Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.1

A. Write down the names of shape in the following pictures.

(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 1
Answer:
Circle, square, rectangle, triangle

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 2
Answer:
Square, circle, triangle, rectangle

B.
(i) Write the number of squares and triangles in the given picture.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 3
Square _______
Triangle _______
Answer:
Square     5    
Triangle    12    

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

(ii) Write the number of rectangles and triangles in the given picture
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 4
Rectangle _______
Triangle ______
Answer:
Rectangle    3    
Triangle    1   

(iii) Identify the cut shapes and write the names in the boxes given below.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 8

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Students can Download 8th Tamil Chapter 3.5 எச்சம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.5 எச்சம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 1.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வந்த மாணவன்.
வந்த மாடு.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா .

Question 2.
‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………… எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
Answer:
ஆ) எச்சம்

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Answer:
ஈ) பார்த்த

Question 3.
குறிப்பு வினையெச்சம் ……………….. வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Answer:
அ) காலத்தை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

பொருத்துக

1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
Answer:
1. நடந்து – வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய – குறிப்புப்

பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய , பிடித்து, அழைத்த, பார்த்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 4

சிறுவினா

Question 1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
(ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.

Question 2.
அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) அழகிய மரம் – பெயரெச்சம்.
(ii) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.
(iii) இத்தொடரில் ‘அழகிய’ என்ற மரம் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சமாயிற்று.

Question 3.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் வினைமுற்றுச் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள் : வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.

(i) தெரிநிலை வினையெச்சம் :
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

(ii) குறிப்பு வினையெச்சம் :
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்!

மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.

எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.

மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.

நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.

நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.

உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.

தண்ணீ ரும் மருந்தே. ‘நீரின்றியமையாது உலகு’ என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.

வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலை வெப்புநோய் முதலானவை அணுகாமல் காப்பாற்றும். கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?

‘பசித்துப் புசி’ என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.

சொல்லக்கேட்டு எழுதுக

நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

பொருத்துக:

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ‘ – தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

Question 1.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer:
காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.

Question 2.
வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer:
வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.

Question 3.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer:
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.

Question 4.
உடலும் உயிரும் போல
Answer:
கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 5.
கிணற்றுத் தவளை போல
Answer:
கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :
நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.

மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.

சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

உணவும் மருந்தும் :
உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.

மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவனே!
என்கிறார்.

முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 2
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 3
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
2. எச்சம் ……………… வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
1. எச்சம்
2. இரண்டு
3. பெயரெச்சம்
4. மூன்று
5. தெரிநிலை
6. இரண்டு
7. குறிப்புப்
8. வினையெச்சம்
9. தெரிநிலை
10. குறிப்பு வினையெச்சம்

விடையளி :

Question 1.
எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.

Question 2.
பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer:
பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

Question 3.
தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதிய கடிதம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) சிறிய கடிதம்.

Question 5.
வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) படித்து முடித்தான்.

Question 6.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.

Question 7.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Students can Download 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.1 சிற்றகல் ஒளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

கற்பவை கற்றபின்

Question 1.
எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
Answer:
பேரறிஞர் அண்ணா வாழ்வில் நிகழ்ந்ததைக் கூறுதல்.

அண்ணாவாகிய நான்,

என்னைப் பொறுத்தவரை, சிந்திப்பதும், படிப்பதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, நான் ஆங்கில கட்டுரை ஒன்று எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த என் பேராசிரியர், ‘பொருட் செறிவுடனும், நயமுடனும் இருக்கிறது. இதை எங்கிருந்து எடுத்தாய்’ என்றார்.

‘நான் இங்கிருந்து எடுத்தேன்’ என்று என் நெஞ்சைத் தொட்டுக் காட்டினேன். பேராசிரியர் வியப்புடனும், மகிழ்வுடனும் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பெரியாருடன் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் செல்வோம். வடநாட்டுப் பயணங்களில் பெரியாரின் தமிழ்ப்பேச்சை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

என் அழகான ஆங்கிலத்தால் கவரப்பட்ட மக்கள் அனைவரும் என்னையே பேசும்படி வற்புறுத்துவர். ஆனால் நான் நயமாக அவ்வலியுறுத்தலை மறுத்துவிடுவேன்.

எவ்வளவுதான் புலமை திறமை இருந்தாலும், ஒருவருடைய பேச்சை மொழிபெயர்க்க வந்ததை விட்டு தனியுரை நிகழ்த்த முற்படுவது, கண்ணியமற்ற செயல் அல்லவா! அதனை நான் செய்யலாமா? கண்ணியம் தவறக் கூடாதன்றோ

Question 2.
நீங்கள் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதைகள் பற்றி வகுப்பறையில் உரை நிகழ்த்துக.
Answer:
மாணவர்களே! சமீபத்தில் நான் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதை ‘சிவகாமியின் சபதம்’ ஆகும். இது ஒரு வரலாற்றுப் புதினம். இதனை எழுதியவர் அமரர் கல்கி ஆவார்.

12 வருடங்களாக வாரந்தோறும் ‘கல்கி’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பின்பே நூல் வடிவம் பெற்றது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட புதினம் ஆகும். முதலாம் நரசிம்ம பல்லவன் இப்புதினத்தில் முக்கிய இடம் பெறுகிறார். பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.

வாதாபியின் மீது பல்லவர் போர் தொடுத்தது, காஞ்சியின் போர்ச் சூழல், சாளுக்கிய நாட்டின் வரலாறு ஆகியவை சுவைபட எடுத்தியம்பப்பட்டுள்ளது. சமணர்களால் காஞ்சியால் ஏற்பட்ட மதமாற்றம் குறித்தும் கூறுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

பேரழகியான சிவகாமியையும், அவள் தந்தை ஆயனாரும் மதம் கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட செய்தியும் நயம்பட நவிலப்பட்டுள்ளது. மூலிகை ஓவியங்கள், அஜந்தா குகைகளில் உள்ள வண்ண ஓவியங்கள் குறித்தும் இப்புதினத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு ‘தன் காதலர் நரசிம்மவர்மர் பல்லவர் வாதாபி நகரை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை, அந்நகரை விட்டு, வெளியேறுவதில்லை என்ற சூளுரைப் பகுதியையும் கல்கி நம் கண்முன் விரித்துக் காட்டுகிறார்.

மேலும் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், கடல்புறா என பல வரலாற்றுக் கதைகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வண்ணமாக மட்டுமின்றி, நற்றமிழை நாம் அறியும் வகையிலும் உள்ளது. மாணவர்களே நேரம் கிடைக்கும் போது, நூலகம் செல்லுங்கள். கற்று இன்புறுங்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ……………..
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
Asnwer:
அ) திருப்பதியும் திருத்தணியும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
  • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
Answer:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறுவினா

Question 1.
‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடுவினா

Question 1.
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
Answer:

‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’

அறிமுகவுரை:

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

மாணவப்பருவமும் நாட்டுபற்றும்:

  • ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது’ என்றார் நேரு. எனவே கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்டு விழாக்களைக்கொண்டாடும்போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்படவேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியிலும், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் நாளை நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே.
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

நிறைவுரை:

  • நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்கள் செய்வோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Answer:
ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.
சிவஞானி என்ற பெயரே……………..
என நிலைத்தது.
அ) சிவஞானம்
ஆ) சிவப்பிரகாசம்
இ) ஞானப்பிரகாசம்
ஈ) பிரகாசம்
Answer:
அ) சிவஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Answer:
இ) சரபையர்

Question 4.
காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1919
Answer:
ஆ) 1906

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 5.
ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ……………..
அ) கல்வி, கேள்வி
ஆ) கல்வி, ஓவியம்
இ) கலை, பண்பாடு
ஈ) கலை, மேடைப்பேச்சு
Answer:
இ) கலை, பண்பாடு

Question 6.
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Answer:
இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Answer:
அ) 1955 அக்டோபர் 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 8.
ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..
அ) இலண்ட ன்
ஆ) டெல்அவிவ்
இ) வியன்னா
ஈ) சிட்னி
Answer:
இ) வியன்னா

Question 9.
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Answer:
அ) எனது போராட்டம்

Question 10.
ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..
அ) சொல்லின் செல்வர்
ஆ) நாவலர்
இ) சிலம்புச் செல்வர்
ஈ) சிலம்பு அறிஞர்
Answer:
இ) சிலம்புச் செல்வர்

Question 11.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Answer:
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Answer:
ஆ) 1966

Question 13.
மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..
அ) கன்னியாகுமரி
ஆ) தூத்துக்குடி
இ) நெல்லை
ஈ) நாகர்கோவில்
Answer:
ஈ) நாகர்கோவில்

Question 14.
ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..
அ) 1906-1955
ஆ) 1906-1995
இ) 1906 -1966
ஈ) 1906-1998
Answer:
ஆ) 1906-1995

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 15.
ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..
அ) திருத்தணி, தியாகராயநகர்
ஆ) திருத்தணி, திருநெல்வேலி
இ) திருத்தணி, கன்னியாகுமரி
ஈ) திருத்தணி, திருப்பதி
Answer:
அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
அ) 1906
ஆ) 1908
இ) 1947
ஈ) 1946
Answer:
அ) 1906

Question 17.
மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
அ) ஆயிரம் விளக்கு

Question 18.
மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
ஆ) சால்வன் குப்பம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 19.
மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..
அ) தாமதமாக வந்தது
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
இ) படிக்காமை
ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை
Answer:
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.
மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – ……………..
அ) ஐந்தாம் வகுப்பு
ஆ) மூன்றாம் வகுப்பு
இ) ஆறாம் வகுப்பு
ஈ) இரண்டாம் வகுப்பு
Answer:
ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.
மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ. நேசமணி
Answer:
அ) அன்னை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 22.
மா.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..
அ) கல்வி
ஆ) கேள்வி
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
Answer:
ஆ) கேள்வி

Question 23.
மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.
வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
இ) மங்கலங்கிழார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 25.
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.
நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.
குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 28.
‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ .சி

Question 29.
சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 30.
மா.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு ……………..
அ) தன்வரலாறு
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) புதினம்
Answer:
அ) தன்வரலாறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 31.
தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 32.
பொருத்துக.
1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) மா.பொ.சிவஞானம்
4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.
பொருத்துக.
1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்
4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 34.
பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

குறுவினா

Question 1.
1906 ஆம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
Answer:

  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
  • காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.

Question 2.
ம.பொ.சிக்கு அவரது அன்னையார் பயிற்றுவித்த பாக்கள் யாவை?
Answer:
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பயிற்றுவித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
விடுதலைப் போரில் ஈடுபட தமிழர்க்கு ம.பொ.சி எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
Answer:

  • 30.09.1932ல் ‘தமிழா துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை மக்களிடையே வழங்கினார்.
  • பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு, ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்தார்.

Question 4.
ம.பொ.சி. சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியக் காரணம் என்ன?
Answer:
சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுச்சொத்து. இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும், தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு உண்டான செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்பட்டதால் மக்களிடையே சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றார்.

Question 5.
ம.பொ.சி வகித்த பதவிகளைக் குறிப்பிடுக.
Answer:

  • 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
  • 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர் – போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
ம.பொ.சி வாழ்நாள் மகிழ்ச்சியாக எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வட எல்லை வேங்கட மலையாகவும், தென் எல்லை குமரிமுனையாகவும் உள்ளது.
  • இதனைப் படித்தபோது ம.பொ.சி மகிழ்ந்து, ‘மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது தவப்பயன். இத்தெய்வீக எல்லையை, தமிழகம் திரும்பப் பெற்றதே தன் வாழ்நாள் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.

Question 7.
விடுதலைப் போரில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களாக மா.பொ.சி. குறிப்பிடுவோர் யாவர்?
Answer:
காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்.

Question 8.
ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் யார்? அவரின் பெற்றோர் யாவர்?
Answer:

  • ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் மா.பொ.சிவஞானம்.
  • அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 9.
மா.பொ.சிக்குச் சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?
Answer:

  • மா.பொ.சிக்குப் பெற்றோர் இட்டபெயர் : ஞானப்பிரகாசம்
  • சரபையர் என்ற முதியவர் ஒருவர் ‘ஞானப்பிரகாசம்’ என்ற இயற்பெயரை மாற்றி சிவஞானி’ என்று அழைத்தார்.
  • சிவஞானி என்ற பெயர் திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

Question 10.
அறிவு விளக்கம் பெற மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி யாது?
Answer:

  • அறிவு விளக்கம் பெறுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி.
  • ஏட்டுக் கல்வி நின்று போனதால் மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.

Question 11.
பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க புனித நாள் எது, ஏன்?
Answer:

  • 1942 ஆகஸ்டு 8.
  • இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம்: மலபார்

Question 13.
கேரளாவிலிருந்து சென்னை மாநிலத்திற்கு இணைந்த பகுதிகள் யாவை?
Answer:
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை.

சிறுவினா

Question 1.
‘சென்னையை மீட்போம்’ – என்று ம.பொ.சி. குறிப்பிடுவது பற்றி எழுதுக.
Answer:

  • ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று சில ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
  • தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் இராஜாஜி முன்வந்தார்.
  • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது.
  • தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கிய தன்விளைவாக 25.08.1953 அன்று சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது என்று சென்னையை மீட்போம்’ என்று சென்னையை மீட்டது குறித்து ம.பொ.சி குறிப்பிடுகிறார்.

Question 2.
மார்ஷல் ஏ. நேசமணி – குறிப்பு வரைக.
Answer:

  • இளம் வயதில் சமூக விடுதலைக்காகப் போராடியவர்.
  • நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
  • குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘மார்ஷல்’ என்று அழைக்கப்பட்டார்.
  • 1956 நவம்பர் 1-இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழக தென் எல்லையாக மாறக் காரணமானவர்.
  •  தமிழக அரசு இவர் நினைவாக நாகர்கோவிலில் சிலையோடு மணி மண்டபமும் அமைத்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
பண்டைய ‘கடல் கடந்த தமிழ் வணிகம்’ குறித்து எழுதுக.
Answer:

  • ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ‘பேபிரஸ்தாளில்’ எழுதப்பட்ட கையெழுத்து சுவடி கண்டு பிடிக்கப்பட்டது.
  • அச்சுவடியில் சேரர் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும், எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • இது கி.பி. 2ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும்.
  • இதிலிருந்து பண்டைத் தமிழர் கடல் கடந்த வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை அறியலாம்.

Question 4.
மா.பொ.சிவஞானம் குறிப்பு வரைக
Answer:
பெயர் : மா.பொ.சிவஞானம் பெற்றோர்
இட்ட பெயர் : ஞானப்பிரகாசம்
பெற்றோர் : பொன்னுச்சாமி – சிவகாமி
பெயர் மாற்றம் : சரபையர் என்ற முதியவர் இவரைச் ‘சிவஞானி’ என்றே அழைத்தார். அதுவே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்றானது.
சிறப்பு : சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறியச் செய்ததால் ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுகின்றார்.
படைப்புகள் : எனது போராட்டம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு முதலியன.
பணி : சிறந்த விடுதலைப்போராட்ட வீரர், 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர்.
விருது – 1966ல் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது
அரசு : தமிழக அரசு திருத்தணி மற்றும் சென்னை தியாகராயநகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 5.
சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறுவது யாது?
Answer:

  • நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணம் உண்டு.
  • திருக்குறளையோ , கம்பராமாயணத்தையோ விரும்பாதவன் அல்லன்.
  • ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டு என்றால் , அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
  • இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.

என்று சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் ‘புத்தகப்பித்தன்’ என்பதை நிறுவுக.
Answer:

  • நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையைப் போக்க பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று, விருப்பமான புத்தகங்களை, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் மா.பொ.சிவஞானம் .
  • உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கி, பல வேளைகளில் பட்டினிகிடந்தார்.
  • குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.
  • இவர் தன்னுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பல்லாயிரக் கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்கிறார்.

இதன் மூலம் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், புத்தகப்பித்தன்’ என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.4 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.4

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.4 Text Book Back Questions and Answers

Question 1.
Find the derivative of the following functions from first principle.
(i) x2
(ii) ex
(iii) log(x + 1)
Solution:
Let f(x) = x2 then f(x + h) = (x + h)2
Now \(\frac{d}{d x}\) f(x)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1
Thus \(\frac{d}{d x}\) (x2) = 2x

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4

(ii) Let f(x) = e-x then f(x + h) = \(e^{-(x+h)}\)
Now \(\frac{d}{d x}\) f(x)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.4

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4

(iii) Let f(x) = log(x + 1)
Then f(x + h) = log(x + h + 1) = log((x + 1) + h)
Now \(\frac{d}{d x}\) f(x)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.4 Q1.6

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.3 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.3

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.3 Text Book Back Questions and Answers

Question 1.
Examine the following functions for continuity at indicated points.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1
Solution:
(a) f(x) = \(\frac{x^{2}-4}{x-2}\), also given that f(2) = 0
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.1
[∵ x = 2 – h, where h → 0, x → 2]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.3
∴ The given function is not continuous at x = 2.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3

(b) Given that f(x) = \(\frac{x^{2}-9}{x-3}\) and f(3) = 6
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.4
[∵ x = 3 – h, where h → 0, x → 3]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.6
[∵ x = 3 + h, where x → 3, h → 0]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.7
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.8
= 0 + 6
= 6
Also given that f(3) = 6
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q1.9
∴ The given function f(x) is continuous at x = 3.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3

Question 2.
Show that f(x) = |x| is continuous at x = 0.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q2
[∵ x = 0 – h]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q2.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q2.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q2.3
[∵ |x| = x if x > 0]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.3 Q2.4
∴ f(x) is continuous at x = 0.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.2 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.2

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.2 Text Book Back Questions and Answers

Question 1.
Evaluate the following:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q11
Solution:
(i) \(\lim _{x \rightarrow 2} \frac{x^{3}+2}{x+1}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1

(ii) \(\lim _{x \rightarrow \infty} \frac{2 x+5}{x^{2}+3 x+9}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.1
[Takeout x from numerator and take x2 from the denominator]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.2

(iii) \(\lim _{x \rightarrow \infty} \frac{\Sigma n}{n^{2}}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.3

(iv) \(\lim _{x \rightarrow 0} \frac{\sqrt{1+x}-\sqrt{1-x}}{5 x}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.4

(v) \(\lim _{x \rightarrow a} \frac{x^{\frac{5}{8}}-a^{\frac{5}{8}}}{x^{\frac{2}{3}}-a^{\frac{2}{3}}}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.5
[Divide both numerator and denominator by x – a; \(\lim _{x \rightarrow a} \frac{x^{n}-a^{n}}{x-a}=n a^{n}\)]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.6

(vi) \(\lim _{x \rightarrow 0} \frac{\sin ^{2} 3 x}{x^{2}}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q1.7

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2

Question 2.
If \(\lim _{x \rightarrow a} \frac{x^{9}-a^{9}}{x-a}=\lim _{x \rightarrow 3}(x+6)\), find the value of a.
Solution:
\(\lim _{x \rightarrow a} \frac{x^{9}-a^{9}}{x-a}=\lim _{x \rightarrow 3}(x+6)\)
9 . a9-1 = 3 + 6
9 . a8 = 9
a8 = 1
Taking squareroot on bothsides, we get
\(\left(a^{8}\right)^{\frac{1}{2}}\) = ±1
a4 = ±1
But a4 = -1 is imposssible.
∴ a4 = 1
Again taking squareroot, we get
\(\left(a^{4}\right)^{\frac{1}{2}}\) = ±1
a2 = ±1
a2 = -1 is imposssible
∴ a2 = 1
Again taking positive squareroot, a = ±1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2

Question 3.
If \(\lim _{x \rightarrow 2} \frac{x^{n}-2^{n}}{x-2}=448\), then find the least positive integer n.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q3.1

Question 4.
If f(x) = \(\frac{x^{7}-128}{x^{5}-32}\), then find \(\lim _{x \rightarrow 2} f(x)\)
Solution:
\(\lim _{x \rightarrow 2} f(x)\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q4

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2

Question 5.
Let f(x) = \(\frac{a x+b}{x+1}\), if \(\lim _{x \rightarrow 0} f(x)=2\) and \(\lim _{x \rightarrow \infty} f(x)=1\), then show that f(-2) = 0
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.2 Q5.1
Hence Proved.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Students can Download 8th Tamil Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Question 1.
மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.
Answer:
மனித உடல் இருபுறமும் சமமாக உள்ளது. அதாவது இடது, வலது பாகங்கள் கண்ணாடி பிரதிபலிப்பாக உள்ளன. நமக்கு காதுகள், கண்கள், மூக்கு துவாரங்கள், புஜங்கள், கால்கள், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் என அனைத்தும் இரண்டிரண்டு உள்ளன. மூக்கு, வாய், தாடை, மார்புக்கூடு, முதுகெலும்பு இவை ஒன்றுதான் உள்ளது. இவை உடம்பின் நடுப்பகுதியில் உள்ளது.

மூளையைப் பொறுத்தமட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்புக் குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “Corpus Callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகளை கொண்டது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும் வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக் கொள்கிறது.

“Corpus Callosum” பகுதியைச் சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்குத் தொடர்பே இருக்காது. ஒரு பாகம் செயல்படுவது மற்றொரு பாகத்துக்குத் தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றது செய்யுமா? அல்லது செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? என்ற வினா எழுப்பப்பட்டது. 1861இல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது.

1950களின் ஆரம்பங்களில் தூக்கம் பற்றி ஆராயப்பட்டது. தூங்கும்போது விழிக்கரு மெதுவாக நகரும். விழித்திருக்கும் போது ஒளி பட்டவுடன் வேகமாக நகரும். இதற்கு “Rem Sleep” எனப் பெயர். தூங்கும் போது இந்த ‘ரெம் ஸ்லீப்’ நேரத்தில்தான் கனவுகள் தோன்றுகின்றன. இந்த நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால் அவர்கள் தாம் கண்ட கனவை நினைப்பர்.

தூக்கம் எதற்கு அவசியம்? ஓய்வுக்கு என அறிவோம். கண்களைத் திறந்து கொண்டு சிறிது நேரம் அமைதியாய்ப் படுத்தாலே போதும். ஆனால் இதைவிட தூங்கி எழுந்தால் தான் அதிக புத்துணர்ச்சி இருக்கும். தூங்கும் போது புரண்டு படுத்தல், நிலை மாறுதல் எனப் பல நடக்கின்றன. சும்மா ஓய்வு எடுப்பது நமக்கு நிம்மதி தராது. தூக்கம் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லாமல் இருப்பதைவிட தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவர் விரைவில் இறந்து விடுவார்.

ஆக ரெம் ஸ்லீப் மிக மிக அவசியம். ஒருவன் அடிக்கடி விழித்தெழுந்தால் அதன் விளைவை மறுநாள் இரவில் அவன் அறிவான். மனித மூளை அதிக சிக்கல்கள் நிறைந்தது. அவன் விழித்திருக்கும் போது அவனது குழப்பங்கள் நினைப்புகள் முதலியவற்றால் மிகவும் களைப்படைந்திருப்பதால் தூக்கம் மிக மிக அவசியம்.

வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போல் மூளையின் குப்பைகளை நீக்கிப் புத்துணர்ச்சி அளிக்க தூக்கம் தேவைப்படுகிறது. ஒருவரும் மூளையைப் பற்றி முழுவதும் அறிந்தவர் இல்லை . ஏனெனில் மிகவும் சிக்கல்கள் நிறைந்தது.

மூளை புத்தகங்கள் எழுதுகிறது, பாட்டு கேட்கிறது. கலைகள் புரிகிறது. இரக்கப்படுகிறது. மகிழ்ச்சியடைகிறது. அன்பு செலுத்துகிறது. அனைத்து விதமான குழப்பங்களுக்கும் தீர்வு சொல்கிறது. இந்த மூளையே சில கெட்ட செயல்களைச் செய்யவும் உதவுகிறது.

பயப்படுகிறது, வெறுக்கிறது, சந்தேகப்படுகிறது, போர் புரிகிறது, மூளை பற்றிய படிப்படியான ஆராய்ச்சி ஆக்க சக்திகளுக்குப் பயன்பட்டு கெட்ட சக்திகளுக்கு உடன்படாமல் இருந்தால் சரிதான். அப்போதுதான் நாம் அழகிய பாதுகாப்பான அமைதியான உலகைக் காணலாம்.

– (நூல் – மனித மூளையின் பாகங்களும் அவைகளின் இயக்கங்களும்)

மதிப்பீடு

Question 1.
மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
உலகத்திலேயே மிக மிக வியப்பானது மனித மூளை. அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை. மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமான மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றி அறிவோம்.

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட – வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவுகூட இடது பகுதியில்தான் நிகழ்கிறது.

இடதுபாதி :
இடதுபாதி அண்ண ன் என்றால் வலது பாதி தம்பி. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான், வலது பாதி 9 சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.

வலது பாதி :
வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கருவிகளைக் கையாளுபவர்கள் இன்ன பிறர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள் போன்றோர். இடதும் வலதும் சரியான அளவில் கலந்து இருப்பவர்களும் உண்டு.

முடிவுரை :
நம் மனதில் தோன்றும் உணர்வுகள், நம்மிடம் உள்ள நினைவாற்றல், நாம் என்கிற தன்னுணர்வு, கற்றல் திறம், செயல்பாடுகள் இவையெல்லாம் மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Students can Download 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.5 அணியிலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 1.
கீழ்காணும் குறட்பாக்களில் அமைந்த அணி வகைகளைக் கண்டறிக.
அ) ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
Answer:
அணி : ஏகதேச உருவக அணி
அணி விளக்கம் : தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

பொருத்தம் : சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும் சான்றாண்மையைத் தாங்கிக் கொண்டு நிற்பவரை கடற்கரையாக்கி உருவகப்படுத்தாமையால் ஏகதேச உருவக அணி ஆயிற்று.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

ஆ) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
Answer:
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி” ஆகும்
பொருத்தம் : நாண்’ என்னும் சொல் வெட்கம் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் சொற்பொருள்பின்வருநிலையணியாயிற்று.

இ) தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
Answer:
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி” ஆகும்.
பொருத்தம் : தீய என்னும் சொல் `தீமை’ என்னும் பொருளில் மீண்டும் மீண்டும்
வந்துள்ளமையால் சொற்பொருள்பின்வருநிலையணியாயிற்று.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 2.
உவமையணி அமைந்த பாடல் அடிகளை எழுதுக.
Answer:
குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

பாடல்:
கன்று குரல் கேட்ட பசு போல மாற்றார்
கதறுவதைக்கேட்டவுடன் அன்பு செய்தால்
வென்று வரும் மனித குலம்

Question 3.
கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக.
விருட்சங்கள்
மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கும்
பச்சைக் குடைகள்
Answer:
மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கும்
பச்சைக் குடைகள்
– முற்றுருவகம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

மொழியை ஆள்வோம்,

மொழி பெயர்க்க.
A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
Answer:
ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன. ஒருநாள் வேடன் வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின. மானை, நீ இறந்ததுபோல் அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது; அவனை அலைக்கழித்தது. வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என எண்ணி சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது. அதற்குள் எலி வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம்
என்பதை உணர்த்துகிறது.

பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.

ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று கூறினார்.
பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

அடடா என்று சிலிப்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
Answer:
ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.

“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது.

சொற்றொடர் உருவாக்குக.

Question 1.
செந்தமிழும் சுவையும் போல
Answer:
தவைவன் தலைவியாக நீவிர் இருவரும் செந்தமிழும் சுவையும் போல இணைந்தே மகிழ்வுடன் இனிதாய் வாழுங்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 2.
பசுமரத்தாணிபோல
Answer:
குழந்தைப் பருவத்தில் நான் மனனம் செய்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது.

Question 3.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
Answer:
என் தமிழாசிரியர் நடத்திய அணியிலக்கணம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகப் புரிந்தது.

Question 4.
அத்தி பூத்தாற்போல
Answer:
என் மாமாவின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழ்வதால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.

Question 5.
மழைமுகம் காணாப் பயிர் போல
Answer:
தன் குடும்பத்தை விட்டு விடுதிக்குச் சென்ற கமலா, மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வுற்று வாடிக் காணப்பட்டாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

வடிவம் மாற்றுக.

பாடலில் காணும் இலக்கிய வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காள மேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காசு
அலாதொருவர் பகர ஒணாதே.
– பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம் - 1
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம் - 2
நூல் மதிப்புரை:
நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

மதிப்புரை:
சமீபத்தில் நான் விரும்பிப் படித்த நூல் கவிதாசன் அவர்கள் எழுதிய “சிகரங்களைத் தொடுவோம்” என்னும் நூல் ஆகும்.

இந்நூல் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, உழைத்து களைத்து சோர்ந்து போய் என்ன சமுதாயம் இது! என்று சலிப்புறும் மனங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கின்ற நூலாகத் திகழ்கிறது எனில் மிகையாகாது. “மனிதனின் மனம் ஆற்றலின் அட்சயபாத்திரம்”

“இனிய சொற்கள் இதயங்களின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்”
“சாமானியனும் சாதனையாளனாகலாம்”

“காலையில் எழுந்ததும் உங்கள் திறமையைக் காட்ட புதிதாய் ஒருநாள் பிறந்தது என்று எண்ணுங்கள்” என்பன போன்ற சிந்தனைத் துளிகள் நிறைந்துள்ள இந்நூலைப் படிப்போர் நிச்சயமாய்ச் சிகரங்களைத் தொடுவர்.

படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் தூண்டுகோலாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும்.
படியுங்கள். உங்கள் வாழ்வில் உயருங்கள். சிகரங்களைத் தொட்டுச் சிறப்படையுங்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

நயம் பாராட்டு.

”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உள்ளம்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலே” – வள்ளலார்
Answer:
முன்னுரை:
வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகள் சமத்துவமும், சமதர்மமும் வளரவும், சமயம் என்பது பிறர்நலன் போற்றுவதாக அமையவும் குரல் கொடுத்தவர் ஆவார். இறைவனை எண்ணி இவர் பாடிய பாடல்கள் சிறப்புடன் விலங்குகின்றன. அந்த வகையில் இவரது பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.

திரண்ட கருத்து:
எந்த ஒரு வேறுபாட்டையும் வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி, தன் உள்ளத்துள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உவந்து ஏற்கிறார் அத்தகைய உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடம்புரியும் இடம் ஆகும். எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தைமிக இருந்ததால் எவ்வுயிரிடத்தும் அன்புடன் வாழ விழைந்தேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

மையக்கருத்து:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி உயிர்களுக்கு ஏவல் செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. அவர் உள்ளத்துள்ளே இறைவன் உள்ளான் என்ற கருத்தை மையமாக வைத்து வள்ளலார் இப்பாடலைப் புனைந்துள்ளார்.

மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று: எத்துணையும் எவ்வுயிரும் உடையவராய் உவக்கின்றார் என மோனை நயம் அமைந்துள்ளது.

எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று:
எத்துணையும், ஒத்துரிமை, சித்துரு, வித்தகர் என எதுகை நயம் மிக்குள்ளது.

சந்த நயம்:
“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

அணி நயம்:
“எவ்வுயிரும் தம்முயிர் போல” என்பதில் உவமையணி இடம்பெற்றுள்ளது

முடிவுரை:
பக்தி உணர்வு சொட்ட பாடப்பட்டுள்ள இப்பாடல் பக்திச்சுவையும் இலக்கியச் சுவையையும் ஒருங்கே பெற்றுள்ளது.

மொழியோடு விளையாடு

Question 1.
எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களைக் கண்டுபிடி.
புன்பமொப்லமைழி
யனிநேம்தம்
கச்வப்ஞ்புசிழ்ச
தைக்விதுகபு
டுசிப்காட்ப
Answer:

  • புன்பமொப்லமைழி  – பன்மொழிப்புலமை.
  • யனிநேம்தம் – மனிதநேயம்.
  • கச்வப்ஞ்புசிழ்ச – வஞ்சப்புகழ்ச்சி.
  • தைக்விதுகபு – புதுக்கவிதை.
  • டுசிப்காட்ப – காஞ்சிப்பட்டு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 2.
அகராதி காண்க.
குரிசில், தலையளி, நயம், உய்த்தல், இருசு
Answer:

  • குரிசில் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்.
  • தலையளி – முகமலர்ந்து கூறுதல், அன்பு, அருள்.
  • நயம் – நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுண்மை , அருள்.
  • உய்த்தல் – செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல், நீக்குதல்.
  • இருசு – நேர்மை, வண்டியச்சு, மூங்கில்.

Question 3.
தொகைக் சொற்களைக் கொண்டு பத்தியைச் சுருக்குக.
சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
Asnwer:
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்களின் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 4.
வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் …………………………. (செல்). தன் தோழிகளைக் ………………………….(காண்)மகிழ்ச்சியுடன் ………………………….(உரை). பின்னர் வங்கிக்குப் ………………………….(போ) தான் கூடுதலாகச் ………………………….(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் ………………………….(கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு …………………………. (வேண்டு) பொருள்களை வா)ங்கி (வா). அங்கு ………………………….(நில்) பேருந்தில் ………………………….(ஏறு) வீடு ………………………….(திரும்பு).

Answer:
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள்(செல்). தன் தோழிகளைக் கண்டு(காண்)மகிழ்ச்சியுடன் உரையாடினாள்(உரை). பின்னர் வங்கிக்குப் போய்(போ) தான் கூடுதலாகச் செலுத்திய(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் கொண்டு (கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற நில்) பேருந்தில் ஏறி(ஏறு) வீடு திரும்பினாள்(திரும்பு).

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 5.
பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக.
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் ………………………….
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று …………………………. பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் …………………………. மெய்யெழுத்துகள் ஆகிய …………………………. எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள்…………………………. வகைப்படும்.
Answer:
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் உசஎ.
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று பிரிவாகப் பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் கஅ மெய்யெழுத்துகள் ஆகிய நு0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.

Question 6.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம் - 3
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம் - 4

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

நிற்க அதற்குத்தக….

Question 7.
நான் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால்..
அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்…………………………………………………………………………………………….

Answer:

  • அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
  • இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
  • பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்
  • அனைவரையும் ஈடுபாட்டுடன் பணிபுரியச் செய்வேன்.
  • என் கீழ் பணிபுரிவோரின் சுக துக்கங்களில் பங்கு கொள்வேன்.
  • அன்பு கலந்த கண்டிப்புடன் கடமையாற்றுவேன்.

கலைச் சொல்லாக்கம்

மனிதம் – (Humane)
ஆளுமை – (Personality)
பண்பாட்டுக் கழகம் – (Cultural academy)
வசனகவிதை – (free verse)
உவமையணி – (Simitee)
உருவக அணி – (Metabhor)
Answer:
மனிதம் – (Humane) மனிதப் பண்புகளாகிய நற்பண்புகளைக் குறிப்பது.
ஆளுமை – (Personality) புறத்தோற்றத்தை மட்டும் குறிப்பது அல்ல நற்பண்புகள் ஆளுமைத் தன்மை, தலைமைப் பண்புகளையும் குறிப்பது.
பண்பாட்டுக் கழகம் – (Cultural academy) பண்பாடு, நாகரிகத்தைப் பறைசாற்றும் அமைப்பு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்
வசனகவிதை – (free verse) இலக்கணத்துக்குள் கட்டுப்படாது. பேசுவது போல் கருத்தைக் கூறுவது.
உவமையணி – (Simitee) ஒரேதன்மையை உரைப்பது.
உருவக அணி – (Metabhor) உவமை. உவமேயம் ஒன்றே என்று தோன்றக் கூறுவது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி
Answer:
ஆ) பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

குறுவினா

Question 1.
நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன் – இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்ட றிக.
Answer:
கவித்தேன், சுவைத்தேன் – உருவகம்

சிறுவினா

Question 1.
உருவக அணியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
ஒரு பொருளின் தன்மையைச் சிறப்பிக்க அதற்கு உவமையாகும் வேறொரு பொருள் மேல் உவமையின் தன்மையை ஏற்றிக் கூறுவது உருவகம் ஆகும். உவமை உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.

சான்று:
“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்”

இப்பாடலில்
இன்சொல் – நிலம்
வன்சொல் – களை
வாய்மை – எரு
அன்பு – நீர்
அறம் – கதிர்
என உருவகிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எது?
அ) யாப்பு
ஆ) பொருள்
இ) சொல்
ஈ) அணி
விடை:
ஈ) அணி

Question 2.
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?
அ) உவமை
ஆ) உருவகம்
இ) பிறிதுமொழிதல்
ஈ) சிலேடை
Answer:
ஆ) உருவகம்

Question 3.
புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் …………. ஆகும்.
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி
இ) வஞ்சப் புகழ்ச்சியணி
ஈ) சிலேடை அணி
Answer:
இ) வஞ்சப் புகழ்ச்சியணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 4.
பின்வருநிலையின் வகை…………..
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
Asnwer:
அ) 3

Question 5.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அணி………………….
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) சிலேடை அணி
Answer:
இ) சொற்பொருள் பின்வருநிலையணி

Question 6.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வஞ்சப்புகழ்ச்சி
ஈ) தற்குறிப்பேற்றம்
Asnwer:
இ) வஞ்சப்புகழ்ச்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

குறுவினா

Question 1.
அணி என்றால் என்ன?
Answer:
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும். சொல்லாலும், பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது அணி ஆகும்.

Question 2.
பின்வருநிலை அணி என்றால் என்ன?
Asnwer:
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருவதால் ‘பின்வருநிலை’ அணியாகும்.

Question 3.
பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
Answer:
மூன்று வகைப்படும்.

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.5 அணியிலக்கணம்

Question 4.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer”:
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி சொற்பின்வருநிலையணி ஆகும்.

விளக்கம்:
முன்வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து. வேறு பொருள் உணர்த்துவது சொற்பின்வருநிலையணி ஆகும்.
‘துப்பு’ – என்ற சொல் பல இடத்தில் வந்துள்ளது. ஆனால், நல்ல, நன்மை, உணவு – என பல பொருளில் வருகிறதால், இக்குறட்பா சொற்பின்வரு நிலைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.1 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.1

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.1 Text Book Back Questions and Answers

Question 1.
Determine whether the following functions are odd or even?
(i) f(x) = \(\left(\frac{a^{x}-1}{a^{x}+1}\right)\)
(ii) f(x) = log(x2 + \(\sqrt{x^{2}+1}\))
(iii) f(x) = sin x + cos x
(iv) f(x) = x2 – |x|
(v) f(x) = x + x2
Solution:
(i) f(x) = \(\left(\frac{a^{x}-1}{a^{x}+1}\right)\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q1
Thus f(-x) = -f(x)
∴ f(x) is an odd function.

(ii) f(x) = log(x2 + \(\sqrt{x^{2}+1}\))
f(-x) = log((-x)2 + \(\sqrt{(-x)^{2}+1}\))
= log(x2 + \(\sqrt{x^{2}+1}\))
Thus f(-x) = f(x)
∴ f(x) is an even function.

(iii) f(x) = sin x + cos x
f(-x) = sin(-x) + cos(-x)
= -sin x + cos x
= -[sin x – cos x]
Since f(-x) ≠ -f(x) (or) f(x) ≠ -f(x)
∴ f(x) is neither odd nor even function.

(iv) Given f(x) = x2 – |x|
f(-x) = (-x)2 – |-x|
= x2 – |x|
= f(x)
∴ f(x) is an even function.

(v) f(x) = x + x2
f(-x) = (-x) + (-x)2 = -x + x2
Since f(-x) ≠ f(x), f(-x) ≠ -f(x).
∴ f(x) is neither odd nor even function.

Question 2.
Let f be defined by f(x) = x3 – kx2 + 2x, x ∈ R. Find k, if ‘f’ is an odd function.
Solution:
For a polynomial function to be an odd function each term should have odd powers pf x. Therefore there should not be an even power of x term.
∴ k = 0.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1

Question 3.
If f(x) = \(x^{3}-\frac{1}{x^{3}}\), then show that f(x) + f(\(\frac{1}{x}\)) = 0
Solution:
f(x) = \(x^{3}-\frac{1}{x^{3}}\) …….. (1)
\(f\left(\frac{1}{x}\right)=\left(\frac{1}{x}\right)^{3}-\frac{1}{\left(\frac{1}{x}\right)^{3}}\) = \(\frac{1}{x^{3}}-x^{3}\) …….. (2)
(1) + (2) gives \(f(x)+f\left(\frac{1}{x}\right)=x^{3}-\frac{1}{x^{3}}+\frac{1}{x^{3}}-x^{3}=0\)
Hence Proved.

Question 4.
If f(x) = \(\frac{x+1}{x-1}\), then prove that f(f(x)) = x.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q4
Hence proved.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1

Question 5.
For f(x) = \(\frac{x-1}{3 x+1}\), write the expressions of f(\(\frac{1}{x}\)) and \(\frac{1}{f(x)}\).
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q5

Question 6.
If f(x) = ex and g(x) = loge x then find
(i) (f + g) (1)
(ii) (fg) (1)
(iii) (3f) (1)
(iv) (5g) (1)
Solution:
(i) (f+g) (1) = e1 + loge 1 = e + 0 = e
(ii) (fg) (1) = f(1) g(1) = e1 \(\log _{e}^{1}\) = e × 0 = 0
(iii) (3f) (1) = 3 f(1) = 3 e1 = 3e
(iv) (5g) (1) = 5 (g) (1) = 5 \(\log _{e}^{1}\) = 5 × 0 = 0

Question 7.
Draw the graph of the following functions:
(i) f(x) = 16 – x2
(ii) f(x) = |x – 2|
(iii) f(x) = x|x|
(iv) f(x) = e2x
(v) f(x) = e-2x
(vi) f(x) = \(\frac{|x|}{x}\)
Solution:
(i) f(x) = 16 – x2
Let y = f(x) = 16 – x2
Choose suitable values for x and determine y. Thus we get the following table.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7
Plot the points (-4, 0), (-3, 7), (-2, 12), (-1, 15), (0, 16), (1, 15), (2, 12), (3, 7), (4, 0).
The graph is as shown in the figure.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.1

(ii) Let y = f(x) = |x – 2|
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.11
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.2
Plot the points (2, 0), (3, 1) (4, 2), (5, 3), (0, 2), (-1, 3), (-2, 4), (-3, 5) and draw a line.
The graph is as shown in the figure.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1

(iii) Let y = f(x) = x|x|
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.5
Plot the points (0, 0), (1, 1) (2, 4), (3, 9), (-1, -1), (-2, -4), (-3, -9) and draw a smooth curve.
The graph is as shown in the figure.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.6

(iv) For x = 0, f(x) becomes 1 i.e., the curve cuts the y-axis at y = 1.
For no real value of x, f(x) equals to 0. Thus it does not meet the x-axis for real values of x.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.7

(v) For x = 0, f(x) becomes 1 i.e., the curve cuts the y-axis at y = 1.
For no real value of x, f(x) equal to 0. Thus it does not meet the x-axis for real values of x.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.8

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1

(vi) If f: R → R is defined by
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.9
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.1 Q7.10
The domain of the function is R and the range is {-1, 0, 1}.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Students can Download 8th Tamil Chapter 3.3 தமிழ்ர் மருந்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 1.
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
Answer:
(i) சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?

(ii) மாணவர்களுள் சிலரால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்களைச் செய்ய இயலவில்லை. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

(iii) நம் உடலிலுள்ள எலும்புகள் வலுவடைய நாம் செய்ய வேண்டுவன யாவை?
(iv) நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க யாது செய்ய வேண்டும்?
(v) சூரிய ஒளியைப் பெறுவதற்கு உகந்த நேரம் எது?

Question 2.
உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
Answer:
(i) வல்லாரை :
வல்லாரை பல மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், நீர்ச்சத்து, புரதச்சத்து, தாது உப்புகள் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சிறந்த நினைவாற்றலைத் தரக்கூடியது. வாயுத் தொல்லையை நீக்கும். சர்க்கரை நோய், இதயக்கோளாறுகள் உள்ளிட்ட முக்கிய நோய்களைத் தடுக்கும்.

(ii) கறிவேப்பிலை :
கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், நீர்ச்சத்து, மாவுச் சத்து போன்ற பல சத்துகள் உள்ளன. கறிவேப்பிலை கண்களுக்கு வலுவூட்டக்கூடியது. பார்வைக் கோளாறைப் போக்கும். தலைமுடி கருகருவென்று வளரும். உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

(iii) கரிசலாங்கண்ணி :
இதில் வெள்ளை , மஞ்சள் என இரண்டு வகைகள் உள்ளன. காமாலை நோயை போக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். இரத்தச் சோகையைப் போக்கும்.

(iv) முருங்கைக்கீரை :
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும்.

(v) பொன்னாங்கண்ணிக் கீரை :
இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாக இருக்கும். கண் எரிச்சல், கண் மங்கல், கண்கட்டி, கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும். வாய்நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.

(vi) அகத்திக்கீரை :
அகத்திக்கீரையை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றும். பார்வைக் கோளாறுகள் வராது. எலும்பைப் பலப்படுத்தும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை
Answer:
அ) தாவரங்களை

Question 2.
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்
Answer:
இ) உணவின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 3.
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு

Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக
Answer:
இ) நல்வாழ்வுக்காக

குறுவினா

Question 1.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
Answer:
மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

Question 2.
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
Answer:
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.

எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.

Question 3.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
Answer:
வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.

சிறுவினா

Question 1.
நோய்கள் பெருகக் காரணம் என்ன?
Answer:
நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.

Question 2.
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
Answer:
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடுவினா

Question 1.
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.

மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.

தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.

சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.

மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.

தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்
மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.

சிந்தனை வினா

Question 1.
நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
Answer:
(i) அலட்சியம், முரண்பாடு இன்றி அளவோடு உணவு உண்ண வேண்டும்.

(ii) உணவை மென்று, மெதுவாக, உமிழ்நீர் நன்றாக சுரக்க, ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும்.

(iii) நீண்ட காலம் வாழவும் நோயின்றி வாழவும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

(iv) யோகாசனங்கள் செய்வதால் உடலும் மனதும் எப்பொழுதும் புத்துணர்வோடு இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

(v) ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
(vi) நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல்.
(vii) நாள்தோறும் அரைமணி நேரம் நல்ல வேகமாக நடக்க வேண்டும்.
(viii) எளிமையாக வாழ விரும்புதல்.
(ix) கோபத்தைக் குறைத்துக் கொள்ளுதல்.
(x) அளவான உணவு, அளவான ஆசை, அளவான உறக்கம் இம்மூன்றும் அடிப்படை வழிகளாகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அருந்தும் உணவே ……………………. அறிந்தவர்கள் நம் தமிழ் மக்கள்.
2. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனக் கூறும் நூல் ……………….. கூறியவர் ……………….
3. தமிழர்கள் பின்பற்றிய மருத்துவமுறை ……………. சார்ந்த மருத்துவமுறை.
Answer:
1. அருமருந்தென
2. திருக்குறள், திருவள்ளுவர்
3. மரபு

குறுவினாக்கள் :

Question 1.
சித்த மருத்துவதில் தாவரங்களின்றி மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவை எவை?
Answer:
சித்த மருத்துவத்தில் வேர், தழை ஆகியவற்றை மருந்துகளாகப் பயன்படுத்தினர். அவை மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். தாதுப் பொருட்களையும் உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை பெற்றது சித்த மருத்துவம்.

Question 2.
எல்லோருடைய உடல்நலனுக்கும் உடல் அமைப்பிற்கும் ஒரே வகையான மருந்து ஏற்றதாக இருக்குமா?
Answer:
(i) ஒரே அளவு எடை கொண்ட பலர் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரே வகையான மருந்து கொடுக்க முடியாது.

(ii) வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப்போக்கு, உணவுமுறை, மரபுவழி என்பன ஒவ்வொருக்கும் வேறுபடும். அதனால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மருந்துகள் அளிக்க வேண்டும்.

Question 3.
தமிழர் மருத்துவத்தின் சிறப்பு யாது?
Answer:
(i) தமிழர் மருத்துவம் தனித்துவமான பார்வை மற்றும் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும். இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ
சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

(ii) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல் நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

(iii) ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 4.
உடல் நலத்துக்காக உடலுக்கு நாள்தோறும் நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer:
(i) தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீ ர் அருந்துதல் ஆகியன அவசியம்.

(ii) எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதைவிட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்.

சிறுவினாக்கள்

Question 1.
பழந்தமிழர்களின் மருத்துவமுறைகளின் அடிப்படை யாது?
Answer:
பழந்தமிழர்களின் மருத்துவ முறைகளாவன சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் ஆகியனவாகும்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். தமிழரது நிலம், நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகளால் வருகின்றன. பாவ புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

Question 2.
தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனதற்குக் காரணம் என்ன?
Answer:
(i) நம்மீது நிகழ்ந்த படையெடுப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின.

(ii) தமிழர் மருத்துவம் அவரவர் வாழ்வியலுடனும் தத்துவங்களுடனும் பிணைந்துதான் வந்துகொண்டிருந்தது.

(iii) சமண, பௌத்தர் காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.

(iv) பிறகு சைவம் ஓங்கியபோது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் கலந்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் வந்தனர்.

(v) அவர்களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

(vi) சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.

(vii) இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. நவீன மருத்துவத்தில் துரிதமாகச் சில நோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இக்காரணங்களால் தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனது.

Question 3.
வாழ்வியல் நோய்களும் அவற்றைத் தீர்க்கும் தமிழ் மருத்துவம் பற்றிக் கூறுக.
Answer:
(i) சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு நோய் முதலியவை வாழ்வியல் நோய்கள் ஆகும்.

(ii) இந்நோய்கள் பரவலாக பெருகியது. இவற்றைத் தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் மட்டும் போதாது. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

(iii) தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளை அளிக்கும் மரபு சார்ந்த மருத்துவ முறைகளை நவீன அறிவியல் கண்டறிந்தது.

(iv) அதனால் சித்த மருத்துவத்தின் தொன்மையையும் தமிழர்களின் தொன்மையையும் அறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாட்பட்ட நோய்களுக்கு மட்டுமல்லாமல் புதிய தொற்று நோய்களுக்கும் இம்மருத்துவமுறை பயன்படுகிறது.

Question 4.
மருத்துவத்தில் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவர் கூறிய கருத்துகளை எழுதுக.
Answer:
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை . அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.

நம் உடல் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும் சூரணத்தையும் எடுத்துக் கொள்ளும். அதனால் இம்மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.

இருந்த போதிலும் சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவு, எந்தத் துணைமருந்துடன் கொடுத்தால் பக்கவிளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர் என்று மருத்துவர் பக்கவிளைவுகள் பற்றிக் கூறியுள்ளனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 5.
உடல் எடையைப் பற்றி பாடத்தின் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:
உடல் எடை :
அழகுக்காக உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லதன்று. மரபு ரீதியாக ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்து, அவருக்கு எந்த நோயும் இல்லையென்றால் அவர் எடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக் கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்றால் அவர் குறைத்துத்தான் ஆக வேண்டும்.

இன்றைக்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் நம் உடலுக்கு ஏற்றவையாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். இணையத்தைப் பார்த்து ஒரே அடியாக எடையைக் குறைக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைத்து, உணவு உண்பதில் சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.