Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Students can Download 10th Tamil Chapter 8.2 ஞானம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.2 ஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

கற்பவை கற்றபின்

Question 1.
“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
Answer:
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன.

நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.
அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.
Answer:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:

  1. அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை
  2. அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
  3. அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
  4. அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.
  5. அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்
  6. அன்புடைமை – அன்பின் மகத்துவம்
  7. இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
  8. இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
  9. இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
  10. ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
  11. ஊழ் – விதி வலிமை
  12. ஒப்புரவறிதல் – கொடுத்தல்
  13. ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்
  14. கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
  15. கள்ளாமை – மது அருந்துதல் கூடாது
  16. கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்
  17. கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.
  18. செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
  19. தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை
  20. தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
  21. துறவு – உலகப் பற்றை நீக்குதல்
  22. நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
  23. நிலையாமை – எதுவும் நிலையன்று
  24. நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
  25. பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்
  26. பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
  27. புகழ் – சிறப்பு
  28. புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
  29. புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை
  30. பொறையுடைமை – பொறுமை
  31. மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்
  32. மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
  33. வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
  34. வாய்மை – உண்மையின் மேன்மை
  35. வான்சிறப்பு – மழையின் சிறப்பு
  36. விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்
  37. வெகுளாமை – சினம் கொள்ளாமை
  38. வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
Answer:
இ) இடையறாது அறப்பணி செய்தலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

குறுவினா

Question 1.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
Answer:

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

Question 1.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
உரைக்குறிப்புகள்:

  • அறம் என்பதன் விளக்கம் தரல்.
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
Answer:
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கழுதை – உருவகம்
கந்தைத்துணி – இருபெயரொட்டுப்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம் - 1

பலவுள் தெரிக

Question 1.
‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..
அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

Question 3.
‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 4.
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

Question 5.
தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

Question 6.
வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 7.
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Question 8.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 9.
அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

Question 10.
“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 11.
பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 12.
‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 13.
பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவினா

Question 1.
வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:
கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

Question 2.
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
கரையான், கழுதை, கட்டெறும்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 3.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.
Answer:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

சிறுவினா

Question 1.
தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சொ.வேணுகோபாலன்
பிறப்பு : 7.11.1929)
ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.
பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.
1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
Answer:

  • ‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.
  • வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.
  • சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
  • சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.
  • அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
  • எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Question 3.
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !.

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
கோடைவயல்.

ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?
Answer:
ஞானம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

இ) எது ஓய்வதில்லை ?
Answer:
அறப்பணிகள் ஓய்வதில்லை .

ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஓய்வதில்லை       –      உலகமில்லை

Question 4.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பொருள்:
காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.

விளக்கம் :

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Students can Download 8th Tamil Chapter 9.1 உயிர்க்குணங்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.1 உயிர்க்குணங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Question 1.
பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்.
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல் – 14
Answer:
தெரிந்து தெளிவோம்
(i) பாவை நூல்கள் : மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

இதேபோலச் சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
அ) உவகை
ஆ) நிறை
இ) அழுக்காறு
ஈ) இன்பம்
Answer:
இ) அழுக்காறு

Question 2.
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ……………..
அ) பொச்சாப்பு
ஆ) துணிவு
இ) மானம்
ஈ) எளிமை
Answer:
அ) பொச்சாப்பு

Question 3.
‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) இன் துன்பு
ஆ) இன்பம் + துன்பம்
இ) இன்ப + அன்பம்
ஈ) இன்ப + அன்பு
Answer:
ஆ) இன்பம் + துன்பம்

Question 4.
குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) குணங்கள் எல்லாம்
ஆ) குணமெல்லாம்
இ) குணங்களில்லாம்
ஈ) குணங்களெல்லாம்
Answer:
ஈ) குணங்களெல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பொருத்துக

1. நிறை – பொறுமை
2. பொறை – விருப்பம்
3. மதம் – மேன்மை
4. மையல் – கொள்கை
Answer:
1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. மதம் – கொள்கை
4. மையல் – விருப்பம்

குறுவினா

Question 1.
மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?
Answer:
மனிதரின் பொது இயல்புகள் :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

Question 2.
மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?
Answer:
நற்பண்புகள் :
அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.

சிறுவினா

Question 1.
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
Answer:
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

சிந்தனை வினா

Question 1.
மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் 1

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மனிதன் …………………. விலக்கி ………………….. வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. இறையரசனின் இயற்பெயர் …………………….
3. இறையரசன் ஆற்றிய பணி …………………..
4. இறையரசன் ……………………….. தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
5. ஆண்டாள் பாடிய நூல் …………………
6. மாணிக்கவாசகர் இயற்றியது …………………….
7. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பாடியது …………………..
8. சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள் பாடியது ………………………
9. கன்னிப்பாவை மனிதனுக்குள் நிறைந்திருக்கும் …………………… கூறுகிறது.
Answer:
1. தீயனவற்றை, நல்லனவற்றை
2. சே.சேசுராசா
3. தமிழ்ப்பேராசிரியர்
4. திருப்பாவையைத்
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருப்பாவை
8. திருவெம்பாவை
9. பண்புகளைக்

விடையளி :

Question 1.
மனிதனின் கடமை யாது?
Answer:
ஒவ்வொரு மனிதனிடமும் நற்பண்புகளும் உண்டு, தீய பண்புகளும் உண்டு. தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.

Question 2.
பாவை நோன்பு என்றால் என்ன?
Answer:
மார்கழித்திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர்.

Question 3.
திருப்பாவை, திருவெம்பாவை விளக்குக.
Answer:
பாவை நோன்பு மேற்கொண்டு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை. பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை.

Question 4.
இறையரசன் குறிப்பு எழுதுக.
Answer:
(i) இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும்.
(ii) கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
(iii) ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பாடல்

அறிவுஅருள் ஆசைஅச்சம்
அன்பு இரக்கம் வெகுளிநாணம்
நிறை அழுக்காறு எளிமை
நினைவுதுணிவு இன்பதுன்பம்
பொறைமதம் கடைப்பிடிகள்
பொச்சாப்பு மானம்அறம்
வெறுப்பு உவப்பு ஊக்கம்மையல்
வென்றி இகல் இளமைமூப்பு
மறவிஓர்ப்பு இன்னபிற
மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம்
குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும் நீ உறங்குதியோ
புறப்படு புன்னகைநீ
பூத்தேலோ ரெம்பாவாய்! – இறையரசன்

சொல்லும் பொருளும்

1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. பொச்சாப்பு – சோர்வு
4. மையல் – விருப்பம்
5. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
6. அழுக்காறு – பொறாமை
7. மதம் – கொள்கை
8. இகல் – பகை
9. மன்னும் – நிலைபெற்ற

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணே ! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

ஆசிரியர் குறிப்பு
இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Students can Download 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கற்பவை கற்றபின்

Question 1.
‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.
Answer:
சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நிலையான செல்வம்
  • நேரிய ஆட்சி
  • வாய்மை
  • ஈகை

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…… – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசின் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ – புறநானூறு

வீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியது. ஈகையும் ஓர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ – நற்றிணை

பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதலே பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான
செல்வம் ஆகும்.

‘பிழையா நன்மொழி’ – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும் வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.

Question 2.
கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடுபவர்கள் : சோமு, கலா, மாலா,

சோமு : நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக் கருத்துக்கள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றிப் பேசுவோமா.
கலா : எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் பிடிக்கும்
மாலா : எனக்கும்தான்….
சோமு : அதைப்பற்றிப் பேசுவோம். இந்நூல் அகரநிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா : அதை எழுதினது ஒளவைதானே.
மாலா : சரியாகச் சொல்லி விட்டாயே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சோமு : அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது. அது என்ன தெரியுமா?
கலா : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்’
சோமு : சரியாகச் சொன்னாய்.
மாலா : ஆமாடா நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது, அதனை திருடரோ மற்றவரோ கொள்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கலா : எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்குக் கூட கூலி ஒழுங்காத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிடுவார். ஒரு நாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு : புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

குறுவினா

Question 1.
குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 1
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 2
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதில் அறம்:

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
  • ‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

நெடுவினா

Question 1.
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உறவினருக்கு மடல்

திருச்சி,
18.03.2020

அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

குறுவினா

Question 1.
அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?
Answer:
மன்னர்களுடைய செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 2.
அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

Question 3.
தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?
Answer:

  • உறையூரில் இருந்த அறஅவையம் தனிச் சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக் கோல் போல் நடுநிலைமையுடன் இருந்தன.

Question 4.
மகிழ்ச்சி என்பதை விளக்குக.
Answer:

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து, மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி .
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

Question 5.
வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக.
Answer:

  • ‘பொய்யாச் செந்நா’
  • ‘பொய்படு பறியா வயங்கு செந்நா’
  • ‘பிழையா நன்மொழி – நற்றிணை’
  • ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’

என்று பொய் கூறக்கூடாது, வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக.
Answer:

  • இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.
  • எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

Question 7.
அற இலக்கியங்களில் ஈதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதை விளக்குக.
Answer:

  • புற இலக்கியங்களில் மட்டுமல்ல, அற இலக்கியங்களிலும் ஈகை பற்றிய செய்திகள் உள்ளன.
  • ஈயாமை இழிவு என அற இலக்கியம் கூறுகிறது.
  • இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கலித்தொகை கூறுகிறது.

Question 8.
கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
Answer:

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  • மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துக் கொடுப்பவன் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் – திருமுடிக்காரி.
  • இவ்வாறு மன்னர்கள் கொடையால் சிறந்திருந்தனர்.

Question 9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் செம்மை சான்ற அமைச்சர் கடமையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகளின் உட்கருத்தைப் புலப்படுத்துக.
Answer:
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. அத்தகைய நோக்கம் இல்லாதவன் வள்ளல் ஆய்.

Question 11.
அறங்கூறவையம் இருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. உறையூர்
  2. மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
Answer:
இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் வள்ளல்கள் போற்றப்பட்டனர்.

Question 13.
உதவியாண்மை என்ற சொல்லின் பொருள் மற்றும் அதனைக் குறிப்பிட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும்?
Answer:
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
உண்மையான செல்வம் எது என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்?
Answer:
பிறர் துன்பம் தீர்ப்பது தான் உண்மையான செல்வம் என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்.

Question 15.
‘ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாக உள்ளன’ – இக்கூற்றில் சுட்டப்படும் ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவை?
Answer:

  • திருமுருகாற்றுப் படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநாராற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை

Question 16.
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பைப் புலப்படுத்துவன எவை?
Answer:
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பை சிறுபாணாற்றுப்படையும், பெருஞ்சித்திரனார் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 17.
குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என்று குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

Question 18.
“இல்லோர் ஒக்கல் தலைவன்’ யார் என்பதை விளக்குக.
Answer:
பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்திற்குத் தலைவன் வள்ளல்கள் ஆவர்.

Question 19.
கொடை என்பதும் ஓர் அறம் என்பதனை ஔவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கின்ற ஒளவையின் கூற்று கொடை என்பதும் ஓர் அறம் என்பதனைத் தெளிவாக்குகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சிறுவினா

Question 1.
உண்மையான செல்வம் எது?
Answer:
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

Question 2.
சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
Answer:

  • தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
  • பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 3.
நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
Answer:

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

Question 4.
கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
Answer:

  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 5.
மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • அதியன்
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • பேகன்
  • குமணன்
  • திருமுடிக்காரி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Students can Download 8th Tamil Chapter 8.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆண்மையின் கூர்மை ……………..
அ) வறியவருக்கு உதவுதல்
ஆ) பகைவருக்கு உதவுதல்
இ) நண்பனுக்கு உதவுதல்
ஈ) உறவினருக்கு உதவுதல்
Answer:
ஆ) பகைவருக்கு உதவுதல்

Question 2.
வறுமை வந்த காலத்தில் …………….. குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்ப ம்
ஆ) தூக்கம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer:
இ) ஊக்கம்

Question 3.
‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பெரிய + செல்வம்
ஆ) பெருஞ் + செல்வம்
இ) பெரு + செல்வம்
ஈ) பெருமை + செல்வம்
Answer:
ஈ) பெருமை + செல்வம்

Question 4.
‘ஊராண்மை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) ஊர் + ஆண்மை
ஆ) ஊராண் + மை
இ) ஊ + ஆண்மை
ஈ) ஊரு + ஆண்மை
Answer:
அ) ஊர் + ஆண்மை

Question 5.
திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) திரிந்தது அற்று
ஆ) திரிந்தற்று
இ) திரிந்துற்று
ஈ) திரிவுற்று
Answer:
ஆ) திரிந்தற்ற

பொருத்துக

1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
3. பெருமையை அழிப்பது – செல்வம் மிகுந்த காலம்
4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
5. பயனின்றி அழிவது – பண்புடையவர் நட்பு
Answer:
1. இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
2. நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
3. பெருமையை அழிப்பது – குன்றிமணியளவு தவறு
4. பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
5. பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்

குறுவினா

Question 1.
எது பெருமையைத் தரும்?
Answer:
காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

Question 2.
நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?
Answer:
நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Question 3.
இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?
Answer:
இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.

Question 4.
நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Answer:
நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியதன்று. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள் 1
Answer:
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

படைச்செருக்கு

1. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
தெளிவுரை : காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்).
அணி : பிறிதுமொழிதல் அணி

2. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு.
தெளிவுரை : பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

நட்பு
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
தெளிவுரை : நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அணி : உவமை அணி

4. நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
தெளிவுரை : நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

நட்பு ஆராய்தல்

5. ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
தெளிவுரை : மீண்டும், மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

6. கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
தெளிவுரை : நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

மானம்

7. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
தெளிவுரை : செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.

8. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
தெளிவுரை : மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்து விடும்.

9. பண்புடைமை பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
தெளிவுரை : பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
தெளிவுரை : தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி
அழியும். : உவமையணி.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள் 2
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Intext Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Intext Questions

Activity (Text Book Page No. 51 & 52)

Measure the following things and complete the table given below. :
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 1
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 2
Answer:
Activity to be done by the students themselves

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

Group Activity (Text Book Page No. 52)

Ask the children to measure the length of the following things.
a. Black board
b. Cupboard
c. Table
d. Waliclock
e. Classroom
Answer:
Activity to be done by the students themselves

Group Activity (Text Book Page No. 52)

Ask the children to measure the length of the following things.
a. Black board
b. Cupboard
c. Table
d. Waliclock
e. Classroom
Answer:
Activity to be done by the students themselves

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

Activity (Text Book Page No. 54)

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 4

Question 2.
Using the metre scale, find the length of the classroom door and convert the measurement from metre into centimetre.
Answer:
Activity to be done by the students themselves

Activity (Text Book Page No. 58)

Measure the height of any ten of your classmates and write in centimetre.
Answer:
Activity to be done by the students themselves

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

Group Activity (Text Book Page No. 52)

Observe the map and answer the following
1. Which is the longest route from Cuddalore to Chennai?
2. Which iS the shortest route from Cuddalore to Chennai?
3. Find the longest and the shortest distance.
4. Find the shortest distance between
(i) Madurai to Chennai
(ii) Trichy to Coimbatore
(iii) Chennai to Coimbatore.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 7
Answer:
Activity to be done by the students themselves

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

Estimation (Text Book Page No. 60)

Question 1.
Look at the map and complete the following.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements InText Questions 6
1. The longest distance between Meera’s house and the fruit shop is _______.
Answer:
39 km

2. The shortest distance between Meera’s house and Meera’s uncle house _______.
Answer:
30 km

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

3. The longest distance between Meera’s uncle house and market _______.
Answer:
46 km

4. The shortest distance between school and fruit shop _______.
Answer:
35 km

5. Which place is the longest from Meera’s house _______.
Answer:
fruit shop

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Intext Questions

6. Which place is the shortest from Meera’s house _______.
Answer:
Market

7. Distance between Meera’s house and the school _______.
Answer:
20 km

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Ex 4.5 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Ex 4.5

Question 1.
Convert into cm
(a) 5m
(b) 7m
(c) 9m
(d) 16m
Answer:
(a) 5m
5m = 5 × 100 = 500 cm

(b) 7m
7m = 7 × 100 = 700 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

(c) 9m
9m = 9 × 100 = 900 cm

(d) 16m
16m = 16 × 100 = 1600 cm

Question 2.
Convert into m
(a) 6000 cm
(b) 4000 cm
(c) 13000 cm
(d) 17000 cm
Answer:
(a) 6000 cm
6000 cm = 6000 ÷ 100 = 60 m

(b) 4000 cm
4000 cm = 4000 ÷ 100 = 40 m

(c) 13000 cm
13000 cm = 13000 ÷ 100 = 130 m

(d) 17000 cm
17000 cm = 17000 ÷ 100 = 170 m

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

Question 3.
Add
(a)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 2
4m 75cm + 3m 18cm = 7m 93cm

(b)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 4
25m 53cm + 18m 24cm = 43m 77cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

(c)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 6
48m 72cm + 14m 34cm = 63m 06cm

Question 4.
Subtract
(a)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 8
9m 28cm – 3m 14cm = 6m 14cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

(b)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 10
63m 47cm – 36m 24cm = 27m 23cm

(c)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 12
96m 32cm – 20m 48cm = 75m 84cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

Question 5.
Raju used 13 m 25 cm ribbon for making his project. If he had bought 20 m of ribbon, How much ribbon is left with him?
Answer:
Total length of ribbon = 20 m
Raju used = 13 m 25 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 13
Remaining length of ribbon = 6 m 75 cm

Question 6.
The distance between bus stand and school is 81 m 40 cm and the distance between school and temple is 20 m 10 cm. What is the total distance from bus stand to temple ?
Answer:
Distance between bus stand to school = 81 m 40 cm
Distance between school to temple = 20 m 10 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5 14
Distance between bus stand to temple is = 101 m 50 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.5

Question 7.
Arul has a 4 metre long piece of wood. He wants to cut it into 2 equal lengths. How long should each piece be in millimetres?
Answer:
Length of wood = 4m = 4000 millimeter
It is divided into two equal parts = 2000 + 2000
Length of each piece = 2000 millimeter.

Question 8.
Amudha knows tailoring. She bought 10 metre long cloth. She needs 4 curtains to be stitched. Each curtain’s height is 160cm. Would she be able to stitch all curtains? If some cloth is left behind, how much would it be?
Ans.
Total length of cloth = 10 m = 1000 cm.
size to sew four fabrics = 4 × 160 = 640 cm = 6 m 40 cm
can sew four curtains.
360 cm cloth is balance.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Ex 4.4 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Ex 4.4

Question 1.
Deenu bought 15 m 43 cm of shirt material and 23 m 94cm of trouser material. Find the total length of the material bought by him.
Answer:
Deenu bought shirt material = 15 m 43 cm
Deenu bought trouser material = 23 m 94 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 1
Total length of material = 39 m 37 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4

Question 2.
A fisherman bought 2 nets. The length of first and second nets are 23 m 43 cm and 25m 63 cm. What is the total length of nets?
Answer:
First Net length = 23 m 43 cm
Second Net length = 25 m 63 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 2
Total length of the net = 49 m 06 cm

Question 3.
Agathìya bought 70m 42cm of wire to fence his garden. He used only 43m 51cm of wire. Find the length of the remaining wire.
Answer:
Total length of wire = 70 m 42 cm
Agathiya used of wire = 43 m 51 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 3
Remaining length of wire = 26 m 91 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4

Question 4.
A shopkeeper sold 37m 69cm cloth out of 93 m 75cm in stock. How much stock is left with him?
Answer:
Total stock of cloth = 93 m 75 cm
sold of cloth = 37 m 69 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 4
Remaining cloth = 56 m 06 cm

Question 5.
I bought 125 metres of orange fabric and 50 metres of yellow fabric in a fabric shop. I have used 13 metres of the orange fabric and 12 metres of yellow fabric. How many metres of fabric is remaining with me?
Answer:
Length of orange fabric = 125 m
Length of yellow fabric = 50 m
Total = 125 m + 50 m
= 175 m
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 5
Used length of both orange and yellow =
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 6
Remaining fabric = 150 m

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4

Question 6.
Velu is 1 m 15 cm tall. Her friend Babu is 1 m 30 cm tall. Who is taller and by how much?
Answer:
Babu’s height = 1 m 30 cm
Velu’s height = 1 m 15 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.4 7
Babu is taller than velu by = 15 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Ex 4.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Ex 4.3

Subtract the following
Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 2
93m 25cm – 20m 12cm = 73m 13cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 4
38m 90cm – 26m 60cm = 12m 30cm

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 6
75m 22cm – 56m 35cm = 18m 87cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 8
27m 81cm – 16m 94cm = 10m 87cm

Question 5.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 10
95m 80cm – 46m 60cm = 49 m 20 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3

Question 6.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.3 12
95m 42cm – 37m 85cm = 57m 57cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Ex 4.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Ex 4.2

Add the following
Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 2
41 cm 29 cm + 26 cm 75 cm = 68 m 04 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 4
70m 23cm + 31m 45cm = 101m 68cm

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 6
35m 08cm + 29m 26cm = 64m 34cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 8
53m 45cm + 34m 68cm = 88m 13cm

Question 5.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 10
51m 30cm + 21m 12cm = 72m 42cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2

Question 6.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.2 12
60m 45cm + 24m 75cm = 85m 20cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.1

Students can download 4th Maths Term 1 Chapter 4 Measurements Ex 4.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 4 Measurements Ex 4.1

Convert into centimeter

Question 1.
3 m = _____ cm
Answer:
3 m = 3 × 100 = 300 cm

Question 2.
37 m = _____ cm
Answer:
37 m = 37 × 100 = 3700 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.1

Question
3.5 m 9 cm = _____ cm
Answer:
5 m 9 cm = 5 × 100 + 9 = 500 + 9 = 509 cm

Question 4.
7 m 35 cm = _____ cm
Answer:
7 m 35 cm = 7 × 100 + 35 = 700 + 35 = 735 cm

Convert into metre

Question 1.
600 cm = ____ m
Answer:
600 cm = 600 ÷ 100 = 6m

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.1

Question 2.
3600 cm = ____ m
Answer:
3600 cm = 3600 ÷ 100 = 36m

Question 3.
647 cm = ____ m
Answer:
647 cm = 647 ÷ 100 = (600 ÷ 100) + 47 cm
= 6 m 47 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 4 Measurements Ex 4.1

Question 4.
304 cm = ____ m
Answer:
304 cm = 300 ÷ 100 + 4 cm
= 3 m 4 cm