Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 2

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
காளைகளின் பல இனங்களைக் காட்டும் நூல் …………………..
(அ) குறிஞ்சிக்கலி
(ஆ) முல்லைக்கலி
(இ) மருதக்கலி
(ஈ) நெய்தற்கலி
Answer:
(ஆ) முல்லைக்கலி

Question 2.
கிடை என்பது ……….ன் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அறைக்கும் குறுநாவல்.
(அ) ஆடு
(ஆ) மாடு
(இ) மான்
(ஈ) மிளா
Answer:
(அ) ஆடு

Question 3
………….. ஆண்டுதான் வெப்பமான ஆண்டு என இந்திய வானிலை அறிவித்தது.
(அ) 2008
(ஆ) 2009
(இ) 2010
(ஈ) 2012
Answer:
(ஆ) 2009

Question 4.
சங்க காலத்தில் இல்லாத சொற்களான………… சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
(அ) திருமணம், மறுமணம்
ஆ) நிதியம், சங்கம்
(இ) அறவோர், துறவோர்
(ஈ) அவை, மன்றம்
Answer:
(இ) அறவோர், துறவோர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 5.
கவிச்சக்ரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலம்…….. நூற்றாண்டு ஆகும்.
(அ) 10-ம்
(ஆ) 11-ம்
(இ) 12-ம்
(ஈ) 15-ம்
Answer:
(இ) 12-ம்

Question 6.
பழங்காலத்தில் ‘கணக்கு’ என …………ஐ அழைத்தனர்.
(அ) ஆசிரியர்
(ஆ) நூல்
(இ) குடும்பம்
(ஈ) மரம்
Answer:
(ஆ) நூல்

Question 7.
ஓலைச்சுவடிகளில் துளையிட்டுக் கட்டும் முறைக்கு………. என்று பெயர்.
(அ) தூக்கு
(ஆ) நாராசம்
(இ) பானையேடு
(ஈ) முறைமை
Answer:
(ஆ) நாராசம்

Question 8.
மனித மனங்களில் நின்று நிலைக்க வேண்டியவற்றுள் முதன்மையானது……….. ஆகும்.
(அ) அறங்க ள்
(ஆ) புகழ்
(இ) செல்வம்
(ஈ) உறவுகள்
Answer:
(அ) அறங்க ள்

Question 9.
துறவுக்கு எதிரானது………. ஆசை என வள்ளலார் கூறுகிறார்.
ஆ) மண்
ஆ) பொன்
(இ) பெண்
(ஈ) பணம்
Answer:
(இ) பெண்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 10.
பாரதியார் இராமலிங்கரை…………. எனப் புகழ்ந்தார்.
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்
(ஆ) புதுவழி தந்த வள்ளல்
(இ) நிறைமொழி தந்த செம்மல்
(ஈ) ஆன்மிகம் தந்தசோதி
Answer:
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்

Question 11.
அகநானூறு என்ற சொல்லை ………… எனப் பிரிப்பதே சரி.
(அ) அக + நானூறு
(ஆ) அகம் + நான்கு + நூறு
(இ) அகநான்கு + நூறு
(ஈ) அகம் + நானூறு
Answer:
(ஆ) அகம் + நான்கு + நூறு

Question 12.
அம்மூவனார்………. திணை பாடுவதில் சிறந்தவர்.
(அ) குறிஞ்சி
(ஆ) முல்லை
(இ) மருதம்
(ஈ) நெய்தல்
Answer:
(ஈ) நெய்தல்

Question 13.
ரயிலின் வருகை என்ற படத்தினை கிராண்ட்க பே விடுதியின் திரையிட்டவர்கள்……….. சகோதரர்கள் ஆவர்.
அ) ரைட்
(ஆ) லூமியர்
(இ) மார்டன்
(ஈ) சார்லி
Answer:
(ஆ) லூமியர்

Question 14.
பாட்டும், உரைநடையும் கலந்து வந்த காப்பியம் ……….
(அ) மணிமேகலை
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) வளையாபதி
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

பகுதி-1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
காப்பியத்தின் சிறப்பு யாது?
Answer:

  • ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும் என்பர்.
  • எளிய நடை, இனிய கதை, அழகியல், கற்பனை ஆகியவை ஒருசேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.
  • காவியமானாலும், ஓவியமானாலும் இன்பம் தந்து வாழ்க்கையை உயர்த்த வேண்டும்.
  • இன்றைக்கு மனிதனுடைய எண்ணங்களும் சுவையுணர்ச்சியும் கற்பனை ஆற்றலும் விரிந்திருக்கின்றன.
  • பண்பாட்டிற்கேற்ற மரபைத் தெரிந்துகொண்டு பழமைக்குப் புதிய உருவமும் புதுமைக்குப் பழைய உரமும் இணைந்த காப்பியங்கள் காலந்தோறும் தோன்ற வேண்டும்.

Question 16.
தமிழ்நதி இயற்றிய படைப்புகள் யாவை?
Answer:

  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
  • சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
  • கானல் வரி (குறுநாவல்)
  • ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்)

Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:

  • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்துகொள்கிறது.
  • அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Question 18.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி ‘ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
தனிக்குடும்பம் என்றால் என்ன?
Answer:
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை மற்றும் எளிய நிலை மற்றும் நெருக்கமான தனிக்குடும்பம் எனப்படுகிறது.

Question 20.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
  • மறைமலையடிகள் நூலகம்
  • செம்மொழி தமிழாய்வு நூலகம்

Question 21.
சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:

  • பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும் போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம்.
  • அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன.
  • திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வியர்த்த னர் (ஆ) வாழியர்
Answer:
(அ) வியர் + த் + த் + அன் + அர் – வியர்த்த னர்
வியர் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

(ஆ) வாழ் + இயர் – வாழியர்
வாழ் – பகுதி
இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) புக்க
(ஆ) அறியாத
Answer:
(அ) புக்க – பெயரெச்சம்
(ஆ) அறியாத – எதிர்மறைப் பெயரெச்சம்

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
சோளந்தோப்பிற்குள் மாட்டிக் கொண்ட எருமைக்குட்டி வெளியேற முடியாமல் தவித்தது.
Answer:
சோளக் கொல்லைக்குள் மாட்டிக் கொண்ட எருமைக்கன்று வெளியேற முடியாமல் தவித்தது.

Question 25.
ஏதேனும் ஒன்றிற்குப் பிரித்து புணர்ச்சி விதி தருக.
(அ) விண்ணுலகு
(ஆ) மலையருவி
Answer:
(அ) விண் + உலகு – விண்ணுலகு
விண் + ண் + உலகு – விண்ணுலகு
விதி : (1) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
(2) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

(ஆ) மலை + அருவி – மலையருவி
மலை + ய் + அருவி – மலையருவி
விதி : இ ஈஐ வழி யவ்வும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
டயாபடிக் பேஷண்ட் இனிப்பு சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
Answer:
நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

Question 27.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபடுமாறு ஒரே தொடரை அமைக்கவும்.
பனி – பணி
Answer:
பனிப்பொழிவு அதிகமாக இருந்தபோதிலும் அதிகாலையிலேயே பணிக்குச் சென்றேன்.

Question 28.
விடைக்கேற்ற வினா எழுதுக.
ஸ்ரீகிருஷ்ணரால் நரகாசுரன் கொல்லப்பட்டான்.
Answer:
நரகாசுரன் யாரால் கொல்லப்பட்டான்?

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 29.
உரிய இடங்களில் வல்லினம் சேர்த்து எழுதுக.
புறநானூறு நூலின் சிறப்பு கருதி இதனை பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.
Answer:
புறநானூறு நூலின் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.

Question 30.
மரபுச் சொற்களைத் தொடரில் அமை.
வழிவழியாக
Answer:
ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தினர் வழிவழியாகக் குலதெய்வ வழிபாடுகள் நிகழ்த்துகின்றார்கள்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
  • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி
    நிற்கும்.

Question 32.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Question 33.
புதுக்கவிதையின் சிறப்பைக் கூறுக.
Answer:

  • பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச்
    செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன.
  • புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது.
  • புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.

Question 34.
ஆசிரியர் தமிழ் நதி குறிப்பு வரைக.
Answer:

  • தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்கவிஞர்.
  • இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது – புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில்
    பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்) ஈழம்: கைவிட்ட தேசம். பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
தொடக்கத்தில் நாடகத்தை எவ்வாறு நடத்தினர்?
Answer:

  • திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம்.
  • தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம்
    என்பது ஒரு காட்சியை ஒன்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
  • நாடகங்களின் காலத்தில் ஒலிபரப்புக் கருவிகள் இல்லாததால் வசனங்களை உரக்கப் பேச வேண்டிய தேவையிருந்தது.
  • அதே போலத் தொலைவிலிருப்பவர்களும் நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும் என்பதால் அதிக ஒப்பனை செய்துகொண்டு கை – கால்கள், கண்களின் அசைவுகள் நன்றாகத் தெரியும் வகையில் அசைத்து உரக்கப்பேசி இயல்பில் நாம் செய்வதைவிடச் சற்றுக் கூடுதலாகச் செய்து நடித்தார்கள்.
  • திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் மைக்கைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.
  • ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து ‘நேரேட்டர்’ எனும் அக்கதைச்சொல்லி வந்து நின்றாலே அனைவரும் கைதட்டத் தொடங்கினர்.

Question 36.
மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டக்கூடியது இவரது வார்த்தைகள்.
  • தமிழில் ‘தமிழர் அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிரம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
    சமயம், மானுடவியல் தொல் பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

Question 37.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் – எவ்வாறு?
Answer:

  • சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டும் ஓரளவு இனம் காண முடிகிறது.
  • நற்றாய் (பெற்ற தாய்) ஒருபுறம் இருந்தாலும் செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர்.
  • சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.
  • இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினார்கள். விரிந்த குடும்பம் பற்றிய இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது.
  • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச்சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
  • அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும் தந்தை வழிக்குடும்ப அமைப்பை கொண்டதாகவும் இருக்கிறது.
  • தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும்.

Question 38.
தி. சு. நடராசன் குறிப்பு வரைக.
Answer:

  • தி. சு நடராசன் எழுதிய தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
  • திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது பரிசில்துறையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர்
கானவர்
பறவை – கிளி, மயில் விலங்கு
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று: ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

பரிசில் துறை:
துறை விளக்கம்:
புலவர் அரசனின் சிறப்பையும் நாட்டின் சிறப்பையும் புகழ்ந்து பாடியபின் பரிசுவேண்டி வாயிலில் நிற்பது.

(சான்று) “வாயிலோயே வாயிலோயே….” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் துறை பொருத்தம் :
அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டையும் அவனது புகழையும் பாடிய ஓளவையார் பரிசிலுக்காகக் காத்திருந்த நிலைபற்றிக் கூறுவதால் இப்பாடல் பரிசில் துறையைச் சார்ந்ததாகும்.

Question 40.
ஏகதேச உருவக அணி அல்லது மடக்கணியைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஏகதேச உருவக அணி:
அணி விளக்கம்:
தொடர்புடைய இரண்டில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை அப்படியே விட்டுவிடுதல் ‘ஏகதேச உருவக’ அணியாகும்.

(எ.கா.) ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’

விளக்கம்:
இவ்வரியில் கவிஞர் நீல வானத்தை ஓடையாக உருவகப்படுத்தியுள்ளார். ஆனால், அதனில் நீந்தும் கப்பலாக வெண்ணிலாவை உருவகப்படுத்தாமல் விட்டுவிட்டார். எனவே இது ‘ஏகதேச உருவக அணி’யாகும்.

(அல்லது)

மடக்கணி:
அணி விளக்கம் :
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.
(எ.கா.) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை,

அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள் தருகிறது. எனவே, இது ‘மடக்கணி’ எனப்படும்.

Question 41.
பின்வரும் பாடலை நன்கு படித்துப் பார்த்து மையக் கருத்தையும், திரண்ட கருத்தையும்
எழுதுக.
Answer:
ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப் பார்
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்
செகத்தப்பன் யோசித்துத்துச் சித்திரம் சோர்ந்தான்!
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ! (- பாரதிதாசன்)

ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் : கனக சுப்புரத்தினம்
பிறப்பு : 29, ஏப்ரல் 1891
ஊர் : புதுவை
புனைப்பெயர் : பாரதிதாசன் (பாரதிக்கு அடிமையானவன்)
விருது : சாகித்திய அகாதெமி
துணைவியர் : பழநி அம்மையார்

திரண்ட கருத்து:
ஆடுகின்ற உலக மனிதனே யோசித்துப்பார். வெறும் ஆர்ப்பாட்டகாரர்கள் இதை ஒப்பாரும் இலர். உன் ஒரு வழியை நீயே தேடிச் செல். யோசித்து உன் வாழ்வை நீ யோசித்து சித்திரமாக்கு. ஏழையாய் இருப்பவர் சிந்தித்து விட்டால் ஓடப்பர் உதையப்பராய் மாறிடுவர் ஒரு நொடியில் ஓடப்பர் எல்லாம் உயர்ந்திடுவர் அதை நீ உணர்ந்திடு.

மையக் கருத்து: மனிதன் சிந்தித்து செயல்பட்டால் உலகத்தை மாற்றும் வல்லமை உண்டு.
மோனை: மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
ஆடுகின்றாய் – ஆர்ப்பாட்டக்காரர்
ஒருவழியை – ஒப்பப்பர்

எதுகை: அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை. .
தேடப்பா – ஓடப்பர்
இயைபு: ஒப்பாரப்பா – ஏழையப்பா
அணி: சொற்பொருள் பின்வருநிலையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Knowledge is power.
2. A young calf knows not fear.
3. All his geese are swans.
4. All is fair in love and war.
Answer:
1. அறிவே ஆற்றல்.
2. இளங்கன்று பயமறியாது.
3. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
4 ஆபத்துக்குப் பாவம் இல்லை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. கடற்காட்சி (அல்லது) தென்றல்
Answer:
im 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 x 6 = 18]

Question 44.
(அ) கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:

  • வானம் என்பது ஒன்று. வானத்தில் இயங்குகின்ற நிலவு, சூரியன், மேகம் என்பது வேறு. எனவே வானம் வேறு, அதில் இயங்குபவை வேறானது. மண் என்பது பூமியை குறிக்கும்.
  • அப்பூமியின் மீது கலந்திருக்கும் மணல், பனித்துளி, மழை இவை எல்லாம் வேறு. எனவே மண் வேறு, அதில் கலந்திருப்பவை வேறு.
  • புண் என்பது அடிப்படுதல். வீரர்களுக்கு ஏற்படுவது விழுப்புண் வேறு வேறானது. புகழும், செல்வாக்கும் வேறுவேறானது. உடம்பில் உள்ள கண்ணும், கல்விக் கண்ணும் வேறு கற்றவரின் கவிநடையும், உரைநடையும் வேறுவேறானது.
  • சமைக்கும் முன்வரை அரிசி என்றும் சமைத்த பின்பு அதனையே சோறு என்றும் சொல்கின்றோம்.
  • பூக்களை, பூப்பதாலேயே பூ என்கிறோம் அதற்கு முன் அரும்பு என்றழைக்கிறோம். சொல்கள் சேர்கின்ற போது எதுகை, மோனை என்றும், சேராமல் அடிகளாக மாற்றாமல் எழுதுவதை வசனம் என்றும் யாப்பை சேர்த்து எழுதினால் கவிதை என்றும் அழைக்கின்றோம்.
  • பழம் பழுத்து இருந்தால் சாறுகிட்டும். வயலில் நீர்பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும் அதேபோல் எழுத்திருந்தால் அசைகள் வரும்.
  • இரண்டு சீர் இடைவெளியில் தளைகள் வரும். தளைகள் சேர்ந்தால் அடிகள் வரும் அடிகள் பல அடுக்கிவந்தால் தொடைகள் வரும்.
  • தொடைகள் நன்குழு செழித்திருந்தால் பாக்கள் வரும் இவை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் ‘ கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.
  • தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும். சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும். ஏமாந்தால் சீர்கள் தளையைத்தட்டும். வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீரில் காசு தரும்.
  • பூத்த பூவில் வண்டு வருவதுபோது நல்லபுலவர்களின் பாடல்களுக்கு கீர்த்தி தங்கும். சாதாரண மக்களுக்கும் விளங்கும் வண்ணம் தமிழ்க்கவிதை தரவேண்டும்.
  • எருவினாலே பயிர்கள் விளையும். சிறந்த கேள்வி எழுப்புவதால் நல்ல ஆராய்ச்சி விளையும். நடு இரவில் குளிர்விளையும். ஆழ்ந்து, நுணுங்கதோடே பொருளும் உள்ளத்தில் விளையும்.
  • மிஞ்சும் அறிவினிலே புகழ்விளையும். இவற்றை எல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுதுவோர்க்கும் புகழும், சிறப்பும் எங்கே விளையக்கூடும்.

(அல்லது)

Question 44.
(ஆ) கடையெழு வள்ளல்கள் பற்றிச் சிறுபாணாற்றுப்படை கூறும் கருத்துக்களைத் தொகுத்து
எழுதுக.
Answer:
பேகன்:
பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்கு பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்: வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத் தலைவன்.

பாரி:
வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேன்மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்களை நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரக் கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது; அதைக்கண்டு, மனம் வருந்தித் தான் ஏறிவந்த பெரிய தேரின் மீது, அக்கொடியினைப் படரவிட்டவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.

காரி:
உலகம் வியக்கும்படி ஒலிக்கின்ற மணிகளையும் வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.

ஆய்:
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன்; ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.

அதிகன்:
நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோது, அத்னை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல். வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன்; கடல் போன்ற ஒலிமிக்க படையினையும் உடையவன்

நள்ளி :
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்; மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

ஓரி:
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன். ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) ‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது
வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை:
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

தொழில் மற்றும் கல்வி:
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித்தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளன.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தது.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் ” விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(அ) ‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்
1. முன்னுரை
2. சாலை விதிகள்
3. கணக்கீடு
4. சாலைக்குறியீடு
5. மோட்டார் வாகனச் சட்டம்
6. முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துகளும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு:
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடு கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்க கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும். *
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக்கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ. 5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ. 2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
Answer:
எங்கள் ஊரான மதுரை மாவட்டத்தில் பல நாடக சபைக் குழுக்கள் உள்ளது. அதிலே நாடகங்களை எழுதி, நடிக்கும், திரு. கபிலன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் நிகழ்ந்த உரையாடல் பற்றியும், உங்கள் நாடகங்கள் பற்றியும், உங்கள் நடிப்புத்திறன் பற்றியும் கூறுங்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை கூறுகிறேன்.

எங்கள் நாடகக் குழுக்களின் நோக்கம், பல சமுதாய மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே போடப்படுகிறது. நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி, சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி, தெரியாத சம்பவங்களை, வேத, இதிகாச, புராணங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மக்களை சிரிக்க வைப்பதுவே முதல் காரணம்.

எங்கள் குழுவில் 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு கலையிலும் சிறந்தவர்கள். நாங்கள் நாடகங்களில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம், அதுவே எங்களின் சிறப்பு.

நாடகங்களில் நடிக்கும் போது, அரசனாகவும், மந்திரியாகவும், ஏழை விவசாயியாகவும், திருடனாகவும், அதிகாரியாகவும், கடவுளாகவும் இது போன்ற எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாக நாங்கள் மாறிவிடுவோம். நாடகங்களில் வரும் பணத்தைவிட மக்களைச் சிரிக்க வைக்கிறோம் மற்றும் மக்களை விழிப்புணர்ச்சியூட்டுகிறோம், மக்களை நல்வழிப்படுத்துகிறோம் என்ற மனநிறைவே எங்களுக்குப் போதும். பணநிறைவை விட மனநிறைவே எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் (பூம்புகார்) மற்றும் பல சுதந்திர போராட்ட நாடகங்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், பாரதியார், ஜான்சிராணி இதுபோன்ற நாடகங்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவை.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) ‘குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘நுண்ணிய’ என்று துவங்கும் குறளை எழுது. [1 x 2 = 2]
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். (- திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Students can Download Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium Pdf, Tamil Nadu 12th Biology Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Biology Model Question Paper 1 English Medium

General Instructions:

    1. The question paper comprises of four parts. Questions for Botany and Zoology are asked separately.
    2. You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
    3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
    4. Question numbers 1 to 8 in Part I are Multiple Choice Questions of one mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and writing the option code and the corresponding answer.
    5. Question numbers 9 to 14 in Part II are two-marks questions. These are to be answered in about one or two sentences.
    6. Question numbers 15 to 19 in Part III are three-marks questions. These are to be answered in about three to five short sentences.
    7. Question numbers 20 and 21 in Part IV are five-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 2.30 Hours
Maximum Marks: 70

Bio-Botany [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. (8 × 1 = 8)

Question 1.
Choose the correct statement from the following
(a) Gametes are involved in asexual reproduction
(b) Bacteria reproduce asexually by budding
(c) Conidia formation is a method of sexual reproduction
(d) Yeast reproduce by budding
Answer:
(c) Conidia formation is a method of sexual reproduction

Question 2.
The dominant epistasis ratio is _______.
(a) 9 : 3 : 3 : 1
(b) 12 : 3 : 1
(c) 9 : 3 : 4
(d) 9 : 6 : 1
Answer:
(b) 12 : 3 : 1

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 3.
The process of recombinant DNA technology has the following steps
i. Amplification of the gene.
ii. Insertion of recombinant DNA into the host cells.
iii. Cutting of DNA at specific location using restriction enzyme.
iv. Isolation of genetic material (DNA).
Pick out the correct sequence of steps for recombinant DNA technology.
(a) ii, iii, iv, and i
(b) iv, ii, iii, and i
(c) i, ii, iii, and iv
(d) iv, iii, i, and ii
Answer:
(d) iv, iii, i, and ii

Question 4.
A widely used fusogen in protoplast culture is _______.
(a) Polymethyl glycol
(b) Polyethylene glycol
(c) Polyethylene chloride
(d) Polyvinyl chloride
Answer:
(b) Polyethylene glycol

Question 5.
A specific place in an ecosystem, where an organism lives and performs its functions is _______.
(a) habitat
(b) niche
(c) landscape
(d) biome
Answer:
(b) niche

Question 6.
Assertion (A): Ozone acts as a natural sun block.
Reason (R): UV rays reaching the earth are deviated from earth.
(a) A is correct R is incorrect
(b) A is incorrect R is correct
(c) R explains A
(d) Both A and R are incorrect
Answer:
(c) R explains A

Question 7.
Jaya and Ratna are the semi dwarf varieties of _______.
(a) wheat
(b) rice
(c) cowpea
(d) mustard
Answer:
(b) rice

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 8.
Find out the correctly matched pair:
(a) Rubber – Shorea robusta
(b) Dye – Lawsonia inermis
(c) Timber – Cyperus papyrus
(d) Pulp – Hevea brasiliensis
Answer:
(b) Dye – Lawsonia inermis

Part – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
“Tissue culture is the best method for propagating rare and endangered plant species”- Discuss.
Answer:
Micropropagation of plants invitro through tissue culturing is a modem and alternative tool to conserve and safeguard rare plant species. Since the basic principle behind PTC is totipotency. With the help of a single explant it is possible to generate a huge population of plantlets within a short span of time. Conservation through micropropagation offers the possibility to rescue endangered and endemic species.

Question 10.
Extra-nuclear inheritance is called as cytoplasmic inheritance. Why?
Answer:
Extra nuclear inheritance is due to genes located on the cytoplasmic organelles such as chloroplast and mitochondrion hence it is called cytoplasmic inheritance.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 11.
Differentiate Aneuploidy from Euploidy.
Answer:
Aneuploidy:
Ploidy involving individual chromosomes within a diploid set.
E.g: Trisomy.

Euploidy:
Ploidy involving entire sets of chromosomes.
E.g: Polyploidy.

Question 12.
How do you use the biotechnology in modern practice?
Answer:
In modem practice, biotechnology is used in the development of herbicide resistance plants, improved crop varieties, producing pharma products like insulin, developing vaccines, diagnosing genetic diseases and designing drugs etc.

Question 13.
Classify plant tissue culture based on the explants used.
Answer:

  1. Organ culture
  2. Meristem culture
  3. Protoplast culture
  4. Cell culture

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 14.
What are ecological equivalents? Give one example.
Answer:
Taxonomically different species occupying similar habitats (Niches) in different geographical regions are called Ecological equivalents.
E.g: Certain species of epiphytic orchids of Western Ghats of India differ from the epiphytic orchids of South America. But they are epiphytes.

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
Write a note on Replica plating technique of colony selection.
Answer:
Samacheer Kalvi 12th Biology Model Question Paper 1 English Medium 1

  • Replica plating technique is a method in which the pattern of colonies growing on a culture plate is copied.
  • A sterile filter plate is pressed against the culture plate and then lifted.
  • Then the filter plate is pressed against a second sterile culture plate
  • This results in the new plate being infected with cell in the same relative positions as the colonies in the original plate.
  • The medium used in the second plate will differ from that used in the first.
  • The method may include an antibiotic or without a growth factor. Thus, transformed cells can be selected.

Question 16.
List the characteristics of ecological succession.
Answer:

  • It is a systematic process which causes changes in specific structure of plant community.
  • It is resultant of changes of abiotic and biotic factors.
  • It transforms unstable community into a stable community.
  • Gradual progression in species diversity, total biomass, niche specialisation, and humus content of soil takes place.
  • It progresses from simple food chain to complex food web.
  • It modifies the lower and simple life form to the higher life forms.
  • It creates inter-dependence of plants and animals.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 17.
How Eichhornia crassiper spoils the Indian ecosystem?
Answer:
Eichhornia crassipes is an invasive weed native to South America. It was introduced as aquatic ornamental plant, which grows faster throughout the year. Its widespread growth is a major cause of biodiversity loss worldwide. It affects the growth of phytoplanktons and finally changing the aquatic ecosystem.

It also decreases the oxygen content of the water bodies which leads to eutrophication. It poses a threat to human health because it creates a breeding habitat for disease causing mosquitoes (particularly Anopheles) and snails with its free floating dense roots and semi submerged leaves. It also blocks sunlight entering deep and the water ways hampering agriculture, fisheries, recreation and hydro power.

Question 18.
Write a short note on foxtail millet.
Answer:
Foxtail Millet:
Botanical name: Setaria italica.
This is one of the oldest millet used traditionally in India. Which is domesticated first in China about 6000 years. Rich in protein, carbohydrate, vitamin B and C, Potassium and Calcium.
Uses: It supports in strengthening of heart and improves eye sight. Thinai porridge is given to lactating mother.

Question 19.
Define the following terms.
(a) Emasculation
(b) Bagging
(c) Biofortification
Answer:
(a) Emasculation: Removal of anthers of a flower before anthesis to prevent self pollination.
(b) Bagging: Covering the stigma of the flower with a back to protect it against any undesirable pollen grains.
(c) Biofortification: Breeding crops with higher levels of vitamins and minerals or higher protein and healthier fats.

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) Enumerate the advantages of Artificial seeds.
Answer:
Artificial seeds have many advantages over the true seeds as follows:

  • Millions of artificial seeds can be produced at any time at low cost.
  • They provide an easy method to produce genetically engineered plants with desirable traits.
  • It is easy to test the genotype of plants.
  • They can potentially stored for long time under cryo preservation method.
  • Artificial seeds produce identical plants.
  • The period of dormancy of artificial seeds is greatly reduced, hence growth is faster with a shortened life cycle.

[OR]

(b) Write in detail about Autogenic succession and Allogenic succession.
Answer:
Autogenic succession:
Autogenic succession occurs as a result of biotic factors. The vegetation reacts with its environment and modifies its own environment causing its own replacement by new communities. This is known as autogenic succession.

Example: In forest ecosystem, the larger trees produce broader leaves providing shade to the forest floor area. It affects the shrubs and herbs which require more light (heliophytes) but supports the shade tolerant species (sciophytes) to grow well.

Allogenic succession:
Allogenic succession occurs as a result of abiotic factors. The replacement of existing community is caused by other external factors (soil erosion and leaching, etc.,) and not by existing organisms.
Example: In a forest ecosystem soil erosion and leaching alter the nutrient value of the soil leading to the change of vegetation in that area.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 21.
(a) Explain Dihybrid cross in pea plant.
Answer:
The crossing of two plants differing in two pairs of contrasting traits is called dihybrid cross. In dihybrid cross, two characters (colour and shape) are considered at a time. Mendel considered the seed shape (round and wrinkled) and cotyledon colour (yellow & green) as the two characters. In seed shape round (R) is dominant over wrinkled (r); in cotyledon colour yellow (Y) is dominant over green (y).

Hence the pure breeding round yellow parent is represented by the genotype RRYY and the pure breeding green wrinkled parent is represented by the genotype rryy. During gamete formation the paired genes of a character assort out independently of the other pair. During the F1 x F2 fertilization each zygote with an equal probability receives one of the four combinations from each parent. The resultant gametes thus will be genetically different and they are of the following four types:

  1. Yellow round (YR) – 9/16
  2. Yellow wrinkled (Yr) – 3/16
  3. Green round (yR) – 3/16
  4. Green wrinkled (yr) -1/16

These four types of gametes of F1 dihybrids unite randomly in the process of fertilization and produce sixteen types of individuals in F2 in the ratio of 9 : 3 : 3 : 1 as shown in the figure. Mendel’s 9 : 3 : 3 : 1 dihybrid ratio is an ideal ratio based on the probability including segregation, independent assortment and random fertilization.

In sexually reproducing organism / plants from the garden peas to human beings, Mendel’s findings laid the foundation for understanding inheritance and revolutionized the field of biology. The dihybrid cross and its result led Mendel to propose a second set of generalisations that we called Mendel’s Law of independent assortment.
Samacheer Kalvi 12th Biology Model Question Paper 1 English Medium 2
Samacheer Kalvi 12th Biology Model Question Paper 1 English Medium 3

(b) What are the objectives of Afforestation programme?
Answer:
Afforestation Objectives:

  • To increase forest cover, planting more trees, increases CO2 production and air quality.
  • Rehabilitation of degraded forests to increase carbon fixation and reducing CO2 from atmosphere.
  • Raising bamboo plantations.
  • Mixed plantations of minor forest produce and medicinal plants.
  • Regeneration of indigenous herbs / shrubs.
  • Awareness creation, monitoring and evaluation.
  • To increase the level and availability of water table or ground water and also to reduce nitrogen leaching in soil and nitrogen contamination of drinking water, thus making it pure not polluted with nitrogen.
  • Nature aided artificial regeneration.

Bio-Zoology [Maximum Marks: 35]

Part – I

Choose the correct answer. [8 × 1 = 8]

Question 1.
In which mode of reproduction variations are seen?
(a) Asexual
(b) Parthenogenesis
(c) Sexual
(d) Both a and b
Answer:
(c) Sexual

Question 2.
Father of a child is colour blind and mother is carrier for colour blindness, the probability of the child being colour blind is _______.
(a) 25%
(b) 50%
(c) 100%
(d) 75%
Answer:
(b) 50%

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 3.
Which of the following was the contribution of Hugo de Vries?
(a) Theory of mutation
(b) Theory of natural Selection
(c) Theory of inheritance of acquired characters
(d) Germ plasm theory
Answer:
(a) Theory of mutation

Question 4.
The most common substrate used in distilleries for the production of ethanol is ________.
(a) Soyameal
(b) Groundgram
(c) Molasses
(d) Corn meal
Answer:
(c) Molasses

Question 5.
Vaccines that use components of a pathogenic organism rather than the whole organism are called _______.
(a) attenuated recombinant vaccines
(b) Sub-unit recombinant vaccines
(c) DNA vaccines Match the
(d) conventional vaccines
Answer:
(b) Sub-unit recombinant vaccines

Question 6.
Match the following.

ContraceptivesType
A. Multiload 375(i) Oral intake
B. Saheli(ii) mechanical
C. Tubectomy(iii) IUD
D. Vault(iv) Surgical

(a) A – iii, B – i, C – iv, D – ii
(b) A – iv, B – iii, C – i, D – ii
(c) A – ii, B – iv, C – i, D – iii
(d) A – iii, B – iv, C – ii, D – i
Answer:
(a) A – iii, B – i, C – iv, D – ii

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 7.
Meselson and Stahl’s experiment proved ________.
(a) Transduction
(b) Transformation
(c) DNA is the genetic material
(d) Semi-conservative of DNA replication
Answer:
(d) Semi-conservative of DNA replication

Question 8.
The sporozoite of the malarial parasite is present in ________.
(a) saliva of infected female Anopheles mosquito
(b) RBC of human suffering from malaria
(c) Spleen of infected humans
(d) Gut of female Anopheles mosquito
Answer:
(a) saliva of infected female Anopheles mosquito

Part – II

Answer any four of the following questions. [4 × 2 = 8]

Question 9.
Expand the acronyms (a) FSH (b) LH (c) hCG (d) hPL
Answer:
FSH – Follicle Stimulating Hormone
LH – Luteinizing Hormone
hCG – human Chorionic Gonadotropin
hPL – human Placental Lactogen

Question 10.
What are STD’s? How are they transmitted?
Answer:
Sexually transmitted diseases (STD) are called as Sexually transmitted infections (STI). Normally STI are transmitted from person to person during intimate sexual contact with an infected partner. Infections like Hepatitis-B and HIV are transmitted sexually as well as by sharing of infusion needles, surgical instruments, etc with infected people, blood transfusion or from infected mother to baby.

Question 11.
Mention the symptoms of Down’s syndrome.
Answer:
Severe mental retardation, defective development of the central nervous system, increased separation between the eyes, flattened nose, ears are malformed, mouth is constantly open and the tongue protrudes.

Question 12.
Name the chemical substance which is called by the name
(a) Kornberg Enzyme
(b) Ochoa’s enzyme
Answer:
DNA polymerase I is also known as Kornberg enzyme.
Polynucleotide phosphorylase is also known as Ochoa’s enzyme.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 13.
How does Neanderthal man differ from the modern man in appearance?
Answer:
Neanderthal man differ from the modem human in having semierect posture, flat cranium, sloping forehead, thin large orbits, heavy brow ridges, protruding jaws and no chin.

Question 14.
Distinguish between Epitope and Paratope.
Answer:
Epitope:
Epitope is an antigenic determinant and is the active part of an antigen.

Paratope:
A paratope is the antigen – binding site and is a part of an antibody which recognizes and binds to an antigen.

Part – III

Answer any three questions in which question number 19 is compulsory. [3 × 3 = 9]

Question 15.
A person is infected by HIV. How will you diagnose for AIDS?
Answer:
A simple blood test is available that can determine whether the person has been infected with HIV. The ELISA test (Enzyme Linked Immunosorbent Assay) detects the presence of HIV antibodies. It is a preliminary test. Western blot test is more reliable and a confirmatory test. It detects the viral core proteins. If both tests detect the presence of the antibodies, the person is considered to be HIV positive.

Question 16.
Explain in simple about the production process of industrial alcohol.
Answer:
The process of ethanol production starts by milling a feed stock followed by the addition of dilute or fungal amylase (enzyme) from Aspergillus to break down the starch into fermentable sugars. Yeast is then added to convert the sugars to ethanol which is then distilled off to obtain ethanol which is upto 96 percent in concentration.

Ethanol and biodiesel, represents the first generation of biofuel technology. Ethanol is often used as a fuel, mainly as a biofuel additive for gasoline

Question 17.
How Edible vaccines are synthesized?
Answer:
Edible vaccines are prepared by molecular pharming using the science of genetic engineering. Selected genes are introduced into plants and the transgenic plants are induced to manufacture the encoded protein. Edible vaccines are mucosal targeted vaccines which cause stimulation of both systemic and mucosal immune response. At present edible vaccines are produced for human and animal diseases like measles, cholera, foot and mouth disease and hepatitis.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 18.
Describe J-shape and S-shape growth curves.
Answer:
Populations show characteristic growth patterns or forms. These patterns can be plotted and termed as J-shaped growth form and S-shaped growth form (Sigmoid form). Their growth is represented by S shaped growth curve.
Samacheer Kalvi 12th Biology Model Question Paper 1 English Medium 4
J shaped growth form: When a population increases rapidly in an exponential fashion and then stops abruptly due to environmental resistance or due to sudden appearance of a limiting factor, they are said to exhibit J-shaped growth form.

Many insects show explosive increase in number during the rainy season followed by their disappearance at the end of the season. S-Shapea growth form (sigmoid growth) Some populations, as in a population of small mammals, increase slowly at first then more rapidly and gradually slow down as environmental resistance increases whereby equilibrium is reached and maintained. Their growth is represented by S shaped growth curve.

Question 19.
‘Red data book’-What do you know about it?
Answer:
Red Data book or Red list is a catalogue of taxa facing risk of extinction. IUCN – International Union of Conservation of Nature and Natural Resources, which is renamed as WCU – World Conservation Union (Morges Switzerland) maintains the Red Data book. The concept, of Red list was mooted in 1963. The purpose of preparation of Red List are:

  • To create awareness on the degree of threat to biodiversity .
  • Identification and documentation of species at high risk of extinction
  • Provide global index on declining biodiversity
  • Preparing conservation priorities and help in conservation of action
  • Information on international agreements on conservation of biological diversity Red list has eight categories of species.
    (i) Extinct (ii) Extinct in wild (iii) Critically Endangered (iv) Endangered (v) Vulnerable (vi) Lower risk (vii) Data deficiency (viii) Not evaluated

Part – IV

Answer all the questions. [2 × 5 = 10]

Question 20.
(a) What are Extra embryonic membranes? Mention their location. Explain their structure and functions.
Answer:
The extra embryonic membranes include amnion, yolk sac, allantois and chorion. They protect the embryo from dessication, mechanical shock, absorption of nutrients, gaseous exchange and placental formation.

Embryonic
membrane
Function
AmnionInner most two layered membrane with amniotic fluid providing buoyancy to embryo from injury, regulates temperature and acts as medium for foetal movement.
ChorionOutermost layer covering and protecting the embryo.
AllantoisForms a out pocketing of embryonic tissue at the tail of yolk sac which forms umbilical cord that links embryo to placenta and finally becomes the part of urinary bladder.
Yolk sacForms a part of gut and acts a source of earliest blood cells and blood vessels.

[OR]

(b) List out the effects of air pollution.
Answer:

  • Affects all organisms as they depend on the atmosphere for respiration.
  • Causes irritation in the throat, nose, lungs and eyes. It causes breathing problems and aggravates existing health conditions such as emphysema and asthma.
  • Contaminated air reduces the body’s defense mechanism and decreases the body’s capacity to fight other infections in the respiratory system.
  • Frequent exposure to polluted air increases the risk of cardiovascular diseases. Breathing air that is filled with fine particulate matter can induce hardening of the arteries, triggering cardiac arrhythmia or even a heart attack.
  • People who exercise outdoors can sometimes be susceptible to adverse effects of air . pollution because it involves deeper and faster breathing. Hence it is advisable to walk or jog in the mornings in places with ample tree cover.
  • Gas leaks can be lethal or affect the quality of air in the affected area.
  • CO in the atmosphere interferes with 02 transport since haemoglobin has greater affinity for carbon monoxide. At low concentration it causes headache and blurred vision. In higher concentration, it can lead to coma and death.

Tamil Nadu 12th Biology Model Question Paper 1 English Medium

Question 21.
(a) Explain the mode of sex determination in honeybees.
Answer:
Hapiodiploidy in Honeybees:
In hymenopteran insects such as honeybees, ants and wasps, a mechanism of sex determination called hapiodiploidy mechanism of sex determination is common. In this system, the sex of the offspring is determined by the number of sets of chromosomes it receives. Fertilized eggs develop into females (Queen or Worker) and unfertilized eggs develop into males (drones) by parthenogenesis.

It means that the males have half the number of chromosomes (haploid) and the females have double the number (diploid), hence the name haplodiplody for this system of sex determination.

This mode of sex determination facilitates the evolution of sociality in which only one diploid female becomes a queen and lays the eggs for the colony. All other females which are diploid having developed from fertilized eggs help to raise the queen’s eggs and so contribute to the queen’s reproductive success and indirectly to their own, a phenomenon known as Kin Selection. The queen constructs their social environment by releasing a hormone that suppresses fertility of the workers.

[OR]

(b) How primary immune response differ from secondary immune response?
Answer:
Primary Immune Response:

  1. It occurs as a result of primary contact with an antigen.
  2. Antibody level reaches peak in 7 to 10 days.
  3. Prolonged period is required to establish immunity.
  4. There is rapid decline in antibody level.
  5. It appears mainly in the lymph nodes and spleen.

Secondary Immune Response:

  1. It occurs as a result of second and subsequent contacts with the same antigen.
  2. Antibody level reaches peak in 3 to 5 days.
  3. It establishes immunity in a short time.
  4. Antibody level remains high for longer period.
  5. It appears mainly in the bone marrow, followed by the spleen and lymph nodes.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART – I

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
If {(a, 8),(6, b)} represents an identity function, then the value of a and b are respectively …………. .
(1) (8,6)
(2) (8,8)
(3) (6,8)
(4) (6,6)
Answer:
(1) (8,6)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 2.
If the H.C.F of 65 and 117 is expressible in the form of 65m -117, then the value of m is …………. .
(1) 4
(2) 2
(3) 1
(4) 3
Answer:
(2) 2

Question 3.
In an A.P, the first term is 1 and the common difference is 4. How many terms of the A.P must be taken for their sum to be equal to 120?
(1) 6
(2) 7
(3) 8
(4) 9
Answer:
(3) 8

Question 4.
\(\frac{3 y-3}{y} \div \frac{7 y-7}{3 y^{2}}\) is …………. .
(1) \(\frac{9 y}{7}\)
(2) \(\frac{9 y^{3}}{(21 y-21)}\)
(3) \(\frac{21 y^{2}-42 y+21}{3 y^{3}}\)
(4) \(\frac{7\left(y^{2}-2 y+1\right)}{y^{2}}\)
Answer:
(1) \(\frac{9 y}{7}\)

Question 5.
If the roots of the equation q2x2 + p2x + r2 = 0 are the squares of the roots of the equation qx2 + px + r = 0, then q, p, r are in …………. .
(1) A.P
(2) G.P
(3) Both A.P and G.P
(4) none of these
Answer:
(2) G.P

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 6.
The two tangents from an external points P to a circle with centre at O are PA and PB. If ∠APB = 70° then the value of ∠AOB is …………. .
(1) 100°
(2) 110°
(3) 120°
(4) 130°
Answer:
(2) 110°

Question 7.
A straight line has equation 8y = 4x + 21. Which of the following is true …………. .
(1) The slope is 0.5 and they intercept is 2.6
(2) The slope is 5 and the y intercept is 1.6
(3) The slope is 0.5 and the y intercept is 1.6
(4) The slope is 5 and they intercept is 2.6
Answer:
(1) The slope is 0.5 and they intercept is 2.6

Question 8.
A tower is 60 m height. Its shadow is x metres shorter when the sun’s altitude is 45° than when it has been 30° , then x is equal to …………. .
(1) 41.92 m
(2) 43.92 m
(3) 43 m
(4) 45.6 m
Answer:
(2) 43.92 m

Question 9.
A frustum of a right circular cone is of height 16 cm with radii of its ends as 8 cm and 20 cm. Then, the volume of the frustum is …………. .
(1) 3328π cm3
(2) 3228π cm3
(3) 3240π cm3
(4) 3340π cm3
Answer:
(1) 3328π cm3

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 10.
If the standard deviation of x, y,zisp then the standard deviation of 3x + 5, 3y + 5, 3z + 5 is …………. .
(1) 3p + 5
(2) 3p
(3) p + 5
(4) 9p + 5
Answer:
(2) 3p

Question 11.
A purse contains 10 notes of ₹2,000, 15 notes of ₹500, and 25 notes of ₹200. One note is drawn at random. What is the probability that the note is either a ₹500 note or ₹200 note?
(1) \(\frac{1}{5}\)
(2) \(\frac{3}{10}\)
(3) \(\frac{2}{3}\)
(4) \(\frac{4}{5}\)
Answer:
(4) \(\frac{4}{5}\)

Question 12.
If f = {(6, 3) (8, 9) (5, 3) (-1, 6)} then the pre-images of 3 are …………. .
(1) 5 and -1
(2) 6 and 8
(3) 8 and -1
(4) 6 and 5
Answer:
(4) 6 and 5

Question 13.
If α and β are the roots of the equation x2 + 2x + 8 = 0 then the value of \(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\) is …………. .
(1) \(\frac{1}{2}\)
(2) 6
(3) \(\frac{3}{2}\)
(4) \(\frac{-3}{2}\)
Answer:
(4) \(\frac{-3}{2}\)

Question 14.
If x – y = 3 and x + 2y = 6 are the diameters of a circle then the centre is at the point …………. .
(1) (0,0)
(2) (1,2)
(3) (4, 1)
(4) (1,-1)
Answer:
(3) (4, 1)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

PART-II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Let X = {3, 4, 6, 8}. Determine whether the relation
R = {(x, f(x)) |x ∈ X, f(x) = x2 + 1} is a function from X to N?
Answer:
f(x) = x2 + 1
f(3) = 32 + 1 = 9 + 1 = 10
f(4) = 42 + 1 = 16 + 1 = 17
f(6) = 62 + 1 = 36 + 1 = 37
f(8) = 82 + 1 = 64 + 1 = 65
ves. R is a function from X to N.

Question 16.
Find k if fof f(k) = 5 where f(k) = 2k – 1.
Answer:
fof(k) = f(f(k))
= 2(2k – 1) – 1 = 4k – 3
Thus, fof(k) = 4k – 3
But, it is given that fof (k) = 5
Therefore 4k – 3 = 5 ⇒ k = 2.

Question 17.
Find the least positive value of x such that 98 = (x + 4) mod 5
Answer:
98 ≡ (x + 4) (mod 5)
98 – (x + 4) = 5n , for some integer n.
94 – x = 5n
94 – x is a multiple of 5.
Therefore, the least positive value of x must be 4
Since 94 – 4 = 90 is the nearest multiple of 5 less than 94.

Question 18.
If the first term of an infinite G.P. is 8 and its sum to infinity is \(\frac { 32 }{ 3 }\) then find the common ratio.
Answer:
Here a = 8, S = \(\frac{32}{3}\)
\(\frac{a}{1-r}=\frac{32}{3}\)
\(\frac{8}{1-r}=\frac{32}{3}\)
32 – 32r = 24 ⇒ 32 r = 8
r = \(\frac{8}{32}=\frac{1}{4}\)
Common ratio = \(\frac{1}{4}\)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 19.
Find the excluded values, of the expression \(\frac{x^{3}-27}{x^{3}+x^{2}-6 x}\)
Answer:
x3 – 27 = x3 – 33
= (x – 3) (x2 + x + 3)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 2
x3 + x2 – 6x = x(x2 + x – 6) = x (x + 3) (x – 2)
\(\frac{x^{3}-27}{x^{3}+x^{2}-6}=\frac{(x-3)\left(x^{2}+x+3\right)}{x(x+3)(x-2)}\)
The expression \(\frac{(x-3)\left(x^{2}+x+3\right)}{x(x+3)(x-2)}\) is undefined
when x (x + 3) (x – 2) = 0
x = 0 or x + 3 = 0 or x – 2 = 0
x = 0 or x = -3 or x = 2
The excluded values are 0, -3 and 2

Question 20.
Find the square root of \(1+\frac{1}{x^{6}}+\frac{2}{x^{3}}\)
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 3

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 21.
Find x and y if \(x\left[ \begin{matrix} 4 \\ -3 \end{matrix} \right] +\quad y\left[ \begin{matrix} -2 \\ 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 \\ 6 \end{matrix} \right] \)
Answer:
\(x\left[ \begin{matrix} 4 \\ -3 \end{matrix} \right] +y\left[ \begin{matrix} -2 \\ 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 \\ 6 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 4x \\ -3x \end{matrix} \right] +\left[ \begin{matrix} -2y \\ 3y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 \\ 6 \end{matrix} \right] \)
4x – 2y = 4
(1) ⇒ 2x – y = 2
(2) ⇒ -3x + 3y = 6
-x + y = 2
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 4
Substitute the Value of x = 4 in (2)
-4 + y = 2
y = 2 + 4 = 6
The value of x = 4 and y = 6

 

Question 22.
Show that in a triangle, the medians are concurrent.
Answer:
Medians are line segments joining each vertex to the midpoint of the corresponding opposite sides. Thus medians are the cevians where D, E, F are midpoints of BC, CA and AB respectively.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 5
Since D is a midpoint of BC, BD = DC so \(\frac{B D}{D C}\) = 1 ….. (1)
Since, E is a midpoint of CA, CE = EA so \(\frac{C E}{E A}\) = 1 ……. (2)
Since, F is a midpoint of AB, AF = FB so \(\frac{A F}{F B}\) = 1 ……. (3)
Thus, multiplying (1), (2) and (3) we get,
\(\frac{\mathrm{BD}}{\mathrm{DC}} \times \frac{\mathrm{CE}}{\mathrm{EA}} \times \frac{\mathrm{AF}}{\mathrm{FB}}\) = 1 × 1 × 1 = 1
And so, Ceva’s theorem is satisfied. Hence the Medians are concurrent.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 23.
A cat is located at the point(-6, -4) in xy plane. A bottle of milk is kept at (5, 11). The cat wish to consume the milk travelling through shortest possible distance. Find the equation of the path it needs to take its milk.
Answer:
Equation of the joining the point is
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 6
15(x + 6) = 11(y + 4)
15x + 90 = 11y + 44
15x – 11y + 90 – 44 = 0
15x – 11y + 46 = 0
The equation of the path is 15x – 11y + 46 = 0

Question 24.
If the circumference of a conical wooden piece is 484 cm then find its volume when its height is 105 cm.
Answer:
Circumference of the wooden piece = 484 cm
2πr = 484
2 × \(\frac { 22 }{ 7 }\) × r = 484 cm
r = \(\frac{484 \times 7}{2 \times 22}\)
r = 77 cm
Height of the wooden piece (h) = 105 cm
Volume of the conical wooden piect = \(\frac { 1 }{ 3 }\)πr2h cu. units
= \(\frac{1}{3} \times \frac{22}{7}\) × 77 × 77 × 105 cm3
= 22 × 11 × 77 × 35 cm3 = 652190 cm3
Volume of the wooden piece = 652190 cm3

Question 25.
The range of a set of data is 13.67 and the largest value is 70.08. Find the smallest value.
Answer:
Range R = 13.67
Largest value L = 70.08
Range R = L – S
13.67 = 70.08 – S
S = 70.08 – 13.67 = 56.41
Therefore, the smallest value is 56.41.

Question 26.
Three rotten eggs are mixed with 12 good ones. One egg is chosen at random. What is the probability of choosing a rotten egg?
Answer:
Number of good eggs = 12
Number of rotton eggs = 3
Totalnumberofeggs = 12 + 3 = 15
Sample space n (S) = 15
Let A be the event of choosirg a rotten egg
n(A) = 3
P(A) = \(\frac{n(\mathrm{A})}{n(\mathrm{S})}=\frac{3}{15}=\frac{1}{5}\)
The Probability is \(\frac{1}{5}\)

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 27.
Form the quadratic equation whose roots are 3 + √7 ; 3 – √7
Answer:
Sum of the roots = 3 + √7 + 3 – √7
= 6
Product of the roots (3 + √7) (3 – √7 )
= 32 – (√7)2
= 9 – 7
= 2
The required equation is x2 (sum of the roots) x + product of the roots = 0
x2 – (6)x + 2 = 0
x2 – 6x + 2 = 0

Question 28.
If a cos θ – b sin θ = c, then prove that (a sin θ + b cos θ) = ±\(\sqrt{a^{2}+b^{2}-c^{2}}\)
Answer:
Given a cos θ – bsin θ = c
Squaring on both sides
(a cos θ – b sin θ)2 = c2
a2cos2θ + b2sin2θ – 2 ab cosθ sinθ = c2
a2 (1 – sin2θ) + b2(1 – cos2θ) – 2ab cos θ sin θ = c2
a2 – a2 sin2 θ + b2 – b2cos2 θ – 2ab cos θ sin θ = c2
– a2 sin 2 θ – b2 cos2 θ – 2ab cos θ sin θ = – a2 – b2 + c2
a2 sin 2 θ + b2 cos2 θ + 2ab cos θ sin θ = + a2 + b2 – c2
(a sin θ + b cos θ)2 = a2 + b2 – c2
a sin θ + b cos θ = ± \(\sqrt{a^{2}+b^{2}-c^{2}}\)
Hence it is proved.

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
A function f is defined by f(x) = 2x – 3
(i) find \(\frac{f(0)+f(1)}{2}\)
(ii) find x such that f(x) = 0.
(iii) find x such that f(x) = x.
(iv) find x such that f(x) = f( 1 – x).

 

Question 30.
If f(x) = 2x + 3, g(x) = 1 – 2x and h(x) = 3x. Prove that fo(goh) = (fog)oh

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 31.
If S1, S2, S3, ,…S3m are the sums of n terms of m A.P.,s whose first terms are 1,2, 3, ……… m and whose common differences are 1, 3, 5 ,………. (2m – 1) respectively, then show that (S1 + S2 + S3 + ………. + Sm) = \(\frac { 1 }{ 2 }\)mn(mn + 1)

Question 32.
In an A.P., sum of four consecutive terms is 28 and their sum of their squares is 276. Find the four numbers.

Question 33.
Simplify \(\frac{12 t^{2}-22 t+8}{3 t} \div \frac{3 t^{2}+2 t-8}{2 t^{2}+4 t}\)

Question 34.
The hypotenuse of a right triangle is 6 m more than twice of the shortest side. If the third side is 2 m less than the hypotenuse, find the sides of the triangle.

Question 35.
Find the equation of a straight line parallel to Y axis and passing through the point of intersection of the lines 4x + 5y = 13 and x – 8y + 9 = 0.

Question 36.
Two ships are sailing in the sea on either side of the lighthouse. The angles of depression of two ships as observed from the top of the lighthouse are 60° and 45° respectively.
If the distance between the ships is 200 \(\left(\frac{\sqrt{3}+1}{\sqrt{3}}\right)\) meters, find the height of the lighthouse.

Question 37.
Nathan, an engineering student was asked to make a model shaped like a cylinder with two cones attached at its two ends. The diameter of the model is 3 cm and its length is 12 cm. If each cone has a height of 2 cm, find the volume of the model that Nathan made.

Question 38.
The rainfall recorded in various places of five districts in a week are given below.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium - 1
Find its standard deviation.

Question 39.
A bag contains 5 white and some black balls. If the probability of drawing a black ball from the bag is twice the probability of drawing a white ball then find the number of black balls.

 

Question 40.
If A = \(\left( \begin{matrix} 3 & 2 & 0 \\ 1 & 4 & 0 \\ 0 & 0 & 5 \end{matrix} \right) \) show that A2 – 7A + 10 I3

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 41.
Find the values of “a” and “b” given that p(x) = (x2 + 3x + 2) (x2 – 4x + a) g(x) = (x2 – 6x + 9) (x2+ 4x + b) and their G.C.D. is (x + 2) (x – 3)

Question 42.
A container, open from the top made up of a metal sheet is in the form of a frustum of a cone of height 16 cm with radii of its lower and upper ends as 8 cm and 20 cm respectively. Find the cost of milk which can completely fill the container at the rate of ₹ 40 per litre and the cost of metal sheet used if the costs ₹ 5 per 100 cm2, (use π = 3.14)

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Draw a tangent to the circle from the point P having radius 3.6 cm, and centre at O. Point P is at a distance 7.2 cm from the centre.

[OR]

(b) Construct a ∆PQR such that QR = 6.5 cm, ∠P = 60° and the altitude from P to QR is of length 4.5 cm.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2 English Medium

Question 44.
(a) Draw a graph of y = 2x2 + x – 6 and hence solve the 2x2 + x – 10 = 0.

[OR]

(b) Draw the graph of y = x2 – 5x + 6 and hence solve x2 – 5x + 6 = 0.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 1

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
ஓங்கலிடை எனத்தொடங்கும் தண்டிலங்காரப் பாடல்………….. அணியியலில் இடம் பெற்றுள்ளது.
(அ) பொது
(ஆ) பொருள்
(இ) சொல்
(ஈ) வனப்பு
Answer:
(ஆ) பொருள்

Question 2.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவத்தை அப்படியே பதிப்பித்தவர்……….. ஆவார்.
(அ) களந்தை மணி
(ஆ) வீரமணி
(இ) இளசைமணி
(ஈ) நெல்லை மணி
Answer:
(இ) இளசைமணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 3.
மழையைக் கணிக்கம் அறிகுறிகளை வெளியிட்ட ஆனர்த் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்……….. ஆகும்.
(அ) குஜராத்
(ஆ) அருணாசலப்பிரதேசம்
(இ) தமிழ்நாடு
(ஈ) ஆந்திரா
Answer:
(அ) குஜராத்

Question 4.
நாலடியார் பாடலின் பொருளுக்கேற்ற குறளை கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
(அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு
நல்லவாம் செல்வம் செயற்கு
(இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்
Answer:
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு நல்லவாம் செல்வம் செயற்கு

Question 5.
‘குழிமாற்று’ என்பதன் கணிதமொழி
(அ) கூட்டம் வாய்பாடு
(ஆ) கழித்தல் வாய்பாடு
(இ) பெருக்கல் வாய்பாடு
(ஈ) வருத்தல் வாய்பாடு
Answer:
(இ) பெருக்கல் வாய்பாடு

Question 6.
இந்தோ – சாரசனிக் கட்டடக்கலை என்பது …………..
(அ) முகலாயக் கட்டடக்கலை
(ஆ) பிரித்தானியக் கட்டடக்கலை
(இ) இந்தியப் பாரம்பரியப்பாணி
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது
Answer:
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது

Question 7.
ஓசையும், பொருளும் இணைந்து உருவாவதுதான் ………..
(அ ) கலைவடிவம்
(ஆ) இலக்கணம்
(இ) ஒலிக்கோலம்
(ஈ) நடையழகு
Answer:
(அ ) கலைவடிவம்

Question 8.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்ததன் விளைவுதான்…………..மாற்றம்.
(அ) இயற்கை
(ஆ) பருவநிலை
(இ) செயற்கை
(ஈ) இடம்
Answer:
(ஆ) பருவநிலை

Question 9.
நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் எழுதியவர்………. ஆவார்,
(அ) கம்பர்
(ஆ) சாந்தனார்
(இ) இமயவரம்பன்
(ஈ) நக்கீரர் .
Answer:
(ஈ) நக்கீரர்

Question 10.
சாலைப் போக்குவரத்து உதவுக்கான தொலை தொடர்பு எண் ………. ஆகும்.
(அ) 100
(ஆ) 101
(இ) 102
(ஈ) 103
Answer:
(ஈ) 103

Question 11.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………………. தொடர்களில் வெளிப்படும் செய்திகள். ………..
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
(அ) 1 சரி 2 தவறு
(ஆ) 1 தவறு, 2 சரி
(இ) 1, தவறு 2 தவறு
(ஈ) 1 சரி 2 சரி
Answer:
(ஈ) 1 சரி 2 சரி

Question 12.
‘யானை புக்கப் புலம் போல’ உவமைக்குப் பொருத்தமான தொடர் …………….
(அ) தனக்கு மட்டுமே பயன் தரும்
(ஆ) தனக்கும் பிறருக்கும் பயன் தரும்
(இ) தனக்கு மட்டும் பயன்தராது
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது
Answer:
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது

Question 13.
எளியது, சரியது எது?
(அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது
(இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
(ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவு கண்டு எள்ளாதது
Answer:
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது

Question 14.
‘அதிசய மலர்’ கவிதையைப் படைத்தவர்……………..
(அ) கவிஞர் வாலி
(ஆ) கவிஞர் தமிழ்நதி
(இ) கவிஞர் சுரதா
(ஈ) கவிஞர் சிற்பி
Answer:
(ஆ) கவிஞர் தமிழ்நதி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 × 2 = 24]

பிரிவு – I

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. Question 15.
கடையேழு வள்ளல்கள் யாவர்?
Answer:

  • பாரி
  • ஓரி
  • காரி
  • ஆய்
  • அதிகன்
  • பேகன்
  • நள்ளி என கடையேழு வள்ளல்கள்.

Question 16.
ஒளவையார் எதனை எல்லாம் எடுத்துச் செல்வதாக கூறுகிறார்?
Answer:
பரிசில் தர தாமதிக்கும் மன்னனை கடுஞ்சொல் கூறி, மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்லபிள்ளைகள், கோடாரியுடன் காட்டுக்கு மரம் வெட்டச் செல்வது போல், நான் என்யாழினையும் கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டு எடுத்துச் செல்வதாகக் கூறினார் ஔவையார்.

Question 17.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது.
  • முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

Question 18.
இயேசு பெருமானின் இயல்பு எத்தகையது?
Answer:
நிறைய அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையைப் பேச்சாலும் வாழ்வாலும் வதை பல பட்டும் வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

Question 19.
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்து இயல்புவதாக அமைந்த நூல்.
  • தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற நூல்.

Question 20.
கீழ்த்திசைச் சுவடிகள் குறித்து எழுதுக.
Answer:
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

Question 21.
பணித்திட்டப் பேரவையைப் பற்றிக் கூறுக.
Answer:

  • .ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
  • இந்த அமைப்பில் தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
  • பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
வல்லினம் மிகா இடம் ஒன்றைச் சுட்டி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா.) பொல்லாத பையன்

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்புத்தருக.
(அ) நகையும் உவகையும்
(ஆ) முத்தமிழ்
Answer:
விடை:
(அ) எண்ணும்மை
(ஆ) பண்புத்தொகை

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) முழுங்கிய
(ஆ) காண்பன்
Answer:
(அ) முழங்கிய = முழங்கு + இ (ன்) + ய் + அ
முழங்கு – பகுதி
இ(ன்) – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படுமெய் சந்தி
அ – பெயரெச்ச விகுதி

(ஆ) காண்பன் = காண் + ப் – அன்
காண் – பகுதி
ப் – எதிர்கால இடைநிலை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 25.
PERSONALITY என்பதன் தமிழாக்கம் …………… .
Answer:
ஆளுமை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 26.
மரபுத் தொடரின் பொருள் வெளிப்படுத்திச் சொற்றொடர் அமைக்கவும்.
அம்பலப்படுத்துதல்
Answer:
இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாதவர்கள் அதனை அம்பலப்படுத்திவிடுவார்கள்.

Question 27.
மரபுப்பிழை நீக்கி எழுதுக.
பசு மாட்டுக் கூட்டம் கண்ட ஆட்டுக் கூட்டம் அப்படியே பயந்து நின்றது.
Answer:
பசுநிரையைக் கண்ட ஆட்டுமந்தை அப்படியே பயந்து நின்றது.

Question 28.
மயங்கொலிப் பிழை நீக்கிப் பொருள் வேறுபாடு தோன்ற ஒரே தொடரில் அமைத்து எழுது.
உரவு – உறவு
Answer:
நாம் நமது உறவு சூழ வாழ்வதே உரவாகும்.

Question 29.
கொச்சை சொற்களை நீக்கி எழுதுக.
ஒடம்பு வலிக்கு வெண்ணீர் ஒத்தடம் நல்லது.
Answer:
உடல் வலிக்கு வெந்நீர் ஒற்றடம் நல்லது.

Question 30.
தனித்தமிழில் எழுதுக.
அமலில் உள்ள ஹெல்மெட் சட்டம் நாளை முதல் ரத்து செய்யப்படும். Answer:
நடைமுறையிலுள்ள தலைக்கவச விதிமுறை நாளை முதல் நீக்கம் செய்யப்படும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 × 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 

Question 31.
‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ – இக்கவிதையின் அடி,
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை நயவுரை செய்க.
Answer:
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ஏங்கிவிழும் மழைநீரை ஈர்த்துக் கொள்ளும் பகலவனே ஓங்கிய உயரத்தில் ஒய்யாரமாய் ஒளிகொடுப்பவனே…. வாங்கிய நீரையெல்லாம் வான்மழையாக பொழிந்துவிடு …. உலகிலுள்ள உயிரனங்களுக்கு நீயே …. கடவுள் …………

Question 32.
தேவாரம் குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் = தே + வாரம் என்றும்
    தே + ஆரம் என்றும் பிரிக்கலாம்
  • தே + வாரம் என்றால் தெய்வத் தன்மையை உடைய இசைப் பாடல்கள்
  • தே + ஆரம் எனப்பிரித்தால் தெய்வத்திற்கு சூட்டப் பெற்ற பாமாலை என்று கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்.

Question 33.
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:

  • ஈகைப்பண்பு மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது என்பதனை உணர்ந்துள்ளேன். அத்தகைய கொடைத் தன்மையை தமிழ் இலக்கியங்கள் விதந்து போற்றுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஈகையைப் பின்பற்ற விரும்புகிறேன்.
  • ஏழை எளியோர்க்கு என்னால் முடிந்த உதவியை செய்வதன் மூலம் இரத்தல் தொழிலை அகற்ற முற்படுவேன்.
  • நான் கற்ற கல்வியைப் பிறருக்கு இலவசமாகக் கற்றுக் கொடுத்து வளமான நாடாக மாற்ற செயல்படுவேன்.
  • “பொருளாளியே திருடனை விளைவிக்கிறான் “ என்ற கூற்றை நன்கு உணர்ந்துள்ளேன். ஆதலால் என்னிடம் உள்ள பொருளை இயலாதவருக்கு வழங்குவேன்.
  • மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக் கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த
    கொடையின் ஒரு வழிமுறையே தானம் என்பதனை நன்கு உணர்ந்துள்ளேன்.
  • முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. அஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டவையாகும்.
  • ஈகைப் பண்பு பிறர் கூறி வருவது அல்ல. பிறர் துன்பத்தை பார்த்து தானே தோன்றுவது அத்தகைய ஈகைப் பண்பில் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் வாழ்ந்த கர்ணனைப் போல் இருக்க விரும்புகிறேன்.

Question 34.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
Answer:

  • இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம்.
  • பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம்.
  • புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஆற்றங்கரை படிவு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் யாவை?
Answer:

  • தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன.
  • வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும்.
  • இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப் பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும், நீர் மாசடைவதைத் தடுக்கும், மண் அரிப்பைத் தடுக்கும், வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும்.

Question 36.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:

  • தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
  • மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
  • சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.

Question 37.
நிருவாக மேலாண்மை குறித்து நாலடியார் கூறும் கருத்தை எழுதுக.
Answer:

  •  உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

Question 38.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு
    ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார். •
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துக்களைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…… இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
பொருண்மொழிக்காஞ்சித் துறை அல்லது குறிஞ்யீசத்திணையை விவரி.
பொருண்மொழிக்காஞ்சித் துறை
Answer:
துறை: நற்றாய் கூற்று
இது உடன் போகிய தலைமகள் மீண்டும் வருதற் பொருட்டுத் தாய் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது.

துறை விளக்கம்:
தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த பின்னர், தலைவி மீது பேரன்பு கொண்ட நற்றாய் தன் மகள் தன் கணவனோடு மீண்டும் தன் இல்லத்திற்கே வருதல் வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பி வந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்வித்துக் கண் குளிரக் காணல் வேண்டும் என்றும் விரும்புகின்றாள். அதனால் தலைவனும், தலைவியும் திரும்பி வருமாறு நன்னிமித்தமாக (சகுனமாக) கரையும்படி காக்கையை இரந்து வேண்டுகிறாள். அவ்வாறு கரைந்தால் காக்கைக்குப் ‘பலிக்கடன் கொடுப்பதாகவும் கூறுகின்றாள்.

இவ்வாறு தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக்கோடல் பராய்க்கடன் உரைத்தல் என்பர். காக்கை கரைந்தால் விருந்தினரோ, உறவினரோ வீட்டிற்கு வருவர் என்பது நம் மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

(அல்லது)

குறிஞ்சித்திணை
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.
முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 40.
பின்வரும் பாடலைப் படித்துணர்ந்து நயம் பாராட்டுக.
Answer:
படையாமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க!
பகையாரும் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
அடையாத துன்பங்கள் அவைவந்த போதும்
அநியாயம் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
கொல்லாமை உயர்வென்னும் தமிழ்நாடு வாழ்க!
கொடைவள்ளல் பலர்நின்ற தமிழ்நாடு வாழ்க!
இல்லாமை அறியாத தமிழ்நாடு வாழ்க!
இரவாமை அறம் என்னும் தமிழ்நாடு வாழ்க! (- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்)

திரண்ட கருத்து:
கடவுளுக்கு உணவு படைக்காமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க! பகையென எவரையும் எண்ணாத தமிழ்நாடு அடையக் கூடாத துன்பங்கள் பல வந்த போதும் அநீதி எண்ணங்களை எண்ணாத தமிழ்நாடு வாழ்க. ஒரு உயிரைக் கொலை செய்யாமல் இருப்பது உயர்ந்தது என்னும் எண்ணம் கொண்ட தமிழ்நாடு வாழ்க. கொடை வள்ளல்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாடு வாழ்க. எவரேனும் இல்லை என கேட்டால் கொடுக்கும் தமிழ்நாடே வாழ்க. பிறரிடம் கேட்காமல் வாழ்வதே அறம் என்னும் தமிழ்நாடே வாழ்க.

மையக் கருத்து:
துன்பங்கள் பல வந்தாலும் கெட்ட எண்ணங்களை எண்ணக்கூடாது. உயிரை மதிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பிறரிடம் கையேந்தக் கூடாது.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
படையாமல், பகையாரும்,
அடையாத, அநியாயம்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்று வருவது அடி எதுகை. படையாமல், அடையாத,
கொல்லாமை, இல்லாமை

சந்தநயம்: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அணி: சொல்லும் பொருளும் மறுபடியும் வந்துள்ளதால் சொற்பொருள் பின்வருநிலையணியாகும்.

Question 41.
பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஆழம் தெரியாமல் காலை விடாதே
Answer:
பழமொழி விளக்கம்:
எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு:
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாகத் தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நான் எந்தச் செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 42.
தமிழாக்கம் தருக.
1. As you sow, so shall you reep.
2. Death keeps no calender.
3. Charity begins at home.
4. East or west home is best.
Answer:

  1. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  2. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு,
  3. தனக்கு மிஞ்சியே. தானமும் தருமமும்.
  4. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. சுற்றுச்சூழல் (அல்லது) தாயன்பு சுற்றுச்சூழல்
தாயன்பு
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 × 6 = 18]

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்குத் தந்த தாயோ !
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.
    இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Question 44.
ஆ) எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answer:
மனிதன் என்று தோன்றினானோ மொழி என்று பிறந்ததோ அன்றே நாட்டுப்புறப் பாடல்கள் தோன்றிவிட்டன எனலாம். நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் பாமரமக்கள் பாடியவையாகவே உள்ளன. எளிய மக்கள் பாடல்கள் என்பதால் அதில் வறுமை, சோகம் என வலிகளைப் பிரதிபலிப்பதாய் காணப்படுகின்றாள். வறுமையில் வாழும் ஒருவன் மனிதர்களைப் பற்றிய பாடல் ஒன்றை எழுதுகிறாள்.

வாழும் நேரத்தில் வருகின்றாள்
வறுமை வந்தால் பிரிகுறா
பேய் போல பணத்த காக்குறா
பெரியவர் தம்மை பழிக்குறா

மனிதன் பணம் வரும் போது மாறிவிடுகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. வறுமையினால் வேலைப்பார்க்கும் பெண்களைப் பற்றிய பாடலில்,

வேகாத வெயிலுக்குள்ளே
விறகொடிக்கப் போறபெண்ணே
காலுனக்குப் பொசுக்கலையோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ
காலக் கொடுமையாலே
கஷ்டப்பட காலமாச்சு

என பெண் வெயிலிலும், காலணி இன்றி வேலைப்பார்த்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

காட்டுக்குள்ளே விறகொடித்து
சாமி வீட்டுகதைச் சுமந்துவந்து
கால் ரூபாய்க்கு விறகுவிற்று
கஞ்சி கண்டு குடிக்கணும்

ஒரு வேலை உணவிற்காக நாள் முழுக்க வேலைப்பார்க்கும் பெண்ணின் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணு வேணாம்
வௌச்சலும் ஒன்றுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளிநாடுபோயி அங்க வேலகீல
பாப்போம்
வெள்ளக் காரங்க போல நாம
வசதியாக இருப்போம்

விவசாயம் பொய்த்து போய் வெளிநாட்டிற்குச் சென்று கூலி வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்ளும் பாமர மக்களின் வலியை வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களைப் பாமர இலக்கியம் எனலாம். பாமர மக்களின் வலியைப் பிரதிபலிப்பதால் அவ்வாறு அழைக்கப்படும்.

Question 45.
(அ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையோல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப்படங்களைப் பேசும்படங்களாக மாற்றுவதற்குப்பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்குக் கதை, கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன். உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் எனப் பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றி பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்பாடங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல், குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிபெற இயலும். திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம், பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம். “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும் விளங்குகிறது எனலாம்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) ‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்….. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

  • மேலூர் பங்காருசாமியிடம் தன் நிலப்பத்திரத்தைக் கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
  • இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா
    பங்காருசாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
  • ஆனால் அவன் தம்பி என் சொந்த பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.
  • காலம் கடத்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
  • பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
  • வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
  • தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.
  • நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழைபெய்யோ பெய்யென பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டுமேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும்போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான், யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது என்று, அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 46.
(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி
உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கி திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காக போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு ….. குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலை பேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம்!

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
அ) குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுது.[1 ×4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘அது’ என முடியும் குறளை எழுதுக.[1 × 2 = 2]
Answer:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (- திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 4

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்…………………
(அ) டாக்டர் உதயமூர்த்தி
(ஆ) கல்கி
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) புலமைப்பித்தன்
Answer:
(இ) புதுமைப்பித்தன்

Question 2.
‘முருகு உறழ் முன்பொடு’ என்ற தொன்மம் விளக்கும் பாடல் …………… நூலில் இடம் பெற்றுள்ளது. (அ) நற்றிணை
(ஆ) நல்ல குறுந்தொகை
(இ) நன்னூல்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) நற்றிணை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 3.
பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிப்பது ………………….
(அ) காதை
(ஆ) சருக்கம்
(இ) காண்டம்
(ஈ) படலம்
Answer:
(இ) காண்டம்

Question 4.
வள்ளலார் சமரச சன்மார்க்க சபையை நிறுவிய இடம். ………….
(அ) வண்டலூர்
(ஆ) வடக்கூர்
(இ) வண்டியூர்
(ஈ) வடலூர்
Answer:
(ஈ) வடலூர்

Question 5.
…………… ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சென்னை நகரின் மக்கட்தொகை 1900
ஆகும்.
(அ) 1646
(ஆ) 1746
(இ) 1846
(ஈ) 1846
Answer:
(அ) 1646

Question 6.
ஓதற்பிரிவிற்கு உரிய காலம் ………… ஆண்டுகள்.
(அ) இரண்டு
(ஆ) மூன்று
(இ) நான்கு
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) மூன்று

Question 7.
கவிஞர் நகுலனின் இயற்பெயர் ……….
(அ) பாலசந்திரன்
(ஆ) இந்திரன்
(இ) சாமிக்கண்ணு
(ஈ) துரைச்சாமி
Answer:
(ஈ) துரைச்சாமி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 8.
………….. நூலுக்கு இளம்பூரணர்தான் முழுமையான உரை தந்துள்ளார்.
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) மாறனலங்காரம்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) தொல்காப்பியம்

Question 9.
தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து………………… வருபவர் ….
(அ) தாராபாரதி
(ஆ) பக்தவத்சல பாரதி
(இ) பாரதி சண்முகம்
(ஈ) சுத்தானந்த பாரதி
Answer:
(ஆ) பக்தவத்சல பாரதி

Question 10.
‘கூடி வாழ்தல்’ என்ற பொருளில் வருவது……………………
(அ) குடும்பு
ஆ) கடும்பு
(இ) குடம்பை
(ஈ) கடம்பை
Answer:
(அ) குடும்பு

Question 11.
தேடலை விரிவாக்குவது என்பர்…………………
(அ) புகழ்
(ஆ) செல்வம்
(இ) கல்வி
(ஈ) உறவு
Answer:
(இ) கல்வி

Question 12.
அகநானூற்றின் களிற்றியானை நிரையில் உள்ள பாடலின் எண்ணிக்கை ………….. ஆகும்.
(அ) 100
(ஆ) 120
(இ) 180
(ஈ) 110
Answer:
(ஆ) 120

Question 13.
புனவன் என்பது……………………….. ஐக் குறித்தது.
(அ) மீனவன்
(ஆ) பாடகன்
(இ) நூலகன்
(ஈ) கானவன்
Answer:
(ஈ) கானவன்

Question 14.
ஓட்டுநர் உரிமம் இன்றி ஊர்தியை இயக்கினால் சிறைத்தண்டனையோ அல்லது……… அபராதமோ
விதிக்கப்படும்.
(அ) ரூ. 2000
(ஆ) ரூ. 3000
(இ) ரூ. 40000
(ஈ) ரூ. 5000
Answer:
(ஈ) ரூ. 5000

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
வாகைத் திணை என்றால் என்ன?
Answer:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி
வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.

Question 16.
நும் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அகநானூற்று பாடலில் உள்ளுறைப் பொருளை எழுதுக.
Answer:

  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது.
  • தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.
  • எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.

Question 17.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னைத் தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்.

Question 18.
மொழியின் இயல்பு வழக்குகளை கலையின் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.

  • உவமம்
  • உருவகம்
  • எச்சம்
  • குறிப்பு
  • உள்ளுறை
  • இறைச்சி

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால்
  • கொம்பு
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 20.
“வெள்ளையர் நகரம்” “கருப்பர் நகரம்”- விளக்குக.
Answer:

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
  • கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள் வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.

Question 21.
முப்பரிமாணக் கலை என்றால் என்ன?
Answer:

  • திரைப்படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடித்துத் திரையில் காட்ட முடியும்.
  • திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.
  • ஒருவன் ஓடிவருவதைக் காட்டிவிட்டு அதைப் பார்ப்பவன் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று
    கேட்கவேண்டியதில்லை. என்னாச்சு? என்று கேட்டால் போதும்.
  • இது காட்சிமொழியின் தன்மை. உணர்ச்சிகளைக் காண்பிக்க முகத்தை மட்டுமே காண்பித்தால் போதும்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) களைந்து (ஆ) வந்தனர்
Answer:
(அ) களைந்து = களை + த் (ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி ; ந் – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

(ஆ) வந்தனர் = வா (வந்) + த் + அன் + அர்
வா – பகுதி ; (வந்) – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பல்பால் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) கருந்தடம்
(ஆ) உன்ன லிர்
Answer:
(அ) பண்புத்தொகை
(ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகள் பாட குயில்கள் கத்த மயில்கள் கூவின.
Answer:
வண்டுகள் முரல் குயில்கள் கூவிட மயில்கள் அகவின.

Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
அ) நன்மொழி
(ஆ) பத்துப்பாட்டு
Answer:
(அ) நன்மொழி = நன்மை + மொழி
விதி : ஈறுபோதல்

(ஆ) பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
விவாகத்திற்கு பந்து மித்திரர்களுடன் வருக.
Answer:
திருமணத்திற்கு உறவினர்களுடனும், நண்பர்களுடனும் வருக.

Question 27.
மயங்கொலிப் பிழையின்றி பொருள் வேறுபட ஒரே தொடரில் விடையளி.
உன் — உண்
Answer:
உணவு இடைவேளையில் காலம் தாழ்த்தாமல் உன் சாப்பாட்டைத் தவறாமல் உண்.

Question 28.
கொச்சை நீக்கிச் சரியாக எழுது.
இன்னக்கி சாயுங்காலம் தங்கச்சி வரும்.
Answer:
இன்று மாலை தங்கை வருவாள்.

Question 29.
தனித்தமிழில் எழுதுக.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடு.
Answer:
காவல் நிலையம் சென்று புகார் கொடு.

Question 30.
விடைக்கேற்ற வினா எழுதுக.
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் உட்பகுதியிலிருந்துதான் வருகின்றன.
Answer:
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் எப்பகுதியிலிருந்து வருகின்றன?

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
  • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி நிற்கும்.

Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:

  • உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
  • முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
  • தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Question 33.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று”

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

“சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 34.
தலைக்கோல் என்றால் என்ன? அவற்றின் சிறப்பு யாது?
Answer:

  • அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர்.
  • தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.
  • அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.
  • வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
  • அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
  • மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.
  • முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
  • அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில்
    வைப்பான்.
  • மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…. இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

Question 36.
பெருங்காப்பியத்தில் இடம் பெற வேண்டிய சிறப்புகள் யாவை?
Answer:

  • வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
  • தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
  • திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
  • சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
  • அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:

  • இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
  • ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து
    கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
  • செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் – செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
  • சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் டையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
  • இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

Question 38.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:

  • படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
  • மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். • திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை
    நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
  • அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
  • அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  • சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
  • புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது நெய்தல்திணையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை :
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள் :
நீலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்:
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

நெய்தல் திணை:
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்.
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக்
கூறுவது வரைவு கடாதலாகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 40.
உருவக அணி அல்லது பிறிது மொழிதல் அணியை சான்றுடன் விவரி.
Answer:
உருவக அணி:
அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.

(எ.கா.) முகத்தாமரை

விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் ‘உவமை’ எனப்படும்.

(அல்லது)

பிறிது மொழிதல் அணி:
Answer:
அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் ‘பிறிது மொழிதல் அணி’யாகும்.

(எ.கா.) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை.

எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது ‘பிறிது மொழிதல் அணி’ ஆகும். (பிறிது – வேறொன்று; மொழிதல் – கூறுதல்))

Question 41.
கீழ்க்காணும் பாடலைப் படித்தறிந்து ஏதேனும் 5 நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
தாயென அன்பு செய்து
தந்தைபோல் பரிந்து, சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறி
தூயநன் னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமுள் ளோனே
ஆசானென் றழைக்கத் தக்கோன். (- நாமக்கல் கவிஞர்)

ஆசிரியர் குறிப்பு:

இயற்பெயர் : வெ. இராமலிங்கம்
பிறப்பு : 29 அக்டோபர், 1888
ஊர் : மோகனூர் – நாமக்கல் மாவட்டம்
சிறப்பு பெயர் : காந்தியக் கவிஞர்
படைப்பு : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள்
இறப்பு : 24 ஆகஸ்டு 1972)

திரண்ட கருத்து:
ஒரு நல்ல ஆசிரியன் என்பவன் தாயைப் போல அன்பு செய்தும், தந்தையைப் போல பரிவுடனும், பெற்ற குழந்தையைப் போல அணைத்து பேசியும் நல்ல அறிவுரைகளை கூறுதல் வேண்டும். தூய நன்னடத்தைகளைக் கற்க துணையைப் போல நடந்துகாட்ட வேண்டும். இவ்வகையான தூய்மையான நல்ல குணங்கள் உள்ளவனே நல்ல ஆசான் ஆவார்.

மையக் கருத்து:
ஒரு நல்ல ஆசான் தாய், தந்தை, குழந்தை, துணையை போல இருக்க வேண்டும் என கூறுகிறார்.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
அன்பு – அறிவு
ஆயநற்குணம் – ஆசானெள்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை.
தாயென – சேசெயன
தூயறள் – ஆயநள்

அணி:
உவமையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Walls have ears.
2. Wealth is best known by want.
3. While in rome, be a roman.
4. Think every – body alike.
Answer:
1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.
2. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
3. ஊருடன் ஒத்துவாழ்.
4 தன்னைப்போலப் பிறரை நினை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 - 1

வான்மழை :

வரவேற்பேன் வரவேற்பேன்
வான்மழையே நீ வந்துவிடு
உன்னை அழைக்கத்தான்
உவந்துநான் மரம் வளர்த்தேன்
மாமயில்கள் அகவி ஆடுவதும்
மாமழை உன்னை வரவேற்கத்தான்
வாடிடும் பயிர்கள் காக்க
வாஞ்சையுடன் நீ வருவாயே!

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என மழைக்காலத்தை வருணிக்கிறார் நக்கீரர்.

(அல்லது)

(ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

மாதவியின் நாட்டியப் பயிற்சி:
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)

நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.

மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்:
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து ‘தலைக்கோலி’ என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் ‘பரிசு இவ்வளவு ‘ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை’ மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

மாதவியின் நாட்டியம்:
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.

முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள்
நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன்
கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே ‘ எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள்:

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு
    காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து. தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு :

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம்
    நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

Question 46.
(அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின்
பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
மருதன் கண்ட காட்சி:
“ஐப்பசி மாதம் அடைமழை காலம்” கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல்வெளிகள். வயல்வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர். நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்கி வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.

மருதனின் சிந்தனைகள்:
எந்த மழையின் உதவியில் நட்டார்களோ, அதே மழையின் ‘அபரிமித அன்பினால்’ இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒரு நாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு…. புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்…? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால் …. தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய? என்ன செய்யலாம் என்று மருதனுக்கும் ஆயிரம் யோசனைகள்.

மருதனுக்கு தோன்றிய யோசனை:
கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் கீழ்க்குமிழி மட்டுமல்ல. ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்துத் தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தத் கிராமமும் தப்பித்துக்கொள்ள வழி கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்த பேய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும்.

மருதனுக்கு ஏற்பட்ட சந்தேகம்:
சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா? இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.

மருதன் மாரியப்பனிடம் கூறினான்:
மருதனைக் கண்ட மாரியப்பன் ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும். இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. காதில் கேட்காதவாறு மாரி அவன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான் பொறுமையிழந்த மருதன் “ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது … ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற …. நானென்ன சொல்ல முடியும்?” “ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன் ….. முதமுத உங்கட்ட வந்து கேட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்..” கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.

மருதன் காளியப்பனின் உதவியை நாடினான்:
வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகனும். மேற்கொண்டு மழை பேயணும் கூட அவசியமில்லை…… ராத்திரிக்குள்ளே எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா…. அவ்வளவுதான் … இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான். ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணு கூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும். கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. ஏன்டா மருதா … உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணு கூடியிருக்கானுவளா? மூலைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க.

சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க …. அதிலும் உங்க சொல்லுக்க மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா …. ஒருநாள் தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…… மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது. இருந்தாலும் கண்மூடி யோசித்தார். நாளைக்குக் காலையிலேயே பலபலன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில் வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்குத் தலை சுத்துறாங்க திரும்ப வர மூணு நாளாகும். கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது.

மருதன் பட்டதாரி பிரேம்குமாரை சந்தித்தல் :
பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. “நாகூர்பிச்சை” என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ”பிரேம்குமார்” என்று மாற்றி வைத்துக்கொண்டு “மன்றம் ” அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும் செய்து கொண்டிருப்பவன். நாம நினைக்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன். முகம் மலர பிரேம்குமாரை வழி மறித்தான். “என்னண்ணே …” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி, பிரேமிடமிருந்து சட்டென்று எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.

மருதண்ணே… நீங்க சொல்ற வேலையைச் செய்றதுக்குன்னே பிடபின்யூ டின்னு கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க என்று கூறிவிட்டு மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்ன் போய்க்கொண்டே இருந்தான்.

மருதனின் புலம்பல்:
மருதனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை.

மருதன் தன் மனைவி அல்லியிடம் கூறுதல்.
தன் மனைவி அல்லியிடம் மருதன் நடந்ததைக் கூறினான். அதனைக் கேட்ட அல்லி இந்த ஊர்ல இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு “சக்கரைக்குழி” நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப்போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட இருக்கிறது நம்ம கையும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா … இன்னொரு ஊரு …. வேலையைப் பாப்பியா ….. ஆவேசமாய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள்.

மருதனின் முயற்சி:
தளும்புகின்ற வடி வாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடிகளை “சரக் சரக்” கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள். “நீ சொல்றது” நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாதான் நாமளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும் நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா? ஆற்றாமையுடன் கேட்டவளைத் திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்…”!

மருதன் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்:
மருதன் மற்றும் அல்லி செய்து கொண்டிருந்த வேலையைக் கண்டு மாரியும் வேலையில் ஈடுபட்டான். இவர்கள் மூவரையும் கண்ட காளியப்பன் வண்டியில் இருந்து இறங்கி அவரும் செய்தார். இதனை வண்டிக்காரர் மூலம் அறிந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரும் வந்து செய்ய ஆரம்பித்தனர். “ஊர் கூடித் தேர் இழுக்கும் போதும்“ வேர்வடத்தைப் பிடிக்கும் முதல் கரமாக இருந்தது மருதனின் கரம்.

முடிவுரை:
“ஆக்கமும் அழிவும் நம்மாலே” என்னும் பழமொழிக்கு இணங்க மருதனின் பொறுப்புணர்வால் அவனுக்கும் ஊருதிடும் நன்மை ஏற்பட்டது. மருதனின் பண்பு பாராட்டிற்கு உரியது.

(அல்லது)

(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு … குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலைபேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம் !

Tamil Nadu 12th Tamil Model Question Paper 4

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) சுரதாவின் விண்வேறு என்று துவங்கும் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு;
காணும் கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. (சுரதா)

(ஆ) ‘சினம்’ என முடியும் குறள் வெண்பாவை எழுதுக.[1 x 2 = 2]
Answer:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.( – திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘காவியதர்சம்’ என்ற இலக்கண நூல்……………………மொழியில் எழுதப்பட்டது.
(அ) தமிழ்
(ஆ) வடமொழி
(இ) கிரந்தம்
(ஈ) ஷிப்ரூ
Answer:
(ஆ) வடமொழி

Question 2.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் சதுர மைல்கள் உருகிய பகுதி…………………….
(அ) ஆர்டிக்
(ஆ) அண்டார்டிக்
(இ) பசுபிக்
(ஈ) அட்லாண்டிக்
Answer:
(அ) ஆர்டிக்

Question 3.
‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ) பிரிந்து வாழ்தல்
(ஆ) சமுதாயம்
(இ) தம்மனை
(ஈ) கூடிவாழ்தல்
Answer:
(ஈ) கூடிவாழ்தல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 4.
வானரத் தலைவன்……………………
(அ) அனுமன்
(ஆ) சுக்ரீவன்
(இ) சவரி
(ஈ) சடாயு
Answer:
(ஆ) சுக்ரீவன்

Question 5.
தமிழக அரசு 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவிய இடம்……………………
(அ) நெல்லை
(ஆ) கன்னியாகுமரி
(இ) கோவை
(ஈ) தில்லை
Answer:
(ஆ) கன்னியாகுமரி

Question 6.
வாதம் புரிதலை கொடிகட்டியிருப்பரென்று கூறிய நூல்……………………
(அ) மதுரைக்காஞ்சி
(ஆ) நெடுநல்வாடை
(இ) முதுமொழிக்காஞ்சி
(ஈ) பட்டினப்பாலை
Answer:
(அ) மதுரைக்காஞ்சி

Question 7.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து உவமைக் கவிஞர் சுரதா பெற்ற விருது…………………………….
(அ) கலைமணி
(ஆ) கலைமாமணி
(இ) இராசராசன்
(ஈ) பாரதி
Answer:
(இ) இராசராசன்

Question 8.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான பாவகை…………………………… ஆகும்.
(அ) வெண்பா
(ஆ) அகவற்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) வெண்பா

Question 9.
வள்ளல் பச்சையப்பர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்………… ஆகும்.
(ஆ) மல்லியர்பா
(ஆ) மவுனியர்பா
(இ) கொற்கைப்பா
(ஈ) மாவலிபுரச்செலவு
Answer:
(ஈ) மாவலிபுரச்செலவு

Question 10.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
கூற்று : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி

Question 11.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாண அரசின் முதல் தலைவர்…………………… ஆவார்.
(அ) தலாமி
(ஆ) இராஜாஜி
(இ) எலியேல்
(ஈ) ஹிட்லர்
Answer:
(இ) எலியேல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 12.
குறிஞ்சித் திணை பாடிப்புகழ் பெற்றவர்………… ஆவார்.
(அ) கபிலர்
(ஆ) பரணர்
(இ) பேயனார்
(ஈ) அம்மூவனார்
Answer:
(அ) கபிலர்

Question 13.
மாதவி தனது நாட்டியத் திறமைக்காகப் பெற்ற பட்டம்………………………
(அ) ஆடலரிசி
(ஆ) தலைக்கோல்
(இ) நாட்டியப்பேரொளி
(ஈ) நாட்டியச் செங்கோல்
Answer:
(ஆ) தலைக்கோல்

Question 14.
உவகை என்பதன் பொருள் …………………………..
(அ) சினம்
(ஆ) பொறாமை
(இ) சூது
(ஈ) மகிழ்ச்சி
Answer:
(ஈ) மகிழ்ச்சி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர்ச் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Question 16.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
தான் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதி தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.

Question 17.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி’ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Question 18.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய பிற நூல்கள் யாவை?
Answer:

  • இரட்சணிய யாத்திரிகம்
  • போற்றித் திரு அகவல்
  • இரட்சணிய மனோகரம்

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

Question 20.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால் .
  • கொம்பு .
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Question 21.
நடை என்னும் சொல்லை தொல்காப்பியம் எவ்வாறு கையாண்டுள்ளது?
Answer:
‘நடைபெற்றியலும்’ என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும்,

ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி

என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஓடுமின்
(ஆ) அணிகின்றேன்
Answer:
(அ) ஓடுமின் = ஓடு + மின்
ஓடு – பகுதி
மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
(ஆ) அணிகின்றேன் = அணி + கின்று + ஏன்
அணி – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உழாஅது
(ஆ) உலகு
Answer:
(அ) உழாஅது – செய்யுளிசை அளபெடை
(ஆ) உலகு – இடவாகுபெயர்

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்
(ஆ) செந்தமிழே
Answer:
(அ) வானம் + எல்லாம் – வானமெல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) செம்மை + தமிழே – செந்தமிழே
செம் + தமிழே – செந்தமிழே
விதி : (1) ஈறுபோதல் (2) முன்னின்ற மெய் திரிதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 25.
ICON என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம் என்ன?
Answer:
உரு

Question 26.
கொச்சை சொற்களை தமிழில் எழுதுக.
Answer:
மெய்யாலுமே நான் கிரஹபிரவேச விழாவுக்குப் போய்கினு இருக்கேன். உண்மையாகவே நான் புதுமனை புகுவிழா நிகழ்விற்குச் சென்று கொண்டு இருக்கிறேன்.

Question 27.
மரபுத் தொடரைச் சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
Answer:
கூழைக்கும்பிடு
கூழைக்கும்பிடு – போலி மரியாதை
தொடர் : இந்த உலகில் பிடிக்காவிட்டாலும் கூட உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் சிலர் கூழைக்கும்பிடு போடுவர்.

Question 28.
மரபுப்பிழை திருத்துக.
சிங்கத்தின் பிளிறல் கேட்டு நரி குரைத்திட ஆந்தை ஓலமிட்டது.
Answer:
சிங்கத்தின் முழக்கம் கேட்டு நரி ஊளையிட ஆந்தை அலறியது.

Question 29.
விடைக்கேற்ற வினா எழுதுக.
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் காலத்தில் தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது.
Answer:
யார் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது?

Question 30.
பொருள் வேற்றுமை தோன்றும்படியாக ஒரே தொடரில் அமை.
வால் – வாள்
Answer:
குறும்பு செய்த குரங்கின் வாலை, வாள் கொண்டு வெட்டினான்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28)

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  • கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது
    பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

Question 32.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்தைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
  • பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத்
    தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடை பவளத்தில் 180, பாடல்களும் நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
  • நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
  • இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி ‘இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம்:
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.
Answer:

  • தான் எந்த உதவியும் செய்யாமலிருந்த போதிலும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகமும், விண்ணுலகமும் ஈடாகாத அளவிற்கு உயர்ந்தது.
  • உரியகாலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட பெரியதாகும்.
  • இதனால் நமக்கு பயன்கிடைக்குமா என்று ஆராயாமல் ஒருவர் நமக்கு செய்யும் உதவி, நன்மை கடலைவிட பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவை உதவி செய்திருந்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதை பனையளவாகக் கொண்டு போற்றுவர். இந்த செயல்களையெல்லாம் விட நன்றி உயர்ந்தது என்று ‘வள்ளுவர் கூறுகிறார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
Answer:

  • மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
  • வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
  • அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது.
  • விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
  • அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
  • இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகித்துக்கொள்ள வேண்டும்.
  • சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது.
  • பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  :
இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுப்படுத்துகிறார்.

Question 36.
சென்னை நீர் நிலைகளை குறிப்பிடுக.
Answer:
சென்னை நீர் நிலைகளாவன:

  • இலண்டன் நகர் என்றால் தேம்ஸ் நதி.
  • வாஷிங்டன் நகர் என்றால் போடமாக் நதி.
  • சென்னை, வட சென்னைக்குக் கொற்றலையாறு. மத்திய சென்னைக்குக் கூவம். தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்.
  • காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
  • மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்.
  • பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும் ஆறுகள் கடலில் சென்று சேரும்.

Question 37.
நம் தமிழ் பரம்பரையின் உறவுப்பெயர்களை எழுதுக.
Answer:
தமிழர் பரம்பரை:

பரன் – பறை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தந்தை – தாய்

நாம் :

மகன் – மகள்
பெயரன் – பெயர்த்தி
கொள்ளுப் பெயரன் – கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன் – எள்ளுப் பெயர்த்தி

Question 38.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
நெய்தல் திணை அல்லது இயன்மொழித்துறையை விளக்குக.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்லது)

இயன்மொழித் துறை
Answer:
துறை விளக்கம்:
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும். ஒருவனின் இயல்பைப் புகழ்ந்துக் கூறி வாழ்த்துவது இத்துறையின் உயிர்ப்பாகும்.

(சான்று) வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

துறை பொருத்தம்:
வரையறையின்றி மழை பல்வேறு இடங்களிலும் பொழிவது போல இரவலர்க்கு ஆராய்ந்து பாராமல் மழை போல் வாரி வழங்குவான் என்று பரணர் பேகனின் இயல்பைப் பாடலில் புகழ்வதால் இப்பாடல் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.

குறிப்பு:
பேகனின் வள்ளல் தன்மையின் இயல்பைப் பாடப்பட்டது குதிரைகளுக்கு மிகுந்த புல்லினை ஊட்டி பெருந்தேரினைச் விரைவாகச் செலுத்துவாயாக என்று கூறினான்.

Question 40.
நிரல்நிறையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
அணி விளக்கம்:
சில சொற்களை வரிசைப்படுத்தி, அச்சொற்களுடன் தொடர்புள்ளவற்றையும் முறையாக வரிசைப்படுத்தி அதன்படி பொருள் கொள்ள வைப்பதே ‘நிரல்நிறையணி’யாகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Answer:
விளக்கம்:
மேற்காணும் குறளில், அன்பும், அறனும், முதலடியில் அமைந்துள்ளன. அச்சொற்களுக்கு முறையாகப் பொருந்தும்படி, பண்பும், பயனும், இரண்டாவது அடியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அன்பே பண்பாகவும், அறனே பயனாகவும் இல்லறம் அமைய வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இங்ஙனம் அன்பிற்குப் பண்பும், அறத்திற்குப் பயனும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
(நிரல் – வரிசை ; நிறை – நிறுத்துதல், நிரல் நிறை வரிசையாக நிறுத்துதல்)

(அல்லது)

தற்குறிப்பேற்ற அணி:
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுதல் ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும். (தன்+ குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்)

(எ.கா.) மையறு மலரின் நீங்கியான் செய்மா தவத்தின் வந்து
செய்யவளிருந்தாள் என்று செருமணிக் கொடிகள்
என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா

விளக்கம்:
மிதிலை நகரம் தன்னிடம் திருமகள் வளர்ந்து வருவதைக் குறிப்பாகச் சொல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள இராமனை விரைந்து வருக’ என்று அழைப்பது போல தன் கொடிகளாகிய கைகளை நீட்டி அழைத்தது என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

இயல்பாகக் கொடி அசைவதை – இராமனை அழைக்கவே அவ்வாறு அசைந்தது என்று தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறியதால், இது ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும்.

Question 41.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஆழம் தெரியாமல் காலை விடாதே அல்லது மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழி விளக்கம்:
எந்தச்செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு :
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நாம் எந்த செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

(அல்லது)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Answer:
பழமொழி விளக்கம்:
வெளிப்புறத் தோற்றம் கண்டு எதையும் உண்மை என நினைத்தல் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்தார். அப்போது தாம்பரத்தில் ஒரு நபர் ஏறி என் நண்பரின் அருகில் அமர்ந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் நல்லவராய்த் தெரிந்தார். பேண்ட், சர்ட் என மிகவும் மிடுக்காகத் தோற்றமளித்தார். கையில் மிகப்பெரிய பெட்டியும் வைத்திருந்தார். அவர் என் நண்பரிடம் மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தார். என் நண்பரும் பேசினார், பின் இருவரும் இரவு உணவு உண்டனர்.

பின் சென்னையைத் தாண்டிய பிறகு, என் நண்பருக்கு அவர் பிஸ்கட் தந்தார். என் நண்பர் அது மயக்க பிஸ்கட்டாக இருக்கும் என மறுத்தார். பின் அந்த நபர் சிறிது நேரத்தில் ஒரு நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேசினார்.

பின் அடுத்த இரயில் நிலையம் வந்தது. அப்போது வேறு ஒரு நபர் காபி விற்றார். உடனே அந்த நபர் என் நண்பரிடம் காபி குடிக்கலாமே எனக் கூறினார். பின் இருவரும் காபி குடித்தனர். பின் நண்பர் மயங்கினார். காலையில் விழித்துப் பார்த்தபோது அவரின் பணப்பையைக் காணவில்லை. உடனே காவலரிடம் புகார் செய்தார். காவலர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர். அப்போதுதான் என் நண்பருக்கு அந்த காபி விற்றவரும் இவரின் கூட்டாளி எனத் தெரிந்தது. பின் காவலரிடம் தன் பணத்தைப் பெற்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A young calf knows not fear.
2. Forgive and forget.
3. Slow and steady win the race.
4. All his geese are swans.
Answer:

  1. இளங்கன்று பயமறியாது.
  2. மறப்போம், மன்னிப்போம்.
  3. நிதானம் பிரதானம்.
  4. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
மனித நேயம் (அல்லது) தமிழர் திருநாள்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என்று நெடுநல்வாடையில் நக்கீரர் வருணனை செய்கிறார்.

(அல்லது)

(ஆ) நகை, அழுகை, இளிவரல், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளைச் சான்றுடன்
விளக்குக.
Answer:
நகை :
(பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று இது)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார். தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!

பாடலின் பொருள் :
“புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.

அழுகை:)
(தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது)
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு
எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!

பாடலின் பொருள்:
போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.

இளிவரல் :
(சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது)

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே

பாடலின் பொருள்:
”நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”

பெருமிதம்:
(பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல்)

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் –
எறிசுடர்வேல்
தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே
நின்னோடு
பாங்கலா மன்னர் படை

பாடலின் பொருள்:
எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Amswer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற
    அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச்
    செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் “இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல் ” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாகக் கட்டமைக்கப்படுகிறது.

(அல்லது)

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு
    செய்பவன். அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன்
    வருந்தவில்லை .
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
  • ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஔவையார் நல்வழியில்

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(அ) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:

  • மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
  • தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப்
    படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.
  • நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு……?
  • பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்…… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
  • உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே…. வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
  • தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார். “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….” கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
  • ” மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” …. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
  • “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
  • நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி… நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.” ”ஐயா’………
  • “ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
  • இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்…? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
  • வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
  • இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
  • பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…… தவிப்…….. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
  • நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
  • அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
  • “உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்……..” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
  • “ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
  • எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயாங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
  • இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் ….. தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்……. மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் ……….. தன்னையும் சுவீகரித்து ………..
  • ”பாபு……. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா……..” கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.

(அல்லது)

(ஆ) பாதுகாப்பாய் ஒரு பயணம் விழிப்புணர்வு எழுத்தோவியத்தை நாடக வடிவில் தருக.

காட்சி – 1

களம் : அரசுப் பேருந்து
பங்கேற்போர் : ஓட்டுநர், நடத்துநர், பயணி 1, பயணி 2, மக்களில் ஒருவர்
(திங்கட்கிழமை காலை 8 மணி – மாணவர்களும், பணிக்கு செல்வோரும் 8 மணிப் பேருந்தை கண்டவுடன் முண்டியடித்தபடி பேருந்தில் ஏறுகின்றனர். பல மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்)

ஓட்டுநர்: யாருப்பா அது? ஸ்கூல் பசங்களா? படிக்கட்டிலேயே நிக்காம, பஸ்ஸீக்கு உள்ளே வாங்க தம்பி ஏறி உள்ளே வாங்க….. இல்லேன்னா பஸ்ஸை நிறுத்திடுவே.

நடத்துநர்: தம்பி …. உள்ளே வாங்கப்பா. படியில் பயணம் – நொடியில் மரணம் … என்று நீங்க படிச்சதில்லையா? படியை விட்டு மேலே ஏறுங்க தம்பி.

பயணி 1: தம்பி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றாங்க. உள்ளே வாங்க தம்பி. விபத்தை விலை குடுத்து வாங்காதீங்க படியைவிட்டு மேல ஏறி பஸ்ஸுக்குள்ள வாங்க. (படிக்கட்டில் பயணித்தவர்கள் உள்ளே வந்தனர்… 15 நிமிடப் பயணத்திற்குப்பின் வண்டி நின்றது. அந்த பிரதான சாலையில், போக்குவரத்து திடீரென முடங்கியது. எதிர்த்திசையிலிருந்து பலர் பதட்டமாக வந்து கொண்டிருந்தனர்)

பயணி 1: (எதிர்த்திசையிலிருந்து வந்தவரிடம்) என்னாச்சு? தீடீர்னு போக்குவரத்து முடக்கம்? உங்களுக்குத் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்க.

எதிரே வந்தவர்: பள்ளிக் கூடத்துப் பசங்க 3 பேரு ஒரே இருசக்கர வாகனத்துல வேகமா வந்து எதிரே வந்த லாரி மேல மோதிட்டாங்க. கடும் விபத்து – கடுமையான காயம் – இப்போதான் ஆம்புன்சுல அள்ளிட்டுப் போறாங்க.

நடத்துநர்: அடிக்கடி இப்படித்தாங்க நடக்குது.

பயணி 1 : சின்னப் பசங்க …. வண்டி ஓட்டுறதே தப்பு. அதிலயும் மூணு பேரா?
பயணி 2 : 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க முடியாது. உரிமம் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படிக் குற்றம்னு பசங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவங்க பெற்றோர்க்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். \
பயணி 3 : அப்படி போற பசங்க சாதாரணமாவா போறாங்க… அடுத்தவங்க பார்க்கணும்னே வேகமா வண்டி ஓட்டுறாங்க. (காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்கின்றனர். மீண்டும் வாகனங்கள் நகரத் தொடங்கின)

காட்சி – 2

(1 மணி நேர கால தாமதத்திற்குப் பின் 15 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். தாமதமாக வந்ததால் அனுமதி பெற்றிட தலைமையாசிரியை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்)

மாணவர்கள் : அம்மா, வணக்கம்…. நாங்கள் உள்ளே வரலாமா?
தலைமையாசிரியை : வாருங்கள் மாணவர்களே…. ஏன் காலதாமதம்? பள்ளிக்குத் தாமதமாக வருவது தவறு என்று உங்களுக்குத் தோணவில்லையா?
மாணவர்கள் : அம்மா… மன்னியுங்கள். வரும் வழியில் மெயின் ரோட்டில் சாலை விபத்து 3 மாணவர்கள் டூவீலரில் வந்து லாரி மீது மோதிவிட்டனர். படுகாயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சு வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிட்டது.

தலைமையாசிரியை : சரி சாமி … நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லலாம். நமது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியம். விரைந்து விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வேன் (என்று தனக்கு பேசிக் கொண்டார்)

காட்சி – 3
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

களம்: பள்ளி கலையரங்கம்.
(வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிக்கு வருகிறார். பள்ளித் தலைமையாசிரியர் வரவேற்கிறார் சாலைப்பாதுகாப்பு பணி…. அவர் திறந்து வைக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.)

தலைமையாசிரியர் வரவேற்றுப் பேசுக்கிறார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிறப்புரை ஆற்ற வருகிறார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் : அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மை அழைத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி அன்பு மாணவச் செல்வங்களே. தீதும் நன்றும் பிறர் வருவதில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 55 இலட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 21 கோடிக்கும் மேலான வாகனப் போக்குவரத்து உள்ளன. ஆண்டிற்கு 5 லட்சம் விபத்துகளில் 11/2 லட்சம் பேர் உயிரை இழக்கின்றனர். பல லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். தமிழ் நாட்டில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. 18 வயது நிரப்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும். பள்ளி மாணவர்கள் மோட்டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாகும். அவ்வாறு குழந்தைகள் தவறு செய்தால், அதனை அனுமதித்த பெற்றோர்க்கு தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் விளையாடுவது, திடீரென சாலையைக் கடப்பது, வாகனம் ஓட்டுவது ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்பதற்கு முன்பே கீழே குதிப்பது, படிக்கட்டில் பயணம் செல்வது போன்ற செயல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லா உயிருக்கு முதன்மை தந்து மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலை விதிகளை அறிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான உறுதி மொழிகளை மேற்கொண்டால். நன்றாக இருக்கும். விபத்து இல்லாத தமிழகம் உருவாக மாணவ மாணவி ஒத்துழைக்க வேண்டும். நன்றி.

மாணவர்கள் : சாலை விதிகளை மதிப்போம். சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம். உரிமம் பெறும் வரை வாகனங்களை ஓட்டமாட்டோம். பெரியவர்கள் சாலையைக் கடக்க உதவுவோம். விபத்தில்லா தமிழகம் உருவாக்கப் பாடுபாடுவோம். (என்று உறுதி கூறினர்)
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறை வேறியது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) ‘காய்நெல்’ என்று துவங்கும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை எழுதுக.
Answer:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; (- பிசிராந்தையார் )

(ஆ) ‘தலை’ என்று முடியும் குறளை எழுது.[1 x 2 = 2]
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ( – திருவள்ளுவர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Question 2.
காசிக்காண்டம் என்பது …………..
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 3.
‘படித்து வந்தேன், வேலை தேடினேன்’ எனும் தொடரின் வகை …………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) வினையெச்சத் தொடர்
(இ) எழுவாய்த் தொடர்
(ஈ) முற்றெச்சத் தொடர்
Answer:
ஆ) வினையெச்சத் தொடர்

Question 4.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 5.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவதன் காரணம் …………..
(அ) நாட்டைக் கைப்பற்றல்
(ஆ) ஆநிரைக் கவர்தல்
(இ) வலிமையை நிலைநாட்டல்
(ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
(இ) வலிமையை நிலைநாட்டல்

Question 6.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது …………..
(அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
(இ) அறிவியல் முன்னேற்றம்
(ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Question 7.
குறிஞ்சித் திணையின் சிறு பொழுது …………..
(அ) யாமம்
(ஆ) மாலை
(இ) எற்பாடு
(ஈ) நண்ப கல்
Answer:
(அ) யாமம்

Question 8.
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
Answer:
(ஆ) மோனை, எதுகை

Question 9.
பின்பனிக்காலத்தை பெரும் பொழுதாய்க் கொண்ட திணை ………………… ஆகும்.
(அ) முல்லை
(ஆ) மருதம்
(இ) நெய்தல்
(ஈ) பாலை
Answer:
(ஈ) பாலை

Question 10.
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையுள்ள காலம் …………..
(அ) வைகறை
(ஆ) மாலை
(இ) நண்பகல்
(ஈ) எற்பாடு
Answer:
(அ) வைகறை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 11.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை …………..
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந் திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் என்னே

Question 12.
பாடலடியில் குறிப்பிடப்படும் மன்னர் …………..
(அ) சோழன்
(ஆ) பாண்டியன்
(இ) நன்னன்
(ஈ) சேரன்
Answer:
(இ) நன்னன்

Question 13.
பாடலின் ஆசிரியர் …………..
(அ) நன்ன ன்
ஆ) கூத்தர்
(இ) பெருங்கௌசிகனார்
(ஈ) பெருங்குன்றூர் கிழார்
Answer:
(இ) பெருங்கௌசிகனார்

Question 14.
வயிரியம் – பொருள் தருக.
(அ) வைரம்
(ஆ) பாணர்
(இ) சோறு
(ஈ) கூத்தர்
Answer:
(ஈ) கூத்தர்

Question 15.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) சிலம்பு, நரலும்
(ஆ) அலங்கு , அடைந்திருந்த
(இ) மான, நோனா
(ஈ) வயிரியம், நோன்தாள்
Answer:
(ஆ) அலங்கு , அடைந்திருந்த

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என
வழங்குவர்.
Answer:
விடை:
அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல்கள் எவை? 150 5 Swaa20 தமிழ் – X RARE சாக்கமாக அSைents காக்கலை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 17.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

Question 18.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

Question 19.
“நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
Answer:
முன்னாள் தான் பார்த்த அருச்சுனன் தபசுக் கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் (அவனிடம்)
கூறினான்.

Question 20.
மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?
Answer:
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.

Question 21.
‘கண்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) Answer:
விடை:
தேன்மழை, மணிமேகலை, செய்தேன், வான்மழை, பொன்மணி, பொன்விளக்கு,
விளக்கு செய்; விண்மழை, செய்விலங்கு, பூமழை

Question 23.
அடிக்கோடிட்ட சொல்லிற்கு பதிலாகப் பொருள் மாறாமல் வேறு சொல்லை
பயன்படுத்தவும்.
Answer:
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
Answer:
விடை:
பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழம் இருக்கக் காய் உண்ணுதலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
விதி – வீதி
Answer:
விடை:
வீதி தோறும் நூலகம் அமைந்தால் நாட்டின் தலைவிதி மாறிவிடும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(அ) Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
(ஆ) Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

Question 26.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.
Answer:
பழங்காலத்திலே, பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.

Question 27.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி
Answer:
விடை:
தலைக்குச் சீகைக்காய் தேய்த்து முழுகினால் உடம்பிற்கு குளிர்ச்சி.

Question 28.
கிளர்ந்த, தோன்றி – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
விடை :
கிளர்ந்த – பெயரெச்சம்
தோன்றி – வினையெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
கரகாட்டம் விளக்குக.
Answer:

  • பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
  • • கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
  • இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர்.
  • கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.
  • நையாண்டி மேள இசையும் நாதசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

Question 30.
ம.பொ.சி.பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answer:
சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

(அ) இளம் வயதில் சமூக விடுதலைக்காக போராடியவர் யார்?
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி

(ஆ) 1956 நவம்பர் 1-ல் தமிழ்நாட்டுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
கன்னியாகுமரி

(இ) நேசமணியின் சிறப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு செய்தது யாது? Answer:
நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.[ 2 x 3 = 6]

Question 32.
மாற்றம் பற்றி காலக்கணிதத்தில் கண்ணதாசன் கூறுவன யாவை?
Answer:

  • மாற்றம் என்பது தான் மனிதகுலத் தத்துவம் ஆகும்.
  • மாறும் உலகின் மகத்துவத்தை அறிய வேண்டும்.
  • நன்மை தீமை அறிய வேண்டும்.
  • தலைவர் மாறுவர், சபைகளும் மாறும். ஆனால் தத்துவம் மாறாது.
  • கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும்.
  • குறை கூறுபவர்கள் குறை கூறட்டும்.
  • நானே தொடக்கம் நானே முடிவு நானுரைப்பது தான் சட்டம்.

Question 33.
தமிழின் பெருமையை எங்கும் முழங்குவதற்கான காரணங்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • செழிப்பு மிக்க தமிழே ! பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்ட தமிழே ! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்தன்மையும். வேற்று மொழியார் உன்னைப்பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • செந்தாமரையின் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடும் வண்டினைப் போன்று நாங்கள் ‘உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடலை எழுதுக.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும்
உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! (- கண்ணதாசன்)

(அல்லது)

(ஆ) “செம்பொனடிச் சிறு கிங்கிணியோடு ” எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்’ பாடலை எழுதுக.
Answer:
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை .
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை (- குமரகுருபரர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
குறிஞ்சித்திணை, கருப்பொருள் அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 1

Question 36.
‘இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 3

Question 37.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
Answer:

  • நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
  • என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க
    விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாள்.
  • நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், தாயின் பிரிவால் புலம்பிக் கூறினான்.
  • அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

(அல்லது)

ஆ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க. . பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம் இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியல் நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இயக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்.
Answer:
விடை: சங்க இலக்கியமான பரிபாடலில் எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக்
காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்கலாம் தொடர்ந்தது. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்கலாம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. இவ்வாறு நம் முன்னோர் அறிவியலின் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுகிறார்கள்.

Question 39.
அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் ‘மலரில், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
மதுரை,
2.4.2019.

அனுப்புநர்:
தெ. தண்டபாணி,
35, மேற்கு மாடவீதி,
மதுரை – 625 001.

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டி விண்ணப்பம்.

ஐயா,

வணக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா எங்கள் ஊரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற அந்நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன. அதன் தொடர்பாக நான் ” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரையைத் தங்களின் நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : மதுரை
தேதி : 2.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
தெ. தண்டபாணி.

குறிப்பு
இத்துடன் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

உறைமேல் முகவரி
பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

(அல்லது)

(ஆ) பழுதுப்பட்ட மின்கம்பிகளைச் சரிசெய்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்னழுத்த ஏற்ற இறக்கத்தை சரி செய்ய வேண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வரைக.
Answer:
அனுப்புநர்
கண்மணி,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

பெறுநர்
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

ஐயா,

பொருள்: அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைச்
சரி செய்தல் – தொடர்பாக.

வணக்கம், எங்கள் தெரு புளியங்குடி நகராட்சியில் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் அரசு அலுவலர்கள் வரை, இச்சாலை வழியே தான் நகரின் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்னழுத்த ஏற்ற இறக்கமும் ஏற்படுகிறது.

இவ்வீதியில் 28 மின்கம்பங்கள் உள்ளன. பாதிக்கு மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதுபட்டு இருக்கின்றன. மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வீதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருட்டைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளைகளும், திருட்டு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை. எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

நன்றி,

இடம்: மதுரை,
தேதி: 08.04.2019

இங்ஙனம்,
கண்ம ணி.

உறைமேல் முகவரி
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற எழுதுக.
Answer:
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் ஆட்டமே ஒயிலாட்டம் ஆகும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 41.
படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 5

Question 42.
(அ) அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள் …. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Answer:

  1. பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
  2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.
  3. பள்ளி, கல்லூரி விழாக்களில் இக்கலை நிகழ்ச்சிகளை நாங்களே நடத்துவோம்.
  4. எம் ஊரில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வேன்.
  5. எங்கள் ஊர் மக்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடுவோம்.
  6.  எங்கள் ஊரில் நாட்டுப்புறக் கலையை வளர்ப்போம்

(அல்லது)

(ஆ) கீழ்க்காணும் பத்தியை மொழிபெயர்த்து எழுதுக.
Decision making is a process that plays a vital role in our daily lives. Some decisions are not very important whereas other imperative decisions, when cautiously carried out, can change the path of our lives. When faced with a crisis, one of the major issues is deciding the right thing. Decision making can be quite complicated and challenging in some cases. It is hence essential to gather as much information from different sources and assess all possible alternatives to the problem or situation at hand before making a decision. Doing so will permit us to land at the best possible result for the problem. Such decisions can’t be an overnight one. It takes a couple of months to investigate and consult with friends, family and university professors to make a decision. It is imperative that one makes decisions in consultation with parents opinions and check on other surveys and researches to avoid challenges.
Answer:
விடை:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தீர்மானம் எடுப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சில தீர்மானங்கள் முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும், சில முக்கிய தீர்மானங்கள் கவனத்துடன் மேற்கொண்டால் நம் வாழ்க்கை பாதையை செம்மையாக மாற்றி அமைக்க முடியும். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அதற்கு உரிய தீர்வைக் காண்பது கடினமான ஒன்றாகும். தீர்வு எடுப்பது என்பது சில சமயங்களில் சிக்கலானதாகவும் அல்லது சவாலாகவும் இருக்கலாம். ஆதலால் போதிய தகவலைப் பல வட்டாரத்தில் இருந்து சேகரித்து அதற்கு மாறான கருத்துக்களை ஆராய்ந்து தீர்வுக்கு வரவேண்டும். இங்ஙனம் தீர்வெடுப்பது பிரச்சனைக்குரிய தீர்வை துல்லியமாக அடைய உதவும். இது ஒரு நாளில் மட்டும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய தீர்மானமாக இருக்காது. இது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என இவர்களுடன் கலந்தாலோசிப்பதால் தீர்வுக்கு வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். பெற்றோர்கள் அறிவுரைக் கேற்ப இருப்பினும் சவால்களைச் சமாளிப்பதற்கு ஏதுவாக பிற ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள கலந்தாலோசனை செய்வது நல்லது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உ.ரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
Answer:
நிகழ்கலை வடிவங்கள் நிலைக்குமா?! – கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன. ஆடல், பாடல், இசை, நடிப்பு ஒப்பனை உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவை தாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்வை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன.

நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன. உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன. மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்கலைகளை வளரச் செய்வோம். என்றும் அழியாமல் நிலைக்கச் செய்வோம்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தை கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது. இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை,
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான். • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்ல து)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. Answer:
கதைக்கரு :
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம். கதைமாந்தர்கள்:

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள்
  • அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி:
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க – உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவகை கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார் கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம். .

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) கர்மவீரர் காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
Answer:
கர்ம வீரர் காமராசர்
முன்னுரை:
தென்னாட்டு காந்தியாய் தமிழ் மண்ணில் அவதரித்து தமிழகத்தை மலர்ச்சியுறச் செய்த காமராசர், 1903-ஆம் ஆண்டு ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசுவாமி-சிவகாமியம்மாள் என்பவர்கள் ஆவர். தமிழ் மண்ணின் தவப்புதல்வராய் இருந்து ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனும் நோக்கில் இம்மண்ணிற்காக வாழ்ந்த திருமகன் இவர் என்றால் மிகையாகாது.

வளர்ச்சி:
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் அஞ்சாமல் கருத்தினை எடுத்து வைப்பவர் திருநாட்டிற்காக திருமணத்தைத் துறந்தவர்.

முயற்சி:
1954-ஆம் ஆண்டு காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தினைத் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறலாம். மக்களோடு மக்களாய்க் கலந்து மக்கள் படும் துன்பத்தினைத் தீர்த்து வைக்கும் இவர் ‘ஏழைகளின் நண்பன்’ எனப் போற்றப்பட்டார்.

நெகிழ்ச்சி:
கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறந்திடச் செய்தார். ஏழை மாணவர்களின் அல்லல் கண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தை’ வகுத்து செயல்படுத்தினார்.
சின்னஞ்சிறுவர்களிடையே வேறுபாடுகளைக் களைந்திட சீருடைத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தொழில் துறையில் தம் பார்வையைத் திருப்பி பல்வேறு தொழிலகங்களுக்கு வழிகளை ஏற்படுத்தினார்.

மகிழ்ச்சி :
1963 வரை ஒன்பது ஆண்டு காலம் அரும்பணிகள் ஆற்றிய இவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மூத்த தலைவர்களை பதவி விலகச் சொல்லி தாமும் தம்முடைய முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

முகமலர்ச்சி:
மக்கள் அவரை பல்வேறு பெயர்களாலும், படிக்காத மேதை, ஏழைகள் நண்பன், கரும வீரர், காலாகாந்தி என அழைத்தலால் அனைத்துப் பெயர்களும் காமராசருக்கே உரித்தாயிற்று.

அழற்சி:
காமராசரின் நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டமும், மும்மொழியாக்கத் திட்டமும் (இந்தியுடன்) பின்னடைவை ஏற்படுத்தின. திராவிடக் கட்சியானது தனது பேச்சு, எழுத்து மூலம் தடுமாற்றம் ஏற்பட வழிவகை செய்தது.

முடிவுரை:
‘காலா காந்தி’ என்ற பெயரினுக்கு ஏற்ப காந்தி பிறந்த தினத்தன்று, 1975 அக்டோபர் 2ல் காமராசர் மறைந்தார். காந்தி பிறந்த தினமானது காமராசரின் நினைவு தினமாக ஆயிற்று. காமராசரின் பிறந்த தினம், இனி ‘தியாகிகள் தின’ மாகக் கொண்டாடப்படுகிறது.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – முறையான ஒப்பந்தம் – நீர் தேவையை சமாளித்தல் – குறைபாடுகள் – திட்டம் – நன்மைகள் – முடிவுரை.
Answer:
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
முன்னுரை:
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது தண்ணீர் பிரச்சினையாகும். இதனைத் தீர்க்க தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது. பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதொன்றாகும். இதற்கு ஓராண்டில் 56 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்படுகிறது.

முறையான ஒப்பந்தம்:
ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குக் கால்வாய்கள் அமைத்து 30 நதிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றாக இணைக்கலாம். 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் எடுக்க முடியும். 11 ஆயிரம் 164 Super20 தமிழ் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்கு 400 புதிய நீர்நிலைகள் அமைக்கப்பட்டு நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த இடத்தின் வழியாகக் கால்வாய் அமைத்தால் பயனுள்ளதாக அமையும் எனத் திட்டமிட வேண்டும். மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் நீர் அதிகம் உள்ளது. ஆனால் வல்லுநர்களிடையே விவாதம் நடத்தி முறையான ஒப்பந்தம் ஏற்படவேண்டும்.

நீர் தேவையை சமாளித்தல்:
மழைக் காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், கால்வாய்கள் வெட்டி அந்நீரை ஒருநிலை படுத்தவேண்டும். இதற்காக வெட்டப்படும் கால்வாய்கள் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைக்கத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேவையை எளிதாகச் சமாளிக்க முடியும்.

குறைபாடுகள்:
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெறமுடியும். காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடி நீர்வளம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தண்ணீருக்காகக் கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வற்றாத ஜீவநதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென்னிந்திய நதிகளை தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குறையாமல் இருக்கும். இன்றைய நிலையில் பல கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சராசரி இரண்டு லிட்டர் குடிநீர் கூடக் கிடைப்பதில்லை.

மூன்று நீர்வழித்திட்டம்:
மூன்று நீர்வழிகளைக் கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றலாம்.
1. இமயமலை நீர்வழி: இது கங்கை பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.
2. மத்திய நீர்வழி: கங்கை, மகாநதி, தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.
3. தென்னக நீர்வழி: இது கோதாவரி, கிருஷ்ணா , காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும் இந்நீர்நிலைகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும். கொண்டதாக இருக்கும். இவை உரிய வழியில் ஒன்றுடன் ஒன்று இணைக்கும். நீர் சேமிப்பு போக்குவரத்து மற்றும் நீரைப் பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பல நன்மைகளைக் கொண்டதாக விளங்கும்.

நன்மைகள்:
மழைக்காலங்களில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை இத்திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவைக் குறைக்கலாம்.
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வெள்ள நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாகக் குறையும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

முடிவுரை:
தேவையான அளவு நீர்வள மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் கடலில் வீணாகக் கலந்து நாட்டில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு உழல்கிறோம். அதனால் தேசிய நதிகளை இணைத்து சிறந்த முறையில் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions.  [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
To produce a displacement _________ is required.
(a) Acceleration
(b) Force
(c) Velocity
(d) Momentum
Answer:
(b) Force

Question 2.
The refractive index of a transparent medium is always greater than_________.
(a) two
(b) three
(c) one
(d) four
Answer:
(c) one

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 3.
Velocity of sound in a gaseous medium is 330 ms-1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is _________.
(a) 330 ms-1
(b) 660 ms-1
(c) 156 ms-1
(d) 990 ms-1
Answer:
(a) 330 ms-1

Question 4.
Neon shows zero electron affinity due to _________.
(a) stable arrangement of neutrons
(b) stable configuration of electrons
(c) reduced size
(d) increased density
Answer:
(b) stable configuration of electrons

Question 5.
A solution is a _________ mixture.
(a) homogeneous
(b) homogeneous and heterogeneous
(c) heterogeneous
(d) Non homogeneous
Answer:
(a) homogeneous

Question 6.
Powdered CaCO3 reacts more rapidly than flaky CaCO3 because of _________.
(a) large surface area
(b) high pressure
(c) high concentration
(d) high temperature
Answer:
(a) large surface area

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 7.
A patient with blood group O was injured in an accident and has blood loss. Which blood group the doctor should effectively use for transfusion in this condition?
(a) A group
(b) B group
(c) O group
(d) AB group
Answer:
(c) O group

Question 8.
_________ is the ATP factory of the cell.
(a) Mitochondria
(b) Nucleus
(c) Ribosomes
(d) Chloroplast
Answer:
(a) Mitochondria

Question 9.
The Anemophilous flowers have _________.
(a) Sessile stigma
(b) Small smooth stigma
(c) Coloured flower
(d) Large feathery stigma
Answer:
(d) Large feathery stigma

Question 10.
A person who met with an accident lost control of body temperature, water balance and hunger. Which of the following part of brain is supposed to be damaged?
(a) Hypothalamus
(b) Pons
(c) Cerebrum
(d) Medulla oblongata
Answer:
(a) Hypothalamus

Question 11.
_________ is the raw material which plays an important role in evolution.
(a) Fossilization
(b) Variation
(c) Preservation
(d) Sedimentation
Answer:
(b) Variation

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 12.
The centromere is found at the centre of the _________ chromosome.
(a) Telocentric
(b) Metacentric
(c) Sub-metacentric
(d) Acrocentric
Answer:
(b) Metacentric

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 14.
What is meant by equilibrant?
Answer:
A system can be brought to equilibrium by applying another force, which is equal to the resultant force in magnitude, but opposite in direction. Such force is called as ‘Equilibrant’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 15.
Why does an empty vessel produce more sound than a filled one?
Answer:
The intensity of sound is directly proportional to the square of amplitude of vibration. I ∝ A2 since, the amplitude of vibration of air molecules (empty vessel) is greater than liquid molecules (filled vessel), therefore empty vessel produces louder sound than the filled vessel.

Question 16.
Differentiate ore and mineral.
Answer:

OreMineral
1. A mineral from which a metal can be economically extracted.1. A mineral may be a single compound or complex mixture of various compounds of metals found in the earth.
2. All ores are minerals.2. All minerals are not ores.
3. Eg. Bauxite is an ore of aluminium.3. Clay is a mineral.

Question 17.
How do detergents cause water pollution?
Answer:
Some detergents having a branched hydrocarbon chain are not fully biodegradable by micro organisms present in water. So, they cause water pollution.

Question 18.
Define reflex arc.
Answer:
The pathway taken by the nerve impulse to accomplish reflex action is called Reflex arc.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 19.
The complete events of cardiac cycle last for 0.8 sec. What is the timing for each event?
Answer:
The events during a single cardiac cycle involves

  • Atrial Systole – Contraction of auricles – (0.1 sec)
  • Ventricular Systole – Contraction of ventricles – (0.3 sec)
  • Ventricular diastole – Relaxation of Ventricles – (0.4 sec)

Question 20.
What will you do to prevent leaf fall and fruit drop in plants?
Answer:
Treating plants with auxin will prevent leaf fall and fruit drop. Auxin prevent the formation of abscission layer in plants.

Question 21.
Draw and label the structure of the ovule.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 1

Question 22.
Calculate the momentum of a toy car of mass 200g moving with a speed of 5 m/s.
Answer:
Mass of the toy car (m) = 200 g = 0.2 kg
Speed (v) = 5 m/s
Momentum (p) = m × v
= 0.2 × 5 = 1 kg m/s

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
Explain the process of controlled and uncontrolled chain reactions.
Answer:
Controlled chain reaction:

  • In the controlled chain reaction the number of neutrons released is maintained to be one. This is achieved by absorbing the extra neutrons with a neutron absorber leaving only one neutron to produce further fission.
  • Thus, the reaction is sustained in a controlled manner. The energy released due to a controlled chain reaction can be utilized for constructive purposes.
  • Controlled chain reaction is used in a nuclear reactor to produce energy in a sustained and controlled manner.

Uncontrolled chain reaction:

  • In the uncontrolled chain reaction the number of neutrons multiplies indefinitely and causes fission in a large amount of the fissile material.
  • This results in the release of a huge amount of energy within a fraction of a second.
  • This kind of chain reaction is used in the atom bomb to produce an explosion.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 24.
What are the factors that affect the speed of sound in gases?
Answer:
Effect of density: The velocity of sound in a gas is inversely proportional to the square root of the density of the gas. Hence, the velocity decreases as the density of the gas increases.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

Effect of temperature:
(i) The velocity of sound in a gas is directly proportional to the square root of its temperature.
(ii) The velocity of sound in a gas increases with the increase in temperature, v ∝ \(\sqrt{\mathrm{T}}\) Velocity at temperature T is given by the following equation:
vT = (v0 + 0.61 T) ms-1

Here, v0 is the velocity of sound in the gas at 0° C. For air, v0 = 331 ms-1. Hence, the velocity of sound changes by 0.61 ms-1, when the temperature changes by one degree Celsius.

Effect of relative humidity: When humidity increases, the speed of sound increases. That is why we can hear sound from long distance clearly during rainy seasons.

Question 25.
(i) Classify the types of force based on their application.
Answer:
Based on the direction in which the forces act, they can be classified into two types as:

  1. Like parallel forces
  2. Unlike parallel forces.

1. Like parallel forces:
Two or more forces of equal or unequal magnitude acting along the same direction, parallel to each other are called like parallel forces.

2. Unlike parallel forces:
If two or more equal forces or unequal forces act along opposite directions parallel to each other, then they are called unlike parallel forces.

(ii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 26.
Write the characteristics of organic compounds.
Answer:

  • Organic compounds have a high molecular weight and a complex structure.
  • They are mostly insoluble in water, but soluble in organic solvents such as ether, carbon tetra chloride, toluene etc.
  • They are highly inflammable in nature.
  • Organic compounds are less reactive compared to inorganic compounds. Hence, the reactions involving organic compounds proceed at slower rates.
  • Mostly organic compounds form covalent bonds in nature.
  • They have lower melting point and boiling point, when compared to inorganic compounds
  • They exhibit the phenomenon of isomerism, in which a single molecular formula represents several organic compounds that differ in their physical and chemical properties.
  • They are volatile in nature.
  • Organic compounds can be prepared in the laboratory.

Question 27.
The electronic configuration of metal A is 2, 8, 18, 1.
The metal A when exposed to air and moisture forms B a green layered compound. A with con. H2SO4 forms C and D along with water. D is a gaseous compound. Find A,B,C and D.
Answer:
(i) The electronic configuration of metal (A) is 2, 8, 18, 1.  ∴A is copper (Z = 29)
(ii) (A) Copper exposed to air and moisture forms green layered compound (B) that is copper carbonate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 2
(iii) Copper (A) reacts with con.H2SO4 to give copper sulphate (C) and Sulphur dioxide (D).
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 3

ACopperCu
BCopper carbonateCuCO3. Cu(OH)2
CCopper sulphateCuSO4
DSulphur dioxideSO2

Question 28.
A pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt), what would be the F1 and F2 generations?
Answer:
In a monohybrid cross, if a pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt). All plants were tall (Tt) in F1 generation.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 4
F1 → Tt Tt Tt Tt (Tall heterozygous)
Ratio : 3 : 1
During the selling of F1 generation 3 different types of plants were produced.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 5
Tall Homozygous – TT (Pure) – 1
Tall Heterozygous – Tt – 2
Dwarf Homozygous – tt – 1
Ratio : 1 : 2 : 1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 29.
(i) What are the external and internal factors affecting photosynthesis
Answer:
(a) External Factors:

  • Light
  • Carbon dioxide
  • Temperature
  • Water
  • Mineral elements

(b) Internal Factors:

  • Pigments
  • Leaf age
  • Accumulation of carbohydrates
  • Hormones

(ii) Why is vegetative propagation practiced for growing some type of plants?
Answer:
Vegetative propagation is the only method of multiplication in plants like banana, seedless grapes and orange that have lost their capacity to produce seeds through sexual reproduction and vegetative propagation helps us to introduce plants in new areas where seed germination fails to produce plants.

Question 30.
(i) Solar energy is a renewable energy. How?
Answer:
Solar energy is renewable, free source of energy, that is sustainable and totally inexhaustible.

(ii) How is the circulatory system designed in leech to compensate the heart structure?
Answer:
The circulation in Leech is Haemocoelic system. There are no true blood vessels. The blood vessels are replaced by channels called Haemocoelic channels or canals filled with blood like fluid. The coelomic fluid contain Haemoglobin. There are four longitudinal channels. One channel lies above (dorsal) to the Alimentary canal, one below (ventral) to the Alimentary canal.

The other two channels lie on either (lateral) side of the Alimentary canal, which serves as a heart and have inner valves. All the four channels are connected together posteriorly in the 26th segment. Thus the circulatory system is designed in Leech to compensate the heart structure.

Question 31.
(a) What are the contributing factors for obesity?
Answer:
Obesity is due to genetic factors, physical inactivity, overeating and endocrine factors.

(b) State the importance of biofertiliser.
Answer:

  • Biofertilisers are easy to produce in abundance and are available at low X cost to the marginal farmer.
  • It increases the soil fertility without causing any damage to the soil. E.g: Rhizobium, Azospirillium, Azotobacter.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 32.
(i) Draw a ray diagram of formation of images by the convex lens.
Answer:
Ray diagram for object placed between F and 2F
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 6

(ii) The hydroxide ion concentration of a solution is 1 × 1011 m. What is the pH of the solution?
Answer:
[OH] = 1 × 10-11m
pOH = -log10[OH] = – log10[10-11]
= -[-11 × log10 10]
= -(-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH
pH = 14 – 11 = 3

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) Define One roentgen.
Answer:
One roentgen is defined as the quantity of radioactive substance which produces a charge of 2.58 x 10-4 coulomb in 1 kg of air under standard conditions of pressure, temperature and humidity.

(ii) What is a nuclear reactor? Explain its essential parts with their functions.
Answer:
A Nuclear reactor is a device in which the nuclear fission reaction takes place in a self-sustained and controlled manner to produce electricity.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 7

Components of a Nuclear reactor:
The essential components of a nuclear reactor are

  1. fuel
  2. moderator
  3. control rod
  4. coolant and
  5. protection wall.

(1) Fuel: A fissile material is used as the fuel. The commonly used fuel material is uranium.
(2) Moderator: A moderator is used to slow down the high energy neutrons to provide slow neutrons. Graphite and heavy water are the commonly used moderators.
(3) Control rod: Control rods are used to control the number of neutrons in order to have sustained chain reaction. Mostly boron or cadmium rods are used as control rods. They absorb the neutrons.
(4) Coolant: A coolant is used to remove the heat produced in the reactor core, to produce steam. This steam is used to run a turbine in order to produce electricity. Water, air and helium are some of the coolants.
(5) Protection wall: A thick concrete lead wall is built around the nuclear reactor in order to prevent the harmful radiations from escaping into the environment.

[OR]

(b) (i) An object is placed at a distance 20 cm from a convex lens of focal length 10 cm.
Find the image distance and nature of the image.
Answer:
u = -20 cm
f = 10 cm
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 8
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 9
Nature of the image real enlarged and inverted image.

(ii) A ball of mass 1 kg moving with a speed of 10 ms-1 rebounds after a perfect elastic collision with the floor. Calculate the change in linear momentum of the ball.
Answer:
Given mass = 1 kg, speed =10 ms-1
∴ Initial momentum = mu = 1 × 10 = 10 kg ms-1
Final momentum = mv = -10 kg ms-1
Change in momentum = final momentum – initial momentum
= mv – mu
= -10 -10
Change in momentum = -20 kg ms-1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of moles in 12.046 × 1023 atom of copper.
Answer:
12.046 × 1023 atoms of copper
6.023 × 1023 atoms of copper = 1 mole
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 10

(ii) How many grams are there in two moles of H2O
Answer:
No. of moles = \(\frac{\text { Mass }}{\text { Molar mass }}\)
Mass = No. of moles x molar mass
Molar mass of H2O = (2 × 1) + 16 = 18
Mass = 2 × 18 = 36 g

(iii) In magnesium sulphite, the ration by mass of Mg and S is 3 :4. What is the ratio of the number of Mg and S atoms?
Answer:
Formula of magnesium sulphide = MgS
Ratio by mass Mg and S = 3 : 4
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 11

(b) (i) Explain the mechanism of cleansing action of soap.
Answer:
A soap molecule contains two chemically distinct parts that interact differently with water. It has one polar end, which is a short head with a carboxylate group (- COONa) and one non polar end having the long tail made of the hydrocarbon chain.

The polar end is hydrophilic (Water loving) in nature and this end is attracted towards water. The non-polar end is hydrophobic (Water hating) in nature and it is attracted towards dirt or oil on the cloth, but not attracted towards water. Thus, the hydrophobic part of the soap molecule traps the dirt and the hydrophilic part makes the entire molecule soluble in water.

When a soap or detergent is dissolved in water, the molecules join together as clusters called ‘micelles’. Their long hydrocarbon chains attach themselves to the oil and dirt. The dirt is thus surrounded by the non-polar end of the soap molecules. The charged carboxylate end of the soap molecules makes the micelles soluble in water. Thus, the dirt is washed away with the soap.

(ii) Differentiate soaps and detergents.
Answer:
Soaps:

  • It is a sodium salt of long chain fatty acids.
  • Its effectiveness is reduced when used in hard water.
  • Soaps are biodegradable.

Detergents:

  • It is a sodium salt of sulphonic acids.
  • It is effective even in hard water.
  • Most of the detergents are non-biodegradable.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 35.
(a) (i) Explain the functions of the thyroid hormones?
(ii) How are stem cells useful in regenerative process?
(iii) What is palaeontology?
Answer:
(i) Functions of the thyroid hormone:

  • Increases oxygen consumption in tissues.
  • Production of energy by maintaining the Basal Metabolic Rate (BMR) of the body.
  • Helps to maintain normal body temperature.
  • Controls growth of the body, bone formation and development of gonads.
  • Essential for normal physical, mental and personality development. Hence also known as personality hormone.

(ii) Stem cells useful in regenerative process:
Sometimes cells, tissues and organs in the body may be permanently damaged or lost due to genetic condition or disease or injury.

In such situations, stem cells are used for the treatment of diseases, which is called stem cell therapy.
In treating neurodegenerative disorders like Parkinson’s disease and Alzheimer’s disease neuronal stem cells can be used to replace the damaged or lost neurons.

(iii) The study of fossils is known as Palaeontology.

[OR]

(b) Explain with an example the inheritance of dihybrid cross. How is it different from monohybrid cross?
Answer:
The dihybrid cross involves the inheritance of two pairs of contrast characteristics, round – yellow seeds and wrinkled – green seeds.

When pea plants having round- yellow seeds cross bred with pea plant having wrinkled – green seeds, in the first generation (F1), only round yellow seeds were produced.

No wrinkled – green seeds were obtained. Round yellow colour seeds were dominant and wrinkled-green seeds were recessive.

When round-yellow seeds were cross bred by self-pollination, four types of seeds having different combinations of shape and colour were obtained in F2 generation. They were
round yellow, round green
wrinkled yellow, wrinkled green
The phenotypic ratio in F2 generation is 9 : 3 : 3 : 1
i.e. 9 – Yellow, round
3 – Yellow, wrinkled
3 – Green, round
1 – Green, wrinkled
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 12
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 13

Monohybrid cross:

  • Monohybrid cross is a genetic cross that involves a singles pair of genes which is responsible for one trait
  • Monohybrid ratio in F2 generation is 3 : 1

Dihybrid cross:

  • Dihybrid cross is a genetic cross that involves two pairs of genes which is responsible for two trait
  • Dihybrid ratio in F2 generation is 9 : 3 : 3 : 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது…………..
(அ) திருக்குறள்
(ஆ) புறநானூறு
(இ) கம்பராமாயணம்
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

Question 2.
கரும்பின் அடி……………… என அழைக்கப்படுகிறது.
அ) தூறு
(ஆ) கழி
(இ) கழை
(ஈ) தட்டு
Answer:
(ஆ) கழி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ……………
(அ ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
Answer:
(ஈ) பாடல் ; கேட்டவர்

Question 4.
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்னும் அடிகள் இடம் பெறும் நூல்…………..
(அ) விவேகசிந்தாமணி
(ஆ) புறநானூறு –
(இ) காசிகாண்டம்
(ஈ) மலைபடுகடாம்
Answer:
(அ) விவேகசிந்தாமணி

Question 5.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………….. ,………………வேண்டினார்.
(அ) கருணையன் எலிசபெத்துக்காக
(ஆ) எலிசபெத் தமக்காக
(இ) கருணையன் பூக்களுக்காக
(ஈ) எலிசபெத் பூமிக்காக
Answer:
(அ) கருணையன் எலிசபெத்துக்காக

Question 6.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 7.
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது…………..  எனப்படும்.
(அ) வேற்றுமைத் தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Question 8.
இடை க்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………..
(அ) அமைச்சர். மன்னன்
(ஆ) அமைச்சர், இறைவன்
(இ) இறைவன். மன்னன்
(ஈ) மன்னன், இறைவன்
Answer:
(ஈ) மன்னன், இறைவன்

Question 9.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ………………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) விளித்தொடர்
(இ) உரிச்சொல் தொடர்
(ஈ) அடுக்குத்தொடர்
Answer:
(இ) உரிச்சொல் தொடர்

Question 10.
தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்வது…………
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்
(இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்

Question 11.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்,
(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

Question 12.
விசும்பில் என்பதன் பொருள் யாது?
(அ) வானத்தில்
(ஆ) புவியில்
(இ) காற்றில்
(ஈ) நீரில்
Answer:
(அ) வானத்தில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 13.
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?
(அ) காற்று தோன்றா உலகம்
(ஆ) பரிபாடல்
(இ) ஆற்றுப்படை
(ஈ) காற்று தோன்றிய உலகம்
Answer:
(ஈ) காற்று தோன்றிய உலகம்

Question 14.
இப்பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) ஊழி – ஊழ்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(அ) ஊழி – ஊழ்

Question 15.
இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) அறிவாரா, ஊழியும்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(ஆ) கரு, உரு

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8)

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) ‘எனது போராட்டம்’ என்னும் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்று நூலில்
இருந்து தொகுக்கப்பட்டது.
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் (1) கல்வி, (2) கேள்வி ஆகும்.
Answer:
விடை:
(அ) ம.பொ.சி. பற்றியக் கட்டுரை எந்நூலினின்று தொகுக்கப்பட்டது?
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் யாவை?

Question 17.
வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
ஏழைத் தொழிலாளியான ஒரு சித்தாளின் வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

Question 18.
பைங்கூழ் நாற்று குறிப்பு எழுதுக.
Answer:
பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை ஆகும். தகைவததககா மாமா மாமான கார்க்கம் மாதிரி வினாத்தாள்-10 – 167

Question 19.
மு.கு ஜகந்நாத ராஜா அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி கூறுவது என்ன?
Answer:
“ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி
பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் மு.கு. ஜகந்நாத ராஜா.

Question 20.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு காண்க.
Answer:

  • ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது.
  • கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.
  • எதிர்காலத்தில் தொழிற்புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவே நம்மை
    வளப்படுத்த உதவும்.

Question 21.
‘செயல்’ என முடியும் குறள்.
Answer:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10)

Question 22.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைக்கவும்.
அள்ளி இறைத்தல்
Answer:
விடை: நம்மிடம் பணம் இருக்கும் போது அள்ளி இறைத்தால் நம்மிடம் பணம் இல்லாத போது
கடினப்பட நேரிடும்.

Question 23.
பொருத்தமானவற்றை சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
(தோற்பவை, தோற்பாவை, விருது, விருந்து)
Answer:
விடை:
1. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
2. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
சிறு – சீரு
Answer:
விடை:
சிறுகச் சிறுகச் சேமித்தால் சீரும் சிறப்புமாக வாழ முடியும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
Myth – தொன்மம்
Terminology – கலைச்சொல்

Question 26.
பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
ஷேத்திரங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக.
Answer:
புனிதத்தலங்கள் தோறும் சென்று தெய்வச்சிலைகளை வழிபடுக.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
யாரப்பா நீ எங்கே வந்தே என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்
Answer:
விடை: யாரப்பா நீ? எங்கே வந்தே? என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்.

Question 28.
பொழிந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பொழிந்த = பொழி + த்(ந்) + த் + அ
பொழி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பகுதி – III  (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன. நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • ல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால்தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Question 30.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
சுற்றுச்சூழல் :

‘சுத்தம் சுகம் தரும்’, ‘சுத்தம் சோறு போடும்’, ‘சுத்தம் கடவுள் தன்மைக்கு ஒப்பானது’ என்னும் பழமொழிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்கிறார் திருவள்ளுவர். உடலின் தூய்மை நீரால் அமைவதுபோல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் அமைகிறது என்பது இக்குறளின் பொருள். அதுபோல வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எப்போதும் தூய்மை இல்லாமை, காற்றோட்டம் இன்மை, போதிய வெளிச்சம் இன்மை, கெட்டுப்போன பொருள்களை உண்ணல், நோயாளியுடன் இருத்தல், அழுக்கு ஆடைகளை உடுத்துதல், இயற்கைச் சூழல் இன்மை ஆகிய காரணங்களால் நமக்கு நோய்கள் வருகின்றன.

அரசியல் தலைவர்களோ, அறிஞர்களோ கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டாயமாக ஒரு மரக்கன்றை நட்ட பின்னரே விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் மரங்களை வளர்க்க வேண்டும்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குப்பைக் கூளங்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.

(அ) கரகாட்டத்தின் போது எவற்றை தலையில் வைப்பர்?
Answer:
பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவர்.

(ஆ) கரகாட்டத்தின் மறுபெயர் என்ன?
Answer:
கும்பாட்டம்

(இ) கரகத்தின் நடுவில் எதனை வைப்பர்?
Answer:
கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 x 3 = 6)

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

Question 33.
முகம்மதுரஃபி ஆசிரியர் குறிப்பு வரைக.
Answer:

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில்
    பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து
    இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.

(அ) “வெய்யோன் ஒளி” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணப் பாடலை எழுதுக.
Answer:
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான். (- கம்பர்)

(அல்லது)

(ஆ) “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று (- கா.ப. செய்குதம்பிப் பாவலர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
வேற்றுமைத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
(எ.கா.)
கதையைப் படித்தான் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
(எ.கா.)
வளையலுக்குப் பொன் – இத்தொடரில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

Question 36.
‘குற்றம் இலனாய்க் குடி செய்த வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 1

Question 37.
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’

பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம் :
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [ 5 x 5 = 25 ]

Question 38.
(அ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
Answer:

  • இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன்.
  • அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை).
  • புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை). • மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை.
  • மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை ). காடுகள் மட்டுமே கொடி உடையனவாக – அதாவது கொடி உடையனவாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை ).
  • வண்டுகள் மட்டுமே கள் – அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை).
  • மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை ).
  • நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை).
  • இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை).
  • செவிலித்தாயாரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து இருக்கின்றது. (யாரும் பொருளை மறைப்பதில்லை ).
  • இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.
    அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்கு தாயாய் இருக்கின்றான்.
  • மகனில்லாததோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான்.
  • விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

(அல்லது)

(ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். . நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை
    ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Question 39.
(அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

எண், 20/3 மாடவீதி,
மதுரை,
5.5.2019

அன்புள்ள நவீன்குமார்,

நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீயும் உன் குடும்பத்தாரும் எப்படி இருக்கிறீர்கள்? சென்ற மாதம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு “மரம் இயற்கையின் வரம்” என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை அனைவரிடமும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆகவே உன் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள * ஆர்வம் வருகிறது. பல போட்டிகளில் நீ பெற்ற பரிசுப்பொருள்கள் உன் வீட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன்.

உன்னை நண்பனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீ இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். நீ அடுத்தமுறை போட்டியில் கலந்து கொள்ளும்போது எனக்குத் தெரியப்படுத்து. நான் நீ எவ்வாறு போட்டிக்குத் தயாராகிறாய் என்பதை அறிந்து கொள்கிறேன். உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ப. அன்பரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
க. நவீன்குமார்,
5. காளையார் கோவில்
முத்தமிழ் நகர்,
ஈரோடு – 638 001.

(அல்லது)

(ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை, விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ 50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால் ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள, .
கபிலன்.

குறிப்பு

1. உணவு விடுதியின் பில்
2. அவர்கள் பேசிய ஆடியோ
3. புகைப்படம்

உறைமேல் முகவரி

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்;
மதுரை – 625 001.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 2
மழை என்று பெய்யும்
என் வாழ்வு என்று விடியும் என
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
எனக்கு மட்டும் விடிவேயில்லை !
மாதம் மும்மாரி பெய்த நாளெங்கே?
வானம் பார்த்த பூமி மட்டும் இங்கே!
உழவனின் இதயமும் பாளமாய்!
பாளம், பாளமாய் வெடித்த நிலம் கண்டு,
விடியல் எப்போது? காத்திருக்கிறேன்!

Question 41.
விண்ண ப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 4

Question 42.
(அ) பள்ளியிலும் வீட்டிலும் நீ செய்ய விரும்புவனவற்றை எழுதுக. Answer:
பள்ளியில் நான் :

  1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்.
  2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப்
  3. பாராட்டுவேன். பாடத்தைக் கவனமாகக் கவனிப்பேன்.
  4. யாரிடமும் சண்டை போடமாட்டேன்.

வீட்டில் நான் :

  1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.
  2. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  3. தன்வேலைகளைத் தானே செய்வேன்.
  4. என் தாய்க்கு உதவியாக இருப்பேன்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India. Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We
should feel proud about our culture. Thank you one and all.
Answer:
விடை :
இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். என் பெயர் இளங்கோவன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூற வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழன் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் மேம்பட்டு இருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழன் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் வகுத்துள்ளான். தமிழ்க் கலாச்சாரம் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகளாவிய இந்தியத் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களில் வேரூன்றி நிற்கிறது. நம் கலாச்சாரம் பழமை வாய்ந்ததாக இருப்பினும் அது தொடர்ச்சியாகப் புதுபித்த வண்ணமே இருக்கின்றன. நாம் நம் கலாச்சாரத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – V

(மதிப்பெண்கள்: 24) அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ்நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி-குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர் .
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம்.
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம்.
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Question 44.
(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
Answer:
கதைக்கரு:
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பகிர்ந்து கொடுக்கிற நேயம்.

கதைமாந்தர்கள் :

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள் . அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி :
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார். கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று, கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.

(அல்லது)

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
    அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது. முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச்
    சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது.. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை
    தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிற துறைகளில் கணினி – கல்வி நிலையங்களில் கணினி — முடிவுரை.
Answer:
இந்தியாவில் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்றமடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன் முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை இயக்கத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிறதுறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வைக்கவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களில் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம், பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலைதூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்காக நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணை கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி, பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருக்கிறார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுக்கின்றது.

கலை பண்பாட்டு அரங்குகள்:
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

குழந்தைகளுக்கான அரங்குகள்:
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய் கனி வகைகளும் இழுவைப் பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள்:
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கு உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART -1

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
Let A = {1, 2, 3, 4} and B = {4, 8, 9, 10}. A function f : A → B given by f = {(1,4),(2, 8),(3,9),(4,10)} is a ………………… .
(1) Many-one function
(2) Identity function
(3) One-to-one function
(4) Into function
Answer:
(3) One-to-one function

Question 2.
If g = {(1,1),(2, 3),(3,5),(4,7)} is a function given by g(x) = αx + β then the values of α and β are ………………… .
(1) (-1,2)
(2) (2,-1)
(3) (-1,-2)
(4) (1,2)
Answer:
(2) (2,-1)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 3.
The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is ………………… .
(1) 2025
(2) 5220
(3) 5025
(4) 2520
Answer:
(4) 2520

Question 4.
If the sequence t1, t2, t3, are in A.P. then the sequence t6 ,t12,t18,… is ………………… .
(1) a Geometric progression
(2) an Arithmetic progression
(3) neither an Arithmetic progression nor a Geometric progression
(4) a constant sequence
Answer:
(2) an Arithmetic progression

Question 5.
\(\frac{x}{x^{2}-25}-\frac{8}{x^{2}+6 x+5}\) gives ………………… .
(1) \(\frac{x^{2}-7 x+40}{(x-5)(x+5)}\)
(2) \(\frac{x^{2}+7 x+40}{(x-5)(x+5)(x+1)}\)
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)
(4) \(\frac{x^{2}+10}{\left(x^{2}-25\right)(x+1)}\)
Answer:
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)

Question 6.
The values of a and b if 4x4 – 24x3 + 76x2 + ax + b is a perfect square are ………………… .
(1) 100,120
(2) 10,12
(3) -120,100
(4) 12,10
Answer:
(3) -120,100

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 7.
If ∆ABC is an isosceles triangle with ∠C = 90° and AC = 5 cm, then AB is ………………… .
(1) 2.5 cm
(2) 5 cm
(3) 10 cm
(4) 5√2 cm
Answer:
(4) 5√2 cm

Question 8.
The area of triangle formed by the points (- 5, 0), (0, – 5) and (5, 0) is ………………… .
(1) 0 sq.units
(2) 25 sq.units
(3) 5 sq.units
(4) none of these
Answer:
(2) 25 sq.units

Question 9.
The value of sin2θ + \(\frac{1}{1+\tan ^{2} \theta}\) is equal to ………………… .
(1) tan2θ
(2) 1
(3) cot2θ
(4) θ
Answer:
(2) 1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 10.
If the radius of the base of a right circular cylinder is halved keeping the same height, then the ratio of the volume of the cylinder thus obtained to the volume of original cylinder is ………………… .
(1) 1 : 2
(2) 1 : 4
(3) 1 : 6
(4) 1 : 8
Answer:
(2) 1 : 4

Question 11.
If the mean and coefficient of variation of a data are 4 and 87.5% then the standard deviation is ………………… .
(1) 3.5
(2) 3
(3) 4.5
(4) 2.5
Answer:
(1) 3.5

Question 12.
If α and β are the roots of the equation x2 + 2x + 8 = 0 then the value of \(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\) is ………………… .
(1) \(\frac { 1 }{ 2 }\)
(2) 6
(3) \(\frac { 3 }{ 2 }\)
(4) \(\frac { -3 }{ 2 }\)
Answer:
(4) \(\frac{-3}{2}\)

Question 13.
If the points (k, 2k) (3k, 3k) and (3, 1) are collinear, then k is ………….. .
(1) \(\frac { 1 }{ 3 }\)
(2) \(\frac { -1 }{ 3 }\)
(3) \(\frac { 2 }{ 3 }\)
(4) \(\frac { -2 }{ 3 }\)
Answer:
(2) \(\frac{-1}{3}\)

Question 14.
If the variance of 14, 18, 22, 26, 30 is 32 then the variance is 28, 36, 44, 52, 60 is ………………… .
(a) 64
(b) 128
(c) 32√2
(d) 32
Answer:
(b) 128

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Represent the given relation {(x, y) |y = x + 3 are natural numbers < 10} by
(i) an arrow diagram (ii) a set in roster form, wherever possible
Answer:
(i)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 2

(ii) R = {(1, 4) (2, 5) (3, 6) (4, 7) (5, 8) (6, 9)}

Question 16.
If f: R → R and g : R → R are defined by f(x) = x5 and g(x) = x4 then check if f, g are one – one and fog is one – one?
Answer:
f(x) = x5 – It is one – one function
g(x) = x4 – It is one – one function
fag = f[g{x)] = f(x4) = (x4)5
fog = x20
It is also one-one function.

Question 17.
Find the first five terms of the following sequence.
a1 = 1, a2, an = \(\frac{a_{n-1}}{a_{n-2}+3}\) ; n ≥ 3 ; n ∈ N
Answer:
The first two terms of this sequence are given by a1 = 1, a2 = 1. The third term a3 depends on the first and second terms.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 3
Similarly the fourth term a4 depends upon a2 and a3.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 4
In the same way, the fifth term a5 can be calculated as
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 5
Therefore, the first fie terms of the sequence are 1,1, \(\frac{1}{4}, \frac{1}{16}, \frac{1}{52}\)

Question 18.
If 13 + 23 + 33 +. . . .+ k3 = 44100 then find 1+ 2 + 3 + …. + k
Answer:
13 + 23 + 33 + ………. + K3 = 44100
\(\left[\frac{k(k+1)}{2}\right]^{2}\) = 44100
\(\frac{k(k+1)}{2}\) = \(\sqrt{44100}\) = 210
1 + 2 + 3 + …….. + k = \(\frac{k(k+1)}{2}\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 19.
Find the LCM of the polynomials a2 + 4a – 12, a2 – 5a + 6 whose GCD is a – 2
Answer:
p(x) = a2 + 4a – 12
= a2 + 6a – 2a – 12
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 6
= a (a + 6) – 2(a + 6)
= (a + 6) (a – 2)
g(x) = a2 – 5a + 6
= a2 – 3a – 2a + 6
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 7
= a(a – 3) – 2 (a – 3)
= (a – 3) (a – 2)
L.C.M. = \(\frac{p(x) \times g(x)}{\text { G.C.D. }}\)
= \(\frac{(a+6)(a-2) \times(a-3)(a-2)}{(a-2)}\)
= (a + 6) (a – 3) (a – 2)

Question 20.
Find the value of ‘k’ whose roots of the equation kx2 + (6k + 2)x + 16 = 0 are real and equal.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 8
Here a = k, b = 6k+ 2 ; c = 16
Since the equation has real and equal roots .
A = 0
b2 – 4ac = 0
(6k + 2)2 – 4(k)(16) = 0
36k2 + 4 + 24k – 4(k) (16) = 0
36k2 – 40k + 4 = 0
(÷ by 4) ⇒ 9k2 – 10k + 1 = 0
9k2 – 9k – k + 1 = 0
9k(k – 1) – 1(k – 1) = 0
(k – 1) (9k – 1) = 0
k – 1 = 0 or 9k – 1 = 0 ⇒ k = 1 or k = \(\frac { 1 }{ 9 }\)
The value of k = 1 or \(\frac { 1 }{ 9 }\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 21.
Find the value of a, b, c, d, x, y from the following matrix equation.
\(\left( \begin{matrix} d & 8 \\ 3b & a \end{matrix} \right) +\left( \begin{matrix} 3 & a \\ -2 & -4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a \\ b & 4c \end{matrix} \right) +\left( \begin{matrix} 0 & 1 \\ -5 & 0 \end{matrix} \right) \)
Answer:
First, we add the two matrices on both left, right hand sides to get
\(\left( \begin{matrix} d+3 & 8+a \\ 3b-2 & a-4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a+1 \\ b-5 & 4c \end{matrix} \right) \)
Equating the corresponding elements of the two matrices, we have
d + 3 = 2 gives d = -1
8 + a = 2a + 1 gives a = 7
3b – 2 = b – 5 gives b = \(\frac { -3 }{ 2 }\)
Substituting a = 7 in a – 4 = 4c gives c = \(\frac { 3 }{ 4 }\)
Therefore, a = 7, b = \(\frac { -3 }{ 2 }\) ,c = \(\frac { 3 }{ 4 }\) , d = -1.

Question 22.
To get from point A to point B you must avoid walking through a pond. You must walk 34 m south and 41m east. To the nearest meter, how many meters would be saved if it were possible to make a way through the pond?
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 9
In the right ∆ABC,
By Pythagoras theorem
AC2 = AB2 + BC2 = 342 + 412
= 1156 + 1681 = 2837
AC = √2837
= 53.26 m
Through A one must walk (34m + 41m) 75 m to reach C.
The difference in Distance = 75 – 53.26
= 21.74 m

Question 23.
If the points A(-3, 9), B(a, b) and C(4, -5) are collinear and if a + b = 1, then find a and b.
Answer:
Since the three points are collinear
Area of a ∆ = 0
\(\frac { 1 }{ 2 }\)[(x1y2 + x2y3 + x3y1) – (x2y1 + x3y2 + x1y3)]
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 10
\(\frac { 1 }{ 2 }\)[(-36 – 5a 4- 36) – (9a + 46 + 15)] = 0
-36 – 5a + 36 – 9a -4b – 15 = 0
-7b – 14a + 21=0
(÷ by 7) – b – 2a + 3 = 0
2a + b – 3 = 0
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 11
Subtract (1) and (2) ⇒ a = 2
Substitute the value of a = 2 in (2) ⇒ 2 + 6 = 1
b = 1 – 2 = -1
The value of a = 2 and b = -1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 24.
Prove that \(\frac{\sin A}{1+\cos A}+\frac{\sin A}{1-\cos A}\) = 2 cosec A.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 12

Question 25.
The probability that atleast one of A and B occur is 0.6. If A and B occur simultaneously with probability 0.2, then find P(Ā) + P(B̄).
Answer:
Here p(A ∪ B) = 0.6, p(A ∩ B) = 0.2
p(A ∪ B) = p(A) + p(B) – p(A ∩ B)
0.6 = p(A) + P(B) – 0.2
∴ p(A) + p(B) = 0.8
P(Ā) + P(B̄) = 1 – p(A) + 1 – p(B)
= 2 – [p(A) + p(B)]
= 2 – 0.8 = 1.2

Question 26.
If n = 10, X̄ = 12 and Σx2 = 1530, then calculate the coefficient of variation.
Answer:
Given that n = 10, X̄ = \(\frac{\Sigma x}{n}\) = 12, Σx2 = 1530
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 13
(σ) = 3
coefficient of variation = \(\frac{\sigma}{\bar{x}} \times 100\) ⇒ \(\frac{3}{12} \times 100=25\)
∴ coefficient of variation = 25

Question 27.
Find the volume of the largest right circular cone that can be cut out of a cube whose edge is 14 cm.
Answer:
Given, Edge of the cube = 14 cm
The largest circular cone is cut out from the cube.
Radius of the cone (r) = \(\frac { 14 }{ 2 }\) = 7 cm
Height of the cone (h) = 14 cm
Volume of a cone = \(\frac { 1 }{ 3 }\) πr2h cu. units
= \(\frac{1}{3} \times \frac{22}{7}\) × 7 × 7 × 14 cm3
= \(\frac{22 \times 7 \times 14}{3}\) cm3
∴ Volume of a cone = 718.67 cm3

Question 28.
Find the sum of the first 40 terms of the series 12 – 22 + 32 – 42 + …..
Answer:
The given series is 12 – 22 + 32 – 42 + …. 40 terms
Grouping the terms we get,
(12 – 22) + (32 – 42) + (52 – 62) + ………… 20 terms
(1 – 4) + (9 – 16) + (25 – 36) + …………. 20 terms
(-3) + (-7) + (-11) + ………… 20 term
This is an A.P
Here a = – 3, d = – 7 – (- 3) = – 7 + 3 = -4, n = 20
Sn = \(\frac { n }{ 2 }\)[2a + (n – 1)d]
S20 = \(\frac { 20 }{ 2 }\)[2(-3) + 19(-4)]
= 10 (- 6 – 76) = 10 (- 82) = – 820
∴ Sum of 40 terms of the series is = 820.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
Find x if gff(x) = fgg(x), given f(x) = 3x + 1 and g(x) = x + 3.

Question 30.
In a G.P the product of three consecutive terms is 27 and the sum of the product of two terms taken at a time is \(\frac{57}{2}\).Find the three terms.

Question 31.
The 13th term of an A.P. is 3 and the sum of first 13 terms is 234. Find the common difference and the sum of first 21 terms.

Question 32.
If Sn = (x + y) + (x2 + xy + y2) + (x3 + x2y + xy2 + y3) + ………… n terms then prove that (x – y)Sn = \(\left[\frac{x^{2}\left(x^{n}-1\right)}{x-1}-\frac{y^{2}\left(y^{n}-1\right)}{y-1}\right]\)

Question 33.
Two women together took 100 eggs to a market, one had more than the other. Both sold them for the same sum of money. The first then said to the second: “If I had your eggs, I would have earned ₹15”, to which the second replied: “If I had your eggs, I would have earned ₹6 \(\frac { 2 }{ 3 }\) ”. How many eggs did each had in the beginning?

Question 34.
If the roots of (a – b)x2 + (b – c)x + (c – a) = 0 are real and equal, then prove that b, a, c are in arithmetic progression.

Question 35.
A circle is inscribed in AABC having sides 8 cm, 10 cm and 12 cm as shown in figure, Find AD, BE and CF.

Question 36.
The line joining the points A(0,5) and B(4,1) is a tangent to a circle whose centre C is at the point (4, 4) find
(i) the equation of the line AB.
(ii) the equation of the line through C which is perpendicular to the line AB.
(iii) the coordinates of the point of contact of tangent line AB with the circle.

Question 37.
If sin θ (1 + sin2θ) = cos2θ , then prove that cos6θ – 4 cos4θ + 8 cos2θ = 4

Question 38.
A toy is in the shape of a cylinder surmounted by a hemisphere. The height of the toy is 25 cm. Find the total surface area of the toy if its common diameter is 12 cm.

Question 39.
Find the coefficient of variation of 24, 26, 33, 37, 29, 31.

Question 40.
The probability that A, B and C can solve a problem are \(\frac { 4 }{ 5 }\), \(\frac { 2 }{ 3 }\) and \(\frac { 3 }{ 7 }\) respectively. The probability of the problem being solved by A and B is \(\frac { 8 }{ 15}\),B and C is \(\frac { 2 }{ 7 }\) , A and C is \(\frac { 12 }{ 13 }\) . The probability of the problem being solved by all the three is \(\frac { 8 }{ 35 }\). Find the probability that the problem can be solved by atleast one of them.

Question 41.
Verify that (AB)T = BTAT if A = \(\left( \begin{matrix} 2 & 3 & -1 \\ 4 & 1 & 5 \end{matrix} \right) \) and B = \(\left( \begin{matrix} 1 & -2 \\ 3 & -3 \\ 2 & 6 \end{matrix} \right) \)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 42.
A function f(-3, 7) → R is defined as follows
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 1
Find (i) 5f(1) -3f(-2) (ii) 3f(-3) + 4 f(4) (iii) \(\frac{7 f(3)-f(-1)}{2 f(6)-f(1)}\)

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Construct a ∆PQR such that QR = 6.5 cm, ∠P = 60° and the altitude from P to QR is of length 4.5 cm.

[OR]

(b) Draw a tangent to the circle from the point P having radius 3.6 cm, and centre at O. Point P is at a distance 7.2 cm from the centre.

Question 44.
(a) Draw the graph of y = x2 + x and hence solve x2 + 1 = 0

[OR]

(b) Solve graphically (x + 2) (x + 4) = 0