Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 1.
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக.
Answer:
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகள் :
அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களை முதன்மைப்படுத்தி, ‘இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மொத்த மக்கள் தொகையில், சரிபாதியாக உள்ள இளைஞர்களின் துணையின்றி நாடு வளர்ச்சி பெற முடியாது என்பதை எடுத்துரைத்த நடுவர், ‘இளைஞர்தம் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது டே’ எனப் பேச எழிலை அழைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

இளையோர் முன்னேற்றத்தில் பெரிதும் உதவுவது வீடே :
இளையோர் முன்னேற்றத்தில் முதல்படி வீடு. பிறக்கும் குழந்தைக்கு உலகை அறிமுகப்படுத்துவது வீடு. அன்பையும், அறிவையும் உணர்த்தி அடித்தளமிட்டு, வெற்றிகளைக் கட்டி எழுத உதவுவது வீடு.

“எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை” என த வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உணர வைப்பது வீடே! எனவே, இளையோர் முன்னேற்றத்தின் முதமும் அகமுமாக அமைவது வீடே எனத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக்கொண்டு, எழில், தன் உரையை முன்வைத்தாள்.

வீடு அன்று நாடே :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்து மறுத்துப் பேசவந்த அபதுல்லா, “வீடு ஒரு சிறிய கூடு! வீடு என்னும் சிறுவட்டத்தைத் தாண்டி, நாட்டில் கால் பதிக்கும் போதுதான் நல்வாழ்வு துளிர்க்கிறது.

பாரதி, வீதிக்கு வந்தே உலகைப் படித்தார்; பலதிக்க அறிமுகம் கிடைத்தது. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகளில் ஐரோப்பிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.

புத்தகங்கள் வழி கல்விச்சாலைகள் உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை, நாடுதான் நமக்கு அறிமுகம் செய்கிறது’ என, தம் உரைவீச்சை முன்வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

நாடு அன்று வீடே! :
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்ததாகத் தன் கருத்தோட்டத்தைக் கூறவந்த எலிசபெத், தனக்கு வீட்டினுள்ளே உலகை அறிமுகப்படுத்திய பெற்றோரைப் போற்றி உரையைத் தொடங்கினார்.

சிறு கூடு அன்று வீடு நம் பண்பாட்டையும் மரபையும் காத்து நிற்கும் கருவூலம்! எத்தேடலுக்கும் தலைவாசல்! அறிவின் நறங்கால்!

வீட்டில் கேட்ட தாலாட்டும், நுங்கு தின்றது, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது எனப் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், வரமான பல நெறிகளைக் கற்பித்தது வீடே என்பதை நினைவில் கொண்டு, தீர்ப்பு வழங்குமாறு எலிசபெத் தன் உரையை முடித்தாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

பெண்கள்க்கு விடியலைத் தந்தது பள்ளி :
விய பலுக்கான வெளிச்சமாக உரையாற்ற வருமாறு அமுதாவை நடுவர் அழைத்தார். நாட்டு நலனைப் புதிய படத்தில் வழிநடத்தக் கற்றுக்கொடுத்த முண்டாசுக் கவிஞனை வணங்கி, அமுதா தன் உரையைத் தொடங்கினாள்.

வீடு, பெண்களுக்குத் தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கூடுதான். பள்ளிக்கு வந்தபின்தான், ‘பெண்மை வெல்க’ எனக் கூத்திட முடிந்தது. இன்று விஞ்ஞானிகளாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம். நாடே இளையோரை நம்பிக்கையோடு வழிநடத்துகிறது. எதிர்காலம் வளமாகத் துணைபுரிகிறது எனத் தன் வாதங்களை முன்வைத்தாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

இருபக்க வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த நடுவர், “ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த கருத்துகள் என, எல்லாவற்றையும் வழங்கி, முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது நாடே!” என்று தீர்ப்பு வழங்கினார்.

கற்பவை கற்றபின்

“மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை – பணமே, கல்வியே” என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.
Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பறையில் எழிலன், முகிலன், நறுமுகை ஆகிய மூவரும் மனித வாழ்வை உயர்த்து வதற்குப் பெரிதும் தேவை பணமே’ என்னும் தலைப்பிலும், வேலன், முருகன், தேன்மொழி ஆகிய மூவரும் ‘மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ என்னும் தலைப்பிலும் ஒருவர் மாற்றி மற்றொருவராக வந்து சொற்போர் நிகழ்த்துவார்கள். அனைவரும் கவனமாக உற்று நோக்கி, நற்கருத்துகளை அறிய முயற்சி செய்யுங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

எழிலன் : அனைவருக்கும் வணக்கம். இன்று சொற்போருக்கான தலைப்பு அனைவரும் அறிந்ததே! நான் எதையும் சொல்லவில்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருவள்ளுவரே சொல்லியுள்ளார். அதுமட்டுமா? “ஒரு பொருட்டாக மதிக்கத்தக்க சிறப்பு இல்லாதவனையும் பெருமதிப்பு உடையவராகச் செய்வது செல்வமே” எனவும் கூறியுள்ளார். பொருள் இல்லாமல் எவரும் உலகில் எச்செயலையும் செய்ய முடியாது. ஆகையால், வாழ்வை உயர்த்தவல்லது பொருள் செல்வமே எனக் கூறி, விடைபெறுகமறன். நன்றி.

வேலன் : எல்லாரையும் வணங்கி, என் உரையைத் தொடங்குகிறேன். காலத்தால் அழயாதது கல்விச் செல்வம். உலகில் எத்தனை எத்தனையோ செல்வர்கள், மன்னர்கள், பெருவேந்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்ந்தவரைதான், அவர்கள் செல்வத்திற்கு மதிப்பு இருந்திருக்கிறது. திருவள்ளுவரும் இளங்கோவும் செல்வம் காரணமாகவா இன்றளவும் போற்றப்படுகிறார்கள்? அவர்கள் காலத்தில் செல்வமுடையோர் வாழவே இல்லையா? அவர்கள் எங்கே? இன்றளவும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் உலகம் போற்றுகிறதல்லவா? அதனால், மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை கல்வியே’ எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

முகிலன் : நண்பர்களே! இன்றைக்கு உலகில் பொருள் இல்லை என்றால் வாழ்வே கிடையாது என்பது, அனைவரும் அறிந்ததே. ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பது உலக வழக்கு. ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பதும் அனைவரும் அறிந்ததே.

நாம் உண்மைலேயே மதிப்புப் பெறவேண்டுமானால், கையில் பெரும்பொருள் இருக்க வேண்டும். பணம் பந்தியிலே’ என்பதே உண்மை எனக்கூறி, உரையை முடிக்கிறேன்.

முருகன் : உங்கள் அனைவரையும் வணங்கி என் உரையைத் தொடங்குமுகமாக ஒன்றை நினைவு படுத்துகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் பெரு ழை பெய்தது. எதிர்பாராத வெள்ளம், எண்ணற்ற உயிர்களைச் சூறையாடியது. உயிர் பிழைத்தவர்களில் பலர், தம் வீடுவாசல்களை இழந்தனர்; வாகனங்களைப் பறிகொடுத்தனர்; பொன்னையும் பொருளையும் வெள்ளம் கொள்ளை கொண்டது. கல்வி அறிவைப் பெறாதவர்கள், பிறரிடம் கை ஏந்தினர்.

கற்றறிந்தவர்கள், தம் கல்வியால் கௌரவமாக வாழ்வை மீட்டு எடுத்தனர். அதனால், கல்வியே மனித வாழ்வை உயர்த்த உதவும் எனக் கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

நறுமுகை : நல்லதையே நனைப்போம் எனக் கூறி அனைவரையும் வணங்கி, என் உரையைத் தொடங்கு கிறேன். எனக்கு முன் பேயவர் வெள்ளச்சேதம் பற்றிக் கூறினார். அப்போது எத்தனையோ செல்வர்கள் பொருளுதவி செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதை மறக்க முடியுமா? செல்வம் என்ற ஒன்று வந்து குவிந்தால்தான் மனித வாழ்வு மதிப்புப் பெறுகிறது என்பதே உண்மை . எனவே, பொருளே மனித வாழ்வுக்கு உயர்வைத் தேடித் தரும் எனக் கூறி, என் உரையை முடிக்கிறேன். நன்றி; வணக்கம்.

தேன்மொழிய: தோழமைக்குரிய அனைவருக்கும் வணக்கம். செல்வம் தேவைதான். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. கல்வி அப்படி அன்று. கற்றவரை விட்டு அதைப் பிரிக்க முடியாது. செல்வம் அப்படியா? தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் சொல்ல நாணும்’ என்பார்கள். கல்வி கற்றவர், வறுடையிலும் வளமாக வாழ்வர். அவரைத் தேடி, வளம் தானேவரும். செல்வர்களுக்குத் தம் தேசத்தில் மட்டுமே சிறப்பு உண்டு. கற்றவருக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும். எனவே, கல்வியாலேயே மனித வாழ்வை உயர்த்த முடியும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

ஆசிரியர் : இருதரப்பு வாதங்களையும் நான் கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் கல்வி அறிவு ஆழ்ந்து அகன்றதாக உள்ளது; மகிழ்ச்சி. தலைப்புக்கு வருவோம். செல்வமோ கல்வியோ, இரண்டுமே மனித வாழ்வுக்கு இன்றியமையாதன. அளவு அறிந்து வாழ்தல் என்பதைக் கற்றவரும் செல்வரும் கடைப்பிடிக்க வேண்டும். அளவு அறியாது செயல்பட்டால், இருவருக்குமே தீமை விளையும். நீங்கள் அனைவரும் நன்றாகக் கற்பன கற்க வேண்டும். செல்வத்தைத் தேடிச் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் எனக் கூறி முடிக்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
சரியான விடையைத் தேர்க.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கவிஞர் வாலி
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 2.
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என …………………. குறிப்பிடுகிறது.
அ) நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
ஈ) மணிமேகலை

Question 3.
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கம்பதாசன்
காராபாரதி
Answer:
ஈ) தாராபாரதி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 4.
“எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை” – இவ்வரிகளுக்கு சொந்தக்காரர் …………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) தாராபாரதி
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) தாராபாரதி

Question 5.
கல்விக் கூடங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் வரிகள் …………..
அ) “சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிடாய்
ஆ) “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
இ) “தேடுகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையலடுத்தல்”
ஈ) விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சாத்திரம் நானென்று கூவு
Answer:
இ, “தேதிகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 6.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!” – எனப் பாடியவர்……….
அபாரதிதாசன்
ஆ) தாராபாரதி
இ) அண்ணா
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Question 7.
வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” எனக் கட்டளையிட்டவர் …………..
அ) பாரதியார்
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தாராபாரதி
ஈ) அறிஞர் அண்ணா
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 8.
“வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என, நாட்டு நலத்திற்குப் புதிய வழித்தடம் அமைத்தவர்
அ) பாரதிதாசன்
ஆ) அறிஞர் அண்ணா
இ) முண்டாசுக் கவிஞன்
ஈ) தாராபாரதி
Answer:
இ) முண்டாசுக் கவிஞன்

Question 9.
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” என்று பாடியவர் ………………
அ) தாராபாரதி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) அறிஞர் அண்ணா
ஈ) சுப்பிரமணிய பாரதி
Answer:
ஈ) சுப்பிரமணிய பாரதி

Question 10.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”
– இப்பாடலுக்குச் சொந்தக்காரர் ……………….
அ) தேசியக்கவி
ஆ) புரட்சிக்கவிஞர்
இ) தமிழ்த்தென்றல்
ஈ) பேரறிஞர்
Answer:
ஆ) புரட்சிக்கவிஞர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 11.
“நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” எனக் கூறியவர்……………….
அ) நாவேந்தர்
ஆ) சொல்வேந்தர்
இ) பாவேந்தர்
ஈ) நாவலர்
Answer:
இ) பாவேந்தர்

Question 12.
“வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” என்று கூறியவர்……………….
அ) பாரதியார்
ஆ) பாவேந்தர்
இ) பேரறிஞர்
ஈ) நாவலா
Answer:
இ) பேரறிஞர்

Question 13.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மேன்மையான பார்வைக்கு வழி கறியவர் ……………
அ) தொல்காப்பியர்
ஆ) திருவள்ளுவர்
இ) திருமூலர்
ஈ) கணியன் பூங்குன்றன்
Answer:
ஈ) கணியன் பூங்குன்றன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம்

Question 14.
“விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து பொதுவில் நடத்து”
எனக் கூறி உலகத்தை வீடாகக் காட்டியவர் …………
அ) பாரதியார்
ஆ) கண்ணதாசன் இதாராபாரதி
ஈ) புரட்சிக்கவிஞர்
Answer:
ஈ) புரட்சிக்கவிஞர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.3 பதிற்றுப்பத்து Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.3 பதிற்றுப்பத்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

தறுவினா

Question 1.
செந்துறைப் பாடாண் பாட்டு – துறைவிளக்கம் எழுதுக.
Answer:

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது, ‘பாடாண்’ எனப்படும்.
  • உலகினுள் இயற்கை விசையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

கூடுதல் வினாக்கள்

Question 2.
வண்ணம், ஒழுகு வண்ணம் – விளக்குக.
Answer:

  • ‘வண்ணம் என்பது, சந்த (ஓசை நய) வேறுபாடாகும்.
  • ‘ஒழுத வண்ணம்’ என்பது, ஒழுகிய (நெகிழ்ந்த) ஓசையால் சொல்லுதலாகும்.

Question 3.
தாக்கும் செந்தூக்கு – விளக்குக.
Answer:
தூக்கு’ என்பது, செய்யுள் அடி அளவை வரையறை செய்வதாகும். செந்தூக்கு’ என்பது, வஞ்சிப் பாவின் இறுதி அடி போன்றோ, ஆசிரியப்பா அடியின் இறுதி போன்றோ அமைவதாகும்.

Question 4.
திருவள்ளுவர், சிறந்த நாடு குறித்துக் கூறும் செய்தி யாது?
Answer:
மிகுபசியும் தீராநோயும் பெரும்பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 5.
சேரலாதனின் எச்சிறப்புகளைக் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்?
Answer:
சேரலாதனின் நாடுகாத்தல் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து
பாடியுள்ளார்.

Question 6.
சேரலாதனைக் குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் நெடுஞ்சேரலாதன்.
  • இமயம்வரை படை நடத்தி வெற்றி பெற்றவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
  • தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 7.
பாடாண் திணை – விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண்திணை. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது.
  • அதாவது ஒரு சிறந்த தலைவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலிய பண்புகளை ஆராய்ந்து கூறுவதாகும். கைக்கிளைத் திணைக்குப் பாடாண் திணை புறனாகும்.

Question 8.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் யார்? பெற்ற பரிசில்கள் யாவை?
Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். அதற்காக உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசில்களாகப் பெற்ற

Question 9.
சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை – ஏன்?
Answer:

  • செல்வவளம் மிக்கது சேரநாடு.
  • அச் சேரநாட்டு மக்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கண்போலப் பாதுகாத்தான்.
  • எனவே, சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை.
  • வேற்று நாடு சென்று குடியேறுவதையும் விரும்பியதில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

சிறுவினா

Question 1.
சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய தரிணங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும் மக்களையும் காண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள், பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்.
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது.

கூடுதல் வினா

Question 2.
பதிற்றுப்பத்துக் குறித்துக் குதிப்பெழுதுக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களும், புறப்பொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து.
  • இது, சேர மன்னக்கலைத்துப் பேரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
  • புறப்பொருள்களும் பாடாண் திணை’ குறித்தமைந்த நூல். * ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு , பாடலின் பெயர் ஆகியன இடம் பெற்றிருக்கும். பாடலில் இடம்பெறும் சிறந்த சொற்றொடர், அப்பாடலுக்குத் தலைப்பாக இப்பட்டிருக்கும்.
  • இத்தொகை நூலுள், முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

இலக்கணக்குறிப்பு

துய்த்தல், பிழைப்பு – தொழிற்பெயர்கள்
ஒரீஇய – சொல்லிசை அளபெடை
புகழ்பண்பு – வினைத்தொகை
நன்னாடு, கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகைகள்
மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
ஒடியா, தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
இகந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

1. மருண்ட னென் – மருள் (ண்) + ட் + அன் + என்
மருள் – பகுதி, ‘ள்’, ‘ண்’ ஆனது விகாரம், ட் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை, என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

2. துய்த்த ல் – துய் + த் + தல்
துய் – பகுதி, த் – சந்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

3. நல்கி – நல்கு + இ
நல்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

4. எய்தி – எய்து + இ
எய்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

5. தருதல் – தா (தரு) + தல்
தா – பகுதி, ‘தரு’ என்றானது விகாரம், தல் – தொழிற்பெயர் விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

புணர்ச்சி விதிகள்

1. மண்ணுடை – மண் + உடை
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (மண்ண் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மண்ணுடை)

2. புறந்தருதல் – புறம் + தருதல்
“மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” (புறந்தருதல்)

3. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு), “னலமுன் றன ஆகும் காக்கள்’ (நன்னாடு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

4. நல்லிசை – நன்மை + இசை
“ஈறுபோதல்” (நன் + இசை), “முன்நின்ற மெய்திதெல்” (நல் + இசை )
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்ரம்” நல்ல் + இசை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நல்லிசை)

குறள் பொருள் அறிக.

Question 1.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
Answer:
மிக்க பசியும், துன்புறுத்தும் நோயும், அழிக்கும் பகையும் சூழாது இருப்பதே சிறந்த நாடாகும்.

Question 2.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்தில் வந்து.
Answer:
நோயில்லாமை, பொரு செல்வம், விளைபொருள், இன்பவாழ்வு, பாதுகாப்பு என்னும் ஐந்தும், ஒரு நாட்டிற்கு அணிகளரகம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

பலவுள் தெரிக

Question 1.
கூபா – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.
காரணம் : சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) இரண்டும் சரி
இ) இரண்டிற்கும் தொடர்பு இல்லை
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
ஆ) இரண்டும் சரி

கூடுதல் வினாக்கள்

Question 2.
“பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி” – இத்தொடரில், ‘வாழ்தல்’ என்னும் பொருளுடைய……………..
சொல் அ) பதி
ஆ) பிழைப்பு
இ) துய்த்தல்
ஈ) எய்தி
Answer:
ஆ) பிழைப்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 3.
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்” இத்தொடரில், பாதுகாப்பு’ என்னும் பொருளை உணர்த்தும் சொல்……………..
அ) புரைவயின்
ஆ) நல்கி
இ) ஏமம்
ஈ) சீர்கெழு
Answer:

Question 4.
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது……………..
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) ஏமம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 5.
சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்தநின் பண்புபல நயந்தே – இப்பாடலில், நெடியோன் என்பவன் யார்?
அ) சிவபெருமான்
ஆ) திருமால்
இ) நெடுந்சேரலாதன்
ஈ) விழாத்தலைவன்
Answer:
ஆ) திருமால்

Question 6.
“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு” என்று கூறியவர்……………..
அ) குமட்டூர்க் கண்ண னார்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) திருவள்ளுவர்
ஈ) இமயவரம்பன்
Answer:
இ) திருவள்ளுவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 7.
இமயத்தில் வில் பொறித்தவன்……………..
அ) உதியன் சேரலாதன்
அ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Question 8.
கடம்பர்களை வென்றவன்……………..
அ) உதியன் சேரலாதன்
ஆ) செங்குட்டுவன்
இ) கரிகாலன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 9.
பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தைப் பாடியவர்……………..
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) குமட்டூர்க் கண்ணனார்
ஈ) ஔவையார்
Answer:
இரு குமட்டூர்க் கண்ணனார்

Question 10.
‘நிரை வெள்ளம்’ என்னும் தொடரின் பொருள்……………..
அ) வானுலக வீரர்கள்
ஆ) வெற்றி பெற்றோர்
இ கவசமானோர்
ஈ) நரகத்து வீரர்கள்
Answer:
ஈ) நரகத்து வீரர்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 11.
கைக்கிளைக்குப் புறனாக அமையும் திணை……………..
அ) பெருந்திணை
ஆ) வெட்சித்திணை
இ) வாகைத்திணை
ஈ) பாடாண்திணை
Answer:
ஈ) பாடாண்திணை

Question 12.
‘வண்ணம்’ என்பது……………..
அ) செய்யுள் வேறுபாடு
ஆ) துள்ளல் ஓசை
இ) சந்த வேறுபாடு
ஈ) புலமை வேறுபாடு
Answer:
இ) சந்த வேறுபாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 13.
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்கள்……………..
அ) பதிற்றுப்பத்து, நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு
ஈ) புறநானூறு, பரிபாடல்
Answer:
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு

Question 14.
பதிற்றுப்பத்து நூல் முழுமையும், …………….. திணையில் அமைந்துள்ளது.
அ) வெட்சி
ஆ) நொச்சி
இ) பாடாண்
ஈ) பொதுவியல்
Answer:
இ) பாடாண்

Question 15.
பதிற்றுப்பத்து என்பது, …………….. மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளைப் பாடுவது.
அ) பாண்டிய
ஆ) சோழ
இ) பல்லவ
ஈ) சேர
Answer:
ஈ) சேர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 16.
பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறும் திணை……………..
அ) கரந்தை
ஆ) வஞ்சி
இ) பாடாண்
ஈ) பொகவியல்
Answer:
இ) பாடாண்

Question 17.
சந்த வேறுபாட்டைக் குறிப்பது, ……………..என்னும் தொடர்.
அ) துறை
ஆ) திணை
இ) தூக்கு
ஈ) வண்ணம்
Answer:
ஈ) வண்ணம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 18.
பதிற்றுப்பத்துள் கிடைக்காத பத்துகள்……………..
அ) முதற்பத்து, எட்டாம்பத்து
ஆ) நான்காவத்து, ஆறாம்பத்து
இ) எட்டாம்பத்து, இறுதிப்பத்து
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து
Answer:
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து

Question 19.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது……………..
அ) முதல்பத்து
ஆ) நான்காம்பத்து
இ) பத்தாம்பத்து
ஈ) இரண்டாம்பத்து
Answer:
ஈ) இரண்டாம்பத்து

Question 20.
பதிற்றுப்பத்து’ என்னும் தொடர்பு ……………..எனப் பிரியும்.
அ) பதிற் + றுப்பத்து
ஆ) பதிறு + பத்து
இ) பதிற்று + பத்து
ஈ) பத்து + பத்து
Answer:
ஈ) பத்து + பத்தில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 21.
பொருத்துக.
1. சான்றோர் – அ. கடுந்துப்பு
2. புதுவருவாய் – ஆ. மருண்டனென்
3. மிதவலிமை – இ. மன்னுயிர்
4. வியப்படைந்தேன் – ஈ. புரையோர்
– உ. யாணர்
Answer:
1 – ஈ. 2 – உ, 3 – அ, 4 – ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து

Question 22.
தவறான விடையைக் கண்டறிக. பாடாண் திணை என்பது.
அ) கைக்கிளைக்குப் புறனானது
ஆ) மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மைகளைக் கூறுவது
இ) ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.
Answer:
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.2 புரட்சிக்கவி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.2 புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

குறுவினாக்கள்

Question 1.
உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
Answer:

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

Question 2.
அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக்குறிப்புத் திருக.
Answer:
அலைகடல் – வினைத்தொகை; புதுக்கியவா வினையாலணையும் பெயர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘உதாரன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்த வன்’ – யார், யாரிடம் கூறியது?
Answer:
“உதாரன் அழகும் அறிவும் இளயையும் வாய்ந்தவன்” என்று அரசனிடம் அமைச்சர் கூறியது.

Question 4.
“சில பேச்சுப் பேசிடுக” – யாடு யாரிடம், எங்கு கூறியது?
Answer:
“சில பேச்சுப் பேசிடுக தலைப்பாகை அதிகாரி, உதாரனிடமும் மங்கையிடமும் கொலைக்களத்தில் கூறியது.

Question 5.
அரசன், அமைச்சரிடம் எதற்கு ஆலோசனை கேட்டான்?
Answer:
அரசன், தன் மகள் இளவரசி அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தர விரும்பியதால், அமைச்சரிடம் ஆலோசனை கேட்டான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
அரசன், எதற்குத் தயங்கினான்?
Answer:
அழாம் அறிவும் இளமையும் வாய்ந்த உதாரனே, கவிதை எழுதும் கலை கற்பிக்க ஏற்றவன் என அமைச்சர் கூறியதால், ‘தன் மகள் எளிய கவிஞனோடு காதல் வயப்படுவாளோ?’ என அரசன் தயங்கினான்.

Question 7.
தயங்கிய அரசனுக்கு அமைச்சர் கூறிய உத்தி யாது?
Answer:
“உதாரன் பார்வையற்றவன்” என அமுதவல்லியிடமும், “அமுதவல்லி தொழுநோயாளி” என உதாரனிடமும் கூறி, இருவருக்கும் இடையே, ஒருவரை மற்றொருவர் காணாவகையில் திரை இடுமாறும் அரசனுக்கு அமைச்சர் உத்தி கூறினார்.

Question 8.
பாரதிதாசனைப் ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் என்ன?
Answer:
தம் கவிதைகளில் தாய்மொழி, தமிழினம், குடியாட்சி உரிமைகள், சமூக சீர்திருத்தங்கள் என்பன பற்றி, உரத்த சிந்தனைகளை வெளியிட்டுள்ளமையே, பாரதிதாசனைப், ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 9.
மக்களாட்சி அடிப்படைக் கூறுகளாகப் புரட்சிக்கவி கூறுவன யாவை?
Answer:
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன, மக்களாட்சி அடிப்படைக் கூறுகள் எனப் புரட்சிக்கவி கூறுகிறது.

Question 10.
பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு என்பன, பாரதிதாசன் இயற்றிய காப்பியங்களாகும்.

சிறுவினாக்கள்

Question 1.
“உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.
பொருள் : உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.
விளக்கம் : கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதநரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 2.
பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
Answer:
பெருங்காடு – பெருமை + காடு ‘ஈறுபோதல்’ (பெரு + காடு), ‘இனம் மிகல்’ (பெருங்காடு)

உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உந்துது)

கூடுதல் வினா

Question 3.
புரட்சிக் கவிஞர் – குறிப்பெழுதுக.
Answer:
புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்ட கனக சுப்புரத்தினம், பாரதியாரிடம் கொண்ட பற்றுதலால், தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

சமுதாயப் பொறுப்புணர்ந்து கவிதைகளைப் படைத்தார். தம் பாடல்களில் மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியன குத்த கருத்துகளை உரக்க வெளிப்படுத்தியமையால், ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ‘பாவேந்தர் எனவும் அழைக்கப்பெற்றார்.

குடும்ப விளக்கு பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு முதலான நூல்களை இயற்றினார். ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

வடமொழியால் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி 1937இல், புரட்சிக்கவி’யை எழுதி ளார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தார்.

இவடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு இவர் பெயரில் திருச்சியில், ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ளது.

இவர் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் புதுவை அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

நெடுவினா

Question 1.
பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
Answer:
உதாரன் புரட்சிக்கவி :
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ காவியத்தைத் தழுவிப் பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’யைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம் பெற்றவன் ‘உதாரன்’.

தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து, உதாரன் மக்களாட்சியை நிறுவுகிறான். அதற்கு அவன் ஆற்றிய வீரவுரைகளே காரணம். அவ்வுரைகள் அத்தனையும் பாரதிதாசன் சிந்தையில் உருவானவையே.

வாய்ப்பைப் பயன்படுத்தும் உதாரன் :
தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசி அமுதவல்லிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்ட கவிஞன் உதாரன், கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான்.

அவர்கள் இறுதியில் காதலர்களாயினர். அதனால், மரண தண்டனைக்கு உள்ளாகி, இருவரும் கொலைக்களம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கிடைத்த வாய்ப்பைத் தனதாக்கிப் புரட்சிக்காரனாகிறான் கவிஞன். இங்குக் கவிஞன் உதாரனின் முழக்கமெல்லாம், பாவேந்தரின் கருத்துகளே என்பதில் ஐயமில்லை!

பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த நலன்களை, உதாரன் பட்டியலிடுகின்றான்! “பாழ் நிலத்தை அந்நாளில் புதுக்கியவர் யார்?”, “பயன்விளைக்கும் நின்ற உழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?”, “கருவியெலாம் செய்த அந்தக் கைதான் யார் கை?”, “கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?” இவையெல்லாம் பாரதிதாசனது உணர்ச்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உதாரன் புரட்சியைத் தூண்டுதல் :
மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்பியதால் கவிஞன் உதாரன், தனக்கும் அரகனுக்கும் உண்டான வழக்கின் அடிப்படையை எடுத்துரைக்கிறான்.

“மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?” என்னும் சிந்தனையைத் தூண்டும் மக்களுக்காக மட்டுமே ஆட்சி இருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாவேந்தர், உகாரன் வாய்மொழியாக வைத்து, “ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அந்தத் தேசம் ஒழதல் நன்றாம்” எனக் கூறுகின்றார்.

புரட்சிக்கவியின் தமிழ்ப்பற்று :
தமிழின்மேல் தமக்குள்ள பற்றுதலைப் பாவேந்தர், உதாரன் மூலமாத வெளிப்படுத்துகிறார். “அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று சமுதாயம் நினைத்திடுமோ?” அஞ்சுவதாகக் கூறி, “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ ?” என வேதனைப்படுகிறான்.

எனவே மக்களை நோக்கி, “உமை ஒன்று வேண்டுகின்றேன்; மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்று மின்கள்” என்கிறான். இவை அனைத்தும் பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவியே என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

இலக்கணக்குறிப்பு

ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய, வீழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
அலைகடல், நிறைஉழைப்பு, உயர்தமிழ் வழ்கொள்ளி – வினைத்தொகைகள்
தமிழ்க்கவிஞன், பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
பேரன்பு, நெடுங்குன்றம், இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள், நன்னாடு, பொன்னாடு, பெருமக்கள் – பண்புத்தொகைகள்
ஒழிதல், சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
உழுதுழுது, பதைபதைத்து – அடுக்குத்தொடர்கள்
பெரியோரே, தாபோரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
பூட்டி – வினையெச்சம்
வந்திருந்தார், கொண்டவர் – வினையாலணையும் பெயர்
எலாம் – இடைக்குறை
கற்பிளுந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனுக்கும் காதலிக்கும் – எண்ணும்மைகள்
வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
கண்ணீர்வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உறுப்பிலக்கணம்

1. நின்றார் – நில் (ன்) + ற் + ஆர்
நில் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. செய்வான் – செய் + வ் + ஆன்
செய் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அழைத்தான் – அழை + த் + த் + ஆன்
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

4. வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

5. ஆழ்க – ஆழ் + க
ஆழ் – பகுதி, க – வியங்கோள் வினைமுற்று விகுதி.

6. பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுறு விகுதிர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. உரைப்பாய் – உரை + ப் + ப் + ஆய்
உரை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

8. தந்தார் – தா (த) + த் (ந்) + த் + ஆர்
தா – பகுதி, ‘த’ ஆனது விகாரம், த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.,

9. ஏகுகின்றேன் – ஏகு + கின்று + ஏன்
ஏகு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

10. வாழார் – வாழ் + (ஆ) + ஆர்
வாழ் – பகுதி, (ஆ) – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

11. செய்தார் – செய் + த் + ஆர்
செய் – பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

12. ஓதுக – ஓது + க
ஓது – பகுதி, க – வியங்கோள் விலை கற்று விகுதி.

13. பூட்டி – பூட்டு + இ
பூட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

14. வெட்டி – வெட்டு + இ
வெட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

15. அறுத்தல் – அறு – த + தல்
அறு – பகுதி, த்து சத்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

16. வாழிய – வாழ் + இய
வாழ் – பக்தி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.

17. செய்தேன் – செய் + த் + ஏன்
செய் பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

18. குனந்தான் – குனி+ த் (ந்) + த் + ஆன்
தனி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. நீரோடை – நீர் + ஓடை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நீரோடை)

2. சிற்றூர் – சிறுமை + ஊர்
“ஈறுபோதல்” (சிறு + ஊர்)
“தன்னொற்று இரட்டல்” (சிற்று + ஊர்)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (சிற்ற் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சிற்றூர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

3. கற்பிளந்து – கல் + பிளந்து
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பிளந்து )

4. மணிக்குலம் – மணி + குலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மணிக்குலம்)

5. அமுதென்று – அமுது + என்று
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அமுத் + என்று)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அமுதென்று)

6. புவியாட்சி – புவி + ஆட்சி
“இ ஈ ஐ வழி யவ்வும்” (புவி + ய் + ஆட்சி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புவியாட்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. ஒப்பவில்லை – ஒப்ப + இல்லை
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஒப்ப +வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒப்பவில்லை)

8. நெற்சேர – நெல் + சேர
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நெற்சேர)

9. பொற்றுகளை – பொன் + துகளை
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன் + றுகளை)
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (பொற்றுகளை)

10. பேரன்பு – பெருமை + அன்பு
“ஈறுபோதல்” (பெரு + அன்பு), “ஆதி நீடல்” (பேரு + அன்)
“முற்றும் அற்று ஒரோ வழி” (பேர் அன்பு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போன்பு)

11. இளஞ்சிங்கம் – இளமை + சிங்கம்
“ஈறுபோதல்” (இள + சிங்கம்), “இனம் மிகில்” (இளஞ்சிங்கம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

12. பொன்னாடு – பொன் + நாடு
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன்னாடு)

13. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு எனலமுன் றன ஆகும் தநக்கள்” (நன்னாடு)

14. கண்ணீ ர் – கண் + நீர்
“ணளமுன் டண ஆகும் ஆக்கள்” (கண்ணீ ர்)

15. ஆவென்று – ஆல் என்று
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஆ + வ் + என்று),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆவென்று)

16. தூதொன்று – தூது + ஒன்று
“உதிர்வான உக்குறள் மெய்விட்டோடும்” (தூத் + ஒன்று)
உடலமேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூதொன்று)

17. நிலவில்லை – நலிவு + இல்லை
முற்றும் அற்று ஒரோவழி” (நலிவ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நலிவில்லை)

18. தலைப்பாகை – தலை + பாகை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (தலைப்பாகை)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

19. நெடுங்குன்று – நெடுமை + குன்று
“ஈறுபோதல்” (நெடு + குன்று), “இனமிகல்” (நெடுங்குன்று)

20. பாம்புக் கூட்டம் – பாம்பு + கூட்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பாம்புக் கூட்டம் )

பலவுள் தெரிக

Question 1.
அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் – யார், யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
ஆ) மன்னன் அமைச்சரிடம்
இ) அமைச்சர் மன்னனிடம்
ஈ) மன்னன் அமுதவல்லியிடம்
Answer:
இ) அமைச்சர் மன்னனிடம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் ……………..
அ) சட்டம், நிருவாகம், நீதி
ஆ) அரசு, அமைச்சர், தூதுவர்
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஈ) மக்கள் புரட்சி, போராட்டம், மக்களாட்சம்
Answer:
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 3.
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில்…………….. பெரும்பங்கு உண்டு.
அ) புரட்சிக்கு
ஆ) போராட்டத்திற்கு
இ) இலக்கியத்திற்கு
ஈ) காலத்திற்கு
Answer:
இ) இலக்கியத்திற்கு

Question 4.
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ……………..
அ) கவிஞர் உதாரன்
ஆ) மந்திரி
இ) திரண்டிருந்த மக்கள்
ஈ) இளவரசி அமுதவல்லி
Answer:
ஈ) இளவரசி அமுதவல்லி

Question 5.
சிரம் அறுத்தல்……………..பொழுதுபோக்கு!
அ) கவிஞனுக்கு
ஆ) அமைச்சனுக்கு
இ) வேந்தனுக்கு
கொலைகாரனுக்கு
Answer:
இ) வேந்தனுக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
அ) அரசன், அமுதவல்லி
ஆ) அமைச்சர், அரசர்
இ) அமுதவல்லி, உதாரன்
ஈ) உதாரன், அமைச்சர்
Answer:
இ) அமுதவல்லி, உதானன

Question 7.
குடிகட்கெல்லாம் ஆளுரிமையைப் பொதுவாக்க நினைத்தது……………..
அ) உதாரன்
ஆ) அமைச்சன்
இ) மக்கள்
ஈ) அமுதவல்லி
Answer:
ஈ) அமுதவல்லி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 8.
‘உலகம்’ என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) முழக்கம்
ஆ) படிகம்
இ) படி
Answer:
வி படி

Question 9.
‘தந்திட்டான் என்னும் சொல்லின் பகுதி ……………..
அ) தம்
ஆ) தந்து
இ) தந்த
ஈ) தந்திடு
Answer:
ஈ) தந்திடு

Question 10.
தெமிழ் அறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவி என் றெனை அவளும் காதலித்தாள் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்
அ) அழகின் சிரிப்பு
ஆ) பாண்டியன் பரிசு
இ) பிசிராந்தையார்
ஈ) புரட்சிக்கவி
Answer:
ஈ) புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 11.
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
அ) பாரதம்
ஆ) சாகுந்தலம்
இ) பில்கணீயம்
ஈ) பெருங்கதை
Answer:
இ) பில்கணீயம்

Question 12.
எப்பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்?
அ) ராஜகோபாலன்
ஆ) அரவிந்தன்
இ) வில்வரத்தினம்
ஈ) சுப்புரத்தினம்
Answer:
ஈ) சுப்புரத்தினம்

Question 13.
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
அ) ஆங்கில
ஆ) டச்சு
இ) பிரெஞ்சு
ஈ) போர்த்துகீசிய
Answer:
இ) பிரெஞ்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 14.
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ……………..
அ) வானம்பாடி
ஆ) கரும்பு
இ) இந்தியா
ஈ) குயில்
Answer:
ஈ) குயில்

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம்……………..
அ) பாண்டியன் பரிசு
ஆ) சேரதாண்டவம்
இ) இருண்டவீடு
ஈ) பிசிராந்தையார்
Answer:
ஈ) பிசிராந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 16.
புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், …………….. எனத் தொடங்கும்.
அ) தமிழுக்கு அமுதென்று பேர்
ஆ) நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்
ஈ) என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றிகண்
Answer:
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 17.
சொல் பொருள் பொருத்துக.
1. மீட்சி – அ. உலோகங்கள்
முழக்கம் – ஆ. மாணிக்கம்
3. மணி – இ. விடுதலை
4. கனிகள் – ஈ. உலகம்
– உ. ஓங்கி உரைத்தல்
Answer:
1-இ, 2-உ, 3-ஆ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

குறுவினா

Question 1.
‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
Answer:
‘வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.

எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு பருருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
ஜீவா குறித்து அறிந்தவற்றைச் சுருக்கமாக எழுதுக.
Answer:

  • ‘ஜீவா’ என அழைக்கப்பெறும் ‘ப. ஜீவானந்தம்’, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
  • தொடக்கக் காலத்தில் காந்தியவாதி; பின்னர்ச் சுயமரியாதை இயக்கப் போராளி.
  • ஜீவா, சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர்.

Question 3.
ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணம் எது
Answer:
“நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டிருக்கிறேன்; படித்துக்கொண்டே இருப்பேன்” என்பது, ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 4.
ஜீவாவின் பிரார்த்தனை யாது?
Answer:
“மனிதச் சிந்தனையே! கற்பனை கும் எட்டாத பேராற்றலே! நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை ஒருமுறை என்னிடம் கூறு. அதலன எட்டுத் திசைகளிலும் பரப்பி, மனித இனத்தை நீ சொல்லும் இடத்திற்கு அழைத்து வருவேன். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டேன்! என்னைப் பயன்படுத்திக் கொள்வதே, நீ எனக்குச் செய்யும் கைம்மாறு” என்பதே, ஜீவாவின் பிரார்த்தனை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 5.
ஜீவாவின் கொள்கையில் நம்பிக்கையும் எதிலிருந்து பிறந்தன?
Answer:
‘கற்பனைக்கு எட்டாத பேராற்றலான மனிதச் சிந்தனையில் சிறந்தவற்றை, எட்டுத் திசைகளிலும் பரப்பி, மன்ற இனத்தை உயர்த்தத் தம்மால் இயன்றதைக் கைம்மாறு கருதாமல் செய்யவேண்டும்’ என்னும் அடிப்படை மனோபாவத்திலிருந்து பிறந்ததே, ஜீவாவின் கொள்கையும் நம்பிக்கையுமாகும்.

Question 6.
ஜீவாவின் நினைவில் எப்போதும் நிற்கும் எளிய உண்மை யாது?
Answer:
தழக்குத் தெரியாத அரிய செய்திகள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்னும் எளிய உண்மை , வாவின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.

சிறுவினா

Question 1.
ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
Answer:

  • ஜீவாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 2.
கூடுதல் வினாக்கள் ஜீவா சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு குறித்து எழுதுக.
Answer:

  • நாஞ்சில் நாட்டுத் தோவாளையில் மக்களிடம் பள்ளி மாணவர் குழு ஒன்று, திருவாங்கூர் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை எடுத்துக் கூறித் துயர் துடைக்க நிதி திரட்டியது.
  • பள்ளி இறுதி வகுப்பு மாணவரான ஜீவா, அக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
  • சமூக நலனுக்காக ஜீவா தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு அது.
  • அதுவே அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் ஜீவா, தம்மைக் கூர்வாளாக மெருகேற்றிக் கொண்ட முதல் நிகழ்வாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
ஜீவா மேடையில் வாழ்ந்த மாமனிதர் என்பதை விவரி.
Answer:

  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடைப் பேச்சாளர்.
  • ஜீவா, தமக்கென ஒரு தத்துவத்தைப் படைத்துக் கொண்டவர் அல்லர்.
  • தாம் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய பேச்சாற்றலால், கலைநோக்கால், கற்பனையால் உயிர்பெற்று எழச் செய்தார்கள்
  • தம் மேடைப்பேச்சால் அந்த மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தார் எனலாம், தம் மேடைப்பேச்சால், மனித இனத்தை உன்னத உயரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்.
  • ‘என் வாழ்க்கை என் கைகளில்’ என்னும் நம்பிக்கையோடு மேடையில் வாழ்ந்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

நெடுவினா

Question 1.
சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
Answer:
மக்கள் நம்பிக்கை :
மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாதமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்குமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பதுவரை மேடையில் கர்ஜித்துக்கொண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனைம்பிக்கை.

மேடைப்பேச்சில் வண்ண ஜாலம்
பேச்சு, அவர் பெற்ற வரம் பேச்சுக்கலை குறித்துக் கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்தப் பாணியில் கற்றதை வெளிபடுத்தியவர். மக்களின் தரம், அறிவு, பழக்கவழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து, விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப் பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடைகாண விரும்பியவர் அவர். எனவே, செய்திகளைக் குவியல் குவியலாகக் கூறிக் குழப்பாமல், சில றிப் புரிய வைத்தவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

காற்றில் கலந்த பேரோசை :
பேச்சுக்கலை, அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி கானமாக விட்டது. அது, இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர்நீச்சல் போட்டுக் கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. பேரோசை, காற்றில் கலந்துவிட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.

பலவுள் தெரிக

Question 1.
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
Answer:
இ) மக்கள் வெள்ளம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
அ) சுந்தர ராமசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) குமட்டூர் கண்ண னார்
ஈ) குடவாயில் பாலசுப்பிரமணியன்
Answer:
ஆ) ப. ஜீவானந்தம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
‘சொரிமுத்து’ என்பது,……………….இயற்பெயர்.
அ) மதுசூதனின்
ஆ) வைத்தியலிங்கத்தின்
இ) ஜீவாவின்
ஈ) ராசேந்திரனின்
Answer:
இ) ஜீவாவின்

Question 4.
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் ………….
அ) ஆத்மாநாம்
ஆ) பிரபஞ்சன்
இ) பாரதியார்
ஈ) சுந்தர ராமசாமி
Answer:
ஈ) சுந்தர ராமசாமி

Question 5.
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்……………..
அ) திருவிதாங்கூர்
ஆ) நாகர்கோவில்
இ) தோவாளை
ஈ) குற்றாலம்
Answer:
இ) தோவாளை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 6.
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் வந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர் ……………
அ) திரு. வி. க.
ஆ அறிஞர் அண்ணா
இ) ஜீவானந்தம்
ஈ) சங்கரதாசு சுவாமிகள்
Answer:
இ) ஜீவானந்தம்

Question 7.
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
அ) பேச்சு எனக்குக் கைவந்த கலை
ஆ) எல்லாம் கரைத்துக் குடித்துவிடவில்லை
இ) இயற்கை விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடமுடியும்
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
Answer:
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டுமென எண்ணுகிய பேதை மனசு.
வினா : பேதை மனசு எவ்வாறு எண்ணுகிறது?

2. “அன்சு நின்றுவிட்டது” என்று நான் சொன்னபோது, “பேச்சு நின்றபோதா?” எனத் திருப்பிக் கே கிறார்கள்.
வினா : “பேச்சு நின்றபோதா?” என எப்போது திருப்பிக் கேட்கிறார்கள்?

3. பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வினா : அவர் பெற்ற வரம் என்று, எதனைச் சொல்ல வேண்டும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

4. பேச்சுக்கலைதான் அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.
வினா : அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது எது?

5. தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை , எப்போதும் அவர் நினைவில் நிற்கும்.
வினா : எவ்வுண்மை அவர் நினைவில் எப்போதும் நிற்கும்?

6. ‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பினார் அவர்.
வினா : அவர் என்னவென்று நம்பினார்?

7. நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது.
வினா : நீரில் விழுந்த கிளை எங்குச் சென்றுவிட்டது?
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை - 1

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

குறுவினாக்கள்

Question 1.
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அயர்ந்து – அயர் + த் (ந்) + த் + உ
அயர் – பகுதி, த-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த்- இறந்தகால இடைநிலை, உ- வினையெச்ச விகுதி.
எழுந்த -ஏழு + த் (ந்) + த் + அ
ஏழு பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

Question 2.
தொடர் அமைத்து எழுதுக.
Answer:
அன்றொருநாள் : அன்றொருநாள் நான் கண்ட அழகிய காட்சியை, மீண்டும் காண ஏங்கினேன்.
நிழலிலிருந்து : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 4.
கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:

  • நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச்சொல்லாக்கங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பெறலாம்?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள்சார்ந்த கலைச்சொற்களின் தேவை மிகுதி. அதனால் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியில், எல்லாரும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைபுரியும். இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளம் போன்றவற்றில் கலைச்சொற்களைப் பெறலாம். பள்ளி இதர்களில்
இவற்றை வெளியிட்டு, மாணவர்களிடம் கலைச்சொல்லாக்க விழிப்புணர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
தாய்மொழிவழிக் கற்றலில் ஜப்பானியர் சிறக்கக் காரணம் என்ன?
Answer:
உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். ஆகையால், ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

சிறுவினாக்கள்

Question 1.
கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும்.

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அசராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கலைச்சொல், அதன் சிறப்புக் குறித்து கழுதுக.
Answer:
காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்புக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல், கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் பகுதி) கொண்டு, இதனை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். தலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.

Question 3.
மருத்துவம், கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை எழுதுக.
Answer:
மருத்துவத்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Clinic – மருத்துவமனை
Blood Group – குருதிப் பிரிவு
Companser – மருந்தாளுநர்
X – ray – ஊடுகதிர்
Typhas – குடல் காய்ச்சல்
Ointment – களிம்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Note Book – எழுதுசுவடி
Answer Book – விடைச்சுவடி
Rough Note book – பொதுக்குறிப்புச் சுவடி
Prospectus – விளக்கச் சுவடி

Question 4.
கலைச்சொல் அகராதி என்பது யாது?
Answer:
பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து, அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது, ‘கலைச்சொல் அகராதி’ எனப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை அறிக.
Answer:
Smart phone – திறன்பேசி
Website – இணையம்
Touch screen – தொடுதிரை
Blog – வலைப்பூ
Bug – பிழை
Gazette – அரசிதழ்
Ceiling – உச்சவரம்பு
Despatch – அனுப்புகை
Circular – சுற்றறிக்கை
Subsidy – மானியம்
Sub Junior – மிக இளையோர்
Super Senior – மேல் மூத்தோர்
Customer – வாடிக்கையாளர்
Carrom – நாலாங்குழி ஆட்டம்
Consumer – நுகர்வோர்
Sales Tax – விற்பனை வரி
Account – பற்று வரவுக் கணக்கு
Referee – நடுவர்
Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி/

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
உருவாக்கும் சொல் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ, புதிய சொற்களை உருவாக்கும்போதோ அச்சொல்லானது, அதே போன்று வேறு பல சொற்கள் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும்.

சான்றாக ‘Library’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நூலகம்’, ‘நூல் நிலையம்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றில் ‘நூலகம்’ என்னும் சொல், ‘நூலகர்’ (Librarian), நூலக அறிவியல் Library Science) என்னும் சொற்கள் உருவாகத் துணை புரிந்துள்ளமை காண்க.

Question 7.
கலைச்சொற்களை ஏன் தரப்படுத்த வேண்டும்?
Answer:
கற்றவர், கல்லாதவர், கைவினைஞர், பயிற்றுநர், மாணவர், மகளிர் எனப் பலரும் இன்றைய சூழலில் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கும்போது, ஒரே பொருளைக் குறிக்கப் பலவேறு சொற்களைக் கையாளுகின்றனர்.

அக்கலைச் சொற்கள், தமிழின் சொல்லாக்க வளர்ச்சியைக் காட்டினாலும், புரிந்து கொள்ளுதல் நிலையில் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். இக்குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைப் பெறக் கலைச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

சான்று : ‘ANTIBIOTICS’ என்னும் சொல்லைத் தமிழில் எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நக்கயிர்க் கொல்லிகள் எனப் பலவாறு தமிழில் வழங்குவது, குழப்பத்தை ஏற்படுத்துதல் காண்க.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கமாத் தேர்ச்சி கொள்

Question 1.
கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக?
Answer:
ஒரு மொழியில் காலத்திற்கேற் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப் படும் சொற்கள், ‘கலைச்சொற்கள் எனப்படும்.

Question 2.
கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answer:

  • புதிதாக உருவாக்கப்பெறும் கலைச்சொல், தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஓரை யமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குமுன், பின்பற்ற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
Answer:
Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
Plastic – நெகிழி
Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
Escalator – நகரும் மின்படி
Straw – நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலை
Average – நடுத்தரம், சராசரி அளவு.
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை.

Question 4.
Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
Answer:
நாவாய், கலம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answer:
உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கியச் சொல்லைத் தேர்ந்து பயன்படுத்துதல். (எ-கா: வலவன் Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் . (எ-கா : அம்மை)
பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுதல். (எ-கா : தசம முறை / Decimal)
புதுச்சொல் படைத்தல். (எ-கா : மூலக்கூறு / Molecule)
உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல். (எ-கா : எக்ஸ் கதிர் / Xray)
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல். (ஒளிச்சேர்க்கை / Photo anthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல். (எ-கா : மீட்டர் / Meter) (ஓம் / Om)
உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்களை R√A = r,r2 H2O, Ca
அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று, வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
அ) மூதூர்
ஆ) வெற்றிடம்
இ) நல்லாடை
ஈ) பைந்தளிர்
Answer:
இ) நல்லாடை

கூடுதல் வினாக்கள்

Question 2.
பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின்
ஆ, இணையத்தின்
இ) அகராதியின்
ஈ) வலைப்பூவின்
Answer:
இ) அகராதியின்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
மக்கள் பயன்பாற் றடுக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை……………
அ) பொதுமக்களும் இதழ்களும்
ஆ) பள்ளிகளும் இதழ்களும்
இ) மாணவர்களும் ஊடகங்களும்
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Answer:
ஈ) இதழ்களும் ஊடகங்களும்

Question 4.
மாயர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது………………….
அ) செய்தித்தாள்
ஆ) வார மாத இதழ்
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
ஈ) வானொலி
Answer:
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………….
அ) பாரதிதாசன்
ஆ) திரு. வி. கலியாணசுந்தரனார்
இ) காந்தியடிகள்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

குறுவினா

Question 1.
முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
சிறுதலைப்பு, நூற்பகுதி, எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற் புள்ளி இடவேண்டும்.
எ – கா : i. சார்பெழுத்து :
ii. பத்துப்பாட்டு 2 : 246
iii. எட்டுத்தொகை என்பன வருமாறு:

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
காற்புள்ளி இடம்பெற வேண்டிய இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
பொருள்களைத் தனித்தனியே குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், ஆணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடம்பெற வேண்டும்.

எ – கா : i. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப் பேறுகள் நான்கு
ii. நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
iii. இனியன் நன்கு படித்ததனால், தேர்ச்சி பெற்றான்.
iv. ஐயா, / அம்மையீர்,
V. சிறியவன், பெரியவன், செல்வன், ஏழை.

Question 3.
அரைப்புள்ளி இடம்பெறும் இடங்களைக் கூறுக.
Answer:
தொடர்நிலைத் தொடர்களிலும், ஒரு சொல்லுக்குப் பலபொருவு கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

எ – கா : i. வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
ii. அளி – அன்பு; அருள்; குளிர்ச்சி, பயண்டு; இரக்கம்; எளிமை.

Question 4.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில்,
முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

எ – கா : i. மரபியல்.
ii. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
iii. தலைமையாசிரிய அரசு மேனிலைப்பள்ளி.
iv. தொல். சொல். 58.
v. 12 / 12 /2018

Question 5.
வினாக்குறி இடவேண்டிய இடம் குறித்து விளக்கு.
Answer:
ஒரு வினாத்தொடர் முற்றுத் தொடராகவும்), நேர்க்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

எ – கா : i. அது என்ன? (வினா – முற்று)
ii. “நீ வருகிறாயா?” என்று கேட்டான். (நேர்க்கூற்று)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
விளிக்குறி இடம்பெறும் இடத்தை எழுதுக.
Answer:
அண்மையில் இருப்பவரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கும் விளிக்குறி இடுதல் வேண்டும். (வியப்புக் குறிக்கும் விளிக்குறிக்கும் அடையாளம் ஒன்றே)
எ – கா : i. அவையீர் ! ii. அவைத் தலைவீர்!

Question 7.
வியப்புக்குறி இடம்பெறும் இடம் விளக்குக.
Answer:
வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்று, வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி இடுதல் வேண்டும்.

எ – கா : i. எவ்வளவு உயரமானது!
ii. “என்னே தமிழின் பெருமை!” என்றார் கவிஞர்.
iii. வா! வா! போ! போ! போ!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 8.
மேற்கோள் குறி இடும் இடங்கள் யாவை?
Answer:

  • இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி என, மேற்கோள் குறிகள் இரண்டு வகைப்படும்.
  • இரட்டை மேற்கோள்குறி : நேர்க்கூற்றுகளில் இரட்டை மேற்கோள்குறி இடம்பெறும். எ – கா :“நான் படிக்கிறேன்” என்றான்.
  • ஒற்றை மேற்கோள்குறி : ஓர் எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர், பிறர் கூற்று இடம்பெறும் வேறு கூற்று ஆகியவற்றைக் குறிக்க, ஒற்றை மேற்கோள்குறி இடல் வேண்டும்.

எ – கா : i. ‘ஏ’ என்று ஏளனம் செய்தான்.
ii. பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
iii. ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல், சிறந்த ஒப்பீட்டு நூல்.
iv. ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர்.

தெரிந்து கொள்வோம்
நிறுத்தக்குறிகள்

சிறுவினா

Question 1.
நிறுத்தற் குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
Answer:
காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்படவிளிக்குறி, மேற்கோள்குறி என்பன நிறுத்தற்குறிகளாகும்.
(விடை : குறுவினா 1முதல் 8வரை உள்ளவற்றைத் தொகுத்துப் படிக்க)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Answer:
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.

கூடுதல் வினா

Question 2.
சரியான நிறுத்தற்குறியுடைய சொற்றொடலாக் காண்க.
அ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
ஆ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை, என்னும் ‘சிறுகதை’ எழுதினார்.
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
ஈ) ‘பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
Answer:
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
நிறுத்தற் குறிகளின் பயன்களைக் கூறுக.
Answer:
நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை. மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி. மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும். நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.

பெயயைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன. நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.

Question 2.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தொடரின் இறுதி, முகவரி இறுதிகளில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எ-கா: i. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
ii. தலைமை ஆசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, சென்னை – 600 002.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
Answer:
விளிக்குறிக்கும், வியப்புக்குறிக்கும் இடப்படும் அடையாளம் ஒன்றே. விளிக்குறி, அண்மையில் இருப்பவரையோ, தொலைவில் இருப்பவரையோ அழைப்பதற்கு இடப்படும்.

வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்றின் வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச்சொற்களுக்குப் பின்பும் வியப்புக்குறி இடப்படும்.

Question 4.
சிலப்பதிகாரத்தைப் படித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் – இத்தொடர்க்குரிய நிறுத்தற்குறிகளைத் தகுந்த இடங்களில் இட்டெழுதுக.
Answer:
“சிலப்பதிகாரத்தைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!”.

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
(சங்கரதாசு சுவாமிகள்)

நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.

இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.

இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக் குழிப்புகளின்’ சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

சங்கரதாசு சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ட்டினார். நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ ம.

லோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

Question 1.
தமிழ்ச் சொல்லாக்குக – சன்மார்க்கம், வித்துவ பால சபை.
Answer:
சன்மார்க்கம் – ஆன்மநெறி
வித்துவ பால சபை – இளங்கலைஞர் மன்றம்

Question 2.
நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் – அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
Answer:
சங்கரதாசு சுவாமிகள், நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தார்.

Question 3.
ஈட்டினார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு – பகுதி, இன் – இறந்ததால் இடைநிலை, ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 4.
தன்னன தானன தன்னனனே, இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
Answer:
எ – கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா……
இங்குமம் கையராய் வந்ததையே
பற்றதாம் என்றிடல் வேண்டுமையா.

Question 5.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
Answer:
நாட்டத்தின்வழித்தமது சுவைமிகுந்த பாடல்கள், உரையாடல்கள் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார். எனவே, நாடகத்துறைக் கலைஞர்கள், சங்கரதாசு சுவாமிகளைத் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றிச் சிறப்பித்தனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பெரும்புலவர்கள், சங்கரதாசு சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.
வினா : பெரும்புலவர்கள் எவற்றை உணர்ந்து, சங்கரதாசு சுவாமிகளை எவ்வாறு பாராட்டியுள்ளனர்?

2. சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போன்றுகின்றனர்.
வினா : நாடகத்துறைக் கலைஞர்கள் உளமகிழ்ந்து யாரை என்னவென்று போன்றுகின்றனர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. தம் நாடகத்தின்மூலம் சங்கரதாசு சுவாமிகள், மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார்.
வினா : சங்கரதாசு சுவாமிகள், தம் நாடகத்தின்மூலம் மக்களுக்கு எவற்றை உணர்த்தினார்?

தமிழாக்கம் தருக

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, printmaking, photography and other visual media. Music, theatre, film, dance, and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, art referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantiy to any single concept. This does not imply that the purpose of Art is “vague” abu unat it has had many unique, different reasons for being created.
Answer:
மிகவும் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள் எல்லாம், காட்சி முகக் கலைகளாக உள்ளன. அவை, பல்வேறு துறைகளில் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. இன்றைய ஓவியம், சிற்பம், அச்சுப் படங்கள், நிழற்படங்கள் மற்றும் காட்சிப்படங்கள் போன்றவையும் அவற்றுள் அடங்கியனவேயாகும்.

இசை, நாடகம், திரைப்படம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இலக்கியங்கள் மற்றும் வடிகங்களில் காணப்படும் கலைகள் எல்லாமும், ஒரு பரந்த வரையறைக்குள் சேர்க்கப்பட்டவையே ஆகும். பதினேழாம் நூற்றாண்டுவரை கலை என்பது ஏதோ ஒரு திறமை, நிபுணத்துவமாகக் கருதப்பட்டது. கைவினைத் தொழில் அறிவியலோடு வேறுபட்டதாக இருந்தது. கலை மற்றும் அதன் வரலாறு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கலைகளின் நோக்கம் எந்த ஒரு கருத்தையும் சுருக்கமாக அல்லது அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதாக இருக்காது. வெவ்வேறு தனித்தனிக் காரணங்களால், தனித்துவமான தன்மைகளால் உருவாக்கப்பட்டனவாகவே உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

தொடர் நாற்றம்

Question 1.
மூன்று நாள்கள், கல்லூரிக்கு விடுமுறை மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச்
சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)
Answer:
மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையாதலால் மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

Question 2.
தஞ்சைக் கோவில், எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)
Answer:
தஞ்சைக் கோவில் கட்டப்பட்ட கலைப்பாணி யாது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை. (செய்தித் தொடராக்குக)
Answer:
மதுரை வீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை மிக அழகானது.

Question 4.
நான், வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
Answer:
நான் வாரத்தின் இறுதிநாள்களிலன்றிப் பிற நாள்களில் நூலகத்திற்குச் செல்லேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மெய்ப்பத் திருத்துநர் பணிவேண்டி, நாளிதழ் முதன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விலக்குறிப்பு ஒன்று எழுதுக.
Answer:
பெயர், வயது, பாலினம், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி,
அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)

அனுப்புநர்
க. அன்புச்செல்வன்,
8, 82ஆவது தெரு,
கலைஞர் நகர்,
சென்னை – 600078.

பெறுநர்
ஆசிரியர்,
‘தினமலர்’ நாளிதழ்,
சென்னை – 600002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி விண்ணப்பம்.

வணக்கம். நான், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சுச் செய்வேன். பத்திரிகைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால், சிறப்பாகச் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி.

உங்கள்,
உண்மையுள்ள,
க. அன்புச்செல்வன்.

தன்விவரக் குறிப்பு

பெயர் : க. அன்புச்செல்வன்
தந்தை : கோ. கந்தசாமி
தாயார் : சாரதாதேவி
பிறந்தநாள் : 15.07. 1999
கல்வித்தகுதி : பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
தொழில் பயிற்சித் தகுதி : தமிழ்த் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு.
கணினி : அடிப்படைக் கணினித் தேர்வு
பட்டறிவு : இரண்டு ஆண்டுகள் சிறுபத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்தல்
முகவரி : 8, 82 ஆவது தெரு, கலைஞர் நக சென்னை – 600078.
அலைபேசி எண் : 9677074899
மின்ன ஞ்சல் முகவரி : anbuselvan08@gmailcom
அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு.
உயரம் : 6′
எடை : 68 கிலோ
குருதிவகை : O+

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கியநயம் பாராட்டுக

தண்டலை மயில்கள் ஆட, தாமன் விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் எங்கள் தவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பால மருதம்வீற் றிருக்கும் மாதோ. – கம்பர்

ஆசிரியர் குறிப்பு : ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத் தேத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ப, இக்காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்குக் கம்பரின் பாட்லொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, கம்பராமாயணத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

நயம் : மருதநிலம் தலைவன்போல் கொலுவீற்றிருக்க, மயில் ஆடுமகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேகமுழக்கம் மத்தள ஓசையாகவும், குவளைமலர்கள் கண்விழித்து நோக்கும் மக்களாகவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்ப்பரப்பு எழினியாகவும் உருவகம் செய்துள்ளார். கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

எதுகை நயம் :
அடிதோறும் முதல்சீரில் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து – தண்டலை, கொண்டல்கண், தெண்திரை, வண்டுகள் – அடி எதுகைத் தொடை அமைந்துள்ளது.

பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவந்து – தண்டலை, தாமரை, தாங்க – கொண்டல், குவளை, கண் – தெண்டிரை, தேம்பிழி – சீர்மோனை அமைந்துள்ளது.

ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட என இனிய ஓசை தரும் சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

அணிநயம் : மருதநிலக் காட்சி, இயல்பாக உள்ளது உள்ளபடி வருணித்துக் கூறப்பட்டிருந்தாலும், புலவரின் கற்பனை இணைந்து, தற்குறிப்பேற்ற அணியை உள்ளடக்கியதாகவும் செய்யுள் திகழ்கிறது. உவமை, உருவகம், கற்பனை எனப் பலவும் நிறைந்த பாடலாக உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1
Answer:
மீனைச் சமைத்து
உண்ணக் கொடுக்காதே!
மீனைப் பிடித்துச்
சமைத்துண்ணக் கற்றுக்கொடு!
உழைத்துப் பிழைக்க வழிகாட்டியவும்
கூறிய நன்மொழி!
பிழைத்துக் கொள்வானிவன்
தூண்டிலில் சிக்கியது மீன்தானே!

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. தனிமொழி – அறிவு; …………………. – வண்ண மயில்; பொது பொழு – ………………….
Answer:
தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………………. ; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; …………………. – மார்கழி, தை
Answer:
ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. எழுத்து, சொல் …………………. , யாப்பு, ………………….
Answer:
பொருள், அணி

4. எழுத்து, …………………. , சீர், தளை, …………………. , தொடை.
Answer:
அசை, அடி

5. சேரன் – வில், சோழன் – …………………. , …………………. – மீன்.
Answer:
புலி, பாண்டியன்

நிற்க அதற்குத் தக

நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோயில்களிலும், தொன்மையான இடங்களிலும், கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க, டும் என்ன செய்யப் போகிறோம்? பட்டியலிடுக.

செல்லும் இடம் கோவிலோ, தொல்லியல் சார்ந்த இடடோ, இன்றளவும் இருப்பதனால் வழிபடவும் கண்டு மகிழவும் செல்கிறோம். எனவே, அவற்றைப் பழமை சிதையாமல், நம் பிற்காலச் சந்ததியினர் காணவும் பாதுகாக்கவும் வேண்டும். சுவர்களைக் கண்டால், கீறலோ) கிறுக்கவோ கூடாது. நம் உறைவிடத்தைச் சிதைப்போமா? குப்பைகளையும் நெகிழிப்பைகளையும் போடக்கூடாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

வீட்டை மட்டுமன்று நாம் சார்ந்துள்ள பகுதிகளையும் தூய்மையோடு வைக்கவேண்டும். நம் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் சின்னங்கள் அவை. அவற்றை அழிக்கவோ, சேதப்படுத்தவோ, நமக்கோ மற்றவர்களுக்கோ உரிமை கிடையாது. நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை! எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கலைச்சொல் அறிவோம்

நுண்க லைகள் – Fine Arts
தானியக் கிடங்கு – Grain Warehouse
ஆவணப்படம் – Documentary
பேரழிவு – Disaster
கல்வெட்டு – Inscription / Epigraph
தொன்மம் – Myth

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Question 1.
‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
Answer:
சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர் :
“ஆசியக் கண்டத்தவர், ‘சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்க முடியாது” என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அக் சபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :
திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையல் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயர் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் கர்த்துத் தன்வசப் படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் சாதனைப் படைப்புகள்:
ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.

‘எப்படிப் பெயரிவேன்?’, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை!’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள் (இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் ‘இரமணமாலை’, ‘கீதகள்கள்’, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ் சமுகி) என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல் :
தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, ‘அஜொய் சக்கரபர்த்தி’யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் ‘முதல் சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

பெற்ற விருதுகள் :
இளையராஜா, தமிழக அரசின் கலைமாமணி’ விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த ‘லதா மங்கேஷ்கர்’ விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் ‘நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார்.

இந்திய அரசு, ‘பத்ம விபூஷண் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நன்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!

தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரஹ்மான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :
2009ஆம் ஆண்டு அமெரிக்க ‘கோடாக்’ அரங்கில், இசைக்கான ஆஸ்கர் பாந்துக்கு, ஐந்து பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும் :
மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.
தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடைறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். பாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:
1992இல் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் கதெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் கணினித் தொழில்நுட்பம் :
கணினித் தொழில் நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பா லின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகக் கலாசாரத்தை இசையில் இணைத்தல் :
இவர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’, ‘ஜனகணமன’ இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள் :
ஏ. ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு, ‘கலைமாமணி’ விருது வழங்கியது. கேரள அரசு, ‘தங்கப்பதக்கம்’ வழங்கிப் பாராட்டியது. உத்தரப்பிரதேச அரசு, ‘ஆவாத் சம்மான்’ விருதும், மத்தியப் பிரதேச அரசு, ‘லதா மங்கேஷ்கர்’ விருதும் வழங்கின.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசும், ‘தேசிய இசை விருது’ வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது’ வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசு, பத்மபூஷண்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைத்து, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹ்மானின் வாழ்க்கை , சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கூடுதல் வினா

Question 2.
சிம்பொனித் தமிழர் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.
Answer:
சிம்பொனித் தமிழரின் சாதனைப் படைப்புகள் :
பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி மெல்லிசையில் புது உயரம் தொட்டவர் இளையராஜா.

இந்தியாவின் பஹார், பஹாடி இன மக்கள் தொடங்கி, மதுரைக் கிராமிய இசைவரை அனைத்தையும் தம் கைவண்ணத்தில் வழிந்தோடச் செய்கம் எப்படிப் பெயரிடுவேன்?’, ‘காற்றைத் தவிர எதுவுமில்லை !’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜவின் ‘இரமண மாலை’, ‘கீதாஞ்சலி’, ‘மூகாம்பிகை பக்தித் தொகுப்பு’, ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ்சமுகி’ என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். மூன்றே சுரங்களோடு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசை அமைத்தது சிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

அரிய செயல் :
மகாத்மா காந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை இளையராஜா உருவாக்கினார். தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இனிமையான இடமுண்டு. அதில், இளையராஜாவின் புகழ், மகுடமாக அனிர்கின்றது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.4 திருச்சாழல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.4 திருச்சாழல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

குறுவினாக்கள் – கூடுதல்

Question 1.
சாழல் – விளக்குக.
Answer:

  • சோழன் என்பது, மகளிர் விளையாட்டுகளுள் ஒருவகை.
  • இது ஒரு மொழி விளையாட்டு. ஒருத்தி ஒரு செய்தி குறித்து வினா எழுப்புவாள்; மற்றொருத்தி தோள் வீசி நின்று, விடை கூறுவதாகச் சாழல் விளையாட்டு அமையும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால், ‘திருச்சாழல்’ எனப்பட்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 2.
‘சாழல்’ என்பதை எவ்வெவர் பயன்படுத்தியுள்ளனர்?
Answer:

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழி’யில் இவ்வடியைப் பயன்படுத்தியுள்ளார்.

Question 3.
‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
Answer:
‘திருச்சாழல்’ என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

சிறுவினா

Question 1.
தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answer:
சாழல்’ என்பது, மகளிர் விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பான வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் – குறிப்புத் தருக.
Answer:

  • சிவபெருமான் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருத எசகம்.
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் நகார்’ என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப், திருவாசகம் முழுவதையும் இங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
மாணிக்கவாசகர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர் நால்வரும் ஒருவர்.
  • இவர், திருவாதவூரைச் சேர்ந்தவர். எனவே திருவாதவூரார்’ எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

Question 4.
அந்தமிலான் செய்த புதுமை, மேன்மை குறித்துச் சாழலால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
“அழிவு இல்லாதவனாகிய அவன், தன்னை அடைந்த நாயினும் இழிந்தவனையும் எல்லை இல்லா ஆனந்த வெள்றுத்திய அழுத்தும் புதுமையை எவ்வாறு செய்தானடி?” என்று, ஒருத்தி இகழ்வதுபோல் வினா எழுப்பினாள்.

இன்னொருத்தி தன் தோள்களை அசைத்து ஆடியபடி, “அடைந்தவனை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள், தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்பதை அறிந்துகொள்!’ என, அவன் சிறப்பை விடையாகக் கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

நெடுவினா (கூடுதல்)

Question 1.
இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல்மூலம் மாணிக்கவாசகரின் மொழி விளையாட்டினை விவரிக்கவும்.
Answer:
(சாழல் என்னும் விளையாட்டு :
மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு சாழல். இதில் ஒருத்தி வினா எழுப்புவாள். மற்றொருத்தி அதற்கு ஏற்ற விடை கூறுவாள். இறைவன் செயல்களையும் அச்செயல்களால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவதாக அமைந்தது திருச்சாழலாகும். ‘திருச்சாழல்’ என்னும் ஒருவகை மொழி விளையாட்டின்மூலம் இருபது பாடல்களில் இறைவனின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

ஆற்றல் நிறைந்தவன் இறைவன்!
சாழல் ஆடும் ஒருத்தி, “சுடுகாட்டைக் கோவிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை! இத்தகையவரா உங்கள் கடவுள்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு, “எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லையாயினும், அவன் சினந்தால் உலகு அனைத்தும் கல்பொடியாகிவிடும்” என்று மற்றொருத்தி விடை கூறி இறைவனின் ஆற்றலை நிலைப்படுத்தினாள்.

பிறரைக் காக்கவே நஞ்சை உண்டான் :
உடனே அவள், “பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சைப் பருகினானே. அதற்குக் காரணம் என்ன?” என வினவினாள். அதற்கு மற்றொருத்தி, “அந்த நஞ்சை எங்கள் இறைவன் அன்று உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே அழிந்திருப்பார்களே!” எனக் கூறி விளக்கினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

அனைவருக்கும் அவன் அடியே மேலானது :
“முடிவு இல்லாதவனாக இருக்கும் அவனை அடைந்த என்னை, ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தது என்னே புதுமை” எனக் கேட்டாள். அதற்கு மற்றொருத்தி, “உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த அதே திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையானதேயாகும்” என்று கூறி அமைந்தாள்.

சுவைக்கத்தக்க நயம் :
இவ்வகையில் திருச்சாழல் என்னும் விளையாட்டுப் பாடல் மூலம் ஒருத்தி இறைவனைப் பழிப்பதுபோலவும், இன்னொருத்தி இறைவனின் செயல்களை நியாயப்படுத்துவதுபோலவும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ள நயம் சுவைக்கத் தக்கதாகும்.

இலக்கணக்குறிப்பு

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
அயன்மால் – உம்மைத்தொகை
கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

உறுப்பிலக்கணம்

1. உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை இல் – எதிர்மறை இடைநிலை,
அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அடைந்த – அடை + த் (ந்) + த் அ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி – கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பொடி)

2. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (உலக் + அனைத்தும்)
“உடல் பால் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகனைத்தும்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

3. திருவடி – திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும்” (திரு + வ் + அடி)
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (திருவடி)

4. தாயுமிலி – தாயும் + இலி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாயுமிலி)

5. தேவரெல்லாம் – தேவர் + எல்லாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தேவரெல்லாம்)

6. தனையடைந்த – தனை + அடைந்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனை + ய் + அடைந்த)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனையடைந்த)

7. புலித்தோல் – புலி + தோல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (புலித்தோல்)

8. தனியன் – தனி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனி + ய் + அன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனியன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

9. நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை), “முன்னின்ற மெய்திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)

பலவுள் தெரிக

Question 1.
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ………………….
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறுபறை
Answer:
அ) சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ………………….
அ) பெஸ்கி
ஆ) கால்டுவெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஈ) ஜி.யு. போப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
சைவத் திருமுறைகளில் திருவாசகம், ………………….திருமுறையாக உள்ளது.
அ) பன்னிரண்டாம்
ஆ) ஆறாம்
இ) எட்டாம்
ஈ) ஏழாம்
Answer:
இ) எட்டாம்

Question 4.
திருமங்கையாழ்வார் பாடியது………………….
அ) திருச்சாழல்
ஆ) நாட்டார் வழக்கியல்
இ) தேவாரம்
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Question 5.
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள் ………………….
அ) 658
இ) 51
ஈ) 12
Answer:
இ) 51

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 6.
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் ………………….
அ) பெரியாழ்வார்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) ஆண்டாள்
ஈ) திருப்பாணாழ்வார்
Answer:
ஆ) திருமங்கை ஆழ்வார்

Question 7.
சைவத் திருமுறைகள் ………………….
அ) ஏட்டு
ஆ) பதினெட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
Answer:
பன்னிரண்டு

Question 8.
பைத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக அமைந்தது ………………….
அ) தேவாரம்
ஆ) திருவாய்மொழி
இ) திருவாசகம்
ஈ) திருக்குறள்
Answer:
இ) திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 9.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் ………………….
அ) திருவாசகம், தேவாரம்
ஆ) திருக்கோவையார், தேவாரம்
இ) திருவாசகம், திருக்கோவையார்
ஈ) திருவாசகம், திருப்புகழ்
Answer:
இ) திருவாசகம், திருக்கோவையார்

Question 10.
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ………………….
அ) திருச்சாழல், திருப்புகழ்
ஆ) பெரிய திருமொழி, திருவருட்பா
இ) திருப்புகழ், திருவருட்பா
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி
Answer:
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி

Question 11.
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) இருபது
ஈ) பத்து
Answer:
இ) இருபது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 12.
பொருத்துக.
1. காயில் – அ. திருமால்
2. அந்தம் – ஆ. நஞ்சு
3. அயன் – இ. வெகுண்டால்
4. ஆலாலம் – ஈ. முடிவு
– உ. பிரமன்
Answer:
1-இ, 2-ஈ, 3-உ, 4-ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குற்றாலக் குறவஞ்சி, குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால யமக அந்தாதி ஆகியன, திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Question 2.
சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?
Answer:
சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டி நாடு, கண்டி நாடு ஆகியவை, சிங்கிக்குப் பரிசளித்த நாடுகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 3.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களுள் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
சிலம்பு, தண்டை , பாடகம், காலாழி.

சிறுவினா

Question 1.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answer:

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறவஞ்சி – பெயர்க்காரணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்ப் பாடல் நாடக இலக்கிய வடிவாகும்.
  • பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன்மீது காதல் கொள்வாள்.
  • அப்போது வரும் குறவர்குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்.
  • இவ்வகையில் அமைவது, ‘குறவஞ்சி’ இலக்கியம். இதனைக் ‘குறத்திப் பாட்டு’ எனவும் கூறுவர்.

Question 3.
குற்றாலக் குறவஞ்சி – குறிப்புத் தருக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன்மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவதுபோன்ற அமைப்புடையது.

தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி, ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ என வழங்கப்பெறுகிறது. இது ‘கவிதைக் கிரீடம்’ எனப் போற்றப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்து அறிவன யாவை?
Answer:

  • திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர், திரிகூட ராசப்பக் கவிராயர்.
  • திருக்குற்றால நாதர் கோவிலில் பணிபுரிந்தார்.
  • சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
  • குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றி யுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் ‘வித்துவான்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

நெடுவினா – கூடுதல் வினா

Question 1.
சிங்கன் சிங்கி – உரையாடலை விரித்துரைக்க.
Answer:
குறி சொல்லப் போன குறவஞ்சி :
குறி சொல்லிப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய குறத்தி சிங்கியை, அவள் கணவன் சிங்கன் சந்தித்தான். அவள் அணிந்திருந்த அணிவகைகளைக் கண்டு வியந்தான்.

“நெடுநாள் பிரிந்திருந்தமையால், “என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்களாக எங்கே சென்றாய்?” என வினவினான்.

அதற்குச் சிங்கி :
“கொத்தான மலர்களால் அலங்கரித்த கூந்தலையுடைய பெண்களுக்குக் குறி சொல்லப் போனேன்” என்று கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

சிங்கனின் வினா – சிங்கி விடை :

சிங்கன் : “உன்னைப் பார்க்க அதிசயமாகத் தோன்றுகிறது! ஆனால் அது பற்றிப் – இருக்கிறது!”.
சிங்கி : “எவர்க்கும் பயப்படாமல் தோன்றுவதை அஞ்சாமல் சொல்”,
சிங்கன் : “காலுக்கு மேல் பெரிய விரியன் பாம்புபோல் கடித்துக் கிடப்பது என்ன?”
சிங்கி : “சேலத்து நாட்டில் குறி சொல்லியதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்
சிங்கன் : “அதற்கு மேல் திருகு முருகாகக் கிடப்பது என்ன?”
சிங்கி : “கலிங்க நாட்டில் கொடுத்த முறுக்கிட்ட தண்டை”

சிங்கன் : “சரி, நாங்கூழ்ப் புழுபோல் நீண்டு நெளிந்து குறுதிக் கிடப்பது என்ன?”
சிங்கி : “பாண்டியனார் மகளுக்குச் சொன்ன குறிக்குப் பரிசாக அளித்த பாடகம்” என்றாள்.
சிங்கன் : “உன் காலிலே பெரிய தவளைபோல் கட்டியள்ளது என்னடி?”,
சிங்கி : “இறைவன் குற்றாலநாதர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்”.
சிங்கன் : “அப்படியானால் சுண்டு விரலிலே கண்டலப் பூச்சிபோல் சுருண்டு கிடப்பது என்ன?”
சிங்கி : “கண்டி தேசத்தில் முன்பு நான் பெற்ற காலாழி”.
இப்படி உரையாடிக் கொண்டு, தம் உறைவிடம் நோக்கிச் சென்றனர்.

இலக்கணக்குறிப்பு

மாண்ட, பெற்ற, இட்ட, கொடுத்த கட்டிய – பெயரெச்சங்கள்
சொல்ல, கடித்து, சொல்லி நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
திருகுமுருகு – உம்மைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

உறுப்பிலக்கணம்

1. பெற்ற பெறு (பெற்று) + அ
பெறு பகுதி, ‘பெற்று’ என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, அ – பெயரெச்ச விகுதி.

2. நடந்தாய் – நட + த் (ந்) + த் + ஆய்
நட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. சொல்ல – சொல் + ல் + அ
சொல் – பகுதி, ல் – சந்தி, அ – வினையெச்ச விகுதி.

4. கடித்து – கடி + த் + த் + உ
கடி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

5. சொல்லி – சொல் + ல் + இ
சொல் – பகுதி, ல் – சந்தி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

6. கொடுத்த – கொடு + த் + த் + அ
கொடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

7. நெளிந்த – நெளி + த் (ந்) + த் + அ
நெளி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பயமில்லை – பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பயமில்லை)

2. காலாழி – கால் + ஆழி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலாழி)

3. விரியன் – விரி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (விரி + ய் + அன் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (விரியன்)

4. குண்டலப் பூச்சி – குண்டலம் + பூச்சி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்புவும் ஆகும்” (குண்டல + பூச்சி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (குண்டப்பூச்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

பலவுள் தெரிக

Question 1.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i – 3 4 2 1
ii – 3 1 4 2
iii – 4 3 2 1
iv – 4 1 3 2
Answer:
ii – 3 1 4 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
திரிகூட ராசப்பக் கவிராழரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ………………
அ) குற்றால மாலை
ஆ) குற்றாலக் கோவை
இ) நன்னகர் வெண்பா
ஈ) குற்றாலக் குறவஞ்சி
Answer:
ஈ) தற்றாகக் குறவஞ்சி

Question 3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………
அ) காவடிச்சிந்து
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) திருச்சாழல்
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ………………
அ) பரணி
ஆ) கலம்பகம்
இ) குறவஞ்சி
ஈ) காவடிச்சிந்து
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Question 5.
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
அ) பள்ளு
ஆ) காவடிச்சிந்து
இ) பரணி
ஈ) குறவஞ்சி
Answer:
ஈ) குறவஞ்சி

Question 6.
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………
அ) வில்வரத்தினம்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
ஈ) அழகிய பெரியவன்
Answer:
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 7.
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ………………
அ) வள்ளல் சீதக்காதி
ஆ) சென்னிகுளம் அண்ணாமலையார்
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
ஈ) இராசராசசோழன்
Answer:
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

Question 8.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ………………
அ) கோலத்து நாடு
ஆ) பாண்டி நாடு
இ) சேலத்து நாடு
ஈ) கண்டிதேசம்
Answer:
இ) சேலத்து நாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 9.
‘திருகுமுருகு’ என்று சிங்கன் குறிப்பிட்டது ………………
அ) காலாழி பீலி
ஆ) பாடகம்
இ) முறுக்கிட்ட தண்டை
ஈ) அணிமணிக்கெச்சம்
Answer:
இ) முறுக்கிட்ட தண்டை

Question 10.
அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை………………
அ) சமய நூல்கள்
ஆ) சங்க இலக்கியங்கள்
இ) சிறுகாப்பியங்கள்
ஈ) சிற்றிலக்கியங்கள்
Answer:
ஆ) சங்க இலக்கியங்கள்

Question 11.
கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) சமய இலக்கியங்கள்
ஈ) காப்பியங்கள்
Answer:
ஆ) சிற்றிலக்கியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 12.
பொருத்துக.
1. குழல் – அ. சன்மானம்
2. நாங்கூழ் – ஆ. பூமாலை
3. வரிசை – இ. கூந்தல்
4. கொத்து – ஈ. கோலம்
– உ. மண்புழு
Answer:
1-இ, 2-உ, 3-ஆ 4.ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.1 காலத்தை வென்ற கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

குறுவினாக்கள்

Question 1.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.

Question 2.
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 4.
கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:

  • நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
  • கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.

Question 5.
பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 6.
கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.

Question 7.
‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.

Question 8.
பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 9.
தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.

சிறுவினா

Question 1.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answer:

  • ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கற்றளிக் கோவில்கள் :

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 3.
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:

  • பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
  • இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
  • மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.

பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

Question 4.
தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
  • இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 5.
கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.

12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.

Question 6.
‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

நெடுவினா

Question 1.
‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
Answer:
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.

பலவுள் தெரிக

Question 1.
கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 2.
மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்

Question 3.
ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 4.
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்

Question 5.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

Question 6.
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 7.
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்

Question 8.
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Question 9.
இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 10.
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்

Question 11.
தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 12.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி

Question 13.
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்

Question 14.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 15.
குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 16.
தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

Question 17.
தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 18.
இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்

Question 19.
நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

Question 20.
பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 21.
புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு

Question 22.
‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி

Question 23.
‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி

Question 24.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்

1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்

அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

Question 26.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது

அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 27.
பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?

2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?

3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?

4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?

5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?

7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?

8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?

9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?

11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?