Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.2 விருந்தினர் இல்லம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.2 விருந்தினர் இல்லம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 1.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்நத சிலவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது?
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

குறுவினா

Question 1.
எதிர்பாரத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார் ?
Answer:
(i) வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்துகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.

(ii) எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

சிறுவினா

Question 1.
“வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில : 9 மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம் :
வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, : – அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டுவிடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனவே, எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்
அ) கோல்மன் ரூபன்
ஆ) கோல்மன் ஹிப்ஸ்
இ) கோல்மன் பார்க்ஸ்
ஈ) கோல்மன் ஹிக்ஸ்
Answer:
இ) கோல்மன் பார்க்ஸ்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 2.
‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயர்த்தவர்
அ) என்.சத்தியமூர்த்தி
ஆ) என்.ஆர்.சத்தியமூர்த்தி
இ) எஸ்.சத்தியமூர்த்தி
ஈ) எம்.சத்தியமூர்த்தி
Answer:
அ) என்.சத்தியமூர்த்தி

Question 3.
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்
அ) வங்களாதேசம்
ஆ) பாகிஸ்தான்
இ) கஸகிஸ்தான்
ஈ) ஆப்கானிஸ்தான்
Answer:
ஈ) ஆப்கானிஸ்தான்

Question 4.
வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர் இல்லம்’ கூறுவது
அ) காணிக்கை
ஆ) நன்கொடை
இ) நன்றி
ஈ) அன்பளிப்பு
Answer:
இ) நன்றி

Question 5.
விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு
அ) சங்கீத மேடை
ஆ) புதுவரவு
இ) புதுமை
ஈ) ஆனந்தம்
Answer:
ஆ) புதுவரவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 6.
ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக ‘விருந்தினர் இல்லம்’ குறிப்பிடுவது
அ) அன்பாக
ஆ) பாசமாக
இ) உறவாக
ஈ) கௌரவமாக
Answer:
ஈ) கௌரவமாக

Question 7.
எல்லாவற்றிலிருந்தும் ………….. கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
அ) அன்பானவற்றைக்
ஆ) ஒழுக்கமானவற்றைக்
இ) நல்லவற்றைக்
ஈ) தூய்மையானவற்றைக்
Answer:
இ) நல்லவற்றைக்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) ஆனந்தம் எதிர்பார்க்கும் விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் விலக்கி வை.
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.
ஈ) வருபவர் எவராயினும் ஏற்றுக் கொள்ளாதே.
Answer:
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) சற்று மனச்சோர்வு எதிர்பாராத விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து.
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.
ஈ) வருபவர் எவராயினும் நன்றி செலுத்து.
Answer:
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 10.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைக் கோல்மன் மார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) என். சத்தியமூர்த்தி
ஆ) பி. கலியமூர்த்தி
இ) ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஈ) எம்.புண்ணியமூர்த்தி
Answer:
அ) என். சத்தியமூர்த்தி

Question 11.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைத் தமிழாக்கம் செய்த என் சத்தியமூர்த்தி இட்ட தலைப்பு
அ) தாகங்கொண்ட மீனொன்று
ஆ) தாகங்கொண்ட காகமொன்று
இ) மேகமீதில் விண்மீனொன்று
ஈ) மழைத்துளியும் மண்ணும்
Answer:
அ) தாகங்கொண்ட மீனொன்று

Question 12.
ஜலாலுத்தீன் ரூமி …………… மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.
அ) பாரதத்தின்
ஆ) கிரேக்கத்தின்
இ) பாரசீகத்தின்
ஈ) ஆப்ரிக்காவின்
Answer:
இ) பாரசீகத்தின்

Question 13.
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ ………………. பாடல்க ளைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அ) 23,500
ஆ) 24,600
இ) 25,600
ஈ) 24,000
Answer:
இ) 25,600

Question 14.
மஸ்னவி என்பது
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
ஆ) காதல்பாடல்களின் இசைத்தொகுப்பு
இ) தேச உணர்வுமிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
ஈ) கனவுத்தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
Answer:
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 15.
‘திவான்-ஈஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்றும் நூலின் ஆசிரியர்
அ) இபின் பதூதா
ஆ) அமிர்குஸ்ரு
இ) நாகூர் ரூமி
ஈ) ஜலாலுத்தீன் ரூமி
Answer:
ஈ) ஜலாலுத்தீன் ரூமி

Question 16.
வக்கிரம் அவமானம் வஞ்சனை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி?
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
ஆ) அவற்றை வாயிலுக்கே சென்று சினத்துடன் சிதைக்க வேண்டும்.
இ) அவற்றை அமைதியாக அனுபவிக்க வேண்டும்.
ஈ) அவற்றைப் புதைகுழியில் இட்டுப் புதைக்க வேண்டும்.
Answer:
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் வாசலுக்குச் சென்று வரவேற்க வேண்டுமெனஜலாலுத்தீன் ரூமிகுறிப்பிடுகிறார்?
Answer:
வக்கிரம், அவமானம், வஞ்சனை.

Question 2.
எவையெல்லாம் எதிர்பாராத விருந்தாளிகளாக வாழ்வில் வந்து செல்லும்?
Answer:
ஓர் ஆனந்தம், சற்று மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு.

Question 3.
மஸ்னவி என்பது யாது?
Answer:
மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 4.
வரும் விருந்தினர்களை எல்லாம் கௌரவமாக நடத்த வேண்டும். ஏன்?
Answer:

  • வாழ்வில் சந்திக்கும் அனைத்தையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
  • இன்பமோ, துன்பமோ அவை புது அனுபவங்களைத் தரும்.
  • துக்கங்கள் உன்னை முழுவதுமாகத் துடைத்தாலும் இனிமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • புதிய மகிழ்ச்சிக்காக அந்த துக்க நிகழ்வுகள் உன்னைத் தயாரிக்கும்.

சிறுவினா

Question 1.
‘வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம்’ – என்னும் கருத்தை ‘விருந்தினர் இல்லம்’ கவிதை உறுதிப்படுத்துவதை நிறுவுக.
Answer:
(i) மனித வாழ்வு எதையும் ஏற்கும் உள்ளம் கொண்டதாக இருக்க வேண்டும்.

(ii) ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்பவை எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து போகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை .

(iii) இன்பச்செய்தி, துக்கச்செய்தி, துயரச் செய்தி, வீணாகப் பொழுதைக் கழிக்க, தன்னுடைய கௌரவத்தைக் காட்ட எனப் பல வடிவங்களில் விருந்தினர்கள் நம் இல்லங்களுக்கு வருவதுண்டு.

(iv) இதைப் போன்று நம்மை வந்தடையும் அத்தனை அனுபவங்களையும் வக்கிரம் அவமானம், வஞ்சனை இவைகளையும் விருந்தினர்களை எதிர் கொண்டு வரவேற்பது போல வரவேற்க வேண்டும்.

(v) ஒவ்வொரு விருந்தினர்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தருவர். ஒவ்வொரு வாழ்வியல் வடிவங்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும்.

(vi) இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது, என எல்லாமே விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடையும் இவைகள் மூலம் நாம் நம்மை மெருகூட்ட, நம்மைப் புதுப்பிக்க உதவும்.

(vii) எனவே, வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம் என்பதை உணர்ந்து நம்மைத் தேடி வரும் அனைத்திற்காகவும் நன்றி செலுத்துவோம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 1.
கூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக.
Answer:
இனிய வணக்கம்.

  • கூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு.
  • கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடன்பட்டுப் பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளரும்.
  • தலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களையப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மைவிட்டு அகலும்.
  • தனிக்குடும்பத்தில் செலவுகள் குறையும்.
  • மனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது.
  • பிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும்.
  • அவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள்.
    எனவே, கூட்டுக்குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மௌனம்.
    நன்றி! வணக்கம்!

Question 2.
குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை அட்டவணைப்படுத்தி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை
அ) அறவோர், துறவோர்
ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும்
ஈ) நிதியமும் சுங்கமும்
Answer:
ஆ) திருமணமும் குடும்பமும்

Question 2.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 3.
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
Answer:
ஈ) தந்தைவழிச் சமூகமுறை

குறுவினா

Question 1.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.
Answer:
புக்கில் :

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
  • “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

தன்மனை :
திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

சிறுவினா

Question 1.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.
Answer:
தந்தையும் உடன் வாழ்ந்தனர்
(i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.

(ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

(iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.

(iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப
அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 2.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை ?
Answer:

  • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.
  • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
  • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
  • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.
  • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
  • பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.

நெடுவினா

Question 1.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

கட்டமைப்பு:
(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.

(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.

(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

தந்தை வழிக் குடும்பம்:

  • சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.
  • பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்:

  • தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,
  • ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்:

  • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.
  • கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.
  • இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :
(i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.

(ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.

(iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

(iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Question 2.
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
அ) இல், மனை
ஆ) மனை , குடில்
இ) இல், குரம்பை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) இல், மனை

Question 3.
அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது
அ) கணவனின் இல்லம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) நற்றாய் இல்லம்
ஈ) செவிலியின் இல்லம்
Answer:
அ) கணவனின் இல்லம்

Question 4.
தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்
அ) குடும்பம்
ஆ) தாய்வழிக் குடும்பம்
இ) மணந்தகம்
ஈ) விரிந்த குடும்பம்
Answer:
இ) மணந்தகம்

Question 5.
தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்
அ) பெண்கள்
ஆ) ஆண்க ள்
இ) பெண்கள், ஆண்கள்
ஈ) குழந்தைகள்
Answer:
அ) பெண்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 6.
மணமக்களின் வாழ்விடம் என்பது
அ) கணவன் அகம்
ஆ) செவிலியகம்
இ) தனியார் விடுதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கணவன் அகம்

Question 7.
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்
அ) புரிதலில்லாத குடும்பம்
ஆ) நெருக்கமில்லாத குடும்பம்
இ) நெருக்கமான குடும்பம்
ஈ) முடிவுநிலை குடும்பம்
Answer:
இ) நெருக்கமான குடும்பம்

Question 8.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்
அ) தனிக்குடும்ப வகை
ஆ) சமூக குடும்ப வகை
இ) கூட்டுக்குடும்ப வகை
ஈ) விரிந்த குடும்ப வகை
Answer:
அ) தனிக்குடும்ப வகை

Question 9.
ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை
அ) தந்தைவழிக் குடும்ப முறை
ஆ) விரிந்தவழிக் குடும்ப முறை
இ) தனிக்குடும்ப முறை
ஈ) பிரிந்த வழிக் குடும்ப முறை
Answer:
இ) தனிக்குடும்ப முறை

Question 10.
தலைவனும் தலைவியும் …….. காத்தலே இல்வாழ்வின் பயன்.
அ) குழந்தை நலம்
ஆ) மனைநலம்
இ) தன்னறம்
ஈ) மனையறம்
Answer:
ஈ) மனையறம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 11.
கூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.
கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

அ) கூற்று 1 தவறு 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 12.
கூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 13.
கூற்று 1 : ‘மணந்தகம்’ என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.
கூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 14.
கூற்று 1 : சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.
கூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை’ ஆகும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 15.
சரியானதைத் தேர்க.
அ) குடும்பு – தன்மனை
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை
இ) இல், மனை – நன்னூல்
ஈ) புக்கில் நிரந்தரமாகத் தங்குமிடம்
Answer:
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 16.
சரியானதைத் தேர்க.
அ) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – புறம் 276
ஆ) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 270
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278
ஈ) செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் – கலி, பாலை 8
Answer:
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278

Question 17.
சரியானதைத் தேர்க.
அ) குரம்பை – நகரம்
ஆ) புலப்பில் – கூட்டு இல்லம்
இ) குடில் – உச்சிப்பகுதி
ஈ) வரைப்பு – வாழிடம்
Answer:
ஈ) வரைப்பு – வாழிடம்

Question 18.
பொருந்தாததைத் தேர்க.
அ) நும்மனை – கணவனின் இல்லம்
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்
இ) தாய்வழிக் குடும்பம் – மருமக்கள் தாய முறை
ஈ) தந்தைவழிக் குடும்பம் – சிலம்பு கழி
Answer:
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்

Question 19.
பொருத்தித் தேர்க.
அ) சிலம்பு கழி – 1. திருக்குறள்
ஆ) குடும்பு – 2. ஐங்குறுநூறு
இ) குடும்பம் – 3. குறுந்தொகை
ஈ) புலப்பில் – 4. கூடி வாழ்தல்

அ) 2, 1, 3, 4
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
இ) 2, 4, 1, 3

Question 20.
பொருத்துக.
அ) மருமக்கள் தாய முறை – 1. ஆமய்
ஆ) அறிவுரை – 2. நோன்பு
இ) செவிலித்தாய் – 3. பதிற்றுப்பத்து
ஈ) சிலம்புகழி – 4. செவிலித்தாய்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 21.
எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?
அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) அரசு
Answer:
அ) குடும்பம்

Question 22.
குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை
அ) பெற்றோர்
ஆ) திருமணம்
இ) அரசு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) திருமணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 23.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.
ii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
iii) சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.

அ) i, ii சரி
ஆ) i, i சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 24.
‘இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே
மனையகம் புகாஅக் காலை யான’
– என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை

அ) அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்
இ) தலைவனின் வரைவுக் கடாதல்
ஈ) தோழி, தலைவி உரையாடல்கள்
Answer:
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்

Question 25.
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) அகநானூறு

Question 26.
தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) குறுந்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 27.
தன்மனை எனப்படுவது
அ) தற்காலிகத் தங்குமிடம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
ஈ) திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்
Answer:
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

Question 28.
மணந்தகம் என்பது
அ) மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
இ) கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்

Question 29.
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி …………. என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அ) நற்றாய்க்குரியது
ஆ) செவிலிக்குரியது
இ) தோழிக்குரியது
ஈ) முதியவருக்குரியது
Answer:
ஆ) செவிலிக்குரியது

Question 30.
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்
அ) தந்தை
ஆ) அரசன்
இ) தாய்
ஈ) அரசி
Answer:
இ) தாய்

Question 31.
சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Question 32.
‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Question 33.
‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 34.
‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்’ எனக் குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Question 35.
‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன்’ எனக் கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Question 36.
‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்’ என்று குறிப்பிடும் நூல் …………. திணை …………….
அ) ஐங்குறுநூறு, பாலை
ஆ) கலித்தொகை, பாலை
இ) அகநானூறு, முல்லை
ஈ) குறுந்தொகை, மருதம்
Answer:
ஆ) கலித்தொகை, பாலை

Question 37.
திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்
அ) ஐங்குறுநூறு
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
இ) அகநானூறு

Question 38.
தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.
அ) குறிஞ்சித்
ஆ) முல்லைத்
இ) மருதத்
ஈ) பாலைத்
Answer:
இ) மருதத்

Question 39.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் …………….. சென்று சேர்ந்தன.
அ) ஆண்களுக்குச்
ஆ) பெண்களுக்குச்
இ) அரசனுக்குச்
ஈ) ஏழைகளுக்குச்
Answer:
ஆ) பெண்களுக்குச்

Question 40.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.
அ) தன் தந்தையகத்தில்
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்
இ) தன் கணவனுடைய தாயகத்தில்
ஈ) தன் தாயகத்தில்
Answer:
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 41.
மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது
அ) பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு
ஆ) சிலம்புகழி நோன்பு
இ) சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சிலம்புகழி நோன்பு

Question 42.
‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Question 43.
‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
அ) குறுந்தொகை

Question 44.
இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Question 45.
‘மறியிடைப் படுத்த மான்பிணை போல்’ மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்
அ) அகநானூறு
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 46.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது
அ) கூட்டுக்குடும்பம்
ஆ) தனிக்குடும்பம்
இ) விரிந்த குடும்பம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தனிக்குடும்பம்

Question 47.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ……………. புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.
அ) வெள்ளைக்குடி நாகனாரின்
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்
இ) பரணரின்
ஈ) கபிலரின்
Answer:
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்

Question 48.
சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்
அ) நற்றாய்
ஆ) செவிலித்தாய்
இ) தோழி
ஈ) ததலைவி
Answer:
ஆ) செவிலித்தாய்

Question 49.
தமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி …………. காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.
அ) பனுவல் (தொகுதி II, 2010)
ஆ) பனுவல் (தொகுதி 1, 2010)
இ) பனுவல் (தொகுதி II, 2011)
ஈ) பனுவல் (தொகுதி 1, 2011)
Answer:
அ) பனுவல் (தொகுதி II, 2010)

Question 50.
தமிழர் குடும்பமுறை என்றும் கட்டுரையின் ஆசிரியர்
அ) சுப்ரமணிய பாரதி
ஆ) சோமசுந்தர பாரதி
இ) பக்தவத்சல பாரதி
ஈ) பழனிபாரதி
Answer:
இ) பக்தவத்சல பாரதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 51.
பக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்
அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை
ஆ) விலங்குகள், பறவைகள் சார்ந்தவை
இ) இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை

குறுவினா

Question 1.
மனித சமூகத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் உள்ளது. ஏன் ?
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்து ‘மனித சமூகம்’ எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
  • குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை இது : விரிவடைகிறது. எனவே, குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாகும்.

Question 2.
சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்புடன் தொடர்புடைய சொற்களாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
குடம்பை , குடும்பு, கடும்பு.

Question 3.
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள் யாவை ?
Answer:
இல், மனை.

Question 4.
வாழிடங்களுக்கு வேறு பெயர்களாக சங்க இலக்கியங்கள் காட்டுவன யாவை?
Answer:
இல், மனை, குரம்பை , புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 5.
‘மனை’ என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை எதன் மூலம் அறியலாம்?
Answer:

  1. நம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை இச்சொற்கள் வாழிடத்தைக் குறிக்கின்றன.
  2. பல்வேறு சொற்கள் வந்தாலும் ‘மனை’ என்ற சொல்லுடன் இணைந்து வருவதால் ‘மனை என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் என்பதை அறியலாம்.

Question 6.
‘மணந்தகம்’ என்றால் என்ன ?
Answer:
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையே ‘மணந்தகம்’ எனப்படும்.

Question 7.
சங்ககால கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தாள் என்பதற்கு இரு சான்று தருக.
Answer:

  • ‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ (புறம் 276)
  • ‘முௗரிமருங்கின் முதியோள் சிறுவன்’ (புறம் 277)

Question 8.
பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்படக் காரணம் என்ன ?
Answer:

  1. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
  2. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

Question 9.
தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் என்பது யாது?
Answer:

  • தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது.
  • இதுவே, தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் எனப்பட்டது.

Question 10.
‘விரிந்த குடும்ப முறை’ என்பது யாது?
Answer:
தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன்வாழ்வது ‘விரிந்த குடும்ப முறை’ எனப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 11.
சங்க கால மக்கள் இல்வாழ்வின் பயனாகக் கருதியவை யாவை?
Answer:

  1. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமை மிகுந்த மக்களுடன் வாழ்வது.
  2. அறத்தினை விரும்பிய சுற்றத்தாரோடு வாழ்வது.
  3. தலைவனும், தலைவியும் மனையறம் காத்து வாழ்வது.

Question 12.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் யாவை?
Answer:

  1. சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’ ‘குடும்பு’ ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.
  2. ‘குடும்பு’ என்ற சொல், கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

Question 13.
சங்க காலத்திலிருந்த தாய்வழிக்குடும்பம் குறித்தெழுதுக.
Answer:

  • சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய்வழிக்குடும்பம் இருந்துள்ளது.
  • திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன்வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

Question 14.
தாய்வழிக்குடும்ப முறையில் குடும்பத்தின் சொத்துகள் யாருக்குச் சென்று சேர்ந்தன?
Answer:

  • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
  • தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந். 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 15.
பக்தவத்சல பாரதி இயற்றியுள்ள நூல்கள் யாவை?
Answer:

  • இலக்கிய மானிடவியல்
  • பண்பாட்டு மானிடவியல்
  • தமிழர் மானிடவியல்
  • தமிழகப் பழங்குடிகள்
  • பாணர் இனவரைவியல்
  • தமிழர் உணவு

Question 16.
இளமகவுநிலைக் குடும்பங்கள் குறித்து ஐங்குறுநூறு கூறுவது யாது?
Answer:

  • இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. (408)
  • “மறியிடைப் படுத்த மான்பிணை போல” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். (ஐங்குறுநூறு 401)

சிறுவினா

Question 1.
சங்ககாலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
(i) சங்ககாலத்தில் ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர்ஊன்றி இருந்தது.

(ii) பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையின் வீட்டிலே வாழ வேண்டும் என்பதே ஆண் மையச் சமூகத்தின் அமைப்பு முறையாகும். மணமான பின்பு தலைவியைத் 112 தலைவன் அவனுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்வான்.

“நும்மனைச் சிலம்பு கழீக அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக”
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் (399:1-2) இதற்குச் சான்றாகும்.

(iii) மணமகளின் வாழிடம் கணவன் அகம் என்பதை இச்சான்று உறுதிப்படுத்தும்.
(iv) தந்தை வழி குடும்ப முறை பரவலாக இருந்துள்ளது.
(v) பொருள் வயிற்பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் போன்ற பல்வேறு சமூக களங்கள் மூலம் ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 1.
இடப்பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைப் பாடப்பகுதியிலிருந்து சான்று காட்டுக.
Answer:
தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.
சான்று: நான் புத்தகம் படித்தேன்.

தன்மைப் பன்மை
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும்.

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டுப் பேசுவது.
சான்று: நாம் முயற்சி செய்வோம்.

உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை
பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது.
சான்று: நாங்கள் முயற்சி செய்வோம்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
தமிழில் திணைப்பாகுபாடு …………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
Answer:
அ) பொருட்குறிப்பு

Question 2.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 3.
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
Answer:
ஆ) உயர்திணை, அஃறிணை

Question 4.
பொருத்துக.
அ) அவன் அவள் அவர் – 1. உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் – 2. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் – 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் – 4. பதிலிடு பெயர்கள்

அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 1, 2, 3

Question 5.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
Answer:
திணை , பால், எண், இடம்.

Question 6.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.
  • அவர்கள் ஆலயம் வந்தார்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ………….. பாகுபாடு அமைந்துள்ளது.
அ) இருதிணைப்
ஆ) பால்
இ) இடப்
ஈ) எண்
Answer:
ஆ) பால்

Question 2.
பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினைமுற்றின் ……………….. ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
அ) திணை , பால்
ஆ) திணை , எண்
இ) திணை , பால், எண்
ஈ) திணை , விகுதி
Answer:
இ) திணை , பால், எண்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 3.
‘அவர்கள்’ என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும்
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) பதிலிடு பெயர்ச்சொல்
ஈ) பதிலிடு வினைச்சொல்
Answer:
இ) பதிலிடு பெயர்ச்சொல்

Question 4.
தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………… இடத்திலும் வரும்.
அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

Question 5.
சரியானதைத் தேர்க.
அ) பத்துமரம் வீழ்ந்த து – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படவில்லை
ஆ) நாம் முயற்சி செய்வோம் – உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
இ) நாங்கள் முயற்சி செய்வோம் – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படுகிறது
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்
Answer:
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்

Question 6.
சரியானதைத் தேர்க.
அ) யார்? எது? – பால் வேறுபாடு
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்
இ) அவர் வந்தார் – பன்மைப் பொருளை உணர்த்துகிறது
ஈ) தங்கமணி பாடினான் – பெண்பால் விகுதி பெற்றுள்ளது
Answer:
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.
ஆ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளன.
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.
ஈ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளன.
Answer:
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) பத்துத் தேங்காய்கள்
ஆ) இரண்டு மனிதர்
இ) ஒரு மரம் வீழ்ந்த ன
ஈ) அவர்கள் வந்தார்கள்
Answer:
ஈ) அவர்கள் வந்தார்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 9.
பொருத்துக.
அ) பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள் – 1. ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர்
ஆ) பத்துத் தேங்காய் – 2. பலர்பால் சொல்
இ) தங்கமணி – 3. அஃறிணைபன்மைவிகுதிகட்டாயமில்லை
ஈ) மாணவர் வந்தனர் – 4. தன்மை, முன்னிலை, படர்க்கை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 1, 2
இ) 4, 1, 3, 2
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 4, 3, 1, 2

Question 10.
மொழியின் அடிப்படைப் பண்புகள்
i) திணை
ii) பால்
iii) எண்
iv) இடம்

அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) ili), iv) சரி மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 11.
உலக மொழிகள் அனைத்திலும் ………….. மிகுதி என்பர்.
அ) பெயர்ச்சொற்களே
ஆ) வினைச்சொற்களே
இ) இடைச்சொற்களே
ஈ) உரிச்சொற்களே
Answer:
அ) பெயர்ச்சொற்களே

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 12.
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் …………….. வகையாகப் பிரிப்பர்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 13.
தமிழில் ……………. பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அ) எண்
ஆ) செய்யுள்
இ) இலக்கிய
ஈ) பால்
Answer:
ஈ) பால்

Question 14.
…………. அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.
அ) பால்
ஆ) இட
இ) தன்மை, முன்னிலை
ஈ) ஒருமை, பன்மை
Answer:
ஈ) ஒருமை, பன்மை

Question 15.
இடம் …………… வகைப்படும்.
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 16.
தன்மைப் பன்மையில் உள்ள வகை …………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 17.
பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

Question 18.
பேசுபவர் முன்னிலையாளரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

Question 19.
நாம் முயற்சி செய்வோம் என்பது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தா முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

Question 20.
நாங்கள் முயற்சி செய்வோம் என்பது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தா முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

குறுவினா

Question 1.
மொழியின் பண்புகள் யாவை?
Answer:
திணை , பால், எண், இடம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 2.
பயனிலை விகுதிகளில் எவை பால் பகுப்பைக் காட்டுகின்றன?
Answer:
ஆன், ஆள், ஆர், அது, அன்.

Question 3.
தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளதை உணர்த்தும் இரு தொடர்களை எழுதுக.
Answer:

  • காளைமாடு வயலில் உழுதது.
  • ஆண்குரங்கு மரத்தில் குதித்தது.

Question 4.
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர்? அவை யாவை?
Answer:
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் இருவகையாகப் பிரிப்பர். அவை: உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர்.

Question 5.
இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இடம் மூவகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.

Question 6.
பதிலிடு பெயர்கள் யாவை?
Answer:
அவன், அவள், அவர், அது, அவை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 7.
தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படுவன யாவை?
Answer:

  • பேசுபவன்
  • முன்னிருந்து கேட்பவன்
  • பேசப்படுபவன் (அல்லது) பேசப்படும் பொருள்
    ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படும்.

Question 8.
உளப்பாட்டுத்தன்மைப் பன்மை என்பது யாது?
Answer:
பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடைய சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.
சான்று : நாம் முயற்சி செய்வோம்.

Question 9.
உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை என்பது யாது?
Answer:
பேசுபவர் முன்னிலையாரையும் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.
சான்று : நாங்கள் முயற்சி செய்வோம்.

Question 10.
தன்மைப் பன்மையின் வகைகள் யாவை?
Answer:
தன்மைப்பன்மை இரண்டு வகைப்படும். அவை: உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Question 11.
மொழியின் இலக்கணம் குறித்துத் தமிழ் நடைக் கையேட்டின் கூற்று யாது?
Answer:
ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்பது தமிழ் நடைக் கையேட்டின் கூற்றாகும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவு கூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், ‘நீயே புருஷ மேரு…..
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 1
‘ என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். அவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதபா முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய அவர், மாயூரம் வேதநாயகம் தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், (1826 – 1889 இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி.

1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டார் ; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூ ல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். அவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். அவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி :

“கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்” என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது.

பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, “என் கண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்விடி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது ? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?” என்றார்.

வினாக்கள்:

1. தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன?
2. தமிழின் முதல் நாவல் எது? அதனை எழுதியவர் யார்?
3. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் யாவர்?
4. தமிழின் முதல் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்?
5. பார்த்தாள் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
6. மாயூரம் வேதநாயகம் எழுதிய நூல்கள் யாவை?
7. ‘சொன்னேன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் எது?
Answer:
1. தாது வருடப் பஞ்சம்.
2. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். அதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம்.
3. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர்.
4. மாயூரம் வேதநாயகம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

5. பார்த்தாள் – பார் + த் + த் + ஆள்
பார் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

6. ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.

7. வேர்ச்சொல் – ‘சொல்’.

மொழிப் பெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக

In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy.

This led Kenya to Kenya’s first fully elections in a generation. In the election,democratic Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformed the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

1977-ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யாநாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர்.

அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல் முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்தலில் வங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார்.

கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற | பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசுவழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் சமூகக்காடுகள்வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண் களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

எ.கா: Green Belt Movement – பசுமை வளாக இயக்கம்

1. devastation – பேரழிவு
2. deforestation – காடழிப்பு
3. thirty years – முப்பது ஆண்டுகள்
4. founded – நிறுவப்பட்டது
5. regions – மண்டலங்கள்
6. providing – விநியோகம்
7. halting – ஓய்விடங்கள்
8. soil erosion – மண்ண ரிப்பு
9. desertification – பாலைவனமாக்கல்
10. enlighten – அறிவூட்டல்
11. representative – பிரதிநிதி
12. generation – தலைமுறை
13. democracy – குடியாட்சி
14. parliament – நாடாளுமன்றம்
15. election – தேர்தல்
16. success – வெற்றி
17. tens of thousands – பல்லாயிரக்கணக்கான
18. thirty million – மூன்றுகோடி
19. social forestry schemes – சமூக காடுகள் வளர்ப்புத் திட்டம்
20. Minister of environment – சுற்றுச்சூழல் அமைச்சர்

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. தலை, தளை, தழை
2. கலை, களை, கழை
3. அலை, அளை, அழை
எ.கா : விலை, விளை, விழை
கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

1. தலை, தளை, தழை
ஆட்டிற்குத் தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனைத் தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்துச் சென்றான்.

2. கலை, களை, கழை
கழை காட்டில் தீப்பிடித்ததால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன.

3. அலை, அளை, அழை
கடலலையில் விளையாடச் சென்ற முருகன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்தான்.

இலக்கிய நயம் பாராட்டுக

வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது ;
தொட்டியிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! – பாரதியார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

முன்னுரை :
இப்பாடலைப் பாடியவர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த இவர் இளைமையிலே கவிப்பாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களைப் பாடியதால் தேசியக் கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் நூல்கள் மிகவும் சிறப்புப் பெற்றவையாகும்.

திரண்ட கருத்து :
பூமியை நோக்கி அடிக்கும் மின்னலானது பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருக்கின்றது. சூறாவளி காற்று அடிப்பதால் விண்ணைத் தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசையானது காதால் கேட்க முடியாத அளவிற்குக் கொட்டி இடிக்கின்றது.

‘கூகூ’ என்ற ஓசையுடன் காற்றானது வேகமாக வீசி விண்ணைக் குடைகின்றது. மழைத்துளி மண்ணில் விழும் போது உண்டாகும் ஒலியோ மத்தளங்கள் இசைத்துத் தாளம் போடுவது போல ஒலிக்கின்றன. இடைவிடாமல் மழையைப் பொழிந்து பொழிந்து வானம் கனைக்கின்றது. எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை எப்படிப் பூமியை வந்தடைந்தது.

மோனை நயம் :
குயவனுக்குப் பானை
செய்யுளுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும்.

சான்று:
வெட்டியடிக்குது
ட்டுத்திசையும்
வீரத்
ங்ஙனம்

எதுகை நயம் :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதலெழுத்து அளவு ஒத்துநிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

சான்று:
வெட்டியடிக்குது
தொட்டி
ட்டச்சட
ட்டுத்திசையும்

அணி நயம் :
அணியற்ற கவிதை
பிணியுள்ள வணிதை
மழையின் சிறப்பை உணர்த்த மழை பெய்வதற்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளான இடி இடித்தல், மின்னல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

சொல் நயம் :
சொல் போனால்
பல் போகும்
பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலியின்பத்தையும் புதிய பொருளுணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

சந்த நயம் :
சந்தம் தமிழுக்குச் சொந்தம்
ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் சிந்துப் பா வகையைச் சார்ந்ததாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

முடிவுரை :
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக.

பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம்
நாள் : அக்டோபர் 2
நேரம் : காலை 10 மணி
இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 2
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 3

பத்தி:
அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு, அமுதன் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் இயற்கைச் சீற்றங்களும் பருவகால மாற்றங்களும் என்ற தலைப்பிலும், திரு.

முகிலன் அவர்கள் பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் என்ற தலைப்பிலும், திருமதி. பாத்திமா அவர்கள் நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலும், திரு. வின்சென்ட் அவர்கள் பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் என்ற தலைப்பிலும் கருத்துகளைத் தர உள்ள னர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் ஜமீலா அவர்கள் நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், 112 கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மொழியோடு விளையாடு

புதிர்க்கேற்ற விடையை அறிக.

அ) அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் – என்ன ?
Answer:
ஈசல்

ஆ) தண்ணீ ரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது – என்ன?
Answer:
கிளி

இன்னும் புதிர் அறிவோம்

1. கறுத்த ரோஜா மொட்டு
கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும்
காத்திடும் பின் சாய்ந்திடும்
அது என்ன ?
Answer:
குடை

2. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்
மூத்த பெண் ஆற்றிலே ;
நடுப்பெண் காட்டிலே ;
கடைசிப் பெண் வீட்டிலே ;
அவைகள் யாவை?
Answer:
முதலை, உடும்பு, பல்லி

3. நான் ஏறும் குதிரை
நாலுகால் குதிரை
அந்தக் குதிரைக்கு
ஆயிரம் கண்கள் அது என்ன?
Answer:
கட்டில்

எண்ணங்களை எழுத்தாக்குக

வளமாக எல்லோரும் வாழ வசதியான இயற்கையைத் தந்த பூமியாகிய நான் இன்று வெப்பமிகுதியால் உருகிக் கொண்டிருக்கின்றேன். பச்சை பட்டாடை உடுத்தி பசுமையைத் தந்த என்னை வெம்மை என்னும் : – காட்டிலே தள்ளி விடும் மனித இனமே நான் இல்லை என்றால் நீ எப்படிப் பூமியில் வாழ்வாய் …!
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 4
எல்லா காலங்களிலும் பருவங்கள் தவறாது மழையைத் தந்தேன். நீங்கள் எல்லோரும் வளமாய் வாழ நல்ல நிலத்தைத் தந்தேன். உங்களுடைய சுயநலத்திற்காக என் அன்பு மகளாம் வளமான காட்டை அழித்து என்னை வறுமையாக்கி, வறட்சியை உண்டுபண்ணியது ஏன்?

இன்றைய வெப்ப மிகுதியால் என் உடல் சூடேறுகிறது. என்னைக் குளிர்விக்க வேண்டிய நீங்களே மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டுக்கின்றீர்கள் என்று எனக்காக அல்ல உங்களுக்காகக் கேட்கிறேன்: எப்போது ஒரு மரத்தை நடப்போகின்றீர்கள் அனலாகக் கொதிக்கும் என் உடலைக் கொஞ்சமாவது குளிர்விப்பாயா?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

நஞ்சாகி வரும் நெகிழியை முற்றிலுமாகத் தவிர்த்து விடு. என் மேனியடையும் சூட்டைக் குறைத்து விடு ; எல்லா வளத்தையும் இலவசமாகத் தரும் என்னைக் காக்க மறந்திடாதீர்கள்! வரும் தலைமுறையினரும் வாழ்ந்திட நீங்கள் தடையாக இருக்காதீர்கள்.

மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக உங்கள் பள்ளி தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுது.

அனுப்புநர்
அஅஅஅ,
நிலை 12 ‘அ’ பிரிவு,
அரசு மேனிலைப்பள்ளி,
திருச்சி – 4.

பெறுநர்
உயர்திரு. தலைமையாசிரியர் அவர்கள்,
அரசு மேனிலைப்பள்ளி,
திருச்சி – 4.

ஐயா,

பொருள் : மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுவது தொடர்பாக.

வணக்கம்.
நான் தங்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு ‘அ’ பிரிவில் பயின்று வருகின்றேன். தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண் டியது அவசியமாகும்.

எனவே, மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை , ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த போதிய விழிப்புணர்வை உரிய நபர்கள் மூலம் வழங்கினீர்கள் என்றால் எங்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும்.

ஆகவே, தாங்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து அனைத்து மாணவர்களும் போதிய விழிப்புணர்வைப் பெற உதவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி,
09.07.2019.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅ.

உங்கள் பகுதியில் புழங்கும் இருபது சொற்களைக் கொண்டு வட்டார வழக்குச் சொல் தொகுப்பு ஒன்றை உருவாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 6
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் 7

படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர் வண்டி நிலையம்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

1. Platform – நடைைேட
2. Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
3. Train Track – இருப்புப்பாதை
4. Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
5. Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
6. Metro Train – மாநகரத் தொடர்வண்டி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.4 முதல்கல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.4 முதல்கல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 1.
உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று ஒன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வாங்கும் நோக்கங்களையும் அதனைப் பயிரிடுவதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.
Answer:
மரக்கன்று வழங்குதன் நோக்கம் :

  • மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழல்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குதல்.
  • பழம், பட்சணம், வெற்றிலை போன்றவற்றைப் பையிலே போட்டுக் கொடுப்பதைவிட மரக்கன்றுகள் கொடுப்பது சாலச்சிறந்தது.
  • சுற்றுச்சூழலை நல்லமுறையில் அமைக்கவே மரக்கன்றுகள் வழங்குதல்.

பொது நலன்கள் :

  • மரக்கன்றுகள் வளர்ப்பதால் நல்ல தூய காற்று கிடைக்கும்.
  • கோடையில் நிழல் உருவாகும்.
  • மரங்கள் மாசுக்களைக் கட்டுப்படுத்தும்
  • மரங்கள் குளிர்ச்சி தரும்
  • குளிர்ச்சியால் மழை உண்டாகும்.
  • மழை பொழிந்தால் மண் மகள் சிலிர்ப்பாள்.
  • மழையால் பயிர்வளம் பெருகும்.
  • பயிர்வளத்தால் விவசாயம் பெருகும்.
  • விவசாயம் பெருகினால் வீடு நலம் பெறும்.
  • வீடு நலம் பெற்றால் நாடு தானே வளம் பெறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை :
உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மழையின் கோரம் :
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம் போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன்.

உபரிநீர் வெளியேற்றம் :
காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான். உபரித் தண்ணீர் வெளியேற வேண்டிய மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மண்டிக்கிடந்த நெய்வேலி காட்டாமணக்கு தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்.

மருதனின் நல்யோசனை :
மருதன், பயிர்கள் மூழ்காமலும் மொத்த கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியைப் பிடுங்கி அரிந்தான்.

மாரி வருதல் :
மாரி இந்தச் சனியன்பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்ததை எண்ணி மருதன் கோபம் அடைந்தான்.

மருதனின் ஆக்கம் :
இப்படியே போனால் ஊரே நாற்றம் எடுத்து விடும் என்று ஏக்கத்தோடு செடிகளைப் பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளியப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான். அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

மருதனின் புலம்பல் :
வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன 112 வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான்.

அல்லி வருதல் :
முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி. தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை : வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.

மாமா நீ சொல்றது நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.

ஊர் மக்கள் வரல் :
நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்டு வாய்க்காலில் இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது .

முடிவுரை :
”அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
என்பதற்கு ஏற்பவாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராய்ந்து செயல்பட்டு ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்புநலன் பாராட்டத்தக்கது.

Question 2.
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஊர்ப் பொது மக்கள்,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி.

பெறுநர்
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.

ஐயா,
பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக.

வணக்கம்.
கடந்த மாதம் நான்காம் நாள் பாளையங்கோட்டையில் வீசிய தானே புயலால் மரங்கள் மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள்கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரிசெய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப் பொது மக்கள்.
பாளையங்கோட்டை.

உறைமேல் முகவரி:
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
அ) செல்வன்
ஆ) செயராஜ்
இ) செல்வராஜ்
ஈ) செல்லத்துரை
Answer:
இ) செல்வராஜ்

Question 2.
‘முதல்கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
அ) ஆரம்பம் இப்படித்தான்
ஆ) சிந்து டீச்சர்
இ) தஞ்சை சிறுகதைகள்
ஈ) குருவி மறந்த கூடு
Answer:
இ) தஞ்சை சிறுகதைகள்

Question 3.
‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) உத்தம சோழன்
இ) ஜானகிராமன்
ஈ) சுஜாதா
Answer:
ஆ) உத்தம சோழன்

Question 4.
காளியப்பன் தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்ததாகக் கூறிய ஊர்
அ) வானமாதேவி
ஆ) உலகளந்தாள் தேவி
இ) சூரப்பள்ளம்
ஈ) கிழக்குக்கரை
Answer:
அ) வானமாதேவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 5.
கூற்று 1 : வீட்டுக்கு ஒரு ஆள் அரிவாள், மண்வெட்டியுடன் வடிவாய்க்கால் கரைக்கு வர வேண்டும்.
கூற்று 2 : நீ சொல்வது நிஜம்தான் மாமா. ஊர் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 6.
கூற்று 1 : “இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா ?”
கூற்று 2 : ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) மருதன் – குமுதம்
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை
இ) காளியப்பன் – வேலையாள்
ஈ) மாரிமுத்து – விவசாயி
Answer:
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
ஆ) அல்லி – மருதனின் அம்மா
இ) முல்லையம்மா – காளிப்பனின் தாய்
ஈ) காளியப்பன் – வசதியற்றவர்
Answer:
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) வடிவாய்க்கால் – காட்டாமணக்குச் செடி
ஆ) பூவரச தழை – மாட்டுக்கு உணவு
இ) காளியப்பன் – வில் வண்டி
ஈ) மருதன் – அல்லி
Answer:
இ) காளியப்பன் – வில் வண்டி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 10.
பொருத்துக.
அ) முல்லையம்மா – 1. வலைபோடுபவர்
ஆ) நாகூர் பிச்சை – 2. அல்லி
இ) மாரிமுத்து – 3. காளியப்பன்
ஈ) மருதன் – 4. பிரேம்குமார்

அ) 3, 1, 2, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 3, 4, 1, 2

Question 11.
தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உரியவர்
அ) செல்வராஜ்
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்
இ) மேலாண்மை பொன்னுசாமி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்

Question 12.
உத்தம சோழனின் ஊர்
அ) கும்பகோணம் அருகே சிவபுரம்
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
இ) கடலூர் அருகே மஞ்சக்குப்பம்
ஈ) மயிலாடுதுறை அருகே தேரழந்தூர்
Answer:
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்

Question 13.
மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) சோலை சுந்தரப் பெருமாள்
ஆ) உத்தமசோழன்
இ) மேலாண்மை பொன்னுச்சாமி
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) உத்தமசோழன்

Question 14.
உத்தமசோழன் எழுதாத சிறுகதையைக் கண்டறிக.
அ) தொலைதூர வெளிச்சம்
ஆ) கசக்கும் இனிமை
இ) கனல்பூக்கள்
ஈ) காவல்கோட்டம்
Answer:
ஈ) காவல்கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 15.
உத்தமசோழன் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ்
அ) கிழக்கு வாசல் உதயம்
ஆ) மேற்கு வாசல் மறைவு
இ) வடக்கு வாசல் வாடை
ஈ) தெற்குவாசல் தென்றல்
Answer:
அ) கிழக்கு வாசல் உதயம்

Question 16.
‘முதல் கல்’ கதையில் இடம்பெறும் கிழவி ………….. கிழவன் …………………..
அ) முல்லையம்மாள், காளியப்பன்
ஆ) காளியம்மாள், முல்லையப்பன்
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) பார்வதி, சிவக்கொழுந்து
Answer:
அ) முல்லையம்மாள், காளியப்பன்

Question 17.
‘முதல் கல்’ கதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாகக் குறிப்பிடப்படுபவர்
அ) மருதன்
ஆ) மாரி
இ) பிரேம்குமார்
ஈ) அல்லி
Answer:
இ) பிரேம்குமார்

Question 18.
‘முதல் கல்’ கதையில் பிரேம்குமாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
அ) அமாவாசை
ஆ) பிச்சைமுத்து
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) நாகூர்பிச்சை
Answer:
ஈ) நாகூர்பிச்சை

Question 19.
‘முதல் கல்’ கதையில் மருதன் தொடங்கிய பணி
அ) நெல் அறுவடை
ஆ) வடிவாய்க்கால் தூய்மை
இ) கல் அறுத்தல்
ஈ) குளம் வெட்டுதல்
Answer:
ஆ) வடிவாய்க்கால் தூய்மை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 20.
‘முதல் கல்’ கதையின் நாயகன் மருதனின் மனைவி
அ) முல்லையம்மாள்
ஆ) மாரியம்மாள்
இ) அல்லி
ஈ) வள்ளி
Answer:
இ) அல்லி

நெடுவினா

Question 1.
‘ஊர்கூடித் தேர் இழுக்கும் போதும்’ தேர் வடத்தைப் பிடிக்கும் முதல்கரமான இருந்த மருதனின் பண்பு நலத்தை விவரி.
Answer:
முன்னுரை :
செல்வராஜ் என்னும் இயற்பெயருடைய உத்தம சோழன் எழுதிய முதல்கல்’ என்ற கதையில் வரும் மருதன் ஊர் மீது அதிக அக்கறை உடையவன். பெருமழை பொழிந்து வெள்ளமானது ஊரைச் சூழ்ந்து இருக்கும் நீரை வடிய வைத்து பயிர்களைக் காப்பாற்றும் முனைப்புடன் செயல்படும் மருதனின் பண்பு நலன்களை இக்கட்டுரை மூலம் அறிவோம்.

பயிர்களின் நேசன் :
பயிர் விளைச்சலுக்காக எந்த மழைக்காகக் காத்திருந்தார்களோ அந்த மழையே பயிர்களை மூழ்கடித்தால் எப்படி மனம் பொறுத்துக் கொள்ளும். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதைக் கண் டதும் மருதன் வருத்தம் அடைகின்றான். ஊரில் உள்ள பல நபர்களிடம் உதவியும் கேட்கின்றான். எதுவுமே நடக்கவில்லை என்றதும் வேதனை அடைகின்றான். தண்ணீரில் தத்தளித்துக் கொண் டிருந்த நெற்பயிர்கள் அத்தனையும், “என்னைக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று அவனைப் பார்த்து வேண்டுவதாக உணர்கிறான். இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஊர் வளத்தைக் காப்பாற்றும் உயர்குணம் :
வடிவாய்க்கால் முழுவதும் இருபுறமும் சுவர்போல வளர்ந்திருந்த காட்டமாணக்குச் செடிகளை அப்புறப்படுத்தி விட்டால், பயிர்களைக் காப்பாற்றுவதுடன், ஊரையும் காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியதும் மருதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, வடிநீரை வடித்து ஊரைக்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் வந்ததும், தான் தனியாகச் செய்து மதிப்பு அடையலாம் என்று எண்ணாமல் அனைவருடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண் ணம் மேலிட ஒவ்வொருவரிடமும் உதவியைக் கேட்கும் உத்தம உயர்குணம் கொண்டவனாக மருதன் விளங்குகிறான்.

கடமையை உயிராகக் கருதியவன்
மருதன் காட்டாமணக்குச் செடிகளை அப்புறப்படுத்த மாரியிடம் உதவி கேட்கும் போதும் ; பெரிய மிரசாக வலம் வரும் காளியப்பனிடம் இது பற்றிப் பேசும் போதும் ; கிராமத்தின் முதல் பட்டதாரியான பிரேம்குமாரிடம் பேசி விவரத்தை விளக்கி ஏமாற்றம் அடையும் போதும் ; தன் ஆற்றாமையை தன் மனைவி அல்லியிடம் கூறிப் புலம்பும் போதும் மனம் தளராமல் தன் கடமையை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற அவனது மன உறுதிப்பாடு கூறிப் புலனாகும். தனியாளாகச் செய்ய முடியாத இச்செயலுக்காக எல்லோரின் உதவியையும் மருதன் நாடுவது அவனது பொதுநலனை வெளிப்படுத்துகின்றது.

மருதனின் பொதுநலன்
அந்த ஊரில் இருந்த அறுபது வேலி நிலத்தில் ஒரு ‘சக்கரைக்குழி’ அளவு கூட நிலம் இல்லாத மருதன் பொதுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எப்படியாவது நீரை வடித்துவிட வேண் டும் என்ற எண்ணத்துடனே மருதன் இருக்கின்றான். மருதன் அவனுக்குப் புகழ் கிடைக்க வேண் டுமென்று செயல்படவில்லை. நீரில் மூழ்கும் அத்தனை பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; ஊரினைச் சூழ்ந்திருக்கும் நீரினை வடிய விட வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது.

ஊருக்கு வழிகாட்டிய தலைமைப்பண்புடையவன் :
இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்த மருதன் விடிவதற்குள் தனி ஒருவனாய் வடிவாய்க்காலில் இறங்கி இருபுறமும் சூழ்ந்திருந்த காட்டாமணக்குச் செடிகளை அரிந்து அப்புறப்படுத்தினான். இதனைக் கண்ட அவனது மனைவி அல்லியும் உதவிக்கு ஓடி வர,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

வலைபோட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவும் அவனுடன் இணைய, செலவு வந்திடுமே என்ற எண்ணத்தால் மகள் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வில் வண்டியில் சென்று கொண்டிருந்த மிராசு 112 காளியப்பனும் வடிவாய்க்காலில் இறங்க ஊரே ஒன்றாகக் கூடிவந்து காட்டாமணக்குச் செடியை ஆர்வமாக அப்புறப்படுத்த மருதன், வழிகாட்டியாக விளங்கினான்.

முடிவுரை :
சுயநலம் இல்லாமல், பொதுநலனைக் கருத்தில் கொண்டு நாமே செயலில் இறங்கினால் வெற்றி பெறலாம் என்ற உயர்ந்த குணம் உடையவான மருதன் இருப்பதைக் காணலாம். நமக்கு :ஏன் வீண் வம்பு என்று ஒதுங்காமல் முதலில் நம்மால் முடிந்தததைச் செய்வோம் என்ற துணிவுடன் செயலில் இறங்கிய மருதன் தேர்வடத்தைப் பிடித்த முதல் கரமாக விளங்கினான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.3 நெடுநல்வாடை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.3 நெடுநல்வாடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 1.
தற்கால வாழ்க்கைமுறையில் மழை, குளிர் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : மாணவ – மாணவியருக்கு வணக்கம், இன்று, மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புப் பற்றி உங்களோடு கலந்துரையாட வந்துள்ளேன்.

மாணவர்கள் : ஐயா! அறிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கிறோம்.

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி! சொல்கிறேன்.

மாணவர்கள் : உறுதியாக ஐயா! நாங்கள் உங்கள் அறிவுரைப்படியே நடந்து கொள்வோம் ஐயா!

ஆசிரியர் : நல்லது, அன்பு மாணவர்களே!

முதலாவதாக மழைக்காலப் பாதிப்பு :

  • மழைக்காலங்களில் மழை – ஆடை அணிந்து கொள்ளவில்லை என்றால் சளி, சுரம் இவைகளின் வாயிலாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும்.
  • வீட்டினைச் சுற்றி மேடான அமைப்பு இல்லை எனில் மழை நீர் தேங்கும். நீர்தேங்கினால் கொசுத்தொல்லை ஏற்படும் அபாயம் ஏற்படும்.
  • மழைக்காலத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்றல், மரங்களுக்குக் கீழே நிற்றல் போன்ற செயல்களாலும் பாதிப்பு மற்றும் ஆபத்து ஏற்படும்.
  • மொட்டை மாடியின் மேல் நீர்தேங்காமல் பாதுகாக்க வேண்டும், தேங்கினால் மேற்கூரை நீரினால் ஊறி வீடே இடிந்துவிழும் சூழல் ஏற்படும்.
  • குளிர்காலங்களில், தலைக்கு கம்பளி ஆடை, காதுக்கு அடைப்பானும் அணிய வேண்டும், இல்லையெனில் குளிர்க்காற்று காதில் புகுந்து காய்ச்சில், சளி தொந்தரவினை உண்டாக்கும். அதிகமான குளிர் சிறு குழந்தைகளுக்குச் சிறுசிறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
  • எனவே, வருமுன்னர் காப்போம் என்னும் கூற்றுப்படி நம்மை நாமே காக்க முற்பட வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தக.
அ) குரங்குகள் – 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் – 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் – 3. குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் – 4. மேய்ச்சலை மறந்தன

அ) 1, 3, 4, 2
ஆ ) 3, 1, 2, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ ) 3, 1, 2, 4

Question 2.
‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென’ – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத் தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answer:
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

Question 1.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
Answer:
இனநிரை – இனம் + நிரை
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்’ என்ற விதிப்படி, மவ்வீறு ஒற்றழிந்து ‘இனநிரை’ எனப் புணர்ந்தது.

சிறுவினா

Question 1.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  1. வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது.
  2. தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகிறது.
  3. கோவலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினர்.
  4. பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைந்ததால் வருந்தினர்.
  5. தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பி விடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலே படுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் : உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

நெடுவினா

Question 1.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:
(i) ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.

(ii) முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது.

(iii) மேகம் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாக சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழைப் பொழிந்தது. மழை வெள்ளம் தாழ்வானப் பகுதியை நோக்கிச் சென்றது. வெள்ளத்தை வெறுத்த மக்கள் / வளைந்த கோலையுடைய ஆயர்கள் தம் நிரைகளை மேடான

(iv) பகுதியில் மேயவிட்டனர். மக்கள் தாம் பழகிய நிலத்தைவிட்டு வேறு இடம் சென்றதால் வருத்தம் அடைந்தனர். கோவலர்கள் சூடியிருந்த காந்தள் மாலை கசங்கியது. குளிரால் மக்கள் கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர், பற்கள் நடுங்கியது.

(v) விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின பறவைகள் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.

(vi) மலையையே குளிரச் செய்வன போன்று இருந்தது என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார்.

இலக்கணக் குறிப்பு

வளைஇ – சொல்லிசை அளபெடை
பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
புதுப்பெயல் – பண்புத்தொகை
கொடுங்கோல் – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ
கலங்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

புணர்ச்சி விதி

புதுப்பெயல் = புதுமை + பெயல்

  • ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு புது + பெயல் என்றானது.
  • ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி ப் தோன்றி, புதுப்பெயல்’ எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்
அ) சூரியன்
ஆ) வெள்ளம்
இ) கடல்
ஈ) நிலா
Answer:
ஆ) வெள்ளம்

Question 2.
‘கலங்கி’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கல+ங்+க்+இ
ஆ) கலங்கி +இ
இ) கலங்கு+க்+இ
ஈ) கலங்கு+இ
Answer:
ஈ) கலங்கு+இ

Question 3.
வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
அ) வடமேற்கு
ஆ) வடக்கு
இ) தென்கிழக்கு
ஈ) தெற்கு
Answer:
ஆ) வடக்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 4.
போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
அ) கடவை
ஆ) சிவிரம்
இ) கூதிர்ப்பாசறை
ஈ) வீடாரம்
Answer:
இ) கூதிர்ப்பாசறை

Question 5.
ஆயர்கள் சூடியிருந்த மாலை
அ) குறிஞ்சி மாலை
ஆ) மல்லிகை மாலை
இ) வாகை மாலை
ஈ) காந்தள் மாலை
Answer:
ஈ) காந்தள் மாலை

Question 6.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) கொடுங்கோல்
ஆ) புதுப்பெயல்
இ) வலனேற்பு
ஈ) கண்ணுடைய
Answer:
இ) வலனேற்பு

Question 7.
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) இனநிரை
ஆ) ஏறுடை
இ) புதுப்பெயல்
ஈ) கொடுங்கோல்
Answer:
அ) இனநிரை

Question 8.
‘வளைஇ’ – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) மரூஉ
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இசைநிறையளபெடை
ஈ) இன்னிசையளபெடை
Answer:
ஆ) சொல்லிசை அளபெடை

Question 9.
வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
அ) காஞ்சி
ஆ) தும்பை
இ) வாகை
ஈ) வஞ்சி
Answer:
இ) வாகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 10.
கூற்று 1 : தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
கூற்று 2 : கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
இ) கூற்று இரண்டும் சரி

Question 11.
கூற்று : வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு, ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
விளக்கம் : உலகம் குளிருமாறு புதிய மழை பொழிந்ததால் தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால் மேடான நிலம் சென்றனர்.
அ) கூற்று சரி விளக்கம் தவறு
ஆ) கூற்று தவறு விளக்கம் தவறு
இ) கூற்றும் விளக்கமும் சரி
ஈ) கூற்று தவறு விளக்கம் சரி
Answer:
இ) கூற்றும் விளக்கமும் சரி

Question 12.
சரியானதைத் தேர்க.
அ) வாகை – துறை
ஆ) கூதிர்ப்பாசறை – திணை
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
ஈ) கண்ணி – கன்னம்
Answer:
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்

Question 13.
பொருந்தாததைத் தேர்க.
அ) புதுப்பெயல் – புதிய வயல்
ஆ) புலம்பு – தனிமை
இ) மா – விலங்கு
ஈ) கவுள் கன்னம்
Answer:
அ) புதுப்பெயல் – புதிய வயல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 14.
பொருந்தாததைக் தேர்க.
அ) புதுப்பெயல் – ஈறுபோதல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
ஆ) கொடுங்கோல் – ஈறுபோதல், இனமிகல்
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஈ) இனநிரை – மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
Answer:
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

Question 15.
பொருத்துக.
அ) ஆர்கலி – 1. பெண் குரங்கு
ஆ) கவுள் – 2. தலையில் சூடும் மாலை
இ) மந்தி – 3. கன்ன ம்
ஈ) கண்ணி – 4. வெள்ளம்

அ) 3, 4, 1, 2
ஆ) 2, 1, 4,3
இ) 4, 3, 1, 2
ஈ) 4, 1, 3, 2
Answer:
இ) 4, 3, 1, 2

Question 16.
நெடுநல்வாடையை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) நக்கீரர்
ஈ) மோசிகீரனார்
Answer:
இ) நக்கீரர்

Question 17.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
அ) சோழன் கரிகாலன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) பறம்புமலை பாரி
Answer:
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 18.
நக்கீரரின் தந்தை
அ) மதுரைக் கணக்காயனார்
ஆ) மாங்குடி மருதனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) இவர்களில் எவழருமிலர்
Answer:
அ) மதுரைக் கணக்காயனார்

Question 19.
நெடுநல்வாடை …………. நூல்ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 20.
நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
அ) 144
ஆ) 150
இ) 188
ஈ) 196
Answer:
இ) 188

Question 21.
நெடுநல்வாடை அமைந்துள்ள பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 22.
கலங்கி – இச்சொல்லைப் பிரிக்கும் முறை
அ) கல + ங் + க் + இ
ஆ) கலங்கு + இ
இ) கலங்கு + க் + இ
ஈ) கல + க் + க் + இ
Answer:
ஆ) கலங்கு + இ

Question 23.
புதுப்பெயர் – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, iii சரி
Answer:
ஈ) i, iii சரி

Question 24.
கூதிர்ப்பருவத்திற்குரிய மாதங்கள்
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஐப்பசி, கார்த்திகை
ஈ) மார்கழி, தை
Answer:
இ) ஐப்பசி, கார்த்திகை

Question 25.
கண்ணி என்பது
அ) கழுத்தில் அணியும் மாலை
ஆ) தலையில் சூடும் மாலை
இ) கையில் அணியும் அணிகலன்
ஈ) காலில் அணியும் தழல்
Answer:
ஆ) தலையில் சூடும் மாலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 26.
கூதிர்ப் பாசறை என்பது
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
ஆ) போர்மேற் சென்ற அரசன் தோற்றுப் பதுங்கும் படைவீடு
இ) தலைவனும் தலைவியும் குளிர்காலத்தில் தங்கும் வீடு
ஈ) போரில் காயம் அடைந்த மன்னன் சிகிச்சை பெறுமிடம்
Answer:
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு

Question 27.
ஆயர் ………… மாலையைத் தலையில் சூடியிருந்தனர்.
அ) அத்தி
ஆ) முல்லை
இ) காந்தள்
ஈ) குறிஞ்சி
Answer:
இ) காந்தள்

Question 28.
முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
அ) பறவைகள்
ஆ) குரங்குகள்
இ) பசுக்கள்
ஈ) எருதுகள்
Answer:
ஆ) குரங்குகள்

Question 29.
‘மா’ என்பதன் பொருள்
அ) பறவை
ஆ) விலங்கு
இ) வானம்
ஈ) பூமி
Answer:
ஆ) விலங்கு

Question 30.
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்

அ) எதுகை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

குறுவினா

Question 1.
‘நெடுநல்வாடை’ – பொருள் விளக்கம் தருக.
Answer:

  1. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்ப மிகுதியால் நெடுவாடை (நீண்ட வாடை)யாக இருந்தது.
  2. போர்ப்பாசறையில் இருந்த தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாக இருந்தது.

Question 2.
நக்கீரர் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
Answer:

  • மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர்.
  • அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புறநானூற்றில் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
  • இறையனார் களவியலுக்குச் சிறந்த உரைதந்தவர்.
  • கபிலர், பரணர் காலத்தவர்.
  • 188 அடிகளை உடையை ‘நெடுநல்வாடை’ என்ற நூலை இயற்றியவர்.

Question 3.
‘வாகைத்திணை’ விளக்குக.
Answer:

  1. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதாகும்.
  2. தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டது வாகைத்திணை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 4.
‘கூதிர்ப்பாசறை’ என்றால் என்ன?
Answer:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.

Question 5.
கூதிர்பருவம் என்பது யாது?
Answer:
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்ப்பருவமாகும்.

Question 6.
குளிரினைப் போக்க கோவலர்கள் என்ன செய்தார்கள்?
Answer:
கோவலர்கள் பலரும் கூடிக் கொள்ளி நெருப்பினில் கைகளைக் காட்டி சூடாக்கி குளிரினைப் போக்க முயற்சித்தார்கள்.

சிறுவினா

Question 1.
கூதிர் காலத்தின் தன்மையான நெடுநல்வாடை குறிப்பிடுபவை யாவை?
Answer:

  • விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
  • பெண் குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.
  • பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.
  • பால் குடிக்க வரும் கன்றுகளைப் பசுக்கள் உதைத்துத் தள்ளின.
  • குன்றே குளிர்ந்தது போல கூதிர்காலத்தின் தன்மை இருந்தது.

Question 2.
வாகைத் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
வெற்றிபெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.

சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென….
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.

பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு மன்னனும் பாசறையில் குளிர்காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 3.
‘கூதிர்ப்பாசறை’ துறையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.

சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென…
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.

பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 1.
‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
Answer:
இ) மழைத்துளிகள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

குறுவினா

Question 1.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

சிறுவினா

Question 1.
‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” – இக்கவிதையின் அடி,
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்’
Answer:

  • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
  • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒருதுளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
  • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம்.

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”

  • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
  • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

நயம் :

  • நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது.
  • பிறகொரு நாள் கோடை’ கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
  • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
  • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பகலும் இரவும் சந்திப்பது
அ) இரவு
ஆ) அந்தி
இ) வைகறை
ஈ) யாமம்
Answer:
ஆ) அந்தி

Question 2.
நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?
அ) கரங்களால் பருகி
ஆ) நீரில் மூழ்கி
இ) உதடுகள் குவித்து
ஈ) குவளையில் பிடித்து
Answer:
இ) உதடுகள் குவித்து

Question 3.
அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்
அ) இதழியல் துறை, திரைத்துறை
ஆ) கல்வித்துறை, இதழியல் துறை
இ) இசைத்துறை, இதழியல் துறை
ஈ) ஒளித்துறை, திரைத்துறை
Answer:
அ) இதழியல் துறை, திரைத்துறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 4.
நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு
அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்
ஆ) நீர்வெளி
இ) பிறகொரு நாள் கோடை
ஈ) மழைக்குப் பிறகும் மழை
Answer:
அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

Question 5.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.
கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 6.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.
கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 7.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் மத்தளம் அடிக்கின்றது.
கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஈ) கூற்று இரண்டும் தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) நகரம் – அமைதியாயிருந்தது
ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன
இ) மரங்கள் – வேர்விட்டன
ஈ) பறவைகள் சங்கீதம் இசைக்கவில்லை
Answer:
ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) மரங்கள் – தலையசைத்து உதறுகிறது
ஆ) பறவைகள் – சங்கீதம் இசைத்தன
இ) சுவர் – நீர்ச்சுவடுகள் அழித்தன
ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன
Answer:
ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன

Question 10.
பொருத்துக.
அ) இன்று – 1. அய்யப்ப மாதவன்
ஆ) நீர்வெளி – 2. கவிதைக்குறும்படம்
இ) சிவகங்கை – 3. கவிதை நூல்
ஈ) நரம்புகள் – 4. வீணை

அ) 2, 1, 4, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 2, 3, 1, 4

Question 11.
பொருத்துக.
அ) நகரம் – 1. நரம்புக்குள் மீட்டுதல்
ஆ) பறவைகள் – 2. உதடுகள்
இ) வீணை – 3. வைரம்
ஈ) ஒளிக்கதிர்கள் – 4. சங்கீதம்

அ) 3, 1, 4, 2
ஆ) 3, 2, 1, 4
இ) 3, 2, 4, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஈ) 3, 4, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 12.
‘பிறகொருநாள் கோடை’ என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு
அ) மழைக்குப் பிறகும் மழை
ஆ) நானென்பது வேறொருவன்
இ) நீர்வெளி
ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்
Answer:
ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

Question 13.
அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது
அ) கவிதைத் தொகுப்பு
ஆ) கவிதைக் குறும்படம்
இ) ஆவணப்படம்
ஈ) புதினம்
Answer:
ஆ) கவிதைக் குறும்படம்

Question 14.
அய்யப்பன் மாதவனின் மாவட்டம் ………….. ஊர் ………………..
அ) தஞ்சாவூர், பருத்திக்கோட்டை
ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை
இ) மதுரை, அவணியாபுரம்
ஈ) திருநெல்வேலி, வள்ளியூர்
Answer:
ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை

Question 15.
அய்யப்ப மாதவனுக்குத் தொடர்பில்லாத கவிதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) மழைக்குப் பிறகும் மழை
ஆ) நானென்பது வேறெருவன்
இ) நீர்வெளி
ஈ) நீர்விழிராகம்
Answer:
ஈ) நீர்விழிராகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 16.
போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர்
அ) அய்யப்ப மாதவன்
ஆ) இரா. மீனாட்சி
இ) வேணுகோபாலன்
ஈ) ஆத்மாநாம்
Answer:
அ) அய்யப்ப மாதவன்

குறுவினா

Question 1.
அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?
Answer:

  • மழைக்குப் பிறகும் மழை
  • நானென்பது வேறொருவன்
  • நீர்வெளி

Question 2.
வெளில் கண்ட பறவைகளின் செயல் யாது?
Answer:
வெளிலைக் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன.

Question 3.
சூரியனைக் கண்ட மரங்களின் செயல் யாது?
Answer:
சூரியனைக் கண்ட ஈரமான மரங்கள் மீதமுள்ள சொட்டுக்களை தலையசைத்து உதறுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

சிறுவினா

Question 1.
மழையிலிருந்து விடுபடும் ஊரின் தன்மையைக் கவிஞர் அய்யப்ப மாதவன் எக்குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்?
Answer:

  • மழை நின்றதால் சுவர்கள் மீது வழிந்தோடிய மழைநீர் நின்றது.
  • கொஞ்சம் இருந்த நீர் சுவடுகளையும் சுவர் வேகமாகத் தன் வசம்படுத்திக் கொண்டது.
  • ஈரமான மரங்கள் தங்கள் கிளைகளை அசைத்து தன் மீது படர்ந்திருந்த மீதமான நீர்த்துளிகளையும் உதறியது.
  • வெயிலைக் கண்டதால், மழை நீருக்கு அஞ்சியிருந்த பறவை உற்சாகம் வெளிப்பட தன் குரலால் சங்கீதம் இசைத்தது.
  • இவையே அவ்வூர் மழையிலிருந்து விடுபடுவதைக் குறிப்பிடும் குறியீடுகளாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார்.

Question 2.
கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிக் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : அய்யப்ப மாதவன்
ஊர் : சிவகங்கை – நாட்டரசன் கோட்டை
பணி : திரைத்துறை, இதழியல் துறை
நூல்கள் : மழைக்கு பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர் வெளி. இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.1 பெருமழைக்காலம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.1 பெருமழைக்காலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 1.
வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க.
Answer:
கடலூர்.
2015இல் உலகையே உலுக்கிய வெள்ளம் கடலூரில். எங்குப் பார்த்தாலும் ஆடு, மாடுகள் இறந்துக்கிடக்கும் காட்சி கடலூர், தாழங்குடா, திருவந்திபுரம், நத்தம், ஞானமேடு போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, நீர் தேங்கியதால் தொற்று நோய்கள். சிறுவர் முதியவர் இறப்பு எண்ணற்ற குடும்பங்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

2004ஆம் ஆண்டு இதே கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் சுனாமி ஊருக்குள் புகுந்தது. வீடுகள், மரங்கள், மீன் பிடித்தொழில் செய்வோரின் பொருள்கள், படகுகள் எல்லாம் கடலில் மூழ்கி நிலைகுலைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தை, கணவனை இழந்த மனைவி என்று அரைகுறை வாழ்க்கையை ஏற்படுத்தியது.

Question 2.
ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்நாளில் பள்ளியின் கூட்டத்தில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை உருவாக்குக.
Answer:

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

  • மரம் வளர்ப்போம்!
    மழை பெறுவோம்!!
  • நெகிழியைத் தவிர்ப்போம்!
    மண் வளம் பாதுகாப்போம்!!
  • வாகனப்புகை குறைப்போம்!
    வளமான வாழ்வு வாழ்வோம்!!
  • மழைநீர் தேங்காமல் பாதுகாப்பாகச் சேகரிப்போம்!
    கொசுவை ஒழிப்போம்!!
  • மக்கும், மக்காக் குப்பை எனப் பிரிப்போம்!
    மானிட சமுதாயம் காப்போம்!!
  • துணிப்பையைத் தூக்குவோம்!
    துக்கமின்றி வாழ்வோம்!!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

Question 1.
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ) பருவநிலை மாற்றம்
ஆ) மணல் அள்ளுதல்
இ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
Answer:
ஆ) மணல் அள்ளுதல்

Question 2.
“உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுபடுத்த முடியும்” – இத்தொடர் உணர்த்துவது
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
இ) காலநிலை மாறுபடுகிறது
ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

குறுவினா

Question 1.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answer:
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற முழக்கத் தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.

  • மழைக்கு ஆதாரம் மரம்.
  • உயிர்வளிக்கு உதவுவது மரம்.
  • மண் அரிப்பைத் தடுக்கும் மரம்.
  • மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.

Question 2.
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.
Answer:

  1. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
  2. மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.

சிறுவினா

Question 1.
மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:

  • வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
  • வடிகால் வசதியை மேற்கொள்ள வேண்டும்.
  • இயல்பாகவே பெருமழையைத்தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் சேதப்படுத்தாமல் தூர் வார்தல் வேண்டும்.
  • சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 2.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:
(i) பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23.12.2005இல் தொடங்கப்பட்டது.

(ii) புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ விபத்து. பனிப்புயல், வேறு விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும் போது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.

(iii) இக்குழுக்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி அனைத்து நிலைகளிலும் பேரிடர்க் காலங்களில் இவ்வாணையம் செயல்பட வழிவகை செய்துள்ளது.

(iv) அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

பெருமழைக்காலம்

அயோத்திதாசர் : வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பசுமைதாசர் : வணக்கம். மிக்க மகிழ்ச்சி.

அயோத்திதாசர் : நெகிழி என்றால் என்னங்க ஐயா!

பசுமைதாசர் : நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும்

அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் உருவானது.

அயோத்திதாசர் : நெகிழி தோன்றியதின் வரலாறு கூறமுடியுமா ஐயா.

பசுமைதாசர் : நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது. 1862இல் இலண்டனைச் 10. சேர்ந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அயோத்திதாசர் : நெகிழியின் பயன்பாடுகள் பற்றிச் சில கூறுங்கள் ஐயா.

பசுமைதாசர் : பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம்.
இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது.

அயோத்திதாசர் : நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை.

பசுமைதாசர் : அப்படிச் சொல்லக்கூடாது. நம்முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே!

அயோத்திதாசர் : சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா!

பசுமைதாசர் : நெகிழியைப் பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே.

அயோத்திதாசர் : மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா!

பசுமைதாசர் : உறுதியாகச் சொல்கிறேன்!
நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் உருவாகிறது. சூடான பொருள்கள் நெகிழிப் பைகளில் வாங்கி உண்பதால் புற்றுநோய் உருவாகிறது. அவற்றைச் சில விலங்குகள் உண்ணுவதால் அவைகளும் மடிகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

அயோத்திதாசர் : நன்றிங்க ஐயா!

பசுமைதாசர் : துணிப்பை எளிதானது
தூர எறிந்தால் எருவாகும்…..
நெகிழிப் பை அழகானது.
தூர எறிந்தால் விட(ஷ)மாகும்…..
என்பதற்கு ஏற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம்.
மண் வளம் காப்போம்!
மரம் நடுவோம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
மழை வளம் பெருக்குவோம்!
மனித குலம் தழைப்போம்!

அயோத்திதாசர் : நன்றி!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்தன் விளவுை எதற்குக் காரணமாயிற்று
அ) பருவநிலை மாற்றம்
ஆ) உடல்நிலை மாற்றம்
இ) மண்ணின் மாற்றம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) பருவநிலை மாற்றம்

Question 2.
உலகப்புவி நாள்
அ) ஏப்ரல் 21
ஆ) ஏப்ரல் 22
இ) ஜூன் 21
ஈ) ஜூலை 22
Answer:
ஆ) ஏப்ரல் 22

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 3.
‘மாமழை போற்றுதும்’ – என்ற பாடல் வரியைக் கூறியவர்
அ) திருவள்ளுவர்
ஆ) கம்ப ர்
இ) ஒளவையார்
ஈ) இளங்கோவடிகள்
Answer:
ஈ) இளங்கோவடிகள்

Question 4.
‘நீரின்றி அமையாது உலகு’ – என்னும் பாடல் வரியைப் பாடியவர்
அ) கம்பர்
ஆ) திருவள்ளுவர்
இ) நக்கீரர்
ஈ) ஔவையார்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Question 5.
நம் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?
அ) 4
ஆ) 6
இ) 3
ஈ) 5
Answer:
ஈ) 5

Question 6.
2005-ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் பெய்த மழையளவு
அ) 994 செ.மீ
ஆ) 994 மி.மீ
இ) 995 மி.மீ
ஈ) 995 செ.மீ.
Answer:
ஆ) 994 மி.மீ

Question 7.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ‘லே’ பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பெய்த ஆண்டு
அ) 2010
ஆ) 2008
இ) 2005
ஈ) 2011
Answer:
அ) 2010

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 8.
‘ஒக்கி’ என்பதன் தமிழ்ச்சொல்
அ) வாயு
ஆ) காற்று
இ) கண்
ஈ) வாய்
Answer:
இ) கண்

Question 9.
புயலைக் குறித்த பெயர்களைப் பரிந்துரைச் செய்துள்ள ‘சார்க்’ அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
அ) 8
ஆ) 4
இ) 64
ஈ) 7
Answer:
அ) 8

Question 10.
“புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே” – என்றவர்
அ) டேவிட் கிங்
ஆ) ஜான் டேவிட்
இ) ஜான் மார்ஷல்
ஈ) ஹென்றி
Answer:
அ) டேவிட் கிங்

Question 11.
ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை ஐக்கிய நாடுகள் உருவாக்கிய ஆண்டு
அ) 1972
ஆ) 1892
இ) 2002
ஈ) 1992
Answer:
ஈ) 1992

Question 12.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2008
ஆ) 2009
இ) 2007
ஈ) 2018
Answer:
ஆ) 2009

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 13.
உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?
அ) 40.5
ஆ) 40.9
இ) 40
ஈ) 40.8
Answer:
இ) 40

Question 14.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைப்பதில் இதன் பங்கு இன்றியமையாதது
அ) கிணறு
ஆ) ஊற்று
இ) மணல்
ஈ) பாறை
Answer:
இ) மணல்

Question 15.
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு
அ) 2005 டிசம்பர் 24
ஆ) 2005 டிசம்பர் 23
இ) 2005 நவம்பர் 23
ஈ) 2005 ஜூலை 23
Answer:
ஆ) 2005 டிசம்பர் 23

Question 16.
ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
அ) டெல்லி
ஆ) குஜராத்
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
Answer:
ஆ) குஜராத்

Question 17.
உலகச் சுற்றுச்சூழல் நாள்
அ) ஜுன் 5
ஆ) ஜுலை 5
இ) ஏப்ரல் 14
ஈ) மே 5
Answer:
அ) ஜுன் 5

Question 18.
கூற்று 1 : இயற்கையானது சமநிலையோடு இருந்தால்தான், அந்தந்தப் பருவநிலைக்கேற்ற நிகழ்வுகள் நடக்கும்.
கூற்று 2 : உபரிநீர் கால்வாய்களும் வெள்ளச்சமவெளிகளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றவை.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 19.
கூற்று 1 : வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை அழித்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை மனிதன் அமைத்துள்ளான்.
கூற்று 2 : மணல் அள்ளியதன் விளைவாக வெள்ளச் சமவெளிகள் அழிகின்றன.
அ) கூற்று 1 தவறு, 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 20.
கூற்று 1 : வெள்ளப்பெருக்குக் காலங்களில் மட்டுமே நம் நாட்டில் மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
கூற்று 2 : வெள்ளம் வடிந்த பிறகு வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் தவறுகின்றோம்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Question 21.
சரியானதைத் தேர்க.
அ) மாமழை போற்றதும் – திருவள்ளுவர்
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி
இ) நீரின்றி அமையாது உலகு – பழமொழி
ஈ) மும்பை – வறட்சி
Answer:
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி

Question 22.
சரியானதைத் தேர்க.
அ) மும்பை – 994 செ.மீ. மழை
ஆ) ‘லே’ – 250 செ.மீ. மழை
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு
ஈ) 2009ஆம் ஆண்டு – மிக வெப்ப ஆண்டு
Answer:
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) நாற்பது விழுக்காடு – மணல் பற்றாக்குறை
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்
இ) ஜுன் 5 – உலக வன உயிரின நாள்
ஈ) உலகப் புவி நாள் – ஏப்ரல் 22
Answer:
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்

Question 24.
பொருத்துக.
அ) ஹைட்ரஜன் ஆண்டு – 1. மிகவும் வெப்பமான ஆண்டு
ஆ) ரஷ்யா – – 2. கார்பன் அற்ற ஆற்றல்
இ) 2009ஆம் ஆண்டு – 3. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஈ) 2005 டிசம்பர் 23 – – 4. பசுமைக்குடில் வாயு

அ) 2, 3, 4, 1
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

Question 25.
உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, ……………. இன்றியமையாதது.
அ) நெசவுக்கும்
ஆ) உழவுக்கும்
இ) கடலுக்கும்
ஈ) மலைக்கும்
Answer:
ஆ) உழவுக்கும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 26.
வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் எட்டு நாடுகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) இலங்கை
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) நேபாளம்
Answer:
ஈ) நேபாளம்

Question 27.
வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க எட்டு நாடுகள் வழங்கியுள்ள பட்டியலில் உள்ள பெயர்களின் எண்ணிக்கை
அ) 36
ஆ) 64
இ) 96
ஈ) 180
Answer:
ஆ) 64

Question 28.
கதிரவனைச் சுற்றியுள்ள கோள்களில் ………….. மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
அ) சந்திரனில்
ஆ) வியாழனில்
இ) புதனில்
ஈ) புவியில்
Answer:
ஈ) புவியில்

Question 29.
புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல் என்று கூறிய இங்கிலாந்தின் அறிவியல் கருத்தாளர்
அ) டேவிட் ஷெப்பர்டு
ஆ) டேவிட் கிங்
இ) நைட் ஜான்
ஈ) வில்லியம் ஹென்றி
Answer:
ஆ) டேவிட் கிங்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 30.
ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது?
அ) 2
ஆ) 4
இ) 20
ஈ) 40
Answer:
ஆ) 4

Question 31.
பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) மீத்தேன்
இ) நைட்ரஸ் ஆக்ஸைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer:
ஈ) ஹைட்ரஜன்

Question 32.
மாற்று ஆற்றல்களாக விளங்கக்கூடியவற்றைக் கண்டறிக.
i) சூரிய ஆற்றல்
ii) காற்று ஆற்றல்
iii) ஹைட்ரஜன் ஆற்றல்
iv) தாவர ஆற்றல்

அ) i), ii) சரி
ஆ) ii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 33.
ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய இடம்
அ) நியூயார்க்
ஆ) ஹைத்தீ
இ) ரியோடிஜெனிரோ
ஈ) ஹாமில்டன்
Answer:
இ) ரியோடிஜெனிரோ

Question 34.
சரியான விடையைக் கண்டறிக.
i) ஐ.நா. அவை 1992ஆம் ஆண்டு உருவாக்கிய காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியபோது தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
ii) பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 35.
பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளைக் கண்ட றிக.
i) சீனா
iii) இரஷ்யா
iii) அமெரிக்கா
iv) ஜப்பான்

அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 36.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத் துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2011
Answer:
இ) 2009

Question 37.
………….. ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது.
அ) 2000
ஆ) 2001
இ) 2004
ஈ) 2006
Answer:
ஆ) 2001

Question 38.
புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் ………….. கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 250
Answer:
ஆ) 200

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 39.
உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் ………….. விழுக்காடு மக்கள் தண்ணீ ர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்.
அ) 30
ஆ) 40
இ) 45
ஈ) 50
Answer:
ஆ) 40

Question 40.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% …………. ஏற்பட்டவையே.
அ) வெள்ளப்பெருக்கினால்
ஆ) நிலநடுக்கத்தால்
இ) போரினால்
ஈ) கவனக்குறைவால்
Answer:
அ) வெள்ளப்பெருக்கினால்

Question 41.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, ஏறத்தாழ ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன.
ii) தற்போது தமிழகத்தில் நீர்நிலைகள் இருபதாயிரமாகக் குறைந்துள்ளன.
iii) சென்னை , மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன.

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 42.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் …………. பங்கு இன்றியமையாதது.
அ) வண்டல் மண்ணின்
ஆ) கரிசல் மண்ணின்
இ) செம்மண்ணின்
ஈ) மணலின்
Answer:
ஈ) மணலின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

குறுவினா

Question 1.
இயற்கைச் சமநிலை என்றால் என்ன?
Answer:
மழைப்பொழிவு மூலமாக மண்பரப்பில் நீர் நிறைந்து தாவர உயிரினங்களும், விலங்கினங்களும் தோன்றின. இவ்வாறு சார்ந்து வாழும் இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒருகுழுவாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இவற்றிற்கான உணவுச் சங்கிலியே இயற்கைச் சமநிலை எனப்படும்.

Question 2.
சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் யாவை?
Answer:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து.

Question 3.
கார்பன் அற்ற ஆற்றல்கள் யாவை?
Answer:
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்றவை கார்பன் அற்ற ஆற்றல்கள் எனப்படும்.

Question 4.
பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகள் யாவை?
Answer:
குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால், வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகள் போன்றவையே பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகளாகும்.

Question 5.
தேசிய பேரிடர் ஆணையம் எந்தெந்த நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளன?
Answer:
மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுக்களை அமைத்துள்ளன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 6.
குஜராத் விஞ்ஞானிகளின் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள் சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர்ப்புயல், காற்றின்திசை, இடி, மின்னல், பலமான காற்று, வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம், வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம் முதலியவைகளே மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குஜராத் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Question 7.
எவற்றையெல்லாம் பசுமைக்குடில் வாயுக்கள் என்கின்றோம்?
Answer:
கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவைகளைப் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 8.
மழையின் சிறப்பினை எடுத்துரைக்கும் இலக்கியத் தொடர்கள் முதுமொழிகள் சிலவற்றைச் சான்றாகத் தருக.
Answer:

  • மாமழை போற்றுதும்
  • நீரின்றி அமையாது உலகு
  • மாரியல்லது காரியமில்லை

Question 9.
ஆற்றில் மணல் அள்ளுவதால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் யாது?
Answer:
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டவையே ஆகும். இதற்கு முதன்மையாகக் காரணமாக அமைவது ஆற்றல் மணல் அள்ளுவதே ஆகும்.

சிறுவினா

Question 1.
வெள்ளச் சமவெளி என்றால் என்ன? அதன் பயன் யாது?
Answer:
வெள்ளச்சமவெளி : வெள்ளச்சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரணாகும்.
வெள்ளச்சமவெளியின் பயன் :

  • ஆற்றின் ஓரங்களில் படியும் பொருள்களை ஆற்றங்கரைப் படிவு என்பர்.
  • படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும்.
  • நீர் மாசடைவதைத் தடுக்கும்; வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிட்டால் பாதுகாக்கும்.
  • உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் பயன் அடையும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 2.
பேரிடர் வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டியவை யாவை ?
Answer:

  • பதற்றமடைதலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • வானிலை ஆராய்ச்சி மையங்கள் வெளியிடும் புயல், மழை தொடர்பான காலங்களின் அடிப்படையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
  • வதந்திகளை நம்பவோ, பிறரிடம் பரப்பவோ கூடாது,
  • தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றின் உதவியுடன் : மீட்புப் பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக ஈடுபட வேண்டும்.
  • பாதுகாப்பு மையங்கள், மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றை மிக அருகிலே வைத்திருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 1.
மயங்கொலி எழுத்துகள் (ண, ந, ன, ல, ழ, ள, ர, ற) அமைந்த சொற்களைத் திரட்டி, பொருள் வேறுபாடு அறிந்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவச் செல்வங்களே,
இன்று உங்களுக்கு மயங்கொலி எழுத்துகள் அமைந்த சொற்களையும், அதன் பொருள் வேறுபாட்டினையும் கற்பிக்கப் போகிறேன்.

ராமு : ணகர னகர வேறுபாடுகளை விளக்குங்கள் ஐயா.
அண்ணம் – மேல்வாய்
அன்னம் – உணவு / சோறு ட
பக்கத்தில் வரும் ண – இதை டண்ணகரம் என்று அழைப்பதுண்டு. அன்னத்தில், ற – பக்கத்தில் வரும் ன – இதை றன்னகரம் என்று அழைப்பதுண்டு.

சோமு : ஐயா இதன் பயன்பாடுகள் பற்றிக் கூறுங்கள் ஐயா. இதன் பயன்பாடுகள் : ட – ணவும், ற – பக்கத்தில் ன வும் வரும் எனப்புரிந்தால் எழுத்துப்பிழைகள் மிகக் குறையும்.

மன்றம் – அவை
மண்ட பம் – மக்கள் கூடுமிடம்
குன்று – சிறிய மலை
குன்று – உருண்டை (வடிவம்)

இவை போன்று வேறுபாடு கண்டு பிழைகளைக் களையலாம்.

ராமு : இன்னுமொரு விளக்கம் தேவை. ல-ழ வேறுபாடுகள் பற்றியும் விளக்கம் தேவை ஐயா.
ல-ழ வேறுபாடு
கலை நுட்பம் / அறிவு
கழை – மூங்கில்
மலை – குன்று
மழை – வான்மழை
தலை – உடல் உறுப்பு
தழை – வளர் / இலை
விலை – மதிப்பு
விழை – விருப்பம்

இவ்வாறான மயங்கொலிச் சொற்களை பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்க லாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

ராமு : மிக்க நன்றி ஐயா, தெளிவாகப் புரிந்து கொண்டேன் ஐயா.
ர-ள மயங்கொலிச் சொற்களுக்கு எ.கா. தாருங்கள் ஐயா.
ர – ற வேறுபாடு
மரம் – தாவரம்
மறம் – வீரம்
அரம் – கருவி
அறம் – தருமம்
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம்.

சோமு : ஐயா, கடைசியாக லகர னகர வேறுபாட்டையும் கூறுங்கள் ஐயா.
ல ள வேறுபாடு
கோல- அறிவு/ நுட்பம்
களை – பயிரின் நடுவே வளர்வது / ஆடை களைதல்
கோல் – குச்சி
கோள் – செவ்வாய் (கோள்)
வலம் – வலப்புறம்
வளம் – செழிப்பு
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம் மாணவர்களே.
மாணவர்களே மற்றொரு வகுப்பில் சந்திக்கலாம்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
Answer:
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

Question 2.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
Answer:
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

Question 3.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் – இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும் .
Answer:
முடிந்தால் தரலாம் :
முடிந்தால் – கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.

முடித்தால் தரலாம் :
முடித்தால் – செயல் முடிந்த பின்
தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.
வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

Question 4.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
Answer:
(i) எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.

(ii) இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.

(iii) வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.

(iv) கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் எவ்வாறு திரியும்
அ) இயல்பாகப் புணரும்
ஆ) லகரம் டகரமாகும்
இ) லகரம் னகரமாகும்
ஈ) லகரம் றகரமாகும்
Answer:
ஈ) லகரம் றகரமாகும்

Question 2.
வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் எவ்வாறு திரியும்
அ) ளகரம் லகரமாகும்
ஆ) ளகரம் னகரமாகும்
இ) ளகரம் டகரமாகும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Question 3.
எழுதும்போது வரும் பிழைகளை ……………….. வகையாகக் கொள்ளலாம்.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
Answer:
ஆ) 4

Question 4.
உயிரெழுத்துகள்
அ) 10
ஆ) 12
இ) 30
ஈ) 18
Answer:
ஆ) 12

Question 5.
உயிரெழுத்துகளின் வகை
அ) 2
ஆ) 4
இ) 12
ஈ) 18
Answer:
அ) 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 6.
மெய்எழுத்துகள்
அ) 3
ஆ) 18
இ) 12
ஈ) 30
Answer:
ஆ) 18

Question 7.
மெய்எழுத்துகளின் வகை
அ) 3
ஆ) 12
இ) 18
ஈ) 30
Answer:
அ) 3

Question 8.
உயிர் மெய்யெழுதுக்கள்
அ) 18
ஆ) 126
இ) 216
ஈ) 247
Answer:
இ) 216

Question 9.
உயிர் மெய்க்குறில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
அ) 90

Question 10.
உயிர் மெய் நெடில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
ஆ) 126

Question 11.
தமிழ் எழுத்துகள் மொத்தம்
அ) 90
ஆ) 246
இ) 216
ஈ) 247
Answer:
ஈ) 247

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 12.
ந, ண, ன, ற, ர, ல,ள,ழ – இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந

Question 13.
சொல்லின் இறுதியில் வராத எழுத்தைக் கண்டறிக.
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந

Question 14.
……….. சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
அ) வடமொழியில்
ஆ) தமிழில்
இ) ஆங்கிலத்தில்
ஈ) இந்தியில்
Answer:
ஆ) தமிழில்

Question 15.
க்ரீடம், ப்ரியா – என்பவை …………. மொழிச் சொற்கள்.
அ) வட
ஆ) அரபு
இ) தமிழில்
ஈ) தெலுங்கு
Answer:
அ) வட

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 16.
தமிழ்ச் சொல் ………… மெய்யோடு முடியாது.
அ) வல்லின
ஆ) மெல்லின
இ) இடையின
ஈ) உயிர்
Answer:
அ) வல்லின

Question 17.
ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் ………….. என்னும் வரிசையே வரும்.
அ) க, ச, ப
ஆ) ன, ண, ந
இ) ர, ற
ஈ) ப. ம.ய
Answer:
அ) க, ச, ப

Question 18.
சரியான கூற்றினைக் கண்டறிக.
i) வல்லின மெய்கள் ஈறொற்றாய் வாரா
ii) ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
iii) க், ச், த்,ப, ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 19.
சொல்லின் முதலில் வராத எழுத்துகள்
அ) ட, ற
ஆ) த, ந
இ) ப, ம
ஈ) க, ச
Answer:
அ) ட, ற

Question 20.
ஆய்த எழுத்து சொல்லின் ……………. வரும்.
அ) முதலில்
ஆ) இடையில்
இ) கடைசியில்
ஈ) ஈற்றில்
Answer:
இ) கடைசியில்

Question 21.
மெல்லின எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வராதவை
அ) ங, ஞ
ஆ) ங, ம
இ) ண, ன
ஈ) ந, ம
Answer:
ஈ) ந, ம

Question 22.
………. என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று/கள் விகுதி/வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
அ) ய், ர், ல், ழ், ள்
ஆ) ற், ட்
இ) ங. ஞ, ண, ர. ம
ஈ) க், ச்ட், த், ப்
Answer:
அ) ய், ர், ல், ழ், ள்

Question 23.
………….. ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும்.
i) ய
ii) ர
iii) ழ

அ) மூன்றும் சரி
ஆ) மூன்றும் தவறு
இ) i, iii – சரி
ஈ) i, ii – சரி
Answer:
அ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 24.
தனிக்குறிலை அடுத்து ……………. ஒற்றுகள் வாரா.
அ) க, ச
ஆ) ர, ழ
இ) த, ப
ஈ) க, ப
Answer:
ஆ) ர, ழ

Question 25.
லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் லகரம் ……… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) மகரமாய்த்
Answer:
அ) னகரமாய்த்

Question 26.
ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம்வரின் ளகரம் ………… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
இ) டகரமாய்த்

Question 27.
ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் ளகரம் ………. திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
ஆ) ணகரமாய்த்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 28.
சரியானவற்றைக் கண்டறிக.
i) இயக்குநர்
ii) இயக்குனர்
iii) உறுப்பினர்i
v) வீட்டினர்

அ) – சரி
ஆ) ii, iii – சரி
இ) iv – சரி
ஈ) ii – மட்டும் தவறு
Answer:
ஈ) ii – மட்டும் தவறு

குறுவினா

Question 1.
எழுதும்போது ஏற்படும் பிழைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
Answer:

  • எழுத்துப்பிழை.
  • சொற்பொருட்பிழை.
  • சொற்றொடர்ப் பிழை.
  • பொதுவான பிழைகள் சில என வகைப்படுத்தலாம்.

Question 2.
எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் யாது
Answer:

  1. ஏல்லா இடங்களிலும் பேச்சுத்தமிழை எழுத முடியாது.
  2. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப்பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம்.

Question 3.
எந்நான்கை உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்று தமிழ்நடைக் கையேடு குறிப்பிடுகிறது?
Answer:
ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் சேர்ந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்கிறது தமிழ் நடைக் கையேடு.

Question 4.
சொல்லில் ஆய்த எழுத்தின் நிலை குறித்தெழுதுக.
Answer:

  1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும்.
    சான்று: அஃது, எஃகு, கஃசு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 5.
தனிக்குறிலையடுத்து ரகரம் வரின் எவ்வாறு எழுத வேண்டும்?
Answer:
தனிக்குறிலையடுத்து ரகரம் வரின் அதனைத் தமிழ் இயல்புக்கேற்பத் திருத்தி எழுத வேண்டும்.
சான்று: நிர்வாகம் – நிருவாகம்; கர்மம் – கருமம்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர்
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 1
உடனே ‘அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே வறினார்.

அவரது : மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூ ரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், : சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் -சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன, புராண நூல்களை வசனமாகி எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவமாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார்
விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

வினாக்கள்:
1. ‘எல்லி’ என்பதன் பொருள் என்ன?
2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்?
3. ஆழி, கால் பொருள் தருக.
4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை?
5. பெற்றவர் – இலக்கணக்குறிப்புத் தருக.
6. விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? “நாவலர்’ என்ற பட்டத்தை யார் வழங்கினார்?
8. ‘வந்திருந்தார்’ இரு பொருள்படும்படி வாக்கியம் அமைக்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்
Answer:
1. சூரியன்.
2. 24 நிமிடம்.
3. ஆழி – மோதிரம், கடல்.
கால் – உடல் உறுப்பு, காற்று.
4. ‘வசனநடை கைவந்த வள்ளலார்’ எனப் புகழப்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும்
மும்மொழிப் புலமை பெற்றவர்.
5. பெற்றவர் – வினையாலணையும் பெயர்.
6. பெர்சிவல் பாதிரியார்.

7. இயற்பெயர் – ஆறுமுகம்.
நாவலர் பட்டம் – திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியதாகும்.

8. வந்திருந்தார் : உடல் நலம் சரியில்லாத என் தந்தையைக் காண என் மாமா நீண்ட நாள் கழித்து வந்தார்.
வந்து இருந்தார் : பொதுக்கூட்டம் காண பல மைல் தூரம் நடந்த குமரன் கால் வலியால் வந்து இருந்தார்.

தமிழாக்கம் தருக

1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2. A new language is a new life. (Persian Proverb).
புதிய மொழி புதிய வாழ்க்கை.

3. If you want people to understand you, speak their language. (African Proverb).
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.

4. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).
மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.

5. The limits of my language are the limits of my world. (Willgenstin).
என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

இலக்கிய நயம் பாராட்டுக

முச்சங்கங் கூட்டி
முது புலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!  – கண்ண தாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

முன்னுரை :
இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

திரண்ட கருத்து :
தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!

தொடை நயம் :
மோனை :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

சான்று:
முச்சங்கங்
ச்சங்கத்
சொற்சங்க
ற்புதங்க
முதுபுலவர்
ளப்பரிய
சுவைமிகுந்த
மைத்த

எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.
சான்று:
முச்சங்க
சொற்சங்க
ச்சங்க
ற்புதங்க

இயைபு : கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.
சான்று:
பெருமாட்டி
கவிகூட்டி
பொருள்கூட்டி
தமைக்கூட்டி

அணி நயம் :
அணியற்ற பாக்கள்
பிணியுள்ள வணிதை
தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

சந்த நயம் :
சந்தம் தமிழுக்குச் சொந்தம்
ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.

சுவை நயம் :
நா உணரும் சுவை ஆறு
மனம் உணரும் சுவை எட்டு
என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும் மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும்

உள்ளனர் ; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே ; மொழியால் வளர்பவரும் மக்களே.

– மொழி வரலாறு (மு. வரதராசனார்)

வினாக்கள் :
1. மக்கள் படைத்துக் காத்துவரும் அரிய கலை எது? அது ஆற்றும் செயல் யாது?
2. தாயின் முதல் விருப்பம் என்ன?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?
4. மொழியை வளர்ப்பவரும், மொழியால் வளர்பவரும் யார்?
5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல.

Question 1.
தாமரை இலை நீர் போல – பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.
Answer:
இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Question 2.
கிணற்றுத் தவளை போல – வெளி உலகம் தெரியாத நிலை.
Answer:
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 3.
எலியும் பூனையும் போல – எதிரிகளாக.
Answer:
ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

Question 4.
அச்சாணி இல்லாத தேர் போல – சரியான வழிகாட்டி.
Answer:
நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

Question 5.
உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படையாக, தெளிவாக.
Answer:
தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

பயிற்சி

1. பசுமரத்தாணி போல – எளிதாக
2. மடைதிறந்த வெள்ளம் போல – வேகமாக
3. அடியற்ற மரம் போல – வலுவிழந்து
4. கல்மேல் எழுத்து போல – அழியாமல்
5. நகமும் சதையும் போல – இணை பிரியாமை
6. அடுத்தது காட்டும் பளிங்கு போல – வெளிப்படுத்த
7. இலவு காத்த கிளி போல – ஏமாற்றம்
8. அலை ஓய்ந்த கடல் போல – அமைதி
9. இஞ்சி தின்ற குரங்கு போல – விழித்தல்
10. கயிறற்ற பட்டம் போல – தவித்தல், வேதனை

ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

Question 1.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய் மொழியே துணை நிற்கும் – இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிக் கல்வியின் தேவை
தாய்மொழிச் சிந்தனை – அறிஞர்களின் பார்வை – கற்கும் திறன் – பயன் – இன்றைய நிலை.
Answer:
முன்னுரை :
“தாய்மொழி கண் போன்றது
பிறமொழி கண்ணாடி போன்றது”

நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழியால்தான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

தாய்மொழிக் கல்வியின் தேவை :
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்க பட வேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்ப்படுத்துகின்றது.

தாய்மொழிச் சிந்தனை :
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.

அறிஞர்கள் பார்வை :
உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது, டி.எஸ். கோத்தாரி குழுவும் (1964) தேசியக்கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.

கற்கும் திறன் :
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே, தாய்மொழி வழியாகக் கற்கும் போது சிந்தனைத்திறன் அதிகமாகும்.

தாய்மொழிக் கல்வியின் பயன் :
“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சிப் பெற்று ஒலிகளைக் கேட்கிறது” என்கின்றனர். மருத்துவ அறிஞர்கள், குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அக்குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கல்விக் கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள்.

இன்றைய நிலை :
இன்று தாய்மொழி வழியில் கல்விச் கற்பதைக் கௌரவக் குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களுள் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

முடிவுரை :
மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று. ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 2

அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.

குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி
உயிரின் ஒலியே தாயின் அரவணைப்பு
அரவணைக்கும் அவளையே அகத்தில் எண்ணுவோமே!

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் – கவிமணி.

1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்
4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்
Answer:
1. மறைமலை அடிகள்
2. தமிழ் ஒளி
3. புதுமைப்பித்தன்
4. கோதை

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

நிற்க அதற்குத் தக

கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி/தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும் தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் குறிப்பிடுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 4

படிப்போம் – பயன்படுத்துவோம் (நூலகம்)

1. Subscription – உறுப்பினர் கட்டணம்
2. Fiction – புனைவு
3. Biography – வாழ்க்கை வரலாறு
4. Archive – ஆவணம்
5. Manuscript – கையெழுத்துப்பிரதி
6. Bibliography – நூல் நிரல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 1.
பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 2
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 3

Question 2.
காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
Answer:

தூத்துக்குடி,
18 ஜுலை 2019.

முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தகாரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.

உனது பொன் எழுத்துகளால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய்.

ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் 12 வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.

என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.

நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.

இப்படிக்கு,
பாரதிநேசன்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
Answer:
மொழிப்பற்று :
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

சமூகப்பற்று :
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

Question 2.
“சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 8
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 6

நன்றியுரை

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று”

என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.

எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.

சூர்யா – இளமைத்தமிழே இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி.

எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி, இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
அ) ஆலயம்
ஆ) தொழிற்சாலை
இ) பள்ளிக்கூடம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பள்ளிக்கூடம்

Question 2.
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
அ) இளசைமணி
ஆ) ரா.அ. பத்மநாபன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
ஆ) ரா.அ. பத்மநாபன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 3.
கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.
அ) இரண்டு கருத்தும் தவறு
ஆ) இரண்டு கருத்தும் சரி
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் தவறு

Question 4.
சரியானதைத் தேர்க.
அ) முரசுப்பாட்டு – குந்திகேசவர்
ஆ) நெல்லைத் தென்றல் – வ.உ.சிதம்பரனார்
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
ஈ) வம்சமணி தீபிகை – சு. நெல்லையப்பர்
Answer:
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்

Question 5.
சரியானதைத் தேர்க.
அ) கவிகேசரி சாமி தீட்சிதர் – பாரதி கடிதங்கள்
ஆ) இளசைமணி – சூரியோதயம்
இ) கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்
Answer:
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

Question 6.
பொருந்தாததைத் தேர்க.
அ) இளசை மணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
ஆ) வம்சமணி தீபிகை – கவிகேசரி சாமி தீட்சிதர்
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்
ஈ) பாரதி வாழ்த்து – பரலி சு. நெல்லையப்பர்
Answer:
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 7.
பொருத்துக.
அ) வம்சமணி தீபிகை – 1. சு. நெல்லையப்பர்
ஆ) பாரதி கடிதங்கள் – 2. ரா.சு. பத்மநாபன்
இ) நெல்லைத் தென்றல் – 3. கவிகேசரி சாமி தீட்சிதர்

அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
ஆ) 3, 2, 1

Question 8.
பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

Question 9.
பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
ஆ) நெல்லை , 14 ஜீலை 1914
இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914
ஈ) காரைக்கால், 19 ஜீலை 1915
Answer:
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

Question 10.
நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?
அ) சிவன்
ஆ) முருகன்
இ) பராசக்தி
ஈ) துர்க்கை
Answer:
இ) பராசக்தி

Question 11.
நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?
அ) பெற்றோரைக் காப்பதை
ஆ) விடுதலைக்குப் போராடுவதை
இ) தமிழ் வளர்ப்பதை
ஈ) சமூக இழிவை களைவதை
Answer:
இ) தமிழ் வளர்ப்பதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 12.
‘தம்பி-உள்ளமே உலகம்’ என்று யார் யாருக்குக் கூறியது?
அ) அறிஞர் அண்ணா , கலைஞருக்கு
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
இ) மு.வ., இளைஞர்களுக்கு
ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு
Answer:
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

Question 13.
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு’ என்பது யாரை எதைக் குறிக்கிறது?
அ) தமிழை
ஆ) நெல்லையப்பரை
இ) குயிலை
ஈ) இளைஞர்களை
Answer:
ஆ) நெல்லையப்பரை

Question 14.
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்
அ) நெல்லையப்பர்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) பாரதியார்

Question 15.
நெல்லையப்பரைப் பாரதி ………….. என்று கூவு என்கிறார்.
அ) வாழ்க வாழ்க
ஆ) தொழில்கள் தொழில்கள்
இ) மனிதர்கள் மனிதர்கள்
ஈ) வெல்க வெல்க
Answer:
ஆ) தொழில்கள் தொழில்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 16.
ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன
அ) ஆணும் பெண்ணும்
ஆ) அறிவும் அழகும்
இ) வாழ்வும் தாழ்வும்
ஈ) பிறப்பும் இறப்பும்
Answer:
அ) ஆணும் பெண்ணும்

Question 17.
தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ……………… லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.
அ) நவீன கலைகள்
ஆ) விளையாட்டு
இ) பாரம்பரிய கலைகள்
ஈ) அறிவியல் கல்வி
Answer:
அ) நவீன கலைகள்

Question 18.
வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர் ………… வெளியிட்ட ஆண்டு …………….
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி விசுவநாதன், 2004
Answer:
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

Question 19.
வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?
அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
ஈ) பாரதியின் வாழ்ககை வரலாற்றைக் கூறுவது
Answer:
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 20.
வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர் ………..
அ) பாரதியார்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசைமணி
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
அ) பாரதியார்

Question 21.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர் …………… ஆண்டு ……………
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) பாரதியார், 1919
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி. விசுவநாதன், 1921
Answer:
இ) இளசைமணி, 2008

Question 22.
பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி
அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி
Answer:
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

Question 23.
பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?
அ) எட்டயபுரம் அரசருக்கு
ஆ) நெல்லையப்பருக்கு
இ) குத்திகேசவருக்கு
ஈ) சீனி. விசுவநாதனுக்கு
Answer:
இ) குத்திகேசவருக்கு

Question 24.
சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சீனி. விசுவநாதன்
Answer:
அ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 25.
பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 26.
பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 27.
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) நெல்லையப்பர்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
ஆ) நெல்லையப்பர்

Question 28.
வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 29.
லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 1.
வேற்றுமை அணி பயின்று வரும் இரு பாடல்களை விளக்கத்துடன் எழுதி வருக.
Answer:
பாடல் : 1

அங்கண் விசும்பின் அகனிலாப் பாறிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமருத்து
தெய்வர் ஒரு மாசுறின். – நாலடியார்

இப்பாடலில், திங்களுக்கும் சான்றோருக்கும் முதலில் ஒப்புமைக்கூறி பின்னர் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும். விளக்கம்:
திங்கள் தேயும், சான்றோன் தேயார் (மனநிலை மாறார்) என்பதேயாகும்.

பாடல் : 2

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று :
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – குறட்பா

பொருத்தம்:
தீயினால் உண்டான புண் உள் ஆறிவிடும்.
நாவினால் உண்டான புண் உள்ளத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.

Question 2.
‘தன்னேர் இலாத தமிழ்’ என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை உருவாக்குக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பழமையும், பெருமையும் கொண்டது. இலக்கண, இலக்கியங்கள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம், தொகை, பாட்டு, ஆற்றுப்படை என எண்ணிலடங்கா நூல்கள் உருவாகி தமிழின் சிறப்பை உலகே தொழும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

முதல் இடை கடைச்சங்கம் கொண்டது. தன்னிகரில்லா தன்மொழியாக விளங்கியது. தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது, பிறமொழி உதவி இல்லாமல், இடர்ப்பாடுகள் இல்லாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது.

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் கொண்ட என் தமிழின் உதவியில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இயங்க முடியாது. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத மொழியாய் விளங்குகிறது.

நன்றி! வணக்கம்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை
Answer:
இ) அடி எதுகை, சீர் மோனை

சிறுவினா

Question 1.
‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

இலக்கணக் குறிப்பு
வெங்கதிர் – பண்புத்தொகை
உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இலாத – இடைக்குறை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 2

புணர்ச்சி விதி

1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.

2. தனியாழி = தனி + ஆழி

  • ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, தனி + ய் + ஆழி என்றானது,
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ய் + ஆ = யா) ‘தனியாழி’ என்று புணர்ந்தது.

3. வெங்கதிர் = வெம்மை + கதிர்

  • ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு வெம் + கதிர் என்றானது.
  • ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்ற விதிப்படி (‘ம்’ ‘ங்’ – ஆகத் திரிந்து) வெங்கதிர்’ என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) முத்துவீரியம்
ஆ) வீரசோழியம்
இ) மாறவைங்காரம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) மாறவைங்காரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?
அ) உயர்ந்தோர்
ஆ) வந்தான்
இ) நடப்பான்
ஈ) உயர்ந்து
Answer:
அ) உயர்ந்தோர்

Question 3.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்’ எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
அ) கருங்குயில்
ஆ) வெங்கதிர்
இ) நெடுந்தேர்
ஈ) ழுதுமாம்
Answer:
ஆ) வெங்கதிர்

Question 4.
‘விளங்கி’ – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
அ) விள + ங் + இ
ஆ) விளங்கு + க் + இ
இ) வி + ளங்கு + இ
ஈ) விளங்கு + இ
Answer:
ஈ) விளங்கு + இ

Question 5.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து 1 சரி 2 தவறு
இ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ) இரண்டு கருத்தும் தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் சரி

Question 6.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்’ அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : ‘குவலயானந்தம்’ என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்
Answer:
ஆ) இரண்டு கருத்தும் தவறு

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) வீரசோழியம் – நாவல்
ஆ) முத்து வீரியம் – சிறுகதை
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
ஈ) மாறனலங்காரம் – பொருளிலக்கணம்
Answer:
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) வந்து – பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இ) இலாத – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் – வினைத்தொகை
Answer:
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

Question 9.
பொருந்தாததைக் தேர்க.
அ) தமிழ்மொழி – பொதிகை மலை
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
இ) தண்டியலங்காரம் – தண்டி
ஈ) காவியதர்சம் – வடமொழி இலக்கணம்
Answer:
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்

Question 10.
பொருத்துக.
அ) வெங்கதிர் – 1. இடைக்குறை
ஆ) இலாத – 2. வினையெச்சம்
இ) வந்து – 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர் – 4. பண்புத்தொகை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 3, 1, 4
Answer:
இ) 4, 1, 2, 3

Question 11.
தமிழ் தோன்றிய மலை
அ) குடகு
ஆ) பொதிகை
இ) இமயமலை
ஈ) விந்தியமலை
Answer:
ஆ) பொதிகை

Question 12.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியல் இடம்பெற்றுள்ள பாடல்
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
ஆ) இறையனார்களவியல் உரை மேற்கோள் பாடல்
இ) நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
Answer:
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 13.
இருளைப் போக்கும் இரண்டு
அ) கதிரவன், நிலவு
ஆ) கதிரவன், தமிழ்
இ) அறிவு, தமிழ்
ஈ) அறிவு, ஞானம்
Answer:
ஆ) கதிரவன், தமிழ்

Question 14.
மின்னலைப் போன்று ஒளிர்வது
அ) கதிரவன்
ஆ) தமிழ்
இ) தமிழ்
ஈ) வானம்
Answer:
அ) கதிரவன்

Question 15.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
அ) வீரசோழியம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) முத்து வீரியம்
ஈ) குவலயானந்தம்
Answer:
ஈ) குவலயானந்தம்

Question 16.
தண்டியலங்காரம் ……………. இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
Answer:
ஈ) அணி

Question 17.
‘ஓங்கலிடை வந்து’ என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் ………….. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அ) பொருளணியியல்
ஆ) பொதுவியல்
இ) சொல்லணியியல்
ஈ) ஒழிபியல்
Answer:
அ) பொருளணியியல்

Question 18.
காவியதர்சம் என்பது
அ) வடமொழி இலக்கண நூல்
ஆ) புராண நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) மலையாள இலக்கிய நூல்
Answer:
அ) வடமொழி இலக்கண நூல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 19.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்துவீரியம்
Answer:
அ) தண்டியலங்காரம்

Question 20.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
அ) தண்டி
ஆ) ஐயரினாதர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி
Answer:
அ) தண்டி

Question 21.
தண்டி …………. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) கி.பி. 11
ஆ) கி.பி. 12
இ) கி.பி. 13
ஈ) கி.பி. 14
Answer:
ஆ) கி.பி. 12

Question 22.
தண்டியலங்காரம் …………… பெரும் பிரிவுகளை உடையது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

குறுவினா

Question 1.
தண்டியலங்காரம் – நூல், நூலாசிரியர் சிறுகுறிப்பு தருக.
Answer:
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று தண்டியலங்காரமாகும். எழுதியவர் தண்டி ஆவார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. தண்டியலங்காரம் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

ஆசிரியர் : தண்டி
காலம் : 12ஆம் நூற்றாண்டு
தழுவல் நூல் : காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலை தழுவி எழுதப்பட்டது.
மூன்று பிரிவுகள் : பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்.

Question 2.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:
தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

Question 3.
அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?
Answer:
அணி இலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.

Question 4.
தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?
Answer:
பொதுவியல், மாறனலங்காரம், சொல்லணியியல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 5.
ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே – விளக்குக.
Answer:
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே ஆகும்.

Question 6.
புற இருளைப் போக்குவது எது?
Answer:
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவனாகும்.

சிறுவினா

Question 1.
தன்னேர் இலாத தமிழின் சிறப்புக் குறித்துத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
(i) இந்நில உலகில் வாழும் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவன்.

(ii) குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி, சான்றோர்களால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதும் எதனோடும் ஒப்பிட்டுக் கூற முடியாததுமானது தமிழ்மொழி.

(iii) புற இருளைப் போக்கும் கதிரவனைப்போல அக இருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்று தண்டியலங்கார உணர மேற்கோள் பாடல் உணர்த்துகின்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
பொருள் வேற்றுமையணியைச் சான்று தந்து விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம் :
கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

கதிரவன் புற இருளை அகற்றும்;
தமிழ்மொழி அக இருளை அகற்றும்.

விளக்கம் :
கதிரவன்
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் : கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.

தமிழ்:
குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.