Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 1.
கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக.
Answer:
அ) என்றும் விரும்பியே கல்.
உலகில் உத்தமனாய் வாழ கல்வி
எத்திக்கும் உன் புகழை நாட்ட
ஏற்றமிகு கல்வியை கசடற கற்று
என்றும் விரும்பியே கல்

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும்.
உயிரை விட மேலானது ஒழுக்கம்
தயிரை விட மென்மையானது ஒழுக்கம்
பழகும் முறை அறிந்து வாழ்ந்தால்
ஒழுக்கமே உயர்வு தரும்.

இ) இன்னல் விலகி விடும்.
அன்பினால் அறம் பல செய்து
பண்பினால் பல புகழ் எய்து
உண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்
இன்னல் விலகி விடும்.

ஈ) உழவின்றி உய்யா உலகு.
கோலும் குடையும் மன்னனுக்கு அவசியம்
எழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம்
உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்
உழவின்றி உய்யா உலகு

உ) மொழியின் வழிய தறிவு.
வள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று
கம்பனின் காவியத்தை கசடறக் கற்று
இளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து
மொழியின் வழிய தறிவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
‘இயற்கை’ என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.
Answer:
தென்றல் வீச பூமணம் பரவும் குன்றம்
குளிர குளிரில் வாடும் மயிலும்
ஆட மழைமேகம் சொரியும்
மண்ணு லகைக் காண்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே தகளியாய்     (ஆர்வமாய் / தகளியாய்)
ஆ) வான்மழை தூறலில்    (தூறலில் / பொழிந்திடின்)
இ) கண்ணிரண்டும் இல்லார்     (இலாதார் / இல்லார்)
ஈ) வெண்ணிலவு காய்கிறது     (காய்கிறது / ஒளிர்கிறது)
உ) வெய்யோன் காய்ந்திட     (காய்ந்திட / ஒளிர்ந்திட)

Question 2.
மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

அ) கல்வி கரையில கற்பவர்
ஆ) கல்லாரே ஆயினும் கேட்க (கற்க)
இ) நல்லவை செய்யின் நலமே
ஈ) அவமதிப்பும் ஆன்ற பொருள்
உ) உண்ணாது நோற்பார் சான்றோர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 3.
பொருத்துக.
அ) மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர் – 2. நாள், மலர்
இ) விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 3, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஆ) 4, 3, 1, 2

Question 4.
கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.
Answer:
கடல், வாள், மழை, தேன், மரம்.

கடல் : அலையென எழுந்து ஒலி யெழுப்பி
ஆர்ப்பரிக்கும் பெருங் கடல்.

வாள் : ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த
பளிச்சிடும் வேந்தன் வாள்.

மழை : வானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும்
தேன்சுவை அன்ன தமிழ்

தேன் : மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய
அமுத மெனும் தேன்.

மரம் : இயற்கைத் தாய் உவந்து அளித்த
மறக்க வெண்ணா மரம்.

Question 5.
வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
Answer:
இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 6.
ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
Answer:

  • வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.
  • வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்ற காலம்
அ) சங்ககாலம்
ஆ) சங்கம் மருவிய காலம்
இ) காப்பிய காலம்
ஈ) ஐரோப்பியர் காலம்
Answer:
ஆ) சங்கம் மருவிய காலம்

Question 2.
சங்கம் மருவிய காலத்தில் வலியுறுத்தப்பட்டது
அ) அறம்
ஆ) அரம்
இ) மரம்
ஈ) மறம்
Answer:
அ) அறம்

Question 3.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
அ) வெண்பா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஓசை
அ) அகவலோசை
ஆ) செப்பலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
ஆ) செப்பலோசை

Question 5.
வெண்பா ………….. அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.
அ) வெண்டளையால்
ஆ) கலித்தளையால்
இ) ஒன்றிய வஞ்சித்தளையால்
ஈ) ஒன்றா வஞ்சித்தளையால்
Answer:
அ) வெண்டளையால்

Question 6.
வெண்ட ளை …………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 7.
தளைத்தல் என்பதற்குப் பொருந்தாத பொருளைக் கண்டறி.
அ) கட்டுதல்
ஆ) பிணித்தல்
இ) பிரித்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பிரித்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) நேர் நேர் – 1. புளிமா
ஆ) நிரை நேர் – 2. தேமா
இ) நிலை நிரை – 3. கூவிளம்
ஈ) நேர் நிரை – 4. கருவிளம்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 9.
பொருத்திக் காட்டுக.
அ) இரண்டடி வெண்பா – 1. கலிவெண்பா
ஆ) மூன்றடி வெண்பா – 2. பஃறொடை வெண்பா
இ) நான்கடி வெண்பா – 3. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
ஈ) நான்கடி முதல் பன்னிரண்டடி வரை – 4. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா
உ) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 5. குறள் வெண்பா

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 10.
வெண்பா …………….. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
ஈ) ஏழு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 11.
நேரிசை வெண்பாவில் ………… அடியில் தனிச்சீர் வரும்
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Question 12.
தனிச்சீரில்லாமல் ……………. சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா .
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

குறுவினா

Question 1.
தளைத்தல் என்பதன் பொருள் யாது?
Answer:
தளைத்தல் என்பதற்குக் கட்டுதல், பிணித்தல் என்று பொருள்.

Question 2.
ஈரசைச் சீர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • மாச்சீர் – தேமா, புளிமா
  • விளச்சீர் – கூவிளம், கருவிளம்.

Question 3.
மூவசைச்சீர்களைக் குறிப்பிடுக.
Answer:
காய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஈற்றுச்சீர் எவ்வெவ் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்?
Answer:
நாள், மலர், காசு, பிறப்பு.

Question 5.
வெண்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • வெண்பா ஏழு வகைப்படும். அவை:
    1. குறள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. இன்னிசை வெண்பா
    4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
    5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
    6. பஃறொடை வெண்பா
    7. கலிவெண்பா

Question 6.
பஃறொடை வெண்பா, கலிவெண்பா – குறிப்பு வரைக.
Answer:

  • நான்கடிச் சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்டது பஃறொடை வெண்பா ஆகும்.
  • பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை கொண்டது ‘கலிவெண்பா’ ஆகும்.

Question 7.
வெண்பாவிற்கான இலக்கணத்தைக் கூறுக.
Answer:

  • இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது வரும்.
  • ஈற்றடி மூச்சீராகவும் ஏனைய அடி நாற்சீராகவும் வரும்.
  • ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் மூவசைச்சீரில் காய்ச்சீரும் வரும்.
  • செப்பலோசை பெற்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரெண்டு அடி வரை வரும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
இன்னிசை வெண்பா எவ்வாறு அமைக்கப்படும்?
Answer:
தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

மொழியை ஆள்வோம்

பக்கம்: 102

சான்றோர் சித்திரம்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர். “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கேட்ட போது, ‘அஃது’ என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 1

பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் 112 எழுதவும் இயலும் என்று நடை முறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.

இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முலான இதழ்க ளை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

முறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

வினாக்கள்:

1. ஒரு நேர்காணலில் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக என்று கேட்டதற்குப் பதிலாக மறைமலை அடிகள் கூறியது என்ன?
2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன?
3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?
4. இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.
5. இப்பாடப்பகுதியின் இடம்பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.
Answer:
1. அஃது எனக்குத் தெரியாது
2. மறைமலை அடிகள்
3. ஞானசாகரம்
4. வரலாறும் காலமும்
5. அறிவுக்கடல்

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

தமிழாக்கம் தருக.

The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavorably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected; There are no traveling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits.

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்ததை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது.

மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.

பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

Question 1.
யானைக்கும் அடிசறுக்கும்
Answer:
தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Answer:
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். வாழ்க்கையில் நாம் பிறருக்குத் தீமை செய்து வந்தோம் என்றால் நமக்குத் தீமையே நடக்கும் இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.

Question 3.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
Answer:
நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

Question 4.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Answer:
வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

Question 5.
ஊழி பெயரினும் தாம் பெயரார்
Answer:
நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள்.

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் : உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

ருசிக்காக, சாப்பிடக்கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும்.

தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக : 2 காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 2

பத்தியின் சுருக்கம்:
இன்றைய சூழலில், ஓய்வின்மை , காலம் தவறிய உணவு, உணவில் மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உணவு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்குக் காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற் பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.

மொழியோடு விளையாடு

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 9
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 10

எண்ணங்களை எழுத்தாக்குக

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 6
கல்வி ஒருவரை அறிவினால் மேதையாக்கும்
கல்வி கற்றால் நீதியரசர ஆகலாம்.
கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம்
கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம்
கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும்.
கல்வியே ஒருவர்க்குப் பெருமை சேர்க்கும்
கல்வி கற்றவரையே உலகம் போற்றும்.

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

எ.கா. பலகை
பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.
பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.

1. தாமரை
தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன.
தாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது.

2. கோவில்
கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.
அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.

3. வெங்காயம்
வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.
வெம்மையால் உண்டான காயம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

4. தலைமை பள்ளி
ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது.

செய்து கற்போம்.

அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அட்டவணைப்படுத்துக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 7

நிற்க அதற்குத் தக

கீழ்க்கண்ட இடங்களில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 8

படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

1. Arrival – வருகை
2. Departure – புறப்பாடு
3. Coaveyor Belt – ஊர்திப்பட்டை
4. Take off – வானூர்தி கிளம்புதல்
5. Passport – கடவுச்சீட்டு
6. Visa – நுழைவு இசைவு
7. Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.3 இடையீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.3 இடையீடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 1.
இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 1

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
‘இடையீடு’ – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
Answer:
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண் ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 1.
‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக.
Answer:
மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.

எண்ண ம் :
நம் மனதில் உள்ளவையே எண்ணம்.

வெளியீடு :
நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

கேட்டல் :

  • நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல்.
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை .

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?
அ) விளக்கு
ஆ) எழுத்து
இ) நடை
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
ஆ) எழுத்து

Question 2.
கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்
அ) நடை
ஆ) விளக்கு
இ) யாப்பும் கவிதையும்
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
அ) நடை

Question 3.
கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) இதுவரை
இ) நடை
ஈ) எழுத்து
Answer:
அ) ஒளிச்சேர்க்கை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 4.
கவிஞர் சி. மணி மொழிப்பெயர்த்த சீன மெய்யியல் நூல்
அ) தாவோ ஜிஜிங்
ஆ) தாவோ லி ஜிங்
இ) தாவோதே ஜிங்
ஈ) தாவோ ஸி ஜிங்
Answer:
இ) தாவோதே ஜிங்

Question 5.
கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?
அ) உவகை
ஆ) மருட்கை
இ) இளிவரல்
ஈ) அங்கதம்
Answer:
ஈ) அங்கதம்

Question 6.
கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?
அ) அழுகையும் அங்கலாய்ப்பும்
ஆ) நகையும் உவமையும்
இ) சிரிப்பும் கசப்பும்
ஈ) பயமும் துக்கமும்
Answer:
இ) சிரிப்பும் கசப்பும்

Question 7.
கூற்று 1 : குதிரை வரையக் குதிரை வராது ; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
கூற்று 2 : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை ; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 8.
கூற்று 1 : சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.
கூற்று 2 : எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவதுண்டு.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 9.
கூற்று : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை .
காரணம் : கனியை உண்போனின் பசியைப் பொறுத்ததே கனியின் சுவை.

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று சரி காரணம் சரி

Question 10.
சரியானதைத் தேர்க.
அ) குதிரை வரைய யானையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
ஆ) கனியின் இனிமை அதன் மறத்தால் அறியப்படும்.
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
ஈ) நீர்த்தேடி அலையும் போது நீர் கிடைக்கும்.
Answer:
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.

Question 11.
சரியானதைத் தேர்க.
அ) கவிஞர் சி. மணி அவர்கள் புதுக்கவிதையின் அங்கதத்தை பயன்படுத்தவில்லை .
ஆ) இருத்தலின் வெறுமையைக் கவிஞர் சி மணி சிரிப்பும் கசப்புமாகச் சொன்னார்.
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஈ) கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நகர்வதில்லை.
Answer:
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 12.
பொருத்தாதைத் தேர்க.
அ) கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது.
ஆ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
இ) நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
Answer:
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.

Question 13.
பொருத்தாதைத் தேர்க.
அ) கவிஞர். சி.மணி, வே.மாலி, செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
ஆ) கவிஞர். சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்.
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
ஈ) கவிஞர். சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்.
Answer:
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.

Question 14.
பொருத்தி,
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 2
அ) 4, 2, 1, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3, 1
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஈ) 4, 1, 3, 2

Question 15.
சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) யாப்பும் கவிதையும்
ஆ) வரும் போகும்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) இதுவரை
Answer:
ஈ) இதுவரை

Question 16.
சி. மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளிவரத் தொடங்கிய ஆண்டு
அ) 1953
ஆ) 1956
இ) 1959
ஈ) 1962
Answer:
ஈ) 1962

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 17.
சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்
அ) யாப்பும் கவிதையும்
ஆ) அணியும் கவிதையும்
இ) எழுத்தும் கவிதையும்
ஈ) சொல்லும் கவிதையும்
Answer:
அ) யாப்பும் கவிதையும்

Question 18.
‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை ‘ என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) வேணுகோபாலன்
ஆ) இரா.மீனாட்சி
இ) சி.மணி
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) சி.மணி

Question 19.
சி. மணி, பேராசிரியராகப் பணியாற்றிய துறை
அ) தமிழ்
ஆ) ஆங்கிலம்
இ) கணிதம்
ஈ) இயற்பியல்
Answer:
ஆ) ஆங்கிலம்

Question 20.
‘தாவோ தே ஜிங்’ என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கவிமணி
ஆ) சி. மணி
இ) நாகூர் ரூமி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஆ) சி. மணி

Question 21.
வே. மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியவர்
அ) சி. மணி
ஆ) ஆத்மாநாம்
இ) நாகூர் ரூமி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
அ) சி. மணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 22.
எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி. மணி?
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
ஆ) பார்த்தல், கேட்டல், இரசித்தல்
இ) கேட்டல், பார்த்தல், கவனித்தல்
ஈ) உணர்தல், நினைத்தல், செய்தல்
Answer:
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்

Question 23.
சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று எழுதியவர்

அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர் ரூமி
இ) சி. மணி
ஈ) கவிமணி
Answer:
இ) சி. மணி

குறுவினா

Question 1.
கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்குகிறது?
Answer:

  • சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையையும் தருகிறது.
  • நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்குகிறது கல்வி.

Question 2.
கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும் விளைவுகள் என்ன?
Answer:

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 3.
கனியின் சுவை எதைப் பொறுத்தது?
Answer:

  • கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
  • மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சார்ந்ததாகும்.

Question 4.
கவிஞர் சி. மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.
Answer:

  • விளக்கு இலக்கிய விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது.
  • ஆசான் கவிதை விருது.
  • கவிஞர் சிற்பி விருது.

Question 5.
‘மனம்புழுங்கம் பலவுண்டு’ என்று கவிஞர் சி. மணி எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி. மணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
குதிரை வரையக் குதிரையே
வராது ; கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
நாம் சொல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :
நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறொன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரையை வரைய நினைத்து வரையும் போது அது பார்ப்பதற்குக் குதிரை போல இல்லாமல் கழுதைபோலக் காட்சியளிக்கலாம்.

பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அதுபோன்றுதான் : நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும் போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக்கருத்தையும் பெறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 2.
“எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
எலியைப் பிடிக்க பொறிவைத்தால் விரலும் மாட்டிக்கொள்ளும். தண்ணீர் தேடிய அலையும் பொழுது இளநீரும் கிடைக்கும்.

விளக்கம் :
ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்து நம்மைத் துன்புறுத்தலாம். நாம் சிறிய குறிக்கோளுடன் செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்கலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே, இடையீடுகள் எப்பொழுதும் நம்மிடம் வந்துபோகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.2 இதில் வெற்றி பெற Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.2 இதில் வெற்றி பெற

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 1.
பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்ற உவமைச் சொற்களைத் தொகுக்க. இவை கருத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்துக் குழுவாக உரையாடுக.
Answer:
பாலு : ஓடறவனுக்கு ஒம்பதாம் இடத்தில் சுக்கிரன்னு சொல்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?

வேலு : ஓடறவன்னா, ஓய்வில்லாமல் உழைக்கிறவன். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்னா
– சுக்கிரதிசை என்பது மக்களுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான் என்று சொல்வார்கள்.

பாலு : நல்ல விளக்கம் இது. இன்னும் ஒரு சந்தேகம்?
வேலு : என்ன?
பாலு : காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை. இதன் பொருளென்ன?
வேலு : பனைமரத்தில் பனம்பழம் பழுத்தவுடன் தானே விழும். ஆனால் காக்கா போய் பனை மரத்தில் உட்காரவும் அதனால் பனம்பழம் விழுந்ததாம் என்பது கருத்து. இதன் விளக்கம் குழந்தை ஒன்று மழையே மழையே வா என்று பாடியதும் மழை வந்துவிட்டதாம். மழை தானேதான் பொழியும் யாரும் வரவைக்க முடியாது.

பாலு : கடைசியாக, ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பதன் விளக்கம் கூறு.

வேலு : வரவு இரண்டணா என்றால் செலவு ஒரு அணாவாக இருக்க வேண்டும். அது இயல்பான வாழ்க்கை. வரவு இரண்டணா என்றால் செலவு நாலணாவாக இருந்தால், அச்செய்கைதான் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுரதா நடத்திய கவிதை இதழ்
அ) இலக்கியம்
ஆ) காவியம்
இ) ஊர்வலம்
ஈ) விண்மீன்
Answer:
ஆ) காவியம்

Question 2.
“விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள்
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
Answer:
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

குறுவினா

Question 1.
வசனம், கவிதை வேறுபாடு தருக.
Answer:
வசனம் : எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

கவிதை :
எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லைவைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.

நெடுவினா

Question 1.
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:
கவிதை :

  • சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.
  • அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
  • சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள் :

  • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
  • அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.
  • சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
  • இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
  • அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

சிறந்த கவிதை :
(i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.

(ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.

(iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
அ) கவிதை
ஆ) கொச்சைச் சொற்கள்
இ) பாட்டு
ஈ) உரைநடை
Answer:
ஈ) உரைநடை

Question 2.
சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது
அ) கவிதை
ஆ) கட்டுரை
இ) கல்வி
ஈ) பள்ளிக்கூடம்
Answer:
இ) கல்வி

Question 3.
அடியின் கீழே அடியிருந்தால் வருவது
அ) சீர்
ஆ) அசை
இ) தளை
ஈ) தொடை
Answer:
ஈ) தொடை

Question 4.
இரண்டுசீரின் இடைவெளியில் வருவது
அ) தளை
ஆ) அசை
இ) எதுகை
ஈ) மோனை
Answer:
அ) தளை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
எதுகை, மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது
அ) உரைநடை
ஆ) செய்யுள்
இ) தளை
ஈ) தொடை
Answer:
அ) உரைநடை

Question 6.
வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது
அ) நாள்
ஆ) காசு
இ) மோனை
ஈ) இயைபு
Answer:
ஆ) காசு

Question 7.
முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தில் விளைவது
அ) அருள், அறம்
ஆ) அறம், மறம்
இ) அறம், பொருள்
ஈ) பொருள், இன்பம்
Answer:
இ) அறம், பொருள்

Question 8.
சுரதாவின் இயற்பெயர்
அ) கோபால்
ஆ) இராசகோபால்
இ) துரைகோபாலன்
ஈ) இராசகோபாலன்
Answer:
ஈ) இராசகோபாலன்

Question 9.
கூற்று 1 : பழுத்திருந்தால் சாறு வரும் ; வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர் வரும்.
கூற்று 2 : அடியின் கீழ் அடியிருந்தால் தொடை வரும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 10.
கூற்று : எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவந்தான் வசனம்.
காரணம் : எளிய மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதே உரைநடை.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் சரி

Question 11.
கூற்று 1 : எழுத்தெண்ணி முன்னோர் போல் கற்றுவந்தால் அறம் பொருள் உள்ளத்தில் விளையும்.
கூற்று 2 : தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும் ; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Question 12.
சரியானதைத் தேர்க.
அ) பூக்கும் வரை பூ என்போம்.
ஆ) ஆக்கிய பின் அரிசி என்றும்.
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.
ஈ) கவிநடையும் உரைநடையும் வேறுவேறு அல்ல.
Answer:
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சிறந்த கேள்வி எழ்புவதால் படிப்பு வரும்
ஆ) நுணுக்கத்தோடே முன்னோர் போலக் கற்க வேண்டாம்.
இ) மொழியை அறியாமல் எழுதுவோரே புகழ் அடைவார்.
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.
Answer:
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 14.
பொருந்தாததைத் தேர்க.
அ) கண்வேறு ; கல்விக் கண் வேறு.
ஆ) புகழ் வேறு ; செல்வாக்கு வேறு.
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.
ஈ) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு.
Answer:
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) பழம் – சாறு
ஆ) தண்ணீ ர் – எர்
இ) அடி – இரண்டுசீர் இடை
ஈ) பா தொடை நன்கு அமை
Answer:
இ) அடி – இரண்டுசீர் இடை

Question 16.
பொருத்துக.
அ) தொடைகள் – 1. அசைகள்
ஆ) தளைகள் – 2. தொடைகள்
இ) எழுத்துகள் – 3. பாக்கள்
ஈ) அடியின் கீழ் அடிகள் – 4. சீரின் இடைவெளியில்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 3, 1, 4, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
பொருத்துக.
அ) எரு – 1. ஆராய்ச்சி
ஆ) கேள்வி – 2. குளிர்
இ) அத்தி இரவு – 3. பயிர்
ஈ) கற்றால் விளையும் – 4. அறம் பொருள்

அ) 3, 2, 1, 4
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 18.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
அ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலிவிருத்தம்
ஈ) நேரிசை ஆசிரியபா
Answer:
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 19.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் கவிதை இடம்பெற்றுள்ள காதைத் தொகுப்பு
அ) தேன்மழை
ஆ) துறைமுகம்
இ) அமுதும் தேனும்
ஈ) மங்கையர்க்கரசி
Answer:
ஆ) துறைமுகம்

Question 20.
உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்
அ) சுரதா
ஆ) வெ.ராமலிங்கனார்
இ) அப்துல் ரகுமான்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

Question 21.
சுரதா நடத்திய இதழ்
அ) காவியம்
ஆ) தென்றல்
இ) குயில்
ஈ) எழுத்து
Answer:
அ) காவியம்

Question 22.
சுரதா என்பதன் விரிவாக்கம்
அ) சுப்புரத்தினதாசன்
ஆ) சுதாரகுநாததாசன்
இ) சுப்பிரமணியரத்தினதாசன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சுப்புரத்தினதாசன்

Question 23.
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 24.
சுரதா பெற்றுள்ள விருதுகள்
i) தமிழக அரசின் கலைமாமணி விருது
ii) பாரதிதாசன் விருது
iii) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 25.
தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்; – என்று எழுதியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Question 26.
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்னும் அடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) அந்தாதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) எதுகை

Question 27.
சுரதாவின் ‘காவியம்’ என்னும் இதழ்
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.
ஆ) முழுக்க முழுக்க சிறுகதைகளைக் கொண்டது.
இ) குறும்புதினங்களின் தொகுப்பினைக் கொண்டது.
ஈ) இவற்றில் எதுவும் கொண்டதில்லை.
Answer:
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 28.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) வாணிதாசன்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

குறுவினா

Question 1.
புண் வேறு ; வீரர்களின் விழுப்புண் வேறு ;
புகழ் வேறு ; செல்வாக்கு வேறு ; காணும் – இப்பாடல் வரிகளில் அமைந்துள்ள நயங்களை எடுத்து
எழுது.
Answer:
சீர் மோனை – புண்வேறு – புகழ்வேறு
இயைபு – ‘வேறு’ என்ற சொல் ஓசை நயத்துடன் சீர்களில் இடம் பெற்றுள்ளது.

Question 2.
‘இதில் வெற்றி பெற’ என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக.
Answer:
‘செடியில் பூத்த பூமீது வண்டுவந்து தங்கும்’.

Question 3.
புண் வேறு, விழுப்புண் வேறு – விளக்குக.
Answer:
புண்:
உடலில் காயத்தால் ஏற்படுவது. இது இயல்பாகவோ, விபத்து மூலமாகவோ நோய் மூலமாகவோ ஏற்படலாம்.

விழுப்புண் :
விழுப்புண்ணும் உடலில் ஏற்படுவதுதான். ஆனால் இது வீரத்தினை வெளிப்படுத்தும் எதிரியுடன் போரிட்டு பெற்ற புண்ணைக் குறிக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 4.
கவிஞர் சுரதா நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்.

Question 5.
கவிஞர் சுரதா அவர்கள் பெற்றுள்ள விருதுகள் யாவை?
Answer:

  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • பாரதிதாசன் விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 6.
உரைநடை, கவிதை – வேறுபடுத்துக.
Answer:

  • உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.
  • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது.

Question 7.
அறம்பொருள்கள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?
Answer:
நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில், அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 8.
விண்வெளியில் இயங்குவனாகச் சுரதா கூறுவன யாவை?
Answer:

  • வெண்மதி (வெண்ணிலவு)
  • செங்கதிரோன் (சூரியன்)
  • முகில் (மேகம்)

சிறுவினா

Question 1.
‘வேறு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி கவிஞர் கவிதை புனைத்துள்ள கவித்திறமையை விளக்குக.
Answer:

  • வானம் வேறு, ஆனால் வானத்தில் இயக்கும் நிலவும், கதிரவனும் மேகமும் வேறு.
  • மண் பலவகைப்படும். செம்மண், வண்டல்மண், கரிசல் மண் எனலாம். ஆனால், மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
  • பனித்துளியும் நீர்தான் உள்ளது. மழைத்துளியிலும் நீர்தான் ஆனால் இரண்டும் வெவ்வேறு.
  • புண் என்றால் உடம்பில் ஏற்படும் காயம் தான், ஆனால் சாதாரணமாக வருவது புண் ; போரில் பெறுவது விழுப்புண்.
  • புகழ் என்பதும் செல்வாக்கு என்பதும் எல்லோருக்கும் நம்மைத் தெரியும் என்றே கூறப்பட்டாலும், புகழ் என்பது கல்வி, நற்செயலால் வருவது, ஆனால் செல்வாக்கு என்பது பொருளால் வருவது.
  • காணும் கண் ; கல்விக்கண் வேறு – பார்க்கும் கண்ணால் உலகைப் பார்த்துக் கொள்ளலாம். கல்விக் கண்ணால் அறியாமை அகன்று நாம் அகஒளியைப் பெறுகின்றோம்.
  • இவ்வாறுதான் கவிதையும் உரைநடையும் எழுதப்படுவனவாக இருந்தாலும் இரண்டின் நடையழகும் வேறு வேறாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 2.
பூக்கும் வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச்
சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல் அடியளவை அறிந்திடாமல் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
பூக்கும் வரை அரும்பு பூத்தப்பின் பூ
தனியாக இருந்தால் சொல் முறையாகச் சேர்த்தால் கவிதை

விளக்கம் :
மரத்தில் இருக்கும் பூவானது விரியாமல் இருக்கும் வரை மொட்டு என்றுதான் அழைக்கப்படும். அதுவே பூத்துவிட்டால் அதனைப் பூ என்று அழைப்போம் அதுபோன்றுதான் பரவலாக இருக்கும் எல்லா வார்த்தைகளையும் சரியான முறையில் எதுகை, மோனையுடன், அடியளவையும் அறுதியிட்டுச் சேர்த்தால் அதனைக் கவிதை என்போம். அதுவே எதுகை, மோனை இல்லாமல், அடிவரையரையின்றி வந்தால் அதனை உரைநடை என்போம் என்று கவிஞர் கூற வரும் இடத்தில் இப்பாடல் அடியினை எழுதியுள்ளார்.

Question 3.
‘வரும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிஞர் சுரதா எழுதியுள்ளவை யாவை?
Answer:

  1. பழம் பழுத்திருந்தால் அதிலிருந்து சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலை மேற்கொள்ள ஏர்கள் வரும்.
  2. எழுத்துகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து அசைகள் வரும்; செய்யுளில் இரண்டு சீர்களின் இடையிலே சரியான தளைகள் வரும்.
  3. தளைகள் முறையாக அமைந்து அடிகள் வரும்; அடிகளை வரிசையாக அடிக்கியிருந்தால் தொடைகள் வரும்.
  4. தொடைகள் சரியாக அமைந்து இருந்தால் முறையான கவிதை உருவாகும்.

Question 4.
‘தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும் ;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம்’ என்று கவிதைத் தொகுப்பில் இடம் : பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
மாங்காயும், புளியங்காயையும் மரத்தில் காய்ப்பதாகும். அதைப் போன்று செய்யுளிள் முறையாக சீர்கள் அமைக்கப்பட்டால் அச்சீர்களிலும் இவை தோன்றும்.

விளக்கம் :
மாமரத்திலும், புளியமரத்திலும் முறையான பருவநிலைகள் நிலவி எவ்விதமான நோய்த்தாக்குதலும் இல்லாமல் இருந்தால் மிகுதியாக மாங்காயும், புளியங்காயும் மரத்திலே காய்த்துக் கிடக்கும். அதுபோலவே, எழுத்துகளைக் கொண்டு சீர்கள் அமைக்கும் போது முறையான எழுத்துகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறப்பான சீர்கள் அமைந்தால் அந்தச் சீர்களுக்கு இடையே இந்தத் தேமா, புளிமா என்ற அசை வாய்ப்பாடு நன்றாகக் காய்க்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
கவிஞர் சுரதா ஒரு சிறந்த சொல்லேர் உழவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ‘இதில் வெற்றிபெற’ என்ற கவிதையில் ‘விளையும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிபுனைந்த திறமையை விளக்குக.
Answer:

  • எருவைப் பயன்படுத்தினால் பயிர் நன்றாக விளையும் ;
  • சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ஆராய்ச்சிகள் புதிது புதிதாக விளையும் ;
  • மாலை நேரத்திலும், இரவிலும் நன்றாக குளிர்விளையும் ;
  • மிகவும் நுட்பமாக எழுத்துகளை எண்ணி, சிறந்த பொருள்களைப் புரிந்து நம் முன்னோர்கள் கற்று வந்தது போல கற்று வந்தோம் என்றால், நம் உள்ளத்தில் அறம், பொருள் விளையும் ;
  • மதிக்கத்தகுந்த அறிவினால் ஒருவனுக்கு புகழ் விளையும்.

Question 6.
கவிஞர் சுரதா பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்.

சிறப்புப் பெயர் : பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். பிறகு சுரதா என்று மாற்றிக் கொண்டார்.

இலக்கியப் பணி : இலக்கியம், விண்மீன் , ஊர்வலம், போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர்.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.

விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 7.
கவிஞர் சுரதா சிறந்த உவமைக் கவிஞர் என்பதற்கு உன் பாடப்பகுதியைக் கொண்டு விளக்குக.
Answer:
(i) மரத்திலே ஆங்காங்கே பூக்கள் மொட்டுகளாக இருக்கும். அவைப் பூத்துவிட்டால் பூ என்று பெயர் பெற்று எல்லோரும் அறியும் விதத்திலும் பயன்தரும் விதத்திலும் அமையும்.

(ii) அதுபோல தமிழ்மொழியின் பல்லாயிரக்கணக்கான சொற்கள் நிரம்பி இருந்தாலும் அவை முறையாக வைக்கப்பட்டால், எதுகை, மோனையோடு அடிவரையரையுடன் இருந்தால் கவிதையாகும். அவ்வாறு இல்லையெனில் உரைநடையாகும் என்னும் வரிகளில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

(iii) செடியில் பூத்த பூ மீது வண்டு வந்து தங்கும் என்பதனையும் உவமைப்படுத்தியுள்ளார். பூ பூத்து மணம் பரப்பி தன்னுடைய இருப்பை உலகிற்குச் சொல்லி வண்டுகளை அழைத்து தன் இருப்பை அடுத்தவர்களுக்கு அறியச் செய்கிறது.

(iv) புலவர்கள் சிறப்பாகப் பாடல்களை எழுதினார்கள் என்றால் அவர்களின் பாடல் மேல் புகழ்வந்து தங்கும் என்று கூறியுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 1.
பண்டைக்காலப் பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகளில், தற்காலத்தில் மேற்கொள்ளத்தக்கவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் : வணக்கம் ஐயா! அக்காலத்தில் கையெழுத்து எப்படி இருந்தது ஐயா?

ஆசிரியர் : வணக்கம். எழுத்துகள் ஒன்றோடொன்று வரி கோணல் இல்லாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். நாமும் அவ்வாறே எழுத வேண்டும். புள்ளி, கால், கொம்பு முதலிய வரி எழுத்தின் உறுப்புகளை அன்றைய பெரியோர்கள் பழக்கினார்கள். நாம் இன்றைய பெரியோர்களிடமிருந்து அவற்றைப் பழக்கிக் கொள்ள வேண்டும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை முதலானவற்றை மனனம் செய்தார்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்தார்கள்.

மாணவன் : அப்படியா ஐயா! வேறு ஏதேனும் செய்தார்களா ஐயா?

ஆசிரியர் : ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவர்களைத் தான் எழுதிய ஏடுகளின் எழுத்துகளின் மேலேயே எழுதி வரச் செய்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகளை
நீயும் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

மாணவன் : நன்றி ஐயா! உறுதியாகச் செய்கிறேன் ஐயா!

Question 2.
‘மனனம் செய்தல்’ – இன்றைய கல்வி நிலையிலும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு. இது பற்றிய பத்துக் கருத்துகளை முன் வைக்க.
Answer:

  • திருக்குறள், சான்றோர் சிந்தனைகள், அறநூல் தொடர்கள் போன்றவற்றை மனனம் செய்தால் தான் அறிவை வெளிக்கொணர முடியும். அன்று கவனச் சிதறல்கள் இல்லை.
  • இன்று கவனச்சிதறல்களின் ஊடேதான் கல்வி. எனவே, மனனம் செய்வதே நல்லது.
  • ர்வு நேரங்களில் மனனப் பாடல்கள், சில கொள்கைகள் மனனம் செய்தாலொழிய நினைவுக்கு வராது.
  • மனனம் என்பது மனதை ஒருமைப்படுத்தும் ஒரு தியானம். மனம் என்பது நீண்டநாள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு ஞாபக சக்தி. சான்றோர் அறிவுரை, முந்தைய நிகழ்வுகள் எல்லாம் மனனம் என்னும் வகையில்தான் அடங்கும்.
  • ஒரு ஆராய்ச்சியின் தொடர்ச்சி என்பது நேற்று என்ன செய்தோம் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதும் மனன சக்தியே.
  • புரியாத ஒரு பகுதியை மனனம் செய்தோம் என்றால் விளங்கும் காலத்தில்தானே விளங்கும். : மனனம் இல்லை என்றால் மூளையின் செயல்பாடு குறையும் என்பது ஆராய்ச்சி கருத்து.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

எனவே, மனனத்தின் மீது கவனம் செலுத்துவது சிந்தனையாற்றலைச் சிறக்க வித்திடும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
Answer:
இ) கடுக்காய்

Question 2.
‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
Answer:
ஆ) கணிதம்

குறுவினா

Question 1.
அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை ?
Answer:

  1. தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.
  2. கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்.
  3. ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  4. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

சிறுவினா

Question 1.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?
Answer:
(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.

(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.

(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.

(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.

(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.

(vi) மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.

(vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.

Question 2.
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
Answer:

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

  • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.
  • எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.
  • பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
  • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண் டாக்கின.
  • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.
  • எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.

நெடுவினா

Question 1.
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

(ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.

(iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.

(iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.

(v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

(vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

(vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.

(viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.

(ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும்” – நன்னூல் 41

(x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

(xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?
அ) 12-ஆம் நூற்றாண்டு
ஆ) 18-ஆம் நூற்றாண்டு
இ) 19-ஆம் நூற்றாண்டு
ஈ) 17-ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 19-ஆம் நூற்றாண்டு

Question 2.
குருகுலம் என்பது
அ) ஆசிரியரின் அறை
ஆ) குருக்கள் தங்கும் இடம்
இ) துறவியரின் குழல்
ஈ) ஆசிரியரின் வீடு
Answer:
ஈ) ஆசிரியரின் வீடு

Question 3.
மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்
அ) சபை
ஆ) சங்கம்
இ) கோட்டை
ஈ) அம்பலம்
Answer:
ஈ) அம்பலம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 4.
ஜைன மடங்களுக்கான பெயர்
அ) அம்பலம்
ஆ) மன்றம்
இ) திண்ணை
ஈ) பள்ளி
Answer:
ஈ) பள்ளி

Question 5.
பள்ளியென்னும் பெயர் எவ்வறிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்
அ) பாடசாலை, ஆலயம்
ஆ) பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
இ) பாடசாலை, மடங்கள்
ஈ) பாசறை, மடங்கள்
Answer:
இ) பாடசாலை, மடங்கள்

Question 6.
‘நெடுங்கணக்கு’ என்பது
அ) நீண்ட கணக்கு
ஆ) பெருக்கல் கணக்கு
இ) ஓலைச் சுவடி
ஈ) அரிச்சுவடி
Answer:
ஈ) அரிச்சுவடி

Question 7.
‘சட்டாம்பிள்ளை ‘ என்பவர் யார்?
அ) ஊரில் பெரியவர்
ஆ) சண்டித்தனம் செய்பவர்
இ) தலைமை வகிக்கும் மாணவர்
ஈ) பிடிவாதம் பிடிக்கும் மாணவர்
Answer:
இ) தலைமை வகிக்கும் மாணவர்

Question 8.
‘அக்ஷராப்பியாசம்’ என்றால்
அ) பாடம்படித்தல்
ஆ) எழுத்தறிவித்தல்
இ) மனனம் செய்தல்
ஈ) ஏடு எழுதுதல்
Answer:
ஆ) எழுத்தறிவித்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 9.
‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என உரைக்கும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) வளையாபதி
இ) குண்டலகேசி
ஈ) சிந்தாமணி
Answer:
ஈ) சிந்தாமணி

Question 10.
செய்யுளை நினைவுப்படுத்தும் முறைகள்
அ) எழுதுதல், படித்தல்
ஆ) வாசித்தல், எதுகை மோனை
இ) எதுகை மோனை, அந்தாதி
ஈ) கற்பித்தல், எழுதுதல்
Answer:
இ) எதுகை மோனை, அந்தாதி

Question 11.
எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
அ) மடக்கெழுத்தாணி
ஆ) குண்டெழுத்தாணி
இ) ஊசி
ஈ) எழுதுகோல்
Answer:
இ) ஊசி

Question 12.
கதைப்பாடல் குறிப்பிடும் மனனம் செய்வதற்கான சுவடி
அ) அம்கொவதி சுவடி
ஆ) இந்திரச்சுவடி
இ) பிரபாவதி சுவடி
ஈ) சரஸ்வதி சுவடி
Answer:
இ) பிரபாவதி சுவடி

Question 13.
“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” – எனக் குறிப்பிடும் நூல்
அ) சிந்தாமணி
ஆ) தமிழ்விடு தூது
இ) தமிழ்க்கோவை
ஈ) இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
Answer:
ஆ) தமிழ்விடு தூது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 14.
ஓதற் பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை
அ) மூன்று ஆண்டுகள்
ஆ) நான்கு ஆண்டுகள்
இ) இரண்டு ஆண்டுகள்
ஈ) ஏழு ஆண்டுகள்
Answer:
அ) மூன்று ஆண்டுகள்

Question 15.
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் இக்கட்டுரை எந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
அ) உயிர்நீட்சி
ஆ) உயிர்மீட்சி
இ) உயிர்க்காட்சி
ஈ) மையாடல்
Answer:
ஆ) உயிர்மீட்சி

Question 16.
கூற்று 1 : ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணக்கன் அதனைப் பின்பற்றிச் செல்வான்.
கூற்று 2 : பிள்ளைகள் முதலில் தரையில் எழுத ஆசிரியர்கள் அதன் மேல் எழுதுவார்கள்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 17.
கூற்று : சுவடிகளிலுள்ள எழுத்துகளில் மையைத் தடவி வாசிக்கத் தருவார்கள்.
காரணம் : கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும், எழுத்துகளை விளக்கமாகக் காட்டும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 18.
கூற்று 1 : உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
கூற்று 2 : கணக்காயரென்பது அமைச்சரின் பெயர்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 19.
கூற்று : பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறி அனுப்புவதில்லை .
காரணம் : பெயர்களை நினைவில் வைத்து மறுநாள் சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகமாகும்.

அ) கூற்று தவறு காரணம் சரி
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று தவறு காரணம் சரி

Question 20.
கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு .
காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.

அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 21.
கூற்று 1 : பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்.
கூற்று 2 : வேத்தான் சில நேரங்களில் சட்டாம்பிள்ளைக்குரிய கடமை செய்வான்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 22.
சரியானதைத் தேர்க.
அ) உபாத்தியாயர் – கணக்காயர்
ஆ) கீழ்வாயிலாக்கம் – பின்ன எண்ணின் மேல் தொகை
இ) நவத்வீபம் – கல்விப் பயிற்சிக் கூடம்
ஈ) வித்தியாரம்பம் – எழுத்துப் பயிற்சி
Answer:
அ) உபாத்தியாயர் – கணக்காயர்

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) மனப்பாடம் செய்ய சகல வல்லவாதி சுவடி என்ற புத்தகம் இருந்தது.
ஆ) ‘மையாடல் விழா’ என்பது திருமண விழா.
இ) நெடுங்கணக்கை மாணாக்கர் தானே கற்றனர்.
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
Answer:
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

Question 24.
சரியானதைத் தேர்க.
அ) சாஸனம் – இருக்கை
ஆ) மணல் – சிலேட்
இ) பனையேடு – கரும்பலகை
ஈ) எழுத்தாணி – பென்சில்
Answer:
ஆ) மணல் – சிலேட்

Question 25.
பொருந்தாததைத் தேர்க.
அ) ஓதற்பிரிவு – 3 வருடம்
ஆ) வேத்தான் – முதலில் வரும் மாணக்கன்
இ) மையாடல் விழா – அக்ஷராப்பியாசம்
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்
Answer:
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்

Question 26.
பொருந்தாததைத் தேர்க.
அ) சுவடிகளை வைக்கவும் எடுத்துச்செல்லவும் பயன்படும் கருவி அசை எனப்படும்.
ஆ) ‘கிளிமூக்கு’ என்பது ஓலைச் சுவடியுடன் தொடர்புடையது.
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
ஈ) புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
Answer:
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 27.
பொருந்தாததைத் தேர்க.
அ) கோணாமல் – கொம்பு சுழி
ஆ) சாயாமல் – கொண்ட பந்தி
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்
ஈ) கொம்பு – வரியெழுத்தின் உறுப்பு
Answer:
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்

Question 28.
பொருத்துக.
அ) உபாத்தியாயர் – 1. தாழைமடல்
ஆ) குழிமாற்று – 2. ஆசிரியர்
இ) சீதாளபத்திரம் – 3. எழுத்துப்பயிற்சி
ஈ) அக்ஷராப்பியாசம் – 4. பெருக்கல் வாய்பாடு

அ) 2, 4, 1, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 4, 1, 3

Question 29.
பொருத்துக.
அ) எட்டயபுரம் திண்ணைப் பள்ளி – 1. பின்னத்தூர் நாராயணசாமி
ஆ) முத்துராம பாரதி திண்ணைப் பள்ளி – 2. நாவலர் சோமசுந்தர பாரதியார்
இ) கணபதியார் திண்ணைப் பள்ளி – 3. வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஈ) மௌனகுரு – 4. மாண. இராசமாணிக்கனார்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 3, 4

Question 30.
பொருத்துக.
அ) நெடுங்கணக்கு – 1. அரசாணை
ஆ) சட்டாம் பிள்ளை – 2. ஓலைச்சுவடி
இ) தூக்கு – 3. அரிச்சுவடி
ஈ) சாஸனம் – 4. வகுப்புத்தலைவன்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

Question 31.
சென்னை புரசைவாக்கம் சர்,எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதல் சொற்பொழிவாக 20.03.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936இல் கட்டுரையாக வெளியான வார இதழ்
அ) இந்தியா
ஆ) விஜயா
இ) நவசக்தி
ஈ) சுதேசமித்திரன்
Answer:
ஈ) சுதேசமித்திரன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 32.
மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஆ) எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
இ) சுப்ரமணிய சிவா
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்

Question 33.
வெள்ளைக்கால் சுப்பிரமணியனார் என்பார் ……………….. ஆவார்.
அ) வழக்கறிஞர்
ஆ) பொறியாளர்
இ) உயிரின மருத்துவர்
ஈ) நீதியரசர்
Answer:
இ) உயிரின மருத்துவர்

Question 34.
ப. சுப்பிரமணியார், திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த வருடங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 35.
வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் …………. படித்திருக்கிறார்.
அ) ஞான குருவிடம்
ஆ) மௌன குருவிடம்
இ) கணபதியாரிடம்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம்
Answer:
ஆ) மௌன குருவிடம்

Question 36.
நற்றிணை நூலின் உரையாசிரியர்
அ) டாக்டர் மா. இராசமாணிக்கனார்
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி
இ) ப. சுப்பிரமணியனாா
ஈ) வ.சுப. மாணிக்கம்
Answer:
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி

Question 37.
நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ……………… திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
அ) சோமசுந்தர பாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) முத்துராம பாரதி
ஈ) கவிபாரதி
Answer:
இ) முத்துராம பாரதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 38.
நாவலர் சோமசுந்தர பாரதிக்குப் பொருந்தாததைக் கண்டறிக.
அ) பாரதியின் நண்பர்
ஆ) வழக்கறிஞர்
இ) தமிழறிஞர்
ஈ) வரலாற்றாய்வாளர்
Answer:
ஈ) வரலாற்றாய்வாளர்

Question 39.
பின்வரும் தமிழறிஞர்களில் சிலப்பதிகார உரையாசிரியரைக் கண்டறிக.
அ) ப. சுப்பிரமணியனார்.
ஆ) மா.இராசமாணிக்கனார்
இ) வ.சுப. மாணிக்கம்
ஈ) வேங்கடசாமி
Answer:
ஈ) வேங்கடசாமி

Question 40.
டாக்டர் வ.சுப. மாணிக்கம் …………… பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
அ) சென்னை
ஆ) மதுரை
இ) மைசூர்
ஈ) டெல்லி
Answer:
ஆ) மதுரை

Question 41.
‘இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) அ.கா. பெருமாள்
ஆ) வ.சுப. மாணிக்கம்
இ) வ.வே.சு. ஐயர்
ஈ) மு.வரதராசனார்
Answer:
அ) அ.கா. பெருமாள்

Question 42.
பொருத்திக் காட்டுக.
அ) கீழ்வாயிலக்கம் – 1. பெருக்கல் வாய்ப்பாடு
ஆ) மேல்வாயிலக்கம் – 2. தாழை மடல்
இ) குழிமாற்று – 3. பின்ன எண்ணின் கீழ்த்தொகை
ஈ) சீதாளபத்திரம் – 4. பின்ன எண்ணின் மேல்தொகை

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 43.
நவத்வீப்ம் என்பது
அ) நேபாளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர்
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
இ) தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒருவித பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 44.
முதன் முதலில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்த வயது
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) பதின்மூன்று
Answer:
அ) ஐந்து

Question 45.
உபாத்தியாயர் ………………. சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்வான்.
அ) குறுங்கணக்கை
ஆ) நெடுங்கணக்கை
இ) புராணத்தை
ஈ) இதிகாசத்தை
Answer:
ஆ) நெடுங்கணக்கை

Question 46.
உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ……………… என்று கூறுவார்கள்.
அ) முறை வைப்பது
ஆ) திருமறை படிப்பது
இ) பாடம் படிப்பது
ஈ) நூல் வாசிப்பது
Answer:
அ) முறை வைப்பது

Question 47.
உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் முறை வைப்பவர்
அ) சட்டாம்பிள்ளை
ஆ) கணக்குப்பிள்ளை
இ) உபாத்தியாயரின் மனைவி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) சட்டாம்பிள்ளை

Question 48.
மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அகூராப்பியாசத்தை ………… என்று சொல்வார்கள்.
அ) மஞ்சள் நீராட்டுவிழா
ஆ) மையாடல் விழா
இ) மையிழைக்கும் விழா
ஈ) புதுவாசிப்பு நாள் விழா
Answer:
ஆ) மையாடல் விழா

Question 49.
வரியெழுத்தின் உறுப்புகள்
i) புள்ளி
ii) கால்
iii) கொம்பு
iv) விலங்கு

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) ili) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 50.
சிறுவர்களைப் படிக்கவைக்கும் வகையில் அகராதி வரிசையில் அமைந்த நூல்கள்
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
ஆ) திருக்குறள், நாலடியார்
இ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

Question 51.
கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்வதற்காக இருந்த சுவடிப் புத்தகம்
அ) லீலாவதி
ஆ) கலாவதி
இ) பிரபாவதி
ஈ) அமராவதி
Answer:
இ) பிரபாவதி

Question 52.
இரட்டைத் துணையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை ……………… என்று கூறுவர்.
அ) மூங்கிலாசனம்
ஆ) நாராசம்
இ) ஏடாசம்
ஈ) கிளிமூக்கு
Answer:
ஆ) நாராசம்

Question 53.
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு ………….. என்று பெயர்.
அ) மையாடல்
ஆ) நாராசுரம்
இ) கிளிமூக்கு
ஈ) தூக்கு
Answer:
ஈ) தூக்கு

Question 54.
தூக்கு என்னும் சுவடி சார்ந்த பொருளுக்கு ………….. என்றும் பெயர்.
அ) அசை
ஆ) இசை
இ) தூக்கிசை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அசை

Question 55.
அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித்திறமையை நிலைநாட்டும் நூற்பயிற்சியுடையவர்கள் கொடிகட்டியிருப்பரென்று குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) மதுரைக்காஞ்சி
ஈ) முல்லைப்பாட்டு
Answer:
இ) மதுரைக்காஞ்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 56.
“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இக்கும்” – என்று குறிப்பிடும் நூல்
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
இ) நன்னூல்

Question 57.
‘என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ என்று குறிப்பிடும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) திரிகடுகம்
Answer:
அ) திருக்குறள்

Question 58.
கல்வியின் பொருட்டு பிரியுங்காலத்தைத் தொல்காப்பியம் ……….. பிரிவு என்று குறிப்பிடுகிறது.
அ) ஓதற்பிரிவு
ஆ) பொருள்வயின் பிரிவு
இ) தலைமகற்பிரிவு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஓதற்பிரிவு

Question 59.
தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி …………….. சாஸனம் ஒன்றால் தெரிகின்றது.
அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட
ஆ) முதல் இராசேந்திர சோழன் காலத்தில், உறையூரில் பொறிக்கப்பட்ட
இ) இரண்டாம் இராஜஇராஜசோழன் காலத்தில், தாராசுரத்தில் பொறிக்கப்பட்ட
ஈ) முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், காஞ்சிபுரத்தில் பொறிக்கப்பட்ட
Answer:
அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட

Question 60.
பல வருடகாலம் தமிழ்க்கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கி வந்த மடங்கள்
அ) திருவாவடுதுறை, தருமபுரம்
ஆ) மதுரை, திருப்பாதிரிப் புலியூர்
இ) காஞ்சிபுரம், திருநெல்வேலி
ஈ) இவற்றில் ஏதுமில்லை
Answer:
அ) திருவாவடுதுறை, தருமபுரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 61.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம்.
ii) முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள்.
iii) வேத்தன் என்பதற்கு மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்.

அ) i), ii), ii) தவறு
ஆ) i), ii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 62.
‘தமிழ்த்தாத்தா’ என்னும் சிறப்புக்குரியவர்
அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா

Question 63.
உ.வே.சா. பெறாத பட்டத்தைக் கண்டறிக.
அ) மகாமகோபாத்தியாய
ஆ) திராவிட வித்தியா பூஷணம்
இ) தாக்ஷிணாத்தி கலாநிதி
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி
Answer:
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி

Question 64.
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா.

Question 65.
உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு
அ) 1932
ஆ) 1930
இ) 1928
ஈ) 1926
Answer:
அ) 1932

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 66.
உ.வே.சா.வின் திருவுருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் …………… வண்ண ம் நிறுவப்பட்டுள்ளது.
அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்
ஆ) வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்
இ) அனைவரும் வியக்கும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்

Question 67.
உ.வே.சா. நூலகம் அமைந்துள்ள இடம்
அ) சென்னை , திருவான்மியூர்
ஆ) சென்னை , வடபழனி
இ) தஞ்சை, கிழக்குவாசல்
ஈ) மதுரை, மேற்குவாசல்
Answer:
அ) சென்னை , திருவான்மியூர்

குறுவினா

Question 1.
நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? அவர் எங்கு யாரிடம் திண்ணைக் கல்விக் கற்றார்?
Answer:

  • நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி.
  • பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகக் கற்றார்.

Question 2.
இன்றைய பள்ளிக்கூடங்களில் வளர்க்கப்படும் செடிகொடிகளுக்கு ஆசிரியர் கூறும் உவமை என்ன?
Answer:
நாடகத்தில் வனங்களைத் திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களிலும் செடி கொடிகளை வளர்ப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

Question 3.
மன்றம் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்? அதன் வேறு பெயர்கள் என்ன?
Answer:

  • பெரிய மரத்தடியில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும்.
  • ‘அம்பலம்’ என்றும் மன்றம்’ என்றும் அழைப்பர்.

Question 4.
‘முறை வைப்பு’ என்றால் என்ன ?
Answer:
உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது 11 ‘முறை வைப்பது’ என்று அழைக்கப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 5.
கையெழுத்து எவ்வாறு இருக்க வேண்டுமென்று பழைய வெண்பா பாடல் குறிப்பிடுகிறது?
Answer:

  • எழுத்துகளில் கொம்பு, சுழி போன்றவை கோணக் கூடாது.
  • வரிசையாக எழுதும் எழுத்துகள் சாயக் கூடாது.
  • துணைக்கால் எழுத்துகள் சாயாமல் அம்பு போல் அசையாமல் எழுத வேண்டும்.

Question 6.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள்.

Question 7.
‘கிளிமூக்கு’ என்பது என்ன?
Answer:

  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்தது அமைப்பது பார்ப்பதற்குக் கிளிமூக்கு போன்று இருக்கும்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

Question 8.
எழுத்தாணியின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:

  • எழுத்தாணியின் வகைகள் மூன்று.
  • மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 9.
சட்டம் தூக்கு இவை எவற்றை உணர்த்துகின்றன?
Answer:
சட்டம் :
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக வர தினமும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாங்கள் மேலே எழுதி அதைப் போன்று எழுதி வரச் சொல்வர். இதற்குச் ‘சட்டம்’ என்று பெயர்.

தூக்கு :
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவிக்குத் தூக்கு’ என்று பெயர். இதற்கு அசை’ என்ற வேறுபெயரும் உண்டு.

Question 10.
தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ள அரசாணையால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
தஞ்சாவூரில் வாழ்ந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரிடத்தில் பல நாட்டைச் : சார்ந்த மாணாக்கர்கள் கல்விக் கற்க வந்திருந்தார்கள் என்ற செய்தி, முதல் இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ளது.

Question 11.
‘வேத்தான்’ – இச்சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? இதன் பொருள் என்ன?
Answer:

  • பள்ளிக்கூடத்திற்குக் காலை 5 மணிக்கே வரவேண்டும்.
  • பள்ளிக்கூடத்திற்கு முதலிலே வரும் மாணாக்கரே ‘வேத்தான்’ என்று அழைக்கப்பட்டார்.
  • மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பதே ‘வேத்தான்’ என்பதன் பொருள்.

Question 12.
‘தமிழ்த்தாத்தா’ பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?
Answer:

  • மகாமகோபாத்தியாய
  • திராவிட வித்தியா பூஷணம்
  • தாக்ஷிணாத்திய கலாநிதி
  • 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 13.
உ.வே.சா. அவர்களின் பண்முகங்கள் யாவை?
Answer:

  • இணையற்ற ஆசிரியர்
  • புலமைப்பெருங்கடல்
  • சிறந்த எழுத்தாளர்
  • பதிப்பாசிரியர்
  • பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
  • கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

Question 14.
சுவடியில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரிய முன்னோர்கள் செய்தது யாது?
Answer:
சுவடியில் வம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

Question 15.
வித்தியாரம்பம் என்பது யாது?
Answer:
முதன் முதலில் ஐந்து வயதில் கல்வி கற்பதற்காகக் குழந்தைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுப்பதே வித்தியாரம்பம் என்பர்.

Question 16.
நாராசம் என்றால் என்ன?
Answer:
இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் அதற்கு நாராசம்’ என்று பெயர்.

Question 17.
உ.வே.சா. விற்குத் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்புகள் யாவை?
Answer:
உ.வே.சா. வின் திருவுருவச்சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 18.
அக்கால பிள்ளைகளின் சிலேட்டு, புத்தகம், பேனாவாக எவை இருந்ததாக உ.வே.சா கூறுகிறார்?
Answer:

  • மணல்தான் சிலேட்டு
  • பனையேடுதான் புத்தகம்
  • எழுத்தாணியே பேனா

சிறுவினா

Question 1.
பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் யாரெல்லாம் திண்ணை பள்ளியில் கல்விக்கற்றவர்கள் என்று பட்டியலிடுகின்றார்?
Answer:
(i) மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்

(ii) வருடங்கள் கல்வி கற்றார். வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமான டாக்டர் மா.இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் கல்வி கற்றார்.

(iii) நற்றிணை நூலின் உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.

(iv) சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞருமான தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

(v) சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய வேங்கடசாமி அவர்கள் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

(vi) மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வ.சுப.மாணிக்கம் மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

Question 2.
வித்தியாரம்பம் (கல்வித்தொடக்கம்) குறித்து உ.வே.சாமிநாதர் கூறுவது என்ன?
Answer:

  • ஐந்து வயதில் வித்தியாப்பியாசம் (கல்விப்பயிற்சி) பெறுவதற்காகப் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பர்.
  • பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும்.
  • ஏட்டின் மீது மக்கள் பூசிப் பூசித்துப் பள்ளியில் சேரும் மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கக் கூறுவர்.
  • ஆசிரியர் நெடுங்கணக்கைக் (அரிச்சுவடி / எழுத்துவரிசை) சொல்ல மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.
  • ஆசிரியர் சொல்ல மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பு’ என்பர்.
  • சில நேரங்களில் ஆசிரியருக்குப் பதிலாகச் சட்டாம் பிள்ளை (வகுப்புத்தலைவன்) முறை வைப்பதும் உண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 3.
அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தல்) மையாடல் விழா என அழைக்கக் காரணம் என்ன? : மாணக்கர் எவ்வாறு எழுத்துகளைக் கற்க தொடங்கினர்?
Answer:
மையாடல் விழா :
(i) சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

(ii) இவ்வாறு தடவும் மையானது சுவடியில் இருக்கும் எழுத்துகளை விளக்கமாகக் காட்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
(iii) இதனாலேயே அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தலை) மையாடல் விழா என்றனர்.

எழுத்து அறிவித்தல் :

  • மாணக்கர்கள் முதலில் மணலில் எழுதிப் பழகுவர்.
  • ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன் மேல் மாணாக்கர்கள் எழுதுவர். பிறகு தாமே எழுதுவர்.
  • இதனால் மாணக்கர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.

Question 4.
பண்டையக் கல்வி முறையில் ‘மனனம்’ என்பது எளிதான ஒன்றாக இருக்கக் காரணம் என்ன என்பதை விளக்குக.
Answer:

  • பண்டைய மாணாக்கருக்கு அடிப்படை நூல்களெல்லாம் மனனமாக இருக்கும்.
  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன பாடமாகும்.
  • கணிதத்தில், கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று போன்ற பலவகை வாய்பாடுகள் இருக்கும்.
  • ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  • அகராதி வரிசையில் படிப்பதால் அவை மாணாக்கரின் நினைவை விட்டு அகல்வதில்லை. சான்று : ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்.
  • அந்தாதி முறை, எதுகை மோனை முறையும் மனனம் செய்ய எளிய முறை.
  • பாடங்களைச் சிந்தித்து வருதல், ஒன்றாகச் சேர்ந்து கேள்விகள் கேட்டு விடை கூறுதல் இவையும் தா ‘மனனம்’ செய்ய எளிய வழிமுறைகளாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 5.
சுவடியை உருவாக்கும் முறையை விவரி.
Answer:

  • ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்து ஒரு துளை அல்லது இரண்டு துளையிடுவர்.
  • மேல் சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பர். மரத்தால் சட்டம் செய்வதும் உண்டு. செப்புத்தகட்டாலும் சட்டம் செய்வர்.
  • சட்டங்களின் மேல் வர்ணமையினாற் பல வகையான சித்திரங்களை வரைந்து வைப்பர்.
  • இரட்டைத்துளையுள்ள ஏடுகளில், ஒரு துளையினைச் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியைச் செருகிக் கட்டுவர். இதனை நாராசம்’ என்று அழைப்பர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பது பார்ப்பதற்கு கிளிமூக்கு போன்று இருக்கும். சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

Question 6.
பண்டைய மாணவர்களுக்குக் கற்பித்த பாடங்களாகக் கதைப்பாடல் உணர்த்துபவை எனப் பேராசிரியர் அ.கா.பெருமாள் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கதைப்பாடல் உணர்த்தும் நூற்கள் :

  • ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி கற்பிக்கப்பட்டது.
  • நிகண்டுகளை மனப்பாடம் செய்பவனுக்கு மதிப்பு அதிகமாக இருந்தது.
  • வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்ற முறையில் அமைந்த கணித முறை பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
  • கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகள் கட்டாயம் மனனம் செய்யும்படிக் கற்பிக்கப்பட்டது.
  • ‘பிரபவாதி சுவடி’ என்ற புத்தகம் மனனம் செய்வதற்கென இருந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் 1
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Answer:
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.

Question 2.
கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி
Answer:
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்

அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்.
Answer:
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

Question 4.
கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் தேர்ந்தெடுக்க.
உயர் அலுவலரின் வருகை
அலுவலகமே அல்லாடும்
அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே
கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேன்
காலைக் கட்டிக் கொள்கிறது குழந்தை
‘போ அந்தப் பக்கம்’
உதறிச் செல்கிறேன் குழந்தையை.
Answer:
செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
அன்பும் அறமும் – எண்ணும்மை
நன்கலம் – பண்புத் தொகை
மறத்தல் – தொழிற் பெயர்
உலகு – இடவாகு பெயர்

Question 6.
பொருள் கூறுக.
Answer:
வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்

Question 7.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
Answer:
அ) செய்யாமல் செய்த உதவி

Question 8.
பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
Answer:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.

Question 9.
செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.
Answer:
செல்லிடத்து = செல் + இடத்து

  • ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி, செல் + ல் + இடத்து என்றாகியது.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவதே இயல்பு என்ற விதிப்படி, ல் + இ = L = செல்லிடத்து என்று புணர்ந்தது.

Question 10.
பொருத்திக் காட்டுக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஆ) 3, 4, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answer:
அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வருள் எல்லாம் தலையானவர்.

Question 2.
ஞாலத்தின் பெரியது எது?
Answer:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அஃது உலகைவிடப் பெரியதாகும்.

Question 3.
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
Answer:

  • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
  • மறக்க கூடாதது – நன்மை ; மறக்கக்கூடியது – தீமை.

Question 4.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
Answer:
ஒருவரிடம் இருக்கும் செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.

Question 5.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
Answer:
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

சிறுவினா

Question 1.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணியாகும்.
அணி இலக்கணம் :
ஒரு செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறையாகும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும்.

பொருள் :
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இக்திருக்குறள் ‘நிரல் நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.
அன்பு – பண்பு ; அறன் – பயன் என்று நிரல்பட உள்ளது.

Question 2.
இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
Answer:
(i) ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழும் இல்லற வாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்வாழ்க்கை அன்பினால் உருவான நல்ல பண் பையும், அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான்.

(ii) அறத்தின் இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலைசிறந்தவன் ஆவான்.

(iii) உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் வானுலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 3.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக.
Answer:

  • இந்நில உலகம், வானகம், கடல், பனை இவைகளை விடவும் நன்றி உயர்ந்தது.
  • நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
  • ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகை விடப் பெரியதாகும்.
  • மறுபலனை எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியை பனையளவாகக் கொள்வர்.

Question 4.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
Answer:

  • நமக்கு ஏற்படும் தீமையான விளைவுகள் அனைத்தும் நாம் கொள்ளும் சினத்தால் வரும். அதனால், நாம் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
  • சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும்.
  • சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
  • சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவருடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.

Question 5.
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
Answer:
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகின்றது.
அணி இலக்கணம் :
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

விளக்கம் :
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழிந்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை மட்டுமில்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்துவிடும்.

அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.

நெடுவினா

Question 1.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
Answer:
விண் மண் :
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது”
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

உலகம் :
“காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகத்தின் அளவை விடப் பெரியதாகும்.

கடல் :
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

பனை :
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர்.

வாழ வழி :
“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். தப்பிக்க முடியாது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கும் வழியே கிடையாது.
எனவே, செய்ந்நன்றியறிதலே சிறந்த அறம் என்பதனை வள்ளும் உணர்த்துகின்றது.

Question 2.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும். இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
Answer:
சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக் காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான்.

சினம் செல்லுமிடம் :
“செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?”

தன் சினம் செல்லுபடியாகும் தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாவான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

மறத்தல் நன்று :
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்”
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும்.

சினம் எனும் பகை :
“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோப் பிற?”
சினம் எனும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.

தன்னைக்காக்க சினம் தவிர் :
“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்”
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். எனவே, தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.

சுற்றம் பேண சினத்தைத் தவிர் :
“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையச் சுடும்”
சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவனுடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே, சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.

இலக்கணக் குறிப்பு

பண்பும் பயனும் – எண்ணும்மை
வாழ்பவன் – வினையாலணையும் பெயர்
அரிது, பெரிது – ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
தூக்கின் – எதிர்கால வினையெச்சம்
தூக்காச் – முற்றெச்சம்
கொள்வர், தெரிவர் – வினையாலணையும் பெயர்
கொன்ற – பெயரெச்சம்
பிறத்தல் – தொழிற்பெயர்

புணர்ச்சி விதி

1. தினைத்துணை = தினை + துணை
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி, தினைத்துணை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

2. நன்றல்லது + நன்று + அல்லது

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி. நன்ற் + அல்லது என்றானது
  • உடல்மேல் உயர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ற் + அ = ற) நன்றல்லது’ என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
திருக்குறள் என்பது
அ) ஆகுபெயர்
ஆ) கருவியாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
Answer:
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்

Question 2.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) ஜி.யு.போப்
இ) கால்டுவெல்
ஈ) சார்லஸ் வில்கினிஸ்
Answer:
அ) வீரமாமுனிவர்

Question 3.
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1712
இ) 1612
ஈ) 1812
Answer:
ஈ) 1812

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 4.
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 380
ஆ) 700
இ) 250
ஈ) 133
Answer:
அ) 380

Question 5.
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 9
Answer:
இ) 2

Question 6.
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 9
Answer:
ஈ) 9

Question 7.
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு
அ) இன்பத்துப்பால்
ஆ) பொருள் பால்
இ) அறத்துப்பால்
ஈ) காமத்துப்பால்
Answer:
ஆ) பொருள் பால்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 8.
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 130
ஆ) 200
இ) 133
ஈ) 250
Answer:
ஆ) 200

Question 9.
கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 18, 07
ஆ) 07, 18
இ) 09, 16
ஈ) 16, 09
Answer:
ஆ) 07, 18

Question 10.
ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 08
ஆ) 13
இ) 01
ஈ) 04
Answer:
இ) 01

Question 11.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ‘ – ‘அன்பும் அறனும்’ இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை
இ) உவமைத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Answer:
ஆ) எண்ணும்மை

Question 12.
‘செய்த’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) செய்து + அ
ஆ) செய்+த்(ந்)+த்+அ
இ) செய் + து
ஈ) செய் + த் + அ
Answer:
ஈ) செய் + த் + அ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 13.
‘நன்றல்லது’ இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) ஈறுபோதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Answer:
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

Question 14.
‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ – ‘மறத்தல்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உவமையாகு பெயர்
ஆ) வினைமுற்று
இ) தொழிற்பெயர்
ஈ) பண்புப்பெயர்
Answer:
இ) தொழிற்பெயர்

Question 15.
‘கொன்ற’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கொன் + ற் + அ
ஆ) கொன்று + அ
இ) கொன் + ற் + உ
ஈ) கொல்(ன்) + ற் + அ
Answer:
ஈ) கொல்(ன்) + ற் + அ

Question 16.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) உலகத்தார்
ஆ) பனைத்துணை
இ) கொல்லாது
ஈ) காப்பால்
Answer:
ஆ) பனைத்துணை

Question 17.
‘நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது’ – ‘நன்றி மறப்பது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ஈ) பெயரெச்சம்
Answer:
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

Question 18.
கூற்று 1 : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லது.
கூற்று 2 : ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 19.
கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை.
காரணம் : அது நம் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொன்றுவிடும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி காரணம் சரி

Question 20.
கூற்று 1 : மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே சினம் காப்பவர்.
கூற்று 2 : புலால் உண்ணவில்லை என்றால் வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்கமாட்டார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 21.
கூற்று 1 : ஒருவர் செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.
கூற்று 2 : உரிய காலத்தில் செய்யும் சிறிய உதவி உலகத்தைவிடப் பெரியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 22.
கூற்று : ஒருவன் தன்னைக் காக்க சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டாம்.
காரணம் : சினம் காக்கவிட்டால் தன்னையே அழித்துவிடும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி, காரணம் சரி.
ஈ) கூற்று வறு, காரணம் தவறு.
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த தீமையை மறக்கக் கூடாது.
ஆ) உரிய காலத்தில் செய்த உதவி பனையளவு பெரியது.
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
ஈ) இயல்பான அறிவு எப்போதும் வெளிப்படாது.
Answer:
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.

Question 24.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அ) இல்வாழ்க்கை – 26-ஆம் அதிகாரம்
ஆ) புலால் மறுத்தல் – 38-ஆம் அதிகாரம்
இ) ஊழ் – 05-ஆம் அதிகாரம்
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
Answer:
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 25.
சரியானதைத் தேர்க.
அ) பாயிரவியல் – 20 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 01 அதிகாரம்
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
ஈ) ஊழியல் – 04 அதிகாரம்
Answer:
இ) துறவறவியல் – 13 அதிகாரம்

Question 26.
பொருந்தாதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
ஆ) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
ஈ) அறத்தின் இயல்புடன் வாழ்பவர் முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்.
Answer:
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.

Question 27.
பொருத்துக.
அ) அரசவியல் – 1) 13 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 25 அதிகாரம்
இ) ஒழிபியல் – 3) 20 அதிகாரம்
ஈ) கற்பியல் – 4) 18 அதிகாரம்

அ) 2, 4, 3, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 1, 4

Question 28.
பொருத்துக.
அ) 11-ஆம் அதிகாரம் – 1. வெகுளாமை
ஆ) 31-ஆம் அதிகாரம் – 2. வெஃகாமை
இ) 18-ஆம் அதிகாரம் – 3. புலால் மறுத்தல்
ஈ) 26-ஆம் அதிகாரம் – 4. செய்ந்நன்றி அறிதல்

அ) 4, 1, 3, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
ஈ) 4, 1, 2, 3

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 70
ஆ) பொருட்பால் – – 2) 38
இ) இன்பத்துப்பால் – 3) 25

அ) 2, 1, 3
ஆ) 3, 2, 1
இ) 1, 2, 3
ஈ) 2, 3,1
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 30.
பொருத்திக் காட்டுக.

அ) அறத்துப்பால் – 1) 3 இயல்கள்
ஆ) பொருட்பால் – 2) 4 இயல்கள்
இ) இன்பத்துப்பால் – 3) 2 இயல்கள்

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 1, 3

Question 31.
அறத்துப்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) பாயிரவியல்
ஆ) இல்லறவியல்
இ) துறவறவியல்
ஈ) ஒழிபியல்
Answer:
ஈ) ஒழிபியல்

Question 32.
பொருட்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) அரசு இயல்
ஆ) அமைச்சு இயல்
இ) ஒழிபியல்
ஈ) ஊழியல்
Answer:
ஈ) ஊழியல்

Question 33.
இன்பத்துப்பாலில் இடம்பெறும் இயல்களைக் கண்டறிக
அ) களவியல், கற்பியல்
ஆ) அரசியல், அமைச்சியல்
இ) ஊழியல், ஒழிபியல்
ஈ) பாயிரவியல், இல்லறவியல்
Answer:
அ) களவியல், கற்பியல்

Question 34.
பொருத்திக் காட்டுக (இயல்களும் அதிகாரங்களின் எண்ணிக்கையும்).
அ) பாயிரவியல் – 1) 1 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) துறவறவியல் – 3) 20 அதிகாரங்கள்
ஈ) ஊழியல் – 4) 4 அதிகாரங்கள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 35.
பொருத்திக் காட்டுக.
அ) அரசியல் – 1) 18 அதிகாரங்கள்
ஆ) அமைச்சியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) ஒழிபியல் – 3) 32 அதிகாரங்கள்
ஈ) கற்பியல் – 4) 25 அதிகாரங்கள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 36.
திருக்குறளின் களவியலில் உள்ள அதிகாரங்கள்
அ) 07
ஆ) 18
இ) 13
ஈ) 04
Answer:
அ) 07

Question 37.
திருக்குறள் ……………… ஆன நூல்.
அ) குறள் வெண்பாக்களால்
ஆ) சிந்தியல் வெண்பாக்களால்
இ) ஆசிரியப்பாவால்
ஈ) கலிப்பாவால்
Answer:
அ) குறள் வெண்பாக்களால்

Question 38.
திருக்குறள் ……………. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 39.
திருக்குறள் என்பது ………………. ஆகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) எண்ணலளவையாகுபெயர்
Answer:
இ) அடையடுத்த ஆகுபெயர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 40.
திருக்குறள் என்பது
அ) இரண்டடி வெண்பா
ஆ) நான்கடி வெண்பா
இ) மூவடி வெண்பா
ஈ) ஓரடி வெண்பா
Answer:
அ) இரண்டடி வெண்பா

Question 41.
உலகப் பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) இன்னாநாற்பது
Answer:
அ) திருக்குறள்

Question 42.
மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக்காட்டிய நூல்
அ) இலியட்ஸ்
ஆ) மெயின்காம்ப்
இ) திருக்குறள்
ஈ) சாகுந்தலம்
Answer:
இ) திருக்குறள்

Question 43.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இவற்றால் ‘நாலும்’ என்பது …………… ‘இரண்டு’ என்பது ………………. குறிக்கும்.
அ) நாலடியார், திருக்குறள்
ஆ) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
இ) நானிலம், இருதிணை
ஈ) நாற்படை, இருசுடர்
Answer:
அ) நாலடியார், திருக்குறள்

Question 44.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடலால் குறிப்பிடப்படுபவர்கள்
அ) இருவர்
ஆ) நால்வர்
இ) அறுவர்
ஈ) பதின்மர்
Answer:
ஈ) பதின்மர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 45.
திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக் கண்டறிக.
அ) தருமர்
ஆ) மணக்குடவர்
இ) பரிமேலழகர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
ஈ) அடியார்க்கு நல்லார்

Question 46.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ. ராமலிங்கனார்
ஈ) இராமலிங்க அடிகள்
Answer:
அ) பாரதியார்

Question 47.
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே – எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) இராமலிங்க அடிகள்
ஈ) வெ. இராமலிகனார்
Answer:
அ) பாரதிதாசன்

Question 48.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ள இடம்
அ) சென்னை
ஆ) நாகர்கோவில்
இ) கன்னியாகுமரி
ஈ) சேலம்
Answer:
இ) கன்னியாகுமரி

Question 49.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) வேலூர்
ஆ) சென்னை
இ) மேலூர்
ஈ) திருத்தணி
Answer:
அ) வேலூர்

Question 50.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி

அ) நிரல்நிறை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
அ) நிரல்நிறை அணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 51.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையச் சுடும் – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
ஆ) ஏகதேச உருவக அணி

குறுவினா

Question 1.
வானுலகத் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுபவர் யார் ?
Answer:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியின்படி வாழ்கின்றவர்கள் வானுலகத் தெய்வத்திற்கு இணையானவர்கள்.

Question 2.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
Answer:
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

Question 3.
கடலின் பெரிது எது என்று வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

Question 4.
யார் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பில்லாதவர் என்று குறள் கூறுகின்றார்?
Answer:
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்குத் : தப்பிப் பிழைக்க வழியே கிடையாது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
பிறர் பொருளைக் கவரும் பழியான செயலைச் செய்யாதவர் யார்?
Answer:
நீதி இல்லாதவற்றைக் கண்டு வெட்கம் அடைந்து ஒதுங்கும் பண்பாளர்கள் பெரும் பயன் கிடைப்பினும் பிறர் பொருள்மேல் ஆசைப்படும் பழியான செயலைச் செய்யமாட்டார்கள்.

Question 6.
உண்மையிலே சினத்தைக் காப்பவர் யாரென்று குறள் கூறுகிறது?
Answer:
தன் சினம் செல்லுபடியாகும், தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாகும்.

Question 7.
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்களில் ஏதேனும் நான்கினை எழுதுக.
Answer:
உலகப்பொதுமறை, தமிழர் திருமறை, வாயுறைவாழ்த்து, முப்பால்.

Question 8.
திருக்குறளின் பெருமையை விளக்கும் பழமொழிகள் யாவை?
Answer:

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்.

Question 9.
பழம்பாடல்பாடித் திருக்குறளுக்கு உரை செய்தவர்களை கூறுக.
Answer:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 10.
பாரதியார் வள்ளுவரை எவ்வாறு புகழ்கின்றார்?
Answer:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் புகழ்கின்றார்.

Question 11.
வள்ளுவரைப் பாரதிதாசன் புகழ்ந்து கூறும் கூற்று யாது?
Answer:
“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே” எனப் புகழ்ந்து கூறுகின்றார்.

Question 12.
திருவள்ளுவரைப் புகழும் விதமாகத் தமிழக அரசு செய்துள்ளவை யாவை ?
Answer:

  • கன்னியாகுமரியில் கி.பி.2000-இல் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ளது.
  • வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது.

Question 13.
‘திருக்குறள்’ – பெயர்க்காரணம் தருக.
Answer:

  • திரு + குறள் = திருக்குறள்.
  • சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது.
  • குறள் என்பது இரண்டடி வெண்பா , ‘திரு’ என்பது சிறப்பு அடைமொழி.
  • திருக்குறள் என்பது அடையெடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 14.
பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? அவையாவை ?
Answer:
பொருட்பாலில் உள்ள இயல்கள் மூன்று ஆகும். அவை, அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்பதாகும்.

Question 15.
சினம் என்னும் பகை நம்மிடமிருந்து எவற்றையெல்லாம் கொல்லும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.

Question 16.
உலக இயல்பின் இருவேறு ஊழ் நிலையாகக் குறள் கூறுவது யாது?
Answer:

  • உலக இயல்பு இருவேறு வகைப்படும்.
  • செல்வம் உடையார் அறிவுடையராக இருப்பதில்லை.
  • தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

சிறுவினா

Question 1.
புலால் மறுத்தல் சாத்தியமாகும் என்பதைக் குறள் வழி நிறுவுக.
Answer:

  • புலால் உணவை உண்ணுகிறவர்கள் இன்று உலகில் வாழ்கின்றனர்.
  • புலால் உணவைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தவர்கள் கொல்லாதிருத்தல் வேண்டும்.
  • புலால் உண்பவர்கள் தங்கள் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்வதால் தான், அதனை விலைக்கு விற்பனை செய்யும் பொருட்டு ஊன் விற்பவர்கள் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.
  • புலால் மறுத்தலை உலகில் வாழும் நபர்கள் கடைபிடித்தால் எந்த ஒரு உயிானமும் உணவிற்காகவும், வருவாய்க்காவும் கொல்லப்படாமல் உயிர்வாழும்.
  • இதனையே வள்ளுவர் பிற உயிர்களை உணவிற்காகக் கொல்லாதாதிருந்தாலே புலால் உணவை நிறுத்திவிடலாம் என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.5 பொருள் மயக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.5 பொருள் மயக்கம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 1.
தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக.
Answer:

  • பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினேன்.
  • நேற்று நான் வைகையில் குளித்தேன்.
  • மாநில அளவில் தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • என் அம்மாவின் சமையல் என்றுமே சுவையாய் இருக்கும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
Answer:
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

Question 2.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
அ) பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்

அ) 4, 1, 3, 2
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்

Question 3.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
Answer:
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 4.
கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.
Answer:
(எ.கா)
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 7

Question 5.
அண்ணன் அடித்துவிட்டான். காற்புள்ளி இடாமல் எழுதுவதானல் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
Answer:
எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம்மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ, தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறு பொருளைத் தரும். சான்று : அவன், அக்கா வீட்டிற்குச் சென்றான், அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றான்.

Question 6.
சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
Answer:
இரட்டைக்கிளவித் தொடர்கள் – சலசல, கலகல.
இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

  • நீர் சல சலவென ஓடியது (தவறு)
  • நீர் சலசலவென ஓடியது (சரி)
  • கல கலவென சிர்த்தாள். (தவறு)
  • கலகலவெனச் சிரித்தாள். (சரி)

Question 7.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
Answer:

  • ‘திருவளர் செல்வன்’ என்பதே சரியான தொடராகும்.
  • திருவளர் செல்வன் என்பது வினைத்தொகை.
  • வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின் படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியானதைத் தேர்க.
அ) உடம்படுமெய் – பேசியபடி
ஆ) பண்புத்தொகை – கத்துகடல்
இ) சொற்புணர்ச்சி – சுடர் ஆழி
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்
Answer:
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்

Question 2.
சரியானதைத் தேர்க.
அ) துணைவினையுடன் கூடிய சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
ஆ) இடைச் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
ஈ) வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் அல்ல.
Answer:
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

Question 3.
சரியானதைத் தேர்க.
அ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
ஆ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
இ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
Answer:
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

Question 4.
தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………….. இடத்திலும் வரும்.
அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 5.
பொருந்தாததைத் தேர்க.
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
ஆ) எதிரிணைச் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
இ) விடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ஈ) பண்புத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
Answer:
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.

Question 6.
பொருந்தாததைத் தேர்க.
அ) குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
ஆ) அவன் வெண்மதியிடம் பேசினான்.
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
ஈ) கோவலன் மதுரைக்குச் சென்றான்.
Answer:
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.

Question 7.
பொருத்துக.
அ) அவன் – 1. அன்று
ஆ) அவர் – 2. அல்ல
இ) நாய் – 3. அல்ல ர்
ஈ) குதிரைகள் – 4. அல்லன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 1, 2

Question 8.
பொருத்துக.
அ) உற்றாருறவினர் – 1. நேரிணைச் சொற்கள்
ஆ) சீரும்சிறப்பும் – 2. உம்மைத் தொகை
இ) மேடுபள்ளம் – 3. வினைத் தொகை
ஈ) கத்துகடல் – 4. எதிரிணைச் சொற்கள்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 2, 1, 4, 3

Question 9.
சரியான தொடரைக் கண்டுபிடி.
அ) ஆண்டுதோறும் மறைந்த தி. ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்.
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
இ) தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் மறைந்த கூட்டம் நடைபெறும்.
ஈ) மறைந்த நினைவாக தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
Answer:
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 10.
சரியான கருத்துகளைக் கண்டறிக.
i) பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை.
ii) எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
iii) செங்கடல் என்று பிரிக்காமல் எழுதுவதே சரியானது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 11.
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருைைளத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை …………. எழுத வேண்டும்.
அ) சேர்த்து
ஆ) பிரித்து
இ) இடைவெளியுடன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சேர்த்து

Question 12.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) இடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ii) உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) இரட்டைக் கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 13.
அது என்னும் வேற்றுமை உருபு ……………….. உரியது.
அ) அஃறிணைக்கு
ஆ) உயர்திணைக்கு
இ) ஐந்திணைக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அஃறிணைக்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

குறுவினா

Question 1.
படிப்போர்க்கும் கேட்போருக்கும் எப்போது பொருள் குழப்பம் ஏற்படும்?
Answer:
எழுதும் போதோ, பேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும், நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இடாமல் எழுதுவதும், இடக்கூடாத இடங்களில் இடுவதும், வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுவதும் தேவையற்ற இடங்களில் இட்டும் எழுதினால் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பம் ஏற்படும்.

Question 2.
இடைவெளி விட்டு எழுதும் போது பொருள் வேறுபடுவதற்கு இரண்டு சான்று தருக.
Answer:
சான்று :

  • ஐந்து மாடி வீடு – ஐந்து மாடிவீடு
  • அப் பாவின் நலங்காண்க. – அப்பாவின் நலங்காண்க.

Question 3.
வல்லின மெய்களால் ஏற்படும் பொருள் வேறுபாட்டிற்கு இரண்டு சான்று தருக.
Answer:
சான்று : பிட்டுத் தின்றான் – பிட்டைத் தின்றான்
பிட்டு தின்றான் – பங்கு வைத்து தின்றான்
ஈட்டிக் கொண்டு வந்தான் – மேற்செய்யும் ஈட்டியைக் கொண்டு வந்தான்
ஈட்டி கொண்டு வந்தான் – பொருளை ஈட்டி கொண்டு வந்தான்

Question 4.
இடைச்சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதினால் ஏற்படும் தவறினை இரண்டு சான்றுகள் மூலம் நிரூபி.
Answer:
இடைச்சொற்கள் : பால், படி

பால் :
அவன்பால் கொண்டுசென்றான். (அவனிடம் கொண்டு சென்றான்)
அவன் பால்கொண்டு சென்றான். (அவன் பால் (குடிக்கும் பால்) கொண்டு சென்றான்)

படி :
அளக்கும்படி வேண்டினான். (பொருளை அளக்கும்படி வேண்டினான் )
அளக்கும் படி வேண்டினான். (பொருளை அளக்க படி வேண்டினான்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 5.
தொடரமைப்பு மாறினால் பொருளும் மாறிவிடும் என்பதற்குச் சான்று தருக. தொடரமைப்பு மாறினால் பொருள் மாறிவிடும்.
Answer:
சான்று : ஆண்டு தோறும் மறைந்த தி.ஜானகி ராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும். இத்தொடர் தி.ஜானகி ராமன் ஆண்டுதோறும் மறைந்தார் என்னும் தவறான பொருளைத் தருகின்றது.

சரியான தொடரமைப்பு :
“மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்” என்பதேயாகும்.

Question 6.
உரிச்சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
Answer:
உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் போது சேர்த்தே எழுத வேண்டும்.
சான்று : கடிமணம் (சரி)
கடி மணம் (தவறு)

சிறுவினா

Question 1.
பிழை தவிர்க்கச் சில குறிப்புகளைத் தருக.
Answer:

  • ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிப் பழகுதலும் உதவும்.
  • சொல்லுக்கான பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.
  • மரபுச் சொற்களைச் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
  • இலக்கண விதிகளை மனத்துள் பதித்து வைப்பதும் நமது கடமை.
  • எழுதியதை மீளப் படித்துப் பார்த்தல் பிழையில்லாத் திருத்தலும் கடமையாகும்.

Question 2.
தாய்வழிக் குடும்பத்தைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுபவன யாவை?
Answer:

  • சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தான்.
  • தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
  • பதிற்றுப் பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய் முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • சிறுவர்தாயே பேரிற் பெண்டே (புறம். 290)
  • செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். 276)
  • வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் (புறம். 277)
  • முளரிமருங்கின் முதியோள் சிறுவன் (புறம். 278)
  • என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (கலி. பாலை. 8)
  • முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 3.
சங்ககாலத்தில் தந்தைவழிக் குடும்ப முறை குறித்தெழுதுக.
Answer:
(i) மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண்மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிய பரவலாகிவிட்டதையும் காண முடிகிறது.

(ii) ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும்.

“நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
என்மனை வதுவை நல்மணம் கழிக”

(iii) ன்னும் ஐங்குறுநூற்று பாடல் வரிகள் மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள் என்பதை அறிவதுடன் மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்.

(iv) “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்னும் குறுந்தொகை பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயல்படுபொருள் இல்லை, ஆனால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் ‘திராவிட சாஸ்திரி’ என்று சி. வை. தாமோதரனாரால் போற்றப்பட்டட பரிதிமாற் கலைஞர்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 1
பரிதிமாற் கலைஞர் அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப். ஏ (F. A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் அண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவுத் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் : 9 கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.

பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் : முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையிலிருந்து, “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி, ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்.

வினாக்கள்:
1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்?
2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை?
3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக.
4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்குத் தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக.
5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன?
Answer:
1. திராவிட சாஸ்திரி.
2. ரூபாவதி, கலாவதி.
3. செம்மொழி – பண்புத்தொகை
செம்மொழி – செம்மை + மொழி
ஈறுபோதல் – செம் + மொழி = செம்மொழி
4. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி செம்மொழி.
5. பரிதிமாற்கலைஞர்.

தமிழாக்கம் தருக.

In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life-and that is the main theme of this chapter-let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது. மனிதனுடைய வாழ்கையில் நல்ல வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது.

இலக்கிய நயம் பாராட்டல்

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ ?
கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம். – நாமக்கல் கவிஞர்

திரண்ட கருத்து:
தாய்மொழியாகிய தமிழைப் பின்னுக்குத் தள்ளி பிறமொழிக்கு நாம் செய்யும் சிறப்பை நீக்குவோம். தமிழக்கு நிகர் உலகில் எம்மொழியும் இல்லை. அம்மொழியைக் கற்று இனிமைக் காண்போம் என்று கம்பன், வள்ளுவன் போன்றோர் சுட்டி காட்டிய சிறப்பினை உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கேற்ப இப்பாடலில் தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண் அமைந்துள்ளது.

மோனை :
குயவனுக்குப் பானை
செய்யுளுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
சான்று:
பெற்றெடுத்த
ற்றுணர்ந்த
தெற்றென
பிறமொழி
ம்பனோடு
தெய்வக்கவி

எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
பெற்றெடுத்த
ற்றுணர்
ற்றெடுத்த
தெற்றென்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபு.
சான்று:
உண்டோ
விட்

அணி நயம்:
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு இப்பாடலில் கம்பன், பாரதி, வள்ளுவன் புகழும், தமிழின் புகழும் பாடுவதால் உயர்வு நவிற்சி அணி ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

முடிவுரை :
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக.

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க
ஓணான்கள் முட்டையிட
கள்ளிகள் பிழைத்திருக்க
பிள்ளைகள் விளையாட
பன்றிகள் மேய்ந்திருக்க
வானத்தில் மேகமுண்டு
சூரியனில் மழையுண்டு

காகமோ குருவியோ
நிழல் ஒதுங்க
ஆறெங்கும் முள்மரமுண்டு
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

விழிப்புணர்வு உரை:

(i) இயற்கையின் கொடையாம் மழைநீரை நாம் சேகரிக்காமல் விடுகிறோம். மழை நீர் சேகரிப்புப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து புறப்பட்டு மண்ணில் தங்கலாம் என வந்த மழை வீணாகக் கடலில் கலக்கிறது.

(ii) ஆற்று நீரைச் சேகரிக்க மறந்தோம். ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்க துணிந்தோம். மரம் வளர்க்க மறந்தோம். மரம் வெட்டத் துணிந்தோம். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. ஆனால் இன்று மழையும் மரமும் இல்லாததால் ஏதிலியாய் காக்கை குருவிகள் எங்கோ போயின?

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

Question 1.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
Answer:
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 2.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
Answer:
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.

Question 3.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

Question 4.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
Answer:
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

Question 5.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
Answer:
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே – 5, 2019
திருச்சிராப்பள்ளி.

வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் – பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே – 5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது.

உறவினர் கூட்டத்தில் தங்கவேல் – பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப் பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா

“இணைந்த உறவும்”

“கசிந்த கண்ணீ ரும்”

நாள் : 05.05.2019
இடம் : திருச்சி – உறையூர் தங்கவேல் பொன்னம்மாள் இல்லம்.
நிகழ்வு : மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு.
பங்கேற்பு : தங்கவேல் – பொன்னம்மாள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள்.
நிகழ்வின் அவசியம் : தங்கவேல் – பொன்னம்மாள் இணையரிடம் வாழ்த்துப் பெறுதல்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : கொள்ளுப்பேத்தி கண்மணி
விழைவு : உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருக. “உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்”

மொழியோடு விளையாடு

பட்டிமன்றம்

தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?
பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? (மறுத்துக்கூறல்)

  • மகாபாரத காலத்திலிருந்தே பங்காளிச் சண்டை இன்றும் நடந்தேறி வருவது தெரிந்ததே.
  • பசியைப் பகைவனிடம் சொல், பங்காளியிடம் சொல்லாதே என்பது பழமொழி
  • தான் வாழ பிறரைக் கெடுப்பவன் தான் உறவினர்
  • பாச வார்த்தை முன்னால் பேசி பழித்துத் தூற்றுவான் பின்னால் அவன் உறவினன்.
  • எனவே, உறவு என்பது உதவுதற்கு அல்ல, நம்மை உதறித் தள்ளுவதற்கே.

பெரிதும் உதவுபவர்கள் நண்பர்களா? (உடன்பட்டுக் கூறுதல்)

  • உறவும் இல்லை ஒட்டும் இல்லை, ஒரே பலகையில் உட்கார்ந்து கற்றோம் பாடத்தை, உறவாக்கினோம் உள்ளத்தை.
  • துன்பத்தில் துவளும் போது தோள் கொடுத்துத் துவளாமல் பாதுகாத்து நட்பு.
  • செய்வதறியாமல் தவித்த போது அமைச்சனாய் எனக்கு அறிவுரை தந்தது நட்பு
  • தோல்வி கண்ட போது, துயரம் போக்கி, உற்சாக மூட்டி ஊக்கமளித்தது நட்பு
  • தன் உதிரத்தையும் கொடுத்து உயிர் கொடுத்து தியாகத்தின் உச்சமாய் நிற்பது நட்பு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

மூழ்காத ஷிப் ப்ரெண்ட்ஷிப்

சுழி குளம்
நவமதி மேவிடவே
வசிகுற ளுடனட
மகுடன ருளடவி
திறனறி வருளுமே!
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 2

விளக்கம் :
வேண்டுமென்றால், அறிவுச்சுரங்கமாக விளங்கும் திருக்குறளைக் கற்று அதன் வழி வாழ்க்கையை மேற்கொள்வாய்! மேலும், சிறந்த தலைவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுத் திறன் மிக்க பல்துறை அறிவினையும் பெறலாம்.
நவ மதி – புதுமையான ஒளிமயமான அறிவு
வசி – உயர்ந்த
மகுடன் – தலைவன்
அடவி – பெருதல்

பொதுமதி பலமேவு
துணிதரம் தரமே
மததவிர முதல
திரவிய நிரம்ப
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 3

விளக்கம் :
பல துறைகளிலும் பொது அறிவை வளர்த்துக் கொள். அது நல்லதொரு துணிச்சலைத் தரும். முனைப்பு தவிர்ந்தால் முதன்மைப் படுத்தப்படுவாய். செல்வமும் நிரம்பும்.
மத(ம்) தவிர – முனைப்பு நீங்க
திரவியம் – செல்வம்

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 4
இருப்பதோ ஒரே அறை
செய்வதோ நேறு மாறு
தொழிலோ வேறு வேறு
தொந்தரவோ பல நூறு
ஆகுமோ நல்ல ஆறு
தகுமோ தேர்ந்து பாரு.

பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

எ.கா. குமரன் வீடு பார்த்தேன் – குமரனை வீட்டில் பார்த்தேன்

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
மாறனின் பேச்சுத்திறனை யார் வெல்ல முடியும்.

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
போட்டியில் வெற்றி பெற்றதற்காக கலைச் செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்?

5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
சான்றோருக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் உயரலாம்.

செய்து கற்போம்

உங்கள் குடும்ப உறவு வழிமுறைகளைக் கொண்டு குடும்ப மரம் (Famil tree) வரைக.

நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 6

படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

1. Lobby – ஓய்வறை
2. Checkout – வெளியேறுதல்
3. Tips – சிற்றீகை
4. Mini meals – சிற்றுணவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.4 உரிமைத்தாகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.4 உரிமைத்தாகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 1.
‘நமது நிலமே நமது அடையாளம்’ – இக்கூற்றை விவாதிக்க.
Answer:
நம்மை யார் என்று கேட்பவருக்குப் பெயரைச் சொன்னவுடன் உன்ஊர் எது என்று கேட்பார்கள்: காரணம் என்னவென்றால், எந்த ஊர் என்றால் எந்தவிதமான (மண்ணில்) நிலத்தில் வாழ்ந்தவன், அவனது பண்புகள் என்னவாக இருக்கும் என்று கூறிவிடலாம். இது அனுபவத்தால் மட்டுமே முடியும்.

ஒவ்வொரு நிலத்தில் வாழும் மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் வாழ்பவரின் குணம் ஒத்திருக்கும். சங்க காலத்திலேயும் திணைக்குத் தகுந்தாற்போல பண்புகள் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. மண்ணின் அடிப்படையில்தான் மனங்கள் இருப்பதுண்டு.

நமது நிலமே, நமது அடையாளம் – என்பது நமது பரம்பரையின் அடையாளமாகவே கொள்ளலாம்.

Question 2.
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்பதைக் குறித்துப் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
உலகில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால், உறவுகள் சுருங்கிவிட்டது. வேலைப் பளுவின் காரணமாக நாள்தோறும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. உண்ணும் உணவில் கூட சிரத்தை எடுத்துக் கொள்வது கிடையாது.

பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள நேரமில்லை. உடலைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறோம். எல்லாம் அவசரக் கோலங்கள். இந்நிலையில் எங்கள் வீட்டில் என் பெண்ணின் காதணி விழா. முதன் முதலில் எங்கள் வீட்டில் ஒரு விழா.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

அவ்விழாவிற்கு எனக்கு ஒன்றுவிட்ட மாமா மகள் வந்திருந்தாள். ஏழ்மையான தோற்றம். ஏண்டா வந்தாள் என்று நினைத்தேன். ஆனால் காதணி விழாவின் அடுத்த அடுத்த நிகழ்வுகள், பந்தி பரிமாறுதல், உறவினர்களை நலம் விசாரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். என் உடன்பிறப்புகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, தனி ஒருவராக என் வீட்டு விழாவை நன்முறையில் நடத்திக் கொடுத்த உறவின் முக்கியத்தை என்றும் மறவேன். உறவுகள் அது நமது சிறகுகள்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

கதைமாந்தர்கள்:
முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்.

முன்னுரை :
ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் அண்ணன், தம்பியின் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி.

தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் :
வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்குப் பிறகு அண்ணனைவிட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால், முத்தையனின் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுகிறான். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையனின் மனைவி தன் நகைகளை அடகு வைத்துக் கடனை அடைக்கச் சொல்கிறாள்.

முத்தையன் பங்காரு வீட்டிற்குச் செல்லுதல் :
முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்த பத்திரத்தைத் தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறான்.

செய்தியறிந்த பங்காரு முத்தையன் மற்றும் வெள்ளைச்சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியில் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.

அண்ணன் தம்பி இணையாதிருந்தால்…..
பங்காருசாமி நீதிமன்றத்திற்குச் சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்குத் தொடுத்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டு முறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனம் உடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

மருத்துவமனையில் வெள்ளைச்சாமி :
வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக, பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால்தான் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமானப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினான்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
அ) ரா.கி. ரங்கராஜன்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பூமணி
ஈ) உத்தமசோழன்
Answer:
இ) பூமணி

Question 2.
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
அ) அறுப்பு, வரப்புகள்
ஆ) அறுப்பு, வயிறுகள்
இ) நொறுங்கல்கள், வாய்க்கால்
ஈ) அறுப்பு, வாய்க்கால்
Answer:
ஆ) அறுப்பு, வயிறுகள்

Question 3.
பூமணி எழுதிய புதினங்கள்
அ) வரப்புகள், வயிறுகள்
ஆ) அஞ்ஞாடி, அறுப்பு
இ) வரப்புகள், அஞ்ஞாடி
ஈ) பிறகு, வயிறுகள்
Answer:
இ) வரப்புகள், அஞ்ஞாடி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 4.
முத்தையனின் மனைவி பெயர்
அ) செல்வி
ஆ) மூக்கம்மா
இ) அல்லி
ஈ) கண்ணம்மா
Answer:
ஆ) மூக்கம்மா

Question 5.
வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயர்
அ) முத்தையன்
ஆ) பங்காருசாமி
இ) செவத்தையன்
ஈ) கருப்பசாமி
Answer:
அ) முத்தையன்

Question 6.
‘கிரயம்’ என்ற சொல்லின் பொருள்
அ) ஒப்பந்தம்
ஆ) வாக்குறுதி
இ) விலை
ஈ) வாடகை
Answer:
இ) விலை

Question 7.
உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) பூமணி
இ) உத்தமசோழன்
ஈ) சுஜாதா
Answer:
ஆ) பூமணி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) கி.ரா – கி.ராமராஜன்
ஆ) அறுப்பு – நாடகம்
இ) கொம்மை – புதினம்
ஈ) முத்தையன் – அல்லி
Answer:
இ) கொம்மை – புதினம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) உரிமைத்தாகம் – பூமணி
ஆ) வாய்க்கால் – புதினம்
இ) வயிறுகள் – சிறுகதைத் தொகுப்பு
ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி
Answer:
ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி

Question 10.
பொருத்துக.
அ) பங்காரு சாமி – 1. மூக்கம்மா
ஆ) முத்தையன் – 2. மேலூர்
இ) வெள்ளைச்சாமி – 3. திரைப்படம்
ஈ) கருவேலம்பூக்கள் – 4. நம்பிக்கைக்கௌரவம்

அ) 2, 1, 4, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 2, 1, 3, 4

Question 11.
‘உரிமைத் தாகம்’ என்னும் சிறுகதை ……………….. என்னும் தொகுப்பில் உள்ளது.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) பூமணி சிறுகதைகள்
Answer:
ஈ) பூமணி சிறுகதைகள்

Question 12.
பூமணி எப்புதினத்திற்காக 2014இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
அ) வெக்கை
ஆ) கொம்மை
இ) அஞ்ஞாடி
ஈ) வாய்க்கால்
Answer:
இ) அஞ்ஞாடி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 13.
பூமணி ………….. எழுத்தாளர்களில் ஒருவர்.
அ) நெய்தல்
ஆ) கரிசல்
இ) தஞ்சை
ஈ) கொங்கு
Answer:
ஆ) கரிசல்

Question 14.
‘பூமணி’ என்பாரின் இயற்பெயர்
அ) பூ. மணிரத்னம்
ஆ) பூ. மாணிக்கவாசகர்
இ) பூவரசு மணிகண்டன்
ஈ) பூ. மணிகண்டன்
Answer:
ஆ) பூ. மாணிக்கவாசகர்

Question 15.
கி.ரா. என்னும் முன்னத்தி ஏரைப் பின்தொடர்கின்ற பின்னத்தி ஏர்
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) அகிலன்
இ) வேணுகோபாலன்
ஈ) பூமணி
Answer:
ஈ) பூமணி

Question 16.
பூமணி ஆற்றிய பணி
அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
ஆ) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
இ) சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்

Question 17.
பூமணி எடுத்துள்ள திரைப்படம்
அ) கருத்தம்மா
ஆ) கருவேலம்பூக்கள்
இ) தண்ணீர் தண்ணீர்
ஈ) பொற்காலம்
Answer:
ஆ) கருவேலம்பூக்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 18.
பூமணியின் சிறுகதைத் தொகுப்புகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) சித்தன் போக்கு
Answer:
ஈ) சித்தன் போக்கு

Question 19.
வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகிய புதினங்களை இயற்றியவர்
அ) மேலாண்மை பொன்னுசாமி
ஆ) பூமணி
இ) நாகூர் ரூமி
ஈ) தி. ஜானகிராமன்
Answer:
ஆ) பூமணி

Question 20.
பொருத்திக் காட்டுக.
அ) திருகை – 1. கிராம நிர்வாக அலுவலர்
ஆ) குறுக்கம் – 2. ஓலைப்பட்டி
இ) கடகம் – 3. சிறிய நிலப்பரப்பு
ஈ) கெராமுனுசு – 4. மாவு அரைக்கும் கல்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 21.
‘உரிமைத்தாகம்’ என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
ஆ) வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள்
இ) முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.3 கம்பராமாயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.3 கம்பராமாயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 1.
உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் எது? ஏன்? வகுப்பறையில் உரையாடுக.
Answer:
என் மனங்கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் அனுமன்.
(i)அனுமன் அஞ்சனனையின் மைந்தன், காற்றின் மைந்தன், சொல்லின் செல்வன், இராமனின் தூ தன் என்றெல்லாம் புகழப்படுபவன்.

(ii) பஞ்சவடியில் இராமனும் சீதையும் பிரிகின்றனர். பல இடங்களிலும் சீதையைத் தேடி இராம இலக்குவர் அலைகின்றனர். இடையே அனுமன், சடாயு, சுக்ரீவன், சவரி போன்ற உறவுகள் கிடைக்கின்றன.

(iii) எனினும், கடல் தாண்டி இலங்கை சென்று, சீதாபிராட்டியை அடையாளம் கண்டு, சூளாமணியோடு அனுமன் இராமனிடம் திரும்புகிறான். வந்தவுடன் அனுமன் இராமனை வணங்கவில்லை . சீதை இருக்கும் தென்திசை நோக்கி வணங்கினான். இராமனும் சீதை நலமுடன் இருக்கிறான் என்பதை அனுமனின் செயலால் உணர்ந்தான். அனுமனின் நற்சொல்லுக்காகக் காத்திருக்கும் இராமனிடம்,

‘கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்’
என்று கூறிச் சாந்தப்படுத்துகிறான்.

மேலும்,
‘விறபெருந் கடந்தோள்வீர! வீங்கு இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தாளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பதென்பதொன்றும் இரும்பொறையென்ப தொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’

என்ற அனுமனின் இந்த பதில்களே இராம அவதாரத்தில் இராமனுக்கு மகிழ்வும் அமைதியும் தந்ததாகக் கொள்ளப்படுகிறது.

எனவேதான் இராமனுக்குப் பிடித்த அனுமனை எவர்க்கும் பிடிக்கும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்’ – யார் யார் ?
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சவரி
Answer:
இ) இராமன், சுக்ரீவன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

குறுவினா

Question 1.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
  • “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

Question 2.
“துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
Answer:
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.

விளக்கம்:
குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் – என்பதே பொருத்தம்.

சிறுவினா

Question 1.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
Answer:
குகன் :
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால்தான் இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் நால்வர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)

சுக்ரீவன் :

  • சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையைத் தேடி இலங்கை சென்றான்.
  • இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.
  • இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்த்து ஐந்து பேராகும்.
  • உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

வீடணன் :

  • சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான்.
  • இலங்கை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
  • இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான்.
  • குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.

Question 2.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
Answer:
இராமன் ஆற்றிய கடமைகள் :

  • இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.
  • அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
  • ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
  • பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.
  • தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
  • இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

நெடுவினா

Question 1.
பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
குகனுடன் கொண்ட உறவுநிலை :
(i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.

(ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

சடாயுடன் கொண்ட உறவு நிலை :
(i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.

(ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

சவரியுடன் கொண்ட உறவு நிலை :
(i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.

(ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.

சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :
(i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.

(ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.

(iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

வீடணனிடம் கொண்ட உறவு நிலை :
(i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.

(ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.
(iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.

(iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.

இலக்கணக் குறிப்பு

உளது – இடைக்குறை
மாதவம் – உரிச்சொற்றொடர்
தாழ்கடல் – வினைத்தொகை
செற்றவர் – வினையாலணையும் பெயர்
நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம் 1

புணர்ச்சி விதி

அருங்கானம் – அருமை + கானம்

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, ‘மை’ கெட்டு, அரு + கானம் என்றானது.
  • இனமிகல் என்ற விதிப்படி, எங்’ தோன்றி அருங்கானம் எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்?
அ) குகன்
ஆ) இராமன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஆ) இராமன்

Question 2.
‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?
அ) இலக்குவன்
ஆ) குகன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
அ) இலக்குவன்

Question 3.
சடாயு யாருடைய நண்பன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) தயரதன்
ஈ) அருணன்
Answer:
இ) தயரதன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 4.
‘இந்தனம் எனைய என்ன கார்’ – இந்தனம் என்பதன் பொருள்
அ) இந்த நேரம்
ஆ) மாலை
இ) மணல்
ஈ) விறகு
Answer:
ஈ) விறகு

Question 5.
சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) அயோத்தியா காண்டம்
Answer:
ஆ) கிட்கிந்தா காண்டம்

Question 6.
“உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்” – ‘உவா’ என்பதன் பொருள்
அ) சந்திரன்
ஆ) சூரியன்
இ) பௌர்ணமி
ஈ) அமாவாசை
Answer:
ஈ) அமாவாசை

Question 7.
வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
ஈ) யுத்த காண்டம்

Question 8.
“ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூற” – ‘ஆழியான்’ எனப்படுபவன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) வீடணன்
ஈ) சடாயு
Answer:
ஆ) இராமன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 9.
‘குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு, பின்குன்று சூழ்வான்’ – ‘குன்று’ பொருள்
அ) மலை
ஆ) பாறை
இ) கதிரவன்
ஈ) இராமன்
Answer:
இ) கதிரவன்

Question 10.
“தந்தனன் தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்” – ‘தடக்கையான்’ இலக்கணக் குறிப்பு
அ) உரிச்சொற்றொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) மரூஉ
Answer:
அ) உரிச்சொற்றொடர்
விடை : அ.

Question 11.
‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) குவித்த + உ
ஆ) குவி + (த்)(ந்) + த் + உ
இ) குவி + த் + த் + உ
ஈ) குவித்து + உ
Answer:
இ) குவி + த் + த் + உ

Question 12.
‘தந்தனன்’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) த + த்(ந்) + த் + அன் + அன்
ஆ) தந்து + அன் + அன்
இ) தா + த் + த் + அன் + அன்
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
Answer:
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்

Question 13.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) தலைப்பட்டு
ஆ) நமக்கிடையே
இ) உமக்கிடையே
ஈ) அருங்கானம்
Answer:
அ) தலைப்பட்டு

Question 14.
‘செற்றவர் என்னைச் செற்றார்’ – ‘செற்றவர்’ இலக்கணக் குறிப்பு
அ) பலர்பால் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்கால வினைமுற்று
Answer:
இ) வினையாலணையும் பெயர்

Question 15.
‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) மண்ணில்
ஆ) திரைப்படம்
இ) இல்லை
ஈ) பின்னாளில்
Answer:
அ) மண்ணில்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 16.
‘தருப்பையும் திருத்தி, பூவும்’ – ‘திருத்தி’ – இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) பண்புப்பெயர்
இ) வினையெச்சம்
ஈ) வினைத்தொகை
Answer:
இ) வினையெச்சம்

Question 17.
‘துன்பு உளது எனின் அன்றோ ’ – ‘உளது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) பெயரெச்சம்
இ) மரூஉ
ஈ) இடைக்குறை
Answer:
ஈ) இடைக்குறை

Question 18.
ஓர் மூலம் இல்லான் யார் ?
அ) இலக்குவன்
ஆ) இராமன்
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
Answer:
ஆ) இராமன்

Question 19.
‘யாவரும் கேளிர்’ என்பது தமிழர் நற்பண்பின் …………….. ஆகும்.
அ) மலர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஈ) வளர்ச்சி

Question 20.
‘சிறியோரை இகழ்தல் இலமே’ என்பது தமிழர் நற்பண்பின் …………. ஆகும்
அ) வளர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) மலர்ச்சி
ஈ) உயர்ச்சி
Answer:
இ) மலர்ச்சி

Question 21.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் நற்பண்பின் …………… ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) வளர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) தொடர்ச்சி
Answer:
அ) முதிர்ச்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 22.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்பது தமிழர் நற்பண்பின் ……………….. ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஆ) தொடர்ச்சி

Question 23.
தமிழர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது ……………. ஆகும்.
அ) புறநானூறு
ஆ) திருக்குறள்
இ) கம்பராமாயணம்
ஈ) தொல்காப்பியம்
Answer:
இ) கம்பராமாயணம்

Question 24.
கூற்று 1 : குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உளதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்
கூற்று 2 : அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலிக்கவில்லை.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 25.
கூற்று 1 : “அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர் – நீ என் உயிர்நண்பன்”
கூற்று 2 : “பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்”

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 26.
கூற்று 1 : “மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் தவறு

Question 27.
சரியானதைத் தேர்க.
அ) சடாயு – கழுகின் மகன்
ஆ) வீடணன் – இராவணனின் தம்பி
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்
ஈ) குகன் – வேடற்குலத்தலைவன்
Answer:
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்

Question 28.
சரியானதைத் தேர்க.
அ) ஆரண்ய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
ஆ) கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
இ) யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்
Answer:
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்

Question 29.
சரியானதைத் தேர்க.
அ) செற்றவர் – வினையாலணையும் பெயர்
ஆ) திருத்தி – வினையெச்சம்
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ
ஈ) நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
Answer:
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ

Question 30.
பொருத்துக.
அ) சடாயு – 1. உயிர் நண்பன்
ஆ) சுக்ரீவன் – 2. அடைக்கலமானவன்
இ) குகன் – 3. தந்தை உறவு
ஈ) வீடணன் – 4. வேடற்குலத் தலைவன்

அ) 3, 1, 2, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 1, 2, 4, 3
Answer:
இ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 31.
‘எனக்கும் மூத்தோன்’ என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) இராமன் குகனை
ஆ) குகன் இராமனை
இ) குகன் பரதனை
ஈ) பரதன் குகனை
Answer:
ஈ) பரதன் குகனை

Question 32.
………………. தலைவன் குகன்.
அ) ஆயர்
ஆ) வேடுவர்
இ) பரதவர்
ஈ) குறவர்
Answer:
ஆ) வேடுவர்

Question 33.
பொருத்திக் காட்டுக.
அ) அமலன் – 1. குளிர்ந்த
ஆ) இளவல் – 2. இராமன்
இ) துன்பு – 3. தம்பி
ஈ) நளிர் – 4. துன்பம்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 3, 4, 1

Question 34.
‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இலக்குவன் குகனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) குகன் பரதனிடம்
ஈ) பரதன் குகனிடம்
Answer:
ஆ) இராமன் குகனிடம்

Question 35.
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று வருந்தியவன்
அ) அனுமன்
ஆ) குகன்
இ) இராவணன்
ஈ) வாலி
Answer:
ஆ) குகன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 36.
குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
அ) அயோத்தியா காண்டம்

Question 37.
சடாயு உயிர்நீத்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

Question 38.
……………… வேந்தன் சடாயு.
அ) வானர
ஆ) கழுகு
இ) மான்
ஈ) வன
Answer:
ஆ) கழுகு

Question 39.
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது, தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன்
அ) அனுமன்
ஆ) வாலி
இ) சடாயு
ஈ) குகன்
Answer:
இ) சடாயு

Question 40.
சடாயுவைத் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்தவன்
அ) இராமன்
ஆ) குகன்
இ) அனுமன்
ஈ) பரதன்
Answer:
அ) இராமன்

Question 41.
‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம் ……….
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) யுத்த காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 42.
சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்
அ) கைகேயி
ஆ) கோசலை
இ) மந்தரை
ஈ) சவரி
Answer:
ஈ) சவரி

Question 43.
அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) சுக்ரீவன்
ஈ) சடாயு
Answer:
அ) இராமன்

Question 44.
‘மாண்டது என் மாயப் பாசம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) கைகேயி, இராமனிடம்
ஆ) குகன் இராமனிடம்
இ) சவரி இராமனிடம்
ஈ) இராமன் அனுமனிடம்
Answer:
இ) சவரி இராமனிடம்

Question 45.
‘நட்புகோட்படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) யுத்த காண்ம்
Answer:
இ) கிட்கிந்தா காண்டம்

Question 46.
சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் யாரை அழைத்து வந்தான்?
அ) சடாயுவை
ஆ) சுக்ரீவனை
இ) சவரியை
ஈ) வாலியை
Answer:
ஆ) சுக்ரீவனை

Question 47.
பொருத்திக் காட்டுக.
அ) அனகன் – 1. உறவினர்
ஆ) சுவர் – 2. பகைவர்
இ) உடுபதி – 3. அமாவசை
ஈ) செற்றார் – 4. சந்திரன்
உ) கிளை – 5. இராமன்

அ) 5, 3, 4, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 5, 3, 1, 2
ஈ ) 2, 3, 1, 5, 4
Answer:
அ) 5, 3, 4, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 48.
வானரத் தலைவன்
அ) சடாயு
ஆ) குகன்
இ) பரதன்
ஈ) சுக்ரீவன்
Answer:
ஈ) சுக்ரீவன்

Question 49.
அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள்
அ) இராமனும் குகனும்
ஆ) இராமனும் இலக்குவனும்
இ) இராமனும் சுக்ரீவனும்
ஈ) சுக்ரீவனும் இராவனனும்
Answer:
இ) இராமனும் சுக்ரீவனும்

Question 50.
‘என் காதல் சுற்றம் உன் சுற்றம்’ – என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் குகனிடம்
ஆ) இராமன் சுக்ரீவனிடம்
இ) சுக்ரீவன் இராமனிடம்
ஈ) வீடணன் இராவணனிடம்
Answer:
ஆ) இராமன் சுக்ரீவனிடம்

Question 51.
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென இராவனிடம் கூறியவர்
அ) அனுமன்
ஆ) சவரி
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஈ) வீடணன்

Question 52.
இராமன் யாருக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான்?
அ) சுக்ரீவனுக்கு
ஆ) வீடணனுக்கு
இ) அனுமனுக்கு
ஈ) இராவணனுக்கு
Answer:
ஆ) வீடணனுக்கு

Question 53.
மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன்
அ) சுக்ரீவன்
ஆ) குகன்
இ) வீடணன்
ஈ) அனுமன்
Answer:
அ) சுக்ரீவன்

Question 54.
யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்கிறார் இராமன்?
அ) குகனுடன்
ஆ) சுக்ரீவனுடன்
இ) வீடணனுடன்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சுக்ரீவனுடன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 55.
‘நின்னொடும் எழுவர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் சுக்ரீவனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) இராமன் வீடணனிடம்
ஈ) இலக்குவன் குகனிடம்
Answer:
இ) இராமன் வீடணனிடம்

Question 56.
கம்பராமாயணத்தில் பாடப்பகுதியாக அமைந்துள்ள பகுதி
அ) இராவணன் சீதையைச் சிறை எடுத்தல்
ஆ) இராமன் இராவணனை வெல்லுதல்
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது

Question 57.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
அ) கம்பர்
ஆ) சேக்கிழார்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) அம்பிகாவதி
Answer:
அ) கம்பர்

Question 58.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்
அ) இராமபுராணம்
ஆ) இராமாவதாரம்
இ) சீதாகல்யாணம்
ஈ) இராமநவமி
Answer:
ஆ) இராமாவதாரம்

Question 59.
கம்பரது காலம் ………….. ஆம் நூற்றாண்டு.
அ) 1
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer:
இ) 12

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 60.
கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்

குறுவினா

Question 1.
குகனிடம் இராமன் கூறியது என்ன?
Answer:

  • நீ என் தம்பி ; இலக்குவன் உன் தம்பி.
  • சீதை உன் அண்ணி .
  • இந்நிலவுலகம் முழுவதும் உனக்குரியது.
  • நான் உன் ஏவலுக்குப் பணிபரியும் பணியாள்.

Question 2.
குகன் இராமனுக்குச் செய்த உதவி என்ன?
Answer:
இராமன் கங்கையைக் கடந்து காட்டிற்குச் செல்ல நாவாய் கொடுத்து உதவியவன்.

Question 3.
சடாயு யார்? அவன் மேற்கொண்ட செயல் யாது?
Answer:

  • கருடனின் அண்ண ன் அருணனின் மகன் சடாயு.
  • இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்து சண்டையிட்டுத் தன் உயிரைத் துறந்தவன்.

Question 4.
இராமாயணத்தில் சவரி செய்த செயல்கள் யாவை?
Answer:

  • சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள்.
  • காப்பியத்தின் போக்கில் திருப்பத்தை உருவாக்கியவள்.
  • இராமன், இலக்குவன் இருவருக்கும் விருந்தளித்து உபசரித்தவள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 5.
சவரியிடம் இராமன் வினாவியது என்ன?
Answer:
தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம், “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் வினவினான்.

Question 6.
வீடணன் ஏன் இராமனிடம் அடைக்கலமானான்?
Answer:

  • சீதையைக் கவர்ந்தது தவறு என்று இராவணனிடம் கூறினான் வீடணன்.
  • கோபம் கொண்ட இராவணன் வீடணனைக் கடிந்தான்.
  • எனவே, இலங்கையை விட்டு வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.

Question 7.
இராமன் வீடணனுக்குக் கொடுத்த உரிமை பற்றிக் கூறியது யாது?
Answer:
“ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சியை பதினான்கு உலகங்களும், எனது பெயரும் எவ்வளவு காலம் இருக்குமோ : 2 அவ்வளவு காலம் உனக்கே உரிமையாக” கொடுத்தேன் என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

Question 8.
இராமன் குறிப்பிடும் எழுவரின் பெயர்களை எழுதுக.
Answer:
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன், குகன், சுக்ரீவன், வீடணன்.

Question 9.
பாடப்பகுதியில் கம்பராமாயணத்தின் இடம் பெற்றுள்ள காண்டங்கள் யாவை?
Answer:

  • அயோத்தியா காண்டம்
  • ஆரணிய காண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • யுத்த காண்டம்

Question 10.
பாடப்பகுதியில் இடம்பெறும் கம்பராமாயண பாத்திரங்களைக் குறிப்பிடுக.
Answer:
குகன், சடாயு, சவரி, சுக்கீவன், வீடணன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 11.
சவரி – குறிப்பு வரைக.
Answer:

  • இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி.
  • சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் இவள்.
  • இராமன் அன்பளாகிய சவரிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.

சிறுவினா

Question 1.
‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று இராமன் கூறக் காரணம் என்ன?
Answer:

  • கங்கையைக் கடந்து காட்டிற்கு இராமன் செல்ல இருக்கின்றனர்.
  • அந்தப் பிரிவைத் தாங்காத குகன், இராமன் காட்டிற்குச் சென்று துன்பம் அடைவான் எனக் கருதி வருந்தினான்.
  • குகனின் வருத்தம் அறிந்த இராமன், குகனிடம் துன்பம் இருந்தாலே இன்பம் வரும்.
  • துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக வரும்.
  • இப்போது பிரிகிறோம் என்று எண்ணி வருந்தாதே.
  • இதுவரை நாங்கள் நான்குபேர்தான் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்.
  • உன்னையும் சேர்த்து ஐவர் ஆகின்றோம் ; நம் உறவு நீடிக்கும்.

Question 2.
இராமனும் சுக்ரீவனும் இருந்த காட்சியைக் கம்பர் எங்ஙனம் வருணிக்கின்றார்?
Answer:
(i) பகைவர்களை அழித்து அறங்களைக் காக்கும் நபர்கள் போல இருவரும் ஒன்றாகயிருந்தார்கள்.

(ii) குறையான வலிமையும் இருள் போன்ற குணமும் உடைய பகைவர்களை அழித்து அறத்தினைக் காக்க ஒன்றாக இருந்தனர்.

(iii) ஆசையை அறவே அழித்த இராமனும் ; வானரத் தலைவனான சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கும் சந்திரனையும் சூரியனையும் போன்று இருந்தார்கள்.

Question 3.
இராமன் சுக்ரீவனிடம் கொண்ட உறவின் உறுதியை கம்பர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?
Answer:

  • இராமன் சுக்ரீவனிடம் மிக ஆழமான பாசம் கொண்டிருந்தான்.
  • சுக்ரீவனைப் பார்த்து, “இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றான்.
  • விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் எனக்கும் பகைவர் ஆவர்.
  • தீயவராக இருந்தாலும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் ஆவர்.
  • உன் உறவினர் எல்லோரும் என் உறவினர்.
  • அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் எல்லாரும் இனி உன் சுற்றத்தினர் ஆவர்.
  • ‘நீ, என் இனிய உயிர்நண்பன்’ என்று இராமன்சுக்ரீவனிடம் கூறியதாகக்கம்பர் எடுத்துரைக்கின்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 4.
“குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரிகம்பர் எழுதிய கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் வீடணன் அடைக்கலப் படலத்தில் உள்ளது.

பொருள் :
நாங்கள் உடன்பிறந்ததோர் நால்வராக இருந்தோம், எங்களுடன் குகன் சேர்ந்து ஐந்து பேராக இருந்தோம். அதன்பிறகு கதிரவனின் மகனான சுக்ரீவன் இணைந்து தற்போது ஆறுபேராக இருக்கின்றோம்.

விளக்கம் :
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன் இராவணிடம் கூறினான். வீடணனின் பேச்சைக் கேட்காத இராவணன் வீடணனைக் கடிந்தான். எனவே, வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் வந்து அடைக்கலம் வந்து தன்னையும் ஏற்றுக்கொள்ளுமாறு இராமனிடம் வேண்டினான். அப்பொழுது இராமன், “கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் நாங்கள் இப்போது அறுவராக இருக்கின்றோம், உன்னையும் சேர்த்து எழுவரானோம்” என்று கூறுமிடத்தில் இப்பாடல் வரி இடம் பெற்றுள்ளது.