Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.4 மனோன்மணீயம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.4 மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

குறுவினா

Question 1.
“ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள” – இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
Answer:
எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை, இவ்வடி குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 2.
இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
Answer:
எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஓரறிவு உயிர்வகையுள் சேர்த்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கும் அன்போடு நிழல் தருகிறது !

உணவாக இலைகளையும் காய்களையும் பழங்களையும் தருகிறது; தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்துக் கனிந்தபின், பறவைகளும் விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.

உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 2.
வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; அலை கடலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.)

மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி, குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.

நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 3.
“நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?”- யார், யாரிடம், எப்போது கூறியது?
Answer:
வாய்க்காலின் விசித்திரச் செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த நடராசன், இறுதியாக அந்த வாய்க்காலையும் அதன் செயலையும் பாராட்டும்வகையில் உன்னைப்போல் தினமும் உழைப்பவர்
யார்?

நீக்க முடியாத அன்பு, ஊக்கம், உழைப்பில் உறுதி எக்கு இருப்பதுபோல் பெற்றால், அதற்குமேல் பெறவேண்டிய பேறு வேறு உளதோ?” எனக் கூறினான்.

Question 4.
‘மனோன்மணீயம்’ – குறிப்பெழுதுக.
Answer:

  • தமிழின் முதல் செய்யுள் வடிவ நாடக நூல் மனோன்மணீயம்.
  • தமிழ்மொழியில் நாடக நூல் இல்லாக் குறைபோக்கப் பெ. சுந்தரனார், ஆங்கிலத்தில் ‘லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Senret Way) என்னும் நூலைத் தழுவித் தமிழில் இயற்றினார்.
  • தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு கதைக்களம் அமைத்து எழுதப்பட்ட இந்த நாடக நூலில், ஐந்து அங்கங்களும் இருபது கலங்களும் உள்ளன.
  • நூலின் தொடக்கத்தி இறை வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ‘சிவகாமியின் சாரம்’ என்னும் கிளைக்கதையும் உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • திருவிதாங்கூரின் ஆலப்புழையில், ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் 1855இல் பிறந்தார்.
  • திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு, ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை, இவர் பெயரில் நிறுவிப் பெருமை சேர்த்துள்ளது.

Question 6.
மனோன்மணீயத்தின் சிறப்புகளை எழுதுக?
Answer:
மனோன்மணீயம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வுகளை ஊட்டக்கூடியது.

தமிழன்னையின் நல்லணிகளுள் நாடகத்துறை சார்ந்த நூல்கள் இல்லை என்னும் குறைதீர்க்க உருவானது. நாடக நூலாயினும், காப்பிய இலக்கணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது.

இயற்கையோடு இயைந்து, தோய்ந்து, இணையற்ற இன்ப வாழ்வு நடத்தியவர் தமிழர் என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை மனோன்மணீயத்தின் தனிச் சிறப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நெடுவினா

Question 1.
நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
Answer:
இலக்கே தூண்டுகோல் :
தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை, நடராசன் உணர்கிறான். அது, உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.

புல்லின் செயல்பாடு :
சிறுபுல்லும், பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரைக் காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் செல்லும்வகையில் முள் துரட்டியைக் கொடுத்து, ‘நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ முடியாது. ஆகவே வேறிடம் செல்க’ என அறிவுரை கூறுபதுபோல் செயல்படுவதையும் சிந்திக்கிறான்.

அத்துடன், அப்புல்லின் ஆற்றல், அன்பு, முயற்சி முதலானவற்றைப் பார்த்துப் பார்த்தும் கண்களில் நீர் கசிய நிற்கிறான். நடராசன் அப்போது கூறும் மொழிகளைக் கேட்கும்போது, நாமும் சிந்திக்க முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் கண்ட வாய்க்கால் :
நாம் நீரோடும் வாய்க்காலைச் சாதாரணமாகக் கண்டிருப்போம். நடராசன் காணும் காட்சி வேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாறிய நடப்பதாகக் கூறுகிறான். வாய்க்கால், தான் பட்டபாட்டை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான். அப்போதுதான் நமக்கும் அத்தகைய எண்ண ஓட்டம் உருவாகிறது.

வாய்க்கால் ஓடிஓடி நிரந்தரமாக உழைப்பதைக் கண்டு, அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்தபோது, அழாது செல்லுமாறு கூறி விடுத்து, “உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் நீக்க முடியாத அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால், வேறு என்ன பெருமை உண்டாக முடியும்?” எனக் கூறுகிறபோது, நமக்கும் உள்ளத்தில் அந்த உணர்வு தைக்கிறது.

புழு உணர்த்தும் செய்தி :
புல்லின் செயலையும், வாய்க்காலின் பெரும் நாட்டையும் கொண்டு அறிவூட்டிய நடராசன், அடுத்து நாங்கூழ்ப் புழுவைக் காண்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.

உலகில் உயர்தொழில் செய்யும் வாவர்களின் நண்பனாக நாங்கூழ்ப் புழு செயல்படுவதை விவரிக்கிறான். எம் மண்ணையும் நன் மண்ணரத்து எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங்கருத்துமா உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் தனிமொழி தரும் விளக்கம் :
தான் செய்யும் பணிக்குப் பாராட்டை எதிர்பார்க்காமல் நாங்கூழ்ப் புழு ஒளிந்து கொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய சொல், ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் பொதிந்து கிடப்பதை, நடரசன் தனிமொழி விளக்குகிறது.

வாழ்நரளில் வரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை, இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய, நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.

இலக்கணக்குறிப்பு

கடிநகர், சாலத்தகும் – உரிச்சொற்றொடர்கள்
உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சங்கள்
பின்னிய, முனைந்த, சென்ற – பெயரெச்சங்கள்
இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆசிலா, ஓவா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பார்த்துப்பார்த்து, நில்நில், உழுதுழுது – அடுக்குத்தொடர்கள்
வாய்க்கால் (கால்வாய்) – (முன்பின் தொக்க) இலக்கணப்போலி
செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
நெறுநெறு – இரட்டைக்கிளவி
மண்கல், புல்புழு, இராப்பகல், மலையலை, குகைமுகம் – உம்மைத்தொகைகள்
காலத்தச்சன் – உருவகம்
ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
தங்குதல் – தொழிற்பெயர்
விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று

உறுப்பிலக்கணம்

1. முளைத்த – முளை + த் + த் + அ
முளை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. ஏகுமின் – ஏகு + மின்
ஏகு – பகுதி, மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

3. விடுத்தனை – விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை, ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

4. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

5. ஏகுவான் – ஏகு + வ் + ஆன்
ஏகு – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

6. உயர்த்தி – உயர் + த் + த் + இ
உயர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்த கால இடைநிலை, இ – வினையெச்ச விகுதி.

7. அழைத்து – அழை + த் + த் + உ
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

8. காண்போர் – காண் + ப் ஒர்
காண் – பகுதி, ப் – எதி தல இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

9. பார்த்து – பார் + த் + உ
பார் – பகுதி, த் சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

10. திளைப்பர் – திளை + ப் + ப் + அர்
திளை – பகுத், ப் – சந்தி, ப் – இறந்தகால இடைநிலை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

11. உருட்டி உருட்டு + இ
உருட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

12. அடைந்து – அடை + த் (ந்) + த் + உ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

13. உழைப்போர் – உழை + ப் + ப் + ஓர்
உழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

14. ஈர்த்து – ஈர் + த் + த் + உ
ஈர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

15. எடுத்த – எடு + த் + த் + அ
எடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. காலத்தச்சன் – காலம் + தச்சன்
“மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (கால + தச்சன்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (காலத்தச்சன்)

2. உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + உழுது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உழுதுழுது)

3. பேரழகு – பெருமை + அழகு
“ஈறுபோதல்” (பெரு + அழகு), “ஆதிநீடல்” (பேரு + அழகு)
“முற்றும் அற்று” (பேர் + அழகு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பேரழகு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

4. நல்லூண் – நன்மை + ஊண்
“ஈறுபோதல்” (நன் + ஊண்), “முன்நின்ற மெய் திரிதல்” (நல் + ஊண்)
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஊண்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லூண்)

5. அடியொன்று – அடி + ஒன்று
“இ ஈ ஐ வழி யவ்வும்” (அடி + ய் + ஒன்று)
“உயிர்வரின்….. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அடியொன்று )

6. குதித்தெழுந்து – குதித்து + எழுந்து
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (குதித்த் – எழுத்து)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குதிதமதழுந்து )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

7. மண்ணாயினும் – மண் + ஆயினும்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் பண + ண் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்” (பண்ணாயினும்)

8. தூசிடை – தூசு + இடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ (தூச் + இடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூசிடை)

9. மலையலை – மலை + அலை
“இ ஈ ஐ வழி யவ்வும்” மலை+ ய் + அலை)
“உடல்மேல் உயிர்வந்து ஏறுவது இயல்பே” (மலையலை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பலவுள் தெரிக

Question 1.
“யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்” – இது எவர் மொழி?
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்
இ) நடராசன்
ஈ) புல்
Answer:
இ) நடராசன்

Question 2.
தமிழில் முதல் பா வடிவ நாடகநூல் ………………….
அ) து பரகசிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
காப்பிய இலக்கணம் முழுவதுமாய் நிரம்பிய நாடக நூல்………………….
அ) இரணியன்
ஆ) நளதமயந்தி
இ) மணிமேகலை
ஈ) மனோன்மணீயம்
Answer:
ஈ) மனோன்மணீயம்

Question 4.
மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது………………….
அ) இரகசியவழி
ஆ) மணிமேகலை
இ) இருண்டவீடு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) இரகசியவழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் ………………….
அ) திருநெல்வேலி
ஆ) மார்த்தாண்டம்
இ) ஆலப்புழை
ஈ) கன்னியாகுமரி
Answer:
இ) ஆலப்புழை

Question 6.
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மனோன்மணீயம்
இ) மணிமேகலை
ஈ) பாண்டியன் பரிசு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 7.
சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்………………….
அ) ராவ்பகதூர்
ஆ) திவான் பகதூர்
இ) கலைமாமணி
ஈ) நாடகச்செம்மல்
Answer:
அ) ராவ்பகதூர்

Question 8.
சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்………………….
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) புதுக்கோட்டை
ஈ) திருநெல்வேலி
Answer:
ஈ) திருநெல்வேலி

Question 9.
“சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின்’ – யார் கூறியது?
அ) சிறுபுல்
ஆ) வாய்க்கால்
இ) நடராசன்
ஈ) நாங்கூழப் புழு
Answer:
அ) சிறுபுல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 10.
“விழுப்புகழ் வேண்டலை உன்தொழில் நடத்துதி” – யாரிடம் கூறப்பட்டது.
அ) புல்லிடம்
ஆ) வாய்க்காலிடம்
இ) நாங்கூழ்ப் புழுவிடம்
ஈ) மேகத்திடம்
Answer:
இ) நாங்கூழ்ப் புழுவிடம்

Question 11.
என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பதற்குக் காரணம் ………………….
அ) வாய்க்காலின் செயல்
ஆ) புல்லின் பரிவான செயல்
இ) நடராசனின் செயல்
ஈ) காங்கூழ்ப்புழுவின் செயல்
Answer:
ஆ) புல்லின் பரிவான செயல்

Question 12.
விசித்திரமான தொழில் செய்வது………………….
அ) அலைகடல்
ஆ) மலை
இ) வாய்க்கால்
ஈ) புல்
Answer:
இ) வாய்க்கால்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 13.
“யாரே உன்னைப்போல் அனுதினம் உழைப்போர்” – அனுதினம் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டது………………….
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்ப்புழு
இ) புல்
ஈ) நடராசன்
Answer:
அ) வாய்க்கால்

Question 14.
மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை………………….
அ) புல்லின் பரிவு
ஆ) வாய்க்காலின் விசித்திரம்
இ) சிவகாமியின் சரிதம்
ஈ) நாங்கூழ்ப் புழு செயல்
Answer:
இ) சிவகாமியின் சரிதம்

Question 15.
தூசிடைச் சங்கும் தோட்டியும் கொடுத்தே” – இத்தொடரில் துறட்டி’ என்னும் பொருளுடைய சொல்………………….
அ) தூசு
ஆ) சிக்கும்
இ) தோட்டி
ஈ) கொடுத்து
Answer:
இ) தோட்டி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 16.
சரியான விடையைப் பொருத்துக.
அ. வீழருவி – 1. உவமைத்தொகை
ஆ. குகைமுகம் – 2. பண்புத்தொகை
இ. பேரழகு – 3. வினைத்தொகை
ஈ) புல்புழு – 4. எண்ணும்மை
– 5. உம்மைத்தொகை
1. அ – 2, ஆ – 4, இ – 5, ஈ – 3
2. அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
3. அ – 5, ஆ – 2, இ – 1, ஈ – 4
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.3 தொலைந்து போனவர்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

குறுவினா

Question 1.
“கற்றேன் என்பாய் கற்றாயா?” என்று, அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?
Answer:
நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு, மாயையில் சிக்குண்ட மக்களிடம் கேட்கிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
எதனை உண்மையான விடியல் எனக் கவிஞர் கூறுகிறார்?
Answer:
வானம் வெளுப்பது விடியல் அன்று; வாழ்க்கை விடிய வேண்டும்.
அதுவே உண்மையான விடியலாகும் என்கிறார் கவிஞர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 3.
கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளுள் நான்கினைக் கூறுக.
Answer:
பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை.

Question 4.
‘உண்மையான உடை’ என்று கவிக்கோ எதனைக் கூறுகிறார்?
Answer:
உடலை அலங்கரிக்க அணிவது உடையன்று. மனத்தை அலங்கரித்து அழகுபடுத்தும் நல்ல எண்ணமே, உண்மையான உடை எனக் கவிக்கோ கூறுகிறார்.

Question 5.
‘உண்மையான வெற்றி’ என்பது எதில் இருப்பதாகக் கவிக்கோ கூறுகிறார்?
Answer:
வென்று விட்டதாகக் கூறுவது, உண்மையான வெற்றி ஆகாது. உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக ஆவதில்தான் இருக்கிறது எனக் கவிக்கோ கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 6.
பாரசீக ஞான காவியம் எது? அதனை எழுதியவர் யார்?
Answer:

  • ‘மஸ்னவி’ என்பது, உலகப் புகழ்பெற்ற பாரசீக ஞான காவியம்.
  • அதனை இயற்றியவர், ‘மௌலானா ரூமி’.
  • இவர், ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தவர்.
  • தம் காவியத்தில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து, கவிதை படைத்துள்ளார்.

சிறுவினா

Question 1.
அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
Answer:
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை.
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
என்பன, வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

கூடுதல் வினா

Question 2.
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • கவிக்கோ அப்துல் ரகுமான், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர், ‘வானம்பாடி’க் கவிஞர்களுள் ஒருவர்.
  • புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை எனப் பல வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார்.
  • பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது, சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

நெடுவினா (கூடுதல்)

Question 1.
எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட, அவர்கூறும் வழிமுறையை ஆராய்க.
Answer:
கவிக்கோ மாயை எனக் கருதுபவை :
நாள்தோறும் காலையில் விடிந்துவிட்டது எனக் கூறுவது, எடுத்த செயல் ஒன்று முடிந்துவிட்டதாகச் சொல்வது, சில நூல்களைப் படித்துவிட்டு அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கூறுவது, பிள்ளைகளைப் பெற்றேன் எனக் கூறுவது, காலம் காலமாய்த் தினமும் குளித்துவிட்டேன் எனச் சொல்லுவது, ‘இதைக் கொடுக்கின்றேன்’ என்று கூறி ஒன்றைக் கொடுப்பது, உடலை அலங்கரிப்பதாகக் கூறி உடைகளை அணிவது, விடை அறிந்துவிட்டேன் எனக் கூறுவது, ‘உண்டேன்’ எனக் கூறுவது, ‘வென்று விட்டேன்’ என்று சொல்லுவது ஆகிய எல்லாவற்றையும், கவிக்கோ மாயை என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

மாயையிலிருந்து விடுபடக் கவிக்கோ கூறும் வழிமுறைகள் :

வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதுதான் உண்மையான விடியல்.
எந்தச் செயலும் முழுமையாய் முடிந்து விடுவதில்லை; செயலைத் தொடர்வதே நியதி.

வாழ்க்கையைப் படிப்பதுதான் உண்மையான கல்வி.
பெறுவது என்பது ஞானத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
மன அழுக்குப் போகுமாறு குளிப்பதே உண்மைக் குளியலாகும்.
கொடுப்பவை எல்லாம் நம்முடையன அல்ல என, நினைவு கொள்ள வேண்டும்.

உள்ளத்தை அலங்கரிக்கும் நல்ல எண்ணமே நல்ல உடையாகும்.
உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக மாறுவதுதான்.
கேள்வியை ஒளியாக வைத்துக்கொண்டு தொலைந்து போன உன்னைத் தேடு கறு கவிக்கோ அப்துல் ரகுமான், மாயையில் இருந்து விடுபட வழிகாட்டுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

இலக்கணக்குறிப்பு

கற்றேன், பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன் வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்றுகள்.
உரைத்தாய், நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாய் – முன்னிலை ஒருமை வினைமுற்றுகள்.
உடை அணிந்தேன், காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம் வேற்றுமைத்தொகை.

உறுப்பிலக்கணம்

1. வென்றேன் – வெல் (ன்) + ற் + ஏன்
வெல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ஸ் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று வித்தி!

2. நிற்கின்றாய் – நில் (ற்) + கின்று ஆய்
நில் – பகுதி, ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. பெற்றேன் – பெறு (பெற்ற – என்
பெறு – பகுதி, ‘பெற்று என் ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

4. அணிந்தேன் – அணி + த் (ந்) + த் + ஏன்
அணி – பக்தி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

5. தோற்கின்றார் – தோல் (ற்) + கின்று + ஆர்
தோல் – பகுதி, ‘ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆ – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கல்வியில்லை – கல்வி + இல்லை
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கல்வி + ய் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (கல்வியில்லை)

2. போகவில்லை – போக + இல்லை
“ஏனைஉயிர்வழி வவ்வும்” (போக + வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போகவில்லை)

பலவுள் தெரிக

Question 1.
“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….
அ) அடி எதுகை, அடிமோனை
ஆ) சீர்மோனை, அடி எதுகை
இ) அடிமோனை, அடி இயைபு
ஈ) சீர்மோனை, அடி மோனை
Answer:
ஈ) சீர்மோனை (கற்றேன், கற்றாயா), அடிமோனை (கற்றேன், காகிதம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 2.
சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குக.
அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
இ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு
Answer:
ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
“வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றி யில்தான் தோற்கின்றார்” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………
அ) அடி எதுகை, அடிமோனை
ஆ) சீர்மோனை, ஆடி எதுகை
இ) அடிமோனை, சீர் எதுகை
ஈ) சீர்மோனை சீர் எதுகை
Answer:
இ) அடிமோனை (வென்றேன், வெற்றியில்), சீர்எதுகை (வென்றேன், என்பர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 3.
‘உரைத்தாய்’ என்பது, ………………. வினைமுற்று.
அ) தன்மை ஒருமை
ஆ முன்னிலை ஒருமை
இ) முன்னிலைப் பன்மை
ஈ) தன்மைப் பன்மை
Answer:
ஆ) முன்னிலை ஒருமை

Question 4.
‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் ………………..
அ) பிரமிள்
ஆ) பானுசந்தான்
இ) அப்துல் ரகுமான்
ஈ) புதுமைப்பித்தன்
Answer:
இ) அப்துல் ரகுமான்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 5.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு………………
அ) சுட்டுவிரல்
ஆ) பஸ்னவி
இ) ஆலாபனை
ஈ) நட்சத்திரவாசி
Answer:
இ) ஆலாபனை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Question 6.
அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்………………
அ ) தமிழன்னை விருது, அண்ணா விருது
ஆ) தமிழன்னை விருது, பெரியார் விருது
இ) பாரதிதாசன் விருது, காமராஜர் விருது
ஈ) தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது
Answer:
தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

குறுவினா

Question 1.
“நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்” – தொடைநயங்களை எடுத்தெழுதுக.
Answer:

  • அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றி வருவது, மோனை. – (நீளும், நீளாத)
  • இரண்டாம் அடியில் ‘நீளாத – நெஞ்சம்’ எனச் சீர்மோனை அமைந்துள்ளது.
  • அடி இயைபு (தொடரும், படரும்) என்னும் தொடைகள், இவ்வடிகளில் நயம்பட அமைந்துள்ளன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
யாருடைய என்ன தொடர், இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது?
Answer:
மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாப் எவ்வாறு வாழ்ந்தார்?
Answer:
‘தம் எழுத்துகள், எளிய மக்களுக்கானவை’ என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைகளிலும் நின்று, இன்குலாப் வாழ்ந்தார்.

Question 4.
‘இன்குலாப்’ இயங்கிய தளங்கள் யாவை?
Answer:
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் விரிவான தளங்களில் இன்குலாப் இயங்கினார்.

சிறுவினா

Question 1.
இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
Answer:

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு.
  • ஆனால், நீளாத கைகளிலும், நெஞ்சத்தைப் படரவிட வேண்டும்.
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது.
  • அது, எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை, இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

கூடுதல் வினாக்கள்

Question 2.
தாம் எவற்றை எல்லாம் அழைக்க விரும்புவதாக இன்குலாப் கூறுகிறார்?
Answer:

  • இன்குலாப், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்.
  • பறவைகளோடு சேர்ந்து, எல்லைகளைக் கடந்து பறக்க ஆசைப்படுகிறார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும்கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.

Question 3.
சமயம் கடந்து மானுடம் கூடவேண்டுமென்பதை இன்குலாப்வழி விளக்குக.
Answer:
போதி மரத்தின் நிழல், சிலுவை , பிறை ஆகியவை சமத்துவம் என்னும் பெருவெள்ளத்தில் கலந்திட வேண்டும். உலகின் எம்மூலையில் விசும்பல் கேட்டாலும், எல்லார் செவிகளிலும் எதிரொலிக்க வேண்டும். கூண்டில் அடைபட்ட பறவை, சிறகு ஒடிந்தால், நம் சிறகிலும் குருதி வடிய வேண்டும்.

இவ்வகையில் சமயம் கடந்து மனித இனம் சேர்ந்திட வழி ஏற்பட வேண்டும். மூடி மறைக்காத முகங்களில் விழித்து, ‘மனிதம்’ என்னும் பொதுத்தன்மையைப் பாடவேண்டும் என, இன்குலாப் விரும்புகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 4.
கவிஞர் இன்குலாப் குறித்து அறிவன யாவை?
Answer:
‘இன்குலாப்’ என்னும் புனைபெயரில் ‘சாகுல் அமீது’, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

இன்குலாப் கவிதைகள், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் மரணத்திற்குப்பின், இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல்,  கொடையாக அளிக்கப்பட்டது.

இலக்கணக்குறிப்பு

கல்லையும் மண்ணையும் – எண்ணும்மை
சொல்லி – வினையெச்சம்
விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
சமத்துவப்புனல் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

உறுப்பிலக்கணம்

1. தெரிந்த – தெரி + த் (ந்) + த் + அ
தெரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அழைப்பேன் – அழை + ப் + ப் + ஏன்
அழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

3. கடந்து – கட + த் (ந்) + த் + உ
கட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

4. கடப்பேன் – கட + ப் + ப் + ஏன்
கட – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு – பறவைகள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (டவைகளோடு)

2. சுவரில்லாத – சுவர் + இல்லாத
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயலாத (சுவரில்லாத)

3. சமத்துவப்புனல் – சமத்துவம் + புனல்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒரு வும் ஆகும்” (சமத்துவ + புனல்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சமத்துவப்புனல்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

பலவுள் தெரிக

Question 1.
கூவும் குயிலும், களையும் காகமும் – தொடரில் இடம்பெற்ற மரபு ……………….
அ) பெயர்மரபு
ஆ) வினைமரபு
இ) ஒலிமரபு
ஈ) இவை மூன்றும்
Answer:
ஆ) வினைமரபு

கூடுதல் வினாக்கள்

Question 2.
சாகுல் அமீது) என்னும் இயற்பெயரை உடையவர் ………………..
அ) ருதேவ்
ஆ) மீரான் சாகிப்
இ) இன்குலாப்
ஈ) அப்துல் வகாப்
Answer:
இ) இன்குலாப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாபின் கவிதைகள், முழுமையாக ……………….. என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) நேயர் விருப்பம்
Answer:
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

Question 4.
மரணத்திற்குப்பின் இன்குலாப் உடலை அவர் விருப்பப்படி ……………….. அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.
அ) சென்னை
ஆ) தஞ்சை
இ) மதுரை
ஈ) செங்கை
Answer:
ஈ) செங்கை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.1 தாகூரின் கடிதங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

குறுவினாக்கள்

Question 1.
நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?
Answer:

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

Question 2.
பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக.
Answer:
‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும். ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 3.
ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?
Answer:
ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றித் தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.

Question 4.
அலட்சிய மனப்பான்மை (தோல்விகளுக்கான மூலகாரணம்) குறித்துத் தாகூர் கூறியுள்ளதென்ன?
Answer:

  • நம் தோல்விகள் அனைத்திற்கும் மூலகாரணம், இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சிய மனப்பான்மைதான்.
  • இந்தச் சுபாவம் காரணமாகத்தான், நம் அலட்சிய மனப்பான்மை நாட்டு மக்களிடமும் தீவிரமாகத்
  • தலை தூக்குகிறது எனத் தாகூர், அலட்சிய மனப்பான்மை குறித்துக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்?
Answer:

  • குழந்தைகள், இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும்.
  • தங்கள் வேலைகளைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் நிறுவினார்.

Question 6.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
Answer:
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாகூர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

சிறுவினா

Question 1.
‘தாமஸிகம்’ என்றால் என்ன?
Answer:
நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர்.

ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது, பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர, வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கடித இலக்கியம் குறித்து எழுதுக.
Answer:
‘கடிதம்’ என்பது. குறிப்பிட்ட செய்தியை உரியவருக்குத் தெரிவிக்க எழுதி அனுப்புவதாகும்.

உரிய வடிவுடன் அமைந்த கடிதம். பொருள் செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும் இலக்கிய வடிவம் பெறுகிறது.

கடித இலக்கியத்தின் காலத் தொன்மையைக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணப்பெறும் கடிதங்கள் விளக்கும். தாகூரின் கடிதங்கள். கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கிய கவித்துவ இயல்பு கொண்டவை.

Question 4.
ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாறாகத் தாகூர் கூறியது என்ன?
Answer:
எங்கோ ஓர் ஊரின் எல்லையில் அமைந்த தோப்பின் மரக்கிளையில் பறவையின் கூடு இருந்திருக்கும். இருளுக்குப்பின் கூடு திரும்பித் தன் துணையுடன், விரித்த சிறகுகளின் வெம்மை தணிய, உடல் சோர்ந்து உறங்கி இருக்கலாம்.

இரவில் மாமரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழ, கூட்டைவிட்டுப் பறவை சிதறி விழுந்திருக்கும்.

அதன்பின், ஒரு கணம் கண்விழித்த பறவை, மீண்டும் விழிக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது என, ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாற்றைத் தாகூர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்களை மனிதன் எவ்வாறு ஏற்கிறான்?
Answer:

  • மரத்தின் கிளையில் பூ மலர்கிறது. அதற்குப் புகலிடம் மரக்கிளைதான்.
  • மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தில் இடம் அளிக்கிறான்.
  • நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன.
  • அவை அனைத்தையும் மனிதன் மனத்தினுள் ஏற்றுக் கொள்வதில்லை.
  • மலரிடம் இவ்வளவு அலட்சிய மனப்பான்மை, வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்.

Question 8.
தாகூர் எதனை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:

  • தேர்வில் தேர்ச்சி பெறச் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
  • நம் தேசப்பற்று என்பது அப்புத்தக மூட்டைகளால் உருவானது.
  • தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலால் உண்டானதன்று.
  • சிந்தித்துப் பார்த்தால், நம் உலகம் எத்தனை குறுகலானது என்பது புலப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
தாகூர், குறித்து நீ அறிவன யாவை?
Answer:
தாகூர், தம் 16ஆம் வயதில் கவிதைகள் எழுதினார். இகைப்பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், குறு நாடகங்கள், பெருநாவல்கள், சிறுகதைகள் எனப் பல எழுதி, இலக்கியப் பணியாற்றினார்.

பயணக் கட்டுரைகள் எழுதினார். ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதினார். ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினார்.

‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் போற்றப்பட்டார்.

‘ஜாலியன் வாலாபாக் (1919) படு கொலையால் மனம் வருந்தி, ஆங்கில அரசைக் கண்டித்துத் தமக்கு அளித்த ‘சர்’ பட்டதில் தத் துறந்தார். 1921இல் ‘விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

‘குருதேவ்’ என அனை மகலும் அழைக்கப்பட்டார். இவரது ‘ஜனகணமன’ பாடல், இந்தியாவிலும், ‘அமர் சோனார் பங்களா பாடல், வங்க தேசத்திலும், நாட்டுப் பண்களாகப் போற்றப்படுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 10.
த. நா. குமாரசுவாமி பற்றி அறிவன யாவை?
Answer:
த. நா. குமாரசுவால், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் சேர்ந்தவர்! ‘தாகூரின் கடிதங்கள்’ என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

அதனைச் சாதித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. தமிழ் – வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொன்மைப் பாராட்டி, வங்க அரசு, ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

நெடுவினா

Question 1.
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.
Answer:
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகள் :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்துவந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம் :
எதிர்க்கரை புலப்படாதவகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த ‘பத்மா’ ஆறு ஒருபுறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்து, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு , கூட்டின் அழகு , உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அதன் மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம் :
மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை . அதனால், ஒரு பறவையின் சின்னஞ்சிறு வாழ்க்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை : மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், அப்பெயருக்குரிய மலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுகளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று வருகிறது. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’; உலகில் எத்தனையோ நேர்த்தியா – புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினா

Question 2.
நம் தோல்விகளுக்கு எல்லாம் மூலக்காரணமாகத் தாகூர் சுட்டுவன யாவை?
Answer:
சிதறிய கடிதங்கள் உணர்த்துவன :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. பத்மா ஆற்றின் கரை தெரியா வெள்ளத்தால் மரம் சாய, பறவை ஒன்று உயிரிழந்து தந்து வந்தது. நாட்டுப்புறங்களில் மாபெரும் இயற்கை, எல்லாவற்றையும் விழுங்கும் இயல்புடையதாக விளங்குகிறது. பட்டணங்களில் இயற்கையின் வளங்களான பிற உயிரினங்கள் மதிக்கப்படுவதில்லை பாரத நாட்டின் பண்பு, எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதாகும்.

அலட்சிய மனப்பான்மை :
மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. சால மலர்கள், தம் மணத்தால் மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இலக்கியங்களில் கூறப்பட்ட ல மலர்களின் பெயர்களை அறிவோம். அவை எவை எனத் தெரிந்துகொள்ள, முயற்சி செய்வதில்லை . அவ்வளவு அலட்சியம்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போடிப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், திகைத்து நின்று விடுகிறது. இதனைத் ‘தாமலிகம் என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’. உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

வாழ்வில் உயர வழி :
மக்களிடம் கொண்ட பற்றுதல் காரணமாக உண்டானதில்லை தேசப்பற்று. அது தேர்வுக்குப் படிக்கும் பாடநூல்களால் உருவானது. நாம் அறிந்த உலகம் குறுகலானது. அதில் அதிகமான பொருள்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை. இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் எனக் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

பலவுள் தெரிக

Question 1.
பூஜை, விஷயம், உபயோகம் – என்பவை முறையே ……………. என்று தமிழில் வழங்கப்படும்.
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி
இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
ஈ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
Answer:
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு

கூடுதல் வினாக்கள்

Question 2.
செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது ………………..
அ) செய்தித்தாள்
ஆ) குறுஞ்செய்தி
இ) தொலைபேசி
ஈ) கடிதம்
Answer:
ஈ) கடிதம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 3.
தாகூரின் கடிதங்கள், …………….. என்பர்.
அ) கற்பனையானவை
ஆ) நகைச்சுவையானவை
இ) அறிவுரை வழங்குபவை
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை
Answer:
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை

Question 4.
“பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” /“கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” – என்று குறிப்பிடப்படுபவர் …………….
அ) த. நா. குமாரசுவாமி
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) இரவீந்திரநாத தாகூர்
ஈ) பூபேந்திரநாத தாகூர்
Answer:
இ) இரவீந்திரநாத தாகூர்

Question 5.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலி என்பது ………………
அ) நாடக நூல்
ஆ) சிறுகதை நூல்
இ) நாவல்
ஈ) கவிதை நூல்
Answer:
ஈ) கவிதை நூல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 6.
தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் …………………..
அ) கல்கத்தா பல்கலைக்கழகம்
ஆ) சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
இ) வங்க பல்கலைக்கழகம் ,
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
Answer:
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

Question 7.
தாகூரின் கடிதங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது …………….
அ) தமிழ்நாடு அரசு
ஆ) மேற்கு வங்க அரசு
இ) மியூசிக் அகாதெமி
ஈ) சாகித்திய அகாதெமி
Answer:
ஈ) சாகித்திய அகாதெமி

Question 8.
த. நா. குமாரகாரமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு …………………….
அ) தாகூர் இலக்கிய விருது
ஆ) நேதாஜி இலக்கிய விருது
இ) நேரு இலக்கிய விருது
ஈ) ஜோதிபாசு இலக்கிய விருது
Answer:
ஆ) நேதாஜி இலக்கிய விருது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
‘பத்மா’ என்பது, ………………
அ) இறந்துபோன பறவையின் பெயர்
ஆ) ஒருவகை மலரின் பெயர்
இ) பௌ – கதா – கவோ என்னும் புறா இனம்
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
Answer:
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

Question 10.
‘தாமஸிகம்’ என்பது
அ) ஒருவகைப் பறவை
ஆ) ஒரு நதி
இ) ஒருவகை மலர்
ஈ) மெடீரியலிஸம்
Answer:
ஈ) மெடீரியலிஸம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 11.
‘பௌ – கதா – கவோ’ என்பது ……………………
அ) ஒருவகை மலர்
ஆ) ஒரு புறா இனம்
இ) மைனா
ஈ) ஒரு நதி
Answer:
ஆ) ஒரு புறா இனம்

Question 12.
சாந்தி நிகேதனத்திலுள்ள காவியப் புகழ்பெற்ற மரம்……………..
அ) ஸேவுந்தி
ஆ) தாமஸிகம்
இ) பௌ-கதா-கவோ
ஈ) பியால
Answer:
ஈ) பியால

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 13.
‘விருப்புடையவள்’ என்பதைக் குறிக்கும் சொல்……………..
அ) ஸேவுந்தி
ஆ) கபோதாக்ஷி
இ) மயூராக்ஷி
ஈ) இச்சாமதி
Answer:
ஈ) இச்சாமதி

Question 14.
‘பத்மா’, சற்று ஒருபுறமாகப் புரண்டாள். இதில் ‘பத்மா’ என்பது……………..
அ) மாமரக்கிளை
ஆ) பெரிய நதி
இ) பறவைக்கூடு
ஈ) மண் சரிவு
Answer:
ஆ) பெரிய நதி

Question 15.
‘விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………..
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) த. நா. குமாரசாமி
ஈ) ஜவகர்லால் நேரு
Answer:
ஆ) இரவீந்திரநாத தாகூர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பொருட்செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும், கடிதம், இலக்கியமாக உருப்பெறுகின்றது.
வினா : கடிதம் இலக்கியமாக எப்போது உருப்பெறுகின்றது எவ்வாறு?)

2. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்று வெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன்.
வினா : ஆற்று வெள்ளத்தில் இன்று கண்டது என்ன? –

3. தன் சுகதுக்கத்திற்குமுன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை .
வினா : எப்போது, எதை மனிதன் எண்ணுவது இல்லை?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

4. நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை.
வினா : நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று நமது சாத்திரங்கள் எதை விட்டுவிடவில்லை ?

5. மலரிடம் இவ்வளவு அலட்சிய மன பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை.
வினா : வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அலட்சிய மனப்பான்மை எது?

6. ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்று விடுகிறது.
வினா : நம் மனம் எதற்கு அப்பால் செல்ல இயலாமல் எவ்வாறு நின்று விடுகிறது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

7. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூலகாரணம்.
வினா : நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் எம் மனப்பான்மை மூலகாரணம்?

8. பரிட்சையில் தெற வேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
வினா : சரித்திரப் பாடத்தை ஏன் புறக்கணிக்க முடியாது?

9. தாய் மொழிக் கல்வி வழியாகப் பிற பாடங்களைப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்.
வினா : பிற பாடங்களை எம் மொழி வழியாகப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

10. மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அப்துல்கலாமைச் சாரும்.
வினா : மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை யாரைச் சாரும்?

11. தகவல் தொழில் நுட்ப உலகில் கணினிப் புரட்சி இன்றியமையாதது.
வினா : கணினிப் புரட்சி எவ்வுலகில் இன்றியமையாதது?

12. சொற்களை இணைத்துப் பேசும் திறனை நாம் குழந்தைப் பருவம் முதலே பெற்று வந்திருக்கிறோம்.
வினா : எத்தகு திறனை நாம் குழந்தைப் பருவம்முதலே பெற்று வந்திருக்கிறோம்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

சிறுவினா

Question 1.
ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கார் வாழ்வியலில் மிகுந்துள்ளன. – ஏன்?
Answer:

  • காலச்சூழலுக்கு ஏற்றவாறு, பயன்பாட்டிற்காகப் பல்வேறு பெயர்களைப் புதிதாக ஆக்கிக்கொள்கிறோம்.
  • இடுகுறியாகவும், காரணமாகவும் ஆக்கப்படும் புதிய சொல், ஆக்கப்பெயராகும்.
  •  பெயர், வினைச்சொற்களுடன் ‘காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி’ என்னும் விகுதிகள் சேர்த்து உருவாக்கப்படும் புதுச்சொற்கள், தமிழின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?
Answer:
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம், அகம் என்பன, தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகள்.

எ-டு: வண்டிக்காரன், சமையல்காரர், வேலைக்காரி, பணியாள், ஆணையாளர், குற்றவாளி, விண்ண ப்பதாரர், கட்டுமானம், அலுவலகம்.

Question 3.
பொருள்களுக்கு முன்னோர் எவ்வாறு பெயரிட்டு வழங்கினர்?
Answer:
உலகப் பொருள்கள் அனைத்தும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. சில பொருள்களுக்குக் காரணம் கருதியும், சில பொருள்களுக்குக் காரணம் இன்றியும் முன்னோர், பெயரிட்டு வழங்கினர்.

எ-டு: i. நாற்காலி, காற்றாடி, (காரணப்பெயர்கள்)
ii. இலை, கல், மண் – (இடுகுறிப்பெயர்கள் – காரணம் இன்றிப் பெயர் இடப்பட்டவை)

Question 4.
காரணப்பெயர்கள், இடுகுறிப்பெயராவதனை விளக்குக.
Answer:

  • காலப்போக்கில், பொருளின் மாற்றத்தால், அவை பயன்படும் நிலைக்கு ஏற்றவாறு, சில நேரங்களில் காரணப்பெயர், இடுகுறிப்பெயராகி விடுகிறது.
  • எ-டு : நான்கு கால்களோடு பின்புறம் சாயவும் கைகளை வைத்துக் கொள்ளவும் வசதியாக மரத்தால் செய்யப்பட்ட இருக்கை, காரணம் கருதி ‘நாற்காலி ‘ எனப் பெயரிடப்பட்டது.
  • இன்று நான்கு கால்கள் இல்லாத இருக்கைகளையும் ‘நாற்காலி’ என அழைக்கிறோம்.
  • அதாவது, கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர், இன்று ‘இடுகுறியாக’ வழங்கப்படுகிறது.

Question 5.
ஆக்கப்பெயர் விகுதிகளின் தனிச்சிறப்பை எழுதுக.
Answer:

  • தமிழ்ச்சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது, எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகின்றன.
  • அவை தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
  • தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் ஆக்கப்பெயர்கள், மிகுதியாக வழங்குவதனைக் காணலாம்.
    எ-டு : பூ விற்கும் பெண் – பூக்காரி (காரி)
    நெசவு செய்பவர் – நெசவாளி / நெசவாளர் (ஆளி / ஆளர்)
    உழைப்பவர் – உழைப்பாளி / உழைப்பாளர் (ஆளி / ஆவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 6.
‘காரன்’ விகுதி பெற்ற ஆக்கப்பெயர்கள் சில கூறு.
Answer:
வண்டிக்காரன், சினிமாக்காரன், மாட்டுக்காரன், ஆட்டோக்காரன், தோட்டக்காரன்.

Question 7.
ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
Answer:
ஆக்கப்பெயர்ச்சொற்களை விகுதிகளைக் கொண்டு, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

  1. பெயருடன் சேரும் விகுதிகள்.
  2. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்.
  3. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் வரதிகள்.

Question 8.
பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை? சான்று தருக.
Answer:
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர் என்பன, பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 1

Question 9.
பெயருடனும் வினையுடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • இடை என்னும் ஆக்கப்பெயர் விகுதி, பெயருடனும் வினையுடனும் சேர்ந்து வரும்.
  • அச்சு + அகம் – அச்சகம் (‘அச்சு’ என்னும் பெயருடன் வந்தது )
  • அலுவல் + அகம் – அலுவலகம் (‘அலுவல்’ என்னும் வினையுடன் வந்தது)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 8.
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • ‘மானம்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி, வினையுடனும் எச்சத்துடனும் சேர்ந்து வரும்.
  • அடை + மானம் – அடைமானம் (‘அடை’ என்னும் வினையுடன் வந்தது)
  • கட்டு + மானம் – கட்டுமானம் (‘கட்டு’ என்னும் எச்சத்துடன் வந்தது )
  • தேய் + மானம் – தேய்மானம் (‘தேய்’ என்னும் எச்சத்துடன் வந்தது )

Question 9.
காரன், காரி, காரர் என்னும் ஆக்கப்பெயர் விகுதிகள், எவ்வெப்பொருள்களில் வரும்? சான்று தருக.
Answer:
ஆக்கப்பெயர் விகுதிகளுள் ‘காரன், காரி, காரர்’ என்பன, உடைமை, உரிமை, உறவு (தொடர்பு), தொழில் (ஆளுதல்) என்னும் நான்கு பொருள்களில் வரும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 2

Question 10.
(விகுதி பெற்ற) தொழிற்பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதி எது? சான்று தருக.
Answer:
‘ஆளர்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி, (விகுதிபெற்ற) தொழிற்பெயருடன் சேரும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 11.
பணிபுரிவோரைப் பிரித்து அறிய உதவும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?
Answer:

  • ஆக்கப்பெயர் விகுதிகளுள் ‘ஆள்’ என்பது கடைநிலைப் பணிபுரிவோரையும்,
  • ‘ஆளர்’ என்பது உயர்நிலைப் பணிபுரிவோரையும்,
  • ‘ஆளி’ என்பது பணிபுரிவோருள் இருபாலாரையும் குறிக்கும் ஆக்கப்பெயர்களோடு வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 4

Question 12.
கீழ்க்காணும் ஆக்கப் பெயர்ச்சொற்களில் காணப்பெறும் விகுதிகளை எழுதுக.
Answer:
அறிவியல் – அறிவு இயல்
திறமைசாலி – திறமை + சாலி
கோழைத்தனம் – கோழை தனம்
சமத்துவம் – சமம் + துவம்
பெண்ணியம் – பொன் + இயம்
பேச்சாளன் – பேச்சு + ஆளன்
ஏற்றுமதி – ஏற்று + மதி
குரங்காட்டி – குரங்கு + ஆட்டி
வண்டியோட்டி – வண்டி + ஓட்டி
பழந்தின்னி – பழம் + தின்னி
வாயாடி- வாய் + ஆடி
குடித்தனம் – குடி + தனம்
நீதிமான் – நீதி + மான்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள். – இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தம். அ) அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
ஆ) அடையாறுப் பாலத்தின் சுவரில்
இ) அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
Answer:
ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

Question 2.
ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க.
அ) காவலாளி
ஆ) மேலாளர்
இ) உதவியாள்
ஈ) ஆசிரியர்
Answer:
ஈ) ஆசிரியர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

கூடுதல் வினாக்கள்

Question 3.
உடைமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் எது?
அ) தோட்டக்காரர்
ஆ) உறவுக்காரர்
இ) நாட்டுக்காரி
ஈ) வீட்டுக்காரன்
Answer:
ஈ) வீட்டுக்காரன்

Question 4.
உரிமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர்
அ) வீட்டுக்காரன்
ஆ) தமிழ்நாட்டுக்காரி
இ) உறவுக்காரர்
ஈ) தோட்டக்காரர்
Answer:
அ) வீட்டுக்காரன்

Question 5.
உறவுப்பொருளில் வந்த ஆக்கப்பெயருக்குச் சான்று
அ) வீட்டுக்காரன்
ஆ) தமிழ்நாட்டுக்காரி
இ) உறவுக்காரர்
ஈ) தோட்டக்காரர்
Answer:
இ) உறவுக்காரர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 6.
தொழில் பொருளில் வந்த ஆக்கப்பெயர்
அ) வண்டிக்காரர்
ஆ) தமிழ்நாட்டுக்காரன்
இ) சொந்தக்காரன்
ஈ) தையல்காரன்
Answer:
ஈ) தையல்காரன்

Question 7.
புதியதாக ஆக்கப்படும் சொல்லுக்கு – எனப் பெயர்.
அ) பொருட்பெயர்
ஆ) இடப்பெயர்
இ) வினைப்பெயர்
ஈ) ஆக்கப்பெயர்
Answer:
ஈ) ஆக்கப்பெயர்

Question 8.
கடைநிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயாவிகுதி பெறும்.
அ) ஆளர்
ஆ) ஆளி
இ) ஆள்
ஈ) கார்
Answer:
இ) ஆள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 9.
உயர்நிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயர்,
அ) கள்
ஆ) ஆளி
இ) ஆள்
ஈ) ஆளர்
Answer:
ஈ) ஆளர்

Question 10.
இருபால் பொதுப்பெயர்களைக் குறிக்கும் ஆக்கப்பெயர்கள், _ விகுதி பெறும்.
அ) ஆளர்
அ கள்
இ) ஆளி
ஈ) ஆள்
Answer:
இ) ஆளி

Question 11.
பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை, விகுதிகள் என அழைப்பர்.
அ) சினைப்பொ
ஆ) குணப்பெயர்
இ) ஆக்கப்பெயர்
Answer:
இ) ஆக்கப்பெயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Question 12.
ஆக்கப் பெயர்களில் தனிச் சிறப்புடையவை
அ) பகுதிகள்
ஆ) இடைநிலைகள்
இ) விகுதிகள்
ஈ) சந்திகள்
Answer:
இ) விகுதிகள்

இலக்கணத் தேர்ச்சி கொள்

பயிற்சி – 1

கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக.

எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குக் காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும்.

நல்ல பண்பாளர்களைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டு, உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
Asnwer:
ஆக்கப்பெயர்கள் : ஆணையாளர், அழைப்பாளர், விண்ணியல், மண்ணியல், பண்பாளர், கூட்டாளி, உதவியாள், மேலாளர், முதலாளி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

பயிற்சி – 2

அடைப்புக்குள் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைகளுக்குரிய ஆக்கப்பெயர்களைக் கண்ட றிக.
Answer:
1. வேவு பார்த்திடுவான்; ஓசையின்றிச் சென்றிடுவான் (ஆளி) உளவாளி
2. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்) நூலகம்
3. வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) வருமானம்
4. வேட (ஷ)ம் போட்டவன்; வேடதாரிப் பட்டம் வாங்கியவன்? (தாரி) பட்டதாரி
5. அளந்து அளந்து கொட்டிடுவான்; அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்) கொடையாள்

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
மயிலை சீனி. வேங்கடசாமி (1900 – 1980)

தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதிய செய்திகளைப் புலப்படுத்திய வருதைப் படைப்புகள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

இராமேசுவரத்தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மை கொண்ட அவர்தம் கட்டுரைகள், வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள், அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல், இருண்டகாலம் என்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.

நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர், தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்.

சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர். அவருக்கு மதுரையல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டமளித்துப் பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ் நூல்கள் போலாற பல நூல்களால் தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி, அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

1. மறந்ததும் மறைந்ததும் இதுப்பான்ற இரண்டு தொடர்களை உருவாக்குக.
எ – கா : படித்ததும் படைத்ததும், கண்டதும் கொண்டதும், உணர்ந்ததும் உவந்ததும்.

2. அழிந்த வரலாறு, புதிய வெளிச்சம் – அடிக்கோடிட்ட சொற்களின் எச்ச வகைகளை எழுதுக.
அழிந்த – தெரிநிலைப் (இறந்தகாலப்) பெயரெச்சம், புதிய – குறிப்புப் பெயரெச்சம்

3. அழியாச் சிவப்பிடம் – இலக்கணக்குறிப்புத் தருக.
அழியாசி சிறப்பிடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (தொடர்)

4. முதலிய, முதலான – பொருளறிந்து சொற்றொடர் அமைக்க.
உப்பு மிளகாய், புளி முதலிய மளிகைப் பொருள்களை வாங்கினார்.
தமிழ், ஆங்கிலம் முதலான மொழிகளைக் கற்றான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

5. பத்தியில் உள்ள உயர்வு சிறப்பு உம்மையைக் கண்டு எழுதுக.
பேராசிரியர்களும், போற்றும்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மயிலை சீனி வேங்கடசாமி தமிழ்மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த அளவு கடந்த
செய்திகளை வெளிக்கொணர்ந்தார்.
வினா : மயிலை சீனி வேங்கடசாமி எவற்றை வெளிக்கொணர்ந்தார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

2. மயிலை சீனி வேங்கடசாமி தம் கட்டுரைகள் மூலம் தமிழர் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சினார்.
வினா : தமிழர் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் யார்? எவ்வாறு?

3. ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.
வினா : ‘களப்பிரர் காலத் தமிழகம்’ எதற்கு ஒளியூட்டி, எதைச் செப்பனிட்டது?

4. மயிலை சீனி வேங்கடசாமி தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார்.
வினா : மயிலை சீனி வேங்கடசாமி எவ்வெவற்றால், எவர் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

தமிழாக்கம் தருக

Balu : Hi Velu, Good evening
Velu : Hi Balu. Good evening.
Balu : Yesterday you were watching the Republic day function the whole day. Velu : Yes. I was touched by one award ceremony.
Balu : Which award?
Velu : Param Vir Chakra award, highest award for army personnel
Balu : Why were you touched?
Velu : Most of the awards were received by the wives of soldies posthumously Balu : Why? What do you mean by posthumous?
Velu : It means ‘after death’. Many soldiers had laid dowin their lives protecting the border of our Motherland. They have sacrificed their lives to save our Country.
So that we can be free and safe.
Answer:
பாலு : வேலு! மாலை வணக்கம்.
வேலு : பாலு! மாலை வணக்கம்.
பாலு : நீ நேற்று முழுவதும் குடியரசு தினவிழி நிகழ்ச்சிகளைப் பார்த்தாயா?
வேலு : ஆமாம். அவற்றுள் விருது ஒன்று வாங்கிய நிகழ்ச்சியில் நெகிழ்ந்து போனேன்.
பாலு : எந்த விருது?
வேலு : இராணு வீரர்களுக்கு வழர் கட்டும் உயரிய விருதான ‘பரமவீரர் சக்கர’ விருதுதான் அது.
பாலு : எதனால் நீ நெகிழ்ந்து போனாய்?
வேலு : பெரும்பாலான விவங்கள், வீரர்களின் இறப்புக்குப்பின் மனைவியரால் பெறப்பட்டதுதான்
காரணம்.
பாலு : ஏன்? இறப்புக்கு பின் என்றால்?
வேலு : அதற்கு மாவளத்திற்குப்பின்’ என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக
வீரர்கள் பலர் தம் உயிரை ஈந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை நம் நாட்டைக் காக்கத் தியாகம் செய்துள்ளனர். அதனால்தான் நாம் எல்லோரும் இவ்வளவு சுதந்திரமாகவும், பாக்குர்ப்பாகவும் வாழமுடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Asnwer:
சான்று) ! எதிர் நீச்சல் – வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து எதிர்த சல் போட்டு, வெற்றி பெற வேண்டும்.

1. சொந்தக்காலில் நிற்றல் : தனக்கு எவரேனும் பொருளுதவி செய்வார்கள் என எதிர்பார்க்காமல்,
வேலவன் பள்ளியில் படிக்கும்போதே சிறுசிறு பணிகளைச் செய்து, பொருளீட்டித் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு, சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொண்டான்.

2. தாளம் போடுதல் : அரசியலில் மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் தலைவர்கள், தங்கள் கூட்டணித் தலைவர்களின் கூற்றுகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாளம் போடுதலை நாம் காண்கிறோம்.

3. மதில்மேல் பூனை : தேர்வு நெருக்கத்தில் மட்டுமே படித்துத் தேர்வு எழுதுவோர், தேர்வு முடிவு வெளிவரும்போது, மதில்மேல்பூனைபோல் மன அழுத்தத்தில் திண்டாடுவர்.

4. நிறைகுடம் : நன்றாக, தெளிவுபடக் கற்றறிந்த சான்றோர், நிறைகுடம்போல் அமைதியாக இருப்பர்.

5. கைதூக்கிவிடுதல் : ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, கல்வி கற்பித்து, மக்களைக் கைதூக்கிவிடக்
காமராசர் பாடுபட்டார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

6. கண்ணாயிருத்தல் : இளையோர், மாணவப்பருவத்தில் கல்வி கற்பதில்மட்டுமே கண்ணாயிருத்தல்
வேண்டும்.

7. அவசரக்குடுக்கை:மக்களிடம் ஓரளவுக்கு அறிமுகமானவுடனே தன்னைத் தலைவனாகத்
தேர்ந்தெடுத்து விடுவர் எனச் சிலர் அவசரக்குடுக்கைபோல் செயல்பட்டு, மூக்கறுபட்டுத் தோல்வி காண்பது உண்டு.

8. முதலைக் கண்ணீர் : தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலர், மக்கள் படும் துன்பங்களுக்காகத் தாம்
போராடப் போவதாகப் பேசி, முதலைக்கண்ணீர் வடிப்பது உண்டு.

9. கானல்நீர் : முதியோர் இல்லத்தில் மகனால் சேர்க்கப்பட்டபோது, தங்கள் எதிர்கால வாழ்க்கை
கானல் நீராகிப் போனதைப் பெற்றோர் உணர்ந்தனர்.

வரைபடம் கொண்டு விவரிக்க

நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழி தெரியாத ஒருவர், உங்களிடம் வந்து நூலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்க்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 5
Answer:
எதிரில் இருக்கும் வாய்க்கால் தெருவில் நடந்து நேராகச்சென்றால், திருவள்ளுவர் தெரு வரும்; அங்கு இடப்புறம் திரும்பி நடந்தால் ஒரு நாற்சந்தி வரும். அங்கு மேலைத் தேர்த்தெருவும், தெற்குத்தேர்த் தெருவும் சந்திக்கும் மூலையில் நூலகம் உள்ளது என வழிகாட்டுவேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

இலக்கியநயம் பாராட்டுக

தந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ ?
பதம்தரும் பெருமையும் பணம் தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.
– நாமக்கல் கவிஞர்
Answer:
ஆசிரியர் குறித்து : ஈரோடு மாவட்டம் ‘நாமக்கல்’ என்னும் ஊரில் வாழ்ந்தமையால், ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்பெற்றார். இவர் சிறந்த கவிஞர்; ஓவியம் வரைபவர்; கதை எழுதுபவர். தேசப்பற்றும் தமிழ்மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்டக் களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

பாடல் பொருள் : உலகில் சுதந்திரம் தருகின்ற மகிழ்ச்சியைவிட இனிய சுகம் தரும் உணர்வு வேறு ஏதேனும் இருக்கிறதா? வகிக்கின்ற பதவி கொடுக்கின்ற பெருமையையும், சேர்த்த செல்வத்தால் அனுபவிக்கும் இன்பமும் சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது தாழ்ந்தவைதாமே? வாழ்வுக்கு இதம் தரும் அறச்செயல்களும், புகழுடன் வாழ்வதும் ஆகிய எல்லாம், சுதந்திரம் இருப்பதால்தானே நம்மால் அனுபவிக்க முடிகிறது? தினமும் நம்மை வருத்தும் துன்பங்களை நிமிர்ந்து நின்று எதிர்த்து விரட்ட, நிச்சயமாக நமக்குச் சுதந்திரம் வேண்டும் அல்லவா?

மையக்கருத்து : சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனுபவிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுதந்திரமே இன்றியமையாதது என்னும் மையக்கருத்தைக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

நயம் : எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமையக் கவிஞர் கூறியுள்ளது நயம் பயக்கிறது.
இச்செய்யுள், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். இச்செய்யுளில் சுதந்தரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, ‘இயல்பு நவிற்சி அணி’ அமைந்துள்ளது.

தொடை நயம் : அடிதோறும் முதல் சீர்களில் (சுதந்திரம், பதம்தரும், இதம்தரும், தெம்தரும் என்பவற்றில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து, அடி எதுகை அமைந்துள்ளது.

சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவருவது சீர்மோனை. பதம்தரும், பணம் தரும்; இதம்தரும், இசையுடன்; நிதம்தரும், நிமிர்ந்துநின் – சீர்மோனை.

இறுதிச்சீர் ஒன்றுவது இயைபுத்தொடை ஆகும். வேறுண்டோ கீழன்றோ ? என்னும் சீர்களில் ஓசை ஒன்றி, இயைபுத்தொடை அமைந்துள்ளது. அவற்றின் ஓ என்னும் ஓசை படிப்பதற்கு இன்பமளிக்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

மொழியோடு விளையாடு

கீழுள்ள கட்டத்தினுள் நுழைந்து சொற்களை எடுத்தும் தேவையான சொற்களைச் சேர்த்தும் தொடரமைக்க. (அடைபட்ட பகுதியில் உள்ள சொற்களைத் தவிர்க்கவும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 6
எ – டு : மாணவர்கள் வகுப்பறையினுள் நுண்கலைகளையும் கற்க வேண்டும்.

[அடைப்பட்ட பகுதியில் உள்ள தவிர்க்கப்பட்ட சொற்கள் :
1. தாமதம், 2. மன்னிப்பு, 3. வெளியேற்றம், 4. பட்டினி, 5. புறக்கணிப்பு, 6. வேலையின்மை , 7. தண்டனை, 8. தவறவிடல்] [கட்டத்தினுள் நுழைந்து, எடுத்துக்கொள்ளப்பட்ட சொற்கள் : 1. வகுப்பு, 2. வகுப்பறை, 3. கரும்பலகை, 4. சிந்தனை, 5. எழுதுகோல், 6. காமராசர், 7. ஆசிரியர், 8. மாணவர், 9. வழிபாடு, 10. விளையாட்டு, 11. திறமை, 12. மதிய உணவு, 13. கூடுதல் நேரம், 14. வாசிப்பு, 15. உடல்உறுதி, 16. வேண்டும், 17. நடக்கும், 18. செய்வோம், 19. நுண்கலை, 20. பள்ளிக்கூடம்]

அமைக்கப்பட்ட தொடர்கள் : மேற்கோள் குறியில்

1. ‘மாணவர்கள், தவறாமல், பள்ளிக்கூடம்’ செல்வதற்குக் கரும வீரர் காமராசர்’ மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டுவந்தார்.
2. காலை எழுந்தவுடன் ‘வாசிப்பும்’, மாலை வந்தவுடன் ‘விளையாட்டு’ம் என வைத்துக்கோன’ வேண்டும்’.
3. ‘வகுப்பறை’ தூய்மையாக இருக்குமாறும் ‘வகுப்பு’ அமைதியாக இருக்குமாறும் பார்த்துக்கொள்க.
4. பள்ளி தொடங்குமுன், கூட்டு ‘வழிபாடு’ ‘நடக்கும்’.
5. ‘சிந்தனை’ வளர்வதற்கும், ‘திறமை’ கூடுவதற்கும் ‘நுண்கலைப் பயிற்சி இன்றயமையாதது.
6. ‘ஆசிரியர்’ ‘கரும்பலகை’யிலும், மாணவர்கள் குறிப்பேட்டிலும் எழுத, எழுதுகோல்’ (முறையே சுண்ணக்கோல், கரிக்கோல் அல்லது மைக்கோல்) அவசியம்.
7. மாணவர்களாகிய நாங்கள், காலையில் படிப்பதற்கும், மாலையில் பாழுதுவதற்கும் ‘கூடுதல் நேரம் ஒதுக்கீடு
‘செய்வோம்’.
8. மாணவர்களாகிய நாங்கள், “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்னும் திருமூலர் கூற்றுப்படி,
‘உடல் உறுதி’ பெறுவதற்கு ஆவன செய்வோம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

படித்துப் பார்த்துப் படைக்க.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 7

நிற்க அதற்குத் தக

உம்முடைய பொறுப்பை உணர்ந்து, கட்டங்களை நிறைவு செய்க.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் - 8

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

கலைச்சொல் அறிவோம்

உத்திகள் – Strategies
சமத்துவம் – Equality
தொழிற்சங்கம் – Trade Union
பட்டிமன்றம் – Debate
பண் முக ஆளுமை   – Multiple Personality
புனைபெபர்- Pseudonym

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 1.
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக.
Answer:
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகள் :
அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களை முதன்மைப்படுத்தி, ‘இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மொத்த மக்கள் தொகையில், சரிபாதியாக உள்ள இளைஞர்களின் துணையின்றி நாடு வளர்ச்சி பெற முடியாது என்பதை எடுத்துரைத்த நடுவர், ‘இளைஞர்தம் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது டே’ எனப் பேச எழிலை அழைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

இளையோர் முன்னேற்றத்தில் பெரிதும் உதவுவது வீடே :
இளையோர் முன்னேற்றத்தில் முதல்படி வீடு. பிறக்கும் குழந்தைக்கு உலகை அறிமுகப்படுத்துவது வீடு. அன்பையும், அறிவையும் உணர்த்தி அடித்தளமிட்டு, வெற்றிகளைக் கட்டி எழுத உதவுவது வீடு.

“எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை” என த வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உணர வைப்பது வீடே! எனவே, இளையோர் முன்னேற்றத்தின் முதமும் அகமுமாக அமைவது வீடே எனத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக்கொண்டு, எழில், தன் உரையை முன்வைத்தாள்.

வீடு அன்று நாடே :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்து மறுத்துப் பேசவந்த அபதுல்லா, “வீடு ஒரு சிறிய கூடு! வீடு என்னும் சிறுவட்டத்தைத் தாண்டி, நாட்டில் கால் பதிக்கும் போதுதான் நல்வாழ்வு துளிர்க்கிறது.

பாரதி, வீதிக்கு வந்தே உலகைப் படித்தார்; பலதிக்க அறிமுகம் கிடைத்தது. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகளில் ஐரோப்பிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.

புத்தகங்கள் வழி கல்விச்சாலைகள் உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை, நாடுதான் நமக்கு அறிமுகம் செய்கிறது’ என, தம் உரைவீச்சை முன்வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

நாடு அன்று வீடே! :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்ததாகத் தன் கருத்தோட்டத்தைக் கூறவந்த எலிசபெத், தனக்கு வீட்டினுள்ளே உலகை அறிமுகப்படுத்திய பெற்றோரைப் போற்றி உரையைத் தொடங்கினார்.

சிறு கூடு அன்று வீடு நம் பண்பாட்டையும் மரபையும் காத்து நிற்கும் கருவூலம்! எத்தேடலுக்கும் தலைவாசல்! அறிவின் நறங்கால்!

வீட்டில் கேட்ட தாலாட்டும், நுங்கு தின்றது, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது எனப் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், வரமான பல நெறிகளைக் கற்பித்தது வீடே என்பதை நினைவில் கொண்டு, தீர்ப்பு வழங்குமாறு எலிசபெத் தன் உரையை முடித்தாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

பெண்கள்க்கு விடியலைத் தந்தது பள்ளி :
விய பலுக்கான வெளிச்சமாக உரையாற்ற வருமாறு அமுதாவை நடுவர் அழைத்தார். நாட்டு நலனைப் புதிய படத்தில் வழிநடத்தக் கற்றுக்கொடுத்த முண்டாசுக் கவிஞனை வணங்கி, அமுதா தன் உரையைத் தொடங்கினாள்.

வீடு, பெண்களுக்குத் தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கூடுதான். பள்ளிக்கு வந்தபின்தான், ‘பெண்மை வெல்க’ எனக் கூத்திட முடிந்தது. இன்று விஞ்ஞானிகளாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம். நாடே இளையோரை நம்பிக்கையோடு வழிநடத்துகிறது. எதிர்காலம் வளமாகத் துணைபுரிகிறது எனத் தன் வாதங்களை முன்வைத்தாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

இருபக்க வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த நடுவர், “ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த கருத்துகள் என, எல்லாவற்றையும் வழங்கி, முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது நாடே!” என்று தீர்ப்பு வழங்கினார்.

கற்பவை கற்றபின்

“மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை – பணமே, கல்வியே” என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.
Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பறையில் எழிலன், முகிலன், நறுமுகை ஆகிய மூவரும் மனித வாழ்வை உயர்த்து வதற்குப் பெரிதும் தேவை பணமே’ என்னும் தலைப்பிலும், வேலன், முருகன், தேன்மொழி ஆகிய மூவரும் ‘மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ என்னும் தலைப்பிலும் ஒருவர் மாற்றி மற்றொருவராக வந்து சொற்போர் நிகழ்த்துவார்கள். அனைவரும் கவனமாக உற்று நோக்கி, நற்கருத்துகளை அறிய முயற்சி செய்யுங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

எழிலன் : அனைவருக்கும் வணக்கம். இன்று சொற்போருக்கான தலைப்பு அனைவரும் அறிந்ததே! நான் எதையும் சொல்லவில்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருவள்ளுவரே சொல்லியுள்ளார். அதுமட்டுமா? “ஒரு பொருட்டாக மதிக்கத்தக்க சிறப்பு இல்லாதவனையும் பெருமதிப்பு உடையவராகச் செய்வது செல்வமே” எனவும் கூறியுள்ளார். பொருள் இல்லாமல் எவரும் உலகில் எச்செயலையும் செய்ய முடியாது. ஆகையால், வாழ்வை உயர்த்தவல்லது பொருள் செல்வமே எனக் கூறி, விடைபெறுகமறன். நன்றி.

வேலன் : எல்லாரையும் வணங்கி, என் உரையைத் தொடங்குகிறேன். காலத்தால் அழயாதது கல்விச் செல்வம். உலகில் எத்தனை எத்தனையோ செல்வர்கள், மன்னர்கள், பெருவேந்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்ந்தவரைதான், அவர்கள் செல்வத்திற்கு மதிப்பு இருந்திருக்கிறது. திருவள்ளுவரும் இளங்கோவும் செல்வம் காரணமாகவா இன்றளவும் போற்றப்படுகிறார்கள்? அவர்கள் காலத்தில் செல்வமுடையோர் வாழவே இல்லையா? அவர்கள் எங்கே? இன்றளவும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் உலகம் போற்றுகிறதல்லவா? அதனால், மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

முகிலன் : நண்பர்களே! இன்றைக்கு உலகில் பொருள் இல்லை என்றால் வாழ்வே கிடையாது என்பது, அனைவரும் அறிந்ததே. ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பது உலக வழக்கு. ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பதும் அனைவரும் அறிந்ததே.

நாம் உண்மைலேயே மதிப்புப் பெறவேண்டுமானால், கையில் பெரும்பொருள் இருக்க வேண்டும். பணம் பந்தியிலே’ என்பதே உண்மை எனக்கூறி, உரையை முடிக்கிறேன்.

முருகன் : உங்கள் அனைவரையும் வணங்கி என் உரையைத் தொடங்குமுகமாக ஒன்றை நினைவு படுத்துகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் பெரு ழை பெய்தது. எதிர்பாராத வெள்ளம், எண்ணற்ற உயிர்களைச் சூறையாடியது. உயிர் பிழைத்தவர்களில் பலர், தம் வீடுவாசல்களை இழந்தனர்; வாகனங்களைப் பறிகொடுத்தனர்; பொன்னையும் பொருளையும் வெள்ளம் கொள்ளை கொண்டது. கல்வி அறிவைப் பெறாதவர்கள், பிறரிடம் கை ஏந்தினர்.

கற்றறிந்தவர்கள், தம் கல்வியால் கௌரவமாக வாழ்வை மீட்டு எடுத்தனர். அதனால், கல்வியே மனித வாழ்வை உயர்த்த உதவும் எனக் கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

நறுமுகை : நல்லதையே நனைப்போம் எனக் கூறி அனைவரையும் வணங்கி, என் உரையைத் தொடங்கு கிறேன். எனக்கு முன் பேயவர் வெள்ளச்சேதம் பற்றிக் கூறினார். அப்போது எத்தனையோ செல்வர்கள் பொருளுதவி செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதை மறக்க முடியுமா? செல்வம் என்ற ஒன்று வந்து குவிந்தால்தான் மனித வாழ்வு மதிப்புப் பெறுகிறது என்பதே உண்மை . எனவே, பொருளே மனித வாழ்வுக்கு உயர்வைத் தேடித் தரும் எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன். நன்றி; வணக்கம்.

தேன்மொழிய: தோழமைக்குரிய அனைவருக்கும் வணக்கம். செல்வம் தேவைதான். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. கல்வி அப்படி அன்று. கற்றவரை விட்டு அதைப் பிரிக்க முடியாது. செல்வம் அப்படியா? தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் சொல்ல நாணும்’ என்பார்கள். கல்வி கற்றவர், வறுடையிலும் வளமாக வாழ்வர். அவரைத் தேடி, வளம் தானேவரும். செல்வர்களுக்குத் தம் தேசத்தில் மட்டுமே சிறப்பு உண்டு. கற்றவருக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும். எனவே, கல்வியாலேயே மனித வாழ்வை உயர்த்த முடியும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

ஆசிரியர் : இருதரப்பு வாதங்களையும் நான் கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் கல்வி அறிவு ஆழ்ந்து அகன்றதாக உள்ளது; மகிழ்ச்சி. தலைப்புக்கு வருவோம். செல்வமோ கல்வியோ, இரண்டுமே மனித வாழ்வுக்கு இன்றியமையாதன. அளவு அறிந்து வாழ்தல் என்பதைக் கற்றவரும் செல்வரும் கடைப்பிடிக்க வேண்டும். அளவு அறியாது செயல்பட்டால், இருவருக்குமே தீமை விளையும். நீங்கள் அனைவரும் நன்றாகக் கற்பன கற்க வேண்டும். செல்வத்தைத் தேடிச் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் எனக் கூறி முடிக்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
சரியான விடையைத் தேர்க.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கவிஞர் வாலி
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 2.
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என …………………. குறிப்பிடுகிறது.
அ) நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
ஈ) மணிமேகலை

Question 3.
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கம்பதாசன்
காராபாரதி
Answer:
ஈ) தாராபாரதி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 4.
“எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை” – இவ்வரிகளுக்கு சொந்தக்காரர் …………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) தாராபாரதி
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) தாராபாரதி

Question 5.
கல்விக் கூடங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் வரிகள் …………..
அ) “சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிடாய்
ஆ) “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
இ) “தேடுகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையலடுத்தல்”
ஈ) விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சாத்திரம் நானென்று கூவு
Answer:
இ, “தேதிகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 6.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!” – எனப் பாடியவர்……….
அபாரதிதாசன்
ஆ) தாராபாரதி
இ) அண்ணா
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Question 7.
வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” எனக் கட்டளையிட்டவர் …………..
அ) பாரதியார்
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தாராபாரதி
ஈ) அறிஞர் அண்ணா
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 8.
“வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என, நாட்டு நலத்திற்குப் புதிய வழித்தடம் அமைத்தவர்
அ) பாரதிதாசன்
ஆ) அறிஞர் அண்ணா
இ) முண்டாசுக் கவிஞன்
ஈ) தாராபாரதி
Answer:
இ) முண்டாசுக் கவிஞன்

Question 9.
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” என்று பாடியவர் ………………
அ) தாராபாரதி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) அறிஞர் அண்ணா
ஈ) சுப்பிரமணிய பாரதி
Answer:
ஈ) சுப்பிரமணிய பாரதி

Question 10.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
– இப்பாடலுக்குச் சொந்தக்காரர் ……………….
அ) தேசியக்கவி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தமிழ்த்தென்றல்
ஈ) பேரறிஞர்
Answer:
ஆ) புரட்சிக்கவிஞர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 11.
“நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” எனக் கூறியவர்……………….
அ) நாவேந்தர்
ஆ) சொல்வேந்தர்
இ) பாவேந்தர்
ஈ) நாவலர்
Answer:
இ) பாவேந்தர்

Question 12.
“வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” என்று கூறியவர்……………….
அ) பாரதியார்
ஆ) பாவேந்தர்
இ) பேரறிஞர்
ஈ) நாவலா
Answer:
இ) பேரறிஞர்

Question 13.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மேன்மையான பார்வைக்கு வழி கறியவர் ……………
அ) தொல்காப்பியர்
ஆ) திருவள்ளுவர்
இ) திருமூலர்
ஈ) கணியன் பூங்குன்றன்
Answer:
ஈ) கணியன் பூங்குன்றன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 14.
“விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து பொதுவில் நடத்து”
எனக் கூறி உலகத்தை வீடாகக் காட்டியவர் …………
அ) பாரதியார்
ஆ) கண்ணதாசன் இதாராபாரதி
ஈ) புரட்சிக்கவிஞர்
Answer:
ஈ) புரட்சிக்கவிஞர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.3 பதிற்றுப்பத்து Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.3 பதிற்றுப்பத்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

தறுவினா

Question 1.
செந்துறைப் பாடாண் பாட்டு – துறைவிளக்கம் எழுதுக.
Answer:

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது, ‘பாடாண்’ எனப்படும்.
  • உலகினுள் இயற்கை விசையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

கூடுதல் வினாக்கள்

Question 2.
வண்ணம், ஒழுகு வண்ணம் – விளக்குக.
Answer:

  • ‘வண்ணம் என்பது, சந்த (ஓசை நய) வேறுபாடாகும்.
  • ‘ஒழுத வண்ணம்’ என்பது, ஒழுகிய (நெகிழ்ந்த) ஓசையால் சொல்லுதலாகும்.

Question 3.
தாக்கும் செந்தூக்கு – விளக்குக.
Answer:
தூக்கு’ என்பது, செய்யுள் அடி அளவை வரையறை செய்வதாகும். செந்தூக்கு’ என்பது, வஞ்சிப் பாவின் இறுதி அடி போன்றோ, ஆசிரியப்பா அடியின் இறுதி போன்றோ அமைவதாகும்.

Question 4.
திருவள்ளுவர், சிறந்த நாடு குறித்துக் கூறும் செய்தி யாது?
Answer:
மிகுபசியும் தீராநோயும் பெரும்பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 5.
சேரலாதனின் எச்சிறப்புகளைக் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்?
Answer:
சேரலாதனின் நாடுகாத்தல் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து
பாடியுள்ளார்.

Question 6.
சேரலாதனைக் குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் நெடுஞ்சேரலாதன்.
  • இமயம்வரை படை நடத்தி வெற்றி பெற்றவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
  • தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 7.
பாடாண் திணை – விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண்திணை. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது.
  • அதாவது ஒரு சிறந்த தலைவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலிய பண்புகளை ஆராய்ந்து கூறுவதாகும். கைக்கிளைத் திணைக்குப் பாடாண் திணை புறனாகும்.

Question 8.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் யார்? பெற்ற பரிசில்கள் யாவை?
Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். அதற்காக உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசில்களாகப் பெற்ற

Question 9.
சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை – ஏன்?
Answer:

  • செல்வவளம் மிக்கது சேரநாடு.
  • அச் சேரநாட்டு மக்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கண்போலப் பாதுகாத்தான்.
  • எனவே, சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை.
  • வேற்று நாடு சென்று குடியேறுவதையும் விரும்பியதில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

சிறுவினா

Question 1.
சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய தரிணங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும் மக்களையும் காண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள், பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்.
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது.

கூடுதல் வினா

Question 2.
பதிற்றுப்பத்துக் குறித்துக் குதிப்பெழுதுக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களும், புறப்பொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து.
  • இது, சேர மன்னக்கலைத்துப் பேரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
  • புறப்பொருள்களும் பாடாண் திணை’ குறித்தமைந்த நூல். * ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு , பாடலின் பெயர் ஆகியன இடம் பெற்றிருக்கும். பாடலில் இடம்பெறும் சிறந்த சொற்றொடர், அப்பாடலுக்குத் தலைப்பாக இப்பட்டிருக்கும்.
  • இத்தொகை நூலுள், முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

இலக்கணக்குறிப்பு

துய்த்தல், பிழைப்பு – தொழிற்பெயர்கள்
ஒரீஇய – சொல்லிசை அளபெடை
புகழ்பண்பு – வினைத்தொகை
நன்னாடு, கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகைகள்
மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
ஒடியா, தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
இகந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

1. மருண்ட னென் – மருள் (ண்) + ட் + அன் + என்
மருள் – பகுதி, ‘ள்’, ‘ண்’ ஆனது விகாரம், ட் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை, என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

2. துய்த்த ல் – துய் + த் + தல்
துய் – பகுதி, த் – சந்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

3. நல்கி – நல்கு + இ
நல்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

4. எய்தி – எய்து + இ
எய்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

5. தருதல் – தா (தரு) + தல்
தா – பகுதி, ‘தரு’ என்றானது விகாரம், தல் – தொழிற்பெயர் விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

புணர்ச்சி விதிகள்

1. மண்ணுடை – மண் + உடை
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (மண்ண் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மண்ணுடை)

2. புறந்தருதல் – புறம் + தருதல்
“மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” (புறந்தருதல்)

3. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு), “னலமுன் றன ஆகும் காக்கள்’ (நன்னாடு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

4. நல்லிசை – நன்மை + இசை
“ஈறுபோதல்” (நன் + இசை), “முன்நின்ற மெய்திதெல்” (நல் + இசை )
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்ரம்” நல்ல் + இசை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நல்லிசை)

குறள் பொருள் அறிக.

Question 1.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
Answer:
மிக்க பசியும், துன்புறுத்தும் நோயும், அழிக்கும் பகையும் சூழாது இருப்பதே சிறந்த நாடாகும்.

Question 2.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்தில் வந்து.
Answer:
நோயில்லாமை, பொரு செல்வம், விளைபொருள், இன்பவாழ்வு, பாதுகாப்பு என்னும் ஐந்தும், ஒரு நாட்டிற்கு அணிகளரகம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

பலவுள் தெரிக

Question 1.
கூபா – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.
காரணம் : சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) இரண்டும் சரி
இ) இரண்டிற்கும் தொடர்பு இல்லை
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
ஆ) இரண்டும் சரி

கூடுதல் வினாக்கள்

Question 2.
“பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி” – இத்தொடரில், ‘வாழ்தல்’ என்னும் பொருளுடைய……………..
சொல் அ) பதி
ஆ) பிழைப்பு
இ) துய்த்தல்
ஈ) எய்தி
Answer:
ஆ) பிழைப்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 3.
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்” இத்தொடரில், பாதுகாப்பு’ என்னும் பொருளை உணர்த்தும் சொல்……………..
அ) புரைவயின்
ஆ) நல்கி
இ) ஏமம்
ஈ) சீர்கெழு
Answer:

Question 4.
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது……………..
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) ஏமம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 5.
சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்தநின் பண்புபல நயந்தே – இப்பாடலில், நெடியோன் என்பவன் யார்?
அ) சிவபெருமான்
ஆ) திருமால்
இ) நெடுந்சேரலாதன்
ஈ) விழாத்தலைவன்
Answer:
ஆ) திருமால்

Question 6.
“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு” என்று கூறியவர்……………..
அ) குமட்டூர்க் கண்ண னார்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) திருவள்ளுவர்
ஈ) இமயவரம்பன்
Answer:
இ) திருவள்ளுவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 7.
இமயத்தில் வில் பொறித்தவன்……………..
அ) உதியன் சேரலாதன்
அ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Question 8.
கடம்பர்களை வென்றவன்……………..
அ) உதியன் சேரலாதன்
ஆ) செங்குட்டுவன்
இ) கரிகாலன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 9.
பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தைப் பாடியவர்……………..
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) குமட்டூர்க் கண்ணனார்
ஈ) ஔவையார்
Answer:
இரு குமட்டூர்க் கண்ணனார்

Question 10.
‘நிரை வெள்ளம்’ என்னும் தொடரின் பொருள்……………..
அ) வானுலக வீரர்கள்
ஆ) வெற்றி பெற்றோர்
இ கவசமானோர்
ஈ) நரகத்து வீரர்கள்
Answer:
ஈ) நரகத்து வீரர்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 11.
கைக்கிளைக்குப் புறனாக அமையும் திணை……………..
அ) பெருந்திணை
ஆ) வெட்சித்திணை
இ) வாகைத்திணை
ஈ) பாடாண்திணை
Answer:
ஈ) பாடாண்திணை

Question 12.
‘வண்ணம்’ என்பது……………..
அ) செய்யுள் வேறுபாடு
ஆ) துள்ளல் ஓசை
இ) சந்த வேறுபாடு
ஈ) புலமை வேறுபாடு
Answer:
இ) சந்த வேறுபாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 13.
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்கள்……………..
அ) பதிற்றுப்பத்து, நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு
ஈ) புறநானூறு, பரிபாடல்
Answer:
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு

Question 14.
பதிற்றுப்பத்து நூல் முழுமையும், …………….. திணையில் அமைந்துள்ளது.
அ) வெட்சி
ஆ) நொச்சி
இ) பாடாண்
ஈ) பொதுவியல்
Answer:
இ) பாடாண்

Question 15.
பதிற்றுப்பத்து என்பது, …………….. மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளைப் பாடுவது.
அ) பாண்டிய
ஆ) சோழ
இ) பல்லவ
ஈ) சேர
Answer:
ஈ) சேர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 16.
பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறும் திணை……………..
அ) கரந்தை
ஆ) வஞ்சி
இ) பாடாண்
ஈ) பொகவியல்
Answer:
இ) பாடாண்

Question 17.
சந்த வேறுபாட்டைக் குறிப்பது, ……………..என்னும் தொடர்.
அ) துறை
ஆ) திணை
இ) தூக்கு
ஈ) வண்ணம்
Answer:
ஈ) வண்ணம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 18.
பதிற்றுப்பத்துள் கிடைக்காத பத்துகள்……………..
அ) முதற்பத்து, எட்டாம்பத்து
ஆ) நான்காவத்து, ஆறாம்பத்து
இ) எட்டாம்பத்து, இறுதிப்பத்து
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து
Answer:
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து

Question 19.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது……………..
அ) முதல்பத்து
ஆ) நான்காம்பத்து
இ) பத்தாம்பத்து
ஈ) இரண்டாம்பத்து
Answer:
ஈ) இரண்டாம்பத்து

Question 20.
பதிற்றுப்பத்து’ என்னும் தொடர்பு ……………..எனப் பிரியும்.
அ) பதிற் + றுப்பத்து
ஆ) பதிறு + பத்து
இ) பதிற்று + பத்து
ஈ) பத்து + பத்து
Answer:
ஈ) பத்து + பத்தில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 21.
பொருத்துக.
1. சான்றோர் – அ. கடுந்துப்பு
2. புதுவருவாய் – ஆ. மருண்டனென்
3. மிதவலிமை – இ. மன்னுயிர்
4. வியப்படைந்தேன் – ஈ. புரையோர்
– உ. யாணர்
Answer:
1 – ஈ. 2 – உ, 3 – அ, 4 – ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 22.
தவறான விடையைக் கண்டறிக. பாடாண் திணை என்பது.
அ) கைக்கிளைக்குப் புறனானது
ஆ) மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மைகளைக் கூறுவது
இ) ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.
Answer:
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.2 புரட்சிக்கவி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.2 புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

குறுவினாக்கள்

Question 1.
உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
Answer:

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

Question 2.
அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக்குறிப்புத் திருக.
Answer:
அலைகடல் – வினைத்தொகை; புதுக்கியவா வினையாலணையும் பெயர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘உதாரன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்த வன்’ – யார், யாரிடம் கூறியது?
Answer:
“உதாரன் அழகும் அறிவும் இளயையும் வாய்ந்தவன்” என்று அரசனிடம் அமைச்சர் கூறியது.

Question 4.
“சில பேச்சுப் பேசிடுக” – யாடு யாரிடம், எங்கு கூறியது?
Answer:
“சில பேச்சுப் பேசிடுக தலைப்பாகை அதிகாரி, உதாரனிடமும் மங்கையிடமும் கொலைக்களத்தில் கூறியது.

Question 5.
அரசன், அமைச்சரிடம் எதற்கு ஆலோசனை கேட்டான்?
Answer:
அரசன், தன் மகள் இளவரசி அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தர விரும்பியதால், அமைச்சரிடம் ஆலோசனை கேட்டான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
அரசன், எதற்குத் தயங்கினான்?
Answer:
அழாம் அறிவும் இளமையும் வாய்ந்த உதாரனே, கவிதை எழுதும் கலை கற்பிக்க ஏற்றவன் என அமைச்சர் கூறியதால், ‘தன் மகள் எளிய கவிஞனோடு காதல் வயப்படுவாளோ?’ என அரசன் தயங்கினான்.

Question 7.
தயங்கிய அரசனுக்கு அமைச்சர் கூறிய உத்தி யாது?
Answer:
“உதாரன் பார்வையற்றவன்” என அமுதவல்லியிடமும், “அமுதவல்லி தொழுநோயாளி” என உதாரனிடமும் கூறி, இருவருக்கும் இடையே, ஒருவரை மற்றொருவர் காணாவகையில் திரை இடுமாறும் அரசனுக்கு அமைச்சர் உத்தி கூறினார்.

Question 8.
பாரதிதாசனைப் ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் என்ன?
Answer:
தம் கவிதைகளில் தாய்மொழி, தமிழினம், குடியாட்சி உரிமைகள், சமூக சீர்திருத்தங்கள் என்பன பற்றி, உரத்த சிந்தனைகளை வெளியிட்டுள்ளமையே, பாரதிதாசனைப், ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 9.
மக்களாட்சி அடிப்படைக் கூறுகளாகப் புரட்சிக்கவி கூறுவன யாவை?
Answer:
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன, மக்களாட்சி அடிப்படைக் கூறுகள் எனப் புரட்சிக்கவி கூறுகிறது.

Question 10.
பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு என்பன, பாரதிதாசன் இயற்றிய காப்பியங்களாகும்.

சிறுவினாக்கள்

Question 1.
“உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.
பொருள் : உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.
விளக்கம் : கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதநரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 2.
பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
Answer:
பெருங்காடு – பெருமை + காடு ‘ஈறுபோதல்’ (பெரு + காடு), ‘இனம் மிகல்’ (பெருங்காடு)

உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உந்துது)

கூடுதல் வினா

Question 3.
புரட்சிக் கவிஞர் – குறிப்பெழுதுக.
Answer:
புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்ட கனக சுப்புரத்தினம், பாரதியாரிடம் கொண்ட பற்றுதலால், தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

சமுதாயப் பொறுப்புணர்ந்து கவிதைகளைப் படைத்தார். தம் பாடல்களில் மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியன குத்த கருத்துகளை உரக்க வெளிப்படுத்தியமையால், ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ‘பாவேந்தர் எனவும் அழைக்கப்பெற்றார்.

குடும்ப விளக்கு பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு முதலான நூல்களை இயற்றினார். ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

வடமொழியால் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி 1937இல், புரட்சிக்கவி’யை எழுதி ளார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தார்.

இவடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு இவர் பெயரில் திருச்சியில், ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ளது.

இவர் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் புதுவை அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

நெடுவினா

Question 1.
பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
Answer:
உதாரன் புரட்சிக்கவி :
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ காவியத்தைத் தழுவிப் பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’யைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம் பெற்றவன் ‘உதாரன்’.

தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து, உதாரன் மக்களாட்சியை நிறுவுகிறான். அதற்கு அவன் ஆற்றிய வீரவுரைகளே காரணம். அவ்வுரைகள் அத்தனையும் பாரதிதாசன் சிந்தையில் உருவானவையே.

வாய்ப்பைப் பயன்படுத்தும் உதாரன் :
தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசி அமுதவல்லிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்ட கவிஞன் உதாரன், கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான்.

அவர்கள் இறுதியில் காதலர்களாயினர். அதனால், மரண தண்டனைக்கு உள்ளாகி, இருவரும் கொலைக்களம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கிடைத்த வாய்ப்பைத் தனதாக்கிப் புரட்சிக்காரனாகிறான் கவிஞன். இங்குக் கவிஞன் உதாரனின் முழக்கமெல்லாம், பாவேந்தரின் கருத்துகளே என்பதில் ஐயமில்லை!

பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த நலன்களை, உதாரன் பட்டியலிடுகின்றான்! “பாழ் நிலத்தை அந்நாளில் புதுக்கியவர் யார்?”, “பயன்விளைக்கும் நின்ற உழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?”, “கருவியெலாம் செய்த அந்தக் கைதான் யார் கை?”, “கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?” இவையெல்லாம் பாரதிதாசனது உணர்ச்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உதாரன் புரட்சியைத் தூண்டுதல் :
மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்பியதால் கவிஞன் உதாரன், தனக்கும் அரகனுக்கும் உண்டான வழக்கின் அடிப்படையை எடுத்துரைக்கிறான்.

“மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?” என்னும் சிந்தனையைத் தூண்டும் மக்களுக்காக மட்டுமே ஆட்சி இருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாவேந்தர், உகாரன் வாய்மொழியாக வைத்து, “ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அந்தத் தேசம் ஒழதல் நன்றாம்” எனக் கூறுகின்றார்.

புரட்சிக்கவியின் தமிழ்ப்பற்று :
தமிழின்மேல் தமக்குள்ள பற்றுதலைப் பாவேந்தர், உதாரன் மூலமாத வெளிப்படுத்துகிறார். “அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று சமுதாயம் நினைத்திடுமோ?” அஞ்சுவதாகக் கூறி, “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ ?” என வேதனைப்படுகிறான்.

எனவே மக்களை நோக்கி, “உமை ஒன்று வேண்டுகின்றேன்; மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்று மின்கள்” என்கிறான். இவை அனைத்தும் பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவியே என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

இலக்கணக்குறிப்பு

ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய, வீழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
அலைகடல், நிறைஉழைப்பு, உயர்தமிழ் வழ்கொள்ளி – வினைத்தொகைகள்
தமிழ்க்கவிஞன், பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
பேரன்பு, நெடுங்குன்றம், இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள், நன்னாடு, பொன்னாடு, பெருமக்கள் – பண்புத்தொகைகள்
ஒழிதல், சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
உழுதுழுது, பதைபதைத்து – அடுக்குத்தொடர்கள்
பெரியோரே, தாபோரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
பூட்டி – வினையெச்சம்
வந்திருந்தார், கொண்டவர் – வினையாலணையும் பெயர்
எலாம் – இடைக்குறை
கற்பிளுந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனுக்கும் காதலிக்கும் – எண்ணும்மைகள்
வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
கண்ணீர்வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உறுப்பிலக்கணம்

1. நின்றார் – நில் (ன்) + ற் + ஆர்
நில் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. செய்வான் – செய் + வ் + ஆன்
செய் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அழைத்தான் – அழை + த் + த் + ஆன்
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

4. வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

5. ஆழ்க – ஆழ் + க
ஆழ் – பகுதி, க – வியங்கோள் வினைமுற்று விகுதி.

6. பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுறு விகுதிர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. உரைப்பாய் – உரை + ப் + ப் + ஆய்
உரை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

8. தந்தார் – தா (த) + த் (ந்) + த் + ஆர்
தா – பகுதி, ‘த’ ஆனது விகாரம், த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.,

9. ஏகுகின்றேன் – ஏகு + கின்று + ஏன்
ஏகு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

10. வாழார் – வாழ் + (ஆ) + ஆர்
வாழ் – பகுதி, (ஆ) – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

11. செய்தார் – செய் + த் + ஆர்
செய் – பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

12. ஓதுக – ஓது + க
ஓது – பகுதி, க – வியங்கோள் விலை கற்று விகுதி.

13. பூட்டி – பூட்டு + இ
பூட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

14. வெட்டி – வெட்டு + இ
வெட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

15. அறுத்தல் – அறு – த + தல்
அறு – பகுதி, த்து சத்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

16. வாழிய – வாழ் + இய
வாழ் – பக்தி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.

17. செய்தேன் – செய் + த் + ஏன்
செய் பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

18. குனந்தான் – குனி+ த் (ந்) + த் + ஆன்
தனி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. நீரோடை – நீர் + ஓடை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நீரோடை)

2. சிற்றூர் – சிறுமை + ஊர்
“ஈறுபோதல்” (சிறு + ஊர்)
“தன்னொற்று இரட்டல்” (சிற்று + ஊர்)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (சிற்ற் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சிற்றூர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

3. கற்பிளந்து – கல் + பிளந்து
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பிளந்து )

4. மணிக்குலம் – மணி + குலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மணிக்குலம்)

5. அமுதென்று – அமுது + என்று
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அமுத் + என்று)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அமுதென்று)

6. புவியாட்சி – புவி + ஆட்சி
“இ ஈ ஐ வழி யவ்வும்” (புவி + ய் + ஆட்சி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புவியாட்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. ஒப்பவில்லை – ஒப்ப + இல்லை
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஒப்ப +வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒப்பவில்லை)

8. நெற்சேர – நெல் + சேர
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நெற்சேர)

9. பொற்றுகளை – பொன் + துகளை
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன் + றுகளை)
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (பொற்றுகளை)

10. பேரன்பு – பெருமை + அன்பு
“ஈறுபோதல்” (பெரு + அன்பு), “ஆதி நீடல்” (பேரு + அன்)
“முற்றும் அற்று ஒரோ வழி” (பேர் அன்பு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போன்பு)

11. இளஞ்சிங்கம் – இளமை + சிங்கம்
“ஈறுபோதல்” (இள + சிங்கம்), “இனம் மிகில்” (இளஞ்சிங்கம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

12. பொன்னாடு – பொன் + நாடு
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன்னாடு)

13. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு எனலமுன் றன ஆகும் தநக்கள்” (நன்னாடு)

14. கண்ணீ ர் – கண் + நீர்
“ணளமுன் டண ஆகும் ஆக்கள்” (கண்ணீ ர்)

15. ஆவென்று – ஆல் என்று
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஆ + வ் + என்று),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆவென்று)

16. தூதொன்று – தூது + ஒன்று
“உதிர்வான உக்குறள் மெய்விட்டோடும்” (தூத் + ஒன்று)
உடலமேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூதொன்று)

17. நிலவில்லை – நலிவு + இல்லை
முற்றும் அற்று ஒரோவழி” (நலிவ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நலிவில்லை)

18. தலைப்பாகை – தலை + பாகை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (தலைப்பாகை)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

19. நெடுங்குன்று – நெடுமை + குன்று
“ஈறுபோதல்” (நெடு + குன்று), “இனமிகல்” (நெடுங்குன்று)

20. பாம்புக் கூட்டம் – பாம்பு + கூட்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பாம்புக் கூட்டம் )

பலவுள் தெரிக

Question 1.
அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் – யார், யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
ஆ) மன்னன் அமைச்சரிடம்
இ) அமைச்சர் மன்னனிடம்
ஈ) மன்னன் அமுதவல்லியிடம்
Answer:
இ) அமைச்சர் மன்னனிடம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் ……………..
அ) சட்டம், நிருவாகம், நீதி
ஆ) அரசு, அமைச்சர், தூதுவர்
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஈ) மக்கள் புரட்சி, போராட்டம், மக்களாட்சம்
Answer:
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 3.
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில்…………….. பெரும்பங்கு உண்டு.
அ) புரட்சிக்கு
ஆ) போராட்டத்திற்கு
இ) இலக்கியத்திற்கு
ஈ) காலத்திற்கு
Answer:
இ) இலக்கியத்திற்கு

Question 4.
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ……………..
அ) கவிஞர் உதாரன்
ஆ) மந்திரி
இ) திரண்டிருந்த மக்கள்
ஈ) இளவரசி அமுதவல்லி
Answer:
ஈ) இளவரசி அமுதவல்லி

Question 5.
சிரம் அறுத்தல்……………..பொழுதுபோக்கு!
அ) கவிஞனுக்கு
ஆ) அமைச்சனுக்கு
இ) வேந்தனுக்கு
கொலைகாரனுக்கு
Answer:
இ) வேந்தனுக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
அ) அரசன், அமுதவல்லி
ஆ) அமைச்சர், அரசர்
இ) அமுதவல்லி, உதாரன்
ஈ) உதாரன், அமைச்சர்
Answer:
இ) அமுதவல்லி, உதானன

Question 7.
குடிகட்கெல்லாம் ஆளுரிமையைப் பொதுவாக்க நினைத்தது……………..
அ) உதாரன்
ஆ) அமைச்சன்
இ) மக்கள்
ஈ) அமுதவல்லி
Answer:
ஈ) அமுதவல்லி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 8.
‘உலகம்’ என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) முழக்கம்
ஆ) படிகம்
இ) படி
Answer:
வி படி

Question 9.
‘தந்திட்டான் என்னும் சொல்லின் பகுதி ……………..
அ) தம்
ஆ) தந்து
இ) தந்த
ஈ) தந்திடு
Answer:
ஈ) தந்திடு

Question 10.
தெமிழ் அறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவி என் றெனை அவளும் காதலித்தாள் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்
அ) அழகின் சிரிப்பு
ஆ) பாண்டியன் பரிசு
இ) பிசிராந்தையார்
ஈ) புரட்சிக்கவி
Answer:
ஈ) புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 11.
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
அ) பாரதம்
ஆ) சாகுந்தலம்
இ) பில்கணீயம்
ஈ) பெருங்கதை
Answer:
இ) பில்கணீயம்

Question 12.
எப்பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்?
அ) ராஜகோபாலன்
ஆ) அரவிந்தன்
இ) வில்வரத்தினம்
ஈ) சுப்புரத்தினம்
Answer:
ஈ) சுப்புரத்தினம்

Question 13.
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
அ) ஆங்கில
ஆ) டச்சு
இ) பிரெஞ்சு
ஈ) போர்த்துகீசிய
Answer:
இ) பிரெஞ்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 14.
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ……………..
அ) வானம்பாடி
ஆ) கரும்பு
இ) இந்தியா
ஈ) குயில்
Answer:
ஈ) குயில்

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம்……………..
அ) பாண்டியன் பரிசு
ஆ) சேரதாண்டவம்
இ) இருண்டவீடு
ஈ) பிசிராந்தையார்
Answer:
ஈ) பிசிராந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 16.
புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், …………….. எனத் தொடங்கும்.
அ) தமிழுக்கு அமுதென்று பேர்
ஆ) நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்
ஈ) என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றிகண்
Answer:
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 17.
சொல் பொருள் பொருத்துக.
1. மீட்சி – அ. உலோகங்கள்
முழக்கம் – ஆ. மாணிக்கம்
3. மணி – இ. விடுதலை
4. கனிகள் – ஈ. உலகம்
– உ. ஓங்கி உரைத்தல்
Answer:
1-இ, 2-உ, 3-ஆ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

குறுவினா

Question 1.
‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
Answer:
‘வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.

எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு பருருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
ஜீவா குறித்து அறிந்தவற்றைச் சுருக்கமாக எழுதுக.
Answer:

  • ‘ஜீவா’ என அழைக்கப்பெறும் ‘ப. ஜீவானந்தம்’, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
  • தொடக்கக் காலத்தில் காந்தியவாதி; பின்னர்ச் சுயமரியாதை இயக்கப் போராளி.
  • ஜீவா, சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர்.

Question 3.
ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணம் எது
Answer:
“நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டிருக்கிறேன்; படித்துக்கொண்டே இருப்பேன்” என்பது, ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 4.
ஜீவாவின் பிரார்த்தனை யாது?
Answer:
“மனிதச் சிந்தனையே! கற்பனை கும் எட்டாத பேராற்றலே! நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை ஒருமுறை என்னிடம் கூறு. அதலன எட்டுத் திசைகளிலும் பரப்பி, மனித இனத்தை நீ சொல்லும் இடத்திற்கு அழைத்து வருவேன். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டேன்! என்னைப் பயன்படுத்திக் கொள்வதே, நீ எனக்குச் செய்யும் கைம்மாறு” என்பதே, ஜீவாவின் பிரார்த்தனை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 5.
ஜீவாவின் கொள்கையில் நம்பிக்கையும் எதிலிருந்து பிறந்தன?
Answer:
‘கற்பனைக்கு எட்டாத பேராற்றலான மனிதச் சிந்தனையில் சிறந்தவற்றை, எட்டுத் திசைகளிலும் பரப்பி, மன்ற இனத்தை உயர்த்தத் தம்மால் இயன்றதைக் கைம்மாறு கருதாமல் செய்யவேண்டும்’ என்னும் அடிப்படை மனோபாவத்திலிருந்து பிறந்ததே, ஜீவாவின் கொள்கையும் நம்பிக்கையுமாகும்.

Question 6.
ஜீவாவின் நினைவில் எப்போதும் நிற்கும் எளிய உண்மை யாது?
Answer:
தழக்குத் தெரியாத அரிய செய்திகள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்னும் எளிய உண்மை , வாவின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.

சிறுவினா

Question 1.
ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
Answer:

  • ஜீவாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 2.
கூடுதல் வினாக்கள் ஜீவா சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு குறித்து எழுதுக.
Answer:

  • நாஞ்சில் நாட்டுத் தோவாளையில் மக்களிடம் பள்ளி மாணவர் குழு ஒன்று, திருவாங்கூர் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை எடுத்துக் கூறித் துயர் துடைக்க நிதி திரட்டியது.
  • பள்ளி இறுதி வகுப்பு மாணவரான ஜீவா, அக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
  • சமூக நலனுக்காக ஜீவா தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு அது.
  • அதுவே அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் ஜீவா, தம்மைக் கூர்வாளாக மெருகேற்றிக் கொண்ட முதல் நிகழ்வாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
ஜீவா மேடையில் வாழ்ந்த மாமனிதர் என்பதை விவரி.
Answer:

  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடைப் பேச்சாளர்.
  • ஜீவா, தமக்கென ஒரு தத்துவத்தைப் படைத்துக் கொண்டவர் அல்லர்.
  • தாம் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய பேச்சாற்றலால், கலைநோக்கால், கற்பனையால் உயிர்பெற்று எழச் செய்தார்கள்
  • தம் மேடைப்பேச்சால் அந்த மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தார் எனலாம், தம் மேடைப்பேச்சால், மனித இனத்தை உன்னத உயரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்.
  • ‘என் வாழ்க்கை என் கைகளில்’ என்னும் நம்பிக்கையோடு மேடையில் வாழ்ந்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

நெடுவினா

Question 1.
சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
Answer:
மக்கள் நம்பிக்கை :
மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாதமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்குமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பதுவரை மேடையில் கர்ஜித்துக்கொண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனைம்பிக்கை.

மேடைப்பேச்சில் வண்ண ஜாலம்
பேச்சு, அவர் பெற்ற வரம் பேச்சுக்கலை குறித்துக் கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்தப் பாணியில் கற்றதை வெளிபடுத்தியவர். மக்களின் தரம், அறிவு, பழக்கவழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து, விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப் பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடைகாண விரும்பியவர் அவர். எனவே, செய்திகளைக் குவியல் குவியலாகக் கூறிக் குழப்பாமல், சில றிப் புரிய வைத்தவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

காற்றில் கலந்த பேரோசை :
பேச்சுக்கலை, அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி கானமாக விட்டது. அது, இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர்நீச்சல் போட்டுக் கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. பேரோசை, காற்றில் கலந்துவிட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.

பலவுள் தெரிக

Question 1.
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
Answer:
இ) மக்கள் வெள்ளம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
அ) சுந்தர ராமசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) குமட்டூர் கண்ண னார்
ஈ) குடவாயில் பாலசுப்பிரமணியன்
Answer:
ஆ) ப. ஜீவானந்தம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
‘சொரிமுத்து’ என்பது,……………….இயற்பெயர்.
அ) மதுசூதனின்
ஆ) வைத்தியலிங்கத்தின்
இ) ஜீவாவின்
ஈ) ராசேந்திரனின்
Answer:
இ) ஜீவாவின்

Question 4.
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் ………….
அ) ஆத்மாநாம்
ஆ) பிரபஞ்சன்
இ) பாரதியார்
ஈ) சுந்தர ராமசாமி
Answer:
ஈ) சுந்தர ராமசாமி

Question 5.
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்……………..
அ) திருவிதாங்கூர்
ஆ) நாகர்கோவில்
இ) தோவாளை
ஈ) குற்றாலம்
Answer:
இ) தோவாளை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 6.
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் வந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர் ……………
அ) திரு. வி. க.
ஆ அறிஞர் அண்ணா
இ) ஜீவானந்தம்
ஈ) சங்கரதாசு சுவாமிகள்
Answer:
இ) ஜீவானந்தம்

Question 7.
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
அ) பேச்சு எனக்குக் கைவந்த கலை
ஆ) எல்லாம் கரைத்துக் குடித்துவிடவில்லை
இ) இயற்கை விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடமுடியும்
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
Answer:
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டுமென எண்ணுகிய பேதை மனசு.
வினா : பேதை மனசு எவ்வாறு எண்ணுகிறது?

2. “அன்சு நின்றுவிட்டது” என்று நான் சொன்னபோது, “பேச்சு நின்றபோதா?” எனத் திருப்பிக் கே கிறார்கள்.
வினா : “பேச்சு நின்றபோதா?” என எப்போது திருப்பிக் கேட்கிறார்கள்?

3. பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வினா : அவர் பெற்ற வரம் என்று, எதனைச் சொல்ல வேண்டும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

4. பேச்சுக்கலைதான் அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.
வினா : அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது எது?

5. தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை , எப்போதும் அவர் நினைவில் நிற்கும்.
வினா : எவ்வுண்மை அவர் நினைவில் எப்போதும் நிற்கும்?

6. ‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பினார் அவர்.
வினா : அவர் என்னவென்று நம்பினார்?

7. நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது.
வினா : நீரில் விழுந்த கிளை எங்குச் சென்றுவிட்டது?
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை - 1

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

குறுவினாக்கள்

Question 1.
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அயர்ந்து – அயர் + த் (ந்) + த் + உ
அயர் – பகுதி, த-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த்- இறந்தகால இடைநிலை, உ- வினையெச்ச விகுதி.
எழுந்த -ஏழு + த் (ந்) + த் + அ
ஏழு பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

Question 2.
தொடர் அமைத்து எழுதுக.
Answer:
அன்றொருநாள் : அன்றொருநாள் நான் கண்ட அழகிய காட்சியை, மீண்டும் காண ஏங்கினேன்.
நிழலிலிருந்து : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 4.
கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:

  • நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச்சொல்லாக்கங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பெறலாம்?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள்சார்ந்த கலைச்சொற்களின் தேவை மிகுதி. அதனால் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியில், எல்லாரும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைபுரியும். இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளம் போன்றவற்றில் கலைச்சொற்களைப் பெறலாம். பள்ளி இதர்களில்
இவற்றை வெளியிட்டு, மாணவர்களிடம் கலைச்சொல்லாக்க விழிப்புணர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
தாய்மொழிவழிக் கற்றலில் ஜப்பானியர் சிறக்கக் காரணம் என்ன?
Answer:
உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். ஆகையால், ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

சிறுவினாக்கள்

Question 1.
கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும்.

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அசராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கலைச்சொல், அதன் சிறப்புக் குறித்து கழுதுக.
Answer:
காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்புக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல், கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் பகுதி) கொண்டு, இதனை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். தலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.

Question 3.
மருத்துவம், கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை எழுதுக.
Answer:
மருத்துவத்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Clinic – மருத்துவமனை
Blood Group – குருதிப் பிரிவு
Companser – மருந்தாளுநர்
X – ray – ஊடுகதிர்
Typhas – குடல் காய்ச்சல்
Ointment – களிம்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Note Book – எழுதுசுவடி
Answer Book – விடைச்சுவடி
Rough Note book – பொதுக்குறிப்புச் சுவடி
Prospectus – விளக்கச் சுவடி

Question 4.
கலைச்சொல் அகராதி என்பது யாது?
Answer:
பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து, அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது, ‘கலைச்சொல் அகராதி’ எனப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை அறிக.
Answer:
Smart phone – திறன்பேசி
Website – இணையம்
Touch screen – தொடுதிரை
Blog – வலைப்பூ
Bug – பிழை
Gazette – அரசிதழ்
Ceiling – உச்சவரம்பு
Despatch – அனுப்புகை
Circular – சுற்றறிக்கை
Subsidy – மானியம்
Sub Junior – மிக இளையோர்
Super Senior – மேல் மூத்தோர்
Customer – வாடிக்கையாளர்
Carrom – நாலாங்குழி ஆட்டம்
Consumer – நுகர்வோர்
Sales Tax – விற்பனை வரி
Account – பற்று வரவுக் கணக்கு
Referee – நடுவர்
Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி/

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
உருவாக்கும் சொல் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ, புதிய சொற்களை உருவாக்கும்போதோ அச்சொல்லானது, அதே போன்று வேறு பல சொற்கள் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும்.

சான்றாக ‘Library’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நூலகம்’, ‘நூல் நிலையம்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றில் ‘நூலகம்’ என்னும் சொல், ‘நூலகர்’ (Librarian), நூலக அறிவியல் Library Science) என்னும் சொற்கள் உருவாகத் துணை புரிந்துள்ளமை காண்க.

Question 7.
கலைச்சொற்களை ஏன் தரப்படுத்த வேண்டும்?
Answer:
கற்றவர், கல்லாதவர், கைவினைஞர், பயிற்றுநர், மாணவர், மகளிர் எனப் பலரும் இன்றைய சூழலில் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கும்போது, ஒரே பொருளைக் குறிக்கப் பலவேறு சொற்களைக் கையாளுகின்றனர்.

அக்கலைச் சொற்கள், தமிழின் சொல்லாக்க வளர்ச்சியைக் காட்டினாலும், புரிந்து கொள்ளுதல் நிலையில் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். இக்குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைப் பெறக் கலைச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

சான்று : ‘ANTIBIOTICS’ என்னும் சொல்லைத் தமிழில் எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நக்கயிர்க் கொல்லிகள் எனப் பலவாறு தமிழில் வழங்குவது, குழப்பத்தை ஏற்படுத்துதல் காண்க.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கமாத் தேர்ச்சி கொள்

Question 1.
கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக?
Answer:
ஒரு மொழியில் காலத்திற்கேற் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப் படும் சொற்கள், ‘கலைச்சொற்கள் எனப்படும்.

Question 2.
கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answer:

  • புதிதாக உருவாக்கப்பெறும் கலைச்சொல், தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஓரை யமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குமுன், பின்பற்ற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
Answer:
Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
Plastic – நெகிழி
Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
Escalator – நகரும் மின்படி
Straw – நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலை
Average – நடுத்தரம், சராசரி அளவு.
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை.

Question 4.
Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
Answer:
நாவாய், கலம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answer:
உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கியச் சொல்லைத் தேர்ந்து பயன்படுத்துதல். (எ-கா: வலவன் Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் . (எ-கா : அம்மை)
பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுதல். (எ-கா : தசம முறை / Decimal)
புதுச்சொல் படைத்தல். (எ-கா : மூலக்கூறு / Molecule)
உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல். (எ-கா : எக்ஸ் கதிர் / Xray)
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல். (ஒளிச்சேர்க்கை / Photo anthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல். (எ-கா : மீட்டர் / Meter) (ஓம் / Om)
உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்களை R√A = r,r2 H2O, Ca
அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று, வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
அ) மூதூர்
ஆ) வெற்றிடம்
இ) நல்லாடை
ஈ) பைந்தளிர்
Answer:
இ) நல்லாடை

கூடுதல் வினாக்கள்

Question 2.
பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின்
ஆ, இணையத்தின்
இ) அகராதியின்
ஈ) வலைப்பூவின்
Answer:
இ) அகராதியின்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
மக்கள் பயன்பாற் றடுக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை……………
அ) பொதுமக்களும் இதழ்களும்
ஆ) பள்ளிகளும் இதழ்களும்
இ) மாணவர்களும் ஊடகங்களும்
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Answer:
ஈ) இதழ்களும் ஊடகங்களும்

Question 4.
மாயர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது………………….
அ) செய்தித்தாள்
ஆ) வார மாத இதழ்
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
ஈ) வானொலி
Answer:
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………….
அ) பாரதிதாசன்
ஆ) திரு. வி. கலியாணசுந்தரனார்
இ) காந்தியடிகள்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

குறுவினா

Question 1.
முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
சிறுதலைப்பு, நூற்பகுதி, எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற் புள்ளி இடவேண்டும்.
எ – கா : i. சார்பெழுத்து :
ii. பத்துப்பாட்டு 2 : 246
iii. எட்டுத்தொகை என்பன வருமாறு:

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
காற்புள்ளி இடம்பெற வேண்டிய இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
பொருள்களைத் தனித்தனியே குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், ஆணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடம்பெற வேண்டும்.

எ – கா : i. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப் பேறுகள் நான்கு
ii. நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
iii. இனியன் நன்கு படித்ததனால், தேர்ச்சி பெற்றான்.
iv. ஐயா, / அம்மையீர்,
V. சிறியவன், பெரியவன், செல்வன், ஏழை.

Question 3.
அரைப்புள்ளி இடம்பெறும் இடங்களைக் கூறுக.
Answer:
தொடர்நிலைத் தொடர்களிலும், ஒரு சொல்லுக்குப் பலபொருவு கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

எ – கா : i. வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
ii. அளி – அன்பு; அருள்; குளிர்ச்சி, பயண்டு; இரக்கம்; எளிமை.

Question 4.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில்,
முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

எ – கா : i. மரபியல்.
ii. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
iii. தலைமையாசிரிய அரசு மேனிலைப்பள்ளி.
iv. தொல். சொல். 58.
v. 12 / 12 /2018

Question 5.
வினாக்குறி இடவேண்டிய இடம் குறித்து விளக்கு.
Answer:
ஒரு வினாத்தொடர் முற்றுத் தொடராகவும்), நேர்க்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

எ – கா : i. அது என்ன? (வினா – முற்று)
ii. “நீ வருகிறாயா?” என்று கேட்டான். (நேர்க்கூற்று)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
விளிக்குறி இடம்பெறும் இடத்தை எழுதுக.
Answer:
அண்மையில் இருப்பவரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கும் விளிக்குறி இடுதல் வேண்டும். (வியப்புக் குறிக்கும் விளிக்குறிக்கும் அடையாளம் ஒன்றே)
எ – கா : i. அவையீர் ! ii. அவைத் தலைவீர்!

Question 7.
வியப்புக்குறி இடம்பெறும் இடம் விளக்குக.
Answer:
வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்று, வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி இடுதல் வேண்டும்.

எ – கா : i. எவ்வளவு உயரமானது!
ii. “என்னே தமிழின் பெருமை!” என்றார் கவிஞர்.
iii. வா! வா! போ! போ! போ!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 8.
மேற்கோள் குறி இடும் இடங்கள் யாவை?
Answer:

  • இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி என, மேற்கோள் குறிகள் இரண்டு வகைப்படும்.
  • இரட்டை மேற்கோள்குறி : நேர்க்கூற்றுகளில் இரட்டை மேற்கோள்குறி இடம்பெறும். எ – கா :“நான் படிக்கிறேன்” என்றான்.
  • ஒற்றை மேற்கோள்குறி : ஓர் எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர், பிறர் கூற்று இடம்பெறும் வேறு கூற்று ஆகியவற்றைக் குறிக்க, ஒற்றை மேற்கோள்குறி இடல் வேண்டும்.

எ – கா : i. ‘ஏ’ என்று ஏளனம் செய்தான்.
ii. பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
iii. ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல், சிறந்த ஒப்பீட்டு நூல்.
iv. ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர்.

தெரிந்து கொள்வோம்
நிறுத்தக்குறிகள்

சிறுவினா

Question 1.
நிறுத்தற் குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
Answer:
காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்படவிளிக்குறி, மேற்கோள்குறி என்பன நிறுத்தற்குறிகளாகும்.
(விடை : குறுவினா 1முதல் 8வரை உள்ளவற்றைத் தொகுத்துப் படிக்க)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Answer:
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.

கூடுதல் வினா

Question 2.
சரியான நிறுத்தற்குறியுடைய சொற்றொடலாக் காண்க.
அ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
ஆ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை, என்னும் ‘சிறுகதை’ எழுதினார்.
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
ஈ) ‘பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
Answer:
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
நிறுத்தற் குறிகளின் பயன்களைக் கூறுக.
Answer:
நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை. மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி. மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும். நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.

பெயயைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன. நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.

Question 2.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தொடரின் இறுதி, முகவரி இறுதிகளில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எ-கா: i. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
ii. தலைமை ஆசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, சென்னை – 600 002.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
Answer:
விளிக்குறிக்கும், வியப்புக்குறிக்கும் இடப்படும் அடையாளம் ஒன்றே. விளிக்குறி, அண்மையில் இருப்பவரையோ, தொலைவில் இருப்பவரையோ அழைப்பதற்கு இடப்படும்.

வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்றின் வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச்சொற்களுக்குப் பின்பும் வியப்புக்குறி இடப்படும்.

Question 4.
சிலப்பதிகாரத்தைப் படித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் – இத்தொடர்க்குரிய நிறுத்தற்குறிகளைத் தகுந்த இடங்களில் இட்டெழுதுக.
Answer:
“சிலப்பதிகாரத்தைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!”.

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
(சங்கரதாசு சுவாமிகள்)

நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.

இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.

இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக் குழிப்புகளின்’ சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

சங்கரதாசு சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ட்டினார். நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ ம.

லோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

Question 1.
தமிழ்ச் சொல்லாக்குக – சன்மார்க்கம், வித்துவ பால சபை.
Answer:
சன்மார்க்கம் – ஆன்மநெறி
வித்துவ பால சபை – இளங்கலைஞர் மன்றம்

Question 2.
நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் – அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
Answer:
சங்கரதாசு சுவாமிகள், நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தார்.

Question 3.
ஈட்டினார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு – பகுதி, இன் – இறந்ததால் இடைநிலை, ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 4.
தன்னன தானன தன்னனனே, இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
Answer:
எ – கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா……
இங்குமம் கையராய் வந்ததையே
பற்றதாம் என்றிடல் வேண்டுமையா.

Question 5.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
Answer:
நாட்டத்தின்வழித்தமது சுவைமிகுந்த பாடல்கள், உரையாடல்கள் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார். எனவே, நாடகத்துறைக் கலைஞர்கள், சங்கரதாசு சுவாமிகளைத் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றிச் சிறப்பித்தனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பெரும்புலவர்கள், சங்கரதாசு சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.
வினா : பெரும்புலவர்கள் எவற்றை உணர்ந்து, சங்கரதாசு சுவாமிகளை எவ்வாறு பாராட்டியுள்ளனர்?

2. சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போன்றுகின்றனர்.
வினா : நாடகத்துறைக் கலைஞர்கள் உளமகிழ்ந்து யாரை என்னவென்று போன்றுகின்றனர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. தம் நாடகத்தின்மூலம் சங்கரதாசு சுவாமிகள், மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார்.
வினா : சங்கரதாசு சுவாமிகள், தம் நாடகத்தின்மூலம் மக்களுக்கு எவற்றை உணர்த்தினார்?

தமிழாக்கம் தருக

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, printmaking, photography and other visual media. Music, theatre, film, dance, and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, art referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantiy to any single concept. This does not imply that the purpose of Art is “vague” abu unat it has had many unique, different reasons for being created.
Answer:
மிகவும் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள் எல்லாம், காட்சி முகக் கலைகளாக உள்ளன. அவை, பல்வேறு துறைகளில் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. இன்றைய ஓவியம், சிற்பம், அச்சுப் படங்கள், நிழற்படங்கள் மற்றும் காட்சிப்படங்கள் போன்றவையும் அவற்றுள் அடங்கியனவேயாகும்.

இசை, நாடகம், திரைப்படம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இலக்கியங்கள் மற்றும் வடிகங்களில் காணப்படும் கலைகள் எல்லாமும், ஒரு பரந்த வரையறைக்குள் சேர்க்கப்பட்டவையே ஆகும். பதினேழாம் நூற்றாண்டுவரை கலை என்பது ஏதோ ஒரு திறமை, நிபுணத்துவமாகக் கருதப்பட்டது. கைவினைத் தொழில் அறிவியலோடு வேறுபட்டதாக இருந்தது. கலை மற்றும் அதன் வரலாறு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கலைகளின் நோக்கம் எந்த ஒரு கருத்தையும் சுருக்கமாக அல்லது அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதாக இருக்காது. வெவ்வேறு தனித்தனிக் காரணங்களால், தனித்துவமான தன்மைகளால் உருவாக்கப்பட்டனவாகவே உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

தொடர் நாற்றம்

Question 1.
மூன்று நாள்கள், கல்லூரிக்கு விடுமுறை மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச்
சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)
Answer:
மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையாதலால் மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

Question 2.
தஞ்சைக் கோவில், எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)
Answer:
தஞ்சைக் கோவில் கட்டப்பட்ட கலைப்பாணி யாது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை. (செய்தித் தொடராக்குக)
Answer:
மதுரை வீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை மிக அழகானது.

Question 4.
நான், வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
Answer:
நான் வாரத்தின் இறுதிநாள்களிலன்றிப் பிற நாள்களில் நூலகத்திற்குச் செல்லேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மெய்ப்பத் திருத்துநர் பணிவேண்டி, நாளிதழ் முதன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விலக்குறிப்பு ஒன்று எழுதுக.
Answer:
பெயர், வயது, பாலினம், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி,
அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)

அனுப்புநர்
க. அன்புச்செல்வன்,
8, 82ஆவது தெரு,
கலைஞர் நகர்,
சென்னை – 600078.

பெறுநர்
ஆசிரியர்,
‘தினமலர்’ நாளிதழ்,
சென்னை – 600002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி விண்ணப்பம்.

வணக்கம். நான், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சுச் செய்வேன். பத்திரிகைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால், சிறப்பாகச் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி.

உங்கள்,
உண்மையுள்ள,
க. அன்புச்செல்வன்.

தன்விவரக் குறிப்பு

பெயர் : க. அன்புச்செல்வன்
தந்தை : கோ. கந்தசாமி
தாயார் : சாரதாதேவி
பிறந்தநாள் : 15.07. 1999
கல்வித்தகுதி : பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
தொழில் பயிற்சித் தகுதி : தமிழ்த் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு.
கணினி : அடிப்படைக் கணினித் தேர்வு
பட்டறிவு : இரண்டு ஆண்டுகள் சிறுபத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்தல்
முகவரி : 8, 82 ஆவது தெரு, கலைஞர் நக சென்னை – 600078.
அலைபேசி எண் : 9677074899
மின்ன ஞ்சல் முகவரி : anbuselvan08@gmailcom
அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு.
உயரம் : 6′
எடை : 68 கிலோ
குருதிவகை : O+

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கியநயம் பாராட்டுக

தண்டலை மயில்கள் ஆட, தாமன் விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் எங்கள் தவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பால மருதம்வீற் றிருக்கும் மாதோ. – கம்பர்

ஆசிரியர் குறிப்பு : ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத் தேத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ப, இக்காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்குக் கம்பரின் பாட்லொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, கம்பராமாயணத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

நயம் : மருதநிலம் தலைவன்போல் கொலுவீற்றிருக்க, மயில் ஆடுமகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேகமுழக்கம் மத்தள ஓசையாகவும், குவளைமலர்கள் கண்விழித்து நோக்கும் மக்களாகவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்ப்பரப்பு எழினியாகவும் உருவகம் செய்துள்ளார். கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

எதுகை நயம் :
அடிதோறும் முதல்சீரில் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து – தண்டலை, கொண்டல்கண், தெண்திரை, வண்டுகள் – அடி எதுகைத் தொடை அமைந்துள்ளது.

பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவந்து – தண்டலை, தாமரை, தாங்க – கொண்டல், குவளை, கண் – தெண்டிரை, தேம்பிழி – சீர்மோனை அமைந்துள்ளது.

ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட என இனிய ஓசை தரும் சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

அணிநயம் : மருதநிலக் காட்சி, இயல்பாக உள்ளது உள்ளபடி வருணித்துக் கூறப்பட்டிருந்தாலும், புலவரின் கற்பனை இணைந்து, தற்குறிப்பேற்ற அணியை உள்ளடக்கியதாகவும் செய்யுள் திகழ்கிறது. உவமை, உருவகம், கற்பனை எனப் பலவும் நிறைந்த பாடலாக உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1
Answer:
மீனைச் சமைத்து
உண்ணக் கொடுக்காதே!
மீனைப் பிடித்துச்
சமைத்துண்ணக் கற்றுக்கொடு!
உழைத்துப் பிழைக்க வழிகாட்டியவும்
கூறிய நன்மொழி!
பிழைத்துக் கொள்வானிவன்
தூண்டிலில் சிக்கியது மீன்தானே!

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. தனிமொழி – அறிவு; …………………. – வண்ண மயில்; பொது பொழு – ………………….
Answer:
தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………………. ; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; …………………. – மார்கழி, தை
Answer:
ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. எழுத்து, சொல் …………………. , யாப்பு, ………………….
Answer:
பொருள், அணி

4. எழுத்து, …………………. , சீர், தளை, …………………. , தொடை.
Answer:
அசை, அடி

5. சேரன் – வில், சோழன் – …………………. , …………………. – மீன்.
Answer:
புலி, பாண்டியன்

நிற்க அதற்குத் தக

நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோயில்களிலும், தொன்மையான இடங்களிலும், கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க, டும் என்ன செய்யப் போகிறோம்? பட்டியலிடுக.

செல்லும் இடம் கோவிலோ, தொல்லியல் சார்ந்த இடடோ, இன்றளவும் இருப்பதனால் வழிபடவும் கண்டு மகிழவும் செல்கிறோம். எனவே, அவற்றைப் பழமை சிதையாமல், நம் பிற்காலச் சந்ததியினர் காணவும் பாதுகாக்கவும் வேண்டும். சுவர்களைக் கண்டால், கீறலோ) கிறுக்கவோ கூடாது. நம் உறைவிடத்தைச் சிதைப்போமா? குப்பைகளையும் நெகிழிப்பைகளையும் போடக்கூடாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

வீட்டை மட்டுமன்று நாம் சார்ந்துள்ள பகுதிகளையும் தூய்மையோடு வைக்கவேண்டும். நம் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் சின்னங்கள் அவை. அவற்றை அழிக்கவோ, சேதப்படுத்தவோ, நமக்கோ மற்றவர்களுக்கோ உரிமை கிடையாது. நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை! எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கலைச்சொல் அறிவோம்

நுண்க லைகள் – Fine Arts
தானியக் கிடங்கு – Grain Warehouse
ஆவணப்படம் – Documentary
பேரழிவு – Disaster
கல்வெட்டு – Inscription / Epigraph
தொன்மம் – Myth