Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Students can Download 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 1.
‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
Answer:
(எ.கா) அவன் வாழ்க. (ஆண்பால்)
(i) அவள் வாழ்க. (பெண்பால்)
(ii) மக்கள் வாழ்க. (பலர்பால்)
(iii) அது வாழ்க. (ஒன்றன்பால்)
(iv) ‘அவை வாழ்க. (பலவின்பால்)

(எ.கா) நாம் வாழ்க. (தன்மை )
(i) நீங்கள் வாழ்க. (முன்னிலை)
(ii) அவர்கள் வாழ்க. (படர்க்கை)

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ………………..
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்த து
Answer:
ஈ) மேய்ந்தது

Question 2.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ………………….
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer:
அ) படித்தான்

Question 3.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் …………
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer:
அ) செல்க

சிறுவினா

Question 1.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். (எ.கா.) மலர்விழி எழுதினாள்.

Question 2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் தெரிநிலை வினைமுற்று காட்டும்.
(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் : க, இய, இயர், அல்.

Question 4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 4

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
இயற்கையைப் பாதுகாப்போம்
Answer:
இயற்கை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நம்மைச் சுற்றியுள்ள மலை, காடு, ஆறு, நிலம் என்பனவாகும். ஆதிகால மனிதன் மலை, காடுகளில் வாழ்ந்து வந்தான். அங்கு விளைந்த காய்கறி, பழங்களை உண்டு வந்தான். அங்கிருந்த விலங்கினங்களைத் தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தினான். அங்கு வாழ்ந்த மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டுச் செல்லக்குழந்தைகளாக வளர்த்தனர். இயற்கையைக் கண்டு வியந்தனர். அதனால் இயற்கையைத் தெய்வமாக எண்ணி வணங்கினர். இந்நிலை படிப்படியாய் வளர்ந்து காடு, மலை என்பது மாறி வயல், நாடு நகரம் என உருவாயின.

“நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர்; ஆடவர்
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

என்ற ஔவையின் பாடல் மூலம் நாம் அறிவது நிலமானது நாடு, காடு, மேடு, பள்ளம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மண்ணைப் பண்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும் ஆண்மகன் இருந்தால் அம்மண் வளம் பெறும்; நாடும் நலம் பெறும் என்பதாகும்.

நாம் நாகரிகம் என்ற பெயரில் புதிய புதிய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தியும், பல தொழிற்சாலைகளை உருவாக்கியும் இயற்கையைப் பல வழிகளில் சீரழிக்கிறோம். நாம் இயற்கையை மறந்து போனதால்தான் வாழ வழியின்றி அழிந்து வருகின்றோம். இயற்கையை நேசிக்க மறந்துவிட்டோம். அதனால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.

கடல்கள் குப்பைகளின் கூடாரமாகிவிட்டன. அதனால் நீர்வாழ் அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன. கடல் உணவுகள் நஞ்சாகின்றன. சூரியன், சக்தியை மட்டுமே கொடுக்காமல் பல நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் அன்றாடம் உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருள்களான பாய், போர்வை, தலையணைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலம் பல ஆபத்தான நோய்க்கிருமிகளை இயற்கையான முறையிலேயே அழித்துவிட முடியும். நாம் விண்வெளியையும் மாசுபடுத்தத் தயங்கவில்லை. அதி நவீன கண்டுபிடிப்புகளால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

இயற்கை ‘தங்களை அழிக்காதீர்கள்’ என்று கூறுவது போலவும், தங்களுடைய அழிவில் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதை நமக்கு அறிவுறுத்தும் வகையிலும் அவ்வப்போது நிலநடுக்கம், கனமழை, நிலையற்ற தட்பவெப்பம், புயல்காற்று, கடல் சீற்றம் போன்றவற்றை உருவாக்கி நம்மை நல்வழிப்படுத்த எண்ணுகிறது.

இவற்றையெல்லாம் பார்த்தாவது நாம் சிந்திக்க வேண்டும். நல்லமுறையில் செயலாற்ற வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்திக் கொள்ள இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டிச் சாய்க்கும் நாம், புதியதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். உடல், உள, சமூக ஆன்மிக நன்னிலையைக் காத்து நிற்கும் மரம் என்ற மருத்துவச் சுடரைத் தாய்நாடெங்கும் ஏற்றி வைப்போம். அச்சுடர்களின் ஒளியில் மிளிர்ந்து ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை, இயற்கையை நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். எங்கும் தூய்மையைப் போற்ற வேண்டும். காடுகளை அழிக்கக்கூடாது. மலைகளைத் தகர்க்கக் கூடாது. மண்வளத்தைச் சுரண்டக்கூடாது. நெகிழிப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமன்று; பொறுப்பும் என்பதை உணர்வோம்.

இயற்கையைக் காப்போம். எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்.
‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்’ என்ற வள்ளுவரின் வாய்மொழியைப் போற்றி வரும் முன் காப்போம். நோயற்ற மக்கள் சமுதாயத்தை உருவாக்குவோம்.

சொல்லக்கேட்டு எழுதுக

இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று; பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள் அறிவோம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 2

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3.
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கசு
3. ங
4. சு
5. ரு

அறிந்து பயன்படுத்துவோம்

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர் :
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத் தொடர் :
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர் :
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல்.      (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக      (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க.        (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக.    (வைதல்)

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

உணர்ச்சித் தொடர் :
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!     (உவகை)
ஆ! புலி வருகிறது!   (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!    (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே!     (வியப்பு)

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ……………………..
2. கடமையைச் செய் ………………………….
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! ………………………
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? …………………..
Answer:
1. செய்தித் தொடர்
2. ஏவல் தொடர்/விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

Question 1.
காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
Answer:
ஆ! காட்டின் அழகுதான் என்னே !

Question 2.
ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
Answer:
அதிகாலையில் துயில் எழு.

Question 4.
முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

Question 5.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கடிதம் எழுதுக

Question 1.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
Answer:

25, கம்பர் தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி – 2.
19-5-2019.

அன்புள்ள நண்பனுக்கு,
உன் அன்புத் தோழன் ராம் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். உன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பியை விசாரித்ததாகக் கூறவும்.

சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர்.

உனக்கு விளையாடுவதில் ஆர்வம் மிகுதி என நானறிவேன். அதன் பயனாய் நீ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாய். இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும். முயற்சியைக் கைவிடாதே! வாழ்த்துகள்.

இப்படிக்கு
உன் அன்புத் தோழன்
ராம். அ.

உறைமேல் முகவரி
பெறுநர் அஞ்சல் தலை
ம.மாதேஷ்,
த/பெ. மணி,
எண் – 30, பாரி தெரு,
சென்னை – 20.

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 3

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicket
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ………………….
2. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொல் ………………….. என்றும் கூறுவர்.
3. முற்றுவினையை …………………….. என்றும் கூறுவர்.
4. வினைமுற்று ……………….. வினைமுற்று, ………………. வினைமுற்று என இருவகைப்படும்.
5. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ………………… எனப்படும்.
6. ஏவல் வினைமுற்று …………………… ஆகிய இருவகைகளில் வரும்.
7. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் …………………..
8. பாடினான் என்பது ………………….. வினைமுற்று.
9. வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று ………………..
Answer:
1. வினைச்சொல்
2. முற்றுவினை
3. வினைமுற்று
4. தெரிநிலை, குறிப்பு
5. ஏவல் வினைமுற்று
6. ஒருமை, பன்மை
7. க, இய, இயர், அல்
8. தெரிநிலை
9. வியங்கோள் வினைமுற்று

விடையளி:

Question 1.
வினைசொல் என்றால் என்ன?
Answer:
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) படித்தான், ஆடுகிறான்.

Question 2.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) எழுதினாள், பாடுகிறாள்.

Question 3.
வினைமுற்று எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 4.
தெரிநிலை வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
கருவி – தாளும் எழுதுகோலும்
நிலம் – பள்ளி
காலம் – இறந்தகாலம்
செய்பொருள் – கட்டுரை
செயல் – எழுதுதல்

Question 5.
குறிப்பு வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.

(எ.கா.) பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ண ன்
பண்பு(குணம்) – கரியன்
தொழில் – எழுத்தன்

Question 6.
தமிழில் உள்ள வினைமுற்றுகள் யாவை?
Answer:
தமிழில் உள்ள வினைமுற்றுகள் :
(i) தெரிநிலை வினைமுற்று
(ii) குறிப்பு வினைமுற்று
(iii) ஏவல் வினைமுற்று
(iv) வியங்கோள் வினைமுற்று

Question 7.
ஏவல் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
(எ.கா) எழுது – ஒருமை
எழுதுமின் – பன்மை

Question 8.
வியங்கோள் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
(எ.கா) வாழ்க, ஒழிக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 9.
வியங்கோள் வினைமுற்று எவ்வெவற்றைக் காட்டும்?
Answer:
வியங்கோள் வினைமுற்று இருதிணைகளையும் ஐந்து பால்களையும் மூன்று இடங்களையும் காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Students can Download 9th Tamil Chapter 9.2 அக்கறை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.2 அக்கறை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 1.
நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்து புதுக்கவிதைகளைத் திரட்டி இலக்கிய மன்றத்தில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு சிறு இசை
ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப் பறத்தல்
Answer:
அ) ஒரு சிறு இசை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
“பழங்களை விடவும் நசுங்கிப் போனது” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்:
இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:
மிதிவண்டி ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.

Question 2.
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் எந்த நாட்டு தத்துவஞானிகள்?
அ) எகிப்து
ஆ) கிரேக்கம்
இ) இத்தாலி
ஈ) இஸ்ரேல்
Answer:
ஆ) கிரேக்கம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 2.
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் யாது?
அ) கல்யாணராமன்
ஆ) கல்யாணசுந்தரம்
இ) கலியுகராமன்
ஈ) கலியபெருமாள்
Answer:
ஆ) கல்யாணசுந்தரம்

Question 3.
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
அ) வாணிதாசன்
ஆ) வண்ண தாசன்
இ) தமிழ்தாசன்
ஈ) பிச்சை
Answer:
ஆ) வண்ண தாசன்

Question 4.
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
Answer:
இ) 2016

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?
அ) புலரி
ஆ) ஆதி
இ) உயரப்பறத்தல்
ஈ) ஒரு சிறு இசை
Answer:
ஈ) ஒரு சிறு இசை

Question 6.
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
அ) 3, 1, 4, 2
ஆ) 1, 2, 4, 3
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
வண்ணதாசன் என்னும் புனை பெயரில் எழுதுபவர் யார்? அப்பெயரில் எவ்விலக்கியத்தில் பங்களித்து வருகிறார்?
Answer:

  • கல்யாண்ஜி
  • கதை இலக்கியத்தில் ‘வண்ணதாசன்’ என்னும் பெயரில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
கல்யாண்ஜியின் கவிதை நூல்களை எழுதுக.
Answer:

  • புலரி
  • முன்பின்
  • ஆதி ஆகியவையாகும்.
  • மணல் உள்ள ஆறு
  • அந்நியமற்ற நதி

Question 2.
கல்யாண்ஜியின் சிறுகதை நூல்களை எழுதுக.
Answer:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்.
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்.
  • உயரப் பறத்தல்.
  • ஒளியிலே தெரிவது போன்றவையாகும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing Ex 7.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Question 1.
Find the product of the following numbers:
(i) 234 × 765
(ii) 908 × 512
(ii) 481 × 503
Answer:
(ii) 234 × 765
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

(ii) 908 × 512
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 2

(iii) 481 × 503
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 63)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 1
Mugilan is the secretory of the Math club in his school. The principal of the school has announced for a quiz competition and Mugilon is given the incharge of arranging for the competition. Write the tasks to be done by Mugilon.
Answer:

  • Fixing number of participants in each team.
  • Allowed number of teams from a class.
  • Informing students about competition.
  • Who is the quiz master.
  • Number of rounds.
  • Prises and distribution.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 64)

Consider the situation
Vizhyans birthday is on Wednesday. His father asked his sister Poovizhi to arrange for the party. She is happy to do it but does not know how to arrange for the party. Her father suggested her to first break the event into smaller tasks and complete those tasks one by one. Poovizhi thought that this way she could easily arrange for the party. If you are Poovizhi what would be tasks you will plan for. Write the smaller tasks which you will arrange.
Answer:

  • Set a budget
  • Write up a guest list
  • Shopping for gifts for birthday boy
  • Order invitations
  • Prepare food plan

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Activity (Text Book Page No. 64)

Sort the factors of 40,72 and 75 from the number board given below.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 2
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 3

○ – factor of 40
 – factor of 72
△ – factor of 72

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Students can Download 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 1.
உங்களுக்குப் பிடித்த தமிழ் ஆளுமைகள் குறித்துக் கலந்துரையாடிக் குறிப்புகளை எழுதுக.
Answer:

  • பூமிப்பந்து எங்கும் புகழ் பெற்றுத்திகழும் தமிழ் ஆளுமை காமராசர் ஆவார்.
  • ஆளுமை என்பது என்னவென்றால் ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள், ஆகியவை உள்ளிருந்து உருவாகி வாழ்க்கைக்காலம் முழுவதும் அவை சீராக அமைவதே ஆளுமை ஆகும்.
  • இவ் உரைநடையில் கற்றது போல் பிறர்நலம் பேணுதல், தியாகமும் நேர்மையும் ஆளுமை என்றால் காமராசர் சிறந்த ஆளுமை பண்பு உடையவரே.
  • தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாது, சதாகாலமும் நாட்டின் நலனில் ஈடுபட்ட உள்ளத்தைப் பெற்றவர். தர்ம சிந்தனையும், நீதியும் உடையவர்.
  • மக்களுக்குத் தொண்டு செய்ய நீண்டகாலம் வாழவேண்டும் என்று வாழ்த்தப்பட்டவர்.
  • காமராசர் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தீர்ப்பதில் வல்லவர், நாட்டம் உடையவர் என்று இந்தியாவிலேயே பெருமையாகப் பேசப்பட்டவர்.
  • மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் கூட நிகழாத அற்புதத்தைத் தமிழகத்தில் நடத்தியவர் என்று பெரியாரே புகழ்ந்துள்ளார்.
  • கல்விப் புரட்சியும், சமூக நீதிக்கான புரட்சியும் நடத்திக் காட்டியவர்.
  • இவரது பொதுவாழ்க்கை நேர்மை, எளிமை, தூய்மை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கறைபடியாத கரங்களை உடையவராகத் திகழ்ந்தார்.

தோழர்களே நம் நாடு உருப்பட வேண்டுமானால் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரைப் படித்துக் கொள்ளுங்கள்; விட்டுவிடாதீர்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். “காமராசரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளு சிக்காது” என்று 82 வயதான தந்தை பெரியாரால் பாராட்டபட்டார். எனில் காமராசரை விட சிறந்த ஆளுமை உண்டோ !

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
உலகத் தமிழ் மாநாட்டு மலர், பொங்கல் மலர், தீபாவளி மலர், போன்றவற்றில் வெளிவந்துள்ள உலகப் பொதுவியல் சிந்தனைகள் குறித்து 5 மணித்துளிகள் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்.
பொங்கல் மலர் ஒன்றில் புதிய சிந்தனைகள் நிறைந்த கருத்தடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.
இளமை நிலையற்றது, வாழ்வு நிலையற்றது. இளமை என்பது அழகு இல்லை அது ஒரு பருவம், அப்பருவத்தில் நன்மை செய்பவர்களாய் நாம் வாழவேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தியது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

என்று உலகுக்கு உணர்த்தியவன் தமிழன். பண்டைய தமிழன் சிறந்த உலகப்பொதுமை சிந்தனை உடையவனாக இருந்தான்.
நரையும் மூப்பும் வரும் என்பதை முன்னரே உணர்ந்து காமம், வெகுளி, மயக்கம் என்று கிடைக்காமல் நன்மை செய்யுங்கள் நன்மையே உங்களை நன்னெறிக்கு இட்டுச்செல்லும். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணுங்கள்.
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்” நாகரிகம் எனப்படா. அனைத்து உயிர்களிடத்தும் உயிர்நேயம் உடையவனே நாகரிகம் உடையவன்.

குளிர்ச்சியான சோலையில் காய்த்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்து விடுவது போல், வாழ்வும் உதிர்ந்துவிடும் தன்மையது. எனவே வாழும்போதே, “மற்று அறிவோம் நல்வினை” என்பதை உணர்வோமாக.

அறிவுடையோர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்க! இந்த உண்மையை உணராதவரை அறிவில்லாதவர் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

“தோறார் விழியிலா மாந்தர்” என்கிறார்.

இளமை கழிந்து போகுமுன் அருமையான அறச்செயல்களைச் செய்து விட வேண்டும். முதுமையில் எண்ணினாலும், அருஞ்செயலை செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும், எண்ணும் உலகளாவிய பொதுவியல் சிந்தனையைக் கூறும் இக்கட்டுரை, என் மனதை மாற்றியது. இச்சொற்பொழிவைக் கேட்ட நீவிரும் அறம் செய்ய முயல்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) மலையுச்சி
இ) சங்கு
ஈ) மேடு
Answer:
ஆ) மலையுச்சி

Question 2.
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
அ) நிலையற்ற வாழ்க்கை
ஆ) பிறருக்காக வாழ்தல்
இ) இம்மை மறுமை
ஈ) ஒன்றே உலகம்
Answer:
ஈ) ஒன்றே உலகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

குறுவினா

Question 1.
தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையரின் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
உரோம நாட்டவர் : உரோமையரின் சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை கருதியே எழுதுகின்றனர்.

தமிழ்ச் சான்றோர் : எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

சிறுவினா

Question 1.
உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
Answer:
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது என்பார்.”

அவர் குறிப்பிட்ட அரிய கருத்துகள்:

  • மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
  • பிறப்போ சாதியோ சமயமோ மக்களை உயர்த்தவோ, தாழ்த்தவோ, முடியாது.
  • இத்தகைய கொள்கைகள் வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன என்று வியக்கிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
Answer:
கோர்டன் ஆல்போர்ட் ஓர் உளநூல் வல்லுநர். அவர் கூறும் மூன்று இலக்கணங்களாவன.

  • மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய
  • நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
  • பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.
  • ஒருவன் அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டுபிடித்து நடத்தல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகள் வழி நிறுவுக.
Answer:
முன்னுரை:
உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத்தன்மை. இச்சான்றாண்மைப் பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

யாதும் ஊரே யாவரும் நம்மவரே:
கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் சான்றாண்மைக் கொள்கையை இக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறியுள்ளார்.

‘யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவர்’ என்று திருக்குறளும் நம் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரையைக் கூறியுள்ளது. ஊர், நாடு, கேளிர் என்னும் இச்சொற்கள் பரந்த மனப்பான்மை மனித நலக் கோட்பாடு என்னும் சான்றாண்மையை வலியுறுத்துகிறது

இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்:
இலட்சியங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயம் உயரும். குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும். குறிக்கோள் இல்லாத மனிதன் வெறும் சதைப்பிண்டம் என்பதை, “பூட்கையில் லோன் யாக்கை” போல என்று புலவர் ஒருவர் புறநானூற்றில் கூறுகிறார். குறிக்கோள் வேண்டும் என்பதை வள்ளுவம் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று குறிப்பிடுகிறார்.

பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்:
பிறர் நலத்துக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கை ஆகிறது. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையைப் பின்பற்றினர் தமிழர். இச்செய்தி தமிழ்ச் சான்றோர் தன்னலம் தேடுவதில் இருந்து விடுவித்துப் பிறர் நலம் பேணுவதில் தான் சிறந்தனர் என்பதை உணர்த்துகின்றது. மக்கள் அனைவரும் தன் இனத்தவர் எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டும் என்ற உயரிய சான்றாண்மைப் பண்பை பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

ஒற்றுமை உணர்வு:
பாணர்களும் பாடினிகளும் தமிழ்ப் புலவர்களையும் அரசர்களையும் மக்களையும் நாட்டையும் வேறுபாடு இன்றி பாடியதால் தமிழகம் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்கினர். பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலை ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகிய அவர் தம் அன்பையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகின்றன.

நன்மை செய்தல்:
தமிழ்ச் சான்றோர்களின் இன்றியமையாப் பண்பு, நன்மையை நன்மைக்காக செய்வதுதான் பிறர் போற்றுவார்கள் என்றோ, வேறு நலன்களைப் பெறலாம் என்றோ தமிழர் நன்மைகளைச் செய்யவில்லை என்பதற்குக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான “ஆய்” சான்றாவான்.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவினை வணிகன் ஆய்அலன்”, என்று புறநானூறு பாராட்டுகிறது.

பிறர்க்காக நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே எடுத்துக்காட்டுகிறது.

முடிவுரை:
இவ்வாறு நம் இலக்கியங்கள் நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க முனைந்ததையும் உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக அடிகள் தம் கட்டுரை வாயிலாக நிறுவுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) வள்ளுவர்
இ) கணியன் பூங்குன்றனார்
ஈ) ஔவையார்
Answer:
இ) கணியன் பூங்குன்றனார்

Question 2.
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
அ) ஹாக்கின்ஸ்
ஆ) ரஷல்லி
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) தெறென்ஸ்
விடை:
ஈ) தெறென்ஸ்

Question 3.
புலவர் தெறென்ஸ் எம்மொழிப் புலவர்?
அ) ஆங்கிலம்
ஆ) பிரெஞ்சு
இ) இலத்தீன்
ஈ) அரபு
Answer:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 4.
முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
அ) ஹாக்கின்ஸ்
ஆ) கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஷெல்லி
Answer:
ஆ) கோர்டன் ஆல்போர்ட்

Question 5.
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
அ) எல்லை
ஆ) வாழ்க்கை
இ) நட்பு
ஈ) குறிக்கோள்
Answer:
ஈ) குறிக்கோள்

Question 6.
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என்று கூறிய புலவர் யார்?
அ) கூடலூர் கிழார்
ஆ) ஆலந்தூர் கிழார்
இ) ஆலந்தூர் மோகனரங்கன்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஆலந்தூர் கிழார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 7.
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை யார்?
அ) ஆல்பர்ட் சுவைட்சர்
ஆ)கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஹாக்கின்ஸ்
Answer:
அ) ஆல்பர்ட் சுவைட்சர்

Question 8.
கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Question 9.
“Sapens” என்பதன் பொருள் யாது?
அ) அறிவற்றவன்
ஆ) புத்தியில்லாதவன்
இ) முட்டாள்
ஈ) அறிவுடையோன்
Answer:
ஈ) அறிவுடையோன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 10.
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
அ) தென்றல்
ஆ) குயில்
இ) தமிழ்ப்பண்பாடு
ஈ) தமிழ்க்கலச்சாரம்
Answer:
இ) தமிழ்ப்பண்பாடு

Question 11.
உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
அ) அமுதன் அடிகள்
ஆ) குன்றக்குடிகள் அடிகள்
இ) தனிநாயக அடிகள்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
தனிநாயக அடிகள்

Question 12.
‘விரிவாகும் ஆளுமை’ – என்னும் உரைநடைப் பகுதி தனிநாயகம் அடிகளால் எங்கு நிகழ்த்தப்பட்ட உரை?
அ) யாழ் பல்கலைக்கழகம்
ஆ) சிக்காகோ
இ) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஈ) தில்லி பல்கலைக்கழகம்
Answer:
அ) யாழ் பல்கலைக்கழகம் (இலங்கை)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 13.
மார்க்ஸ் அரேலியஸ் என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்
Answer:
ஆ) பேரரசர்

Question 14.
செனக்கா என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்
Answer:
அ) தத்துவஞானி

Question 15.
நாம், நம்மவர் என்ற செருக்கோடு எழுதுபவர்கள் ……………….
அ) உரோமர்
ஆ) தமிழர்
இ) கிரேக்கர்
ஈ) இந்தியர்
Answer:
அ) உரோமர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 16.
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ……………….
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) பழமொழி நானூறு
ஈ) புறநானூறு
Answer:
ஆ) திருக்குறள்

குறுவினா

Question 1.
பண்டைக்கால தரும சாத்திர நூல்கள் பிறரைக் கவனத்தில் கொள்ளாமைக்கான காரணம் யாது?
Answer:
விந்திய மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பே கருமபூமி, வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும் என்னும் கருத்தால் பண்டைக்கால தருமசாத்திர நூல்கள் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
ஸ்டாயிக் விதிகளின் நம்பிக்கை யாது?
Answer:

  • மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
  • பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 3.
பிறர் நலக்கொள்கையைப் பரப்புவதற்குக் காரணமாயிருந்தவர்கள் யாவர்?
Answer:

  • தமிழ்நாட்டுப் பாணர்
  • புலவர்

Question 4.
புலவர்கள் நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும் உவமையாகக் கூறும் இடங்கள் யாவை?
Answer:
குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும் உவமையாகப் புலவர்கள் கூறுகிறார்கள்,

Question 5.
திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:

  • பிறர்பால் அன்புடைமை எனும் கருத்து மற்றும்
  • இல்லற வாழ்க்கையின் நோக்கம் ஈகை, விருந்தோம்பல் போன்ற பண்புகளில் ஆளுமையை வளர்த்தல் ஆகும்.

Question 6.
செனக்கா என்னும் தத்துவ ஞானியின் கருத்தினை எடுத்தியம்புக.
Answer:

  • எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு
  • நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்று கருதுவதே செனக்கா என்னும் தத்துவ ஞானியின் கருத்தாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 7.
தான் உலகிற்கு உரியவன் என்பதை மார்க்ஸ் அரேலியஸ் எங்ஙனம் கூறுகிறார்?
Answer:

  •  நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்.
  • நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்.
  • நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று மார்க்ஸ் அரேலியஸ் கூறியுள்ளார்.

Question 8.
குறிக்கோளை அடைவதற்கு திருவள்ளுவர் கூறும் இரண்டு அறிவுரைகளை எழுதுக.
Answer:

  • உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798).
  • உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் (596).

சிறுவினா

Question 1.
சீன நாட்டின் தத்துவ ஞானிகளைக் குறிப்பிடு.
Asnwer:

  • சீனநாட்டில் கி.மு. 604ம் ஆண்டில் பிறந்த லாவோட்சும்
  • கி.மு. 551-479 காலத்தில் வாழ்ந்த கன்பூசியசும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
முதிர்ந்த ஆளுமைக்குரிய மூன்று இலக்கணங்கள் யாவை?
Answer:

  • தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
  • பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் ஆளுமையில் விரிவு பெற்றிருக்க வேண்டும்.
  • தன் வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.

Question 3.
திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் கூறுவது யாது?
Answer:
“உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலே காண்பது அரிது” என்று கூறுகிறார்.

Question 4.
‘பண்புடைமைக்குப் பரிப்பொருமாள் கூறும் இலக்கணம் யாது?
Answer:
பண்புடைமையாவது: யாவர் மாட்டும் அவரோடு, அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும், பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்களை உடைமையே பண்புடைமை ஆகும் என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 5.
திருக்குறளுக்கும், ஸ்டாயிக்வாதிகளுக்கும் உள்ள பொதுவான தன்மை யாது?
Answer:
மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு, உயிர்கள் அனைத்தையும், மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று, கருதும் பண்பு திருக்குறளுக்கும், ஸ்டாயிக்வாதிகளுக்கும் உள்ள பொதுவான தன்மையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Students can Download 8th Tamil Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
இடம் : குறிஞ்சி புதர்
கதாபாத்திரங்கள் : வெட்டுக்கிளி, சருகுமான்
(குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அங்கு வந்த கூரன் என்ற சருகுமானிடம் வெட்டுக்கிளி பேசியது…)

காட்சி – 1
வெட்டுக்கிளி :
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”

சருகுமான் :
காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டேன்.
(சிறுத்தை துரத்திக் கொண்டு வருவதால் கூரன் மரக்கிளைக்கு அடியில் ஒளிந்து கொண்டு வெட்டுக்கிளியை எச்சரித்தது.)

சருகுமான் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.

காட்சி – 2
(பித்தக்கண்ணு சத்தமில்லாமல் மரக்கிளைக்கு அருகில் வந்து சேர்ந்தது.)

பித்தக்கண்ணு : கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(வெட்டுக்கிளி பதில் கூறவில்லை . ஆனால் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. பித்தக்கண்ணு வெட்டுக்கிளியின் செய்கையால் கூரன் ஒளிந்திருந்த மரத்தடிப் பக்கம் சென்று மோப்பமிட்டது. மோப்பம் பிடித்தபடி சுற்றி வந்தது. அதற்குக் கூரனின் உடல்வாடை தெரியவில்லை . முதல் நாள் இரவு அந்த மரத்தடியில் தங்கியிருந்த புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. எனவே அது அந்த இடத்தைவிட்டு வேறு பக்கம் சென்றது. கூரன் : (தன்னைக் காட்டிக் கொடுக்க எண்ணிய வெட்டுக்கிளியை மிரட்ட வேண்டும் என்று எண்ணியபடி வெளியே வந்தது.)

கூரன் :
முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான். இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

(சொல்லிக் கொண்டே கூரன் தன் கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. குறிஞ்சிப்புதர் ஆடியதில் வெட்டுக்கிளி கீழே விழப்போனது. கூரன் காட்டுக்குள் ஓடியது. அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது.)

மதிப்பீடு

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது முன்னோர்களின் வாழ்வை வருங்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு சொல்லிய கதைகளுள் ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறிஞ்சிப்புதர் :
நடுக்காட்டில் ஓடும் ஓடையையுடைய பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் அந்த மரத்தை மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டு விலங்குகள் நீர் அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்ததும் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும் (கூரனும்) :
குறிஞ்சிப் புதரில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். கூரன் என்ற சருகுமான் சிறிய பிராணி, கூச்சப்படும் விலங்கு. அதனால் வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன் குறிஞ்சிப் புதர் அருகே இளைப்பாற வந்தது.

கூடி ஒளிந்த கூரன் :
கூரனைப் பார்த்த வெட்டுக்கிளி, “இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாய் ஓடுகிறாய்?” என்று கேட்டது. கூரன், “காட்டின் அந்தக்கோடியில் இருந்தேன். உன்னிடம் பேச நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்துகிறது” என்று கூறிவிட்டு அம்மரத்தடியில் ஒளிந்து கொண்டது. வெட்டுக்கிளியிடம் நீ “பித்தக்கண்ணுவிடம் நான் இங்கு இருப்பதைச் சொல்லிவிடாதே. என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்…” என்றது. பித்தக்கண்ணு என்பது பெரிய, மஞ்சள் நிற கண்களை உடைய சிறுத்தையாகும்.

வெட்டுக்கிளியின் செயல் :
பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்ப்பது வெட்டுக்கிளிக்கு இதுதான் முதல்முறை. உற்சாக மிகுதியால் பதில் சொல்ல எண்ணிய பொழுது கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தால் வாயை மூடிக் கொண்டது. ஆனால் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

பித்தக்கண்ணுவின் ஏமாற்றம் :
வெட்டுக்கிளியின் ஆட்டத்திற்கான பொருளை உணர்ந்த பித்தக்கண்ணு, கூரன் , பதுங்கிக் கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல்நாள் இரவுதான் அந்த மரத்தடியில் புனுகுப் பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம் மிகவும் நாறும். அதனால் கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணுவின் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. பித்தக்கண்ணு சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

கூரனின் மிரட்டல் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்த வெட்டுக்கிளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணியது. “முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்” என்று வெட்டுக்கிளியைக் கூரன் மிரட்டிக் கொண்டே தனது கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. தன் கோபப் பார்வையை வீசிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

முடிவுரை :
அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தத் திசையை நோக்கியும் குதிப்பதில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Students can Download 8th Tamil Chapter 2.3 நீல ம் பொது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 1.
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் :
(i) நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
(ii) காடுகள், மலைகள் அழிக்கப்படக்கூடாது.
(iii) வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல்.
(iv) உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளதால் அவை அனைத்தையும் பாதுகாத்தல்.
(v) நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூரெடுத்து வைத்து மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்தல். அதன் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்தல்.
(vi) நம் தேவைக்கு மரங்களை வெட்டினாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்.
(vii) நதிப்படுகைகளில் மரங்களை நடுதல்.
(viii) இயற்கை முறை வேளாண்மையை மேற்கொள்ளுதல்.

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது 2
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது 3

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ………………….. மதிக்கின்ற னர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
Answer:
அ) தாயாக

Question 2.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
Answer:
இ) இனிமை + ஓசை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பால் ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
Answer:
ஆ) பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக

1. வேடிக்கை – விபத்து நேரிட்டால் வேடிக்கை பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.

2. உடன்பிறந்தார் – உற்றார், உறவினர், உடன்பிறந்தார், நண்பர் என அனைவருடனும் பாகுபாடின்றி அன்புடன் பழக வேண்டும்.

குறுவினா

Question 1.
விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
Answer:
விலைகொடுத்து வாங்க இயலாதவை : காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. எனவே இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாது.

Question 2.
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
Answer:
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Answer:
(i) எருமைகள் கொல்லப்படுவது,
(ii) எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல்,
(iii) தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருதல் ஆகியனவற்றைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
Answer:
(i) “ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.

(ii) இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள்.
(iii) இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்.

(iv) இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.

(v) இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்” இவ்வாறு சியாட்டல் கூறுகிறார்.

Question 2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
Answer:
சியாட்டல் கூறும் ஒரே குடும்பம் :
(i) “இந்தப் பூமி எமது மக்களுக்குத் தாயாகும். அதனால் இப்பூமியை எமது மக்கள் எப்பொழுது மறப்பதேயில்லை.

(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியது.

(iii) இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

(iv) மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்” என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

Question 1.
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
தாய்மொழி, தாய்நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கும். அதன்படி செவ்விந்தியர்கள் தாய்மண் மீது வைத்துள்ள பற்றினைப் பற்றிய சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவரான சியாட்டல் கூறுவதைப் பார்ப்போம்.

ஒரே குடும்பம் :
காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் அனைவருக்கும் பொதுவானவை. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு ஊசியிலையும் அனைத்துக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பும் பூச்சி வகைகளும் இவர்களுக்குப் புனிதமானவை. இந்தப் பூமி. எமது மக்களுக்குத் தாயாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள், மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலைமுகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

நீர்நிலைகள் :
“ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்.”

தாய் தந்தை :
இந்தப் பூமியை விலை கொடுத்து வாங்குபவர்கள் அயலவர்கள். இப்பூமி அவர்களின் உடன்பிறந்தார் அன்று. பகைவரே. இதனை வாங்குபவர்கள் வாங்கிய பின் இந்நிலத்தைவிட்டுச் சென்றுவிடுவார்கள். மண்ணை மறந்துவிடுவார்கள். இப்பூமியைப் பாலைவனமாக்கிவிடுவார்கள். ஆனால் செவ்விந்தியர்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுவார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

சிந்தனை வினா

Question 1.
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நான் கருதுவன :
(i) நிலங்களை மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைய மரங்களை வளர்த்தல்.

(ii) ஏரி, குளம், போன்ற நீராதாரங்களைத் தூர்வாரச் செய்து மழைக் காலங்களில் நீரைச் சேமித்தல் மற்றும் அதிகளவில் அணைகளைக் கட்டுதல்.

(iii) ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்த் தொட்டித் திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றச் செய்வேன்.

(iv) நம் நாட்டின் மண்வளத்திற்கேற்ற புதிய வேளாண்மையைப் பரிந்துரை செய்தல். இயற்கை வேளாண் திட்டத்தை கட்டாயப்படுத்துதல்.

(v) நெகிழியைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல்.

(vi) வீட்டு விலங்குகள், வனவிலங்குகள் அழியாமல் பாதுகாத்தல்.

(vii) செல்பேசி கோபுரங்கள் இல்லாமல் செல்பேசியை இயங்கச் செய்தல்.

(viii) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அமெக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ………………………. பழங்குடியினர்.
2. பூஜேசவுண்ட்/சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ……………………
3. சியாட்டல் ……………………….. காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
4. சியாட்டல் அமெரிக்கக் ……………………… கடிதம் எழுதினார்.
5. விலை கொடுத்து வாங்க முடியாதவை என சியாட்டல் கூறியவை ……………………….
6. சுகுவாமிஷ் பழங்குடியினர் ………………… தாயாகவும் …………………… தந்தையாகவும் கருதக் கூடியவர்கள்.
Answer:
1. சுகுவாமிஷ்
2. சியாட்டல்
3. இயற்கை வளங்கள்
4. குடியரசுத் தலைவருக்குக்
5. காற்றின் தூய்மை, நீரின் உயர்வு
6. பூமியைத், வானத்தைத்

குறுவினாக்கள் :

Question 1.
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு எவையெல்லாம் புனிதமானவை?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு பூமியின் ஒவ்வொரு துகளும் புனிதமானது. கூடவே, மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை.

Question 2.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் சகோதர சகோதரிகள் என்று கருதுகினற்னர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர், அவர்களுடைய பூமியில் உள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் தமது சகோதரிகள் என்றும் மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் தமது சகோதரர்கள் என்றும் கருதுகின்றனர்.

Question 3.
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியையும் வானத்தையும் எவ்வாறு கருதுகின்றனர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுகின்றனர்.

Question 4.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் விரும்புவார்கள்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள் என்று சியாட்டல் கூறுகிறார்.

Question 5.
சியாட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவது, எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது, தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவது ஆகியவற்றைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சியாட்டல் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 6.
சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வைத்த வேண்டுகோள் யாது?
Answer:
“நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல நிலத்தை நேசியுங்கள்” என்று சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Question 7.
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியவையாக சியாட்டல் கூறியது யாது?
Answer:
“எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.”

சிறுவினாக்கள்:

Question 1.
அமெரிக்கர்கள், பழங்குடியினரின் நிலத்தை எவ்வாறு மாற்றி விடுவார்கள் என்று சியாட்டல் கூறுகின்றார்?
Answer:
சியாட்டல் கூறுவன :
“இப்பூமியானது உங்களின் உடன்பிறந்தார் அன்று; பகைவரே. இதனை வென்று கையகப்படுத்தியபின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுங்கள். நீங்கள் உங்கள் தந்தையர்களின் இடுகாடுகளைக்கூட மறந்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவீர்கள். பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையுங்கூட நீங்கள் மறந்துவிடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும் உங்களுக்கு ஆடுகள் அல்லது மணிகள் விற்பது போன்றவை. உங்களுடைய கோரப் பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.”

Question 2.
அமெரிக்க நகரங்களின் காட்சிகளெல்லாம் செவ்விந்தியர்களின் கண்களை எவ்வாறு உறுத்துகின்றன?
Answer:
அந்நகரங்களில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை . அவர்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை.

மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன. மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்க இயலாது.

Question 3.
காற்றின் இன்றியமையாமை குறித்து சியாட்டல் கூறுவன யாவை? (அல்லது) காற்றைப் பற்றி செவ்விந்தியர்களின் கருத்து யாது?
Answer:
காற்று மிகவும் மதித்துப் போற்றக்கூடியது. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் காற்று இன்றியமையாத ஒன்றாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 4.
‘நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்று’ – விளக்குக.
Answer:
நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகும். நாம் படுத்துறங்கும் இடத்தை நாமே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நாம் தூக்கியெறிந்த குப்பைகளுக்குள்ளேயே நாம் மூச்சுமுட்டி இறக்க நேரிடும். எனவே நிலத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Students can Download 8th Tamil Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 1.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
சூறாவளி :
சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும்.

சுனாமி :
கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும். இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர்.

பூகம்பம் : –
இதனைப் பூமி அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று கூறுவர். நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

Question 2.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 2

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் கரு ………… தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்

Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ………………..யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை

Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
ஈ) விழுந்தது + ஆங்கே

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்த + இறந்த
Answer:
ஈ) செத்த + இறந்த

Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

Question 2.
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு : தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

சிறுவினா

Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள்:
(i) வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

(ii) அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

(iii) தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

சிந்தனை வினா

Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

புயல், மழை :
ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்; மரங்களின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை அடைப்பில்லாமல் சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் எப்போதும் மூடிய நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

சாலையில் மின்கம்பிகள் விழுந்திருந்தால் அவற்றைத் தொடக்கூடாது. மின்சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது மின்சார வாரியமே புயல், மழை என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். புயலின்போது வெளியில் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாகனங்களில் செல்லலாம்.

வெள்ளப் பெருக்கென்றால் வேடிக்கை பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். இடி மின்னலின்போது மரத்தின்கீழ் நிற்கக் கூடாது. செல்பேசி, வீட்டுச்சாவி, தீப்பெட்டி மெழுகுவர்த்தி, தண்ணீர்ப் புட்டிகள் முதலிய அவசியமான பொருள்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது அவசியம். அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.

நிலநடுக்கம் :
நிலநடுக்கத்தின் போது அடுக்ககங்களில் இருப்பவர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் நிற்கலாம். மரங்கள், மின்கம்பங்கள் இல்லாத இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். பாலங்களைக் கடக்கக்கூடாது.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. முகில் – மேகம்
2. வின்னம் – சேதம்
3. கெடிகலங்கி – மிக வருந்தி
4. வாகு – சரியாக
5. சம்பிரமுடன் – முறையாக
6. காலன் – எமன்
7. சேகரம் – கூட்டம்
8. மெத்த – மிகவும்
9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று.

நிரப்புக :

1. இயற்கை மிகவும் ……………………
2. தமிழ்நாடு அடிக்கடி ………………. தாக்கப்படும் பகுதியாகும்.
3. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் …………………….. என்று அழைக்கப்பட்டன.
4. பஞ்சக்கும்மிகள் என்னும் நூல் …………………….. என்பவரால் தொகுக்கப்பட்டது.
5. காத்து நொண்டிச்சிந்து’ இயற்றியவர் ……………………
Answer:
1. அழகானது, அமைதியானது
2. புயலால்
3. பஞ்சக்கும்மிகள்
4. புலவர் செ. இராசு
5. வெங்கம்பூர் சாமிநாதன்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

நூல் வெளி
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 1
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் கூகூ’ என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!

 

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.8

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.8 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.8

Question 1.
Write the following decimals in words
(i) 0.5 = ________
Answer:
Zero point five

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

(ii) 0.8 = ________
Answer:
Zero point eight

(iii) 3.5 = ________
Answer:
Three point five

(iv) 6.9 = ________
Answer:
Six point five

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

Question 2.
Express the following fractions as decimals.
(i) \(\frac{4}{10}\)
Answer:
\(\frac{4}{10}\) = 0.4

(ii) \(\frac{12}{10}\)
Answer:
\(\frac{12}{10}\) = 1.2

(iii) \(\frac{23}{10}\)
Answer:
\(\frac{23}{10}\) = 2.3

(iv) \(\frac{146}{10}\)
Answer:
\(\frac{146}{10}\) = 14.6

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

Question 3.
Express the following decimals as fractions.
(i) 38.9
Answer:
38.9 = \(\frac{389}{10}\)

(ii) 9.8
Answer:
9.8 = \(\frac{98}{10}\)

(iii) 10.4
Answer:
10.4 = \(\frac{104}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

(iv) 0.8
Answer:
0.8 = \(\frac{8}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.6

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.6 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.6

Question 1.
Subtract the following.
(i) \(\frac{4}{7}\) – \(\frac{1}{7}\)
Answer:
\(\frac{4}{7}-\frac{1}{7}=\frac{4-1}{7}=\frac{3}{7}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

(ii) \(\frac{4}{8}\) – \(\frac{3}{8}\)
Answer:
\(\frac{4}{8}-\frac{3}{8}=\frac{4-3}{8}=\frac{1}{8}\)

(iii) \(\frac{5}{9}\) – \(\frac{1}{9}\)
Answer:
\(\frac{5}{9}-\frac{1}{9}=\frac{5-1}{9}=\frac{4}{9}\)

(iv) \(\frac{7}{11}\) – \(\frac{3}{11}\)
Answer:
\(\frac{7}{11}-\frac{3}{11}=\frac{7-3}{11}=\frac{4}{11}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

(v) \(\frac{7}{13}\) – \(\frac{4}{13}\)
Answer:
\(\frac{7}{13}-\frac{4}{13}=\frac{7-4}{13}=\frac{3}{13}\)

(vi) \(\frac{5}{10}\) – \(\frac{3}{10}\)
Answer:
\(\frac{5}{10}-\frac{3}{10}=\frac{5-3}{10}=\frac{2}{10}\)

(vii) \(\frac{7}{12}\) – \(\frac{2}{12}\)
Answer:
\(\frac{7}{12}-\frac{2}{12}=\frac{7-2}{12}=\frac{5}{12}\)

(viii) \(\frac{8}{15}\) – \(\frac{2}{15}\)
Answer:
\(\frac{8}{15}-\frac{2}{15}=\frac{8-2}{15}=\frac{6}{15}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

Question 2.
\(\frac{5}{10}\) of a wall is to be painted. Ramu painted \(\frac{2}{10}\) of it.
How much more is to be painted?
Answer:
To be painted = \(\frac{5}{10}\)
Ramu painted = \(\frac{2}{10}\)
Difference = \(\frac{5}{10}-\frac{2}{10}=\frac{5-2}{10}=\frac{3}{10}\)