Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Students can Download 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.2 இராவண காவியம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 1.
ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.
Answer:
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.

கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்

தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 1
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 2
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப் பெருமைப்படுத்தும் மாவட்டம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 4
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில் எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 5
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 6
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 7
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 8
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

Question 2.
இப்பாடப் பகுதியில் உங்களை ஈர்த்த கவிதைக் காட்சியினை ஓவியமாகத் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 9
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
வைக்கோற் போர், நெற்கதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றின் விளக்கங்களைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது, வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.

ஐயா : நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி : ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே
ஆசிரியர் : ஆமாடா ………” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சுதா :ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் : அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும்,
வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.

சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் : நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல். அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி

சுதா : நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லை

குறுவினா

Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை

Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.

Question 2.
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answer:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

நெடுவினா

Question 1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

“………….. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.

“தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்”

பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.

“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.

“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”

முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
அ) கம்பராமாயணம்
ஆ) இராவணகாவியம்
இ) தண்ணீர்த்தேசம்
ஈ) பொன்னியின் செல்வன்
Answer:
ஆ) இராவணகாவியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 2.
இராவண காவியத்தின் பாடல்கள்
அ) 2100
ஆ) 2500
இ) 3100
ஈ) 3500
Answer:
ஈ) 3100

Question 3.
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Answer:
அ) புலவர் குழந்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 4.
யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்
அ) பெருந்தேவனார்
ஆ) வாணிதாசன்
இ) வரந்தருவார்
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஈ) புலவர் குழந்தை

Question 5.
“மன்னிய” – என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
பெயரெச்சம்

Question 6.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 10
Answer:
அ. ii) ஆ. i) இ. iv) ஈ. ili)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 7.
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
அ) காகம்
ஆ) ஆறுமணிக்குருவி
இ) நாகணவாய்ப்பறவை
ஈ) நாரை
Answer:
இ) நாகணவாய்ப்பறவை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 8.
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
அ) பாலைக்காய்
ஆ) பாகற்காய்
இ) ஏலக்காய்
ஈ) வாழைக்காய்
Answer:
அ) பாலைக்காய்

Question 9.
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
Answer:
இ) மருதம்

Question 10.
கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆனது ……………..
அ) முக்கூடை
ஆ) முக்குழல்
இ) முத்தளிர்
ஈ) முக்கொம்பு
Answer:
ஆ) முக்குழல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 11.
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்டவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) இராவணன்
ஈ) குகன்
Answer:
இ) இராவணன்

Question 12.
“மரை முகம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) உருவகம்
ஈ) உரிச்சொற்றொடர்
Answer:
அ) உவமைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 13.
புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்துவாரே – இதில் அமைந்துள்ள நயம்
அ) அடிமோனை
ஆ) சீர்மோனை
இ) அடிஎதுகை
ஈ) சீர்எதுகை
Answer:
அ) அடிமோனை

Question 14.
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
அ) கடற்காகம்
ஆ) கடற்காளான்
இ) கடலாமை
ஈ) கடல் அலை
Answer:
ஈ) கடல் அலை

Question 15.
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
அ) சேவற்கொண்டை
ஆ) யானைத்தந்தம்
இ) மான்கொம்பு
ஈ) மயிற்தோகை
Answer:
ஆ) யானைத்தந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 16.
‘போர்’ அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?
அ) உழைமான்
ஆ) கவரிமான்
இ) கலைமான்
ஈ) செந்நாய்
Answer:
அ) உழைமான்

Question 17.
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
அ) உழைமான்
ஆ) செந்நாய்
இ) மந்தி
ஈ) வானரம்
Answer:
ஆ) செந்நாய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குறுவினா

Question 1.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Answer:

  • இராவண காவியம் காலத்தின் விளைவு
  • ஆராய்ச்சியின் அறிகுறி
  •  புரட்சிப் பொறி

உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்தாகும்.

Question 2.
புலவர் குழந்தை – குறிப்பு வரைக.
Answer:

  • இராவணக் காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை ஆவார்.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
புலவர் குழந்தையின் படைப்புகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
Answer:

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்

Question 4.
குரக்கினம் மருண்டு நோக்குமால் – ஏன்?
Answer:

  • பறையின் ஒசையைப் போல் ஆரவாரமாய் விழும் அருவியோசை .
    பாடுகின்ற பைங்கிளிகள்
  • பொன் போன்ற அழகிய சிறகினை விரித்து ஆடும் மயில் இவற்றைக் கண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு மிரட்சியுடன் நோக்கியது என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

Question 5.
குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் யாவை? எந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது?
Answer:

  • முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவை குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • முல்லை நிலத்தில்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 6.
கோர்வை / கோவை பற்றிய சொற்பொருள் விளக்கம் தருக.
Answer:
கோ என்பது வேர்ச்சொல்.

  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா : ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

Question 7.
மைவனம், முருகியம் – என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் யாவை?
Answer:
மலைநெல், குறிஞ்சிப்பறை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
இராவண காவியத்தில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவையாவன.

  • தமிழகக் காண்டம்,
  • இலங்கைக் காண்டம்
  • விந்தக் காண்டம்
  • பழிபுரிகாண்டம்
  • போர்க்காண்டம் என்பவையாகும்.

Question 2.
மருதநில சிறுவர்களின் மனமகிழ் செயல்பாடுகளை எடுத்தியம்புக.
Answer:
தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற்போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
நெய்தல் நில வண்டுகள் பற்றி எழுதுக.
Answer:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Students can Download 6th Tamil Chapter 3.4 ஒளி பிறந்தது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.4 ஒளி பிறந்தது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 1.
கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் பொன்மொழி. உங்கள் கனவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வகுப்பில் மாணவர்கள் தங்கள் கனவுகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்)
மாணவர் 1 : வணக்கம். என் கனவு நன்றாகப் படித்து உலகமே என்னைப் பற்றி அறியும்படி சாதனை புரிய வேண்டும் என்பதுதான்.

மாணவர் 2 : நல்லது. எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய்?

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அப்துல்கலாம் மாதிரி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது என் வாழ்க்கை இலட்சியமாகவே எண்ணுகிறேன்.

மாணவர் 2 : நன்று! நன்று! அதுசரி எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனர். நீஎன்ன அப்துல்கலாம் மாதிரி என்று கூறுகிறாய்?

மாணவர் 1 : நன்றாகக் கேட்டாய். அவரை நான் என் முன்மாதிரியாக எண்ணுகிறேன். அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் படித்து விஞ்ஞானி ஆனவர்.

மாணவர் 2 : ஆமாம். அவர் காட்சிக்கு எளிமையானவர். நம்மைப் போன்ற மாணவர்களிடம் உரையாடுவதை மிகவும் விரும்பியவர்.

மாணவர் 1 : அதுமட்டுமா? தம்முடைய கடுமையான உழைப்பால் முன்னேறியவர். அவர் சென்ற பணிகளுக்கெல்லாம் அவருடைய உழைப்பும் அவர் கற்ற கல்வியுமே பரிந்துரையாக இருந்துள்ளது.

மாணவர் 2 : அதுசரி. நீ எதிர்காலத்தில் எவற்றில் எல்லாம் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன். அப்துல்கலாம் ஐயா கூறியதைப்போல் நான் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்வேன். ஐயா அவர்களின் கனவை நனவாக்க கிராமங்களில் உள்ள இளைஞர்களைக் கனவு காணச் செய்வேன்.

மாணவர் 2 : இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும்.

மாணவர் 1 : சொல்கிறேன் கேள். இளைஞர்கள் வாய்மைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நல்லவற்றை எண்ண வேண்டும். அதன்வழி நடக்க வேண்டும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டும். தோல்விக்குத் தோல்வியைத் தர வேண்டும். துன்பத்திற்குத் துன்பத்தைத் தர வேண்டும். அவர்களுடைய கனவுகளாவன “அரும் பெரும் இலட்சியத்துடன் நாளைய வரலாற்றை உருவாக்குவோம்.

நாம் வசிக்கும் கிராமத்தை வளம் பொருந்தியதாக மாற்றுவோம். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் வேளாண்துறையைத் தேர்ந்தெடுப்போம். வேளாண்மையில் புதுமைகள் செய்வோம். நாட்டின் உயிர் கிராமங்கள் என உணர்ந்து செயல்படுவோம். இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை முறையைக் கொண்டு வருவோம்” இளைஞர்கள் இக்கனவை நனவாக்கினால் கட்டாயம் நம் கிராமங்கள் முன்னேறும். அதனைத் தொடர்ந்து நாடும் முன்னேறும்.

மாணவர் 2 : நீ விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினாயே. ஏதோ செயற்கைக்கோள், ஏவுகணை என்று கூறுவாய் என எதிர்பார்த்தேன்.

மாணவர் 1 : இதுவும் விஞ்ஞானம்தான். நிலம் விவசாயத்திற்கு ஏற்றார்போல் உள்ளதா எனச் சோதித்து அதற்கேற்றபடி மாற்றுவது, நிலத்தடி நீர் பெருகுவதற்குச் செய்ய வேண்டிய வழிமுறைகள், நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயம் மேம்படச் செய்ய வேண்டும். அம்முறையில் விவசாயம் செய்து பல மடங்கு விளைச்சல் பெறுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்ததே. இயற்கை முறையில் வேளாண்மை செய்து மக்கள் நோய் நொடியின்றி வாழ வழி வகுப்பேன்.

மாணவர் 2 : உன்னுடைய கனவு நனவாக வாழ்த்துகள்.

மாணவர் 1 : நன்றி!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் ஒருவரைக் குறிப்பிடுக. அவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களைப் பட்டியலிடுக.
Answer:
நான் நேர்காணல் செய்ய விரும்பும் நபர் Dr.APJ அப்துல் கலாம் அவர்கள்.
வினாக்கள் :
(i) அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக்காரணம் எது?
(ii) சிறு வயதில் என்னவாக வேண்டும் என விரும்பினீர்கள்?
(iii) உங்களுக்குப் பிடித்தத் துறை எது? (அறிவியல் தவிர)
(iv) உங்களுக்கு முன் மாதிரியாக யார் இருந்தனர்?
(v) வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய சில யோசனைகள் கூறுங்கள் ஐயா?

Question 3.
நீங்கள் அப்துல் கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை ஒரு கடிதமாக எழுதுக.
Answer:

இடம் : செஞ்சி
நாள் : 09-03-2018

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், நான் செஞ்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். உங்களைப் போல அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, கனவு, விருப்பம் உங்களிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள நினைக்கிறேன். அதற்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எனவே அதற்குத் தாங்கள் பதில் அளிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்விகள் :
(i) நீங்கள் சிறு வயதில் விஞ்ஞானியாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?
(ii) உங்கள் ஆராய்ச்சியில் உங்களைக் கவர்ந்தது எது?
(iii) ஒரு சிறந்த குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
(iv) நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பங்கள் விவசாயத்திற்கு எந்த அளவு பயன்படுகிறது?
(v) நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வழி சொல்லுங்கள்?
(vi) உங்களுக்குப் பிடித்தத் தலைவர் யார்? ஏன்?
(vii) உங்க ளுக்குப் பிடித்தப் புத்தகம் எது? ஏன்?
(viii) “ஊழல் இல்லாத நாடு” சாத்தியப்படுமா?
(ix) இந்த உலகிலே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?
(x) எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இப்படிக்கு,
அன்புடன் – செந்தாழினி

உறைமேல் முகவரி :
மேதகு. ஆ.ப.ஜை. அப்துல்கலாம் அவர்கள்,
மேனாள் குடியரசுத் தலைவர்,
புதுடெல்லி.

மதிப்பீடு

Question 1.
சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
சுதத்திர இந்தியாவின் வெற்றிகள் :
(i) உணவு உற்பத்தியில் தன்னிறைவு.
(ii) தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி.
(iii) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன்.
(iv) அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி. நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி.
(v) பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி. இவையெல்லாம் சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
Answer:
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு : ‘போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் தனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Students can Download 6th Tamil Chapter 3.3 கணியனின் நண்பன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.3 கணியனின் நண்பன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 1.
உங்களை ஓர் ரோபோவாகக் கற்பனை செய்துகொண்டு நண்பர்களுடன் உரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று நம் வகுப்பிற்கு ரோபோ வரப் போவதாக நம் ஆசிரியர் கூறினாரே? கண்டிப்பாக வருமா?

மாணவன் 2 : கண்டிப்பாக வரும். ரோபோ என்றால் என்ன? உனக்குத் தெரியுமா?

மாணவன் 1 : ரோபோ என்பதைத் தமிழில் தானியங்கி என்று கூறுவோம். இது நடைமுறையில் இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். இதோ ரோபோ வந்துவிட்டதே. வா ரோபோ உன்னைத்தான் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ரோபோ : வணக்கம். நான் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. தாமதமாக வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னிக்கவும்.

மாணவன் 2 : அட்டா. இதென்ன நீ மன்னிப்பெல்லாம் கேட்கிறாய்? நீ ஒரு எந்திர மனிதன்தானே.

ரோபோ : நான் எந்திரமனிதன்தான். ஆனால் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது எங்களுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டளைகளுள் ஒன்று.

மாணவன் 2 : அப்படியானால் நீயும் மனிதர்களைப் போல் எல்லாப் பணிகளையும் செய்வாயா?

ரோபோ : நான் உங்களைப் போல் இல்லை. உங்களை விட வேகமாகவும், நுட்பமான, கடினமான வேலைகளை மிக எளிதாகவும் செய்து முடிப்பேன். என்னுடன் ஒரு கணினி இணைந்திருக்கும். அது என்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்தும் நான் செயல்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளேன்.

மாணவன் 1 : உன்னுடைய பணிகள் என்னென்ன?

ரோபோ : நான் உங்களால் செய்ய முடியாத கடினமான செயல்களையும் எளிதாகச் செய்வேன். தொழிற்சாலையில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல், உதிரிப் பாகங்களை இணைத்தல் ஆகிய பணிகளைச் செய்வேன்.

மாணவன் 2 : மருத்துவத் துறையில் கூட உன் வேலை மகத்தானது என என் அப்பா கூறினார். அங்கு உன்னுடைய வேலை என்ன?

ரோபோ : மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறியவும் மருத்துவம் பார்க்கவும் பயன்படுகின்றேன். மேலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் நான் பயன்படுகின்றேன்.

மாணவன் 1 : கேட்கவே வியப்பாக உள்ளதே. இன்னும் உன் பணிகள் என்னென்ன?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

ரோபோ : என்னால் உங்களுடன் சேர்ந்து விளையாட முடியும். என்னைப் போன்ற எந்திர மனிதர்கள் உணவகங்களில் உணவு பரிமாறுவர். 3 பொது இடங்களில் வழிகாட்டுவர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் 9 செய்யவும் எங்களால் முடியும். பிறகோள்களுக்குச் சென்று ஆய்வு 2 நடத்தவும் செயற்கைக் கோள்களை இயக்கவும் பயன்படுவேன். பெருங்கடலின் அடி ஆழம், வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப் பகுதிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் உதவுகின்றேன்.

மாணவன் 2 : நீ கூறுவதையெல்லாம் கேட்பதற்கே வியப்பாக உள்ளதே.

ரோபோ : நான் போர்க்களத்தில் இராணுவ வீரர்களுள் இணைந்து செயலாற்றுவேன். வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மாணவன் 1 : உன்னுடைய பயன்பாட்டைப் பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது.

ரோபோ : எங்கள் வளர்ச்சி இத்துடன் நின்றுவிடாது. மனிதர்கள் எங்களை அவர்களின் பயன்பாட்டிற்கும் தேவைக்கும் ஏற்றபடி வடிவமைத்து செயல்படுத்திக் கொள்வார்கள். எங்களால் எந்த இடையூறுகளும் இருக்காது என்பதை உறுதியாகக் கூறுவேன். நீங்கள் நன்றாகப் படித்து எங்களைப் போல் பிறருக்கும் பயன்படுமாறு பணிபுரியுங்கள்.

மாணவர்கள் : நன்றி ரோபோ! இவ்வளவு நேரம் நீ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ரோபோ : நன்றி மாணவர்களே! சென்று வருகிறேன்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
அ) நூலறிவு
ஆ) நுண்ண றிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
Answer:
ஆ) நுண்ண றிவு

Question 2.
தானே இயங்கும் இயந்திரம் …………..
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
Answer:
ஆ) தானியங்கி

Question 3.
‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
Answer:
ஆ) நின்று + இருந்த

Question 4.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
Answer:
ஆ) அ + உருவம்

Question 5.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
Answer:
ஈ) மருத்துவத்துறை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 6.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) செயலிழக்க
ஆ) செயல் இழக்க
இ) செய இழக்க
ஈ) செயலிலக்க
Answer:
அ) செயலிழக்க

Question 7.
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
Answer:
ஈ) சேர்த்தல்

Question 8.
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
Answer:
அ) அரிது

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..
4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …………..
Answer:
1. (விடை: எந்திரங்கள்)
2. (விடை: செயற்கை நுண்ணறிவு)
3. (விடை: டீப் புளூ)
4. (விடை: சவுதி அரேபியா)

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. தொழிற்சாலை …………………………………………….
விடை : எங்கள் பகுதியில் தொழிற்சாலை மூலம் வெளியேறும் கழிவுகள் மிகுந்து விட்டன.

2. உற்பத்தி ………………………………………………
விடை : நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடையவேண்டும்.

3. ஆய்வு ……………………………………………………
விடை : அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

4. செயற்கை ……………………………………………
விடை : நாம் நமது மண்ணில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம்.

5. நுண்ண றிவு …………………………………………….
விடை : இயந்திர மனிதர்கள் தங்கள் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி வேலையை முடிக்கின்றன.

குறுவினா

Question 1.
‘ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
Answer:
ரோபோ உருவாக அடிப்படை நிகழ்வு :
(i) செக் நாட்டைச் சேர்ந்த காரல் சேபெக் என்ற நாடக ஆசிரியர், 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
(ii) அதில் ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
(iii) அந்நாடகத்தில் ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாகக் காட்சிகளை அமைத்திருந்தார். இந்நிகழ்வே, ரோபோ என்னும் சொல் என்ற சொல் உருவாக அடிப்படை நிகழ்வானது.

Question 2.
‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
Answer:
‘டீப் ப்ளூ’ – ரோபோ :
(i) ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினிதான் டீப் ப்ளூ’.
(ii) இது 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

சிறுவினா

Question 1.
எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
Answer:
எந்திர மனிதனின் பயன்கள் :
(i) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்தல்.
(ii) மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறிதல்.
(iii) சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்தல்.

Question 2.
துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
Answer:
துருவப் பகுதிகளில் நிகழும் தட்ப வெப்ப நிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. எனவே அப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு எந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.

சிந்தனை வினா

Question 1.
உங்களுக்கென்று ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:
1. விண்வெளிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கும், ஆய்வு செய்வதற்கும்.
2. வாகனம் ஓட்டுவதற்கும்
3. இராணுவத்தில் உயிர் பலியாவதைத் தடுக்கும் பணிக்கு அனுப்புவேன்.
4. போக்குவரத்துக் காவல் துறைக்குப் பதிலாக ரோபோவைப் பயன்படுத்துவேன்.
5. கட்டிட வேலைகள் செய்வதற்கும்
6. உடற்பயிற்சி செய்வதற்கும்
7. வனவிலங்குகள் நடமாட்டங்களை அறிவதற்கும்
8. என்னோடு விளையாடுவதற்கும்
9. வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும்
10. கல்வி கற்றுதருவதற்கும்
11. கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும்.
12. ஆழ்கடலில் மனிதன் செல்லாமல் ஆய்வு செய்வதற்கும் ரோபோக்களைப் பயன்படுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Additional Questions

Question 1.
Mention the time in the clock when the angle is

(i) 30°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 1

(ii) 120°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

(iii) 150°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:1 (Text Book Page No.16)

Continue the pattern as done in first to complete the tile.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 4

Activity:2 (Text Book Page No.16)

Continue the border stripe.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:3 (Text Book Page No.16)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:4 (Text Book Page No.22)

Arrange the given words to form a pattern
Depth, called, walked, mice, played, pulled, breadth, rice, length, width, price, voice
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
Answer:
Depth, breadth, length, width
called, walked, played, pulled
nice, rice, price, voice

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Question 1.
Write down the collection of words by ending with “ENT” AND “HT”.

(i) WENT, SENT, B____ , R____ , T____
Answer:
BENT, RENT, TENT

(ii) NIGHT, LIGHT, R____, B____, M____
Answer:
RIGHT, BIGHT, MIGHT

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Question 2.
Fill in the blanks

(i) C__AT, B__ AT, G__AT
Answer:
COAT,BOAT,GOAT

(ii) R __D, B__D, W__D
Answer:
REb, BEb, WED

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Question 1.
Mention the time in the clock when the angle is

i) 180°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

ii) 90°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 2

iii) 60°.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Question 2.
Find the angle made by the hands of the clock at the given time.
i)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 6
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 7

iii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

iv)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 10
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 11

v)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 12
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 13

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

vi)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 14
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 15

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Question 1.
Find the angle of the given shapes using the equilateral triangle.
i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 2
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Question 2.
Find the angles of a rectangle using a circle.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 5
Angle of a circle is 360° ○
= 360 ÷ 4 = 90

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Students can Download 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.1 சிற்பக்கலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிற்பம் ஒன்றைப் பற்றிய செய்திக்குறிப்பை உருவாக்குக.
Answer:
திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தொலைவில், திருச்செந்தூர் சாலையில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் தனிச்சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இரு மண்டபங்களிலும் ஆறு அடிக்கு குறையாமல், 30க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. இங்குள்ள பீமன், வியாக்ரபாலகன் சிற்பம் பற்றிய ஒரு செய்தி உண்டு.

பீமனும், வியாக்ரபாலகனும் சண்டையிடுகின்றனர். தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவராக இருந்த தர்மராஜா வியாக்ரபாலகன் வென்றதாகவும் தீர்ப்பளித்தாராம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

இந்தச் செய்தியைக் குறிக்கும் வகையில், அதிசயச் சிற்பத் தொகுப்பாக அமைந்துள்ளது. பீமனும், வியாக்ரபாலகனும், தர்மராஜாவும் இருக்கும் சிற்பம் உள்ளது.

இச்சிற்பத்தில், பீமன் வீரமும், திமிரும் வெளிப்படுத்தும் முகபாவத்துடனும், வியாக்ரபாலகன் பராக்கிரமத்துடனும், தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும் இருப்பதாக சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் தலைசிறந்த கலைப்படைப்புகளாகவும், உணர்ச்சி ததும்பும் உயிரோவியங்களாகவும் காட்சியளிக்கின்றன.

இக்கோயிலின், இராஜகோபுரமும் கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும், 16-ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைப் பணிக்குச் சான்றாக உள்ளது.

Question 2.
ஓவியர்/சிற்பி/இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்து அவர் கூறும் கலை நுட்பங்களையும், அனுபவங்களையும் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:

சிற்பியின் கலை நுட்பங்களும், அனுபவங்களும்

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்பி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சிற்பங்களை (செதுக்குதல், வடித்தல், உருவாக்கல்] ஒவ்வொரு பொருளைக் கொண்டு செய்யும் போது மேற்கூறிய மூன்று பெயர்களாலும் அழைக்கப்படுமாம். உருவாக்கும் நுட்பங்களைக் கூறமுடியுமா என்று வினவிய போது, பல வியப்புக்குரிய செய்திகளைக் கூறினார். இதோ அவர் கூறிய கருத்துகள்.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப்பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருள்களில் இருந்து உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கற்கள், உலோகம் (செம்பு) மரம், மண், தந்தம் போன்ற பொருட்கள் சிற்பங்கள் உருவாக்கப் பயன்படுபவையாம்.

கல், மரம் போன்றவற்றில் சிற்பம் உருவாக்கும் போது, சிற்பமாக உருவாக்க வேண்டியவற்றைச் செதுக்குவார்களாம்.

உலோகம் போன்ற பொருள்களைக் கொண்டு செய்யும் போது உருக்கி வார்ப்பார்களாம்,

ஒட்டுதல் :

அச்சுகளில் அழுத்துதல் போன்ற உத்திகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவோம் என்றார். மண்ணால் செய்யும் போது உருவத்தைச் செய்தபின் சூளையில் சுடுவதாகக் குறிப்பிட்டார்.

சிற்பங்கள் மனித நாகரிகத்தையும், அதன் வளர்ச்சிக் கூறுகளையும் வெளிப்படுத்தும் சான்றுகள் என்று பெருமிதப்பட்டார்.

மேலும், கல், உலோகம், செங்கல், மரம், சுதை (சுண்ணாம்பு) மெழுகு, தந்தம் வண்ணம். கண்ட சருக்கரையும் சிற்பம் வடிக்க ஏற்றவையாம்.

ஒரு உருவத்தின் முன்புறம், பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும். ஒரு புறத்தை மட்டும் காட்டும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பம் என்றும் கூறுவார்கள் என்று தெளிவுபடுத்தினார். சிற்பங்கள் சமய வெளிப்பாடாகவும் அரசாட்சி பற்றிய வெளிப்பாடாகவுமே இருந்தன என்றார்.

முன்பெல்லாம் சிற்பங்களை உருவாக்கிய மேதைகள் சிற்பக்கலை மூலம் உருவங்களுக்கு உயிரூட்டினர். இன்றோ பண்டைய மரபு முறைகள் முற்றிலும் மாறுபட்டு வருவதோடு உடலமைப்பை வெளிப்படுத்துவதாக மாறி விட்டதே என்று வருந்தினார்.
நானும் விடை பெற்றுக்கொண்டு வந்தேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ……………………..
அ) மாமல்லபுரம்
ஆ) பிள்ளையார் பட்டி
இ) திரிபுவனவீரேசுவரம்
ஈ) தாடிக்கொம்பு
Answer:
அ) மாமல்லபுரம்

Question 2.
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..
அ) விலங்கு உருவங்கள்
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள்
ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
Answer:
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

குறுவினா

Question 1.
செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • செப்புத் திருமேனிகள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும்.
  • சோழர் காலத்தில்தான் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டன.
  • சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.

Question 2.
நடுகல் என்றால் என்ன?
Answer:

  • நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
  • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
  • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 3.
இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
Answer:
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

சிறுவினா

Question 1.
முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
முழு உருவச் சிற்பம்:
உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:
புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 2.
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
Answer:

  • நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படும்.
  • நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று கூறலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
தமிழ்நாட்டு சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
Answer:
முன்னுரை:
கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

சிற்பங்களின் கலை நயம்:
“கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கவையாய் மிளிர்கின்றன.
சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிர செதுக்கினர்.

புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

கோவில் கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நக அமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை.

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது,

  • பல்லவர் காலச் சிற்பங்கள்
  • பாண்டியர் காலச் சிற்பங்கள்
  • சோழர் காலச் சிற்பங்கள்
  • விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள்
  • நாயக்கர் காலச் சிற்பங்கள்

என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம்.

திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் சுதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர்.

சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.
நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது இக்கலை.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:
சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும், ஏனைய உருவங்களைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறிவின் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………
அ) மைல்கல்
ஆ) சுடுகல்
இ) நடுகல்
ஈ) கருங்கல்
Answer:
இ) நடுகல்

Question 2.
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
அ) கல்லோவியர்கள்
ஆ) கற்கவிஞர்கள்
இ) கற்சொல்லோவியர்கள்
ஈ) சுவரோவியர்கள்
Answer:
ஆ) கற்கவிஞர்கள்

Question 3.
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்.
அ) நாயக்கர்
ஆ) பல்ல வர்
இ) பாண்டியர்
ஈ) சோழர்
Answer:
இ) பாண்டியர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 4.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…………
அ) சிற்பக்கலை
ஆ) தமிழக சிற்பங்கள்
இ) சிற்பமும் சிந்தனையும்
ஈ) சிற்பச்செந்நூல்
Answer:
ஈ) சிற்பச்செந்நூல்

Question 5.
உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்
அ) சுவாமிமலை
ஆ) கும்பகோணம்
இ) மதுரை
i) அ-சரி, ஆ, இ – தவறு
ii) முதல் இரண்டு சரி
iii) மூன்றும் சரி
iv) மூன்றும் தவறு
Answer:
iii) மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 6.
தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெறும் கலைக் கூறுகள்
அ) யோகக்கலை
ஆ) நாட்டியக்கலை
இ) இசைக்கலை
ஈ) பேச்சுக்கலை
i) அ, ஆ-சரி
ii) அ,ஆ – தவறு
iii) நான்கும் சரி
iv) நான்கும் தவறு
Answer:
யோகக்கலை, நாட்டியக்கலை

Question 7.
கொடும்பாளுர் மூவர் கோவில் கட்டிய மன்னன்
அ) முதலாம் பராந்தகச் சோழன்
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்
இ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
ஈ) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்.

Question 8.
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) புறப்பொருள் வெண்பாமாலை
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
அ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 9.
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
அ) சீவகசிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) நளவெண்பா
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) மணிமேகலை

Question 10.
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
அ) மூதூர் பெருமாள் கோவில்
ஆ) பேரூர் சிவன் கோவில்
இ) காஞ்சி கயிலாயநாதர் கோவில்
ஈ) சீனிவாசநல்லூர் இரங்கநாதர் கோவில்
Answer:
ஆ) பேரூர் சிவன்கோவில்

Question 11.
திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
ஆ) சோழர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

குறுவினா

Question 1.
சிற்பங்களை உருவாக்க எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.
Answer:
கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை (சுண்ணாம்பு) தந்தம், கண்ட சருகக்கரை, மெழுகு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.

Question 2.
சிற்பங்கள் அமைக்கப்படும் நான்கு நிலைகள் யாவை?
Answer:

  • தெய்வ உருவங்கள்
  • இயற்கை உருவங்கள்
  • கற்பனை உருவங்கள்
  • முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் கல்லினாலும், உலோகத்தினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.

Question 3.
பாண்டியர் கால சிற்பவேலைப்பாடுகளுக்கு சான்றாகும் இடங்கள் யாவை?
Answer:
பாண்டியர் காலத்தில் குகைக் கோயில்களில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அவற்றுக்கு சான்றாக. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களைக் கூறலாம்.

Question 4.
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
Answer:

  • இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
  • முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என்பனவாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 5.
புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?
Answer:
அரண்மனைகள், கோவில்கள்.

Question 6.
கற்கவிஞர்கள் – குறிப்பு வரைக.
Answer:
சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் சிற்பங்களைவடிவமைக்கின்றனர். அதனால், அவர்களைக் “கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கின்றனர்.

Question 7.
சோழர் காலச் சிற்பங்களின் கருவூலங்களாகத் திகழ்பைவை யாவை?
Answer:

  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில்
  • முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம்
    இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
  • இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 8.
சோழர் காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குபவை?
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படுகின்ற பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

Question 9.
நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுக்குச் சான்று தருக.
Answer:

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • இராமேசுவரம் பெருங்கோவில்
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

Question 10.
நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று குறிப்பிடப்படுவது எது?
Answer:
கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

சிறுவினா

Question 1.
பௌத்த – சமண சிற்பங்கள் – குறிப்பு வரைக.
Answer:
பௌத்த சமயத்தினர் புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த நிலைகளில் சிற்பங்களாக படைத்து வழிபட்டனர்.

சமண மதத்தினர் அருகக் கடவுளின் உருவத்தையும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர். இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

Question 2.
இன்றைய சிற்பக்கலை குறித்து எழுதுக?
Answer:

  • இன்று சுதை சிற்பங்களும், கல்சிற்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • செங்கல், பைஞ்சுதை (சிமெண்ட்) ஆகியவற்றைக் கொண்டும் கலைநயமிக்க சிற்பங்களை வடிக்கின்றனர்.
  • வெண்கலம் மற்றும் செயற்கை இழைகள் மூலமாகவும் உருவங்கள் உருவாக்கப் படுகின்றன.
  • இன்றைய சிற்பக்கலை கோவில்களைக் கடந்து, பலதுறைகளில் தன் இடத்தை நிறைவு செய்கிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 3.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் பற்றி எழுதுக.
Answer:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.

Question 4.
சிற்பக்கலை வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கினை எடுத்தியம்புக.
Answer:
தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து

வருகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. அக்கல்லூரியில் இருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர்.

சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னயிைலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் “சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Students can download 11th Business Maths Chapter 4 Trigonometry Ex 4.1 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 4 Trigonometry Ex 4.1

Samacheer Kalvi 11th Business Maths Trigonometry Ex 4.1 Text Book Back Questions and Answers

Question 1.
Convert the following degree measure into radian measure
(i) 60°
(ii) 150°
(iii) 240°
(iv) -320°
Solutions:
(i) 1°= \(\frac{\pi}{180}\) radians
∴ 60° = \(\frac{\pi}{180}\) × 60 radians = \(\frac{\pi}{3}\) radians.

(ii) 150° = \(\frac{\pi}{180}\) × 150 radians = \(\frac{5 \pi}{6}\) radians.

(iii) 240° = \(\frac{\pi}{180}\) × 240 radians = \(\frac{4 \pi}{3}\) radians.

(iv) -320° = \(\frac{\pi}{180}\) × -320 = \(\frac{-16 \pi}{9}\) radians

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Question 2.
Find the degree measure corresponding to the following radian measure.
(i) \(\frac{\pi}{8}\)
(ii) \(\frac{9 \pi}{5}\)
(iii) -3
(iv) \(\frac{11 \pi}{18}\)
Solution:
We know that, one radian = \(\frac{180^{\circ}}{\pi}\)
(i) \(\frac{\pi}{8}\)
\(\frac{\pi}{8}=\frac{180^{\circ}}{\pi} \times \frac{\pi}{8}\) degrees
= \(\frac{45}{2}\)
= 22.5°
= 22°30′ [∵ 0.5° = (0.5 × 60)’ = 30′]

(ii) \(\frac{9 \pi}{5}\)
\(\frac{9 \pi}{5}=\frac{180^{\circ}}{\pi} \times \frac{9 \pi}{5}\) degrees
= 36 × 9 degrees
= 324°

(iii) -3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q2
= -171.81°
= -171°48′ (∵ 0.8° = (0.8 × 60)’ = 48′)

(iv) \(\frac{11 \pi}{18}\)
\(\frac{11 \pi}{18}=\frac{180}{\pi} \times \frac{11 \pi}{18}\)
= 10 × 11°
= 110°

Question 3.
Determine the quadrants in which the following degree lie.
(i) 380°
(ii) -140°
(iii) 1195°
Solution:
(i) 380° = 360°+ 20°
This is of the form 360° + θ
∴ After one completion of the round, the angle is 20°, 380° lies in the I quadrant.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q3

(ii) -140° = -90° + (-50°)
The angle is negative it moves in the anti-clockwise direction.
-140° lies in the III quadrants.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q3.1

(iii) 1195° = (3 × 360°) + 90° + 25°
∴ After three completion round, the angle will lie in the II quadrant.
1195° lies in the II quadrant.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q3.2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Question 4.
Find the values of each of the following trigonometric ratios.
(i) sin 300°
(ii) cos(-210°)
(iii) sec 390°
(iv) tan(-855°)
(v) cosec 1125°
Solution:
(i) sin 300° = sin(360° – 60°)
[For 360° – 60°. No change in T-ratio. 300° lies in 4th quadrant ‘sin’ is negative]
= -sin 60°
= \(-\frac{\sqrt{3}}{2}\)

(ii) cos(-210°) = cos 210° (∵ cos(-θ) = cos θ)
[∵ 180 + 30°. No change in T-ratio. 210° lies 3rd quadrant ‘cos’ is negative]
= cos(180° + 30°)
= -cos 30°
= \(-\frac{\sqrt{3}}{2}\)

(iii) sec 390° = sec(360° + 30°)
= sec 30°
= \(\frac{1}{\cos 30^{\circ}}\)
= \(\frac{1}{\left(\frac{\sqrt{3}}{2}\right)}\)
= \(\frac{2}{\sqrt{3}}\)

(iv) tan(-855°) = -tan 855° (∵ tan(-θ) = – tan θ)
[∵ Multiplies of 360° are dropped out. For 180° – 45°. No change in T-ratio. 180° – 45° lies in 2nd quadrant ‘tan’ is negative]
= -tan(2 × 360° + 135°)
= -tan 135°
= -tan(180° – 45°)
= -(-tan 45°)
= -(-1)
= 1

(v) cosec 1125° = cosec(3 × 360°+ 45°)
= cosec 45°
= \(\frac{1}{\sin 45^{\circ}}\)
= \(\frac{1}{\left(\frac{1}{\sqrt{2}}\right)}\)
= √2

Question 5.
Prove that:
(i) tan(-225°) cot(-405°) – tan(-765°) cot(675°) = 0.
(ii) 2 sin2 \(\frac{\pi}{6}\) + cosec2 \(\frac{7 \pi}{6}\) cos2 \(\frac{\pi}{3}\) = \(\frac{3}{2}\)
(iii) \(\sec \left(\frac{3 \pi}{2}-\theta\right) \sec \left(\theta-\frac{5 \pi}{2}\right)+\tan \left(\frac{5 \pi}{2}+\theta\right) \tan \left(\theta-\frac{5 \pi}{2}\right)=-1\)
Solution:
(i) tan(-225°) = -(tan 225°)
= -(tan(180° + 45°))
= – tan 45°
= – 1
cot(-405°) = -(cot 405°)
= – cot(360° + 45°) [∵ For 360° + 45° no change in T-ratio.]
= -cot 45°
= -1
tan(-765°) = -tan 765°
= -tan(2 × 360° + 45°)
= -tan 45°
= -1
cot 675° = cot (360°+ 315°)
= cot 315°
= cot(360° – 45°)
= -cot 45°
= -1
LHS = tan(-225°) cot(-405°) – tan(-765°) cot(675°)
= (-1) (-1) – (-1) (-1)
= 1 – 1
= 0
= RHS.
Hence proved.

(ii) 2 sin2 \(\frac{\pi}{6}\) + cosec2 \(\frac{7 \pi}{6}\) cos2 \(\frac{\pi}{3}\) = \(\frac{3}{2}\)
LHS = 2 sin2 \(\frac{\pi}{6}\) + cosec2 \(\frac{7 \pi}{6}\) cos2 \(\frac{\pi}{3}\)
[∵ \(\frac{7 \pi}{6}\) = 210°, 210° = 180° + 30°. For 180° + 30° no change in T-ratio.
210° lies in 3rd quadrant, cosec θ is negative.]
= 2\(\left(\sin \frac{\pi}{6}\right)^{2}\) + (cosec (180° + 30°))2 \(\left(\cos \frac{\pi}{3}\right)^{2}\)
= 2 \(\left(\frac{1}{2}\right)^{2}\) + (-cosec 30°)2 . \(\left(\frac{1}{2}\right)^{2}\)
= \(2 \times \frac{1}{4}+(-2)^{2} \frac{1}{4}\)
= \(\frac{2}{4}+\frac{4}{4}=\frac{6}{4}\)
= \(\frac{6}{4}\)
= \(\frac{3}{2}\)
= RHS

(iii) sec(\(\frac{3 \pi}{2}\) – θ) = sec (270° – θ) = -cosec θ
[∵ For 270° – θ change T-ratio. So add ‘co’ infront ‘sec’, it becomes ‘cosec’]
sec(θ – \(\frac{5 \pi}{2}\)) = \(\sec \left(-\left(\frac{5 \pi}{2}-\theta\right)\right)\)
= sec(\(\frac{5 \pi}{2}\) – θ) [∵ sec(-θ) = θ]
= sec(450° – θ)
= sec (360° + (90° – θ))
= sec (90° – θ)
= cosec θ
[∵ For 90° – θ change in T-ratio. So add ‘co’ in front of ‘sec’ it becomes ‘cosec’]
tan(\(\frac{5 \pi}{2}\) + θ) = tan(450° + θ)
[∵ For 90° + θ, change in T-ratio. So add ‘co’ in front of ‘tan’ it becomes ‘cot’]
= tan (360° + (90° + θ))
= tan (90° + θ)
= -cot θ
\(\tan \left(\theta-\frac{5 \pi}{2}\right)=\tan \left(-\left(\frac{5 \pi}{2}-\theta\right)\right)\)
= \(-\tan \left(\frac{5 \pi}{2}-\theta\right)\) [∵ tan(-θ) = -tan θ]
= -tan(450° – θ)
= -tan(360° + (90° – θ))
= -tan(90° – θ)
= -cot θ
LHS = \(\sec \left(\frac{3 \pi}{2}-\theta\right) \sec \left(\theta-\frac{5 \pi}{2}\right)+\tan \left(\frac{5 \pi}{2}+\theta\right) \tan \left(\theta-\frac{5 \pi}{2}\right)\)
= -cosec θ (cosec θ) + (-cot θ) (-cot θ)
= -cosec2 θ + cot2 θ
= -(1 + cot2 θ) + cot2 θ [∵ 1 + cot2 θ = cosec2 θ]
= -1
= RHS

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Question 6.
If A, B, C, D are angles of a cyclic quadrilateral, prove that: cos A + cos B + cos C + cos D = 0.
Solution:
Note: If the vertices of a quadrilateral lie on the circle then the quadrilateral is called a cyclic quadrilateral.
In a cyclic quadrilateral sum of opposite angles are 180°.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q6
Since A, B, C, D are angles of cyclic quadrilateral
A + C = 180° and B + D = 180°
LHS = cos A + cos B + cos C + cos D
= cos A + cos B + cos(180° – A) + cos(180° – B)
= cos A + cos B – cos A – cos B
= 0
= RHS

Question 7.
Prove that
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q7.2
(ii) sin θ . cos{sin(\(\frac{\pi}{2}\) – θ) . cosec θ + cos(\(\frac{\pi}{2}\) – θ) . sec θ} = 1
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q7.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q7

(ii) sin θ . cos{sin(\(\frac{\pi}{2}\) – θ) . cosec θ + cos(\(\frac{\pi}{2}\) – θ) . sec θ} = 1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q7.1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Question 8.
Prove that: cos 510° cos 330° + sin 390° cos 120° = -1.
Solution:
LHS = cos 510° cos 330° + sin 390° cos 120°
= cos(360° + 150°) cos(360° – 30°) + sin(360° + 30°) × cos(180° – 60°)
= cos 150° cos 30° + sin 30° (-cos 60°)
= cos(180° – 30°) cos 30° + sin 30° cos 60°
= -cos 30° cos 30° + \(\frac{1}{2} \times\left(\frac{-1}{2}\right)\)
= \(-\frac{\sqrt{3}}{2} \times \frac{\sqrt{3}}{2}-\frac{1}{2} \times \frac{1}{2}\)
= \(-\frac{3}{4}-\frac{1}{4}\)
= \(\frac{-3-1}{4}\)
= -1

Question 9.
Prove that:
(i) tan(π + x) cot(x – π) – cos(2π – x) cos(2π + x) = sin2 x.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q9.1
Solution:
(i) tan(π + x) cot(x – π) – cos(2π – x) cos(2π + x) = (tan x) (-cot(π – x) – cos x cos x
[∵ cot(x – π) = cot(-(π – x)) = -cot(π – x) = cot x]
= tan x cot x – cos2 x
= 1 – cos2 x
= sin2 x [∵ sin2 x + cos2 x = 1 ⇒ sin2 x = (1 – cos2 x)]

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q9.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q9

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1

Question 10.
If sin θ = \(\frac{3}{5}\), tan φ = \(\frac{1}{2}\) and \(\frac{\pi}{2}\) < θ < π < φ < \(\frac{3 \pi}{2}\), then find the value of 8 tan θ – √5 sec φ.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.1 Q10
Given that sin θ = \(\frac{3}{5}=\frac{\text { Opposite side }}{\text { Hypotenuse }}\)
∵ AB = \(\sqrt{5^{2}-3^{2}}=\sqrt{25-9}=\sqrt{16}\) = 4
Here θ lies in second quadrant [∵ \(\frac{\pi}{2}\) < θ < π]
∵ tan θ is negative.
tan θ = \(-\frac{3}{4}\)
Also given that tan Φ = \(\frac{1}{2}=\frac{\text { Opposite side }}{\text { Adjacent side }}\)
∴ PR = \(\sqrt{\mathrm{PQ}^{2}+\mathrm{QP}^{2}}=\sqrt{4+1}=\sqrt{5}\)
Here Φ lies in third quadrant (∵ π < Φ < \(\frac{3 \pi}{2}\))
∴ sec Φ is negative.
\(\sec \phi=\frac{1}{\cos \phi}=-\frac{1}{\left(\frac{2}{\sqrt{5}}\right)}=-\frac{\sqrt{5}}{2}\)
Now 8 tan θ – √5 sec Φ = \(8\left(-\frac{3}{4}\right)-\sqrt{5}\left(\frac{-\sqrt{5}}{2}\right)\)
= 2 × (-3) + \(\frac{5}{2}\)
= -6 + \(\frac{5}{2}\)
= \(\frac{-12+5}{2}\)
= \(\frac{-7}{2}\)