Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Students can Download 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு, என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக.
Answer:
நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும்.
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன் “சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்” ஆவார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடிசூட்டிக் கொண்டனர்.
தென்காசி பெரியகோயில் பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

தென்காசிப் பகுதியை ஆண்ட பாண்டியர்களில் “கொல்லங்கொண்டான்” என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான். தென்காசியில் பாண்டிய மன்னர்களின் ஆளுகை 17ம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. தென்காசி கோவிலில் உள்ள இவனது மெய்க்கீர்த்தி “பூமிசைவளிதை நாவினில் பொலிய” எனத் தொடங்குகிறது. பொன்னி பெருமான், மானக்கவசன் போன்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். திருக்குற்றாலத்தில் சேர மன்னன் ஒருவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 3

ஆற்றிய அறப்பணிகள்:

  • ஐந்து ஊர்களில் அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான்.
  • திருக்குற்றாலம், திருப்புடைமருதூரில் உள்ள சிவாலயங்களுக்கு மண்டபங்கள் அமைத்தான்.
  • நெல்லை சிவன் கோவிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான்.
  • செங்கோல் ஆட்சி நடத்திய சடையவர்மன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான்.
  • இவ்வாறு எங்கள் ஊரை ஆண்ட பாண்டிய வேந்தனின் பெருமைகளை எழுதிக்கொண்டே போகலாம். எம் ஊரில் வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 2.
நெல் விதைப்பு முதல் அரிசி புடைப்பது வரை, வயல்களக்காட்சியை அறிந்து தகுந்த படங்களுடன் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 4

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உருவகத்தொடர், வினைத்தொகை
ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை
ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
Answer:
ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 2.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை
ஆ) புள் – தாவரம்
இ) அள்ளல் – சேறு
ஈ) மடிவு – தொடக்கம்
Answer:
இ) அள்ளல் – சேறு

Question 3.
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
Answer:
இ) சேர நாடு, சோழ நாடு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

குறுவினா

Question 1.
அள்ளல் பழனத்து அரக்காம்பால் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
Answer:

  • அள்ளல் – சேறு
  • பழனம் – வயல்

சிறுவினா

Question 1.
சேர, சோழ, பாண்டி நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
Answer:
சேரநாடு:
சேறுபட்ட நீர்வளம் மிகுந்த வயல்பகுதிகளில் அரக்கு நிறம்கொண்ட செவ்வாம்பல் மலர்கள் மெல்ல தம் வாயவிழ்ந்து விரிந்தன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தம் தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

சோழநாடு:
சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்து “நாவலோ” என்று கூவி அழைப்பர் நாவலோ “இந்நாள் வாழ்க சிறக்க” என்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

பாண்டியநாடு:
வெண்கொற்றக்குடையை உடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்துகிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக்குவியல்களைப்போலவே காட்சியளித்தன என்று முத்தொள்ளாயிரம் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துக் கூறுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
அ) சோழநாடு
ஆ) சேரநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சேரநாடு

Question 2.
‘நாள்வாழ்க’ என்னும் வாழ்த்துப்பொருளை உணர்த்தும் சொல் யாது?
அ) காவலோ
ஆ) நாவலோ
இ) பந்தரோ
ஈ) நச்சிலையோ
Answer:
ஆ) நாவலோ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 3.
“கொல் யானை மேலிருந்து” இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) உரிச்சொற்றொடர்
இ) உருவகம்
ஈ) வினைத்தொகை
Answer:
ஈ) வினைத்தொகை

Question 4.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 1
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 5.
பொருத்திக்காட்டுக.
அ) கோதை – 1. சோழர்
ஆ) கிள்ளி – 2. பாண்டியர்
இ) தென்னன் – 3. சேரர்
அ) 3, 1, 2
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 1, 2

Question 6.
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு அடிகளில் இடம் பெறும் அணி ………………
அ) உவமை
ஆ) உருவகம்
இ) பிறிதுயெறுதல்
ஈ) வேற்றுமை
Answer:
அ) உவமை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 7.
முத்தொள்ளாயிரத்தின் பா …….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) வெண்பா

Question 8.
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்
அ) 106
ஆ) 108
இ) 110
ஈ) 112
Answer:
ஆ) 108

Question 9.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
அ) நக்கீரர்
ஆ) பரணர்
இ) கபிலர்
ஈ) அறிய முடியவில்லை
Answer:
ஈ) அறிய முடியவில்லை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 10.
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம் ……………….
அ) முன்றாம் நூற்றாண்டு
ஆ) நான்காம் நூற்றாண்டு
இ) ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) ஆறாம் நூற்றாண்டு
Answer:
இ) ஐந்தாம் நூற்றாண்டு

Question 11.
பொருத்திக்காட்டுக.
அ) சேர நாடு – 1. ஏர்க்க ளச் சிறப்பு
ஆ) சோழ நாடு – 2. அச்சமில்லாத நாடு
இ) பாண்டிய நாடு – 3. முத்துடை நாடு
அ) 2, 1, 3
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

குறுவினா

Question 1.
சோழ நாட்டின் சிறப்புகளாக முத்தொள்ளாயிரச் செய்யுளில் கூறப்படுவன யாவை?
Answer:
ஏர்க்களச் சிறப்பு, போர்க்களச் சிறப்பு.

Question 2.
நீர்ப்பறவைகள் அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டதற்காண காரணம் யாது?
Answer:
சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்ததைக் கண்டு தண்ணீரில் தீப்பிடித்துவிட்டதாக அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் நீர்ப்பறவைகள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.

Question 3.
‘நாவலோ’ என்று கூவி அழைப்பவர் யார்?
Answer:
நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர்.

Question 4.
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெறும் மன்னர்களைக் குறிப்பிடுக.
Answer:
சேர, சோழ, பாண்டியர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 5.
அஞ்சி, வெண்குடை – இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பை எழுது.
Answer:
அஞ்சி – பெயரெச்சம்,
வெண்குடை – பண்புத்தொகை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி, “இந்த மலரைப் பார் அந்த மலரைவிட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.

Question 1.
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் :
அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த

Question 2.
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.
Answer:
நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் :
அது, அவர்கள், அவள், அவை, அந்த வீடு, இது, இவர்கள், இவள், இவை, இந்த வீடு, இப்புத்தகம், அப்புத்தகம், இப்பையன், அப்பையன்.

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக

செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது? என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா. 2 பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.

பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :
1. எங்கு ?
2. யாருக்கு?
3. ஏன்?
4. இல்லையோ?
5. ஆடைதானே?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )
2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )
3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)
Answer:
1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே

குறுவினா

Question 1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அவை அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு, சுட்டுத்திரிபு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Question 2.
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 1

சிந்தனை வினா

Question 1.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
Answer:
அகச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) அது, இவன், அவர்.

அகவினா : வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) எது? எவர்? யார்?

புறச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) அப்பையன், இப்பெட்டி

புறவினா : வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?
(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

மொழியை ஆள்வோம்

சொற்றொடர்ப் பயிற்சி.
அ) அந்த, இந்த என்னும் சுட்டுச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.
(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.

ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.
(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.
(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக

அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)
Answer:
நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.

ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
Answer:
பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 2

(i) நான் ஊருக்குச் சென்றேன்.
(ii) நீ ஊருக்குச் சென்றாய்.
(iii) அவன் ஊருக்குச் சென்றேன்.
(iv) அவள் ஊருக்குச் சென்றான்.
(v) அவர் ஊருக்குச் சென்றாள்.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
Answer:
நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
Answer:
நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)
Answer:
நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

Question 1.
கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
அ) அளவை
ஆ) மதிப்பை
இ) எண்ணிக்கையை
ஈ) எடையை
Answer:
ஆ) மதிப்பை

Question 2.
சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை ………………. மாற்றலாம்.
Answer:
கோலமாவாக

Question 3.
வணிகத்தின் நோக்கம் என்ன?
Answer:
மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.

Question 4.
மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
Answer:
கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.

Question 5.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
Answer:
வணிகம்.

மொழியோடு விளையாடு

விடுகதைக்கு விடை காணுங்கள்

(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)
1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
2. தண்ணீ ரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான். காலில்லாத அவன் யார்?
3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும், அவை என்ன?
Answer:
1. தராசு
2. கப்பல்
3. குதிரை
4. நெல்மணி
5. ஏற்றுமதி இறக்குமதி

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

1. கோமேதகம்
2. நீலம்
3. பவம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.

செயல் திட்டம்

Question 1.
பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.
Answer:
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.

இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.

இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.

Question 2.
உங்களுக்குத்தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதி அதில் பயன்படுத்தப்படும் ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக. (எ.கா.) உழவு
Answer:
(i) உழவுத்தொழில் – கலப்பை, அறுவை இயந்திரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள்.
(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல், பாவுநூல், கரக்கோல், மிதிக்கட்டை, கத்திக் கயிறு
(iii) தச்சுத்தொழில் – உளி, அரம், மரப்பலகைகள், ஒட்டுப்பலகைகள், சுத்தி.
(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டு, கரண்டி, குவளைகள், சிறு பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்) அடுப்பு, சமையலுக்குத் தேவையான பொருட்கள்.

குறுக்கெழுத்துப்புதிர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 3
இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து

வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.

மேலிருந்து கீழ்
1. காடும் காடு சார்ந்த இடமும்
3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கீழிருந்து மேல்
4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.
5. உடலுக்குப் போர்வையாக அமைவது.

விடைகள் :
இடமிருந்து வலம் : 1. முடியரசன், 2. சுட்டு
மேலிருந்து கீழ் : 1. முல்லை , 3. வேலி

வலமிருந்து இடம் : 4. குதிரை, 5. பண்டமாற்று
கீழிருந்து மேல் :4. குடை, 5. பனி மூட்டம்

கலைச்சொல் அறிவோம்

1. பண்ட ம் – Commodity
2. கடற்பயணம் – Voyage
3. பயணப் படகுகள் – Ferries
4. தொழில் முனைவோர் – Entrepreneur
5. பாரம்பரியம் – Heritage
6. கலப்படம் – Adulteration
7. நுகர்வோர் – Consumer
8. வணிகர் – Merchant

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Students can Download 6th Tamil Chapter 6.4 உழைப்பே மூலதனம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.4 உழைப்பே மூலதனம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 1.
உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி -1

கதாபாத்திரங்கள்: அருளப்பர், வளவன்,
அமுதா, எழிலன் (அருளப்பர் பிள்ளைகளை அழைத்தல்)

அருளப்பர் : பிள்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத் திருப்பித் தர வேண்டும்.
(ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மூவரும் மகிழ்ந்தனர்.)

வளவன் : நமது திறமையை எடைப்போடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

அமுதா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

எழிலன் : நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்.
வளவன் உழவுத்தொழில் செய்து முன்னேறினான். அமுதா ஆடு, மாடு வளர்த்து தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்றுப் பொருள் ஈட்டினாள். எழிலன் பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தான்.)

காட்சி -2

கதாபாத்திரங்கள் : அருளப்பர், வளவன், அமுதா, எழிலன்
(அருளப்பர் பயணம் முடிந்து திரும்பி வந்தார்.)

அருளப்பர் – 1: வளவா! நான் கொடுத்த பணம் எங்கே?

வளவன் : அப்பா, நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மைச் செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது.

அருளப்பர் : நல்லது! உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள் வேளாண்மையைத் தொடர்ந்து செய். அமுதா! நீ என்ன செய்தாய்?

அமுதா : அப்பா! நான் மாடுகளை வாங்கிப் பராமரித்தேன். நீங்கள் தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள்.

அருளப்பர் : மிக்க மகிழ்ச்சி. இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக் கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து. வாழ்த்துகள். எழிலா! உன்னிடம் கொடுத்த பணம் எங்கே?

எழிலன் : அப்பா! நீங்கள் கொடுத்த பணத்தை மிகப் பத்திரமாகப் பெட்டியில் வைத்திருக்கிறேன். (தந்தை மனம் வருந்தினார்).

அருளப்பர் : பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். எழிலா! நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக் கொள். உன் எதிர்கால வாழ்வுக்கு அது உதவும்.
(தந்தை கூறியதைக் கேட்ட எழிலன், தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தான்.)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 2.
நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? வகுப்பறையில் பேசுக.
Answer:
நான் எழிலனாக இருந்தால் பல்பொருள் அங்காடி வைப்பேன். ஏனெனில் அங்குதான் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு விற்கப்படவில்லையே என வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் வியாபாரம் நடக்கும். அதுமட்டுமின்றி நான் உற்பத்தியாளரிடம் நேரிடையாகப் பொருள்களை வாங்கி விற்பேன். அதிக இலாபமின்றி நியாயமான முறையில் வியாபாரம் செய்வேன். மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொள்வேன். “கொடுப்பதும் குறைவிலாது, கொள்வதும் மிகை கொளாது” என்ற பழந்தமிழரின் வாக்கினை மெய்ப்பிப்பேன்.

என்னுடைய அங்காடியில் இயன்றவரை இயற்கை முறையில் பயிர்செய்த காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றையே விற்பேன். என் நோக்கம் நுகர்வோராகிய மக்கள் மனநிறைவுடன் என் அங்காடிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதாகும். அதன்படி வணிகம் செய்து என் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

சிந்தனை வினா
Question 3.
கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
Answer:
கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தவர் அமுதா.

காரணம் : ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தைச் சேமித்து வைத்தாள். அவள் வருமானத்திற்காக அதனைச் செய்தாலும் பல உயிர்களைக் காப்பாற்றுகிறாள். இதனால் அவளிடம் உள்ள கருணை, அன்பு, பரிவு போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. இக்காரணத்தினால் எனக்கு அமுதா கதாபாத்திரம் கவர்ந்ததாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கி எழுதுக

Question 1.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது ஔவையாரின் அறிவுரை, பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’

அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான் எழிலன்.

வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.

அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.

எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து வைத்தான்.

வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத் தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில் வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில் பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது 6 பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.

எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.

அருளப்பரின் அறிவுரை :
“பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.

முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Students can Download 9th Tamil Chapter 7.2 சீவக சிந்தாமணி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.2 சீவக சிந்தாமணி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 1.
அருகிலுள்ள இயற்கைக் காட்சிகளைக் குறிப்பெடுத்து ஓவியம் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 தமிழர் பங்கு - 1

  • நான் வசிக்கும் இடத்தின் அருகில், ஒரு குளம் இருக்கின்றது.
  • குளத்தைச் சுற்றிலும் வயல் வெளிகள் உள்ளன.
  • குளத்தின் கரையில் ஓர் ஆலமரம் உள்ளது.
  • பறவைகளும், கிளிகளும் அதில் வசித்து மகிழ்கின்றன. பறவைகள் தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காட்சி மனதை மயக்கும்.
  • வயல் வெளிகளில் கூட்டமாய் உழவர்கள் வேலை செய்யும் போது ஆரவாரம் காணப்படும்.
  • மாலை நேரத்தில் மயிலும் தோகை விரித்து ஆடும்.

Question 2.
உங்கள் பள்ளி வேரூன்றிய நாள் தொடங்கி வளர்ந்த வரலாற்றையும், அதன் சிறப்புகளையும் கட்டுரையாக்குக.
Answer:

எங்கள் பள்ளி

முன்னுரை : நான் பயிலும் பள்ளி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும். அன்ன சத்திரம் ஆயிரம், ஆலயங்கள் பல்லாயிரம் கட்டுவதைக் காட்டிலும் ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடி புண்ணியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அல்லவா! எழுத்தறிவு கொடுத்துக் கொண்டிருக்கும் அறிவுத் திருக்கோவில் எம் பள்ளி.

தோற்றம் : எங்கள் பள்ளி அப்போதைய ஆங்கில அரசால் 1918 ம் ஆண்டு ஒன்று முதல் எட்டு வரை உள்ள நடுநிலைப் பள்ளியாகத் தோன்றி வேரூன்றி வளர ஆரம்பித்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

வளர்ச்சி : பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. பின் 1978 இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்று கம்பீரமாக நகரின் மையத்தில் உள்ளது.

சாதனைகள்:
இந்த ஆண்டு எம் பள்ளி நூற்றாண்டு விழா காண இருக்கின்றது. பல அறிஞர்களை, விற்பனர்களை, சமூக சேவகர்களை, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களை, மருத்துவர்களை, பொறியாளர்களை, வழக்குரைஞர்களை, அறிஞர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கி நல்லறிவு புகட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவுக் கோயிலாகத் திகழ்கிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

முடிவுரை: பல்துறைகளிலும் முத்திரை பதிக்க பலருக்கும் வழிகாட்டிய அறிவுப் பெட்டகமாகவும், பலருடைய வாழ்வை உயரத்திற்குக் கொண்டு சென்ற ஏணியாகவும் இன்று வரை திகழ்கிறது. பல தலைமுறை கண்ட எம் பள்ளி, இன்னும் பல புதிய தலைமுறைகளை உருவாக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
Answer:
அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.
ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்.
இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்.
ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்.
Answer:
அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

குறுவினா

Question 1.
கருக்கொண்ட பச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
Answer:
கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

சிறுவினா

Question 1.
ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
Answer:

  • வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
  • பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.
  • மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
  • செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
  • ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

நெடுவினா

Question 1.
ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
Answer:
முன்னுரை:
சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில்” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.

வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்த து.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.

மண்வீசும் வயல்வளம்:
ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.

இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.

அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

ஆயிரம் விழாக்கள்:
வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.

முடிவுரை:
இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இன்பங்களைத்துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) வளையாபதி
இ) குண்டலகேசி
ஈ) சீவகசிந்தாமணி
Answer:
ஈ) சீவகசிந்தாமணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 2.
சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
அ) மனநூல்
ஆ) மணநூல்
இ) மங்கல நூல்
ஈ) சமண நூல்
Answer:
ஆ) மணநூல்

Question 3.
சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
அ) பதினான்கு
ஆ) பதினைந்து
இ) பதினாறு
ஈ) பதின்மூன்று
Answer:
ஈ) பதின்மூன்று

Question 4.
சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைசாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) கணிமேதாவியர்
Answer:
இ) திருத்தக்கத்தேவர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 5.
சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
அ) நரிவெண்பா
ஆ) நரிவிருத்தம்
இ) சிந்தாமணிமாலை
ஈ) காவடிச்சிந்து
Answer:
ஆ) நரிவிருத்தம்

Question 6.
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
அ) விமலையார்
ஆ) சுரமஞ்சரி
இ) காந்தருவதத்தை
ஈ) நாமகள்
Answer:
ஈ) நாமகள்

Question 7.
திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) வைணவம்
ஈ) சைவம்
Answer:
ஆ) சமணம்

Question 8.
பொருத்துக. சொல்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி - 2
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 9.
நெறி மருப்பு எருமை – வெறி கமழ் கழனி இத்தொடரின் கோடிட்ட சொற்களின் பொருள் யாது?
அ) கொம்பு, மணம்
ஆ) வயல், மலை
இ) தேங்காய், புகழ்
ஈ) சோறு, எல்லை
Answer:
அ) கொம்பு, மணம்

Question 10.
வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம் …………
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Question 11.
ஐம்பெருங்காப்பியத்தில் இடம் பெறாத நூல் …………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவக சிந்தாமணி
ஈ) நீலகேசி
Answer:
ஈ) நீலகேசி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 12.
வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும்……………… வகையான உணவுகள் கிடைக்கின்றன.
அ) பத்து
ஆ) நூறு
இ) பல
ஈ) ஆயிரம்
Answer:
ஈ) ஆயிரம்

Question 13.
ஏமராங்கத நாட்டிலுள்ள மணிமாடங்களின் எண்ணிக்கை………………..
அ) நூறு
ஆ) ஆயிரம்
இ) இரண்டாயிரம்
ஈ) இருநூறு
Answer:
ஆ) ஆயிரம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 14.
சீவகசிந்தாமணியின் நாமகள் சிலம்பத்தில் ………….. என்னும் பகுதி நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.
அ) நாட்டு வளம்
ஆ) காட்டு வளம்
இ) ஆற்று வளம்
ஈ) இயற்கை வளம்
Answer:
அ) நாட்டு வளம்

Question 15.
திருத்தக்கத்தேவரின் காலம் ……………..
அ) எட்டாம் நூற்றாண்டு
ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு
இ) ஆறாம் நூற்றாண்டு
ஈ) ஏழாம் நூற்றாண்டு
Answer:
ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு

Question 16.
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ……………
அ) சிலப்பதிகாரம்
ஆ) கம்பராமாயணம்
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
Answer:
இ) சீவகசிந்தாமணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

குறுவினா

Question 1.
வரால் மீன்கள் கலைந்து ஓடுவதற்கான காரணம் யாது?
Answer:
அழகான கொம்புகளை உடைய ஆண் எருமைகளும் நேரான கொம்புகளையுடைய வலிமையான எருதுகளும் பேரொலி எழுப்புவதைக் கேட்டுப் புள்ளிகளும், வரிகளும் உடைய வரால் மீன்கள் கலைந்து ஓடுகின்றன.

Question 2.
நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது எதனைப் போன்றது?
Answer:
நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது, செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலை நிமிர்ந்து நிற்பது போன்றதாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Question 3.
பயிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருப்பது எதனைப் போன்றது?
Answer:
தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப் போன்றதாகும்.

Question 4.
ஏமாங்கத நாடு எவர்க்கெல்லாம் இனிய இடமாகத் திழக்கிறது?
Answer:
ஏமாங்கத நாடு, உண்மையான தவம் புரிவோர்க்கும் இல்லறம் நடத்துவோர்க்கும் இனிய இடமாகத் திகழ்கிறது.

Question 5.
எவற்றைத் தேடுவோர்க்கு உகந்த இடமாக ஏமாங்கத நாடு விளங்குகிறது?
Answer:
நிலையான பொருளைத் தேடுவோர்க்கும் நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடுவோர்க்கும் உகந்த இடமாக ஏமாங்கத நாடு விளங்குகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

சிறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
AnsweR:

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

Question 2.
சீவகசிந்தாமணி குறிப்பு வரைக.
Asnwer:

  • சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ஆகும்
  • இந்நூலில் இலம்பகம் என்னும் உட்பிரிவு காணப்படுகிறது.
  • இந்நூல் மொத்தம் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டது.
  • இதற்கு மணநூல் என்று மற்றொரு பெயரும் உண்டு.
  • திருத்தக்கதேவரால் இயற்றப்பட்ட நூல்,

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Students can Download 6th Tamil Chapter 6.3 வளரும் வணிகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.3 வளரும் வணிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 1.
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
எங்கள் ஊர் – நீலகிரி :
(i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர்.
(ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள்.
(iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் போன்றவை.

Question 2.
ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
Answer:
சிறப்புப் பொருள்கள் :
(i) மதுரை மல்லி
(ii) திருப்பதி லட்டு
(iii) திருநெல்வேலி அல்வா
(iv) திண்டுக்கல் பூட்டு
(v) மணப்பாறை முறுக்கு
(vi) சேலம் மாம்பழம்
(vii) காஞ்சிபுரம் பட்டு
(viii) பழனி பஞ்சாமிர்தம்
(ix) பொல்லாச்சி இளநீர்
(x) ஊட்டி ரோஜா
(xi) காஞ்சிபுரம் இட்லி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
Answer:
அ) நுகர்வோர்

Question 2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer:
இ) வணிகச்சாத்து

Question 3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer:
அ) பண்டமாற்ற

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ண மான + படங்கள்
Answer:
அ) வண்ண ம்+ படங்கள்

Question 5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer:
இ) விரிவு + அடைந்த

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

குறுவினா

Question 1.
வணிகம் என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

Question 2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

Question 3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
Answer:
பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 1

Question 2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
Answer:
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

சிந்தனை வினா

Question 1.
வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
Answer:
(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.
(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.
(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.
(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.
(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 2

கூடுதல் வினாக்கள்

Question 1.
வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் யாவை?
Answer:
(i) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
……………….
உமணர் போகலும். – நற்றிணை – 183
(ii) பாலோடு வந்து கூழொடு பெயரும்………….. – குறுந்தொகை – 23
(iii) பொன்னோடு வந்து கறியொடு பெயரும்………… – அகநானூறு – 149

Question 2.
வணிகத்தின் வகைகளையும் அவ்வகையில் நடைபெறும் வணிகம் பற்றியும் எழுதுக.
Answer:
(i) வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் E வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை – ‘வணிகச்சாத்து’ என்பர்.

(ii) கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம்’ என்றும் ‘பாக்கம்’ என்றும் குறிக்கப்பட்டன.

(iii) தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(iv) வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

Question 3.
இணையவழி வணிகம் பற்றி எழுதுக.
Answer:
(i) கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

(ii) இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவன பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

(iii) பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.

(iv) பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Students can Download 6th Tamil Chapter 6.2 கடலோடு விளையாடு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.2 கடலோடு விளையாடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 1.
பாடப்பகுதியில் உள்ள பாடலை பாடலை இசையோடு பாடிக் காட்டுக.
Answer:
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
விண்ணின் இடி காணும் கூத்து – ஐலசா

Question 2.
உங்களைக் கவர்ந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வருக.
Answer:
ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணான எங்கள் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே
மட்டுருக் காலை அருவாளு மடித்து
மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே
போட்டு வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு
வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

Question 3.
சொந்தமாக கடல், வானம், மலை ஆகியவற்றைப் பாடல் எழுதிப் பாடுக.
Answer:
கடல் :
அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா
உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்
போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா
பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!
முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!
சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!
முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்
வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

வானம் :
வாழ்வில் இன்பமும் துன்பமும்
உண்டென்பதை உணர்த்த
வானில் சந்திரனையும் சூரியனையும்
உன்னகத்தே வைத்தாய்!
வாழ்வில் தோன்றி மறையும்
நகைச்சுவை போல
வானில் தோன்றி மறையும்
மின்னலைக் காட்டினாய்!
மனிதன் கைமாறு கருதா
உதவிகள் செய்வதற்கு
முகில் கூட்டங்களை வைத்து
மழைபெய்வித்துச் சான்றானாய்!
வானமே! எத்தனைப் பேருக்கு
அடைக்கலம் தந்தாய்!
வாழ்க்கைப் பெட்டகமே நீயேதான்!
வாழ்க வளர்கவே!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

மலை :
காடுகளை உனதாக்கி
மழையினைத் தந்தாய்!
சுவைமிகு காய்கனிகளை உனதாக்கி
நல் அமுதினைத் தந்தாய்!
அரிய மூலிகைகளை உனதாக்கி
மாமருந்தினைக் தந்தாய்!
பல்வகை உயிரினங்களுக்கும்
இருப்பிடம் தந்தாய்!
மலைமகளே உன்னைப்
பாதுகாப்போம் பராமரிப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
Answer:
ஈ) கதிர் + சுடர்

Question 2.
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
Answer:
அ) மூச்சு + அடக்கி

Question 3.
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
Answer:
ஆ) பெருவானம்

Question 4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
Answer:
அ) அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு
Answer:
அ) 4
ஆ) 1
இ) 2
ஈ) 3

குறுவினா

Question 1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
Answer:
மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 2.
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

சிறுவினா

Question 1.
‘கடல்’ பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள், விரிந்த கடலே பள்ளிக்கூடம்.

(ii) கடல் அலையே தோழன், மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சல்.

(iii) பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை.

(iv) கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்: வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி.

(v) மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.
Answer:
நான்வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் பாய் பின்னும் தொழில்(வந்தவாசி):
தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் வந்தவாசியில் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருள் கோரை. இது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

தமிழகத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பெல்லாம் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட பாய்கள், தற்போது இயந்திரங்கள் மூலம் நெய்யப்படுகிறது.

கோரைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களைச் சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணி நிகழ்கிறது.

பத்தமடைப் பாய் எந்த அளவு புகழ்பெற்றதோ அதே போல் எங்கள் பகுதியான வந்தவாசியில் தயாரிக்கும் பாய்களும் புகழ்பெற்றது. பாயில் பல வகைகள் உள்ளன. அவை கோரைப்பாய், பிரம்புப் பாய், ஈச்சம்பாய், மூங்கில் பாய், நாணல் கோரைப் பாய் என்பனவாம். பாயைத் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.

கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முகுது வலி வராமலும் தடுக்கும். பாயில் படுத்து உறங்குவது ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தருகிறது.

Question 2.
நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
Answer:
நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்துபவைகளாக விளங்கும். இவை பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம். இப்பாடல்களுக்கு ஆசிரியர் என்று ஒருவர் இல்லை. இவை ஓலைச்சுவடிகளில் பதிவு பெறுவதற்கு முன்பு வாய்மொழியாக ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பதிவு செய்யப்பட்டன.

இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக அல்லது செவி வழியாக பகிரப்பட்டு வந்தவை ஆகும். ஏட்டில் எழுதப்படாமல் வழிவழியாக தாய் பாட அவளைத்தொடர்ந்து மகள் எனப் பல தலைமுறையாகப் பாடப்படுகிறது. நாட்டுப்புறங்களில் .9 பாடப்பட்டு வளர்ந்தவை. எழுதப்படாமல் வாய்மொழியாக வளர்ந்தமையால் இது வாய்மொழி இலக்கியம் எனப் பெயர் பெற்றது.

இதன் வேறு பெயர்கள் – பாமரர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், ஏட்டில் எழுதாக் கவிதை, காற்றிலே மிதந்த கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்.

வகைகள் – புராணக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஏற்றப்பாட்டு, விதைப்புப் பாட்டு, நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு, நெல் குத்தும் பாட்டு, சுண்ணம் இடிக்கும் பாட்டு தெம்மாங்குப் பாடல்கள்,

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Question 2.
நீ அறிந்த நாட்டுப்புறப் பாடல்களின் பெயர்களை எழுதுக.
Answer:
நடவுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, வள்ளைப் பாட்டு, விடுகதைப் பாட்டு, ஏற்றப்பாட்டு, 5 பரிகாசப் பாட்டு, கும்மிப் பாட்டு, கண்ண ன் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு.

Question 3.
நெய்தல் திணை பற்றி எழுதுக.
Answer:
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

Students can download 5th Maths Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

Question 1.
Choose the correct answer

(i) Which shape have 6 triangles?
(a)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 1
(b)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 2
(c)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 3
(d)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 4
Answer:
(b)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

(ii) Find which garland has made up of 12 beads?
(a)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 5
(b)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 6
(c)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 7
(d)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 8
Answer:
(c)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

Question 2.
Answer the following
(i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 9
4, 4, 3, 5, 4, 4, _______, _______, _______, _______, _______, _______,
Answer:
4, 4, 3, 5, 4, 4, 3, 5, 4, 4, 3, 5 [Number of sides]

(ii) 1, 1, 2, 3, 5, 8, _______, _______, _______, _______, _______, _______,
Answer:
1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55
Hint:
5 + 8 = 13
13 + 8 = 21
21 + 13 = 34
34 + 21 = 55

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

Question 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 10
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 11
Answer:
3 + 4 + 5 + 3 – 4
= 15 – 4
= 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing Ex 6.1 12
Answer:
44 – 33 = 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions

Students can download 5th Maths Term 2 Chapter 6 Information Processing InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 6 Information Processing InText Questions

Try This (Text Book Page No.50)

How many squares are there?
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 1
Answer:
6 squares

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions

Activity (Text Book Page No.50)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 2
Answer:

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions

Activity (Text Book Page No.50)

The following shapes are drawn instead of numbers 0, 1, 2, 3, 4, 5. Shall we find the number of each shapes.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 4
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions

Activity (Text Book Page No.51)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 7

(i) Number of circles _________
Answer:
9

(ii) Number of Triangles _________
Answer:
18

(iii) Number of Squares _________
Answer:
2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions

Try These (Text Book Page No.51)

How many rectangles are there in this diagram?
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 Information Processing InText Questions 8
Answer:
24

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Students can Download 9th Tamil Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 1.
நீங்கள் நாட்டிற்கு உங்கள் பங்கினை அளிக்க விரும்புகிறீர்களா? இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தகுதி அவர்களுக்கான பணிகள் குறித்த கருத்துகளைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள் : ஆசிரியர், மணிமாறன், மதிமாறன், எழில் ஆகியோர்.

மணிமாறன் : ஐயா! இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற இக்கட்டுரையைப் படித்தவுடன், எனக்கும் இராணுவத்தில் சேர ஆசையாக உள்ளது.
மதிமாறன் : எனக்கும் தான் ஐயா!
எழில் : ஐயா! எனக்கும்தான்! பெண்களும் சேரலாம் தானே ஐயா!
ஆசிரியர் : எல்லோருமே சேரலாம் எழில்..
மணி : ஐயா! அதற்கான வழிமுறைகள் தகுதிகள் என்ன ஐயா…
ஆசிரியர் : 1 பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(இது குறைந்தபட்ச கல்வித்தகுதி) கல்வித் தகுதிக்கு ஏற்ப பணிகள் உண்டு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

மதிமாறன் : ஐயா… உடல் தகுதிகள் பற்றி
மணிமாறன் : நன்கு உயரமாக வேண்டுமா?ஐயா!
ஆசிரியர் : 157.5 செ மீ உயரம் இருக்க வேண்டும். எந்த வகையான உடற்கோளாறும் இருக்கக்கூடாது.
எழில் : ஐயா பெண்களுக்கு…
ஆசிரியர் : 1 பெண்கள் இராணுவத்தில் சேர ‘வுமன் என்ட்ரி’ உள்ளது. அதன் மூலம் சேரலாம்.

மதிமாறன் : ஏதாவது தேர்வு எழுத வேண்டுமா?
ஆசிரியர் : ஆமாம் மாறா! என். டி. ஓ. எனப்படும் தேர்வு எழுத வேண்டும்.
மணிமாறன் : எப்போது தேர்வு நடக்கும் ஐயா!
ஆசிரியர் : ஏப்ரல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.

‘எழில்: ஐயா! தேர்வில் தேர்ச்சியடைந்தால் உடனே சேர்ந்து விடலாமா?ஐயா.
ஆசிரியர் : தேர்ச்சி பெற்றபின், ஓராண்டு இராணுவப் பயிற்சி தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் பணி வழங்கப்பட்ட பின் ஓர் ஆண்டு பயிற்சி என ஐந்து ஆண்டுகள் பயிற்சியளிக்கப்பட்டு முறைப்படி இராணுவப் பணியில் சேர்க்கப்படுவர்.

மதிமாறன் : இராணுவ வீரர்களின் பணிகள் என்னென்ன ஐயா!
ஆசிரியர் : நாட்டையும், மக்களையும் காப்பது, எல்லைக் கண்காணிப்பு பயங்கரவாத எதிர்ப்புப்பணி, அரசு விழாக்களுக்கு பாதுகாப்பு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட உதவுதல், இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணி மற்றும் நிர்மாணிப்புப் பணிகள் மலைப்பகுதி, காடுகளில் கட்டுமான பணிகள். இவ்வாறு ராணுவ வீரர்கள் செய்யும் பணிகள் பலவாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

மணிமாறன் : ஐயா! கேட்க கேட்க எனக்கும் அதில் இணைய வேண்டும் என்ற ஆவல் மிக்கெழுகிறது ஐயா!
எழில் : வணக்கத்துக்கும், பாராட்டுக்கும் உரிய தியாகப்பணியாம் ராணுவப் பணியில் நானும் என்னை அதில் இணைத்துக் கொள்வேன் ஐயா.

மதிமாறன் : ஐயா! உங்கள் விளக்கம் எங்கள் ஐயங்களைப் போக்கியதோடு எங்கள் மனதில் நாட்டுப்பற்றையும் ஊட்டி விட்டது.
மூவரும் : நன்றி ஐயா!

Question 2.
எனக்குப் பிடித்த விடுதலை போராட்ட வீரர் என்ற தலைப்பில் அவர் தம் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலக்கோட்டில் உருவாக்குக
Answer:
எனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர் “சுப்பிரமணிய சிவா” அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிக்கும் காலக்கோடு.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் - 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இந்திய தேசிய இராணுவம் ……….. இன் தலைமையில் ………. உருவாக்கினர்.
அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்.
ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்.
இ) மோகன்சிங், ஜப்பானியர்.
ஈ) மோகன்சிங், இந்தியர்.
Answer:
இ) மோகன்சிங், ஜப்பானியர்.

Question 2.
கூற்று : இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ) கூற்று சரி, காரணம் சரி.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணம் தவறு.
Answer:
அ) கூற்று சரி, காரணம் சரி.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

குறுவினா

Question 1.
இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
Answer:

  • கேப்டன் தாசன்
  • ஜானகி
  • அப்துல் காதர்
  • இராஜாமணி
  • சிதம்பரம்
  • கேப்டன் லட்சுமி
  • லோகநாதன்
  • இராமு

Question 2.
தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
Answer:
நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 3.
‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
Answer:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தார். 1943-ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பொறுப்பை ஏற்கும்போது டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ (டெல்லி சலோ) எனப் போர் முழக்கம் செய்தார்.

சிறுவினா

Question 1.
குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.
Answer:
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

இரண்டாம் உலகப் போர்ச்சூழலில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, படகு வழியாகத் தப்பி, கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அைைலகளில் சிக்கித் தவித்து 45 பேரும் ஜப்பானின் கியூசு தீவை அடைந்து பயிற்சி பெற்றனர்.

பனிபடர்ந்த மைதானத்தில் காலை 5 மணிக்கு குளிர் ஜீரோ (சுழியம்) டிகிரிக்கும் கீழ் இருக்கும் நிலையில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றனர். இவர்களே டோக்கியோ கேடட்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.

Question 2.
பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
Answer:
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு பகுதி கார்கில். ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதி. பனிபடர்ந்த இமயமலைப் பகுதி எப்பொழுதும் குளிர் சுழியத்திற்கு (-) கீழ்தான் இருக்கும்.

1999ஆம் ஆண்டு குளிர்காலத்தில் -20° குளிர்நிலவிய நிலையில் இந்திய இராணுவம் படைகளை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் கார்கிலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவினர். மாடு மேய்ப்போர் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவ கேப்டன் சவுரப் காலியாவிடம் தெரிவித்தனர். இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப்படை அசுரவேக தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து இந்திய கடற்படை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

போர் விமானங்களும் குண்டுகளை வீசின. மிக் 27, மிக் 21, எம்.ஐ. 17 ஆகிய 3 விமானங்களை இந்தியா இழந்தது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களில் 4000 பேரும் இந்திய தரப்பில் 527 பேரும் பலியானார்கள். போர் முடிவில் கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. பேரிடர் காலங்களில் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது.

நெடுவினா

Question 1.
இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.
Answer:
முன்னுரை:
இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது.

நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

தூண்கள்:
1943ம் ஆண்டு, நேதாஜி “டெல்லி சலோ” என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் ‘பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார்.

பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான் என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.

இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

இரண்டாம் உலகப்போரில் தமிழர்:
இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.
“தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.

மரணம் பெரிதன்று:
1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.

நேதாஜியின் பாராட்டு:
இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

முடிவுரை:
தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு ……
அ) 1948
ஆ) 1932
இ)  1942
ஈ) 1952
Answer:
இ) 1942

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 2.
இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
அ) முத்துலட்சுமி
ஆ) நீலாம்பிகை
இ) வள்ளியம்மை
ஈ) ஜான்சிராணி
Answer:
ஆ) ஜான்சிராணி

Question 3.
தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமர் ……
அ) சர்ச்சில்
ஆ) கிளமண்ட் அட்லி
இ) ஸ்டான்லி பால்குவின்
ஈ) மெக்டொனால்டு
Answer:
அ) சர்ச்சில்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 4.
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
அ) இம்பால்
ஆ) நம்போல்
இ) மொய்ராங்
ஈ) அன்ரோ
Answer:
இ) மொய்ராங்

குறுவினா

Question 1.
இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படை குறித்து எழுதுக.
Answer:
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணிபெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ்ப் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 2.
மரண தண்டனை பெற்ற அப்துல் காதரின் கருத்து யாது?
Answer:
1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கில அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியதால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்’ என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.

Question 3.
‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொன்மொழிகள் யாவை?
Answer:
அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப்பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Question 4.
மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா?
Answer:
விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும், சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Students can Download 9th Tamil Chapter 6.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 1.
படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்க
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 1
அ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்.
இ) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Answer:
இ) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 2.
பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்து பொருத்துக. (விடையுடன்)
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 2
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 3

Question 3.
ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும்
ஆ) நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும்
ஈ) இணக்கமும் பிணக்கமும்
Answer:
ஆ) நாணமும் இணக்கமும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 4.
கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 4
அ)அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்……………..
ஆ)உலகத்துக்கு அச்சாணி போன்றவர்-…………….
இ) தான் நாணான் ஆயின்…………….. நாணத்தக்கது
ஈ) ஆழி என்பதன் பொருள் ……………..
உ)மாற்றாரை மாற்றும்……………..
ஊ) ஒழுக்கமான குடியில் பிறந்தவர் …………….. செய்வதில்லை
Asnwer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 5
அ) ஒப்புரவு
ஆ)  உழவர்
இ) அறம்
ஈ) கடல்
உ) படை
ஊ) தவறு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 5.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
இக்குறளின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்கக் கதை எழுதுக
Asnwer:
நான் வசிக்கும் ஊருக்கு அருகில் ஒரு சிறிய கிராமம் (சிற்றூர்) உள்ளது. 100 குடும்பங்களே உடைய அச்சிற்றூரில் உழவே பிரதானமான தொழில். அங்குள்ள மக்களுக்கு கல்வியறிவு கிடையாது. அவ்வூருக்கு நன்கு படித்த பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் குடி வந்தார். அவர் பெயர் சாமிநாதன்.
அண்டை ஊரில் இருந்து ஒரு செல்வந்தன் இச்சிற்றூர் மக்களின் விளைபொருட்களை அநியாயமாக அடித்துப் பிடித்து அரைகுறை விலையில் வாங்கிக் கொண்டிருந்தான்.

சாமிநாதன் அந்த ஊருக்கு வந்தவுடன் இதனைத் தெரிந்து கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்கள் நியாயவிலையாய் இருந்தால் வாங்கிக்கொள் இல்லையென்றால் சென்று விடு என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். செல்வந்தன் காரணம் அறிந்து கொண்டு சாமிநாதனைச் சந்தித்து வழக்கமாக நான் செய்வதைத் தடையின்றி செய்ய உதவினால், உமக்குச் சரிபாதி பணத்தையும், உனக்குத் தேவையான தானியவகைகள் அனைத்தையும் விலையில்லாமல் உமக்கும் தருகிறேன் என்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

ஆனால் சாமிநாதனோ ………. நீ கோடி கோடியாய்க் கொடுத்தாலும், நீதி தவறி நடக்க மாட்டேன், இந்த அப்பாவி மக்களின் வயிற்றில் உன்னை அடிக்கவிட மாட்டேன் என்று ஓடிப்போ …….. என்று விரட்டி விட்டார்………. தன் நிலையில் இருந்து மாறவில்லை அவர்.
ஆம்.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்” அன்றோ

பாடநூல் வினாக்கள்

சிறுவினா

Question 1.
இறக்கும் வரை உள்ள நோய் எது?
Answer:
தன் செயலைப் பிறர் எடுத்துச் சொல்லியும் செய்யாதவனாய், தானும் சிந்தித்து செயல்படத் தெரியாதவனாய் உள்ளவனின் வாழ்வு, உயிர் போகும் வரை உள்ள நோய் ஆகும்.
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவும் ஓர் நோய்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 2.
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண் –
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.
Answer:
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி ஏகதேச உருவக அணி ஆகும்.
அணி விளக்கம் : ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.

பொருத்தம் : மேற்கூறிய இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை (விதானம் – கூரை) என உருவகிக்காமல் விட்டு விட்டதால் ஏகதேச அணிக்குப் பொருந்தி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

வருகிறது.

Question 3.
உலகிற்கு அச்சாணி எனப்படுபவர் யார்? ஏன்?
Answer:
உலகிற்கு அச்சாணியாக விளங்குபவர் உழுபவரே ஆவார். மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

Question 4.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான் கண்டவாறு
இக்குறட்பாவில் பயின்று வரும் தொடைநயத்தை எழுதுக.
Answer:
காணாதான்
காணான் கண்டானாம் | கண்டவாறு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் - 6
இதில் உள்ள நயம்: சீர் மோனை, சீர் எதுகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெறிக

Question 1.
அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்
அ) குடிஇழிந்தார்
ஆ) குடி இறந்தார்
இ) குடிப்பிறந்தார்
ஈ) குடிமகிழந்தார்
Answer:
இ) குடிப்பிறந்தார்

Question 2.
ஊழி பெயரினும் தான் பெயராதவர்
அ) பொய்மையுடையவர்
ஆ) இழித்தன்மையுடையவர்
இ) சான்றாண்மையுடையவர்
ஈ) கொடுங்கோலர்
Answer:
இ) சான்றாண்மையுடையவர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 3.
“சாகும் வரை உள்ள நோய்” – என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
அ) அறிவுடையாரை
ஆ) புல்லறிவுடையாரை
இ) அன்புடையாரை
ஈ) பண்புடையாரை
Answer:
ஆ) புல்லறிவுடையாரை

Question 4.
காணாதான் காட்டுவான் – காணாதான் யார்?
அ) அறிவுடையான்
ஆ) அறிவில்லாதவன்
இ) அன்புடையான்
ஈ) பண்புடையான்
Answer:
ஆ) அறிவில்லாதவன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
அறம் யாரை விட்டு விலகிப்போகும்?
Answer:
பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால், அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும்.

Question 2.
சிறந்த இன்பம் எப்போது பெறலாம்?
Answer:
துன்பங்களில் மிகக் கொடிதான மனக்கசப்பு என்னும் பகையாகிய துன்பம் அழிந்து விட்டால் இன்பங்களில் சிறந்த இன்பத்தைப் பெறலாம்.

“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்”

Question 3.
உழவே தலை – ஏன்?
Answer:
உலகம் பல தொழில்களால் இயங்குகிறது. எனினும் உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலுக்குப் பின்னாலேயே போகும். அதனால் வருந்தி உழைத்தாலும் உழவே சிறந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

சிறுவினா

Question 1.
சான்றாண்மை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகள் யாவை?
Answer:

  • பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்! அணி – ஏகதேச உருவக அணி
  • செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.
  • ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார்!

Question 2.
உழவுத் தொழிலை வள்ளுவர் எவ்வாறு போற்றுகிறார்?
Answer:

  • உலகம் பல தொழில்களைச் செய்து இயங்கினாலும் (சுழன்று வந்தாலும்), உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலை நம்பியே அதன் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் உழவுத்தொழிலே முதன்மையான சிறந்த தொழிலாகும்.
  • பிற தொழில்கள் செய்யும் அனைவரையும் உழுபவரே தாங்கி நிற்பவர் ஆவார். எனவே உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ஆவார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 3.
சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
Answer:

  • அன்பு
  • பழிக்கு அஞ்சுதல் (நாண்)
  • ஒப்புரவு (இணக்கம்)
  • கண்ணோட்டம்
  • வாய்மை – இவையே சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் ஆகும்.

புல்லறிவாண்மை

அதிகார விளக்கம் : அறிவு இல்லாமையும், தானாகச் செயலைச் செய்யும் தெளிவு இல்லாமையும் உடையாரின் இழிவு கூறப்படுகிறது.

Question 1.
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்
Answer:
தனக்கான செயலை (நன்மையை) பிறர் எடுத்துச் சொன்னாலும் செய்யாதவனாய் தானாகவும் சிந்தித்துச் செய்யாதவனாய் உள்ளவன், வாழும் காலம் முதல் உயிர் போகும் காலம் வரை தீராத நோயாளி ஆவான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 2.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
Answer:
அறிவில்லாதவனுக்குத்தனது அறிவைக்காட்டநினைப்பவன், தானே அறிவில்லாதவனாய்
நிற்பான். அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வரையில் தன்னை அறிவுள்ளவனாக
எண்ணித் தோன்றுவான். (கொள்வான்)

சொல்லும் பொருளும்:
ஏவலும் – எடுத்துச் சொல்லுதல்
செய்கலான் – செய்யாதவன்
தான் தேறான் – தானாகத் தெளிந்து செய்யாதவன்
காணாதான் – அறிவில்லாதவன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

இகல்

அதிகார விளக்கம் : மற்றவர்களோடு கூடி வாழா தீய பண்பே இகல் எனப்படும்.

Question 3.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
Asnwer:
துன்பங்களில் மிகக் கொடிதான மனக்கசப்பு என்னும் பகையாகிய துன்பம் அழிந்து விட்டால், இன்பங்களில் பெரிய இன்பம் உண்டாகும்.
சொல்லும் பொருளும் :
இகல் – மனக்கசப்பால் வரும் பகை

குடிமை

அதிகார விளக்கம் : உயர்குடிப்பிறப்பின் சிறப்பை உணர்த்தும் அதிகாரம்

Question 4.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
Answer:
கோடி கோடியாய்ப் பொருளை அடுக்கிக் கொடுத்தாலும், அத்தகுப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கக் குறைவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்:
கோடி – கோடிக்கணக்கான பொருள்
குடிப்பிறந்தார் – உயர்குடிப்பிறந்தவர்
குன்றுவ செய்தல் இலர் – ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யமாட்டார்.

சான்றாண்மை

அதிகார விளக்கம் : உயர்குணம் பொருந்திய சான்றோர்களின் பண்புகளையும் சிறப்புகளையும் கூறும்
அதிகாரம்

Question 5.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
Answer:
அன்பு, பழிக்கு நாணுதல், வெட்கப்படல், கொடுத்து உதவும் பண்பு இரக்கம், உண்மை, ஆகிய ஐந்தும் சான்றாண்மை என்னும் விதானத்தை (கூரையை) தாங்கும் தூண்களாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 6.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
Answer:
செயல் செய்யும் ஆற்றல் உடையவரின் பெரிய ஆற்றலே, பணிவுடன் நடத்தல் ஆகும். அதுவே, பகைவர்களையும் நண்பர்களாக்கும் சான்றோர் தம் ஆயுதமாகும்.

Quesiton 7.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்,
Answer:
சான்றாண்மைக்குக் கடல் என்று, மதிக்கப்படுகின்றவர்கள் சான்றோர். உலகமே அழியும் ஊழிக்காலம் வந்தாலும், தம் நிலையில் இருந்து வேறுபடாமல் இருப்பர்.

சொல்லும் பொருளும்:
நாண் – பழிக்கு நாணுதல்
ஒப்புரவு – அனைவரிடமும் இணக்கம்
மாற்றாரை – பகைவரை
பெயரார் – தன் நிலையில் மாறாதவர்
ஆழி – கடல்

நாணுடைமை

அதிகார விளக்கம் : தகாத செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படுதல்

Question 8.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
Answer:
பிறர் நாணத்தகுந்த பழிச் செயல்களுக்கு அஞ்சாமல், நாணம் இன்றி ஒருவன் இருப்பானாகில், அறக்கடவுள் நாணி அவனைக் கைவிட்டு விடும்.

சொல்லும் பொருளும்:
நாணம் – அஞ்சுதல், வெட்கப்படுதல்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

உழவு

அதிகார விளக்கம் : உழவுத் தொழிலின் மேன்மையையும், சிறப்பையும் கூறுவது

Question 9.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Answer:
உலகம் பல தொழில்களைச் செய்து இயங்கினாலும் (சுழன்று வந்தாலும்), உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலை நம்பியே அதன் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் உழவுத்தொழிலே முதன்மையான சிறந்த தொழிலாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 10.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Answer:
பிற தொழில்கள் செய்யும் அனைவரையும் உழுபவரே தாங்கி நிற்பவர் ஆவார். எனவே உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ஆவார்.

சொல்லும் பொருளும்:
சுழன்று – இயங்கி
உழந்தும் – துன்பத்திற்கு உள்ளாகுதல்
தலை – முதன்மையான
எழுவாரை – பிற தொழில் செய்து வாழ்வோரை
பொறுத்து – தாங்கும்
ஆணி – அச்சாணி