசன் செம்மைப் படுத்துவதில் வல்லவர்.
இப்பாடலில், வானுயிர்ந்த மலையின் அழகை தனக்கே உரித்தான நடையில் உருவகப்படுத்துகிறார்.

  • மலையினின்று விழும் வெண்மையான அருவிகள் மலையாகிய பெண்ணின் காதில் அணிந்திருக்கும் வைரத்தாலான தொங்கலாக உள்ளது.
  • மலையில் அடர்த்தியாகப் படாந்திருக்கும் பசுமையான கொடிகள் அப்பெண் உடுத்தியிருக்கும் பச்சைப் பட்டாடையாகக் காணப்படுகிறது.
  • மலையில் காணப்படும் குருவிகள் சூரிய ஒளியின் காரணமாகக் தங்கக் கட்டிகளாகக் காணப்படுன்றன.
  • பூத்திருக்கும் பூக்கள் நவமணிகள் ஆகக் காட்சியளிக்கின்றன.
  • எருதின் மேல் பாயும் வேங்கைக் காட்சிகள், முன்வைக்கப்படுகிறது.
  • நிலவின் மேல் ஓடுகின்ற மின்னலின் வரிகள் விழுந்து கிடக்கும் சருகுகள் ஒளியின் பிரகாசத்தால் தங்கத்தகடுகளாகக் காட்சியளிக்கின்றன.

Question 2.
தமிழின் சொல்வளத்தை வெளிப்படுத்தும்படியாக யானை / மலர் குறித்த பல சொற்களை அகராதியில் கண்டு பட்டியலிடுக.
Answer:
யானை : வேழம், களிறு, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், கரி, தும்பி, ஆனை, களபம், கயமுனி, கைம்மலை, குஞ்சரம், வல்விலங்கு, துங்கல், வாரணம், கடகம், துடியடி, கடகம்.

மலர் : அரும்பு, போது, நளை, முகிழ், புஷ்பம், நறுவி, மெகெகுள், செம்மலர், பொதும்பர், அலர், மகரந்தம், பொம்மல், வீதி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
Answer:
இ) தொல்காப்பியம்

Question 2.
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
Answer:
இ) இரண்டு கருத்தும் சரி

Question 3.
பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி. சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2,1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

குறுவினா

Question 1.
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

Question 2.
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” – இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
Answer:
ஓசை நயமிக்கச் சொற்கள் :
படாஅம் ஈத்த, கெடாஅ நல்லிசை, கடாஅயானை, நல்லிசை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

இலக்கணக் குறிப்புகள் :
படாஅம், கெடாஅ, கடாஅ – செய்யுளிசையளபெடைகள்
ஈத்த – பெயரெச்சம்
நல்லிசை – பண்புத்தொகை

Question 3.
விடியல், வனப்பு – இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
Answer:
பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.

சிறுவினா

Question 1.
சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
Answer:

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று : ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

நெடுவினா

Question 1.
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
Answer:
கவிதையின் நடையைக் கட்டமைப்பன:
பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

கவிதை – நடையியல்:
மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:
தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை
கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம் :
சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை :
சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.
அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.
சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள் :
ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

கவிதை மறுதலைத்தொடர் :
தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

இறுதியாக :
நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் : வ சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்யுளை ஓர் உள்ளமைப்பாகக் கூறும் நூல்
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) தண்டியலங்காரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Question 2.
காளைகளில் பல இனங்களைக் காட்டும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) முல்லைக்கலி
இ) புறநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
ஆ) முல்லைக்கலி

Question 3.
பாடலின் தளத்தைப் பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணியைச் செய்வது
அ) தொடரியல் வடிவம்
ஆ) ஒலிக்கோலம்
இ) சொற்றொடர் நிலை
ஈ) சொற்புலம்
Answer:
அ) தொடரியல் வடிவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 4.
கருத்து 1 : சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.
கருத்து 2 : தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம்.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1 சரி, 2 தவறு
ஈ) இரண்டு கருத்தும் சரி
Answer:
ஈ) இரண்டு கருத்தும் சரி

Question 5.
கருத்து 1 : முல்லைக்கலியில் எருதுகளின் பல இனங்களைக் காட்டும் சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
கருத்து 2 : சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது.
அ) கருத்து 1 தவறு
ஆ) கருத்து 1 சரி, 2 தவறு
இ) கருத்து இரண்டும் சரி
ஈ) கருத்து 1 தவறு, 2 சரி
Answer:
இ) கருத்து இரண்டும் சரி

Question 6.
கருத்து : தொன்மையான மொழி சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
விளக்கம் : மொழித்தோன்ற அடிப்படையாக இருப்பது ஒலியே. ஒலியை வெவ்வேறு வடிவங்களில் உச்சரிக்கும் போது மொழித் தோன்றுகிறது.
அ) கருத்து சரி விளக்கம் தவறு
ஆ) கருத்தும் விளக்கமும் சரி
இ) கருத்து தவறு விளக்கமும் தவறு
ஈ) கருத்து தவறு விளக்கம் சரி
Answer:
ஆ) கருத்தும் விளக்கமும் சரி

Question 7.
பொருத்தமானதைக் கண்டறிக.
அ) பாவகை – ஐந்து
ஆ) வஞ்சி – வெண்பா நடைத்தே
இ) பனிநீர் – தொகை மொழி
ஈ) காமர் வனப்பு தொடரியல் போக்கு
Answer:
இ) பனிநீர் – தொகை மொழி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 8.
பொருத்தமானதைக் கண்டறிக.
அ) கடாஅ யானைக் கலிமான் பேக – முல்லைக்கலி
ஆ) புணரின் புணராது பொருளே – தொல்காப்பியம்
இ) இவன் தந்தை தந்தை – நற்றிணை
ஈ) யாமும் பாரியும் உளமே – புறநானூறு
Answer:
ஈ) யாமும் பாரியும் உளமே – புறநானூறு

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) கன்னி விடியல் – தொகை மொழி
ஆ) பொய்படு சொல் – மறித்தாக்கம்
இ) சங்கப்பாடல்கள் – மறுதலைத் தொடர்
ஈ) கி.ராஜநாராயணன் – கிடை
Answer:
ஆ) பொய்படு சொல் – மறித்தாக்கம்

Question 10.
தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்
அ) தி.சு. நடராசன்
ஆ) ஔவை நடராசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) தமிழண்ண ல்
Answer:
அ) தி.சு. நடராசன்

Question 11.
………….. இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
அ) தமிழில்
ஆ) ஆங்கிலத்தில்
இ) தெலுங்கில்
ஈ) வடமொழியில்
Answer:
அ) தமிழில்

Question 12.
மலரும் மணமும் போல கவிதையுடன் இரண்டறக் கலந்திருப்பது
அ) தமிழர்களின் அழகுணர்வு
ஆ) தலைவன் தலைவியின் அன்புணர்வு
இ) வள்ளலின் வள்ளன்மையுணர்வு
ஈ) பக்தர்களின் தெய்வ உணர்வு
Answer:
அ) தமிழர்களின் அழகுணர்வு

Question 13.
அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருவது
அ) புராணம்
ஆ) சங்க இலக்கியம்
இ) கல்வெட்டு
ஈ) நாணயம்
Answer:
ஆ) சங்க இலக்கியம்

Question 14.
அழகு என்ப து ……………. செய்தி.
அ) மனிதரின்
ஆ) பேரண்டத்தின்
இ) காதலரின்
ஈ) கடவுளரின்
Answer:
ஆ) பேரண்டத்தின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 15.
அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருவது
அ) தொல்காப்பியம்
ஆ) சங்க இலக்கியம்
இ) புராணம்
ஈ) மனிதநடத்தை
Answer:
அ) தொல்காப்பியம்

Question 16.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) தண்டியலங்காரம்
Answer:
அ) தொல்காப்பியம்

Question 17.
இலக்கியத்தின் ………………. பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு.
அ) நயம்
ஆ) பயன்
இ) நிலை
ஈ) ஈடுபாடு
Answer:
ஆ) பயன்

Question 18.
இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்துநிலைகள் கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்று கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
அ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 19.
சங்க இலக்கியம் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளவை
i) அகத்திணைச் சார்ந்த செய்திகள்
ii) புறத்திணைச் சார்ந்த செய்திகள்

அ) i – சரி
ஆ) ii – தவறு
இ) இரண்டும் சரி
ஈ) i – சரி ; ii – தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 20.
அகன் ஐந்திணைகளைப் பேசுவது
அ) நன்னூல்
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) தொல்காப்பியம்

Question 21.
பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஓன்று
ஈ) இரண்டு
Answer:
ஆ) நான்கு

Question 22.
அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப-என்று பாவகைகளோடு அறவியல் கருத்துகளை இணைத்துச்சொல்வது
அ) சங்க இலக்கியம்
ஆ) பரிபாடல்
இ) தொல்காப்பியம்
ஈ) அகத்தியம்
Answer:
இ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 23.
பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில் முக்கியமானவை
i) ஒலிக்கோலங்கள்
ii) சொற்களின் புலம்
iii) தொடரியல் போக்குகள்
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) இரண்டு மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Question 24.
கவிதையின் ……………. நடை .
அ) இயங்காற்றல்தான்
ஆ) அழகுதான்
இ) பார்வைதான்
ஈ) இயல்புதான்
Answer:
அ) இயங்காற்றல்தான்

Question 25.
‘நடைபெற்றியலும்’ என்பது தொல்காப்பியத்தின் ……….. வரும் சொற்றொடர்.
அ) கிளவியாக்கத்தில்
ஆ) மொழியாக்கத்தில்
இ) எழுத்து அதிகாரத்தில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிளவியாக்கத்தில்

Question 26.
ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி-என்று குறிப்பிடும் நூல்
அ) கலித்தொகை
ஆ) தொல்காப்பியம்
இ) பரிபாடல்
ஈ) குறவஞ்சி
Answer:
ஆ) தொல்காப்பியம்

Question 27.
‘கடந்தடுதானை மூவிருங்கூடி’-என்று தொடங்கும் பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Question 28.
‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக’ என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 29.
‘புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே!’ என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) நற்றிணை

Question 30.
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை-என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு
ஆ) நற்றினை
இ) அகநானூறு
ஈ) கலித்தொகை
அ) புறநானூறு
Answer:
அ) புறநானூறு

Question 31.
…………… கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
அ) குறிஞ்சிக்
ஆ) முல்லைக்
இ) மருதக்
ஈ) பாலைக்
Answer:
ஆ) முல்லைக்

Question 32.
‘கிடை’ என்னும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்களைச் சொல்லி அழைப்பவர்
அ) இந்திரா பார்த்தசாரதி
ஆ) கி. ராஜநாராயணன்
இ) ஜெயகாந்தன்
ஈ) ஜெயமோகன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 33.
தொகைநிலை, தொகைமொழி பற்றிப் பேசும் தொல்காப்பியத்தின் இயல்
அ) எச்சவியல்
ஆ) இடையியல்
இ) உவமையியல்
ஈ) எழுத்தியல்
Answer:
அ) எச்சவியல்

Question 34.
‘நீர்படு பசுங்கலம்’ என்னும் அடிகளுக்குரிய நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) பரிபாடல்
Answer:
இ) நற்றிணை

Question 35.
நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கு, சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடியவர்
அ) பேரெயின் முறுவலார்
ஆ) வெள்ளைக்குடி நாகனார்
இ) நரிவெரூஉத்தலையார்
ஈ) கோவூர்கிழார்
Answer:
அ) பேரெயின் முறுவலார்

Question 36.
இடுக வொன்றோ, சுடுக வொன்றோ, படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே-என்ற புறநானூறு அடிகளில் குறிப்பிடப்படும் மன்னர்
அ) அறிவுடைநம்பி
ஆ) நம்பி நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) கிள்ளிவளவன்
Answer:
ஆ) நம்பி நெடுஞ்செழியன்

Question 37.
‘தொடியுடைய தோள் மணந்தனன்’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர்
அ) பேரெயின் முறுவலார்
ஆ) பொன்முடியார்
இ) கோவூர்கிழார்
ஈ) வெள்ளைக்குடி நாகனார்
Answer:
அ) பேரெயின் முறுவலார்

Question 38.
பேரெயின் முறுவலாரின் புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள பண்புகள்
அ) 16
ஆ) 18
இ) 15
ஈ) 14
Answer:
ஆ) 18

Question 39.
தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் ……………. முதன்மை ஆதாரம்.
அ) சங்க இலக்கியமே
ஆ) சங்கம் மருவிய இலக்கியமே
இ) நீதி இலக்கியமே
ஈ) காப்பியமே
Answer:
அ) சங்க இலக்கியமே

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 40.
தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியர்
அ) தி.சு. நடராசன்
ஆ) ஔவை நடராசன்
இ) தமிழண்ண ல்
ஈ) வல்லிக்கண்ணன்
Answer:
அ) தி.சு. நடராசன்

Question 41.
…………. கலையைத் தமிழக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
அ) திரைக்
ஆ) திறனாய்வுக்
இ) மொழிபெயர்ப்புக்
ஈ) பேச்சுக்
Answer:
ஆ) திறனாய்வுக்

Question 42.
தி.சு. நடராசன் …………. ஆகப் பணிபுரிந்தார்.
அ) மாவட்ட ஆட்சியர்
ஆ) போராசிரியர்
இ) வழக்குரைஞர்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) போராசிரியர்

குறுவினா

Question 1.
இலக்கியம் எவற்றைத் தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியுள்ளது?
Answer:
மனித நாக்குகளின் ஈரம்பட்டுக் கிடக்கும் மொழியானது, பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள் பேசும் போதும், கேட்கும் போதும் தனிச்சூழல்களைத் தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டும்.

Question 2.
மொழியின் சிறப்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு , உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவையாகும்.

Question 3.
தமிழ் இலக்கியத்தின் பயன்களாகக் கட்டுரையாசிரியர் கூறுவன யாவை?
Answer:
அறம், பொருள், இன்பம் அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளை உணர்த்துவனவாக தமிழ் இலக்கியத்தின் பயன்கள் இருக்க வேண்டும்.

Question 4.
‘கலை முழுமை’ பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?
Answer:
‘கலை முழுமை’, என்பது இலக்கியத்திற்கான நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

Question 5.
தமிழ் அழகியலின் நெடும்பரப்புகளென ஆசிரியர் எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
சமூக பண்பாட்டு மரபிற்கேற்பவே, கலை படைப்பை, அழகியல் நெறியை, பண்பாட்டின் இலச்சினையாகச் சித்தரிப்பதற்குத் தமிழ்மரபு முன்வந்திருக்கிறது; முன் மொழிந்திருக்கிறது. இதுவே தமிழ் அழகியலின் நெடும்பரப்பு ஆகும்.

Question 6.
பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றனவை எவை?
Answer:
ஒலிக்கோலம், சொற்புலம், சொற்றொடர் நிலை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 7.
பண்டைய கவிஞர்களுக்கு இயல்பாக இருந்த உணர்வு எது?
Answer:
கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில் உணர்ச்சிகளைப் பாய்ச்சும் விதத்தில் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழவியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது.

Question 8.
இலக்கியத்தனம் என்பது யாது?
Answer:

  • இலக்கியம் என்ற மொழிசார்கலை, மொழியின் தனித்துவமான பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கிறது.
  • இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்தன்மையைத் தந்துவிடுகிறது. இத்தகைய தன்மைதான் கவித்தனம் அல்லது இலக்கியத்தனம் என்று பேசப்படுகிறது.

Question 9.
மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி.

Question 10.
‘லட்சியம்’ பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுவது எது?
Answer:
அகன் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்தினைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகிறது.

Question 11.
எந்த தொன்மையான மொழியும் எவற்றிலிருந்து தொடங்குகிறது?
Answer:
எந்த தொன்மையான மொழியும் சமிக்கையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 12.
ஒலிப்பின்னல் என்பது யாது?
Answer:

  • மொழிசார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவலின் பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

Question 13.
சொல்லில் புதைந்து கிடப்பன யாவை?
Answer:

  • சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.
  • கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கின்றன.

Question 14.
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொல்வளத்திற்கான சான்றுகளைத் தருக.
Answer:

  1. முல்லைக் கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
  2. கி. ராஜநாராயணன் ‘கிடை’ என்னும் குறுநாவலில் ஆடுகளில் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்.

Question 15.
சொல்வளம் என்பது யாது?
Answer:

  1. சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் கவவுக்கை நெகிழாமல் முயங்கிக் கிடப்பதையும் குறிக்கும்.

Question 16.
தொடரியில் வடிவம் செய்யும் பணிகள் யாவை?
Answer:
ஒலிக்கோலமும் சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் 11 போகின்றன என்றால், பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 17.
தி. சு. நடராசன் தமிழ்ப் போராசிரியராகப் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைக் கூறுக.
Answer:

  • மதுலை காமராசர் பல்கலைக்கழகம்.
  • போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகம்.
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

Question 18.
தி.சு. நடராசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள்.

சிறுவினா

Question 1.
தி.சு. நடராசன் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சு. நடராசன்
சிறப்பு : திறனாய்வுக்கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
பதவி : மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநேல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
படைப்புகள் : கவிதையெனும் மொழி, தமிழ் அழகியல், தமிழ் பண்பாட்டு வெளிகள், திறனாய்வுக்கலை.

Question 2.
சங்கப்பாடல்கள் பலவற்றுள் அமைந்துள்ள மறுதலைத் தொடரியல் போக்குக்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
தமிழ் மொழியில் உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப்பாடல்கள் பலவற்றில் இந்நிலை மாறி வருகிறது. இதனைக் கவிதை மறுதலைத் தொடர் என்பர்.

சிறப்பாக முடியும் பாடல்களின் இறுதியில்தான் இந்தத் தொடரியல் பிறழ்வுநிலை பெரிதும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாகப் பேரெயின் முறுவலார், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கில் முரண்பாடான கருத்து உருவாகியுள்ளதை

இடுக வொன்றோ, சுடுகவொன்றோ;
படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே! (புறம் : 239)

என்ற இப்பாடலில் இடம் பெற்றுள்ள இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்திருக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

‘தொடியடைய தோள் மணந்தனன்’ எனத் தொடங்கும் இப்பாடலில் தொடர்ந்து வரும் 20 அடிகளில் தொடர்கள் வரிசையாகவும் நேர்படவும் செல்வதைக் காணலாம். ஒவ்வோர் அடியிலும் தனித்தனியே வினைமுற்றுகளோடு தன்னிறைவோடு 18 பண்புகளை வரிசைப்படுத்தித் தொகுத்துக் : ல கூறும் புலவர் இறுதியில் நெடுஞ்செழியனுடைய உடலைப் புதைத்தால் புதை ; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறார். இது சங்கப் பாடலின் மறுதலைத் தொடரியல் போக்குக்குத் தகுந்த சான்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.1 இளந்தமிழே! Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.1 இளந்தமிழே!

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 1.
தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
Answer:
வேதன் : எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை.

மதன் : சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும்?

வேதன் : இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.

மதன் : அது இடமாற்றம் இல்லை . ஒதுக்கப்படுவதும் இல்லை .

வேதன் : நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா?

மதன் : அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்பதெய்வங்களைவணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம்.

வேதன் : தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.

மதன் : வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

வேதன் : மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம்?

மதன் : மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் – என்பார்.

வேதன் : அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா?

மதன் : நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது.

வேதன் : நன்றி மதன்.

மதன் : நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி
இ) ந மட்டும் சரி
ஈ) க, ங இரண்டும் சரி
Answer:
ஈ) க, ங இரண்டும் சரி

குறுவினா

Question 1.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
Answer:
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

சிறுவினா

Question 1.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
  • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 1
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 2

நெடுவினா

Question 1.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

இலக்கணக் குறிப்பு

செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் – பண்புத்தொகைகள்
முத்து முத்தாய் – அடுக்குத்தொடர்
சிவந்து – வினையெச்சம்
வியர்வை வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 4

புணர்ச்சி விதி

1. செம்பரிதி = செம்மை + பரிதி
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + பரிதி என்பது செம்பரிதி எனப் புணர்ந்தது.

2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • இஈஐ வழி யவ்வும் என்ற விதிப்படி, உன்னை + ய் + அல்லால் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + அ = ய) உன்னையல்லால் எனப் புணர்ந்தது.

4. செந்தமிழே = செம்மை + தமிழே

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தமிழே என்றானது.
  • முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
அ) குற்றால மலை
ஆ) விந்திய மலை
இ) இமய மலை
ஈ) சாமிமலை
Answer:
அ) குற்றால மலை

Question 2.
சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?
அ) அக்கினி
ஆ) ஒளிப்பறவை
இ) அக்கினிசாட்சி
ஈ) சூரியநிழல்
Answer:
இ) அக்கினிசாட்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 3.
‘சாய்ப்பான்’ என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை
அ) சாய்ப்பு + ஆன்
ஆ) சாய் + ப் + ஆன்
இ) சாய் + ப் + ப் + அன்
ஈ) சாய் + ப் + ப் + ஆன்
Answer:
ஈ) சாய் + ப் + ப் + ஆன்

Question 4.
கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
அ) ஒரு கிராமத்தின் கதை
ஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்தின் நதி
ஈ) ஒரு புளியமரத்தின் கதை
Answer:
இ) ஒரு கிராமத்தின் நதி

Question 5.
‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?
அ) ஈறுபோதல், இனமிகல்
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஈ) ஈறுபோதல்
Answer:
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

Question 6.
‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.
ஆ) உவமையாகுபெயர்
ஆ) கருவியாகு பெயர்
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) உருவகம்

Question 7.
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?
ஆ) சூரிய காந்தி
ஆ) சூரிய பார்வை
இ) ஒளிப்பூ
ஈ) சூரிய நிழல்
Answer:
ஈ) சூரிய நிழல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 8.
கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டும் கருத்தும் தவறு
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer:
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

Question 9.
‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்
அ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆ) பெருந்தேவனார்
இ) தமிழண்ண ல்
ஈ) மு. வரதராசனார்
Answer:
அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

Question 10.
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்
அ) கோப்பெருந்தேவி
ஆ) வேண்மாள்
இ) தமிழன்னை
ஈ) ஒளவையார்
Answer:
இ) தமிழன்னை

Question 11.
…………… முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை .
அ) சடையப்ப வள்ளல்
ஆ) சீதக்காதி
இ) பாரி
ஈ) நெடுங்கிள்ளி
Answer:
இ) பாரி

Question 12.
எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) திரு.வி.க
Answer:
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்

Question 13.
‘இளந்தமிழே’ என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலி விருத்தம்
ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 14.
பொருத்திக் காட்டுக.
i) செம்பரிதி – உருவகம்
ii) முத்து முத்தாய் – வினையெச்சம்
iii) சிவந்து – அடுக்குத்தொடர்
iv) வியர்வைவெள்ளம் – பண்புத்தொகை
அ) 4321
ஆ) 3412
இ) 2143
ஈ) 3214
Answer:
அ) 4321

Question 15.
செம்பரிதி – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.
அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) முன்நின்ற மெய்திரிதல்
Answer:
அ) ஈறுபோதல்

Question 16.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.
அ) உன்னையல்லால்
ஆ) வானமெல்லாம்
இ) செந்தமிழே
ஈ) செம்பரிதி
Answer:
ஆ) வானமெல்லாம்

Question 17.
‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அ) சூரிய நிழல்
ஆ) ஒரு கிராமத்து நதி
இ) ஒளிப்பறவை
ஈ) நிலவுப்பூ
Answer:
ஈ) நிலவுப்பூ

Question 18.
சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.
அ) கவிஞர்
ஆ) ஓவியர்
இ) பேராசிரியர்
ஈ) மொழிபெயர்ப்பாளர்
Answer:
ஈ) மொழிபெயர்ப்பாளர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 19.
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழ்
ஈ) காமராசர்
Answer:
அ) பாரதியார்

Question 20.
சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?
அ) மூன்று
ஆ) இரு
இ) நான்கு
ஈ) பல
Answer:
ஆ) இரு

Question 21.
சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமியின் …………….. இருக்கிறார்.
அ) தலைவராக
ஆ) செயலாளராக
இ) பொருளாளராக
ஈ) உறுப்பினராக
Answer:
ஈ) உறுப்பினராக

குறுவினா

Question 1.
தொழிலாளர்களின் கைகள் எதனைப் போலச் சிவந்துள்ளதாகக் கவிஞர் சிற்பி கூறுகிறார் ?
Answer:
மாலையில் மறையும் கதிரவனின் கதிரொளி போல தொழிலாளரின் கைகள் சிவந்துள்ளதாகக் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
தமிழ்மொழியின் பழமைநலம் எவை?
Answer:

  1. தமிழ்மொழி பாண்டியர்களின் அவையிலே தன்னிகரற்ற செம்மொழியாய் ஆட்சி செய்தது.
  2. பாரி போன்ற வள்ளல்கள் பலரை தமிழ் மண்ணிற்குத் தந்த பழமை நலம் கொண்ட மொழி.

Question 3.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை என்ன ?
Answer:
‘தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’, என்பதே கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை ஆகும்.

Question 4.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூற்களில் சிலவற்றை எழுதுக.
Answer:
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி.

Question 5.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகங்களைக் குறிப்பிடுக.
Answer:
கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.

Question 6.
சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்.

Question 7.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எம்மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன?
Answer:
ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 8.
சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்?
Answer:

  1. சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியன் இரு முறை பெற்றுள்ளார் .
  2. மொழிபெயர்ப்புக்காகவும், ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலிற்காகவும் சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ளார்.

சிறுவினா

Question 1.
குளிர் பொதிகைத் தென்தமிழ் ஏன் சீறி வர வேண்டும் எனச் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்?
Answer:

  • உள்ளத்தில் பொங்கிவரும் உணர்வுகளை உணர்ச்சி மிகு கவிதையாக எழுத முத்தமிழே உதவி செய்கின்றது.
  • பாண்டியமன்னர்கள் அமைத்த சங்கத்திலே, தன்னிகரற்ற செம்மொழியாய் இருந்து ஆட்சிச் செய்தது.
  • பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்தது.
  • அன்றிருந்த தமிழர் நலமும் தமிழ்நாட்டுப் பொதுமை நலமும் மீண்டும் பிறப்பதற்கு நீ குயில் போலக் கூவி வர வேண்டும்.
  • இன்று தமிழர்களைச் சூழ்ந்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும் அகன்றிட அவர்கள் சிறைப்பட்டிருக்கும் கூட்டினை உடைத்திட நீயும் சிங்கம் போலச் சீறி புறப்பட்டு வர வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : பாலசுப்பிரமணியம். சிறப்புப்
பெயர் : சிற்பி (எழுத்துகளைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்).
பெற்றோர் : சி. பொன்னுசாமி – கண்டியம்மாள்.
ஊர் : ஆத்துப்பொள்ளாச்சி, கோவை.
பணி : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் . சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
விருது : “ஒரு கிராமத்து நதி” எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது.
படைப்புகள் : ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி.

Samacheer Kalvi 12th Tamil Guide Book Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 12th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 12th Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 12th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

Students can also read Tamil Nadu 12th Tamil Model Question Papers 2020-2021.

Samacheer Kalvi 12th Tamil Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Tamil Book Back Answers Solutions Guide.

Samacheer Kalvi 12th Tamil Book Back Answers

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 12th Tamil Book Solutions Answers Guide Pdf Free Download will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 12th Standard Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 12th Books Solutions Guide

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 12th Books Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 12th Std Guide Pdf of Text Book Back Questions and Answers of Volume 1 and Volume 2, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas and revise our understanding of the subject.

Students can also read Tamil Nadu Samacheer Kalvi 12th Model Question Papers 2020-2021.

Tamilnadu Samacheer Kalvi 12th Guide Text Book Back Answers Solutions Pdf Free Download

TN Samacheer Kalvi 12th Book Back Answers Solutions Guide

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 12th Std Books Solutions Answers Guide Pdf Free Download in English Medium and Tamil Medium will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 12th Standard Guides Pdf of Text Book Back Questions and Answers of Volume 1 and Volume 2, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, drop a comment below and we will get back to you as soon as possible.