Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

11th History Guide தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கரிகாலன் …………….. மகனாவார்.
அ) செங்கண்ணன்
ஆ) கடுங்கோ
இ) இளஞ்சேட் சென்னி
ஈ) அதியமான்
Answer:
இ) இளஞ்சேட் சென்னி

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i) தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
ii) பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
iii) கஜபாகு – இலங்கை
iv) திருவஞ்சிக்களம் – சோழர்
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(ஈ) iv) திருவஞ்சிக்களம் – சோழர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
…………….. ராஜசூய யாகத்தை நடத்தினார்.
அ) பெருநற்கிள்ளி
ஆ) முதுகுடுமிப் பெருவழுதி
இ) சிமுகா
ஈ) அதியமான்
Answer:
அ) பெருநற்கிள்ளி

Question 4.
இந்திர விகாரம் பற்றி ………………….. குறிப்பிடுகிறது.
அ) மணிமேகலை
ஆ) சிலப்பதிகாரம்
இ) அசோகர் கல்வெட்டு
ஈ) சேரர் நாணயம்
Answer:
அ) மணிமேகலை

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 5.
இக்சவாகுகள் ……………….. பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்.
அ) ஆந்திரா – கர்நாடகா
ஆ) ஒடிசா
இ) தக்காணப் பகுதி
ஈ) பனவாசி
Answer:
அ) ஆந்திரா – கர்நாடகா

Question 6.
கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க.
i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்.
iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
iv) இக்சவாகுகள் வேதவேள்விகளை ஆதரித்தனர்.
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(இ) iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
கௌதமிபுத்திர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ……………….
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி
ஆ) நாகப்பனா
இ) கடம்பர்
ஈ) யக்னஸ்ரீ சதகர்னி
Answer:
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி

Question 2.
…………………….. அரசர் ஹால் 700 காதற் பாடல்களைக் கொண்ட காதாசப்தசதி என்ற நூலை இயற்றினார்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) சாதவாகன
Answer:
ஈ) சாதவாகன

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் …………………….
அ) தஞ்சாவூர்
ஆ) காவிரிப்பூப்பட்டினம்
இ) உறையூர்
ஈ) சாகர்கள்
Answer:
இ) உறையூர்

Question 4.
சேரர்களின் துறைமுக நகரம் ………………….
அ) தொண்டி
ஆ) புகார்
இ) கொற்கை
ஈ) நெல்கிண்டா
Answer:
அ) தொண்டி

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 5.
பாண்டியர்களின் துறைமுக நகரம் ……………………..
அ) முசிறி
ஆ) தொண்டி
இ) புகார்
ஈ) கொற்கை
Answer:
ஈ) கொற்கை

Question 6.
”மதுரை காஞ்சி” என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள “அல்லங்காடி” என்பது …………………….
அ) பகல்
ஆ) இரவு
இ) மாலை
ஈ) பகல் மற்றும் இரவு
Answer:
ஆ) இரவு

Question 7.
தமிழகத்தில் “இருண்ட காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது ……………………..
அ) சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
ஆ) வெளிர்கள் ஆட்சிக்காலம்
இ) பகல்வர் ஆட்சிக்காலம்
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்
Answer:
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 8.
“சேத்தன் ” , “கூற்றன் ” என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு ……………………..
அ) கூரம் செப்பு பட்டயம்
ஆ) ஐஹோல் கல்வெட்டு
இ) அலகாபாத் கல்வெட்டு
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு
Answer:
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு

Question 9.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் …………………….
அ) கரிகாலன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) மகேந்திரன்
Answer:
அ) கரிகாலன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

II. குறுகிய விடை தருக.

Question 1.
பண்டமாற்று முறையை விளக்குக.
Answer:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.

Question 2.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன ?
Answer:
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
Answer:
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன். சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?
Answer:
நாணயச் சான்றுகள் :

  • ஆந்திரா – கர்நாடகா பகுதிகளின் சாதவாகனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள்.
  • சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெயியிட்ட நாணயங்கள்.
  • தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
கல்வெட்டுகளைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.
  • தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் – பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.
  • ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிறபௌத்த கல்வெட்டுகளும்.

தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து), கோர் ரோரி ஓமன்), குவாங்லுக் (தாய்லாந்து) போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள்.

Question 3.
தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை?
Answer:
வெளிநாட்டவரது குறிப்புகள் :
கீழ்க்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

  • பொ. ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்தரியக் கடலின் பெரிப்ளஸ்.
  • பொ. ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு’ (Natural History).
  • பொ. ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்).
  • ரோமானியரின் வரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table).

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 4.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.
Answer:
நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன் , எழினி , கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.

எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்miss கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.
மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

III. சிறு குறிப்பு வரைக

Question 1.
சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.
Answer:
திணைக் கோட்பாட்டின் பின்புலத்தின் தமிழகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும்.
  2. முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியுமாகும்.
  3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகும்.
  4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும்.
  5. பாலை – மணலும் மணல் சார்ந்த வறண்ட பகுதியுமாகும்.

Question 2.
சோழ அரசர்களில் தலை சிறந்தவன்
Answer:
கரிகாலன்.
இளஞ்சேட் சென்னியின் மகனான கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். “பட்டினப்பாலை” அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பதுவெண்ணி போர்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.

காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தன் மூலம் வேளாண்மையே வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
கெளதமி புத்திர சதகர்னியின் சாதனைகளை எழுதுக.
Answer:

  • சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசனாவார்.
  • சாக அரசர் ‘நாகப்பனா’ வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரசமுத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.

அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 4.
கிழார் – வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.
Answer:
கிழார் :
கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.

வேளிர் :
வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
Answer:
இலக்கியச் சான்றுகள் :

  • சங்க நூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்
  • பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
  • ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
  • மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
  • சாதவாகன அரசர் ஹால் பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
Answer:
தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை . அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.

Question 3.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.

இது காலப்போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

IV. விரிவான விடை தருக :

Question 1.
“சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமையுரிமையே ஆகும்” இக்கூற்றை ஆதரித் தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.
Answer:
சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்ககாலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும்.

அ. தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் வாதங்கள் வருமாறு :

  • சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை .
  • எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.
  • ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும். வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
  • வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.

ஆ. மேற்கண்ட கருத்திற்கு எதிரானவர்கள் முன் வைக்கும் காரணங்கள்:

  • சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப்பகுதி வாழ் சமூக;ததில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
  • தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் கிரேக்க – ரோமானிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • ஆட்சிப் பகுதிகளை விரிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப்பாடு பொருளாக இருக்கின்றன.
  • வணிகப் பெருவழிகளிலும், காவிரிப் பூம்பட்டிணம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப் பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பொ. ஆ. மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப்பெரும் பங்கை வகித்துள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
Answer:
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:

  • தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
  • அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
  • இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
  • சோழரின் சின்னம் புலி ஆகும்.

சேரர் :

  • மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
  • வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
  • சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
  • சேரர்களின் சின்னம் வில் அம்பு ஆகும்.

பாண்டியர் :

  • மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும்.
  • இது முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாண்டியரின் சின்னம் மீன்.
  • மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 3.
களப்பிரர் என்போர் யார்? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
Answer:
சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ. ஆ. 300 – 600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது.

களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.

தமிழ்ப்பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.

இக்கால கட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும்.

இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது.

தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ – வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
Answer:
சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.

மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர்.

அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.

ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.

எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை .

Samacheer Kalvi 11th History Guide Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Question 2.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
Answer:
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே
தொல்பொருள் :

  • தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
  • அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
  • துறைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
  • ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.

நாணயச் சான்றுகள் :
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

11th History Guide ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 1.
…………… இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
அ) பிளாசிப் போர்
ஆ) முதலாம் கர்நாடகப் போர்
இ) பக்சார் போர்
ஈ) வந்தவாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்

Question 2.
………… உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
அ) அலகாபாத்
ஆ) மதராஸ்
இ) பூனா
ஈ) புதுச்சேரி
Answer:
அ) அலகாபாத்

Question 3.
………… வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
அ) வாரன்ஹேஸ்டிங்ஸ்
ஆ) டியூப்ளே
இ காரன்வாலிஸ்
ஈ) ராபர்ட் கிளைவ்
Answer:
ஈ) ராபர்ட் கிளைவ்

Question 4.
………….. சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
ஆ) பிட் இந்தியச் சட்டம் (1784)
இ) பட்டயச் சட்டம் (1813)
ஈ) பட்டயச் சட்டம் (1833)
Answer:
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 5.
இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
அ) காரன்வாலிஸ்
ஆ) கானிங்
இ வெல்லெஸ்லி
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
ஆ) கானிங்

Question 6.
………… ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலைவரித் திட்டத்தை மேற்கொண்டார்.
அ) மைசூர்
ஆ) பம்பாய்
இ வங்காளம்
ஈ) சென்னை
Answer:
இ வங்காளம்

Question 7.
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்……………
அ) காரன்வாலிஸ்
இ) ராபர்ட் கிளைவ்
ஆ) தாமஸ் மன்றோ
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) ராபர்ட் கிளைவ்

Question 8.
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி……………
அ) வில்லியம் ஆதம்
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
இ ஜேம்ஸ் ஹாலந்து
ஈ) ஜான் நிக்கல்சன்
Answer:
ஆ) வில்லியம் ஸ்லீமேன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 9.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம்……………….
அ) நாக்பூர்
ஆ அவத்
இ ஜான்சி
ஈ) சதாரா
Answer:
ஈ) சதாரா

Question 10.
நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை ………….. நியாயப்படுத்தியது.
அ) இரயத்துவாரி சட்டம்
ஆ) பிட் இந்தியச் சட்டம்
இ) நிலையான நிலவரித் திட்டம்
ஈ) சித்திரவதைச் சட்டம்
Answer:
அ) இரயத்துவாரி சட்டம்

Question 11.
…………. இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
அ) காரன்வாலிஸ்
ஆ) வில்லியம் பெண்டிங்
இ தாமஸ் மெக்காலே
ஈ) தாமஸ் மன்றோ
Answer:
இ தாமஸ் மெக்காலே

Question 12.
சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு ……………………
அ) 1837
ஆ) 1861
இ) 1844
ஈ) 1857
Answer:
ஈ) 1857

Question 13.
……… என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது.
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) ராஜாராம் மோகன் ராய்
ஈ) தயானந்த சரஸ்வதி
Answer:
இ) ராஜாராம் மோகன் ராய்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 14.
தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856ல் சென்னையிலிருந்து …………….. வரை இயக்கப்பட்டது.
அ) வாணியம் பாடி
ஆ) காட்பாடி
இ) விழுப்புரம்
ஈ) அரக்கோணம்
Answer:
ஈ) அரக்கோணம்

Question 15.
1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் விளைவாக இந்தியா  ஐரோப்பாவிற்கிடையே பயண தூரம் …………… மைல்க ளாகக் குறைக்கப்பட்டது.
அ) 400
ஆ) 3000
இ) 4000
ஈ) 8000
Answer:
இ) 4000

II. அ.சரியான கூற்றினைத் தேர்ந்தெடு (மார்ச் 2019)

1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன.
3. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) தொடங்கப்பட்டது.
4. டல்ஹௌசி பிரபு மார்ச் 1835 இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
Answer:
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஆ.கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு

கூற்று (கூ) : ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டது.
காரணம் (கா) : 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில்
அதிகமான பஞ்சங்கள் நிலவின.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
Answer:
ஈ) கூற்றுதவறு; காரணம் சரி

III. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) 1.கங்காதர ராவ் – ஜான்சி
ஆ) 2. ரகுஜி போன்ஸ்லே – நாக்பூர்
இ) 3. ஷாஜி – சதாரா
ஈ) 4. சிந்தியா – கோலாப்பூர்
Answer:
ஈ) சிந்தியா – கோலாப்பூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

ஆ. பொருத்துக

i) ஆர்தர் காட்டன் – 1. சமஸ்கிருத கல்லூரி
ii) வில்லியம் ஸ்லீமேன் – 2. கொள்ளிடம்
iii) வில்லியம் பெண்டிங் – 3.தக்கர்களை அடக்குதல்
iv) காரன்வாலிஸ் – 4.சதி ஒழிப்புச் சட்டம்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ 3, 2, 1, 4
ஈ).2, 1, 4, 3
Answer:
ஆ) 2,3,4,1

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
அ) 1757
ஆ) 1764
இ) 1858
ஈ) 1864
Answer:
அ) 1757

Question 2.
நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் …………
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) வில்லியம் பெண்டிங்
ஈ) காரன்வாலிஸ் பிரபு
Answer:
ஈ) காரன்வாலிஸ் பிரபு

Question 3.
துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ……………….
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) டல்ஹௌசி
ஈ) சர் ஜான் ஷோர்
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 4.
செல்வச் சுரண்டல் கோட்பாட்டைக் கூறியவர் …
அ) W.C. பானர்ஜி
ஆ) S.N. பானர்ஜி
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) ராஜாராம் மோகன்ராய்
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி

Question 5.
இந்திய அரசின் பொறுப்பை இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகை செய்த விக்டோரியா மகாராணியாரின் பிரகடனம் செய்த ஆண்டு ………………..
அ) 1857
ஆ) 1858
இ) 1847
ஈ) 1848
Answer:
ஆ) 1858

Question 6.
பிட் இந்தியச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு…………….
அ) 1814
ஆ) 1764
இ) 1784
ஈ) 1774
Answer:
இ) 1784

Question 7.
மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ………………….
அ) வெல்லெஸ்லி
ஆ) லிட்டன்
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
இ) வில்லியம் பெண்டிங் பிரபு

Question 8.
வாரிசு இழப்புக் கொள்கையை அமுல்படுத்தியவர்
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) காரன்வாலிஸ்
இ) டல்ஹௌசி
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) டல்ஹௌசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 9.
1812ல் சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர்
அ) எல்லீ ஸ்
ஆ) காரன்வாலீஸ்
இ) லிட்டன்
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
அ) எல்லீ ஸ்

Question 10.
……………. ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் சமாச்சார்தர்பான் துவக்கப்பட்டது
அ) 1881
ஆ) 1818
இ) 1816
ஈ) 1814 பா
Answer:
ஆ) 1818

பொருத்துக

Question 11.
அ) சார்லஸ் உட் அறிக்கை -1. 1793
ஆ) வனச்சட்டம் -2. 1806
இ) நிலையான நிலவரித்திட்டம் – 3. 1829
ஈ) கிழக்கிந்தியக் கல்லூரி – 4. 1854
உ) சதி ஒழிப்பு -5. 1865
Answer:
அ – 4, ஆ – 5, இ -1, ஈ-2, உ – 3

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

எது சரியாக பொருந்தவில்லை

Question 12.
அ) நிலையான நிலவரித்திட்டம் – காரன்வாலிஸ்
ஆ) துணைப்படைத்திட்டம் – வெல்லெஸ்லி
இ மகல்வாரி -வில்லியம் பெண்டிங்
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம் – தாமஸ் மன்றோ
Answer:
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம்-தாமஸ் மன்றோ

Question 13.
” ரைய்யா” என்ற அரபு வார்த்தையின் திரிபே……………..
அ) வாரி
ஆ) மகல்
இ) ராயத்
ஈ) வரி
Answer:
இ) ராயத்

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

Question 14.
அ) 1813 ஆம் அண்டு பதவி ஏற்ற ஹேஸ்டிங்ஸ் முகலாய முத்திரையை (மொய்ரா) பரிவர்த்தனைகளில் ஏற்றார்.
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.
இ) டல்ஹௌசி பிரபு ஆட்சியில் இரட்டை ஆட்சிமுறை தோன்றியது.
ஈ) 1764ல் பிளாசிப்போர் நடைபெற்றது.
Answer:
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.

Question 15.
வங்காளத்தின் ஆளுநராக வாரன்ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்ட ஆண்டு
அ) 1772
ஆ) 1773
இ) 1774
ஈ) 1775
Answer:
ஆ) 1773

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 16.
‘ரயத்’ என்ற சொல்லுக்கு ……… என்று பொருள்
அ) உழவர்
ஆ) நாயக்கர்
இ) வரி
ஈ) ஜமீன்தார்
Answer:
அ) உழவர்

Question 17.
பட்டயச் சட்டங்கள் ………… ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது
அ) 10
ஆ) 15
இ 20
ஈ) 25
Answer:
இ) 20

Question 18.
” வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
அ) வ.உ. சிதம்பரம்
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ கோபால கிருஷ்ண கோகலே
ஈ) திலகர்
Answer:
ஆ)தாதாபாய் நௌரோஜி

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 19.
இந்தியாவில் தந்தி போக்குவரத்து
துவங்கப்பட்ட ஆண்டு …..
அ) 1851
ஆ) 1852
இ) 1853
ஈ) 1854
Answer:
ஈ) 1854

Question 20.
இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் இருப்புபாதை (1853)
அ) பம்பாய் – தானே
ஆ) பம்பாய் – பம்பாய்
இ) பம்பாய் – சூரத்
ஈ) சென்னை – அரக்கோணம்
Answer:
அ) பம்பாய் – தானே

IV. சுருக்கமான விடையளி

Question 1.
1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை விவரி.
Answer:

  • வங்காளத்தின் ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர்  ஜெனரலானார் (தலைமை ஆளுநரானார்)
  • கவர்னர் ஜெனரல் இயக்குநர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்
  • வணிக குழுவின் வரவு செலவு கணக்கு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • ஆளுநர், தலைமை தளபதி மற்றும் இரு ஆலோசகர்களைக் கொண்ட குழு வருவாய் வாரியமாக செயல்பட்டது.

Question 2.
ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக?
Asnwer:

  • 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார்.
  • 1822ம் ஆண்டு சென்னையில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்
  • ஆளுநராக இருந்த போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
Answer:

  • கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்ற இடம் மாகாணம் ஆகும்.
  • அவ்வகையில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்
  • பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.

Question 4.
இந்தியக் குடிமைப் பணிக்கு காரன்வாலிசின் பங்களிப்பினைப் பற்றிக் கூறுக?
Answer:

  • காரான்வாலிஸின் தலையாய பங்களிப்பு குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும்.
  • அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார்.
  • கம்பெனி அதிகாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிவிட்டு அவர்களை தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்
  • கல்கத்தாவில் 1800ல் ஒரு கல்லூரி வணிக்குழுவின் குடிமைப் பணியாளர்களுக்காக துவங்கப்பட்டது.

Question 5.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக?
Answer:

  • பாசனவதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது.
  • ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
  • கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையைக் கட்டினார்
  • பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக பாசன வசதி மேம்பாட்டில் நடைபெற்ற பணிகள் கீழ்வருமாறு
  • அ) வட இந்தியாவில் 1830ல்யமுனா கால்வாய்
  • ஆ) 1857ல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணி
  • இ) 1856ல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் தோண்டும் பணி

Question 6.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக?
Answer:

  • வங்காளத்தில் முன்பு விளைந்த ஒரு வகை பட்டு போன்ற பருத்தியிலிருந்து மெல்லிய துணி நெய்வாளர்கள் இது டாக்கா மஸ்லின் என்றழைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய நெசவுக்கு ஆதரவளிக்காததால் அதை பார்ப்பதே அரிதாகிவிட்டது
  • இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட நகரம் வறுமை சூழ்ந்து நெசவாளர்கள் பசியால் செத்து மடிந்தார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 7.
“செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது – எவ்வாறு?
Answer:

  • இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் என்ற வகையில் இங்கிலாந்து போய் சேர்ந்தது.
  • கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம், ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள், இராணுவம், குடிமை பணி அலுவலர்கள் போன்றோரின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை.
  • ஆர்.சி. தத் என்பவரின் மதிப்பீட்டின்படி மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி 10 ஆண்டுகளில் (1891 – 1901) மொத்த வருவாயான 647 பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருந்தது என தெரியவருகிறது.
  • இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.
  • இவ்வாறு செல்வ வளங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவை ஏழ்மையாக்கியது.

V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி

Question 1.
மகல்வாரி முறை பற்றி சிறு குறிப்பு தருக.
Answer:

  • வில்லியம் பெண்டிங் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது மகல்வாரி முறை (1833)
  • நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது.
  • ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.

Question 2.
சதி ஒழிப்பிற்கு பெண்டிங் பிரபு செய்த பணிகள் யாது?
Answer:

  • கணவனை இழந்த மனைவியை சிதையோடு சேர்த்து எரிப்பதே சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமாகும்.
  • வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு முன் ஆட்சி தலையிடவில்லை .
  • ஆனால் பெண்டிங் பிரபு தயக்கமின்றி 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச்சட்டம் இயற்றி இக்கொடூர முறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
  • இராஜாராம் மோகன்ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத் தன்மையற்ற முறை ஒழிய முக்கிய காரணமாயிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

V. குறுகிய விடையளி.

Question 1.
இரட்டை ஆட்சி முறை மார்ச் 2019
Answer:

  • பிளாசிப்போருக்கு பின் வணிகக்குழு முழு அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்டு நிர்வாகச் சுமையை மட்டும் நவாபிடம் விட்டு வைத்த இத்தகைய நிர்வாக முறையே இரட்டை ஆட்சி முறை எனப்பட்டது.
  • இம்முறையின் கீழ் மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக் கொண்டு அவரது பின்புலத்தில் வணிகக்குழு அதிகாரிகள் செயாற்றினர்.

Question 2.
ஜமீன்தார்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை எவ்வாறு பெற்றனர்.
Answer:

  • 1793 வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் அமுல் செய்யப்பட்டது.
  • சாசுவதம் என்ற பெயரில் நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்தது.
  • இம் முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாறி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
Answer:

  • இந்து சம்பிரதாயங்களின்படி வாரிசு இல்லாத இந்து அரசர் ஓர் ஆண் மகனை தத்தெடுக்க முடியும்.
  • அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தில் முழு உரிமை உண்டு.
  • ஆனால் டல்ஹௌசி ஆங்கில அரசின் பாதுபாப்பில் உள்ள அரசு , வாரிசு நியமனம் பெற அரசு அனுமதி அவசியம் என கூறினார். தத்தெடுக்க ஆங்கில அரசு மறுத்தால் அவ்வரசு (வாரிசு இல்லாத அரசு) ஆங்கில அரசுடன் இணைக்கப்படும் என்றார். இது வாரிசு இழப்புக் கொள்கை எனப்படும்.
  • வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும்.

Question 4.
காரன்வாலிஸின் நீதித்துறை நிர்வாகம்
Answer:

  • சர் வில்லியம் ஜோன்ஸ் ஆலோசனையின்படி நீதித்துறையை காரன்வாலிஸ் சீரமைத்தார்.
  • ஆட்சியாளர்களை நீதித்துறை பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
  • குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களை முழுமையாக சீரமைத்தார்.
  • நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும் திகழ்ந்தன.
  • நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.

Question 5.
சார்ல்ஸ் உட் அறிக்கை .
Answer:

  • 1854ல் சார்ல்ஸ் உட்கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது
  • ஆரம்பகல்வி முதல் உயர்நிலைப்பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடங்கிய ஒரு விரிவான வரைவாகும்.
  • பொதுக்கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாணத் தலை நகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக 1857 ல் சென்னை பல்கலைக்கழகமும், பம்பாய்,  கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 6.
பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
Answer:

1. பிண்டாரிகள் : .

  • பிண்டாரிகள் கொள்ளைக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தவர்களும் இருந்தனர்.
  • துணைப்படைத் திட்டத்தில் வேலையிழந்த படை வீரர்கள் இதில் பெருமளவில் சேர்ந்தனர். பிரிட்டிஷார் போரின் மூலம் அவர்களை ஒழித்தனர்.

2. தக்கர்கள் :

  • 14ம் நூற்றாண்டில் தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்.
  • தக்கர்களை ஒடுக்க பெண்டிங் ஒரு திட்டம் வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லிமேனை நியமித்தார்.
  • 1860ம் ஆண்டு வாக்கில் தக்கர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Question 7.
இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழில் துறை புரட்சியின் தாக்கம்
Answer:

  • உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய இந்தியா, இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியின் பருத்தி ஆடை தேவைக்கு சந்தையாக மாற்றப்பட்டது.
  • இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருள்கள் இந்திய சந்தைகளில் குவிந்தன.
  • சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும், நீண்ட கால பயன்பாட்டுக்கு தகுந்ததாக இருந்ததாலும் இந்திய கைத்தறி பொருட்கள் உற்பத்தி குறைந்தது.
  • இதுநெசவாளர்களை வேலை இழக்கச் செய்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 8.
ஒப்பந்தக்கூலிமுறை
Answer:

  • இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான, தண்டனைக்குரிய ஒப்பந்த முறை ஆகும் அது.
  • இம்முறையின் படி ஒப்பந்த தொழிலாளர்கள் (கூலி) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும்.
  • பணியில் அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ கூலியை மறுக்கவும், சிறைதண்டனை வழங்கவும் முடியும்.
  • உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலும், ஒப்பந்த காலத்திற்கு முன்பு பணியை விட்டு விலகினாலும் கூலியை மறுக்கவும், சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
  • அற்ப காரணங்களுக்காக கூட கூலி மறுக்கப்பட்டும், சிறைத்தண்டனை வழங்கப்பட்டும் வந்தது.

கூடுதல் வினாக்கள் – குறுகிய விடையளி

Question 1.
மாகாணம் என்பதற்கும் மாநிலம் என்பதற்குமான வேறுபாடு யாது?
Answer:
மாகாணம் (Presidency) : கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக
அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அவ்விதத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்.

மாநிலம் (Province) : பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.

Question 2.
குறிப்பு தருக: தாமஸ் மன்றோ
Answer:

  • தாமஸ் மன்றோ 1820ல் மெட்ராஸ்  மாகாணத்திற்கு ஆளுநர் ஆனார்.
  • 1822ல் இரயத்து வாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார்.
  • இவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார்.
  • இந்தியர்கள் பெருமளவில் இவர் நிர்வாகத்தில் பங்காற்றுவதை ஆதரித்தார்.
  • ஜூலை 1827ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
  • மக்களிடையே பிரபலமாகியிருந்த அளுநரான் எழுப்பப்பட்டதோடு குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 3.
பட்டயம் (Charler) என்றால் என்ன ?
Answer:
பட்டயம் (Charler) :

  • பட்டயம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒருவணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும். உதாரணம் : கிழக்கிந்திய வணிகக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600ல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது.
  • 1773 ஆம் ஆண்டு வரான்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றது முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிற்று
  • பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டயமே கடைசியானது ஆகும்.

VI. விரிவான விடைளி

Question 1.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத்திட்டத்தினைப்பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer;

  • கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு துணைப்படைத்திட்டத்தைக் கொண்டுவந்தார் அதன்படி
  • அ. துணைப்படைத்திட்டத்தில் சேரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப்படைகளை கலைத்துவிட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்க வேண்டும். அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
  • ஆ. பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும் இல்லையெனில் மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
  • பாதுகாப்புக்குட்பட்ட அரசர் பிரஞ்சு உட்பட பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும்.
  • பிரிட்டிஷார் அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியில் அமர்த்தக்கூடாது.
  • பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதி இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது.
  • எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடக்கூடாது.
  • இத்துணைப்படைத்திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டு மொத்தத்திறனையும் கூட்டியது
  • சுதேச அரசுகள் தங்களது இறையாண்மையை இழந்து எல்லா வகையிலும் கம்பெனியைச் சார்ந்து இருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

Question 2.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
Answer:

  • வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு ‘மதராசாவை ‘ உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும்.
  • இம்மதரசா 40 மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது.
  • காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை 1791ல் நிறுவினார்.
  • ஹேஸ்டிங்ஸ் தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தினார்.
  • 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியருக்கு ஒரு தெளிவான கல்விக் கொள்கையை வகுக்க வலியுறுத்தியது.
  • 1817 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை ஹேஸ்டிங்ஸ்துவக்கினார்.
  • 1835 ஆம் ஆண்டு கல்கத்தா மருத்துவக்கல்லூரியை வில்லியம் பெண்டிங் பிரபு நிறுவினார்.
  • 1835ல் மெக்காலே பிரபு ஆங்கிலக் கல்வி முறையை புகுத்தினார்.
  • 1847ல் ரூர்க்கியில் பொறியியில் கல்லூரி ஒன்றும்
  • 1849ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியும் துவக்கப்பட்டது.
  • 1854ல் உட்கல்வி அறிக்கை ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி, கல்லூரிப்படிப்பை உள்ளடக்கிய தெளிவான மற்றும் விரிவான வரைவுகளை அரசாங்கத்தில் சமர்ப்பித்தது.

Question 3.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை?
Answer:
வன சட்டம் இயற்றப்படுவதற்கான சூழ்நிலைகள் :

  • பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கக்கூடியதாக நிலமே விளங்கியது.
  • வேளாண் நிலத்தை விரிவுப்படுத்தும் பொருட்டு காடுகள் அழிக்கப்பட்டன.
  • முதலில் அழிக்கப்பட்ட காடுகள் “ஜங்கிள் மஹல் பகுதி
  • இங்கு சாந்தால் இனபழங்குடிமக்கள் வாழ்ந்தனர்.
  • இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்தனர்.
  • காபி விளைவிப்பதற்காக காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் காபி செழித்து வளரவில்லை .
  • இருப்பு பாதை அமைக்க 1870ல் ஆண்டுக்கு 10 லட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டன.
  • இங்கிருந்து மரப்பலகைகள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

சட்டம் :

  • காட்டு வளங்களை பாதுகாக்கும் பொருட்டு 1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
  • இச்சட்டம் காட்டுவளங்களை பூர்விக குடிமக்கள் தடை விதித்தது. இதனால் பூர்வீக குடிமக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
  • அவர்களை கட்டுப்படுத்த 1871 ஆம் ஆண்டு குற்றப்பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது.
  • காலணி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச்சட்டங்கள் இன்றளவும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

VI. விரிவான விடைளி

Question 1.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருப்புப் பாதையும், தபால் தந்தி முறையும் வளர்ச்சிபெற்றதை விவரி.
Answer:
இருப்புப்பாதை :

  • இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச்சமூகமே ஆகும்.
  • இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா எனகம்பெனியாருக்கு சந்தேகமே இருந்தது.
  • இருப்புப்பாதை போக்குவரத்தின் மூலமாக பொருளாாதார சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசிவாதிட்டு அதை வலியுறுத்தினார்.
  • எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் 300 மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
  • 1853 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் தானேவுக்கும்
  • 1854 – 55 ஆண்டுகளில் ஹௌராவுக்கும் – ராணி கஞ்சுக்கும் இடையே இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
  • தென் இந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராசுக்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது.

தபால் தந்தி :

  • தந்தி போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
  • 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்கு பின் அது அதிக முக்கியத்துவம் தேவையென்ற நிலையை எட்டியது.
  • லண்டனுக்கும், கல்கத்தாவிற்கும் இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழி வகை செய்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

11th History Guide அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் …………………..
அ) தாமஸ் சாண்டர்ஸ்
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
இ) சர் ஜான் மார்ஷல்
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
Answer:
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்

Question 2.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர். ஹர்யங்காவம்சத்தைச் சேர்ந்த ……………………
அ) பிம்பிசாரர்
ஆ) அஜதாசத்ரு
இ) அசோகர்
ஈ) மகாபத்ம நந்தர்
Answer:
அ) பிம்பிசாரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் ………………….
அ) மகாபத்ம நந்தர்
ஆ) தன நந்தர்
இ) பிந்து சாரர்
ஈ) பிம்பிசாரர்
Answer:
ஆ) தன நந்தர்

Question 4.
……………………… என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.
அ) மகாவம்சம்
ஆ) தீபவம்சம்
இ) பிரமாணம்
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) மகாவம்சம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
………………… என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
அ) முத்ராராட்சசம்
ஆ) ராஜதரங்கிணி
இ) அர்த்தசாஸ்திரம்
ஈ) இண்டிகா
Answer:
அ) முத்ராராட்சசம்

Question 6.
மெகஸ்தனிஸ் எழுதிய ……………….. சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
அ) இண்டிகா
ஆ) முத்ராராட்சசம்
இ) அஷ்டத்யாயி
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
அ) இண்டிகா

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
………………….. நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) ராஜதரங்கிணி
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) அர்த்தசாஸ்திரம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகதத்தின் தலைநகரம் ………………………
அ) ராஜகிருகம்
ஆ) உஜ்ஜயினி
இ) கோசலம்
ஈ) கோசாம்பி
Answer:
அ) ராஜகிருகம்

Question 2.
நந்தவம்சத்திற்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் ………………………
அ) மௌரியர்கள்
ஆ) சிசுநாகர்கள்
இ) ஹர்யாங்கர்கள்
ஈ) குப்தர்கள்
Answer:
ஆ) சிசுநாகர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
16 மகாஜனபதங்களில் ………………… தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அ) மகதம்
ஆ) கோசலம்
இ) காசி
ஈ) அவந்தி
Answer:
இ) காசி

Question 4.
குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு ……………….. காலத்தைச் சேர்ந்தது.
அ) பொ. ஆ. 130 – 150
ஆ) பொ. ஆ. 170 – 190
இ) பொ. ஆ. 150 – 170
ஈ) பொ. ஆ. 190 – 210
Answer:
அ) பொ. ஆ. 130 – 150

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
ஹரியங்கா வம்சத்தின் ………………………. மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
அ) பிந்து சாரர்
ஆ) பிம்பிசாரர்
இ) சந்திர குப்தர்
ஈ) அஜாகத் சத்ரு
Answer:
ஆ) பிம்பிசாரர்

Question 6.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து …………………….. வம்சம் ஆட்சிக்கு வந்தது.
அ) மௌரிய
ஆ) கனிஷ்க்
இ) வர்த்த ன
ஈ) சிசுநாக
Answer:
ஈ) சிசுநாக

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து …………………. என்ற நகரை அழித்தார்.
அ) கபிஷா
ஆ) ஆக்கிமீனைட்
இ) கதாரா
ஈ) ஹராவதி
Answer:
அ) கபிஷா

Question 8.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர் ……………………
அ) ஜான் மார்ஷல்
ஆ) கபிஷா
இ) மித்ரா
ஈ) பாணினி
Answer:
ஈ) பாணினி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 9.
நாணயத்திற்கான இந்திய சொல்லான ………………… பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
அ) கசாய்
ஆ) லிடா
இ) கார்சா
ஈ) டிடா
Answer:
இ) கார்சா

Question 10.
அலெக்ஸாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர் ………………………
அ) அம்பி
ஆ) போரஸ்
இ) பிரசேனஜித்
ஈ) கோசலம்
Answer:
அ) அம்பி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 11.
அலெக்ஸாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர் …………………. எனப்படுகிறது.
அ) ஜீலம்
ஆ) பாரசீக
இ) ஹைடாஸ்பஸ் போர்
ஈ) தட்சசீல
Answer:
இ) ஹைடாஸ்பஸ் போர்

Question 12.
……………………. தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
அ) பிந்துசாரர்
ஆ) அஜாத சத்ரு
இ) மகாபத்ம நந்தர்
ஈ) போரஸ்
Answer:
ஆ) அஜாத சத்ரு

Question 13.
முதல் நந்த அரசர் …………………..
அ) அஜாத சத்ரு
ஆ) மகாபத்ம நந்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) பிந்து சாரர்
Answer:
ஆ) மகாபத்ம நந்தர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 14.
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு …………………..
அ) பொ. அ. மு. 236
ஆ) பொ. அ. மு. 232
இ) பொ. அ. மு. 326
ஈ) பொ. அ. மு. 362
Answer:
இ) பொ. அ. மு. 326

Question 15.
சந்திரகுப்தர் …………………. ல் மௌரிய பேரரசை அமைத்தார்.
அ) பொ. அ. மு. 297
ஆ) பொ. அ. மு. 272
இ) பொ. அ. மு. 321
ஈ) பொ. அ. மு. 231
Answer:
இ) பொ. அ. மு. 321

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 16.
மெகஸ்த னிஸ் எழுதிய நூல் ………………………
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) முத்ராராட்சசம்
இ) இண்டிகா
ஈ) தீபவம்சம்
Answer:
இ) இண்டிகா

Question 17.
கூற்று : அலெக்ஸாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸாண்டரிடம் நடந்து கொண்டார்.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.

Question 18.
கௌடில்யர் எழுதிய நூல் …………………………
அ) முத்ராராட்சசம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) தீபவம்சம்
ஈ) மகாவம்சம்
Answer:
ஆ) அர்த்தசாஸ்திரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 19.
விஷ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர் ……………………..
அ) சாணக்கியர்
ஆ) விசாகதத்தர்
இ)சந்திரகுப்தர்
ஈ) பிந்து சாரர்
Answer:
அ) சாணக்கியர்

Question 20.
ஹதிகும்பா கல்வெட்டு …………………. பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.
அ) ஹரியங்கா
ஆ) மௌரியர்கள்
இ) நந்தர்கள்
ஈ) சிசுநாகம்
Answer:
இ) நந்தர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 21.
“இந்து” என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு ……………………….
அ) அய்கோப்ன கல்வெட்டு
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு
இ) ஜீனாகத் கல்வெட்டு
ஈ) சாரநாத் கல்வெட்டு
Answer:
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு

Question 22.
பாடலிபுத்திரத்தில் அசோகரால் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்ட ஆண்டு
அ) பொ. ஆ. மு. 350
ஆ) பொ. ஆ. மு. 450
இ) பொ. ஆ. மு. 250
ஈ) பொ. ஆ. மு. 400
Answer:
அ) பொ. ஆ. மு. 350

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

II. குறுகிய விடை தருக :

Question 1.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
Answer:

  • ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
  • அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
  • கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
  • லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.

Question 2.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • மகாபத்ம நந்தர் நந்த பேரரசின் முதல் அரசர்.
  • சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
  • நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
  • நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் இவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
எதன் காரணமாக மகா அலெக்சாண்டர் போரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?
Answer:

  • போரஸ் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டார்.
  • அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைடாஸ்பெஸ் போர் போரஸ் மன்னனுக்கு எதிராக நடைபெற்றது.
  • போரின் முடிவில் அலெக்சாண்டரால் போரஸ் கைது செய்யப்பட்டார்.
  • பின்னர் போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பி தந்தார்.

Question 4.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
Answer:

  • கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
  • மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்..
  • ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
Answer:

  • கெளடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியரின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்குகின்றது.
  • மெகஸ்தனிஷ் எழுதிய இண்டிகா – சந்திரகுப்தரின் – அரசு நிர்வாகத்தைப் பற்றி கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல்.
  • பிராமணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும் உள்ளன.

Question 6.
அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைகிறது?
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்கு உலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பமாக அமைந்தது.
  • நான்கு வணிகப் பெருவழிகள் வாயிலாக கிரேக்க வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்றபடி இது உதவியது.
  • இது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு தருக : முத்ராராட்சசம்
Answer:

  • முத்ராரர்ட்சசம்’ என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
  • இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் ‘சாணக்கியர் அல்லது ‘கௌடில்யா’ தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.

Question 2.
ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.
Answer:

  • குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்தில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
  • ருத்ரராமன் என்ற மன்னர் இக்கல்வெட்டை செதுக்கினார்.

இக்கல்வெட்டு இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

  • மேற்கே குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
  • சந்திர குப்தரின் புகழ் அவர் இறந்து நான்கு நூற்றாண்டு ஆன பின்னரும் தொடர்ந்தது என்பகைக் கூறுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
குறிப்பு வரைக. தட்சசீலம் :
Answer:

  • தட்சசீலம் கல்வி மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் முக்கிய மையமாகும். 1940ல் சர்ஜாண் மார்ஷல் இந்த நகரைக் கண்டறிந்தார்.
  • இங்கு கல்வி கற்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வந்துள்ளார்கள்.
  • எந்த ஒரு நாகரீகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக தட்சசீலம் கருதப்படுகிறது.
  • பாணினி தனது புகழ்பெற்ற “அஷ்டத்யாயி” என்ற இலக்கிய நூலை இங்கு தான் எழுதினார்.

Question 4.
குறிப்பு வரைக. பிந்துசாரர்
Answer:

  • சந்திர குப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆட்சியில் அமர்ந்தார்.
  • பிந்து சாரர் நல்ல திறமையான அரசர், மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
Answer:

  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத் தோற்றம் பற்றியும், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் தன்மையை அறிய முடிகிறது.
  • கங்கைப் பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த சான்றுகளைத் தந்துள்ளன.

Question 2.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
Answer:

  • பொ. ஆ. மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
  • கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
  • வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில் முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
  • சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
  • முடியாட்சி அரசுகளுள் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
  • பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
  • மேற்குலகிற்காக வணிகப் பெரு வழிகள் திறக்கப்பட்டன.
  • இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
  • மௌரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
  • சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது.

Question 4.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
Answer:

  • மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
  • அசோகரது ஆட்சிகாலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
  • போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
  • இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருந்திருக்க வேண்டும்.
  • போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
Answer:

  • நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
  • ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
  • சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற
    இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

Question 6.
இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • அர்த்தசாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் விவசாயப் பொருட்களின் பட்டியலைத் தருகிறது.
  • இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி கம்பளி, பட்டு, வாசணை மரக்கட்டை, விலங்குத்தோல், நவரத்தினக் கற்கள் அடங்கும்.
  • அவுரி (சாயம்), தந்தம்? ஆமை ஓடு, முத்து, வாசணை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுப்படுத்தினார்?
Answer:
அஜாதசத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார்.
பொ. ஆ. மு. 461 இல் அஜாகத் சத்ரு மறைந்த போது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.

Question 2.
இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?
Answer:
ஈரானில் உள்ள பெர்சிபோலிசிஸ் காணப்பட்ட முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் “இந்து” என்ற வார்த்தை முதன் முறையாகக் காணப்படுகிறது.
சிந்துநதியை குறிக்கும் “சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் “இந்து” வானது. கிரேக்கர்கள் ளுேைனர என்பதில் உள்ள ளு ஐ நீக்கிவிட்டு, ஐனேர என்றார்கள். அது பின்னர் ஹிந்து என்றானது. பின்னர் அதிலிருந்து ‘இந்தியா வந்தது.

Question 3.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம்.

பொ. ஆ. மு. 1380 ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களின் இந்தரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் மூன்றாம் பௌத்த சங்கம் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. பொ. ஆ.மு. 250 இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும்.
  • அசோகரது ஆழமான பௌத்த ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரசு அதரவு கிட்டியது.
  • பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகாரர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும்.
  • இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.
Answer:
மௌரிய பேரரசு பற்றி அறிந்துகொள்வதற்கு பல வகையான சான்றுகள் கிடைத்துள்ளன.
1. இலக்கிய ஆதாரங்கள்
2. தொல்லியல் சான்றுகள்
3. அசோகரின் கல்வெட்டுகள்
4. பிற சான்றுகள்

1. இலக்கிய ஆதாரங்கள் :

  • இந்து மத இலக்கியமான பிராமணங்கள்
  • இலங்கையில் கிடைத்த பாலி மொழி நூலான மகாவம்சம் ஆகியவைகளில் மௌரிய பேரரசு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது.
  • சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியர்களின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல் மற்றொரு சிறந்த இலக்கிய சான்றாகும்.

2. தொல்லியல் சான்றுகள் :

  • வரலாற்றின் தொடக்க காலம் பற்றி அறிந்துகொள்ள தரும் முக்கியமான சான்றாக விளங்குகிறது.
  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத்தோற்றம், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.

3. அசோகரின் கல்வெட்டுகள் :

  • மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டு | கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
  • பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ. ஆ. 1915 இல் அந்த அரசர் அசோகர் தான் என உறுதிசெய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை
    மறு உருவாக்கம் செய்தவதை சாத்தியமாக்கியது.

4. பிற சான்றுகள் :

  • குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் பாறைக்கல்வெட்டு – ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இது தரும் செய்தி .
  • மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரிய பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. .
  • சந்திரகுப்தர் இறந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலும் நாட்டின் பல பகுதிகளில் அறியப்பட்டவராக இருந்திருக்கிறார்.
  • வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துதுவத்தினை உறுதிப்படுகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
Answer:

  •  கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்றும் பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
  • அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படி நிலைகளைக் கொண்டதாக இருந்தது.

மாகாண நிர்வாகம் :

  • நாட்டின் நிர்வாகத்தலைவர் அரசர்.
  • அரசருக்கு உதவியாக அமைச்சர்கள், மதகுரு. மகாமாத்தியர்கள் என்ற செயலாளர்கள் இருந்தனர்.
  • தலைநக;ா பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டது.
  • எஞ்சியப் பகுதிகள் சுவர்ணகிரி, உஜ்ஜயினி, தட்சசீலம், தோசாலி என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன.
  • ஒரே மாதிரியான நிதி வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் இருந்தது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர் நிதி அமைச்சர் போல் இருந்தார்.
  • வரி வசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு.
  • ஒவ்வொரு துறையிலும், மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர்.

மாவட்ட, நகர மற்றும் கிராம நிர்வாகம்:

  • மாவட்ட நிர்வாகம், ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்று அழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
  • நகர நிர்வாகம் நகரகா என்பவர் வசம் இருந்தது.
  • கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது.

வருவாய் ஆதாரம் :

  • பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளை சேமிக்க கிடங்குகள் இருந்தன . கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வசதிகள் இருந்தன.
  • நிலவரி, நீர்பாசன வரி, வீட்டு வரி, சுங்க வரி மற்றும் நுழைவு வரி உள்ளீட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன.
  • காடுகள், சுரங்கங்கள் ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்களாகும்.

நீதி ஆதாரம் :

நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. தர்மஸ்தியா, கந்தகோசந்தனா என்ற இரண்டு வகை நீதிமன்றங்கள் இருந்தன.

தர்மஸ்தியா :

திருமணம் வாரிசுரிமை உள்ளிட்ட குடியுரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இதில் மதச்சட்டங்கள் நன்கு தெரிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமர்த்தியாக்களும் இருந்தன.

கந்தகோசந்தனா :

  • இதன் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இதிலும் மூன்று நீதிபதிகளும், மூன்று செயலாளர்களும் இருந்தனர்.
  • சமூக விரோதச் செயல்களை அறிய ஒற்றர் முறை இருந்தது.
  • குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது.
  • மனித நேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன்மாதிரி அரசாக மௌரியப் பேரரசு இருந்துள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
Answer:
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எழுத்து முறை :
மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்து முறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.

இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறம் இருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.

நாணயம் :
பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும் நாணயத்திற்கான இந்தியச் சொல்லான “கார்சா” பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

கல்வெட்டு :
அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமினைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.

கட்டிடக்கலை:
மௌரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன.

தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன.
  • 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும்.
  • 2 கல்வெட்டுக் கட்டளைகள்
  • 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள்
  • சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள்
  • மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டு கட்டளைகள் கிடைத்துள்ளன.
  • இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.

இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்.

இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிகை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.

வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து, அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
Answer:
அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.

அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.

எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசாகரின் கட்டளைகளாக இருந்தன.

தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.

அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறினார்.

மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.

அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
Answer:

பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.

சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.

அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

காலக்கோடு வரைக.
V. பேரரசு உருவாக்க காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து காலக்கோடு வரைக.

நிகழ்ச்சி

ஆண்டுகள்

1. சைரஸ் (பாரசீகப் பேரரசர்) படையெடுப்புபொ.ஆ.மு. 530
2. நந்தர்கள் மகதத்தில் தங்களது பேரரசைத் தோற்றுவித்தல்பொ. ஆ. மு. 362
3. அலெக்சாண்டரின் படையெடுப்புபொ. ஆ. மு. 326
4. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தல்பொ. ஆ. மு. 321
5. சந்திரகுப்தரால் செலியுகஸ் தோற்கடிக்கப்படுதல்பொ. ஆ. மு. 301
6. சந்திரகுப்தருக்குப் பின் பிந்துசாரர் ஆட்சியில் அமர்தல்பொ. ஆ. மு. 297
7. அசோகர் தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கம் கூடியதுபொ. ஆ. மு. 250
8. அசோகரின் மறைவுபொ.ஆ. மு. 231

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 16 ஐரோப்பியரின் வருகை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 16 ஐரோப்பியரின் வருகை

11th History Guide ஐரோப்பியரின் வருகை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் ……. ஆகும்.
அ) கோவா
ஆ) டையூ
இ) டாமன்
ஈ) சூரத்
Answer:
அ) கோவா

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 2.
மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த துறைமுகம் …………………ஆகும்.
அ) டையூ
ஆ) கல்கத்தா
இ பம்பாய்
ஈ) சூரத்
Answer:
ஈ) சூரத்

Question 3.
ஆங்கிலேயர் 1639ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் ………………………….. கோட்டையைக் கட்டினர்.
அ) புனித ஜார்ஜ் கோட்டை
ஆ) புனித வில்லியம் கோட்டை
இ) வேலூர் கோட்டை
ஈ) கோல்கொண்டா கோட்டை
Answer:
அ) புனித ஜார்ஜ் கோட்டை

Question 4.
வண்ண ம் பூசப்பட்ட ‘ கலம்காரி’ எனப்படும் துணிவகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி…… ஆகும்.
அ) வடசர்க்கார்
ஆ) மலபார்
இ) கொங்கணம்
ஈ) சோழமண்டலம்
Answer:
ஈ) சோழமண்டலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 5.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்……………
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
ஆ) அல்போன்ஸோ டி அல்புகர்க்
இ) நீனோ டா குன்கா
ஈ) ஆன்டோனியோ டி நாரான்கா
Answer:
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா

Question 6.
………….. ” தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை ” என்று அழைக்கப்படுகிறார்.
அ) இராபர்டோ டி நொபிலி
ஆ) அல்போன்சா டி அல்புகர்க்
இ. ஹென்ரிக்ஸ்
ஈ) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
Answer:
இ. ஹென்ரிக்ஸ்

Question 7.
…………………… போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) சாந்தோம்
இ) பரங்கிமலை
ஈ) பழவேற்காடு
Answer:
அ) மயிலாப்பூர்

Question 8.
அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள்………..
அ) ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
இ) போர்த்து கீசு கிழக்கிந்தியக் கம்பெனி
ஈ) பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி
Answer:
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி

Question 9.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமையிடம் ……… ஆகும்.
அ) காரைக்கால்
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) மதராஸ்
Answer:
இ) மசூலிப்பட்டினம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 10.
பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ……………. ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார்.
அ) மசூலிப்பட்டினம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கோவா
ஈ) புதுச்சேரி
Answer:
ஈ) புதுச்சேரி

Question 11.
இரண்டாம் சார்லஸ்வரதட்சணையாகப் பெற்ற ……………. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அ) மதராஸ்
ஆ) கல்கத்தா
இ) பம்பாய்
ஈ) தில்லி
Answer:
இ) பம்பாய்

Question 12.
முதலாம் கர்நாடகப் போரின்போது ……….. புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.
அ) பீட்டன்
ஆ) லா போர்டோனாய்ஸ்
இ) துய்ப்ளே
ஈ) மோர்ஸ்
Answer:
இ) துய்ப்ளே

Question 13.
ராபர்ட் கிளைவ் ……… இல் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச்செய்தார்.
அ) கர்நாடகப் போர்கள்
ஆ) ஏழாண்டுப் போர்
இ) பக்சார் போர்
ஈ) பிளாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 14.
வந்தவாசிப் போர் ………………. க்கிடையே நடைபெற்றது.
அ) அயர்கூட் மற்றும் லாலி
ஆ) ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி
இ அயர்கூட் மற்றும் புஸ்ஸி
ஈ) ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்ஸி
Answer:
அ) அயர்கூட் மற்றும் லாலி

Question 15.
ஏழாண்டுப் போர் ……………… யுடன் முடிவுக்கு
வந்தது.
அ) புதுச்சேரி உடன்படிக்கை
ஆ) அலகாபாத் உடன்படிக்கை
இ பாரிஸ் உடன்படிக்கை
ஈ) ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
Answer:
இ பாரிஸ் உடன்படிக்கை

II. அ. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர்.
3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது.
4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்த து.
Answer:
1) முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

ஆ.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு

1. இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
2. நறுமணத்தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
3. கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார்.
4. புதுச்சேரியில் இன்றளவும் பிரெஞ்சுத்தாக்கத்தைக் காணமுடிகிறது.
Answer:
1) இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.

III. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

அ. (i)பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது.
(ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) இரண்டும் சரி,
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) (i) சரி

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

ஆ. (i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.
(ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

இ. கூற்று : பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் : அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்றுதவறு; காரணம் சரி

ஈ. கூற்று : இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான தளத்தையும், குறிப்பாகப் பருத்தியிழைத் துணிகளுக்காகவும் புகழ்பெற்றிருந்தது.
காரணம் : நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Answer:
இ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

அ) தரங்கம்பாடி – டேனியர்
ஆ) சர் தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
இ) அன்வாருதீன் – ஆற்காடு நவாப்
ஈ) அல்புகர்க் – போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) சர்தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்

ஆ. பொருத்துக

i) சாமுத்ரி – 1.அச்சுப் பதிப்பு
ii) ஹென்ரிக்ஸ் – 2.ஹைதராபாத் நிஜாம்
iii) முசாபர் ஜங் – 3.சந்தா சாகிப்
iv) ஆற்காட்டு நவாப்- 4.கள்ளிக்கோட்டை அரசர்
அ) 4,1,2,3
ஆ) 4,3,2,1
இ) 3,2,1,4
ஈ) 2,1,4,3
Answer:
அ)4,1,2,3

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
இந்தியாவில் முதன் முதலாக வணிக மையத்தை அமைத்த ஐரோப்பியர் ……….
அ) ஆங்கிலேயர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) டென்மார்க்
ஈ) போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) பிரெஞ்சுக்காரர்

Question 2.
“சராப்” எனப்படுபவர்……….
அ) பணம் பெறுவோர்
ஆ) பணம் மாற்றுவோர்
இ உள்ளூர் வணிகர்
ஈ) வெளியூர் வணிகர்
Answer:
ஆ) பணம் மாற்றுவோர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 3.
……………… ஆங்கிலேயரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) பழவேற்காடு
இ) ஜார்ஜ் டவுன்
ஈ) பரங்கிமலை
Answer:
இ) ஜார்ஜ் டவுன்

Question 4.
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்க காரணமானவர்……………….
அ) கால்பர்ட்
ஆ) வாஸ்கோட காமா
இ) டுப்ளே
ஈ) கவுண்டிலாலி
Answer:
அ) கால்பர்ட்

Question 5.
“பட்டாவியா” என்பது…… நாடகமாகும்.
அ) இலங்கை
ஆ) இந்தியா
இ) மலேசியா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) இலங்கை

Question 6.
வாஸ்கோட காமா முதலில் இந்தியாவில் வந்து இறங்கிய இடம் …..
அ) கண்ணனூர்
ஆ) கள்ளிக்கோட்டை
இ) கொச்சி
ஈ) மங்களூர்
Answer:
ஆ) கள்ளிக்கோட்டை

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 7.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம் ………..
அ) காளிகட்டம்
ஆ) சுதநூதி
இ) கோவிந்பூர்
ஈ) பிளாசி
Answer:
ஆ) சுதநூதி

Question 8.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு ……..
அ) 1666
ஆ) 1676
இ) 1686
ஈ) 1696
Answer:
ஈ) 1696

Question 9.
சென்னை மாகாணமாக உருவான ஆண்டு ………………….
அ) 1684
ஆ) 1785
இ) 1784
ஈ) 1648
Answer:
அ) 1684

Question 10.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ……………
அ) 1662
ஆ) 1663
இ) 1664
ஈ) 1674
Answer:
இ) 1664

Question 11.
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு
அ) 1640
ஆ) 1641
இ) 1642
ஈ) 1643
Answer:
அ) 1640

Question 12.
கான்ஸ்டான்டி நோபிளை துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு ………………..
அ) 1543
ஆ) 1453
இ) 1534
ஈ) 1463
Answer:
ஆ) 1453

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 13.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு ……………
அ) 1664
ஆ) 1554
இ) 1600
ஈ) 1500
Answer:
இ) 1600

Question 14.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைநகரம் …………………..
அ) பாண்டிச்சேரி
ஆ) காரைக்கால்
இ) ஏனாம்
ஈ) மாஹி
Answer:
அ) பாண்டிச்சேரி

Question 15.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் ………………..
அ) கல்கத்தா
ஆ) சென்னை
இ) மும்பை
ஈ) கொச்சி
Answer:
ஆ) சென்னை

Question 16.
டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்ற ஆண்டு ………………….
அ) 1642
ஆ) 1742
இ) 1724
ஈ) 1746
Answer:
ஆ) 1742

Question 17.
ஆங்கில இந்திய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிக மையம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர்…….
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஈ) ஜஹாங்கீர்

Question 18.
மலாக்கா தீவை கைப்பற்றி பாரசீக வளைகுடாவில் ஆர்மசு துறைமுகத்தை அமைத்தவர் ………
அ) அல்மெய்டா
ஆ) அல்புகர்க்
இ) பிரான்சிஸ்டே
ஈ) வாஸ்கோட காமா
Answer:
ஆ) அல்புகர்க்

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

V. சுருக்கமான விடையளி

Question 1.
நாயக்க அரசுகள் யாவை? அவை நிறுவப்பட காரணம் என்ன?
Answer:

  • 1. மதுரை, 2. தஞ்சாவூர், 3. செஞ்சி ஆகியவை விஜயநகர ஆட்சியின் போது தமிழகத்தில் நிறுவப்பட்ட நாயக்க அரசுகளாகும்.
  • விஜயநகர மன்னர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணமும், ராணுவ வீரர்களை திரட்டிக் கொடுப்பதும் நாயக்க அரசுகளின் பணிகளாகும்.

Question 2.
ஆங்கிலேயர் மதராஸிஸ் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?
Answer:

  • தர்மலா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து பெற்ற நிலத்தில் 1639ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்.
  • சந்திர கிரியின் அரசர் கோட்டை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்.
  • 1684ல் ஒரு மாகாணமாக உருவானது. 1693ல் சென்னையை சுற்றியுள்ள மூன்று கிராமங்களை வாங்கினார்.
  • 1702ல் மேலும் ஐந்து கிராமங்களை விலைக்கு வாங்கினார்.

Question 3.
கைவினைப் பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • கைவினைப் பொருளுற்பத்தி நகர்புற மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைப்பெற்றது.
  • உலோக வேலைகள் நகரத்திலும், நெசவுத் தொழில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.
  • வேதியியல் பொருட்களை பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
  • சோழ மண்டலம் கலம்காரி எனப்படும் வண்ணம் பூசப்பட்ட துணிவகைக்குப் பெயர்பெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 4.
” சராப்” மற்றும் ” உண்டியல் ” பற்றி நீ அறிவன யாவை?
Answer:

  • சராப் எனப்பட்டோர் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதித்து அவற்றின் மதிப்பை பணமாக மாற்றித்தந்தனர்.
  • வணிகர்கள் பணத்தை ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக பணமாற்ற முறிகளை வழங்கினார்.
  • சராப்களால் இவ்வகை உண்டியல்கள் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றிக்கொடுக்கப்பட்டது.

Question 5.
இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக.
Answer:

  • இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோடி அல்மெய்டா ஆவார்.
  • குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கடற்படையை வலுப்படுத்தும் “ நில நீர்க் கொள்கையை ‘ ‘ அவர் அறிமுகப்படுத்தினார்.

Question 6.
“கார்டஸ் (Cartaz) முறை” என்றால் என்ன?(மார்ச் 2019)
Answer:

  • கடற்கொள்கையில் இருந்து வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் கூறிக்கொண் டனர்.
  • இதற்காக வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் என்ற பெயரில் பணம் பறித்தனர்.
  • கடற்கொள்ளை இடையூறுகளில் பலவற்றை செய்தவர்கள் போர்த்துக்கீசிய கடற்கொள்ளை யர்கள் ஆவார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 7.
இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடிற்ேறங்களின் பெயர்களையும் குறிப்பிடுக.
Answer:

  • டச்சுக்காரர்களின் குடியேற்றங்கள் மசூலிப்பட்டினம், பழவேற்காடு.
  • டச்சுக்காரர்களின் காலனியாதிக்க கோட்டைகள் நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல் பரங்கிப்பேட்டை, கடலூர், தேவனாம்பட்டினம்.

Question 8.
“வணிக நிறுவனம் ” (factory) என்றால் என்ன? 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
Answer:

  • நிறுவனம் என்பது அயல் நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
  • 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள்
    1. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி
    2. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
    3. டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி
    4. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனி

Question 9.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்.
  • இந்தியாவில் பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட வணிகப் போட்டி

Question 10.
1765 இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?அதன் கூறுகள் யாவை?
Answer:

  • 765 ல் கையெழுத்தான உடன்படிக்கை அலகாபாத் உடன்படிக்கை ஆகும்.
  • வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றது.
  • பர்த்தவான், மீட்னாபூர், சிட்டகாங், மாவட்டங்களோடு கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றனர்.
  • ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு வரைக: – அம்பாயினா படுகொலை.
Answer:

  • ஐரோப்பியர்களிடையே எழுந்த ஆதிக்க போட்டியின் விளைவாக இந்தோனேஷியாவில் இப்படுகொலை நடந்தது.
  • அம்பாய்னா என்னும் தீவில் 1623ல் ஆங்கிலேய கிழக்கிந்திய ஊழியர்கள், போர்ச்சுக்கீசியம், ஜப்பானியர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினரை டச்சுக்காரர்கள் படுகொலை செய்தனர்.
  • எனவே இது அம்பாய்னா படுகொலை என அழைக்கப்படுகிறது.

Question 2.
இருட்டறைத் துயர சம்பவம் என்பது என்ன?
Answer:

  • வங்காள நவாப் சிராஜ் – உத் – தௌலா 146 ஐரோப்பியர்களை சிறை பிடித்தார்.
  • அனைவரையும் 18க்கு 15 அடி அளவுள்ள ஒரு இருட்டு அறையில் சிறைவைத்தார்.
  • மறுநாள் பார்க்கும் பொழுது இவர்களில் 23 பேர் தவிர மீதம் உள்ள அனைவரும் இறந்து விட்டனர்.
  • இந்நிகழ்ச்சியே இருட்டறைத் துயர சம்பவம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

VI. குறுகிய விடை தருக.

Question 1.
1565 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
Answer:

  • 1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் விஜயநகர பேரரசு வலிமை குன்றியது.
  • நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
  • நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
  • இச்சூழ்நிலையில் தங்களுக்குள் மேலாதிக்கத்தை நிறுவ இவ்வரசுகள் 1590 முதல் மோதிக் கொண்டன.
  • இச்சூழ்நிலையில் 1646 ல் கோல்கொண்டா படைகள் சோழ மண்டலத்திற்குட்பட்ட பழவேற்காட்டிற்கும் சாந்தோமுக்கும் இடைப்பட்ட பகுதிகளைகைப்பற்றிக்கொண்டன.
  • டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சில இடங்களை தங்களுக்கு சொந்தமாக பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர்.

Question 2.
வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக?
Answer:
பல்வேறு குழுவை சேர்ந்தவர்களாக வணிகர்கள் இருந்தன.

அ) கீழ்நிலையில் சிறிய சந்தைகளில் வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.
ஆ) இடைநிலையில் தரகர்கள் இருந்தனர். நாட்டின் உட்பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்தனர்.
இ) மேல்நிலையில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். இவர்கள் வணிக இளவரசர்கள் அல்லது முதலாளிகளாக இருந்தனர். சூரத்தில் பனியா பார்சி வணிகர்கள், அகமதாபாத்தின் நகர் சேத்துகள், வங்காள ஜெகத் சேத்துகள், சோழ மண்டலத்து நகரத்தார் ஆகியோரை எடுத்துக்காட்டாய் கூறலாம். இவர்கள் வணிகத்தை கட்டுப்படுத்தினர்.

Question 3.
கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?
Asnwer:

  • நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா தீவுகளுடனான வணிகத்திற்கு தேவைப்படும் சில்லரைப் பொருட்களை கொள்முதல் செய்யத் தங்களுக்கு சோழ மண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை
  • இந்திய துணிகள் செலாவணி ஊடாகமாயிற்று.
  • சோழ மண்டலத்தை சேர்ந்த வண்ணம் பூசப்பட்ட துணிகளுக்கான தேவை ஐரோப்பியரை கிழக்கு கடற்கரையில் தங்கள் வணிக நிறுவனங்களை அமைத்து கொள்ளச் செய்தது.
  • துணிகளை கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களாகப் பண்டமாற்று செய்து கொண்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 4.
இந்தியத் துணிகளுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்ததோடு அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
Asnwer:

  • ஐரோப்பாவில் இந்திய துணிகளுக்கான தேவை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிப்பதாக அமைந்தது.
  • உற்பத்தி காரணிகள் (தொழிலாளர், கச்சாப் பொருள் , மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின.
  • ஜரோப்பாவில் தேவை தொடர்ந்து அதிகரித்தபோது உற்பத்திக்காக கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களை பாதித்தது.
  • தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறையையும் நெசவாளர்களும் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின.
  • அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்கு பயனளித்தாலும் நீண்டகால விளைவெண்பது அவ்வாறு இருக்கவில்லை.
  • இந்த 150 வருட காலத்தில் வணிகராக இந்தியா வந்த ஆங்கிலேயர் வணிக பேரரசை நிறுவியவர்களாக மாறி இறுதியில் நாட்டின் பெரும் பகுதி ஆட்சியாளராக மாறி இந்திய கைத்தொழிலை அழித்து தற்சார்பு விவசாயத்தை பாதிக்க செய்து நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் ஆட்சியாளராக மாறினர்.

Question 5.
பழவேற்காடு
Answer:

  • சென்னையில் இருந்து 60கி.மீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை போர்த்துக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்.
  • டச்சுக்காரர்கள் அங்கு ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையைக் கட்டினர்.
  • டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை பீடமாக இருந்தது.
  • இக்கோட்டை 400 ஆண்டுகள் கடந்தும் அதன்
  • 1610ல் பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் குடியேற்றங்களை நிறுவினர்.

Question 6.
தரங்கம்பாடி.
Answer:

  • 1620ல் வணிக இயக்குநர் ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி தரங்கம்பாடியில் டேனியர்கள் கோட்டை கட்டிக் கொள்ள உரிமையை பெற்றனர்.
  • இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696ல் தொடங்கப்பட்டதும் டென்மார்க்குக்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத்துவங்கியது.
  • தஞ்சாவூர் நாயக் அரசர் தரங்கம்பாடியை சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களை பரிசாக அளித்தார்.
  • சீர்கெடாமல் உள்ளது.
  • லுத்தரன், மதபரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு, ஹென்ரின் புலுட்சா ஆகிய இருவரும் இங்கு வந்து இந்துக்களை கிருஸ்துவர்களாக மாற்றினர். அச்சுகூடம் உருவாக்கிபைபிளை மொழிபெயர்த்தனர்.

Question 7.
ஆம்பூர் போர்.
Answer:

  • ஹைதராபாத் நிஜாமிற்கு ஏற்பட்ட வாரிசுரிமை போட்டி ஆம்பூர் போருக்கு வழிவகுத்தது.
  • ஹைதராபாத் உரிமை கோரிய முஜாபர்ஜங் கர்நாடகத்திற்கு உரிமை கோரிய  சந்தாசாகிப் ஆகிய இருவரும் பிரெஞ்சு படை உதவியுடன் அன்வருதீனை தோற்கடித்தனர். போரில் அன்வருதீன் இறந்தார்.
  • சந்தாசாகிப் ஆற்காடு நவாப் ஆனார்.
  • அன்வருதீன் மகன் திருச்சிக்கு தப்பியோடினார்.

Question 8.
“ஆனந்தரங்கர் நாட்குறிப்பு”.
Answer:

  • ஆனந்தரங்கள் பிள்ளை புதுச்சேரியின் தலைசிறந்த வணிகர்.
  • ஆனந்தரங்கள் பிள்ளையை துப்ளே தலைமை தூபாஷியாகவும் (இரு மொழிகள் அறிந்தவர்) வணிகமுகவராகவும் நியமித்தார்.
  • ஆனந்தரங்க பிள்ளையின் (1709 – 1761) நாட்குறிப்பு தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கி உள்ளது.
  • அவரின் நாட்டு குறிப்பு 1736 முதல் 1760 வரையிலான காலத்திற்க்கு (துய்ப்ளே ஆளுநராக இருந்த காலம்) முக்கியமான வரலாற்று சான்றாக உள்ளது.
  • இந்நாட்டு குறிப்பு சமகால நிகழ்வுகள் குறித்து அவருடையப் பார்வை மற்றும் அவரது கருத்துக்களின் பதிவாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
அல்புகர்க் குறிப்பு வரைக.
Answer:

  • அல்மெய்டாவுக்குப் பின் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அல்புகர்க் பதவி ஏற்றார்.
  • பீஜப்பூர் சுல்தானை தோற்கடித்து 1510ல் கோவாவைகைப்பற்றினார்.
  • கோவாவை முக்கிய வாணிக மையமாகவும், தலைநகரமாகவும் மாற்றினர்.
  • இந்தியப் பெண்களை ஐரோப்பியர்கள் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுக்கீசிய கட்டுப்பாட்டு பகுதியில் குடியேற அனுமதித்தார்.
  • முஸ்லீம் வணிகர்களை வீழ்த்தி ஐரோப்பிய வணிகர்களின் மேலாதிக்கத்தை நிலை நாட்டினார்.
  • இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலை நாட்டியவர் என போற்றப்படுகிறார்.
  • உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.

Question 2.
குறிப்பு வரைக. ராபர்ட் கிளைவ்;
Answer:

  • 1757 ம் ஆண்டு பிளாசிப் போரில் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை வெற்றி கண்டு இந்தியாவில் ஆங்கில பேரரசிற்கு அடித்தளமிட்டவர்.
  • 1764 ம் ஆண்டு பக்சார் போரில் வெற்றி பெற்று ஆங்கில ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தினார்.
  • இவர் இங்கிலாந்து திரும்பிய போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற விசாரணையை எதிர்கொண்டார்.
  • ராபர்ட் கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றாலும் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

Question 3.
போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடையக் காரணங்கள் யாவை?
Answer:

  • அல்புகர்க்குப்பின் வந்த ஆளுநர்கள் திறமை அற்றவர்கள்.
  • போர்ச்சுக்கீசியர்கள் இந்தியர்களை கிறித்துவ மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தனர். இது இந்தியர்களை போர்ச்சுக்கீசியர் மீது வெறுப்புக் கொள்ளச்செய்தது.
  • போர்ச்சுக்கீசியர்கள் விஜயநகர பேரரசுடன் மட்டுமே உறவு கொண்டிருந்தனர். விஜயநகர பேரரசு வீழ்ச்சியடைய துவங்கியதும் போர்ச்சுக்கீசிய அரசும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

VII. விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் போர்த்துக்கீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி (மார்ச் 2019)
Answer:

  • இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைகைப்பற்றினர்.
  • இந்திய அரசர்களிடையே இருந்த ஒற்றுமை இன்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.  ஐரோப்பியர்கள் போரில் வெடி மருந்துகள்,
  • போர்ச்சுக்கீசியர்கள் அரேபிய முஸ்லீம்களை வாணிபத்தில் தோற்கடித்தனர். ஆனால் அது ஆங்கிலேயருக்கு உதவியது.
  • ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்ததன் மூலம் புதிய யுரேசிய இனக்குழு உருவானது.
  • சென்னை சாந்தோம் போர்த்துக்கீசியரின் வருகைக்கான முக்கிய சான்றாக உள்ளது.
  • போர்த்துக்கீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு சேசு சபையைச் சார்ந்த சமய பரப்பாளர்கள் வந்தனர்.
  • இந்துக்கள் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டார்கள்.

Question 2.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய் , கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வாறு நிலை நாட்டியது?
Answer:
மதராஸ் :

  • 1639ல் சந்திர கிரியின் அரசர் சென்னையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்.
  • அங்கு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் – கோட்டையை கட்டினர்.
  • இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாக பெற்ற நிலப்பகுதி இது.
  • குறுகிய காலத்திலேயே சோழ மண்டலக் கடற்கரையின் தலைமையிடமாக சென்னை மாறியது.
  • 1648ல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688ல் சென்னை ஒரு மேயரையும் 10 உறுப்பினர்களையும் கொண்ட நகராட்சி அரசாக வளர்ந்தது.

பம்பாய் :

  • இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸின் திருமணப்பரிசாக பெற்ற பம்பாய் தீவு 1668ல் ஆங்கில கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
  • இதன் மூலம் பம்பாய் பிற்காலத்தில் சிறந்த வணிக மையமாகவும், மாகாணமாகவும் வளர்ச்சியுற்றது.

கல்கத்தா :

  • நீண்ட கால போரட்டத்துக்குப் பிறகு 1608ல் உரிமைகளை பெற்றனர்.
  • 1690ல் சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அமைத்தது.
  • பிற்காலத்தில் இது கல்கத்தாவாயிற்று. இங்கு 1690ல் புனித வில்லியம் கோட்டையை கட்டினார்கள்.
  • 1698ல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய பகுதிகளின் வரிவசூல் உரிமையை பெற்றது.
  • கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770 ல் இப்பகுதியின் தலைமையிடமாயிற்று.
  • இவ்வாறு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் உரிமையை நிலைநாட்டியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 3.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை?
Asnwer:
ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மூன்று போர்களை நடத்தினார். இது கர்நாடகப் பகுதியில் நடைபெற்றதால் இது கர்நாடகப் போர்கள் எனப்படுகின்றன.

முதல் கர்நாடகப் போர்:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
  • ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் இந்தியக் குடியேற்றத்திலும் போர்கள் ஏற்பட்டன.
  • போர் வெடித்த போது புதுச்சேரியின் புதிய ஆளுநர் டூப்ளே சென்னை ஆளுநர் மோர் சிடம் ஐரோப்பாவில் போர் மூன்டாலும் இங்கு நடுநிலை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் கர்நாடகப் போர்:

  • இந்தியாவில் ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளின் வாரிசுரிமைப் போர்களில் தலையிடுவதன் மூலம் இந்தியாவில் பிரான்சின் செல்வாக்கை உயர்த்த டூப்ளே விரும்பினார்.
  • ஹைதராபாத்தில் முசாபர் சங்கையும், ஆற்காட்டில் சந்தா சாகிப்பையும் ஆதரித்தார். இது இரண்டாம் கர்நாடகப் போருக்கு காரணமாயிற்று.

மூன்றாம் கர்நாடகப் போர்:

  • ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் விளைவாக இந்தியாவிலும் 3ம் கர்நாடகப் போர் ஏற்பட்டது.
  • ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன் ராபர்ட் கிளைவ் வங்காளத்திலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றத்தை தாக்கினார். இது 3 வது கர்நாடகப் போருக்கு வித்திட்டது.

Question 4.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்.?
Answer:

  • 1757ல் பிளாசி யுத்தத்தில் ராபர்ட் கிளைவ் வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவை தோற்கடித்தார். வங்காள அரசை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்தார்.
  • வங்காள நவாப் முகலாயப் பேரரசர்ஷாஆலமுடன் இணைந்து 1764ல் பக்சார் என்னுமிடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர்.
  • ஆங்கிலேயப்படைகள் வெற்றிபெற்றது.
  • அலகாபாத் உடன்படிக்கையின்படி போர் முடிவடைந்தது.
  • இதன்படி வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் வரி வசூல் செய்யும் உரிமையையும்,
  • வங்காளத்தில் பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களின் மீது
  • ஆங்கிலேயர் வங்காளப் பகுதியின் முழு ஆட்சியாளராக மாறினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 5.
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
Answer:

  • ஜனவரி 1,1697 அன்று துய்ப்ளே ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது அறிவியல் நாட்டத்தை திருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த 1715ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கப்பல் ஒன்றில் அனுப்பிவைத்தார்.
  • 1720ல் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு கவுன்சில் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
  • கல்கத்தா அருகில் உள்ள சந்திர நாகூரில் பிரெஞ்சு விவகாரங்களுக்கான மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • அவரது இறப்பான பணியால் 1742ல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை விரிவாக்குவதை தமது நோக்கமாகக் கொண்டு தமது நடை, உடை, பாவனைகளில் இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடித்தார்.
  • இந்தியக் குடிமக்களைக் கொண்டே ராணுவப் படையை உருவாக்கினார்.
  • பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவன முன்னேற்றத்திற்காக சொந்த உடைமைகளை செலவிட்டு டூப்ளே வறுமையில் வாடினார்.
  • பிரெஞ்சு அரசு அவருக்கு நிதி உதவி செய்ய மறுத்துவிட்டது.
  • இறுதியில் வறுமை நிலையில் யாரும் அறியாத நிலையில் நவம்பர் 10,1763ல் உயிர் நீத்தார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாஸ்கோடகாமா இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையத்தை ஏற்படுத்தியதை விவரி.
Answer:

  • தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார்.
  • கள்ளிக் கோட்டை அரசர் (சாமரின்) சாமுத்ரியினுடைய நட்புறவு வாஸ்கோட காமாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.
  • 1498 ஆகஸ்ட் 29 ம் நாள் தன்னுடன் வந்தவர்களில் 55 மாலுமிகளுடனும் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர் திரும்பினார்.
  • வாஸ்கோட காமாவின் வெற்றி போர்ச்சுக்களை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பிவைக்க தூண்டியது.
  • 1502 அக்டோபர் 29 ம் நாள் 20 கப்பல்களுடன் மீண்டும் வாஸ்கோட காமா கள்ளிக்கோட்டை வந்தார்.
  • அங்கிருந்து அதிக வசதிகளை கொண்டு கொச்சிக்கு சென்றார்.
  • ஐரோப்பாவில் வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமையை உடைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.
  • கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
  • இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அராபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார்.
  • போர்ச்சுக்கல்லுக்கு திரும்பும் முன்னர் கொச்சியில் ஒரு சரக்கு கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச் சாலையையும் நிறுவினார்.
  • வாஸ்கோட காமா மேற்கண்டவாறு இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையங்களையும் போர்ச்சுக்கீசிய ஆட்சி நடப்பதற்குமான அடித்தளம் இட்டார் என்றால் அது மிகையாகாது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 16 ஐரோப்பியரின் வருகை

Question 2.
பரதவ குல மக்கள் எவ்வாறு கிறித்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதை விவரி.
Answer:

  • மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துக்கீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம்களுக்கிடையே 1530களில் மோதல்கள் நடந்தன.
  • இதை பொருத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம் பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்ச்சுக்கீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர்.
  • இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட போர்ச்சுக்கீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களை கீழைக் கடற்கரைக்கு அனுப்பினர். ஆயிரக்கணக்கான பரதவ குல மக்கள் இக்குருமார்களால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறினர்.
  • இதனைத் தொடர்ந்து சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542ல் கோவா வந்தார்.
  • பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்.
  • சோழ மண்டல கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 15 மராத்தியர்கள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 15 மராத்தியர்கள்

11th History Guide மராத்தியர்கள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் ……………………
அ) மராத்தியர்
ஆ) முகலாயர்
இ ஆங்கிலேயர்
ஈ) நாயக்கர்
Answer:
அ) மராத்தியர்

Question 2.
சிவாஜியின் குரு ………………….. ஆவார்.
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) ராம்தாஸ்
இ துக்காராம்
ஈ) ஷாஜி போன்ஸ்லே
Answer:
ஆ) ராம்தாஸ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 3.
புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் …………………. க்கும் இடையே கையெழுத்தானது.
அ) அஃப்சல்கான்
ஆ) செயிஷ்டகான்
இ ஜெய்சிங்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ ஜெய்சிங்

Question 4.
சிவாஜியின் ஆலோசனை சபை…………………. என்று அழைக்கப்பட்டது.
அ) அஷ்டபிரதானம்
ஆ) அஷ்டதிக்கஜங்கள்
இ நவரத்தினங்கள்
ஈ) பஞ்சபாண்டவர்கள்
Answer:
அ) அஷ்டபிரதானம்

Question 5.
மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ………….. செளத் என வசூலிக்கப்பட்டது.
அ) 1/3
ஆ) 1/4
இ) 6
ஈ) 1/10
Answer:
ஆ) 1/4

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக …………………… இருந்தார்
அ) நாயக்
ஆ) ஹவில்தார்
இ பர்கிர்
ஈ) ஷைலேதார்
Answer:
அ) நாயக்

Question 7.
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா ……….. ஆவார்.
அ) முதலாம் பாஜி ராவ்
ஆ) பாலாஜி விஷ்வநாத்
இ பாலாஜி பாஜி ராவ்
ஈ) இரண்டாம் பாஜி ராவ்
Answer:
அ) முதலாம் பாஜி ராவ்

Question 8.
………….. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
அ) அஹமது ஷா அப்தலி
ஆ) நாதிர் ஷா
இ) ஷஜா – உத் – தௌலா
ஈ) நஜீப்-உத்-தௌலா
Answer:
ஆ) நாதிர் ஷா

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 9.
…………………. உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ – மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அ) மதராஸ் உடன்படிக்கை
ஆ) பூனா உடன்படிக்கை
இ சால்பை உடன்படிக்கை
ஈ) பேசின் உடன்படிக்கை
Answer:
இ சால்பை உடன்படிக்கை

Question 10.
இரண்டாவது ஆங்கிலோ – மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் – ஜெனரலாக இருந்தவர் ………………….
அ) காரன்வாலிஸ் பிரபு
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) ஹேஸ்டிங்ஸ்பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு

Question 11.
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ……………… ஏற்றிருந்தனர்.
அ) தேஷ்முக்கு
ஆ) குல்கர்னி
இ) கொத்வால்
ஈ) பட்டேல்
Answer:
ஈ) பட்டேல்

Question 12.
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர் ………………………. ஆவார்.
அ) பாலாஜி பாஜிராவ்
ஆ) நானா சாகிப்
இ இரண்டாம் பாஜிராவ்
ஈ) பாலாஜிவிஸ்வநாத்
Answer:
ஈ) பாலாஜிவிஸ்வநாத்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 13.
நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் …………….
அ) இரண்டாம் சரபோஜி
ஆ) இராஜா தேசிங்கு
இ) கிருஷ்ணதேவராயர்
ஈ) பிரதாப்சிங்
Answer:
இ) கிருஷ்ணதேவராயர்

Question 14.
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ……………………… இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
அ) சரஸ்வதி மஹால்
ஆ) முக்தாம்பாள் சத்திரம்
இ நவ வித்யா
ஈ) தன்வந்திரி மஹால்
Answer:
ஈ) தன்வந்திரி மஹால்

Question 15.
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
அ) குமாரசம்பவ சம்பு
ஆ) தேவேந்திர குறவஞ்சி
இ) முத்ரராஷ்ஸ்சாயா
ஈ) குமாரசம்பவம்
Answer:
இ) முத்ரராஷ்ஸ்சாயா

II. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு –

அ. 1. சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
4. சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.
Answer:
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.

ஆ.
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
2. 1749 இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹு தோற்கடித்துக்கொன்றார்.
3. பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது.
4. தஞ்சை மராத்திய அரசின் போன்ஸ்லே வம்சத்து கடைசி அரசர்வெங்கோஜி ஆவார்.
Answer:
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

III. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

அ. (i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும்.
(ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (i) மற்றும் (ii) தவறு
Answer:
அ) (i) சரி

ஆ. (i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.
(ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரியானவ
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
இ) (i) மற்றும் (ii) சரியானவை

இ. கூற்று (கூ) : மூன்றாம் பானிப்பட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
காரணம் (கா) : இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
அ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி ; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

ஈ. கூற்று (கூ) : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
காரணம் (கா) : மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்றவிரும்பினர்.
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை
Answer:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை

1. சிவாஜி – மலை எலி
2. முதலாம் பாஜிராவ் -உத்கிர் போர்
3. தைமுர்ஷா -லாகூரின்வைஸ்ராய்
4. தேசிங்கு – செஞ்சி
Answer:
2) முதலாம் பாஜிராவ் – உத்கிர் போர்

ஆ. பொருத்துக

i) அமத்யா ‘ -1.அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்
ii) சுமந்த் – 2.பொது ஒழுக்க நடைமுறைகள்
iii) பண்டிட் ராவ் -3.போர் மற்றும் அமைதி
iv) வாக்கிய – 4.அரசின் அனைத்து பொது நாவிஸ் கணக்குகள்
1) 4,1,2,3
2) 1,2,4,3
3) 4,3,2,1
4) 1,4,2,3
Answer:
3) 4,3,2,1

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

இ. சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும். ( மார்ச் 2019 )
1. சாம்பாஜி, சாஹீ, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
3. ராஜாராம், சாம்பாஜி, சாஹீ, இரண்டாம் சாம்பாஜி. 4. சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹீ.
Answer:
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சிவாஜியின் பாதுகாவலர் …………
அ) தாதாஜி கொண்டதேவ்
ஆ) நானாபட்னாவிஸ்
இ) ராம்தாஸ்
ஈ) தாத்தாஜி சிந்தியா
Answer:
அ) தாதாஜி கொண்டதேவ்

Question 2.
சிவாஜி அரசின் தலைநகராக விளங்கியது ………..
அ) ராய்கர்
ஆ) ரெய்ச்சூர்
இ) பூனா
ஈ) தானே
Answer:
அ) ராய்கர்

Question 3.
ஒளரங்கசீப் மாமன்னராக முடிசூட்டி அரியணை ஏறிய ஆண்டு
அ) 1568
ஆ) 1685
இ) 1658
ஈ) 1865
Answer:
இ) 1658

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 4.
சிவாஜி சத்ரபதி அரியணை ஏறிய ஆண்டு ………………
அ) 1764
ஆ) 1674
இ) 1647
ஈ) 1746
Answer:
ஆ) 1674

Question 5.
சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு …………
அ) 1665ஜூன் 11
ஆ) 1565 ஜூன் 11
இ) 1656ஜூன் 11
ஈ) 1556ஜூன் 11
Answer:
அ) 1665ஜூன் 11

Question 6.
சிவாஜி காலமான ஆண்டு ……….
அ) 1860
ஆ) 1680
இ 1806
ஈ) 1608
Answer:
ஆ) 1680

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 7.
பாரம்பரியப்படி ……….. என்பது நிர்வாக நடை முறையின் கடைசி அலகாக இருந்தது.
அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) மாநகரம்
Answer:
ஆ) கிராமம்

Question 8.
பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள்…………………..
அ) பிரதம மந்திரி
ஆ) நிதி மந்திரி
இ ராணுவ மந்திரி
ஈ) வெளியுறவு செயலாளர்
Answer:
அ) பிரதம மந்திரி

Question 9.
மதிப்புமிகு மயிலாசனத்தை அபகரித்துச் சென்றவர் ……………………..
அ) ஆசப்கான்
ஆ) நாதிர்ஷா
இ) பாமன் ஷா
ஈ) அகமது ஷா
Answer:
ஆ) நாதிர்ஷா

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 10.
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு…………………..
அ) 1716
ஆ) 1671
இ) 1761
ஈ) 1617
Answer:
இ) 1761

Question 11.
மராத்தியர் வசித்த நிலப்பகுதி
அ) கொங்கணம்
ஆ) பிடார்
இ) மேவார்
ஈ) பெராம்
Answer:
அ) கொங்கணம்

Question 12.
மராத்தியர்களின் மத எழுச்சி பிராமண சமயம் சார்ந்தது இல்லை என கருத்து கூறுபவர்…………………………….
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி
இ நீதிபதி ரானடே
ஈ) பானர்ஜி
Answer:
இ நீதிபதி ரானடே

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 13.
சிவாஜி பீஜப்பூர் சுல்தானிடமிருந்து முதலில் கைப்பற்றிய கோட்டை ………….
அ) ராய்ச்சூர்
ஆ) புரந்தர்
இ) பராமஹால்
ஈ) தோர்னா
Answer:
ஈ) தோர்னா

Question 14.
மலையில் ஒழிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியால் கட்டி இழுத்து வருவேன் என்று சூளுரைத்த வர்…………….
அ) அப்சல்கான்
ஆ) ஆசப்கான்
இ) ஜெயசிங்
ஈ) செயிஸ்டகான்
Answer:
அ) அப்சல்கான்

Question 15.
சிவாஜி கைப்பற்றிய முகலாய முக்கிய துறைமுகம்…………..
அ) சூரத்
ஆ) டாமன்
இ) டையூ
ஈ) மும்பை
Answer:
அ) சூரத்

Question 16.
அமத்யா என்பவர் …………..
அ) வெளியுறவு செயலர்
ஆ) உள்துறை மந்திரி
இ) நிதி அமைச்சர்
ஈ) நீதித்துறை அமைச்சர்
Answer:
இ) நிதி அமைச்சர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 17.
நானாசாகிப் என்று அழைக்கப்பட்ட பேஷ்மா ……………………..
அ முதலாம் பாஜிராவ்
ஆ) பாலாஜி பாஜி ராவ்
இ பாலாஜி விஸ்வநாத்
ஈ) சாம்பாஜி
Answer:
அ முதலாம் பாஜிராவ்

Question 18.
மராத்தியரின் இராணுவ பலத்துக்கு கடைசி கட்டமாக அமைந்தது ……………………
அ) ஹைதராபாத் போர்
ஆ) உத்கிர் போர்
இ) 2 ஆம் பானிபட் போர்
ஈ) 3 ஆம் பானிபட் போர்
Answer:
ஆ) உத்கிர் போர்

Question 19.
தமிழ்நாட்டில் முதல் வன உயிரியல் பூங்காவை அமைத்த வர் …………………
அ) முதலாம் சரபோஜி
ஆ) இரண்டாம் சரபோஜி
இ இராஜ ராஜ சோழன்
ஈ) கரிகால சோழன்
Answer:
ஆ) இரண்டாம் சரபோஜி

Question 20.
நாதிர்ஷா படையெடுத்த ஆண்டு …………………..
அ) 1749
ஆ) 1739
இ) 1759
ஈ) 1839
Answer:
ஆ) 1739

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

V. சுருக்கமாக விடையளி

Question 1.
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக?
Answer:

  • என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார்.
  • அப்சல்கான் பெரும்படையுடன் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது.
  • சூழ்ச்சி மூலமாக சிவாஜியை வீழ்த்த நினைத்தார். ஆனால் அதிலும் தோல்வியே கிடைத்தது.
  • பீஜப்பூர் சுல்தான் தாமே இந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் இந்தப் பகுதியையும் வெல்ல முடியவில்லை . இறுதியாக பேச்சு வார்த்தைக்குப் பிறகு சிவாஜி ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

Question 2.
புரந்தர், உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:

  • ரஜபுத்திர தளபதி ராஜா ஜெய்சிங் 1665 ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் படைகள் சுற்றி வளைத்தன.
  • சிவாஜியின் தீரமான வீரதீர தற்காப்பு பலன் தரவில்லை .
  • இதை உணர்ந்த சிவாஜி பேச்சு வார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
  • 1665 ஜூன் 11 ஆம் தேதி ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
  • மன்சப்தாராச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

Question 3.
தாராபாய் பற்றி சிறு குறிப்பு – வரைக.
Answer:

  • ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு சாம்பாஜீயின் மகன் சாஹீ விடுதலையாகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். தாராபாய் இதை எதிர்த்தார்.
  • கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு
    தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்.
  • இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார். சாஹீவின் அதிகாரத்தை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
  • சாஹீ 1749 இல் மறைந்த பிறகு இராம ராஜா அரியணை ஏறினார்.
  • அவர் பேஷ்வாக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால் தலைமைப் பொறுப்பை அடைந்தார்.
  • தாராபாய் இதனால் ஏமாற்றம் அடைந்தார். 1761 இல் தாராப்பாய் மரணமடைந்தார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 4.
சிறு குறிப்பு வரைக.
அ) சௌத்
ஆ) சர்தேஷ்முகி
Answer:
அ) சௌத்
சௌத் சர்தேஷ்முகி என இரண்டு வரிகளைத் தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளான முகலாய மாகாணங்களிடமிருந்து பீஜப்பூர் சுல்தானிட மிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்தும் சிவாஜி வசூலித்தார். மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ‘சௌத்’ என வசூலிக்கப்பட்டது.

ஆ) சர்தேஷ்முகி :
சர்தேஷ்முகி என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார்.

Question 5.
பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answer:
இரண்டாம் பாஜிராவு மீது அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தைத் திணித்தார். 1802ல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதி கொடுக்கப்பட வேண்டும். முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித்தள்ளின.

ஆங்கிலேயருக்கு தோஆப் (ஆற்றிடைப்பகுதி, அகமது நகர், புரோக் மலைப் பகுதிகள் ஆகியன முழுமையாக கிடைத்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?’
Answer:
பேஷ்வாக்களின் கீழ் மராத்திய இராணுவ அமைப்பு முகலாய இராணுவ அமைப்பை போன்று அமைக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, ஊதியம் வழங்குவது, படைவீரர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது குதிரைப் படைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியன முகலாய இராணுவ அமைப்பைப் போன்று இருந்தது.

மராத்திய பகுதிகளிலிருந்து, சிவாஜி படைவீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பேஷ்வாக்கள் நாட்டின் அனைத்து வகுப்புகளிலிருந்தும் படை வீரர்களைச் சேர்த்த னர். அராபியர், அபிசீனியர், ரஜபுத்திரர், சீக்கியர் ஆகியோர் பேஷ்வாவின் இராணுவத்தில் இடம் பெற்றிருந்தனர்.

Question 7.
ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817 இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக?
Answer:
பூனா ஒப்பந்தம்:

  • மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே ஹோல்கர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
  • 1817 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆட்சியாளர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.
  • அதன்படி, மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து பேஷ்வா பதவி விலகினார்.
  • கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக் வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 8.
சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:
சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. மராத்திய அரசவையின் அன்றாட அலுவலகங்கள் 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகியன மோடி எழுத்து வடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன.

Question 9.
இரண்டாம் சரபோஜி சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத்திகழ்ந்தார்?
Answer:
சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார்.

Question 10.
கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.
Answer:
மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார். உள்நாட்டுப் போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
பேஷ்வா – குறிப்பு வரைக.
Answer:

  • பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் “முதன்மையான” அல்லது “ பிரதம மந்திரி ” என்பதாகும்.
  • அஷ்ட பிரதான் என்ற சிவாஜியின் அமைச்சரவையில் பேஷ்வா” முதன்மையான பதவியாகும்.
  • சிவாஜிக்குப் பின் வந்தவர்கள் திறமையற்றவர்கள் ஆதலால் பேஷ்வாக்கள் அதிக அதிகாரம் மிக்கவர்களாக மாறினர்.
  • பாலாஜி விஸ்வநாத் என்பவர் முதல் ஆற்றல் மிக்க பேஷ்வா ஆவார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 2.
“ கொத்வால்” குறிப்பு வரைக.
Answer:

  • பேஷ்வாக்கள் ஆட்சிகாலத்தில் நகர மாநகர பராமரிப்பு அதிகாரியாக செயல்பட்டவர் “கொத்வால்” என்று அழைக்கப்பட்டனர்.
  • சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், விலைவாசியை
    கட்டுப்படுத்துவதும் இவரது முக்கிய பணிகளாகும்.
  • சிவில் வழக்குகளை வைப்பதும் இவரது பணிகளில் முக்கியமானது.
  • மாதாந்திர கணக்குகளை அரசுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளையும் செய்தார்.

VI. சிறு குறிப்பு வரைக.

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்.(மார்ச் 2019)
Answer:
மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம். செங்குத்தான மலைகளும், எளிதில் அணுக முடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைக்கோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.

போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம் எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப்பெற்றனர்.

கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.

பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.

மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.

பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர்.

தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 2.
mming
Answer:

  • சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார்
  • காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
  • கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கியப் போதிலும் பாரம்பரியப் போர் முறையில் அவர்கள் பயிற்சிபெற்றனர்.
  • ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது.
  • சாரிநௌபத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
  • அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.

Question 3.
மூன்றாம் பானிப்பட்போரின் விளைவுகள்
Answer:

  • 1761 ஜனவரி 14ஆம் தேதி மூன்றாவது பானிபட் போர் நடந்தது.
  • மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவராவ் மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
  • போர்க்களத்தில் 28,000 பேரின் உடல்கள் கிடந்தன. ஹோல்கர் தப்பியோடினார்.
  • இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.

Question 4.
1775-1782 இல் நடைபெற்ற போர்
Answer:
நானா பாட்னாவில் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகராத்தைக் கைப்பற்றினார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது. சால்பை உடன்படிக்கையின் படி 1782 இல் ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டு காலத்துக்கு அமைதி நிலவியது.

Question 5.
மூன்றாவது மராத்தியப் போரின் விளைவுகள்
Answer:
பேஷ்வா முறையை ரத்து செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். உரிமைப்படி ஜாகிர்களைக் கொண்டிருந்தவர்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.

இரண்டாம் பாஜிவ் ராவ் 1851 இல் மரணமடையும் வரை வருடாந்திர ஓய்வூதியத்தின் கீழ் சிறைக்கைதியாகவே விளங்கினார்.

சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசராக உருவாக்கப்பட்டார்.

முதலாம் பாஜிராவால் உருவாக்கப்பட்ட போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.)

பூனாவின் அரச பிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக ஆனார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 6.
நயங்காரா முறை
Answer:

  • கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சிக்காலத்தில் (1509-1529) நயங்கார அமைப்பை உருவாக்கினார்.
  • என மூன்று மிகப்பெரிய நயங்காரர்களாக பிரிக்கப்பட்டது.
  • இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள்
    பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.

Question 7.
ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள்
Answer:

  • 1714 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக
  • முகலாய மன்னருக்கு கப்பம் கட்ட மறுத்ததை அடுத்து நவாத் சதத் – உல் – லா கானின் கோபத்திற்கு ஆளானார்.
  • அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார்.
  • அவரது இளம் வயது மனைவி உடன்கட்டை ஏறினார். ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.

Question 8.
‘நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன்முயற்சியாகும்’ – எவ்வாறு?
Answer:

  • அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது நவீனத் திட்டமாக இருந்தது.
  • தரங்கம்பாடி சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
  • ஜான் கல்வித்துறையில் புதிய பரிசோதனைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
  • பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளிமுறையை அறிமுகம் செய்தார்.
  • சரபோஜி சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
  • ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர்நிலை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமாக முன்முயற்சியாகும்.
  • பெதிய (அல்லது நவீன கல்வி முறைக்காக ‘நவ வித்யா ‘ முறையை அரசவை நடத்திய இப்பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மராத்திய நாட்டில் மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை .
  • அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது.
  • துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடி நிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
  • மேற்கண்டவாறு மராட்டிய மத எழுச்சியைப் பற்றி நீதிபதிரானடே குறிப்பிடுகிறார்.

Question 2.
சிவாஜியின் நீதி நிர்வாகம் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • நீதி நிர்வாகம் மரவு வழிபட்டதாக இருந்தது.
  • நிரந்தரமான நீதிமன்றங்களோ, வழிமுறைகளோ இல்லை
  • விசாரணை முறை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது.
  • கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
  • கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
  • சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாய தேர்வு ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார்.
  • ஹாஜிர் மஜ்லிம் இறுதி மேல்முறையீடு நீதிமன்றமாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

VII. விரிவான விடையளி

Question 1.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தது?
Answer:
சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரியப் போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.

ரெஜிமேண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாட்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தனர். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப்படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்கார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.

சாரிநௌபத் குதிரைப் படையின் தலைமைத்தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும் தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டார். இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படை வீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.

Question 2.
சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.
Answer:
நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது. பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செலுத்த வேண்டிய வரித்தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது. சிவாஜியின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.

நில வரியை வசூலிக்க குத்தகை நடைமுறையைப் பின்பற்றினார்கள். அரசுக்கு ஆண்டுத் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது. நிலத்தின் உற்பத்தித் திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. 1. தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி. 2. கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி, 3. கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதானவரி.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 3.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும். (மார்ச் 19 )
Answer:

  • பாலாஜி விஸ்நாத்தின் மகன் முதலாம் பாஜிராவ் ஆவார். இவர் பேஷ்வா பதவியை உயர்நிலைக்கு கொண்டுசென்றவர்.
  • 1720ல் பாலாஜி விஸ்வநாத் இறந்த பிறகு மராட்டிய மன்னர் சாஹூவால் முதலாம் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். போர்களில் தோல்வியே காணாதவர்.

சாதனைகள் :

  • ஹைதராபாத் நிசாமைத் தோற்கடித்தார்.
  • மால்வா, குஜராத் ஆளுநர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இதனால் பந்தேல்கண்ட் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு மராத்தியருக்கு கிடைத்தது.
  • இவரை எதிர்த்த தலைமை தளபதி திரிம்பக்ராவ் தோற்கடிக்கப்பட்டுகொல்லப்பட்டார்.
  • பிறகு தலைமை தளபதி பொறுப்பையும் ஏற்றார்.
  • 1731ன் வார்னா ஒப்பந்தப்படி கோல்ஹாபுரின் சாம்பாஜி மராத்தியரின் இறையாண்மையை ஏற்றார். 1738ல் நடைபெற்ற போரில் போர்த்துகீசியர் தோற்கடிக்கப்பட்டு கொங்கணப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

Question 4.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
Answer:

  • நில வருவாய் முக்கிய வருவாயாக இருந்தது, சௌத் மற்றும் சர்தேஷ்முகி இதர வருவாய் ஆதாரங்களாக விளங்கின. சௌத் என்பது கீழ்கண்ட வகையில் பிரிக்கப்படுகிறது.
  • ஆட்சியாளக்கு 25 சதவீதம்.
  • மாராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம்.
  • பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம்.
  • வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்.
  • வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன. தேஷ்முக்கு தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  • கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  • கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
  • பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டுவரி.
  • எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்கான வருடாந்திரக் கட்டணம்.
  • விதவைகள் மறுமணத்துக்கானவரி
  • செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி.
  • மேய்ச்சல் நிலவரி.
  • நதிக் கரையோரத்தில் பூசணி விவசாயத்துக்கான வரி.
  • வாரிசு உரிமை வரி.
  • குதிரைகளை விற்பதற்கானவரி மற்றும் பல.

மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளர்களுக்கு வரி விதித்தது. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது. நீதி பரிபாலனமும் வருவாயை ஈட்டித்தந்தது. பணப் பத்திரங்களின் மீது 25 சதவிகித கட்டணம் வசூலிக்கப்பட்டது. தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

Question 5.
நவீனக் கல்வி முறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக?
Answer:

  • இரண்டாம் சரபோஜி ஒரு தலைசிறந்த அரசர் ஜெர்மானிசமய பரப்புக்குழுவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் மூலமாகக் கல்வி பயின்ற போதிலும் அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும். என்பதுதான் அவரது அதிநவீனத்திட்டமாக இருந்தது.
  • தரகம் பாடியை சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
  • ஜான் கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்த்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
  • பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப் பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.
  • 1812ல் ஆங்கிலேய காலணி அரசுக்கு அவர் சமர்பித்த முக்கியத் திட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • சரபோஜி, சமயப்பரப்புக்குழு மற்றும் காலணி அரசுக்கு முன்னோடியாக 1803ம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பணிகளை நிறுவினார்.
  • ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
  • அனைத்து நிலைகளிலான பள்ளிகள் நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.
  • அரசவை மேன் மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
  • புதிய அல்லது நவீனத் கல்வி முறைக்காக நவ வித்யா முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது. மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
  • மனிதர்களுக்காகவும், விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரித்த ‘தன்வந்திரி மஹால்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை சரபோஜி நிறுவினார்.
  • நவீனக் கல்விமுறை தொடர்பான சரபோஜியின் புதிய முன் முயற்சிகள் தஞ்சாவூர் மேன்மக்களுக்கு அப்போதைய காலணி ஆதிக்கச் சமூக மற்றும் பொருளாதார முறைமைக்குள் நுழையவும் பயன்பெறவும் வழி செய்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 15 மராத்தியர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிவாஜியின் அஷ்ட பிரதான் என்ற அமைச்சரவை பற்றி விளக்குக.
Answer:

  • சிவாஜி பெரிய போர் வீரர் மட்டுமல்ல. ஒரு நல்ல நிர்வாகியும் கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஆலோசனைகளை கலையை வைத்திருந்தார்.
  • அஷ்டப்பிரதான் என்று அழைக்கப்பட்ட இந்த சபையில் எட்டு அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர்.

அமைச்சரவை – பொறுப்புகள் :

  • பேஷ்வா – பிரதம மந்திரி ; நாட்டின் பொது நலம் மற்றும் முன்னேற்றம்
  • அமத்யா – நிதி அமைச்சர் ; அரசின் பொது கணக்குகளை ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது.
  • வாக்கிய நாவிஸ் – மந்திரி ; அரசரின் நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் – ஆவணங்கள் வடிவில் பராமரித்தல்.
  • சுமந்த் – வெளியுறவுச் செயலர் ; மன்னருக்கு போர் அமைதி, அனைத்து வகையிலும் ஆலோசனை வழங்கல், தூதர்களை வரவேற்றல்.
  • சச்சிவ் – உள்துறை செயலாளர் ; அரசரின் கடிதப் போக்குவரத்து வரைவுகளை திருத்துதல், பர்கானாக்களின் கணக்குகளை பராமரித்தல்.
  • பண்டிட் ராவ் – மதத்தலைவர் ; மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களுக்கும் பொறுப்பு. சமூக பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிபடுத்தும் நீதிபதியாக
  • நியாய தீஷ் – தலைமை நீதிபதி ; குடிமை மற்றும் ராணுவ நீதிக்கு பொறுப்பேற்றிருந்தார் .
  • சாரி நௌபத் – தலைமைத் தளபதி ; ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு, பராமரிப்பு, நிர்வகிப்பது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

11th History Guide பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புத்தர் தனது முதல் போதனையை …………… இல் நிகழ்த்தினார்.
அ) சாஞ்சி
ஆ) வாரணாசி
இ) சாரநாத்
ஈ) லும்பினி
Answer:
இ) சாரநாத்

Question 2.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ………….. ஆகும்?
அ) சீவகசிந்தாமணி
ஆ) அச்சரங்க சூத்திரம்
இ) கல்பசூத்திரம்
ஈ) சமனபலசுத்தா
Answer:
ஈ) சமனபலசுத்தா
Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
பகவதி சூத்திரம் ஒரு ………………… நூலாகும். இல் நிகழ்த்தினார்.
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) ஆசீவகம்
ஈ) வேதம்
Answer:
ஆ) சமணம்

Question 4.
……………………… வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
அ) இரும்பு
ஆ) வெண்கலம்
இ) செம்பு
ஈ) பித்தளை
Answer:
அ) இரும்பு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு …………. ஆகும்.
அ) கோசலம்
ஆ) அவந்தி
இ) மகதம்
ஈ) குரு
Answer:
இ) மகதம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
…………………. தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.
அ) செம்பு
ஆ) தங்கம்
இ) இரும்பு
ஈ) இதில் எதுவும் இல்லை
Answer:
இ) இரும்பு

Question 2.
மகாவீரர் பிறந்த இடம் ……………
அ) பாடலிபுத்திரம்
ஆ) குசுமபுரம்
இ) குண்டகிராமம்
ஈ) கபிலபஸ்து
Answer:
இ) குண்டகிராமம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) பால
ஆ) பிரகிருதம்
இ) சமஸ்கிருதம்
ஈ) இந்தி
Answer:
அ) பால

Question 4.
ஆரியர்கள் ஏறத்தாழ பொ. ஆ. மு. ……….. வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயர ஆரம்பித்தனர்.
அ) 1000
ஆ) 1500
இ) 1750
ஈ) 2000
Answer:
அ) 1000

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5. ………….. என்ற சொல்லுக்கு ‘இனக்குழு தன் காலை பதித்த இடம் என்று பொருள்.
அ) மகாஸ்ரீனபதம்
ஆ) ஜனபதம்
இ) கிசாசம்சிக்கா
ஈ) குரு பாஞ்சாலம்
Answer:
ஆ) ஜனபதம்

Question 6.
தொடக்ககால நூல்களில் ………… மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 13
இ) 16
ஈ) 17
Answer:
இ) 16

Question 7.
மிகவும் பிரபலமான விரிஜ்ஜி கண சங்கத்தின் தலை நகரம் …………………..
அ) மிதிலை
ஆ) வைசாலி
இ) ராஜகிருஹம்
ஈ) தட்சசீலம்
Answer:
ஆ) வைசாலி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 8.
வேளாண் நிலத்தின் மீதான வரி ……………… எனப்பட்டது.
அ) சுரா
ஆ) சுல்கா
இ) பலி
ஈ) பாகா
Answer:
இ) பலி

Question 9.
செல்வமிக்க நில உரிமையாளர்கள் ………… என்றழைக்கப்பட்டனர்.
அ) தாசர்
ஆ) கிரகபதி
இ) கர்மகாரர்
ஈ) கிரிஷாகா
Answer:
ஆ) கிரகபதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 10.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும், …………….. எனப்பட்டார்கள்.
அ) சூத்திரர்
ஆ) ஷத்திரியர்
இ) வணிகர்
ஈ) கர்மகாரர்
Answer:
அ) சூத்திரர்

Question 11.
பௌத்த ஆவணங்களின்படி ‘ஆசீவகம்’ என்ற பிரிவை தோற்றுவித்தவர் …………………….
அ) கிஸாசம்ஹிக்கா
ஆ) மக்காலி கோசம்
இ) கச்சாயனர்.
ஈ) நந்த வாச்சா
Answer:
ஈ) நந்த வாச்சா

Question 12.
கௌதமபுத்தரை சந்தித்த பேரரசர்.
அ) அசோகர்
ஆ) அஜாதா சத்ரு
இ) சந்திரகுப்தர்
ஈ)பிந்துசாரர்
Answer:
ஆ) அஜாதா சத்ரு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 13.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப் பட்டதாக நம்பியவர்………………
அ) அஜிதன்
ஆ) சார்வாஹர்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 14.
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 15.
சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் …..
அ) ரிஷபர்
ஆ) அஜிதானந்தர்
இ) அரிஷ்டநேமி
ஈ) மகாவீரர்
Answer:
அ) ரிஷபர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 16.
மகாவீரர் சமண மதத்தின் ……………… வது தீர்த்தங்கரர்.
அ) 21
ஆ) 22
இ) 23
ஈ) 24
Answer:
ஈ) 24

Question 17.
சமண மதத்தில் வென்னிற ஆடை உடுத்தியவர் …………………..
அ) திகம்பரர்கள்
ஆ) ஸ்வேதம்பரர்கள்
இ) ஆசிவகர்கள்
ஈ) ஹீனயானர்கள்
Answer:
ஆ) ஸ்வேதம்பரர்கள்

Question 18.
முதல் பௌத்த சங்கம் நடைபெற்ற இடம்
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
ஈ) ராஜகிருஹம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 19.
நான்காவது பௌத்த சங்கம் நடைபெற்ற இடம் ……………………
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
அ) காஷ்மீர்

Question 20.
நான்காவது பௌத்த சங்கம் …………… காலத்தில் நடந்தது.
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) பிந்துசாரர்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) கனிஷ்கர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 21.
நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த ஆசிரியர் ………….. அ) தம்மபாலர்
ஆ) சாமிபுத்தம்
இ) ராமாணந்தர்
ஈ) புத்தர்
Answer:
அ) தம்மபாலர்

Question 22.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் …………………….
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) திருவண்ணாமலை
Answer:
இ) மதுரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

II. குறுகிய விடை தருக :

Question 1.
நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
Answer:
பாலி மொழியில் தொகுக்கப்பட்டது திரிபீடகம். அவை

  1. வினையபிடகம்,
  2. சுத்தபிடகம்,
  3.  அபிதம்ம பிடகம் என்பவையாகும்.

Question 2.
‘சார்வாகம்’ குறித்து அறிந்ததைக் கூறுக.
Answer:

  • இந்திய பொருள் முதல்வாதம் என்ற சிந்தனையாளர்கள் முதன்மையானவர் ‘சார்வாகம்’ ஆவார்.
  • இவர் ஒரு முறையான தத்துவ முறையை நிறுவினார்.
  • இவர் ஜயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். வேதங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
  • அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெறவும் முடியும் என நம்பினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
Answer:

  • மகாவீரரின் போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை .
  • சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
  • கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற முடியாது என்றார் மகாவீரர்.
  • எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.

Question 4.
ஜனபதங்களுக்கும், மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக
Answer:

ஜனபதங்கள்

மகாஜனபதங்கள்

1. ஜன என்பது இனக்குழுக்கள்1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு
2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும்2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள்

இணைக்கப்பட்ட பிரதேசமாகும்.

3. வரி அமைப்பு காணப்படவில்லை3. வரி அமைப்பு காணப்படவில்லை
4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள்,  அரசாங்கம், இறையாண்மை ஆகியவை

இங்கு காணப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
தமிழ்நாட்டின் பௌத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
Answer:

  • பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
  • சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார்.
  • பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு நாகப்பட்டினத்தில் பௌத்த கோயிலைக் கட்டினார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
Answer:
புராண, பௌத்த, சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:

  1. காந்தாரம்
  2. காம்போஜம்
  3. அசகம்
  4. வத்சம்
  5. அவந்தி
  6. சூரசேனம்
  7. சேதி
  8. மள்ளம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்ஸ்யம்
  12. வஜ்ஜி (விரஜ்ஜி)
  13. அங்கம்
  14. காசி
  15. கோசலம்
  16. மகதம்

Question 2.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
  • கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமணநூல்கள்.
  • அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
  • தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?
Answer:
சமண மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க மூன்று கொள்கைகள்
(திரிரத்தினங்கள்) மும்மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவையாவன:

  1. நன்னம்பிக்கை (சம்யோக் – தர்ஷனா)
  2. நல்லறிவு (சம்யோக் – ஞானா)
  3. நன்னடத்தை (சம்யோக் – மஹாவ்ரதா)

Question 4.
சமணத்துறவிகளுக்கான ஐமபெரும் சூளுரைகள் யாவை?
Answer:

  1. கொல்லாமை (அஹிம்சா)
  2. கள்ளாமை (அஸ்தேயா)
  3. பொய்யாமை (சத்யா )
  4. புலனடக்கம் (பிரும்மச்சரியா)
  5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா) ஆகியவை சமணத்துறவிகளின் ஐம்பெரும் சூளுரைகள் ஆகும்.

III. சுருக்கமான விடை தருக

Question 1.
காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
Answer:

  • ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர்.
  • அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர் கொண்டனர்.
  • காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கிய பங்காற்றியது.
  • கங்கைச்சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக் கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
  • பானை வணைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
  • கங்கை வட நீர்ப்பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்பு கோடாரிகளம், இரும்பு கலப்பைகளுமே வழிவகுத்தன என்ற கருத்தை R.S. சர்மா முன்வைக்கிறார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • ஆரியர்களின் வருகைக்குப்பிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
  • இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
  • குடியிருப்புகள் உருவாயின.
  • கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. அதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
  • வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
  • ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.

Question 3.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுது
Answer:
வேளாண், உபரி , கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

கங்கைப் பகுதியில் உருவான நகரங்கள்:

  • ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
  • உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்
  • வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 4.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
Answer:

  • பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
  • இக்கால கட்டத்தில் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
  • அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
    கோசலர்
    கௌதமபுத்தர்
    மகாவீரர் அஜித கேசகம்பளி ஆகியோர் ஆவார்.
  • இத்துறவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம், கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
  • இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா , மனம், உடல் ஆகிறவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
  • அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.

Question 5.
தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
Answer:

  • பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
  • மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
  • தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி) சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
  • பொ.ஆ. 470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
  • சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
  • காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.
Answer:

  •  வர்த்தமான மஹாவீரர் சமணப்பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர்.
  • வைசாலிக்கு அருகாமையில் உள்ள குந்த கிராமத்தில் ஷத்ரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார்.
  • தனது 30வது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் 12 ஆண்டுகாலம் காடுகளில் சுற்றி அலைந்தார்
  • 42வது வயதில் ஞானத்தைப் பெற்றார்
  • அதன் பின் அவர் மகாவீரர் என்ற ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்பட்டது.

Question 2.
சமணம் ஒரு சமத்துவமான மதம் – தெளிவுபடுத்துக. (அல்லது)
சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?
Answer:

  • சமணம் ஒரு சமத்துவமான மதம்.
  • பிறப்பின் காரணமாக எந்த வித ஏற்றத்தாழ்வுகளையும் அனுமதிப்பதில்லை.
  • சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர பிறப்பல்ல என கூறுகிறது.
  • ஒருவன் தன் செயலால் பிராமணனாக, சத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான் என சமணம் நம்புகிறது.
  • பிறப்பின் காரணமாக பெருமை கொள்வது பாவம் எனக் கூறுகிறது.
  • பெண்களும் துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் :

  • அரச ஆதரவை சமணம் இழந்தது.
  • திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது.
  • ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.
  • குழு மன நிலை சமணத்தை பலவீனப்படுத்தியது.
  • சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
  • ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தை பின்னுக்கு தள்ளியது.

Question 4.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
Answer:

(i) துன்பம் பற்றிய உண்மைபிறப்பு, வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது .
(ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மைஇன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்ற வற்றிற்கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும்.
(iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்)துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை
(iv)துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மைஎண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்)

 

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

IV. விரிவான விடை தருக :

Question 1.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
Answer:
அறிவுமலர்ச் சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை .
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை .
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (ளநவாள) போன்ற வங்கியாளர்கள் என புதியவர்க்கம் உருவானது.
இது தமது பொருளாதார தகுதி நிலைக்கு இணையான தகுதி நிலையைக் கோரியது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது.
மேற்கூறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும்குறிப்பிடவும்.
Answer:
ஆசீவகம் :
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினர்.

கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறிந்தவர் மக்காலி கோசலர். மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.

புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.

தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள் இதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.

புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் என்பது கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.

பகுதகச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.

அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.

குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பௌத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு ‘ குறைவுதான் என்றாலும் நாடு – முழுவதும் பரவியிருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
Answer:
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள், ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.

திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)

ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது. பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.

Question 4.
புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.
Answer:
உண்மையே தேடி அலைந்த சித்தார்த்தர்(புத்தர்) 35வது வயதில் பேரறிவு பெற்றார். அவரது போதனைகள் நான்கு பெரும் உண்மைகள் – எண் வழி மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
நான்கு பெரும் உண்மைகள்:

  1. துன்பம் பற்றிய பெரும் உண்மை
  2. துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை
  3. துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை
  4. துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழி பற்றிய பெரும் உண்மை (எண் வழிப்பாதை) ஆகியவையாகும்.

எண் வழிப்பாதைகள் :

  1. நன்னம்பிக்கை
  2. நல்லார்வம்
  3. நல்வாய்மை
  4. நற்செயல்
  5. நல் வாழ்க்கை முறை
  6. நன் முயற்சி
  7. நற்சிந்தனை

நல்ல தியானம் ஆகியவை எண்வழிப்பாதைகளாகும்.

  • புத்தர் கடவுள் பற்றி குறிப்பிடவோ, பேசவோ இல்லை .
  • கடவுளின் இருப்பை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை .
  • பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை சமத்தவத்தை வலியுறுத்தியது.
  • அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது.
  • வணிகத்தையும், சிக்கனத்தையும் ஆதரித்தது.
  • ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அனுமதிக்கவில்லை. நடை முறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை போதித்து சமத்துவ கோட்பாட்டிற்கு வித்திட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை? இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:
Answer:
1. சமயப் பிரிவினை .
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்.
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பௌத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரச ஆதரவை இழத்தல்.
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. வேத மதம் அரச ஆதரவை பெற்றது. பௌத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்.
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினர். இதனால் பௌத்தமத வளர்ச்சி பாதித்தது.
5. ஹுணர்கள் படையெடுப்பு.
ஹுண ஆட்சியாளர்களான தோராமானர், மிகுரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பௌத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு.
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவிர ஆதரவாளர்கள். ஆதலால் பௌத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பௌத்த மதம் வீழ்ச்சியுற காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு.
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பௌத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி, நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பௌத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்
Question 1.
பௌத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
Answer:
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பௌத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பௌத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பௌத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பௌத்த சங்கம் :
தலைமை தாங்கியவர் உபாலி. இடம், ராஜ கிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும், ஆனந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பௌத்த சங்கம் :
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பௌத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும்இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பௌத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பௌத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில்
தொகுக்கப்பட்டுள்ளன.

Question 2.
பௌத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
Answer:
ஸ்த விரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம், மஹாயானம் என பௌத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம் :
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பௌத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த பால’ வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியின் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம், பீகார் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன. பௌத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
தமிழ் நாட்டில் பௌத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
Answer:
பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பௌத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.)
பெ.மு. 1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம விகாரம் எனப்படுகிற பௌத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பௌத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 14 முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 14 முகலாயப் பேரரசு

11th History Guide முகலாயப் பேரரசு Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ……… யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) பீரங்கிப்படை
ஈ) யானைப்படை
Answer:
இ) பீரங்கிப்படை

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ……….. எதிராகப் போரிட்டார்
அ) ஆப்கானியர்களுக்கு
ஆ) ரஜபுத்திரர்களுக்கு
இ துருக்கியர்களுக்கு
ஈ) மராட்டியர்களுக்கு
Answer:
அ) ஆப்கானியர்களுக்கு

Question 3.
…………….. தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்கான்
ஈ) அக்பர்
Answer:
இ) ஷெர்கான்

Question 4.
………… நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அ) ஜாகீர்தாரி
ஆ) மகல்வாரி
இ) ஜமீன்தாரி
ஈ) மன்சப்தாரி
Answer:
அ) ஜாகீர்தாரி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 5.
அக்பரது நிதி நிர்வாகம் …………… நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்ஷா
ஈ) இப்ராஹிம் லோடி
Answer:
இ) ஷெர்ஷா

Question 6.
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டி விட்டதற்காக ஜ ஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் …………. ஆவார்
அ) குரு அர்ஜூன் தேவ்
ஆ) குரு ஹர் கோபிந்த்
இ) குருதேஜ் பகதூர்
ஈ) குருஹர்ராய்
Answer:
இ) குருதேஜ் பகதூர்

Question 7.
………….. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்
அ) அக்பர்
ஆ ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) ஷாஜகான்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 8.
……………. தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஈ) ஒளரங்கசீப்

Question 9.
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்ட றிந்த முதல் அரசர் …………. ஆவார்
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஷெர்ஷா
ஈ) பாபர்
Answer:
அ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 10.
ஜஹாங்கீர் மற்றும் ……… அமைத்தஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஹுமாயூன்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஆ) ஷாஜகான்

Question 11.

……………. சேர்ந்த தான் சேனை அக்பர்
ஆதரித்தார்
அ) ஆக்ராவை
ஆ) குவாலியரை
இ) தில்லியை
ஈ) மதுராவை
Answer:

Question 12.
பாதுஷாநாமா என்பது …… வாழ்க்கை வரலாறாகும்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) அக்பர்
Answer:
ஆ) ஹூமாயூன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 13.
…………. ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்
அ) தஜிகநிலகந்தி
ஆ) ரசகங்காதரா
இ மனுசரிதம்
ஈ) ராஜாவலிபதகா
Answer:
அ) தஜிகநிலகந்தி

Question 14.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ……………..
அ) தாயுமானவர்
ஆ) குமரகுருபரர்
இ இராமலிங்க அடிகள்
ஈ) சிவப்பிரகாசர்
Answer:
ஆ) குமரகுருபரர்

Question 15.
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை ?
அ) இங்கிலாந்தின் எலிசபெத்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ பிரான்ஸின் நான்காம் ஹென்றி
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
Answer:
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

II. சரியான கூற்றினை தேர்ந்தெடு

அ. 1. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
4. ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
Answer:
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.

ஆ. 1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித் தனர்.
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
4. சீக்கியப் புனித நூலான “குருகிரந்த சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.
Answer:
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.

II. பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி

அ. (i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) சரி (ii) தவறு
ஈ) (i)மற்றும் (ii) சரியானவை
Answer:
இ) (i) சரி (ii) தவறு

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

ஆ. (i) ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்பு களின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு
அடித்தளம் இட்டார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (i) மற்றும் (ii) சரியானவை
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை

இ. கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றிபெற்றார்
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம்
ஆகும். ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றுதவறு; காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

ஈ. கூற்று (கூ) : ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
இ கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியானவிளக்கம் அல்ல.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது

1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
2. ஆமுக்தமால்யதா – கிருஷ்ண தேவராயர்
3. ஜகன்னாத பண்டிதர்-ரசகங்காதரா
4. அல்லசானிபெத்தண்ணா -மனுசரித்ரா
Answer:
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்

ஆ. பொருத்துக

i) அபுல் பாசல் – 1. ஔரங்கசீப்
ii) ஜூம்மா மசூதி – 2. அக்பர்
iii) பாதுஷாஹி மசூதி – 3. ஷெர்ஷா
iv) புராண கிலா – 4. ஷாஜகான்
அ) 2 4 1 3
ஆ) 3 2 1 4
இ 3 1 4 2
ஈ) 1 3 2 4
Answer:
அ) 2 4 1 3

I. கூடுதல் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
முகலாயப் பேரரசை நிறுவியவர் ……………
அ) அக்பர்
ஆ) ஒளரங்கசீப்
இ) பாபர்
ஈ) உமாயூன்
Answer:
இ) பாபர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
முதல் பானிபட் போர் நடைபெற்ற நாள் ….
அ) 1526 ஏப்ரல் 24
ஆ) 1526 ஏப்ரல் 21
இ 1526 மார்ச் 24
ஈ) 1526 மார்ச் 21
Answer:
ஆ) 1526 ஏப்ரல் 21

Question 3.
முதன் முதலில் வெடி மருந்தை கண்டுபிடித்தவர்கள் …………..
அ) இந்தியர்
ஆ) ரஷ்யர்
இ) சீனர்
ஈ) ஜப்பானியர்
Answer:
இ) சீனர்

Question 4.
1528ல் மேதினிராய் எதிராக நடைபெற்ற போர் ……….
அ) கான்வா போர்
ஆ) சந்தேரிப் போர்
இ) 2ம் பானிபட் போர்
ஈ)  காக்ரா போர்
Answer:
ஆ) சந்தேரிப் போர்

Question 5.
முதல் பானிபட் போர் பாபருக்கும் ………… இடையில் நடந்தது.
அ) தௌலத்கான்லோடி
ஆ) கான்ஜஹான் லோடி
இ) இப்ராஹிம் லோடி
ஈ) முகமதுலோடி
Answer:
இ) இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 6.
‘தீன் பணா’ என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஆ) ஹூமாயூன்

Question 7.
ஷெர்ஷாவின் இயற்பெயர் ………..
அ) பரீத்
ஆ) சலீம்
இ ஹெமு
ஈ)  ஜலாலுதின்
Answer:
அ) பரீத்

Question 8. ‘
பதேபூர் சிக்ரி ‘ என்ற புதிய தலைநகரை உருவாக்கியவர் …………..
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 9.
‘சௌசாப்போர் நடைபெற்ற ஆண்டு ….
அ) 1519
ஆ) 1529
இ 1539
ஈ) 1549
Answer:
இ 1539

Question 10.
……………….”விவசாயி சீர் குலைந்தால் அரசன் சீர்குலைவான்” என்ற கூற்றை நம்பிய அரசர் …
அ) பாபர்
ஆ) அக்பர்
இ ஜஹாங்கீர்
ஈ) ஷெர்ஷா
Answer:
ஈ) ஷெர்ஷா

Question 11.
அக்பரின் பாதுகாவலர் …………..
அ) ஹெமு
ஆ) பரீத்
இ) பைராம்கான்
ஈ) ஆசப்கான்
Answer:
இ) பைராம்கான்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 12.
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1526
ஆ) 1536
இ) 1546
ஈ) 1556
Answer:
ஈ) 1556

Question 13.
இரண்டாம் பானிபட் போரில் அக்பருடன் போரிட்ட ஆப்கானிய படைத்தளபதி……….. அ) பைராம்கான்
ஆ) ஹெமு
இ) ஜெய்மால்
ஈ) பட்டா
Answer:
ஆ) ஹெமு

Question 14.
ஜஹாங்கீரின் இயற்பெயர் ………
அ) பரீத்
ஆ) சலீம்
இ) ஹெமு
ஈ) ஜலாலுதீன்
Answer:
ஆ) சலீம்

Question 15.
பிரான்சு அரசன் 14ம் லூயி சமகாலத்து அரசன் ……………
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) நூர்ஜஹான்
Answer:
இ) ஷாஜகான்

Question 16.
அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றிய ஆண்டு ……….
அ) 1510
ஆ) 1520
இ 1530
ஈ)  1540
Answer:
அ) 1510

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 17.
தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவியவர்
அ) ஹாலந்து நாட்டினர்
ஆ) பிரஞ்சு நாட்டினர்
இ) டென்மார்க் நாட்டினர்
ஈ) போர்ச்சுக்கீசியர்
Answer:
இ) டென்மார்க் நாட்டினர்

Question 18.
அய்னி அக்பரி என்ற நூலை எழுதியவர் …………….
அ) அபுபக்கர்
ஆ) அக்பர்
இ அபுல்பாசல்
ஈ) பீர்பால்
Answer:
இ அபுல்பாசல்

Question 19.
ஜஹாங்கீர் மன்னரின் பாரசீக மனைவியின் இயற்பெயர் (அல்லது) நூர்ஜஹானின் இயற்பெயர் ……………
அ) மும்தாஜ்
ஆ) அணாப்
இ)  மெகருன்னிசா
ஈ) ஹர்க்காபாய்
Answer:
இ)  மெகருன்னிசா

Question 20.
எந்த முகலாய மன்னரின் காலத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை பாரசீகமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. (மார்ச் 2019)
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ பாபர்
ஈ) ஹீமாயூன்
Answer:
அ) அக்பர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

V. சுருக்கமான விடையளி

Question 1.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
Answer:

  • பாபர் பதினொரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர் கண்டை மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார்.
  • ஈரானில் வலிமை வாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடந்ததினாலும் மத்திய ஆசியாவிலும் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில் தான் அமைக்க முடியுமென உணர்ந்தார்.
  • இந்துஸ்தானில் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது.
  • பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுவான பாபர் சந்தித்தார்.
  • இதுவே பாபரை இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது.

Question 2.
அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?
Answer:

  • அக்பரின் பாதுகாவலராக பைராம்கான் விளங்குகிறார்.
  • தன் சாதனைகளின் காரணமாய் பைராம்கான் தன் போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்து கொள்ளத்துவங்கினார்.
  • இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்
  • இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதை சாதுர்யமாகக் கையாண்டார்.
  • இறுதியில் அக்பர் முன் ஒப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
சிறு குறிப்பு வரைக அ)வில்லியம் ஹாக்கின்ஸ் ஆ) சர் தாமஸ் ரோ
Answer:

  • ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமானது
  • இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை முதலாமவரால் பெற இயலவில்லை .
  • ஆனால் தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய் சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை பேரரசரிடம் பெறுவதில் வெற்றி பெற்றார்.

Question 4.
“ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகச் செயல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக?
Answer:

  • அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா நூர்ஜகான் அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
  • நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்தார்.
  • ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி மகபத்கான் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார்.
  • பின்னர் நூர்ஜகானின் சதி நடவடிக்கைகளின் காரணமாக மகபத்கான் கலகத்தில் இறங்க, அக்கலகம் நூர்ஜகானால் திறமையுடன் கையாளப்பட்டது.

Question 5.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
Answer:

  • முகலாயக் கட்டடக்கலையின் மறு வடிவமாக கருதப்படுவதுதாஜ்மஹால்
  • இந்தியப் பாரசீக இஸ்லாமிய கட்டடக் கலையின் கூட்டு கலவையாகும்.
  • இது தலைவாயில் தோட்டம், மசூதி, கல்லறை மாடம், மினார் என்று அழைக்கப்படும் நான்கு கோபுரங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.

Question 6.
ஒளரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில் மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?
Answer:
வட இந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக மூன்று முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேறின அவை.

  • மதுரா பகுதியை சேர்ந்த ஜாட்டுகள்
  • ஹரியானாப்பகுதியை சேர்ந்த  சத்னாமியர்
  • பஞ்சாப் பகுதியை சேர்ந்தச் சீக்கியர் ஆகிய கிளர்ச்சிகள் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 7.
சிறு குறிப்பு வரைக. (i) சீக்கிய மதம் (ii) சூபியிஸம்
Answer:

  • சீக்கிய மதத்தை குருநானக் தோற்றுவித்தார். கடவுள் ஒருவரே எனக் கூறிய அவர்,
  • கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பார் என்று போதித்தார்.
  • சூபியிஸம் இஸ்லாமின் ஒரு புதிய பரிமான மதக் கோட்பாடு ஆகும்.
  • ஈரானில் தோன்றிய இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.

Question 8.
மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?
Answer:

  • பக்தி இயக்கப் பெரியோர்கள் சடங்குகளையும், சாதி முறைகளையும் விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்கினர்.
  • பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தாமல் அப்பகுதி மக்களின் பிராந்திய மொழியை பயன்படுத்தினர்.
  • அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழி நடைமுறையில் இசையோடு பாடப்பட்ட போது அவர்கள் மக்களின்
    மனதில் இடம் பிடித்தனர்.

Question 9.
முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக. (மார்ச் 2019 )
Answer:

  • முகலாயர் ஆட்சிக்காலத்தில் சைவ, வைணவ இலக்கியங்கள் தமிழகத்தில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தது.
  • சைவ புலவரான குமர குருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற இலக்கியங்களை இயற்றினார்.
  • தாயுமானவர் சமர சன்மார்க்கம் எனும் பக்திப் பாடல்ளை இயற்றினார்.

Question 10.
“முகலாயர் ஒவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.
Answer:

  • முகலாயரின் நுண் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
  • இந்திய ஓவிய மரபும், மேற்காசிய ஓவிய மரபும் இணைந்து ஒவியகலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஹூமாயூன் தன்னோடு அழைத்து வந்து நுண் ஓவியக் கலைஞர்கள், இந்திய ஓவியக் கலைக்கு புத்துயிர் ஊட்டினார்.
  • எனவே முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தை பெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி

Question 1.
உமாயூனின் சூனார் கோட்டை முற்றுகை பற்றி கூறுக.
Answer:

  • 1532ல் தெளரா என்னுமிடத்தில் ஆப்கானியரை தோற்கடித்த ஹூமாயூன் பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார்.
  • நான்கு மாதங்களுக்குப் பின் ” முகலாயருக்கு விசுவாசமாயிருப்பேன் ” என்ற ஷெர்ஷாவின் பொய் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முற்றுகையைக் கைவிட்டார்.
  • ஹுமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

Question 2.
பாபர் இந்தியா எதைப் பெற்றிருந்தது என விவரிக்கிறார்?
Answer:

  • இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை – எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு
  • பெருமளவிலான தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டுள்ளது.
  • இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
  • மேற்கண்டவாறு பாபர் இந்தியாவைப் பற்றி கூறுகிறார்.

Question 3.
முதல் பானிபட் போர் போற்றி பற்றி எழுதுக.
Answer:

  • 1526 ஏப்ரல் 21ம் நாள் பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இது முதல் பானிபட் போர் எனப்படுகிறது.
  • எண்ணிக்கையில் அதிக படைவீரர்கள் கொண்ட இப்ராஹிம் லோடியை குறைந்த வீரர்களை கொண்ட பாபரின் பீரங்கிப்படை எளிதில் வெற்றி கண்டது.
  • இந்த வெற்றியின் மூலம் பாபர் இந்தியாவில் முகலாய ஆட்சியை தொடங்கினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 4.
ஜாகீர்தாரி முறை
Answer:

  • இது ஒரு நில உடைமை முறையாகும்.
  • தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது.
  • இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கின்ற அதிகாரமும் அரசாங்கத்தைச் சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இது ஜாகீர்தாரி முறை எனப்படும்.

VI. குறுகிய விடையளி

Question 1.
“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்”- விவரிக்கவும்.
Answer:

  • ஹீமாயூன் வாழ்நாள் முழுவதும் தனது உடன் பிறந்த சகோதரர்களாலேயே ஏமாற்றப்பட்டார்.
  • சூனார் கோட்டை முற்றுகையின் போது ஷெர்கானின் பொய்யான வார்த்தைகளை நம்பி அவரை விட்டுவிட்டார். கடைசியில் அவரிடமே நாட்டை இழந்தார்.
  • மீண்டும் போராடி வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்த நேரத்தில் தன் நூலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
  • வரலாற்றாளர் ஸ்டேன்லி லேன்பூல் “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹீமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்” என்கிறார்.

Question 2.
‘தீன் இலாஹி பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:

  • அக்பர் பல்வேறு மதங்களைச் சார்ந்த புகழ்பெற்ற அறிஞர்களோடு கலந்துரையாடினார்.
  • இதன் விளைவாக “கடவுள் ஒருவரே” என்ற உண்மையை உணர்ந்தார்.
  • அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சொல் “தௌகித் – இ – இலாஹி (தீன் இலாஹி)”
    என்பதாகும்.
  • இச்சொல்லின் நேரடி பொருள் “ தெய்வீக ஒரு கடவுள்” கோட்பாடாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
அக்பரது சித்தூர் முற்றுகை
Answer:

  • இராஜபுத்ர அரசர் ராணா உதயசிங்கிடம் சித்தூர் கோட்டை இருந்தது.
  • ஆறு மாத கால முற்றுகைக்கு பின்னர் அக்பர் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.
  • ராணா உதயசிங் தோற்று பின் வாங்கினாலும் அவரது தளபதிகள் ஜெய்மால், பட்டா ஆகியோர் போரை திறம்பட நடத்தினார்கள்.
  • இப்போரில் ஜெய்மால், பட்டா ஆகியோரோடு 30,000 ராஜபுத்ர வீரர்கள் போர்க்களத்தில் மாண்டனர்.

Question 4.
அக்பரது மன்சப்தாரி முறை
Answer:

  • அக்பர் முறைப்படுத்தப்பட்ட மைய நிர்வாக முறையை உருவாக்க மன்சப்தார் ‘ என்ற பட்டத்தை உருவாக்கினார்.
  • ஒவ்வொரு மன்சப்தார்களின் கீழ் 10 முதல் 10,000 வரை ராணுவ வீரர்கள் இருந்தனர்.
  • இராணுவம், குடிமைப்பணிகள் சார்ந்த அதிகாரிகளுக்கு இப்பட்டம் கொடுக்கப்பட்டது.
  • மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை அல்ல. இது திறமைக்கு கொடுக்கப்பட்ட பதவியாகும்.

Question 5.
முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்
Answer:

  • முதலில் இந்தியாவில் குடியேற்றத்தை அமைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் கோவா, டாமன், சால்செட், பம்பாய் போன்ற இடங்களில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.
  • டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம் புலிகாட், சூரத், காரைக்கால், கொச்சி ஆகிய இடங்களில் வாணிக நிலையங்களை உருவாக்கினார்கள்.
  • ஆங்கிலேயர்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்களை உருவாக்கினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 6.
தாராகோ
Answer:

  • ஷாஜகானின் மூத்த மகன் தாராஷுகோ.
  • தனக்குப்பின் இவரை அரசராக்க விரும்பிய ஷாஜகான் பட்டத்து இளவரசராக அறிவித்தார்.
  • மற்ற சகோதரர்கள் இதனை வெறுத்தனர்.
  • தராஷுகோ சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்கள் மீது ஆர்வம் கொண்டவராயிருந்தார்.

Question 7.
கர்கானா
Answer:

  • முகலாயர் கால தொழிற்கூடங்களுக்கு கர்கானா என்று பெயர்.
  • இங்கு விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • அரச குடும்பங்களுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் அரண்மனை சார்ந்த கர்கானாக்களில் உற்பத்தி செய்யப்பட்டன.
  • இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளூர் சந்தைகளிலும், தொலை தூர சந்தைகளிலும் விற்கப்பட்டன.

Question 8.
கபீர்
Answer:

  • கபீர் ஒரு நெசவாளர்
  • இவர் பக்தி இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை ஆவார்.
  • ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார்
  • உருவ வழிபாட்டையும், சடங்குகள் மற்றும் சாதிமுறைகளையும் கண்டித்தார்.
  • எளிய மொழி நடையில் இவருடைய பாடல்கள் அமைந்திருந்தன.
  • இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.

Question 9.
அபுல் பாசல்
Answer:

  • அக்பர் அவை அறிஞர்களில் முதன்மையானவர் அபுல்பாசல்
  • இவர் தான் எழுதிய அயினி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதியுடைய சாதிகளை பட்டியலிடுகிறார்.
  • அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்.
  • இவர் ‘அக்பர்நாமா’ என்ற நூலில் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 10.
சூபி இயக்கம்
Answer:

  • சூபி இயக்கம் ஈரானில் தோன்றியது இது இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
  • சூபிகள் மதம் சமூக வேறுபாடுகள் என்ற எல்லையைத் தாண்டி ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டிற்காக பணிகளை செய்தனர்.
  • பழைமையான இஸ்லாமியர்களின்ஷரியத்கமிட்டு கூறும் கட்டுப்பாடுகளை ஏற்கும் வரை சூபி இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்தது.
  • இது இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
முகலாயர்களின் கால ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் யாவை?
Answer:
ஏற்றுமதி : முகலாயர் காலத்தில் ஐரோப்பியர்களுக்கு நறுமண பொருள்கள், சாயங்கள், வங்காளப்பட்டு, மஸ்லின், சொர சொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தி துணி ஆகியவற்றை ஏற்றுமதி செய்தனர்.

இறக்குமதி : இந்தியாவிற்கு பெருமளவில் தங்கத்தையும், வெள்ளியையும் இறக்குமதி செய்தனர்.

Question 2.
ஜமீன்தாரி
Answer:

  • பாரசீக மொழியில் ஜமீன்தாரி என்ற வார்த்தைக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
  • முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோரே ஜமீன்தாரர்களாக இருந்தனர்.
  • ஜமீன்தாரர்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் வரிவசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தினர்.

Question 3.
மாலிக் ஆம்பர்
Answer:

  • எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாக கொண்டுவரப்பட்டவர்.
  • அகமது நகர பிரதம மந்திரி செங்கிஸ்கானிடம் அரசியல் நிர்வாகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை கற்றுக்கொண்டார்.
  • தன்னுடையத் தனித்தன்மையாலும், அரசியல் சாதுர்யத்தாலும் தென்னிந்தியச் சுல்தானியங்கள் ஒன்றின் ராணுவத் தளபதியாகவும், பகர ஆளுநராகவும் உயர்த்தப்பட்டார்.
  • மராத்தியர்களுடன் இணைந்து முகலாயர்களுக்கு எதிராக செயல்பட்டவர். மராத்தியர்களை ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாற்றியவர் இவர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

VII. விரிவான விடையளி

Question 1.
“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி – விளக்குக.
Answer:
விவசாயம்:

  • ஷெர்ஷா நெகிழ்வுத்தன்மையுடைய வருவாய் முறையை பின்பற்றினார்.
  • நிலங்களின் வளத்திற்கேற்ப வரி நிர்ணயம், வரிவசூல் செய்ய சில பகுதிகளில் ஜாகீர்தாரர்கள் நியமிக்கப்பட்டனர். சில இடங்களில் ஜமீன்தாரி முறை அனுமதிக்கப்பட்டது.
  • பல இடங்களில் மொத்த விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது.

வணிகத்துறை :

  • ஷெர்ஷா விவசாயிகளை எவ்விதம் நடத்தினாரோ அதே போல வரிகளை எளிமைப்படுத்தி அதன் மூலம் வாணிபத்தை ஊக்குவித்தார்.
  • நுழைவு வரி, விற்பனை வரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.

நாணய முறை :

  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களில் இடம் பெறும் உலோக அளவுகள் இறுதிசெய்யப்பட்டன.
  • இது வாணிபத்திற்கு பெரும் உதவி செய்தது.
  • இந்த நாணய முறையானது முகலாயர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டு பின் ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கு அடித்தளமிட்டது.

சாலை:

  • வணிகத்தையும், வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் பொருட்டு உறுதியான சாலை வசதிகளை பின்பற்றினர்.
  • பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.
  • அனைத்து சாலைகளிலும் ‘ சராய் ” எனப்படும் சத்திரங்கள் கட்டப்பட்டன.
  • அக்பர் மற்றும் இராஜா தொடர்மாலின் நிதி நிர்வாக முறை ஷெர்ஷாவின் நிர்வாக முறையை இவ்வாறு பின்பற்றி இருந்தது

Question 2.
அக்பரின் மதக் கொள்கை எவ்வாறு ஔரங்கசீப்பின் மதக் கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
Answer:
ஒளரங்கசீப்பின் மதக்கொள்கை:

  • அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் இந்துக்கள் மீது விதித்தார்.
  • புதிய இந்துக் கோயில்கள் கட்டப்படக் கூடாது என ஆணைகள் பிறப்பித்தார்.
  • பழையக் கோயில்கள் மட்டும் பழுது பார்க்க அனுமதிக்கப்பட்டன.
  • முஸ்லீம் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அப்வாப் எனப்படும் வரிவசூலை தடை செய்தார்.
  • தனக்கு கீழ்படிந்துள்ள பகுதிகளில் கோவில் கட்ட கொடைகள் அளித்தார்.
  • இவரது தகப்பனார் ஆட்சியை விட இவரது ஆட்சியில் இந்து அரசு அதிகாரிகள் அதிகமாக பணியாற்றினர்.

அக்பரின் மதக்கொள்கை :

  • அக்பரின் மதக்கொள்கை ஒளரங்கசீப் மதக் கொள்கையை விட முற்றிலும் வேறுபட்டதாகும்.
  • அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவி, அங்கு அனைத்து மதத் தலைவர்களைக் கூட்டி விவாதங்கள் நடத்தினார்.
  • இவ்விவாதங்களின் விளைவாக “ ஒரே ஒரு கடவுள் மட்டும்” இருப்பதை உணர்ந்தார்.
  • அக்பர் தான் அறிந்த தத்துவத்தை விளக்குவதற்காக “ தௌகித் – இ – இலாகி ” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதுவே “தீன் இலாஹி ” எனப்பட்டது.
  • தீன் இலாஹி ஒரு மதம் அல்ல. இதன் நோக்கம் சம, சகிப்பு கொண்ட சம மதிப்பை வழங்கும் ஓர் அரசை உருவாக்குவதே ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 3.
ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?(மார்ச் 2019)
Answer:

  • மராத்தியர்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துதல்
  • பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் கிளர்ச்சியை அடக்குதல்
  • தன் மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சியை அடக்குதல்
  • தக்காணத்தில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒளரங்கசீப்பை எதிர்த்தனர். ஔரங்கசீப் ஜெய்சிங், செயிஸ்டகான் என்று பலரை அனுப்பியும் சிவாஜியை ஒன்றும் செய்ய இயலவில்லை .
  • மேலும் இவரது மகன் இரண்டாம் அக்பரும் தக்காணத்தில் தங்கி தன்னை சுதந்திர அரசராக அறிவித்தார். ஒளரங்கசீப் நீண்ட காலம் தக்காணத்தில் தங்க வேண்டி இருந்ததால் நிர்வாகம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இது முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.

Question 4.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
Answer:
பொருளாதாரம் :

முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரம் ஆகும். காடுகள், கைவினை கலைஞர்கள், கப்பல் கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர், நெசவு செய்வோர், மற்றும் உலோகங்கள் உருக்குவோர் போன்றவர்களுக்கு தேவையானவற்றை வழங்கியது.

கிராமப்புற பொருளாதாரம் :

  • கிராமப்புற மக்கள் வேளாண்மையை சார்ந்தே இருந்தனர். ஏழை விவசாயிகள் சொத்துகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
  • ரபி, காரிப் ஆகிய இரு பருவங்களில் பயிர்கள் பயிரிடப்பட்டன. நிலத்தின் அளவு மற்றும் பயிரிடக் கூடிய பயிர்கள் அகியவற்றின் அடிப்படையில் நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டது.

நகர்ப்புற பொருளாதாரம் :
நகர்ப்புற பொருளாதாரம் கைவினைத் தொழில்கள் சார்ந்திருந்தது. “ கர்கானா ” என்று அழைக்கப்படும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வணிகம்:

  • நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமையான சட்டங்களும், ஒழுக்க பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்த்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
  • உபரியான வர்த்தகப் பொருட்கள் ஆறுகள் வழியாகவும், மாட்டு வண்டிகளிலும், ஒட்டக வண்டிகளிலும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
  • பஞ்சாரா என்னும் நாடோடி வணிகக் குழுக்கள் பொருட்களை வெகு தூரம் கொண்டு செல்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
  • அரிசி, சர்க்கரை, மஸ்லின்பட்டி, பருத்தி துணிகள், சால்வைகள் போன்றவைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • தங்கமும், வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 5.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
Answer:
முகலாயர் காலத்தில் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக் கலையில் குறிப்பிடத்தக்க கட்டமாகும். கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனை மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும் நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும் கட்டப்பட்ட முகலாய கட்டிடங்கள் உலகப் புகழ் பெற்றவை.

  • சூர் வம்சத்து மன்னர்களால் டில்லியில் கட்டப்பட்ட புராணகிலா, பீகாரில் சசாரம்
  • அக்பர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஹீமாயூன் கல்லறை, பதேபூர் சிக்ரி.
  • ஜஹாங்கீர் கட்டிய முதல் வெள்ளை நிற பளிங்கு கற்கள் கொண்ட கல்லறை
  • ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியதாஜ்மஹால், செங்கோட்டை.
  • ஷாஜஹானால் கட்டப்பட்ட திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால் போன்ற பிரம்மிப்பூட்டும் கட்டிடங்கள்.
  • ஜஹாங்கீர் உருவாக்கியஷாலிமர் தோட்டங்கள்
  • ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மேற்கு யமுனைக் கால்வாய் போன்றவை முகலாயக் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாகும்.
  • இவை முகலாயக் கட்டடக்கலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டுமானங்களின் மீதும் செல்வாக்கு செலுத்தியது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பாபர் இந்தியாவில் எவ்வாறு முகலாயப் பேரரசை நிலை நிறுத்தினார்?
Answer:
முதலாம் பானிபட் போர் வாயிலாக டெல்லியைக் கைப்பற்றிய பாபர், கான்வாப்போர், சந்தேரிப் போர் மற்றும் காக்ரா நதிப்போர் வாயிலாக டெல்லியில் முகலாயப் பேரரசை நிலைநிறுத்தினார்.

முகலாயப் பேரரசை இந்தியாவில் நிலைநிறுத்த நடைபெற்ற போர்கள் :

1. முதலாம் பானிபட் போர் (1526 ஏப்ரல் 21) : டெல்லி மன்னரான இப்ராஹிம் லோடிக்கும் பாபருக்கும் இடையே பானிபட் என்னுமிடத்தில் 1526 ஏப்ரலில் நடைபெற்றது. பாபர் தனது சிறிய பீரங்கி படையால் பெரிய இப்ராஹிம் படையை தோற்கடித்தார். டெல்லியைக் கைப்பற்றினார்.

2. கான்வாப்போர் (1527) :

  • மேவார் அரசர் ராணா சங்காவிற்கும் பாபருக்கும் இடையே 1527ல் கான்வா என்ற இடத்தில் இப்போர் நடைபெற்றது.
  • பாபர் வெற்றி கண்டார். குவாலியர், தோல்பூர் கோட்டைகள் பாபருக்கு கிடைத்தது.

3. சந்தேரிப்போர் (1528) :

  • மாளவப் பகுதியை தன் பகுதியோடு இணைக்க மாளவ அரசர் மேதினிராய் மீது போர் தொடுத்தார்.
  • இவரை எதிர்த்த மேதினிராயை சந்தேரி போரில் எளிதில் பாபர் தோற்கடித்தார்.

4. காக்ராநதிப்போர் (1529) :

  • இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியும் அவரது மருமகன் நஸ்ரத்ஷாவும் பாபரை வீழ்த்த சதி செய்தனர்.
  • இதை அறிந்து கொண்ட பாபர் காக்ரா நதிக்கரையில் நடைபெற்ற போரில் ஆப்கானிய படைகளை வீழ்த்தினார்.
  • இவ்வாறாக பாபர் போரின் மூலம் வெற்றிபெற்று கைப்பற்றிய பகுதிகளை இணைத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 14 முகலாயப் பேரரசு

Question 2.
முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள் பற்றி விவரி.
Answer:

1. போர்ச்சுக்கீசியர் :

  • 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதை கீழ்த்திசை போர்த்துகீசிய பேரரசின் தலைநகராக்கினார்.
  • மேற்கு கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய், கிழக்கு கடற்கரையில் சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

2. டச்சுக்காரர் :
டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டணம், புலிகாட் (பழவேற்காடு, சூரத், பிமிலிப்பட்டணம், காரைக்கால், சின் சுரா, காசிம்பஜார், பாராநகர், பாட்னா, பாலசேகர், நாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்ளை ஏற்படுத்தினார்.

3. டேனியர் :
டென்மார்க் நாட்டினரும் இந்தியாவில் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவினர். வங்காளத்தில் செராம்பூர் அவர்களின் தலைமையிடமாக இருந்தது.

4. பிரெஞ்சுக்காரர் :

  • சூரத், மசூலிப்பட்டினம் அப்போது சிறு கிராமமாக இருந்த புதுச்சேரி (1673) வங்காளத்தின் சந்தன நகர் அகியவை பிரெஞ்சுக்காரரின் தொடக்ககாலக் குடியேற்றங்களாகும்.
  • பின்னர் மலபாரில் உள்ள மாஹி, சோழ மண்டலக் கடற்கரையில் ஏனாம் (1725) காரைக்கால் (1739) ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

5. ஆங்கிலேயர்:

  • முதன் முதலில் ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் 1612ல் சூரத்தில் ஒருவணிகச் சாவடியை நிறுவியது.
  • பின்னர் சென்னை (1639) – பம்பாய் (1668) கல்கத்தா (1690) ஆகியவற்றை பெற்றது.
  • கம்பெனி பல வணிகக் குடியேற்றங்களை பெற்றிருந்தாலும் கல்கத்தா – வில்லியம் கோட்டையும், சென்னை – புனித ஜார்ஜ் கோட்டையும், பம்பாய் – மாளிகையும் ஆங்கிலேயரின் மிக முக்கியமான வணிகக் குடியேற்றங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

11th History Guide பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்.
அ) பிராமணங்கள்
ஆ) சங்கிதைகள்
இ) ஆரண்யகங்கள்
ஈ) உபநிடதங்கள்
Answer:
ஆ) சங்கிதைகள்

Question 2.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) குருபாஞ்சாலம்
ஆ) கங்கைச்சமவெளி
இ) சிந்துவெளி
ஈ) விதேகா
Answer:
அ) குருபாஞ்சாலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) கோயம்புத்தூர்
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) வேலூர்
Answer:
இ) தூத்துக்குடி

Question 4.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) சேனானி – படைத்தளபதி
(ii) கிராமணி – கிராமத்தலைவர்
(iii) பலி – தன்னார்வத்தால் கொடுக்கப் பட்டது
(iv) புரோகிதர் – ஆளுநர்
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv) புரோகிதர் – ஆளுநர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
கூற்று (கூ): முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை
காரணம் (கா) :பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,
இ) கூற்று சரியானது. காரணம் தவறானது.
ஈ) கூற்று , காரணம் இரண்டும் சரியானவை.
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் ……………………..
அ) பொ.ஆ.மு. 1500
ஆ) பொ .ஆ.மு. 1700
இ) பொ.ஆ.மு. 1900
ஈ) பொ.ஆ.மு. 2100
Answer:
இ) பொ.ஆ.மு. 1900

Question 2.
வேதங்களில் பழைமையானது ………….. வேதம்.
அ) ரிக்
ஆ)யஜூர்
இ) சாம
ஈ) அதர்வண
Answer:
அ) ரிக்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
இசைப்பாடல்களாக அமைந்த ……….. இந்திய
இசை மரபின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.
அ) ரிக் வேதம்
ஆ) யஜுர் வேதம்
இ) சாம வேதம்
ஈ) அதர்வண வேதம்
Answer:
இ) சாம வேதம்

Question 4.
வேளாண் நிலம் ……………… என்று அறியப்
பட்டிருந்தது.
அ) சீத்தா
ஆ) சுரா
இ) கருஷி
ஈ) ஷேத்ரா
Answer:
ஈ) ஷேத்ரா

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
‘சத்யமேவ ஜயதே’ என்ற சொற்றொடர் …………….. என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அ) மஹாபாரதம்
ஆ) ஜென்ட் அவெஸ்தா
இ) முண்டக உபநஷத்
ஈ) ராமாயணா
Answer:
இ) முண்டக உபநஷத்

Question 6.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) இந்திரன் – விடியலின் கடவுள்
(ii) சூரியன் – புரந்தரா
(iii) உஷா – இருளை அகற்றும் கடவுள்
(iv) மாருத் – வலிமையின் கடவுள்
மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
(ஈ) (iv) மாருத் – வலிமையின் கடவுள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 7.
கூற்று (கூ) :ரிக் வேத காலத்தில் பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
காரணம் (கா) :அப்போது குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக தெரியவில்லை.
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறானது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரியானவை.
ஈ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
ரிக் வேதம் மொத்தம் …………. காண்டங்களைக் கொண்டுள்ளது
அ) 5
ஆ) 7
இ) 10
ஈ) 13
Answer:
இ) 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 9.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அறிஞரான
…………………… ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.
அ) ஆண்டிருஜாஹர்
ஆ) ஆர்.எஸ். சர்மா
இ) ராபர்ட் கால்டுவெல்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) ராபர்ட் கால்டுவெல்

Question 10.
ஆண்டிரு ஜாஹரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம்.
அ) சித்தன்னவாசல்
ஆ பையம்பள்ளி
இ கீழம்
ஈ) அதிச்சநல்லூர்
Answer:
ஈ) அதிச்சநல்லூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வேத கால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
Answer:

  • வித் என்ற சொல்லிலிருந்து வேதம் என்ற சொல் பிறந்தது.
  • வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
  • இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய – இலக்கியங்களும் வேத கால இலக்கியங்கள் ஆகும்.

Question 2.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக – ஈரானிய நூல் ஜொராஸ்டிாய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
  • இந்தோ -ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
  • இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன,
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக.
Answer:

  • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  • அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா -காத போன்ற பெண் கவிஞர்களும் ரிக் வேதகாலத்தில் வாழ்ந்தனர்.
  • சிறார் மணமோ , உடன்கட்டை ஏறும் சதி வழக்கமோ ரிக் வேதகாலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Question 4.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
Answer:

  • நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
  • பிருதிவி-பூமி, அக்னி-நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
  • ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிப்பட்டனர்.
  • ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
இந்தியாவின் இரும்புக் காலம் குறித்து நீவீர் அறிந்ததென்ன?
Answer:

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
  • சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
  • தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் – பண்டமாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ரிக் வேதம் குறிப்பு தருக.
Answer:

  • வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
  • இது மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டது,
  • அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன.
  • 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
குறிப்பு தருக – கொடுமணல்.
Answer:

  • சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் இங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
  • சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் என சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப் பட்டன.

Question 3.
‘பத்து அரசர்களின் போர்’ பற்றி கூறுக.
Answer:

  • பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
  • அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர்.
  • இவர்களிடையே நடைபெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’ என அறியப்படுகிறது.
  • புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ கூறும் செய்திகள் யாவை?
Answer:
ரிக் வேதத்திலுள்ள புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.

  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
  • இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
  • தொடைகளிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
  • கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
Answer:

  •  சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
  • சடங்குகளும், வேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர்.
  • சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
  • சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு , செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
Answer:

  • ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
  • சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
  • இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
  • சிறுதானியங்கள், பயிறு வகைகள். கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
  • இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.

Question 2.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
Answer:
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

Question 3.
ரிக் வேத கால சமூகப் பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
Answer:

  • வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து நிறத்தையும், வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • ரிக் வேதம் ‘ஆரிய வர்ண’, ‘தச வர்ண’ என்று குறிப்பிடுகின்றது.
  • தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
  • பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர்.
  • சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின.
  • ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர். அடிமைகள் குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூகத்தினர் ஆரம்ப காலத்தில் நாடோடிகளாக இருந்து பிற்காலத்தில் நிலையான இடத்தில் வசித்தனர்.
  • வேளாண்மை செய்ய ஆரம்பித்தார்கள்.
  • கால்நடைகள் புனிதமாக கருதினர்.
  • பண்ட பரிமாற்றத்திலும், மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது.
  • கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.
  • கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
Answer:

தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்.
தொடக்க வேதகால சமூகம்பிந்தைய வேதகால சமூகம்
1. செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.இரும்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.
2. செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.சாம்பல் நிற (ஓவியம் தீட்டப்பட்ட) மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
3. சமூகம் சமத்துவம் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது.பிற்காலத்தில் சமூக வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
4. பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.பிந்தைய வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
5. கால்நடை வளர்ப்பு என்பது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டது.வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
6. இந்திரனே மிக முக்கிய கடவுளாவார்பிரஜாபதி முக்கியக் கடவுளானார். அக்னி, இந்திரன் ஆகிய கடவுள் செல்வாக்கை இழந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.
Answer:

  • அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும், மண்பாண்டங்களும்.
  • ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒருசில தங்க நகைகள்.
  • வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா, யானை ஆகியவற்றின் வெண்கலப் பொம்மைகள்.
  • துணி, மரப் பொருள்கள் எச்சங்கள் ஆகியவைகள் ஆதிச்சநல்லூரில் உள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவைகளாகும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.
Answer:

  • பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
  • பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர்.
  • திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது.
  • பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத்
    தெரியவில்லை .

Question 3.
ரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தனர்.
  • வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை.
  • கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
  • கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன.
  • கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது.
  • உலோகத்தினாலான பொருள்களும், மட்பாண்டங்களும், மரத்தினாலான பொருள்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது. சமூகம் இனக்குழுக்களையும் மரபுவழி குடும்பங்களையும் கொண்டிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
பிந்தைய வேதகாலத்தில் உருவான வர்ண (ஜாதி) முறையை கூறுக.
Answer:

  • வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது.
  • நால்வர்ண முறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது.
  • பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர்.
  • ஆனால் சதபத பிராமணம் சத்திரியர்களைவிடப் பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
Answer:

  • சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
  • தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
  • ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
  • பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
  • பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
  • பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 6.
பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • இனக்குழுக்களில் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசுகளின் ஆட்சி உருவாகியது.
  • வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600க்குப் பின்னர் அவை அரசுகளின் வளர்ந்ததே என்பது பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும்.
  • ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  •  அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.
  • சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ண முறை வளர்ச்சியடைந்தது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
Answer:

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புகால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.

மட்பாண்டங்கள்:
பழுப்பு நிற மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுக்கள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.

காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.

செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.

விளை பொருட்கள் :
நெல், பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.

கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.

வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர். இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய் விடங்களைப் பற்றி விவாதிக்க.
Answer:
ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு ஆண்டிரு ஜாஹர் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டார்.
அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.

தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல மொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.

பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த கிராமம் பையம்பள்ளி.
1906ல் நடத்திய அகழ்வாய்வில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு. 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல் :
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980, 1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.

சிப்பிகள், வளையல்கள், எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைக்குழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒருகட்டுரை வரைக.
Answer:
அரசுமுறை:

  • வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
  • இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
  • ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார் களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
  • ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
  • அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
  • நிலப்பரப்பின் மீதும், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
  • சாதாரண மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.

நிர்வாகம்:

  • வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
  • சபா என்பது மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
  • சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இனக் குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
  • மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
  • சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். பலி எனப்பட்ட வரிமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
  • நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர் களான குலபா அல்லது கிராமணி என்பவர் களுக்கு இவர் உதவி செய்வார். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

11th History Guide பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்
அ) ஆதிசங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமானந்தர்
ஈ) சைதன்யர்
Answer:
அ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
வைதீக வேதப்பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுவது
அ) இராமாயணம்
ஆ) பாகவத புராணம்
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
ஈ) பால லீலா
Answer:
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்

Question 3.
கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர்……………………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) மாறவர்மன் அரிகேசரி
இ நரசிம்மவர்மன்
ஈ) சுந்தரபாண்டியன்
Answer:
ஆ) மாறவர்மன் அரிகேசரி

Question 4.
சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் ……………………….
அ) அரிசேனா
ஆ தீர்த்தங்கரர்
இ சிவஞான சித்தியார்
ஈ) தர்மசேனர்
Answer:
ஈ) தர்மசேனர்

Question 5.
பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் ………………………..
அ) இஸ்லாமிய ஞானி
ஆ) பௌத்தத் துறவி
இ) இந்துத் துறவி
ஈ) சீக்கிய குரு
Answer:
அ) இஸ்லாமிய ஞானி

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
இராமானந்தரின் சீடர் (மார்ச் 2019 )
அ) சைதன்யர்
ஆ) ரவிதாஸ்
இ) குருநானக்
ஈ) கபீர்
Answer:
ஈ) கபீர்

Question 8.
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்……………………….
அ) ரவிதாஸ்
ஆ) இராமானந்தர்
இ) கபீர்
ஈ) நாமதேவர்
Answer:
ஆ) இராமானந்தர்

Question 9.
அக்பரின் அரசவையில் “ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர்……………………….
அ) சூர்தாஸ்
ஆ) துக்காராம்
இ இராமானந்தர்
ஈ) மீராபாய்
Answer:
அ) சூர்தாஸ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 10.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் ……… ஆவார்
அ) இராமானந்தர்
ஆ) மீராபாய்
இ) சூர்தாஸ்
ஈ) துக்காராம்
Answer:
இ) சூர்தாஸ்

II. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

அ. அ. தனது தொடக்கக் கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்
ஆ. சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
இ. இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
ஈ. பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Answer:
ஆ.சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்

அ. கூற்று : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்
காரணம் : அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்

அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ. கூற்று தவறு; காரணம் தவறு
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ. கூற்று தவறு; காரணம் சரி
Answer:
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

III. பொருத்துக

i) கபீர் – 1. சாகித்திய லாகிரி
ii) சூர்தாஸ் – 2.ஷேக் தாதி
iii) சூபியிஸம் – 3. சம்பந்தர்
iv) கூன் பாண்டியன் – 4. நெசவாளர்
அ) 2 3 4 1
ஆ) 4 3 2 1
இ) 2 4 3 1
ஈ) 3 4 2 1
Answer:
அ) 2 3 4 1

கூடுதல் வினாக்கள்

Question 1.
வைணவ அடியாளர்களான ஆழ்வார்களின் பாடல்கள் ………… தொகுக்கப்பட்டுள்ளன.
அ) தேவாரம்
ஆ) பெரிய புராணம்
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்
ஈ) ஆதிகிரந்தம்
Answer:
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்

Question 2.
இராமானுஜர் ……. என்னும் தத்துவத்தை உருவாக்கினார்
அ) துவைதம்
ஆ) விசிஷ்டாத்வைதம்
இ) வைணம்
ஈ) சமணம்
Answer:
ஆ) விசிஷ்டாத்வைதம்

Question 3.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்று கூறியவர் ……….
அ) நாம தேவர்
ஆ) ஆதிசங்கரர்
இ) கபீர்
ஈ) இராமானுஜர்
Answer:
ஆ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ……….. கொள்கையைப் போதித்தனர்
அ) பல கடவுள்
ஆ) சில கடவுள்
இ) ஒரு கடவுள்
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
இ) ஒரு கடவுள்

Question 5.
குரு நானக்கின் போதனைகள் ………….. ஆகும்
அ) ஆதிகிரந்தம்
ஆ) விவிலியம்
இ) கிரந்த சாகிப்
ஈ) களவுளின்மை
Answer:
அ) ஆதிகிரந்தம்

Question 6.
நாமதேவர் ………….. எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்
அ) சைதன்யர்
ஆ) ஜனதேவர்
இ) ரவிதாஸ்
F) ராமானந்தர்
Answer:
ஆ) ஜனதேவர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
வல்லபாச்சாரியார் …………… மார்க்க த்தை நிறுவியராவார்
அ) எண்வ ழி
ஆ) நான்குவழி
இ) புஷ்தி
ஈ) முக்தி
Answer:
இ) புஷ்தி

Question 8.
சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய  ………. முக்கியகருப்பொருளாகவிளங்கியது
அ) கிருஷ்ண னின் பிறப்பு
ஆ) பால லீலா
இ) தெய்வீக சக்தி
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
ஆ) பால லீலா

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 9.
சிந்து கங்கை சமவெளியில் தோன்றிய இரண்டு மதங்கள்
அ) புத்தம், சமணம்
ஆ) இந்து, முஸ்லீம்
இ) இந்து, சமணம்
ஈ) சைவம், வைணவம்
Answer:
அ) புத்தம், சமணம்

Question 10.
முற்காலத்தில் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்ட மதங்கள்…………………
அ) சூபி
ஆ) இந்து
இ) புத்த, கிறித்துவ
ஈ) புத்த, சமண
Answer:
ஈ) புத்த, சமண

Question 11.
பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்கும் சைவ சித்தாந்த நூல் …………..
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) பரபக்கம்
ஈ) பெரிய புராணம்
Answer:
இ) பரபக்கம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 12.
இராமானுஜர் உருவாக்கிய தத்துவம் ……………………..ஆகும்
அ) துவைதம்
ஆ) அத்வைதம்
இ விசிஷ்டாத்வைதம்
ஈ) வைணவம்
Answer:
இ விசிஷ்டாத்வைதம்

Question 13.
இஸ்லாமிய ஞானிகளை குறிக்கும் பெயர் ……………………
அ) ஆசிக்
ஆ) பக்கீர்
இ) சன்னி
ஈ) சிஸ்டி
Answer:
ஆ) பக்கீர்

Question 14.
பெரியபுராணத்தை இயற்றியவர் …………………
அ) அப்பர்
ஆ) சம்மந்தர்
இ) சேக்கிழார்
ஈ) இதில் யாரும் இல்லை
Answer:
இ) சேக்கிழார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.சுருக்கமான விடையளி

Question 1.
பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?
Answer:
இராமானுஜர் போன்ற இறையியலாளர்களால் அது பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ சித்ததாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது. இராமானுஜர் சமய சமத்துவத்திற்குப் பெரும் ஆதரவாளராகத்திகழ்ந்தார்.

இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரின் கருத்தை மறுத்தன.

Question 2.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
  • சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.

Question 3.
இராமானந்தரின் போதனைகள் யாவை?
Answer:

  • இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்.
  • கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைகளைப் போதித்தார்.
  • சாதி முறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தனவிளக்குக.
Answer:
கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாடல்களையும் பாடவும் தொடங்கினார். கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டுமென்றும், பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது எனப் போதித்தார்.

Question 5.
இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை?
Answer:

  • புதிய மதத்தின் மூலம் வரும் சவால்களை சந்திக்க இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நம்பினர்.
  • ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற இயக்கங்கள் தேவை என்பதை உணர்ந்தனர். கபீர் போன்றோர் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.கூடுதல் வினா

Question 1.
குருநானக்கின் போதனைகள் யாவை?
(அல்லது) சீக்கிய மத கோட்பாட்டினை கூறுக.
Answer:

  • குரு நானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் ஒற்றுமை சிந்தனையை பறைசாற்றுகிறது.
  • ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும்,
  • ஒழுக்க நெறிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியது. குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம்’ ஆகும்.

Question 2.
சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?
Answer:
சூர்சாகர், சூர்சரவளி, சைத்யலகிரி ஆகியன சூர்தாஸின் முக்கியப் படைப்புகளாகும்.

V. குறுகிய விடையளி

Question 1.
மத மறுமலர்ச்சியின் உறைவிடமாகத் தென்னிந்தியா விளங்கியதை விளக்குக?
Answer:
பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்க நெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது.

ஆதிசங்கரர் புற மதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்கு அத்வைதம் எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார்.

புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கும் ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர்.

பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூகம், அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் மிக ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க.
Answer:

  • சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிபட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார்.
  • சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய பால லீலா முக்கிய கருப்பொருளாக விளங்கியது.
  • கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார்.

துக்காராம் :

  • துக்காராம் வடிவமற்றவர் கடவுள் என நம்பினார்.
  • வேள்விகள், சடங்குகள். புனிதப் பயணங்கள் உருவவழிபாடு அகியவற்றை நிராகரித்தார்.
  • கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு , மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார்.
  • சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

Question 3.
கபீரின் போதனைகளை விவரி.
Answer:

  • கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன.
  • இந்து இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும் குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
  • உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார்.

Question 4.
கபீரிடமிருந்து சைதன்யர் எவ்வாறு வேறுபடுகிறார்?
Answer:

  • வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் கபீர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த பக்தி இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார்.
  • சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக் கொண்டார்.
  • சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 5.
பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.
Answer:

  • முக்தி ‘ என்பது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது.
  • பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்ந்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.
  • பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
  • பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர்.
  • இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்று வரை நடைமுறையில் உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

V. கூடுதல் வினா

Question 1.
நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மை பற்றி கூறுக.
Answer:

  • முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள்
  • மதப்பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள்
  • உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள் என்பவையே நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மையாகும்.

Question 2.
சூபியிஸம் பற்றி கூறுக.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் பக்தி – இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமியஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

VI. விரிவான விடையளிக்க

Question 1.
சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் தோன்றிய பக்தி இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணி செய்தனர்.
  • அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர்.
  • சூ பி யி ஸம் நகரப் புறங்க ளிலும் , கிராமப்புறங்களிலும் வேர்க் கொண்டது.
  • சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது.
  • அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதை இயல்பாக இருந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினார்.
  • சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.

Question 2.
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.
Answer:

  • பக்தி இயக்கச் சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
  • பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்.
  • இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
  • குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
  • உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
  • உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
  • ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
  • மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சாதி முறையைக் கண்டனம் செய்தனர்.
  • சடங்குகள், சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், விருந்துகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.
  • எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV. கூடுதல் வினா

Question 1.
குருநானக்கும் சீக்கிய மதமும் விவரி.
Answer:

  • ருநானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிந்தனையை பறை சாற்றுகிறது.
  • கடவுள் ஒருவரே என்ற கருத்தையும் ஒழுக்க நெறிகளையும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தியது.
  • சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் விரிவடைந்தது.
  • பெருவாரியான மக்களை ஈர்த்தது.
  • சீக்கியமத போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.
  • முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி இறுதியில் குருக்களின் உயிர்த் தியாகத்தில் முடிந்தது.
  • குரு கோவிந்சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார் அவருக்குப் பின்னர் கிரந்தசாகிப் (புனித நூல்) குருவாக கருதப்பட்டது.
  • குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் எனப்படும்.
  • ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தர், நாம தேவர், கபீர், ஷேக்பரீத் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின், சூபி துறவிகளின் போதனைகளும். ஆதிகரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
பக்தி இயக்கத்திற்கு மீராபாய் பங்களிப்பை விவரி.
Answer:

  • மீராபாய் ஜோத்பூர் அரசை நிறுவிய ஜோதாஜியின் கொள்ளு பேத்தி ஆவார்.
  • இவர் மேவார் அரசர் ராணாசங்காவின் மகன் போஜராஜன் என்பவரை மணந்தார்.
  • கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறினார்.
  • அன்பே கடவுளை அடையும் வழி என போதனை செய்யவும் பஜனைப் பாடல்களை பாடவும் தொடங்கினார்.
  • கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டும் என்றும்
  • பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்பட கூடாது எனவும் போதித்தார்.
  • இவருடைய பக்தி பாடல்கள் மற்றும் இசைப்பாடல்கள் வளமான பண்பாட்டு மரபாகும்.
  • இவருடைய போதனைகள் தெய்வீக பக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

11th History Guide பாமினி விஜய நகர அரசுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக ………… இடம் பணி செய்தனர்.
அ) காகதியர்
ஆ) ஹொய்சாளர்
இ பீஜப்பூர் சுல்தான்
ஈ) யாதவர்
Answer:
ஆ) ஹொய்சாளர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 2.
இபன் பதூதா … நாட்டுப் பயணி
அ) மொராக்கோ
ஆ) வெனிஷிய
இ போர்த்துகல்
ஈ) சீனா
Answer:
அ) மொராக்கோ

Question 3.
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
அ) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவவம்சம்
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
இ சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
ஈ) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
Answer:
ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்

Question 4.
விஜயநகர அரசின் அரசமுத்திரை……………….
அ) பன்றி
ஆ) புலி
இ மீன்
F) வில்
Answer:
அ) பன்றி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 5.
…………………….. என்ற நூலைகங்காதேவி எழுதினார்.
அ) மனுசரிதம்
ஆ) ஆமுக்தமால்யதா
இ பாண்டுரங்க மகாத்மியம்
ஈ) மதுராவிஜயம்
Answer:
ஈ) மதுராவிஜயம்

Question 6.
………….. சங்க ம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
அ) முதலாம் தேவராயர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ கிருஷ்ண தேவராயர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) இரண்டாம் தேவராயர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 7.
கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் …………
அ) பெல்காம்
ஆ) கட்டாக்
இ சிம்மாச்சலம்
ஈ) இராஜமகேந்திரவரம்
Answer:
இ சிம்மாச்சலம்

Question 8.
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ……………………….
அ) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
இ சேர மற்றும் பாண்டிய அரசுகள்’
ஈ) சோழ மற்றும் சேர அரசுகள்
Answer:
ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

Question 9.
ஷாநாமாவை எழுதியவர் …………..
அ) பிர்தௌசி
ஆ) இபன் பதூதா
இ) நிக்கோலோடி கோன்டி
ஈ) டோமிங்கோ பயஸ்
Answer:
அ) பிர்தௌசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 10.
முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் ………………
அ) பெரார்
ஆ) பீஜப்பூர்
இ பீடார்
ஈ) அகமது நகர்
Answer:
இ பீடார்

Question 11.
………………………….. கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார். (மார்ச் 2019 )
அ) இராஜா கிருஷ்ண தேவ்
ஆ) சுல்தான் குலி- குதுப்- உல் – முல்க்
இ) முகமது கவான்
ஈ) பாமன்ஷா
Answer:
அ) இராஜா கிருஷ்ண தேவ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

II. சரியான கூற்றினை தேர்ந்தெடு

1. விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாக சுமார் 300 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர் 2. ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகளிடையே கடும் போர் நடைபெற்றது.
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமரின் அவைக்கு வந்தார்.
4. பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
Answer:
3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமுத்திரியின் அவைக்கு வந்தார்.

III. கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

அ. (i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
(ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுத்தரச்செய்தார்.
அ) (i)மற்றும் (ii) சரி
ஆ) (i) மற்றும் (ii) தவறு
இ) (i) சரி(ii) தவறு
ஈ) (1) தவறு (ii) சரி
Answer:
இ) (i) சரி (ii) தவறு

ஆ. கூற்று (கூ) : பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல்
தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்தவைத்தார்.
காரணம் (கா) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்றும் தவறுகாரணமும் தவறு
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
Answer:
ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக கதி

i) அப்துர் ரசாக் – 1. ரஷ்யா
ii) நிகிடின் – 2. சாளுவநாயக்கர்
iii) டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் – 3. பாரசீகம்
iv) செல்லப்பா – 4. போர்த்துக்கல்
அ) 1 2 3 4
ஆ) 4 3 2 1
இ 2 1 4 3
ஈ) 3 1 4 2
Answer:
ஈ) 3 1 4 2

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
முகமது பின் துக்ளக் சிறப்பாக ஆட்சி புரிவதற்காக டெல்லியிலிருந்து தனது தலைநகரை….. க்கு மாற்றினார்.
அ) உஜ்ஜையினி
ஆ) வாரணாசி
இ) தேவகிரி
ஈ) அகமது நகர்
Answer:
இ) தேவகிரி

Question 2.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய …………….. சிறந்த அரசியல் விவேகி ஆவார்.
அ) குதுப்ஷாகி
ஆ) பிர்தௌசி
இ) ஜாபர்கான்
ஈ) முகமது கவான்
Answer:
ஈ) முகமது கவான்

Question 3.
டோமிங்கோபயஸ் என்ற வணிகர் ………… நாட்டைச் சேர்ந்தவர்
அ) மொராக்கோ
ஆ) போர்ச்சுக்கல்
இ) இத்தாலி
ஈ) ரஷ்யா
Answer:
ஆ) போர்ச்சுக்கல்

Question 4.
……………..அரசர்கள் “ வராகன் ” என்ற தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்
அ) ஹொய்சாள
ஆ) பாமினி
இ விஜயநகர
ஈ) நாயக்க
Answer:
இ விஜயநகர

Question 5.
வகில் – உஸ்- சுல்தானா என்பவர் ………..
அ) படைத்தலைவர்
ஆ) நிதி அமைச்சர்
இ) வெளியுறவு அமைச்சர்
ஈ) தலைமை நீதிபதி
Answer:
அ) படைத்தலைவர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 6.
மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய ………… சிறந்த அரசியல் விவேகியாவார்.
அ) கொத்வால்
ஆ) முகமது கவான்
இ) பிர்தௌசி
ஈ) ஷெர்ஷா
Answer:
ஆ) முகமது கவான்

Question 7.
பாமினி அரசர்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டவர்…………
அ) முகமது கவான்
ஆ) பாமன்ஷா
இ)  கனிஷ்கர்
ஈ) வீர நரசிம்மர்
Answer:
ஆ) பாமன்ஷா

Question 8.
17-ம் நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த வைரச்சந்தை ……… ஆகும்
அ) தோ-ஆப்
ஆ) கோல்கொண்டா
இ) பெரார்
ஈ) ரெய்ச்சிங்
Answer:
ஆ) கோல்கொண்டா

Question 9.
கிருஷ்ண தேவராயர் போர்ச்சுக்கீசியருக்கு கோட்டை கட்ட உரிமம் வழங்கிய இடம்
அ) பத்கல்
ஆ) மலபார்
இ) வாரங்கல்
ஈ) சிம்மாசலம்
Answer:
அ) பத்கல்

Question 10.
கிருஷ்ணா , துங்கப்பத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி …………………
அ) ரெய்சூர்
ஆ) அகமதாபாத்
இ) சிம்மாச்சலம்
ஈ) தோ – ஆப்
Answer:
அ) ரெய்சூர்

II. பொருத்துக

i) பாரசீகம் – 1. நூனிஸ்
ii) ரஷ்யா – 2. டோமிங்கோபயஸ்
iii) போர்ச்சுக்கள் – 3. நிகிடின்
iv) இத்தாலி – 4.அப்துல் ரசாக்
அ) 3 2 1 4
ஆ) 2 1 4 3
இ 1 4 3 2
ஈ) 4 3 2 1
Asnwer:
ஈ) 4 3 2 1

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

V. சுருக்கமான விடையளி

Question 1.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
Answer:

  • கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள பல செப்புப் பட்டயங்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன.
  • கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் நாணயச் சான்றுகளும் விஜயநகரைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக கிடைத்துள்ளன.

Question 2.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
Answer:

  • சங்கமரின் புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் விஜயநகர அரசு ஏற்படுத்தப்பட்டது.
  • தலைநகரை ஹம்பிக்கு அருகே கொசபட்னா என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
  • தலைநகர் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் என புதிய பெயர் சூட்டப்பட்டது.

Question 3.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
Answer:
தொடக்கத்திலிருந்தே பாமினி விஜய நகர அரசுகள் தொடர்ந்து மோதிக்கொண்டன.

  1. இடங்களைக் கைப்பற்றுதல்
  2. கப்பம் வசூலித்தல்
  3. குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
தராப் பற்றி எழுதுக.
Answer:

  • அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப்பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன.
  • குல்பர்க்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்கள் ஆகும்.
  • மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழு பொறுப்பாவார்.

Question 5.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன ? (மார்ச் 2019 )
Answer:

  • பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது
  • இவர் சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார்.
  • இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
  • எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார்.
  • வழிபறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.

கூடுதல் வினா

Question 1.
வராகன் குறிப்பு தருக.
Answer:

  • விஜய நகர அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களுக்கு வராகன் என்று பெயர்.
  • இந்த தங்க நாணயங்களில் இந்து தெய்வங்களின் உருவங்களும் காளை, யானை, கண்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை ஆகிய உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப் பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

VI. குறுகிய விடையளி.

Question 1.
பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?
Answer:

  • முகமதுபின் துக்ளக் தன் தலைநகரை டில்லிக்கு மாற்றிய பிறகு ஜாபர்கான் வடக்குக் கர்நாடகாவில் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.
  • தலைநகரை தேவகிரியிலிருந்து குலபர்காவிற்கு மாற்றினார்.
  • ஜாபர் கான் 1347 ல் பாமன்ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தை இங்கு தோற்றுவித்தார்.

Question 2.
நாயக்க முறை.
Answer:

  • நாயக்க என்னும் சொல் இராணுவத்தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
  • இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறைவு பெற்றது.
  • தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குகள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.

Question 3.
ராக்சஷி தங்கடி போர் (1565) மார்ச் 2019
Answer:
பிரிந்து கிடந்த பாமினி அரசுகள் தங்கள் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் ஒரே கூட்டணியாக இணைந்து (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல் கொண்டா) 1565ல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசை தோற்கடித்தனர்.
இதற்கு ராஷி தங்கடி போர் என்று பெயர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராகப் போற்றப்படக் காரணங்கள் யாவை?
Answer:

  • கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகக் கருதப்படுகிறார்.
  • தான் பெற்ற வெற்றிகளின் நினைவாக சிம்மாச்சலத்தில் வெற்றித் தூணை நிறுவினார்.
  • சைவ, வைணவ கோயில்களுக்கு பெருமளவில் கொடை அளித்தார். பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்றும் உள்ளன.
  • அல்லசானி பெத்தண்ணா போன்ற 10 புலவர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
  • ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக் அல்லது நாயங்கரா முறையை மறு சீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்தார். இது இவரது தலை சிறந்த சாதனையாக கருதப்படுகிறது.
  • இதனால் கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசராகப் போற்றப்படுகிறார்.

Question 5.
இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
Answer:

  • இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப் பட்டவர் அலாவுதின் ஹசன் பாமன் ஷா.
  • 11 ஆண்டுகள் பாமன் ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார்.
  • வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி கொண்ட வீடு ஆகியவற்றிடமிருந்து கப்பம்பெற முயன்றபோது பல போர்களுக்கு இட்டுச் சென்றது.
  • அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
  • தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டார்.

Question 6.
கோல் கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.
Answer:

  • கோல் கொண்டா கோட்டை ஹைதராபாத்தி லிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள மலை மீது 120 மீட்டர் உயரத்தில கட்டப்பட்டுள்ளது.
  • ஒலி அம்ச அடிப்படையில் இது சிறந்த கட்டிடக்கலையின் அம்சமாகும்.
  • இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது.
  • இதில் ரகசிய நிலத்தடி சுரங்கபாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்த மலையின் கீழுள்ள அரண்மனைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
  • இக்கோட்டையில் அரச அவையும், ஒரு மாளிகையும் உள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

கூடுதல் வினா

Question 1.
தென்னிந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள் யாவர்?
Answer:

  • மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இபன்பதூதா.
  • பாரசீகப் பயணியான அப்துல் ரசாக்
  • ரஷ்யப் பயணியான நிகிடின்
  • போர்ச்சுக்கள் நாட்டு வணிகரான டோமிங்கோ பயஸ்.
  • இத்தாலி நாட்டைச் சேர்ந்த நூனிஸ் ஆகியோர் தென்னிந்தியாவிற்கு வந்த அயல் நாட்டவர்கள் ஆவார்கள்.

Question 2.
விஜயநகர பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைப்படி கூறுக.
Answer:
விஜயநகரப் பேரரசை நான்கு அரச வம்சத்தினர் ஆட்சி புரிந்தார். அவை

  1. சங்கவம்சம் (1336-1485)
  2. சாளுவவம்சம் (1485-1505)
  3. துளுவவம்சம் (1505-1570)
  4. அரவீடுவம்சம் (1570-1650)

ஆகிய நான்கு வம்ச அரசர்களும் சுமார் 300 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
விஜயநகரப் பேரரசின் சமூக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
Answer:
சமூக நிலை :

  • தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்கக்கால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
  • விஜயநகரப் பகுதிகளைக் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தொரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர்.
  • மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும்.
  • அனைத்து அயல் நாட்டு பயணிகளும் அரசர்களும், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த னர்.
  • மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
  • அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

பொருளாதார நிலை :

  • விஜயநகர மன்னர்கள் வரி விதிப்பின் மூலமே வருமானத்தை பெற்றனர்.
  • விஜயநகர ஆட்சி புதிய பகுதிகளுக்கு பரவிய போது அப்பகுதி மீது ஆளுநர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • விஜயநகர இளவரசர் இப்பிரச்சனையில் தலையிட்டு வரித் தொகையை குறைத்ததாக அறியப்படுகிறது.
  • விஜயநகர ஆட்சியில் வேளாண்மை சாராத கைவினைத் தொழில்களும் வியத்தகு வளர்ச்சி அடைந்தது.
  • சமூகத்தில் நெசவு செய்வோர் உலோக வேலை செய்வோர் மற்றும் கட்டிட கலைஞர்கள் போன்ற கைவினைக் கலைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
  • இவர்கள் பட்டடை என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வரியை பணமாகவே வழங்கினர். .

Question 2.
விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer:
அரச அமைப்பு :

  • விஜய நகர பேரரசில் அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர்.
  • அதில் மகா பிரதாணி என்று அழைக்கப்பட்ட முதல் அமைச்சர் அதிக அதிகாரம் படைத்தவராக இருந்தார்.
  • அவர் தளவாய், வாசல் ராயசம் அடைப்பம், காரிய கர்த்தா போன்ற கீழ் நிலை அதிகாரிகளுக்கு தலைவராவார்.

பிரதேச பிரிவு :

  • நிர்வாக வசதிக்காக நாடு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இது ராஜ்யா என்று அழைக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ராஜ்யாவுக்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
  • ஹொய் சாளா, அரகா, பர்கூர் மற்றும் மங்களூர்
    போன்றவை முக்கிய ராஜ்யாக்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

நிர்வாகம் :

  • பிரதானி என்பவர் அரசவை உறுப்பினராகவோ அல்லது இராணுவ அதிகாரியாகவோ இருப்பார். நிர்வாகத்தில் அவருக்கு உதவி புரிய இராணுவ அதிகாரிகளும் கணக்கர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
  • ஒவ்வொரு ராஜ்யாவும் சீமை , ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
  • கிருஷ்ண தேவராயரால் நாயக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ராஜ்யாக்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.

Question 3.
முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • பாமினி சுல்தான் அலாவுதீன் பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகமது ஆவார்.
  • இவர் விஜய நகரப் பேரரசர்களுடன் நீண்ட காலப் போர்களை மேற்கொண்டார். ஆனால் எந்த ஒரு பயனையும் இப்போர்கள் அவருக்கு தரவில்லை
  • 1363 இல் இவர் வாராங்கல் மீது படையெடுத்து அதை கைப்பற்றினார். ரெய்ச்சூர் போர்களினால் ஏற்பட்ட நஷ்டம் இப்போரின் வெற்றியால் ஈடு செய்யப்பட்டது.
  • கோல் கொண்டா கோட்டை இவர் வசமானது. அங்கிருந்த ரத்தின சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனம் ஆனது.
  • முதலாம் முகமது சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். டில்லி சுல்தானியர் பின்பற்றிய நிர்வாக முறையை பின்பற்றியே இவரது நிர்வாக முறை அமைந்திருந்தது.
  • நிர்வாகத்திற்கென்று எட்டு அமைச்சர் கொண்ட குழுவை அவர் நியமித்தார். அக்குழு பல்வேறு துறைகளை மேற்பார்வை இட்டு நிர்வாகம் சீராக நடைபெற உதவியது.
  • நிர்வாகம் மற்றும் புவியியல் ரீதியாக ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே பாமினி அரசுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது.
  • வழிப்பறி கொள்ளையருக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 4.
முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி
Answer:

  • பாமினி சுல்தான் மூன்றாம் முகமதுவின் சிறந்த அமைச்சராக முகமது கவான் விளங்கினார்.
  • சிறந்த நிர்வாகியான கவான் தனது திறமையால் பாமினி அரசின் வளர்ச்சிக்கு உதவினார்.

ஆட்சி முறை :

  • கவான். மாகாண ஆளுனர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்சி அமைப்பை உருவாக்கினார்.
  • நிர்வாக வசதிக்காக நாட்டை விட்டு மாகாணங்களாக பிரித்தார். ஒவ்வொரு மாகாணங்களும் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன.
  • அவற்றிக்கு தனித்தனியே ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • சில மாவட்டங்களை கவான் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
  • கவான் அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்த்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின.

இராணுவ நிர்வாகம் :

  • ஆளுனர்களின் இராணுவ அதிகாரிகள் குறைக்கப்பட்டன. ஒரு ஆளுனர் ஒரு கோட்டையை மட்டுமே பராமரிக்க அனுமதிக்கப்பட்டார்.
  • மற்ற கோட்டைகள் யாவும் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
  • கொங்கணம் ஒரிசா விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமான போர்களை நடத்தினார். இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் வெடி மருந்தைப் பயன்படுத்தினார்.

கூடுதல் வினா

Question 1.
முதலாம் முகமதுவின் அமைச்சரவை பற்றிக் கூறு?
Answer:

  • முதலாம் முகமது எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அவை முறையே
  • வகில் உஸ் சுல்தானா – படைத்தலைவர்
  • வசீர் குல் – அமைச்சர்களின் பணியை பார்வையிடுபவர்
  • அமீர் – இ – ஜீம்மா – நிதியமைச்சர்
  • வசீர் – இ – அஷ்ரப் – வெளியுறவுத்துறை அமைச்சர்
  • நசீர் – நிதித்துறை இணை அமைச்சர்
  • பேஷ்வா – படைப்பொறுப்பாளர்
  • கொத்வால் – காவல்துறை தலைவர்
  • சதர் – இ-ஜஹான் – தலைமை நீதிபதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள்

Question 2.
இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை சிற்றரசர்களை விவரி?
Answer:

  • இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்து கிருஷ்ண நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவங்கி வைக்கப்பட்டது.
  • போர் புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாகப் பணியாற்றினார்.
  • நாயக்க மன்னர்களின் படைகளிலும் பணியாற்றிய இவர்கள் பரம்பரைக் காவல்காரர் களாக கிராமங்கள், கோவில்கள், ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தனர்.
  • இராமேஸ்வரம் கோவில், உடையான் சேதுபதி என்பவரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசராக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது.

முந்தைய காலத்தில் சோழ, பாண்டிய அரசுகளிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது.

இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பைப் பெற்றது.