Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Question 1.
உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வாழ்க்கை

“பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மைச்
சுமக்க தொடங்குகிறார்கள்”.
– மு. மேத்தா

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எட்டையபுரம்:
கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்தே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர், அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

சீவைகுண்டம் – கொற்கை:
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.

கருவை நல்லூர்:
சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர், இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

குற்றாலம்:
கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்த்து அமைந்திருப்பதைப்பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி, அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

முடிவுரை:
தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 1.
உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.
Answer:
கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் – அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள்.

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.
Answer:
திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் , திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு – ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருநெல்வேலி ……………….. மன்னர்களோடு தொடர்பு உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
இ) பாண்டிய

Question 2.
இளங்கோவடிகள் …………………. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
Answer:
இ) பொதிகை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 3.
திருநெல்வேலி ………………. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
Answer:
ஈ) தாமிரபரணி

பொருத்துக

1. தண்பொருநை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை – குற்றாலம்
3. கொற்கை – தாமிரபரணி
4. திரிகூடமலை – முத்துக் குளித்தல்
Answer:
1. தண்பொருநை – தாமிரபரணி.
2. அக்கசாலை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
3. கொற்கை – முத்துக்குளித்தல்
4. திரிகூடமலை – குற்றாலம்

குறு வினா

Question 1.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
Answer:
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.

Question 2.
கொற்கை முத்து பற்றிக் கூறுக.
Answer:

  1. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
  2. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது.
  3. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சிறு வினா

Question 1.
திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.
Answer:
(i) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.

(ii) இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

(iii) மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 2.
திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்.

(ii) சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.

(iii) ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது.

Question 3.
திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.
Answer:
நெல்லையில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன.
(i) காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

(ii) மேல வீதியை அடுத்து கூழைக்கடைத் தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத் தெரு ஆகும்.

(iii)  முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை.

சிந்தனை வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 1.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Answer:

  1. இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
  2. அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
  3. சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
  4. சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர் …………………
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
அ) பாளையங்கோட்டை

Question 2.
முற்காலத்தில் வேணுவனம் என அழைக்கப்படும் இடம் ……………….
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) பேட்டை

Question 3.
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர் …………….
அ) பாளையங்கோட்டை
ஆ) திருநெல்வேலி
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) திருநெல்வேலி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 4.
இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும் மலை ………………
அ) பொதிகை மலை
ஆ) குற்றால மலை
இ) பொருநை
ஈ) பேட்டை
Answer:
ஆ) குற்றால மலை

Question 5.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு

Question 6.
தண்பொருநை நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டநதி …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு

குறுவினா

Question 1.
மூவேந்தர் யாவர்?
Answer:
சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மூவேந்தர் என்று அழைக்கப்பட்டனர்.

Question 2.
திருநெல்வேலி என்னும் பெயர் பெற்ற தன் காரணம் யாது?
Answer:
நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி – எனப்பெயர் பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 3.
திருநெல்வேலியில் சிறப்புமிக்க பழமையான மலைகள் யாவை?
Answer:

  1. பொதிகை மலை
  2. குற்றால மலை

Question 4.
இரட்டை நகரங்கள் யாவை?
Answer:
திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவதன் காரணம் யாது?
Answer:
பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால், பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.

Question 6.
பண்டைய வரலாற்றை நினைவூட்டும் திருநெல்வேலி ஊர்கள் யாவை?
Answer:

  • சேரன்மாதேவி
  • கங்கைகொண்டான்
  • திருமலையப்பபுரம்
  • வீரபாண்டியப்பட்டினம்
  • குலசேகரன் பட்டனம்

Question 7.
திருநெல்வேலி ஈர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் யாவர்?
Answer:

  • ஜி.யு. போப்
  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்

Question 8.
திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் யாவர்?
Answer:
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

சிறுவினா

Question 1.
திருநெல்வேலி – பெயர்க்காரணம் யாது?
Answer:

  1. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு மூங்கில் காடு என்னும் பொருள் கொண்ட ‘வேணுவனம்’ என்னும் பெயர் இருந்தது.
  2. மூங்கில் நெல் மிகுதியாக விளைந்ததால் அப்பகுதிக்கு ‘நெல்வேலி’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
  3. நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப்பெயர் பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.2 வயலும் வாழ்வும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.2 வயலும் வாழ்வும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Question 1.
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
Answer:
ஏர், மண்வெட்டி, உழவு இயந்திரம், விதைக்கலப்பை, களைவெட்டும் இயந்திரம், நீர் பாசன இயந்திரம், ஊசலாடும் கூடை, வேளாண் வானூர்தி, தாள்க்கத்தி, கதிரடி இயந்திரம், களம், படல், உமி நீக்கி, இணை அறுவடை இயந்திரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உழவர் சேற்று வயலில் ……………… நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
Answer:
ஈ) நாற்று

Question 2.
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
Answer:
அ) அறுவடை

Question 3.
‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
Answer:
ஈ) தேர்ந்து + எடுத்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Question 4.
‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல ……………….
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer:
ஆ) ஓடையெல்லாம்

பொருத்துக.

1. நாற்று – பறித்தல்
2. நீர் – அறுத்தல்
3. கதிர் – நடுதல்
4. களை – பாய்ச்சுதல்
Answer:
1. நாற்று – நடுதல்
2. நீர் – பாய்ச்சுதல்
3. கதிர் – அறுத்தல்
4. களை – பறித்தல்

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை,எதுகைச் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும் 1

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.

(எ.கா.) போயி – போய்
பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள்
வளருது – வளர்கிறது
இறங்குறாங்க – இறங்குகிறார்கள்
வாரான் – வரமாட்டான்

குறுவினா

Question 1.
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.

Question 2.
நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
Answer:
கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.

சிறுவினா

Question 1.
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

சிந்தனை வினா

Question 1.
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.

கூடுதல் வினா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே ……………. எனப்படுகிறது.
2. நாட்டுப்புறப்பாடல்களை ………………. என்றும் வழங்குவர்.
3. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை ………………….. என்னும் நூலில் கி.வா. ஜெகந்நாதன் தொகுத்துள்ளார்.
Answer:
1. நாட்டுப்புறப்பாடல்
2. வாய்மொழி இலக்கியம்
3. மலை அருவி

சிறுவினா

Question 1.
போரடித்தல் என்றால் என்ன?
Answer:
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்வர். நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

சொல்லும் பொருளும்

1. குழி – நில அளவைப்பெயர்
2. சீலை – புடலை
3. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
4. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
5. மணி – முற்றிய நெல்
6. கழலுதல் – உதிர்தல்
7. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.1 விருந்தோம்பல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.1 விருந்தோம்பல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 1.
வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகியோர் கடை எழுவள்ளல்கள்.

Question 2.
விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
ஓர் ஊரில் சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது குடும்பமும் தினமும் யாரேனும் ஒருவருக்காவது விருந்தோம்பல் செய்வது வழக்கம். சிவனடியாரின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் அதனைக்காட்டாது, விருந்தினரை உபசரிப்பர். விருந்தினர் உண்ட பின்புதான் அனைவரும் உண்ணுவர். காலையில் இருந்து மாலை வரை உணவு தயாராக இருந்தும் விருந்தினர் வராததால் யாரும் உண்ணாமல் பட்டினி கிடந்தனர்.

சிவனடியாரின் குழந்தைகளும் காலையில் இருந்து மாலை வரை பட்டினியாகக் கிடந்து, அழ ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரோ தான் யார்வீட்டிலும் உண்ணுவதில்லை, இரவு தங்குவதற்கு இடம்தாருங்கள், அது போதும் – என்றார். சிவனடியார் தன் நிலையை உணர்த்தி, தாங்கள் உண்டால் தான். என்னுடைய குழந்தைகள் உண்ண முடியும் என்றார். குழந்தைகளுக்காக அந்தப் பெரியவரும் சாப்பிட்டார். பிறகு அனைவரும் உண்டனர்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மரம் வளர்த்தால் ………………… பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
Answer:
ஆ) மாரி

Question 2.
‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
Answer:
இ) நீர் + உலையில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 3.
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
Answer:
அ) மாரியொன்று

குறு வினா

Question 1.
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
Answer:

  1. அங்கவை
  2. சங்கவை

Question 2.
‘பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
Answer:

  1. மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
  2. பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

சிந்தனை வினா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை , தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திண்ணை என்பதைக் குறிக்கும் சொல் ……………..
அ) மாரி
ஆ) புகவா
இ) மடமகள்
ஈ) முன்றில்
Answer:
ஈ) முன்றில்

Question 2.
மாரி என்பதன் பொருள் ………………
அ) மழை
ஆ) உணவு
இ) இளமகள்
ஈ) திண்ணை
Answer:
அ) மழை

Question 3.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்
அ) காரியாசான்
ஆ) முன்றுறை அரையனார்
இ) விளம்பிநாகனார்
ஈ) பாரி
Answer:
ஆ) முன்றுறை அரையனார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 4.
பழமொழி நானூறு ………………… நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேல்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) பதினெண்கீழ்க்கணக்கு

குறு வினா

Question 1.
முன்றுறை அரையனார் – குறிப்பு வரைக.
Answer:

  1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  2. இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  3. பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

Question 2.
பழமொழி நானூறு – குறிப்பு வரைக.
Answer:

  1. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  2. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால், இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.

Question 3.
”ஒன்றாகு முன்றிலோ இல்” என்னும் பழமொழியின் பொருள் யாது?
Answer:
ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதே ”ஒன்றாகு முன்றிலோ இல்” என்னும் பழமொழியின் பொருள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

சொல்லும் பொருளும்

1. மாரி – மழை
2. மடமகள் – இளமகள்
3. வறந்திருந்த – வறண்டிருந்த
4. நல்கினாள் – கொடுத்தாள்
5. புகவா – உணவாக
6. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை ) இங்கு வீட்டைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.5 ஐங்குறுநூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.5 ஐங்குறுநூறு

குறுவினாக்கள்

Question 1.
அலர்ந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அலர்ந்து – அலர் +திந்) + த் + உ
அலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘முல்லைத்திணை’க்குரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் யாவை?
Answer:
முல்லைத்திணைக்குரிய சிறுபொழுது – மாலை; பெரும்பொழுது – கார்காலம்.

Question 3.
முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு கூறுவன யாவை?
Answer:
காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தவளம், பிடவம் ஆகியன, முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு குறிப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Question 4.
ஐங்குறுநூற்றின் பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்?
Answer:
ஐங்குறுநூற்றில், குறிஞ்சித் திணையைக் கபிலரும், முல்லைத் திணையைப் பேயனாரும், மருதத் திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.

சிறுவினாக்கள்

Question 1.
ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.
Answer:

  • ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை – முல்லை.
  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
  • முல்லைத் திணைக்குரிய முதற்பொருள் : நிலம் – காடும் காடு சார்ந்த நிலமும்; பெரும்பொழுது – கார்காலம்; சிறுபொழுது – மாலை.

முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்கள்:

தெய்வம் – திருமால்
மக்கள் – தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
உணவு – வரகு, சாமை
விலங்கு – முயல், மான், புலி
பூ – முல்லை, தோன்றி
மரம் – கொன்றை, காயா
பறவை – காட்டுக்கோழி, மயில்
ஊர் – பாடி, சேரி
நீர் – காட்டாறு
பறை – ஏறுகோட்பறை
யாழ் – முல்லை
பண் – முல்லை
தொழில் – ஏறுதழுவல், நிரை மேய்த்தல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

கூடுதல் வினா

Question 2.
ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் முல்லைநில இயற்கை அழதை விவரிக்க.
Answer:
ஐங்குறுநூற்றுப் பாடலில் இடம்பெறும் காடும் காடு சார்ந்த நிலமும் ‘முல்லை நிலம்’. கார்காலம் வந்து விட்டமையால் காயா, கொன்றை, நெய்தல் மூல்லை ஆகியவற்றின் மொட்டுகள் இதழ் விரிக்கச் செம்முல்லை, பிடவம் என்னும் தாவா கதைகள் பூத்துக் குலுங்கிக் காட்சியளிக்கின்றன.

அந்த முல்லை நிலத்தின் இயற்கை அழகைக் கண்ட தலைவன், தான் திரும்புவதாகக் கூறிப் பிரிந்து சென்ற கார்காலம் வருவதற்கு முரை தான் வந்து விட்டதைத் தலைவிக்கு உணர்த்த எண்ணி, அவற்றைப் பார்த்து மகிழ்ந்து, வரைந்து ஆட வருமாறு தலைவியை அழைக்கிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

இல்லறம் சிறக்கப் பொருள் தேடி தலைவன் வேற்றூர் செல்வதைச் சங்கப் பாடல்கள் பேசும். தலைவன் திரும்பி வருவதற்குரிய காலத்தை, மக்கள் வாழ்வோடு இயைந்த மலர்கள் மலர்ந்து தலைவிக்கு அறிவிப்பதனை, ஐங்குறுநூற்றுப் பாடல் உணர்த்துகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Question 3.
ஐங்குறுநூறு – நூற்குறிப்புத் தருக.
Answer:

  • ஐந்து + குறுமை பறு – ஐங்குறுநூறு.
  • இது, மூன்றடிச் சற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்பிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • இந்த சாலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
  • தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
  • ஐந்திணைகளில் ஒன்றான முல்லைத்திணையைப் பற்றிய பாடல் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் பேயனார். இவர், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள் :

குறிஞ்சித்திணை – கபிலர்
முல்லைத்திணை – பேயனார் மருதத்திணை – ஓரம்போகியார்
நெய்தல்திணை – அம்மூவனார்
பாலைத்திணை – ஓதலாந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

இலக்கணம் அறிவோம்

கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
பேரமர்க் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
ஆடுகம் விரைந்தே – தன்மைப் பன்மை வினைமுற்று
காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
போதவிழ் தளவொடு – (அவிழ் தளவு) – வினைத்தொகை
அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ
அலர் – பகுதி, த்-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
த்-இறந்தகால இடைநிலை,
உ -வினையெச்ச விகுதி.

2. ஆடுகம் – ஆடு + க் + அம்
ஆடு – பகுதி, க் – சந்தி, அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.

3. விரைந்து – விரை + த் (ந்) + த் + உ
விரை – பகுதி, த்-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைதலை
உ- வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. போதவிழ் – போது + அவிழ்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (போத் + அவிழ்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போதவிழ்)

2. பிடவலர்ந்து – பிடவு + அலர்ந்து
“முற்றும் அற்று ஒரோவழி” (பிடவ் + அலர்து) )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே பிடவலர்ந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

3. பூவணி – பூ + அணி
“ஏனை உயிர்வரின் வவ்வும்” (பூ + வ் + அணி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பூவணி)

பவைகள் தெரிக (கூடுதல் வினாக்கள்)

Question 1.
பொருந்தாத ஒன்றைத் தோந்தெடுக்க.
அ) காயா
ஆ) குறிஞ்சி
இ) பிடவம்
ஈ) கொன்றை
Answer:
ஆ) குறிஞ்சி

Question 2.
‘முல்லைத்திணை’ பாடுவதில் வல்லவர்…………..
அ) ஓம்போகியார்
ஆ) பேயனார்
இ) அம்மூவனார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) பேயனார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Question 3.
ஐங்குறுநூறு – பிரித்தெழுத, ……………….. என வரும்.
அ) ஐங் + குறுநூறு
ஆ) ஐந்து + குறுநூறு
இ) ஐந்து + குறுமை + நூறு
ஈ) ஐங்குறுமை + நூறு
Answer:
இ) ஐந்து + குறுமை + நூறு

Question 4.
ஐங்குறுநூறு சிற்றெல்லை ………………….
அ) மூன்றடி
ஆ) ஐந்தடி
இ) நான்கடி
ஈ) பதினோரடி
Answer:
அ) மூன்றடி

Question 5.
ஐங்குறுநூறு பேரெல்லை ……………….
அ) நான்கடி
ஆ) ஆறடி
இ) பன்னிரண்டடி
ஈ) முப்பதடி
Answer:
ஆ) ஆறடி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Question 6.
ஐங்குறுநூறைத் தொகுத்தவர் ………………….
அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஆ) பேயனார்
இ) புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
ஈ) பூரிக்கோ
Answer:
இ) புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்

Question 7.
ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர்……………………
அ) உறையூர் முதுகண்ணன்
ஆ) மாந்தரஞ்சேரல் இரும்பொறை
இ) பாண்டியன் பெருவழுதி
ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
Answer:
ஆ) மாந்தரஞ்சேரல் இரும்பொறை

Question 8.
முல்லைநிலப் பூக்களில் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
அ) காயா கொன்றை
ஆ) நெய்தல் முல்லை
இ) குறிஞ்சி, வேங்கை
ஈ) செம்முல்லை பிடவம்
Answer:
இ) குறிஞ்சி, வேங்கை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 ஐங்குறுநூறு

Question 9.
தவறான இணையைத் தெரிவு செய்க.
திணை பாடிய புலவர்
குறிஞ்சி – கபிலர்
முல்லை – பேயனார்
மருதம் – ஓதலாந்தையார்
நெய்தல் – அம்மூவனார்
Asnwer:
மருதம் – ஓதலாந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

குறுவினா

Question 1.
வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
Answer:

  • ‘சோலையில் மேகக்கூட்டம் ஏறும்’ என்பது பொருள். அதாவது, தென்கரை நாட்டின் மரங்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.
  • மரங்கள் நிறைந்த இடத்தில் மழை பொழியும் என்னும் குறிப்பை, இதன்மூலம் அறியமுடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

கூடுதல் வினா

Question 2.
‘பள்ளு’ – குறிப்பு வரைக.
Answer:

  • ‘உழத்திப் பாட்டு’ என அழைக்கப்படும் பள்ளு, தொண்ணூற்றாறு வகைச் சிற்றில் குதியங்களுள் ஒன்று.
  • கலிப்பா, கலித்துறை, சிந்து ஆகிய பா வகைகளால் பாடப்படுகிறது.
  • உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை, எளியநடையில் நயம்படக் கூறுகிறது.

Question 3.
‘புலன்’ எனத் தொல்காப்பியம் எதனைக் கூறுகிறது?
Answer:
பாமர மக்களுக்கு முதன்மை அளித்து உருவாக்கப்பட்ட இலக்கிய வகைகளான குறவஞ்சி, பள்ளு முதலானவற்றைத் தொல்காப்பியம் ‘புலன்’ எனக் குறிப்பிடுகிறது.

Question 4.
இளைய பள்ளி ‘காக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளவை எவை?
Answer:

  • தென்கரை நாட்டை முருகன் கைவேலும், ஊர்தியான மயிலும் காக்கும்.
  • நாட்டை மன்னனின் செங்கோல் ஆட்சி பாதிகாக்கும் என, இளைய பள்ளி குறிப்பிட்டுள்ளாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

சிறுவினா

Question 1.
“சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் : திருமலை முருகன் பள்ளுவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, ‘சலச வாவியில் செங்கால் பாயும்’ என்று, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.

பொருள் : நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.

விளக்கம் : வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

கூடுதல் வினா

Question 2.
திருமலை முருகன் பள்ளு’ – குறிப்பு எழுதுக.
Answer:
பண்புளிப்பட்டணம், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனைப் ‘பண்பை ‘ எனவும், ‘பண்பொழில்’ எனவும் அழைப்பர். இவ்வூரிலுள்ள சிறுகுன்று திருமலைக் குன்று.

இத்திருமலைக் குன்றில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பெரியவன் கவிராயர் என்பவரால் பாடப்பட்டது, ‘திருமலை முருகன் பள்ளு’.

கலித்துறை, கலிப்பா, சிந்து முதலான பாவகைகளால் பாடப்பட்ட இந்நூல், பள்ளிசை’ எனவும், ‘திருமலை அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

நெடுவினா

Question 1.
‘திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.
Answer:
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை நாட்டுவளம் :
வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள், ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலில் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில், மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை, வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும், முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில், புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

திருமலை முருகன் பள்ளு கூறும் தென்கரை நாட்டுவளம் :
தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில், மேகக் கூட்டங்கள் தங்கி செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில், அகில்புகையின் நறுமணம் பாடிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும். செங்கோலைக் கொண்ட மன்னர், தென்கரை நாட்டை நீதி தவறாமல் காவல் காப்பர். இளைய பெண்கள், பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.

இங்குள்ள குளங்களின் அலைகள், முத்துகளை ஏந்தி வரும்; பலவலைகள், கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

இலக்கணக்குறிப்பு

செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்.
அகில்புகை, முகில்தொகை – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்.
கொன்றை சூடு – இரண்டாம் வேற்று மத்தொகை.

இந்துளம் பாடும், வந்துளம் ஆடும், கயல் பாயும், சங்கயல் மேயும், பெய்யெனப் பெய்யும், செய்யெனச் செய்யும், முகில்தொகை ஏறும், புகை நாறும், கொண்டலும் காக்கும், மண்டலங் காக்கும், அரங்கில் நடிக்கும், தரங்கம் வெடிக்கும் – ‘செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றுகள்.

போற்றும் திருமலை. ஒளருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்.
மஞ்சையும் கொண்டலும் – எண்ணும்மை.
ஏற்பவர் – வினையாலணையும் பெயர்.
மடை இடங்கணி, வாவித்தரங்கம் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்.
ஈன்ற சங்கு – பெயரெச்சம்.
எந்தி வெடிக்கும் – வினையெச்சம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

உறுப்பிலக்கணம்

1. ஈன்ற – ஈன் + ற் + அ
ஈன் – பகுதி, ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ
அலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

3. ஆடுகம் – ஆடு + க் + அம்
ஆடு – பகுதி, க் – சந்தி, அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.

4. விரைந்து – விரை + த் (ந்) + த் + உ
விரை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

5. ஆடும் – ஆடு + உம்
ஆடு – பகுதி, உம் – பெயரெச்ச விகுதி.

6. பெய்யும் – பெய் + ய் + உம்
பெய் – பகுதி, ய் – சந்தி, உம் – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

7. போற்றும் – போற்று + உம்
போற்று – பகுதி, உம் – பெயரெச்ச விகுதி.

8. நடிக்கும் – நடி + க் + க் + உம்
நடி – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி.

9. காக்கும் – கா + க் + க் + உம்
கா – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி

10. வெடிக்கும் – வெடி + க் + க் + உம்
வெடி – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச விகுதி.

11. ஏந்தி – ஏந்து + இ
ஏந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. செங்கயல் – செம்மை + கயல்
ஈறுபோதல்” (செம் + கயல்), “முன்நின்ற மெய் தந்தல்” – (செங்கயல்)

2. அளியுலாம் – அளி + உலாம்
“இஈ ஐவழி யவ்வும்” (அளி + ய் + உலாம் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” – (அளியுலாம்)

3. வெண்சங்கு – வெண்மை + சங்கு
“ஈறுபோதல்” (வெண்சங்கு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

4. திருமலைச்சேவகன் – திருமலை) + சேவகன்
“இயல்பினும் விதியினும் என்ற உயிர்முன் கசதப மிகும்” (திருமலைச்சேவகன் )

5. மண்டலங்காக்கும் – மண்டலம் + காக்கும்
“மவ்வீறு ஒற்று நாமைக்கு இனமாத் திரியும்” (மண்டலங்காக்கும்)

பலவுள் தெரிக (கூடுதல் வினாக்கள்)

Question 1.
‘தரளம் என்ற சொல்லின் பொருள் ………….
அ முத்து
ஆ) பவளம்
இ) மாணிக்கம்
ஈ) வைடூரியம்
Answer:
அ) முத்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 2.
சாளு’ என்ற இலக்கிய வடிவத்தின் வேறுபெயர்………………..
அ) கவிப் பாட்டு
ஆ) இயற்கைப் பாட்டு
இ) உழத்திப் பாட்டு
ஈ) வயல் பாட்டு
Answer:
இ) உழத்திப் பாட்டு

Question 3.
‘திருமலை முருகன் பள்ளு’ நூலை இயற்றியவர்………………..
அ) அழகிய பெரியவன்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) வில்வரத்தினம்
ஈ) திரிகூடராசப்பர்
Answer:
அ) அழகிய பெரியவன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 4.
திருமலை முருகன் பள்ளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்……………………
அ) பள்ளிசை குறவஞ்சி
ஆ) திருமலை அதிபர் பள்ளு குறத்திப்பாட்டு
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
ஈ) முக்கூடற்பள்ளு, பள்ளிசை
Answer:
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை

Question 5.
‘வட ஆரியநாடு’ என வழங்கப் பெறுவது…………..
அ) குற்றாலம்
ஆ) பண்பை
இ) பண்புளிப்பட்டணம்
ஈ) திருமலை
Answer:
ஈ) திருமலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 6.
‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது…………….
அ) திருமலை
ஆ) பண்பொழில்
இ) பேரணாம்பட்டு
ஈ) குற்றாலம்
Answer:
ஈ) குற்றாலம்

Question 7.
‘திருமலை முருகன் பள்ளு’வில் ‘திருமலை’ எனக் குறிப்பிடப்படுவது………………
அ) குற்றாலம்
ஆ) தென் ஆரியநாடு
இ) வட ஆரியநாடு
ஈ) திருநெல்வேலி
Answer:
இ) வட ஆரியநாடு

Question 8.
பொருத்துக
i) இந்துளம் – 1. மயில்
ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்
iii) தரளம் – 3. சங்கிலி
iv) மஞ்ஞை – 4. முத்து
அ) 2, 3, 4, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 2, 3, 4, 1

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 9.
வளருங்காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும்
குளிரும் மஞ்ஞையும் தொடைலும் காக்கும்
கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும் – இயைபுத் தொடையைத் தெரிவு செய்க.

அ) வளரும் காவில்ல – முகில்தொகை
ஆ) மாடம் எங்கு – அகில்புகை
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்
ஈ) குளிரும் மஞ்ஞையும் – கொண்டலும் மண்டலம்
Answer:
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்

Question 10.
முஞ்ஞை ‘ என்பது …………….. குறிக்கும்.
அ) வண்டை
ஆ) சேவலை
இ) மயிலை
ஈ) உள்ளான் பறவையை
Answer:
இ) மயிலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 11.
‘இந்தளம்’ என்பது……………..
அ) ஒருவகைப் பண்
ஆ) வண்டு
இ) மயில்
ஈ) உள்ளான் பறவை
Answer:
அ) ஒருவகைப் பண்

Question 12.
‘அளி’ என்பது …………… குறிக்கும்.
அ) முத்தை
ஆ) வண்டை
இ) சோலையை
ஈ) உள்ளானை
Answer:
ஆ) வண்டை

Question 13.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 1
Answer:
1-இ, 2-உ, 3-ஈ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 14.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 2
Answer:
1-ஈ, 2-உ, 3-அ, 4-ஆ

Question 15.
பொருத்துக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 3
Answer:
1-உ, 2-இ, 3-ஈ, 4-அ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.6 திருக்குறள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………………… தீமை உண்டாக்கும்.
அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
Answer:
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

Question 2.
தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ……………… இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
Answer:
அ) சோம்பல்

Question 3.
‘எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்ப
Answer:
ஆ) எழுத்து + என்ப

Question 4.
‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
Answer:
இ) கரைந்து + உண்ணும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 5.
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………………..
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீரும்
ஈ) கற்றனைத்தோறும்
Answer:
அ) கற்றனைத்தூறும்

பொருத்துக.

1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் – காகம்
3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் – கல்வி
Answer:
1. கற்கும் முறை -பிழையில்லாமல் கற்றல்
2. உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
3. விழுச்செல்வம் – கல்வி
4. எண்ணித் துணிக – செயல்
5. கரவா கரைந்துண்ணும் – காகம்

குறுவினா

Question 1.
‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?
Answer:
நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.

Question 2.
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை?
Answer:
செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 3.
துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?
Answer:
துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் 1
Answer:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் 2
Answer:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 102 38 கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கூடுதல் வினா

குறுவினா

Question 1.
எப்படிக் கற்று? எப்படி நடக்க வேண்டும்?
Answer:
கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.

Question 2.
கண் போன்றவை எவை?
Answer:
எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.

Question 3.
மக்கள் அறிவு எதனைப் போல வளரவேண்டும்?
Answer:
தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 4.
அழிவில்லாத சிறந்த செல்வம் எது ? ஏன்?
Answer:
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

Question 5.
ஒரு செயலை எப்படி செய்யவேண்டும்?
Answer:
எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

Question 6.
யாரிடம் செல்வம் சேரும்?
Answer:
காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.5 தொழிற்பெயர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.5 தொழிற்பெயர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Question 1.
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.
Answer:
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற் பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி
Answer:
இ) படித்தல்

Question 2.
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது?
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
Answer:
ஆ) நடு

பொருத்துக.

1. ஒட்டகம் – முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
3. சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Answer:
1. ஒட்டகம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

சிறு வினா

Question 1.
வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.
Answer:
வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.

Question 2.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
முதனிலைத் திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
சான்று : விடு – வீடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்

பேசுக.

Question 1.
நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.
Answer:
வணக்கம். நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிப் பேசுகின்றேன். சித்தன்னவாசல் ஓவியங்களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாக, உண்மையான காட்சிகள் போல காட்சி அளிக்கின்றன.

ஓவியங்களா உயிருள்ள பொருளா என்று வியக்கும் வகையில் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்சிற்பங்கள் அருமையானது. பஞ்சபாண்டவர் ரதம், நந்தி ஆகியன கலை நயத்துடனும் நவீன வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றது. நம் கலையறிவுக்குச் சான்றாக இது உள்ளது. அனைவரும் அதனைக் கண்டு களிப்போம். நன்றி.

கவிதையை நிறைவு செய்க.

வானும் நிலவும் அழகு
வயலும் பயிரும் அழகு
கடலும் அலையும் அழகு
காற்றும் குளிரும் அழகு.

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர் 1

ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம்
பச்சை மரங்களைக் காப்போம்
பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்!
இனியொரு விதி செய்வோம்
இயற்கையைப் போற்றவே!

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.

(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)
(எ.கா.) : ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.

1. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை .
எங்கும் தமிழ் இசை

2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர்.
சிறந்த கலை கட்டடக்கலை.

3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம்.
மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள்.

இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர் 2

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தலைப்பு : எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை

முன்னுரை :
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

அமைவிடம் :
கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.

பெயர்க்காரணம் :
இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர்.

தொழில்கள் :
வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.

சிறப்புமிகு இடங்கள் :
பெரியார் – அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள் :
மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில் – கலந்து கொள்வர்.

மக்கள் ஒற்றுமை :
இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை :
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.

Question 1.
நான் இனிமை தரும் இசைக் கருவி.
எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது.
அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும்.
முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு
பெயர் கிடைக்கும்.
நான் யார்?
Answer:
மிருதங்கம்

Question 2.
நான் ஒரு காற்றுக் கருவி.
நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன்.
எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது.
முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும்.
நான் யார்?
Answer:
புல்லாங்குழல்

பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது.

ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

வினாக்கள்:
Question 1.
சாலையின் எந்தப்பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
Answer:
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.

Question 2.
விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக்குறிக்கும்?
Answer:
இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

Question 3.
எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
Answer:
இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

Question 4.
ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
Answer:
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரே சாலையில் இரு கூறாகப் பிரிக்காமல், வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மைக்கப்பட்டுள்ளவை ஒருவழிப்பாதை ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Question 5.
வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக்கூறு.
Answer:
வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

நிற்க அதற்குத் தக…..

கலைச்சொல் அறிவோம்

1. படைப்பாளர் – creator
2. சிற்பம் – sculpture
3. கலைஞர் – artist
4. கல்வெட்டு – inscriptions
5. கையெழுத்துப்படி – manuscripts
6. அழகியல் – aesthetics
7. தூரிகை – brush
8. கருத்துப்படம் – cartoon
9. குகை ஓவியங்கள் – cave paintings
10. நவீன ஓவியம் – modern art

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Question 1.
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
Answer:
எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.

Question 2.
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
Answer:
நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.

மதிப்பீட்டு

Question 1.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால். சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Answer:
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இது தான். இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் இது. கி.பி.1122 ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் இயங்கி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.

உ.வே.சா. நூலகம்
இது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

வள்ளுவர் கோட்டம்
இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
இது அதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடமபெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 2 Chapter 4 Measurements Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Question 1.
Mohana bought 2 kg 600 g grapes and 1 kg 450 g grapes. How much more did Mohana buy grapes than grapes, by weight ?
1) 150 g
2) 1 kg 150 g
3) 1 kg 200g
4) 4kg
Answer:
2) 1 kg 150 g

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Question 2.
put >, < or = in the boxes provided below .

(i) 50 g ______ 340 g
Answer:
50 g  340 g

(ii) 640 g ______ 800 g
Answer:
640 g  800 g

(iii) 34 kg ______ 22kg
Answer:
34 kg  22kg

(iv) 1000 g ______ 1 kg
Answer:
1000 g  1 kg

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Question 3.
Add:
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 2

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 6

Question 4.
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 8

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 10

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 12

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Question 4.
The weights of three babies ore respectively 3 kg 650g, 5kg 420g and 4kg 750g. Find their total weight?
Answer:
Weight of 1st Baby = 3 kg 650g
Weight of 2nd Baby = 5kg 420g
Weight of 3rd Baby = 4kg 750g
∴ Total weight = 3 kg 650g + 5kg 420g + 4kg 750g
= 13 kg 820 g
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 13

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2

Question 5.
A shopkeeper had 275 kg 450 g of coffee powder. He sold 80 kg 475 g. How much coffee powder left?
Answer:
Weight of Coffee powder Shopkeeper load = 275 kg 450 g
Weight of Coffee powder he sold = 80 kg 475 g
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.2 14